ATM Tamil Romantic Novels

என் இனிய ராட்சஷனே 13

அத்தியாயம் 13

 

இளமதி அவன் கையை பிடித்து தடுக்க அசால்ட்டாக அவளின் கையை தட்டிவிட்டவன் அவளின் ஒத்துழைப்பில் இன்னும் தைரியம் வந்தவனாய் கைகளை தாராளமாக உள்ளே நுழைத்தான். 

 

அவள் அவன் அருகில் அத்தனை நெருக்கத்தில் இருக்கும் போது அவள் உடலில் இருந்து வந்த சந்தன மணம் அவனை இன்னும் உசுப்பேற்றியது கைகள் அவளின் வெற்றிடையை அழுத்தி பிடித்து கசக்கி விட அவன் பிடியில் பெண்ணவள் நெளிந்து கொண்டே இருக்க மற்றொரு கையால் அவளின் இடையை வளைத்து தன்னோடு நெருக்கினான். 

 

இன்னுமே அவனுக்கு சரியாக வசதி பத்தமால் போக பின்னிருக்கையில் அவளை தூக்கி சென்று கிடத்தியவன் அவள் மீது படர போக “மாமா என்ன பண்ணுறீங்க யாராவது வர போறாங்க” என்று அவள் கத்த “சும்மா இரு டி மனுஷன் அவஸ்தை புரியாம” என்று பல நாள் கூடி கழித்த மனைவியுடன் கூறுவதை போல் தடலாடியாக கூறிக் கொண்டே அவள் மீது படர்ந்தான்.

 

அவனுக்கு இடைஞ்சல் கொடுத்து டி ஷர்ட்டை கழட்டி எறிய போக “மாமா வேண்டாம் யாராவது வர போறாங்க” என்று அவள் தவிக்க 

“ம்ம்ச்ப்” என்று உச்சு கொட்டியவன் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் தன் மீசை முடியால் உரசி குட்டி குட்டி முத்தங்கள் இட்டான். 

 

அவன் கைகள் அவளின் ஆடை மேலேயே ஊர்ந்து சென்று குவிந்த தாமரை மொட்டுகளில் ஒன்றை பிடித்து கசக்கி விட “ம்ம்ம் மா..மா..” என்று திணற ஆரம்பித்தாள். 

 

அவள் டி ஷர்ட்டை கழட்டி விடாமல் பிடிவாதமாக பிடித்து வைத்து கொள்ள மேலாடையின் உள்ளே அதிரடியாக தன் தலையை நுழைத்தவன் இடைஞ்சல் செய்த உள்ளாடையின் ஊக்கையும் பின்னே கை நுழைத்து கழட்டினான் அவளின் மார்பின் மத்தியில் முகம் புதைத்து அங்கிருந்த பன்னீர் துளிகளை நா கொண்டு வருடினான் இளமதி இதழ் கடித்து தன் தவிப்பை அடக்கியவள் இடம் பொருள் ஏவல் மறந்து காலை அவனின் இடையை சுற்றி போட்டு தன் தவிப்பை அடக்க அவனை தன்னோடு இன்னும் சேர்த்தணைத்து கொண்டாள் அவளின் பெண்மை அவன் செயலில் பொங்கி வழிய தடுமாற ஆரம்பித்தாள். 

 

அந்த நேரம் சரியாக கருப்பனின் மொபைல் ஒலித்தது அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கருமமே கண்ணாக அவளுள் முழுதாக தொலைந்து போக அவன் நினைக்க 

முழுதாக ரீங் வந்து அழைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் மொபைல் ஒலித்தது கருப்பன் எழுந்து முன் இருக்கையில் இருந்த மொபைலை எடுக்க தீலிப் தான் அழைத்திருந்தான் அதை எடுத்து காதில் வைக்க. 

 

இளமதி பதட்டத்துடன் எழுந்த அமர்ந்தவள் யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் தன் உடையை அவசர அவசரமாக சரி செய்து கொண்டு இருந்தாள் போனில் அவனுடன் பேசிக் கொண்டு இருந்தாலும் கண்கள் இளமதியை தான் பார்த்தது அவளின் ஒவ்வொரு செயலையும் கண்களாலேயே படம் பிடித்து கொண்டு இருந்தான் அவளின் முகச்சிவப்பையும் சேர்த்து ரசித்து கொண்டு இருந்தான் இத்தனை அழகும் தனக்கு தான் என்று நினைத்தவனுக்கு தன்னை அறியாமல் உள்ளம் துள்ளாட்டம் போட்டது. 

 

போனில் மறுமுனையில் இருந்த தீலிப் “ஹலோ மச்சான் இருக்கியா” என்று கத்திக் கொண்டே இருக்க கருப்பன் சுயநினைவுக்கு வந்து “சொல்லு டா” என்க “மச்சான் கிளம்பிட்டியா” என்று கேட்டான். 

