ATM Tamil Romantic Novels

உயிர் வரை பாயாதே பைங்கிளி -31

31

 

 கிரிதரன் – திலோத்தமா திருமணம் சடங்குகள் கோலாகலமாக நடைபெற்றது… அவர்களது திருமணத்தில் சீராளன் விழுந்து விழுந்து வேலை செய்து கொண்டிருந்தான்…

 

 மச்சான் திருமணம் என்றால் சும்மாவா…அதாவது மச்சான் ஆகி போன மாப்பிள்ளையின் திருமணத்தை உற்சாகமாக எடுத்து கட்டி செய்துக் கொண்டு இருந்தான்…அப்படியாவது அவன் மனைவி அவனை மன்னித்து விட மாட்டாளா என்று தான்… 

 

இப்பொழுது எல்லாம் முழுமையாக அவன் திருந்தி விட்டான்… ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்… ஒரு அதிர்ச்சியான நிகழ்வு…அவனை மொத்தமாக மாற்றி இருந்தது…தாடி இல்லை பழைய அழுக்கு உடை இல்லை…உடலை பேணி பாதுகாக்கிறான்…குடி சுத்தமாக இல்லவே இல்லை… அதை கண்ணால் பார்ப்பது கூட பாவம் என்றால் பார்த்துக்கோங்களேன்… அதற்கு பதிலாக தான் பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என்றால் நம்ப முடிகிறதா ஆனால் அதுதான் மெய்…

 

 சதாகாலமும் தன் பொண்டாட்டியிடம் மன்னிப்பு கேட்டு அவள் புடவை முந்தானையை பிடித்துக் கொண்டு சுற்றுகிறான்… மேனகைக்கு பிடித்ததெல்லாம் இவனுக்கும் பிடிக்கும்… அவளுக்கு ஆகாதது என்றால் அவனுக்கு ஆகாததே… அவளுக்காக வட்டிக்கு விடுவதை நிறுத்தி விடுவதாக கூற… “தெரிஞ்ச தொழில விட்டுட்டு சார் என்ன திருவோடு ஏந்த போறாராமா… இவர் திருந்திட்டா மட்டும் ஏற்கனவே கொடுத்து வச்ச காசு எல்லாம் தன்னால பறந்து வந்து மடில விழப் போகுதோ… மனசாட்சியோட செய்யுற எந்த தொழிலும் தப்பில்ல… என்று விட்டு போக… அன்று முதல் மேனகா பைனான்ஸ் என்று ஆரம்பித்து விவசாயிகளுக்கு சிறு குறு பயிர் கடன் வழங்கி வருகிறான்…

 

 வசூல் பண்ணும் பணத்தை தவறாமல் மனைவியிடம் ஒப்படைத்து விடுகிறான்… அவளும் அதில் ஒரு பகுதியை வைப்பு நிதியாக எடுத்து வைத்து விட்டு மீதியை தேவைக்கு தக்கவாறு பயன்படுத்தி நல்ல மனைவியாக கடமையை ஆற்றினாள்… திறம்பட குடும்ப நிர்வாகத்தை பொறுப்பேற்று நடத்தும் வரை எல்லாம் சரிதான்… ஆனால் கணவனை மன்னித்து அவனோட வாழ்க்கை ஆரம்பிக்க மேனகை தயங்குவது ஏன்…?? பின்ன அவன் செய்த தவறு எளிதாக மன்னிக்க கூடியது இல்லையே…??

 

 எனில் இவர்களின் வாழ்வு நிலை தான் என்ன…?? இவர்கள் ஒன்று சேர்வார்களா மாட்டார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

 

ஏன்மா நீ இவர்களை எப்ப சேர்த்து வைக்கிறது… நாங்க எப்ப படிக்கிறது… அடுத்த கதை போகிறதா வேணாமா சட்டு புட்டுனு ஒரு முடிவ சொல்லுமா…( ஆத்தி என்ன இப்படி கிளம்பிட்டாய்ங்க) இந்தா இப்போவே சேர்த்து வைக்கிறேன்…( இன்னா டெக்னிக்கா அடிக்கிறாய்ங்க ) 

