உ
அத்தியாயம் – 2
முகத்தை மறைத்துக்கொண்டு அந்த ரூமிற்கு உள்ளே சென்றவன் அங்கு கை கால் கட்டிய நிலையில் உட்கார்ந்து இருந்தவனை பார்த்துக்கொண்டே தனக்கென பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட சோபாவில் வேட்டையாடும் சிங்கமென உட்கார்ந்திருந்தான்.
அதைப் பார்த்து எதிரில் இருந்தவனுக்கு புரிந்து விட்டது இனி நாம் உயிரோடு தப்பிக்க முடியாது என்ற உடனே அவனைப் பார்த்து “சார் என்ன மன்னிச்சிடுங்க சார் இனிமே இப்படி ஒரு தப்பு நான் பண்ணவே மாட்டேன் இந்த ஒரு வாட்டி என்ன மன்னிச்சிடுங்க” என்று கெஞ்சி கதறி கேட்க ஆரம்பித்தான்.
அவன் பேச பேச ஜெய் கிருஷ்ணா அமைதியாகவே அவனை பார்த்துக் கொண்டிருந்தான் பின்பு அவனை சுற்றி நின்றிருந்த தனது ஆட்களிடம் “தங்களது முறைப்படி ஒவ்வொரு விரல்களில் உள்ள நகத்தை அனைத்தையும் பிடுங்க சொல்லி உத்தரவு விட்டு அவனையே பார்த்துக்கொண்டு இருந்தான்”.
ஜெய் கிருஷ்ணா கட்டளையிட்ட மறு நொடியே அவர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்ய அந்த இடம் மீண்டும் மிகவும் இரத்தமாக காட்சியளித்தது.
அவன் அதையே கண்களில் வெறியுடன் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு பின்னாடி இருந்த அவனது பி.ஏ சுரேஷ் அவனுக்கு ஏற்றார் போல் முகத்தில் எந்தவித உணர்வும் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.
மயக்க நிலைக்கே சென்றுவிட்ட அவனை பார்க்க யாருக்கும் இரக்கம் என்பதே இல்லாமல் உண்மையை வரவைக்கும் பொருட்டு அடுத்த கட்ட நடவடிக்கையாக அவனை ஐஸ்கட்டி நிரம்பிய தொட்டியில் தூக்கி போட்டனர்.
அதில் மயக்கம் தெளிந்து குளிர் நீரில் மேலும் அரண்டவன் அவனை பார்த்து “ சார் சார் நான் உண்மையை சொல்லிடுறேன்” என்று கூறி அலறினான்.
அதற்கு அலட்டிக்கொள்ளாமல் தனது மொபைலில் இருந்து கவனத்தை அவன் மேல் திருப்பியவன் “ ம்ம் சொல்லு” என்று ஒரு வார்த்தை கூற
அவனோ பயந்துக் கொண்டே “ சார் உங்க கம்பெனியில் சேர்ந்து உங்கள பத்தின முழு தகவலையும் கண்டுபிடிச்சி ஒரு ரிப்போர்ட் குடுக்க சொல்லி தான் சார் என்ன இங்க அனுப்பி வச்சாங்க” என்று கூற
“ யார் இப்படி பண்ண சொன்னது. என்ன பத்தின முழு தகவழும் உனக்கு கிடைச்சிடுச்சா” என்று நக்கலாக கேட்க அவனோ திரு திரு வென்று முழித்து கொண்டிருந்தான்.
அவனை நக்கலாக கேட்டவாறு தனது பி ஏ வை ஒரு பார்வை பார்க்க அவனோ ஜெய் கிருஷ்ணாவை புரிந்தது போல் எதிரில் உள்ளவனின் அனைத்து தகவல்களையும் ஒவ்வொன்றாக தான் வைத்து இருந்த பென்டிரைவில் அங்கு இருந்த டிவியில் கனெக்ட் செய்து ஆன் செய்ய தொடங்கினான்.
அவன் தனது ஒரு கம்பெனியில் வந்து சேர்ந்ததிலிருந்து அவனுடைய ஒவ்வொரு அசைவுகளையும் பார்த்துக் கொண்டு இருந்தது அவனது குடும்பம் ஒவ்வொரு நாளும் கம்பெனியில் அவனது நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோவாக அங்கே இருந்த பெரிய திரையில் ஓட விட்டான்.
அதன் பிறகு அனைத்தையும் பார்த்தவன் பின்பு தெளிவாக கூற ஆரம்பித்துவிட்டான்
“சார் உங்களுக்கு எதிரி கம்பெனி யான குப்தா கம்பெனியில் இருந்து பரத் சார் தான் என்ன அனுப்பி வச்சாரு உங்கள பத்தி உங்க குடும்பம் நீங்க யாரு எங்க இருந்து வந்திருக்கீங்க இப்படி எல்லா டீடெயிலுமே கலெக்ட் பண்ண சொன்னாங்க.
