ATM Tamil Romantic Novels

உயிர் வரை பாயாதே பைங்கிளி -30

30

 

ஆயிற்று இதோட திலோத்தமா கனடாவிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிற்று… அன்று வார விடுமுறை நாள்… வீட்டுக்குள் இருந்து கிரிதரன் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை திலோவால்…

 

 அத்தான் ஸ்ஸ்ஸ் ப்ளீஸ் என் ட்ரெஸ்ஸை கொடுங்க இல்லனா இந்த குளிருலே வெறைச்சு செத்துடுவேன் போல இருக்கு… குளிர் தாங்க முடியல அத்தான் என்று கெஞ்சினாள் திலோ அவள் கணவன் அவளது எல்லா மாற்று உடைகளையும் திருடி வைத்துக் கொண்டு அவளை ஆதிவாசியாக அலைய விட்டிருந்தான் அந்த குளிரில்… மாற்று உடை ஏதுமின்றி கிரிதரன் கலர் டிவிசி சட்டையை மட்டும் அணிந்து கொண்டவள்… கொட்டும் பனிமழையில் குளிர் ஊசியாக உடலை துளைக்க தொடை வரை மட்டுமே அணிந்து கொண்டு ஹை கிளாஸ் கிளாமர் மாடலாக வரும் மனைவியை பச்சையாக சீட்டு எடுத்துக் கொண்டிருந்தான் கிரிதரன்… அவனது உடலிலும் பாக்சரைத் தவிர வேறு எந்த ஆடையும் இல்லை… 

 

 அனைத்து நேரத்தில் நினைத்த இடத்தில் வைத்து அவளோடு கூட வேண்டும் என்றே இருவரும் ஆதாம் ஏவாளாக அலைந்தனர்…

 

 திலோத்தம்மாவின் கெஞ்சலில் கொஞ்சமும் இரக்கப்படாதவனோ… உன் குளிர போக்க தான் நான் இருக்கேன்டி செல்லம் கிட்டவா என தன் உதட்டை இதழால் ஈரமாக்கிக் கொண்டே அவளை அழைக்க… 

 

 அடி வயிற்றில் புளியை கரைத்தது திலோவுக்கு… ஒன்று இரண்டு என்று கணக்கில்லாமல் அவன் அவளைப் படுத்திய பாட்டில் அங்கமெல்லாம் ரத்தம் கட்டியது போல் திட்டு திட்டாக வலி கொடுக்க… இடை வேறு அவன் வன்மை தாங்காமல் வெடுக்க வெடுக்கேன்று பிடிங்கிட… அவள் தொடைகளுக்கு இடையே இருக்கும் ரப்பர் குழாயில் எரிச்சல் எடுக்க தொடையை எடுத்து வைத்து கூட அவளால் நடக்க முடியவில்லை… கடுக்கடுக்கின்ற வலி உயிர் போனது… அப்படி இருக்க மீண்டும் சரசுக்கு ரா என்றால் அல்லு விடுமா இல்லையா… இவள் பதறி விலக அவன் படுக்கையை விட்டு எழுந்து இவளை அணுக… 

 

“ஐயோ அத்தான் திரும்பவுமா சத்தியமா என்னால முடியாது… ஒரு நாளைக்கு எத்தனை தடவை??? சாப்பாடு தண்ணிய போல இதுவும் அளவா செய்யனும் இப்படி முழுநேரம் பண்ணா எனக்கு இடுப்பு ஒடிஞ்சுடும் உங்களுக்கு துடுப்பு ஒடஞ்சிடும்… எனக் கூறியபடியே பின்னால் நடந்த சென்று தப்பிக்க பார்க்க… 

 

இரண்டே தாவலில் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் கரங்கள் அவள் ஆடைக்குள் சுதந்திரமாய் மேய்ந்தன… “ஸ்ஸ்ஸ்ம்மா இடுப்பு வலிக்குது அத்தான்…!!” என சிணுங்க…

 

அவள் இடுப்பை தடவி கொடுத்துக் கொண்டே நடத்தி சென்றவன் கட்டிலில் அவளை கிடத்தி அவள் மேல் சரிந்தவன்…

 

