உ
அத்தியாயம் – 3
அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வந்தவனை பார்த்த சுரேஷ் எப்பொழுதும் போல் இப்பொழுதும் ஜெய் கிருஷ்ணாவை பார்த்துக்கொண்டே தன்னை மறந்து ஒரு நிமிடம் நின்று விட்டான்.
‘அப்பா ஆளு என்ன இவ்வளவு அழகா இருக்காரு அதான் அவரு நினைக்கிற போல பொண்ணுங்க நீ, நானு அவரு கேட்காமலே வருராங்க போல நாமளும் பொண்ணா இருந்தா
இவரையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டில் ஆகியிருக்கலாம் என்று ஒரு நிமிடம் நினைத்தவன்.
உடனே அய்யய்யோ வேணாம் வேணாம் அப்புறம் இவரு கூட குடும்பம் நடத்துவது ரொம்ப கஷ்டம் அதுவும் பார்வையிலேயே எல்லாத்தையும் செய்ய வச்சிடுவார்.
பி.ஏ வா இருக்கும் போதே நாய் பொலப்பா இருக்கு பொண்டாட்டி ஆனா அவ்வளவு தான் என்று நினைத்தவன் பின்பு ஆனாலும் அவருக்கு இந்த பிளாக் கலர் கோர்ட் சூட் செம்மையா செட் ஆகி இருக்கு பா நம்பலாம் போட்டா இந்த அளவுக்கு எடுக்காது’ என்று தனது மனதில் யோசித்துக் கொண்டு இருந்தான்.
சுரேஷ் மனதில் பேசிக் கொண்டிருந்ததையே பார்த்துக் கொண்டு கீழே இறங்கி வந்தவன் அவனை பார்த்து “என்ன பார்த்து முடிச்சிட்டான்னா இப்ப நம்ம மீட்டிங் பார்க்க போகலாமா” என்று கேட்க
அதற்கும் பதில் இல்லாமல் மீண்டும் தனது மனதினில் பேச ஆரம்பித்தான் ‘ நம்ம மனசுல நினைக்கிறது எல்லாத்தையும் எப்படி தான் கண்டுபிடிக்கிறாரோ ஒன்னும் புரியவே மாட்டேங்குது’ என்று தனக்குள் பேசிக்கொண்டிருந்தான்.
இவனை பார்த்து இரு புறமும் தலை அசைத்தவன் பின்பு அவனை தாண்டி சென்று விட்டான். ஜெய் கிருஷ்ணா சென்ற காரின் சத்தத்தை வைத்தே சுரேஷ் சுய நினைவிற்கு வந்தவன்
தன் தலையில் தானே அடித்துக் கொண்டு இன்னைக்கும் என்ன விட்டுட்டு போயிட்டாரா என்று எண்ணியவன் தனது முகத்திற்கு நேராக ஆள் காட்டி விரலை வைத்து “ஏன்டா உனக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் அறிவே வரமாட்டேங்குது அவரை வாயில் கொசு போறது தெரியாமல் சைட் அடிச்சு இப்ப கடைசியில் உன்னை விட்டுட்டு போயிட்டாரு” என்று தன்னையே நொந்து கொண்டவன்.
பின்பு வேற ஒரு காரில் சென்று ஏறிக்கொண்டான் அங்கே வழக்கம் போல் இந்த மாதிரி சூழ்நிலையில் இவனை கூட்டி செல்லும் கார் ஓட்டுநர் இவனை பார்த்து நக்கலாக சிரித்து “ என்ன தம்பி இன்னைக்கும் ஐயா உன்ன விட்டுட்டு போயிட்டாரா டெய்லி இதே தான் நடக்குது நீங்க ஏதாவது யோசிச்சுகிட்டு நிக்க அதை பார்க்குறவர் அப்படியே உங்களை விட்டுட்டு அவர் பாட்டு கிளம்பி போயிட்டு இருக்காரு” என்று கூறினார்.
