ATM Tamil Romantic Novels

தீயை தீண்டாதே தென்றலே -4

4

 

 

திக்கெட்டும் திசையாக இருந்தாலும் அவை கொற்றவைக்கு உதவி புரியவில்லை…சுற்றி சுற்றி ஒரே இடத்திலே ஓடி ஓடி ஒளிய முற்பட்டாள் பேதை…

 

எங்கடி ஓடுறா நீ என்ன கத்தினாலும் எவ்வளவு கத்தினாலும் அவனும் எந்திரிக்க மாட்டான் யாரும் உன்னை எங்ககிட்ட இருந்து காப்பாத்த வர மாட்டாங்க…என இரக்கமின்றி அவள் நம்பிக்கை கொலைத்தவர்கள் கொற்றவை நெருங்க…

 

வேண்டாம் என்னை விட்ருங்க அதுதான் உங்களுக்கு நல்லது என வரவழைக்கப்பட்ட தைரியத்தில் இயம்பினாள் கொற்றவை… 

 

அவளுக்கு உள்ளூர பயம் தான் ஆனால் அதை காட்டிக் கொள்ளும் இடம் இதுவல்ல இது தன்னை தானே காத்துக் கொள்ளும் சமையம் என்று உணர்ந்தவள்… இக்கயவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்கும் முன்னே அவளை நால்வரும் நெருங்கி விட ஆனது ஆகட்டும் என்று அவர்களை எதிர்க்க துணிந்தாள் கையில் கிடைத்த நாற்காலி மேஜை பாட்டில் என எல்லாவற்றையும் அவர்கள் மீது தட்டி விட்டவள்… சதுரியமாக கதவருகே செல்லும் போது அவர்களிடம் அகப் பட்டு விட்டாள்…

 

கொத்தாக கொற்றவை முடியை பிடித்தவர்கள் அவளை பலவந்தம் படுத்த முயல… 

 

 பத்ரி எழுந்திரிங்க பத்ரி பத்ரி என கத்தியது மிக லேசாக அவன் காதுகளை எட்டியது போல் அசைந்து கொடுத்தான்…

 

அதில் சிறு நம்பிக்கை பெற்றவள் மீண்டும் அவன் பெயரை சொல்லி கத்தினள்…

 

அதில் எச்சரிக்கை அடைந்த அக்கயவர்களோ கொற்றவை வாயை பொத்தி தனியே தூக்கி சென்று அவள் சோலியில் கை வைத்த போது அவர்களில் ஒருவன் ஆஆஅ என கத்தியப்படி சரிந்து விழுந்தான்…

 

அவனையும் அவன் பின்னால் கையிலுள்ள கண்ணாடி குடுவை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட வந்த பத்ரியை பார்த்தவர்கள் முதலில் அஞ்சினர் பிறகு அவன் நல்ல போதையில் இருப்பதை உணர்ந்து அவனை வீழ்த்துவது எளிது என்று எண்ணிக் கொண்டு பத்ரியிடம் பாய…

 

அவனோ அவ்வளவு கண் மறைக்கும் போதையிலும் எதிர்த்தவர்களை அசால்ட்டாக துவம்சம் செய்து இருந்தான்… அவர்களை அனைவரையும் அடித்து மூர்ச்சையாக்கியவன் தானும் போதையில் சரிந்து விழ அவனை ஓடி வந்து தாங்கிக் கொண்டாள் கொற்றவை…

 

சற்று நேரத்திலே மகிழ்விடுதி கலவரம் பூண்டது… இது போன்ற நிகழ்வுகள் அங்கு சகஜம் என்பதாலும் மேலும் அவர்கள் எதற்கும் பணத்தை தாராளமாக வாரி இறைக்கும் மேல் தட்டு மாந்தார்கள் என்பதாலும் பாரின் ஓனர் அவர்களை பற்றி போலீஸ் புகார் அளிக்காமல் வெறும் கண்டிப்புடன் விட்டு விட்டார்…

 

ரத்தம் உறைய தன் தோளில் தொங்கியவனின் பாரம் தாளாது தள்ளாடியப் படி பத்ரியை கார் பார்க்கிங் வரை அழைத்து ம்ஹும் இழுத்து வந்தாள் கொற்றவை…

 

ஏற்கனவே பசி தூக்கமின்மை துவண்டவள் எஞ்சி சக்தியையும் அவர்களிடம் போராடுவதில் வீணாகி இருக்க மயக்கம் வந்தாலும் விழ முடியாத சூழலில் தான் கொற்றவை நின்று இருந்தாள் போதாது குறைக்கு புருஷன் சுமை வேறு கண்ணை இருட்டிக் கொண்டு வர துன்பத்தில் தவித்து கொண்டு நின்றவள் முன்பு வந்து நின்றது அந்த விலையுயர்ந்த கார் சறுக்கி கொண்டு வந்து நின்றது…

 

