அத்தியாயம் 2
காரில் சென்று கொண்டிருந்த இசைவாணி தன் பின்னே பின் தொடர்ந்து வருபவனை பார்த்து எரிச்சல் பட்டு கொண்டாள்
‘இந்த அப்பா திருந்தவே மாட்டாரு’ என்று நினைத்தாள்.
பெரியவர் எப்போதும் தன் மகளிடம் கண்டிப்புடன் தான் இருப்பார் இதுவரை அவளுக்கு ஒரு போன் கூட வாங்கி கொடுத்தது இல்லை அவளை டிவி பார்க்க விட்டது இல்லை ஏன் வீட்டை விட்டு இதுவரை வெளியே அனுப்பியதே இல்லை கேட்டால் பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று அவருக்கு சில வரையறைகள் இருந்தது வாரம் ஒரு முறை கோவிலுக்கு அழைத்து செல்வார் அவ்வளவே.
இசைவாணியின் தாய் அவள் சிறு வயதில் இருக்கும் போதே இறந்துவிட்டார் பெரியவரின் எதிரி ஒருவர் தான் அவரை கொன்று இருந்தார் அன்றிலிருந்து தன் மகளுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருக்கிறார்.
இசைவாணி கோபத்துடன் தன் பையில் இருந்த டி.என்.பி.எஸ்.சி புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் அவள் நன்றாக படிக்க கூடியவள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியும் அவள் தந்தை தான் இதில் வற்புறுத்தி சேர்த்துவிட்டு இருந்தார் அவள் இதுவரை தந்தை பேச்சை மீறியதே இல்லை கல்லூரியில் இருக்கும் கொஞ்ச நேரம் மட்டுமே அவள் சுதந்திரமாக இருந்தாள்.
எப்படியாவது ஒரு அரசு வேலை வாங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் அவள் வாழ்நாள் லட்சியம்
பெரியவருக்கு அடுத்த வருடம் தன் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பது லட்சியம் இதில் யாரின் கனவு பலிக்குமோ.
சாராதா மகளிர் கல்லூரி வாசலில் இசைவாணியை அவளின் டிரைவர் இறக்கி விட அவளுக்கு இப்போது தான் அப்பா டா என்று இருந்தது சுதந்திர காற்றை சுவாசித்தவள் ஜெயிலில் இருந்து தப்பித்து விட்டோம் என்ற நினைப்புடன் உள்ளே வந்தாள்.
அவள் வகுப்பின் உள்ளே நுழைய ஓடி வந்து அவளின் கையை பிடித்து கொண்டாள் நிலாவின் தோழி கீர்த்தனா “ஏய் நிலா நமக்கு இன்னைக்கு கிளாஸ் இல்லை உமன்ஸ் டே செலிபிரேஷன் போய்ட்டு இருக்கு சீக்கிரமா வீட்டுக்கு போயிடலாம்” என்று கூற இசைவாணியின் முகம் வாடியது இங்கு இருக்கும் கொஞ்ச நேரம் மட்டும் தான் அவள் நிம்மதியாக இருக்கிறாள் அதுவும் பொறுக்கவில்லையா இந்த கடவுளுக்கு என்று நினைத்தவள் வாடிய முகத்துடன் நிற்க.
“ஏய் வாடி ஆடிட்டோரியம் போலாம்” என்று அவளை தன்னுடன் இழுத்து சென்றாள் கீர்த்தனா இசை தன் பையை வகுப்பில் வைத்துவிட்டு அவளுடன் வாடிய முகத்துடன் கிளம்பி சென்றாள்.
