ATM Tamil Romantic Novels

இதய காவலன் 6

அத்தியாயம் 6 

 

இசைவாணி அவனை பார்க்க முடியாமல் கூனி குறுகி போய் நின்றிருந்தாள் 

சோழன் அவளை கல்லூரி வாசலில் இறக்கிவிட்டவுடன் அவளின் தந்தையும் அண்ணனும் கல்லூரிக்கு வந்து அவளை அழைத்து சென்றனர் இருவருக்கும் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தான் தகவல் கொடுத்திருந்தார். 

 

மூவரும் காரில் வரும்போது “அப்பா அந்த டி.எஸ்.பி பண்ற எதுவும் எனக்கு சரியா படல ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில செல்வா மேலயே கை வச்சிருக்கான்” என்றான்

“ம்ம் எனக்கும் ஒன்னும் தெரியாம இல்லை சத்யா செல்வாவை வெளியே விடுறானான்னு பார்ப்போம் இல்லையா இன்னைக்கு நைட் நம்ம ஆளுங்களை அனுப்பி போட சொல்லிடு” என்றார்   பெரியவர். 

 

அதை கேட்ட இசைவாணியின் இதயம் படபவென அடித்து கொண்டது தன் தந்தையும் தமையனும் சொன்னதை செய்வார்கள் என்று அவளுக்கும் தெரியும் சோழனை எதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் தான் அவள் அங்கே வந்தவுடன் மாற்றி பேசியது. 

 

சோழன் கோபத்துடன் ஸ்டேஷனில் நின்று கொண்டு இருக்க அவன் அருகில் வந்த நல்லசிவம் “சார் நீங்க இனிமே பெரியவர் விஷயத்துல தலையிடாம இருங்க அவரு ரொம்ப மோசமானவரு ஏற்கனவே இருந்த ஒரு டி.எஸ்.பி ரொம்ப பிரச்சனை பண்ணினதுனால அவரை அடிச்சே கொன்னுட்டாங்க” என்று கூற சோழன் அவரை திரும்பி முறைத்தான். 

 

“சார் நான் உங்க நல்லதுக்காக தான் சொன்னேன்” என்று நல்லசிவம் கூற

“நீங்க எனக்கு எந்த நல்லதும் பண்ணாம அமைதியா இருந்தாலே போதும் நல்லசிவம்” என்றான் கோபத்துடன். 

 

வீட்டுக்கு வந்த இசைவாணி அழுகையுடனே தன் தந்தையிடம் சென்றவள் தைரியம் வரப்பெற்றவளாக “அப்பா எனக்கு செல்வாவை பிடிக்கலை பா இந்த கல்யாணத்துல எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை” என்றாள் அழுது கொண்டே. 

 

பெரியவர் அவள் அழுவதை பார்த்தவர்

எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க “அப்பாவையே எதிர்த்து பேசுறியா நீ” என்று சத்யா அவளை அடிக்க கையை ஓங்கி கொண்டு போக

“டேய் என்ன இது பொம்பளை பிள்ளையை கை நீட்டி அடிக்கிற பழக்கம்” என்று பெரியவர் அவனை தடுத்தவர்

“என்ன மா நீ சின்னப்பிள்ளை மாதிரி அழுகுற செல்வா மாதிரி ஒரு பையன் கிடைக்க நீ தான் கொடுத்து வச்சு இருக்கனும் ஊரே அவன் கையில தான் இருக்கு” என்றார் மிகவும் பொறுமையாக. 

 

“இல்லை பா எனக்கு அவனை பிடிக்கலை” என்று இசை கூறி முடிக்க முன் அவளின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தார் பெரியவர் அவரின் கை தடம் அவளின் கன்னத்தில் பதிந்து இருக்க அதரிச்சியுடன் கன்னத்தில் கை வைத்து கொண்டே நின்றிருந்தாள். 

