26
தெரியாமல் செய்த தப்பிற்கு பிராயசித்தம் தேட நினைத்தவளோ தெரிந்தே அறிந்தே தவறு செய்து அவன் இதயத்தில் மேலும் ஆறாத வடுவை உருவாக்கி விட்டிருந்தாள் மேனகை… முன்னிலும் கேடாகி போனான் சீராளன்… பகல் எது?? இரவு எது??? என வித்தியாசம் தெரியாமல் சதா காலமும் மதுபான கடையிலே கிடந்தான்… ஊற்றி கொடுத்தே கெடுத்து விட்டான் சுந்தரம்…
மதிக்கெட்டால் தன்னால் எல்லாம் கெடும் என்பது போல் மேனகை மேல் இருந்த கோவத்தில் புத்தி கெட்டு போய் கண்ட காவளிகளோடு பழக்கம் வைத்துக் கொண்டான்… அத்தோடு நிறுத்தாமல் அவர்களை வீடு வரை அழைத்து வரலானான் சீராளன்…அது தான் அவன் செய்த முட்டாள் தனத்தின் உச்சம் எனலாம்…
கெடுவான் கேடு நினைப்பான்… என்பதை மறந்து தன் கதை மொத்தத்தையும் அழகு சுந்தரத்திடம் மறைக்காமல் உளறிக் கொட்டி விட்டான்… அதனால் மேனகைக்கு வரப் போகும் ஆபத்தை அறியாமல்…
திருமண இரவு அன்றே கண் மண் தெரியாமல் குடித்து விட்டு வந்த கணவனை கண்டு வருந்தியவளுக்கு மேலும் சீராளன் அழகு சுந்தரத்தை அழைத்துக் கொண்டு வந்து நின்றதை பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி தான்…
அவன் பார்வையே அவளை கூச செய்தது… அதற்கு மேல் பொறுக்காமல் போதையில் சலம்பியப்படி நின்ற கணவனை அவன் கட்டு பாட்டில் இருந்து பிரித்து தாங்கி பிடிக்க போனவளை தட்டி விட்டவன்… “தொடாதடி ராட்சசி நீ… என் நண்பன் பார்த்துப்பான்…!!” என்று அவனோடு உள்ளே சென்றவனை விக்கித்து போய் பார்த்தாள் மேனகா…
உள்ளே சென்றவன் வெளியே வருவான் என இவள் வாசலில் காத்திருக்க சுந்தரம் வெளியே வந்தப்பாடியில்லை… என்னாச்சு என்று உள்ளே சென்று பார்த்தவளுக்கு திக் என்றானது… உள்ளே சீராளன் அறையில் அவன் படுக்கையில் அமர்ந்து இருவரும் மீண்டும் சரக்கு அடித்து கொண்டு இருந்தனர்… ஏற்கனவே முழு போதையில் தலை கால் தெரியாமல் இருந்தவன்… மீண்டும் குடித்தால் என்ன ஆகும்… என்ன மாமா நடக்குது இங்க நீங்கள் வெளியே போங்க என அழகு சுந்தரத்தை பார்த்து கத்தியவள்… உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா மாமா கண்டவனையும் நம்ம ரூம்குள்ள கூப்பிட்டு வச்சி கூத்தடிக்கிறிங்களே இது நியாயமா…?? என அவர்கள் குடிக்க வைத்த சரக்கு பாட்டில் அனைத்தையும் தூக்கி வீச… அவள் கைகளை பிடித்து தடுத்தவன்… “ஏய் விடுடி ராட்சசிஇஇ எனக்கு ஹிக் இருக்கிற ஒரேஏஏஏ ஆழு(று)தல் இந்த சரக்கு(ஹிக்)ம் என் நண்…பனும் தான்… என் நண்பனை பார்த்தா கண்டவன்னு சொன்ன… அவன் என்ன காக்க வந்த சாமிடி… சரக்கடிக்க கையில காசு இல்லாம கஷ்டப்பட்ட ஹிக் அப்போஓஓ என் நண்பன்!!!