ATM Tamil Romantic Novels

9 – தீக்கு தென்றலோடு மோகம்

9 – தீக்கு தென்றலோடு மோகம்!

அனைவரும் முன்னிலையில் நிச்சயம் நன்றாக முடிந்தது. யோகேஷிம் விமலாவும் செய்வது அறியாது திகைத்தனர். சம்ரித்தும் ஈஸ்வரும் கருணாகரன் தம்பதியரும் சந்தோஷத்தில் திளைத்தனர். நினைத்தை நடத்தி முடித்து விட்டதில் ஆதிகேசவன் நிம்மதியானார்.

தன்னோட அறைக்கு வந்த சம்ரித் அம்ரீதாவுக்கு போன் போட்டு,”யாஹீ.. அம்ரீ… நிச்சயம் நல்லபடியாக முடிந்தது…” என்ற சந்தோஷத்தில் கூக்குரல் எழுப்பினான்.

அம்ரீதா,”எல்லோரும் சம்மத்தோடய நடந்தது…” எனக் கேட்டாள்.

“அது உனக்கு எதுக்கு?” என திருப்பி சம்ரித் கேட்டான்.

“இல்ல… நா தெரிஞ்சுக்கனும்…” பிடிவாதமாக சொன்னாள்.

“நல்லபடியாக முடிந்ததுனு சொன்னால்… அத கேட்டு சந்தோஷப்படனும் தவிர… அத விட்டுட்டு இப்படியெல்லாம் கேள்வி கேட்ககூடாது… என்ன புரிஞ்சுதா…”

“ஓஹோ… அப்படியானால் பிரச்சனையோட நடந்திருக்கு அப்படி தான…”

“அப்படி தான் நடந்தது…” என சம்ரித் வேண்டா வெறுப்பாக பதிலளித்தான்.

“இவ்வளவு வெறுப்பாக சொல்றிங்கனு… அப்போ என்னவோ பெரிசா நடந்திருக்கு… அப்படி தானே…”

“ஆமாம் நடந்தது… அவ்வளவும் உன்கிட்ட சொல்லுனுமா…”

“இல்ல… நீங்க என்கிட்ட சொல்லித்தான் ஆகனும்…” என விடாமல் வாதிட்டாள்.

“சொல்லமுடியாது… உன்னால என்ன பண்ணமுடியமோ… அத பண்ணிக்கோ..”

“ஓஹோ… அவ்வளவு தூரம் ஆகி போச்சா… நா அத பத்தி தாத்தாகிட்டயாவது போன் பண்ணி தெரிஞ்சுக்குவேன்.”

“நீ என்னய நம்பாம… என் தாத்தாவுக்கு போன் செய்து கேட்க போறியா… கேளு… கேட்டு தான் பாரு…”

அம்ரீதா ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தாள்.

“ஹலோ.. ஹலோ…” என்று கத்தினான்.

மறுபடியும் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

“போடி… உன்கிட்ட என் சந்தோஷத்தை சொன்னே பாரு… வைடி போனை…” என சொல்லி அவள் போனை வைக்கும் முன்னே இவன் போனை வைத்துவிட்டான்.

அம்ரீதா அனுப்பிய புகைப்படத்தை அப்போது தான் பார்த்தான். புகைப்படத்தில் அம்ரீதா தேவதையாக ஜொலித்தாள்.

அதைப் பார்த்த சம்ரித்,”இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல…”

அவன் மனசாட்சியோ,’வேற எதில் குறைச்சலை கண்ட…’ என்றது.

சம்ரித்தோட,’நா என்ன பண்ணறது… அவ அழகுல கொஞ்சம் தடுமாறிட்டேன்…’ என்று நினைத்தான்.

‘கொஞ்சமாவ தடுமாறிட்டா…’ என்று கேள்வி எழுப்பியது.

அப்படி மனசாட்சி கேள்வி எழுப்பியதும் சம்ரித்தோ,’ஹீ… ஹீ…’ என்று இளித்தான்.

‘தூ… தூ…’ என காறித் துப்பியது.

அம்ரீதா அழகுல மயங்கி அவளோடு கனவுல டூயட் பாடிக் கொண்டிருந்தான். அவனோட மனசாட்சி,’சம்ரித்… சம்ரித்…’ என்று அழைத்துப் பார்த்தது.

சம்ரித்தோ கனவுல உலகத்துல இலயித்துக் கொண்டிருந்தான். மனசாட்சியோ,’அவன் கனவில் இருந்து மீண்டு வரமாட்டேன்… நா போகிறேன்…’ என்று எண்ணியவாறு மறைந்துவிட்டது.

சம்ரித் அம்ரீதா ஞாபகம் மனதை அரிக்க, அவகூட சண்டை போட்டதை மறந்து, அவளுக்கு போன் செய்தான்.
அம்ரீதா போன் அடிக்கவும், போனை எடுத்துப் பார்த்தாள் திரையில் சம்ரித் எனத் தெரியவும்,”க்கும்… என்கூட சண்டை போட்டுட்டு இப்ப எதுக்கு போன் பண்ணுகிறார்.” என நொடித்தாள்.

மீண்டும், மீண்டும் அடிக்க, ஒருவழியாக போனை எடுத்து,”ஹலோ… அதான் போனை எடுக்கவில்ல… தெரியுதில்ல… மறுபடியும்… மறுபடியும்… எதுக்கு போன் பண்ணுறிங்க…” என்று கடிந்துக் கொண்டாள்.

அப்போது தான் சம்ரித்துக்கு இருவரும் சண்டையிட்டுக் கொண்டது நினைவுக்கு வந்தது. ‘அச்சோ… இருவரும் சண்டை போட்டதை மறந்துவிட்டோம்…’ என நுனி நாக்கை கடித்தான். ‘இவளை எப்படியாவது சமாதானம் செய்வோம்… எப்படி…’ என்று யோசித்து, ‘இப்ப தான் நிச்சயம் முடிந்திருக்கு… இதை சொல்லியே ஒரு பரிசு வாங்கி கொடுக்காலாம்னு நகைகடைக்கு கூட்டி போயிடுலாம்…’ என முடிவு பண்ணினான்.

முடிவு மாதிரி சம்ரித் அம்ரீதாவை,”உனக்கு ஒரு கிப்ட் கொடுக்கனும்… உன்னாலே கொஞ்சம் நகைகடைக்கு வரியா…” அழைத்தான்.

அம்ரீதாவோ கொஞ்சம் பிகு செய்துக் கொண்டு,”அப்ப அப்படி எங்கிட்ட சண்ட போட்டங்க… இப்ப நீங்க கூப்பிட்டதும் நா வரனுமா…” என்றாள்.