 அஞ்சு வருஷம் டி முழுசா அஞ்சு வருஷம் அடக்கி வச்சிருந்த ஆசையெல்லாம் ஆளை கண்டதும் ஆளா பறக்குது… எனக்கு ஆசை அதிகம்டி அதுவும் உன்கிட்டனா என் கண்ட்ரோல் மிஸ் ஆகுது… நீ என்னமோ பண்றடி… ப்ளீஸ்டி தடுக்காத நான் தாங்க மாட்டேன்…என இதுவரைக்கும் கெஞ்சி பழக்கம் இல்லாதவன் முதல் முறையாக அவளைக் கேட்டு கெஞ்சி நிற்க…

 

 அவளும் சந்தோஷத்துடன் அவனைத் தாங்க எழும்பி அவனை கட்டிக் கொண்டவள் அவன் காதுகளில்…

 

எனக்கு தெரியும் அத்தான் உங்க கண்ட்ரோல் பத்தி அன்னைக்கு ராத்திரி நீங்க என்னை கெடுக்க பார்த்ததா தான் எல்லாரும் தப்பா நினைச்சிக் கிட்டாங்க அவ்வளவு ஏன் எனக்குமே விவரம் தெரியாத வரை அப்படித்தான் நினைச்சிருந்தேன்… அன்னைக்கு நீங்க கத்த கூடாதுன்னு என் வாயை மட்டும் தான் பொத்துனீங்க மத்தப்படி உங்க கை என் மேல எங்கையுமே படல… ஆனால் அன்னைக்கு இருட்டுல கால் தவறி நீங்க என் மேல விழுந்ததுமே நான் பயந்துட்டேன்… உள்ள அவங்கள அப்படி பார்த்ததும் நீங்க என் மேலே விழுந்ததும் நீங்களும் அப்படித்தான் பண்ணுவீங்களோ ன்னு பயத்துல கத்திட்டேன்… அந்த நேரம் தான் அத்தை உள்ள வந்துட்டாங்க நம்ம ரெண்டு பேரையும் பார்த்து தப்பா புரிஞ்சுகிட்டாங்க… அதுக்கு பிறகு நடந்தது எல்லாமே தவறான புரிதல் தான்…என்றவளை வியப்பாக பார்க்க…

 

நீங்க தந்த படிப்பறிவு எனக்கு பகுத்தறிவும் கற்றுக் கொடுத்துருக்கு அத்தான்… என்றவள் கிரிதரன் கன்னத்தில் முத்தமிட்டு கடித்து வைக்க… ஆஆ இப்படியா கடிச்சி வைப்ப கிறுக்கி வலிக்குதுடி…

 

அஆ நீங்க மட்டும் என்ன சும்மாவா வைப்பிங்க என் உதட்டை பாருங்க நீங்க கடிச்சு வச்சது போக மிச்சம் தான் இருக்கு… வெளிக்காயம் கூட பரவாயில்லை நீங்க பண்ணின உள் காயம் இருக்கே ஸ்ஸ்ப்பா எவ்வளவு அவஸ்தையா இருக்கு தெரியுமா…?? என அலுப்பாக மனைவி சொல்ல…

 

“ பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையேடி…?? “ என கிறக்கமாக மனைவியை பார்க்க…

 

“ சும்மா பார்த்தா எப்படி தெரியும் அத்தான்…?? சோதிச்சு பாருங்க அப்பதான் தெரியும்…!! கணவன் கிட்னி புடுங்க அடித்தளம் போடுவது தெரியாமல் தானாக வலையில் வந்து சிக்கிய மானை… 

 

அப்படியா காட்டு எவ்வளவு சேதம் வர வாங்கி இருக்குன்னு நானே சோதிச்சு பார்க்கிறேன் என்றவன்… அவள் அங்கத்தில் விரல்களையும் இதழ்களையும் கொண்டு சோதனை செய்ய… “ஐயோ அத்தான் தெரியாம சொல்லிட்டேன் விடுங்க ஹாஆஆ ம்ம்ம் ஆஆவ்வ் ம்ம்ம்…!!” என கெஞ்சலுக்கு கதறலுக்கு தகுந்த சன்மானம் அவனால் வழங்கப் பட்டது அவள் கணவனால்…

 

வாரங்கள் மாதங்களாக ஓட திலோத்தமாவின் டூரிஸ்ட் விசா முடியப் போகும் நேரம் வர அவளை அழைத்துக் கொண்டு இந்தியா திரும்பினான் கிரிதரன்… 

 

