ATM Tamil Romantic Novels

இதய காவலன் 1

 இதய காவலன் 

 

அத்தியாயம் 1

 

நகரின் எல்லையில் அமைந்துள்ள நடுத்தர வர்க்கத்தினர் வசிக்க கூடிய குடியிருப்பு பகுதி தான் கேசவா காலனி

காலை நேரம் அந்த காலனியில் இருந்த அத்தனை வீடுகளும் அவ்வளவு நேர்த்தியாக பார்ப்பதற்கு அழகாக இருந்தது அந்த ஒரு வீட்டை தவிர. 

 

அந்த காலனியின் தொடக்கத்தில் உள்ள நான்காவது வீடு அது, சுற்று சுவர்கள் அமைக்கப்பட்டு சற்றே பெரிதான வீடு தான் ஆனால் வீட்டின் வெளியே சுற்றுபுறம் முழுக்க 

மரம் செடி கொடிகளில் இருந்து விழுந்த  காய்ந்த சருகுகள் குப்பையை போல் கிடந்தன சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது. 

 

இன்னும் திறந்து கிடந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தாள் வெளியே மிகவும் சுத்தமாக இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு குப்பையாக கிடந்தது. 

 

வீடேங்கும் குடித்துவிட்டு தூக்கி போட்ட பீர் பாட்டில்கள் கிடந்தன நேற்று இரவு சாப்பிட்டு போட்ட பாதி பிரியாணி பொட்டலத்தில் இருந்த எலும்பு துண்டை எலி ஒன்று தின்று கொண்டு இருந்தது வீடே குப்பை மேட்டை போல் கிடந்தது தூசியும் புழுதியுமாக இருந்தது இன்னும் உள்ளே சென்று பார்த்தால் படுக்கையறையின் உள்ளே இருந்த படுக்கையில் ஆறடி இரண்டு அங்குல உயரத்தில் 98 கிலோ எடையில் ஒரு உருவம் ஒன்று குப்பற படுத்து வெறும் பனியன் ஷார்ட்ஸ் உடன் உறங்கி கொண்டு இருந்தது. 

 

அவன் தான் ஆதித்ய சோழன் அந்த நகரின் எல்லைக்கு உட்பட்ட பகுதியின் டி. எஸ். பி வயது 35 தந்தை தாய் என்று யாரும் இல்லாதவன் தனிமரம் நேற்று இரவு டியூட்டி முடித்துவிட்டு வந்தவன் கடையில் வாங்கி வந்த பிரியாணியில் பாதி விழுங்கியவன் மீதியை அப்படியே தூக்கி போட்டு விட்டு இரவு முழுவதும் குடித்து விட்டு குப்பற படுத்து உறங்க ஆரம்பித்தான்.

 

அவன் பக்கத்தில் இருந்த டேபிளில் நேற்று இரவு அவன் கழட்டி எறிந்த யூனிபார்ம் கிடந்தது அதன் பக்கத்தில் பாதி குடித்துவிட்டு வைத்த பீர் பாட்டிலும் 

ஒரு கை துப்பாக்கியும் இருந்தது. 

 

அப்போது அவன் வீட்டு வாசலில் ஒரு கான்ஸ்டபிள் வந்து நின்று “சார் சார்” என்று கத்திக் கொண்டே இருந்தான் அந்த சத்தத்தில் மெல்ல கண் விழித்தான் சோழன் நேற்று இரவு முழுவதும் டியூட்டியில் இருந்துவிட்டு இரண்டு மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான் அதனால் கண்கள் பயங்கரமாக வலித்தது கண்ணை திறக்க முடியாமல் திறந்து வெளியே எழுந்து வந்தான். 