 

“என்ன இது கட்டிக்க போற புருசனை அவன் இவன்னு சொல்ற பழக்கம் போ போய் வீட்ல இருக்க வேலையை பாரு நான் யாரை கை காட்டுறனோ அவனை தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும் இல்லையா நாளைக்கு பெரியவர் மகள் பரீட்சையில பெயில் ஆனதால வருத்தத்துல தூக்குல தொங்கிட்டான்னு செய்தி வரும்” என்று தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு கூற அவரின் இன்னொரு முகத்தை பார்த்தவளுக்கு பயத்தில் உடல் உதற ஆரம்பித்தது தன் அறைக்குள் ஓடிச்சென்று கதவைடத்து கொண்டாள். 

 

அறையின் உள்ளே வந்த இசைவாணி தன் தாயின் புகைப்படத்தை கையில் வைத்து கொண்டு சிறுபிள்ளையை போல் தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள். 

 

வெளியே “இவளை காலேஜ்க்கு அனுப்பி படிக்க வைக்கிறிங்கல்ல அந்த திமிரு முதல்ல படிப்பை நிப்பாட்டுங்க அப்பா எல்லாம் சரியா போய்டும் உங்களையே எப்படி எதிர்த்து பேசுறா பாருங்க” என்றான் சத்யா. 

 

“இல்லை சத்யா நம்ம வம்சத்துலையே படிச்சவங்கன்னு யாரும் இல்லை இன்னும் ஒரு வருசம் தான படிச்சி முடிக்கட்டும்” என்றார் பெரியவர். 

 

“அப்பா எனக்கு எதுவும் சரியாப் படல 

நான் சொன்னா கேளுங்க அவள் படிப்பை நிப்பாட்டுங்க எல்லாம் சரி ஆகிடும்” என்றான் சத்யா 

“டேய் நம்ம ரெண்டு பேரையும் மீறி எவனால என்ன டா பண்ண முடியும்” என்றார் பெரியவர் திடமாக. 

 

அதேநேரம் கோபத்துடன் தன் வீட்டுக்கு வந்த சோழன் தன் வெள்ளை சட்டையை கழட்டி எறிந்துவிட்டு சிங்கத்தின் ரெளத்திரத்துடன் அமர்ந்து இருந்தான் தன் மனதில் இருந்த கோபம் குறையாமல் எழுந்து சென்று ஃபிரிட்ஜில் இருந்த மது பாட்டிலில் ஒன்றை எடுத்து வாயில் சரிந்து குடித்து கொண்டு இருந்தான்.

 

இசைவாணியின் அழுத விழிகள் அவன் கண்முன்னே வந்து கொண்டே இருந்தது 

எரிச்சலுடன் இன்னும் மிச்சம் இருந்த அனைத்தையும் குடித்து முடித்து அந்த பாட்டிலையே காலி செய்து தூக்கி எறிந்தான் தன்னிலை மறக்கும் அளவுக்கு குடித்து முடித்த பின் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது அப்படியே சோர்வுடன் படுக்கையில் விழுந்தான். 

 

“அவளை பத்தி நினைக்காத டா” என்று தனக்கு தானே உலறிக் கொண்டே படுக்கையில் விழுந்து கிடந்தான் 

அவ்வளவு போதையிலும் அவளை நினைக்காமல் அவனால் இருக்க முடியவில்லை முதல் முறையாக அவளை நேரில் பார்த்த போது அவளை தன் மடியில் படுக்க வைத்திருந்த போதே 

அவனுள் படபடவென இதயம் அடித்து கொண்டது மறுநாள் அவள் தன்னிடம் வந்து நிற்க அவனே அறியாமல் அந்த வெள்ளை புறாவை ரசிக்க ஆரம்பித்து இருந்தான். 

 

அதையெல்லாம் நினைத்து கொண்டே அப்படியே உறங்கியும்விட்டான் மறுநாள் காலை பொழுது விடிய எப்போதும் போல யூனிபார்ம் மாட்டி டியூட்டிக்கு கிளம்பி சென்றான். 

