ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி -21

21

 

திருமணத்திற்கு முந்தய நாள் இரவில்…

 

மேனகையை உறவுக்கார பெண்களின் பாதுகாப்பில் விட்டு திருமண வேலைகளை கவனித்தார் தையல் நாயகி… பஞ்சாட்சரமும் கிரிதரனும் மண்டபத்தில் இருந்து கல்யாண ஏற்பாடுகளை கவனித்து கொண்டாலும் வீட்டில் தங்கி இருக்கும் உறவினர்களை கவனித்து கொள்வது மேனகைக்கு மிச்சம் இருக்கும் நலங்கு சடங்குகளுக்கு  தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தையல் நாயகி கூடவே இருந்து கவனித்து கொண்டார்… ஒரே செல்வ மகள் அவள் திருமணத்தில் ஒரு குறை வராமல் நடத்திட வேண்டி அலைந்து திரிந்து செய்தார்…

 

பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் என்பதால் யாரும் தூங்காமல் விடிய விடிய  ஊற போட்ட ஊர் கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்… இடையிடையே தூங்கி விடாமல் இருக்க காபி தண்ணி வேறு…

 

காலையில் திருமணம் என்பதால் அர்த்த ஜாமத்தில் மேனகைக்கு நலங்கு வைக்க உறவுக்கார பெண்களை அழைத்தார் தையல் நாயகி…

 

அனைவரும் மேனகையை உட்கார வைத்து விட்டு குழுமி இருக்க… “நாயகி அண்ணி நாலு பேர் தான் இருக்கோம் இன்னும் யாராவது ஒரு சுமங்கலிய அழைச்சுட்டு வாங்க மேனகைக்கு ஆலம் சுத்தணும்… இங்க எல்லாம் கல்யாணம் ஆகாத சின்ன பொண்ணுங்களும் தாலி இழந்த வயசானவங்களுமா இருக்காங்க… கொஞ்சம் வெளில இருந்து யாரைவது கூட்டி வாங்க அண்ணி…!” என உறவு முறை பெண் கூற…

 

இந்நேரத்துல சுமங்கலிக்கு நான் எங்கடி போவேன்…இந்த அர்த்த ராத்திரியில எவள் வீட்டு கதவை போய் நான்   தட்ட, அதெல்லாம் சரி பட்டு வராது இருக்குறவங்கள வச்சி முடிச்சு விடு புஷ்பா… தையல் நாயகி ஆயசமாக இருந்தது…

 

“ என்ன  அண்ணி  இப்படி சொல்றீங்க  நம்ம பொண்ணு சீரோடும் சிறப்போடும் நிறைஞ்சி வாழனும்ல அதுக்கு அவங்க ஆசீர்வாதம் எல்லாம் கட்டாயம் வேணும் போங்க போய் யாரையாவது கூட்டி வாங்க…!!”என பொறுப்பாக பேசி விரட்ட .. 

 

மகள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பது தான ஒவ்வொரு தாயின் ஆசையும்… எனவே மறுப் பேச்சின்றி வாசல் வரை வந்து விட்டார் தையல் நாயகி…

 

ஆனால் இந்த நட்ட நடுநிசியில் யாரை போய் அழைக்க… தெரியவில்லை… ஊரில் போய் கண்ட நேரத்தில் கதவை தட்டினால் என்ன நடக்கும் என்பது அவருக்கும் தெரியுமே… எனவே தெரிந்தவர்கள் யாரை அழைப்பது என புரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தார் தையல் நாயகி…

 

அவரது தயக்கம் புரிந்து தான் என்னவோ கடவுளாக பார்த்து ஒரு சுமங்கலியை அனுப்பி வைத்தார்… இருட்டில் முகம் சரியாக தெரியாவிட்டாலும் பட்டு சேலை பளபளக்க கழுத்து நிறைய  நகை நட்டும் தலை நிறைய மல்லிகை பூவும் நெற்றி வகுட்டில் வைத்த தாழம்பூ குங்குமம் என மனம் நிறைந்த மகாலட்சுமி போல் வந்து நின்றாள் அவள்…!!எவள் ??வேற யாரு நம்ம திலோத்தமா தான்…

 

புடவை கட்டிய பொன் மானாய் கண்முன்னால் வந்து நின்ற திலோத்தமாவை பார்த்து வாயை பிளந்து நின்றார் தையல் நாயகி…

