ATM Tamil Romantic Novels

யாயாவும் உன்னதே.. 6

யாயாவும் 6

 

“எதுக்கு உன் கண்ணுல இப்படி ஒரு பயம் என்னை பார்த்து..!” என்றவன் அவள் கண்களை கூர்ந்து பார்த்து “ஆர் யூ ஹைட்டிங் எனிதிங் ஃப்ரம் மீ வெண்பா?” என்ற அவனின் வார்த்தைகளில் முதுகு தண்டில் சில்லென்ற குளிர் பரவியது வெண்பாவுக்கு.

 

அதற்கு நேர்மாறாக அந்த ஏசி தியேட்டரிலும் அவளுக்கு வியர்த்து வழிந்தது.

 

“நோ… டெஃபனிட்லி நாட் ச்சார்..” என்று தடுமாறினாள் வெண்பா.

 

“அப்புறம் ஏன் இந்த ஏசி தியேட்டரில் உனக்கு வேர்க்குது வெண்பா?” என்று ஒற்றை விரலால் அவளது நெற்றி வியர்வையை அவன் வழித்து காட்ட.. இரயில் வண்டி போல இதயம் தடத்தடத்து..

 

“அது.. அது.. ஹான்.. நீங்க இவ்வளோ பக்கத்துல இருக்கிறதுனால” என்று அவள் உளற..

 

“ஹே சீ வெண்பா.. நீ என்கிட்ட வேலைக்கு வந்து 10 டேஸ்க்கு மேல ஆகுது. வீக்லி த்ரீ டைம்ஸ் நீ ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிற.. நிறைய டைம் இப்படி பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து நாம் ஒர்க் பண்ணி இருக்கோம். எப்பவுமே உன் கிட்ட என்னை பார்த்தாலே ஒரு வித பதட்டம். புரியாத பயம் கண்ணுல தெரியுது..” என்றவனின் வார்த்தையில் அவளுக்கு நா வறண்டது.

 

 ”ஒருவேளை நீ சிங்கிள் மதரா இருக்கிறதுனால அப்படி இருக்கியோனு கூட உன்னை பத்தி நான் யோசிச்சேன்” என்றதும்,

 

‘ஆஹா.. இது நல்ல பதிலா இருக்கே.. இதையே நாம பிடித்துக் கொள்வோம்’ என்றவள் ஆமா.. ஆமா.. என்று வேக வேகமாக தலையாட்ட..

 

“இல்லை..!” என்று‌ அழுத்தமாக மறுத்து தலையசைத்தான் ஜிஷ்ணு, அவளின் கண்களை ஊடுருவி பார்த்து..!

 

“ஆபீஸ்ல நான் மட்டும் ஆம்பள இல்ல வெண்பா..” என்றதும் அவள் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்க்க..

 

“யா.. இன்னும் பத்து பேர் இருக்கிறாங்க.. ஆனா அவங்க உன் கிட்ட வரும் போது, பேசும் போது பெருசா உன்னோட கண்ணுல இந்த மாதிரி ஒரு பயம் கிடையாது..! தள்ளி நில் அப்படிங்கற ஒரு மிடுக்கான பார்வை உன் கண்ணுல தெரியும்..! அதையும் நாம் கவனிச்சிருக்கேன்” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்து.

 

ஜிஷ்ணுவின் வார்த்தைகளில் வெண்பாவுக்கு உடல் எல்லாம் வெடவெடத்தது. 

 

‘என்ன இவன் இப்படி நம்மை கவனித்திருக்கிறானே? மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்தாறு முறை தானே இவனது அலுவலகத்தில் நான் வேலை பார்த்திருப்பேன். அதற்குள் என்னை இத்தனை அனுமானித்துக்கிறானே? எப்படி இவனிடம் தப்பிப்பது? ஆண்டவா..!’ என்று கடவுளை துணைக்கு அழைத்தாள். 

 

ஆனால் கடவுளோ கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல்.. மென்சரிப்போடு இன்னும் இன்னும் ஜிஷ்ணு வெண்பாவின் நெருக்கத்தை அதிகரிக்கவே செய்தார்..! 

 

‘இத்தனை நாளும் இவன்கிட்ட இருந்து தப்பிச்சேன். இப்படி ஒரே நாளில் மாட்டிக்கிட்டேனே?? படத்திலிருந்து பாதியில் எந்திரிச்சு போகவும் முடியாது.. ஆரவ் வரவே மாட்டானே.‌.’ என்று படம் ஆரம்பித்து விட அதில் மூழ்கி இருந்த மகனை ஒரே பார்வை பார்த்தாள் வெண்பா. 