இசைக்கு எப்போதும் கீர்த்தனாவை பார்த்தாள் சற்று பொறாமையாக இருக்கும் ஏனெனில் அவள் வீட்டில் அவள் ஒரு சுதந்திர பறவையாக சுற்றி கொண்டு இருக்கிறாள் வீட்டிற்க்கு ஒரே ஒரு குழந்தை அப்பா அம்மா இருவரும் டீச்சர் அவளுக்கு வேண்டிய அனைத்தும் கிடைத்தது நினைத்தால் வெளியே செல்வாள் தினமும் அவளின் ஸ்கூட்டியில் தான் கல்லூரிக்கு வருவாள் அவளை பார்த்து பல விஷயங்களில் இசைவாணி ஏங்கி இருக்கிறாள்.
அங்கிருந்த மாணவிகள் அனைவரும் ஆடிட்டோரியத்தில் தான் இருந்தனர்
டி.எஸ்.பி ஆதித்ய சோழன் இன்னும் வராததால் விழா தொடங்கவில்லை
இசைவாணி உள்ளே வந்தவளுக்கு மீண்டும் ஏதோ ஜெயிலில் வந்து சிக்கிக் கொண்டதை போல் இருக்க அங்கு இருக்க முடியாமல்
“நான் வெளியே இருக்கேன் டி பங்க்ஷன் ஸ்டார்ட் பண்ணினதும் வரேன்” என்று கீர்த்தனாவிடம் கூறிவிட்டு வெளியே வந்து நின்று கொண்டாள்.
அவளின் வகுப்பில் இருந்த யாருக்கும் அவள் பெரியவரின் மகள் என்று இதுவரை தெரியாது ஏனெனில் அவள் யாரிடமும் சொல்லியது இல்லை முத்துவேலின் மகள் என்று தான் தெரியும் பெரியவரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது குறிப்பாக அவருக்கு ஒரு மகள் இருப்பதும் யாருக்கும் தெரியாது.
இசைவாணியிடம் அப்பா என்ன செய்கிறார் என்று கேட்டாள் டிரைவர் என்று தான் சொல்லுவாள் இதுவரையில் அவளை காரில் கொண்டு வந்து விடும் அவளின் டிரைவர் தான் இசைவாணியின் அப்பா என்று நினைத்து கொண்டு இருந்தாள் கீர்த்தனா.
இசைவாணி வெளியே வந்து நின்றவள் பால்கனி வழியாக இயற்கை காட்சிகளை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள் வானத்தில் ஒரு பறவை சுதந்திரமாக பறந்து சென்று கொண்டிருந்தது அதை பார்க்க கூட அவளுக்கு ஏக்கமாக இருந்தது.
கல்லூரி நிர்வாகத்தில் இருந்து சோழனுக்கு அழைப்பு விடுக்க போனை எடுத்தவன் “நான் டிராபிக்ல இருக்கேன் மேடம் நான் வர அரை மணி நேரம் ஆகும் நீங்க பங்க்ஷன ஸ்டார்ட் பண்ணிடுங்க” என்றான்.
அதன் பின் கடைசியாக நடக்க வேண்டிய நடன நிகழ்ச்சிகளை முதலாவகாக மாற்றி வைத்தனர் உள்ளே நடன நிகழ்ச்சிகள் ஆரம்பமாக வெளியே ஓடி வந்தாள் கீர்த்தனா “ஏய் டான்ஸ் பங்க்ஷன் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க டி இசை வா உள்ளே” என்று கைப்பிடித்து இழுக்க இசை அங்கே மழையுடன் சிறிதாக தூரல் விழுந்து கொண்டு இருக்க அதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
“இல்லை டி நான் வரலை இங்கேயே நல்லா இருக்கு” என்று கூற அப்போது உள்ளே ஓடிய பாட்டு சத்தம் வெளியே வரை கேட்டது “ஏய் நான் போறேன்” என்று கீர்த்தனா ஆர்வத்தில் அவளின் கையை உதறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
நேரம் செல்ல செல்ல மழை இன்னும் அதிகமாக வெளுக்க ஆரம்பித்தது
இசைவாணி அங்கேயே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள் அப்போது விழாவிற்க்காக போடப்பட்டு இருந்த லைட்டின் ஒரு பகுதி காற்றில் ஆடி பால்கனியில் தேங்கி இருந்த மழை தண்ணீரில் விழுந்தது.
