ATM Tamil Romantic Novels

நெஞ்சோரம் பூத்தவளே 11

பூ  – 11 ‘யாரு இந்த மருதப்பன்? எங்க அப்பா பெயரை கேட்டதும் ஏன் இந்த மனுஷன் இப்படி பதறிப்போய் கொந்தளிக்கிறாரு? இருபது வருஷத்துக்கு முன்னாடி எங்க குடும்பத்தால இவருக்கு என்ன பாதிப்பு நடந்திருக்கும்? அதுவும்… உன் அப்பன் பெரியசாமியைப் போய் கேளுன்னு சவால் விட்டுட்டுப் போறாரே!’ குழப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், அடிபட்ட காலோடு தவித்த முல்லையின் முகம் மட்டும் தான் அவனது கண்ணுக்குள் வந்து போனது. தன் தந்தையிடம் பிறகு பேசிக்கொள்ளலாம், இப்போது எப்படியாவது காரை […]

நெஞ்சோரம் பூத்தவளே 11 Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

7.காதல்   சந்தியா மனதளவில் நொந்து போனாள்.மாறனின் அம்மா பணம் கொடுத்து மாறனின் வாழ்க்கையை விட்டு போக சொல்கிறார்.இன்னொருத்தி தன் கற்பையே விலை பேசுகிறாள்.அவள் கைகளே நடுங்கின.ஆனால் வெளியில் எதையும் காட்டவில்லை. அந்த நேரம் மாறனின் கார் ஹார்ன் சத்தம் கேட்டது.“மேடம் … கிளம்பலாமா?” என்று வெளியில் இருந்து ட்ரைவர் அழைக்க அவளது கண்களை துடைத்து விட்டு “ஹான் அண்ணா நான் வரேன் என்று முகத்தை கழுவி விட்டு மாறனுக்கு உணவை எடுத்து வைத்து கிளம்பினாள்…” காரில்

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

6 – தீக்கு தென்றலோடு மோகம்

6 – தீக்கு தென்றலோடு மோகம்!

மருத்துவமனை வாசம் முடிந்து ஒரு வழியாக சம்ரித் வீடு வந்து சேர்ந்தான். சம்ரித் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தான். அருகில் இருந்து விமலாவும் இஷாராவும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள். சம்ரித்துக்கு இருந்தும் அம்ரீத்தைப் பார்க்க முடியாததால் மனம் வெறுமையாக உணர்ந்தான்.

அம்ரீதா மட்டும் என்ன… சம்ரித்துக்கு அலுவலகம் வரவில்லை என தெரிந்தும் இவளும் அலுவலகம் செல்லவில்லை. வீட்டிலேயே தன் அறையிலே படுத்திருந்தாள். யசோதா கூட இவள் மனநிலை தெரிந்து ஒன்றும் சொல்லாமல் இவள் போக்கு விட்டுவிட்டார்.

அம்ரீதா நினைவில் இருக்கும் போது இஷாரா அருகில் அவனை உரசிக் கொண்டு அமர்ந்தாள். இஷாரா தேகம் உரசவும் சம்ரித் தீ சுட்டதுப் போல் துடித்துப் போய் தன்னை அறியாமல் நகர்ந்து அமர்ந்தான். இவளும் இன்னும் நெருங்கிப் போகவும், அவன் தள்ளிப் போய் அமர்ந்தான்.

“ஏன் மாம்ஸ் நா பக்கத்துல உட்கார்ந்தா… நீங்க இப்படியெல்லாம் ஃபேஸை வச்சுகிட்டு என்னய விட்டு தள்ளி போய் உட்காரமாட்டிங்க… இப்ப என்ன இப்படியெல்லாம் செய்யறிங்க… வாட் ஐ கேன் டூயிங்…” என புலம்பினாள்.

“ப்ச்… ப்ச்ச நெவர் ஐ டோன்ட் லைக் இட்…”

“ஒய்…” என கேள்வி எழுப்பினாள்.

