ATM Tamil Romantic Novels

Author name: Shaahithya Srinivasan

4 – தீக்கு தென்றலோடு மோகம்

4 – தீக்கு தென்றலோடு மோகம்!

எபி – 4

அம்ரீதா தன் கனவோடு பயணித்திருக்க…. இஷாரா தன் எடையைக் குறைக்கும் பயிற்சியில் தீவிரமாக இருக்க… இதை எதையும் பற்றி கவலைப்படாமல் சம்ரித் தன் அலுவலகத்தில் கவனமாக இருக்க… மூவரும் அவரவர் வேலையில் ஈடுப்பட்டாக இருக்க… காலம் இவர்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டது.

அம்ரீதா அலுவலகம் முடிந்து வந்தால் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு டியூசன் எடுப்பாள். இதை தினசரி வழக்கமாக வைத்திருப்பாள். டியூசன் எடுத்துக் கொண்டிருக்கும் போது எப்பவும் போனை சார்ஜ் போட்டு வைத்திருப்பாள்.

அன்றும் அதே போல போட்டு வைத்திருந்த போன் சிணுங்கியது. ஏதோ விளம்பரக் கால் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் சிணுங்கவும் போய் எடுத்துப் பார்த்தாள். போன் திரையில் சம்ரித் எனக் காட்டியது. ‘இந்த நேரத்தில் இவன் எதுக்கு போன் கூப்பிடுகிறான்…’ என நினைத்தாள்.

அது மறுபடியும் சிணுங்கவும்,”ஹலோ… என்ன சம்ரித் இந்த நேரத்தில் கால் பண்ணியிருக்கறிங்க…” என்றாள்.

“இல்ல… எனக்கு ஒரு டவுட்…”

“எந்த டவுட்டா இருந்தாலும் நாளைக்கு ஆபிஸ்ல கேட்கலாமே…”

“என்ன பேசவிட்டா தானே… நா என்னனு கேட்பறது புரியும்…”

“ஹூம்… சொல்லுங்க…”

‘அப்படி வா வழிக்கு…’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, அவன் ஏதோயதோ பேசிக் கொண்டிருந்தான். சத்தியமாக அலுவலக வேலைப் பற்றி பேசவில்லை. இயல்பாக கொஞ்சம் நட்போடு பேசிக் கொண்டிருந்தான்.

அதற்குள்,”க்கா… க்கா…” டியூசன் மாணாக்கர்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

“வரேன்… வரேன்…” சொல்லிக் கொண்டே இருந்தாள்.

இவர்கள் கூப்பிடுவதையும் “இவள் வருகிறேன்…” என்று சொல்வதையும் கேட்டும் அவன் பேசிக் கொண்டிருந்தான்.

‘இவன் எப்ப போனை வைப்பான்…’ எனத்தோன்ற ஆரம்பித்துவிட்டது. இருந்தும் போனை அவன் வைக்க மாதிரி தெரியவில்லை.

பொறுத்தும் போதும் என பொங்கி எழுந்துவிட்டாள். “டியூசன் பிள்ளங்க கூப்பிடறாங்க… நா போயி அவங்கள பார்க்கனும்…” என போனை துண்டிக்கப் போனாள்.

“இரு… இரு.. நாஇந்த டைம் பேசினால் உனக்கு டிஸ்பர்ன்ஸா இருக்கும்…தினமும் நாம ஏன் நைட் பத்து மணிக்கு போன் பேசிக்கூடாது…” எனக் கேட்டான்.

‘தினமும் நைட்லயா…’ என யோசிக்கவும், சம்ரித்,”ஹலோ… ஹலோ…” என திரும்ப திரும்ப அழைக்கவும்,

“ம்ம்ம்…லைன்ல தான் இருக்கேன்…” கொஞ்சம் தயங்கி,”ஓ… பேசலாமே…” என பர்மிஷன் கொடுத்தாள்.

பிறகு தான் இழுத்த மூச்சை,”ஷ்ஷ்… அப்படா…” விட்டுட்டு “உன்கிட்ட இருந்து பர்மிஷன் வாங்கறதுக்குள் எனக்கு உயிர் போயி உயிர் வந்தது…” என சொல்லி முடிக்கும் முன்,”க்கா.. க்கா…” மீண்டும் மாணவர்கள் அழைத்தனர்.

“இதோ வரேன்…” சொல்லி விட்டு,”ஓகே… நா போன வச்சிடறேன்…” கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

‘அப்பாடி… எப்படியோ பர்மிஷன் கொடுத்தாளே…’ என நினைத்துச் சிரித்தான்.

அம்ரீதா,’தினமும் இவன் என்கிட்ட என்ன பேசுவான்…’ என நினைத்தாள்.

டியூசன் மாணாக்கர்களுக்கு பாடம் நடத்த நடத்தவே தனக்குள் கற்பனையில் மிதந்தாள்.அவர்களை அனுப்பி விட்டு இரவுணவு முடித்து விட்டு நேரமாக படுக்கையறைக்குள் புகுந்து கதவை அடைத்து சம்ரித் போனுக்காக காத்திருக்கலனாள்.

பத்து பதினொன்றானது அவன் போன் செய்யவேல்லை. காத்திருந்து காத்திருந்து ஒரு கட்டத்தில் உறங்கிவிட்டாள்.

சம்ரித் இப்பதான் போன் பண்ணினனும் நினைத்து விட்டுட்டான்.

அம்ரீத் இரவில் தமாதமாக தூங்கி நன்கு விடிந்ததும் எழுந்தாள். பிறகு காலை கடன்கள் முடித்து விட்டு நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வந்த பின்பு சித்திக்கு சமையலுல் உதவி செய்து விட்டு குளிச்சு அலுவலகம் செல்ல தயாராகி வந்தாள்.

வந்தவள் காலையுணவு முடித்து விட்டு மதியத்திற்கு சித்தி போட்டு வைத்திருந்தி டிபன்பாக்ஸை எடுத்து தனது பேகில் வைத்துக் கொண்டு,”நா ஆபிஸ்கு போயிட்டு வரேன்… ஏற்கனவே எனக்கு லேட்டாகிவிட்டது… ஓகே பை சித்தி…” சொல்லிக் கொண்டு அவசரமாக கிளம்பிவிட்டாள்.

பஸ்ஸைப் பிடிக்க அரக்க பறக்க போனான். அவள் வழக்கமாக செல்லும் பஸ் சென்றுவிட்டது. அடுத்த வந்த பஸ்ஸில் ஏறி அலுவலுலகத்துக்கு மிகவும் தமாதாக வந்தாள்.

அவசரம் அவசரமாக கிளம்பி வந்தில் மிகவும் சோர்வாகத் தெரிந்தாள். அப்படியே சம்ரித் முன்னால் போய் நின்றாள். அவன் குனிந்து ஏதோ பைலை மும்மரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“எக்ஸ்கூமி சார்…” கூப்பிட்டதும் நிமிர்ந்துப் பார்த்தான்.

கண்கள் இரண்டும் சிவந்து சரியாக உறங்காமல் முகம் சற்று வீக்கமாக இருந்தது. அவளைப் பார்த்தவுடன் பதறிவிட்டான்.

“அச்சச்சோ… இவ்வளவு ரெஸ்ட் லெஸாக இருக்க…” எனக் கேட்டான்.

‘ம்கூம் எல்லாம் இவனால் தான்… ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கறத பாரு…’ என்று மனதில் திட்டினாள்.

“ஹீ… ஹீ…” என இளித்துக் கொண்டு,”எல்லாம் நன்மையும் உங்களையே சாரும்…” என்று தூய தமிழில் மொழிந்தாள்.

“என்னமோ சொல்றினு புரியுது… ஆனால் ஒன்னுமே விளங்கவேமாட்டேங்குது…” என்று சொன்னான்.

‘ஹாஹா… சுத்தம் ஒன்னும் புரியல…நல்லவேளை நா தப்பிச்சேன்…’ என்று மனதில் நினைத்தாள்.

அவள் ஏதோ சிந்தனையில் இருக்கிறாள் என நினைத்துக் கொண்டு மேஜையைத் தட்டி,”என்ன யோசனை…” கேட்டான்.

“ஒன்னுமில்ல…”

“ஒன்னுமேயில்லயா… ஆர் யூ சூயூர்…” என திரும்ப திரும்ப கேட்டான்.

“ஒன்னுமேயில்லனு சொன்னால் ஏன் புரிஞ்சுகவேமாட்டேங்குறிங்க…”

“என்னவோ சொல்ற… நானும் இந்த டாபிக் இதோட விடறேன்.”

“சரி நா போயி என் வேலய பார்க்கட்டுமா…”

“சரி சரி… நீ போயி உன் வேலய பாரு… இட்ஸ் கெட்டிங் லேட்…” என சொல்லவும் தான் எதுக்கு வந்தோம் என்பதை மறந்து விட்டு ஏதோஏதோ பேசிக் கொண்டிருக்கிறோம் என உணர்ந்தாள்.

“ஆமாம் சார்… நா லேட்டாக வந்ததுக்கு உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன். சாரி சார்… என்னய மன்னிக்கவும்…”

“பரவாயில்ல… இப்பவே ரொம்ப லேட்டாயிடுச்சு…” என சொல்லித் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

சாதரணமாக தோளைத் தட்டிக் கொடுத்தது, காதல் கொண்ட மனசு பெரிதாக எண்ணிக் கொண்டது. அவள் தட்டிக் கொடுத்த தோளைப் பார்த்தபடியே கனவில் மிதந்தபடியே நடந்தாள்.

கனவில் வந்தவளை வழி மறித்து ஒரு லேபர்,”மேம்… இந்த ஸ்குருவ இந்த மெஷினுக்கு மாட்டலமா…”

கனவிலிருந்து விழித்துக் கொண்ட அம்ரிதா,”ஹா… என்ன கேட்டிங்க…” என்றாள்.

”இல்ல… இந்த ஸ்குருவ இந்த மெஷினுக்கு மாட்டலமா…” என்று அந்த லேபர் அதே கேள்வியை திரும்பக் கேட்டான்.

“ஓ… தாரளமாமாட்டலாம்…” என சொன்னாள்.

பிறகு தன் கேபினுக்கு வந்தவள்,’ச்சேய் ஆபிஸ்ல எப்படி நடந்துக்கிட்டோம்…” என்று தன் தலையில் தானே கொட்டிக் கொண்டு அலுவலகம் முடியும் வரைக்கு வேலையைப் பார்த்தாள்.

நேற்று மாதிரி இல்லாமல் இன்று இரவு பத்துமணிக்கு சம்ரித் அம்ரீதாவுக்கு போன் பண்ணினான்.

அம்ரீதாவோ பண்ணுவானோ… பண்ணமாட்டனோ… தன் மொபலையைப் பார்த்திருந்தாள். சம்ரித் அழைக்கிறான் என்று திரையில் வரவும்,”யாஹூ…” என கைகளை உயர்த்திக் கத்தினாள்.

அப்புறம் எதுவும் நடக்காத்துப் போல மிகவும் சாவகாசமாக போனை காதுக்கு கொடுத்து,”ஹலோ… சம்ரித் என்ன விஷயம் சொல்லுங்க…” என்றாள்.

“என் போனுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தியா…” என்றுக் கேட்டான்.

“ச்சேச்ச… அப்படியெல்லாம் கிடையாதே…” என மனசார பொய்யுரைத்தாள்.

உடனே சம்ரித் முகம் சோம்பிவிட்டது. தன் காலை எதிர்ப்பார்த்து காத்திட்டு இருப்பாள் என நினைத்திருக்க… சட்டென இப்படி சொல்லிவிட்டாளே என வருத்தம் கொண்டான்.

தன் வருத்தம் குரலில் தெரியாமல் இருக்க வெகு பிரயத்தனப்பட்டு தொண்டையை செருமிக் கொண்டான்.

“ஹலோ… சம்ரித் சளி ஏதாவது பிடிச்சகிச்சா… இல்ல தொண்டைய செருமிட்டு இருக்கிங்களே…” ஒன்றும் அறியாதவளாட்டும் கேட்டாள்.

“யெஸ்… கொஞ்சம் கோல்ட் பிடிச்சகிச்சா…” என இவனும் பொய் மொழிந்தான்.

“சரி… போன வச்சுட்டு நேரமாய் போயி தூங்குங்க…” என இவளுக்கும் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றியது.

சம்ரித்தும் இன்னும் கொஞ்சம் பேசினால் பரவாயில்ல என நினைத்து,”கோல்ட் தானே… நோ ப்ராப்ளம்… இட்ஸ் ஓகே… லெட்ஸ் வீ டாக்…”

“யூ ஹவ் நோ ப்ராப்ளம்… ஓகே வீ வில் டாக்…” என்றாள்.

“அப்பறம் ஆபிஸ் இருந்து வந்த என்ன செஞ்சிட்டு இருந்தாய்…”

“ஆபிஸ்ல இருந்து வந்தவுடன் ப்ரஸ்ஆப் ஆகிவிட்டு சித்தி சோள அடை செஞ்சு கொடுத்தாங்க… அத சாப்பிட்டு விட்டு டியூசன் படிக்க பசங்க வந்தாங்க… அவங்களுக்கு டியூசன் எடுத்து முடிச்சிட்டு அவங்கள அனுப்பி வச்சிட்டு டிபனுக்கு சித்திக்கு ஹெல்ப் பண்ணிட்டு சாப்பிட்டு பெட்கு வந்திட்டேன்…”

“அப்புறம்…” என்றான்.

“அப்புறம் விழுப்புரம்…” என்று சிரிக்காமல் சொன்னாள்.

“விழுப்புரமா… ஒன்னும் புரியலையே…” என்று முழித்தான்.

“ஐயோ… மட்டிமட்டி…”என சொல்லி விட்டு தலையில் அடித்துக் கொண்டாள்.

மட்டு என்றதும் சுருக்கென கோபம் வந்தது. அந்த கோபம் குறையாமல்,”யாரைப் பார்த்து மட்டிங்கறங்க… நா படிக்கும் போதே ஸ்கூல், காலேஜ் எல்லாத்திலயும் டாப்பர் தெரிஞ்சுக்கோ…” படபடவென பொரிந்து தள்ளிவிட்டான்.

“ஹாஹா… ஸ்கூல், காலேஜ் எல்லாத்திலயும் டாப்பரா இருக்கறவருக்கு இந்த ஜோக் கூட தெரியலனு நினைக்கும் போது தான் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது…” என கூறி விட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.

‘இது ஜோக்கா… நமக்கு இது கூட தெரிஞ்சுக்காம இருந்திருக்கோமே…’ என நினைத்து அசடு வழிந்தான்.

அவன் அசடு வழிந்ததை நேரில் பார்த்த மாதிரி,”என்ன சார்… அசடு வழியறிங்களா…” கேட்டாள்.

‘குப்புறம் விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலனு சொல்வாங்களே…’ அந்த மாதிரி,”சேச்சே… அப்படியெல்லாம் கிடையாதே…” வீம்பாக சொன்னான்.