 

வாசல் வரை வந்து விட்டு தயக்கத்துடன் தையல் நாயகியை பார்க்க அவரோ… அவளை தான் ஏற இறங்க பார்த்து கொண்டு இருந்தார்…

 

அண்ணி சுமங்கலி பொண்ண கூட்டி வர எவ்வளவு நேரம் என்றப்படி வாசல் வரை வந்தார்  புஷ்பா… 

 

இங்க நின்னு யாரை அப்படி வெறிச்சி பார்த்துட்டு இருக்கீங்க அண்ணி என்று அவர் பார்வை உணர்ந்து கேட்க… 

 

இவள் எதுக்குடி இந்த நேரத்துல இப்படி மினிக்கி கிட்டு வந்து இருக்கா என்று நாயகி  வாயைக் கோண

 

வருவது கிரிதரன் மனைவி என்பதை கண்டு கொண்டவர் ம்ம் நீங்க போட்ட பத்தாயிரம் புள்ளி கோலத்துக்கு எத்தனை புள்ளி கேட்டு போக வந்து இருப்பாள் அட ஏங்க அண்ணி  வீட்டுக்கு வந்த புள்ளையா வாசல்ல நிக்க வச்சி பேசிட்டு இருக்கீங்க   

அடடே வாமா நீ நம்ம கிரிதரன் பொண்டாட்டி தான ஏம்மா நாத்தனார் நலங்குக்கு  இவ்வளவு தாமதமாவா  வரத்து… இந்த வீட்டு பொண்ணு நீ, நீயே இவ்வளவு தாமதமா வந்தா எப்படி சரி சரி இப்போவாது வந்தியே வா… சீக்கிரம் நல்ல நேரம் முடியறதுக்குள்ள உன் நாத்தனார்க்கு நலங்கு வைக்கணும் என்று திலோ வை அழைக்க…

 

அவளோ பதில் ஏதும் பேசாது தையல்நாயகியின்  முகத்தை பார்த்தப்படி கையை பிசைந்து கொண்டு நிற்க…

 

 அவரோ வா என்றும் அழைக்கவில்லை போ என்றும் விரட்டவில்லை…அமைதியாக அவளை அளவெடுத்து கொண்டு இருந்தார்… 

 

அட என்னமா உன் மாமியார பார்த்துட்டு நிக்கிற… நேரம் ஆச்சு சீக்கிரம் வா என கையை பிடித்து இழுத்து சென்று விட்டார்…

 

எங்கே தன்னை தையல் நாயகி தடுத்து அவமானப்படுத்தி விடுவாரோ என்று அஞ்சியவளுக்கு அப்படி எதுவும் அவர் செய்யாமல் விட்டது பெருத்த நிம்மதி… 

 

இவள் எப்படி இங்க வந்தாள்??? என வியந்த படி உள்ளே வந்த தையல் நாயகிக்கு எங்கனம் தெரியும்…    தார் குச்சி கொண்டு கிளப்பாத குறையாக இங்கே அனுப்பி விட்டதே அவரது அரும் பெரும் மைந்தன் கிரிதரன் என்பது…

 

 தன்னிரக்கத்தில் தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்த திலோத்தமாவுக்கு அழைப்பு விடுத்தான் கிரிதரன்… அவளுக்கு அவன் எண் தெரியாது…எனவே இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தவள் அழைப்பை எடுக்க தயங்கிட அதுவோ… அணைந்து மீண்டும் மீண்டும் விடாமல் அடித்து கொண்டே இருக்க… 

 

இப்படி இடை விடாமல் அடித்து அலப்பறை கூட்டும் போதே தெரிந்து விட்டது அழைப்பது யார் என்று… எடுக்கலாமா வேணாமா எடுக்காட்டி விடமாட்டான் என்பதை அறிந்தவள் ஃபோனை  உயிர்ப்பித்து காதில் வைக்க… இச் இச் இச் ஒரே முத்தம் … அப்பக்கம் கொடுத்த முத்தத்தில் இப்பக்கம் எச்சில் தெறிக்க… கூசி சிலிர்த்து போனாள் பெண்ணவள்… இதை அவள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை… எதிர்பார்க்கா முத்தச் சத்தத்தில் கன்னங்கள் சிவக்க வாய் அடைத்து போனவளை உசுப்பி விட்டது கிரிதரனின் குரல்…

 

“என்னடி பொண்டாட்டி அத்தான் ஃபோன்ல கொடுத்த முத்தத்துக்கே மூச்சு முட்டி போச்சா… ஒய் என்ன சத்தத்தையே காணோம்??? மௌனமா இருக்கிறத பார்த்தா அப்படி தான் நினைக்கிறேன்…!!”