 

கிரிதரன் திருமணத்தில் அலைந்து திரிந்து வியர்வை சிந்த வேலை செய்து கொண்டு இருந்தான் சீராளன்… தீடீரென அவன் முன்னால் வந்த மனைவியின் முகத்தை புருவம் சுருக்கி பார்க்க…

 

அவளோ கையில் கொண்டு வந்த பழச்சாறு அவனுக்கு புகட்டாத குறையாக வாயில் வைத்தாள்… “மாமா இந்த வேலையெல்லாம் கூட நீங்க தான் செய்யணுமா அதுக்கு தான் வேலை செய்ய ஆளுங்க இருக்காங்கல்ல… உங்களுக்கு என்ன ராஜா மாதிரி கால் மேல கால் போட்டு அவங்களை வேலை வாங்காம இப்படி நீங்களே எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்யுறிங்களே…!” மாமா என சலிப்பாக சொல்ல…

 

 “அதுக்கு என்ன புள்ள இது என் மாப்பிளையோட கல்யாணம்… வேலையாட்களை வைத்து வேலை வாங்குவதற்கு சொந்தக்காரங்கன்னு அப்புறம் நாம எதுக்காண்டி இருக்கோம்… காசு பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் புள்ள… உண்மையான சொத்து பத்தே நாலு சொந்தக்காரங்க நமக்காக இருக்குறது தான் புள்ள… என்றவனோ சலுகையாக ஜூஸை கையில் வாங்காமல் மேனகையின் கையாலே குடித்தான்…  

 

“அச்சோ மாமா நீங்க எப்பவுமே இப்படித்தான்… உங்க நல்ல மனசு யாருக்கு வரும்…சொன்னாலும் கேக்க மாட்டீங்க… பாருங்க எப்படி முத்து முத்தா வியர்த்து போயிருக்கு…!!” என்றவள் தன் புடவை முந்தானையால் சீராளன் முகத்தை துடைத்து எடுக்க…

 

“சேலைக் கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு கண்டதுண்டா…?” என்கிற பாடல் வரிகளின் அர்த்தம் அவனுக்கு அப்போது தான் புரிந்தது… 

 

 மனைவியின் கவனப்பில் சற்றே சறுக்கிய சீராளன்… அவளின் கரிசனை மெய்யா?? பொய்யா??? அவனை முழுதாக மன்னித்து விட்டாளா இல்லையா என எதுவும் தெரியாது ஆனால் அவள் கையில் உருகி குலைய ஆசை அதில் மட்டும் எவ்வித ஐயமும் எதுவும் இல்லை…

 

 “குப்பையில் விழுந்தாலும் மாணிக்கத்துக்கு மௌஸ் அதிகம்… அது போல தான் மாமா நீங்களும்… கண்ட கழுதைக்கு உங்க அருமை தெரியாம இருக்கலாம்… ஆனால் எனக்கு நீங்க அந்த கோபுர உச்சியில இருக்கிற சாமி மாதிரி… உங்களுக்கு வியர்த்தா எனக்கு நெஞ்சு நோகுது மாமா என இழுவையாக இழுத்து சொல்ல…

 

 “ஆத்தி என்ன இழுவை ஜாஸ்தியா இருக்கு… இவ இப்படி எல்லாம் நம்ம கிட்ட பேசுற ஆள் இல்லையே… அப்போ இது நமக்கு இல்ல வேற யாருக்கோ யாரா இருக்கும் என்ற சீராளன் சுற்றி கண்களை சுழல விட…இவளா??? என முகத்தை சுருக்கினான் சீராளன்…

 

 சற்று தூரத்தில் நின்று ரதி இவர்கள் இருவரின் நெருக்கத்தை தான் பார்த்து புகைந்து கொண்டிருந்தாள்… பின்னே ஒரு வேலை வெட்டி இல்லாதவனை கல்யாணம் பண்ணி ரெண்டு பிள்ளைகள் ஆயிற்று… போதாத குறைக்கு அதை கொண்டுவா இதை கொண்டு வா என்று அம்மா வீட்டுக்கு அடித்து விரட்டி விடுகிறான்… இங்கோ நீயே தான ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டே அப்ப நீயே அனுபவி என்கிட்ட அவ்வளவு காசு இல்ல… என்று பெற்றவர்களும் கைவிரித்து விட… கடைசியில் கணக்கெழுதும் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள் அதுவும் மாதம் 2500 ரூபாய் மட்டுமே என்கிற சம்பளத்தில் அடிமட்டத்தனமாக… 