“ம்ப்ச்… ம்ப்ச்…” என்றான்.

“ஒய் ஆர் டூயிங் லைக் திஸ்…”

“எனக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்கல… சொன்னா புரிஞ்சுக்கோ…” என வெறுப்பாகக் கத்தினான்.

சொன்னதும் இஷாரா வெடுக்கென அந்த அறையை மட்டுமல்ல வீட்டை விட்டு நகர்ந்து போயிவிட்டாள்.

அவள் வீட்டை விட்டு போனதை கூட விமலா இவர்களுக்கு தனிமை கொடுத்து தங்கள் அறைக்கு சென்ற கூட அறியவில்லை.

“ஹீப்…”என பெருமூச்சை விட்டு சோபாவில் இருந்து தன் படுக்கையில் படுத்து உறங்கிவிட்டான்.

முதலில் விமலா தூங்கி எழுந்து வந்து இஷாராவை சம்ரித் அறையில் போய் பார்த்தார். அங்கு சம்ரித் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தான். பிறகு வீடு முழுவதும் தேடினார். எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

விமலா போய் சம்ரித்தை எழுப்பி அவனிடம்,”இஷாரா எங்கடா…” என்றுக் கேட்டார்.

தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி தீடிரென விமலா கேட்கவும் ஒன்றும் புரியாமல் விழித்தான். புரிந்ததும் அப்பாடா போய்விட்டான் என முதலில் நினைத்தான். தாய் தன் முகத்தையே பார்த்திருக்கவும் தான் தன்னிடம் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை.

“நான் தூங்கிவிட்டேன். அவள் என்கிட்டயும் சொல்லிட்டு போகலமா…” மனசார பொய்யுரைத்தான்.

விமலாவும் அப்படித்தான் இருக்குமோ என நினைத்து, இஷாராவுக்கு போன் செய்து கேட்கலாம் என போன் செய்து,”ஏம்மா… இஷா யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம போயிட்டே…”

‘மாம்ஸ்… நான் சொன்னதை என்ன தைரியம் இருந்தால் மறைத்திருப்பான். மாம்ஸ் உங்க மனசுல என்ன இருக்குது, உங்கள கையும் களவுமா நா கண்டுபிடிக்கறேன்…’ என மனதில் சூளுரைத்தாள்.

“இஷா… இஷா… நா கூப்பிட்டே இருக்கேன்… நீ பதிலே பேசமாட்டகற…”

“அப்படியெல்லாம் இல்ல அத்தை… நா ஏதோ யோசிட்டு இருந்தேன்.”

“சரி… என்ன யோசிட்டு இருந்த…”

“அதெல்லாம் விடுங்க அத்தை… அவசரமா… அவசரமா… என் மம்மி கூப்பிட்டாங்க… அதனால தான் யார்கிட்டயும் சொல்லாம வந்துட்டேன்.”

“ஓ… அப்படியா… அது தெரியாம தான் உன்னய காணோம்… காணோம்… வீடு பூரா தேடினேன்.”

“எனக்கு உங்க கஷ்டம் புரியுது அத்த… நீங்க எல்லோரும் தூங்கிட்டு இருந்திங்க அத்த… மேய்ட்கிட்டயாவது சொல்லிட்டு வந்திருக்கலாம்… சாரி அத்த…”

“சரி விடு… அதுக்கு எல்லாம் சாரி கேட்கற…”

“பரவாயில்ல அத்த… அது உங்க ப்ராட்- மைண்ட் காமிக்குது…”

“எதுக்கு உங்க மம்மி அவ்வளவு அவசரமா உன்னய கூப்பிட்டா…”

“அவங்களுக்கு வேற வேலை என்ன அத்த… உங்க வீட்டுக்கு வந்தாலே ஆகாது… ஏதாவது நைநைனு சொல்லிகிட்டே இருப்பாங்க… உங்களுக்கு தெரியாத அத்த…” என இழுத்தாள்.

