23
ஆணி அடித்தார் போல் சீராளன் தள்ளிய இடத்தில் திக் பிரமை பிடித்தாற் போன்று இருந்தவளின் காதுகளில் சீராளன் சொல்லி சென்ற வார்த்தைகளே
நான் உயிரோட இருந்தா தான இந்த தாலி கழுத்துல தொங்கும்… நான் போறேன்… உன் கண் காணாமல் எங்கேயாவது போய் செத்துப் போறேன்… என்கிற வார்த்தையே மீண்டும் மீண்டும் ஒலித்தன… எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ…
ஓஓ என மரண ஓலம் கேட்டு இதயம் எகிறி துடிக்க வாசல் பக்கம் போனாள்… அவன் வரவில்லை என்றதும் தலையில் அடித்து கொண்டு அழத் தொடங்கினாள்…
மன்னிச்சுடு மாமா மன்னிச்சுடு மாமா எனக்கு இதை விட்டா வேற வழி தெரியலையே என மருகியவளின் மனம் பின்னோக்கி நகர்ந்தது…
நலங்கு வைக்கும் வைபவம் நடைபெற்று முடிந்து குளிக்க ஆடை எடுக்க தன் அறைக்குள் சென்றாள் மேனகை…
அங்கோ…
கேட்டிங்களாடி செய்திய கட்டின தாலியோட ஈரம் காயமுன்னடி கண்டவன் கூட ஓடி போனவள்… இப்போ கையில ஒன்னு வயித்துல ஒன்னுனு திரும்பி வந்து இருக்கா… வந்தவ சும்மாவா வந்தா காரு பட்டு நகைன்னு மினுக்கிகிட்டு இல்லை திரியுறா… கேடு கெட்டவளுக்கு தான் காலம் போல… நல்லவங்களுக்கு எல்லாம் காலம் இல்லைனு சும்மாவா சொல்லுவாங்க அது சரியாத்தான் இருக்கு…
யாரைக்கா சொல்ற…
யாரை சொல்றேன்னு கூடவா தெரியல எல்லாம் அந்த சிறுக்கி ரதியை பற்றி தான் சீராளன் கட்டின தாலியோட ஈரம் காயும்முன்ன அத்து போட்டு அடுத்தவன் கூட போனவள் சீரும் சிறப்புமா புருஷன் புள்ள குட்டின்னு வந்து பவுசா வாழ்ந்துட்டு இருக்கா… ஆனால் இந்த கிறுக்கு பையன் இன்னும் அவள் ஓடிப்போன வருத்தத்திலே நிதம் குடிச்சு சீரழிஞ்சி போய் கிடக்குறான்… இன்னைக்கு கூட குடிச்சிட்டு வண்டிய ஓட்டி போய் கீழ விழுந்து கை கால உடைச்சிகிட்டு படுத்து கிடக்குறான் ஏன்னு கேக்க ஒரு நாதியும் இல்லை…
அட பாவமே… சொத்து பத்து இருந்து என்ன பிரயோஜனம் தங்கமான பிள்ளையோட வாழ்க்கை இப்படி பாழாப் போச்சு… அதை சீர் செய்யக் கூடவா யாருக்குமே நினைக்க தோணல என்ன மனுஷங்க இவங்க எல்லாம்… என புஷ்பா ஆதங்கமாக கேட்க…
அது எப்படி செய்வாங்க… அஞ்சி வயசில் அண்ணன் தம்பி பத்து வயசில் பங்காளி பங்கு கேட்டா பகையாளி இல்லை… இவன் குடும்பம் குட்டின்னு வாழ்ந்துபுட்டா எங்க பரம்பரை சொத்துக்கு பங்குகேட்டு வந்து புடுவானோன்னு இவனை சத்தம் தெரியாம கழட்டி விட்டுபுட்டாங்க…இவன் இப்படியே குடிச்சு அழிஞ்சி போனா அவன் சொத்தும் இவங்களுக்கே வந்து சேரும்ல சொத்துக்கு சொத்தும் சேர்ந்த