4 – தீக்கு தென்றலோடு மோகம்
4 – தீக்கு தென்றலோடு மோகம்!
எபி – 4
அம்ரீதா தன் கனவோடு பயணித்திருக்க…. இஷாரா தன் எடையைக் குறைக்கும் பயிற்சியில் தீவிரமாக இருக்க… இதை எதையும் பற்றி கவலைப்படாமல் சம்ரித் தன் அலுவலகத்தில் கவனமாக இருக்க… மூவரும் அவரவர் வேலையில் ஈடுப்பட்டாக இருக்க… காலம் இவர்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டது.
அம்ரீதா அலுவலகம் முடிந்து வந்தால் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு டியூசன் எடுப்பாள். இதை தினசரி வழக்கமாக வைத்திருப்பாள். டியூசன் எடுத்துக் கொண்டிருக்கும் போது எப்பவும் போனை சார்ஜ் போட்டு வைத்திருப்பாள்.
அன்றும் அதே போல போட்டு வைத்திருந்த போன் சிணுங்கியது. ஏதோ விளம்பரக் கால் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் சிணுங்கவும் போய் எடுத்துப் பார்த்தாள். போன் திரையில் சம்ரித் எனக் காட்டியது. ‘இந்த நேரத்தில் இவன் எதுக்கு போன் கூப்பிடுகிறான்…’ என நினைத்தாள்.
அது மறுபடியும் சிணுங்கவும்,”ஹலோ… என்ன சம்ரித் இந்த நேரத்தில் கால் பண்ணியிருக்கறிங்க…” என்றாள்.
“இல்ல… எனக்கு ஒரு டவுட்…”
“எந்த டவுட்டா இருந்தாலும் நாளைக்கு ஆபிஸ்ல கேட்கலாமே…”
“என்ன பேசவிட்டா தானே… நா என்னனு கேட்பறது புரியும்…”
“ஹூம்… சொல்லுங்க…”
‘அப்படி வா வழிக்கு…’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, அவன் ஏதோயதோ பேசிக் கொண்டிருந்தான். சத்தியமாக அலுவலக வேலைப் பற்றி பேசவில்லை. இயல்பாக கொஞ்சம் நட்போடு பேசிக் கொண்டிருந்தான்.
அதற்குள்,”க்கா… க்கா…” டியூசன் மாணாக்கர்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
“வரேன்… வரேன்…” சொல்லிக் கொண்டே இருந்தாள்.
இவர்கள் கூப்பிடுவதையும் “இவள் வருகிறேன்…” என்று சொல்வதையும் கேட்டும் அவன் பேசிக் கொண்டிருந்தான்.
‘இவன் எப்ப போனை வைப்பான்…’ எனத்தோன்ற ஆரம்பித்துவிட்டது. இருந்தும் போனை அவன் வைக்க மாதிரி தெரியவில்லை.
பொறுத்தும் போதும் என பொங்கி எழுந்துவிட்டாள். “டியூசன் பிள்ளங்க கூப்பிடறாங்க… நா போயி அவங்கள பார்க்கனும்…” என போனை துண்டிக்கப் போனாள்.
“இரு… இரு.. நாஇந்த டைம் பேசினால் உனக்கு டிஸ்பர்ன்ஸா இருக்கும்…தினமும் நாம ஏன் நைட் பத்து மணிக்கு போன் பேசிக்கூடாது…” எனக் கேட்டான்.
‘தினமும் நைட்லயா…’ என யோசிக்கவும், சம்ரித்,”ஹலோ… ஹலோ…” என திரும்ப திரும்ப அழைக்கவும்,
“ம்ம்ம்…லைன்ல தான் இருக்கேன்…” கொஞ்சம் தயங்கி,”ஓ… பேசலாமே…” என பர்மிஷன் கொடுத்தாள்.
பிறகு தான் இழுத்த மூச்சை,”ஷ்ஷ்… அப்படா…” விட்டுட்டு “உன்கிட்ட இருந்து பர்மிஷன் வாங்கறதுக்குள் எனக்கு உயிர் போயி உயிர் வந்தது…” என சொல்லி முடிக்கும் முன்,”க்கா.. க்கா…” மீண்டும் மாணவர்கள் அழைத்தனர்.