“காட் ப்ராமிஸா… நீங்க சொன்னா நம்பி தானே ஆகனும்…” போனால் போகுதுனு நம்பற மாதிரி நடித்தாள்.

“போதும் போதும்… நீ என் காலை வாரினது எல்லாம் போதும்…” என கூறி விட்டு தானும் சிரித்தான்.

இருவரும் அடக்கமாட்டாமல் சிரித்தார்கள். பிறகு போனில் மணியைப் பார்த்த அம்ரீதா,”சம்ரித் மிட்நைட்டாகிவிட்டது. பேசினது போதும் வச்சிடலாமே… குட்நைட்…” என்று கூறி விட்டு சம்ரித் மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் போனை வைத்துவிட்டாள்.

சம்ரித் இன்னும் பேசனும் ஆசையாக இருந்தாலும் அவனும் போனை வைத்துவிட்டான்.

அம்ரீதா போனை வைத்துவிட்டால், அவள் கனவில்,’டேய்… என் கலாபக் காதலா… எனக்கு உன்கிட்டயுனும்னு பேசனும்னு தான் ஆசை… ஆனால் என்ன பண்றது…ஆச இருக்குது நாடாள ஆனா அம்ச இருக்குது கழுத மேய்க்கனு ஒரு பழமொழி இருக்குதுல்ல…’ என நினைத்து அடிவயிற்றில் இருந்து மூச்சை இழுத்துவிட்டாள்.

அதே போல எவ்வளவு நேரம் ஏதோஏதோ நினைத்துக் கொண்டிருந்தாள். அவளை அறியாமலயே தூக்கத்திற்கு கண்கள் சொருக ஒரு வழியாக தூங்கிவிட்டாள்.

இன்றும் அவசரம் அவசரமாக எழுந்து மணியைப் பார்த்தாள். கடிகாரத்தில் ஏழு மணி என காண்பித்தது. ‘இனியும் ப்ரஸாகி வாக்கிங் போக முடியாது. சித்திக்கு கிச்சன்ல கொஞ்சம் ஹெலப் பண்ணிட்டு ஆபிஸ் கிளம்ப தான் நேரம் சரியாக இருக்கும்…’ என்று நினைத்துக் கொண்டு தன் படுக்கை விரிப்பை சீர் செய்தாள்.

பிறகு தன் காலை கடன்களை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். அதுவரைக்கும் யசோதா சமையலில் ஒரு கண்ணும் இவள் அறையில் ஒரு கண்ணும் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இவ்வளவு நேரமாச்சு… இப்பவாவது எழுந்து வந்தேயா..இன்றைக்கு வாக்கிங் போகலயா…”

“இல்ல சித்தி… நல்லா தூங்கிட்டேன். அதனால் வாக்கிங் போகல…”

“நீ வாக்கிங் வேணுமானலும் போயிட்டு வா… நா கிரேவி பண்ணிட்டேன். இன்னும் ரொட்டி மட்டும் தான் செய்யனும்… அத நா பார்த்திக்கறேன்.”

“இல்ல சித்தி… இன் மேல் வாக்கிங் போக முடியாது. அதனால உங்களுக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணிட்டு ஆபிஸ்கு கிளம்ப தான் நேரம் சரியாக இருக்கும்…” என்றாள்.

“அதுவும் கரெக்ட் தான்… வா வந்து வேலய பாரு…”

சித்தி சொல்லவும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். இருந்தும் வேலையை முடிக்கும் போது நேரமாகிவிட்டது.

அப்பவும் சித்தி,”அம்ரீ எல்லா ரொட்டியும் சுட்டெடுக்க இன்னும் ஹாப் நெவர் ஆகும். உனக்கு இப்பவே ஆபிஸ்கு டைமாகிடுச்சு பாரு… போயி குளித்துவிட்டு கிளம்பு…” என்றாள்.

“இருக்கட்டும் சித்தி… மீச்சத்த சுட்டு கொடுத்திட்டு போறேன்…”

“போ நா பார்த்துக்கேறன்…” அவள் சிற்றன்னை சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக செய்துக் கொடுத்து விட்டு தான் குளிக்கப் போனாள்.

எவ்வளவு வேகமாக கிளம்பியும் அவளால் அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு போய் சேர முடியவில்லை. இன்றும் தாமதமாகத் தான் போனாள். பையோ கிளாக்கில் தன் வரவை பதிவு பண்ணிவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தாள். சமரித் அலுவலகம் இன்னும் வரவில்லை. அதனால் தப்பித்தோம் பிழைத்தோம் என தன் அறைக்கு ஓடிவிட்டாள்.

பதினொன்றாகியும் சம்ரித் இன்னும் வரவில்லை என்றானதும் ‘ஏனோ இன்னும் வரவில்ல… என்னாச்சு தெரியல…’ அம்ரீதா கவலைக் கொண்டாள்.

சம்ரித்,”நா லேபர் ஆபிஸ் போயிட்டு தான் வருவேன்.” என சொல்லிச் சென்றதை அம்ரீதா மறந்துவிட்டாள்.

சம்ரித் திரும்பி வந்து,”அம்ரீ… நா லேபர் ஆபிஸ்கு போயிட்டு தான் வருவேன் என சொல்லி சென்றத மறந்துவிட்டாய் போல இருக்கு…” என ஞாபகப்படுத்தவும், அம்ரீதாவுக்கு நினைவு வந்தது.

“அச்சச்சோ… நா மறந்தே போனேன்…” என சொல்லி நுனி நாக்கைக் கடித்தாள்.

“நல்லா மறந்து போனே… போய் உன் ஒர்க்க பாரு…” என கூறி அனுப்பி வைத்தான்.

அலுவலகம் முடிந்து சம்ரித்திடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள். வழக்கமாக அவன் அழைக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். நேரம் தவறாமல் போன் செய்து மணிக்கணக்கில் இருவரும் பேசினார்கள்.

தினம் போலவே அன்றும் தாமதமாக எழுந்து, சித்திக்கு உதவிட்டு அரக்க பறக்க கிளம்பினாள். அலுவலகத்துக்கு இவளுக்கு முன்னாலே சம்ரித் வந்துட்டான்.

அவனைப் பார்த்து,”குட்மார்னிங் சார்…” என்றாள்.

அவனும் பதிலுக்கு,”குட்மார்னிங்… வந்தே லேட் போய் ஒர்க்க பாரு…” என்றான்.

‘எப்படி தான் இவன் மட்டும் டைமுக்கு கிளம்பி ஆபிஸ்கு வரனோ…’ என்று நினைத்தாள்.

அலுவலக வேலை முடிந்தும் சம்ரித் அம்ரீதாவை அழைத்தான். அவள் எதுக்கு கூப்பிடுகிறான் என எண்ணியவாறே அவன் அறைக்குச் சென்றாள்.

“இன்றைக்கும் உனக்கு கால் பண்ணலமா… உனக்கு ஏதும் டிஸ்டர்பாக இல்லயா…”!

கேட்டவுடன் ஒத்துக் கொள்ள சங்கடப்பட்டு ஏதோ சொல்லிச் சமாளிக்கனும் என யோசித்தாள். உண்மையை சொல்லிடலமோ என்று கூட நினைத்தாள். அதை சொன்னால் போன் செய்யாமல் விட்டுவிடுவானோ… அவன் கூட பேசனும் மனம் நிறையாக ஆசை… இப்படி நிறைய நினைத்தாள் எதையும் அவன்கிட்ட சொல்லமுடியாமல் தவித்தாள்.

அம்ரீதா என்ன சொல்வது யோசிச்சுகிட்ட இருக்கும் போது அதுக்குள்ள சம்ரித்,”ஒரு கேள்வி தான் கேட்டேன். அதுக்கு பதில் சொல்ல இவ்வளவு யோசிக்கற… ஏன் உனக்கு இஷ்டமில்லயா…”

“ஐயோ… அப்படி எல்லாம் இல்ல…” உடனே மறுத்தாள்.

“வீட்ல ஏதாவது சொல்லவாங்களா.. .” எனக் கேட்டான்.

சித்திக்கு தெரியும் எப்படி சொல்வாள். என்ன கூறி சமாளிக்கலாம் என யோசித்தாள்.

“வீட்ல தான் திட்டினாங்களா… அது தெரியாமல் தினம் தினம் கால் செஞ்சு பேசியிருக்கேன் பாரு…” அவனா ஒன்றை மனதில் நினைத்துக் கொண்டு அது தான் உண்மை எனப் பேசினான்.

‘கண்டதையும் நனைத்து மனச ஒலப்பிக் கொள்வானோ…’ என பயந்து,”இல்ல… உங்ககிட்ட பேசிட்டு தூங்கறதுக்கு லேட்டாகிடறதுனால… காலையில் எழுந்து சித்திக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணிட்டு, பிறகு ரெடியாயிட்டு வரதுக்குள்ள நா வழக்கமா போற பஸ் கிளம்பி போயிடுது… அடுத்த பஸ்கு வெயிட் பண்ணி ஏறி வரதுக்குள்ள ஆபிஸ் வர லேட்டாயிடுது…” என உண்மையைச் சொன்னாள்.

சம்ரித்கோ அம்ரீகு சர்ப்ரைஸாக லேடிஸ் பைக் வாங்கி கொடுக்கனும் ஆசை… இவன் மனசுக்குள் காதலோ… என்னவோ… தெரியவில்லை.

அடுத்த நாள் சம்ரித். போனில் அம்ரீதா,”வா வந்து பாரு… உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வெயிட்டிங்…” என்றான்.

வாயு வேகமோ… புயல் வேகமோ… என அம்ரீதா ஓடி வந்தாள். மில் வாசலில் வந்துப் பார்த்து பிரமித்துப் போனாள். அங்கு அவள் வாங்க ஆசைப்பட்ட பைக்டோடு, ஷோரும் ஊழியர்கள் இருவர் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

“வா வந்து பாரு… உனக்கு தான்இந்த சர்ப்ரைஸ்… எப்படி இருக்குது இந்த பைக்…” எனக் கேட்டான்.

‘எனக்கா இந்த பைக்… இவன் வாங்கி கொடுப்பதா… பார்க்கிறவங்க எல்லாம் என்ன சொல்வார்கள்… சம்ரித்துக்கும் இவளுக்கும் தொடர்பு இருக்குதுனு தப்புத்தப்பாக பேசவாங்களோ…’ என பயந்து நடுங்கினாள்.

அதுவே அவளுக்கு கோபமாக மாறி விருட்டென்று திரும்பி போய் தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அவள் கோபமாகப் போனதும் என்னவோ… ஏதோ… என பதறி அடித்துக் கொண்டு பின்னாலேயே ஓடினான். அந்த பதட்டத்தில் அவள் முன்னால் போய் நின்று,”ஏன் அம்ரீ உனக்கு பைக் கலர் பிடிக்கலயா… இல்ல இந்த மாடல் பிடிக்கலயா… என்னதான் பிடிக்கல… சொல்லு மாத்திக்கலாம்…” என்று வாஞ்சையாக்க் கேட்டான்.

“இந்த பைக்கே பிடிக்கலே…”

“இந்த மாடல் வேண்டாம்னு சொல்லு… வேற மாடல் வாங்கிகலாம்…”

அவனை முறைத்துக் கொண்டே,”எனக்கு நீங்க பைக் வாங்கி கொடுக்கறதே பிடிக்கல…” என்றாள்.

“ஏன் நா வாங்கி கொடுக்க கூடாத…” ஆத்திரத்துடன் கேட்டான்.

உடனே அவள் திரும்பி நின்று,”நீங்க வாங்கி கொடுத்து த நா ஓட்டிட்டு போனேன் வச்சிகங்கோ… இந்த ஊர்உலகம் ஒன்னுக்கு இரண்டா திரிச்சு பேசும்…”

இவனும் அவளுக்கு எதிர்ப்பக்கமா வந்து நின்றுக் கொண்டு,”என்ன பேசும்… பேசினால் பேசட்டுமே… நாம இந்த காதுல வாங்கி அந்த காதுல வாங்கி விட்டுகிட்டே போயிட்டே இருக்கனும்…” என்று எரிச்சலுடன் சொன்னான்.

“பேசினால் பேசட்டும் உங்கள மாதிரி கண்டுக்காமல் போக முடியாது.” இவளும் ஆத்திரத்துடன் கூறினாள்.

“கண்டுக்க வேண்டாம்னு சொல்ல… ஜஸ்ட் இக்னோர் பண்ணிட்டு தான் போ என சொல்றேன்.” கத்தினான்.

“எப்படி தான் இக்னோர் பண்ணிட்டு போக சொல்றிங்க… என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது.” இவளும் பதிலுக்கு கத்தினாள்.

இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப் போய் அவள் பேசும் வாயை அடைக்கும் வழி அறியாமல் அவள் உதட்டை இழுத்து பிடித்து உறிஞ்சினான். இவன் திடீரென அவன் உதட்டோடு உதடு வைத்து கிஸ் கொடுப்பான் என அறியாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

சிலநொடிகள் கழித்து அவள் சிலை போன்று நிற்பதைக் கண்டு தன் தவறை உண்ர்ந்து தன் தலையில் அடித்து, பதறி,”சாரி, சாரி… தெரியாமல் பண்ணிட்டேன்.” விலகி நடந்தான்.

‘இரவில் போன் செய்தால் போனை எடுப்பதா… வேண்டாமா…’ என யோசித்தாள்.

சம்ரித்தும் அம்ரீதாவுக்கு போன் பண்ண மறந்துவிட்டு வேறு ஒரு கனவில் மிதந்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை சம்ரித்தும் காதலில் குதித்துவிட்டானோ… அது தான் கனவில் காணுக்கிறானோ… என்னவோ…

அவனோ… அவளோ… யார் முதலில் காதலை செப்புவது தயங்கினர்.

அவனோ… அவளோ… முதல் அடியை எடுத்து வைப்பது அஞ்சினர்.

பெண்ணவள் வெட்கம் கொண்டு சொல்லாமல் இருக்க…

ஆடவனோ தைரியம் கொண்டு காதலை சொல்ல தயாராக இருக்க…

காலம் இவர்களைப் பார்த்து சிரிக்க தயாராக இருந்தது.

