22
ஒரு தாய் தன் மகளை எந்த நிலையில் காணக்கூடாதோ அந்த நிலையில் தான் மேனகையை கண்டார் தையல்நாயகி…
உடலில் ஒட்டு துணியின்றி சீராளனின் சட்டையை தொடைவரை போட்டு கொண்டு கண்ணீர் சிந்தியப்படி வெளியே வந்த மகளை கண்டு உயிரே போய் விட்டது என்றால்… அவள் பின்னேயே மேல் சட்டை எதுவும் இன்றி கசங்கிய தோற்றத்துடன் வந்த சீராளனை கண்டு பேரிடியே அவர் தலையில் வந்து விழுந்தது போல் நின்றார் தையல் நாயகி…
அடப்பாவீ என் குடிய கெடுத்துட்டியேடா… கூட பொறந்தவள் குடும்பத்தையே கருவறுத்திட்டியேடா குடிகார பயலே… பாவி பயலே இந்த கையால உனக்கு எத்தனை தடவை சோத்தை போட்டு இருப்பேன்… எப்படிடா உனக்கு என் பொண்ணு வாழ்க்கைய கெடுக்க மனசு வந்தது…
ஐயோ என் குடும்ப குல விளக்கை அழிச்சு புட்டானே… இனி என்ன நான் செய்வேன் யார்கிட்ட போய் முறையிடுவேன்… என் பொண்ணு வாழ்க்கை இப்படி நாசமா போச்சே…கடவுளே… பாவி பாவி இப்படி ஒரு துரோகம் பண்ண உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு… செத்துப்போ நாயே செத்துப்போ என்று சீராளனை போட்டு அடி வெளுத்து வாங்கினார் தையல் நாயகி… அவரின் அழுகுரல் கேட்டு ஊரே ஒன்று கூடின…
யார் தடுத்தும் கேட்கவில்லை… கை வலிக்க வலிக்க அடித்து துவைத்து விட்டார்…
சீராளன் மேனகையை கெடுத்த செய்தி அனைவருக்கும் தெரிந்து அதிர்ச்சியுடன் ஓடி வர… ஆண்கள் கூட்டம் திரளும் முன்னே திலோ அவசரமாக ஓடி வந்து மேனகை மீது துணியை போர்த்தி அணைத்து வீட்டிற்கு அழைத்து சென்று விட்டாள் சாமர்த்தியமாக…
“என்னப்பா சீராளா இப்படி பண்ணிட்ட… விடிஞ்சா மணவறை ஏற வேண்டிய புள்ளய மானபங்கம் படுத்திட்டியே இது உனக்கே நியாயமா…??? உன்னை இதுவரைக்கும் குடிகாரன்னு மட்டும் தான் நினைச்சேன் இன்னைக்கு அந்த புள்ள வாழ்க்கைய கெடுத்த கொடுமை காரனா நிக்கிறீயே நீயெல்லாம் மனுஷனா…!!” என ஊர் பெரியவர்கள் நிற்க வைத்து சரமாரியாக கேட்க…
சீராளன் அசையாது அப்படியே நின்றான்… அவர்கள் மிரட்டல் உருட்டல் அதட்டல் அடி எதற்கும் வாயை திறந்தான் இல்லை… வாயை இறுக பூட்டி மௌனியாக நின்றான்…
விஷயம் கேள்விப்பட்டு வந்த மாப்பிள்ளை வீட்டாரும்… சீராளனை போட்டு அடிக்க அவர்களை குறுக்கே புகுந்து தடுத்து விட்டான் கிரிதரன்…
என்னை தடுக்காதீங்க விடுங்க அவனை அடிச்சு கொன்னு புதைச்சா தான் என் ஆத்திரமே தீரும் என மேனகைக்கு முடிவான மாப்பிள்ளை சுதர்சன்… ஆவேசத்துடன் கத்த…
இருப்பா தம்பி கொஞ்சம் அமைதியா இருங்க… இவன அடிச்சு போடுறதால மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன… இங்க கேள்விக்குறியாகி நிக்கிறது அந்த பொண்ணோட வாழ்க்கை… அதுக்கு என்ன பண்ணலாம் அதை மொதல்ல பேசி முடிவு எடுப்போம்… நீங்க என்ன சொல்றிங்க… ஊர் பெரியவர் மாப்பிளை அபிப்பிராயத்தை கேட்க…
யாரோ ஒரு குடிகார நாய் தப்பு பண்ணினதால நான் மேனகைய விட்டு கொடுக்க மாட்டேன்… என்ன நடந்தாலும் சரி மேனகை தான் என் மனைவி… என உறுதியாக கூறியவனை கண்டு ஊரே மெச்சியது… ஆனால் அவன் வீட்டுக்கு இளிச்சவாயனாக தான் தெரிந்தான்….