 

 அப்படி இருக்க சிலுக்கு சட்டை புலி நகம் பதித்த தங்கச் சங்கிலி என்று செழிப்பாக வளம் வரும் சீராளனை பார்க்க கைக்கு கிடைத்த அழியா பொக்கிஷத்தை இழந்துவிட்ட பரிதவிப்பு என்றால்… அவனை அழகு சிலையான மேனகையுடன் சேர்த்து பார்ப்பது பொறாமை புகைச்சலை கிளப்பிவிட்டது…

 

 அதைப் பற்றி எல்லாம் அவர்கள் இருவருக்கும் கவலை இல்லை போல… பின்னே இங்கு நல்லவர்கள் எண்ணமே பலிப்பது அரிதாகிவிடின் இவர்கள் போல் உள்ளவர்கள் புகைச்சல் அவர்களை என்ன செய்துவிடும்… அவர்கள் உறவு நிலையில் உறுதியாக இருக்கும் பட்சத்தில்… எதுவும் பலிக்காதே…

 

என்ன மாமா உங்க எஃக்ஸ பார்த்ததும் பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சா? ஏன்டா என்னை கல்யாணம் பண்ணிட்டேன்னு ஃபீல் பண்றீங்களா??? என சீராளன் பார்வை ரதியை விட்டு மீளாமல் இருப்பதை கண்டு பொங்கி வந்த ஆத்திரத்தில் கேட்டு வைக்க…

 

“இந்தா புள்ள நான் எப்போ அப்படி நினைச்சேன்… அந்த பொண்ணை யாரு பார்த்தா அங்க பாரு உன்கூட வேலை பார்க்கிற சினேகித பிள்ளைங்க உன்னை தேடி வருது அதுங்கள தான் பார்த்தேன்…!!” என சத்தியம் செய்யாத குறையாக கூற…

 

அவன் காட்டிய திசையில் நிஜமாகவே மேனகையின் தோழிகள் வந்து கொண்டு இருந்தனர்… ஆனால் அதை அப்படியே எடுத்து கொண்டால் பொண்டாட்டி போஸ்ட்டுக்கு ஒரு மதிப்பு இல்லையே…

 

“க்கும் நம்பிட்டேன் நம்பிட்டேன்… கூட இருக்கும் போதே குறு குறுன்னு பார்க்கிறீங்க… உங்களை தனியா விட்டு போனா தனி குடித்தனமே வச்சிடுவீங்க போலயே…!!” என மேனகை ஆத்திரமாக பேச 

 

“இந்தாரு புள்ள அசிங்கமா பேசாத எப்போ அந்த பொண்ணு என்ன வேணாம்னு தூக்கி போட்டு போச்சா அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்… அதுவே வந்தாலும் எனக்கு வேண்டாம்ன்னு விரும்பாத பொண்ண கட்டாயப் படுத்துற அளவுக்கு நான் ரோசக்கெட்ட பயல் இல்லை… என மீசையை திருகிக் கொண்டு அழுத்தமாக கூற 

 

 அப்போ எதுக்கு குடிச்சிட்டு தேவதாஸ் கணக்கா “வாழ்வே மாயம்னு” சுத்திட்டு கிடந்திரு… என நக்கலாக மேனகை கேட்க…

 

 “அது இந்த ஈன பயலுக பேச்சைக் கேட்டு புத்தி கெட்டு போய் பண்ணிப்புட்டேன்… அதுக்கு தான் உன் கால்ல விழுந்து கோடி முறை மன்னிப்பு கேட்டு புட்டேன்ல அப்புறம் ஏண்டி அதையே சொல்லி சொல்லி காட்டுற… என்றவனுக்கு சலிப்பாக இருந்தது… எத்தனை தடவை தான் மன்னிப்பு கேட்பது என்று 

