10 – தீக்கு தென்றலோடு மோகம்!
அடுத்தநாள் சம்ரித் அலுவலகம் வந்தவுடன் அம்ரீதாவை தான் தேடினான். நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவன் மனம் அவளை மிகவும் தேடியது. நிலாவை காணாத வெண்மேகம் போன்று எங்கே தேடியும் அவளை காணவில்லை. அவள் வரவில்லை. அதற்கு பதிலாக அவளுடைய விடுப்ப கடிதம் வந்திருந்தது. அதில் அவள்,”இந்த நிச்சயத்துக்கு பிறகு ஓன் வீக் லீவு எடுத்து கொள்கிறேன்”என்று தெரிவித்திருந்தாள்.
அதைப் படித்தவுடன் சம்ரித்துக்கு,”இவள் பாட்டுக்கு ஓன் வீக் லீவு சொல்லிட்டு வீட்லயே இருந்துக்குவா எனக்கு இவளை பார்க்கனும் போல இருக்குது… இவளுக்கு அந்த மாதிரி எல்லாம் ஈகராக இருக்காதா…” என அவள் எழுதிய கடிதத்தை வைத்துக் கொண்டு புலம்பினான்.
இவனுக்கு தெரியாதே… அம்ரீ வீட்டில் அவளின் சொந்தக்காரங்க எல்லாம் ஒரு வாரம் தங்கி விட்டு செல்வதாக கூறி அங்கேயே தங்கிவிட்டனர். அவர்கள் இருக்கும் வரைக்கும் யசோதா அம்ரீயை வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார். அம்ரீக்கும் சம்ரித்தைப் பார்க்க வேண்டும் ஆவா இருந்தது. அவளுக்கு ஆசையாக இருந்து என்ன பயன்? தன் சித்தி சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்துக் கொண்டு அமைதியாக ஏற்றுக் கொண்டாள். அந்த ஒரு வாரமும் வாடிய முகத்துடன் சுற்றிக் கொண்டு இருந்தாள்.
அதைப் பார்த்த யசோதா அம்ரீதாவை கூப்பிட்டு,”ஏன் அம்ரீ மூஞ்சிய தொங்க போட்டு இருக்க… பார்கிறவங்க ஏன்னு இப்படி இருக்கா… நாங்க வந்தது பிடிக்கலயோ… அப்படினு என்னய தான் கேட்கமாட்டங்களா… நான் என்ன பதில் சொல்லட்டும்… நீயே சொல்லு…” எனக் கேட்டார்.
“அது வந்து சித்தி… அது வந்து…” என இழுத்தாள்.
“அதான் வந்துட்டியா… நீ சொல்ல வந்தது சொல்லு…”
அம்ரீதா தலையை குனிந்துக் கொண்டு,”எனக்கும் சம்ரித்த பார்க்க இருக்க முடியல சித்தி… நான் என்ன செய்யட்டும்…” என்று சொன்னாள்.
அதைக் கேட்டவுடன் யசோதா சிரித்துக் கொண்டு,”அந்த காலத்துல நிச்சயம் முடிந்தால் போதும் வீட்டை விட்டு வெளியவே வரமாட்டங்க… நான் எல்லாம் அப்படி தான் இருந்தேன்…” சொன்னார்.
அதுக்கு அமரீதா,”அப்புறம் நீங்களும் சித்தப்பாவும் மீட் பண்ணிக்கவே இல்லயா…” கேட்டாள்.
அதற்கு யசோதா வெட்கப்பட்டுக் கொண்டு,”அப்படியெல்லாம் உங்க சித்தப்பா விடுவாரா…” என்றார்.
உடனே அம்ரீதா கதைக் கேட்கும் ஆர்வத்துடன்,”ம்ம்ம்… சொல்லுங்க… சித்தப்பா என்ன செஞ்சார்…”
யசோதா சிரித்துக் கொண்டே,”ஒருநாள் நைட் பின்பக்கம் சுவர் ஏறி குதிச்சிட்டாரு…”
“அப்புறம் என்ன நடந்துச்சு…”
“குதிச்சன்னாலே கால் இசகுபிசகா சுளுக்கிச்சு… வலில கத்திட்டாரு…”
“வலிய கொஞ்சம் பொறுத்துக்ககூடாது… பிறகு எல்லோரும் எழுந்துட்டாங்களா…” கேட்டாள்.