4 – தீக்கு தென்றலோடு மோகம் Read More »

தீக்கு தென்றலோடு மோகம் – 3

3 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 3 அம்ரீயும் சம்ரித்தும் நட்போடு தான் பழகினார்கள். ஆனால் அம்ரீ கொஞ்சமாக கொஞ்சம் சம்ரியை இரசிக்க ஆரம்பித்துவிட்டாள். அது தெரியாமல் சம்ரித் நட்பு மட்டும் பாராட்டினான்.சம்ரித் என்ன எது செய்தாலும் அம்ரீக்கு இரசித்தாள். இரசித்து இரசித்து காலம் போக, போக அது ஒருதலை காதலாகவே மாறிவிட்டது. ஆமாம் அம்ரீ சம்ரியை ஒருதலையாக காதலிக்கிறாள். ஒருநாள் சம்ரித் யார்கிட்டயோ போனில் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அம்ரீ அவனிடம் வேலையில்

தீக்கு தென்றலோடு மோகம் – 3 Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

2 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி 2 சம்ரித்,”மாம்… மாம்.. எனக்கு டிபன் எதுவும் வேண்டாம்.” ஹைப்ச்சில் கத்தினான். அதற்கு அவனுடைய அம்மா கிச்சனில் இருந்து,”இருடா… கொஞ்சம்… உனக்காக தான் அவசரம் அவசரமாக செஞ்சிட்ருக்கேன்.” என பதிலுக்குக் கத்தினார். “இல்லம்மா.. எனக்கு டைமாயிடுச்சு… நா தான் முதலாளி… நானே டைம்க்கு போகலனா… முதலாளிய லேட் வருகிறாரு… லேபர்ஸ்கு நாம டைம்க்கு போகனுமா என்னங்கற தாட் வந்திடும்…” என சொல்லிட்டு இருக்கும் போது தன் அசிஸ்டெண்ட் டிபன்

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

1 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 1 ஹீரோ : சம்ரித் – பெயருக்கேற்ப செல்வவளமிக்கவன். குடும்பமே வெளிநாட்டில் வாசம். தாத்தா ஆதி கேசவன் மும்பையில் அன்னபூரணி என்ற இரும்பு எஃகு ஆலை நடத்தி வருகிறார். ஹீரோயின் : அம்ரீதா இவளை செல்லமாக அமீர் என்று அழைப்பார்கள்.மும்பையில் அன்னபூரணி எஃகு ஆலையின் குவாட்டர்ஸில் வாசம். தந்தை பிரபாகரன் மற்றும் சித்தப்பா கருணாகரன் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரே மகன் தான்.

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

1 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 1 ஹீரோ : சம்ரித் – பெயருக்கேற்ப செல்வவளமிக்கவன். குடும்பமே வெளிநாட்டில் வாசம். தாத்தா ஆதி கேசவன் மும்பையில் அன்னபூரணி என்ற இரும்பு எஃகு ஆலை நடத்தி வருகிறார். ஹீரோயின் : அம்ரீதா இவளை செல்லமாக அமீர் என்று அழைப்பார்கள்.மும்பையில் அன்னபூரணி எஃகு ஆலையின் குவாட்டர்ஸில் வாசம். தந்தை பிரபாகரன் மற்றும் சித்தப்பா கருணாகரன் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரே மகன் தான்.

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

18 – இத இதமாய் கொன்றாயடி

18 – இத இதமாய் கொன்றாயடி

சூர்யா சொல்வதை நம்பாமல் நிலா கண்களை இடுக்கிக் கொண்டுப் பார்த்தாள். கல்யாணியோ இது தான் சமயம் என்று,”க்கா… இவன் நடிக்கிறான்கா நம்பாதிங்க…”என இவள் நடித்தாள். சூர்யாவின் பெற்றோரோ சூர்யா பக்கம் நியாயம் இருப்பதாக முழுவதும் நம்பினார்கள்.

எனவே சூர்யாவோட தந்தை சிந்தித்தவாறு,”சரிம்மா… நீ சொல்றது கரெக்ட் தான்… எங்க பையனா இருந்தாலும் தப்பு தான் தப்பு… தப்புக்கு தண்டனை இருக்கு… என்ன தண்டனை கொடுக்கலாம் நீயே சொல்லும்மா…” கல்யாணிப் பார்த்து வினயமாகக் கேட்டார்.

இவளும்,”எனக்கு செய்த மாதிரி வேற யாருக்கும் செய்யகூடாதில்ல… எனக்கும் அவருக்கும் கண்ணாலம் பண்ணி வச்சிடுங்க… அவரு பேருல இருக்கற சொத்தல்ல என் பேருக்கு மாத்திடுங்க… அவ்வளவு தான்.” தன் குரபுத்தியைக் காட்டினாள்.

வேணுகோபால்,”ஏம்மா… அவன் சொத்து முழுசும் உன் பேருல எழுதி வச்சா போதுமா… அவன் எப்படி போனால் உனக்கென்ன…” எனக் கேட்டார்.

உடனே அவள்,”ம்கூம் என் பேருல சொத்திருந்தா போதும்… அவன சொத்தில்லாம ஒரு பையனும் மதிக்கமாட்டாங்க…”

இவள் என்ன சூர்யாவை விட சொத்து தான் பெரியது என பேசுகிறாள் நிலா நினைத்தாள்.

சூர்யா ஏதோ குறுக்கிட்டு பேச வந்தான். பேசாதே என்று மகனுக்கு கண்ஜாடைக் காட்டிவிட்டு, வேணுகோபால்,”புருசன மதிக்க வேணாம்… சொத்துமட்டும் இருந்தா பரவாயில்லயா…” கேட்டார்.

“சொத்துக்காக என் காலை சுத்தி வரணும்ல…” என்று சொன்னாள்.

உடனே வேணுகோபாலுக்கு கோபம் வந்தது. “கூட்டுகளவாணிகளா… இரண்டு பேரும் சேர்ந்து சொத்துக்கு ஆசப்பட்டு எங்கள ஏமாத்துணுமங்கறது நனச்சிட்டு எங்க வந்து நாடகம் போடறிங்க… ஒழுங்கா மரியாதயா இடத்த காலி பண்ணுங்க… இல்லனா வாட்ச்மேன விட்டு துரத்தியடிப்பேன்…” என சிம்மாக கர்ஜித்தார்.

நிலாவுக்கு இவளே ப்ராடு எனத் தெரியாமல் வந்ததுக்கு இந்த கெட்டப் பெயர் தேவை தான் என மனம் நொந்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு காலிப் பண்ணினாள். கல்யாணியோ இவ்வளவுக்கு பிறகும் ஏதாவது தோறுமா என நினைத்து,”சொத்து ஒன்னும் வேணாம்… அதுக்கு பதிலா ஒரு ஐம்பது லட்சம் கொடுங்க… சத்தப்படாம போயிடுறேனு…” என்றாள்.

வேணுகோபாலோ,”வாடச்மேன்… வாட்ச்மேன்…” என வாசலைப் பார்த்து குரல் கொடுத்தார். வாட்ச்மேன் வருவதற்குள் இனிமேல் ஏதும் தேறாது என நினைத்தவாறே,”இருங்க… வெளிய போய் உங்க மகன பத்தி இல்லாதயும் பொல்லாதயும் சொல்லி மானத்த வாங்கலன்னா என் பேரு கல்யாணில்ல…” சொல்லிவிட்டு அந்த பங்களாவை விட்டு நிற்காமல் ஓடிப் போனாள்.

ஓடிவிட்டாள் என சூர்யாவும் சூர்யா பெற்றோரும் ஆசுவாசமாக பெருமூச்சு விட்டனர். அதற்கு ஆயுள் குறைவு போலும் ஏனெனில் அவள் போன வேகத்திற்கு ஊருக்குள்ள கட்டுக்கதைகளைப் பரப்பியிருந்தாள். ஊருக்குள்ளவர்களும் பெரிய இடத்துபையன் கொஞ்சம் அப்படி இப்படியிருந்தா என்ன என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். அது இவர்களுக்கு தெரிந்த போது சூர்யா முகம் இருட்டிடடித்துவிட்டது. அதைப் பார்த்த வேணுகோபாலுக்கு கண்மண்ணு தெரியாத கோபம் வந்தது.

யாரைக் கொண்டு இவள் வாயை அடைப்பது என தெரியாமல் சூர்யா சிந்தித்தான். அவன் மூளையில் நிலா தான் சரியான ஆள் என்று டக்கென பொறித் தட்டியது. உடனே சூர்யா நிலாவை சந்திக்க எண்ணி அவள் வீட்டு முகவரியை விசாரித்துக் கொண்டு, ஒரு சேரியில் உள்ள அவள் வீட்டைக் கண்டுப்பிடித்துப் போனான்.

நிலா வீட்டுவாசலில் நின்றுக் கொண்டு,”நிலா… நிலா…” என அழைத்தான். வெளியே வந்த நிலா சூர்யாவைப் பாரத்ததும், இந்தாள் இங்க எதற்கு வந்திருக்கான்? என முகம் பேயறைந்தாற் போல ஆகிவிட்டது. சூர்யா நிலா மனதில் என்ன நினைக்கிறாள் என கணித்துவிட்டான்.

உடனே சூர்யா,”தோ பாரு.. நீ நனக்கற மாதிரியெல்லாம் பிரச்சனய பண்ண வரல… சொல்ல போனா நா ஒரு உதவி தான் கேட்டு வந்திருக்கேன்…” சொன்னான்.

நிலா மனதிற்குள் அப்பாடி இவன் ஒன்றும் பிரச்சனை பண்ண வரவில்லை. இது தெரிந்தால் தன் அம்மா ஆடித் தீர்த்துவிடுவாள் என எண்ணினாள்.

நிலா,”சரி எதற்கு வந்திருக்கே…” கேட்டாள். அதற்கு சூர்யா,”இல்ல… அன்னைக்கு வீட்டு வந்தில்ல… அங்க நடந்தது பூராவும் ஊருல சொல்லறியா… ப்ளீஸ்…” என மன்றாடிக் கேட்டான்.

நிலா பதிலுக்கு,”அதற்கென்ன… உண்மய தான் சொல்லறேனு… சொல்லிட்டா போச்சு…” சூர்யாவோடு கிளம்பினாள்.

சூர்யா நிலாவோடு கல்யாணி தங்கியிருக்கும் விடுதி வந்து இறங்கினான். அங்கு சூர்யாவோடு நிலாவைக் கண்டதும் கல்யாணி இவனோடு இவள் எங்க இங்க என்னத்துக்கு வந்திருக்கா என அதிர்ச்சியடைந்தாள். நிலா வந்த வேகத்திற்கு கல்யாணியைப் பிடித்து கன்னம் கன்னமாக அறைந்தாள். இவள் இப்படி செய்வாள் என எதிர்பார்க்காத கல்யாணி திரு திருவென முழித்தாள்.

“என்னடி யாருக்கும் தெரியாதுனு நனச்சிட்டு இருக்கறியா… எல்லா உண்மயும் தெரிஞ்சவ நா ஒருத்தி இங்க இருக்கேனு என்பதை மறந்துடாதே… ஒழுங்கா மருவாதயா எங்க கூட வந்து எல்லார் முன்னாடி உண்மய சொல்லறியா… என்ன புரிஞ்சுதா…” மிரட்டினாள்.

கல்யாணி அடிக்கு பயந்து வேறுவழியில்லாமல்,”நீங்க எங்க வந்து சொல்லனா… நா அங்க வந்து சொல்றேன்…” என ஒப்புக் கொண்டாள்.

மக்கள் கூடியிருக்கும் இடத்துக்கு இருவரும் அழைத்துப் போனார்கள். மக்கள் முன்னால கல்யாணியோ உண்மையை சொன்னாள்.. “உன் சுயநலத்துக்கா இப்படி பண்ணுவியா…” என்றும், “உன் பேச்ச நம்பி நல்ல பையன தப்பா நனச்சிட்டோம…” “நீயெல்லாம் மனுசியா இந்த பொழப்பு பொழைக்கறது நாண்டுகிட்டு சாகலாம்…” “நல்ல பையனப்பா இப்படி அவன் மேல அபாண்டமா பழிய தூக்கி போட்டிருக்கா பாரேன்…”என்று எல்லோரும் சூர்யாவை புகழ்ந்தும் கல்யாணியை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். கல்யாணி முதலில் சொன்ன பொய்யை உண்மை என்று சூர்யாவை பேசின அதே வாய் தான் கல்யாணியை இப்பொழுது திட்டி தீர்த்தது. சூர்யாவையும் நிலாவையும் பாராட்டி விட்டுச் சென்றார்கள்.

கல்யாணியால் தனக்கு வந்த களங்கத்தை நிலாவைக் கொண்டு துடைத்துக் கொண்டான் சூர்யா. சூர்யா நிலாவிடம்,”ரொம்ப தேங்கஸ்… நீ வந்து சொல்லினா நா எப்படி இந்த உண்மய நிருப்பிப்பேன்… வா உன்ன கொண்டு போயி வீட்லய விட்டறேன்…”

அதற்கு நிலா,”தேங்கஸல்லாம் வேணாம்… உங்களோட இந்த கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணமாயிட்டேனு நனக்கும் போது கொஞ்சம் வருத்தமாயிருக்குது… நானே போயிக்குவேன்…” என்று சொல்லி விடைப் பெற்றாள்.

சூர்யாவும் சரியென சொல்லிவிட்டு அவன் பாதையில் விடைப் பெற்றான். நிலாவும் தலையாட்டிவிட்டு தன் பாதையில் கிளம்பினாள்.

எண்ணங்களும் வழிகளும் வெவ்வேறு…

தனித்தனி பாதைகளில் பிரிந்து செல்கின்றன…

இரண்டும் சேர்ந்து ஒரே பாதையில் பயணிக்குமா…

ஒரே கிளையில் ஒரே கூட்டில் வசிக்குமா…

சூர்யாவுக்கு நிலா ஞாபகமே இருந்தது. அவன் எண்ணம் முழுவதும் அவளாக இருக்கட்டும் தைரியமாக வந்து கல்யாணியை இரண்டு அறைக் கொடுத்து, மக்கள் முன்னால் உண்மையை ஒத்துக் கொள்ள வைத்து என் மானத்தைக் காப்பாற்றினாள் என புளங்காகிதம் அடைந்தான். இப்படியே சூர்யா நிலாவை நினைத்து நினைத்து, ஒரு கட்டத்தில் அவள் மேல் காதல் கொண்டான்.

நிலாவை ஒரு பொருட்காட்சிக்கு வரச் சொன்னான். இவனுக்கு முன்னால் வந்து நிலா வந்து இவனுக்காக காத்திருக்கலானாள். சூர்யா அவளிடம் காதலை சொல்ல கையில் ஒற்ற சிகப்பு ரோஜாவுடன் தைரியமாக கிளம்பிப் போனான். நிலாவை சந்தித்து தரையில் முட்டாங்கால் மடித்து அமர்ந்து சிகப்பு ரோஜாவை அவள் முன்னால் நீட்டி தன் காதலை சொன்னான்.

எதற்கு வரச் சொன்னான் என தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த நிலா தீடிர் என்று அவன் காதலைச் சொல்வான் எதிர்பார்க்காதமல் அதிர்ந்துவிட்டாள்.

“ஏய் நிலா… என் காதலை சொன்னதுக்கு எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?” கேட்டான்.

இவன் கேட்டதும், நிலா அதிர்ச்சி நீங்கியவளாக,”என்க்கு மூத்தவங்க இரண்டு பேரு இருங்காங்க… அது மட்டுமில்லாம நீங்க எங்க நா எங்க… உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சா கூட எட்டாது… இது நடக்க சாத்தியமேல்ல… உங்க காதல மறுக்கறதுக்கு என்னய மன்னிச்சுங்க…” என சொல்லி விட்டு வேகமாக நடந்தாள்.

