ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

நெஞ்சோரம் பூத்தவளே

பூ  – 19   செந்தூரனின் கார் பள்ளியின் வாசலில் வந்து நின்றபோது, முல்லையின் நெஞ்சுக்குள்  இனிய பரவசம் பிறந்தது.   காரிலிருந்து இறங்க கதவைத் திறக்கப் போனவளின் கையை பிடித்து இழுத்த செந்தூரன், அவளது கன்னத்தில் சட்டென்று ஒரு முத்தம் பதித்தான்.   “சின்னையா…!” என்று அவனை செல்லமாக முறைத்தாள் முல்லை.   “என்னடி முறைக்குற?” என்று குறும்பாகக் கேட்டவன், இன்னொரு கன்னத்திலும் முத்தமிட்டு அவளை சிவக்க வைத்தான்.   “இதோட காலையிலிருந்து பத்து முத்தம் […]

நெஞ்சோரம் பூத்தவளே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே

பூ  – 18   மெல்ல இருள் சூழ  தொடங்கியது. இரவு நேர வண்டுகள் ரீங்காரம் பாட ஆரம்பிக்க, பன்னீர் மரமும் முல்லைப்பூக்களின் நறுமணமும் அந்த இடத்தையே இன்னும் ரம்மியமாக மாற்றியிருந்தது.   செந்தூரனின் நெஞ்சில் சாய்ந்திருந்த முல்லை, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,   “சின்னையா… வீட்டுக்குப் போலாமா?” என்று மெதுவாகக் கேட்டாள்.   அவளது காதோரம் தன் மீசையை உரசியபடி,   “இப்படியே இந்த ராத்திரி முழுக்க… இந்த நம்ம தோட்டத்துல, முல்லைப்பூ வாசத்துல…

நெஞ்சோரம் பூத்தவளே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 17

பூ  – 17   அரண்மனையிலிருந்து கனத்த இதயத்தோடு வெளியேறிய மருதப்பன், மகள் இருக்கும் ஊரை விட்டு செல்ல மனமில்லாமல், இருபது வருடப் பழைய நினைவுகளின் பாரத்தோடு மெதுவாக நடந்து தன் பழைய வீட்டின் வாசலில் வந்து நின்றார்.   இருபது வருடங்களுக்கு மேலாகப் பூட்டிக் கிடந்த அவரின் வீடு, மருதப்பனுக்கும் அவரது மறைந்த மனைவி மரகதத்திற்கும் சொந்தமான அழகான மாடி வீடு. இருபது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வீடு என்றாலும், அன்றைய காலத்துத் தரமான செங்கல்

நெஞ்சோரம் பூத்தவளே 17 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 16

செந்தூரன் முல்லையைத் தன் கைகளில் சுமந்தபடியே கம்பீரமாக அரண்மனைக்குள் நடந்து செல்ல, வாசலில் ஆரத்தித் தட்டோடு நின்றிருந்த குணவதியோ, தன் மருமகளையே இமைக்க மறந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.   இருபது வருடங்களுக்கு முன்பு, தங்கள் அரண்மனை அதிகாரத்தால் அநியாயமாக உயிர் பறிக்கப்பட்ட மரகதத்தின் மகள்தான் முல்லை என்பதை அறிந்த அந்த நொடி, குணவதியின் அடிமனதில் ஒரு தீர்க்கமான எண்ணம் ஓடியது.   ‘மரகதத்துக்கு இந்த அரண்மனை செஞ்ச பாவத்துக்கு… இப்போ அவளோட மகளை என் சொந்தப்

நெஞ்சோரம் பூத்தவளே 16 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 15

பூ  – 15   மகள் கழுத்தில் தாலியோடு வந்து நின்றதை பார்த்த மருதப்பன், அதிர்ச்சியில் அப்படியே சிலையாகச் சமைந்து போய் நின்றார்!  முல்லையின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றையும், செந்தூரனையும் மாறி மாறிப் பார்த்தார்   “முல்லை… என்னம்மா இது?” என்று நெஞ்சில் கைவைத்தபடி நிலை தடுமாறி  வாசப்படியிலேயே சரிந்து உட்கார்ந்து விட்டார்  மருதப்பன். அவரின்  தொண்டை அடைத்தது, கண்கள் குளம் போலப் பெருகின.   அப்பா என்று அவள் பதறி வந்து அவரது கையைப்