“பின்னே எல்லோரும் முழிக்காம இருப்பாங்களா… அதுக்கு அப்புறம் பின்பக்க வாசல் லைட்டை போட்டாங்க… கத்தினது சித்தப்பா தெரிஞ்சதும்… எல்லோரும் சிரித்து,”மாப்ளே நீங்க தானா… எதுக்கு சுவரேறி குதிச்சு… இப்ப பாருங்க கால் சுளுக்கிச்சு… இதெல்லாம் உங்களுக்கு தேவையா…” என்று யசோதாவின் தகப்பனார் கேட்டார்.
“அப்புறம்…”
“அப்புறம் என்ன நடந்திருக்கும் நீ நினைக்கற…”
“தெரியல…” அம்ரீதா உதட்டை பிதுக்கினாள்.
“பிறகு என்னய பெத்தவங்க… கூட பிறந்தவங்க… எல்லாரும் சேர்ந்து,”மாப்ள… எங்க பொண்ண பார்க்கவறாப்ல இருந்தா… இப்படியெல்லாம் சுவரேறி குதிச்சு வராதிங்க… நேர் வழில வாங்க… நாங்க தப்பா நினைச்சிக்கமாட்டோம்…” என எங்க அண்ணன் சொல்லிட்டார்.
“பிறகு உள்ளே கூட்டிட்டு வந்து காலுக்கு மருந்து எல்லாம் போட்டுவிட்டாங்க…”
“அதுக்கு பிறகு சித்தப்பா முன் வாசல் வழில தான் வந்தாரு…” எனக் கேட்டாள்.
“அப்புறம் பின் வாசல்ல வர அவர் என்ன கிறுக்கனா…” என்று கேட்கவும், அதற்கு இடுப்பில் தன் சித்திய பார்த்து செல்லமாக முறைத்தாள்.
யசோ,”என்னய முறைக்கற…” தன் சித்தப்பாவை கிறுக்கன் சொன்னதை நினைவில்லாமல் கேட்டார்.
உடனே அம்ரீ,”உங்களுக்கு எவ்வளவு தெனாவட்டு இருந்தா… என் சித்தப்பாவை பார்த்து கிறுக்கன்னு சொல்விங்க…” என்றாள்.
யசோதா தன் நுனி நாக்கை கடித்துக் கொண்டு,”சாரிப்பா… வெரி சாரி… நா உங்க சித்தப்பாவை கிறுக்கன் என சொல்லிவிட்டேன்.” என மறுக்காமல் மன்னிப்புக் கேட்டார்.
உடனே அம்ரீதா யசோதா பக்கத்தில் வந்து அவரை கட்டியணைத்துக் கொண்டு,”நா சும்மா தான் கேட்டேன். உங்களை கிண்டல் பண்ணறதுக்கா தான்…” என சொன்னாள்.
யசோதா அவள் கையை விலக்கி விட்டு,”ம்ம்ம்… எதுல விட்டேன்… மறந்து போச்சே…” என்றார்.
அம்ரீதா,”நா சொல்றேன்… பின் வாசல் வழியா எங்க சித்தப்பா என்ன கிறுக்கனா… அதை சொல்லிகிட்டு இருந்திங்க… நடுவுல நா தான் ஏதேதோ பேசி உங்கள திசை திருப்பி விட்டுட்டேன்… இனி மேல் நா உங்க பேச்சில குறுக்கே வரமாட்டேன்…” என்று சொல்லி வாய் மேல ஒரு விரல் வைத்து அமைதியாகிவிட்டாள்.
இவளின் செயலைப் பார்த்து யசோதா சிரித்துக் கொண்டே மீதி கதையை தொடரலானாள். “பிறகு அவர் என்னய பார்க்க வரும் போதெல்லாம் முன் வாசல் வழில தான் வந்தார்.”
அம்ரீதாவிற்கு ஒரு சிறு சந்தேகம் வந்தது. வாய் மேலே இருக்கும் விரலை எடுக்கட்டுமா… என ஜாடைல கேட்டாள். அதற்கு யசோதாவும் எடுத்துக்கோ என அனுமதி கொடுத்தார்.
உடனே அம்ரீதா,”என் சித்தப்பா உங்கள பார்க்க வரும் போது எல்லாம் ஏதாவது பரிசு வாங்கிட்டு வரமாட்டார்…” என்றுக் கேட்டாள்.
“வாங்கிட்டு வராமல இருப்பார்…” என பதில் கொடுத்தார்.
“அப்படி என்னன்ன வாங்கி வருவார்…”
“வீட்டுக்கு எப்ப வந்தாலும்… சும்மாவெல்லாம் வரமாட்டார். கைல பூ இல்லாம வரமாட்டார்.”