“என்ன அண்ணே என்ன பாத்தா உங்களுக்கு அவ்வளவு நக்கலா இருக்கா சார் கிட்ட சொல்லவா உங்கள பத்தி ” என்று கூற
“ எதுக்கு தம்பி இப்ப கோவிச்சுக்கிறீங்க சரி வாங்க இப்படியே பேசிட்டு இருந்தா நேரம் ஓடிடும் அப்புறம் திரும்ப சார் கிட்ட இருந்து உங்களுக்கு தண்டனை கிடைக்கும்” என்று கூற
“அதுவும் கரெக்டு தானே நேத்து சொன்ன மாதிரி அந்த **** ஹோட்டலுக்கு போங்க அங்க தான் மீட்டிங் நடக்குது” என்று கூறினான்.
இவர்கள் அங்கு அந்த ஹோட்டலை நெருங்கும் நேரம் ஜெய் கிருஷ்ணா அந்த ஹோட்டலில் மீட்டிங் ரூமை நெருங்கி இருந்தான்.
அதே சமயம் அவனின் ஒரு கம்பெனியான ஜெய் இன்ஃபோ டெக்னாலஜியில் ஒரே பரபரப்பாக காட்சி அளித்தது இன்றைக்கு ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் டெட்லைன் அதற்கு அனைவரும் மிகுந்த பரபரப்பாகவும் பதட்டத்துடனும் சுற்றிக் கொண்டிருந்தனர்.
அதே டீமில் நியூ ஜாயினியாக சேர்ந்தவள் தான் வருணிகா அங்கு நடக்கும் அனைத்தையும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதற்கு அடுத்த இருக்கையில் அவளைப் போலவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் தான் ஜனனி வருணிகாவுடன் நியூ ஜாயினியாக ஒரே ட்ரெயினிங்கில் இருந்தவள் தற்போது ஒரே ப்ராஜெக்ட் இருவரும் அசைன் ஆக மீண்டும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் அப்பொழுதிலிருந்து இருவரும் மிகவும் ஆழமான நட்பாக உருமாறியது.
“ ஏண்டி வருணி என்னடி இது நம்மள தவிர எல்லாரும் ஓடிக்கிட்டு இருக்காங்க நம்ம மட்டும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கோம்” என்று கேட்க
“எருமை வருணினு கூப்பிடாத ன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்றது அழகா ஃபுல் நேம் சொல்லி கூப்பிடுடி” என்று திட்ட ஆரம்பிக்க
“இப்ப உன்னோட பெற சொல்றது தான் ரொம்ப முக்கியமா நீ சொல்ல சொல்ல நான் அப்படித்தான் கூப்பிடுவேன் என்ன பண்ணுவ” என்று சண்டைக்கு கிளம்ப
“நீ இப்படியே என் பேரை சொல்லிக்கிட்டே இருந்தா அடுத்த வாட்டி நீ கூப்பிடும் போது என்னோட காது கேட்காது பாக்குறியா பெட்டு வச்சுக்கலாமா” என்று இவள் பதில் கூற
இவர்கள் இருவரும் அருகருகே உட்கார்ந்து கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்க அதே சமயம் டீம் ஹெட்டியிடம் லாஸ்ட் மினிட் பிரஷரில் திட்டு வாங்கிக் கொண்டு வந்த அவர்களின் சீனியர் பத்மா இவர்களை கண்டு அந்த கோபத்தை அவர்களிடம் இறக்கினாள்.
“என்ன பண்றீங்க ரெண்டு பேரும் இப்படி பக்கத்துல உக்காந்துட்டு பேசிகிட்டு இருக்க தான் சம்பளம் வாங்குறீங்களா சீனியர்ஸ்க்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவோன்னு சென்ஸ் வேண்டாமா
எத்தனை நாளைக்கு நியூ ஜாயினின் சொல்லி பெயர் பண்ணிக்கிட்டு சும்மா ஒக்காந்து இருக்க போறீங்களா தெரியல எல்லாம் உங்களோட டீம் லீடர சொல்லணும்” என்று கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்துவிட்டு அங்கே வந்த அவர்களின் டீம் லீடர் அகல்யா “ பத்மா உங்களை டீம் ஹெட் கூப்பிடுறார்” என்று கூறி அவரை அந்த இடத்தில் இருந்து அனுப்பி வைத்தார்.