 

அங்கே அவனிடம் டிரைவராக இருக்கும் கான்ஸ்ட்டபிள் வந்து நின்றான் 

“என்ன யா உனக்கு பிரச்சனை காலையிலேயே வந்து தொல்லை பண்ற” என்று சோழன் சலித்துக் கொள்ள “சார் மணி 10 சார் உங்களை இன்னைக்கு சாரதா உமன்ஸ் காலேஜ்க்கு சீஃப் கெஸ்ட்டா கூப்பிட்டு இருந்தாங்களே மறந்துட்டிங்களா” என்று கேட்க. 

 

அப்போது தான் அவனுக்கே நினைவு வந்தது இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கல்லூரியின் தாளாளர் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிக்காக அவனை நேரில் வந்து அழைத்து இருந்தார். 

 

‘இதை எப்படி மறந்தேன்’ என்று நினைத்தவன் “சரி நீ இங்கேயே இரு நான் கிளம்பி வரேன்” என்று கூறிவிட்டு உள்ளே கிளம்ப சென்றான் அலங்கோலமாக இருந்த படுக்கையறையின் அலமாரியில் அயர்ன் செய்து மடித்து வைக்கப்பட்டு இருந்தது அவனுடைய யூனிபார்ம்கள். 

 

அவனின் உடைகள் மட்டும் சுத்தமாக இருக்க காரணம் சுப்பையா தான் அந்த காலனியின் முனையில் இஸ்திரி கடை வைத்திருக்கிறான் அவன் தான் தினமும் சோழனின் உடைகளை துவைத்து அயர்ன் செய்து மடித்து எடுத்து வந்து அலமாரியில் வைப்பான். 

 

ஒரு டவலை எடுத்து கொண்டு குளியலறையின் உள்ளே சென்று குளித்துவிட்டு யூனிபார்ம் மாற்றி டிப் டாப்பாக கிளம்பி வெளிய வந்தான் சீராக வெட்டப்பட்ட தலை முடி படிக்கட்டு தேகத்தில் உருண்டு திரண்ட புலங்கள் உர்ரென்று இறுக்கமாக முகத்தை வைத்து கொண்டு வெளியே நடந்து வந்தான் அவனை பார்த்தால் 35 வயது என்று யாராலும் சொல்ல முடியாது அந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்து உடலை அத்தனை கட்டுகோப்பாக வைத்திருந்தான்.

 

சோழன் மற்ற விஷயத்தில் எப்படி இருந்தாலும் தன் பணியில் மிகவும் நேர்மையானவன் அவன் நேர்மைக்கு பரிசாக இதுவரை பல முறை இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறான் பணிக்கு சேர்ந்த பத்து வருடத்தில் 14 முறை இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறான்

இதுவரை ஒரு நாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை இங்கு வந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது கை சுத்தம் என்பதால் சம்பளத்தை தவிர அவனிடம் வேறு எதுவும் இல்லை

அவனுக்கு என்று யாரும் இல்லாததால் 

அவன் எப்போதும் இப்படி தான் இருப்பான் யாரிடமும் பேசவும் மாட்டான் சரியாக பழகவும் மாட்டான் இங்கு இன்னும் எத்தனை மாதங்களை கடந்த போகிறானோ. 

 

அவன் தன் வீட்டில் இருந்து வெளியே வர அங்கே வெளியே விளையாடி கொண்டு இருந்த சிறுவர்கள் அவனை பார்த்து பயந்து ஓட ஆரம்பித்தனர் சோழன் என்றால் அந்த காலனியில் உள்ள அத்தனை பேருக்கும் பயம் 

அவன் முகத்தை காட்டி பத்து குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் அளவுக்கு உர்ரென்று இருக்கும் அவன் முகம். 

 

தினமும் காலை டியூட்டிக்கு கிளம்புபவன் வெளியே சாப்பிட்டு கொள்வான் சில நேரம் அதுவும் இருக்காது நாள் முழுக்க அப்படியே ஓட்டிவிட்டு மாலை ஜீம்க்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு 

இரவு வீட்டிற்க்கு வந்து குடித்துவிட்டு அனைத்து மசாலா படங்களையும் தன் லேப்டாப்பில் பார்த்துவிட்டு படுத்து கொள்வான் ஒரு இயந்திரத்தை போல் தான் அவன் வாழ்க்கை இருந்தது. 