 

மகனை இப்பொழுது தனக்கும் ஜிஷ்ணுவுக்கு நடுவில் அமர்த்தி கொள்ள அவள் முயற்சிக்க அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன்..

 

“இல்ல அவன் அங்கேயே இருக்கட்டும்..!” என்றான்.

 

“இல்ல.. இல்ல.. உங்களுக்கு டிஸ்டர்ப் ஆகும். அவன் சரியான வாலு..!” என்று‌ பிள்ளையை மீண்டும் தன்‌ அருகே அமர வைக்க முயன்றாள் வெண்பா.

 

“பரவாயில்லை எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.! அவன் வயசுல நான் அவன விட வாலு” என்றான் இன்னும் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து..!

 

‘உனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல மேன். ஆனா எல்லா பிரச்சினையும் எனக்கு தானே..! ஆண்டவா..!’ என்று புலம்பினாள். இந்த படம் பார்க்க வந்ததிலிருந்து எத்தனை முறை அந்த ஆண்டவனை அழைத்து இருப்பாள் என்பது கணக்கு வழக்கு இல்லாமல் நீண்டு கொண்டே போனது..!

 

ஜிஷ்ணு தாரளமாக இருக்கையில் நடுவில் கை வைத்துக் கொண்டு நன்றாக சாய்ந்து அமர்ந்து முபாஸாவையும் தன் அருகில் இருந்த சிம்மா குட்டியையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு ஒருவித மோனநிலையில் இருந்தான்.

 

ஆனால் வெண்பாவுக்கு தான் பெரும் அவஸ்தை ஆகி போனது. தன் அருகில் அடர்ந்த முடிகளோடு இருக்கும் அந்த முரட்டுக் கை அருகே அவள் கை வைக்கவே அவளுக்கு உள்ளே குளிர் எடுத்தது.

 

அப்படியும் ஒரு சில சமயங்களில் தெரியாமல் உரசும் அந்த கையடர்ந்த முடி அவள் தேகத்தில் உரச உரச உள்ளுக்குள் சிலிர்த்தது பெண் அவளுக்கு. 

 

“இல்ல இது தப்பு..! இவன் அடுத்த ஆடவன்..! நான் ஒரு தாய்..! ஐயோ ஆண்டவா..!” என்று மீண்டும் மீண்டும் புலம்பிக்கொண்டு

கைகளை அடக்க ஒடுக்கமாக வைத்துக் கொண்டு திரும்பித் திரும்பி மகனையும் ஜிஷ்ணுவையும் பார்த்தாள்.

 

இருவரும் ஒரு போல சாய்ந்து அமர்ந்து கையை தாடையில் பதித்து படத்தில் மூழ்கி இருக்க.. அவர்களின் இந்த ஒத்த மேனரிஸத்தை பார்த்து 

அவளுக்கு திக்கென்றது..! தொண்டை வரள.. படத்தை விட இவர்கள் இருவரையும் தான் மாறி மாறி‌ பார்த்திருந்தாள்‌.

 

இப்பொழுது படத்தில் மனது லயிக்கவே இல்லை..! படத்தை விட அருகில் நடக்கும் காட்சி தான் இப்போது வெகு சுவாரசியமாக.. ஏன் திக் திக் மொமண்ட்டாக இருந்தது‌.

 

மகனோடு படத்தைப் பார்த்து குதூகலிக்க வந்தவள் இப்பொழுது தனியாக பார்ப்பது போல ஒரு பிரம்மை தோன்று வெறுமையாக படத்தை பார்த்து சலிப்படைந்தாள்.

 

அதே மன நிலையில் “ம்ப்ச்” என்று விரக்தி அடைந்த தொணியில் சிறிது முணங்கினாள். பாம்பு காது போல இந்த ஜிஷ்ணுவுக்கு சட்டென்று அவளை திரும்பி பார்த்து என்ன என்று புருவத்தை உயர்த்தி கேட்க..

 

அவளும் அவனை பார்த்து “ஒன்னுமில்ல..!” ஒரு சிறிய புன்னகை பூத்தாள். பதிலுக்கு அவனும் சிரிக்க வேறு வழி இன்றி நேரே கேட்டுவிட்டான், “ஏன் ஒரு மாதிரி அன்ஸியா உட்கார்ந்து இருக்க? உனக்கு எதுவும் கஷ்டமா இருக்கா?” என்று கேட்டான். 