சூர்யாவால் நிலாவை மறக்க நினைத்தாலும், அவள் நினைவு வந்து கொல்லாமல் கொல்லுகிறது. மனதில் வலியோடு திரும்பிய பக்கமெல்லாம் அவளாகவே தெரிய பித்துப் பிடித்தது போலானான். அவளை மறக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்தப் பிறகு நிலாவைப் பார்க்க இந்த தடவை அவள் வேலை செய்யும் இடத்திறகு கிளம்பிப் போனான்.

“நிலா எவ்வளவோ முயற்சித்தும் என்னால உன்னய மறக்க முடியல… ப்ளீஸ்… என் லவ்வ ஏத்துக்கோ…” என மன்றாடினான். நிலா இருந்தும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. சூர்யா சளைக்காமல் மீண்டும் மீண்டும் படையெடு்த்தான். அவன் படையெடுப்பைக் கண்டு மனம் இறங்கி ஒருவழியாக அவன் காதலை ஏற்றுக் கொண்டாள்.

சூர்யாவோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து,”யாஹீ…” என்று கத்தினான். நிலா மனம் கொள்ளாச் சிரிப்போடு பார்த்திருந்தாள்.

“நிஜமாகவே என் லவ்வுக்கு ஓகே சொல்லிட்டியா… என்னால நம்பவே முடியல…” மகிழ்ச்சியோடு ஆரவாரித்தான்.

அவன் ஆரவாரத்தை நிலா கண்கள் மின்னப் பார்த்திருந்தாள். தினம் தினம் ஏதாவது சாக்கு வைத்துக் கொண்டு சந்திக்கலானார்கள். அப்படியே இவர்கள் காதலும் வளர்ந்தது. இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் இருவீட்டாரும் முழு வீச்சில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சூர்யா வீட்டில் சொத்துக்கு ஆசைப்பட்டு உன் பின்னால் சுற்றுகிறாள் எனவும், நிலா வீட்டில் உனக்கு மூத்தவங்க இருக்கிறாங்கல்ல… அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்… அவங்க பெரிய இடம் நம்மகிட்ட எல்லாம் சம்மந்தம் பேசமாட்டாங்க… எனவும் மறுத்தார்கள்.

சூர்யா – நிலா இருவரும் எதிர்ப்பை மீறி சந்தித்துக் கொண்டனர். நிலாவுக்கு அவள் அம்மா,”சொல்ல கேட்காம அவன போயி பார்ப்பியா… போவியா… போவியா…” கூறி கூறியே… அடுப்பில் எரிந்துக் கொண்டிருந்த விறகுக் கட்டையை எடுத்து சூடு இழுத்தாள். நிலா சூட்டின் வலி தாங்காமல் கதறி கதறி அழுதாள்.

சூர்யா வீட்டில் அவன் தந்தை எங்கும் போககூடாது என சொல்லி அறையில் நாற்காலியில் கட்டி வைத்துப் பூட்டி வைத்தார். வேளாவேளைக்கு கதவை மட்டும் நீக்கி உணவுக் கொடுத்தார். சூர்யாவோ தினம் தினம் அவன் தந்தை இல்லாத போது கை கால்கட்டுகளை கழட்ட கொஞ்ச கொஞ்சமாக முயற்சி செய்தான்.அவன் தந்தை கதவை நீக்கும் ஓசை கேட்டால் ஒன்றும் அறியாத பிள்ளைப் போல இருந்துக் கொள்வான்.

ஒருநாள் வெற்றிக்கரமாக கட்டெல்லாம் அவிழ்த்துவிட்டு அவன் தந்தை வருகிற நேரத்துக்கு கையில் இரவுவிளக்கை எடுத்து கதவு மறைவில் அடிக்க காத்திருந்தான். வேணுகோபால் கதவைத் திறந்துக் கொண்டு வரவும், மண்டையில் இரவுவிளக்கில் ஓங்கி ஒருபோடுப் போட்டான். அவர் மயங்கி விழவும் அவரை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு தப்பித்து நிலா வீட்டிற்குச் சென்றான்.

பொழுது சாயும் நேரம் அந்த வீட்டில் நிலா அவள் அக்கா கோமதியைத் தவிர யாரும் இல்லை. நிலா காலில் தீக்காயத்துடன் அழுதுக் கொண்டிருந்தாள். அவளின் அக்கா கோமதி,”அழுகாதே… அழுதழுது கண்ணெல்லாம் வீங்கிப் போயிடுச்சு பாரு…” சமாதானப்படுத்தி் கொண்டிருந்தாள்.

சூர்யா நிலாவைக் கண்டதும் உணர்ச்சி பெருக்கில் கட்டியணைக்கப் போனான். கோமதி நாகரிகம் கருதி விலகிப் போனாள். அவள் கால் மேலே அவன் கால் பட்டதும் எரிச்சல் தாங்காமல் கத்தினான். அவள் கத்தவும்,”என்னாச்சு… கால்ல என்னாச்சு…” பதறியவாறே காலை இழுத்து பாவாடையை நீக்க முயற்சிச் செய்தான்.

“வேணாம்…” மறுத்து பாவாடையை கால்வழியை இழுத்துவிட்டுக் கொண்டாள். “காண்பிக்க போறியா… இல்லயா…” சண்டைப் பிடித்து பிடிவாதமாக பாவாடையை விலக்கிப் பார்த்தான். பார்த்தவுடன்,”ஐயோ… யாரு இப்படி கால்ல சூடு வச்சது…” பதறினான்.

அதற்கு நிலா அழுதவாறே,”எல்லாம் என் அம்மா தான்… உங்கள பார்க்ககூடாதுனு சொல்லி இப்படி சூடு வச்சிருச்சு…”

“என் வீட்லயும் எங்கப்பா எதிர்கறாரு… உன் வீட்லயும் உங்கம்மா எதிர்கறாங்க… பேசாமல் இரண்டு பேரும் சொல்லாம கொள்ளாம ஓடி போயி கண்ணாலம் பண்ணிக்கலாம்.”

நிலா அதற்கு சரியென தலையாட்டினாள். இருவரும் ஊரை விட்டு தப்பித்து ஓடினர்.

இருகிளிகளும் தங்கள் கூட்டை மறந்து…

சுகந்திரவானில் கை கோர்த்துப் பறந்தனர்.

18 – இத இதமாய் கொன்றாயடி Read More »

17 – இத இதமாய் கொன்றாயடி

17 – இத இதமாய் கொன்றாயடி

மின்சார ரயிலைப் போல் யாருக்கும் காத்திருக்காமல் நாட்கள் வெகுவிரைவாகச் சென்றது. தமிழும் வசந்தாவும் இப்பொழுது தான் மந்தாகினி வீட்டுக்கு வந்தது போல இருந்தது. அதற்குள் ஒருமாதம் சென்றுவிட்டது. மகிழுக்கு எட்டாம் மாதம் முடிந்து ஒன்பதாம் மாதம் தொடங்கியது.

மகிழோ இடுப்பில் ஒருகையைக் கொடுத்து வயிற்றை நிமிர்த்திக் கொண்டு நடந்தாள். தன்ராஜ் பற்றிய கவலை ஒருப்பக்கம் மனதை அரித்துக் கொண்டே இருந்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளி வாழ பழகிக் கொண்டாள். தமிழும் அவளை கவலையின்றி ஆசைப்பட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து சந்தோஷமாக வைத்துக் கொண்டான்.

ஒன்பதாம் மகவு வயிற்றிலிருக்க…

இடுப்பை தாங்கி நடந்தாள் மாது…

எக்கவலையின்றி மனதை லேசாக…

சோலைகிளிகளாக பாடி திரிந்து…

ஜோடியாக இருவரும் பறந்தனர்.

ஒருநாள் இரவில் எல்லாரும் உறங்கிய பின்பு வாசல் கதவு படபடவென்று தட்டும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் அனைவரும் விழித்துக் கொண்டனர்.

மந்தாகினி,“ஆருன்னு தெரியல… கதவ இப்படி ஒடைக்கறது…” என்று கதவைத் திறக்கப் போனாள்.

வேலாயுதம் அவளை தடுத்து நிறுத்தி,”இரு… நாங்க போயி பார்க்கறோம்…” என்றார்.

மாமனாரும் மருமகனும் ஆளுக்கொரு கட்டையை எடுத்துக் கொண்டுப் போய் கதவை நீக்கினர். ஒரு ஆணும் பெண்ணும் பயந்து திரும்பி திரும்பிப் பார்த்து கொண்டிருந்து நின்றிருந்தனர். இவர்கள் கையில் கட்டையைப் பார்த்ததும், ஏற்கனவே பயந்திருந்த அவர்கள் இருவரும் நடுங்கிப் போய் அலற ஆரம்பித்துவிட்டனர்.

அவர்களைப் பார்த்தும் ஏதோ அடைக்கலம் நாடி வந்திருக்கின்றார்கள் என்பது புரிந்துவிட்டது. உடனே கையில் இருந்த கட்டையை போட்டுவிட்டு யார் என்னவென்று விசாரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் இருவரும் வெளியூர் என தங்கள் கதையை சொல்ல ஆரம்பித்தனர்.

சூர்யா – நிலா இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தனர். சூர்யா பண்ணையார் வீட்டு பையன். எல்லா சொத்திற்கும் ஏகப்போக வாரிசு. ஆசைக்கும் அவன் தான் அஸ்திக்கும் அவன் தான். சூர்யா அப்பா வேணுகோபால் மீசையை முறுக்கி விட்டு தெருவில் இறங்கி நடந்தால் அவ்வளவு கம்பீரமாக இருக்கும். தாயார் மங்களம் பெயருக்கேற்றார் போலவே மங்களரமாக இருப்பார். இருவரும் ஜோடியாக நடந்தால் அந்த சிவனும் பார்வதியும் போல இருக்கிறார்கள்.

நிலா கீழ்ஜாதியில் மூன்றாவதாக பிறந்த ஏழைப் பெண். தந்தை முத்துவோ மொடா குடிகாரன். மூச்சு முட்ட குடித்துவிட்டு தெருவில் விழுந்துகிடப்பவன். தாய் அலமேலு கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் பிழைப்பை நடத்துபவள். இவளுக்கு இருமூத்த சகோதரிகள் இன்னும் திருமணமாகவில்லை. இவர்களுக்கு திருமணமாகல் இருப்பதற்கு வசதி குறைவு என்பது மட்டுமில்லாமல் அழகில் படு சுமார் தான். நிலா அந்த மாதிரியல்லாமல் எதுயெது எங்கெங்கு இருக்குமோ அதுயது அந்தயந்த இடத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருந்தது. மொத்தத்தில் வெகு அழகாக இருந்தாள். இந்த அழகு தான் சூர்யாவை அடித்து வீழ்த்தியது.

அலமேலு பருப்பு டப்பாவை தூழாவிக் கொண்டே,”இங்க தான் அம்பது ரூவா வச்சேன் காணோமே. ஒருவேள அந்த குடிகாரப்பயல் எடுத்துகீனு போயி குடித்து ஏப்பம் விட்டானோ… என்னவோ… இவன நம்பி காசை ஒரு இடத்தில வக்கமுடியாது என்ன…” புலம்பிக் கொண்டே இருந்தார்.

நிலா,”என்னமா… புலம்பிகிட்டே இருக்கே…”

“என்னத்த… சொல்றது… டப்பாவுல ரூவா காணலியே… அந்த குடிகாரபய தான் குடிக்க எடுத்திருக்கணும்… அததான் சொல்லிகிட்டு இருந்தே…”

“ஏம்மா… ரூவா காணோமனா… அத அப்பா தான் எடுத்ததா…”

“வாடியம்மா… வாடி என் புருச பெத்த சீமந்தபுத்திரி… என்னடா இன்னும் சப்போர்ட்டுகு வரலியேனு நனச்சேன்…வந்துட்டியா…”

“ஏம்மா… இந்த வூட்ல எது நடந்தாலும் அதுக்கு அப்பா தான் காரணமா…” சண்டைக்கு வந்தாள்.

அதற்கு அலமேலு,“அப்ப அந்த அம்பது ரூவா எங்க போச்சு…” கேட்டார்.

அப்பொழுது அங்கே வந்தாள் இளைய சகோதரி மீனா,”ஏம்மா… எனக்கு இந்த கண்ணாடி வளையல் அழகா இருக்குல்ல…” என கைகளை ஆட்டிக் கொண்டு சொன்னாள்.

“வளையல் வாங்க உனக்கு ஏதுடி காசு…” அலமேலு கேட்டார்.

“அதான் நீ பருப்புடப்பாவுல வச்சிருந்தில…” எப்பொழுதும் அலங்காரம் பண்ணிக் கொள்வதில் ஆர்வம் உள்ள மீனா சொன்னாள்.

“அடிப்பாவி… நீ தான் எடுத்தியா… நாங்கூட உன் அப்பா தான எடுத்திட்டாரோனு தப்பா நனச்சிட்டேன்.”

இந்த சம்பாஷனைக் கேட்டிருந்த நிலா இருவரையும் தீப்பார்வை பார்த்தாள்.

“என்ன முறைக்கறே… ஒருநிமிசம் உங்கப்பாவ தப்பா நனச்சிட்டே…” அசட்டையாக சொன்னார்.

“ஒருநிமிசம் அப்பா மேல பழி போட்டுட்டே… அவர் குடிகார் தான் இல்லனு சொல்லல்ல… அதெல்லாம் காச திருடிகிட்டு போயி குடிக்கற ஜென்மமில்ல தெரிஞ்சிக்கோ…” தாயை திட்டிவிட்டு, தன் தமக்கையும் முறைத்து விட்டுச் சென்றாள்.

“என்ன இப்படி முறச்சிட்டு போறா… என்னவோ இவ காச சொல்லாம கொள்ளாம எடுத்துகிட்டு போயி வளையல் வாங்கிட்ட மாதிரியில்ல பேசாற…” என நொடித்தாள்.

“எடிப்பட்ட நாயே! ரேஷன் வாங்க வச்சிருந்த காச எடுத்திட்டு போயி அப்படி அந்த வளையல் வாங்கி போட்டு மினுக்கிட்டு ஆரை மயக்குப்பாக்கற…” அலமேலு எரிந்து விழுந்தார்.

“தங்கவளையலா போட்டுகிட்டேனு கண்ணாடி வளையல் தான். அந்த வளையலுக்கு மயங்கி எவனாவது பொண்ணு கேட்டு வந்திட்டாலும்… அப்படியே நீ கட்டி கொடுத்துருவ பாரு” என நொடித்தாள்.

“மூத்தவ இருக்கும் போது உனக்கு என்ன அவசரம்…”

“மூத்தவளுக்கு நீ எப்ப கண்ணாலம் பண்ணி எனக்கு எப்ப கண்ணாலம் பண்ணறது… நா பார்த்து எவனயாவது இழுத்திட்டு போயி கண்ணாலம் கட்டிகிட்டாவது உண்டு…”

“அடிசெருப்பால… மூத்தவ இருக்கிற இடம் தெரியாம இருக்கா… உனக்கு இ்ப்பவேயா புருச சுகம் கேக்குதா…” சீவகட்டையை எடுத்துக் கொண்டு அடிக்க வந்தார்.