உனக்கு என்ன புத்தி கெட்டு போச்சா டா… இப்படி கெட்டுப் போய் வந்து நிக்கிற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற… நீ ஒத்துக்கிட்டாலும் நாங்க அந்த பொண்ண எங்க வீட்டு மருமகளா ஏத்துக்க மாட்டோம்… ஒழுங்கு மரியாதையா அந்த பொண்ண இங்கேயே தலைமுழுக்கிட்டு எங்க கூட வா என சுதர்சன் தந்தை மிரட்ட…
மகன் முரண்டு பிடிக்க தந்தை மறுக்க என மீண்டும் உள் நாட்டு கலவரம் ஆனது…
எப்பா இப்படி உங்களுக்குள்ளே அடிச்சுக்குறது நல்லவா இருக்கு அட நிறுத்துங்கப்பா… பாதிக்கப்பட்டது அந்த பொண்ணு தான் நாளைக்கு வாழ போறதும் அந்த பொண்ணு தான் பேசாம அதுகிட்டயே என்ன முடிவுனு கேட்டுடுங்க அதுதான் எல்லாருக்கும் நல்லது என முடிவு எடுக்க…
மேனகையை அழைத்து அவள் விருப்பத்தை கேட்க… நீ தைரியமா சொல்லுமா உன்னை காலம் முழுக்க கண் கலங்காமல் வச்சி பார்த்துக்கிறேன்… இந்த நாய நினைச்சி நீ பயப்பட வேணாம்… நீ தெருவுல போறப்போ தெரியாமல் உன் மேல சகதி பட்டா அது உன் தப்பில்லை அந்த சாக்கடையை சுத்தம் செய்யாத ஊர் தப்பு… அதுக்காக எல்லாம் உன்னை நான் வெறுக்கவும் மாட்டேன் விட்டு கொடுக்கவும் மாட்டேன் என சுதர்சன் நெஞ்சை நிமிர்த்தி கூற…
கை கூப்பி அவனை கண்ணீர் கண்களோடு ஏறிட்ட மேனகா சடார் என்று அவன் காலில் விழுந்து விட…
ஸ்தம்பித்து போயினர் அனைவரும்…
ஏய் என்னமா பண்ற எந்திரி என அவளை எழுப்பி விட
“உங்க பேச்சே உங்க நல்ல மனசை எடுத்து சொல்லுதுங்க… உங்கள மாதிரி நல்ல மனுஷன் கிடைச்சது எந்த ஜென்மத்து புண்ணியமோ தெரியல ஆனா அதை விட மன்னிக்க முடியாத பாவத்தை செஞ்ச பாவியா உங்க முன்னாடி கூனி குறுகி நிக்கிறேன்… நீங்க நல்லவர் உங்க தங்க மனசுக்கு என்னை விட சுத்தமான நல்ல பொண்ணு தான் கிடைக்கணும்… நா…நான் ஒரு பாவி… நான் மாசு பட்டவள் உங்களுக்கு வேண்டாம் என்னை மன்னிச்சிடுங்க… என்னை விட்ருங்க… நான் என் மாமாவையே கட்டிக்கிறேன்…!!”என்று கூறியவளை கண்டு ஏமாற்றத்துடன் தோற்றுப் போனான் சுதர்ஷன்…
ஏன்டா இதுக்கு மேல இங்க இருந்து என்னடா செய்யப் போற அதான் உன் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டாங்க இல்ல வா… இந்த பொண்ணு இல்லனா ஊர்ல வேற பொண்ணு இல்லையா… ஏன்டா மாரியப்பா உன் பொண்ணு ரத்னா இங்க தான இருக்கா… அவளை என் பையனுக்கு கட்டி தர உனக்கு சம்மதமா…?? என மாப்பிள்ளை அப்பா சூட்டோட சூட்டாக ஒரு முடிவை எடுக்க…
என்ன மச்சான் இப்படி கேட்டு புட்டிங்க… நீங்க சொந்தத்துக்குள்ள பொண்ண வச்சுட்டு அசல்ல எடுக்கும்போதே நான் ரொம்ப வருத்தப்பட்டேன்… என் பொண்ண நம்ம சுதர்சனுக்காகவே வளர்த்து வச்சி இருந்தேன்…நீங்க ம்ம்ம் னு சொன்னா போதும் அவளை மணமேடை ஏத்திப்புடுவேன்… ஆனால் மாப்பிள்ளை… என பெண்ணை கொடுக்க சுதர்சனின் சொந்த அத்தை மாமா ஒத்துக் கொள்ள…
அவன் கிடக்கிறான் அவன் எடுத்த முடிவு தான் விளங்காம போச்சே… இனி அவன் கிட்ட என்ன கேட்கிறது கட்டுடா தாலியனா கட்டி தான் ஆகணும்… என்று மகனை பார்க்க அவனோ தோற்று விட்ட வலியில் நிற்க அதற்கு மேல் மறுக்கவோ தடுக்கவோ அவனால் முடியுமா??? வேறு வழி இல்லாமல் தந்தை காட்டிய பெண்ணின் கழுத்தில் கடமைக்காக தாலி கட்டினான் குறித்த முகூர்த்தத்தில்…