மாதிரி ஆச்சு இல்லை… அந்த எண்ணம் தான் அவனை கண்டுக்காம விட்டுபுட்டாங்க… இல்லாட்டி இந்நேரம் அவனுக்கு வேற பொண்ணை பார்த்து கட்டி வச்சி இருப்பாங்கல்ல… எல்லாம் குறுக்கு புத்தி இதே இந்த தையல்நாயகியே இருக்கட்டும் இந்த எடத்துல அவள் பிள்ளைங்களா இருந்தா இப்படி சும்மா விட்டு இருப்பாளா…??? ஆயிரம் இருந்தாலும் சொந்த ரத்தம் வேற கூட பிறந்த ரத்தம் வேற தான… இந்த சீராளனுக்கு அப்பா அம்மா இருந்து இருந்தா விட்டு இருப்பாங்களா…? இவ்வளவு ஏன் இந்த கல்யாண குட்டி அதான் மேனகா புள்ளையவாது சீராளனுக்கு கட்டி கொடுத்து கரைசேர்த்து விட்டு இருக்கலாமில்ல… ஏன் செய்யல அம்புட்டும் சுயநலம் புடிச்சிப் போய் அலையுதுக… அடிபட்டு எந்திரிக்க கூட முடியாம கிடக்குன்னு நம்ம சரசுக்கா பையன் சொன்னான் அவன் தான் அடிபட்ட உடனே தூக்கிட்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்து மருந்து கொடுத்து வீட்டுக்கு கூட்டி வந்து விட்டானாம்… பார்க்கவே பாவமா இருந்துச்சு பெரியம்மான்னு சொன்னான்… இதுக்கெல்லாம் என்னைக்கு காலம் பதில் சொல்லுமோ… என்னைக்கு அந்த புள்ளைக்கு ஒரு விடிவு காலம் வருமோ தெரியல… என நேரில் பார்த்தவர் போல் புட்டு புட்டு என்று வைத்தார் அந்த வயதான பெண்மணி ஆனால் அவர் யூகித்து கூறியதில் உள்ள உண்மையும் சுட்டதே…
தன் அண்ணன் தவறே செய்தாலும் அவனை கண்டித்து காத்து நல்வழிக்கு கொண்டு வந்த பெற்றோர்… சீராளனை கண் கொண்டும் பார்க்கவில்லையே… என என்ன யோசித்து பார்த்தும் அவன் நினைவலைகளில் அப்படி ஒரு சங்கதி நடந்ததாகவே தெரியவில்லை…
அதுவரை அவர்கள் பேச்சை கேட்டு நின்றவள் கடைசி வரியாக சீராளன் அடிபட்டு எழுந்து நடக்க முடியாமல் இருப்பதை கேட்டு எதை பற்றியும் யோசிக்காமல் அவனை காண விரைந்தாள்… எங்கடி போற இந்நேரத்தில என்ற தாயை கண்டு மிரண்டவள் பின்னாடி டாய்லெட் போய்ட்டு வரேன் மா என்று விட்டு பின்வழியாக சீராளன் வீட்டை நோக்கி தலைத் தெறிக்க ஓடி வந்தவள்…
அவன் வீட்டின் கதவை தட்ட… யாரும் வெளியே வர வில்லை உள்ளே இருந்து முனகல் சத்தம் மட்டுமே கேட்டது… “அச்சச்சோ மாமா வலியில முனகுறாரு போல… மாமா மாமா கதவை திறங்க நான் மேனகா வந்து இருக்கேன் மாமா…!!” என கதவை இவள் தளிர் கரத்தால் தட்ட அதுவோ அசைந்து கொடுத்து இவளுக்கு வழி விட்டது…