“ஆடியாத்தி… கைல கிடைச்சா அக்கு வேறா ஆணி வேறா பிச்சுப்பிடுவா…” சொல்லி முதலளாய் ஓடியேவிட்டாள்.

“ஓடியாற ஓடு… எங்க போயிடுவ இராவுக்கு இங்க தான கொட்டிக்கற வருவ… அப்ப உன்ன ஒரு கை பார்த்துக்கிடேன்…” கையில் இருந்த சீவக்கட்டையை தூக்கி வீசினார்.

முறைச்சிகிட்டு போன நிலா ஒருபூங்காவில் அங்கிருந்த காலி இருக்கையில் அமர்ந்தாள். சற்று தூரத்தில் ஒருபெண் எதிரில் நின்றிருந்த ஆணிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த ஆணோ அவளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்ததும் நிலா அந்த ஆணை தவறாக நினைத்துக் கொண்டாள்.

அந்த ஆணோ வசதியான வீட்டு பையன் மாதிரி இருந்தான். அந்த பெண்ணோ சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவள் மாதிரி இருந்தாள். அந்த பெண் சண்டை போட்டத்தைப் பார்த்தால் அந்த பெண்ணை காதலித்து ஏமாற்றியது போல நினைத்துக் கொண்டாள்.

ஏற்கனவே கோபமாக இருந்த நிலா அந்த நினைப்பிலேயே போய் அந்த ஆணின் சட்டையைப் பிடித்து,”ஏய் மிஸ்டர்… இந்த பொண்ணிடம் வம்பு பண்ணிகிட்டு இருக்கறியா…” ஓர் அறைவிட்டாள்.

என்ன ஏதுனு கேட்டகாமல் தீடிரென்று ஒருபெண் தன்னை அறையவும் அதிர்ந்துப் போய் நின்றான். நிலா அந்த பெண்ணிடம்,”காதலித்து உன்னய ஏமாற்றிவிட்டானா சொல்லும்மா… இவனயெல்லாம் போலீஸ்ல புடிச்சுக் கொடுத்து முட்டிமுட்டி தட்டினால் தான் இந்த மாதிரி ஆளயெல்லாம் அடங்குவாங்க…”

உடனே அந்த பெண்ணோ,”ஆமாம்கா… என்னய காதலித்து ஏமாற்றிவிட்டு விட்டுட்டு ஓடி போக பார்க்கிறாரு… “ என்று கல்யாணி சொன்னாள்.

“இல்லல்ல… அவ பொய் சொல்றா… அவ பேச்ச கேட்காதே…” என பதட்டத்துடன் சொன்னான். அந்த ஆணின் பெயரோ சூர்யா.

நிலா,“எந்த பொண்ணாவது இந்த விசயத்தில் பொய் சொல்வளா? யார நம்ப சொல்ற…” என்று கேட்டாள்.

“சத்தியமா நா சொல்றதா உண்மை… அவ பேச்ச கேட்காதே… ஏமாற்றுக்காரி” என்றான் சூர்யா.

கல்யாணிக்கு யாரும் இல்லாததால்,எப்படியாவது கல்யாணம் நடந்தால் போதும் என்ற நிலையில் அவள் இருந்ததால்,”நா ஒரு அநாதைகா… ஒரு விடுதி ஒரு டிபார்மெண்ட் ஸ்டோரில வேல செய்றேனு… இவர் அங்க சாமானம் வாங்க வரும் போது பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கமே நாளடைவில் காதலாக மாறி போச்சுகா… அப்போதெல்லாம் தோன்றாத விசயம் கண்ணாலத்துக்கு கேட்கும் போது நீ ஒரு அநாதை. அதனால உன்ன கண்ணாலம் பண்ணிக்க முடியாதுனு சொல்றாரு… நா என்ன பண்ணுவே…” என்று அழுதாள்.

“நா இவள் வேல செய்ற கடைக்கு எப்பவும் போறது தான். இவள அங்க பார்த்திருக்கேன். ஒன்றிரண்டு தடவ பேசியிருக்கேன். இவ சொல்ற மாதிரியெல்லாம் காதலித்து கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லவேயில்ல…”

உடனே கல்யாணியோ மீண்டும் அழுதுக் கொண்டே,”ஐயோ… இல்லக்கா நா அப்படிப்பட்ட பொண்ணுல்ல… எனக்கு இவர்கிட்ட பேசி நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுகா” என்றாள்.

ஆராய்ந்துப் பார்க்காமலே சூர்யா தவறானவன் என்ற முடிவுக்கு வந்தாள் நிலா. அந்த முடிவுடன்,”அது சரி… அப்படினா அவள நீ கண்ணாலம் பண்ணிக் கொள்வது தான் முறை. இருவர் வூட்லயும் பேசி நா கண்ணாலத்துக்கு ஏற்பாடு பண்ணறேன். சரி இருவர் வூட்டு அட்ரஸயும் கொடுங்க…” என்றாள்.

சூர்யா தன்னைப் பற்றி இந்த பொண்ணு இல்லாதையும் பொல்லாதையும் சொல்லி குட்டையை குழம்பிவிடுவாள் என நினைத்து முகவரியை கொடுக்க தயங்கினான். கல்யாணியோ இவனை ஏமாற்றின மாதிரி இவன் குடும்பத்தையும் ஏமாற்றி உள்ளே நுழைந்துவிட்டாள் அந்த வீட்டில் உள்ள கிழம்கட்டைகளை ஆட்டிப் படைக்கலாம் என நினைத்தாள். அவள் நினைப்பை சரியாக புரிந்துக் கொண்ட சூர்யா கல்யாணி முன்பு நிலாவிற்கு வீட்டு முகவரியை சொல்ல மறுத்துவிட்டான். சூர்யா முகவரி சொல்லாததால் நிலா அவன் மீது தவறு இருப்பதாக என புரிந்துக் கொண்டாள்.

எனவே நிலா சூர்யாவை,”ஏய் மிஸ்டர்… ஒழுங்கு மரியாதகாக அட்ரஸ் சொல்லிடு… இல்லனா இங்க இருங்கறவங்கள கூப்பிட்டு உன் மானத்த வாங்கிடுவேன்…” மிரட்டினாள்.

கூட்டம் கூடிவிட்டால் எல்லாரும் அவள் ஒருபெண் என்பதால் கண்மூடித்தனமாக கல்யாணிக்கு தான் ஆதரவாக பேசுவார்கள். தனக்கு யாரும் ஆதரவாக பேசமாட்டார்கள் என்ற உண்மையை புரிந்துக் கொண்டு,”அப்பா பேருவேணுகோபால், நம்பர் மூணு, அழகர் கோவில் தெரு, திருநெல்வேலி.” என முகவரியைச் சொன்னான்.

அடுத்தநாள் நிலா கல்யாணியை அழைத்துக் கொண்டு சூர்யா வீட்டிற்கு வந்தாள். நிலா வரும் போது வீட்டில் அவனுடைய தந்தை இருந்தார். நிலா அவன் தந்தையிடம்,”உங்க மகன் வூட்ல இல்லயா…”

“வீட்ல தான் இருக்கான். அவனய ஏன் கேட்குற…”

“இல்ல… அது வந்து உங்க மகன் சூர்யா இந்த பொண்ணய காதலிச்சு கண்ணாலம் பண்ணிக்கறேனு சொல்லிவிட்டு, இப்ப முடியாதுன ஏமாத்திட்டு போக பார்க்கிறான்.” என அருகில் இருந்த கல்யாணியை காண்பித்து சொன்னாள்.

இதற்கு நடுவில் அவன் தாயார் இடையிட்டு,“எம் மகன் பத்தரமாட்டு தங்கம்… அவன் மேல வீணா பழி போடாதே…” கூறினாள்.

இதையெல்லாம் கேட்டு கல்யாணியோ நீலிக்கண்ணீர் வடித்தாள். உடனே அவன் தாயார்,”சூர்யா… சூர்யா…” என அழைத்தார்.

சூர்யா,”என்னம்மா…” என்றவாறு வந்தான். இவர்களைப் பார்த்ததும் ,”இவங்கள இங்க யாரு வர சொன்னது…”என்றான்.

“ஏன் நாங்க வரது உனக்கு தெரியாதா… நீ தான் எங்கள வர சொல்லி உன் வூட்டு அட்ரஸ் கொடுத்தா… ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கற…”

“நீ என்னய மிரட்டி கேட்டதால அட்ரஸ கொடுத்தேன். நீ சொல்ற மாதிரி நா ஒன்னும் இவள காதலிச்சு ஏமாத்தல… இவள் சொல்றதெல்லாம் நம்பாதே…”

இதையெல்லாம் கேட்டு கல்யாணியோ நீலிக்கண்ணீர் வடித்தாள்

யார் சொல்வது உண்மை என புரிந்துக் கொள்வாளா…

17 – இத இதமாய் கொன்றாயடி Read More »

16 இத இதமாய் கொன்றாயடி

16 – இத இதமாய் கொன்றாயடி

மகிழ் இருவரையும் பார்த்ததும் சந்தோஷப்பட்டாள். அதிலும் தமிழைக் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சிக் கொண்டாள்.

ஒரே இராவில் பிரிந்ததை பொறுக்காமல்

யுக யகமாய தன் இணையை பிரிந்ததைப் போல

பிரிவு துயர் வாட்டி வதைக்க ஏக்கம் கொண்டு

துரும்பாய் வாடினாள் பேதை…

என்பதைப் போல மிகவும் சோர்ந்து களையிழந்துப் போனாள். ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டதுப் போல தமிழைப் பார்த்ததும் உற்சாகமானாள். அந்த உற்சாகத்தில் என்ன செய்யவது என்று தலைகால புரியவில்லை. வயிற்றில் மகவை வைத்துக் கொண்டு ஓடிப் போய் தன் தாயைத் தேடிப் போனாள்.

சமையல்அறையில் மகிழுக்கு கருப்பட்டி காபி காய்ச்சிக் கொண்டிருந்த மந்தாகினி,”வயித்துல புள்ளய வச்சுகிட்டு எதுக்கு இப்படி ஓடி வரவ…” கேட்டார்.

அவர் சொன்னதை எல்லாம் கவனிக்காமல் மகிழ்,”ம்மா… அவங்கெல்லாம் வந்துட்டாங்க…”

“எவங்கெல்லாம்…” என்று கேட்டு முடிப்பதற்குள் அவரைத் தேடி வந்த வசந்தா,”நாங்க தான் மதனி… பொண்ண அனுப்பி வச்சுட்டு பொறத்தால வந்துட்டாங்கனு தப்பா எடுத்துக்காதிங்க…” என்றார்.

“ச்சேச்சே… நா அப்படிலாம் நனக்கல… உங்க மருமகள பார்க்க நீங்க வந்துருகிறிங்க…” என்றார்.

வசந்தா,”எம் மருமகள பார்த்துட்டு அம்மா வேறயா புள்ள வேறாயானுதுக்கு அப்புறம் போலாம்னு இருக்கோம்… அதுவரைக்கும் இங்கய தங்கிட்டலாம்னு இருக்கோம்…” தயங்கி தயங்கி தான் சொன்னார்.

ஏற்கனவே சொல்லாமல் கொள்ளாமல் என்ன இப்படி வந்துட்டோம் என குற்றவுணர்ச்சியில் இருந்தார். மகன் சம்மந்தி வீட்டுக்கு எப்ப வேணாம் வரலாம் எத்தன நாள் வேணாம் தங்கலாம்… நா பொண்ண கட்டின சம்மந்தி அப்படி தங்கமுடியுமா… என குற்றவுணர்ச்சியில் தவித்துப் போயிருந்தார்.

அந்த கவலை உம்மக்கு வேண்டாம் எனும் சொல்லும் விதமாக அவர் கரங்களை அழுத்திக் கொடுத்து,“நா ஒருத்தி என்ன பண்ணுவேனு ரொம்ப கவலப்பட்டேன்… நீங்களும் ஒத்தாசக்கு கூட இருந்தா புண்ணியாம போகும்…” என்று ஆறுதலுடன் சொன்னார்.

“அதுக்கு தான் நா வந்துருக்கேன்…” குற்றவுணர்ச்சி நீங்கியவராக உற்சாகத்துடன் பதிலளித்தார்.

அதற்குள் தமிழைத் தேடி மகிழ் போனாள். தமிழ் ஏதோ யோசித்தவாறே கவலையுடன் முற்றத்தில் உட்காரந்திருந்தான்.

“என்ன மாமோய் ரோசன… என்னனு சொன்னால் நா கொஞ்ச கவலப்படுவேனுல…” என சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“இல்ல அம்மு… நானும் அம்மாவும் திடுதிப்புனு வந்துட்டோம்ல… அதான் உம்ம குடும்பம் என்ன நனக்குமோ… ஏது நனக்குமோனு கவலப்பட்டேனு..”

அதற்கு மகிழ் பதில் சொல்லும் முன் அங்கு சிரித்துக் கொண்டே இருசம்மந்திகள் வந்தனர்.

“ஏலே… உம்ம அறைக்கு போயி உடுப்ப மாத்திகிட்டு வா…” வசந்தா சொன்னார்.

தாயின் முகத்தைப பாரத்தான். அதில் இம்மியளவுக்கு கூட வருத்தம் இல்லை மாறாக அம்முகத்தில் சந்தோஷம் தான் இருந்தது. அவனுக்குத் தெரியும் ஏதோ ஒருவேகத்தில் கிளம்பி வந்துட்டார்களோ தவிர இவர்களைப் பார்த்ததும் மகிழைப் பற்றி கவலையில்லை மற்றவர்கள் எப்படி நடத்துவாரகள் என தெரியவில்லை. இப்பொழுது தாயின் முகத்தைப் பார்த்ததும் இப்பொழுது தான் நிம்மதியானான்.

தாய் சொன்னபடியே அறைக்கு போய் துணியை மாற்றிக் கொண்டு வந்தான். அன்று உள்ளூரில் கருப்பசாமிக்கு திருவிழானு விடுமுறை. ஆதாலால் தமிழும் வயலுக்கு போகவில்லை. அங்கே கடாவெட்டி பொங்கல் வைப்பதலால் ஊர்ஜனங்களும் மொத்தமும் கூடியிருந்தனர்.

மகிழ் திருவிழாவுக்கு போக ஆசைப்பட்டு தன் கணவனிடம் அதை வாய் விட்டு கேட்கவும் செய்தாள்.

“இல்ல அம்மு… அங்க போனால் இருக்கும் நிம்மதியும் கெட்டு போயிடும்…”

“இல்லப்பா… போகனும் ரொம்ப ஆசையாயிருக்கு… அதான் போகலாம்னு உம்மை கூப்பிடறேன்.”

