அத்தியாயம் 19
அதை கேட்ட மதியை தவிர அங்கிருந்த அனைவருக்கும் மருத்துவச்சி கூறிய செய்தி பேரதிர்ச்சியாக தான் இருந்தது பெரியப்பொண்ணு உடனே “என்ன சொல்லுறிங்க அக்கா அவள் கல்யாணம் முடிஞ்சு அஞ்சு மாசமா ஹாஸ்ட்டல்ல தானே இருந்தா எப்படி அவள் மாசமா இருக்க முடியும் விளையாடாதிங்க சரியா பார்த்து சொல்லுங்க நீங்க ஒழுங்கா பார்த்துருக்க மாட்டிங்க அவள் பொங்கல் வைச்ச அசதியில மயங்கி விழுந்துருப்பா” என்று அவர் கேட்க.
“இந்தா பாரு மா பெரியப்பொண்ணு இன்னைக்கு எத்தனையோ இங்கீலிசு வைத்தியம் வந்துருக்கலாம் ஆனா இந்த பாக்கியம் ஒன்னை கணிச்சு சொன்னா அது தப்பா இருக்க வாய்ப்பேயில்லை இந்த புள்ளை கையில இரட்டை நாடி துடிக்குது” என்றார் அவரும் திடமாக.
“ஓஹோ அப்போ கையை பிடிச்சு பார்த்திங்களே இவள் வயித்துல இருக்க பிள்ளை தங்கி எத்தனை மாசமாகுதுன்னு அதையும் கணிச்சு சொல்லுங்க பார்ப்போம்” என்று கேட்டார் பெரியப்பொண்ணு மனதில் எதையோ வைத்து கொண்டே.
பாக்கியம் அவரை சந்தேகமாக ஒரு பார்வை பார்க்க “இல்லை அக்கா அவள் முதல் மாசமே மாசமாகி இருந்தா இந்நேரம் அஞ்சு மாசம் ஆகி வயிறு தெரிஞ்சிருக்கும் வயிறு சரியா தெரியலையே அதனால தான் கேட்டேன்” என்றார்.
பாக்கியம் இளமதியின் கையை பிடித்து மீண்டும் நாடியை கவனித்தவர் “மூணு மாசம் இருக்கலாம் இல்லைன்னா அதுக்கும் குறைவா இருக்கலாம்” என்றார்.
“என்ன அக்கா சொல்லுறிங்க என் தம்பி இடையில அவள் கூட குடும்பம் நடத்தவேயில்லையே ஆத்தே அஞ்சு மாசமா அவள் காலேஜ்ல இருந்தாளே எப்படி மாசமாகி இருப்பா” என்று ஒன்றும் தெரியாதவரை போல் பெரியப்பொண்ணு வாயில் கை வைக்க சின்னப்பொண்ணு அவரை பார்த்து முறைத்து வைத்தார்.
சிவகாமி ராமசாமி இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்க்க அங்கே நின்றிருந்த அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.
இளமதி அவர் கூறிய மாத கணக்கை கேட்டு பெரிதாக அதிர்ச்சியடையவில்லை அவளுக்கு கணக்கு சரியாக தான் வந்தது
எப்போதும் மாதவிடாய் சுழற்சி தள்ளி வருவதால் அவள் அதை கண்டுகொள்ளவில்லை இப்போது தான் கர்ப்பமாக இருக்கிறோம் தனக்குள் இருந்து ஒரு குழந்தை வரப்போகிறது என்பது அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாக தான் இருந்தது ஆனால் அதை கூற அவள் கணவன் இல்லையே என்பது தான் அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சோர்வுடன் அமர்ந்திருந்தாள் கண்கலங்கினாள்.
சின்னப்பொண்ணுவுக்கு புரிந்துவிட்டது இங்கேயே இருந்தாள் தன் மகளை தான் தப்பாக பேசுவார்கள் எதுவாக இருந்தாலும் வீட்டில் சென்று விசாரிப்போம் என்று அதனால் அவளை இங்கிருந்து முதலில் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று முடிவெடுத்தவர் “மதி வா வீட்டுக்கு போகலாம்” என்றார்.
இளமதியும் அவருடன் சோர்ந்து போய் எழுந்து நிற்க “நில்லுங்க டி எங்க போறிங்க” என்று கத்தினார்
சிவகாமி “பாட்டி எங்கே போவாங்க வீட்டுக்கு தான் போறோம் எனக்கு மயக்கமா வருது” என்றாள் இளமதி சோர்வுடன்.
“எவ்வளவு தைரியம் இருந்தா எவன் பிள்ளையையோ வயித்துல சுமந்து கிட்டு என் வீட்டுக்கு போறேன்னு சொல்லுவ” என்று கோபத்துடன் பேச
அவர் பேச்சில் வெகுண்டு எழுந்த இளமதி “பாட்டி என்ன சொல்றிங்க” என்றாள் கோபத்துடன்.