 

‘நீ என் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறது தான்டா கஷ்டமா இருக்கு’ என்று மனதுக்குள் புலம்பி கொண்டவள், “இல்லையே.. ஒரு கஷ்டமும் இல்லையே..!” என்று மீண்டும் உதட்டை கன்னத்து வரை இழுத்து வைத்து சிரித்தாள்.

 

மீண்டும் மீண்டும் அவள் கண்கள் பேசும் பாவணையும்.‌. அந்த இதழ்களும் அதன் அசைவும்.. அவ்வப்போது மூக்கை சுருக்கிக் கொள்ளும் அந்த பாங்கும்.. எங்கோ எப்போதோ.. பார்த்த மாதிரியே ஜிஷ்ணுவின் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

 

அந்த சமயத்தில் அவனின் மனது பல யோசனைகளை கொண்டு மூழ்கியது. இவளை எங்கு பார்த்தோம் என்று பல யோசனைகள் மனதில் ஓடியது..!

 

“நான் உன்னை எங்கோ முன்பே பார்த்திருக்கிறேன் வெண்பா.. உன் இந்த முக பாவனைகள் எல்லாம் எனக்கு வெகு பரிச்சியம்” என்று கூறியே விட்டான். அதிர்ந்து அவனை பார்த்தவள்.

 

“அதற்கு வாய்ப்பே இல்ல.. நான் பெங்களூர் வந்து கொஞ்ச நாள் ஆகுது. அதுவரை தமிழ்நாட்டுல தான் இருந்தேன். நீங்க தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கீங்களா?” என்று கேட்டாள், அவன் இல்லையென்று தலையசைத்தான், அதுவரை சிறிது பட படப்பாகவே காணப்பட்டவள். பின் அமைதியாக இருந்தாள். ஆனால் மனமோ ஊரிலுள்ள தெய்வங்களை எல்லாம் துணைக்கு அழைத்தது.

 

 

அந்நேரம் திரைப்படத்தில் இடைவேளை விடப்பட்டது. வெண்பா கிடைத்தது வாய்ப்பு என்று ஆரவ்வை அழைத்துக் கொண்டு வேகமாக எழுந்து வாசல் நோக்கி நடந்தாள். ஜிஷ்ணுவும் சாவகாசமாக எழுந்தவன், மனைவியை பின் தொடர்ந்து சுவாதீனமாய் செல்வது போல அவளை பின்தொடர்ந்தான். 

 

வெளியில் இருந்து யார் பார்த்தாலும் அவர்களை ஒரு குடும்பம் என்றே பார்க்கும் அளவிற்கு நெருக்கமாக நடந்தான் ஜிஷ்ணு. இதற்கும் கை ஃபோனில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தது.

 

வெண்பா வெளியே சென்றதும் லேடிஸ் பாத்ரூம் செல்வதற்காக குழந்தையிடம் இங்கேயே நில்லு என்று அறிவுரை கூறியவளிடம் சென்று ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று குழந்தையை தூக்கிக் கொண்டான்‌ உரிமையாக..!

 

அவள் உள்ளே சென்று வரும் சிறிய நேரத்தில் குழந்தைக்கு தேவையான தின்பண்டங்களையும் சொல்லப்போனால் இருவர் சாப்பிடும் அளவிற்கு உள்ள ஒரு பாப்கானையும் வாங்கிக் கொண்டு அவள் வருகைக்காக காத்திருந்தான்.

 

அவள் வந்ததும் “உனக்கு எதும் வேண்டுமா?” என்று உரிமையாய் கேட்டவனை கண்டவள் அவன் கையில் உள்ள பாப்கார்னை பார்த்து விட்டு “இல்ல.. இருக்கட்டும்” என்று மெல்ல தலையை ஆட்டிவிட்டு திரும்ப, ஜிஷ்ணு முகத்தில் ஒரு மந்திர புன்னகை..! 

 

அவள் நடக்கும் போது அவளின் பின்னழகு மிகவும் அழகாக தெரிய.. ஊஃப் என்று மூச்செடுத்து பார்வையை திருப்பிக் கொள்ள முயன்றான். 

 

ஆம்.. முயன்றான்…!

 

ஆரவ்வின் குண்டு குண்டு கன்னத்தில் கொஞ்ச வேண்டும் என்ற அளவிற்கு அவன் மனம் சென்றால் அது நார்மல் பாசம் பிள்ளை மீது.‌! 

 

அதே அவன் அன்னைக்கும் அதே ‘இச்சை’ கொடுக்க சொல்லும் மனது என்ன மனது? 