“சொன்னா கேளு… அங்கயெல்லாம் வேணாம்”

“மாமு” என சிணுங்கிக் கொண்டே,”எவ்வளவு நேரம் தான் இங்கனய அடைஞ்சு கிடக்குது… எமக்கும் பொழுது போகனும்ல…” கூறினாள்.

அவள் சிணுங்கியவாறு சொல்லவும் வேறுவழியின்றி திருவிழாவுக்கு அழைத்துச் சென்றான். ஊர்மக்கள் இவர்களைப் பார்த்தும் தங்களுக்குள் அவதூறு பேசிக் கொண்டனர்.

“இதற்குதான் இங்கயெல்லாம் வர வேணாம்னு சொன்னேன் கேட்டியா…”

“வந்ததும் வந்துட்டோம்… ஒருஓரமாக நின்னு பாத்துட்டு போலாமே…”

அவள் ஆசைப்பட்டால் அதனால் வந்திருக்கிறோம். அவள் ஆசையை கெடுக்க மாதிரி பேசி வைக்ககூடாது என நினைத்து அமைதிக் காத்தான். மகிழ் சிறிது நேரம் இதெல்லாம் கவனிக்கவே இல்லை.

“மாமு… அந்த ரங்கராட்டினம் எப்படி அழகாக சுத்துது பாரு…”

அதற்கும் தமிழ் பதில் சொல்லவே இல்லை.

“மாமு… பெரியகருப்பன் வீட்டு கடா எப்படி துளுக்குது பாரு…”

அதற்கும் தமிழ் மௌனம் சாதித்தான்.

“மாமு… எமக்கு அந்த பலூன் எமக்கு வேணும்… வாங்கி தருறிங்களா…” கேட்டாள்.

அதற்கும் தமிழ் ஒன்றும் பேசவே இல்லை. அப்பொழுது தான் தான் கேட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லவே இல்லை.

“மாமா… நா கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லவேயில்ல… எம் மேல ஏதாவது கோபமா…” என பதறிப் போய் கேட்டாள்.

“அம்மு… வீணா பதறாதே… உம் மேல எமக்கு என்ன கோபம்… ரிலாக்ஸா இரு…”

“கோபமில்லினா… நீ ஏன் அமைதியா இருந்திங்க…”

“அதுவா எமக்கு எல்லாவற்றையும் விட உம் சந்தோஷம் தான் பெரிசு… அதான் அமைதியா இருந்தேன்.”

“ஓஹோ… அப்படியா… அப்ப வாங்க நாம போகலாம்…”

“எமக்கு ஒன்னுமில்ல… நீ வேணா இன்னும் கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்திட்டு வா…” என்றான்.

“ம்கூம்… உமக்கு சந்தோஷம் தராது… எதுவும் எமக்கு வேணாம்…”சொல்லிவிட்டாள்.

தமிழும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால் மகிழ் தான் கேட்கும் நிலையில் இல்லை. “எம்மால முடியாது… நா போறேன் நீங்க வரிங்களா இல்லயா…” மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பிடிவாதமாக நிற்காமல் சென்றாள்.

“அம்மு… எதுக்கு நிலம் அதிர நடக்குறே… எப்படி மூச்சு வாங்குது பாரு…” பின்னாடியே கிட்டத்தட்ட ஓடி வந்தான்.

அதை சொன்னபிறகு மகிழ் தன் வேகத்தை குறைத்து அவன் வந்து சேரும் வரை மெதுவாக நடந்து, பிறகு அவன் கூட சேர்ந்து நடக்கலானாள்.

இவர்கள் திருவிழாவுக்கு போன பின்னால் மந்தாகினி,”இவளை எப்படி தான் வச்சுகிட்டு இருந்திங்களோ… எம்மாலே ஒரு இராவுக்கு சமாளிக்கமுடியல…” சலித்துக் கொண்டாள்.

“அங்கெல்லாம் அப்படி இருக்கமாட்டாளே… அவ உண்டு அவ வேலயுண்டு தான் இருப்பா…” வசந்தா கூறவும், அதுக்கு மந்தாகினியோ,”ஓ… இங்க தான் இப்படி பண்றாளோ…” மீண்டும் சலிப்புடன் சொன்னார்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டே இருக்கும் போதே தமிழும் மகிழும் வந்து சேர்ந்தார்கள். மகிழ் முகத்தைப் பார்த்து வசந்தா,”மகிழ் ஏன்டா கோபமாயிருக்கறே…”

அதற்கு தமிழை முறைத்துப் பார்த்தாள். பதிலுக்கு தமிழும் முறைத்தான்.

வசந்தா,”நா பாட்டுக்கு கேட்டு இருக்கேன்… நீங்க இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருக்கறிங்க…”

அதற்கு தமிழ் பதில் சொல்லும் முன்பே அவனுக்கு இடையில் புகுந்து மந்தாகினி,”அவரு வேணா சொன்னாரு… இவ தான் அடமா கூட்டி போவணும் அழிச்சாட்டியம் பண்ணினா… அங்க போயி என்ன அட்டகாசம் பண்ணினா…” என்றார்.

அதைக் கேட்டதும் மகிழுக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. “ம்மா… சும்மா எம்ம குத்தம் சொல்லாதே… முதல்ல அவரு என்ன பண்ணினாரு கேளு…” பட படவென பட்டாசாய் வெடித்தாள்.

தமிழோ,”அங்கிருவங்க எல்லாம் இவள ஒரு மாதிரி பேசினாங்க… அத கேட்டு எம்மால சும்மா இருக்க முடியல… அதான் வீட்டுக்கு போலாம்னு வானு கூப்பிட்டேன்… இதுக்கு போய கோவிச்சுகிட்டா… நா என்ன பண்ண…” என இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் கோள் சொல்லிக் கொண்டனர்.

மந்தாகினி,“ஐய்யய்ய… எதுக்கு இப்படி சின்னபுள்ளயாட்டம் சண்ட போட்டுகறிங்க…” என்றார்.

“ஆமாம் இவங்க ரெண்டு பேரும் சண்டய பார்த்தா எமக்கு சிரிப்பா வருது…” சிரித்துக் கொண்டே வசந்தா சொன்னார்.

தமிழும் மகிழும் முகத்தை ஆளுக்கு ஒருபக்கம் திருப்பிக் கொண்டு சண்டக்கோழியாக நின்றனர்.

இதற்கும் சம்மந்திகள் இருவரும் ஏதோ பெரிய ஜோக் கேட்டது போல கொல்லென்று சிரித்தனர். இருவரும் சிரித்துக் கொண்டு இருக்கும் போதே வேலாயுதம் வந்துவிட்டார். உடனே தமிழ் எழுந்து நின்றான்.

“வாங்க… எப்ப வந்திங்க… முதல்ல நீங்க உட்காருங்க…” என்றுக் கேட்டார். அவர் சொன்னதும் தமிழ் அமர்ந்துக் கொண்டான.

“காலயிலே வந்துட்டோமண்ணா…” என சிரித்துக் கொண்டே சொன்னார்.

“என்ன விஷயம் சொன்னால் நானும் கூட சேர்ந்து சிரிப்பேன்…” என்றார்.

மந்தாகினியோ,“அதுவா மகளும் மருமகனும் இந்நேரமுட்டும் சிறு புள்ளயாட்டம் சண்ட போட்டகிட்டாங்க… அதுக்கு நாங்க சிரித்தோம்…”

தமிழ் மட்டும் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டான். அப்படியே தான் மகிழ் முகத்தை தூக்கி வைத்திருந்தாள்.

வேலாயுதம் என்ன சண்டை எனக் கேட்டுவிட்டு, அவரும் கொல்லென்று சிரித்துவிட்டார். உடனே மகிழ் கொவித்துக் கொண்டு விறுவிறுவென அதன் அறைக்குச் சென்றாள். பின்னாலயே சமாதானம் செய்ய தமிழும் சென்றான்.

“ என்ன உம்ம அப்பாருகிட்ட சின்ன புள்ளயாட்டம் கோவிச்சுகிட்டு வந்துட்டா…”

“எல்லாரும் சொல்கிறார்கள்… நீங்களுமா…” எனக் கேட்டாள்.

“தப்பு தான்… எம்மை மன்னிச்சுக்கோ…” என்றான் சிரித்துக் கொண்டே…

“ஆஹாங்… உம்மை மன்னிச்சுட்டாலும் விளங்கிடும்…” என்றாள் மகிழ்.

அதற்கு தமிழ்,”என்ன விளங்கிடும்… எமக்கு புரியல…”

“புரியாதவங்களுக்கு சொல்லி புரியவைக்கலாம்… புரியாத மாதிரி நடிக்கறவங்களுக்கு என்னத்த புரிய வைக்க…” என இழுத்தாள்.

கண்களில் குறும்பு மின்ன,”நானு புரியவைக்கறேன்…” சொன்னான்.

அவளும்,”என்னத்த… எமக்கு சத்தியமா ஒன்னும் புரியல…” வெள்ளந்தியாக சொன்னாள்.

“பொறு… அதுக்கு நா வந்திருக்கேன்…” என சொல்லி பக்கத்தில் வந்து இடையில் கிள்ளினான்.

பக்கத்தில் வந்து தீடிரென இடுப்பை கிள்ளுவான் என எதிர்பார்க்காதவள் அதிர்ந்து வாயை பிளந்து போய் நின்றுவிட்டாள்.

பிளந்திருந்த வாய் இவனை வா என்று அழைப்பது போல இருக்கவும் தன் வாயைக் கொண்டு அவள் வாயை மூடினான். இவன் மூடவும் மேலும் விக்கித்துப் போய் கண்களை இறுக்க மூடினாள். அது இவனை மேலும் முன்னேறச் சொல்லித் தூண்டியது.

இடையை பற்றியிருந்த கைகள் பஞ்சுப் பொதிகளைப் பற்றியது. உடனே மூடியிருந்த கண்கள் இரண்டும் அதிர்ந்து கண்கள் விரித்துக் கொண்டன. இவன் எப்பொழுது தொட்டாலும் புதிதாக தொட்டது போல் இருக்கவும் மயங்கினாள்.

மயங்கிய மாதுவை எளிதாக இவன் செயலுக்கு ஆட்டுவித்தான். இவளும் அவன் எண்ணம் போல ஆடினாள். மாலைப் போய் இருள் கவிழ்ந்த பின்னர் தான் இருவரும் கூடி களித்துப் பிரிந்தனர்.

நாயகன் இடையை தொட்டவுன்…

நாயகி அதிர்ந்து கண்களை விரித்தாள்.

நாயகன் வாயை வாயால் மூடவும்…

நாயகி விக்கித்து கண்களை இறுக்கினாள்.

நாயகன் கைகள் மேடுபள்ளங்கள் அளக்க…

நாயகி மீ்ண்டும் கண்களை விரித்தாள்.

நாயகன் தன்வசம் போல ஆடும் ஆட்டத்துக்கு…

நாயகி நூல் கொண்டு ஆட்டி வைக்கும் பொம்மையானாள்.

16 இத இதமாய் கொன்றாயடி Read More »

15 – இத இதமாய் கொன்றாயடி

15 – இத இதமாய் கொன்றாயடி

சாந்தம்மா வீட்டுக்கு வசந்தா வீறுக் கொண்டு சண்டைக்குச் சென்றார். சாந்தம்மா அப்பொழுது தான் கோவில் இருந்து வாசல்கதவைத் திறந்துக் கொண்டிருந்தாள். தனக்கு முன்னால் மூச்சு வாங்க வந்து நின்ற வசந்தாவைப் பார்த்ததும், தமிழ் சொல்லித் தான் சண்டைப் போட வந்திருக்கிறார் என புரிந்துக் கொண்டாள்.

வசந்தாவை கண்டுக் கொள்ளாமல் பூட்டைத் திறந்துக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்ததும் வசந்தாவிற்கு கோபம் சுரீரென்று உச்சிக்கு ஏறியது.

“ஏய் நில்லு…”என வசந்தா சத்தமிட்டார். அங்கு ஒருத்திக் கத்தி இருப்பதை கண்டும் காணாமல் உள்ளே போய் கதவைச் சாற்றிக் கொள்ள முற்றப் பெற்றாள்.

“ஏய்… நா ஒருத்தி கத்திகிட்டு இருக்கேன்… நீ என்னடான ஆருக்கோ வந்த விருந்தோ எம்ம சட்டைய செய்யாமல் உள்ள போயி கதவ பூட்டிக்கற பார்க்கறா…”

“வாடிம்மா… வாடி… உம்ம கண்டுக்காம விட்டுட்டா ஒழுங்கா போயிடுவனு பார்த்தா… நீ வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்ட போடவேனு வந்திருக்க போலிருக்குது…” எகத்தாளமாக சொன்னாள்.

“ஏண்டி… எம்மருகள பார்த்து என்ன சொன்னய…” வசந்தா எகிறிக் கொண்டுப் போனார்.

“ஊருல உலகத்துல பேசதா… நா பேசிப்புட்ட… என்னமோ எம்மகிட்ட சண்டக்கு வரா…” என வியாக்கினம் பேசினார்.

அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் இவர்களைச் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர்.

“ம்மா… கோவில்ல அத்தன பேரும் சும்மா வேடிக்கை பார்த்தனர். நீ தான் பேசின… உம்மகிட்ட சண்டக்கு வராம… என்ன செய்ய…”

“உம்மருக மேல தப்பு இருக்குது… அத சொன்னதுக்கு எம்மகிட்ட மல்லு கட்டற…”

“எம்மருமக தான் தப்பு பண்ணினாங்கறதுகு என்ன சாட்சி…”

“இதுக்கெல்லாம் சாட்சி வச்சுகிட்டய ஆராவது தப்பு பண்ணுவாங்க… எல்லாம் காதும் காதும் வச்ச மாதிரி நடக்கும் ஆரு என்னத்த கண்டா…”

“ நா அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லனு சொல்றே… ஆரும் நம்பமாட்டறிங்களா… எம்மருமகள தப்பா பேசின வாய் புழுத்து போயிடும்…” என ஊர்ஜனங்களப் பார்த்து மண்ணை வாரி இறைத்துச் சாபமிட்டு விட்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வீடு திரும்பினார்.

அவரைப் பார்த்ததும் தமிழ்,”வேகமாக போனிங்யே என்னாச்சு…” கேட்டான்.

“என்னத்த சொல்றது… நா எது சொன்னாலும் நம்பமாட்டறிங்களே…”

அதைக் கேட்டதும் மகிழ் தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதாள். அவள் அழுவதைப் பார்த்ததும் தமிழ்,”உம்ம வயித்துல வளர்த்து ஆரு கொழந்தைனு உமக்கும் எமக்கும் தெரியும்… ஆருக்கும் உண்மய விளக்கவேணாம் புரிஞ்சுதா…”

அப்பொழுதும் அவள் அழுகை நின்றபாடில்லை.

