ATM Tamil Romantic Novels

இதய காவலன் 4,5

அத்தியாயம் 4

 

இசை கூறியதை கேட்ட கீர்த்தனா அவளை அதிர்ச்சியுடன் ஒரு பார்வை பார்க்க “நான் அவரோட பொண்ணுன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு கீர்த்தி சாரி நான் உன் கிட்ட சொல்லி இருக்கனும் என் தப்பு தான்” என்று அவளின் கைப்பிடித்து கலங்கிய கண்களுடன் மன்னிப்பு கேட்க கீர்த்தனா மனம் இறங்கிவிட்டாள் “அழாத இசை நான் சும்மா தான் கேட்டேன்” என்றாள் கீர்த்தனா. 

 

அதன் பின் இருவரும் சாதாரணமாக பேசிக் கொண்டு இருக்க “நேத்து சோழன் சார் உன்னை தூக்கிட்டு போகும் போது நான் ரொம்பவே பயந்து போய்ட்டேன் இசை, அப்புறம் உனக்கு ஒன்னும் இல்லைன்னு சொன்ன பிறகு தான் எனக்கு உயிரே வந்துச்சு 

உங்க அண்ணனும் அப்பாவும் சேர்ந்து ஹாஸ்பிட்டலையே ஒரு வழி பண்ணிட்டாங்க” என்று கூறும் போது தான் இசைவாணிக்கு அனைத்தும் நினைவு வந்தது நேற்று சோழன் தன்னை தூக்கி சென்றது. 

 

நேற்று இசை ஜீப்பில் செல்லும் வழியில் அவளுக்கு மயக்கம் தெளிந்து லேசாக விழிப்பு வந்தது அப்போதும் அரை மயக்கத்தில் தான் இருந்தாள் மெல்ல அவள் கண் திறந்து பார்க்கும் போது சோழன் மடியில் தலை வைத்து படுத்திருந்தாள் எழுந்து அமர நினைக்கும் போது அவளால் அது முடியவில்லை தன் தமையன் தந்தையுடன் இருப்பதை விட ஏனோ காக்கி உடை அணிந்த சோழன் மடியில் படுத்து இருக்கும் போது பாதுகாப்பாக இருப்பதை போல உணர்ந்தாள் அவன் இரும்பு கரம் அவளின் தோளை பிடித்து இருந்தது அப்போது “கொஞ்சம் சீக்கிரமா போங்க நல்லசிவம்” என்று சோழன் கத்தி கொண்டு இருந்ததும் அவளுக்கு நினைவுக்கு வந்தது. 

 

“கீர்த்தி நேத்து அவரு கிட்ட ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல முடியலையே டி” என்று கூறிவிட்டு இசை வருத்தப்பட

“தேங்க்ஸ் தான டி சொல்லிட்டா போச்சு” என்றாள் கீர்த்தனா அசால்ட்டாக. 

 

இசை உடனே ஆர்வமாக “எப்படி” என்று கேட்டாள் “சிம்பிள் நேர்ல போய் மீட் பண்ணி தேங்க்ஸ் சொல்லிடு அவ்வளோ தான்” என்றாள். 

 

“போ டி என் அப்பா பத்து நிமிசம் லேட் ஆன கூட என்னை தேடி இங்கே வரை வந்துடுவாரு” என்றாள் 

“சரி வா இப்போ போய் நேர்ல பார்த்து தேங்க்ஸ் சொல்லிட்டு வரலாம்” என்றாள் கீர்த்தனா. 

 

“எப்படி போக முடியும் என்னை யாராவது வழியில பார்த்துட்டா என்ன பண்றது” என்று இசை கேட்க “அதெல்லாம் பார்த்துக்கலாம் கிளம்பு” என்று அவளின் கைப்பிடித்து இழுத்து சென்றாள். 

 

இருவரும் ஸ்கூட்டியில் கல்லூரியில் இருந்து கிளம்பினர் வரும் வழியெல்லாம் “எனக்கு பயமா இருக்கு கீர்த்தி” என்று புலம்பிக் கொண்டே வந்தாள் இசைவாணி ஏனெனில் இது தான் அவள் முதல் முறையாக தன் அண்ணன் மற்றும் தந்தை இல்லாமல் வெளியே செல்வது பதட்டத்துடனே வந்து கொண்டிருந்தாள். 

