9 – தீக்கு தென்றலோடு மோகம்
9 – தீக்கு தென்றலோடு மோகம்!
அனைவரும் முன்னிலையில் நிச்சயம் நன்றாக முடிந்தது. யோகேஷிம் விமலாவும் செய்வது அறியாது திகைத்தனர். சம்ரித்தும் ஈஸ்வரும் கருணாகரன் தம்பதியரும் சந்தோஷத்தில் திளைத்தனர். நினைத்தை நடத்தி முடித்து விட்டதில் ஆதிகேசவன் நிம்மதியானார்.
தன்னோட அறைக்கு வந்த சம்ரித் அம்ரீதாவுக்கு போன் போட்டு,”யாஹீ.. அம்ரீ… நிச்சயம் நல்லபடியாக முடிந்தது…” என்ற சந்தோஷத்தில் கூக்குரல் எழுப்பினான்.
அம்ரீதா,”எல்லோரும் சம்மத்தோடய நடந்தது…” எனக் கேட்டாள்.
“அது உனக்கு எதுக்கு?” என திருப்பி சம்ரித் கேட்டான்.
“இல்ல… நா தெரிஞ்சுக்கனும்…” பிடிவாதமாக சொன்னாள்.
“நல்லபடியாக முடிந்ததுனு சொன்னால்… அத கேட்டு சந்தோஷப்படனும் தவிர… அத விட்டுட்டு இப்படியெல்லாம் கேள்வி கேட்ககூடாது… என்ன புரிஞ்சுதா…”
“ஓஹோ… அப்படியானால் பிரச்சனையோட நடந்திருக்கு அப்படி தான…”
“அப்படி தான் நடந்தது…” என சம்ரித் வேண்டா வெறுப்பாக பதிலளித்தான்.
“இவ்வளவு வெறுப்பாக சொல்றிங்கனு… அப்போ என்னவோ பெரிசா நடந்திருக்கு… அப்படி தானே…”
“ஆமாம் நடந்தது… அவ்வளவும் உன்கிட்ட சொல்லுனுமா…”
“இல்ல… நீங்க என்கிட்ட சொல்லித்தான் ஆகனும்…” என விடாமல் வாதிட்டாள்.
“சொல்லமுடியாது… உன்னால என்ன பண்ணமுடியமோ… அத பண்ணிக்கோ..”
“ஓஹோ… அவ்வளவு தூரம் ஆகி போச்சா… நா அத பத்தி தாத்தாகிட்டயாவது போன் பண்ணி தெரிஞ்சுக்குவேன்.”
“நீ என்னய நம்பாம… என் தாத்தாவுக்கு போன் செய்து கேட்க போறியா… கேளு… கேட்டு தான் பாரு…”
அம்ரீதா ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தாள்.
“ஹலோ.. ஹலோ…” என்று கத்தினான்.
மறுபடியும் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.
“போடி… உன்கிட்ட என் சந்தோஷத்தை சொன்னே பாரு… வைடி போனை…” என சொல்லி அவள் போனை வைக்கும் முன்னே இவன் போனை வைத்துவிட்டான்.
அம்ரீதா அனுப்பிய புகைப்படத்தை அப்போது தான் பார்த்தான். புகைப்படத்தில் அம்ரீதா தேவதையாக ஜொலித்தாள்.
அதைப் பார்த்த சம்ரித்,”இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல…”
அவன் மனசாட்சியோ,’வேற எதில் குறைச்சலை கண்ட…’ என்றது.
சம்ரித்தோட,’நா என்ன பண்ணறது… அவ அழகுல கொஞ்சம் தடுமாறிட்டேன்…’ என்று நினைத்தான்.
‘கொஞ்சமாவ தடுமாறிட்டா…’ என்று கேள்வி எழுப்பியது.
அப்படி மனசாட்சி கேள்வி எழுப்பியதும் சம்ரித்தோ,’ஹீ… ஹீ…’ என்று இளித்தான்.
‘தூ… தூ…’ என காறித் துப்பியது.
அம்ரீதா அழகுல மயங்கி அவளோடு கனவுல டூயட் பாடிக் கொண்டிருந்தான். அவனோட மனசாட்சி,’சம்ரித்… சம்ரித்…’ என்று அழைத்துப் பார்த்தது.
சம்ரித்தோ கனவுல உலகத்துல இலயித்துக் கொண்டிருந்தான். மனசாட்சியோ,’அவன் கனவில் இருந்து மீண்டு வரமாட்டேன்… நா போகிறேன்…’ என்று எண்ணியவாறு மறைந்துவிட்டது.
சம்ரித் அம்ரீதா ஞாபகம் மனதை அரிக்க, அவகூட சண்டை போட்டதை மறந்து, அவளுக்கு போன் செய்தான்.
