8 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
காலையில் வழக்கம் போல வீரா தான் முதலில் விழித்தான். தன்னை அணைத்து படுத்திருந்த நிகிதாவை கண்டு எரிச்சல் வந்தது.
“ச்சே..இவளுக்கு இதே வேலையா போச்சு”
எப்பவும் போல தள்ளிவிட இன்று மனசு இடம் கொடுக்கவில்லை. மெல்ல அவளை நகர்த்தி படுக்க வைத்துவிட்டு எழுந்து சென்று விட்டான்.
மொபைலில் அடித்த அலாரத்தில் அடித்து பிடித்து எழுந்தாள் நிகிதா.நல்ல உறக்கத்தில் இருந்ததால் சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை. பிறகே பாட்டி நேரமாக எழுந்து தயராகி வர சொன்னதும் தான் அலாரம் வைத்ததும் ஞாபகம் வந்தது. மணியைப் பார்க்க ஆறு என காட்டியது.
இவ்வளவு நேரமாகவா எழுந்திருக்கனும். கொஞ்ச நேரம் தூங்கலாமா.. என நினைத்தவள் வேண்டாம் அப்புறம் லேட்டாகி விடும் என மனதை மாற்றி எழுந்தவள் வீராவை தேடினாள்.
அவன் அறையில் இல்லை எனவும் எப்படி தானோ.. தினமும் சொல்லி வச்ச மாதிரி அலராம் கூட இல்லாமல் நேரமா எழுந்திருக்காங்களோ.. என நினைத்தாள்.
இவள் எழுந்து குளித்து தயராகி கீழே சென்ற போது… வீரா தனது ஜாகிங் முடித்து வந்திருந்தான்.. வியர்வையில் அவனுடைய டீசர்ட் தொப்பலாக நனைத்திருக்க… தலைமுடி கலைந்து.. நெற்றியில் சில வியர்வை துளிகள் பூத்திருக்க…அதை புறங்கையால் துடைத்தவாறு உள்ளே வந்தவனை கண்டு..
பார்த்தவுடன் சொக்கிப் போனாள்.அழகன் தான்டா நீ என மனதோடு கொஞ்சி கொண்டாள்.
வீரா வந்தவன் பேப்பர் படித்து கொண்டு இருந்தான். பாட்டி கிச்சனில் இருக்க..அங்கு தாத்தாவிற்கு தானே தன் கையால் டீ போட்டு கொண்டு இருந்தார்.
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. வேலைக்காரர்கள் பயந்து ஒதுங்கி நிற்க.. மஞ்சள் பூசிய முகத்தில் கொஞ்சம் பெரியதாக குங்கும பொட்டு வைத்து.. கொண்டையை சுற்றி பூ வைத்து.. பார்க்க கம்பீரமாக.. ராஜகளையாக.. நிமிர்வாக.. ஆளுமை உணர்வுடன்.. இருந்த பாட்டியை கண்டு அதியசித்து போனாள். இந்த வயதிலும் என்ன தேஜஸ் என வியந்து தான் பார்த்து கொண்டு இருந்தாள்.
“என்ன பார்க்கிற.. என்னடா வேலைக்கார்கள் இருக்க.. நான் வேலை செய்யறேனுனா..”
ஆம் என இவள் தலையாட்ட…
“என்ன தான் வேலைக்காரர்கள் இருந்தாலும் சிலது எல்லாம் என் கையால உங்க தாத்தாவுக்கு செஞ்சு கொடுத்தா.. அவரு சந்தோஷப்படுவாரு… அவர் சந்தோஷத்தில் எனக்கு ஒரு மனதிருப்தி..” என அவர் அதை சொல்லும் போதே அவர் முகத்தில் அவ்வளவு மலர்ச்சி..
இந்த வயதிலும் இப்படி ஒரு காதலா.. என ஆச்சரியப்பட்டாள். அவரின் மலர்ச்சி கண்டு இவள் முகமும் புன்னகை பூசி கொள்ள..