“இதோ வரேன்…” சொல்லி விட்டு,”ஓகே… நா போன வச்சிடறேன்…” கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
‘அப்பாடி… எப்படியோ பர்மிஷன் கொடுத்தாளே…’ என நினைத்துச் சிரித்தான்.
அம்ரீதா,’தினமும் இவன் என்கிட்ட என்ன பேசுவான்…’ என நினைத்தாள்.
டியூசன் மாணாக்கர்களுக்கு பாடம் நடத்த நடத்தவே தனக்குள் கற்பனையில் மிதந்தாள்.அவர்களை அனுப்பி விட்டு இரவுணவு முடித்து விட்டு நேரமாக படுக்கையறைக்குள் புகுந்து கதவை அடைத்து சம்ரித் போனுக்காக காத்திருக்கலனாள்.
பத்து பதினொன்றானது அவன் போன் செய்யவேல்லை. காத்திருந்து காத்திருந்து ஒரு கட்டத்தில் உறங்கிவிட்டாள்.
சம்ரித் இப்பதான் போன் பண்ணினனும் நினைத்து விட்டுட்டான்.
அம்ரீத் இரவில் தமாதமாக தூங்கி நன்கு விடிந்ததும் எழுந்தாள். பிறகு காலை கடன்கள் முடித்து விட்டு நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வந்த பின்பு சித்திக்கு சமையலுல் உதவி செய்து விட்டு குளிச்சு அலுவலகம் செல்ல தயாராகி வந்தாள்.
வந்தவள் காலையுணவு முடித்து விட்டு மதியத்திற்கு சித்தி போட்டு வைத்திருந்தி டிபன்பாக்ஸை எடுத்து தனது பேகில் வைத்துக் கொண்டு,”நா ஆபிஸ்கு போயிட்டு வரேன்… ஏற்கனவே எனக்கு லேட்டாகிவிட்டது… ஓகே பை சித்தி…” சொல்லிக் கொண்டு அவசரமாக கிளம்பிவிட்டாள்.
பஸ்ஸைப் பிடிக்க அரக்க பறக்க போனான். அவள் வழக்கமாக செல்லும் பஸ் சென்றுவிட்டது. அடுத்த வந்த பஸ்ஸில் ஏறி அலுவலுலகத்துக்கு மிகவும் தமாதாக வந்தாள்.
அவசரம் அவசரமாக கிளம்பி வந்தில் மிகவும் சோர்வாகத் தெரிந்தாள். அப்படியே சம்ரித் முன்னால் போய் நின்றாள். அவன் குனிந்து ஏதோ பைலை மும்மரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“எக்ஸ்கூமி சார்…” கூப்பிட்டதும் நிமிர்ந்துப் பார்த்தான்.
கண்கள் இரண்டும் சிவந்து சரியாக உறங்காமல் முகம் சற்று வீக்கமாக இருந்தது. அவளைப் பார்த்தவுடன் பதறிவிட்டான்.
“அச்சச்சோ… இவ்வளவு ரெஸ்ட் லெஸாக இருக்க…” எனக் கேட்டான்.
‘ம்கூம் எல்லாம் இவனால் தான்… ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கறத பாரு…’ என்று மனதில் திட்டினாள்.
“ஹீ… ஹீ…” என இளித்துக் கொண்டு,”எல்லாம் நன்மையும் உங்களையே சாரும்…” என்று தூய தமிழில் மொழிந்தாள்.
“என்னமோ சொல்றினு புரியுது… ஆனால் ஒன்னுமே விளங்கவேமாட்டேங்குது…” என்று சொன்னான்.
‘ஹாஹா… சுத்தம் ஒன்னும் புரியல…நல்லவேளை நா தப்பிச்சேன்…’ என்று மனதில் நினைத்தாள்.
அவள் ஏதோ சிந்தனையில் இருக்கிறாள் என நினைத்துக் கொண்டு மேஜையைத் தட்டி,”என்ன யோசனை…” கேட்டான்.
“ஒன்னுமில்ல…”
“ஒன்னுமேயில்லயா… ஆர் யூ சூயூர்…” என திரும்ப திரும்ப கேட்டான்.
“ஒன்னுமேயில்லனு சொன்னால் ஏன் புரிஞ்சுகவேமாட்டேங்குறிங்க…”
“என்னவோ சொல்ற… நானும் இந்த டாபிக் இதோட விடறேன்.”