“வெறும் பூ மட்டுமா வாங்கிட்டு வந்து கொடுத்ததுக்கு இவ்வளவு பில்டப் ஆகாது சித்தி…” என சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“அது மட்டும் இல்ல.. ஒரு தடவை வெள்ளி குங்குமசிமிழ், இன்னொரு தடவை வெள்ளி கொலுசு, அப்புறம் வெள்ளி மெட்டிலாம் வாங்கி கொடுத்தார்.” யசோதா வீரவசனம் பேசினாள்.
“எல்லாம் வெள்ளியிலா…” இதெல்லாம் கேட்டு அம்ரீதா பிரம்பியானாள்.
“ஆமாம்… வெறும் வெள்ளி தான்… உங்க ஆளு தான் பிளாட்டினம் ரிங்லாம் வாங்கி குடுப்பாரு… ஏதோ எங்களால் முடிஞ்சதது சாதரண வெள்ளி தான்…”
“என்ன சித்தி…”
“இருந்தாலும் நீங்கலாம் பெரிய இடம்… நாங்க அப்படியா…” என யசோதா இழுத்தார்.
“போங்க சித்தி நீங்களே என்னய பிரிச்சு பார்க்கறிங்க… நானும் இந்த நிமிஷம் வரைக்கும் இந்த குடும்பத்தில் ஒருத்தி தான் நினைச்சிகிட்டு இருக்கேன்…. அப்படி இல்லைனு சொல்லாம சொல்லிட்டிங்களே…” என மிகவும் வருத்தப்பட்டாள்.
அவள் வருத்தப்படுவது பிடிக்காமல் யசோதா அருகில் வந்து அவளின் கைகளை பிடித்துக் கொண்டு,”சாரி… வெரி சாரி அம்ரீ… நா மனசார அப்படியெல்லாம் உன்ன நினைக்கவேயில்லை… ஏதோ ஒரு ப்ளோல வந்துடுச்சு… கல்யாணமாகி போனாலும் நீ எங்க குடும்பத்து ஆள் தான்…” என்று சமாதானப்படுத்தினார்.
“இருந்தாலும் நான் வேற… நீங்க வேறனு சொல்லிக்காட்டிங்கே…” அம்ரீதா குரலில் கொஞ்சம் வருத்தம் இருந்தது. எவ்வளவு யசோதா சொல்லியும் சிறிதளவு அவள் சமாதானமானாள்.
அம்ரீதா,”என்ன இருந்தாலும் உங்க கதைய கேட்டதில் எனக்கு ஆனந்தமே…” என்றாள்.
அதற்கு யசோதா மகிழ்ச்சி அடையாமல், உதட்டில் மெல்லிய சிரிப்பு மட்டும் எட்டிப் பார்த்தது. அதற்குள் கருணாகரன் உறவினர்கள் யசோதாவை சூழ்ந்துக் கொண்டு, அவளிடம் அரட்டை அடிக்க ஆரம்பி்த்தார்கள். அம்ரீதாவின் வயதொத்த இளம்பெண்கள் அவளிடம் கதை பேசினார்கள். அதில் அவளையும் சம்ரித்தையும் கிண்டலடித்தார்கள். அதில் இருவரும் தங்களை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர். இந்த கலகலப்பு இரவு வரையும் நீடித்தது.
அம்ரீதா போனை தன் அறையில் சார்ஜ்ல் போட்டு விட்டு போயிருந்தாள். சம்ரித் அழைத்துப் பார்த்தும் போனை எடுக்கவில்லை.
சம்ரித்,”ஷிட்.. அம்ரீ… போனை எடுக்காமல் எங்க போய் தொலைந்த…” என வாய்க்கு வந்தபடி கத்தினான். இவனுக்கு பாட்டுக்கு கத்திக் கொண்டு இருந்தான். ஆனால் இது எதுவும் தெரியாமல் அம்ரீதா இளவட்டங்களோடு அரட்டையில் மூழ்கிவிட்டாளே…
சம்ரித் கத்தியனது அம்ரீதாவின் காதில் விழுந்ததோ இல்லையோ… இஷாரா காதில் மட்டும் விழுந்தது. மூக்கு வேர்த்தாற் போல சம்ரித் அறைக்கு வந்தாள். இஷாரா போடும் பெர்யூம் வாசனை அவளுக்கு முன்னால் வந்தது. மூக்கை சுருக்கியவாறு சம்ரித் ‘இவளை ஆபிஸ்க்குள் வரக்கூடாது என சொல்லியிருந்தும், இவள் எங்கே இங்கு வந்தாள்.’ என நினைத்தான்.