சம்ரித்தோ,’இவளை சமாதானம் செய்யறது… கொஞ்சம் கஷ்டம் போல இருக்கு…’ என்று நினைத்துக் கொண்டு,”ப்ளீஸ் அம்ரீ… ப்ளீஸ்…”

அமரீதாவோ,’இன்னும் கொஞ்சம் கெஞ்சட்டும்… அவ்வளவு சீக்கிரம் மலை இறங்ககூடாது.’ என எண்ணினாள்.

அதிக நேரம் சம்ரித்தை கெஞ்சவிட்டு,”போதும்… போதும்… பெரிய மனசு பண்ணி உங்கள மன்னிச்சுட்டேன்…” கொஞ்சம் இறங்கி வந்தாள்.

இருவரும் சமாதானமாகி இயல்புக்கு வந்தனர். பிறகு அவன் சொன்ன மாதிரி நகைகடைக்கு அழைத்துப் போய் அழகான பிளாட்டினம் மோதிரம் வாங்கி, அதை அவன் கையால் அணிவித்து, அம்ரீதா கைக்கு முத்தம் ஒன்றை பரிசளித்தான்.

அதில் அம்ரீதா கன்னங்கள் இரண்டும் ரோஜா வண்ணம் கொண்டது. சம்ரித் அவள் கன்னங்களைப் பார்த்து ,”வாட் அ கிரேசி… யுவர் சீக்ஸ் ஆர் லுக் லைக் பிங்க்ஸ்…” என ஆச்சரியப்பட்டான்.

அவன் அப்படி சொன்னதும் மேலும் அவள் கன்னங்களில் இருந்த ரோஜா வண்ணம் முகம் முழுவதும் பரவியது. அவன் வாழ்ந்த நாட்டில் ஜஸ்ட் லைக் தட் போகும் பெண்களைப் பார்த்திருக்கிறான். அவனுக்கு இதை இன்னும் ஆச்சரியம் அளித்தது.

சம்ரித்,”யுவர் சைக்னஸ் இஸ் வெரி ப்யூட்டிபூல்… ஐ தாட் டூ வியர் தி டைமன்ட்ஸ் டூ யுவர் பாடி…” என புகழ்ந்தான்.

“ரொம்ப புகழாதிங்க… எனக்கு வெட்க… வெட்கமா வருது…”

“ஐ அட்மியைர் டூ திஸ் சைக்னஸ்…”

அம்ரீதா சம்ரித் புகழ… புகழ… பெருமையில் பூரிப்படைந்தாள். ஒருவழியாக மோதிரத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

அடுத்தது கார் நேராக பிரேத்யக பெண்கள் ஆடையகத்துக்குள் உள்ளே நுழைந்தது. அதை பார்த்தவுடன் அம்ரீதா கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்தது.

அம்ரீதா,”எனக்கு டிரஸ் எடுக்கவா வந்திருக்கிறோம்…” என்று கேட்டாள்.

“ஆமாம்… உனக்கே உனக்கு தான்…”என சிரித்துக் கொண்டே சொன்னான்.

அவன் சொன்னதும் அவள் முகம் பூரிப்படைந்தது. இரண்டு பேரும் உல்லாசமாக கைக் கோர்த்துக் கொண்டு கடைக்குள் நுழைந்தனர்.

அவன் புல் ப்ராக் இருக்கும் செக்‌ஷனுக்குள் நுழைந்தான். அங்கே இருக்கும் ஒவ்வொரு ஆடையாக எடுத்து அவள் மேல் வைத்துப் பார்த்தான். எதுவும் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. மேலே ஒற்றை நாடாவுடன் ஒரு ஸ்லிவ்ஸ் ப்ராக் நல்ல ரெட் ஒயின் கலரில் எடுத்து அவள் மேல் வைத்துப் பார்த்தான். அவள் வெள்ளை நிறத்துக்கு அந்த ரெட் ஒயின் கலர் பொருத்தமாக இருந்தது

அதில் அவளைப் பார்த்தவுடன்,”சபாஷ்… உனக்கு இந்த கலர் எடுப்பாக இருக்குது… வாவ்… இந்த கலர் டிரஸ் உனக்கு அழகா… இல்லனா நீ இந்த டிரஸ்ல அழகா இருக்கியா… எனக்கு எதுவும் புரியல…” என்றான்.

அவளும் அந்த உடையை வாங்கி தன் மேலே வைத்துப் பார்த்து,’வாவ்… வாட் அ ஒன்டர்புல் டிரஸ்…’ என சந்தோஷப்பட்டாள்.

சம்ரித்தும்,”மேலே வச்சு பார்த்தா மட்டும் போதுமா… இதை போய் அங்கிருக்கும் டிரஸ்ஸிங் ரூமில் போய் போட்டுட்டு வா…” என்று சொன்னான்.

‘சும்மா டிரையல் பார்க்க போட்டுட்டு வர சொல்றாருனு…’ என நினைத்துக் கொண்டு போட்டுட்டு வந்தாள்.

அம்ரீதா உடையை மாற்றி வந்தாள். அவளை அந்த மேலும் கீழும் பார்த்தவன் பார்வையில்,”வாட் அ ப்ரிட்டி…”என வியந்தான். உடனே பழைய டிரஸை பேக் செய்ய சொல்லிவிட்டான்.

அம்ரீதா பழைய டிரஸை பேக் செய்ய சொல்வதைப் பார்த்து,”நா இந்த டிரஸில் வர போகிறேன்.” என ஆச்சரியமாகக் கேட்டாள்.

“எஸ்… இந்த டிரஸ்ல தான் வர போற… ஏன் இதுக்கென்ன அழகா இல்லயா…”

“இல்லனு யார் சொன்னா… நீங்க வாங்கி கொடுத்தது எதையும் குறை சொல்ல முடியாதே… இத மட்டும் எப்படி குறை சொல்வேன்…” என்றாள்.

“இல்லயே… நீ சொல்றத பார்த்தா குறை சொல்ற மாதிரி தான் இருக்கு…” என வம்புக்கு இழுத்தான்.

“ஓஹோ… நீங்க அப்படி வரிங்களா… சொன்னா என்ன பண்ணுவிங்க…” இவளும் பதிலுக்கு வரிஞ்சு கட்டி சண்டைக்கு போனாள்.

“சொல்லி தாரேன் பாரு…” சிரித்துக் கொண்டே சொன்னான்.

“ஹீம்… சொல்லிட்டாலும்… வேற வினையே வேண்டாம்…” பயந்துப் போல நடித்தாள்.

“அப்படி என்ன வினை வந்திடும்னு நினைச்சுகிட்டு இந்த பயம் பயப்படறே…”

“போதும் விளையாட்டு… அடுத்து எங்க போற ப்ளான்… எனக்கு தெரிஞ்சு எதோ ப்ளான் வச்சிருப்பிங்க…” என்றாள்.