என் தோஸ்த் தான்!!! சொந்த காச போட்டு வாங்கிக் கொடுத்தான்… ஃபுல்லா குடிச்சிட்டு நான் வயி(ழி)யில வயி(ழு)க்கி வி(ழு)ந்துட கூடாதுனு என்னை வீடு வரைக்கும் கூட்டியா(வ)ந்த என் நண்பனை பார்த்து நீ எப்படி கண்டவன் சொல்லுவ சொல்லுடி நீ எப்பி(ப)டி அப்பிடி சொல்லுவ… நீ தான் கண்டவள்… கண்டபடி என் வாழ்க்கையில வந்து நுழைஞ்சிட்ட… நீ வெளிய போடி மொதல்ல… நீ வா நண்பா இவள் கிடக்குறா ராட்சசி பொய்க்காரி…நான் நிம்மதியா இருந்தாவே அவளுக்கு பிடிக்காது… நீ சரக்கை ஊற்று நண்பா என்ற கணவனின் வார்த்தைகளில் விக்கித்து போய் நின்றவளை இதழ் வளைய ஏளனமாக பார்த்த சுந்தரத்தின் பார்வையில் அப்படி ஒரு திமிர் என்னை யாராலயும் தடுக்க முடியாது என்கிற ஆணவம் அவன் மீசைக்கிடையில் ஒளிந்து இருக்க… ஸ்தம்பித்துப் போனாள் மேனகா…
அது ஏளனப் பார்வையோடு நின்று இருந்தால் மேனகா வருந்தி இருக்க மாட்டாள்… மறுநாளும் இதே போல் சீராளனை குடிக்க வைத்து அவன் அறையிலே இருவரும் ஒன்றாக உறங்கவும் இவளுக்கு திக் என்றானது… கூடவே என்னவோ இவன் சொந்த வீடு போல் நினைத்த நேரம் வந்து செல்வது உரிமையாக பேசி பழகுவதும் இவளுக்கு பயத்தை கிளப்ப தன் சொந்த வீட்டில் இருக்க பயந்து இரண்டாவது நாளே வேலைக்கு கிளம்பியக் கதையை யாரிடம் சொல்ல…
அடுத்தடுத்து வந்த நாட்களில் அதுவே தொடர்கதையாக மாறிட வீட்டில் இருக்கும் நேரம் நெருப்பில் நிற்பது போல் உணர்ந்தாள் மேனகா… அவன் பார்வை பேச்சு எல்லாம் மாறத் தொடங்கி இவளை தொட்டு பேசும் அளவுக்கு வந்து விட தீ சுட்டாற் போல் விலகியவளுக்கு உள்ளுக்குள் கிலி பிடித்தது… சுந்தரத்தை பற்றி சீராளனிடம் சொல்ல வரும் போது அவன் அருகிலேயே சுந்தரமும் இருக்க… எதுவும் பேச முடியாமல் பயந்து ஓடி வந்து விட்டாள் மேனகை தன்னை பற்றி சீராளனிடம் சொல்ல முயன்றதை கவனித்து விட்டவன்… சீராளனை விட்டு இம்மியும் அகலாது மேனகையை சொல்ல விடாது செய்து விட்டான்… அதையும் மீறி கிடைத்த வாய்ப்பில் சீராளனிடம் சொன்னவளை…“நீதான்டி கெட்டவள் என்னையே மிரட்டி தான கல்யாணம் பண்ணிக்கிட்ட…இப்போ அவன் இங்க வந்து போறது உனக்கு பிடிக்கல அதுனால எதோ பொய் சொல்லி எங்களை பிரிக்க பார்க்கிற… ஒழுங்கா இருக்கிறதா இருந்தா இரு இல்லனா உங்க அம்மா வீட்டுக்கு கிளம்புடி… என்றவனால் வார்த்தைகளற்று விக்கித்து போனாள் பேதை…
அந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் வந்த அழகு சுந்தரம் என்ன ஏது என்று கேட்க… “நண்பா நீ சொன்ன மாதிரியே தான் பொய் சொல்லி நம்ம நட்பை பிரிக்க பார்க்கிறாடா இந்த ராட்சசி… இவளுக்கு எந்த ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணுனேன்னு தெரியல… என்நிம்மதிய கெடுக்கவே பிறந்து இருக்கா சைக் என்று விட்டு போய் விட…