 

“ம்ம் கிளம்ப போறேன்” என்றான் அவளை மையலுடன் பார்த்து கொண்டே 

“மச்சான் ஒரு ஹெல்ப் டா எங்க இரண்டு பேரையும் பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ணிடு டா இங்கே ஆட்டோ எதுவும் கிடைக்கல நீ எங்கே இருக்க” என்று கேட்டான் தீலிப். 

 

“இங்கே தான் இருக்கேன் வரேன்” என்றவன் அழைப்பை துண்டித்தான்

“நான் இப்போ கிளம்பனும் தீலிப் வெளியே காத்துட்டு இருக்கான்” என்று தயங்கி கொண்டே கூற 

“அப்போ நீங்க எனக்காக வரலையா” என்று அவள் முகத்தை திருப்பி கெண்டு கோபித்துக் கொள்ள 

“இன்னொரு நாள் கண்டிப்பா வரேன் 

என் செல்லம்ல வெள்ளக்கட்டில்ல அவளின் கன்னத்தை பிடித்து கொஞ்ச” அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

 

வீட்டில் இருந்தால் நாலு வார்த்தைக்கு மேல் பேசாதவன் இன்று இவ்வளவு பேசுவது அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது “சரி கிளம்புங்க” என்றாள்

கருப்பன் அவளை விட்டு பிரிய மனமே இல்லாமல் அவளை தன்னோடு சேர்த்தணைக்க அவனின் மொபைல் மீண்டும் ஒலித்தது “ இவன் ஒருத்தன் மனுசனை நிம்மதியா இருக்க விடாம” என்று வாய்விட்டு புலம்பியவன்

 “சரி நான் கிளம்புறேன்” என்று அவளை வெளியே இறக்கிவிட்டு அங்கிருந்து தன் காரில் சென்றான். 

 

மதி அவனுக்கு கையை காட்டிக் கொண்டே ஏக்கம் சுமந்து விழிகளுடன் அவனை பிரியவே மனம் இல்லாமல் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் கருப்பனும் அவளை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டே புது பொண்டாட்டியை விட்டு பிரிய மனம் வலித்தாலும் வேறு வழியில்லாமல் அங்கிருந்து சென்றான். 

 

மறுநாளும் கருப்பனுக்கு அவளின் நினைப்பில் வேலையே ஓடவில்லை 

இங்கே இளமதியும் பாடத்தில் கவனம் இல்லாமல் தன் மாமன் நினைவிலேயே உண்ணாமல் உறங்காமல் இருந்தாள். 

 

கருப்பன் இது சரிப்பட்டு வராது என்று நினைத்தவன் அவளுக்கு போன் வாங்க சென்றான். 

 

மதியிடம் மொபைல் இல்லாததால் அவனால் அவளிடம் பேசக் கூட முடியவில்லை அவள் கல்லூரியில் முதல் நாள் சேரும் போது இவன் மொபைல் வாங்கி தர கேட்க சிவகாமி உடனே “எதுக்கு இவளும் அவங்க ஆத்தாக்காரி மாதிரி எவன் கூடயாவது பேசி ஓடிப்போக வா” என்று கேட்க இளமதி “எனக்கு போனே வேண்டாம்” என்று கோபத்தில் கூறிவிட்டாள் அதன் பின் அவனும் வாங்கி தரவில்லை.

 

இப்போது அவளை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் தவித்த கருப்பன் அன்றே ஒரு மொபைல் கடைக்கு சென்று இளமதிக்கு ஒரு மொபைலை வாங்கி கொண்டு அவளின் கல்லூரிக்கு சென்றான். 

 

மதிய வேளையில் அனைவரும் சாப்பிட செல்ல அவளுக்காக கல்லூரி வளாகத்தில் காத்திருந்தான் காலம் போன காலத்தில் காதல் கத்திரிக்காய் எல்லாம் தேவையா என்று அவன் மனம் கேள்வி எழுப்பினாலும் அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை புதிதாக காதலிக்கும் காதலனை போல் தன்னவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான். 

 

 இளமதி தன் தோழியிடம் ஏதோ பேசிக் கொண்டே வந்தவள் அங்கே மரத்தடியில் தனக்காக காத்திருக்கும் தன் மாமனை பார்த்து வெட்கம் பிடுங்கி தின்றது உடனே அவன் அருகில் செல்லாமல் அவனை தூரத்தில் இருந்தே ஒளிந்து கொண்டு அவன் செயல்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தாள். 

 

மரத்தடியில் அங்கே வந்து கொண்டு இருக்கும் பெண்களில் தன்னவள் எங்கே இருக்கிறாள் என்று அவன் கண்கள் தேடிக் கொண்டு இருந்தது கையில் இருந்த பிளாஸ்டிக் கவரில் ஏதோ ஒரு பொருளை வைத்து கொண்டே நின்றிருந்தான். 