“சரி நா போயி என் வேலய பார்க்கட்டுமா…”
“சரி சரி… நீ போயி உன் வேலய பாரு… இட்ஸ் கெட்டிங் லேட்…” என சொல்லவும் தான் எதுக்கு வந்தோம் என்பதை மறந்து விட்டு ஏதோஏதோ பேசிக் கொண்டிருக்கிறோம் என உணர்ந்தாள்.
“ஆமாம் சார்… நா லேட்டாக வந்ததுக்கு உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன். சாரி சார்… என்னய மன்னிக்கவும்…”
“பரவாயில்ல… இப்பவே ரொம்ப லேட்டாயிடுச்சு…” என சொல்லித் தோளைத் தட்டிக் கொடுத்தான்.
சாதரணமாக தோளைத் தட்டிக் கொடுத்தது, காதல் கொண்ட மனசு பெரிதாக எண்ணிக் கொண்டது. அவள் தட்டிக் கொடுத்த தோளைப் பார்த்தபடியே கனவில் மிதந்தபடியே நடந்தாள்.
கனவில் வந்தவளை வழி மறித்து ஒரு லேபர்,”மேம்… இந்த ஸ்குருவ இந்த மெஷினுக்கு மாட்டலமா…”
கனவிலிருந்து விழித்துக் கொண்ட அம்ரிதா,”ஹா… என்ன கேட்டிங்க…” என்றாள்.
”இல்ல… இந்த ஸ்குருவ இந்த மெஷினுக்கு மாட்டலமா…” என்று அந்த லேபர் அதே கேள்வியை திரும்பக் கேட்டான்.
“ஓ… தாரளமாமாட்டலாம்…” என சொன்னாள்.
பிறகு தன் கேபினுக்கு வந்தவள்,’ச்சேய் ஆபிஸ்ல எப்படி நடந்துக்கிட்டோம்…” என்று தன் தலையில் தானே கொட்டிக் கொண்டு அலுவலகம் முடியும் வரைக்கு வேலையைப் பார்த்தாள்.
நேற்று மாதிரி இல்லாமல் இன்று இரவு பத்துமணிக்கு சம்ரித் அம்ரீதாவுக்கு போன் பண்ணினான்.
அம்ரீதாவோ பண்ணுவானோ… பண்ணமாட்டனோ… தன் மொபலையைப் பார்த்திருந்தாள். சம்ரித் அழைக்கிறான் என்று திரையில் வரவும்,”யாஹூ…” என கைகளை உயர்த்திக் கத்தினாள்.
அப்புறம் எதுவும் நடக்காத்துப் போல மிகவும் சாவகாசமாக போனை காதுக்கு கொடுத்து,”ஹலோ… சம்ரித் என்ன விஷயம் சொல்லுங்க…” என்றாள்.
“என் போனுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தியா…” என்றுக் கேட்டான்.
“ச்சேச்ச… அப்படியெல்லாம் கிடையாதே…” என மனசார பொய்யுரைத்தாள்.
உடனே சம்ரித் முகம் சோம்பிவிட்டது. தன் காலை எதிர்ப்பார்த்து காத்திட்டு இருப்பாள் என நினைத்திருக்க… சட்டென இப்படி சொல்லிவிட்டாளே என வருத்தம் கொண்டான்.
தன் வருத்தம் குரலில் தெரியாமல் இருக்க வெகு பிரயத்தனப்பட்டு தொண்டையை செருமிக் கொண்டான்.
“ஹலோ… சம்ரித் சளி ஏதாவது பிடிச்சகிச்சா… இல்ல தொண்டைய செருமிட்டு இருக்கிங்களே…” ஒன்றும் அறியாதவளாட்டும் கேட்டாள்.
“யெஸ்… கொஞ்சம் கோல்ட் பிடிச்சகிச்சா…” என இவனும் பொய் மொழிந்தான்.
“சரி… போன வச்சுட்டு நேரமாய் போயி தூங்குங்க…” என இவளுக்கும் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றியது.
சம்ரித்தும் இன்னும் கொஞ்சம் பேசினால் பரவாயில்ல என நினைத்து,”கோல்ட் தானே… நோ ப்ராப்ளம்… இட்ஸ் ஓகே… லெட்ஸ் வீ டாக்…”
“யூ ஹவ் நோ ப்ராப்ளம்… ஓகே வீ வில் டாக்…” என்றாள்.