வாய் விட்டு சிரித்தப்படி மேனகையின் அருகே வந்த சுந்தரம்… “ஹாஹாஹா என்ன என்னை பற்றி உன் புருஷன் கிட்ட சொன்னதும் என்னை அடிச்சி விரட்டிடுவான்னு நினைச்சியா…ஹாஹ முட்டாள் முழுசா அவன் என் கட்டுப் பாட்டுக்குள்ள வந்து பல நாள் ஆகுது… அவன் உனக்கு ஏத்தவனே இல்லடி நீ என்கூட வந்துடு உன்னை ராணி மாதிரி வச்சி பார்த்துக்குறேன்…!!” என கையை அவள் கன்னம் அருகே எடுத்து போனவனிடம் இருந்து துள்ளி விலகி நின்றவளை… முறைத்து பார்த்து “ஒழுங்கா நீயா என்கிட்ட வந்துட்டா உனக்கு நல்லது இல்லாட்டி என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியது வரும்…!!” என எச்சரித்து விட்டு போனவனை கண்டு செய்வது அறியாது திகைத்து போனவள்… தன் தலை விதியை நினைத்து தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்…
கொண்டவன் துணை இருந்தால் கண்டவன் இப்படி இவளிடம் அத்துமீறுவானா… இப்பொழுது மொத்த கோபமும் சீராளன் பக்கம் திரும்பியது… அதுவரை சுந்தரத்தை பற்றி யாரிடமும் சொல்லாதவள் அவனைத் தானே சமாளித்து விடலாம் என்று நினைத்து எடுத்த முட்டாள்தனமான முடிவு தான் அவளுக்கு வினையாகி போனது… அவன் எண்ணமே வேறாக இருக்கவும் அஞ்சி நடுங்கி விட்டாள்… இதை இப்படியே விட்டால் சரியாக இருக்காது என அவள் துணிந்து முடிவு எடுத்த சமயம் எல்லாமே கை மீறி போய் விட்டு போய் இருந்தது…
அன்று பள்ளி முடிந்து சோர்வாக வீட்டுக்கு திரும்பினாள் மேனகா… வீடு திறந்து கிடந்தது… உள் இருந்து ஆண்கள் சத்தம் கேட்டது… அவன் தான் வழக்கம் போல் சீராளனுக்கு ஊற்றிக் கொடுத்து கொண்டு இருந்தான்… முன்பு எல்லாம் இரவில் மட்டும் நடக்கும் இந்த அட்டகாசம் இப்பொழுது பகலிலும் நடக்க ஆரம்பித்தது தான் விபரீதத்தின் தொடக்கம்… உள்ளே போகவே மேனகைக்கு கால்கள் நடுங்கியது… ஆனால் போகாமலும் இருக்க முடியாது அவள் வீட்டிலே அவள் நடமாடுவதற்கே பயப்பட வைத்து விட்டான் படுபாவி…
இது இப்படியே விட்டால் சரி வராது இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிந்தே ஆக வேண்டும் என வரவழைக்கப் பட்ட தைரியத்துடன் உள்ளே நுழைந்தாள்… தனக்கு நடக்க போகும் விபரீதம் பற்றி அறியாமல்… அறை அறையாக அவர்களை தேடிச் செல்ல எங்கே இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியவில்லை ஆனால் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது… சத்தம் வந்த வழி சென்று பார்த்தவளுக்கு மூச்சே நின்று விட்டது…
மேனகையை வேட்டையாடும் வெறியில் அழகு சுந்தரம் நின்று இருக்க… முழு போதையில் மட்டையாகி கிடக்கும் அவள் கணவன் சீராளனை அறைக்குள் வைத்து பூட்டி வைத்து இருந்தான் அழகு சுந்தரம்… அடுத்து நடக்க போகும் விபரீதம் பற்றி அவள் மூளை எச்சரிக்க… தப்பி ஓட முயன்றாள் மேனகா… என்ன ஓட்டம் ஓடியும் மேனகையால் சுந்தரத்தின் பிடியில் இருந்து அவளால் தப்பிக்க முடியவில்லை… பாய்ந்து பிடித்து இருந்தான் இரையை சுந்தரம்…