நிலைமை புரியாமல் இஷாரா,”என்ன மாம்ஸ்… எப்படி இருக்கிங்க…” என்று நலம் விசாரித்தாள். ஒன்றும் இல்லாமல் இருக்கும் போதே நலம் விசாரித்தால் எரிச்சலடைவான்.
ஏற்கனவே அம்ரீதா போனை எடுக்காத கோபத்தில் இருந்த சம்ரித் அந்த கோபத்தையும் இவளிடம் திருப்பி,”ஏய்… நீ எங்க வந்த… உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா… உன் முகத்தை பார்க்கவே எனக்கு எரிச்சல் எரிச்சலா வருகிறது என்று…” என முகம் சுழித்தான்.
அதற்கு இஷாரா,”மாம்ஸ் எதுக்கு இவ்வளவு கோபம்…” கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள்.
கன்னத்தில் இருக்கும் கையை அருவறுப்புடன் தட்டி விட்டு,”ஏய்… எதுவாக இருந்தாலும் கொஞ்சம் தள்ளி நின்று பேசினால் உனக்கு மரியாதை… அவ்வளவு தான் சொல்லுவேன்…” கத்தினான்.
‘இஷாரா இதற்கு எல்லாம் அசறுவாள்…’ என நினைத்தான்.
இவளோ அசராமல்,”கோபமாக இருக்கிங்க… உங்க கோபத்த எப்படி போக்கனும் எனக்கு தெரியாதா…”அதற்கும் பதிலளித்தாள்.
பிறகு சம்ரித்தை கட்டியணைக்க அருகில் வந்தாள். அவள் எண்ணத்தை சரியாக புரிந்தக் கொண்ட சம்ரித் சற்று விலகினான்.
“நான் இதுக்கெல்லாம் ஆளில்ல…” என்றான்.
அதற்கு அவளோ,”ஏன் மாம்ஸ்… நா என்ன செஞ்சேன்… எதுக்கு இவ்வளவு கோபப்படறிங்க… அதுமட்டும் இல்லாம என்னய கண்டால் எதுக்கு விலகி போறிங்க… இதெல்லாம் கொஞ்ம் கூட நியாயமில்ல…” என குறைப்பட்டாள்.
“ஏன்னு உனக்கே தெரியாதா… இல்ல தெரிஞ்சு இருந்தும் ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கறியா…”
“நானா… நடிக்கறேனா… இது உங்களுக்கே அநியாயமா தெரில்ல…” எதுவும் நடக்காத மாதிரி நடித்தாள்.
‘என்னம்மா நடிக்கறா… இவள் நடிப்புக்கே ஆஸ்கார் அவார்ட் கூட கொடுக்கலாம்…’ என மனதில் நினைத்துக் கொண்டு,”ஆமாம்… நீ தான் நடிக்கற… இல்லைனு ஃப்ரூப் பண்ணு பார்க்கலாம்…” என அவள் முகத்துக்கே நேராக சம்ரித் சவால்விட்டான்.
சம்ரித் சவால் விட்டதும் இஷாரா ஒரு நொடி முகம் இருளடைந்துப் போனது. மறுநொடி தன் முகத்தை சீர் செய்துக் கொண்டு,”ம்ம்ம்… நா உண்மையான பாசம் வச்சுருக்கேன். அதை பார்த்தால் உங்களுக்கே நடிப்பா தெரியுதா… இதை தான் நல்லதுக்கே காலம் இல்லைனு பெரியவர்கள சொல்வாங்க…” நடிப்பை பிழிந்தாள்.
இவள் நடிப்பை எல்லாம் பார்க்க பிடிக்காத சம்ரித்,”ப்ளீஸ் லீவ் மை கேபின்…” என கத்தினான்.
“என்னயா வெளில போக சொன்னிங்க… இதே அந்த மேனாமினுக்கியா இருந்தா இப்படியா வெளியா போக சொல்லுவிங்க…” என செல்லமாக்க் கோபித்துக் கொண்டாள்.
அவள் இங்கு இருந்து நேரத்தை ஓட்டுகிறாள் என்பதை புரிந்துக் கொண்ட சம்ரித்,”அப்படியா… அந்த மேனாமினுக்கி யாரை சொல்ற…. அம்ரீயா…” என்று கேட்டான்.
“ஆமாம்… அவள தான்… வேற யார சொல்வேன்… என நீங்க நினைச்சிங்க…” என நக்கலடித்தாள்.