“அப்பறம் ஆபிஸ் இருந்து வந்த என்ன செஞ்சிட்டு இருந்தாய்…”
“ஆபிஸ்ல இருந்து வந்தவுடன் ப்ரஸ்ஆப் ஆகிவிட்டு சித்தி சோள அடை செஞ்சு கொடுத்தாங்க… அத சாப்பிட்டு விட்டு டியூசன் படிக்க பசங்க வந்தாங்க… அவங்களுக்கு டியூசன் எடுத்து முடிச்சிட்டு அவங்கள அனுப்பி வச்சிட்டு டிபனுக்கு சித்திக்கு ஹெல்ப் பண்ணிட்டு சாப்பிட்டு பெட்கு வந்திட்டேன்…”
“அப்புறம்…” என்றான்.
“அப்புறம் விழுப்புரம்…” என்று சிரிக்காமல் சொன்னாள்.
“விழுப்புரமா… ஒன்னும் புரியலையே…” என்று முழித்தான்.
“ஐயோ… மட்டிமட்டி…”என சொல்லி விட்டு தலையில் அடித்துக் கொண்டாள்.
மட்டு என்றதும் சுருக்கென கோபம் வந்தது. அந்த கோபம் குறையாமல்,”யாரைப் பார்த்து மட்டிங்கறங்க… நா படிக்கும் போதே ஸ்கூல், காலேஜ் எல்லாத்திலயும் டாப்பர் தெரிஞ்சுக்கோ…” படபடவென பொரிந்து தள்ளிவிட்டான்.
“ஹாஹா… ஸ்கூல், காலேஜ் எல்லாத்திலயும் டாப்பரா இருக்கறவருக்கு இந்த ஜோக் கூட தெரியலனு நினைக்கும் போது தான் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது…” என கூறி விட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
‘இது ஜோக்கா… நமக்கு இது கூட தெரிஞ்சுக்காம இருந்திருக்கோமே…’ என நினைத்து அசடு வழிந்தான்.
அவன் அசடு வழிந்ததை நேரில் பார்த்த மாதிரி,”என்ன சார்… அசடு வழியறிங்களா…” கேட்டாள்.
‘குப்புறம் விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலனு சொல்வாங்களே…’ அந்த மாதிரி,”சேச்சே… அப்படியெல்லாம் கிடையாதே…” வீம்பாக சொன்னான்.
“காட் ப்ராமிஸா… நீங்க சொன்னா நம்பி தானே ஆகனும்…” போனால் போகுதுனு நம்பற மாதிரி நடித்தாள்.
“போதும் போதும்… நீ என் காலை வாரினது எல்லாம் போதும்…” என கூறி விட்டு தானும் சிரித்தான்.
இருவரும் அடக்கமாட்டாமல் சிரித்தார்கள். பிறகு போனில் மணியைப் பார்த்த அம்ரீதா,”சம்ரித் மிட்நைட்டாகிவிட்டது. பேசினது போதும் வச்சிடலாமே… குட்நைட்…” என்று கூறி விட்டு சம்ரித் மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் போனை வைத்துவிட்டாள்.
சம்ரித் இன்னும் பேசனும் ஆசையாக இருந்தாலும் அவனும் போனை வைத்துவிட்டான்.
அம்ரீதா போனை வைத்துவிட்டால், அவள் கனவில்,’டேய்… என் கலாபக் காதலா… எனக்கு உன்கிட்டயுனும்னு பேசனும்னு தான் ஆசை… ஆனால் என்ன பண்றது…ஆச இருக்குது நாடாள ஆனா அம்ச இருக்குது கழுத மேய்க்கனு ஒரு பழமொழி இருக்குதுல்ல…’ என நினைத்து அடிவயிற்றில் இருந்து மூச்சை இழுத்துவிட்டாள்.
அதே போல எவ்வளவு நேரம் ஏதோஏதோ நினைத்துக் கொண்டிருந்தாள். அவளை அறியாமலயே தூக்கத்திற்கு கண்கள் சொருக ஒரு வழியாக தூங்கிவிட்டாள்.