“ம்ம்ம்… அது என்னவோ உண்மை தான்… எங்கள கண்டாலே ஆகாதே…”

“சரி அத்த… நா போன வச்சிட்டுமா…”

“எங்ககிட்ட பேசிட்டு இருக்க தெரிஞ்சா… அதுக்கு ஏதாவது சொல்வா… சரி வச்சிடு…” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

போனை வைத்த பிறகு,’முதல்ல நா உரசிகிட்டு பக்கத்துல ஒன்னும் சொல்லமாட்டான்… அவனுக்கும் அதைய அப்செட் பண்ணிக்குவான்… இப்ப என்னடா தள்ளித் தள்ளிப் போறான்… சம் திங் பிஸ்ஸி… அது என்ன விஷயம் கண்டுபிடிக்கறேன்…’ கங்கணம் கட்டிக் கொண்டாள்.

அம்ரீதா சம்ரித்தைப் பாரக்காமல் அலுவலகத்தில் எவ்வளவோ முயன்றும் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. சம்ரித் இப்போ என்ன செய்கிறான் என தெரியவில்லை சதா சர்வகாலம் அதே நினைவு தான். நினைத்து நினைத்து அவளுக்கு மண்டை இடிக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் கழித்து தாங்க முடியாத தலைவலியாக மாறிவிட்டது. பின்னர் என்ன செய்தும் தலைவலி குறையவே இல்லை. இனி அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய முடியாது என்ற நிலைமை வந்து போது, அதற்க்கு கீழே வேலை செய்யும் ஊழியரிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். பகல்வேளையில் யசோதா மட்டும் தான் இருந்தாள்.

வண்டி சத்தம் கேட்கவும், யசோ,’அம்ரீ வண்டி சத்தம் மாதிரியே கேட்குது… அதுக்குள்ள வந்துட்டாளே…’ என நினைக்கவும், காலிங் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

திறந்ததும் தொப்பென் சோபாவில் அமர்ந்து,”ஷ்ஷ்… என்ன ஒரு தாங்க முடியாத தலவலி… சித்தி உங்க கையால ஒரு ஸ்டாரங்கா காபி போட்டு குடுங்களேன்… அப்பயாவது தலவலி குறையுதானு பார்க்கறேன்…” என்று சொன்னாள்.

அவளுக்கு தலைவலி என்று சொல்லவும், அரக்க பறக்க கிச்சனுக்கு சென்று, அவசரமாக காபி தயாரித்து எடுத்து வந்துக் கொடுத்தாள். அம்ரீ கையில் காபி வாங்கி அதன் வாசனையை முகர்ந்ததும்,”வாவ் சித்தி… நீங்க போடற காபிய அடிச்சுக்கவே ஆளில்ல…” என சிலாகித்துச் சொன்னாள்.

“ரொம்ப ஐஸ் வைக்காதே அம்ரீ… எனக்கு சளி பிடிச்சுக்கும்மல…”

“ஐஸ்ல ஒன்னுமில்ல சித்தி… உண்மைய தான் சொன்னேன்.”

“போமா… எனக்கு ஒரே ஷையா இருக்குது…” என நெளிந்தாள்.

“உண்மைய சொன்னா… இப்படி வெட்கப்படறிங்களே…”

“ச்சோ… போடா…” என்று கூறி விட்டு வெட்கப்பட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததில் இருந்த தலைவலி போன இடம் தெரியவில்லை. ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டாள்.

இஷாரா ஜிம்க்கு போய் இருக்கும் போது, இஷாராவின் பெற்றோர்களுக்கு நடுவில் சண்டை நடந்தது. “இஷாராவை என் தங்கை மகனுக்கு தான் கட்டிக்க கொடுக்க வேண்டும்” என்று யோகேஷ் கூறினார்.

அதற்கு லதா,”அதெல்லாம் முடியாது. அங்க கொடுக்கறத விட என் பொண்ணய பாலு கிணத்துல தள்ளலாம்…” சொன்னாள்.