 

துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கீர்த்தி தன் ஸ்கூட்டியை நிறுத்தினாள் இசைவாணி அந்த இடத்தையே மிரட்சியுடன் பார்த்து கொண்டு இருக்க அவளின் கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்றாள். 

 

அதற்க்குள் அங்கே வந்த கான்ஸ்டபிள் ஒருவர் “ஏம்மா வெளியே நிக்குற ஸ்கூட்டி யாரோடது” என்று கேட்க 

கீர்த்தி உடனே “என்னோடது சார்” என்று கூற “வெளியே வந்து வண்டியை பார்க்கிங்க்ல நிறுத்துங்கள் மா” என்று கூறிவிட்டு சென்றார். 

 

“இசை நீ உள்ளே போ நான் வரேன்” என்று கூறிவிட்டு கீரத்தனா தன் ஸ்கூட்டியை எடுக்க வெளியே சென்றாள். 

 

“ஏய் கீர்த்தி நில்லு டி” என்று இசை கத்த அவளோ காதில் கூட வாங்காமல் வெளியே சென்றுவிட்டாள் வேறு வழியில்லாமல் உள்ளே சென்றவள் தன் தாவணியின் முந்தானையை கையில் பிடித்து கொண்டு எந்த பக்கம் செல்வது என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்து கொண்டு நின்றிருந்தாள் அவளை கடந்து மிகவும் உயர உயரமான காவலர்கள் சீருடையுடன் நடந்து சென்று கொண்டு இருந்தனர் அப்போது அங்கே கான்ஸ்டபிள் நல்லசிவம் வந்தார். 

 

“நீ பெரியவர் பொண்ணு தான மா இங்கே என்ன பண்ற” என்று கேட்க

இசைவாணி என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறியவள் “நான் சோழன் சாரை பார்க்கனும்” என்றாள்

“ஓ இங்கே உட்காரு மா நான் போய் கேட்டுட்டு வரேன்” என்று அவளை அமர வைத்துவிட்டு உள்ளே சென்றார். 

 

நல்லசிவம் கதவை தட்ட “கம் இன்” என்றான் சோழன் உள்ளே தன் நாற்காலியில் அமர்ந்து ஏதோ ஒரு கேஸ் பைலை பார்த்து கொண்டு இருந்தான் 

“சார் உங்களை பார்க்க பெரியவர் பொண்ணு வந்திருக்கு சார்” என்றார். 

 

“வாட் எதுக்கு” என்று சோழன் தன் கையில் இருந்த கோப்பில் இருந்து தலையை நிமிர்த்தாமலேயே கேட்க “தெரியலை சார்” என்றார். 

 

சோழன் ஒரு கணம் யோசித்தவன் அதன் பின் தலையை நிமிர்த்தி 

“சரி வர சொல்லு” என்றான் 

வெளியே வந்த நல்லசிவம் 

“மா உன்னை சார் உள்ளே வர சொன்னாரு” என்று கூறிவிட்டு சென்றார். 

 

இசைவாணி அந்த பெரிய கதவின் முன்னே நின்று கொண்டே உள்ளே எப்படி செல்வது என்று தெரியாமல் பயத்துடன் நின்றிருந்தாள்

அப்போது அங்கே வந்த கீர்த்தனா 

“ஏய் நீ இன்னும் உள்ளே போகலையா டி” என்று கேட்க “கீர்த்தி எனக்கு பயமா இருக்கு நீயும் வாயேன்” என்று அவளின் கைப்பிடிக்க “ஏய் சீக்கிரமா போயிட்டு வா டி காலேஜ் இன்னும் ஒரு மணி நேரத்துல முடிஞ்சிரும் உன் டிரைவர் வந்துடுவான்” என்று கூற தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் இசைவாணி. 

 

“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்று அவள் பயத்துடன் அழைக்க “கம் இன்” என்றான் தன் கம்பீர குரலில் சோழன் பயத்துடன் தயங்கி கொண்டே உள்ளே வந்தாள் இசை. 

 

அந்த பெரிய அறையில் இருந்த நாற்காலியில் சோழன் அமர்ந்து இருந்தான் அவன் முன்னே ஒரு டேபிள் ஒன்று இருந்தது தன் கையில் இருந்த கோப்பில் முகம் புதைத்து கொண்டே “சொல்லுங்க” என்றான் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் கேட்க அவளோ என்ன கூறுவது என்று தெரியாமல் தடுமாற்றத்துடன் நின்றிருந்தாள். 