மாமா மாமா என்னை காப்பாத்துங்க என மேனகையின் கதறல் சீராளன் செவிகளை எட்டியதா என்பது கேள்விக் குறியே… அவன் வந்து காப்பாற்றுவான் என்பதை நீங்கள் எதிர்பார்த்தால்… ஐ அம் ரியலி வெரி சாரி அந்த குடிகார கபோதி தான் மூச்சு முட்ட குடிச்சிட்டு கவுந்து கிடக்குறானே…
புலியிடம் மாட்டிய புள்ளி மானாக மேனகை கிடந்து போராட ஒரு கட்டத்திற்கு மேல் அந்த கயவனிடம் தோற்றுப் போய் மயங்கியவள் மீது ஆவேசத்துடன் அத்து மீற முன்னேறியவன் பின்னந்தலையில் ஓங்கி அடித்து அவளை காப்பாற்றினர்… யாரா வேற யாரு பிடி டீச்சர் யது நந்தினியும் திலோத்தமாவும் தான்…
தன் கதையில் ஹீரோயின்களுக்காகத் என்றால் ஓடோடி வந்துவிடும் ரைட்டர் மெச்சி கொண்டு அடுத்தக் காட்சிக்கு போவோம்…( மெல்ல அங்க திட்டுறது இங்க கேக்குது )
மயங்கி கிடந்த சுந்தரத்தின் கை காலை பிடித்து தூக்கி தூணோடு கட்டி போட்டார்கள் யதுவும் திலோவும்… யது மேனகையை காப்பாற்றி தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்த…அதற்குள் திலோ அறையில் போதையில் கிடந்த சீராளனை எழுப்ப முயற்சிக்க.. ம்ஹும் முடியவில்லை…
“திலோ நீ இப்படி எழுப்பினால் தேறாது… ஆள் மட்டம் ஆகி அவுட் ஆப் தி வேர்ல்ட்ல இருக்கு…இரு வரேன்…!!” என்று வெளியே சென்று ஏதோ ஒரு வாளி தண்ணியை எடுத்து வந்து சீராளன் மீது ஊற்றிட மூச்சு திணற பதறி எழுந்து அமர்ந்தவன்… எங்களை யார் என்பது போல் பார்க்க…
“ ஐயா குடிகார குலத்திலகமே… போதை தெளிஞ்சி பூமிக்கு தரை இறங்கி கொஞ்சம் வெளில வந்து பாருங்க…!!”என யது நக்கலாக அழைத்து விட்டு போக…
தெளிந்தும் தெளியாத போதையிலும் எழுந்தவன் அவிழ்ந்து கிடந்த வேட்டியை பிடித்துக் கட்டி கொண்டு குழப்பத்துடன் வெளியே வந்தான் சீராளன்…
குத்தங்கால் இட்டு அமர்ந்து கதறி அழும் மேனகையையும் தூணில் கட்டி வைத்து இருக்கும் அழகு சுந்தரத்தையும் கண்டவனின் செவிகளில் எங்கோ ஒரு மூலையில் “மாமா என்னை காப்பாத்துங்க…!!” என்கிற பெண்ணின் கதறல் சத்தம் கேட்க… எல்லாம் புரிய கண்களை அகல விரித்தவனுக்கு வார்த்தை தொண்டைக் குழியிலே சிக்கிக் கொண்டன…
“புள்ள…நா… நான்…!!” என அவள் அவ்ளோ சொல்லியும் அவளை நம்பாமல் போனது வேறு நினைவுக்கு வந்து அவனை அவள் முன் குற்றவாளியாக நிறுத்தின…
“ஹே பாரேன் திலோ சார் இப்போ தான் எழுத்து கூட்டி பேசக் கத்துக்கிறார் போல…அவ்வளவு போதை…!!”என யது நக்கல் அடிக்க… திலோ அவளை அமைதியாக இருக்கும் படி கூறிட அடங்குபவளா அவள்…
“ நான் ஏன் அமைதியா இருக்கணும் சொந்த பொண்டாட்டிய ஒருத்தன் கற்பழிக்கிறது கூட தெரியாத அளவுக்கு போதைல கிடந்து இருக்கான்… சரியான நேரத்துக்கு நீயும் நானும் வரலனா மேனகா நிலைமை என்ன ஆகி இருக்கும் சொல்லு…!!”என யது சொன்னது திலோவுக்குமே அது சரியாக பட்டது…