இன்றும் அவசரம் அவசரமாக எழுந்து மணியைப் பார்த்தாள். கடிகாரத்தில் ஏழு மணி என காண்பித்தது. ‘இனியும் ப்ரஸாகி வாக்கிங் போக முடியாது. சித்திக்கு கிச்சன்ல கொஞ்சம் ஹெலப் பண்ணிட்டு ஆபிஸ் கிளம்ப தான் நேரம் சரியாக இருக்கும்…’ என்று நினைத்துக் கொண்டு தன் படுக்கை விரிப்பை சீர் செய்தாள்.
பிறகு தன் காலை கடன்களை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். அதுவரைக்கும் யசோதா சமையலில் ஒரு கண்ணும் இவள் அறையில் ஒரு கண்ணும் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இவ்வளவு நேரமாச்சு… இப்பவாவது எழுந்து வந்தேயா..இன்றைக்கு வாக்கிங் போகலயா…”
“இல்ல சித்தி… நல்லா தூங்கிட்டேன். அதனால் வாக்கிங் போகல…”
“நீ வாக்கிங் வேணுமானலும் போயிட்டு வா… நா கிரேவி பண்ணிட்டேன். இன்னும் ரொட்டி மட்டும் தான் செய்யனும்… அத நா பார்த்திக்கறேன்.”
“இல்ல சித்தி… இன் மேல் வாக்கிங் போக முடியாது. அதனால உங்களுக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணிட்டு ஆபிஸ்கு கிளம்ப தான் நேரம் சரியாக இருக்கும்…” என்றாள்.
“அதுவும் கரெக்ட் தான்… வா வந்து வேலய பாரு…”
சித்தி சொல்லவும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். இருந்தும் வேலையை முடிக்கும் போது நேரமாகிவிட்டது.
அப்பவும் சித்தி,”அம்ரீ எல்லா ரொட்டியும் சுட்டெடுக்க இன்னும் ஹாப் நெவர் ஆகும். உனக்கு இப்பவே ஆபிஸ்கு டைமாகிடுச்சு பாரு… போயி குளித்துவிட்டு கிளம்பு…” என்றாள்.
“இருக்கட்டும் சித்தி… மீச்சத்த சுட்டு கொடுத்திட்டு போறேன்…”
“போ நா பார்த்துக்கேறன்…” அவள் சிற்றன்னை சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக செய்துக் கொடுத்து விட்டு தான் குளிக்கப் போனாள்.
எவ்வளவு வேகமாக கிளம்பியும் அவளால் அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு போய் சேர முடியவில்லை. இன்றும் தாமதமாகத் தான் போனாள். பையோ கிளாக்கில் தன் வரவை பதிவு பண்ணிவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தாள். சமரித் அலுவலகம் இன்னும் வரவில்லை. அதனால் தப்பித்தோம் பிழைத்தோம் என தன் அறைக்கு ஓடிவிட்டாள்.
பதினொன்றாகியும் சம்ரித் இன்னும் வரவில்லை என்றானதும் ‘ஏனோ இன்னும் வரவில்ல… என்னாச்சு தெரியல…’ அம்ரீதா கவலைக் கொண்டாள்.
சம்ரித்,”நா லேபர் ஆபிஸ் போயிட்டு தான் வருவேன்.” என சொல்லிச் சென்றதை அம்ரீதா மறந்துவிட்டாள்.
சம்ரித் திரும்பி வந்து,”அம்ரீ… நா லேபர் ஆபிஸ்கு போயிட்டு தான் வருவேன் என சொல்லி சென்றத மறந்துவிட்டாய் போல இருக்கு…” என ஞாபகப்படுத்தவும், அம்ரீதாவுக்கு நினைவு வந்தது.
“அச்சச்சோ… நா மறந்தே போனேன்…” என சொல்லி நுனி நாக்கைக் கடித்தாள்.
“நல்லா மறந்து போனே… போய் உன் ஒர்க்க பாரு…” என கூறி அனுப்பி வைத்தான்.
அலுவலகம் முடிந்து சம்ரித்திடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள். வழக்கமாக அவன் அழைக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். நேரம் தவறாமல் போன் செய்து மணிக்கணக்கில் இருவரும் பேசினார்கள்.