அதுவரை பத்மா பேசியதையும் அதே சமயத்தில் அவர்களது டீம் லீடர் வந்து தங்களை காப்பாற்றியதையும் பார்த்துக்கொண்டு இருவரும் திருத்திரு என்று முழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்த அகல்யாவும் சற்றென்று சிரிக்க ஆரம்பித்து விட்டார் அதையும் இவர்கள் முழித்துக் கொண்டே பார்க்க தனது சிரிப்பை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வந்தவர்
“என்ன பொண்ணுங்களா இப்படி திருத்திருன்னு முழிச்சிட்டு இருக்கீங்க ஆபீஸ் வந்துட்டா இதெல்லாம் சகஜம் தான் இதுக்காக எல்லாம் இப்படி முழிச்சிட்டு நிக்க கூடாது புரியுதா உட்காருங்க உட்காந்து ஒர்க்க கவனிங்க” என்று கூறியவர் அவர்களுக்கான வேலையை ஒப்படைத்துவிட்டு சென்றார்.
பின் மீண்டும் தங்களது வேலையை கவனிக்க ஆரம்பித்தவர்கள் ஒரு அரை மணி நேரம் எதுவும் பேசாமல் கம்ப்யூட்டரிலேயே மூழ்கி இருந்தனர்.
மதிய உணவு நேரம் வரவும் இருவரும் தங்களது லஞ்ச் பாக்ஸ் எடுத்துக்கொண்டு கேன்டீன் செல்ல அங்கு அவர்களது டீம் அனைவரும்
உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அருகே சென்று அமரும் போது தான் அவர்கள் பேசுவதே தங்களைப் பற்றி தான் என்பதே தெரிந்தது.
அங்கிருந்த அவர்களது டீம் மெம்பர்ஸும் இவர்களை பார்த்துவிட்டு அருகில் அழைத்து “ என்ன இன்னைக்கு செம்ம ரைடாமே நம்ம சவுண்ட் பத்மா கிட்ட இப்பதானே நீங்க முதல் வட்டியா வாங்குறீங்க எப்படி இருந்துச்சு உங்க எக்ஸ்பீரியன்ஸ்” என்று கேட்க
“அதெல்லாம் ஒன்னும் இல்ல சீனியர்” என்று ஜனனி கூற
“ஏய் என்ன காலேஜ்ல கூப்பிடுற மாதிரி சீனியர் அப்படி கூப்பிட்டு இருக்க பேர் சொல்லி கூப்பிடு இங்க எல்லாம் அப்படித்தான் கூப்பிடுவோம் என்னோட பேரு ராம் சோ ராம் என்று கூப்பிடு” என்றார்.
உடனடியாக ஜனனி “ஓ.கே ராம்” என்றாள்.
பின்பு அங்கிருந்த அனைவரையும் வருணிகாவிற்கும் ஜனனிக்கும் ராமே அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்பொழுது தான் அனைவரும் அடுத்த கட்டமாக தங்களது இன்றைய ப்ராஜெக்ட் சக்சஸ் புல்லாக முடிந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
வருணிகா “ ராம் எப்போதுமே இப்படித்தான் இருக்குமா டெட் லைனா ஒரு மாதிரி பரபரப்பா” என்று கேட்க
“ஆமாமா கிட்டத்தட்ட ஆறு மாசமா செஞ்சுட்டு இருக்க ப்ராஜெக்ட் அதனால கொஞ்சம் கடைசி கட்ட வேலையும் பரபரப்பும் இருக்க தான் செய்யும் ஆமா இன்னைக்கு சேலரி டேவாச்சே உங்க ரெண்டு பேத்துக்கும் சேலரி கிரெடிட் ஆயிடுச்சா” என்று கேட்க
இருவரும் ஒரே குரலில் அவர்களது உள்குத்து தெரியாமல் மத்தியானமே கிரெடிட் ஆயிடுச்சு ராம் என்று கூறினார்.