 

ஆறடிக்கு சற்று அதிகப்படியான உயரம் தான் உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு கம்பீரமான தோற்றத்துடன் எப்போதும் அணியும் அதே வெள்ளை நிற வேட்டி சட்டை தான் அணிந்து இருந்தான் வலது கையில் தங்க காப்பு இடது கையில் சில்வர் நிற கைக்கடிகாரம் அவன் அகன்று விரிந்த மார்பு மேலே இரண்டு பட்டன்கள் போடாததால் நன்றாகவே காற்று வாங்கி கொண்டிருந்தது அதில் மீன் போன்ற டாலருடன் கூடிய தங்க செயின் அணிந்து இருந்தான் இருவரும் ஒன்றாக தனிமையில் இருக்கும் போது அவன் அசைவுகளுக்கு ஏற்ப அவள் முகத்தில் மோதிக் கொண்டு இருக்கும் அதே செயின், காற்றில் அலை அலையான கேசம் பறந்து கொண்டு இருக்க ஆங்காங்கே நரை முடிகளும் இருந்தது அதுவும் அத்தனை அழகாக தான் இருந்தது. 

 

அங்கிருந்த அனைத்து மாணவ மாணவிகளும் சென்ற பின் தன்னவளை தேடி அவள் வராததால் அவன் முகம் சோர்ந்து போனது 

அவள் இல்லை என்று திரும்பி செல்ல அவன் முன் ஓடிச்சென்று மூச்சிறைக்க நின்றாள் இளமதி. 

 

அவளை பார்த்த அடுத்த நொடி தலைவன் அவனின் முகம் மலர்ந்தது அத்தனை மகிழ்ச்சி அவன் முகத்தில் 

அவன் முன் ஓடி வந்ததில் மூச்சு வாங்கி கொண்டு நின்றிருந்தாள் இளமதி. 

 

“எதுக்கு கண்ணு இப்படி ஓடி வர” என்று கேட்டவனின் கண்கள் அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஏறி இறங்கிய திமறி தெரிந்த அவளின் கொங்கைகளுக்கு சென்றது அவன் பேச்சுக்கும் பார்வைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது மதி உடனே தன் துப்பட்டாவை சரி செய்ய அவன் பார்வையை அங்கிருந்து அவள் முகத்துக்கு கொண்டு வந்தான். 

 

“இந்தா கண்ணு உனக்கு போன் வாங்கிட்டு வந்தேன்” என்று அவள் கையில் கொடுக்க மதி அதை தன் கையில் வாங்கியவள் “இப்போ எதுக்கு மாமா எனக்கு போன்” என்று கேட்டாலும் கவரில் இருந்த போனை அவள் கைகள் பிரித்து பார்த்தது. 

 

“எதுக்குன்னு உனக்கு தெரியாதா இத்தனை நாள் எப்படி இருந்தேன்னு தெரியலை இப்போலாம் ஒரு ராவு கூட நீ இல்லாம கடத்த முடியலை எப்பவும் அதே நினைப்பா தான் இருக்கு” என்று அவள் அருகில் வந்து ஹஸ்கி குரலில் அவளுக்கும் மட்டுமே கேட்க்கும் படி கூற

“ச்சீ போங்க நீங்க ரொம்ப மோசம்” என்றவள் தலைகுனிந்து நிற்க

 “ராவுல உன் நினைப்பு வரும் போது போன் பண்றேன் பேசு வெள்ளிகிழமை சாய்ந்திரம் ரெடியா இரு உன்னை வந்து கூட்டிட்டு போறேன்” என்றான். 

 

“எங்கே” என்று அவள் கேட்க

“ம்ம் தேன்நிலவுக்கு” என்றான் அவளை பார்த்து கண்ணடித்து இவனுக்கு இவ்வளவு தெரியுமா என்று தோன்றியது அவளுக்கு எப்போதும் விரைப்பாக ஊரில் சுற்றுபவன் இவ்வளவு ரொமான்டிக் பாயாக இருப்பான் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை. 

 

“ராத்திரி மாமா போன் பண்றேன் எடு” என்று கூறியவன் தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுக்க “எதுக்கு” என்று அவள் கேட்க 

“இந்த ஒரு வாரத்துல சாப்பிட்டு உடம்பை தேத்தி வை என்னை தாங்கனும்ல்ல உடம்புல வலு வேண்டாம் எனக்கு நிறைய ஆசை இருக்கு எனக்கு இணையா ஈடு கொடுக்கனும்ல்ல” என்று அவன் கூற. 

 

“அய்யோ எப்போ பாரு இதை பத்தி மட்டும் தான் பேசுவிங்களா” என்று அவள் வெட்கம் மற்றும் சற்று கோபமும் கலந்த குரலில் கேட்க 

“ம்ம் பொண்டாட்டி கிட்ட வேற எதை பத்தி பேசுவாங்க முப்பது வருஷமா பிரம்மச்சாரியாவே இருந்துட்டேன் பிள்ளை குட்டின்னு இனிமேவாது ஜாலியா இருக்க வேண்டாமா” என்றான். 

 

அவன் பேச்சில் மெய் மறந்து அவனை வைத்த கண் வாங்காமல் அவள் பார்க்க “போ போய் சாப்பிடு மாமனை சைட் அடிக்காம” என்று கூறிவிட்டு அவளை பார்த்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான். 

 

 

 

 

 

 

3 thoughts on “என் இனிய ராட்சஷனே 13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top