ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

நெஞ்சோரம் பூத்தவளே 15

பூ  – 15   மகள் கழுத்தில் தாலியோடு வந்து நின்றதை பார்த்த மருதப்பன், அதிர்ச்சியில் அப்படியே சிலையாகச் சமைந்து போய் நின்றார்!  முல்லையின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றையும், செந்தூரனையும் மாறி மாறிப் பார்த்தார்   “முல்லை… என்னம்மா இது?” என்று நெஞ்சில் கைவைத்தபடி நிலை தடுமாறி  வாசப்படியிலேயே சரிந்து உட்கார்ந்து விட்டார்  மருதப்பன். அவரின்  தொண்டை அடைத்தது, கண்கள் குளம் போலப் பெருகின.   அப்பா என்று அவள் பதறி வந்து அவரது கையைப் […]

நெஞ்சோரம் பூத்தவளே 15 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 13

பூ  – 14   செந்தூரன் அவளது கண்களை நேராகப் பார்த்தவன். “நீ சம்மதிச்சா… உன்னை என் வாழ்க்கைத் துணையா ஏத்துக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன் முல்லை.”   அவன் சொன்ன அந்த வார்த்தைகள் பேரிடி மின்னல் போல் விடியற்காலையின் அமைதியை கிழித்துக் கொண்டு அவளது இதயத்திற்குள் இறங்கின. அதிர்ச்சியில் உறைந்து போனாள்.   “சின்னையா… என்ன சொல்றீங்க நீங்க?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.   “நான் சொல்றது உண்மை தான் முல்லை. உன்னை என் மனைவியா

நெஞ்சோரம் பூத்தவளே 13 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 13

பூ  – 13 மருதப்பன் தன் நடுங்கும் கைகளோடு மெதுவாக எழுந்து வந்து கதவைத் திறந்தார். அதே நேரத்தில், கதிரேசனின் ஆட்கள் யாருடைய பார்வையிலும் சிக்காமல் இருக்க சுற்றுமுற்றும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டே மருதப்பன் வீட்டை நோக்கி வந்தனர். ஆனால், அவர்களுக்கு முன்னதாகவே அந்த வீட்டின் வாசலில் கம்பீரமாக நின்றிருந்த ஒரு உருவத்தைக் கண்டதும் மருதப்பனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. நெற்றியில் பெரிய திலகம், வெள்ளை வேட்டி சட்டை, அதிகாரம் பொங்கும் தோற்றம், கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து

நெஞ்சோரம் பூத்தவளே 13 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே

பூ  – 12 அரண்மனை வாசலில் வந்து நின்ற புல்லட்டின் இன்ஜினை அணைத்துவிட்டு, நேராக பெரியசாமி அமர்ந்திருந்த திண்ணையை நோக்கி புயலென நடந்தான் செந்தூரன். அவனது முகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த கோபமும், கண்களில் தெரிந்த தீட்சண்யமும் அங்கிருந்த வேலையாட்களைப் பதற வைத்தது. வழக்கமாக எல்லோரிடமும் புன்னகையோடு பேசும் செந்தூரனின் இந்தக் கோலம் அவர்களுக்கு புதிதாக இருந்தது. அந்த நேரத்தில், கையில் கணக்கு புத்தகங்களுடன் அமர்ந்திருந்த பெரியசாமி, மகனின் கனமான காலடிச் சத்தத்தைக் கேட்டு தலைநிமிர்ந்தார். செந்தூரனின் முகத்தில்

நெஞ்சோரம் பூத்தவளே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 11

பூ  – 11 ‘யாரு இந்த மருதப்பன்? எங்க அப்பா பெயரை கேட்டதும் ஏன் இந்த மனுஷன் இப்படி பதறிப்போய் கொந்தளிக்கிறாரு? இருபது வருஷத்துக்கு முன்னாடி எங்க குடும்பத்தால இவருக்கு என்ன பாதிப்பு நடந்திருக்கும்? அதுவும்… உன் அப்பன் பெரியசாமியைப் போய் கேளுன்னு சவால் விட்டுட்டுப் போறாரே!’ குழப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், அடிபட்ட காலோடு தவித்த முல்லையின் முகம் மட்டும் தான் அவனது கண்ணுக்குள் வந்து போனது. தன் தந்தையிடம் பிறகு பேசிக்கொள்ளலாம், இப்போது எப்படியாவது காரை