கடவுளே கதவை பூட்டாம கூட இருக்காரே… அந்த அளவுக்கு முடியலயா… மாமா மாமா என்று அழைத்து கொண்டே உள்ளே போனவள் அவன் கட்டிலில் கிடந்த நிலைமையை பார்த்து மூச்சே நின்று விட்டது… முழுமையாக வளர்ந்த ஆண் அவன் தலை கை கால் என கட்டு போட்டு வலியில் உடலை குறுக்கி கொண்டு குழந்தையை போல் கிடந்து அனத்தி கொண்டு இருந்தான்…
அந்நிலையில சீராளனை பார்த்தவளுக்கு அவனை இப்படி தவிக்க விட்டுட்டு தான் மட்டும் கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் திருமணத்தை செய்து கொள்ள போனது பெரும் சுயநலமாக தெரிந்தது…கூடவே அவள் செய்யாமல் செய்த தவறும் அதற்கு காரணம் என்கிற கழிவிரக்கம் தோன்ற கதறி விட்டாள் பெண்ணவள்…
மாமா என்னை மன்னிச்சுடுங்க… உங்க நிலைமைக்கு நான் தான் காரணம் இந்த பாவீய மன்னிச்சுடுங்க மாமா என அவனருகில் மடிந்து உட்கார்ந்து அவனிடம் பாவ மன்னிப்பு கேட்டாள் கண்ணீர் வழிய…
வலியின் பிடியிலும் உண்ணாத சோர்விலும் இருந்த சீராளனுக்கு மேனகையின் குரல் கிணற்றில் இருந்து கத்துவது போல் தெளிவில்லாமல் ஒலித்தது… “ம்ம்ம் ம்ம்மா ம்மாஆ பசி…க்குதே வலிக்குதே…ம்ம்மாஆ என அவன் வாய் வலியில் அனத்தி கொண்டு இருக்க…
அவன் நிலையை உணர்ந்து பதறியவள்… அவசரமாக சென்று பால் கஞ்சியை வைத்து எடுத்து வந்தவள் அவனது அனாதரவான நிலையை கண்டு அவனை தாயாக மடித் தாங்கியவள் சீராளன் தலையை தன் மார்பில் சாய்த்து கஞ்சியை புகட்ட… பஞ்சத்தில் பசித்து கிடந்தவன் போல் லபக்கு லபக்கு என்று விழுங்கினான்… கைகள் சீராளனின் தேவைகளை பூர்த்தி செய்தாலும் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே தான் இருந்தது…
வயிற்றுக்கு சிறு ஆகாரம் சென்றதும் கொஞ்சம் கொஞ்சமாக சுயம் மீண்ட சீராளன் நெஞ்சில் சொட்டு சொட்டாக வழிந்த கண்ணீரை கேள்வியாக பார்த்தவன் பின்பே தான் ஒரு பெண்ணின் மார்பில் படுத்து இருக்கிறோம் என்பதை உணர்ந்து தன்னிச்சையாக சடார் என விலகியவனுக்கு அது அவன் அக்கா மகள் மேனகை என்று தெரிந்ததும்… கனிவு வந்து ஒட்டிக்கொண்டது…
தங்கப்புள்ள இந்நேரத்துல நீ எங்கடா இங்க… ஓ மாமனுக்கு அடிபட்டு இருக்குனு உன் அம்மா சொல்லுச்சா… ஆமா அக்கா எங்க வெளிய இருக்காளா… என தேடியவனுக்கு… எப்படி சொல்லுவாள்… அவன் தமக்கைக்கு இவன் ஒருவன் இருக்கிறான் என்கிற நினைப்பே இல்லை என்று எனவே உதடு கடித்து கதறலை அடக்கியவள்… மெல்ல படுக்கையை விட்டு எழுந்து நின்று… சீராளன் காலில் தடாலடியாக விழுந்து கதறிட…
தங்க புள்ள என்னடா ஆச்சு ஏன்த்தா அழுவுற என பதறி விலகியவன்… மேனகையை தூக்க முடியாமல் எழுப்ப… கண்ணீருடன் அவனை ஏறிட்டவள்… நடந்த சம்பவம் அனைத்தையும் அவனிடம் ஒன்று விடாமல் கூறிட… அதை பொறுமையாக கேட்டவன்…