“என் பொண்ணுக்கு சம்ரித்தை தான் ரொம்ப பிடிச்சிருக்கு… அப்படி இருக்கும் பொழுது நீ அவனை மறந்துட்டு வேற எவனுக்காவது கட்டி கொடுக்கனும் நினைச்ச… அவ சூசைட் பண்ணிக்குவா தெரியுமா…” என்றான்.

சூசைட் என்ற வார்த்தை அவளைக் கட்டிப் போட்டது. ‘தன் பொண்ண சம்ரித் இல்லனா… சூசைட் பண்ணிக்குவளோ…’ சிந்திதாள். அந்த நினைவே அவளை மேற்க்கொண்டு எதையும் சிந்திக்க விடாமல் செய்தது.

யோகேஷ்,’அவளே எதாயிருந்தாலும் முடிவு செய்யட்டும்…’ என அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

லதா எவ்வளவு யோசித்தும் வேற வழியில்லாமல் இஷாராவை சம்ரித்கு தான் கட்டி கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

யோகேஷ் வந்தவுடன்,”எனக்கு உடன்பாடு இல்லைனாலும், உங்க மகளுக்காக சம்மதிக்கறேன்.” முடித்துவிட்டாள்.

இஷாரா வந்தவுடன் இதை கேள்விப் பட்டு அளவில்லா மகிழ்ச்சிக் கொண்டாள். உடனே யோகேஷ் விமலாவிற்கு போன் செய்து,”ஒரு நல்ல நாள் பார்த்து உங்கள் வீட்டுக்கு நிச்சயம் பண்ண வருகிறோம்.” எனச் சொன்னார்.

விமலா மிகவும் மகிழ்ச்சியுடன்,”வாங்கண்ணா… வாங்க…” சம்ரித்தைக் கேட்காமலே சொல்லிவிட்டார்

இவர்கள் இந்த மாதிரி முடிவு செய்திர்களே என்றால், கடவுள் தாத்தா ரூபத்தில் வேறு மாதிரி முடிவு செய்துவிட்டார். சம்ரித்துக்கும் அம்ரீதாவுக்கும் நிச்சயம் என முடிவு செய்து குடும்பத்தினரிடம் சொன்னார். சம்ரித்துக்கு உடனே சம்மதம் சொல்லிவிட்டான். ஈஸ்வருக்கும் ஓகே தான்.

ஆனால் விமலாவிற்கு இந்த ஏற்பாடேல்லம் சுத்தமாக உடன்பாடில்லை. ஏனெனில் சகோதரின் மகளை தன் மருமகளாக வரவேண்டும் ஆசை. உடனே அவர் முகம் சுருங்கிவிட்டது. குடும்பத்தினர் முகங்களை எல்லாம் அவதானித்தவர் விமலா முகம் சுருங்கியதைக் கவனித்தவர் அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என புரிந்துக் கொண்டார். அவருக்கு எவ்வளவு சிந்தித்தும் மூளையை கசக்கியும் பார்த்தார். ஆனால் காரணம் தான் புரியவில்லை.

எனவே அவர் விமலாவிடம்,”ஏம்மா உனக்கு இந்த கல்யாணத்தில் அவ்வளவா உடன்பாடில்லையோ…” கேட்டார்.

அதற்கு விமலா,”இல்ல மாமா… என் விருப்பமா முக்கியம். அது தான் கட்டிக்கப் போறவனே சம்மதம் சொல்லிட்டானே…”

சம்ரித் அதிர்ச்சியாக தன் தாயைப் பார்த்தான். உடனே ஆதிகேசவன்,”எனக்கு எல்லோரது விருப்பம் முக்கியம். உன் மனசில் உள்ளதை தயங்காம சொல்லுமா…” என மிகவும் வற்புறுத்திக் கேட்டார்.