நீங்க எப்படி இவ்வளவு சீக்கிரம் எல்லாம் பிசினஸ்லையும் கொடி கட்டி பறக்கிற ஃபார்முலாவை உங்களோட ஒவ்வொரு மூமண்டையும் வாட்ச் பண்ணி ரிப்போர்ட்டா அனுப்ப சொல்லி கேட்டாங்க சார் அதுக்கு தான் நான் வந்தேன் மன்னிச்சிடுங்க உங்கள பத்தி எதுவும் தெரியாமல் வந்துட்டு இப்ப மாட்டிக்கிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கண்ணில் உயிர் பயத்தை வைத்துக்கொண்டு கெஞ்சி கேட்டான்.
அவன் பேசும் வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஜெய் கிருஷ்ணா பின்பு “ என்ன பத்தி தெரியாம இந்த வந்து சேர்ந்துட்டேன் சரி ஆனா அதுக்கு அப்புறம் மேட்டு என்னோட கம்பெனியில் எனக்கு துரோகம் பண்ணினால் என்ன நடக்கும்னு ஒரு அளவுக்கு எல்லாருக்கும் தெரிந்திருக்கும் அதை கேள்விப்பட்ட உடனே நீ இங்க இருந்து ஓடி இருக்கணும் இல்லையா அதை விட்டுட்டு நீ என்னையே வேவுபார்க்க ஆரம்பிப்பியா அதுக்கு உண்டான தண்டனையை நீ கண்டிப்பா அனுபவிக்க தான் வேண்டு என்று இரக்கமே இல்லாமல் கூறினான்.
உன்னை இனிமேல் அடுத்த ஜென்மத்துல நான் பாக்குறேன் இப்ப நீங்க நிம்மதியா போய் சேரு என்று கூறியவன் தனது ஆட்களிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டான்.
சுமார் ஏழு வருடங்களாக சென்னையில் அனைத்து தொழில்களிலும் கொடிக்கட்டி பறப்பவன் திடீரென்று எங்கிருந்தோ வந்து அனைத்திலும் வெற்றி காண்பவனை கண்டு அவனது எதிரிகள் பொறாமை பட்டு அவனை எவ்விதத்தில் ஆவது வீழ்ச்சியாக வேண்டும் என்று குறிக்கோளாக இருந்தனர்.
அதிலும் இவ்வளவு காலம் பிசினஸ் உலகில் தனக்கே ஒரு தனி முத்திரையை பதித்துக் கொண்டிருந்த குப்தா கம்பெனி இவன் வந்த கொஞ்ச வருடத்தில் தன் வசப்படுத்தி கொண்டு அவர்களை இரண்டாம் இடத்திற்கு தள்ளியதை தற்போது சீ.யி.ஓ வாக இருக்கும் பரத்திற்கு மிகவும் தலையிராக்கமாக இருக்கவே உடனடியாக ஜெய் கிருஷ்ணாவை வீழ்த்தும் முயற்சியில் இறங்கினார்.
ஆனால் அதில் அவருக்கு கிடைத்ததோ மாபெரும் தோல்வியே வியாபாரத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் அவனது குடும்பத்தை தேடி அதில் அவனை வீழ்த்த பார்த்தவருக்கு எந்த பக்கம் திரும்பினாலும் அவன் ஒருவனே நின்று முட்டு சந்தை போல் முட்டிக்கொண்டே நின்றான்.
இதில் மிகவும் கோபம் அடைந்தவர் அவனது கம்பெனிக்கு ஆட்களை அனுப்பி அவனின் ஆதி மூலத்தை கண்டறிய முயன்றார் அதிலும் தற்பொழுது தோல்வியை தழுவினார்.
எப்படியாவது அவனை வீழ்த்திவிடவேண்டும் என்பதே அவரது குறிக்கோள் ஆனால் இதை அனைத்தையும் தெரிந்துக்கொண்டே அவரை கண்டுக்கொள்ளாமல் தனது வேலையை பார்த்துக்கொண்டு இருந்தான்.
ஆனால் இப்பொழுது இதை எல்லாம் ஒரு விஷயமாக கண்டுகொள்ளாமல் இருப்பவன் பின்னர் இவராலேயே தனது உயிரை விட மேலானவளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்திருந்தால் இப்பொழுது அவரை ஒரு வழி செய்திருப்பான் இப்போதைய அஜாக்கிரதை தான் அவனிற்கு பின்பு மரண பயத்தை காட்ட இருந்தது.
அனைத்தையும் முடித்தவன் மணியை பார்க்க அதுவோ விடியலை தொடும் நேரத்தில் இருந்தது மேலே தனது அறைக்க சென்று தன்னை சுத்தம் செய்து கொள்ள நினைத்தவன் அங்கிருந்த பாத் டப்பில் வெந்நீர் ஊற்றி அதில் ஆள அமிழ்து சுகம் காண ஆரம்பித்தான்.