 

அந்த சிறுவர்கள் பயந்து ஓடுவதை பார்த்தவன் ஜீப்பில் ஏற போக அவன் பக்கத்து வீட்டுக்காரன் “என்ன சார் டியூட்டிக்கு கிளம்பிட்டிங்களா” என்று சிரித்து கொண்டே கேட்க சோழன் திரும்பி அவனை எரிப்பதை போல ஒரு பார்வை பார்க்க அவன் பயந்து தலை தெறிக்க ஓடி அவன் வீட்டின் உள்ளே சென்று கதவடைத்து கொண்டான். 

 

இங்கு வந்த ஆறு மாதத்தில் சோழன் இதுவரை யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை அதன் பின் சோழன் சாரதா மகளிர் கல்லூரிக்கு கிளம்பினான். 

 

அதே நேரம் அந்த நகரில் செல்வந்தர்கள் வசிக்க கூடிய சொகுசு பங்களா ஒன்றின் உள்ளே படுக்கயறையில் உயர் ரக மெத்தையில் படுத்து உறங்கி கொண்டு இருந்ததாள் இசைவாணி. 

 

அவள் கனவில் ஏதோ படம் ஒன்று விரிந்தது அதில் படுக்கையில் போர்வையை போர்த்தி கொண்டு அவள் உறங்கி கொண்டு இருந்தாள் அப்போது இசைவாணியின் போர்வையின் உள்ளே வாட்ட சாட்டமான ஒரு ஆண்மகன் ஒருவன் போர்வையின் உள்ளே நுழைந்தான் உண்மையிலேயே அவன் அவளை நெருங்கி வருவதை போல இருந்தது அவன் சூடான தேசத்தை கூட அவள் உணர்ந்தாள். 

 

இசைவாணி அவனை பயத்துடன் பார்த்து கொண்டு இருக்க அவன் முகம் அவளுக்கு சரியாக தெரியவில்லை ஆனால் அவனின் நெற்றியில் மட்டும் ஏதோ ஒரு வெட்டு தழும்பு ஒன்று இருந்தது அதை மட்டும் பார்த்தாள். 

 

“யார் நீ” என்று அவள் பயத்துடன் 

அவனை பார்த்து கேட்க அவளின் கேள்விக்கு பதில் கூறாமல் இசைவாணியின் கன்னத்தில் முத்தமிட்டு மீசை முடியால் கோடிழுத்தவன் அவளின் இதழில் முத்தமிட நெருங்க அப்போது “சின்னம்மா எழுந்துருங்க நேரமாச்சு” என்று அவள் வீட்டு வேலைக்கார பெண்மணி எழுப்ப அவளும் அடித்து பிடித்து கொண்டு எழுந்தமர்ந்தாள் ‘கனவா’ என்று மனதில் நினைத்தவள் அதன் பின் எதை பற்றி யோசியாமல் குளிக்க சென்றாள் குளித்து முடித்து கிளம்பி வெளியே வந்தாள் கீழே அவள் தந்தை அமர்ந்து இருந்தார். 

 

அன்றைய கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டு இருந்தார் முத்துவேல் என்கின்ற பெரியவர் இசைவாணியின் தந்தை அந்த ஊரில் ரௌடிசம் கட்டபஞ்சாயத்து கொலை அனைத்திற்க்கும் பெயர் போனவர் 

மிகுந்த அரசியல் செல்வாக்கு உள்ளவர் அந்த ஊரின் முக்கிய செல்வந்தர்களில் இவரும் ஒருவர். 

 

அவர் பக்கத்தில் அவரின் மகன் சத்யாவும் நின்றிருந்தான் தந்தையின் வலது கை இடது கை என்று அனைத்தும் அவன் ஒருவனே அவர் எள் என்றால் எண்ணெய்யாக நிற்பவன் 

தந்தையை போலவே அவனும் ரெளடிசத்தில் இறங்கி விட்டான்

கணக்குபிள்ளை அனைத்தையும் அவருக்கு கூறிக் கொண்டு இருக்க. 