அவர் வற்புறுத்தியதால் விமலா அவரிடம்,”எனக்கு இவனுக்கு இஷாராவை தான் கட்டிக்க வக்கனும் ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டா போதுமா… இவன் எண்ணம் எல்லாம் வேறாயாஇருக்குது…”

இஷாராவை என்றதும்,”நான் அந்த மாதிரி எண்ணத்தில் பழகவே இல்ல…” என்றான்.

“நீங்க பழகியதைப் பார்த்து லவ் பண்ணுங்கிறிங்களோ… நா நனைச்சேன்…”

“நாங்க இரண்டு பேரும் சோஷியலா பழகினோம்… அதை நீங்க தப்பா எடுத்துகிட்டா… நாங்க பொறுப்பா ஆக முடியாதும்மா…” விளக்கினான்.

“ஆனால் இஷா உன்னய லவ் பண்ணுறாளே… அவளுக்கு உன்னய பேசி முடிக்கலாம்னு நா வர சொல்லிக்கறேன்…”

இஷாரா தன்னை காதலிக்கிறாள் என்ற செய்தி சம்ரித்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடலை ஆதிகேசவனும் ஈஸ்வரும் வேடிக்கைப் பார்த்தனர்.

“நா ப்ரண்ட்லியா பழகினேன். அதை அவ காதலிக்கிறேனு நனைச்சா… நா ஒன்னும் பண்ண முடியாது…” அதிர்ச்சியோடு கேட்டான்.

“நீ ப்ரண்ட்லியா தான் பழகினேன்னு சொல்ற… அவ காதலிக்கிறேன்னு சொல்றா… அவகூட நெருங்கிப் பழகவும் தான் அவ அப்படி சொல்றா… அவ மட்டும் நாங்க கூட அப்படி தான் நனைச்சோம்… அப்படி தானே ஈஸ்வர்…” தன் பங்குக்கு ஈஸ்வரையும் கூட்டுச் சேர்த்த முயன்றாள்.

ஈஸ்வர்,”அப்படி எல்லாம் இல்ல… என் கண்ணுக்கு ரெண்டும் ப்ரண்ட்லியா தான் பழகுவதாக தெரியுது…” என சொன்னார்.

விமலா தனக்கு உதவிக்கு வருவார் என நினைத்த ஈஸ்வர் இப்படி பேசுவார் என நினைக்கவேல்லை. தனக்கு தானே தான் போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

அதே போல பேச எண்ணி,”இஷா எனக்கு மருமகளாக வர வேண்டும். அந்த கூலிக்கார பொண்ணை எல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது.” அம்ரீதாவை மருமகள் என்று சொல்லக் கூட அவருக்கு மனம் வரவில்லை.

சம்ரித்தும் அம்ரீயை கூலிக்காரி என்று சொன்னதில் தன் தாயின் மேல் கட்டுக்கடாத கோபம். அவர் தன்னோட அம்ரீயை மருமகள் என்று சொல்லத் தயங்குவதை மனதில் குறித்துக் கொண்டு, அந்த கூலிக்காரி தான் உனக்கு மருமகளாக்க வேண்டும் என முடிவு செய்துக் கொண்டான்.

“எனக்கு அம்ரீய தான் பிடிச்சிருக்கு… நா அவள தான் கல்யாணம் பண்ணிக்குவேன்… வேற யாரும் என் மனசில இல்ல…” என்று சொன்னான்.

“எனக்கு இஷா தான் மருமகளா வர வேண்டும். அது தான் என் முடிவு…”

“அவளயெல்லாம் என்னால கட்டிக்க முடியாது. நீங்க அஸ் யூஸ்ஃபுல் டிபிக்கள் இண்டியன் மாம்ஸ் மாதிரி தான் நடந்துக்கறிங்க… நா அம்ரீய தான் கட்டிக்குவேன்…” என உறுதியாக சொல்லி விட்டு தன் தாயிடம் பேச்சு முடிந்தது என்பது போல…

தன் தாத்தாவிடம் திரும்பி,”நிச்சயத்துக்கு நல்ல நாள் பாருங்க கிராண்ட்பா…” என சொன்னான்.