ஆடு சிக்குச்சடா என்ற நினைப்பில் மற்ற அனைவரும் முதல் மாத சம்பளத்தில் ட்ரீட் கேட்க இவர்கள் இருவரும் மீண்டும் முழிக்கும் சூழ்நிலையில் வந்து நின்றார்கள்.
இவர்களும் எவ்வளவோ மறுத்துப் பார்த்தும் விடாமல் அவர்களை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து விட்டனர்.
அவர்கள் அடுத்து கூறிய செய்தியில் ஜனனியும் வருணிக்காவும் அதிர்ச்சியின் உச்ச நிலைக்கு சென்று விட்டனர்.
ஏனென்றால் இருவரும் ட்ரீட் என்றால் சாதாரணமாக ஒரு ஹோட்டலில் டின்னர் சாப்பிட கூப்பிடுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க அவர்களோ பப்பிற்கு இருவரையும் அழைத்தார்கள்.
இதை முதலில் மறத்தது என்னவோ வர்ணிகா தான் “ அய்யய்யோ என்னால சத்தியமா முடியாது எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அடி பின்னி எடுத்துருவாங்க நான் வேணா காசு கொடுத்துடறேன் நீங்க வேணா போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்க” என்று கூற
அதைத்தொடர்ந்து ஜனனியும் “ ஆமா அவ சொல்றது கரெக்ட் நாங்க காசு குடுத்துடறோம் எங்களால பப்புக்கு எல்லாம் வர முடியாது என்று முடிவாக மறுத்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் இப்படியே மறுத்து கொண்டு இருக்க அவர்களும் இல்ல முடியாது இது உங்களோட ட்ரீட் அதனால நீங்க கண்டிப்பா இருக்கணும் என்று வற்புறுத்திக் கொண்டு இருந்தார்கள்.
அங்கு வந்த அகல்யாவும் இவர்கள் பேசுவதை கேட்டுவிட்டு வருணிகா ஜனனி ரெண்டு பேரும் வாங்க அங்க நல்லா இருக்கும் சீக்கிரமா கிளம்பிடலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
அவரைப் பற்றிய தற்பொழுது தான் அனைவரும் நல்ல விதமாக கூறியிருந்தனர் மிகவும் பிரண்ட்லி கேரக்டர் என்றும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதில் மிகவும் திறமைசாலி என்றும் அவருக்கு கீழ் வேலை செய்வது ரொம்ப பாதுகாப்பாகவும், நிறைய கற்றுக்கொள்ளலாம் என்றும் டென்ஷன் இல்லாமலும் ஜாலியாக வேலை செய்யலாம் என்று அனைவரும் கூறியிருந்தனர்.
அந்த நம்பிக்கையில் வருணிக்காவும் ஜனனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வேறு வழி இல்லாமல் சரி என்று சம்மதமாக தலையசைத்தனர்.
பின்பு இன்று வெள்ளிக்கிழமை வார இறுதி நாள் என்றும் டிரிட்டை இன்றே வைத்துக் கொள்ளலாம் அனைவரும் கிளம்பி சரியாக மாலை 7 மணிக்கு அந்த*** பப்புக்கு வந்துவிடும்படி முடிவெடுத்து அனைவரும் பேசி முடிவெடுத்து மதிய உணவை முடித்துக்கொண்டு சென்றனர்.
ஏன் சரி என்று சம்மதித்தோம் என்று வர்ணிகா பின்னாளில் வருத்தப்படாத நாளே இருக்கப் போவதில்லை என்று இப்போது அவளுக்கு தெரியவில்லை எல்லாம் விதியின் கையில் இருப்பதுவோ
Super