20
இன்று
கிரிதரன் பேசி விட்டு சென்ற பின்பு அங்கேயே ஆணி அடித்தார் போல் நின்ற திலோத்தமாவுக்கு கடந்த கால வாழ்க்கை அலை போல தோன்றி அவளை அலைக்கழிக்க…
அதன் தாக்கத்தை தாங்க முடியாமல் கால்கள் துவள அங்கையே ஒரு நாற்காலியை பிடித்து கொண்டு சரிந்து அமர்ந்தவளுக்கு இன்னமும் அவள் எந்த இடத்தில் தவறு செய்தால் என்று புரியவே இல்லை…
தவறு செய்யாமல் தண்டனை அனுபவிப்பது தான் அவல் தலை எழுத்தா…?? என தன் மேல் எழுந்த கழிவிரக்கத்தில் தன்னை தானே நொந்து கொண்டு கதறி அழுதாள் … தலையில் அடித்து கொண்டு அழுதவள் கையில் வந்து சிக்கியது கிரிதரன் இழுத்து போட்டு அவள் பதுக்கி வைத்திருந்த தாலி…
இது…இதுவல்லவோ அவள் பட்ட அனைத்து துன்பங்களுக்கான அடையாளம்… அவள் அறியாமைக்கு கிடைத்த தண்டனை… அவள் அனுபவித்த நரக வேதனைகளின் நியாபக சின்னம் இன்னும் என்ன என்னவோ எண்ணங்கள் மேலேழும்பி… இதை கழட்டி எரிந்தால் என்ன என்கிற தோன்றுகையிலே அவள் உள்ளம் தொய்ந்து போய் விடுகிறது… அது முடிந்து இருந்தால் எப்போவோ கழட்டி எரிந்து இப்பாளே… தாலி தமிழ் நாட்டு பெண்களின் உயிர் அல்லவா…
ஒரு மூச்சு முழுவதும் அழுது தீர்த்தவள்… அதற்கு மேல் அங்கு இருக்க முடியாதவள்… எப்படி வீடு வந்து சேர்ந்தால் என்றால் பதில் அவளுக்கே தெரியாது… இந்த ஐந்தரை அடி உருவத்தில் அவளுக்கு அந்த நானூறு கிராம் இதயத்தை சுமப்பதற்கே பெரும் பாடு பட்டு போனாள் பெண்ணவள்… அதிக கனம் கூடியக் காரணத்தால்…
பஞ்சாயத்தை முடித்து விட்டு பஞ்சாட்சரம் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்…
திலோவின் திருமணம் நின்ற செய்தியை கேட்டு தையல்நாயகிக்கு ஒரே கும்மாளம் தான்…
இந்த மாதிரி கூத்து எல்லாம் எங்க நடக்கும்… கேட்டியா சொந்த மகன் தாலி கட்டுன மருமகளுக்கு வேற மாப்பிளை பார்க்கிற அதிசய மாமனார் இங்கன இருக்குற வரைக்கும் இன்னும் என்ன கூத்து வேணுனாலும் நடக்கும்… அடியே வசந்தி!!! பொண்டாட்டி ஆகாது புள்ளைங்க ஆகாதுன்னு ஒதுக்கி வச்சிட்டு மருமகள் மருமகள்னு தலையில தூக்கி வச்சி ஆடுனாரே ஒரு பெரிய மனுஷன்… இப்போ அவருக்கு கதி என்ன தெரியுமா… ஊரை கூட்டி வச்சி உச்சந்தலையில் ஆணி அடிச்சி புட்டா அந்த சிறுக்கி இங்க அவர் பெத்த புள்ளை கல்யாணத்தை அம்போன்னு விட்டுட்டு… கண்ட கழுதைக்கு கல்யாணம் கலட்கிட்டிக்கிட்டு திரிஞ்சார் இல்லை அவருக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலையும் வேணும்… பெத்த பிள்ளைங்க மேல பாசமும் பொறுப்பும் காட்டலைனா… இப்படி தான் நடக்கும்…என வாய்க்கு வந்ததை பேசிவிட்டு பஞ்சாட்சரத்தை பார்த்து நொடித்துக் கொண்ட தையல் நாயகிக்கு…
