ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 28

“ஏய் சரசு காபியில சர்க்கரை அள்ளி போட்டிருக்க எனக்கு சர்க்கரை வியாதி வரணுமா?” என்று வேலைகாரியிடம் கடினமாக பேசுவது போல நடித்தார் ராஜமாணிக்கம்.

வேலைக்காரியோ “அய்யா மன்னிச்சுடுங்க கைதவறி போட்டுட்டேன்” மன்னிப்பு கேட்பது போல் அவளும் நடித்து விட்டாள்.

நேற்றிரவு தென்னரசு வீட்டுக்கு வந்த நேரம் ராஜமாணிக்கம் அறையில் இல்லை. தோட்டத்து வீட்டில் லைட் எரிய அம்மாவோட நினைப்பு வரும் போதெல்லாம் அப்பா அங்க போயிடுறாரு என்று நினைத்திருந்தான் தென்னரசு.

“உன் அம்மா நினைவு வரும்போது தோட்டத்து வீட்டுக்கு போயிடுவேன்பா நானும் உன் அம்மாவும் நிறைய நேரம் தோட்டத்து வீட்டுல தான் இருப்போம்” என்று ராஜமாணிக்கம் விசனப்பட்டு பல முறை கூறுவதை கேட்டிருக்கிறான் தென்னரசு.

ஆனால் இப்போது தான் பார்க்கும்போது வேலைக்காரி சரசுவிடம் சிரித்து பேசியவர் என் தலையை கண்டதும் முகத்தை மாற்றி கோபமாக பேசுறாரே! என்று தாடையை தேய்த்தவன் ராஜமாணிக்கம் பக்கம் போய் உட்கார்ந்தவன் சரசுவின் கை நடுங்குவதை பார்த்துவிட்டான்.

ஆனால் எதையும் பார்க்காதது போல “அப்பா தோட்டத்துல தேங்காய் லோடு ஏத்த வரேன்னு சொல்லியிருக்காங்க நான் பார்த்துட்டு வந்துடறேன்” என்றான் சட்டையை மடித்துவிட்டுக்கொண்டே.

“இங்க என்ன வேடிக்கை தென்னரசுக்கு டிபன் எடுத்து வை” என்று சரசுவை விரட்டினார். இருவரும் ஜாடை செய்துக் கொள்வதை பார்த்துவிட்டவனுக்கு நெஞ்சே அடைத்துவிட்டது. தாயை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்கமாட்டார் அப்பா என்று நம்பியிருந்தோமே என்று உடைந்து விட்டான்.

இல்ல இருக்காது கண்ணால் பார்ப்பது பொய் தீர விசாரிப்பதே மேல் என்று நினைத்து பெரும்மூச்சு விட்டு “நான் ராயன் அண்ணா வீட்ல சாப்பிட்டுக்குறேன் அப்பா” என்றதும் “எனக்கு ஆகாதவன் வீட்டுக்கு போகாதேனு பல முறை சொன்னாலும் கேட்க மாட்டேகின்ற பொண்டாட்டி கிறுக்கு பிடிச்சிருக்கு உனக்கு!” என்று மகனிடம் சண்டைக்கு வந்துவிட்டார்.

“என்னால என் பொண்டாட்டியையும் புள்ளையையும் பார்க்காம இருக்க முடியாதுப்பா!” என்று வேகமாக பேசியவனோ கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

காரை ஓட்டும்போது அவனுக்கு ராஜமாணிக்கமும் சரசுவும் சிரித்தது கண்முன்னே நிழலாடியது. சில நாட்கள் முன்னே ராயன் உன் அப்பாவை பற்றி தெரிஞ்சுக்கிட்டு வாடானு சொன்னது அவன் காதில் ஒலிக்கவும் அப்பா அப்போ ஒழுக்கம் சரியில்லாதவரா இருக்காது என்று மனதை போட்டு குழப்பிக்கொண்டே சென்றான் ராயன் வீட்டுக்கு பூங்கொடியையும் தியாவையும் பார்த்தால் கொஞ்சம் மனதிற்கு நிம்மதியாக இருக்குமென்று…

முல்லை எழும்பும் நேரம் ராயன் அவள் பக்கம் இல்லை நேரமே எழுந்து குளித்து பால்பண்ணைக்குச் சென்றிருந்தான். மெல்ல எழுந்தவளுக்கு தலையை சுற்றிக்கொண்டு வர அப்படியே உட்கார்ந்து விட்டாள். கிறுகிறுப்பு நின்றவுடன் எழுந்துச் சென்றவள் குளித்து விட்டு தலையை துவட்டிக்கொண்டு வந்தவளுக்கு பால் ஆத்தி கொண்டு வந்தார் தையல்நாயகி.