சம்ரித் ஒன்றும் கூறாமல் சிரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அடுத்தது நேராக ஓட்டலுக்குள் நுழைந்தது. அங்கே அம்ரீதாவுக்கு தெரியாமலே சம்ரித் கேண்டில் லைட் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தான்.

காரை விட்டு இறங்கியதும் சட்டென சம்ரித் அம்ரீதாவின் கண்களை மூடியவாறு அழைத்துக் கொண்டு போய்,”சர்ப்ரைஸ்…” என்று கூறி விட்டு மூடிய கண்களை திறந்தான்.

அங்கே ஒரு அழகான மேஜையில் சாட்டின் துணி விரிக்கப்பட்டு அங்கங்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு நடுவில் விதவிதமான உணவுகள் வைக்கப்பட்டு இருந்தது.

அம்ரீதா மிகவும் ஆச்சரியப்பட்டு,”என்ன அடுத்ததடுத்து ஒரே சர்ப்ரைஸ் கொடுத்திட்டே போறிங்க…” எனக் கேட்டாள்.

சம்ரித்,”இதுக்கே ஆச்சரியப்பட்டால் எப்படி… இன்னமும் என்னன்ன இருக்கு…” எனக் கேட்டான்.

ஒரு இன்னிசை குழு தங்கள் கருவியோடு வந்து அங்கே தன் மென்னிசையை வாசித்துக் கொண்டிருந்தனர்.

பின்பு சம்ரித் ஒரு காலை மண்டியிட்டு குனிந்து அழகான பூங்கொத்தை எடுத்து அவள் முன்பு நீட்டியபடியே,”திஸ் ஃபார் யூ…” என்றான்.

அம்ரீதா ஆச்சரியத்தில் கண்களை விரித்து,”இதெல்லாம் எனக்கே… எனக்கா…” என்று ஒரு வித ராகத்தோடு கேட்டாள்.

அவனும் அதே ராகத்தில்,”ஆமாம்… உனக்கே… உனக்கு தான்…” என உரைத்தான்.

அவன் ராகத்தை ரசித்தவாறு சிரித்துக் கொண்டு குனிந்துப் பூங்கொத்தை பெற்றுக் கொண்டாள்.

பிறகு சம்ரித் திரும்பி இரு வெள்ளை சீருடை அணிந்திருந்த சிப்பந்திகளைப் பார்த்தான். அவன் பார்வையை உணர்ந்துக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தட்டில் ஒயிட்ஃபாரஸ்ட் கேக் எடுத்து வந்து அம்ரீதா முன்பு வைத்தனர்.

அதன் பின்பு ஒரு கத்தியை எடுத்து அவள் முன் நீட்டி,”ம்ம்ம்… கமான் கட் தி கேக்…” என்றவாறு சிரித்துக் கொண்டு சொன்னான்.

சுற்றியும் பார்வையை சூழல விட்டாள். யாரும் இவர்களை கவனிக்காமல் தங்கள் காரியத்தில் மூழ்கி இருந்தனர். பின்னர் ஓர் நிம்மதி பெருமூச்சு விட்டவாறு கத்தியை வாங்கி கேக்கை கட் பண்ணினாள். அம்ரீதா புன்னகையுடன் கேக்கை எடுத்து சம்ரித்துக்கு நாசூக்காக ஊட்டினாள்.

அதை வாங்கி வாயில் வைத்துக் கொண்டு அம்ரீதாவுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்ட முயல, இதையும் சற்றும் எதிர்ப்பார்க்காத அம்ரீதா சம்ரித்தை தள்ள முயல ஏற்கனவே அம்ரீதா அணைத்திருந்த கைகளோடு சேர்ந்து அவளும் அவன் நெஞ்சில் சாய்ந்தாள். இது சமயம் என்று அவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அம்ரீதா நிகழ்காலத்தில் இருந்து சொப்பனத்திற்கு சென்றுவிட்டாள்.

“வாவ்… வாட் அ ப்யூட்டிபூல் கபில்…” என சொல்லி சுற்றியுள்ள மேஜைகளில் உள்ளவர்கள் எழுந்து நின்று ஆரவாரத்துடன் கைத் தட்டினார்கள். ஒரு சிலர் விசில் கூட அடித்தனர்.

கைத் தட்டல் ஒலியில் அம்ரீதா கனவுலகத்தில் இருந்து மீண்டு நடப்புக்கு வந்து வெட்கப்பட்டு மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள்.

இது தான் சாக்கு என சம்ரித் மீண்டும்இறுக்கி அணைத்தான். அம்ரீதா நெளிந்துக் கொண்டே,”விடுங்க… எல்லோரும் நம்மளயே பார்க்கிறாங்க… எனக்கு கொஞ்சம் கில்டியா ஆகிறது…” சொன்னாள்.

மேலும் சில ஜோடிகள் இவர்களை மாதிரியே கட்டிப் பிடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

பிறகு ஒருவருக்கொருவர் ஒரே தட்டில் இருந்த உணவை ஊட்டிக் கொண்டனர். அங்கிருந்து மகிழ்ச்சியோடு கிளம்பினர். அவர்கள் முதலில் சண்டையோடு ஆரம்பித்து இறுதியில் மனநிறைவோடு எல்லாவற்றையும் முடித்துக் கொண்டனர்.

இருவருக்கும் இந்த பொழுது இனிமையான பொழுதாக அமைந்தது. வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருந்த பொழுது…

அந்த நினைவுகள் எந்நாளில் நினைவின்றி நீங்குமோ…

இப்பொழுது இனிமையான பொழுதாக இருப்பதை…

வாழ்வில் இத்தருணம் என்றென்றும் மறக்குமோ….

9 – தீக்கு தென்றலோடு மோகம் Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 24

பூ  – 25 முல்லை இன்னும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்.   அவள் அருகில் அமர்ந்திருந்த செந்தூரன், அவளது தலைமுடியை வருடியபடி அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.   மெல்ல கண் விழித்த முல்லை, அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.   “சின்னையா…” என்று சோர்வில் சிரித்தவளின் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டவன்,   “அம்மணி… இப்போ எப்படி இருக்கு? இன்னும் மயக்கமா  இருக்கா?” என்று அக்கறையுடன் கேட்டான்.   “இல்லங்க… இப்போ பரவாயில்ல.” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.   “அப்போ

நெஞ்சோரம் பூத்தவளே 24 Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

17. காதல் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த மாறன், ஆழமாக ஒரு மூச்சை இழுத்தான். அவனது வீட்டிற்கு சென்று தயாராகி விட்டு தன்னுடைய ஆபிஸ் வேலையாக அவனுடைய பார்ட்னர் ஏ. எம். சொலியூஷன்ஸ் நிறுவனத்திற்குச் சென்றான்.கட்டிடத்தைப் பார்த்தவுடன் அவன் இதயம் வேகமாகத் துடித்தது. ஏதோ உள்ளுணர்வு தூண்ட திரும்பி பார்க்க அங்கு சந்தியா..மாறனுக்கு மகிழ்ச்சியில் கண்ணில் ஆனந்தம் மின்னியது..அவள் லிஃப்ட் காக நின்று கொண்டிருந்தாள்..அவளை நோக்கி சென்றவன் போகும் முன் சந்தியா சென்று விட்டாள்..  