 

அவள் ஒன்றும் கூறாமல் நின்றிருக்க சோழன் அவளை நிமிர்ந்து பார்த்தான் இசைவாணி வெள்ளை நிற பட்டு தாவணியின் முந்தானையை பிடித்து கொண்டு பயத்துடன் வியர்வை வடிந்த முகத்துடன் நின்றிருந்தாள் அவள் முகத்தில் அதிகப்படியான பதட்டம் தெரிய “உனக்கு எதாவது பிரச்சனையா மா” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் கேட்க பதிலுக்கு இல்லை என்பதை போல் தன் தலையை ஆட்டினாள். 

 

ஆனால் அவள் மிகவும் பதட்டத்துடனே நின்றிருப்பதை பார்த்த சோழன்

தன் கோப்பை மூடி வைத்துவிட்டு அவள் முன் எழுந்து வந்து தன் கையை கட்டிக் கொண்டு நின்றான். 

 

இசைவாணி தலையை குனிந்து கொண்டே “சார்..அது..நேத்து என் உயிரை காப்பாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ் நீங்க இல்லைன்னா நான் ” என்று கூறிக் கொண்டே நிமிர்ந்தவள் தன் முன்னே இவ்வளவு அருகில் நெருக்கத்தில் நின்றிருந்த சோழனை பார்த்து அதிர்ந்துவிட்டாள். 

 

அதற்க்கு மேல் அவளால் பேச முடியவில்லை வார்த்தைகள் தடுமாற ஆரம்பித்தது கை கால் உதறல் எடுக்க ஆரம்பித்தது “என்னை காப்பாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று கூறியவள் அவனை இப்போது தான் இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கிறாள் அவள் கனவில் வந்தவனின் நெற்றியில் இருந்த அதே வெட்டு தழும்பு சோழன் நெற்றியிலும் இருந்தது. 

 

அதை பார்த்தவள் இன்னும் அதிர்ச்சியுடன் கண் விலகாமல் அவனை பார்க்க அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான் அவள் முகத்தில் தோன்றும் முகபாவனைகள் அனைத்தும் அவனை ரசிக்க வைத்தது மாசு மருவற்ற பால் வண்ண நிறத்தில் இருந்தவளின் முகம் அவன் நெருக்கத்தில் தடுமாற ஆரம்பித்தது கண்கள் பட்டாம்பூச்சியின் இறகை போல படபடவென்று அடித்து கொண்டது. 

 

வெள்ளை நிற தாவணியில் தேவதை பெண்ணை போல இருந்தாள் அவளின் கூரான நாசி உதட்டு சாயம் பூசாமலேயே சிவந்து இருந்த இதழ்கள் அத்தனையும் அவனை கட்டி இழுத்தது. 

 

அவன் கண்விலகாத பார்வையில் அதற்க்கு மேல் அங்கு நிற்க முடியாமல் இசைவாணி அங்கிருந்து பதட்டத்துடனே செல்ல பார்க்க வழியில் இருந்த நாற்காலி தடுக்கி கீழே விழ போனாள் சோழனின் தன் இரும்பு கரங்களால் அவளின் இடையில் கைக் கொடுத்து கெட்டியாக அவளை தன்னோடு சேர்த்தணைத்து பிடித்து கொண்டான். 

 

ஒரே ஒரு கணம் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்தது அவளின் மாயக் கண்கள் அவனை ஏதோ செய்தது

இசைவாணி தடுமாறி கொண்டே அவனிடமிருந்து விலகி “சாரி சார்” என்று 

கூறியவள் கதவை திறந்து கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியேவிட்டாள். 

 

சோழனுக்கு அவமானமாக இருந்தது

‘இப்படியா டா ஒரு பெண்ணை பார்த்து வழிஞ்சி நிற்ப’ என்று மனதில் தன்னை தானே நினைத்து வெட்கி திட்டிக் கொண்டிருந்தான். 

 

இசைவாணி வெளியே வந்தவுடன் கீர்த்தனா அவளிடம் “என்ன டி பேசிட்டியா” என்று கேட்க

“ம்ம் பேசிட்டேன் வா போலாம்” என்று அவளின் கையை கெட்டியாக பிடித்து இழுத்து கொண்டு வெளியே சென்றுவிட்டாள். 