“நீங்க எதுக்கு மேல வந்தீங்க அத்தை நானே கீழ வந்துருப்பேனே” என்றவளோ தலைமுடியை துவட்டி கிளிப் போட்டுக்கொண்டாள்.

“அம்மாடி உன் புருசன் நேரமே பண்ணைக்கு கிளம்பி போகும்போது மருமகளை அடிக்கடி கீழ படி இறங்க விடாதீங்க சாப்பாடு பால் என்னவா இருந்தாலும் உன் அறைக்கே கொண்டு வந்து கொடுக்கச் சொல்லியிருக்கான்மா நான் கூட உன் மேல கோபத்தை இழுத்து பிடிச்சு இருப்பான்னு நினைச்சேன். ஆனா உன் மேல ஒரு துளி கோபம் கூட இல்ல மா” என்று சிலாகித்துக் கொண்டவர் பால் டம்ளரை முல்லையிடம் கொடுத்தார்.

முல்லையோ “ஆமா அத்தை என் மேல கோபம் போயிடுச்சு” என்று அவரிடம் தங்களுடைய சலிப்பை காட்டிக்கொள்ளவில்லை பாலை குடித்துவிட்டு “நான் கொஞ்ச நேரம் உங்க கூட கீழ இருந்துட்டு மேல வரட்டுமா அத்தை?” என்றாள் கண்ணைச்சுருக்கி.

“எங்க அறைக்கு பக்கம் இருந்த ராயனோட பழைய அறை பெயிண்ட் அடிக்காம இருந்துச்சு நேத்து பெயிண்ட் அடிக்க சொல்லியிருக்கான் பெயிண்ட் அடிச்சு முடிச்சதும் அந்த அறையிலதான் நீங்க ரெண்டு பேரும் இருக்க போறீங்களாம் வயிறு பெரிசாக பெரிசாக உன்னால படி ஏற முடியாதுல உன் மேல உள்ள பாசத்தால அறையை ரெடி பண்ணிட்டு இருக்கான் கண்ணு” என்றார் சின்னச் சிரிப்புடன்.

“உங்க மகனுக்கு என்மேல கொள்ளை பிரியம் அத்தை நான்தான் அவர்கிட்ட நதியா விசயத்தை சொல்லாம மறைச்சு அவரை காயப்படுத்திட்டேன்” என்று விம்மியவளை அணைத்துக்கொண்டு “முடிஞ்ச விசயத்தை தோண்டி துருவக்கூடாது. அவன் கோபத்துல ரெண்டு வார்த்தை கூட பேசினாலும் நீ கொஞ்சம் பொறுத்து போகணும். வாயும் வயிறுமா இருக்க பொண்ணு அவன் பேசியதை மனசுக்குள்ள போட்டு புழுங்கக்கூடாது சரியா! ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தாதான் பெரியவங்க நாங்களும் நிம்மதியா இருப்போம் தங்கம்” என்று மருமகளின் உச்சியில் முத்தமிட்டார்.

“சரிங்க அத்தை நீங்க சொல்றது படியே நான் நடக்குறேன்” என்றாள் சிறு இதழ் விரிப்புடன்.

“நீ உட்கார்ந்து டிவி பாரு அம்மா டிபன் எடுத்துட்டு வருவாங்க” என்று கீழே சென்றுவிட்டார்.

ராயனுக்கு போன் போட்டாள் முல்லை. முன்னேல்லாம் முதல் ரிங்கிலேயே எடுத்து “சொல்லு புள்ள” என்பவன் இன்று கடைசி நிமிசத்தில் போனை ஆன் செய்து காதில் வைத்தான் ஆனால் பேசவில்லை.

அவளின் மனதின் வலியின் மூச்சுக் காற்று அவனது செவியில் பட்டது. “சொல்லு” என்றான். அவனது சொல்லு புள்ள என்ற உரிமை மொழி இன்று அவன் வாயிலிருந்து வரவில்லை.

“சா.சாப்பிட்டீங்களா மச்சான்?” என்றாள் தடுமாற்றக்குரலுடன்.

“சாப்பிட்டேன் நீ சாப்பிட்டியா?” என்று மட்டுமே கேட்டான் அவ்ளோதான்.

“வேற பேசணுமா?”

“இ.இல்ல சு.சும்மாதான்” என்று குரல் கமறியது.

“சாப்பிட்டு மாத்திரை போடு” என்றவனோ போனை வைத்துவிட்டான்.

“ஓ என் மேல கோபம் போகல என்னை விரும்பவும் இல்ல போல நான் நீலகண்டன் அப்பா பொண்ணு அதான் என்னை கல்யாணம் பண்ணியிருக்காரு” என்று அவளாக ஏதோ நினைத்து மனதை போட்டு அலட்டிக்கொண்டிருந்தாள்.