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 24

பூ  – 24   இரவு முழுவதும் சரியாகத் தூங்காத செந்தூரன், அதிகாலையிலேயே எழுந்து பால்கனியில் நின்றிருந்தான். அவனது மனதில் சுற்றிக் கொண்டிருந்தது மருதப்பன் சொன்ன வார்த்தைகள் மட்டுமே.   “நான் சொன்னதைக் கேக்கலன்னா… அதுக்குப் பிறகு நடக்குறதுக்கு நானே பொறுப்பில்லை… பெரியசாமி கொடுத்த மிரட்டலும்… அதற்கு மறுநாளே மரகதத்தின் மரணமும்… இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக அவனது உள்ளுணர்வு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தது.   அப்போது… “சின்னையா…” என்ற மெல்லிய குரலில் திரும்பிப்

நெஞ்சோரம் பூத்தவளே 24 Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

16.காதல்.   ஒரு வாரம் கடந்திருந்தது.நாயகியின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, மருத்துவரின் ஆலோசனையின்படி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். வீட்டில் அனைவரும் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த வீட்டில் மட்டும் ஒரு வெறுமை நிலவியது. சந்தியா இல்லாத அந்த வீடு, மாறனுக்கு வீடாகவே தெரியவில்லை.அவளது நினைவுகள் ஒவ்வொன்றும் அவனை வதைத்தன.ஆனால் நடந்ததை நினைத்தாலே, அவனுடைய கோபம் இன்னும் குறையவில்லை.. இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில்..,சந்தியாவின் அப்பா கந்தவேலு வந்திருந்தார்.. மாறன் சக்கரவர்த்தி வீட்டின் வாசலில் தயக்கத்துடன்

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 23

பூ  – 23   அறைக்குள் வந்ததும், இதுவரை தைரியமாக இருந்த முல்லையின் மனம் உடைந்து போனது.   அமைதியாக ஜன்னல் அருகே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்த செந்தூரனின் முதுகையே சில நொடிகள் வெறித்துப் பார்த்தாள்.   மெல்ல அவனருகே வந்தவள், “சின்னையா…” என்று நடுங்கிய குரலில் அழைத்தாள்.   அவளது குரலிலிருந்த கலக்கத்தைக் கேட்டவன் மெதுவாகத் திரும்பி பார்த்தான்.   அடுத்த நொடியே, அவனது மார்பில் சாய்ந்தவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.  

நெஞ்சோரம் பூத்தவளே 23 Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

15.காதல்   மாறனின் கண்கள் சிவந்து இருந்தன. மனது முழுவதும் சந்தியா அழுது வடிந்த முகமும் தன் காதல் அவளிடம் தோற்று போனதை நினைத்து நினைத்து வருந்தினான்..என்கூட வாழ்ந்த ஒரு நொடி கூட என் காதல் உனக்கு புரியலையா..சரி இனி இந்த மாறன் உனக்கு வேண்டாம்..என்று ஓரு தெளிவான முடிவெடுத்து சென்றான்..   மீண்டும் சந்தியாவிடம் வந்த மாறன்..அவன் குரலில் கோபம் கலந்த வலியும், காதலும் ஒன்றாக கலந்திருந்தது. ஹுக்கும்..”சரி…நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் சம்மதிக்குறேன்..உனக்கு

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 19

பூ  – 22 ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த சூரிய ஒளி வெளிச்சத்தில் மெதுவாகக் கண்விழித்த முல்லை, செந்தூரனின் மார்பில் சாய்ந்தபடி இருப்பதை உணர்ந்ததும் வெட்கத்தில் முகம் சிவந்தது.   அவனுக்குத் தெரியாமல் மெதுவாக எழுந்திருக்க முயன்றாள்.   செந்தூரன் அவளை எழும்ப விடாமல் அவள் கைகளை பிடித்துத்திருந்தான். அவன் கண்களைத் திறக்காமல்  “எங்கடி ஓடுற?” என்று சிரித்தபடி கேட்டான்.   “சின்னையா… விடுங்க… நேரமாச்சு…” என்று நாணம் கொண்டு மெல்லிய குரலில்…   கண்களைத் திறந்தவன், 

நெஞ்சோரம் பூத்தவளே 19 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 20

நெஞ்சோரம் பூத்தவளே  – 21   அடுத்தவாரத்தில், பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்த கணினிகள், ப்ரொஜெக்டர் அனைத்தும் முறையாக பொருத்தப்பட்டு, முதல் முறையாகப் பிள்ளைகளுக்கு ப்ரொஜெக்டர் மூலம் பாடம் நடத்தப்பட்டது. திரையில் வண்ணமயமாகத் தோன்றிய படங்களையும், அறிவியல் காட்சிகளையும் பார்த்த சிறுவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். “டீச்சர்… இது சினிமா மாதிரி இருக்கே! இனிமே இப்படித்தான் படிப்போமா டீச்சர்?” என்று ஆர்வத்தோடு கேட்ட குழந்தைகளைப் பார்த்த முல்லையின் மனம் அப்படியே நிறைந்து போனது. தான் கண்ட கனவு

நெஞ்சோரம் பூத்தவளே 20 Read More »

8 – தீக்கு தென்றலோடு மோகம்

8 – தீக்கு தென்றலோடு மோகம்!

ஈஸ்வர் சொன்ன மாதிரியும் ஆதிகேசவன் முடிவு செய்த மாதிரியும் நிச்சயத்துக்கு உண்டான வேலையெல்லாம் ரகசியமாக சோனு தலைமையில் நம்பகத்தனமாக ஆட்களை வைத்து செய்தார்கள். இது எதுவும் விமலாவுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.

அன்றைக்கு போக முடியாத டின்னருக்கு இன்றைக்கு போகலாம் என சம்ரித் முடிவு செய்து,”அம்ரீ… ஸ்வீட்டி…”என இழுத்தான்.

“என்ன கொஞ்சல் எல்லாம் பலமாக இருக்கு… என்ன விஷயம் சட்புட்னு சொல்லுங்க… எனக்கு தலைக்கு மேல இருக்கு…”

“என்கிட்ட பேசறது தவிர அப்படி என்ன உனக்கு தலைக்கு மேல வேலயிருக்கு…”

“அதுவா…”என யோசித்து,”அது வந்து எனக்கு மேக்கப் பண்ற வேலயெல்லாம் இருக்கு… “ என பொய்யுரைத்தாள்.

“என்னயவிடவா…” என்று கேள்வி எழுப்பினான்.