தன்னை யாரும் மதிக்கவில்லை என நினைத்தவாறு கோபமாக தன் அறைக்குள் புகுந்து தன் அண்ணனுக்கு போன் செய்தாள் விமலா.

யோகேஷ் போன் எடுத்தவுடன்,”என்ன விமலா… விஷயத்த சொல்லிட்டியா… எப்ப வரலாம்னு கேட்டியா…” மூச்சு விடாமல் பேசிக் கொண்டேப் போனார்.

“அண்ணா… அண்ணாணா… கொஞ்சம் நிறுத்தறிங்களா… இஷாவை சம்ரித்துக்கு பிடிக்கலயாம்… இவன் அந்த கூலிக்காரிய தான் லவ் பண்ணறானா… அவள தான் திருமணம் செஞ்சுக்குவானா…”

“ஓஹோ அப்படியா சொன்னான்… என் பொண்ணுகிட்ட இளிச்சு பேசினது,ஒட்டி உறவாடது எல்லாம் பொய்யா… எல்லாம் நடிப்பா… அவன் மனசில என்ன நனைச்சுகிட்டு இருக்கான்… இரு… இரு… அவன இரண்டுல ஒன்னு பார்த்திடலாம்…” சொல்லி விட்டு கோபமாக போனை வைத்துவிட்டார்.

பிறகு இஷாவிடம்,”அவன் உன்னய லவ் பண்ணலயா… அந்த கூலிக்காரிய தான் லவ் பண்ணுறானா… பாரம்மா இவனய என்ன செய்யலாம் சொல்லு…”

இதைக் கேட்டவுடன் லதா அப்படானு இந்த கல்யாணம் நடக்காதுனு என நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

கொஞ்ச நேரம் இஷா ஒரே யோசனையாக குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். அவள் அவ்வாறு நடப்பதைப் பார்த்து லதா ‘இவள் இன்னும் திட்டம் தீட்டுகிறாள்னு தெரியலயே…’ பயந்தார்.

இஷா,”ப்பா… அத்தகிட்ட என்னைக்கு அவள நிச்சயம் செய்ய போறாங்கனு… கேளுங்கப்பா… அதுக்கு முன்னால் ஒருமணி நேரத்துக்கு நாம நிச்சயம் செய்ய வருகிறோம்…

“ஆகட்டும் இஷா… நா இப்பவே போன் பண்ணி கேக்கறேன்.”

லதா,”இஷா… அந்த பையனே அவள தான் கல்யாணம் பண்ணிக்குவேனு முடிவு பண்ணிட்டான்… இதுக்கு மேல நாம தலையிடறது தப்பு… வேண்டாம் சொன்னா கேளும்மா…” என தன்மையாக சொன்னார்.

இஷா கோபத்துடன்,”எதும்மா தப்பு… என்னய காதலிச்சிட்டு… இப்ப அந்த கூலிக்காரிய கட்டிக்க போறேனு சொல்லறா… அதெல்லாம் தப்பில்லயா…” கேட்டாள்

உடனே லதா,”அவன் தான் சொல்றானல்ல… அந்த பொண்ணு தான் லவ் பண்ணறேனு… அப்புறம் என்ன…” சொன்னாள்.

அதற்கு இஷா,”எங்கிட்ட ஒட்டி உறவாடனது எல்லாம் நடிப்பா… ஹா…ஹா… யாருகிட்ட காது குத்தறான்…” சொன்னாள்.

“அவனை அப்படியெல்லாம் சொல்ல முடியாது. அவன் நாட்டில் எல்லாம் பொண்ணு பையன் விகல்பமில்லா பழகற மாதிரி இங்கேயும் அவன் பழகினான்… அத நீ தப்பா புரிஞ்சிகிட்டா… அவன் என்ன பண்ணுவான்.”