ராயனோ பூங்கொடிக்கு போன் போட்டான். தென்னரசுவிற்கு சாப்பாட்டு போட்டுக்கொண்டிருந்தவள் “மாமா போன் பண்ணுறாங்க” என்று போனை எடுத்தவள் “சொல்லுங்க மாமா” என்றாள் பவ்யமாய்.

“முல்லைக்கு காலேஜ் லீவு அவ தனியா இருந்தா எதாவது மனசை போட்டு குழப்பிக்கிட்டே இருப்பா மா தியாவுக்கு பசியாத்தி முல்லைகிட்ட விட்டு வந்துடு” என்றதும்

“சரிங்க மாமா” என்று போனை வைத்து விட்டாள்.

“பங்காளி பொண்டாட்டி மேல இவ்வளவு அக்கறையா இருக்கவரு அந்த பொண்ணுக் கிட்ட கடுகடுனு முகத்தை காட்டுறாரு உங்க மாமா புரியாத புதிர்டி” என்றான் தலையை ஆட்டிக்கொண்டு.

“நாம எப்ப தனியா போறோம்?” என்று பூங்கொடி பேச்சை மாற்றவும்

“போலாம் போலாம் இப்ப என்ன அவசரம் நாயகி அம்மாவோட கைப்பக்குவம் நல்லாயிருக்கு வாய்க்கு ருசியா சாப்பிடுறேன் நாம தனியா போனா உன்னோட உப்பு சப்பில்லா சாப்பாட்டை சாப்பிடணும்” என்றவனை இடுப்பில் கையை வைத்து முறைத்தவள் அவனது முடியை பிடித்து ஆட்டி “ஏன் டா என்னோட சாம்பார் நல்லாயிருக்கு இன்னும் கொஞ்சம் ஊத்துனு சாப்பிட்டுட்டு இப்போ அத்தை சமையல் நல்லாயிருக்குனு என்னை வெறுப்பேத்துறியா உங்கப்பனை விட்டு உன்னால வரமுடியலை இனிமே என் கையால சாப்பாடு போட மாட்டேன் போடா” என்று கோபமாக கத்திவிட்டு தரையில் விளையாடிக்கொண்டிருந்த தியாவை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு முல்லையின் அறைக்குச் சென்றுவிட்டாள் பூங்கொடி.

“அப்பா சாமி நான் துரத்தி துரத்தி இவளை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இப்போ தினமும் இவ கையால அடி வாங்கறதே எனக்கு வேலையா போச்சு” என்று சலித்துக் கொண்டு தட்டில் கையை கழுவி எழுந்தவனிடம் “ரோசம் மானம் உள்ளவன் மாமனார் வீட்டுல வந்து சாப்பிடமாட்டான்” கோமளம் ஜாடை பேசி சாப்பிட அமர்ந்தார்.

அவனோ இந்த பெரியம்மா பேசறதையெல்லாம் காதுல வாங்கக்கூடாது என்று கையை கழுவிச் சென்று விட்டான்.

கோமளமோ கண்ணனின் அறையை பார்த்தார். அறை இன்னும் திறக்காமல் இருக்க “இந்த காலத்து பொண்ணுங்களுக்கு தினம் பாடம் எடுக்க வேண்டியிருக்கு எழுந்து வரட்டும் தீபாவுக்கு எடுக்குறேன்” என்று கோபம் கொண்டவர் மகள் இருக்கும் நினைவில் “ஏய் நதியா இன்னுமாடி தூங்குற?” என்று சத்தம் போட்டவருக்கு அவள்தான் நேற்று அனாதை பயலை கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டாளே என்று நினைவு வந்தது.

“கழுதை கஷ்டப்பட்டு அழுதுக்கிட்டு வரட்டும் செவினில நாலு போடுறேன்” என்று மகளை கறுவிக்கொண்டிருந்தார்.

மாவுபாக்கெட் வாங்கி வந்த பாலாஜியோ தக்காளி தொக்கு எப்படி வைக்கணும் என்று நதியாவுக்கு சொல்லிக்கொடுத்தான் அவளோ தலையை நாலாப்புறமும் ஆட்டிக்கொண்டு கேட்டிருந்தாள்.

“தோசையாவது ஊத்த தெரியுமா?” என்றான் முறைப்புடன் நக்கல் தொனியில்.

தெரியாது என்று சொன்னால் கழுவி ஊத்துவானென்று பயந்து “ம்ம் ஊத்தத்தெரியும்” என்றாள்.

“அப்போ ஊத்துடி” என்று கையை கட்டி சமையல்கட்டு திண்டில் உட்கார்ந்தான்.

தோசைக்கல்லில் உடனடியாக தோசை ஊத்தலாம் என்று கல்லைத்தான் நேற்று வாங்கி வந்திருந்தான்.