இவள் நக்கலை பொறுக்கமுடியாமல்,”இப்ப நீயா போயிட்டா நல்லா இருக்கும்… இல்லனா நா கழுத்த பிடிச்சு வெளில தள்ளுவேன்… எப்படி வசதி…” பற்களை நறநறவென கடித்து வார்த்தைகளை துப்பினான்.
இவன் கோபத்தைக் கண்டு பயத்தில் நடுங்கிய உடலை மறைத்தவாறு அங்கு நிற்காமல் விட்டால் போதும் என ஓடிவிட்டாள்.
அவள் ஓடியதும் சம்ரித் இருந்த கோபத்தைக் குறைப்பதற்காக தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்றான். அவனுக்கு இஷாரா மேலே இருந்த கோபம எல்லாம் இப்பொழுது அம்ரீதா மேலே திரும்பியது. ‘அம்ரீ வந்திருந்தால் அவளோடு டூயட் பாடியிருக்கலாம்…’ என கனவுல அவளோடு சஞ்சரித்திருந்தான்.
அவன் கனவை கலைப்பது போல மேஜையில் இருந்த மொபைல் ரீங்காரமிட்டது. கனவில் இருந்த மீண்டவன்,”ச்சே… யார் நேரம் காலம் தெரியாமல் தொந்தரவு பண்ணிட்டு இருங்காங்க…” புலம்பிக் கொண்டே, மொபைல் எடுத்துப் பார்த்தவன்,’மாம் இஸ் காலிங் யூ’ என திரையில் தெரியவும்,’ச்சே… நாம அம்ரீயோட கனவுல லயித்திருப்பது இவர்களுக்கும் பிடிக்கலயா…’ என வெறுப்போடு,”யா… திஸ் யுவர் சன் மாம்…” என்றான்.
“வாட் ஆர் யூ டூயிங்…” எடுத்த எடுப்பில் கேட்கவும், அவனுக்கு தலையும் வாலும் புரியாமல் திருதிருவென முழித்தான்.
“ஐ டிட் க்நோ… வாட் ஐ’ம் டூயிங்…” தன் தாயார் என்ன சொல்ல வருகிறாங்க என புரியாமல் கேட்டான்.
“செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கறா…” என அவகிட்ட சொன்னது எல்லாம் ஞாபகம் இப்ப வந்தது.
நடிப்பு என்ற வாக்கியம் இவனுக்கு எதிராக திரும்ப, இஷாரா நேராக தன் வீட்டிற்கு சென்று இல்லாதையும் பொல்லாதையும் சொல்லியே விமலாவிற்கு ஸ்குரு கொடுத்திருக்கிறாள்.’எல்லாம் இவளால் வந்தது…’ என்று அவள் மேல் இருந்த வன்மம் எல்லாம் மேலும் கூடியது.
“ஆமாம்… அவ வந்து உங்ககிட்ட சொன்னது எல்லாம் உண்மைனு நம்பிட்டாதிங்க… வெறும் நடிப்பு தான்…”
“ஒருத்தரும் இங்க வரல… யாரும் எதுவும் எங்ககிட்ட சொல்ல… எல்லாம் உன்னோட இமேஜின்…” என்றார்.
‘இஸ்ட்…. நவ் ஐ அம் கம்மிங்…’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு போனை கட் செய்து விட்டு காரில் விரைந்தான்.
“ஹலோ… ஹலோ…” என விமலா கத்தி விட்டு,”இஷா… சம்ரித் இங்க தான் வந்திட்டிருக்கான் போல… உடனே நீ இங்கிருந்து கிளம்பு… ஹரி ஆப்… ஹர் ஆப்…” என பரபரத்தார்.
“வந்தால் வரட்டுமே… எனக்கே என்ன பயமா… நெவர் ஐஃப்ரைட் ஃபார் எனிஓன்…” என அலட்சியமாக பதிலுரைத்தாள்.
விமலாவிற்கு தான் ‘சம்ரித் வந்தால் என்ன ஆட்டம் ஆடுவானோ… அவன் பேச்சைக் கேட்டு தன் வீட்டு ஆண்கள் என்ன பேசுவார்கள்…’ பயம் பிடித்துக் கொண்டது.
இஷாராவை அங்கிருந்து அனுப்புவதற்குள் விமலாவிற்கு போதும் என போதும் என்று ஆகிவிட்டது.
இளையவர்கள் காதலோடு மூத்தவர்கள் காதல் போட்டியா…
எந்த காதலுக்கு எந்த காதலும் சளைத்தில்லை…
இரு தரப்பும் அதை நிருபிக்க போராடினர்கள்…
இறுதியில் இரு காதலும் வெற்றி பெற்றதாக உணர்ந்து கொண்டனர்.