 

இசைவாணியின் கண் முன்னே அந்த வெட்டு தழும்பு மட்டும் வந்து கொண்டே இருந்தது ‘கனவில் வந்தது இவரா’ என்று நினைத்தவளுக்கு அவனின் கண் விலகாத பார்வை உள்ளுக்குள் ஏதோ செய்தது வரும் வழியில் கீர்த்தனாவுடன் அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

 

கல்லூரி வாசலில் சென்று கீர்த்தனா அவளை இறக்கி விடவும் அவள் டிரைவர் வந்து நிற்கவும் சரியாக இருந்தது அவருடன் வீட்டிற்க்கு சென்றுவிட்டாள். 

 

இசைவாணி வீட்டிற்க்கு வந்தவள் யாருடனும் பேசாமல் தன் அறைக்குள் சென்று படுத்து கொண்டாள் 

ஏனோ அவனின் நினைவில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் தவித்தாள். 

 

அதேநேரம் சோழனும் அவளை பற்றி தான் நினைத்து கொண்டு இருந்தான் 

அவளை பார்த்தவுடன் அவனுக்கு பிடித்துவிட்டது ‘இது தவறு கேவலம் ஒரு ரெளடியோட பொண்ணை போய் பார்ப்பியா டா நீ அதுவும் இல்லாமல் அவள் என்னை பார்த்து பயந்து நடுங்குறா இதெல்லாம் செட் ஆகாது’ என்று தன்னை தானே திட்டிக் கொண்டான். 

 

தனக்கு பெண் பார்க்க சொல்லியிருந்த புரோக்கருக்கு தன் அலைபேசியில் அழைத்தான் “சார் நானே உங்களுக்கு கால் பண்ணனும்ன்னு நினைச்சேன் ஒரு நல்ல வரன் ஒன்னு வந்துருக்கு நாளைக்கு பொண்ணு வந்து உங்களை நேர்ல பார்க்குறேன்னு சொல்லியிருக்கு ஆஜ்நேயர் கோவிலுக்கு பக்கத்துல இருக்க காபி ஷாப்க்கு வந்துருங்க” என்று கூற “சரி நான் வரேன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் சோழன். 

 

அத்தியாயம் 5

 

மறுநாள் காலை இசைவாணி கண்விழித்தவள் எப்போதும் போல் கல்லூரிக்கு கிளம்பி கீழே வர அவளுக்கு முன்பே செல்வா வந்து அவளுக்காக காத்திருந்தான்

செல்வாவுக்கும் இசைவாணிக்கும் தான் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

 

இசைவாணி அவனை பார்த்தவள் ஒரு கணம் அதிர்ச்சியுடன் அப்படியே நின்றுவிட்டாள் அவளுக்கு பெரிதாக செல்வாவை பிடிக்கவில்லை என்றாலும் தன் தந்தைக்காக தான் சம்மதம் கூறியிருந்தாள். 

 

செல்வாவும் பெரிய ரவுடி தான் ஆனால்  மதுரை பக்கம் கட்டப்பஞ்சாயத்துக்கு பெயர் போனவன் தன் தந்தையை போன்றே அவனும் இருக்க அவனிடம் முகம் கொடுத்து கூட இதுவரை அவள் பேசியதே இல்லை. 

 

இசைவாணி எப்போதும் போல அவனை கண்டுகொள்ளாமல் தன் தந்தையிடம் சென்றவள் “அப்பா நான் காலேஜ்க்கு போய்ட்டு வரேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து விரைவாக கிளம்ப போக

“இசை நில்லு மா மாப்பிள்ளை உனக்காக தான இவ்வளவு தூரம் வந்துருக்காரு நீ அவர் கிட்ட பேசாம கூட போற” என்று பெரியவர் கேட்க. 

 

“அப்பா இன்னைக்கு எனக்கு இன்டர்னல் எக்ஸ்சாம் இருக்கு சீக்கிரமா போகனும்” என்றாள் இசைவாணி செல்வாவை பார்க்காமல் தன் தந்தையை மட்டும் பார்த்து கொண்டே. 