அவளுக்கு தோசை ஊற்றவே தெரியவில்லை மாவை மொத்தமாக எடுத்து ஆப்பம் போல ஊத்தியதும் அவள் பிடறியில் லேசாய் தட்டியவன் “தள்ளுடி ஒரு தோசை மாவு கூட ஊத்த தெரியல” என்று அவளது கையிலிருந்த கரண்டியை வாங்கி தோசையை திருப்பி போட்டு முதல் தோசையாக இருக்க தனியாக எடுத்து போட்டு மெலிதாய் தோசையை ஊற்றியவனை பார்த்து “நீங்க எப்படி இவ்ளோ அழகா தோசை சுடுறீங்க?” என்றவளை பார்த்து முறைத்தவன் “வாய் மட்டும் பேசினா போதாதுடி” என்றவன் ரெண்டு தோசை ஊற்றி விட்டு தட்டில் போட்டுக் கொண்டு “உனக்கு நீயே சுட்டு தின்னு” என்று தோசையை தட்டில் ஊற்றி திண்டில் உட்கார்ந்து சாப்பிட்டு தட்டை கழுவி வைத்தவன் “நான் வெளியே போய்ட்டு வரும் வரை கதவை சாத்திட்டு இரு யாரும் வந்து கதவை தட்டினா ஜன்னல் வழியே பார்த்துட்டு கதவு திறந்து விடு இந்த ஏரியாவுல திருடங்க கூட்டம் இருக்குனு கேள்விப் பட்டேன்” என்றான் அசால்ட்டாய்.

“என்னது திருடனுங்க வருவாங்களா நா.நான் கதவை திறக்கமாட்டேன்ப்பா” என்று பயந்து அரண்டாள்.

“ராயன் தங்கச்சினு வெளியே சொல்லாதடி எல்லாரும் சிரிப்பாங்க ரொம்ப பயந்தவ போல சீன் போடாதே நான் வர நைட் ஆகும் மதியத்துக்கு ஏதாவது சமைச்சு சாப்பிடு” என பைக் சாவியை எடுத்தவனை “ஏன் கார்ல போகலையா?” என்று அவன் முன்பு நின்றாள்.

“காருக்கு பெட்ரோல் அடிக்க நீ காசு தரியாடி வாயை மூடிக்கிட்டு தோசை சுடு” என்று எரிந்து விழுந்தான்.

“கொஞ்சம் பாசமா பேசமாட்டீங்களா?” என்று முகத்தை சுளித்தாள்.

“ஆமா உன்னை துரத்தி துரத்தி லவ் பண்ணி கல்யாணம் கட்டிட்டு வந்திருக்கேன் பாரு சும்மா கண்ணே மணியேனு கொஞ்சறதுக்கு ப்ளான் போட்டு எனக்கு நம்பிக்கை துரோகி பட்டம் வாங்கிக்கொடுத்தவகிட்ட இப்படித்தான் பேச முடியும்” என்று சுள்லென்று பேசிவிட்டுச் சென்றுவிட்டான்.

நதியாவுக்கு பாலாஜி பேசுவது சுருக்கென்று தைத்தாலும் தான் செய்து விட்ட தவறிற்கு தண்டனையாக அவனின் கோபத்தை பொறுத்துக்கொண்டாள் பெண்ணவள்.

எட்டு மணிக்கு மேல் கண்ணனின் அறைக்கதவு திறந்தது. டாப்பும் ஜீன்ஸுமாக வந்தவளை கண்டு கடுப்பாகி விட்டார் கோமளம்.

“ஏய் என்ன மண்ணாங்கட்டி ட்ரஸ் இது ஒழுங்கா சேலையை கட்டிட்டு வா” என்றார் முகத்தை கடுகடுவென வைத்து.

“இந்த ட்ரஸ்க்கு என்ன குறைச்சல் அத்தை?” என்று கோமளம் முன்னே கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

“என்னடி பெரியவங்க முன்னாடி மட்டு மரியாதை இல்லாம கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்க அதுவும் பொண்ணுங்க கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது படிச்ச உனக்கு தெரியாதா?” என்று மூச்சு வாங்க பேசியதும்

காதை குடைந்துக் கொண்டு காலை சரியாக வைத்தவள் “போதுமா அத்தை” என்றாள் சலித்துக்கொண்டு.

“இன்னிக்கு ஒருநாள் நேரம் கழிச்சு எழுந்து வந்தா பரவாயில்ல நாளைக்கு காலையில ஐஞ்சு மணிக்கு எழுந்து வந்திருக்கணும் வீட்டு வேலை எல்லாம் பார்க்க தெரியும்தானே?”