அம்ரீதா போன் அடிக்கவும், போனை எடுத்துப் பார்த்தாள் திரையில் சம்ரித் எனத் தெரியவும்,”க்கும்… என்கூட சண்டை போட்டுட்டு இப்ப எதுக்கு போன் பண்ணுகிறார்.” என நொடித்தாள்.
மீண்டும், மீண்டும் அடிக்க, ஒருவழியாக போனை எடுத்து,”ஹலோ… அதான் போனை எடுக்கவில்ல… தெரியுதில்ல… மறுபடியும்… மறுபடியும்… எதுக்கு போன் பண்ணுறிங்க…” என்று கடிந்துக் கொண்டாள்.
அப்போது தான் சம்ரித்துக்கு இருவரும் சண்டையிட்டுக் கொண்டது நினைவுக்கு வந்தது. ‘அச்சோ… இருவரும் சண்டை போட்டதை மறந்துவிட்டோம்…’ என நுனி நாக்கை கடித்தான். ‘இவளை எப்படியாவது சமாதானம் செய்வோம்… எப்படி…’ என்று யோசித்து, ‘இப்ப தான் நிச்சயம் முடிந்திருக்கு… இதை சொல்லியே ஒரு பரிசு வாங்கி கொடுக்காலாம்னு நகைகடைக்கு கூட்டி போயிடுலாம்…’ என முடிவு பண்ணினான்.
முடிவு மாதிரி சம்ரித் அம்ரீதாவை,”உனக்கு ஒரு கிப்ட் கொடுக்கனும்… உன்னாலே கொஞ்சம் நகைகடைக்கு வரியா…” அழைத்தான்.
அம்ரீதாவோ கொஞ்சம் பிகு செய்துக் கொண்டு,”அப்ப அப்படி எங்கிட்ட சண்ட போட்டங்க… இப்ப நீங்க கூப்பிட்டதும் நா வரனுமா…” என்றாள்.
சம்ரித்தோ,’இவளை சமாதானம் செய்யறது… கொஞ்சம் கஷ்டம் போல இருக்கு…’ என்று நினைத்துக் கொண்டு,”ப்ளீஸ் அம்ரீ… ப்ளீஸ்…”
அமரீதாவோ,’இன்னும் கொஞ்சம் கெஞ்சட்டும்… அவ்வளவு சீக்கிரம் மலை இறங்ககூடாது.’ என எண்ணினாள்.
அதிக நேரம் சம்ரித்தை கெஞ்சவிட்டு,”போதும்… போதும்… பெரிய மனசு பண்ணி உங்கள மன்னிச்சுட்டேன்…” கொஞ்சம் இறங்கி வந்தாள்.
இருவரும் சமாதானமாகி இயல்புக்கு வந்தனர். பிறகு அவன் சொன்ன மாதிரி நகைகடைக்கு அழைத்துப் போய் அழகான பிளாட்டினம் மோதிரம் வாங்கி, அதை அவன் கையால் அணிவித்து, அம்ரீதா கைக்கு முத்தம் ஒன்றை பரிசளித்தான்.
அதில் அம்ரீதா கன்னங்கள் இரண்டும் ரோஜா வண்ணம் கொண்டது. சம்ரித் அவள் கன்னங்களைப் பார்த்து ,”வாட் அ கிரேசி… யுவர் சீக்ஸ் ஆர் லுக் லைக் பிங்க்ஸ்…” என ஆச்சரியப்பட்டான்.
அவன் அப்படி சொன்னதும் மேலும் அவள் கன்னங்களில் இருந்த ரோஜா வண்ணம் முகம் முழுவதும் பரவியது. அவன் வாழ்ந்த நாட்டில் ஜஸ்ட் லைக் தட் போகும் பெண்களைப் பார்த்திருக்கிறான். அவனுக்கு இதை இன்னும் ஆச்சரியம் அளித்தது.
சம்ரித்,”யுவர் சைக்னஸ் இஸ் வெரி ப்யூட்டிபூல்… ஐ தாட் டூ வியர் தி டைமன்ட்ஸ் டூ யுவர் பாடி…” என புகழ்ந்தான்.
“ரொம்ப புகழாதிங்க… எனக்கு வெட்க… வெட்கமா வருது…”
“ஐ அட்மியைர் டூ திஸ் சைக்னஸ்…”
அம்ரீதா சம்ரித் புகழ… புகழ… பெருமையில் பூரிப்படைந்தாள். ஒருவழியாக மோதிரத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.
அடுத்தது கார் நேராக பிரேத்யக பெண்கள் ஆடையகத்துக்குள் உள்ளே நுழைந்தது. அதை பார்த்தவுடன் அம்ரீதா கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்தது.
அம்ரீதா,”எனக்கு டிரஸ் எடுக்கவா வந்திருக்கிறோம்…” என்று கேட்டாள்.