இவன் கேட்கும் கேள்விக்கு என்ன பதிலுரைப்பது தெரியாமல் முழித்தாள். தான் சொன்னது பொய் என எப்படி சொல்வது குழம்பினாள்.

“சொல்லு… என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழிக்கிறயா…” சரியாக நாடியைப் பிடித்துவிட்டான்.

“ஹீஹீ…” என சிரித்து வைத்தாள்.

“என்ன இளிக்கிற… எப்படி உண்மைய கண்டுப்பிடிச்சேன்னு… சொல்லு பார்க்கலாம்…”

தலையை சொரிந்தவாறே,”அதான் தெரியலையே…” என சமாளித்தாள்.

“பதில் சொல்ல தெரியாம ஒரு ஐந்து நிமிஷம் யோசிச்சல்ல… அதுவே சொல்லிடுச்சு… நீ பொய் சொல்றனு…”

உண்மையை கண்டுப்பிடிச்சிட்டான்னு… என்று பேசாமல் இருந்தாள்.

“ஜோக்ஸ் அப்பார்ட்… அன்னைக்கு டின்னருக்கு போகல… இன்னைக்கு போலமா…” என்றுக் கேட்டான்.

“ஓ… போலமே…”

“நான் என் கார்ல நேரா ஓட்டல் தாஜ் கொரமண்டலுக்கு வந்திடறேன். நீ உன் பைக்ல வந்திடு…”

“நம் இரண்டு பேரும் தனித்தனியா அவங்க வண்டில வரது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல… நீங்க வந்து என்னய கூட்டிட்டு போங்க…”

“வேண்டாம்… வேண்டாம்….” என வேகமாக மறுத்தான்.

“எதுக்கு இவ்வளவு பதட்டம்…”

“இல்ல… அன்னைக்கு மாதிரியே ஏதாவது எக்கு தப்பா ஆகி போச்சுனா… அதனால் நீ நேரா ஓட்டலுக்கு வந்திடு…”

“அதுக்காக நீங்க என்னய ஓட்டலுக்கு வர சொல்றிங்களே… நா என்ன சொல்லிட்டு வருவேன்.”

“ஏன் நாந்தான் உன்னய வர சொன்னேன்னு சொல்லு…”

“என் சித்தப்பா நீங்க வந்து கூட்டிட்டு போலாமே… என கேட்டால்…” என முடிக்காமல் இழுத்தாள்.

சற்று எரிச்சலுடன்,”சரி நான் வரேன்… இதே எங்க நாட்ல யார்கிட்டயும் சொல்ல வேண்டியதில்ல… நாம ஆசைப்பட்டால் கிளம்பி போயிடலாம்… இந்த நாட்ல தான் ஆயிரத்தெட்டு கேள்விக்கு பதில் சொல்லிட்டு அழைச்சிட்டு போகனும்…” என்று சலித்துக் கொண்டான்.

“ஓஹோ… அப்படி இருந்தால் உங்க நாட்லயே ஒருத்திய தேடி கண்டுபிடிச்சு காதலிச்சுருக்கலாமில்ல…” கோபத்துடன் சொன்னாள்.

“ஓகே… ஓகே…. நீ கோவிச்சுட்ட போல… நா வந்து கூட்டிட்டு போறேன்…” என கூறி சண்டையை முடித்து வைத்தான்.

சொன்னதுப் போலவே சம்ரித் அம்ரீதாவை வந்து கூட்டிட்டுப் போனான்.

சம்ரித் உறவினருக்கு பதினொருமணிக்கு நிச்சயம் என விமலாவை கூட்டிட்டுப் போய் அழைத்தன்ர். ஆனால் எல்லோருக்கும் ஆதிகேசவன் போன் செய்து ஒன்பது மணிக்கு நிச்சயம் என அழைத்தனர். இஷா வீட்டினர் பத்து மணிக்கு வந்து நிச்சயம் செய்துக் கொள்கிறோம் என ரகசியமாக விமலாவிற்கு தெரியப்படுத்தினர்.

எல்லா உறவினரும் எட்டு மணிக்கு கூட ஆரம்பித்தனர். ஆதிகேசவன், ஈஸ்வர் தம்பதியரும் வரவேற்பில் நின்றுக் கொண்டு வரவேற்றனர். விமலா பதினொருமணி நிச்சயத்துக்கு இப்பவே வந்துருங்காக போல நினைத்துக் கொண்டார்.

சம்ரித் காலையில் ஏழுமணிக்கே ப்யூட்டி பார்லருக்கு கிளம்பிப் போனான். அவன் ஏழுமணிக்கு கிளம்பிப் போகவும் விமலா கூட இஷா வீட்டினர் வரும் போது பிரச்சனை இருக்காது என நினைத்துக் கொண்டார்.

ஆனால் இஷா வீட்டினர் வருவதற்கு முன்பே கருணாகரன் தன் சொந்தபந்தங்களை அழைத்துக் கொண்டு சம்ரித் வீட்டுக்கு வந்திட்டார்.

அதற்கு முன்பே சம்ரித்தும் ப்யூட்டிபார்லர் போய் விட்டு மணமகன் போல காரில் இருந்து இறங்கினான். அதை பார்த்து, ஆதிகேசவன்,”அடடா… சம்ரித் மாப்பிள்ள போல ரெடியாயிட்டு வந்திருக்க… இப்பவே உன்ன மணப்பந்தல் உட்கார வச்சிடலாம் போல…”

அதை கேட்டவுடன் ஈஸ்வர் சிரித்து விட்டு,”அதற்கு அம்ரீதா வேண்டும்லப்பா…” என்றார். அப்பொழுது விமலா சற்று தள்ளியிருந்த பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

கடிகாரத்தில் டாண்னு மணி ஒன்பது அடிக்கும் போது, கருணாகரனின் கார் வீட்டு வாசலில் வந்து நின்றது. ஆதிகேசவன்,”சொன்னது போல டைமுக்கு சம்மந்தி வந்திட்டார்.” என்றார்.

இதை எதிர்ப்பார்க்காத விமலா,’இவர் எப்படி நேராமாக வந்திட்டார்…’ என திகைத்து போய் பார்த்திருந்தார். உடனே இத முதல்ல யோகேஷிடம் சொல்ல வேண்டும் என்று பரப்பரத்தார். வாட்ஸ்ஆப்ல் இஷாவுக்கும் யோகேஷ்கும் கருணாகரன் வந்துவிட்டதாக மெசேஜ் தட்டிவிட்டார். இதை பார்த்ததும் யோகேஷீம் இஷாவும் அதிர்ந்தனர்.