 

மேலே மாடியில் உள்ள அறையில் இருந்து கீழே இறங்கி வந்தாள் அவரின் ஒற்றை மகளான இசைவாணி இந்த காலத்தில் பெண்கள் எப்படி எல்லாமோ உடை அணிய அவள் ஒருத்தி மட்டும் தாவணி பாவடையில் இறங்கி வந்தாள் இது அவர்கள் வீட்டில் எழுதப்படாத ஒரு விதி பெண்கள் வீட்டில் தாவணி பாவடை புடவையை தவிர வேறு எதுவும் அணியக் கூடாது என்பது. 

 

“இந்த டி.எஸ்.பி-யால ஒரே தொல்லையா இருக்கு பா நமக்கு ரொம்ப குடைச்சல் கொடுத்துட்டே இருக்கான்” என்று தன் தந்தையிடம் சத்யா கூறிக் கொண்டு இருக்க அவர்களின் அடியாட்களில் ஒருவன் “ஆமாங்க ஐயா நம்ம மணல் குவாரிக்கு கூட சீல் வச்சிட்டான்” என்றான். 

 

“அவன் ரொம்ப மோசமானவன்னு ஊர்ல பேசிக்கிறாங்க அவன் போன ஊர்ல எல்லாம் எழரை இழுத்துவிட்டுட்டு தான் வருவான்னு சொல்றாங்க” என்றான் இன்னொருவன். 

 

பெரியவர் அனைத்தையும் கேட்டு கொண்டு அமைதியாக இருக்க 

“அப்பா நான் காலேஜ்க்கு போய்ட்டு வரேன்” என்று வந்து நின்றாள் இசை பெரியவர் நிமிர்ந்து தன் மகளை பார்த்தார் “என்ன மா நீ நெத்தியில பொட்டு இல்லை கையில வளையல் இல்லை” என்று கேட்க. 

 

இசை உடனே தன் நெற்றியை தொட்டு பார்த்தவள் “சாரி பா” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று பொட்டு வைத்து வளையலை மாட்டி கொண்டு வந்தாள். 

 

“அப்பா இப்போ கிளம்பவா” என்று அவள் கேட்க “ஆ இப்போ தான் கலையா இருக்க பத்திரமா போய்ட்டு வா மா” என்றார். 

 

அதன் பின் அவளும் தன் காரில் ஏறி கல்லூரிக்கு கிளம்பி சென்றாள் தன் பக்கத்தில் இருந்த ஒருவனிடம் பெரியவர் கண்ணை காட்ட அவனும் வெளியே சென்று தன் பைக்கை எடுத்து கொண்டு அந்த காரை பின் தொடர்ந்தான். 

 

இது வழக்கமாக இந்த வீட்டில் நடப்பது தான் பெரியவருக்கு அவரின் மகள் என்றால் உயிர் அவளிடம் இதுவரை யாரையும் நெருங்க விட்டது இல்லை 

இரண்டாம் ஆண்டு பி. ஏ தமிழ் படித்து கொண்டு இருக்கிறாள் அவருக்கு மகளை படிக்க வைப்பதில் சுத்தமாக விருப்பம் இல்லை அவள் அழுது அடம்பிடிக்கவே கல்லூரியில் சேர்த்து விட்டு இருந்தார் அதுவும் மகளிர் கல்லூரியில் அவள் கல்லூரிக்கு சென்ற முதல் வருடமே அவரின் நண்பரின் மகனான செல்வாவை அவளுக்கு நிச்சயம் செய்துவிட்டு தான் படிக்கவே அனுப்பி வைத்தார். 

 

எங்கே தன் மகள் யாரையேனும் காதலித்து விடுவாளோ என்ற பயம் காதல் என்ற ஒன்று அவரின் அகராதியில் இல்லவே இல்லை. 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top