 

“விடுங்க மாமா பரீட்சை இருக்குற அவசரத்தில் இசை போயிருக்கும்” என்று செல்வா கூற “இல்லை மாப்பிள்ளை இவ்வளவு தூரத்துல இருந்து வந்துருக்கிங்க நாலு வார்த்தை கூட பேசலன்னா எப்படி” என்றார் பெரியவர். 

 

“நீங்க இருக்கிறதுனால இசைக்கு என் கிட்ட பேச சங்கடமா இருந்துருக்கும் மாமா” என்று கூறினான் செல்வா இசையை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே

அவன் தன்னை வெறித்து பார்ப்பதை பார்த்த இசை அங்கிருக்க பிடிக்காமல்

“சரி பா நான் வரேன் நேரமாச்சு” என்று கிளம்ப போக செல்வா எழுந்து நின்றவன் “நானும் அந்த வழியா தான் போறேன் வா இசை நானே கொண்டு வந்து விடுறேன்” என்று கூறியவன் அவளுடனே வந்தான். 

 

இசைவாணி முகத்தை தூக்கி வைத்து கொண்டே காரில் ஏறினாள் கார் நேராக கல்லூரிக்கு செல்லாமல் கல்லூரி பக்கத்தில் இருக்கும் காபி ஷாப் ஒன்றின் வாசலில் சென்று நின்றது. 

 

“என்ன இங்கே வந்துருக்கிங்க காலேஜ்க்கு இன்னும் ஒரு ஸ்டாப் தள்ளி போகனும்” என்றாள் இசை 

“தெரியும் இசை மணி எட்டு தான ஆகுது உனக்கு ஒன்பது மணிக்கு தான காலேஜ் காபி சாப்பிட்டு போகலாம் வா” என்றான். 

 

இசை விருப்பமே இல்லாமல் அவனுடன் இறங்கி வந்தாள் இருவரும் அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருக்க சோழன் அதே காபி ஷாப்புக்கு தனக்கு பார்த்திருந்த பெண்ணுடன் வந்திருந்தான். 

 

அந்த காபி ஷாப்பின் உள்ளே வந்தவன் இசைவாணியை பார்த்துவிட்டான் 

அவள் பக்கத்தில் இருந்த செல்வாவையும் பார்த்தான் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே தன்னுடன் வந்த பெண்ணுடன் அவர்களுக்கு நேர் எதிரே இருந்த டேபிளில் அமர்ந்தான் இருவரும் பேசிக் கொண்டு இருந்தாலும் சோழனின் பார்வை இசையிடம் தான் இருந்தது. 

 

ஆனால் இசைவாணி சோழனை பார்க்கவில்லை காபியை குடித்து கொண்டு இருக்க செல்வா அவளுடன் வள வளவென்று கதை பேசிக் கொண்டு இருந்தான் அவளுக்கு அவன் பேச்சு எரிச்சலை கொடுக்க அவன் முகம் பார்க்காமல் அங்கிருந்த மரம் செடி கொடிகள் அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். 

 

இசைவாணி அவன் தொல்லை தாங்க முடியாமல் “நான் வாஷ்ரூம் போகனும்” என்று கூற “ம்ம் போய்ட்டு வா இசை” என்றான் செல்வா உடனே அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்தவள் காபி ஷாப்பின் வெளியே இருந்த கழிவறைக்கு அவசரமாக சென்றுவிட்டாள் அதையும் கவனித்து கொண்டு தான் இருந்தான் சோழன். 

 

அவள் முகம் கழுவி விட்டு மீண்டும் வெளியே வரும் போது வாசலிலேயே செல்வா நின்றிருந்தான் அவனை பார்த்த இசைவாணிக்கு தூக்கி வாரிப்போட்டது 

“இங்கே என்ன பண்ணுறீங்க” என்று அவள் பயத்துடன் கேட்க 

“இல்லை நீ இந்த பச்சை தாவணியில இன்னைக்கு எவ்வளவு அழகா இருக்க தெரியுமா” என்றான் வழிந்து கொண்டே செல்வா. 

 

“சரி அதனால” என்று அவள் பதிலுக்கு பயத்துடனே அவனை பார்த்து கேட்க “நாம ரெண்டு பேரும் கொஞ்சம் தனியா இருக்கலாமா” என்று கேட்டான் அவளை திண்பதை போல் பார்த்து கொண்டே “இல்லை வழியை விடுங்க நான் காலேஜ் போகனும் நேரமாச்சு” என்று கூற “எங்கே டி போற” என்று செல்வா அவளின் இடையில் கைக்கொடுத்து அங்கே மறைவாக இருந்த ஒரு சுவரின் பின்னே இழுத்து சென்றான். 