தினம் போலவே அன்றும் தாமதமாக எழுந்து, சித்திக்கு உதவிட்டு அரக்க பறக்க கிளம்பினாள். அலுவலகத்துக்கு இவளுக்கு முன்னாலே சம்ரித் வந்துட்டான்.
அவனைப் பார்த்து,”குட்மார்னிங் சார்…” என்றாள்.
அவனும் பதிலுக்கு,”குட்மார்னிங்… வந்தே லேட் போய் ஒர்க்க பாரு…” என்றான்.
‘எப்படி தான் இவன் மட்டும் டைமுக்கு கிளம்பி ஆபிஸ்கு வரனோ…’ என்று நினைத்தாள்.
அலுவலக வேலை முடிந்தும் சம்ரித் அம்ரீதாவை அழைத்தான். அவள் எதுக்கு கூப்பிடுகிறான் என எண்ணியவாறே அவன் அறைக்குச் சென்றாள்.
“இன்றைக்கும் உனக்கு கால் பண்ணலமா… உனக்கு ஏதும் டிஸ்டர்பாக இல்லயா…”!
கேட்டவுடன் ஒத்துக் கொள்ள சங்கடப்பட்டு ஏதோ சொல்லிச் சமாளிக்கனும் என யோசித்தாள். உண்மையை சொல்லிடலமோ என்று கூட நினைத்தாள். அதை சொன்னால் போன் செய்யாமல் விட்டுவிடுவானோ… அவன் கூட பேசனும் மனம் நிறையாக ஆசை… இப்படி நிறைய நினைத்தாள் எதையும் அவன்கிட்ட சொல்லமுடியாமல் தவித்தாள்.
அம்ரீதா என்ன சொல்வது யோசிச்சுகிட்ட இருக்கும் போது அதுக்குள்ள சம்ரித்,”ஒரு கேள்வி தான் கேட்டேன். அதுக்கு பதில் சொல்ல இவ்வளவு யோசிக்கற… ஏன் உனக்கு இஷ்டமில்லயா…”
“ஐயோ… அப்படி எல்லாம் இல்ல…” உடனே மறுத்தாள்.
“வீட்ல ஏதாவது சொல்லவாங்களா.. .” எனக் கேட்டான்.
சித்திக்கு தெரியும் எப்படி சொல்வாள். என்ன கூறி சமாளிக்கலாம் என யோசித்தாள்.
“வீட்ல தான் திட்டினாங்களா… அது தெரியாமல் தினம் தினம் கால் செஞ்சு பேசியிருக்கேன் பாரு…” அவனா ஒன்றை மனதில் நினைத்துக் கொண்டு அது தான் உண்மை எனப் பேசினான்.
‘கண்டதையும் நனைத்து மனச ஒலப்பிக் கொள்வானோ…’ என பயந்து,”இல்ல… உங்ககிட்ட பேசிட்டு தூங்கறதுக்கு லேட்டாகிடறதுனால… காலையில் எழுந்து சித்திக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணிட்டு, பிறகு ரெடியாயிட்டு வரதுக்குள்ள நா வழக்கமா போற பஸ் கிளம்பி போயிடுது… அடுத்த பஸ்கு வெயிட் பண்ணி ஏறி வரதுக்குள்ள ஆபிஸ் வர லேட்டாயிடுது…” என உண்மையைச் சொன்னாள்.
சம்ரித்கோ அம்ரீகு சர்ப்ரைஸாக லேடிஸ் பைக் வாங்கி கொடுக்கனும் ஆசை… இவன் மனசுக்குள் காதலோ… என்னவோ… தெரியவில்லை.
அடுத்த நாள் சம்ரித். போனில் அம்ரீதா,”வா வந்து பாரு… உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வெயிட்டிங்…” என்றான்.
வாயு வேகமோ… புயல் வேகமோ… என அம்ரீதா ஓடி வந்தாள். மில் வாசலில் வந்துப் பார்த்து பிரமித்துப் போனாள். அங்கு அவள் வாங்க ஆசைப்பட்ட பைக்டோடு, ஷோரும் ஊழியர்கள் இருவர் நின்றுக் கொண்டிருந்தார்கள்.
“வா வந்து பாரு… உனக்கு தான்இந்த சர்ப்ரைஸ்… எப்படி இருக்குது இந்த பைக்…” எனக் கேட்டான்.