“ம்ம் சமைக்கத்தெரியும் அத்தை ஆனா நான் எதுக்கு சமைக்கணும் ஏழு தலைமுறை தாண்டியும் உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சொத்து மதிப்பு வச்சிக்கிட்டு சமைக்க ஆள் போடலையா நீங்க?” என்றாள் அசால்ட்டாக.

“அமுதாவை தவிர நாங்க வீட்டு வேலைக்கு யாரையும் வீட்டுக்குள்ள விட்டதில்லை. நானெல்லாம் உன் வயசுல நாலு ஆளு வேலையை ஒத்த ஆளா செய்வேன் தெரியுமா! இப்படி என் மாமியார் முன்னால உட்கார்ந்து பேசமாட்டேன். நீ என்னடானா எனக்கு மரியாதை கொடுக்காம கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்க போய் எனக்கு சூடா சர்க்கரை கம்மியா டீ போட்டு கொண்டு வா பார்க்கலாம்” என்றார் அதிகாரமாக.

“முதல் முறை கேட்குறீங்கனு போட்டு கொண்டு வரேன்” என்று எழுந்து தீபாவும் சமையல்கட்டுக்குள் சென்றாள். அமுதா பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தவர் தீபாவை பார்த்ததும் புன்னகை புரிந்தவர் “ஏதாவது வேணுமா பாப்பா?” என்றார் கனிவான குரலுடன்.

“இல்ல நீங்க பாருங்க நான் அத்தைக்கு டீ போட வந்தேன் நான் கண்ணன் எழுந்து வந்ததும் அவன்கூட சாப்பிட்டுக்குறேன்” என்றாள் மெலிதான புன்னகையுடன்தான்.

“நா.நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே பொண்ணு கண்ணன் தம்பியை என் முன்னால கூப்பிட்டது போல இந்த வீட்டு பெரியவங்க முன்னே பேர் சொல்லி கூப்பிட வேணாம் பாப்பா..! பெரியம்மா யார் இருக்காங்கனு பார்க்க மாட்டாங்க உன்னைத்தான் திட்டிடுவாங்க..! பட்டணத்துல புருஷன் பேரு சொல்லி கூப்பிட்டுக்கறது அங்க நடைமுறைக்கு சரிப்பட்டு வரும்..! இங்க கிராமத்துல சரியா வராதுமா” என்றவரை பார்த்து “நீங்க உங்க வேலையை பார்த்தா மட்டும் போதும் எனக்கு எங்க எப்படி பேசணும்னு தெரியும்” என்று முகத்தில் அடித்தாற் போல பேசவும் “மன்னிச்சிடுங்க பாப்பா” என்று அமுதா அவரது வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

அழகம்மையோ தீபா அமுதாவை எடுத்தெறிந்து பேசும் போது வந்துவிட்டார். பாத்திரம் விலக்கி முடித்ததும் அமுதா பின்வழியாக வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

“எனக்கும் டீ கிடைக்குமா இல்ல உங்க மாமியார்க்கு மட்டும் டீ போட்டுத்தருவியா?” என்றார் சிரித்தபடியே

“வாங்க சித்தி டீ சேர்த்து தான் வச்சிருக்கேன் இருங்க டம்ளர்ல ஊத்தி தரேன்” என்று டீயை ஆத்தி இரண்டு டம்ளரில் ஊற்றியவளிடம் “ஏம்மா அமுதா உன்கிட்ட பொறுமையா தானே பேசினாங்க ஏன் நீ அவங்க முகத்துல அடிச்சாப்பல உங்க வேலையை பாருங்கனு சொல்லுற அமுதா நம்ம வீட்டுல ஒருத்தவங்க மாதிரி பெரியவங்க கிட்ட இப்படித்தான் பேசுவியா?” என்று சற்று கோபத்துடன் தான் கேட்டார்.

“வீட்டு வேலைக்காரவங்களை வைக்கற இடத்துல வைக்கணும் சித்தி” என்றாள் தீபா வெடுக்கென.

“என்னது அமுதா வீட்டு வேலைக்காரியா ராயன் தம்பியோட மாமியார் அமுதா, கிட்டத்தட்ட எனக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை அமுதாவிற்கு உண்டு நீ படிச்ச பண்பான பொண்ணுனா அவங்க கிட்ட இனிமே எடுத்துதெறிஞ்சு பேசாதம்மா” என்றார் கொஞ்சம் அதட்டலாகத்தான்.

தீபாவோ அமுதா ராயன் மாமியார் என்பதை மறந்திருந்தாள். “சாரி சித்தி இனிமே நான் அமுதா அம்மாவுக்கு மரியாதை கொடுக்குறேன்” நல்லவள் போல நடிப்புடன் டீ டம்ளரை அழகம்மையிடம் கொடுத்து விட்டு “வரேன் சித்தி” எப்படியோ சமாளிச்சிட்டேன் என்று கண்ணை சுழட்டிக்கொண்டு ஹாலுக்குச் சென்று கோமளத்திடம் டீயை கொடுத்தாள்.