“ஆமாம் டி அஞ்சு மாசமா நீ என் மவன் கூட வாழவேயில்லை எப்படி நீ மூணு மாசம் முழுகாம இருப்ப இப்போ வானத்துல இருந்து புள்ளை வந்து உன் வயித்துல குதிச்சிருச்சுதா என்ன” என்று சந்தேகமாக அவளை பார்த்து கேட்க உடனே ராமசாமி “சிவகாமி வா எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் இங்கே எல்லார் முன்னாடியும் வேண்டாம்” என்றார்.
“என்னங்க நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருக்கிங்களா
எவன் பிள்ளைக்கோ என் மவனை அப்பாவாக சொல்லுறிங்களா எதுவா இருந்தாலும் இங்கேயே கேட்ப்போம் அப்போ தான் இவள் லட்சனம் என்னன்னு ஊர்ல இருக்க எல்லாருக்கும் தெரியும்” என்றார் இளமதியை பார்த்து முறைத்து கொண்டே.
இளமதி கண்கள் கலங்க அவரை பார்த்தாள் “அடச்சீ சொந்த பேத்தியவே இப்படி பேச உங்களுக்கு வெட்கமா இல்லை” என்றாள் அழுகையுடனே
“ஏய் மழுப்பாத டி உன் வயித்துல இருக்க பிள்ளைக்கு அப்பன் யாருன்னு சொல்லு டி முதல்ல” என்றார் பெரியபொண்ணுவும் அவருடன் சேர்ந்து கொண்டு.
இளமதி தன் கண்ணீரை கைகளால் துடைத்து கொண்டவள் “என் வயித்துல வளருர குழந்தைக்கு அப்பா என் புருசன் தான் என்னை தொட்டு தாலி கட்டுனாரே அவரு தான் இந்தா நிக்குதே இந்த அம்மாவோட புள்ளை தான்” என்றாள் இளமதி சிவகாமியை கை நீட்டி சுட்டிக்காட்டி.
“பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் மாமா இங்கே இருக்காரு நீ காலேஜ்ல இருந்த எப்படி உன் வயித்துல குழந்தை வானத்துல இருந்து வந்து உதிச்சுதா நீ என்ன குந்தி தேவியா கடவுள் கிட்ட வரம் கேட்டு வாங்க” என்று கேட்டாள் நந்தினி ஏளனமாக அவளை பார்த்து கொண்டே.
“அய்யோ போதும் நிறுத்துறியா புருசன் பொண்டாட்டின்னா வெளியே பார்க்க மாட்டாங்களா ஒன்னா இருந்துருக்க மாட்டாங்களா என்ன, நான் ஹாஸ்ட்டல்ல இருக்கும் போது நிறைய தடவை நாங்க ரெண்டு பேரும் வெளியே சந்திச்சிருக்கோம்” என்றாள் தலைகுனிந்து கொண்டே இளமதி யாரையும் பார்க்க முடியாமல் அவமானத்தில் கூனி குறுகி போய்.
“உண்மையை சொல்லு டி நீ மாமா கூட இருந்தியா இல்லை வேற எவன் கூடவாது இருந்தியா” என்று நந்தினி சாதரணமாக அவ்வளவு பெரிய வார்த்தையை கேட்க
தன் மகளை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்க எந்த தாயால் தான் அமைதியாக இருக்க முடியும் சின்னப்பொண்ணுவுக்கு கோபம் வந்து விட அவளின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தார்.
“எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே என் மகளை கை நீட்டி அடிப்ப நீ என்ன ஒழுங்கா உன் மகளும் உன்னை மாதிரி தான இருப்பா யாரோ ஒருத்தன் பிள்ளையை வயித்துல சுமந்துக்கிட்டு வந்து நிக்குறாளே அவளுக்கு நீயும் உடந்தையா” என்றார் பெரியப்பொண்ணு கோபத்துடன் நந்தினியின் முன்னே நின்று கொண்டு.
“இப்படி என் மகள் மேல அபாண்டமா பழியை தூக்கி போடாதிங்க நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டிங்க” என்று அவர் கண்ணீர் விட “நாங்க ஒன்னும் தெரியாம உன் பொண்ணு மேல பழியை போடலை எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறோம் இதோ இதுக்கான ஆதாரம்” என்று பெரியப்பொண்ணு நந்தினி கையில் இருந்த போனை பிடுங்கி
அதில் இருந்த புகைப்படத்தை சிவகாமியிடம் காட்ட அவர் அதிர்ந்து போய் இளமதியை பார்த்தார்.
அங்கிருந்த அனைவரும் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியுடன் நின்றிருந்தனர்
“என்ன மா இளமதி இதெல்லாம் உன்னை எவ்வளவு நல்ல பொண்ணுன்னு நினைச்சோம் நீயே இப்படி பண்ணிட்டியே மா” என்று அங்கிருந்தவர்கள் கூற இளமதி போனை பிடுங்கி தன் கையில் வைத்து பார்த்தாள்.