பள்ளி முடிந்து மாலை அவர்கள் வீட்டில் வாசலுக்கு வந்த மேனகா உள்ளே கூட வராமல் “அப்பா இல்லையா அண்ணி…?? “ என்று கேட்டதும் அவள் இல்லை என்றதும்… ஏமாந்து போனவள் “ ஓ சரி அண்ணி நான் அப்புறம் வரேன்… என நைந்த குரலில் கூறிவிட்டு சோர்வுடன் நடந்து போவதை கண்டத் திலோவுக்கு எதுவோ நெருடலாக இருக்க… இவள் பின்னால் வரவும் பள்ளியில் மறந்து வைத்து விட்ட பர்ஸை கொடுக்க யதுவும் வராவிட்டால் என்ன ஆகி இருக்கும் மேனகையின் நிலை…!!” என நினைத்தவளுக்கே உள்ளூர நடுக்கம் வந்து விட்டது…
“இப்படி ஒரு தியாக புருஷன அடைய தான் நீ அத்தனை போராட்டம் நடத்துனியா மேனகா???… இரக்கப் படலாம் ஆனால் உன் வாழ்க்கையவே தியாகம் பண்ற அளவுக்கு இரக்கப் படாத… இந்த உலகத்துல யாரை வேணாலும் திருத்திடலாம் ஆனால் குடிகார கோமகன்களை திருத்தவே முடியாது… அதுலையும் கூட பழகுறவன் என்ன எண்ணத்துல நம்ம கூட பழகுறான்னு தெரியாம… அவனை படுக்க அறை வரை கூட்டி வந்து விட்டா என்ன ஆகும் என்கிறதுக்கு ஒரு எடுத்துகாட்டு தான் இது…?? இப்படி குடிகார புருஷனோட இப்படி ஒரு வாழ்க்கை உனக்கு வேணுமா?? எதுவா இருந்தாலும் யோசிச்சு நீயே முடிவு எடு நாங்க போறோம்…!!” என்ற யது திலோவை அழைத்துக் கொண்டு போக…
“ஒரு நிமிடம் யது… அண்ணா வயசுல மூத்தவங்க நீங்க உங்களுக்கு அறிவுரை சொல்ற மாதிரி வச்சிக்கிட்டிங்களே… இனியாவது திருந்தி வாழ பாருங்க அட்லீஸ்ட் மேனகைக்காவது திருந்துங்க அவள் உங்களை மட்டும் தான் நம்பி வந்து இருக்கா… என்ன நடந்திருந்தாலும் அவன் இப்ப உங்க பொண்டாட்டி… அவளுக்கு நடக்கிற நல்லது கெட்டது எல்லாமே உங்களால் என்கிறத மறந்துடாதீங்க… அப்புறம் இன்னைக்கு நடந்த விஷயம் நம்ம நாலு பேரத் தவிர வேற யாருக்கும் தெரிய வேண்டாம்…என்ற திலோத்தமா சீராளனை தீர்க்கமாக பார்க்க…
அவன் கண்களோ மேனகையையும் அடிபட்டு கிடக்கும் அழகு சுந்தரத்தையும் ஒரு முறை பார்த்தவன் கண்களை இறுக மூடி திறந்தவன்… கண்களில் திலோப் பேச்சை ஆமோதிப்பதாக கண்ணீர் துளிகள்…
அதன் பின் இவனை நாங்க பார்த்துகிறோம் நீ தைரியமா இரு என்று மேனகைக்கு ஆறுதல் கூறிவிட்டு அழகு சுந்தரத்தை இழுத்துக் கொண்டு சென்றனர்… பிறர் கவனத்தை ஈர்க்காமல் பொத்துனாப்ல தூக்கிட்டு போய் ஊர் எல்லையில் தூக்கி எறிந்து விட்டு கைகளை தூசி தட்டி விட்டு திரும்பி வந்தனர்…
அவர்கள் வெளியே சென்றதும் தள்ளாடியபடி வந்த சீராளன் தண்ணீர் தவலைகளை கொண்டு வந்து தலையில் ஊற்றிக் கொண்டவன்…
புள்ள இனி சாமி சத்தியமா குடிக்க மாட்டேன்… என்னை மன்னிச்சுடு புள்ள என்று மேனகையின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மன்னிப்பை வேண்ட… அவனை வெறித்த பார்வை பார்த்தாள் மேனகை…
அந்த பார்வையின் பொருள் யாது…?? சீராளன் தவறை மன்னித்து ஏற்பாளா மேனகா…?? அவள் மன்னிக்க கூடிய தவறையா சீராளன் செய்தது…?