“ஊரு உலகம் சொன்னா அத பிடிச்சுகிட்டு ஜனங்க நம்புவாங்க… உண்ம தெரிஞ்சா நமக்கு தெரியாதா…”

மகிழுக்கு அழுகைக் குறைந்திருந்தது. ஆனால் தேம்பியவாறே,”நாம என்ன சொன்னாலும் நம்பமாட்டறிங்களே…”

“நம்ப வேணாம்… கொழந்த பொறந்தா உண்ம தெரிஞ்சிட போவது…” கூறி அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டு ஆறுதல் கூறினான்.

வசந்தாவும் தமிழ் சொன்னதைக் கேட்டு கொழந்த பொறந்தா சரியாகிடும்… என ஆறுதலானார்.

அப்போதைக்கு மகிழ் ஆறுதல் ஆனாலும் குழந்தை தமிழ் ஜாடையில் பிறந்துவிட்டா சரி… மாறாக மகிழ் ஜாடையில் பிறந்துவிட்டால் என்ன செய்வது என உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நடமாடிக் கொண்டிருந்தாள்.

வசந்தாவும் மகிழும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. தமிழ் ஒன்று தான் பகலில் வயலுக்கும் சாயங்காலம் உரக்கடைக்கும் போய் வருவான். தேவையில்லாமல் யார்கிட்டயும் பேசவேமாட்டான்.

அப்படி ஒருநாள் கடையில் இருக்கும் போது சதீஸ்,”ஏன்ண்ணா நீங்க முதல்ல மாதிரி கலகலப்பா பேசறத இல்லயே என்னாச்சு…” கேட்டான்.

அதற்கும் தமிழ் மௌனமாகவே இருந்தான். “உங்களுக்கு சொல்ல பிரியமில்லனு… சொல்ல வேணாமண்ணா…” என்று கூற… அதன் பிறகு தான் தமிழ் ஒருபெருமூச்சை இழுத்துவிட்டு சொல்லவே ஆரம்பித்தான்.

“உன்கிட்ட சொல்லறதுக்கு என்ன… மகிழ பத்தி ஒரு விஷயம ஊருக்குள்ள அரசல்புரசலா பேசறாங்க உனக்கு தெரியுமா…”

“தெரியும்ண்ணா… வாய் புளிச்சதோனு மாங்கா புளிச்சதோனு… ஜனங்க பேசுவாங்க… அதெல்லாம் லூசு விடுங்கண்ணா…”

“அத நீ நம்பறியா சொல்லு…” என கேட்டான். “ச்சே… ச்சே… நம்மக்கா பத்தரமாட்டு தங்கம்… அதுமட்டும் இல்லாம நா நம்பறளவுக்கு ஒன்னும் கேனப்பயனில்ல தெரிஞ்சுங்கோ…”

“எப்படி அந்த பழி சொல்ல மாத்தறதில்லனு தெரியமா… மண்டய ஒடச்சுக்க வேண்டியதா இருக்கு…” மகிழிடம் ஆறுதல் சொன்னவன் உள்ளுக்குள் எப்படி இந்த பழிச் சொல்லைப் போக்குவது என மிகவும் குழப்பத்தில் இருந்தான்.

“விடுங்கண்ணா… கொழந்த பொறந்தா தெரிஞ்சிட போகுது…” தமிழ் மகிழிடம் என்னச் சொன்னானோ அதையே சதீஸிம் தமிழிடம் சொன்னான். உடனே தமிழ்,’நா சொன்னது சரி தான் போல’என்று எண்ணி நிம்மதியடைந்தான்.

அதன் பிறகு சதிஸிம் தமிழும் ஒன்றும் பேசிக் கொள்ளவே இல்லை. வேலை முடிந்ததும் தமிழ்,”சரக்க உள்ள வைடா… நேரமாகுது கிளம்பலாம்…” சொன்னான்.

“இதோ எடுத்து வக்கறண்ணா…” என சதீஸ் சரக்கை உள்ளே எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

அவன் எடுத்து வைக்கும் வரைக்கும் காத்திருந்த தமிழ் எடுத்து வைத்தவுடன் கதவை அடைத்தான்.

தமிழ்,“சரி நீ பார்த்துப் போ…” சொல்லிவிட்டு தனது பைக்கை எடுத்துக் கொண்டுக் கிளம்பினான்.

வீடு எப்பவும் போல அமைதியாக இருந்தது. கொஞ்சநாளாகவே அப்படி தான் இருந்தது.

தமிழைப் பார்த்தும் வசந்தா உணவை எடுத்து வைத்தார். தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தமிழ் உணவுமேஜைக்கு வந்தான்.

“ம்மா… மகிழ் சாப்பிட்டாளா…” தமிழ்க் கேட்டான்.

வசந்தா சலிப்புடன்,”ம்ம்ம்… சாப்பிட்டா… சாப்பிட்டா…” சொன்னார்.

“ஏம்மா… இவ்வளவு சலிப்பு ஏன்?…”

“என்னத்த… எம்ம சொல்ல சொல்ற… சாப்பிட கூப்பிட்டா வந்து பேருக்கு கொரிச்சு வச்சிகிட்டு போறா…”

“ஏம்மா… சரியா சாப்பிடறதில்லயா…”

“எங்க சாப்பிடறா… உடம்பே இளைச்சுகிச்சு பார்த்தியா… ஆஸ்பத்திரிக்கு போக இன்னும் எவ்வளவு நாளிருக்கு…”

“அடுத்த வாரம் போக வேண்டியது தான்…”

“உடம்பு தேறதுக்கு முதல்ல ஏதாவது சத்து டானிக்க கேட்டு வாங்கிட்டு வரணும்…”

“ம்ம்ம்… சரிம்மா…” பேசிக் கொண்டே மனைவி சாப்பிடவில்லையே என்ற கவலையில் தானும் சரியாக சாப்பிட்டாமல் எழுந்தான்.

போகும் தன் மகனையே கவலையுடன் பார்த்து, தானும் பேருக்கு சாப்பிட்டு விட்டு எழுந்தார். மொத்தத்தில் மகழின் கவலையில் மூவரும் சரியாக உணவு இறங்கவில்லை.

டாக்டர்கிட்ட போகும் நாளும் வந்தது. முன்பதிவு செய்துக் கொண்டு மூவரும் கிளம்பினர். அங்கு போய் எல்லா பரிசோதனையும் எடுத்துவிட்டு டாக்டரைப் பார்த்தனர்.

டாக்டர்,”என்னம்மா… நல்லாயிருக்கிங்களா…” என்று விசாரித்தார்.

அதற்கு மகிழும்,”நல்லாயிருக்கேன்… ஆனால் கொஞ்சம் டயர்டாக இருக்குது…” சோர்வாக பதில் சொன்னாள்.

“அப்படியா… கொஞ்சம் படுத்துக் கொள்… என்னனு பார்த்துவிடலாம்…”

சொன்னதுப் போலவே ஏறிப் படுத்துக் கொண்டாள். டாக்டர் பரிசோதித்துப் பார்த்துவிட்டு,”எடை குறைஞ்சிருக்கு… சத்தா எதுவும் சாப்பிடதில்லயா…” என்று் கேட்டார்.

“இல்ல… மனசுல கொஞ்சம் கவல அதான்…” என மகிழ் கூறினாள்.

“என்ன கவலயாயிருந்தாலும் கொஞ்சம் உடம்பயும் பார்க்கனுமில்ல… நீ நல்லாயிருந்தா வயித்துல வளரும் கொழந்தயும் நல்லாயிருக்கும்… கொஞ்சம் சத்துக்காக டானிக் எழுதி தரேன். அத வேளாவேளைக்கு கரெக்ட்டா சாப்பிட்டு அடுத்தமாசம் வா… தமிழ் நீங்க மட்டும் இருங்க கொஞ்ச தனியா பேசனும்…”

“ஏய்யா மருந்து வாங்கிட்டு இருக்கோம்…” வசந்தா சொல்ல… “சரிம்மா… மருந்து வாங்கிட்டு இருங்க… டாக்டரம்மாகிட்ட பேசிட்டு வரேன்…”

“வரேன் டாக்டர்…” மகிழும் வசந்தாவும் சொல்லிக் கொண்டுக் கிளம்பினர்.

இவர்கள் போனதும் டாக்டர் தமிழிடம்,”என்ன தமிழ் இது… இப்படி கவலப்பட்டு உடம்ப கெடுத்துக்கிட்டா பின்னால தாயும் சேயும் என்னால காப்பாத்த முடியாது. பிறகு என்கிட்ட வருத்தப்பட்டு ஒரு பிரயோசமில்ல… கொஞ்சம் பாத்து பத்திரமா வச்சுக்கோங்க…”

“சரி இனி மேல் இதுபோல ஆகாம பார்ததுக்கறேன்…” தமிழ் டாக்டரிடம் விடைப் பெற்றான்.

மருந்து எல்லாம் வாங்கிட்டு தமிழுக்காக காந்திருந்த இருவரையும் அழைத்துக் கொண்டு வீடுத் திரும்பினான். வீட்டிற்கு வந்த உள்ளே செல்ல இருந்த மகிழை தமிழ் தான்,”மகிழ் இங்க வந்து கொஞ்சம் உட்காரு… ம்மா நீங்களும் இங்க வாங்க…” இருவரையும் கூப்பிட்டு உட்கார வைத்தான்.

“இனிமேல் உமக்கு தன்ராஜை பத்தியும் ஊர பத்தியும் கவல இருக்ககூடாது…”

அதற்குள் மகிழ் இடையிட்டு,”நா எதப் பத்தியும் கவலப்படாம இருக்கமுடியாதே…”

“அவனயும் ஊர பத்தியும் கவலப்படாம நம்ம கொழந்த எப்படி வயித்துல வளருதுனு நனச்சுக்கோ… பிரசவம் நல்லப்படியா நடக்கனும் அந்த ஆயாவ கூம்பிடு… இதமட்டும் உம் மனசுல இருக்கனும்…”

மகிழும் சம்மதம் எனஅரைகுறையாக தலையாட்டி வைத்தாள். பிறகு வசந்தாவிடம் திரும்பி,”ம்மா… இவ கொஞ்சம் கவலப்பட்டாலும் இவள திசை திருப்பி சந்தோஷமா வச்சுக்க வேண்டியது மட்டுமில்லாம சத்துள்ள ஆகாரமாம கொடுக்க வேண்டியது உம் பொறுப்பு… நா இவளுக்கு வேளாவேளைக்கு மாத்திரமருந்து கொடுக்க வேண்டியது எம் பொறுப்பு…” என மூவரும் வேலையைப் பிரித்து எடுத்துக் கொண்டனர்.

அதன்படி இருவரும் மகிழுக்கு தன்ராஜிப் பற்றியும் ஊரைப் பற்றியும் கவலைப்பட நேரமில்லாமல் பார்த்துக் கொண்டனர். மாதங்கள் உருண்டோடியது. ஏழாம் மாதம் பிறந்தது. வளைகாப்புக்கு தேதி குறிக்கப்பட்டு வீட்டோட வைத்தனர்.

தமிழுக்கு வளைகாப்பை ஊரைக் கூட்டி வெகுவிமரிசையாக கொண்டாடவேண்டும் என்ற ஆசை. ஆசை என்று சொல்வதைவிட கனவு என்று தான் சொல்லவேண்டும். ஆனால் ஊரில் உள்ளவர்கள் வந்து சாப்பிட்டு விட்டு வாழ்த்திவிட்டாப் போவார்கள். வெறும் வாயை மெல்ல முடியாமல் மகிழை ஜாடைமாடையாக பேசுவார்கள். அதைக் கேட்டு மகிழ் மனம் சங்கடப்படுமே என்று நினைத்து பேசாமல் இருந்துக் கொண்டான்.

நெருங்கிய உறவினர்கள் சிலப் பேரையும் அழைத்தனர். வளைகாப்பில் ஐந்து பெண்மணிகள் மட்டும் வளையல் போட்டுவிட்டனர். வளைகாப்பை வீட்டோடு முடித்துக் கொண்டனர். மகிழுக்கு திருஷ்டி கழித்து அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

மகிழ் இல்லாத வீடு வெறிச்சோடிக் கிடந்தது. வசந்தாவும் தமிழும் மகிழோட இருந்துவிட்டு மகிழை அனுப்பி வைத்துவிட்டு ஒருநாள் கூட அந்த வீட்டில் தனித்து இருக்க முடியாமல் தவித்துப் போயினர். விடிந்ததும் அம்மா மகன் இருவரும் மகிழ் பிறந்த வீட்டுக்கு நடையைக் கட்டிவிட்டனர்.

ஆண்கிளி தன் பேடைய காண…

சிறகை விரித்து பறந்து செல்ல…

பேடையோ தன்னை மறந்து…

ஆற்றவாரின்றி சோகத்தில் இருக்க…

ஆண்கிளியோ ஆறுதல்படுத்த…

பேடையோ தன் இணையை கண்டு…

ஆறுதல் அடைந்தது…!

15 – இத இதமாய் கொன்றாயடி Read More »

14 – இத இதமாய் கொன்றாயடி

14 – இத இதமாய் கொன்றாயடி

வேலாயுதமும் மந்தாகினியும் தலைப்பொங்கலுக்கு அழைக்க வந்தார்கள். வசந்தாவும் தமிழ்த் தம்பதிகளும் வந்தவர்களை வரவேற்று காபி கொடுத்து உபசரித்தனர். அவர்கள் அழைத்துவிட்டு விருந்தாடி விட்டு புறப்பட்டுச் சென்றனர்.

தமிழ் தம்பதியர் உள்ளுரில் இருந்த போதும் பொங்கலுக்கு இரண்டுநாட்கள் முன்னாடியே வேலாயுதம் வீட்டுக்குச் சென்றனர். இவர்களைக் கண்டதும் வீட்டில் இருந்த மந்தாகினி,”வாங்க… நீங்க வந்தால் சாப்பிடுவதற்கு பலகாரம் வேணுமே… அதான் உங்க மாமா டவுன் கடையிலே வாங்கிட்டு வர போயிருங்கிறாங்க…”

“ஏன்மா… நீ வீட்டில் ஏதும் பண்ணலயா…” என்றாள் மகிழ்.

அதற்கு மந்தாகினி,”நா அதிரசம்,முறுக்கு, சீடை எல்லாம் செய்திருக்கேன். இருந்தாலும் மனசு ஒப்பாம புது தினுசா பலகாரம் வாங்க டவுனுக்கு போயிருக்காங்க வந்திடுவாங்க… மாப்பிள்ளய கூட்டி போயி உன் ரூம்ல போயி ரெஸ்ட் எடுங்க…”

“சரி…” என்று சொல்லிவிட்டு உள்ளறைக்குச் சென்றாள். மந்தாகினி அப்போது தான் ஞாபகம் வந்தவளாக,”ரூம்ல மாப்பிள்ளகு மாத்துடைய வாங்கி வச்சிட்டு போயிருக்கிறாங்க உன் அப்பா… அத எடுத்து கொடுத்து மாப்பிள்ளய மாத்திக்க சொல்லு…”

மகிழும் அன்னை சொன்னப்படியே தமிழுக்கு புதுக் கைலியை எடுத்துக் கட்டிக்கச் சொன்னாள். அதற்குள் வேலாயுதமும் வந்துவிட்டார்.