கருணாகரனை நினைத்து அவர்கள் கோபமடைந்தனர். அதே கோபம் ஆதிகேசவன் மற்றும் ஈஸ்வர் மேலேயும் திரும்பியது.’இவர்கள் நேரமாக வர சொல்லாமயே அவன் வந்திருப்பான்.’என…

யோகேஷ்,”எல்லாம் கூட்டுசதி… எப்படியெல்லாம் நாடகம் நடத்தி நம்மள ஏமாத்தியிருங்காங்க…” என இரண்டு கைகளை சேர்த்தி பழைய படத்தில் நம்பியார் செய்வது போல இவரின் செயல் இருந்தது.

இஷா,”அப்பா… நாம போயி சண்ட போடலாம்…” என்று கூறினாள்.

“ஆமாம்… அப்படி தான் பண்ணனும்…” என்றார் யோகேஷ்.

அவர்கள் இருவரும் தங்கள் பேசுவதற்கு பத்து பேரை கூட்டிக் கொண்டு நேராக சம்ரித் வீட்டிற்கு வந்து இறங்கினர். முன் கூட்டியே விமலாவிற்கு தாங்கள் வருகிறோம் தகவல் தெரியப்படுத்திருந்தனர். விமலாவும் அவர்கள் வரவுக்காக வாசலிலேயே காத்திருக்கலானாள். யோகேஷீம், இஷாவும் வந்தவுடன் விமலாவும் அவர்களோடு இணைந்துக் கொண்டாள்.

அவர்கள் அனைவரும் ஈஸ்வரிடம் சென்று,”நாங்க உங்கள் எல்லோரிடம் நியாயம் கேட்டு வந்திருக்கிறோம்…”

கருணாகரன் ஏதோ சொல்ல வந்தார். உடனே விமலா,”நாங்க உன்கிட்ட பேச வரல… நாங்க எங்க குடும்பத்து ஆட்கள் பேசனும்… இதுல நீ தலையிடாதே…” என்று மரியாதை இல்லாமல் பேசினார்.

யசோதா,”யார்கிட்ட பேசறிங்கனு தெரிஞ்சு தான் பேசறிங்களா… மரியாதை கொடுத்தால் நல்லா இருக்கும்…” என சண்டைக்கு தயாரானார்.

விமலா,”தெரியுதும்மா… உங்களுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டியிருக்குது…” எடுத்து எறிந்துப் பேசினார்.

இருவருக்கும் சண்டைக்கு வருகிற மாதிரி, அதுவரை கோபத்தை அடக்கி வைத்திருந்த சம்ரித்,”கொஞ்சம் உங்க சண்டய நிறுத்திறிங்கறா…” என்று கத்தினான்.

ஆதிகேசவன் மனதில் கோபத்தில் குமறி கொண்டிருந்தவர்,”சம்ரித்… கொஞ்சம் இருப்பா… நா இவங்கிட்ட பேசிக்கிறேன்.” என்றவர் விமலா பக்கம் திரும்பி,”என்னம்மா… என்ன… எதுவாயிருந்தாலும் என்கிட்டபேசு… அதவிட்டு சம்மந்தி மரியாத இல்லாமல் பேசறது… அதை கேட்க வந்த சம்மந்தியம்மாகிட்ட சண்ட போடறதுலாம் கொஞ்சம் கூட நல்லாவே இல்ல…” என எச்சரித்தார்.

விமலா பம்மிக் கொண்டே,”மாமா… அது வந்து மாமா…” என எச்சில் கூட்டி விழுங்கினார்.

உடனே யோகேஷ்,”அட ஏம்மா… இவருக்கு எல்லாம் பயந்தா வேலயாகாது… எதுக்கும் துணிந்து கேள்வி கேட்கனும்… அப்படி கேட்டால் தான் நியாயம் கிடைக்கும்…” ஒரே போடாக போட்டார்.

ஆதிகேசவன் பார்வையால்,’உனக்கு அவ்வளவு தைரியம் வந்திருச்சா… என்னப்பா… என்கிட்ட கேளு…’ புறங்கையை கட்டிக் கொண்டு நின்றார்.

யோகேஷ் அவர் பார்வையை படித்தும், அதை சட்டை செய்யாமல்,”ஏன் உங்க பேரன் செஞ்சதுலாம் தெரியாம இந்த நிச்சயத்திற்கு ஏற்பாடுலாம் பண்ணியிருக்கிங்களா..”

“அப்படி என்னப்பா பண்ணினான்…”

“நீங்க எதுவும் தெரியாத மாதிரி கேட்கறிங்க பாருங்க… ஆஹா… என்ன ஒரு நடிப்பு… அச்சோ… இந்த நடிப்புக்கு எல்லாம் ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்…” எ‌ன கேலியாக பேசினார்.

அதற்கு ஆதிகேசவன்,”விஷயத்த சொல்லாம… வீணான கதயெல்லாம் பேசிட்டு இருக்காதே…” என எச்சரித்தார்.

“உங்க பேரன் என் பொண்ணுகிட்ட ஒட்டி உறவாடதுனலாம் எல்லாம் பொய்யா… இல்ல நடிப்பா…”

ஆதிகேசவன்,”உன் பொண்ணு கூட வந்திருக்கால்ல… எங்க கூப்பிடு… அவகிட்டயே கேட்போம்…” என்றார்.

சற்று தள்ளி நின்று விமலாகூட சேர்ந்து நடப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தவளை,’இங்க வா…’ கண்ஜாடையில் அழைத்தார் யோகேஷ்.

தன் தந்தை அழைத்ததும்,”என்னங்கப்பா…” என்றாள்.

ஆதிகேசவன்,”ஏம்மா… இஷாரா… அவன் உன்ன காதலிக்கிறேன் உங்கிட்ட சொன்னான…” எனக் கேட்டார்.

எதற்கும் துணிந்தவளாக,”ஆமாம்… அப்படி தான் சொன்னான்…” என நாக்கு கூசாமல் பொய் சொன்னாள்.

இதைக் கேட்டவுன் சம்ரித் வந்த கோபத்தை பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டான். அவன் பல்லைக் கடிக்கும் ஓசை பக்கத்தில் இருந்த ஈஸ்வருக்கு தெளிவாக கேட்டது. அதுவரை இஷாராவைப் பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வர் சம்ரித்தைத் திரும்பிப் பார்த்து இஷாரா பொய் கூறுகிறாள் என்பதை புரிந்துக் கொண்டார்.

“அப்புறம் உன்கிட்ட வேறு என்ன சொன்னான்…?” என்றுக் கேட்டார்.

“கட்டிப் பிடிச்சான்… லிப் டூ லிப் கிஸ்… அதுக்கும் மேலயே என்னமொன்ன பண்ணினான். போங்க தாத்தா இதெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கமுடியுமா…” என்று வெட்கமில்லாமல் குழைந்துக் கொண்டு நடித்தாள்.