சிரித்த முகமாக இருந்தவளை பார்த்து…
“என்ன என்னைய பார்த்து சிரிச்சிகிட்டு இருக்க… இந்தா இந்த டீயை வீராவுக்கு கொண்டு போய் குடு.. அதுக்கு முன்ன ப்ரிட்ஜில் பூ இருக்கு எடுத்து வை.. தினமும் காலையிலும் சாயங்காலமும் பூ வச்சுக்கனும். தினதினம் சொல்லிட்டு இருக்கமாட்டேன் புரிஞ்சுதா..”என்றார் மிரட்டும் தொனியில்..
எப்ப பாட்டி திட்டினாலோ மிரட்டினாலோ கோபமும் எரிச்சலும் கொள்பவள்.. இன்று சிரித்தபடி தலையாட்டினாள்.எல்லாம் புருஷன் நடத்திய காதல் பாடத்தின் எபெக்ட்..
பூவை சூடிக் கொண்டு டீயை எடுக்க வந்தவள் பாட்டி டீகப்பை எடுத்து வருவதை கண்டு..
“கொடுங்க கீரேனீ..நான் கொண்டு வரேன்”
“எம் புருஷனுக்கு என் கையால கொடுக்கனும். உன் புருஷனுக்கும் உனக்கும் அங்க வச்சிருக்கேன் எடுத்துட்டு போ” சொல்லி சென்று விட..
இவர்களுக்கு நிகிதா எடுத்து கொண்டு செல்ல.. அதற்குள் அங்கே பாட்டி தனக்கு டீ தருவார் என வீரா பார்க்க.. அவர் கையில் இருந்தது என்னவோ இரண்டு கப் ஒன்றை தன் கணவருக்கு கொடுத்து விட்டு அவனை கண்டு கொள்ளாமல் தனக்கு ஒன்று எடுத்துக்கொண்டு கணவரின் அருகில் அமர்ந்து கொண்டார்.
வீரா பாட்டியிடம் “அம்மாச்சி..எனக்கு டீ” என்றான்.
“உம் பொண்டாட்டி கொண்டு வருவா…” என்றார் கண்டு கொள்ளாமல்..
என்னங்கடா இது எல்லாம் ஒரு புதுசா இருக்கு என நினைக்க.. சன்ன சிரிப்போடு வந்த நிகிதா வீராவின் கையில் டீயை கொடுக்க..
இவளுக்கு என்னாச்சு என ஆராய்ச்சியாக அவளை பார்த்தவாறு.. டீயை வாங்கியவன் அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் நியூஸ் பேப்ரில் மூழ்கி போனான்.
பூவையவள் முகம் வாடி போனது.
சிறிது நேரம் கழித்து ஏதோ உறுத்த…டக்கென நிமிர்ந்து பார்த்தான். எதிர் சோபாவில் அமர்ந்து அதுவரை வீராவை சைட் அடித்து கொண்டு இருந்த நிகிதா நொடியில் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டாள்.
இவ எதிர்ல உட்கார்ந்துட்டு என்ன பண்றா..என யோசித்தவன்..நம்மள சைட் அடிக்கிறாளோ.. ச்சேச்ச.. இவளுக்கு தான் நம்மள புடிக்காதுல..என.. எனக்கும் இவள புடிக்காது என தன் எண்ணப்போக்கை வெட்டி விட்டு.. மீண்டும் பேப்பரில் கவனம் செலுத்தினான்.
மீண்டும் உறுத்த.. இவன் பார்க்க.. அவள் பார்வையை திருப்ப…. மீண்டும்… மீண்டும்… இந்த விளையாட்டு கொஞ்ச நேரம் நடந்தது.
நிகிதாவை கண்டு கொண்டான் வீரா. இவளை.. பல்லை கடித்தவன்…பேப்பரை மடித்து டீப்பாய் மேல் போட்டு விட்டு விடு விடுவென தங்களது அறைக்கு சென்றுவிட்டான்.
போனவனையே.. ஏக்கமாக பார்த்து கொண்டு இருந்தாள்.
“என்ன பார்த்துகிட்டு இருக்க..போ அவனுக்கு டிரஸ் எடுத்து வை.. வேணுங்கறத கேட்டு செய் போ..”என பாட்டி சொல்ல…
ஹை சூப்பர் என சத்தமின்றி சொன்னவள் தங்கள் அறைக்கு ஓடினாள்.படாரென கதவை திறந்து கொண்டு மூச்சிரைக்க வந்து நின்றவளை தோளில் துண்டோடு குளிப்பதற்காக சென்றவன் போன் வரவும் பேசி கொண்டு இருந்தவன் புரியாத பார்வை பார்த்தான்.