 

“ஐயோ எப்பா நான் இல்லாததையா சொன்னேன் நடந்ததை தான சொன்னேன்… திரும்பவும் எவன் பேச்சையும் கேட்டு புத்தி கெட்டு போய்ட கூடாதுல அதுக்கு தான் ஒரு எச்சரிக்கை போல சொன்னேன் அதுக்கே சலிச்சுகிட்டா எப்படி… இன்னும் வாழ்க்கை பூரா இருக்கே… வச்சி செய்வேன்…!” என மேனகை உதட்டை சுழித்து பேச…

 

நல்ல சதைப்பற்றான தக்காளி பழம் போல் அவள் இதழ் இருக்க,.. சறுக்கி போனான் அவள் இதழ் அசைவில் சீராளன் …

 

 சுற்றும் முற்றும் பார்த்தவன் மேனகையை மறைவாக இழுத்தவன்…

 

“ நீ என்னை எப்படி வச்சு செஞ்சாலும் எனக்கு சம்மதம் தான் புள்ள… ஏதாவது செய்டி… உன் கையால நான் சாக கூட தயார் தான்… என்னால முடியல புள்ள முன்ன எப்படியோ ஆனா இப்போ எல்லாம் உன் முகத்தை பார்க்காமல் எனக்கு நாளே விடிய மாட்டேங்குது… நீ சிரிச்சா எனக்கும் சிரிப்பு வருது நீ அழுதா எனக்கும் அழுக வருது… சேலை முந்தானையை போர்த்திகிட்டு தூங்கணும்னு ஏக்கமா இருக்கு… எனக்கு தெரியும் நான் செஞ்சது மன்னிக்க முடியாத தப்புதான் ஆனா சத்தியமா சொல்றேன் புள்ள நீ மட்டும் இல்லாட்டி சீராளன் ஒருத்தன் இருந்தான் என்கிறத்துக்கு அடையாளமே இல்லாம போயிருக்கும்… எனக்கு எல்லாமே நீ தான் புள்ள தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடு… என கண்ணீர் மல்க கெஞ்சினான் சீராளன்…

 

 தன் கணவனின் கண்ணீரைத் துடைத்து விட்டவள் அவனுக்கு பதில் ஏதும் சொல்லாது அங்கிருந்து கிளம்ப…

 

 என்ன மன்னிச்சிட்டியா புள்ள என்று ஏக்கமாக கேட்டான் சீராளன்…

 

 அவன் குரலில் அடித்தது போல் நின்றவள்…”தெரியல ஆனா மறக்கமுயற்சி பண்றேன்…!!” எனத் திரும்பிப் பாராமல் அங்கிருந்து சென்று விட்டாள்…

 

இவ்வளவு நேரம் அவனை கொஞ்சியது என்ன இப்படி தவிக்க விட்டு போறது என்ன…?? ஒரு நேரம் நெருக்கமாகவும் சில நேரம் தள்ளியே இருக்கும் மனைவியை நினைத்து ஐய்ய தலையே பிச்சிக்குது பா சீராளனுக்கு… பாவம் பயபுள்ள குடும்பங்கிற கேட்க்குள்ள இப்போது தான் வந்து இருக்காப்படி… இதுக்கே இப்படினா இன்னும் போக போக எம்புட்டு பார்க்க வேண்டி இருக்கு… இதுக்கே இப்படி ஃபில் பண்ணா எப்படி என்ன மக்களே நான் சொல்றது சரி தான?? 

 

 மண்டைய பிச்சுக்க வைப்பதால் அவளுக்கு மனைவி என்றும்… என்ன சொன்னாலும் கல்லாகவே இருப்பதால் அவனை கணவன் என்றும்… இவர்கள் இருவரும் கூடி கும்மி அடிப்பதே குடும்பம் என்றும்…அன்று சொல்லி வைத்தார்களோ… யான் அறியேன் பராபரமே…

 

உங்களுக்கு தெரிஞ்ச கொஞ்சம் சொல்லிட்டு போங்க செல்லம்ஸ் 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top