டீயை குடித்த கோமளமோ “ம்ம் டீ நல்லாத்தான் போட்டிருக்க ஆனாலும் நான் போடறது போல இல்ல” என்று சலித்துக்கொண்டு குடிக்கவும் அவரது தலையில் நங்கென்று கொட்டு வைக்கணும் போல இருந்தது தீபாவிற்கு.

“தீபா இங்க வந்து என் பக்கம் உட்காரு” என்றதும் அவளும் கோமளம் பக்கம் உட்கார்ந்து “சொல்லுங்க” என்றாள்.

“ஆமா நேத்து ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தீங்களா… நீயும் சீக்கிரம் மாசமாகணும். நான் ஜோசியம் பார்த்தேன் ராயனுக்கு முதல்ல பொண்ணுதான் பொறக்கும்னு சொல்லியிருக்காங்க ஆனா உனக்கு பையன்தான் பொறக்கும்னு சொல்லியிருக்காரு ஜோசியக்காரர். ராயன் முன்னால என் மகன் கையை கட்டி நிற்குறான்னு கவலையா இருந்தேன் இப்போ என் பேரன் முன்னால ராயன் மகளும் மகனும் கையை கட்டி நிற்கணும் அதை பார்த்து ஆனந்தப்படுவேன்” என்று அல்ப ஆசைபட்டார் கோமளம்.

“சீக்கிரமா பேரனை பெத்துக்கொடுக்குறேன் அத்தை ஒரு வேளை ராயனுக்கு பையன் பொறந்துட்டா என்ன பண்ணுவீங்க?” என்றாள் புருவம் உயாத்தி.

“உன் வாயை பினாயில் போட்டு கழுவுடி நான்தான் ராயனுக்கு பொண்ணுதான் முதல்ல பிறக்கும்னு சொன்னேன்ல” என்றார் எரிச்சலாக.

“சரி கோபப்படாதீங்க” என்று இருவரும் ராசியாக கைகோர்த்தனர்.

கண்ணன் குளித்து வெளியே வந்தவன் கண்ட காட்சியில் ‘நேத்து ரெண்டு பேரும் சண்டைக்கோழியாக நின்னாங்க இப்ப என்னடானா ரெண்டு பாச பறவைகள் கொஞ்சிக்கிறாங்க ரெண்டு பேரும் டேன்ஜரான ஆளுங்க கொஞ்சம் சூதானாமா இருக்கணும்’ என்று தோளைக்குலுக்கிக் கொண்டவனோ “தீபா சாப்பாடு எடுத்து வை பசிக்குது” என்று அவர்கள் பக்கம் வந்ததும் “டேய் நாளையிலிருந்து நேரம் காலமா எழுந்து பால்பண்ணைக்கு போகிற வழியா பாருடா” என்றதும்

“அடுத்த வாரம் போறேன்மா இந்த வாரம் நானும் தீபாவும் ஹனிமூன் காஷ்மீர் போறோம்” என்றான் தீபாவை பார்த்து ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி.

“என்கிட்ட சொல்லவே இல்லை கண்ணா” என்றவளோ நாக்கை கடித்துக்கொண்டு “நீங்க சொல்லவேயில்லையே” என்றாள் கோமளத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடியே.

“சர்பிரைஸ்டி” என்றவன் கையை பிடித்து “வாங்க சாப்பிட போகலாம்” என்று இருவரும் ஜோடியாக போவதை பார்த்து “என்னமோ சந்தோசமா இருந்தா சரி” என்று டீவி ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்த கோமளத்துக்கோ நதியா வீட்டுக்குள் இல்லாதது ஒரு மாதிரி மனச் சங்கடமாக இருந்தது.

‘கழுதைக்கு ஒரு வேலையும் பார்க்க தெரியாது என்ன பண்ணுறாளோ தெரியலை?’ என்று புலம்பவும் செய்தார்.

அன்று மதியம் தீபாவை அழைத்துக்கொண்டு வயற்காட்டிற்குச் சென்றான் கண்ணன். வெயிலில் தலைக்கு முந்தானை சேலையை கட்டிக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் பெண்கள்.

“அப்பாடி இந்த வெயிலுல எப்படி கண்ணா இவங்க எல்லாம் வேலை பார்க்குறாங்க கால் சுடாதா செருப்பு கூட போடாம வேலை பார்க்குறாங்க எப்படிடா முடியுது இவங்களால” என்று அவர்களை அதிசயமாய் பார்த்துக் கொண்டே நடந்தவள் சேற்றில் காலை வைத்துவிட்டாள். “ஐயே சேறு” என்று காலை உதறினாள்.