“ஆமாம்… உனக்கே உனக்கு தான்…”என சிரித்துக் கொண்டே சொன்னான்.
அவன் சொன்னதும் அவள் முகம் பூரிப்படைந்தது. இரண்டு பேரும் உல்லாசமாக கைக் கோர்த்துக் கொண்டு கடைக்குள் நுழைந்தனர்.
அவன் புல் ப்ராக் இருக்கும் செக்ஷனுக்குள் நுழைந்தான். அங்கே இருக்கும் ஒவ்வொரு ஆடையாக எடுத்து அவள் மேல் வைத்துப் பார்த்தான். எதுவும் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. மேலே ஒற்றை நாடாவுடன் ஒரு ஸ்லிவ்ஸ் ப்ராக் நல்ல ரெட் ஒயின் கலரில் எடுத்து அவள் மேல் வைத்துப் பார்த்தான். அவள் வெள்ளை நிறத்துக்கு அந்த ரெட் ஒயின் கலர் பொருத்தமாக இருந்தது
அதில் அவளைப் பார்த்தவுடன்,”சபாஷ்… உனக்கு இந்த கலர் எடுப்பாக இருக்குது… வாவ்… இந்த கலர் டிரஸ் உனக்கு அழகா… இல்லனா நீ இந்த டிரஸ்ல அழகா இருக்கியா… எனக்கு எதுவும் புரியல…” என்றான்.
அவளும் அந்த உடையை வாங்கி தன் மேலே வைத்துப் பார்த்து,’வாவ்… வாட் அ ஒன்டர்புல் டிரஸ்…’ என சந்தோஷப்பட்டாள்.
சம்ரித்தும்,”மேலே வச்சு பார்த்தா மட்டும் போதுமா… இதை போய் அங்கிருக்கும் டிரஸ்ஸிங் ரூமில் போய் போட்டுட்டு வா…” என்று சொன்னான்.
‘சும்மா டிரையல் பார்க்க போட்டுட்டு வர சொல்றாருனு…’ என நினைத்துக் கொண்டு போட்டுட்டு வந்தாள்.
அம்ரீதா உடையை மாற்றி வந்தாள். அவளை அந்த மேலும் கீழும் பார்த்தவன் பார்வையில்,”வாட் அ ப்ரிட்டி…”என வியந்தான். உடனே பழைய டிரஸை பேக் செய்ய சொல்லிவிட்டான்.
அம்ரீதா பழைய டிரஸை பேக் செய்ய சொல்வதைப் பார்த்து,”நா இந்த டிரஸில் வர போகிறேன்.” என ஆச்சரியமாகக் கேட்டாள்.
“எஸ்… இந்த டிரஸ்ல தான் வர போற… ஏன் இதுக்கென்ன அழகா இல்லயா…”
“இல்லனு யார் சொன்னா… நீங்க வாங்கி கொடுத்தது எதையும் குறை சொல்ல முடியாதே… இத மட்டும் எப்படி குறை சொல்வேன்…” என்றாள்.
“இல்லயே… நீ சொல்றத பார்த்தா குறை சொல்ற மாதிரி தான் இருக்கு…” என வம்புக்கு இழுத்தான்.
“ஓஹோ… நீங்க அப்படி வரிங்களா… சொன்னா என்ன பண்ணுவிங்க…” இவளும் பதிலுக்கு வரிஞ்சு கட்டி சண்டைக்கு போனாள்.
“சொல்லி தாரேன் பாரு…” சிரித்துக் கொண்டே சொன்னான்.
“ஹீம்… சொல்லிட்டாலும்… வேற வினையே வேண்டாம்…” பயந்துப் போல நடித்தாள்.
“அப்படி என்ன வினை வந்திடும்னு நினைச்சுகிட்டு இந்த பயம் பயப்படறே…”
“போதும் விளையாட்டு… அடுத்து எங்க போற ப்ளான்… எனக்கு தெரிஞ்சு எதோ ப்ளான் வச்சிருப்பிங்க…” என்றாள்.
சம்ரித் ஒன்றும் கூறாமல் சிரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அடுத்தது நேராக ஓட்டலுக்குள் நுழைந்தது. அங்கே அம்ரீதாவுக்கு தெரியாமலே சம்ரித் கேண்டில் லைட் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
காரை விட்டு இறங்கியதும் சட்டென சம்ரித் அம்ரீதாவின் கண்களை மூடியவாறு அழைத்துக் கொண்டு போய்,”சர்ப்ரைஸ்…” என்று கூறி விட்டு மூடிய கண்களை திறந்தான்.
அங்கே ஒரு அழகான மேஜையில் சாட்டின் துணி விரிக்கப்பட்டு அங்கங்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு நடுவில் விதவிதமான உணவுகள் வைக்கப்பட்டு இருந்தது.