அதில் இருந்து இறங்கிய நாகரிகமான யுவன் ஒருவன் கொற்றவை நோக்கி வந்து அவள் தோளில் மயங்கி கிடந்த பத்ரியை தன் தோளில் ஏந்திக் கொண்டவன்… மேடம் வெளில நிக்காதீங்க சீக்கிரம் கார்ல ஏறுங்க பிரஸ் மீடியான்னு யார் கண்ணுலயாவது நீங்க பட்டா பிரச்சனை வேற மாதிரி ஆகிடும் சீக்கிரம் கார்ல ஏறுங்க மேடம்…என சொன்னவன் பத்ரியை பத்திரமாக காரில் ஏற்றி விட்டு சுற்றி முற்றி எங்காவது கேமரா இருக்கிறதா என்று பார்த்தவன் அறிந்து இருக்கவில்லை அவன் புலன்களுக்கு எட்டப்படாத தொலைவில் இருந்து அவர்களை ஒரு கேமரா ஒளி இன்றி ஓசை இன்றி புகைப் பிடித்ததையும் கூடவே அவர்களை பின் தொடர்ந்து வருவதையும்… அறிந்து இருந்தால் பின்னே நடக்கவிருக்கும் அசம்பாவிதம் முன்னவே தடுத்து இருக்கலாமோ…???

 

வந்தவன் யார் என்ன என எதுவும் கேட்காமல் அவன் வேண்டுகோளுக்கு இணங்கி வண்டியில் ஏறிக் கொண்டவளுக்கு சோர்வு மயக்கமும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது…

 

 அவள் மூளை முன் பின் தெரியாதவனை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினாலும் அவள் உடலும் உள்ளமும் போதும்டா சாமி இதுக்கு மேல முடியாது என ஓய்ந்து விட்டது இனி நடப்பது விதி படி நடக்கட்டும் என்ற கையறு நிலைக்கு தள்ளப் பட்டாள் கொற்றவை…

 

கார் கடற்கரை ஒட்டிய தனி ஒரு பங்களாவின் போர்டிக்கோ உள்ளே அழைத்து வந்து நின்றது… மூவரும் இறங்கி அவ்வீட்டினுல் செல்லும் வரை நிழற்படக் கருவியும் அதன் பணியை நிறுத்தவில்லை… 

 

பத்ரியை பத்திரமாக உள்ளே அழைத்துக் கொண்டு போய் மடியில் உள்ள அவன் அறையில் படுக்க வைத்து விட்டு வந்தவன்…

 

மேடம் நான் சாரோட பர்சனல் பாடிகார்ட்… சார் சொன்னது போல உங்க இரண்டு பேரையும் பாதுகாப்பா கொண்டு வந்த விட்டுட்டேன் நீங்கள் நல்லா ரெஸ்ட் எடுங்க சார் காலையில உங்களை பார்ப்பதா சொன்னார் அவர் வர வரைக்கும் கதவை மட்டும் யாருக்காகவும் எதுக்காகவும் திறந்துடாதீங்க என மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி விட்டு செல்ல…

 

யார்யா உங்க சாரு …?? என கேட்க தோன்றியவளுக்கு அதற்கான வார்த்தை மட்டும் தொண்டை குழியில் இருந்து வெளிவரவே இல்லை… அதனால் அவன் சொன்ன எல்லாவற்றிற்கும் சரி சரி என மண்டையாட்டி அனுப்பி வைத்துவிட்டு… அக்கடா என அந்த குஷன் சோபாவில் அமர்ந்தவளே அமுங்கி எழும் அதன் மேன்மையில் ரிலாக்ஸ் பண்ண அதற்குள்ளேவா நான் இருக்கிறேன் என அவள் வயிறு கூப்பாடு போட சாப்பிட என்ன இருக்கிறது என வீடு முழுவதும் தேடிப் பார்த்தவளுக்கு அவ்வீட்டில் அமைந்துள்ள சகல சௌகரியங்களும் கண்ணிலும் கருத்திலும் புலப்படவே இல்லை அவள் குறிக்கோள் மொத்தமும் சாப்பிட்டின் மீதே இருக்க… எப்படியோ தேடி கண்டு பிடித்து மார்பிள் சுவரில் பதிக்கப் பட்ட பிரிட்ஜ்ஜை திறந்து அதில் இருக்கும் உணவுகளை எடுத்து அவற்றை சூடாக்கும் பொறுமைக் கூட இல்லாது அவசரமாக பிரித்து மேய்ந்தவள் அறையை தேடி கண்டு பிடிக்க ஆயாசமாக இருக்க முன்பு ஓய்வு எடுத்த சோபாவிலே படுத்து உறங்க ஆரம்பித்தவள் அப்படியே முழுகி போனாள்…அவளை சுற்றி பின்னப்படும் சதி வளை பற்றி அவள் அந்த கனவிலும் கண்டு இருக்க மாட்டாள்…

 

கண்ணை குருடாக்கும் அந்த இருண்ட அறையில் ஒருவன் அமர்ந்து இருக்க அவ்வறை திறந்து கொண்டு உள்ளே வந்த ஒருவன் தன் கையில் இருந்த கவரை மேஜை மீது வைத்து விட்டு மறு நொடியே வெளியேறி இருந்தான்…

 

மெதுவாக அந்த கவரை பிரித்து மேஜை மீது பரத்தி வைக்க பட்டு இருந்த புகைப்படங்களை பார்த்தவன் கண்கள் அவ்விருட்டிலும் கனலாக ஜொளித்தது… அந்த புகைப்படம் அனைத்திலும் பத்ரி மற்றும் கொற்றவையுடையது என்பதை நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா…??