ஹாஹாவென்று சிரித்த கண்ணனோ “நான் தோட்டத்துல வேலை பார்ப்பேன் எல்லாரையும் அதிகாரம் பண்ணுவேன்னு சொன்ன இங்க பாருடி இவங்களெல்லாம் வெயில் பார்க்காம சேத்துல இறங்கி வேலை பார்த்ததுனாலதான் நாம ஏசி ரூம்ல உட்கார்ந்து சாப்பிட்டு சம்பளம் வாங்கினோம் சேறுதான் டி பல பேருக்கு சோறுபோடுது. பம்பு செட்டு தொட்டியில தண்ணியிருக்கும் காலை கழுவலாம்” என்று அவளை கூட்டிக்கொண்டு போக “கண்ணா சினிமாவுல வரது போல என்னை தூக்கிட்டு போகமாட்டியா?” என்றாள் கொஞ்சல் மொழியுடன்.

கண்ணனோ வயற்காட்டை சுற்றிப்பார்த்தான் அனைவரும் குனிந்து வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். தீபாவை கையில் தூக்கிக்கொண்டு பம்பு செட்டுக்குச் சென்றவன் மோட்டார் தொட்டிக்குள் போட்டு விட்டு தானும் குதித்ததும் “ஏய் ஜாலியா இருக்கு கண்ணா” என்று கண்ணனின் கையை பிடித்துக்கொண்டதும்

“எனக்கு உன்னை இப்படி பார்த்ததும் டெம்ப்ட்தான் ஆகுது” என்றான் அவளது ஆடை விலகிய அழகுகளை பார்த்து.

“ஏய் கேடி நாம இப்ப வெளியே இருக்கோம்டா அடங்கி இரு” என்று அவனது முகத்தில் தண்ணீரை அள்ளி அடித்தாள்.

அவனோ “இந்த நேரம் யாரும் வரமாட்டாங்கடி” என்று அவள் மேல் தண்ணீரை அள்ளி தெளித்து இருவரும் தண்ணீருக்குள் விளையாடிக்கொண்டிருந்தனர். கண்ணனுக்கு கிணற்று தண்ணீருக்குள் இருந்து பழக்கம் ஆனால் தீபாவிற்கோ கொஞ்ச நேரத்தில் தண்ணீருக்குள் இருக்கவே குளிரில் நடுங்கினாள்.

அவள் நடுங்குவதை கண்ட கண்ணனோ “தோப்புக்கு வந்தா தங்கறதுக்கு அறை இருக்கு ட்ரஸை காயவச்சிட்டு போகலாம்” என்று அவளை தூக்கிக்கொண்டு சிறியதாய் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்தவன் அவளை ஈர ஆடையில் பார்த்தவனுக்கு ஹார்மோன்கள் எக்குதப்பாய் ஆர்ப்பரித்தது அவளை ஆளவேண்டுமென்று அவளது கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

“டேய் வீட்டுக்கு போகலாமா?” என்று அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள் வெட்கத்தில்.

“இந்த இயற்கைக்கு நடுவுல இருக்க வீட்டுக்குள்ள நாம ஒண்ணா சேர்ந்தோம்னா அதுல ஒரு கிக்குடி” என்று கண்ணடித்தவனோ அங்கிருந்த கயிற்று கட்டிலில் தீபாவை மெல்ல படுக்க வைத்தவன் அவள் எதிர்பார்க்காத நேரம் அவளது ஈரமான சேலையை உருவினான்.

அவளுக்கோ வெட்கம் வந்து மார்புக்கு குறுக்கே கையை வைத்து மறைத்துக்கொண்டாள். இந்த நாளுக்காய்த்தான் காத்திருந்தேன் என்று அவளது அருகே நெருங்கிப்படுக்கவும் “இங்க யாரும் வரமாட்டாங்களா பயமா இருக்குடா” என்று அவனது மார்பில் படுத்துக்கொண்டாள்.

“இங்க யாரும் வரமாட்டாங்கடி கதவு லாக் போட்டு இருக்கு நான் உன் பக்கம் இருக்கேன் என்ன பயம்” என்றபடியே அவளது கழுத்தில் முகம் புதைத்தான்.

“கூசுதுடா கண்ணா” என்று சிணுங்கினாள்.

“கூசாம எப்படி பண்ண முடியும்” என்று அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து அவளது இதழில் இளைப்பாறினான். நீண்ட நெடிய முத்தம் முடிவுக்கு வந்து அவளது அங்க வனப்புகளில் அவனது பார்வை பதிய அவளோ “போடா” என்று அவனது முதுகில் அடி வைத்தாள்.

