ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி

19

 

 பாவி உன்னை உயிர் நண்பனா நெனச்சுதானடா… நீ பண்ண எல்லாத்துக்கும் உன் கூடவே இருந்தேன்… இப்படி கூடவே இருந்து நம்ப வச்சி கழுத்து அறுத்துட்டியேடா பாவீ பாவீ உனக்கு நான் என்னடா பாவம் செஞ்சேன் அவங்க போலீஸ் கிட்ட போறேன் சொன்னபோ கூட உன்னை விட்டு கொடுக்க கூடாதுன்னு தானடா உன் கூடவேஅமைதியா நின்னேன்… கடைசில இப்படி பண்ணிட்டியே என்று கிரிதரனை போட்டு அடி அடி என்று அவன் பங்குங்கு போட்டு பின்னி எடுத்து விட்டான் பரத்… ஒரு கட்டத்திற்கு மேல் கை வலி எடுக்க ச்சை போ  என்று அவனை விட்டு விலகினான்… மன தளவிலும் சேர்த்தே தான்…

 

ஊரார் அடிக்கும் போதும் சரி தந்தை பஞ்சாட்சரம் அடிக்கும் போது சரி அவர்களிடம் எகிறிய  கிரி,பரத் அடிக்கும் பொழுது அமைதியாகவே நின்று வாங்கி கொண்டது… அது எதனால்???

 

“கேட்டிங்கள்ள அவன் வாயாலே எல்லாத்தையும் ஒத்துக்கிட்டானே… இதுக்கு மேலயும் என் புள்ளைய குற்றவாளியா தான் நிக்க வைப்பீங்கனா… சட்டம் எனக்கும் தெரியும்…  தப்பு செய்றவன விட தப்பு செய்ய தூண்டுறவனுக்கு தான்  தண்டனை கிடைக்கும்… இதுக்கு மேல எல்லாம் உங்க கையில தான் இருக்கு எதுவா இருந்தாலும் பார்த்து செய்யுங்க அவ்ளோ தான் சொல்லுவேன்…!!” என அதுவரை தவறு தன் மகனிடத்தில் என்று நினைத்த வளைந்து கொடுத்து போனவர் இப்பொழுது பழைய தோரணைக்கு திரும்ப… சற்குணத்தால்  பதில் சொல்ல முடியவில்லை…

 

 மொத்த தப்பையும் அந்த முட்டாள் பயல் அல்லவா ஏற்றுக் கொண்டு நண்பனை காப்பாற்றி விட்டான்… போலீஸ் ஜெயில் என்று சொல்லியும் கூட அதுவரை தெனாவட்டாக இருந்தவன் அவனின் நண்பன் குற்றவாளி என்றும் அவனை திலோவின் கழுத்தில் தாலி கட்டு என்றதும் அவன் முகம் மாறியதை மற்றவர்கள் வேணும் என்றால் கவனிக்காமல் இருக்கலாம்… ஆனால் பஞ்சாயத்து ஆரம்பித்ததில் இருந்தே பேச்சில் ஒரு பக்கம் கவனம் இருந்தாலும்  இவர்களின் மேல் அதீத கவனத்தை செலுத்தியவர் கண்களுக்கு கிரியின் சின்ன சுளிவு கூட தெரியாமல் போகுமா என்ன… அது மட்டுமா… அவ்வளவு நேரம் அவன் பெற்ற தந்தையிடமே எகிறி எகிறி பேசியவன்… பரத் அடித்ததும் வாயை மூடிக்கொண்டு நிற்கிறானே அது போதாதா?? அவன் வயதுக்கு அவர் எத்தனை மனிதர்களை சந்தித்து இருப்பார் எத்தனை அனுபவங்களை பெற்று இருப்பார்…இதைக் கூட அவரால் யூகிக்க முடியாதா என்ன…??