அம்ரீதா மிகவும் ஆச்சரியப்பட்டு,”என்ன அடுத்ததடுத்து ஒரே சர்ப்ரைஸ் கொடுத்திட்டே போறிங்க…” எனக் கேட்டாள்.
சம்ரித்,”இதுக்கே ஆச்சரியப்பட்டால் எப்படி… இன்னமும் என்னன்ன இருக்கு…” எனக் கேட்டான்.
ஒரு இன்னிசை குழு தங்கள் கருவியோடு வந்து அங்கே தன் மென்னிசையை வாசித்துக் கொண்டிருந்தனர்.
பின்பு சம்ரித் ஒரு காலை மண்டியிட்டு குனிந்து அழகான பூங்கொத்தை எடுத்து அவள் முன்பு நீட்டியபடியே,”திஸ் ஃபார் யூ…” என்றான்.
அம்ரீதா ஆச்சரியத்தில் கண்களை விரித்து,”இதெல்லாம் எனக்கே… எனக்கா…” என்று ஒரு வித ராகத்தோடு கேட்டாள்.
அவனும் அதே ராகத்தில்,”ஆமாம்… உனக்கே… உனக்கு தான்…” என உரைத்தான்.
அவன் ராகத்தை ரசித்தவாறு சிரித்துக் கொண்டு குனிந்துப் பூங்கொத்தை பெற்றுக் கொண்டாள்.
பிறகு சம்ரித் திரும்பி இரு வெள்ளை சீருடை அணிந்திருந்த சிப்பந்திகளைப் பார்த்தான். அவன் பார்வையை உணர்ந்துக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தட்டில் ஒயிட்ஃபாரஸ்ட் கேக் எடுத்து வந்து அம்ரீதா முன்பு வைத்தனர்.
அதன் பின்பு ஒரு கத்தியை எடுத்து அவள் முன் நீட்டி,”ம்ம்ம்… கமான் கட் தி கேக்…” என்றவாறு சிரித்துக் கொண்டு சொன்னான்.
சுற்றியும் பார்வையை சூழல விட்டாள். யாரும் இவர்களை கவனிக்காமல் தங்கள் காரியத்தில் மூழ்கி இருந்தனர். பின்னர் ஓர் நிம்மதி பெருமூச்சு விட்டவாறு கத்தியை வாங்கி கேக்கை கட் பண்ணினாள். அம்ரீதா புன்னகையுடன் கேக்கை எடுத்து சம்ரித்துக்கு நாசூக்காக ஊட்டினாள்.
அதை வாங்கி வாயில் வைத்துக் கொண்டு அம்ரீதாவுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்ட முயல, இதையும் சற்றும் எதிர்ப்பார்க்காத அம்ரீதா சம்ரித்தை தள்ள முயல ஏற்கனவே அம்ரீதா அணைத்திருந்த கைகளோடு சேர்ந்து அவளும் அவன் நெஞ்சில் சாய்ந்தாள். இது சமயம் என்று அவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அம்ரீதா நிகழ்காலத்தில் இருந்து சொப்பனத்திற்கு சென்றுவிட்டாள்.
“வாவ்… வாட் அ ப்யூட்டிபூல் கபில்…” என சொல்லி சுற்றியுள்ள மேஜைகளில் உள்ளவர்கள் எழுந்து நின்று ஆரவாரத்துடன் கைத் தட்டினார்கள். ஒரு சிலர் விசில் கூட அடித்தனர்.
கைத் தட்டல் ஒலியில் அம்ரீதா கனவுலகத்தில் இருந்து மீண்டு நடப்புக்கு வந்து வெட்கப்பட்டு மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள்.
இது தான் சாக்கு என சம்ரித் மீண்டும்இறுக்கி அணைத்தான். அம்ரீதா நெளிந்துக் கொண்டே,”விடுங்க… எல்லோரும் நம்மளயே பார்க்கிறாங்க… எனக்கு கொஞ்சம் கில்டியா ஆகிறது…” சொன்னாள்.
மேலும் சில ஜோடிகள் இவர்களை மாதிரியே கட்டிப் பிடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
பிறகு ஒருவருக்கொருவர் ஒரே தட்டில் இருந்த உணவை ஊட்டிக் கொண்டனர். அங்கிருந்து மகிழ்ச்சியோடு கிளம்பினர். அவர்கள் முதலில் சண்டையோடு ஆரம்பித்து இறுதியில் மனநிறைவோடு எல்லாவற்றையும் முடித்துக் கொண்டனர்.
இருவருக்கும் இந்த பொழுது இனிமையான பொழுதாக அமைந்தது. வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருந்த பொழுது…
அந்த நினைவுகள் எந்நாளில் நினைவின்றி நீங்குமோ…
இப்பொழுது இனிமையான பொழுதாக இருப்பதை…
வாழ்வில் இத்தருணம் என்றென்றும் மறக்குமோ….