அறைக்கே வந்து,”வாங்க மாப்பிள்ள… நீங்க வரதுக்குள்ள டவுனுக்கு போயிட்டு வந்திடனும் நனச்சேன்…அதங்காட்டி தாமசமாகிவிட்டது மன்னிக்கனும்…”

“அதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்பு கேட்கறிங்க மாமா…”

“விடுப்பா… அவர் உன் மாப்ள தானே… மன்னிப்புங்கற பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு…”

“சரிம்மா… நா பட்டாசலைல இருக்கேன். நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க…” சொல்லிச் சென்றார்.

பொங்கல் நாள் விடியற்காலையில் இருவருமே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து கொண்டனர். இவர்களுக்கே முன்னாலே மந்தாகினி குளித்து முடித்து வாசலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்.

“ம்மா… ம்மா…” அழைத்தபடியே மகிழ் வந்தாள். புத்தாடை அணிந்து வந்த மகளை கண்ணாரக் கண்டு,”எம்படே கண்ணே பட்டு விடும் போல இருக்கு… அம்புட்டு அழகாக இருக்கே…” சொல்லி திருஷ்டி கழித்தார்.

“போம்மா… எமக்கு வெட்கமா இருக்கு…” வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னாள்.

“மாப்ள எங்க ஆளயே காணோம்…” மகிழை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே தோளில் ஒருகட்டு
கரும்பையும் மஞ்சள்கிழங்கையும் சுமந்து வந்தான்.

“என்ன மாப்ள… உம்மை ஆரு இத கொண்டு வர சொன்னது… உம்மை கொண்டு வர சொல்லிட்டு இந்த மனுசன் எங்க போனாரு…” தன் கணவரை நொடித்துக் கொண்டார்.

“நா செத்த காணலயா… எம்ம தலயா போட்டு உருட்டுவ…” திட்டியபடியே வந்துச் சேர்ந்தார் வேலாயுதம்.

மந்தாகினி “நா சும்மா ஒன்னும் வசவு பாடல… மருமகனய இதெல்லாம் கொண்டு வர சொல்லிட்டு நீரு எங்க போனிரூ…” கேட்டாள்.

அதற்கு தமிழ்,”அயித்த… நம்ம தோட்டத்துல இதெல்லாம் வெளைஞ்சது… அதான் கொண்டு வந்தேனு… மாமாவ வய்யாதிங்க…” என்றான். மருமகன் இப்படி சொன்னப் பிறகு மந்தாகினி அமைதியாகிவிட்டாள்.

பொங்கலும் கிழக்குப் பார்த்து பொங்கி வர எல்லோரும்,”பொங்லோ… பொங்கல்…” என வாழ்த்தி வரவேற்று
மகிழை புதுப்பானையில் புத்தரிசியை இடச் சொல்லி அவளும் அதே மாதிரியே செய்தாள். பொங்கலும் தயாராகிவிட்டது. மஞ்சகொம்பைக் கட்டி, படையல் போட்டனர். படையலும் போட்டு மந்தாகினி பரிமாற மூவரும் அமர்ந்து விருந்துண்டனர். பொங்கல் விழா இனிதாக நிறைவுப் பெற்றது.

மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு எத்தனையோ கவலைகள் இருந்தாலும் அங்கிருந்த நாட்களெல்லாம் அதையெல்லாம் மறந்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு தங்கள் வீட்டுக்கு கிளம்பினர். இதற்காகவும் நேரம் கிடைக்கும் பொழுது வந்து தங்கிவிட்டு போகவேண்டும் என நினைத்தனர்.

வீடு வந்தப்பிறகு கூடந்த போன் கால்வரும் வரை இருவரும் அதே சந்தோஷத்துடன் இருந்தனர். மகிழ் போன்அடிக்கவும் எண்களைப் பார்த்துவிட்டு அது தன்ராஜ் எண் என போன்காலைத் துண்டித்துவிட்டாள்.
துண்டித்த பிறகும் அவன் ஓயாமல் போன் பண்ணினான். ஒருகட்டத்தில் மகிழ் போனை அணைத்து வைத்துவிட்டாள்.

போனை அணைத்தது தெரிந்த பிறகு தமிழ் போனுக்கு முயற்சி செய்தான். மகிழ் மாதிரி அல்லாமல் முதல் தடவையே செய்த போது எடுத்துவிட்டான்.

தமிழ் எடுத்த எடுப்பிலயே,”இப்ப உமக்கு என்னடா வேணும் பரதேசிநாயே…” கோபத்துடன் பேசினான்.

“மருவாத… மருவாதய பேசு… வாடா போடா பேசின நல்லாயிருக்காது ஜாக்கிரதை…” என்றான்.

தமிழ்,“உமக்கெல்லாம் மருவாத ஒருகேடா…” இவனுக்கு மரியாதையெல்லாம் ஒருகேடு என நினைத்தவாறே பேசினான்.

அதே எத்தாளத்துடன் தன்ராஜிம்,”என்ன உனக்கும் உன் பொஞ்சாதிக்கும் பயம் அத்து போச்சுல… உனக்கு போன் பண்ணினா மருவாதயில்லாம பேசற… உன் பொஞ்சாதி என்னடா என் நம்பரை பார்த்து கட் பண்ணறா… என்ன தன்ராஜ கண்டு பயம் அத்து போச்சா…” மிரட்டினான்.

“ஆரு உம்ம கண்டு எமக்கு என்ன பயம்… உமக்கு வாங்கின அடியெல்லாம் பத்தாது… இன்னும் செமத்தியா வாங்கினா தான் அடங்குவ…”

தன்ராஜிம் வாய்க்கு வாய் பேசினான். ஒருகட்டத்தில் தமிழ் இவனை பொறுக்கமாட்டாமல்,”வாய மூடுடா…” சொல்லி போனை அணைத்து வைத்துவிட்டான்.

மகிழ் அறையை விட்டு வெளியே வந்து தன் கணவர் போனிலே யாருடன் இவ்வளவு சத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார் என அறியும் பொருட்டு,“ஆருங்க போன்ல இத்தன சத்தமா ஏசறிங்களே…”

அதற்கு தமிழும்,”வேற ஆரு… எல்லாம் அந்த வீணாப்போன தன்ராசு தான்… அவன தவிர ஆரு நமக்கு போன் பண்ணி இப்படி குடச்சல் கொடுக்கறது சொல்லு…” மிகுந்த எரிச்சலுடன் சொன்னான்.

“எமக்கு போன் பண்ணினான். நா எடுக்கவே இல்லிங்காட்டியும் உமக்கு போன் செய்திருக்கான். வாய்ய கொடுத்து வாங்கி கட்டிகிட்டான்ல… அவனுக்கு இதுவும் வேணும்… இன்னமும் வேணும்…” மகிழ் சொன்னாள்.

அவள் இப்படி பேசவும் புண்ப்பட்ட மனதிற்கு புனுகு வைத்து தடவியது போல அவனுக்கு இருந்தது. அவன் சமாதானமாக அதுவே போதுமானதாக இருந்தது.

மூன்றுமாதம் கழித்து ஒருநாள் காலையில் மகிழ் வெறும் வயிற்றில் வாந்தி முற்றத்தில் எடுத்தாள். அடுத்த முறை வசந்தாவைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்தவுடன் அவள் தள்ளாடிபடியே கீழே விழப் போனாள்.

வசந்தாப் பிடிக்கமுடியாமல் தடுமாறியபடியே,”ஏப்பா தம்பி… வந்து இவள கொஞ்சம் பிடி ராசா…” என சத்தம்ப் போட்டார்.

தங்கள் அறையில் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் வசந்தா கத்திய சத்தம் கேட்டு முற்றத்துக்கு ஓடி வந்து மனைவியும் தாயையும் தாங்கிப் பிடித்தான். “பார்த்தும்மா… மொதல்லவே எம்மய கூப்பிட்டுருக்காமல…” தாயைக் கடிந்துக் கொண்டான்.

தமிழ் கைத் தாங்கலாகவே மனைவிக்கு முகம் கழுவ வைத்து பின்னர் தோள்களில் சாய்த்தப்படியே அவளை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தான். அதற்குள் வசந்தாவும் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்தார். அதை கையில் வாங்கி குடிக்கும் அளவிற்கு அவளுக்கு சக்தியில்லை. அவள் கை நடுங்கவும் தமிழ் வெந்நீரை தன் கையால் வாங்கி குழந்தைக்கு புகட்டுவது போல கொஞ்ச கொஞ்சமாக புகட்டினான்.

பின்னர் வசந்தா நாடியைப் பார்த்து,”ஏய்யா ராசா… நம்ம கொலம் தலக்க போகுது…” மகிழ்ச்சியுடன் சொன்னார்.

தமிழ் ஓடிப் போய் சீனிடப்பாவை எடுத்து வந்து வசந்தாவிற்கும் மகிழுக்கும் ஊட்டினான். அதை மகிழ் வெட்கப்பட்டவாறே வாங்கிக் கொண்டாள்.

“நீயும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோ… வாந்தியெல்லாம் எடுத்து சிரமப்பட்டுட்டா…” தமிழ் கூறி அவளை அணைத்தப்படியே தங்கள் அறைக்கு அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்து கழுத்து வரை போர்வையை போர்த்திவிட்டான்.

மகிழுக்கு முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே மசக்கை இருந்தது. மூன்றாம் மாதம் பிறந்தவுடன் தெளிந்து எப்பவும் போல அவள் வேலையைச் செய்தாள். ஆனால் மகிழ் வெளியே எங்கும் செல்வதில்லை. அவள் வெளியே வராததினால் தன்ராஜ் தன்னைக் கண்டு பயந்துவிட்டாள் என நினைத்துவிட்டான்.

மேலும் இரண்டு மாதங்கள் சென்ற பிறகு அவளுக்கு ஐந்து மாதங்களான பின்பு முதன்முதலில் தமிழ் மகிழைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அவள் சற்றே மேடிட்ட வயிறைப் பார்த்த எல்லோரும் வாயைப் பிளந்தார்கள். அவள் வெளியே வராததால், ஜனங்களும் தன்ராஜ்க்கும் அவளுக்கும் தன்ராஜ் சொன்னதை நம்பி அவர்கள் வீடு தேடி போய் பார்க்காததினால் அவள் கர்ப்பம் என தெரியவில்லை.

தமிழ் கோவிலில் மகிழ் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு பிராகரத்தைச் சுற்றி வந்தார்கள். மக்கள் அங்கங்கு நின்றுக் கொண்டு அவள் கர்ப்பத்துக்கு காரணம் தன்ராஜ் தான் என இவர்களைப் பற்றி தவறாகப் பேசினார்கள். அதுவும் இவர்கள் காதுப்படவே பேசினார்கள்.

மீண்டும் மகிழ் என்ன இப்படி பேசுகிறார்கள் என மனம் உடைந்து கண்ணீர்விட்டாள். இவளுடைய கண்ணீரைப் பார்த்து தமிழுக்கு ஜனங்களை வெட்டிப் போடும் ஆத்திரம் வந்தது.

அவர்களைப் பார்த்து,”ஆராவது மகிழப் பார்த்து வாய் மேல பல்ல போட்டு பேசினிங்கனு வய்யி… தொலச்சுப்புடுவேனு ஜாக்கிரத்த…” விரல் நீட்டி எச்சரித்தான்.

“அவ வயித்துல வளருது உம்ம வாரிசுனு தெரியுமா?…” கூட்டத்தில் ஒரு மூத்தப் பெண்மணிக் கேட்டார்.

“எம்ம வாரிசில்லாம ஆரு வாரிசுனு நீங்க நனச்சுட்டு இருங்கறிங்க?…” அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கேட்டான்.

எதிர்க்க நின்றுக் கேள்வி கேட்கப்பான் என தெரியாமல் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துத் தான் போனார் அந்த பெண்மணி. சிலமாதங்களுக்கு முன்னால் சிலர் தங்கள் வாய்க்கு வந்தை எல்லாம் ஜாடையாகப் பேசினார்கள். எதிரத்துப் பேசப் போன தமிழை வசந்தா தடுத்துவிட்டார்.

அன்றுப் போல இன்று வசந்தா கூட இல்லாதது தமிழுக்கு வசதியாகப் போய்விட்டது. இன்றைக்கு உடனே எதிர்த்தவர்களைப் பார்த்துக் கேள்விக் கேட்டான். யாரும் பதில் சொல்லவேயில்லை.

“ச்சை… கோவிலுகு வந்தால் கொஞ்சம் நிம்மதியாவது கிட்டும் என நனத்தால்… இங்க கூட நிம்மதியில்லாம போயிடுச்சு…” சொல்லி மகிழை அழைத்துக் கொண்டுச் சென்றான்.

வீடுப் போய் சேர்ந்தும் கூட கோபம் போகவில்லை. “என்ன மனிதர்களோ இவர்ரகளோ…” புலம்பினான்.

அதற்குள் இவர்கள் வந்தது தெரிந்து வசந்தா வயலில் திரும்பி வந்தார். இவன் புலம்பலைக் கேட்டு,”என்னடா… இந்த புலம்பற… ஆரய வய்யற…” என்றார்.

“எல்லாம் அந்த பெரிய பொட்டு வச்சுகிட்டு வருவாள அந்த சாந்தம்மாவ தான்… சாந்தம்மா… பேரு தான் சாந்தம்மா… பேரில இருக்கற சாந்தம்மா பேச்சுல இல்ல…” வைத்தான்.

“அவளா… என்ன பேசினா சொல்லு… நாக்க இழுத்து வச்சு அறுத்தடறேன்.”

“நானே நாக்க பிடுக்கிற மாதிரி தான் கேட்டுவிட்டு வந்தேன்.”

“அவ அப்படி தான் என்ன சொன்னா… அத முதல்ல சொல்லு…” எரிச்சலுடன் கேட்டார்.

சற்று நேரம் தமிழ் அமைதியாக இருந்தான். வசந்தா விடாமல் இவன் முகத்தைப் பார்க்கவும்,”இவ வயித்துல வளருது ஆரு குழந்தனு கேட்கறா… அத கேட்டதும் எம்மால தாங்க முடியல… என்ன தகிரியம் இருந்தா எம் பொஞ்சாதிய பார்த்து இந்த கேள்வி கேட்பா… அதான் அவள அங்கனகுள்ள வச்சு நாண்டு சாவற மாதிரி நாலு கேட்டனு…” என மூச்சிரைக்க கோபத்தில் கத்தினான்.

“நீ கேட்டது பத்தாது… இரு நா நாலு வார்த்தய கேட்டு வரேன்…” சேலையை இழுத்துச் சொருகிக் கொண்டுச் சண்டைக்குச் சென்றார்.

வசந்தா சண்டைப் போடுவாரா… இல்லை அவமானப்பட்டு திரும்புவாரா? இனி என்ன நடக்குமோ அடுத்த எபியில் பார்க்கலாம்.

14 – இத இதமாய் கொன்றாயடி Read More »

error: Content is protected !!
Scroll to Top