 

 சரிப்பா தப்பு செஞ்சது அவனே ஒத்துக்கிட்டதால அவனுக்கு தக்க தண்டனையா என்ன தரலாம் நீயே சொல்லுத்தா என்று திலோவிடம் கேக்க… அவள் என்ன பதில் சொல்வாள்… 

 

 தைரியமா சொல்லுமா இந்த பயலை உண்டு இல்லன்னு ஆக்கி புடலாம்… என்று சற்குணம் ஊந்த…

 

 அதுவரை அமைதியாக இருந்தவள் மெல்ல ஏறெடுத்து கிரிதரனை பார்க்க அவனோ அவளை தான் அழுத்தமாக பார்த்து நின்றான்… அவனை கண்டதும் இவளுக்கு நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டி கொண்டது தொண்டை வறண்டு போனது… நெஞ்சுக் குழி பயத்தில் ஏறி இறங்கியது… 

 

டக்கென்று  தீ கோழியாய் தலையை மண்ணுக்குள் புதைத்து கொண்டாள்…

 

பொண்ணு ரொம்ப பயந்து போய் இருக்கிறதால…நாமளே தீர்ப்பை சொல்வோம் சற்குணம் என வயதில் மூத்தவர்கள் அவருக்கு அறிவுரை கொடுக்க…

 

என்ன சின்னயா பண்ணலாம் இவனை பேசாம ஊரை விட்டு ஒதுக்கி வச்சிடுவோமா…?? என சற்குணம் கருத்து கேட்க…

 

அவன் முழிக்கிற முழியே சரி இல்லை… இவ காட்டி கொடுத்துட்டாள் என்ற  கோவம் அவன் கண்ணுல தெரியுது… நாளைக்கு அந்த புள்ளைய நம்ம கண்ணுக்கு மறைவா வச்சு ஏதாவது செஞ்சு புட்டா… என்ன செய்யுறது… அது ஆதரவு இல்லாத பொட்டப் புள்ள வேற… என்ன செஞ்சாலும் கேக்க ஆளும் கிடையாது நாலையும் யோசிச்சு தான் முடிவு எடுக்கணும் சற்குணம்… பேசாமல் அந்த பையனயே இந்த புள்ளைக்கு கட்டி வச்சிட்டா… நம்ம கண்ணு எதிரே இருக்கும் இவனாலயும் துணிஞ்சி எதுவும் செஞ்சிட முடியாதுல என அவர் வயதுக்கு தகுந்த அறிவுரையை அவர் வழங்க… 

 

சற்றே யோசித்தார் சற்குணம் ஆதிகேசவனிடம் கேட்டது போல் அவரால் பஞ்சாட்சரத்திடம்  கேட்க முடியவில்லை… தையல்நாயகியின் குணம் அறியாதவர்கள் யாரும் உண்டோ… அவள் குணத்துக்கு இந்த பிள்ளையை எதுவும் செய்து விடுவார் என்று தானே அவர் ஆதிகேசவனிடம் கேட்டது… அவருக்கு தெரியும் ஆதிகேசவன் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார் என்று ஆனால் கல்யாணம் ஆன பின்பு அவர்களை ஒதுக்கி வைக்கவும் மாட்டார் என்பது அவருடன் பழகிய பாலிய தோழரான சற்குணத்திற்கு தெரியாமல் இருக்குமா என்ன…?? கூடவே திலோவிற்கு வளமான வாழ்வும் கிடைக்கும் என்று நம்பினார்… ம்ம்ம் அவர் ஒன்று நினைக்க தெய்வம் வேறு ஒன்றாக நினைக்கிறதே… 

 

என்னபா சற்குணம் அமைதியா இருக்க சீக்கிரம் ஒரு முடிவை சொல்லுபா பஞ்சாயத்து சீனே நாலு எபி போனா எப்படின்னு மக்கள் கேக்க போறாங்க… என சின்னயா பாயிண்ட் ஆக பேச ( அதே அதே சீக்கிரம் முடிச்சு விடுங்கயா அடுத்த பஞ்சாயத்தை வேற ரெடி பண்ணனும்…அதுக்கு முன்ன  ரோம்க்கு சீன் இடத்தை தேடணும்…)