அவளின் பக்கத்தில் இருந்த சின்னப்பொண்ணுவும் அதை பார்த்தார்
அதில் சரவணனும் இளமதியும் அணைத்து கொண்டு நிற்பதை போல் இருந்தது அந்த புகைப்படம்.
அப்போது தான் அனைத்தும் இளமதிக்கு நினைவு வந்தது தேர்வு சமயத்தில் ஒரு நாள் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த இளமதிக்கு மயக்கம் வருவதை போல் இருக்க அவள் எழுந்து கழிவறைக்கு சென்று முகத்தை கழுவிவிட்டு வரலாம் என்று நடந்து செல்ல அவள் எதிரே சரவணன் வந்தான்.
இளமதிக்கு சுத்தமாக கண்களை இருட்டிக் கொண்டு வர தள்ளாடி கொண்டே நடந்து சென்றவள் ஒரு கட்டத்தில் மயங்கி விழ போக அவள் எதிரே வந்த சரவணன் அவளை அணைத்து பிடித்து கொண்டான் அப்போது தான் இந்த புகைப்படம் எடுத்திருக்க கூடும் என்று புரிந்தது
சின்னப்பொண்ணு அந்த புகைப்படத்தை தன் கையில் வைத்து கண்ணீருடன் பார்த்தவர் நிமிரந்து இளமதியை முறைத்தார்.
“அம்மா நான் என்ன சொல்ல வரேன்னு நீயாவது கேளு மா என்னை அப்படி பார்க்காத மா அன்னைக்கு என்ன நடந்ததுன்னா” என்று கூற வர அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் சின்னப்பொண்ணு.
இளமதிக்கு தான் அவரின் செய்கை மிகவும் பேரதிரச்சியாக இருந்தது “அம்மா நான் சொல்றதை கொஞ்சம் கேளு மா” என்று அவரை சமாதானம் செய்ய மீண்டும் அவள் கன்னத்தில் ஒரு அடி இடியாக விழுந்தது சின்னப்பொண்ணுவின் கைகளால் விழுந்தது “பேசாத டி நான் உன்னை எவ்வளுவு நம்பினேன் என்னை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டல்ல” என்று அழுகையுடன் கூற.
‘நல்லா வாங்கு டி’ என்று மனதில் நினைத்தார் பெரியப்பொண்ணு நந்தினி தன்னை அறியாமல் சிரித்தவள் யாருக்கும் தெரியாமல் வாயை மூடிக் கொண்டாள்.
சின்னப்பொண்ணு கதறி கதறி அழுக
பெரியப்பொண்ணுவின் மனமே நிறைந்து போனது சிவகாமி அவரை பார்த்து முறைத்தவர் “ஆத்தாளும் மவளும் இங்கேயே கிடங்க டி இனி என் வீட்டு பக்கம் வந்திங்க காலை உடைச்சு அடுப்புல வச்சிருவேன்” என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.
“இந்த மாதிரி கேவலத்தை யாரும் இதுவரை இந்த ஊர்ல பண்ணினதே இல்லை இப்படி கூட பொண்ணுங்க இருப்பாங்களா”
“இருக்காங்களே அட நமக்கு எதுக்குயா பெரிய இடத்து விவகாரம்” என்று அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.
பெரியப்பொண்ணுவும் நந்தினியும் அவர்களை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றனர் தாயும் மகளும் எங்கு செல்வது என்று தெரியாமல் இருளில் அந்த வனத்தின் உள்ளே தவித்து கொண்டே நின்றிருந்தனர்.
“அம்மா இப்போவாது நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் கேளு மா பீளிஸ் மா என் மேல எந்த தப்பும் இல்லை” என்று அவரின் கைப்பிடித்து கெஞ்ச “மரியாதையா என் கையை விடு டி நீ என் வயித்துல தான் பிறந்தியா இனி என் கிட்ட ஒரு வார்த்தை பேசுன அவ்வளவு தான்” என்று கோபத்துடன் முகத்தை திருப்பி கொண்டார்.
இளமதி செய்வதறியாமல் அழுது கொண்டே இருந்தாள் அவளின் மாமன் நினைவு ஒன்று மட்டுமே அவளுள் இருந்தது அவனின் அருகாமைக்கு ஏங்க ஆரம்பித்தாள் அவன் இருந்திருந்தால் தனக்கு இப்படி ஒரு இழிநிலை வருமா என்று எண்ணி வருந்தினாள்.
அதேநேரம் கருப்பனை ஜாமீனில் வெளியே கொண்டு வர பெரியப்பொண்ணுவின் கணவர் முயன்று கொண்டு இருந்தார்
அவன் ஒருவன் வெளியே வந்தாள் மட்டுமே இளமதியின் நிலை மாறும்.
👌👌👌👌👌👌👌👌👌👌
Next epi plz sikkirama update koduga yan long gap viduriga
super bro waiting for next epi…..