போனில் பேசி கொண்டே..என்ன என்பதை போல புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க… சொக்கி போனாள் சுந்தரி.
ஒன்றுமில்லை என வேகமாக தலையாட்டியவள் அங்கிருந்த சோபாவில் நிதானமாக நடந்து சென்று அமர்ந்து கொண்டாள்.
பேசி முடித்து அலைபேசியை அணைத்து விட்டு.. இவள் மூச்சிரைக்க வந்தது என்ன.. இப்போ அன்னநடை நடந்து சென்று உட்காருவது என்ன…சம்திங் ராங்… ஏதோ சரியில்லையே தாடையை தடவி கொண்டு யோசித்தவன்..
இவ என்ன செஞ்சா நமக்கென்ன.. என தோளை குலுக்கி கொண்டு குளிக்க சென்றுவிட்டான். அவன் சென்றதும் டிரஸ்ஸிங் ரூம்க்கு சென்று அவனின் வார்ட்ரோப்பை திறந்தவள் அவன் துணிகள் பொருட்கள் எல்லாம் நேர்த்தியாக வைத்திருப்பதை பார்த்து மிஸ்டர் பெர்பெக்ட் தான் என மெச்சி கொண்டாள்.
அவனுக்கு எதை எடுத்து வைக்கலாம் எது நல்லா இருக்கும் என சிறிது நேரம் ஆராய்ச்சி செய்தவள்.. ஐவரி கலர் பேண்ட்.. லைட் வைலட் சர்ட் என எடுத்து அங்கிருந்த டேபிள் மேல் வைத்து விட்டு வந்து ஒன்றும் அறியாதவள் போல பழையபடி சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
குளித்து விட்டு வந்தவன் அங்கிருந்த உடைகளை பார்த்தும் இதெப்படி இங்கே என ஒரு நிமிடம் தான் யோசித்தான். நிகிதாவின் வேலை என புரிந்து விட..இவளை என பல்லை கடித்து கொண்டு..வேகமாக படுக்கையறைக்கு வந்தான்.
அதுவரை டிரஸ்ஸிங் அறையையே பார்த்து கொண்டு இருந்தவள்.. கதவு திறக்கவும் குனிந்து அலைபேசியை நோட்டம் விடுவது போல நடிக்க..
அதையும் அவன் கவனித்துவிட்டான். அவன் கடுப்புடன்..
“ஏய்..” என்று கத்தினான்.
“சொல்லுங்க மாமா” என்று எழுந்து நின்றாள் பவ்யமாக..
அவளின் செயல் எல்லாம் இவனுக்கு பிடிக்காமல் எரிச்சலையே தர…
“என்னடி ஓவரா நடிக்கற..எதுக்காக இதெல்லாம் செய்யற.. உனக்கு இது செட்டாகலை..” என்றான்.
அவள் எங்கே இவன் பேசுவதை கவனித்தாள். இடுப்பில் துண்டோடு துவட்டியும் துவட்டாமல் தலை முடிகளில் இருந்து சொட்டிய நீர் திவலைகள் கன்னம் காது என வழிந்து அவன் தோள்களில் இறங்கி அவன் மார்ப்பில் இறங்க.. அந்த நீர் திவலைகள் அடர்ந்த கரு கருவென இருந்த மார்பு ரோமங்களை நனைந்திருக்க.. அதிலும் அங்காங்கே நீர் திவலைகள் சொட்ட.. வெற்று மார்ப்புடன் அழகோவியமாக.. நின்று கொண்டு இருந்தவனை இன்ச் பை இன்சாக.. ரசித்து கொண்டு இருந்தாள்.
ரோமங்கள் அடர்ந்த வெற்று மார்ப்பில் முத்தமிட்ட ஞாபகங்கள் வந்து அலைகழிக்க.. மீண்டும் முத்தமிட… ரோமங்களை கைகள் கொண்டு கோதிட.. அந்த ஈர மார்ப்பில் முகம் வைத்த புரட்டி அந்த சில்லிப்பை உணர .. என அவள் ஆசை எல்லாம் எல்லை கடந்து கொண்டிருக்க..