‘எனக்கா இந்த பைக்… இவன் வாங்கி கொடுப்பதா… பார்க்கிறவங்க எல்லாம் என்ன சொல்வார்கள்… சம்ரித்துக்கும் இவளுக்கும் தொடர்பு இருக்குதுனு தப்புத்தப்பாக பேசவாங்களோ…’ என பயந்து நடுங்கினாள்.
அதுவே அவளுக்கு கோபமாக மாறி விருட்டென்று திரும்பி போய் தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அவள் கோபமாகப் போனதும் என்னவோ… ஏதோ… என பதறி அடித்துக் கொண்டு பின்னாலேயே ஓடினான். அந்த பதட்டத்தில் அவள் முன்னால் போய் நின்று,”ஏன் அம்ரீ உனக்கு பைக் கலர் பிடிக்கலயா… இல்ல இந்த மாடல் பிடிக்கலயா… என்னதான் பிடிக்கல… சொல்லு மாத்திக்கலாம்…” என்று வாஞ்சையாக்க் கேட்டான்.
“இந்த பைக்கே பிடிக்கலே…”
“இந்த மாடல் வேண்டாம்னு சொல்லு… வேற மாடல் வாங்கிகலாம்…”
அவனை முறைத்துக் கொண்டே,”எனக்கு நீங்க பைக் வாங்கி கொடுக்கறதே பிடிக்கல…” என்றாள்.
“ஏன் நா வாங்கி கொடுக்க கூடாத…” ஆத்திரத்துடன் கேட்டான்.
உடனே அவள் திரும்பி நின்று,”நீங்க வாங்கி கொடுத்து த நா ஓட்டிட்டு போனேன் வச்சிகங்கோ… இந்த ஊர்உலகம் ஒன்னுக்கு இரண்டா திரிச்சு பேசும்…”
இவனும் அவளுக்கு எதிர்ப்பக்கமா வந்து நின்றுக் கொண்டு,”என்ன பேசும்… பேசினால் பேசட்டுமே… நாம இந்த காதுல வாங்கி அந்த காதுல வாங்கி விட்டுகிட்டே போயிட்டே இருக்கனும்…” என்று எரிச்சலுடன் சொன்னான்.
“பேசினால் பேசட்டும் உங்கள மாதிரி கண்டுக்காமல் போக முடியாது.” இவளும் ஆத்திரத்துடன் கூறினாள்.
“கண்டுக்க வேண்டாம்னு சொல்ல… ஜஸ்ட் இக்னோர் பண்ணிட்டு தான் போ என சொல்றேன்.” கத்தினான்.
“எப்படி தான் இக்னோர் பண்ணிட்டு போக சொல்றிங்க… என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது.” இவளும் பதிலுக்கு கத்தினாள்.
இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப் போய் அவள் பேசும் வாயை அடைக்கும் வழி அறியாமல் அவள் உதட்டை இழுத்து பிடித்து உறிஞ்சினான். இவன் திடீரென அவன் உதட்டோடு உதடு வைத்து கிஸ் கொடுப்பான் என அறியாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
சிலநொடிகள் கழித்து அவள் சிலை போன்று நிற்பதைக் கண்டு தன் தவறை உண்ர்ந்து தன் தலையில் அடித்து, பதறி,”சாரி, சாரி… தெரியாமல் பண்ணிட்டேன்.” விலகி நடந்தான்.
‘இரவில் போன் செய்தால் போனை எடுப்பதா… வேண்டாமா…’ என யோசித்தாள்.
சம்ரித்தும் அம்ரீதாவுக்கு போன் பண்ண மறந்துவிட்டு வேறு ஒரு கனவில் மிதந்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை சம்ரித்தும் காதலில் குதித்துவிட்டானோ… அது தான் கனவில் காணுக்கிறானோ… என்னவோ…
அவனோ… அவளோ… யார் முதலில் காதலை செப்புவது தயங்கினர்.
அவனோ… அவளோ… முதல் அடியை எடுத்து வைப்பது அஞ்சினர்.
பெண்ணவள் வெட்கம் கொண்டு சொல்லாமல் இருக்க…
ஆடவனோ தைரியம் கொண்டு காதலை சொல்ல தயாராக இருக்க…
காலம் இவர்களைப் பார்த்து சிரிக்க தயாராக இருந்தது.