 

“பிளீஸ் என்னை விடு” என்று இசைவாணி கெஞ்சி கொண்டே அவனிடமிருந்து விடுபட போராடி கொண்டு இருக்க அவளை

விடாமல் பிடித்து இழுத்து சென்றவன் அவளின் இடையில் கைக்கொடுத்து அவளை விலக விடாமல் இன்னும் கெட்டியாக பிடித்து இருந்தான் செல்வா. 

 

அவனுடன் இருக்க அவளுக்கு அத்தனை அருவருப்பாக இருந்தது அவன் அவளின் இதழை நோக்கி நெருங்கி வர அவன் வாயில் இருந்து வந்த பாக்கின் மணம் அவளுக்கு உமட்டிக் கொண்டு வந்தது. 

 

“என்னை யாராவது காப்பத்துங்க” என்று அவள் கத்தும் போது அந்த பக்கம் யாரும் இல்லாததால் அவள் கத்தும் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை “ஏய் வாயை மூடு டி நான் உன்னை கட்டிக்க போறவன் தான எவனோ தொட்ட மாதிரி துள்ளுற” என்று அவன் கூறும் போது அவனிடமிருந்து மதுவின் நெடி அதிகமாக வந்தது. 

 

“யாராவது காப்பத்துங்க” என்று அழுகையுடனே இசைவாணி கத்த அவள் வாயை இறுக்கமாக தன் கை வைத்து மூடினான் செல்வா அப்போது அங்கே வந்து சேர்ந்தான் சோழன் இசை முன்னே செல்ல அவளின் பின்னேயே செல்வா செல்ல அவனுக்கு ஏதோ தப்பாக பட்டது அதனால் அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து வந்திருந்தான். 

 

சோழன் அங்கே வந்தவன் செல்வா இசைவாணியின் இடையை பிடித்து கொண்டு அவள் வாயில் கை வைத்து நிற்பதை பார்த்தவன் அவன் முகத்தில் ஓங்கி குத்தினான்

“யார்ரா நீ” என்று செல்வா கோபத்துடன் கேட்டு கொண்டே கையை ஓங்கி கொண்டே சோழனை நோக்கி வர அவன் கையை பிடித்து தடுத்து பின்னே வளைத்தான் சோழன் அவனோ வலி தாங்க முடியாமல் “அம்மா” என்று கத்தினான். 

 

இசைவாணி பயத்துடன் சோழன் பின்னே ஓடிச்சென்று ஒளிந்து கொண்டாள் “யார்ரா நீ நான் யாருன்னு தெரியுமா டா உனக்கு” என்று மீண்டும் கேட்க செல்வாவின் வாயில் இன்னொரு முறை ஓங்கி குத்தினான் சோழன் அவன் வாயில் இருந்து ரத்தம் ஒழுக எதுவும் பேச முடியாமல் நின்றிருந்தான்.

 

அவனை அடித்து வெளியே இழுத்து சென்றவன் தன் ஜீப்புடன் அவன் கையை வைத்து கைவிலங்கை மாட்டினான் “நல்லசிவம் இவனை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போ” என்றான். 

 

ஜீப் அங்கிருந்து கிளம்ப சோழன் இசைவாணியின் அருகில் வந்தான் “யார் அவன்” என்று அவளிடம் கேட்க 

“நான் கல்யாணம் பண்ணிக்க போறவரு” என்றாள் கண்ணீருடன் 

“வாட் பார்க்க பொறுக்கி மாதிரி இருக்கான் இவனையா கல்யாணம் பண்ணிக்க போற” என்று சோழன் அதிர்ச்சியுடன் கேட்க ஆமாம் என்று தலையை ஆட்டினாள். 

 

“உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா” என்று அவன் கேட்க

“இல்லை” என்றாள் அழுது கொண்டே

“உங்க அப்பா தான் பெரிய ஆள் ஆச்சே சொல்ல வேண்டியது தான பிடிக்கலைன்னு” என்றான் சோழன் ஏளனமாக இசைவாணி பதிலுக்கு எதுவும் பேசவில்லை அவள் அமைதியாக இருக்கும் போதே அவனுக்கு புரிந்துவிட்டது அவளை மீறி தான் அனைத்தும் நடக்கிறது என்று.