 

பத்ரியும் கொற்றவையும் மும்பை வந்ததிலிருந்து சற்று முன் அவர்கள் இருவரும் தனிதனியாக உறங்க சென்றது வரை அத்தனையும் நிழல் படமாக அவன் முன்னால் இருந்தது…

 

ம்ஹும் நிம்மதியா தூங்குறியா பத்ரி…தூங்கு தூங்கு நீ தூங்குறது இதுவே கடைசியா இருக்கும்… இனி விடியுற ஒவ்வொரு பொழுதும் உன்னை துரத்தும் ஏன் எதுக்கு நீ யோசிச்சு முடிக்குறதுக்குள்ள உன் வாழக்கை முடிஞ்சி இருக்கும் ஹாஹாஹா…

 

முன்னவே உன்னை ஓட விட்டேன் நீ திரும்பி வந்து பெரிய தப்பு பண்ணிட்ட இனி நீ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உன் நிழலே உன்னை துரத்தும் உனக்கு சொந்தமானது எல்லாம் பரிப்போகும் ஊரே உன்னை கரிச்சி கொட்டும் உன் குடும்பமே உன்னை வெறுத்து ஒதுக்கும் தெரு நாயவிட கேவலமா வாழ்க்கைய உன்னை வாழ வைப்பேன்… இந்த முறை அந்த ஆதிரன் மட்டும் இல்லை ஒட்டு மொத்த சக்ரவர்த்தி படையே திரண்டு வந்தாலும் உன்னை என்கிட்ட இருந்து காப்பாற்ற முடியாது பத்ரி ஹாஹா என்ற கோரமாக சிரித்தவன்…

 

புகைப்படத்தில் பத்ரியின் பக்கத்தில் இருந்த கொற்றவை மீது அவன் பார்வை அழுத்தமாக விழுந்தது…புகைப்படத்தில் இருக்கும் கொற்றவையை தன் விரல்களால் தடவியவன் முகம் விகாரமானது… “புலிக்கு வச்ச கூண்டுல புள்ளி மான் வந்து மாட்டிக்கிச்சு… என் அகோர பசிக்கு இந்த மான் இரையாவது யாராலும் தடுக்க முடியாது ஹாஹாஹா…!!” என அவன் சிரித்த பேய் சிரிப்பில் அந்த இடமே அதிர்ந்து போனது…

 

10 thoughts on “தீயை தீண்டாதே தென்றலே -4”

  1. Try your luck in an exciting game[url=https://zeushades-slot.com/]zeus vs hades rtp[/url] and find out which god will win this battle!
    Wild and scatter symbols activate interesting bonus features.

  2. Howdy this is kinda of off topic but I was wanting to know if blogs use WYSIWYG
    editors or if you have to manually code with HTML.
    I’m starting a blog soon but have no coding experience so I
    wanted to get advice from someone with experience. Any help would be
    enormously appreciated! https://repozytorium.ujk.edu.pl/dlibra/login?action=LoginAction&language=en&refUrl=aHR0cDovL0dsb2JhbC5Hd2FuZ2p1LkFjLmtyL2Jicy9ib2FyZC5waHA/Ym9fdGFibGU9ZzAxMDEmd3JfaWQ9MTU1OTg0Nw

  3. Absolut interessant, wie sich die Szene von digitalen Casinos in letzter Zeit verändert besitzt.

    Ich habe oft bemerkt, dass einige Plattformen zunächst
    mit riesigen Grafiken werben, jedoch beim Service leider oft
    ziemlich nachlassen. Ich finde, dass vor allem die Zuverlässigkeit das absolut Wichtigste ist,
    gerade falls man kurz unterwegs einige Runden drehen will. Neulich stieß ich an einen extrem hilfreichen Beitrag playjonny casino bonus gestoßen, der absolut gut erklärt, warum ein reibungsloser playjonny login und transparente Gewinne im Grunde die echte Qualität darstellen. Außerdem ist mir aufgefallen, dass eine optimierte playjonny
    app heute einen Unterschied bewirkt, da beinahe jeder nur noch auf dem Handy spielt.
    Mal ehrlich, achtet ihr eigentlich zuerst auf die den Betrag vom playjonny bonus
    oder sind für euch die Umsatzbedingungen deutlich entscheidender?

    Es würde mich persönlich echt reizen, inwieweit ihr bereits ähnliche Beobachtungen bei neuen Casinos teilen könnt.
    Wir sollten darüber gerne ein bisschen austauschen! http://globaldream.or.kr/bbs/board.php?bo_table=sub08_02&wr_id=201103

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top