 

“டி பொண்டாட்டி இங்க செமயா குளிருது… நீ பக்கத்துல இருந்தா உன்னை அணைச்சுகிட்டு இருந்து இருக்கலாம்… அதுவும் ஒரே போர்வைக்குள்ள இரண்டு பேரும் ட்ரெஸ் எதுவும் போடாம… அணைச்சுகிட்டு இருந்தா எப்படி இருக்கும் ப்பா நினைக்கும் போதே உடம்பு முறுக்குதுடி பொண்டாட்டி… எனக்கு வந்ததுல இருந்து உன் நினைப்பாவே இருக்கு எப்போடா தனியா பார்ப்போம்னு இருக்கு… ஏய் எல்லாம் பெருசா ஆகிடுச்சாடி… அப்போ எல்லாம் பிஞ்சா இருந்தது எல்லாம் பழுத்து இருக்கும் இல்ல… சைஸ் என்ன…?? என்ன வெக்கமா விடு நானே புடிச்சு என் கையால எடைப்போட்டு பார்த்துக்கிறேன்… இப்போ என்னடி ட்ரெஸ் போட்டு இருக்க… தனியாவா இருக்க நான் வீடியோ கால் வரவா ஃப்ரீயா பேசலாம்…!!”என மயக்கத்தில் கிரிதரன் பேசி கொண்டு இருக்கும் போதே…

 

“டேய் கிரி இன்னும் மேளக்காரங்க வரலையாம் மாமா உன்னை ஃபோன் பண்ணி என்னனு கேக்க சொன்னார்…சமையல் காரர் எதோ பொருள் விட்டு போச்சு நான் சமைக்க மாட்டேன்னு குதிக்கிறார் அதையும் என்னனு பார்த்து கேட்டு வாங்கி கொடுக்க சொன்னார்… அப்புறம் இந்த பூ அலங்காரம் பண்றவங்க நீ வந்தா தான் அடுத்த வேலையே செய்வேன்னு  அடம் பிடிக்கிறாங்க என்னனு வந்து  பாருடா…!!” என கிரிதரனை அழைக்கவும் சைக்கு ஐஞ்சு வருஷம் கழிச்சு வந்து இருக்கானே பொண்டாட்டி கூட தனியா இருக்கட்டும்னு விடுறாங்களா… போடா பொறாமை புடிச்ச போலர் பியர் பின்னாடியே வரேன்… என சலித்து கொண்டவன்…

 

“சரிடி பொண்டாட்டி ஆனது ஆச்சு அஞ்சு வருஷம் பொறுத்துக் கிட்டோம் இன்னும் ஒரு நாள் தான தங்கச்சி கல்யாணம் முடியட்டும் அதுக்கு அப்புறம் அத்தான் உன் முந்தானைய விட்டு எங்கையும் போக மாட்டேன்… அதுவரை கொஞ்சம் அட்ஜஸ்ட்  பண்ணிக்கோ… சரி அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பாரு எதுக்கு கூப்பிட்டேனோ அந்த விஷயத்தையே சுத்தமா மறந்துட்டேன்… நீ என்ன பண்ற கிளம்பி நேர எங்க வீட்டுக்கு போ அங்க மேனகைக்கு நலங்கு வைக்க போறாங்க… நீயும்  போய்  உன் நாத்தனார்க்கு நலங்கு  வைக்கிற புரியுதா… அத்தானுக்கு அசத்தலா ஒரு கிஸ் கொடுத்துட்டு சீக்கிரம் கிளம்பி போ பார்க்கலாம்…!!”என அதுவரை ரெமோவாக பேசி கொண்டு இருந்தவன் திடீர் என்று அம்பியாக பேச…

 

முதலில் அவன் காதல் பேச்சில் கட்டுண்டு அமைதியாக கிடந்தவள் பின்பு அவன் கூறியதை கேட்டு மயக்கத்தில் இருந்து விழித்து கொண்டு… 