இசைவாணி அதை கவனிக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்
மழை தண்ணீரில் வோயர் விழுந்து அதிலிருந்து மின்சாரம் கடத்தப்பட்டு
அவள் கை வைத்திருந்த பால்கனி பிடியில் மின்சாரம் பாய்ந்தது.
இசைவாணியின் உடலில் மின்சாரம் பாய்ந்து அவள் துடிக்க ஆரம்பித்தாள்
அவளால் கத்தவும் முடியவில்லை
அந்த நேரம் பார்த்து அங்கு யாரும் இல்லவும் இல்லை உள்ளே பாடல் ஓடிக் கொண்டு இருக்க ஒரே கூச்சலும் சத்தமாக வேறு இருந்தது இங்கே இசைவாணி உயிருக்கு போராடி கொண்டு இருப்பது யாருக்கும் தெரியவில்லை.
அப்போது அந்த வழியாக சோழன் விழா நடக்கும் இடத்தை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தான்.
தூரத்தில் ஒரு பெண் அசையாமல் நிற்பதை பார்ததவனுக்கு ஒன்றும் புரியவில்லை அவளை கூர்மையாக பார்த்து கொண்டே இன்னும் அருகில் நெருங்கி செல்ல செல்ல தான் அவனுக்கு தெரிந்தது தண்ணிரில் லோயர் ஒன்று விழுந்து அவள் மீது மின்சாரம் பாய்ந்து கொண்டு இருப்பதை பார்த்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றி முற்றி பார்த்தான் அவன் தேடிய பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
“ஏய் யாராவது இருக்கிங்களா” என்று அவன் கத்திய சத்தம் யாருக்கும் அங்கு கேட்க்கவில்லை அனைவரும் உள்ளே இருக்க பாட்டு ஓடும் சத்தத்தில் எதுவும் கேட்கவில்லை.
சோழன் செய்வதறியாமல் தவித்தவன் கீழே சென்று மெயின் ஸ்விட்ச் நிறுத்தலாம் என்று நினைத்தான் ஆனால் அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை என்று தோன்றியது.
ஒரு உயிர் ஊசாலடிக் கொண்டு இருக்க துணிச்சலாக மெல்ல அவளின் அருகில் சென்றவன் தூரத்தில் இருந்தே அவளின் ஒரு கையை பிடித்து வேகமாக தன் அருகில் இழுத்தான் அவள் தடுமாறி அவன் மீதே விழுந்தாள் இசைவாணி மின்சாரம் பாயந்ததில் மயங்கி விழுந்திருந்தாள் அவள் நிற்க முடியாமல் கீழே விழ சோழன் இன்னும் தூரமாக அவளை தன் தோளில் தூக்கி போட்டு கொண்டு ஓடியவன்.
ஒரு இடத்தில் சென்று நின்று அவளை தன் தோள் வளைவில் சாய்த்து கொண்டு அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சி செய்தான் “எழுந்துரு மா கண்ணை திற” என்று அவனை எழுப்ப அவள் எழுந்து கொள்ளவேயில்லை
மூக்கில் கை வைத்து பார்க்க மூச்சும் இல்லை.
அவளின் கை கால்களில் கை வைத்து தேய்த்து பார்த்தான் அப்போதும் அவள் எழுந்து கொள்ளவேயில்லை தன் மொபைலில் இருந்து டிரைவரை அழைக்கலாம் என்று பார்த்தால் அவன் தன் போனை ஜீப்பிலேயே வைத்துவிட்டு வந்திருந்தான்.