அவள் சொல்வது எல்லாம் பொய் அங்குள்ள சம்ரித் ஆட்களுக்கு புரிந்தது. ஆனால் யோகேஷ் கூட்டிட்டு வந்த ஆட்கள் எல்லோரும் இஷா சொல்வதைக் கேட்டு,”நெருப்பில்லாமல் புகையுமா…” என தங்களுக்குள் கூடி நின்று பேசினர்.

அங்கு கருணாகரன் வீட்டில் அம்ரீதா மணப்பெண் அலங்காரம் செய்து இருந்தாள். அதைப் பார்த்து அவள் வயதொத்த தோழிகள் அவளை கிண்டலும் கலாட்டாவும் செய்துக் கொண்டிருந்தனர். அம்ரீதாவுக்கு வெட்கத்தில் முகம் பன்னீரில் நனைத்த ரோஜாபூ போல சிவந்திருந்தது. அதிலும் ஒரு பெண் அவளை போட்டோ எடுத்து சம்ரித்துக்கு அனுப்பி வைத்தாள்.

இந்த பிரச்சனை நடந்துக் கொண்டிருக்கும் போது சம்ரித் போனில் வாட்ஸ ஆப்பில் நோட்டிஃபிகேசன் வந்தது. இருக்கிற பிரச்சனைல இது வேறயா… எதையும் பார்க்காமலே தன் மொபலை ஆப் செய்துவிட்டான்.

அம்ரீதாவின் போட்டோவைப் பார்த்து விட்டு மகிழ்ச்சியில் தனக்கு போன் செய்வான் என மிகவம் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள். வெகுநேரம் காத்திருந்து விட்டு அவனுக்கு போன் செய்தாள். மறுமுனையில் போன் செயல்பாட்டில் என வந்தது.

அம்ரீதா,”ஏய், மானசா ஒரு நிமிஷம் உன் செல்லை கொடு…” என்றாள்.

“ஏன்… எதுக்கு கேட்கற…” பதிலுக்கு மானசா கேட்டாள்.

“கொடுடீ முதல்ல… அப்புறம் சொல்றேன்…” என சொல்லி அவள்கிட்ட இருந்து வெடுக்கென செல்லைப் பறித்தாள்.

மானசாவின் செல்லை வாங்கி அதில் வாட்ஸ ஆப் பார்த்தாள். அதில் தன் புகைப்படத்தைப் பார்த்தவுடன் தான் செல்லை ஆப் செய்துவிட்டான் என புரிந்தது. பதட்டதுடன் தன் சித்தப்பாவிற்கு சித்திக்கும் முயற்சி செய்தாள். அழைப்பு போய் கொண்டே இருந்தது. அடுத்தது ஆதிகேசவனுக்கும், ஈஸ்வருக்கும் முயற்சி செய்தாள். அவர்களுக்கும் அழைப்பு போய் கொண்டே இருந்தது. ஆனால் யாரும் பதில் அளிக்கவே இல்லை.

‘என்னனு தெரியலயே… யாரும் போனை எடுக்கவில்லயே… இஷா அவள் உறவினர் கூட வந்து ப்ராப்ளம் பண்ணிட்டு இருக்காளோ….’ என பதட்டமானாள். அவள் இருக்கும் நிலையைப் பார்த்து அவள் உறவினர் மற்றும் அவள் தோழிகள் கண்டு என்ன என்று விசாரிக்க…

அம்ரீ,”இஷா… அவ அப்பாவும், சொந்த பந்தத்தோடு என்ன ப்ராப்ளம் செய்யறானு தெரியல… அது தான் எனக்கு ஒரே கவலயாயிருக்கு…”

அவள் உறவினர்களில் வயதில் மூத்த ஆண்மக்கள் சிலர்,”இரும்மா… நாங்க போய் பார்த்துட்டு வரோம்… நீ கவலப்படாதே…” என்று கூறி புறப்பட்டார்கள்.

இஷா உறவினர்கள் அப்படி சொன்னதற்கு சம்ரித் உறவினர்களில் ஒருத்தர்,”ஏம்மா… அவன் ஆம்பள பையன் அவன் தான் நெருங்கி வந்தான்னா… நீ பொம்ள பிள்ள அவன விட்டு தள்ளி நிற்க தெரியாதே…” என கேட்டார்.

மற்றொருவர்,”ஏப்பா… அவன் தப்பே பண்ணவே இல்லங்கறான்… நீ தப்பு பண்ண மாதிரியே பேசற….” என்றார்.

அதற்கு இஷா அப்பா,”இந்த பூனையும் பால் குடிக்குமா… முகத்த வச்சுகிட்டு… நாடகம் எல்லாம் ஆடறான்… நீங்க நம்புங்க… நாங்க எல்லாம் நம்பமாட்டோம்…” என்றார்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விமலா,’தன் மகனை தரக்குறைவாக பேசுகிறார்கள்… என கவலையின்றி இஷா எப்படியாவது தன் வீட்டு மருமகளாக வர வேண்டும்…’ என்கிற வெறியோடு பார்த்துக் கொண்டிருந்தார். ஈஸ்வரும் விமலாவை தான் முறைத்துக் கொண்டிருந்தார். அதுக்கு எல்லாம் விமலா அலட்சியமாக நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அம்ரீதா உறவினர்கள் ஒரு வேனில் வந்து இறங்கினர். இறங்கி வேகமாக வரவேப்பறைக்குள் வந்தனர்.

அதில் ஒரு பெரியவர்,”நாங்க எல்லோரும் கருணாகரன் உறவினர்கள். இங்கே என்ன தான் நடக்குதுனு தெரிஞ்சுக்க வந்திருக்கோம்…” என்றார்.

உடனே இஷாவின் உறவினர் ஒருவர்,”எங்க பொண்ணை இந்த பையன் ஆசை வார்த்தை பேசி உறவாடி கெடுத்திட்டான்…” என்று அபாண்டமாக பழியைத் தூக்கி சம்ரித் மேல போட்டான்.

இதற்கும் விமலா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘இந்தம்மா தன் மகனை தப்பாக பேசுகிறார்கள். அதையும் என்ன இப்படி வேடிக்கை பார்த்திட்டு இருக்குது… இதெல்லாம் பெற்ற தாயா… ‘ என கருணாகரன் உறவினர் நினைத்தனர்.

அவ்வாறு பேசும் போது சம்ரித் பதட்டத்துடன்,”நா கெடுத்திட்டேனா… இது எல்லாம் அப்பட்டமான பொய்…” என்றான்.

அதற்கு யோகேஷ்,”சம்ரித் பெத்த அம்மா இங்க தான இருக்காங்க… அவங்கள கேட்கலாம் உண்மைய சொல்லுவாங்க… நீயே சொல்லும்மா…” கூறினார்.