 

ஜீப்பில் செல்லாமல் இன்று தன் பைக்கில் சென்று கொண்டிருந்தான் அவன் சாலையில் சென்று கொண்டிருந்தான் அப்போது சாரதா மகளிர் கல்லூரியை தாண்டும் போது ஏனோ இசைவாணியின் நினைவு வந்தது அவளை நினைத்து கொண்டே சாலையில் சென்று கொண்டிருந்தான். 

 

இசைவாணி ஒன்றுமே நடக்காதவளை போன்று காலை கல்லூரிக்கு கிளம்பினாள் அவளின் தந்தையும் தமையனும் ஹாலில் அமர்ந்து இருக்க அவர்களை கண்டுகொள்ளாமல் அவள் கடந்து செல்ல “பார்த்தியா பா அவளுக்கு திமிரை நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம கூட போறா” என்றான் சத்யா. 

 

“ம்ம் நானும் கவனிச்சிட்டு தான் டா இருக்கேன்” என்று கூறிக் கொண்டே பெரியவர் அமர்ந்து இருந்தார். 

 

இசைவாணி எப்போதும் போல் கல்லூரிக்கு சென்று அன்றைய பாடத்தை கவனித்து கொண்டு இருந்தாள் கீர்த்தனா அவளின் பக்கத்தில் நோட்டில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தாள்.

 

இசைவாணி பாடத்தை கவனிக்க ஆரம்பித்தாள் அவள் மனதில் ஒரு வெறுமை மற்றும் அமைதி இரண்டும் கலந்து இருந்தது. 

அன்றைய வகுப்பை பேராசிரியர் எடுத்து கொண்டு இருந்தார் “இது ராமாயணத்தின் ஒரு முக்கிய தருணம் ராமரும் சீதையும் முதன்முறையாக சந்திக்கிறார்கள்…

சீதை, ராமரைக் கண்டதும்… மனசுக்குள்ள ஒரு அமைதி, ஒரு பரவசம்

அந்த பார்வை, அவள் வாழ்க்கையை முழுக்கவே மாற்றியமைச்சது…” என்று பேராசிரியர் கூறும் போது இசைவாணிக்கு சோழனின் நினைவு தான் வந்தது. 

அன்று அவளை நேரில் பார்க்க சென்ற போது அவன் நெற்றியில் இருந்த தழும்பை பார்த்தவுடன் அவள் தடுமாறி நின்றது அவனின் தீர்க்கமான பார்வை அனைத்தும் அவளின் நினைவுக்கு வந்தது காபி ஷாப்பில் அவளை அவன் காக்கும் போது கூட அவளே அறியாமல் அவள் மனதில் வந்த ஒரு பரவசம் அனைத்தையும் நினைத்தவள் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க தூரத்தில் ஆதித்ய சோழன் காக்கி உடையில் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான். 

இசைவாணிக்கு நடப்பவை அனைத்தும் ஏதோ ஒரு கனவை போல தான் இருந்தது அவள் மனதில் இருப்பவன் கனவில் நடந்து வருவதை போல தோன்றியது கன்னத்தில் கை வைத்து கொண்டே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள் ஆறடி உயரத்தில் கிரேக்க சிலையை போல இருந்தான் அந்த காக்கி உடை அவனுக்கு அத்தனை எடுப்பாக இருந்தது பறவையின் இறக்கையை போல அகன்று விரிந்த தோள்களை பார்த்து கொண்டே இருந்தாள்.

இங்கும் அங்கும் அசையாத அவனின் நேர் கொண்ட பார்வை என்று அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் உண்மையை சொல்ல வேண்டுமானால் சோழன் ஒன்றும் பேரழகன் இல்லை ஆனால் அவள் கண்ணுக்கு மாத்திரம் பேரழகனாக தான் தெரிந்தான் எல்லாம் காதல் செய்யும் மாயை. 