 

ஜிஷ்ணு ஆரவ் மேல் விழுந்து பழகவில்லை. எட்டே நின்று அவன் தேவைகளை பார்த்தான். படத்தில் அவனுக்கு புரியாத இடத்தில் விளக்கினான். சிறு சிறு பேச்சு.. அமர்த்தலான பார்வை.. ஆளுமையான நடத்தை என்று எட்ட நின்றே ஆரவ்வை பார்க்க வைத்தான். பேச வைத்தான். மெல்ல மெல்ல ஈரத்தான்..!

 

ஜிஷ்ணு இருக்கையில் அமர்ந்தான் இம்முறை வெண்பா இருவருக்கும் இடையில்..!

 

ஆரவ் தன் கையில் வைத்திருந்த தின்பண்டங்களை அமைதியாக உண்ண, தன் கையில் இருந்த பாப்கார்னை அவளுக்கும் தனக்கும் இடையில் உள்ள கை இருக்கையில் வைத்து அவள் எடுப்பதற்காக காத்திருந்தான் ஜிஷ்ணு. அவளோ எடுப்பதாய் காணோம்.

 

எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டன. ஜிஷ்ணு இயல்பாய் பாப்கானை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு அசைபோட.. 

 

அவளோ முள் மேல் அமர்ந்திருப்பது போல இருந்தாள். ஆம் படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடமே ஆரவ் ஜிஷ்ணுவிடம் எட்டி அந்த காட்சியை சுட்டிக் காட்ட.. அதுவும் அம்மா மேல் விழுந்துக் கொண்டு..

 

அவனுக்கு பதில் சொல்ல என்று ஜிஷ்ணுவும் வெண்பாவுக்கு வெகு அருகில்.. தேகங்கள் உரசிக் கொள்ளும் தூரம்.. ஆனால் சுவாசங்கள் உரசி பரிமாறிக் கொள்ள.. மீண்டும் ஒரு தகித்தல்.. தவித்தல்.. பெண்ணிடம்..!

 

ஜிஷ்ணு ஆரவ்வுக்கு அவ்வப்போது படத்தை விளக்க.. அவள் அருகே குனிய.. அழகாய் ஒரு மந்திரப் புன்னகை அவன் முகத்தில் மாயவனாய்..!

 

தன்னை மாயம் செய்து கொண்டிருப்பவளால் அவனுள்ளும் ஒரு மாயம்..!

 

 

“அம்மா.. பாப்கார்ன்” என்று ஆரவ் கேட்க.. அவள் பாப்கானை எடுக்கும் வரும் சமயம் ஜிஷ்ணுவும் அதற்குள் கையை விட.. அவள் கையோடு அவன் கையை இடிக்க.. மின்னல் வெட்டியது வெண்பாவுக்கு.

 

அதிரந்தவள் கையை எடுக்காமல் உள்ளே வைத்திருக்க.. அப்போது ஜிஷ்ணுவின் முரட்டு விரல்கள் அவளின் விரல்களை மெல்ல தீண்டிச் சென்றன..! அவளுள் தீயை மூட்டிச் சென்றன..!

 

அதன் பின் அவள் பாப்கார்ன் எடுப்பதை தவிர்த்தாள்.

 

 வேண்டுமென்றே அவளிடம் “வேண்டுமா?” என்று அவளிடம் பாப்கானை ஜிஷ்ணு நீட்ட..

 

அவள் இல்லை போதும் என்று கூறி தவிர்த்தாள்.

 

படம் முடியும் தருவாயில் இருந்ததை உணர்ந்தவள் மொபைலை எடுத்து கேப் புக்கிங் செய்யும் ஆப்பிற்குள் சென்றாள்.

 

“என்ன பண்ற?” என்று அவளிடம் கேட்டான்.

 

“வீட்டிற்கு போக கேப் புக் பண்ணனும்” என்று அவள் கூற இதுதான் சமயம் என்று அவளிடம் “நான் உங்கள டிராப் பண்றேன்” என்றான் ஜிஷ்ணு.

 

“வேணாம்” என்றவளிடம், “பண்ணட்டுமானு கேட்கல.. பண்றேன்னு சொன்னேன்” என்றவன் வதனத்தில்

மீண்டும் மந்திரப் புன்னகை பூக்க..!

“ஏன் நீங்க எந்த ஏரியா?”

 

அவன் தன் விவரத்தை கூற.. “அய்யோ நீங்க இந்த பக்கம் இருக்கீங்க அப்படியே எதிர் திசை ஓரத்துல நான் இருக்கேன். உங்களுக்கு சிரமம் வேண்டாம் சார்” என்று மறுத்தாள்.