இஷா சீற்றத்துடன்,”அவன் என்னய தான் லவ் பண்ணினான். இப்ப மாத்தி சொல்றான்… இப்ப அவள பார்த்துட்டான்ல… அது தான் லவ் பண்ணுறேனு சொல்லிகிட்டு திரியறான்… மலருக்கு மலர் தாவுற வண்டு மாதிரி… அப்படியே அந்த நாட்டு வழக்கத்தை அவன் இங்கேயும் கடைப்பிடிக்கறான். இவனுக்கு ஒரு பாடத்தை கத்துக் கொடுக்கமா… நா ஓயமாட்டேன்…” என சூளூரைத்தாள்.

‘இவங்களுக்கு பட்டா தான் புத்தி வரும்…’ லதா ஒதுங்கிக் கொண்டார்.

உடனே விமலாவிற்கு போன் செய்து,”ம்மா… விமலா… அவங்க என்னைக்கு நிச்சயம் பண்ணறாங்க உனக்கு தெரியுமா…” என்று கேட்டார்.

“தெரியலண்ணா… நா உங்களுக்கு போன் பண்ணி சொல்லனும்றதுக்காக என் ரூம்க்கு வந்துட்டேன்…”

“என்னம்மா… நீ அவசரப்பட்டியே… என்ன தேதினு தெரிஞ்சுகிட்டு வா…” என்றார்.

விமலாவும் அவ்வாறே செய்ய ஒப்புக் கொண்டார்.

கள்ளமில்லா நா இருக்க…

காதலை நீ அள்ளி தர…

உறவென்று அவள் வர…

உள்ளத்திலே நீ இருக்க…

உறுதியாக நீ என நா இருக்க…

இல்லத்தில் யார் வருவதாக…

இறுதியில் தான் தெரியும்…

6 – தீக்கு தென்றலோடு மோகம் Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 10

பூ  – 10 முல்லையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல அவள் வீட்டுக்கு வந்திருந்தான் செந்தூரன். ஆனால், அங்கே வீடு பூட்டியிருந்தது. “வீடு பூட்டியிருக்கே… அடிபட்ட காலை வச்சுக்கிட்டு இவளுக்கு என்ன இவ்வளவு அவசரம்? நான் வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் பொறுக்க முடியலையா?” என்று அவள் மீது கோபப்பட்டுக் கொண்டே தன் புல்லட்டைப் பள்ளிக்கூடத்தை நோக்கித் திருப்பினான். பள்ளிக்கூட வளாகத்திற்குள் புல்லட்டை நிறுத்திவிட்டு, விறுவிறுவென முல்லையின் வகுப்புக்குச் சென்றான். ஆனால், முல்லை அங்கே இல்லை. மங்களம் டீச்சர்

நெஞ்சோரம் பூத்தவளே 10 Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

6.காதல்   6.காதல் இரவு…,மாறன் அறையில் இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.சந்தியா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளது முகம் பதற்றமாக மாறியது.“இல்ல… இல்ல… என்னை விடுங்க…”மாறன் சார் மாறன் சார ஏதும் பண்ணிடாதீங்க..நோ..ஐயோ அவளது நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பின.”வேண்டாம்… கிட்ட வராதீங்க…”“அம்மா…!”என்று பயங்கரமாக அலறி எழுந்தாள்.சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த மாறன் பதறி எழுந்தான்.“தியா…!”என்று அவசரமாக அவளருகே ஓடி வந்தான்.சந்தியா இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தாள். கண்கள் திறந்திருந்தாலும் அவள் முழுவதுமாக சுயநினைவுக்கு வரவில்லை.“தியா… என்னாச்சு?”என்று அவளது

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 9

வரம்பு மீறாத இதழ் சங்கமத்தில், இருவரின் இதயங்களும் மௌனமாக தங்கள் காதலைப் பரிமாறிக்கொண்டன.   மெதுவாக அவளது இதழ்களில் இருந்து தன் இதழ்களைப் பிரித்த செந்தூரன்,  அவளை சுவரோரம் நிமிர்த்தி நிறுத்தினான். அவளது வெட்கம் நிறைந்த முகத்தைப் பார்த்துப் புன்னகைக்க நினைத்த அவனது காந்தக் கண்கள், அடுத்த நொடி அதிர்ச்சியில் விரிந்தன.   செந்தூரன் தன் இதழ்களை விலக்கித் தன்னைத் தள்ளி நிறுத்திய அந்த மறுநொடி… முல்லையின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகச் சுரந்து அவளது கன்னங்களை