 

 “சரிங்க சின்னையா நீங்க சொன்னபடியே இந்த புள்ளைக்கு அந்த பையனை புடிச்சு கட்டி வச்சிடுவோம்… ஆனால் தையல்நாயகி ஓட குணம் தான் ஊருக்கே தெரியுமே… கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அந்த புள்ள ஏதாவது பண்ணி புடிச்சுனா என்ன செய்ய அதான் யோசிக்க வேண்டியதா இருக்கு…!!”என்று அவர் இழுக்க…

 

அப்போது வந்தார் பஞ்சாட்சரம்… “ஒன்னும் ஆகாது நான் பார்த்துகிறேன் என்னை நம்பி கல்யாணம் பண்ணி வைங்க…!!”என உரிமையாக கேட்க…

 

அவரை நம்பாமல் தையல் நாயகியை பார்க்க அவரோ தொட்டால் வெடித்து விடுவேன் என்கிற ரீதியில் எரிமலையாக குமுறிக் கொண்டு இருந்தார்… சற்குணத்தின் பார்வையை புரிந்து கொண்ட பஞ்சாட்சரம்…

 

“ என் கூடவே இருந்தா தானே  பிரச்சனை வரும்னு பயப்படுறீங்க… நீங்க கல்யாணம் பண்ணி வைங்க நான் அவங்களை எதிர்த்து வீட்ல  தனி குடித்தனம் வச்சு பார்த்துக்கிறேன்…!!” என நம்பிக்கையாக சொல்ல… அதற்கு மேல் மறுப்பு ஏதும் சொல்லாமல்…

 

கிரிதரன் கையில மஞ்சள் தாலி கொடுத்து திலோ கழுத்தில் கட்ட வைத்து வாழ்த்தி அனுப்பி விட்டனர்…

 

“சொல்ல சொல்ல கேக்காம…உண்மை சொல்லி என்னை ஊர் முன்னாடி அவமானப் படுத்திட்டல்ல சாகுற வரை இதை மறக்க மாட்டேன்டி… உன்னை சும்மா விட மாட்டேன்… பழி வாங்கியே தீருவேன்…!!”என ஆத்திரமாக சொன்னவன் பல்லை கடித்துக் கொண்டு அவள் கழுத்தில் தாலியை கட்டியவன் தான்…  வீட்டிற்கு கூட செல்லாமல் படிதுறையில் போய் உட்கார்ந்து கொண்டான்…

 

அவன் பேச்சில் விக்கித்து போய் நின்ற திலோவை தன்னோடு அழைத்து சென்றார் பஞ்சாட்சரம்… போகும் முன் அவரது கண்கள் தன் மகனை தான் பரிதாபத்துடன் பார்த்தது… அடிபட்ட வேங்கை என உருமி கொண்டு இருந்தவனை தொந்திரவு செய்யாது  விட்டு சென்றார் எங்கு போய்விட போகிறான் என அசட்டையாக நினைத்து சென்றவர்க்கு தெரியாது… மீண்டும் அவர் மகனை  கண்ணார பார்க்க ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று…

அவர்கள் சென்ற பின்பு பரத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக சொல்ல… 

 

 வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார் ஆதிகேசவன்…

 

“ஆதி உன் பையன் அந்த பொண்ணு கிட்ட தப்பா நடக்காமல் வேணா இருக்கலாம்… அதுக்காக அவன் தப்பே பண்ணாதவன்னு சொல்ல முடியாது இல்ல…அவன் இந்த பொம்பள கூட இருந்ததை பார்த்த  சாட்சி சொல்லுது… அது மட்டுமில்ல அந்த பையன் தப்பு பண்ணதுக்கு  உடந்தையா உன் பையனும் இருந்திருக்கான்… அதை அவன் வாயாலே ஒத்துக்கிட்டான் கேட்டல்ல… இல்லைனு மறுக்க முடியாது ஆதி… தீர்ப்பு னு வந்துட்டா எல்லாருமே சமம் தான்… இன்னைக்கு அவன தண்டிக்காம விட்டால் நாளைக்கு இதே மாதிரி எல்லாரும் தப்பு பண்ண ஆரம்பிச்சா என்ன பண்ண… அதுக்கு தான்  தண்டனைய அவனுக்கும் கொடுத்து தான்  ஆகணும்…அதுக்கு தான் உன் பையனை மூணு வருஷம் இந்த ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறேன்…!!” என்று சற்குணம் சொல்ல…