கண்களை இறுக மூடியவன் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை… இன்று காலையில் குடிப்பதற்காக மதுபான கடைக்கு சென்றவன் வழியில் ரதியை குடும்ப சமேதமாக பார்த்தவன் அங்கேயே செயல் இழந்து நின்றான்…
ரதியும் சீராளனை பார்த்த அடையாளமாக அவள் கண்களில் எள்ளலும் இதழ்களில் ஏளனமும் குடிப்புக… நீ இவ்வளவு தானா உன்ன விட்டு ஓடி போய் நான் சந்தோஷமா இருக்கிறேன் பார்த்தியா… என்று சொல்லாமல் சொல்லியது அவள் செயல்கள் அனைத்தும்…
அதில் எங்கோ அவன் தோற்று விட்ட உணர்வு ஆண் என்பவனை கொல்லாமல் கொன்று புதைக்க… துரோகி அவளே நல்லா வாழும் போது நான் ஏன்டா குடிச்சிட்டு சாகணும் இன்னையோட இந்த குடியை விட்டுட்டு அவ முன்னாடி நானும் நல்லா வாழ்ந்து காட்டுறேன் என நினைத்தவனுக்கு தோற்றுவிட்ட வெறியேற கடைசி நாள் என்று மொத்தமாக வாங்கி ஊற்றி குடித்து விட்டு வண்டியை ஓட்டி சென்றதால் அல்லவா விபத்து நேர்ந்தது…
வளர்ந்து கெட்டவன் நானே முடிந்ததை நினைத்து முட்டாள்தனமாக தன் வாழ்க்கையையே கெடுத்து கொண்டேன் எனக்கே காலம் கடந்து தான் ஞானோதயம் பிறந்து இருக்கு அவள் என்ன செய்வாள் சிறுப் பெண் அவளுடைய அறியாமையை பயன்படுத்தி ஓடி போன அந்த ஓடுகாலி சிறுக்கிய விட்டாச்சு… இனி இவள் மேல குற்றம் சொல்லி என்ன பயன் என நினைத்துக் கண்ணை திறந்தவன் முன் தவறு செய்து விட்டு தவிக்கும் குழந்தையை போல் மேனகை இருக்க…
நடந்தது என்னவோ நடந்து போச்சு புள்ள… நீ வருத்தபட ஒன்னுமே இல்லை… நீ அன்னைக்கு சொல்லி இருந்தாலும் எதுவும் மாறி இருக்காது… ஓடி போகணும்னு முடிவெடுத்த நாயை என்ன தான் நாம சங்கிலி போட்டு கட்டிவச்சாலும் அது ஒரு நாள் அத்துக்கிட்டு போயே தீரும்… அவளை சாக்கடைனு தெரியாம சந்தனமா பூஜிக்க நினைச்ச எனக்கு இதுவும் தேவை இதுக்கு மேலையும் தேவைதான் தாயீ நீ கலங்காமல் வீட்டுக்கு போ மாமனுக்கு தங்க புள்ள மேல எந்த வருத்தமும் இல்லை… போத்தா அப்புறம் உன் ஆத்தா உன்னை இங்க பார்த்தா பத்து விளக்கமாறு பிஞ்சு போகும்… கல்யாண பொண்ணுன்னு கூட பார்க்காது… மொதல்ல இந்த நேரத்துல நீ தனியா இங்க வந்திருக்க கூடாது சீக்கிரம் போ யாரும் பார்த்தா தப்பா நினைக்கறதுக்கு முன்ன இங்கிருந்து போயிடு புள்ள…என்றவன் சக்தி எல்லாம் வடிந்துவிட்டது போல் உணர்த்தவன் உள்ளே சென்று ஓய்வாக படுக்க…
மேனகை அந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்க கையை தூக்கி அவள் முகத்தை கேள்வியாக பார்க்க…