 

“சரி வா உன்னை வீட்ல விடுறேன்” என்று அவன் கூற இசைவாணி உடனே பதட்டத்துடன் “இல்லை நான் காலேஜ் போகனும் எக்ஸாம் இருக்கு” என்றாள். 

 

அதன் பின் ஒரு ஆட்டோ பிடித்து அவளுடன் சென்ற சோழன் கல்லூரி வாசலில் அவளை இறக்கிவிட்டு அவள் கல்லூரியின் உள்ளே சென்ற பின் தான் அங்கிருந்து சென்றான். 

 

சோழன் அருகில் இருந்த ஸ்டேஷன் ஒன்றுக்கு சென்றான் அங்கே தான் செல்வாவை அழைத்து சென்றிருந்தார் நல்லசிவம் சோழன் ஸ்டேஷன் உள்ளே வர அங்கிருந்து அனைவரும் எழுந்து நின்றனர்.

 

விறுவிறுவென நடந்து சென்றவன் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் “எங்க அவன் எப். ஐ. ஆர் போட்டிங்களா இல்லையா” என்று கேட்டுக் கொண்டே இருக்கும் போது அந்த இன்ஸ்பெக்டரோ பதிலுக்கு எதுவும் பேசாமல் நின்றிருக்க

“என்னை யா ஒன்னும் பேசாம மரம் மாதிரி நிக்குற” என்று சோழன் கேட்டு கொண்டு இருக்க

பெரியவர் தன் ஆட்களுடன் ஸ்டேஷன் உள்ளே வந்தார் அவருடன் அவர் மகன் சத்யாவும் வந்தான். 

 

“வணக்கம் டி. எஸ். பி சார்” என்று பெரியவர் கை எடுத்து கும்பிட 

பதிலுக்கு எதுவும் பேசாமல் அவரை முறைத்து கொண்டே நின்றான் சோழன்

“அவரு எங்க வீட்டு மாப்பிள்ளை அவர் மேல எப். ஐ. ஆர் போடுறேன்னு சொல்லுறிங்களே சார் இதெல்லாம் ரொம்ப தப்பு சார் அவரை என் கூட அனுப்பி வைங்க” என்று கூற.

 

“உங்க வீட்டு மாப்பிள்ளைன்னா எப்.ஐ.ஆர் போடக் கூடாதுன்னு எதாவது இருக்கா என்ன பொறுக்கி ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க டிரை பண்ணியிருக்கான் அவனை வெளியே விட முடியாது கிளம்புங்க” என்று அவரை முறைத்து கொண்டே சோழன் கூற. 

 

“என் பொண்ணு கூட தான என் மாப்பிள்ளை இருந்தாரு அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறவங்க சின்னஞ்சிறுசுங்க அப்படி இப்படி தான் இருப்பாங்க விடுங்க சார்” என்றார். 

 

“அந்த பொண்ணோட விருப்பமே இல்லாம அவளை தொட்டு இருக்கான் விட முடியாது” என்று அவன் கூற 

“அப்படின்னு என் பொண்ணு சொன்னாளா இருங்க கூப்பிட்டு விசாரிப்போம்” என்றவர்

“சத்யா பாப்பாவை கூட்டிட்டு வா” என்றார். 

 

சத்யா சென்று இசைவாணியை அழைத்து வந்தான் சோழனுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது “சொல்லு மா” என்று பெரியவர் கூற

“நாங்க பிடிச்சு தான் அங்கே இருந்தோம்” என்று இசைவாணி சோழனை பார்க்காமல் தலைகுனிந்து கொண்டே கண்ணீருடன் கூற சோழனுக்கு கோபம் தலைக்கு ஏறியது பிபி அதிகமானது வேறு வழியே இல்லாமல் செல்வாவை வெளியே அனுப்பினான் இசைவாணியை முறைத்து கொண்டே இருக்க. 

 

பெரியவர் அவன் அருகில் வந்து “நான் வரேன் தம்பி உடம்பை பார்த்துக்கங்க” என்று கூறிவிட்டு செல்ல சோழனின் கோபம் மொத்தமும் இசைவாணியிடம் தான் திரும்பியது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 thoughts on “இதய காவலன் 4,5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top