 

“யோவ் நீங்க என்னையா என் பையனை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறது… என் பையன் கிட்ட இருந்து இந்த ஊரையே நான் ஒதுக்கி வைக்கிறேன்யா… அவனை இப்போவே ஃபாரின்க்கு அனுப்புறேன்… டேய் நீ வாடா நீ இங்க கிழிச்சது எல்லாம் போதும்… எக்ஸாம் முடிச்ச கையோட உன்னை ஃபாரின்க்கு அனுப்புறேன்  போய் சேர்…!!” என்று மகனை இழுத்து கொண்டு சென்று விட்டார்… அன்று சென்றவன் தான் அதற்கு பிறகு ஆஸ்திரேலியா கனடா என்று  மாறி மாறி பறந்தவன் இறுதியாக ஊர் திரும்பி ஓர் ஆண்டு ஆனது… திலோவை பற்றி கேள்வி பட்டவனுக்கு அவளது வாழ்க்கை அப்படியானது அவனால் என்கிற குற்ற உணர்வாலே அவளுக்கு வாழ்க்கை தர முன்வந்தான்… அது மட்டும் தான் காரணமா என்றால் நிச்சயம் இல்லை… அவன் எடுத்த முடிவுக்கு அவனுக்கு ஆதரவாக ஒரு ஆள் தேவை அதற்காகவே அவன் திலோவை தேர்ந்தெடுத்தது… அது என்ன காரண காரியம் என்பதை “பிறை முகமதில் விழுந்தேனடி “ கதையில் பார்க்கலாம் டார்லிங்ஸ்…

*****

 

தையல் நாயகி தாலி கட்டும் முன்பே அங்கிருந்து கோவத்தில் போய் விட்டார்…

 

 வேகமாக வீட்டிற்கு வந்தவர்… வீட்டில் இருந்த எல்லா சாமானையும் போட்டு உடைத்தார்…ஆத்திரத்தில் மதி இழந்துச் செயல்பட்டார்… 

 

 திலோத்தமாவும் வாசுகியும்  தங்கிருந்த  அறைக்குள் சென்றவர் அங்கிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீதியில் கிடாசினார்…நாலு பேரை அழைத்து படுத்த படுக்கையாக கிடந்த வாசுகியை கட்டிலோடு தூக்கி வெளியே போட்டார்…

“ஏய் என்னடி பண்ற உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா… உடம்புக்கு முடியாதவளை இப்படி தூக்கி கிடாசுறியே ஏதாவது ஆனா என்னடி பண்ணுவ…!!”என அந்நேரத்தில் அவ்விடம் வந்த  பஞ்சாட்சரம் பதறி போய் கேட்க…

 

“வாயா பெரிய மனுசா… என்ன கேட்ட அறிவு இருக்கானா கேட்ட ஆமாய்யா எனக்கு அறிவு இல்ல தான் எனக்கு அறிவு இருந்திருந்தா இன்னைக்கு செஞ்சத நான் என்னைக்கோ செஞ்சிருக்கணும்… உன் பேச்சைக் கேட்டு இவள்களை என் குடும்பத்துல குடி வச்சேன் பாரு என்னய சொல்லணும்… இத்தனை வருஷமா சோறு போட்டு வளர்த்ததுக்கு காட்டிடாளே நன்றிய… நாய்க்கு சோறு போட்டால் கூட நமக்காக வள்ளுனாவது  குலைக்கும்… ஆனால் இவளுக்கும் இவள் ஆத்தாளுக்கும்  சோறு போட்டு வளர்த்ததுக்கு   என் குடும்பத்தையே கருவறுத்திட்டு நிற்கிறாளே… ஏய் எங்கடி வந்த என் புள்ள கையால தாலிய வாங்கி கிட்டதால மட்டும் நீ இந்த வீட்டு மருமகள் ஆகிட முடியாது… அதுக்கு என்னடி தகுதி உன்கிட்ட இருக்கு வக்கத்தவளே…இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பாளாம்… ஐயோ பாவம்னு உங்களை பார்த்துக்கிட்டதுக்கு கூட குறைய காசு வேணுனா கேட்டு வாங்கி தொலைஞ்சி இருந்தா கூட கவலை பட மாட்டேன் இப்படி அடிமடியிலே கை வச்சுட்டியே பாவி…!!”