அவன் உருவம் அருகில் வர வர அப்போது தான் அவளுக்கு புரிந்தது தான் காண்பவை அனைத்தும் கனவல்ல நிஜம் என்று. 

சோழன் அவளின் வகுப்பின் உள்ளே நடந்து வந்தான் அவன் கண்கள் இசைவாணியை தான் பார்த்து கொண்டு இருந்தது பேராசிரியர் “உங்களுக்கு யார் வேணும் சார்” என்று கேட்க “இசைவாணி அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசனும்” என்று சுட்டிக் காட்டினான். 

இசைவாணி பதட்டத்துடனே எழுந்து நிற்க “இசை சார் கூப்பிடுறாருல்ல போய்ட்டு வா” என்றார். 

கீர்த்தனா அவள் செல்லும் முன் அவளின் கையை பிடித்து கிள்ளி வைக்க “ஆ என்ன டி” என்று அவள் கீர்த்தனாவிடம் சத்தமில்லாமல் கேட்க “என்ன நடக்குது இங்கே” என்று கேட்டாள். 

“எனக்கே தெரியலை சும்மா இரு டி” என்று கூறிவிட்டு அவன் பின்னே சென்றாள் மொத்த வகுப்பும் அவளை தான் பார்த்தது. 

இசைவாணி அவனுடன் வர சோழன் ஒரு மரத்தின் அடியில் இருந்த கல் மேடையில் அமர்ந்தான் அவள் எதற்காக அழைத்தானோ என்ற பதட்டத்துடனே தன் நீல நிற தாவணியின் முந்தானையை பிடித்து கொண்டே நின்றிருந்தாள். 

சோழன் லஜ்ஜையே இல்லாமல் அவளை பார்த்து கொண்டு இருந்தான் “ம்க்கும்” என்றான் உடனே இசைவாணி படபடக்கும் விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்க்க “எனக்கு சுத்தி வளைச்சி எல்லாம் பேச தெரியாது நான் எந்த பொண்ணு கிட்டையும் இந்த மாதிரியெல்லாம் பேசுனது இல்லை எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா” என்று கேட்க. 

இசைவாணி அதிர்ச்சியுடன் தன் முட்டை கண்களை விரித்து அவனை பார்த்தாள் “நீ உடனே உன் முடிவை சொல்ல தேவையில்லை நல்லா யோசிச்சு நாளைக்கு இதே நேரம் சொன்னா போதும் அதுக்கு அடுத்த நாள் கூட கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்றான். 

இசைவாணியின் கண்கள் இன்னும் அதிர்ச்சியில் விரிய “உங்க அப்பா அண்ணாவை பத்தியெல்லாம் யோசிக்காமல் உன் முடிவை வந்து நாளைக்கு சொல்லு” என்று கூறிவிட்டு அவள் அடுத்த வார்த்தை பேசும் முன் அங்கிருந்து நடந்து சென்றான். 

கல்லூரி மணி ஒலிக்க கீர்த்தனா அவள் அருகில் ஓடி வந்தாள் இசைவாணி அதிரச்சியுடன் நிற்பதை பார்த்து “என்ன டி சொன்னாரு போலீஸ் மாமா” என்று கேட்டாள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

6 thoughts on “இதய காவலன் 6”

  1. В нашем ассортименте всё для оформления праздника которые можно заказать прямо сейчас.
    Доставка шаров Нижний Новгород [url=https://shariki-shop47.ru/]Доставка шаров Нижний Новгород[/url] .

  2. Заказать Хавал – только у нас вы найдете разные комплектации. Быстрей всего сделать заказ на новый хавейл 2025 можно только у нас!
    [url=https://havalmsk1.ru]цена автомобиля haval[/url]
    дилер haval в москве – [url=https://havalmsk1.ru]http://www.havalmsk1.ru[/url]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top