நாக்கு மேல் பல்லை போட்டு பேசும் மனைவியை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார் பஞ்சாட்சரம்… அதற்காக அவர் சொல்லும் அபண்டாமான பழிச் சொல்லை தாங்கிக் கொள்ளவும் இல்லை அவர்… “யாரை பார்த்துடி பொறுப்பில்லாத அப்பன்னு சொல்ற… ஓடி போன உன் புள்ளை எங்க போனான் எப்படி போனான்னு உனக்கு தெரியுமாடி… இல்லை அவன் எங்க போனானோன்னு பதறி ஆளை வச்சாவது தேடி இருப்பியா… நான் தேடுனேன்டி என் புள்ளைய காணாம இராப் பகலா ஊர் ஊருக்கு ஆளை வச்சு நான் தேடினேன்… இப்போ உன் புள்ள ஊர் மெச்சும் படி வந்து நிக்க யாருடி காரணம் நீயா…??? மனசு ஒடிந்து போன பிள்ளைய மனச தேத்தி வெளிநாட்டுக்கு மறைமுகமா ஆள் வச்சு அனுப்பி வச்சது நான்டி… என்ன சொன்ன என் பொண்ணு கல்யாணத்தை அம்போன்னு விட்டுட்டேனா… ஆமா நீ பார்த்து வச்ச மாப்பிள்ளை யார் சொல்லி வந்தான்னு நினைச்சுட்டு இருக்க… அவன் என்கிட்ட படிச்ச பையன்டி… மேனகா என் பொண்ணுன்னு தெரிஞ்ச ஒரே காரணத்துக்காக மறு வார்த்தையே கேக்காம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்… பெருசா பேச வந்துட்டா பிள்ளைகளை பெத்து வளர்த்தால் மட்டும் போதாது… அவங்களுக்கு நாலு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து வளர்க்கணும்…!!” என்றார் முகத்தில் தான் சரியான தந்தையாக தான் இருந்தேன் என்கிற நிமிர்வு அவரிடம்…
க்கும் புள்ளையாம் புள்ளை பொண்டாட்டி இல்லாம புள்ளைங்க எங்க இருந்து வந்தாங்களாம்… வானத்தில் இருந்து குதிச்சா இல்லை… பூமியில் இருந்து பொத்துகிட்டு வந்துச்சா என புருஷன் பேச்சில் கடுப்பானார் தையல் நாயகி
“ உன்கிட்ட போய் சொன்னேன் பாரு என்னை சொல்லணும்…!!” என்று காட்டமாக சொன்னவர் தோளில் இறங்கிய துண்டை உதறி போட்டுக் கொண்டு எதிர் வீட்டை நோக்கி சென்றார்… மாமனார் கடமை முடியவில்லையே…
கிரிதரன் விஷயத்தில் வேண்டுமானால் முதலில் அவர் கோட்டை விட்டு இருக்கலாம் ஆனால் ஒரு தந்தையாக எந்த இடத்திலும் அவர் கடமையை விட்டுக் கொடுத்ததில்லை… மகன் ஒழுக்கமாக வளர வேண்டும் என்று கண்டித்தாரே ஒழிய அவன் நாசமா போக வேண்டும் என்று ஒரு நாளும் எண்ணியது இல்லை… அன்று வீட்டை விட்டு ஓடி போனவனை இரண்டு வாரம் ஊன் உறக்கம் இன்றி தேடி அலைந்து கண்டு பிடித்தவர்… அவனை நேரடியாக அணுக முடியாமல் தன்னோடு பணி புரிந்த வேதாச்சலம் மூலம் அவனை திரட்டி தேற்றி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்… அதுவும் அவனுக்கே தெரியாமல்…எங்கே தெரிந்தால் தன் மீது உள்ள கோவத்தில் செல்லாமல் இருந்து விடுவானோ என்று அஞ்சியே மறைத்தார்… மேனகை விஷயத்திலும் அப்படியே எட்டி நின்றாவது மகளை பார்த்து விட வேண்டும் இல்லாவிட்டால் அந்த நாளே விடியாது… திலோவை பள்ளியில் விடும் போது மேனகையுடன் பேசி விட மாட்டோமா என்றே ஆவலோடு செல்வது… மற்ற இடத்தில் என்றால் எங்கே தையல் நாயகி பார்த்து விடுவாளோ பின் மகளை நோகடித்து விடுவாளோ என்றே தள்ளி நின்றார்… ஆல மரத்தின் கிளை போல நீண்டு படர்ந்து நிழல் தந்தார் பஞ்சாட்சரம்…இதில் அவர் சொல்லாமல் விட்ட ஒன்று தான் தன் மனைவி மீது வைத்த மாறாத நேசம்…