 

இந்தாருயா உன்கிட்ட கடைசியா ஒரு முறை சொல்றேன்… இந்த விளங்காதவளையும் அந்த நன்றி கெட்டவளையும் எங்கையாவது கொண்டு போய் தொலைச்சுட்டு தலை முழுங்கிட்டு வந்தா வீட்டுக்குள்ள வாங்க இல்லாட்டி நீங்களும் அவங்களோடவே போயிடுங்க… என் புருஷன் வனவாசம் போய்ட்டார்னு நினைச்சுக்கிறேன்…!!” என்று ஆங்காரமாக கத்தினார் தையல் நாயகி…

 

“உன்னை மரியாதை தெரியதாவள்ன்னு தான் இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தேன் இப்போ தான் நீ ஒரு மனசாட்சியே இல்லாத பேய்னு தெரிஞ்சிக்கிட்டேன்…உன் மகன் பண்ண தப்புக்கு இவங்களை தண்டிக்கிறது தப்புனு உனக்கு தோணல… அவன் கெட்டு ஒழிஞ்சு போனதுக்கு முக்கிய காரணமே நீ தான் டி… இன்னைக்கு அவன் பெத்த அப்பனையே கொடும்பாவியா பார்க்கிறான் என்றால் அதுக்கும் நீ தான் டி காரணம்…எப்போ என்னை மீறி இவங்கள வீட்டை விட்டு துரத்துனியோ அப்போவே நானும் முடிவு பண்ணிட்டேன் உன் கூட இனி வாழ மாட்டேன்னு… நீ என்னடி சொல்றது இவங்களை தொலைக்க சொல்லி… அதோ அந்த வீட்ல வச்சு இவங்களை இனி நானே பார்த்துக்கிறேன்… உன் பையன்  பண்ணின பாவத்துக்கு நான் பொறுப்பு ஏத்துக்கிறேன் என்று திலோவையும் வாசுகியையும் அழைத்துக் கொண்டு பொன் குடிலுக்குச் சென்றார் ஆம் பொன் குடில் தான் திலோவின் அன்பான தாய் தந்தையர் வாழ்ந்த அதே அழகான குடில்தான்…

 

 வட்டிக்கு அந்த வீட்டை வாங்கியவர்கள் போதாத நேரம் அவர்கள் அவ்வீட்டை விற்க… “ஏங்க அந்த வீட்டை நாமளே வாங்கிக்கலாம்… பின்னாடி மேனகைக்கு திருமணமானால் அவளை அங்கே குடி வச்சிக்கலாம்… நம்ம பொண்ணு நம்ம கண்ண விட்டு எங்கும் போகாம இங்கயே இருப்பாள்…!!” என தையல்நாயகி சொன்னதன் பெயரில் தனது ரிட்டயர்மென்ட் அமௌன்டை எடுத்து அவ் வீட்டை  வாங்கி இருந்தார் பஞ்சாட்சரம்…

 

இப்பொழுது அதே வீட்டிற்கு தான் தன் மருமகளையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு குடி புகுந்தார்…

 

இதுதான் மக்களே ஹிஸ்டரி ஆஃப் தி ஜியோகிராபி பிலாசபி ஆஃப்   பிசிக்ஸ்  எல்லாம்…

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top