 

“என்ன நினைச்சிட்டு உங்க வீட்டுக்கு என்னை போக சொல்றிங்க என்னால எங்கையும் போக முடியாது…போகவும் மாட்டேன்…!!”என ஆவேசமாக எடுத்தெறிந்து பேசிட… 

 

“ஏய்ய் என கத்த போனவன் பின்பு நீண்ட மூச்சை எடுத்து விட்டு… இங்க பாரு திலோ நீ என் பொண்டாட்டி நீ போய் என் தங்கச்சி அதான் உன் நாத்தனார் சடங்க எடுத்து செய்யுறது தான் முறை ஆனால் இப்படி நீ கலந்துக்கவே மாட்டேன்னு சொல்றது படிச்ச பொண்ணு உனக்கு கொஞ்சம் கூட நல்லா இல்லை பார்த்துக்கோ… அங்க போறதுல அப்படி என்னடி பிரச்சனை உனக்கு ஆஹான் சொல்லு…!!” என்ன தன்மையாக பேச முயன்றும் அவன் குரலில் சிறு எரிச்சல் எட்டி பார்க்க தான் செய்தது…

 

“உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா… எதை வச்சி என்னை அங்க போக சொல்றிங்க… உங்க அம்மா பேசுனது எல்லாம் என்னால மறக்க முடியல… என் கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளுன அந்த வீட்டு வாசல எப்படி என்னால மிதிக்க  முடியும்… அதை கொஞ்சமாவது யோசிச்சு பார்த்திங்களா… என் கண்ணு முன்னாடியே எங்க அம்மாவை தூக்கி வெளியே எறிஞ்சாங்க… இன்னும் என் கண் முன்னாடி அந்த காட்சி நினைவில் இருக்கு… கொஞ்சம் கூட மனசுல ஈரமே இல்லாம உங்க அம்மா நடந்து கிட்டாங்க…அவங்க முன்னாடி எந்த முகத்தை வச்சி போய் நிற்க சொல்றிங்க…??” என வெடித்து சிதறியவளுக்கு அந்நாளின் தாக்கம் இன்னும் குறையவே இல்லை… 

 

எந்த பதிலும் இல்லை அப்பக்கம் நீண்ட மௌனத்திற்கு… “இங்க பாரு திலோ பழசையே நினைச்சுட்டு இருந்தா யாருக்கு என்ன  இலாபம் நீ வருத்தப்படறதாலோ இல்ல கோபப்படுறதுனாலோ ஏதாவது மாறப்போகுதா… இல்லையே அதுக்காக உன்ன பழசை மறந்துவிடு மன்னித்துவிடு என்று சொல்ல வரல… உன்னால எப்ப மன்னிக்க முடியுமோ  அப்ப மன்னிச்சிக்கோ… அதுவரை பழசையே பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்காதன்னு தான் சொல்றேன்…!!” என்றதும் இப்பக்கம் மௌனம் ஆகும் முறை  திலோத்தமாவிற்கானதாகியது…

 

 “உனக்கு எங்க அம்மா கூட தான சண்டை… அவங்க கிட்ட பேசாம இரு இல்ல அவங்க கிட்ட நியாயம் கேட்டு  சண்டை போடு என்ன வேணாலும் பண்ணு  ஆனால் மேனகா என்னடி பண்ணா…?? அவளை ஏன் தள்ளி வைக்கிற… இங்க பாரு திலோ அவளும் உன்ன மாதிரி ஒரு அப்பாவி  பொண்ணு தான்… அதிர்ந்து கூட பேச மாட்டாள் ஆசைப்பட்டதை கூட வாயை விட்டு கேக்க  தெரியாது…

 

 இங்க பாருடி நமக்குள்ள எது வேணாலும் நடந்துட்டு போகட்டும்… ஆனா என் தங்கச்சி கல்யாணத்துல அது சிறு குறையா கூட வந்து நிக்க கூடாது… நீ உடனே கிளம்பி போற…

 

 இப்படி போ போ ன்னு சொன்னா  எப்படி உங்க அம்மா என்னை உள்ள விடுவாங்களா அத்தான் கொஞ்சம் கூட யோசிச்சு பேச மாட்டிங்களா… என்றவளுக்குமே மேனகை திருமணத்தில் கலந்து கொள்ள ஆசை தான்…