என்னது நேசமா ஆம் எட்டி நின்றாலும் அது நேசம் தான்… என்னதான் மனைவி தவறே செய்திருந்தாலும்… அவரை முழுதாக வெறுத்து விடவில்லை பஞ்சாட்சரம்… தன் கண் பார்வையிலே மனைவி இருக்க வேண்டும் என்று தானே அவர் எதிர் வீட்டுக்கே குடி போனது… தள்ளி நின்றாலும் பந்த பாசம் விட்டு போகவில்லை… என் மனைவி என் மக்கள் என் பாதுகாப்பு என்றே அவர் இருவீட்டுக்கு சேர்த்து காவல் காப்பது போல் திண்ணையில் படுத்துக்கொண்டது… புயல் மழை இடி என எதற்கும் அவர் அந்த இடத்தை விட்டு அசைந்தது இல்லை… என்று சொன்னால் நம்புவீர்களா…?? ஆனால் அது தான் சத்தியமான நிஜம்… மெய்யான நேசம் கொண்டவர்கள் அவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு… ஆனால் அதை புரிந்து கொள்ளும் பக்குவத்தில் தையல் நாயகி இல்லை என்பது தான் துரதிஷ்டமே…
கணவன் பேசி சென்றதிலிருந்து தையல் நாயகிக்கு உற்சாகம் தாங்கவில்லை… கணவன் பாசம் மாறவில்லை ஒரு பக்கம் மறுப்பக்கம் எங்கே திலோவின் திருமணம் நடந்து விடுமோ என்று பொருமி கொண்ட திரிந்தவருக்கு எண்ணம் எல்லாம்… என் மகனை விட்டுட்டு நீ இன்னொரு கல்யாணம் பண்ணிட்டியாடி என்பது மட்டும் தான்… வெறும் குற்றமாக அவர் கண்களுக்கு தெரிந்தது…
அவர் மகன் தாலி கட்டின கையோடு விட்டு சென்றதோ அல்லது இவளை மருமகளாக ஏற்க மாட்டேன் என்று தையல்நாயகி செய்த ரகளையோ எதுவும் அவருக்கு நினைப்பில்லை… அது எப்படி என் மகன் உயிரோட இருக்கும்போதே அவள் இன்னொரு கல்யாணம் பண்ணுவாள்… என குதித்தவர்…
வக்கத்தவளுக்கே இன்னொரு கல்யாணம் கேக்குதுனா என் பையனுக்கு ஆயிரம் கல்யாணம் பண்ணி வைப்பேன் டி என்கிற போட்டியில் தானே அவர் கிரிதரனுக்கு வேறு பெண்ணை பார்த்தது… எங்கே அவன் தன் பேச்சைக்கு கேட்காமல் போய்விடுவானோ என்கிற அச்சத்தில் தானே மேனகையை சாக்கிட்டு இருவருக்குமே ஒன்றாக திருமண ஏற்பாட்டை செய்தது… அதுவும் தன் மகன் கையால் தாலி வாங்கி கொண்ட திலோவுக்கு முன்பே இவர்கள் திருமணத்தை நடத்த வேண்டும் என அவர் பிடிவாதம் பிடிக்க காரணமே நீ இல்லாட்டியும் என் மகன் நல்லா வாழுவான்டி என்பதை காட்டத் தானே…
எப்படியோ அவர் நினைத்தது போல திலோத்தமாவிற்கு திருமணம் நடக்கவில்லை நின்று விட்டது நிறுத்தியது மகன் என்பதே அவருக்கு மிக்க மகிழ்ச்சி… ஏன்…? எதற்கு…?? எல்லாம் ஆராயவில்லை… கல்யாணம் நின்னுருச்சா அது போதும் தையல்நாயகி ஹேப்பி அண்ணாச்சி… இதை பார்த்து தான் தானும் படுக்க மாட்டார் தள்ளியும் படுக்க மாட்டார் என்றார்களோ…
இதோ புதிதாக முளைத்த உற்சாகத்துடன் தன் மகள் கல்யாணத்தை பார்க்க விரைந்து விட்டார்… இறக்கை முளைக்காதது மட்டும் தான் குறை…மற்றபடி பறந்து பறந்து அத்தனை வேலைகளையும் பார்த்தார்…குழந்தையின் குதூகலத்துடன்…
தான் பிறருக்கு எதை செய்கிறோமோ அல்லது செய்ய நினைக்கிறோமோ அதுவே நமக்கு திரும்பி வரும் என்பதை மறந்து விட்டார் தையல் நாயகி…
அதன் விளைவு தையல்நாயகியின் ஆருயிர் மூச்சாக இருந்த அவரது மகளின் வாழ்க்கை பறிப்போனது… அதுவும் அவளது சொந்த தம்பி சீரளானிடமே என்றால்… அது எத்தனை பெரிய மரண இடி… குடிகாரனிடம் வாழ்க்கை இழந்து விட்டு நிற்கும் மகளை என்ன செய்ய போகிறார் தையல் நாயகி…??? அடுத்து பகுதியில் சந்திப்போம் டார்லிஸ்…