நெஞ்சோரம் பூத்தவளே 9 Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

5.காதல் அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.சந்தியா கோபத்திலும் வேதனையிலும் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.“ஏன் சார்…? ஏன் இப்படி பண்றீங்க…? நான் எத்தனை தடவை சொன்னாலும் புரியலையா? எனக்கு கல்யாணம் வேண்டாம். ஒரு தடவை வாழ்க்கை கொடுத்த பாடமே போதும்.மாறன் அவளை சில நொடிகள் பார்த்தான். பிறகு தன் கையில் இருந்த மாங்கல்ய சரடை பூசாரியிடம் அம்மன் காலில் வைத்து தர கொடுத்து அதை வாங்கி விட்டு அவள் முன்னால் வந்து நின்றான்.   “ஏன் சார்…? நான்

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 8

புல்லட் மலையடிவாரத்துச் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மேகங்கள் கருகருவெனத் திரண்டு வந்தன. குளிர்ந்த காற்று சுழன்றடிக்க, சாலையோர மரங்கள் எல்லாம் பேயாட்டம் ஆடியது . தூரத்தில் கடகடகடவென இடி சத்தம் முழங்கத் தொடங்கியது. முல்லை பயத்தில் லேசாக நடுங்கி, வண்டியின் பின் கம்பியை இன்னும் இறுக்கமாகப் பற்றி கொண்டாள். வண்டியின் கண்ணாடியில் அவளது முக மாற்றத்தைக் கவனித்த செந்தூரன், வண்டியின் வேகத்தைச் சற்று குறைத்து அவளது பக்கம் சாய்ந்தான். “வானம்

நெஞ்சோரம் பூத்தவளே 8 Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

4.காதல்   என் ஊரு பொன்வயல் கிராமம். ..எங்க வீட்டுல பொம்பள பிள்ளைங்க ஆரம்ப படிப்பை தவிர ஏதும் படிக்க முடியாத சூழ்நிலை…என்னோட அப்பா நான் படிக்க ஆசைப்பட்டதுக்காக என்னோட மேல் படிப்புக்கு செலவாகும் ன்னு அந்த ஊரு பண்ணையார் கிட்ட கடன் வாங்கி படிக்க வச்சாங்க..அவரோட பையன் தான் இந்த ராஜ பாண்டி ..முழு நேரமும் குடிச்சுட்டு ஊர்ல உள்ள பொம்பளைங்க கிட்ட கெட்ட சகவாசம் வச்சுருந்தான்..வாங்குன கடனுக்காக என்னை கல்யாணம் பண்ணி தர சொல்லி

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 7

தேக்கு மரத்தாலான  பெரிய டைனிங் டேபிளில், செந்தூரன் அமைதியாக மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் அவனது தந்தை பெரியசாமி  சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  செந்தூரனின் மனதில் காலையில் அவள் அடிப்பட்ட கால் விரலுக்கு மருந்து போட்டபோது  முல்லை தன் கையை இறுக்கமாகப் பற்றிய  ஸ்பரிசமும், அவளது குண்டு கண்களில் தெரிந்த தவிப்பும் தான் ஓடிக்கொண்டிருந்தது. நர்ஸ்  கண்ணாடிச் சில்லை எடுக்கும்போது அவளது விரல்கள் தன் கையை எப்படி இறுக்கிப் பற்றியாது  என்பது அவனது நெஞ்சுக்குள் மின்கம்பியாக

நெஞ்சோரம் பூத்தவளே 7 Read More »

error: Content is protected !!
Scroll to Top