விமலா,”ஆமாம் என் மகனும் இஷாவும் நெருக்கமாக பழகி வந்தனர். நா கூட இவங்க பழக பார்த்தா இரண்டு பேரும் மேரேஜ் செஞ்சுவாங்கனு ரொம்ப ஆசையாயிருந்தேன். ஆனால் இவன மலர் விட்டு மலர் தாவுற ஜாதி தெரியாம போச்சே…” என்று பொய்யுரைத்தார்.

இதைக் கேட்டு சம்ரித் முகம் இறுக நின்றான். அதைப் பார்த்த ஈஸ்வருக்கு கோபம் தலைக்கு ஏறியது.

ஈஸ்வர் இதுவரை அடிக்காத மனைவியை கன்னத்தில் பளார் அறைந்து விட்டு,”உன் மகன பத்தி களங்கம் சொல்றே… இனி ஒரு வார்த்தை பேசுன நா பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன்.” எச்சரித்தார்.

ஆதிகேசவன் வேகமாக வந்து அவர் கையைப் பிடித்து தடுத்தி நிறுத்தி,”ஏப்பா… என்ன செய்யற… கோபத்தில் நிதானத்தை இழக்ககூடாது. ஆத்திரத்தோடு ஏழுகிறவன் நஷ்டப்பட்டு உட்காருவான் என்ற பழமொழிய கேள்விப்பட்டதில்லயா…”

“சும்மா இருங்கப்பா… இவளுக்கெல்லாம் கன்னத்தில் ரெண்டு கொடுத்தால் தான் அடங்குவா…”

“அதுக்காக அடிக்கறது எல்லாம் ரொம்ப தப்புய்யா…”

“இவ பேசுனதுக்கு ரெண்டு அடியோடு நிறுத்திட்டேன் சொல்லி சந்தோஷப்படுங்க… இவள எல்லாம் போட்டு அடி பின்னி பெடல எடுத்திருக்கனும்ப்பா…”

“கன்னத்திலே அடிச்சது தப்புங்கறேன்… வீட்டுக்கு வாழ வந்த மகாலஷ்மி இப்படியெல்லாம் மனம் நோகற மாதிரி எல்லாம் நடந்துக்ககூடாதுப்பா… அவங்க மனசு நொந்து கண்ணீர் விட்டால் அந்த பாவம் நம்ம தலைமுறைக்கும் தொடரும்..”

அதற்கும் விமலா,’சும்மா நடிப்பு… யார ஏமாத்தறதுக்கு இந்த நடி நடிக்கிறாங்க… இதெல்லாம் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துலயே பார்த்திட்டோம்…’ முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டார்.

இவர் முகத்தைத் திருப்பிக் கொண்டதை பார்க்கும் போது ஈஸ்வருக்கு,’இவளை என்ன செய்யலாம்… திட்டியும் பார்த்தாச்சு… அடிச்சும் பார்த்தாச்சு… இவளை எல்லாம் திருத்த முடியாது… ச்சைய்…” என இவர் முகத்தை எதிர்பக்கம் திருப்பிக் கொண்டார்.

சம்ரித் பெரும் கவலையோடு,’இந்த நிச்சயம் நல்லபடியாக நடக்குமா… என்னனு தெரியல…’ நினைத்தான்

இஷா உரிமையோடு சம்ரித் அருகில் வந்து சம்ரித் கையை பிடித்து இறுக்கிக் கொண்டாள். சம்ரித் உடனே அவள் கையை உதறி விட்டு தள்ளிப் போய் நின்றான்.

“மாம்ஸ் இவ்வளவு வெட்கமா… கூச்சப்பட்டு தள்ளி போய் நிற்கிறது பாரு…” என சொல்லி மீண்டும் அவன் தோளில் தொங்கிக் கொண்டு நின்றாள்.

உடனே விமலா,”ரெண்டு பேரத்தையும் பார்க்கும் போதே என் கண்ணே பட்டுவிடும் போல இருக்குது…” ஆரத்தி எடுக்கவும் ஆரம்பிக்கும் வேளைல ஈஸ்வர் குறுக்கே வந்து தட்டுத் தட்டிவிட்டார்.

“பிடிக்காத ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ணி வச்சு காலம் பூரா சேர்ந்து வாழமா… அவங்க சண்ட போட்டு இருக்கறத நாம ரெண்டு பேரும் வேடிக்கை பார்க்கனுமா… சொல்லு…” என விமலாவிடம் ஈஸ்வர் கேட்டார்.

அதற்கு விமலாவை முந்திக் கொண்டு யோகேஷ்,“பிடிக்கலன்னு யார் சொன்னது எல்லாம் பிடிச்சு போயி தான்… இந்த என்கேஜ்மெண்ட் நடத்திடலாம் என வந்திருக்கோம்…” என பொய் சொன்னார்.

ஈஸ்வர் யோகேஷிடம்,”இஷாவுக்கு மட்டும் பிடித்தால் போதுமா… என் மகன் விருப்பமில்லைனு சொல்றானே…” என வாதிட்டார்.

முத்தரப்புக்கும் பேச்சு வார்த்தை முற்றிப் போய் கைகலப்பில் ஈடுபடும் நேரம் ஆதிகேசவன்,”எல்லாரும் உங்க சண்டய நிறுத்தறிங்களா…” என சத்தமிட்டார்.

சட்டென அனைவரும் அமைதியாகிவிட்டனர். ஆதிகேசவன்,”இப்ப எல்லாரும் கேட்டுங்கோ… இந்த வீட்டுக்கு பெரியவனா இருந்து நா முடிவு எடுத்திருக்கேன். நா என் பேரனுக்கும் கருணாகரன் பொண்ணுக்கும் நிச்சயம் செய்யறதா வாக்கு கொடுத்துருக்கேன். நா வாக்கு கொடுத்தா… கொடுத்தது தான்… எல்ஆருக்கும் புரிஞ்சிருக்கனும் நினைக்கிறேன். வாங்க கருணாகரன் தட்ட மாற்றிக்கலாம்…” என கருணாகரனை அழைத்தார்.

அவர் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து கருணாகரன் தாங்கள் கொண்டு வந்த நிச்சயத்தட்டை எடுத்துட்டுப் போனார். ஐய்யர் நிச்சய ஓலையை வாசிக்க, இருவரும் தட்டை மாற்றிக் கொண்டனர். அருகில் ஈஸ்வரும் சம்ரித்தும் யசோதாவும் வந்து நின்றனர்.

நாயகன் நிச்சயத்தில் நாயகி கைக் கோர்க்க காத்திருக்க…

தாயும் அவ தமையனும் மகளும் ஒரு திட்டம் தீட்டியிருக்க…

நாயகன் குடும்பத்தினர் அத்திட்டத்தை முறியடிக்க…

நாயகி குடும்பத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி…

இரு குடும்பத்தாரும் இணைந்து திட்டம் தீட்டினார்கள்.

8 – தீக்கு தென்றலோடு மோகம் Read More »

error: Content is protected !!
Scroll to Top