நெஞ்சோரம் பூத்தவளே 11 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 10

பூ  – 10 முல்லையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல அவள் வீட்டுக்கு வந்திருந்தான் செந்தூரன். ஆனால், அங்கே வீடு பூட்டியிருந்தது. “வீடு பூட்டியிருக்கே… அடிபட்ட காலை வச்சுக்கிட்டு இவளுக்கு என்ன இவ்வளவு அவசரம்? நான் வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் பொறுக்க முடியலையா?” என்று அவள் மீது கோபப்பட்டுக் கொண்டே தன் புல்லட்டைப் பள்ளிக்கூடத்தை நோக்கித் திருப்பினான். பள்ளிக்கூட வளாகத்திற்குள் புல்லட்டை நிறுத்திவிட்டு, விறுவிறுவென முல்லையின் வகுப்புக்குச் சென்றான். ஆனால், முல்லை அங்கே இல்லை. மங்களம் டீச்சர்

நெஞ்சோரம் பூத்தவளே 10 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 9

வரம்பு மீறாத இதழ் சங்கமத்தில், இருவரின் இதயங்களும் மௌனமாக தங்கள் காதலைப் பரிமாறிக்கொண்டன.   மெதுவாக அவளது இதழ்களில் இருந்து தன் இதழ்களைப் பிரித்த செந்தூரன்,  அவளை சுவரோரம் நிமிர்த்தி நிறுத்தினான். அவளது வெட்கம் நிறைந்த முகத்தைப் பார்த்துப் புன்னகைக்க நினைத்த அவனது காந்தக் கண்கள், அடுத்த நொடி அதிர்ச்சியில் விரிந்தன.   செந்தூரன் தன் இதழ்களை விலக்கித் தன்னைத் தள்ளி நிறுத்திய அந்த மறுநொடி… முல்லையின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகச் சுரந்து அவளது கன்னங்களை

நெஞ்சோரம் பூத்தவளே 9 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 8

புல்லட் மலையடிவாரத்துச் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மேகங்கள் கருகருவெனத் திரண்டு வந்தன. குளிர்ந்த காற்று சுழன்றடிக்க, சாலையோர மரங்கள் எல்லாம் பேயாட்டம் ஆடியது . தூரத்தில் கடகடகடவென இடி சத்தம் முழங்கத் தொடங்கியது. முல்லை பயத்தில் லேசாக நடுங்கி, வண்டியின் பின் கம்பியை இன்னும் இறுக்கமாகப் பற்றி கொண்டாள். வண்டியின் கண்ணாடியில் அவளது முக மாற்றத்தைக் கவனித்த செந்தூரன், வண்டியின் வேகத்தைச் சற்று குறைத்து அவளது பக்கம் சாய்ந்தான். “வானம்

நெஞ்சோரம் பூத்தவளே 8 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 7

தேக்கு மரத்தாலான  பெரிய டைனிங் டேபிளில், செந்தூரன் அமைதியாக மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் அவனது தந்தை பெரியசாமி  சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  செந்தூரனின் மனதில் காலையில் அவள் அடிப்பட்ட கால் விரலுக்கு மருந்து போட்டபோது  முல்லை தன் கையை இறுக்கமாகப் பற்றிய  ஸ்பரிசமும், அவளது குண்டு கண்களில் தெரிந்த தவிப்பும் தான் ஓடிக்கொண்டிருந்தது. நர்ஸ்  கண்ணாடிச் சில்லை எடுக்கும்போது அவளது விரல்கள் தன் கையை எப்படி இறுக்கிப் பற்றியாது  என்பது அவனது நெஞ்சுக்குள் மின்கம்பியாக

நெஞ்சோரம் பூத்தவளே 7 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 6

பூ  – 6 அன்று இரவு முல்லைக்கு சாப்பிடக்கூடப் பிடிக்கவில்லை. கையில் புத்தகத்தோடு, செந்தூரன் கொடுத்த இருவாச்சிப் பூக்களை வீசி எறிய மனமில்லாமல், பூக்களை மென்மையாக வருடிக் கொண்டிருந்தாள். பூக்கள் வாடி, நிறம் மாறிப் போயிருந்தன. ஆனால், பூக்களின் நறுமணம் மட்டும் இன்னும் குறையாமல் அப்படியே வீசிக் கொண்டிருந்தது. அந்த வாடிய பூக்களை தன் பாடப் புத்தகத்திற்கு நடுவே மெதுவாக எடுத்து வைத்து பத்திரப்படுத்தினாள் முல்லை. ‘சின்னையா… நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். முழுசா என்ன

நெஞ்சோரம் பூத்தவளே 6 Read More »

error: Content is protected !!
Scroll to Top