நா…நான் எங்கேயும் போக மாட்டேன் மாமா…உங்க வீட்ல உங்க கூட தான் காலம் முழுக்க இருக்க போறேன்…
என்ன பேசுற புள்ள அதெல்லாம் சரிவராது நாளைக்கு கண்ணாலத்தை வச்சுக்கிட்டு நீ என்ன உளறிட்டு இருக்க ஒழுங்கா வீட்டுக்கு போய் சேரு இல்லன்னா பல்லு பேர்ந்திடும் என மேனகையை மிரட்டி அனுப்பி வைக்க பார்க்க…
அவன் போட்ட சத்தத்தில் அவள் பயந்தாலும் “நீங்க அடிச்சாலும் சரி மிதிச்சாலும் சரி நான் உங்கள தான் கல்யாணம் பண்ணிப்பேன்… உங்க கூட தான் காலம் பூரா வாழ விரும்புறேன் ப்ளீஸ் மாமா என்னை எங்கேயும் போக சொல்லாதே…!!” என பயத்தின் ஊடே திடமாக சொல்லவும் மேனகையை தேடிக் கொண்டு தையல்நாயகி வரும் சத்தமும் கேட்க…
நடு நடுங்கி விட்டாள் பேதை…
தமக்கையின் சத்தம் கேட்டு நிம்மதி அடைந்த சீராளன்… “இந்த பாரு புள்ள உன் ஆத்தா உன்ன தேடி வந்துட்டு இருக்கா… அவளுக்கு மட்டும் நீ எங்க இருந்தேன்னு தெரிஞ்சது உன்ன கொண்டு போய் போட்டுருவா… சத்தம் தெரியாம எப்படி வந்தியோ அப்படியே திரும்ப போயிடு அதுதான் உனக்கு நல்லது… இல்லாட்டி உங்க ஆத்தாவ கூப்பிட்டு உள்ள விட்டுருவேன்… அப்புறம் உன் பாடு உங்க ஆத்தா பாடு சொல்லிப்புட்டேன்…
முடியாது மாமா ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோங்க… என்னால உங்களை இந்த நிலைமையில விட்டுட்டு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ முடியாது மாமா என்னோட குற்றயுணர்வே என்னை கொன்னுடும்… உங்க வாழ்க்கைய கெடுத்துட்டு என்னால மட்டும் எப்படி நிம்மதியா வாழ முடியும் சொல்லுங்க… ப்ளீஸ் மாமா என்னை போக சொல்லாத… என்ன கட்டிக்கோங்க நான் காலம் பூரா உங்கள வச்சு பார்த்துக்குவேன் என கெஞ்சி நின்றாள் பேதை…
செவிட்டு வாக்குல அப்படியே அரைஞ்சு போட போறேன் புள்ள… கண்டதை நினைச்சு உளறிட்டு உன் வாழ்க்கைய கெடுத்துக்காத உன் வயசு என்ன?? என் வயசு என்ன??? சைக் நினைச்சாலே கூசுது புத்தி போகுது பாரு உனக்கு போடி வெளியங்குறேன் என கத்தியபடி மேனகையை வெளியே தள்ள பார்க்கவும் தையல் நாயகி அவர்களை நெருங்கும் தூரத்தில் இருக்கவும்…
சீராளன் முரட்டு பிடியில் இருந்து கெஞ்சி கொண்டு இருந்த மேனகையோ… சட்டென்று அவன் பிடியிலிருந்து நழுவி கதவை அடைத்து விட்டு உள்ளே விரைந்தவள்…
மாமா என்னை வெளியே தள்ள பாக்காத… எல்லாம் நீ கட்டிக்க வேண்டிய வயசுதான்… இல்லனா எனக்கு கல்யாணம் பண்ணுவாங்களா சொல்லு… ஏன் மாமா என்னை புரிஞ்சுக்காம பேசுறீங்க…நான் இங்க இருந்து வெளியே போனா ஒன்னும் உன் பொண்டாட்டியா போனும் இல்ல பொணமா போனும் என வைராக்கியத்துடன் சொல்லியவள்… கடகடவென்று அணிந்திருந்த ஆடைகள் அத்தனையும் அவள் அவிழ்த்து எறிய தொடங்கிட…