ஊரே திருவிழா கோலம் பூண்டது… அங்கும் இங்கும் மக்கள் திரள்… கொட்டு கோலாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் என கொண்டாட்டம் களைக் கட்டியது…

 

“என்ன அத்தான் இது ஊர்ல திருவிழாப் போல இருக்கு ஆனால் இந்த மாசம் எந்த விசேசமும் கிடையாதே… அப்புறம் யார்க்கு இந்த வரவேற்பு உற்சவம் எல்லாம்…!!”என திலோ வியந்து கேட்க… 

 

எல்லாம் என் பொண்டாட்டிக்கு தான் என… கிரிதரன் சிரியாமல் சொல்ல 

 

விளையாடாதீங்க அத்தான்… சும்மா எல்லாத்திலும் உங்களுக்கு விளையாட்டு தான்… என அவன் சொன்னதை கிண்டலாக எடுத்துக் கொண்டாள்… சற்று நேரத்திலே அவர்கள் இல்லம் நோக்கி வாகனம் சென்றதும் புரிந்துக் கொண்டாள் திலோ கிரிதரன் விளையாடவில்லை மெய் தான் உறைத்தான் என்று…

 

தெரு முனைத் தொடங்கி வீதி முழுவதும் திலோ கிரிதரன் பேனர்கள் தான்… நாலு வீடு முன்னதாகவே வண்டி நின்று விட்டது அந்த அளவுக்கு உறவினர் கூட்டம் அலைமோதியது மங்கள மகளிர் ஒன்று கூடி பன்னீர் சந்தனம் – ஜவ்வாது அக்தர் கொண்டு வரவேற்க வாசலில் நின்ற குலப் பெண்கள் மலர் தூவி உறவினர் பெண்கள் சூழ நின்று மேனகை கையில் ஆரத்தியுடன் வந்தவள் அவள் அண்ணன் மற்றும் அண்ணியாரை ஒன்றாக நிற்க வைத்து ஆலம் சுற்றிட… உள்ளே அழைத்து சென்றாள்…

 

 வீடு திருமண கோலம் கண்டது… ஆம் திருமணம் தான் திலோவிற்கும் கிரிதரனுக்கும் முறைப்படி மீண்டும் திருமணம் நடக்க போகிறது… அதற்காகத்தான் இத்தனை ஏற்பாடுகளும் கிரிதரன் செய்து இருந்தான்… இன்னும் ஓரிரு தினங்களில் இருவருக்கும் மீண்டும் திருமணம்… பகலில் ஆட்டமும் பாட்டமும் இரவில் வான வேடிக்கையும் கொண்டாட்டம் என ஊரையே திரும்பி பார்க்கும் படி அவர்களது திருமணத்தை திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடினர்…

 

 தனிமையில் கணவனை சந்தித்த வேளை திலோ என்ன அத்தான் இதெல்லாம் என்று கேட்க… 

 

 நீ அன்னைக்கு கேட்ட இல்ல எப்படி அத்தான் நீங்க செஞ்சதெல்லாம் மறந்துட்டு என்னால உங்க கூட வாழ முடியும்னு?? அதுக்குத்தான்!! என்னால பழசை எல்லாம் மாற்ற முடியாது ஆனால் நம்ம எதிர்காலத்தை அழகா வடிவாக்க முடியும்… நீ அன்னைக்கு வருத்தப்பட்ட இல்ல இந்த ஊரே உன்ன தப்பா பேசினதுக்கு… அந்த வருத்தத்தை போக்க என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செய்வேன்… இனிமே இந்த ஊருக்குள்ள நம்மள பத்தி எவனும் தப்பா பேசவே மாட்டேன்… நம்மளோட இந்த கல்யாணத்தை பத்தி மட்டும் தான் பேசுவான்… இந்த பணம் எல்லாவற்றையும் மாத்திடும்… தப்பையும் சரியாக்கிடும் சரியையும் என் தப்பாக்கிடும்… என்னால நீ இழுந்தது திருப்பி கொடுக்க முடியாது ஆனா இனிமையான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க முடியும் அந்த நம்பிக்கை இருந்தா என்னோட வா சேர்ந்து பயணிப்போம் என்று கிரி கரம் நீட்ட சின்ன புன்னகையுடன் அவன் கரத்தில் தன் கரம் பதித்தாள்… இனி எல்லாம் சுகமே என்பது போல் 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top