நெஞ்சோரம் பூத்தவளே 15 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 13

பூ  – 14   செந்தூரன் அவளது கண்களை நேராகப் பார்த்தவன். “நீ சம்மதிச்சா… உன்னை என் வாழ்க்கைத் துணையா ஏத்துக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன் முல்லை.”   அவன் சொன்ன அந்த வார்த்தைகள் பேரிடி மின்னல் போல் விடியற்காலையின் அமைதியை கிழித்துக் கொண்டு அவளது இதயத்திற்குள் இறங்கின. அதிர்ச்சியில் உறைந்து போனாள்.   “சின்னையா… என்ன சொல்றீங்க நீங்க?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.   “நான் சொல்றது உண்மை தான் முல்லை. உன்னை என் மனைவியா

நெஞ்சோரம் பூத்தவளே 13 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 13

பூ  – 13 மருதப்பன் தன் நடுங்கும் கைகளோடு மெதுவாக எழுந்து வந்து கதவைத் திறந்தார். அதே நேரத்தில், கதிரேசனின் ஆட்கள் யாருடைய பார்வையிலும் சிக்காமல் இருக்க சுற்றுமுற்றும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டே மருதப்பன் வீட்டை நோக்கி வந்தனர். ஆனால், அவர்களுக்கு முன்னதாகவே அந்த வீட்டின் வாசலில் கம்பீரமாக நின்றிருந்த ஒரு உருவத்தைக் கண்டதும் மருதப்பனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. நெற்றியில் பெரிய திலகம், வெள்ளை வேட்டி சட்டை, அதிகாரம் பொங்கும் தோற்றம், கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து

நெஞ்சோரம் பூத்தவளே 13 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே

பூ  – 12 அரண்மனை வாசலில் வந்து நின்ற புல்லட்டின் இன்ஜினை அணைத்துவிட்டு, நேராக பெரியசாமி அமர்ந்திருந்த திண்ணையை நோக்கி புயலென நடந்தான் செந்தூரன். அவனது முகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த கோபமும், கண்களில் தெரிந்த தீட்சண்யமும் அங்கிருந்த வேலையாட்களைப் பதற வைத்தது. வழக்கமாக எல்லோரிடமும் புன்னகையோடு பேசும் செந்தூரனின் இந்தக் கோலம் அவர்களுக்கு புதிதாக இருந்தது. அந்த நேரத்தில், கையில் கணக்கு புத்தகங்களுடன் அமர்ந்திருந்த பெரியசாமி, மகனின் கனமான காலடிச் சத்தத்தைக் கேட்டு தலைநிமிர்ந்தார். செந்தூரனின் முகத்தில்

நெஞ்சோரம் பூத்தவளே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 11

பூ  – 11 ‘யாரு இந்த மருதப்பன்? எங்க அப்பா பெயரை கேட்டதும் ஏன் இந்த மனுஷன் இப்படி பதறிப்போய் கொந்தளிக்கிறாரு? இருபது வருஷத்துக்கு முன்னாடி எங்க குடும்பத்தால இவருக்கு என்ன பாதிப்பு நடந்திருக்கும்? அதுவும்… உன் அப்பன் பெரியசாமியைப் போய் கேளுன்னு சவால் விட்டுட்டுப் போறாரே!’ குழப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், அடிபட்ட காலோடு தவித்த முல்லையின் முகம் மட்டும் தான் அவனது கண்ணுக்குள் வந்து போனது. தன் தந்தையிடம் பிறகு பேசிக்கொள்ளலாம், இப்போது எப்படியாவது காரை

நெஞ்சோரம் பூத்தவளே 11 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 10

பூ  – 10 முல்லையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல அவள் வீட்டுக்கு வந்திருந்தான் செந்தூரன். ஆனால், அங்கே வீடு பூட்டியிருந்தது. “வீடு பூட்டியிருக்கே… அடிபட்ட காலை வச்சுக்கிட்டு இவளுக்கு என்ன இவ்வளவு அவசரம்? நான் வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் பொறுக்க முடியலையா?” என்று அவள் மீது கோபப்பட்டுக் கொண்டே தன் புல்லட்டைப் பள்ளிக்கூடத்தை நோக்கித் திருப்பினான். பள்ளிக்கூட வளாகத்திற்குள் புல்லட்டை நிறுத்திவிட்டு, விறுவிறுவென முல்லையின் வகுப்புக்குச் சென்றான். ஆனால், முல்லை அங்கே இல்லை. மங்களம் டீச்சர்

நெஞ்சோரம் பூத்தவளே 10 Read More »

error: Content is protected !!
Scroll to Top