வேறு வழியே இல்லாமல் இசைவாணியை கையில் தூக்கி கொண்டு கீழே ஓடினான் சோழன் செல்லும் வழியில் அங்கிருந்த மெயின் ஸ்வீட்சையும் நிறுத்திவிட்டு ஓடினான் அப்போது அங்கே இருந்த பேராசிரியர் பதட்டத்துடன் சோழன் அருகில் ஓடி வந்தார் “சார் என்னாச்சு” என்று கேட்க
“இந்த பொண்ணுக்கு ஷாக் அடிச்சிருச்சு சார்” என்றான்.
கேட்டில் அவன் டிரைவர் நல்லசிவம் இருக்க “நல்லசிவம் உடனே கார் எடுங்க ஹாஸ்பிட்டல் போகனும்” என்று கூறியவன் இசைவாணியுடன் பின் சீட்டில் ஏறி அமர்ந்தான் மின்சாரம் தடைப்பட்டு போனதில் மாணவிகள் வெளியே வர சோழன் இசைவாணியை தூக்கி செல்வதை பார்த்தனர்.
ஜீப் உடனே பக்கத்தில் இருந்த அரசு மருத்துவமனை ஒன்றுக்கு விரைந்தது அங்கே அவசர சிகிச்சை பிரிவில் இசைவாணி அனுமதிக்கப்பட்டாள் அடுத்த அரை மணி நேரத்தில் அவள் கல்லூரியின் தாளாளர் மற்றும் கீர்த்தனாவும் ஓடி வந்தனர்.
“சார் இசை எப்படி இருக்கா” என்று கீர்த்தனா சோழனிடம் கேட்க “தெரியலை மா டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க” என்றான்.
அடுத்த பத்தாவது நிமிடம் பெரியவர் தன் மகனுடன் அங்கே வந்தார் அவரின் அடியாட்கள், வெள்ளை வேட்டி சட்டை போட்ட முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
பெரியவர் உள்ளே நடந்து வர அவரை பார்த்து முறைத்தான் சோழன்
அவரும் பதிலுக்கு அவனை அதே அளவு கோபத்துடன் முறைத்தார்.
இங்கு வந்த ஆறு மாதத்தில் பல இடங்களில் இருவருக்கும் முட்டி கொண்டு இருக்கிறது அவரை கைது செய்ய சாட்சியங்களை திரட்டி கொண்டு இருக்கிறான் சோழன் இது அவருக்கும் தெரியும்.
மருத்துவர் அறையில் இருந்து வெளியே வர சோழன் மருத்துவரிடம் செல்ல பெரியவரும் மருத்துவரின் அருகில் வந்தார் இவன் “டாக்டர் அந்த பொண்ணு எப்படி இருக்கா” என்று கேட்க பெரியவரும் “டாக்டர் என் மகள் எப்படி இருக்கா” என்று கேட்க சோழனுக்கு ஆச்சரியம் இது இவரின் மகளா என்று.
பெரியவரை பார்த்த அந்த மருத்துவர் பயத்துடன் “நல்லா இருக்காங்க ஐயா ஷாக் அடிச்ச அதிர்ச்சியில மயங்கிருக்காங்க அவ்வளவு தான்” என்றார்.
அதற்க்குள் அந்த மருத்துவமனையில் இருந்த அத்தனை சீஃப் டாக்டர்களும் அங்கே படை எடுத்தனர் பெரியவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் ஓடோடி வந்திருந்தனர் போதா குறைக்கு அந்த அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே அனைத்து வெள்ளை வேஷ்டி சட்டை கூட்டம் தான் நின்றது.
super sis
Greetings! Very useful advice in this particular article!
It’s the little changes that will make the greatest changes.
Many thanks for sharing!
This site was… how do I say it? Relevant!! Finally I have found something that helped me.
Kudos!
Hello there! I could have sworn I’ve been to this website before but after reading through some of the post I realized it’s new to me.
Anyhow, I’m definitely happy I found it and I’ll be bookmarking
and checking back frequently!
I pay a visit each day some websites and sites to read articles,
but this website provides quality based content.