“எனக்கு எல்லாம் வேணும்டி” என மோகத்தில் பிதற்றியவன் அவளது வனப்பில் முகம் புதைத்தான்.

“கண்ணா” என்று அவனது பின்னந்தலைக்குள் கையை நுழைத்துக்கொண்டாள்.

அவளது ஆடைகளுக்கு மேலாக அவளை கொஞ்சி தீர்த்தவன் ஆடையில்லாமல் பார்க்க அவனது இதழ்கள் ஏங்கியது. பரபரவென அவளது ஆடைகளை களைந்தவன் அவளது இதழ்களை கவ்வி சுவைத்தான்.
இருவருக்கும் இதழ் முத்தம் புதிதல்ல ஆனால் திருமணம் ஆன பிறகு மெதுவாய் தன் பொண்டாட்டி என்ற உரிமையில் அவன் கொடுக்கும் முத்தம் அவனுக்கு புதிதாய் தோன்றியது.

அவனது இதழ்கள் அவளது மேனியில் தங்கு தடையின்றி விளையாடியது. அவளது அழகுகளின் மொக்குகளில் அவனது பற்தடம் பட்டு அவள் கண்சொருகினாள். அவளது கண் சொருகலில் அவனது ஆண்மை பேயாட்டம் போட்டு அவளுக்குள் மெதுவாய் மென்மையாக பூவை பறிப்பது போல பெண்மைக்குள் நுழைந்துக் கொண்டான் ஆணவன்.

“கண்ணாஆஆ” என்று வாய்திறந்தவளின் இதழ்களை கவ்விக்கொண்டான். முழுதாய் இருவரும் தாம்பத்தியத்தை இனிதாய் துவங்கிவிட்டனர். கூடல் முடிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டவன் “உனக்கு பிடிச்சிருந்ததா” என்றவனை “எனக்கு பெயினா இருக்குடா மண்டையா பிடிச்சிருந்ததானு கேட்குற” என்று அவனது மார்பில் அடித்தாள்.

“ஃபர்ஸ்ட் டைம் அப்படித்தான்டி இருக்கும்” என அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

“ம்ம் கொஞ்சம்தான் வலி ஆனா சந்தோசமா இருந்தேன்டா” என்று அவனது கன்னத்தில் எக்கி முத்தமிட்டாள். இருவரும் மீண்டுமொரு முறை கூட மாலை மங்கியது. தண்ணீர் தொட்டியில் இருவரும் குளித்துவிட்டு காய்ந்த துணிகளை போட்டுக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர்.

தென்னரசுவிற்கு இரவு தூக்கம் வரவில்லை தோட்டத்து வீட்டுக்கு போய் பார்த்துட்டு வந்துடலாமா அப்பாவை தப்பா நினைக்க கூடாது என்று அவன் மனம் துடித்தது.

இல்ல போய் பார்த்துட்டு வந்துடலாமென்று வெளியே வந்தவன் முன்னே ராஜமாணிக்கம் ஊருக்கு தெரியாமல் குடும்பம் நடத்திய குமுதாவும் ராஜமாணிக்கத்துக்கு பிறந்த மகள் அரசியும் தென்னரசுவின் முன்னால் நின்றனர்.

“யாரு நீங்க இந்த நேரத்துல இங்க வந்துருக்கீங்க அதுவும் வயசு பொண்ணை கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க?” என்றதும்

“நா.நாங்க அப்பாவை பார்க்க வந்திருக்கோம். அப்பா எங்களை பார்க்க வந்து ஒரு மாசம் ஆச்சு… எனக்கு காலேஜ் ஃபீஸ்க்கு பணம் தரேனு சொன்னாரு அப்பா ஆனா வீட்டுக்கு வரவேயில்லை” என்றாள் அழுகையுடனே அரசி.

“யாரு பாப்பா உங்கப்பா நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்கனு நினைக்குறேன்?” என்றவன் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டான்.

“ரா.ராஜமாணிக்கம்தான் என்னோட அப்பா இதோ நான், அப்பா, அம்மா மூணுபேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோ” என்று அவளது மொபைலில் இருந்த போட்டோவை காண்பித்ததும் ஆடிப்போய்விட்டான் தென்னரசு.

அவனுக்கு முகம் முழுக்க வியர்த்துக்கொட்டியது. தன் தந்தை தாயை தவிர யாரையும் ஏறெடுத்து பார்க்கமாட்டாரு என்று ஆணித்தரமாக நம்பியிருந்தவன் தலையில் பேரிடியாக ராஜமாணிக்கம் ஒருபெண்ணுடன் சேர்ந்து நிற்க ராஜமாணிக்கத்தின் தோளில் கைபோட்டு சிரிப்புடன் நின்றிருந்த அரசியை கண்டதும் அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.

2 thoughts on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top