“நிகிதா..” என அவன் கூச்சலில் உடல் தூக்கி வாரி போட நிகழ்வுக்கு திரும்பினாள்.
“கூப்பிட்டு கிட்டு இருக்கேன்.. அதை கூட கவனிக்காம நினைப்பு எல்லாம் எங்க வச்சிருக்க..”
உன்னை தான் நினைச்சிட்டு இருக்கேன் மாமா..என் வீரா மாமா.. மனதோடு கொஞ்சி கொண்டாள்.
மறுபடியுமா..இவளை..
“ஏய்..” என அழுத்தி கூப்பிட்டவன் “நீ என்னவோ பண்ணிட்டு போ.. ஆனால் என்னை வெறிச்சு.. வெறிச்சு பார்க்கறது…டீ கொடுக்கறது..சாப்பாடு போடறது.. டிரஸ் எடுத்து வைக்கறது.. இதெல்லாம் சரியில்ல…உனக்கும் எனக்கும் என்னைக்கும் செட்டாகாது.இனி இது மாதிரி வேலை எல்லாம் செய்யாதே” என்றான் அதட்டலாக…
அன்றலர்ந்த மலர் போல மலர்ந்திருந்த அவள் முகம் கூம்பி போனது. வாடிய முகத்தை கண்டும் காணாமல் சென்றுவிட்டான்.
அவனை பொறுத்தவரை இருவருக்கும் குணம், பழக்கவழக்கம், வாழ்க்கை தரம் எதிலும் ஒத்துவராது. சேர்ந்து வாழ்ந்தாலும் சரிவராது.கொஞ்ச நாள் பெரியவர்களுக்காக இருப்போம். வேறு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்து இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என முடிவு செய்திருந்தான்.
அதனால் நிகிதாவிடம் ஒதுங்கி இருக்கவே முடிவு செய்திருந்தான். அவர்களுக்குள் நடந்தது ஒரு விபத்து என்பதே வீராவின் எண்ணம்.அதற்காக வாழ்க்கையை பணயம் வைக்க தயாராக இல்லை வீரா
சுட்ட கத்திரிக்காய் போல வதங்கிய முகத்துடன் வந்து அமர்ந்தவளை பார்த்த பாட்டி அருகில் வந்து என்ன என கேட்க..அவர் தோளில் சாய்ந்து விசும்பியவாறே.. அவன் சொன்னதை சொல்லி முடிக்க..
இவனை.. என பல்லை கடித்தவர்..இவளே தளைந்து வரா… இந்த சமயம் இவன் முறுக்கிட்டு திரியறான்..என நினைத்தவர்.. தலை கோதி கொடுத்து…
“இங்க பாரு..முதல்ல நீ அவன மதிக்கல..எடுத்தெறிஞ்சு எல்லாம் பேசின.. இப்ப தான உனக்கு அவன் மேல அன்பு வந்திருக்கு..இதெப்படி அவனுக்கு தெரியும். நீ தான் சொல்லி அவனுக்கு புரிய வைக்கனும். அத விட்டுட்டு அழுதினா சரியா போயிடுமா… நீ மாறிட்டங்கறதா சொல்லாம எப்படி தெரியும் அவனுக்கு.. சொல்லு பார்க்கலாம்” என கேட்க..
அதானே அதை சொல்லாமல் அழுது என்ன பிரயோஜனம் என யோசித்தாள்.
“நீ தான் வாய் வார்த்தையிலும் செயல்லயும் உனக்கு அவன் எவ்வளவு முக்கியம் என உணர்த்தனும் போ அவனை கவனி..”
பாட்டியின் வார்த்தைகள் அவளுக்கு உள்ளும் புறமும் ஒரு நிமிர்வை தர… சட்டென தன்னை நிலைபடுத்தி கொண்டாள்.
அதே சமயம் வீரா ஆபிஸ் செல்ல தயாராகி வர…அவனை பார்த்ததும் மலர்ச்சியுடன் எழுந்து சென்றாள்.
சாப்பிட அமர்ந்தவனுக்கு தட்டை வைத்து நிகிதா பரிமாற… இவன் பாட்டியை தேட..இந்த முறை பாட்டி இவர்கள் அருகில் வரவில்லை. வீரா தன்னை பார்க்கவும் தாத்தாவிடம் பேசுவது போல திரும்பி அமர்ந்து கொண்டார்.