அவள் செயலில் அதிர்ந்து போய் வேறு புறம் திரும்பிக் கொண்டவனுக்கு மேனகையின் இச்செயல் மூலம் ஆத்திரம் தலைக்கேற அவளை அடிக்க திரும்பியவன்… அவன் முன்னால் நிர்வாணக் கோலத்தில் நின்றவளை கண்டு கண்களில் தீப்பொறி பட்டது போல் துடித்து திரும்பிக்கொள்ளவும் தையல்நாயகி அவன் வீட்டு கதவை தட்டவும் சரியாக இருந்தது…
அவசரமாக கதவை திறக்க போனவனை தடுத்தது மேனகையின் குரல்… “ மாமா நீ எனக்கு மட்டும் தான் வேணும் உன் முன்னாடி எல்லாத்தையும் துறந்துட்டு நிக்கிறேன்… நீ மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்கலனா சத்தியமா சொல்றேன் இங்கேயே செத்து போவேன் என பிடிவாதம் பிடித்தவளை கொன்று போட்டால் என்ன என்று கூட தோன்றியது…
வெளியிலோ அவன் தமக்கை உள்ளே அவள் பெண் அவனை திருமணம் செய்து தீருவேன் என்று உறுதியாக நிற்கையில் என்ன செய்ய முடியும் அவனால்… நீண்ட பெரு மூச்சு ஒன்றை எடுத்தவன்… தான் அணிந்து இருந்த சட்டையை கழட்டி அவளை பார்க்காமல் அவள் பக்கம் எரிந்தவன்… “உனக்கு மனசுல கொஞ்சமாவது ஈரம் இருந்தா தயவு செஞ்சு அங்க என்ன நடந்தாலும் நீ வாய திறந்து எதையும் சொல்லக்கூடாது இது என் மேல சத்தியம்…!!” என்று விட்டு வெளியே போக அவன் பின்னால் அரைகுறையாக வந்த மேனகையை பார்த்துவிட்டு தையல் நாயகி கூப்பாடு போட ஊர் ஒன்று கூடியது…
அதற்குப் பிறகு நடந்த அனைத்துமே விதியின் வசத்தால் நடந்தேறியது என்றால் அது மிகையல்ல…
வெளியே போன தன் கணவன் இதோ வருவான் அதோ வருவான் என காத்திருக்க அவளை வருந்தவிட்டு வந்தான் சீராளன்… தலைக்கால் புரியாத போதையில் தள்ளாடியவனை அழைத்து வந்தான் அழகு சுந்தரம்… வாசல் வரை தாங்கி வந்தவன் மேனகையை கண்டதும் விரசமாக புன்னகைக்க அருவெறுப்பு உற்றாள்…
மாமா என்ன இது இப்படி குடிச்சிட்டு வந்து இருக்கீங்க வாங்க என சீராளனை தாங்க போக….
ஏய் நீ தொடாதடீ ராட்சசி… நீ எனக்கு வேணாம் போ… என்ன தாங்க என் நண்பன் இதோ இருக்கான் ஆமாம் உன் பேர் என்ன நண்பா ஹான் சுந்தரம் அழகு சுந்தரம் இருக்கான் இனி நீ வேணாம் போடி ராட்சசி என மேனகையை திகைக்க விட்டு… ஒரு நச்சுப் பாம்பை நம்பி வீட்டுக்குள் விட்டு பால் வார்த்ததன் பலன்… அது விஷத்தை கக்கும் போது தெரியும் என்பதை மறந்து போனான்… அந்த மதிக்கெட்ட மடையன்…