 

சட்டென்று அவள் போனை வாங்கி லாக் செய்துவிட்டு “எனக்கு ஒரு சிரமமும் இல்லை.. மூவி பார்த்தாச்சு அடுத்து டின்னர் முடிச்சா.. சிம்பிள்ளா ஒரு டேட்டிங் முடிச்ச மாதிரி இருக்கும்? ஆமா தானே?” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் வெண்பா.

 

 

வெளியே வந்தவன் ஆரவ் கையை பிடித்துக் கொண்டு ஏதோ கேட்க.. அவனும் பதில் சொல்ல.. இரண்டும் பேரும் முன்னால் நடக்க.. ஜிஷ்ணுவை தடுக்க முடியாமல் அவனை முறைத்துக் கொண்டே பின்னால் சென்றாள் வெண்பா.

 

“இந்த பையனுக்கு ஏன் திடீர் பாசம் இவர் மேல? யாரு அவஸ்தை படுறது..” என்று முழங்கியபடி அவர்கள் பின்னால் சென்றாள்.

 

இவள் தன் நினைவிலேயே உழன்றுக் கொண்டு வர எதிரே வந்த இளைஞர் கூட்டம் இவளை இடித்து விடுவது போல் வர.. சற்றென்று வலது கையால் அவர்களை தோளோடு தன்னருகே இழுத்துக் கொண்ட ஜிஷ்ணு.. அவர்களை முறைக்கவும் தவறவில்லை..!

 

இதை அழகாக தன்னுடைய ஃபோனில் பதிவு செய்தான் அஸ்வத். ஆனால் இன்னும் நம்ப முடியவில்லை தன் அண்ணைய்யா வெண்பாவோடும் அவளின் குழந்தையோடும் நெருக்கமாக செல்வதை..!

 

“ஒரே ஒரு படம் தானடா பார்த்தீங்க அதுக்குள்ள எங்க இருந்துடா இவ்வளவு நெருக்கம்??” என்று புரியாமல் நின்றிருந்தான்.

 

“நீயா வீட்டுக்கு வந்து சேரு என்னை எதிர்பார்க்காதே..!” என்று அஸ்வத்துக்கு ஒரு டெக்ஸ்ட் செய்து விட்டவன் தன் காரை எடுத்துக்கொண்டு அவளையும் அவள் குழந்தையையும் அழைத்துக் கொண்டு அவள் வீடு செல்லும் வழியில் நல்ல ஒரு ரெஸ்டாரண்டில் நிறுத்தி இரவு உணவு உட்கொள்ள.. ஜிஷ்ணுவின் அருகில் உணவு உள்ளே இறங்க மறுத்தது வெண்பாவுக்கு.

 

ஆரவ்வை தன்னருகில் அமர வைத்து சீட்டு பெல்டு போட்டவன் வெண்பாவை பின்னால் அமர சொல்ல.. கையை கட்டிக்கொண்டு இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் இருக்கும் அப்பார்ட்மெண்ட் வந்ததும் பிள்ளையை இறக்கி விட்டவன் இவள் அருகே வந்து நிற்க.. அவளோ சீட் பெல்ட்டை கழட்ட முடியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“அது அப்பப்போ கொஞ்சம் ஸ்டக் ஆகும்..” என்றவன் குனிந்து அவளது பெல்ட்டை கழட்டினான்.

 

அவள் முகத்திற்கு வெகு அருகில் அவன் முகம் இருந்தது.

 

அவனது கற்றை மீசையின் ரோமங்கள் அவள் கன்னத்தில் உரசி பதம் பார்க்க..

இவ்வளவு அருகில் அவனை எதிர்பார்க்காததால், கண் இமைகள் படபடக்க.. மெல்ல இதழ்களை கடித்து அவனை ஏறிட்டு பார்த்தாள். 

 

சீட் பெல்ட்டை கழட்டியவன் விலகாமலே அவளை பார்த்தான், ஒற்றை விரல் கொண்டு கன்னத்தை வருடியவன் “இட்ஸ் சோ சாஃப்ட்.. லைக் ஆரவ்’ஸ்” என்றவன், அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

 

 

அவன் முத்தமிட்டதை விட அதற்கு அவன் சொன்ன காரணத்தில் தான் ஏக அதிர்ச்சி ஆனாள்‌ வெண்பா..!!

 

என்னவாக இருக்கும்? (வடிவேல் மோடில் வாசிக்கவும் )

 

 

தொடரும்…

31 thoughts on “யாயாவும் உன்னதே.. 6”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top