 

 பேசி பழகாவிடிலும்  சிரித்து மகிழாவிடிலும் அவளின் சுக துக்கத்தில் பங்கு கொள்ள விட்டாலும் அவளுக்காக கண்ணீர் சிந்தும் ஓர் அன்பு பிறவி  மேனகா மட்டுமல்லவா… ஆனால் தையல் நாயகியின் வாய்க்கு பயந்தே போக தயங்கினாள் …

 

ப்ச் என்ன திலோ இது பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்குற டீச்சர் மாதிரியா பேசுற… அம்மா திட்டு வாங்க ஆட்டுக்குட்டி திட்டு வாங்கன்னு சொல்லிக்கிட்டு… உனக்கு அந்த வீட்டுக்குள்ள போக மட்டுமில்ல அங்கயே என்ன செய்யவும் முழு உரிமை உனக்கு  இருக்கு… உரிமைக்காரி போனா யார் என்ன சொல்ல முடியும்… அப்படியே யாராவது சொன்னா என்ன இது என் புருஷன் வீடு நான் வருவேன் என்னை யார் கேக்க முடியும்ன்னு தைரியமா பேச வேண்டாமா…?? படிச்சவ நீ உனக்கு சொல்லியா தரணும்… ஒழுங்கா கிளம்பி போ… ஆன் அப்புறம் அப்படியே சிம்பிளா போய்டாதடி… உள் பீரோவுல உன் பச்சை கலர் பட்டு இருக்குல்ல அதை கட்டிக்கோ அப்பிடியே உன் மாமனார் பீரோல இருக்கிற நகையை போட்டுக்கோ… சும்மா மாட்டேன் கீட்டேன்னு அடம் பிடிக்காத…  உன் மாமனார் மேல மரியாதை இருந்தா  சொன்னதை செய்… கொஞ்சமே கொஞ்சோண்டு இந்த அத்தான் மேல அபிப்ராயம் இருந்தா நீ போட்டுக்கோ அவ்ளோ தான் சொல்ல முடியும்… இங்க வேலை நிறைய இருக்கு இல்லாட்டி நானே வந்து எல்லாத்தையும் என் கையால போட்டு விட்டுருப்பேன்… என்ன நான் போட்டு விட வரவா இல்லை நீயே எல்லாத்தையும் போட்டு கிளம்பி போறியா…என திரும்பவும் ரெமோவாக மாறியவனை கண்டு தலையில் அடித்து கொண்டாள் திலோ…

 

போட்டு போய் தொலையுறேன் வைங்க… என்றவளுக்கு எங்கே இல்லை என்றால் நிஜமாக கிளம்பி வந்து விடுவானோ என்கிற அச்சம் தான்…

 

 கிரிதரன் சொன்னபடியே திலோ சென்று மேனகையின் நலங்கில் கலந்து கொண்டாள்…அவள் வரவு மேனகைக்கு எவ்வளவு சந்தோசத்தை கொடுத்தது என்று வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை… திலோத்தமாவின் கைகளை பிடித்துக் கொண்ட மேனகை தேங்க்ஸ் அண்ணி என ஆனந்த கண்ணீரோடு சொன்னவள் அவளை ஆரத்தழுவிக் கொண்டாள்…

 

 அதுவரைக்கும் திலோத்தமா மனதில் இருந்த சிறு சஞ்சலம் மறைந்து யார் என்ன சொன்னால் எனக்கு என்ன நான் என் நாத்தனார் மேனகைக்காக வந்து இருக்கிறேன்… என்று எண்ணியவளுக்கு புருஷனை மட்டும் புடிக்காது… இதையெல்லாம் எங்க போய் சொல்ல…

 

சடங்கு முடிந்து மேனகையை திருமணத்திற்கு தயாராகி வரச்சொல்ல கழிவறை சென்று வருவதாக சொல்லி சென்ற மகளை காணாமல் தேடி சென்ற தையல்நாயகிக்கு ஏற்பட்ட பெரும் அதிர்ச்சி  அவள் தம்பி சீராளனோடு மேனகை இருந்தது என்றால் அதை விட பேரதிர்ச்சி   என்னவென்றால்  ஆடைகளின்றி தன் மகள் மேனகை சீராளனோடு இருந்தது தான்… 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top