அவனுக்கு புரிந்துவிட்டது அம்மாச்சியின் தூண்டுதலின் பேரில் இவள் இவ்வாறு செய்கிறாள் என…. ஆனால் இவள் அம்மாச்சி பேச்சை கேட்கமாட்டாளே.. என்றவாறே அவளை பார்த்து முறைக்க..
அவளோ அவனின் முறைப்பை சட்டை செய்யாமல்.. அவனுக்கு இட்லி வைத்து சாம்பார் ஊற்ற..
சாப்பிட பிடிக்காமல்.. தட்டை தள்ளி விட்டு எழுந்து கொள்ள..ஒரு நொடி அவனின் கோபத்தில் பயந்தவள்..மறு நொடி பாட்டியின் உபதேசங்கள் ஞாபகம் வர..
வீராவின் கையை பிடித்தவள் “உட்காருங்க மாமா.. சாப்பாட்டுல கோபத்தை காமிக்காதிங்க.. இனி இப்படி தான் நான் தான் உங்களுக்கு எல்லாம் செய்வேன்.பழகிங்க..”
“ஏய்..கையை விடுடி..”என கோபத்தை அடக்கி கொண்டு மெதுவாக சீற..
“சில்..சில்..சில்.. கோபப்படாம சாப்பிடுங்க..”
சாப்பிடாமல் நகரப் பார்க்கவும்..நிகிதா தட்டை கையில் எடுத்தவள் “நான் ஊட்டி விடனும்னு ஆசையா இருக்கா.. அப்ப சரி நானே ஊட்டிவிடறேன்” இட்லியை ஒரு விள்ளை பிட்டு எடுத்து சாம்பாரில் தோய்த்து ஊட்ட போக..
அவள் கையை தட்டி விட்டு அவளிடம் இருந்து தட்டை பிடுங்கி… அமர்ந்து உண்ண ஆரம்பித்தான் அவள் பரிமாற… சாப்பிட்டு கை கழுவ அவன் எழுந்து செல்லவும்..
சத்தமில்லாமல் “ஓ..ஓ..ஓ..” என்றாள் ராகமாக.. அது அவன் காதுகளில் விழுந்திட.. திரும்பி அவளை பார்த்து முறைத்தான்.
அவன் கண்டு கொண்டான் என கண்களை சுருக்கி.. நுனி நாக்கை கடித்து கொண்டு நெற்றியில் லேசாக அடித்து கொண்டு திரும்பி நின்று கொண்டாள்.
பார்க்க ரசனையாக இருந்தது. ரசிக்கவும் மறுக்கவில்லை வீரா.. ரசனையான புன்னகையோடு கிளம்பிவிட்டான். ஆனால் அவன் ரசித்ததை நிகிதா கவனிக்க தவறிவிட்டாள். அலுவலகம் சென்றவனுக்கு நிகிதாவின் செயலால் வெகுநாட்களுக்கு பிறகு மனது இதமாக இருக்க.. அவனுக்கு பிடிக்காத வேலை தான் எரிச்சோடு எப்போதும் செய்பவன் இன்று விரும்பத்தோடு செய்தான். நிகிதா அவனுக்கு அழைக்கும் வரை தான் அதெல்லாம்….
இராப்பொழுது நினைவுகள்..
இராஜாவின் சேவைகள்..
ரோஜாவின் எதிர்பார்ப்புகள்..
கண்ணன் காதல் லீலைகள்..
காரிகை கொண்ட பித்துக்கள்…
பித்தம் தெளிய வைக்கும் வித்தைகள்..
வித்தகனின் கைகள் செய்யும் மாயங்கள்…
மாயங்கள் தேடும் பெண் மனம்..
பெண் மனம் அறியா.. பேரழகன்…
பேரழகன் அறிவானோ.. தீர்ப்பானோ..
அழகி கொண்ட தாக(ப)ங்களை..

Superb
Thanks
nYAcwHmkfbQoE
whoah this blog is fantastic i love reading your posts. Keep up the good work! You know, a lot of people are hunting around for this info, you can aid them greatly.
It’s in reality a great and helpful piece of information. I’m happy that you shared this helpful information with us. Please keep us up to date like this. Thank you for sharing.