நெஞ்சோரம் பூத்தவளே
பூ – 19 செந்தூரனின் கார் பள்ளியின் வாசலில் வந்து நின்றபோது, முல்லையின் நெஞ்சுக்குள் இனிய பரவசம் பிறந்தது. காரிலிருந்து இறங்க கதவைத் திறக்கப் போனவளின் கையை பிடித்து இழுத்த செந்தூரன், அவளது கன்னத்தில் சட்டென்று ஒரு முத்தம் பதித்தான். “சின்னையா…!” என்று அவனை செல்லமாக முறைத்தாள் முல்லை. “என்னடி முறைக்குற?” என்று குறும்பாகக் கேட்டவன், இன்னொரு கன்னத்திலும் முத்தமிட்டு அவளை சிவக்க வைத்தான். “இதோட காலையிலிருந்து பத்து முத்தம் […]