ஒரு ஒரு மணி நேரம் அதிலேயே சுகம் கண்டவன் அருகில் இருந்த மொபைலில் நோட்டிபிகேஷன் காமிக்க அதை எடுத்து பார்த்தவன் தனது பி.ஏ. சுரேஷ் அன்றைய ஷெட்யூலை அனுப்பி இருக்க மீண்டும் தனது வழக்கமான ஓட்டத்திற்கு தயாராக ஆரம்பித்தான்.
தூக்கம் என்பதே இல்லாமல் கண்கள் சிவந்த நிறத்தில் இருக்க அன்றைய முதல் வேலையாக தனது உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்தவன் அங்கிருந்த மிஷின் அனைத்திலும் வேலை செய்து தனது உடலை செதுக்க ஆரம்பித்தான்.
அங்கிருந்த அனைத்து கண்ணாடிகளும் அப்படியே அவனை காண்பிக்க உடலில் உள்ள வேர்வை ஆறாய் ஓட அதை துடைத்தபடியே அனைத்தையும் முடித்தவன் நிமிர்ந்து பார்க்கும் போது வேகமாக அறையின் கதவை தள்ளிக்கு கொண்டு வந்தவனை கண்டவன் இன் புருவம் ஆச்சர்யமாக உயர்ந்தது.
ஏனெனில் அவ்வளவு சீக்கிரம் ஜெய் கிருஷ்ணாவை தேடி வந்திருக்கவே மாட்டான் அதுவும் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் தன்னைத் தேடி வரவும் ஆச்சரியமாக அவன் புருவம் உயர்ந்தது.
ஜெய் கிருஷ்ணா வெளியுலகத்தில் எப்படி அனைத்து வியாபாரத்திலும் முன்னிலை வகிக்கிறானோ அதேபோல் இருள் உலகத்திற்கும் அவனே தலைவனாக இருக்கிறான்.
இருள் உலகத்தில் செல்லமாக அவனை லயன் கிங் என்று அழைப்பர் பகலில் சுரேஷ் அவனுக்கு பக்கபலமாக இருக்க இரவு உலக பிஏவாகவும் அவனுக்கு வலது கையாகவும் அனைத்து வேலைகளையும் செய்து அவனை பாதுகாப்பது ஒன்றே முதல் குறிக்கோளாக இருப்பவனே தற்பொழுது வந்த அமரன்.
அவசரமாக வந்தவனும் அவனைப் பார்த்து “ லயன் கிங்” என்று ஆரம்பிக்க அதற்கு அவன் முறைத்த முறைப்பில் “அண்ணா” என்று தன்னாலையே கூப்பிட ஆரம்பித்தவன் தான் வந்த வேலையை குறிப்பாக கூற ஆரம்பித்தான்.
“ அண்ணா வி எம் பப்ல இன்னைக்கு நைட்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரங்கள் சப்ளை ஆகுதாம் இது போலீஸ்க்கு கூட இன்னும் நியூஸ் போகல நமக்கு நம்ம சீக்கிரம் ஏஜென்ட் வந்து தகவல் வந்துச்சு உங்களை பார்த்து சொல்ல தான் வந்தேன்” என்று கூற
ஜெய் கிருஷ்ணாவிடம் சற்றென்று ஒரு பரபரப்பு அவனது உடலில் தொற்றிக் கொண்டது “ என்ன இந்த முறை சென்னை வந்து இருக்கு” என்று கேட்க
“ அது வந்து அண்ணா இந்த இடம் எக்ஸ் எம்பிக்கு சொந்தமான் இடம் தான் அதனால எந்த ரைடும் நடக்காது ரொம்ப சேப் என்று சொல்லி இந்த முறை இங்க செலக்ட் பண்ணி இருக்காங்க” என்று கூறினான்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட ஜெய கிருஷ்ணா பின்பு தெளிவான பார்வையுடன் அமரனை பார்த்தான்.
அதை புரிந்து கொண்டவன் தெளிவான பிளானுடன் இன்னைக்கு இரவு நைட் 11 மணிக்கு அங்க அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன் நான் உங்க கூட எப்ப வந்து சேர்ந்து கொள்ளட்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
“ இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான பிசினஸ் மீட்டிங் இருக்கு அதனால சுரேஷ் என் கூட இருக்கும் நீ மித்த வேலையெல்லாம் பாரு கரெக்டா நைட் 8 மணிக்கு என் கூட வந்து சேர்ந்துக்கோ” என்று கூறி அவனை அனுப்பி வைத்தான்.
அமரன் எப்போதும் வரும் வழியில் யாருக்கும் தெரியாமல் வந்த தடம் தெரியாமல் சென்று விட்டான் பின்பு ஜெய் கிருஷ்ணா தனது அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவன் பின்பு அன்றைய அலுவலகம் நோக்கி புறப்பட ஆரம்பித்தான்.
super sis
Nice ep