கவலை வேண்டாம் சுதர்சன் கடமைக்காக தாலி கட்டினாலும்… அவன் வாழ்க்கை நிச்சயம் கடமைக்காக இருக்காது அப்படி இருக்கவும் விட மாட்டாள் அவனின் சகதர்மினி ஆன ரத்னா…
சிறு வயதிலிருந்தே அவனுக்காக வளர்ந்தவள் அவனை மட்டுமே நெஞ்சுக்குள் வைத்து சுமந்தவள்… அவனுக்கும் மேனகைக்கும் திருமணம் என்றதும் தற்கொலை வரை சென்று வந்தவள்… தனக்கில்லை என்றானது மீண்டும் கிடைத்த சொர்க்கத்தை நிச்சயம் அவள் கைவிட்டு போக விட மாட்டாள்… அவனுக்காக உயிரையே கொடுக்க துணிந்தவள் அவன் உலகத்தை அவளுக்காக மாற்ற மாட்டாளா என்ன…??அவளின் மாசில்லாத தூய காதல் அவனை மாற்றும் என்று நம்புவோம்…
மற்ற விவாதங்களுக்கு இடம் அளிக்காமல் மேனகையே சீராளனை திருமணம் செய்துக் கொள்ள ஒத்துக் கொண்டு விட… மேனகைக்கும் சீராளனுக்கும் குறித்த நேரத்தில் திருமணம் நடக்க…
தன் கையில் கொடுத்த தாலியை வெறித்த கண்களோடு பார்த்து இருந்தான் சீராளன்…என்னப்பா யோசிக்கிற கட்டு தாலிய என பெரியவர்கள் ஊந்த… கடமையாக மேனகை கழுத்தில் கட்டி முடித்தவன்… அளவில்லா ரௌத்திரம் அவன் முகத்தில் தாண்டவம் ஆடியது… தாலி கட்டியதோடு கடமை முடிந்து விட்டது போல் விருட்டு என்று மணமேடையை விட்டு எழுந்து சென்று விட்டான்… யார் குரலுக்கும் செவி சாய்க்காமல்… விக்கித்து போனாள் பெண்ணவள்…
அடுத்து என்ன என பெரியவர்கள் ஒன்று கூடி அலசி ஆராய்ந்து… மேனகையை சீராளன் வீட்டுக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக முடிவு எடுத்து… ஆயிரத்தெட்டு அறிவுரைகள் அவளுக்கு வழங்கி அனுப்பி வைத்தனர்…
கிரிதரனும் பஞ்சாட்சரமும் மேனகையை சீராளன் வீட்டில் விட்டு வர உடன் சென்றனர்…தையல் நாயகி மகள் வாழ்வு பாழாகி போனதே என்கிற வருத்தத்தில் மூலையில் முடங்கி போனார்…
சீர் சினத்தியோடு மேனகை சீராளன் வீட்டு வாசல் வந்து நின்று வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப் படவில்லை…
ஆள் உள்ளே தான் இருக்கிறான் என்பதை உள்பக்கம் தாழ்ப் போட்டிருந்த கதவு சொன்னது…
“ஏன்பா சீராளா என்னப்பா இது சின்னப் புள்ள தனமா பண்ணிக்கிட்டு இருக்க… பொண்ண கொண்டு வந்து விட்டு போக மச்சானும் மாப்பிள்ளையும் வந்து வாசல்ல எம்புட்டு நேரம் நிப்பாங்க… மத்தவங்கள விடு உன் மச்சான நினைச்சு பாரு… ஊரே நிமிர்ந்து பார்க்கும் பெரிய மனுஷனை இப்படி வாசல்ல காக்க வைக்கிறது எல்லாம் நல்லாவா இருக்கு… உங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் உள்ள கூட்டி போய் பேசுபா… என்றதும் படார் என கதவு திறந்து கொண்டது அவ்வளவு தான்…மற்றபடி ஆள் வெளியே வரவே இல்லை… அது மேனகை உட்பட அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்த…
பொருட்களை எல்லாம் உள்ளே வைக்க சொன்ன பஞ்சாட்சரம் வெளியேவே உட்கார்ந்து கொண்டார் மதியாதார் தலைவாசல் மிதியாதே என சொல்லி கொடுத்தவர் ஆகிற்றே…
மேனகைக்கு சீராளனின் இந்த செயலில் வருத்தமே… ஆனாலும் அவனை விட்டு கொடுக்க முடியாதே…
“அப்பா மனசுக்குள்ள எதையும் வச்சுக்காதீங்க… அவருக்கு என் மேல கோவம் அதுதான் உங்க மேலையும் மத்தவங்க கிட்டையும் காட்டுறார் எனக்காக அவரை மன்னித்து விடுங்க அப்பா… என ஒரே நாளில் வளர்ந்த பொண்ணாக நின்ற மகளை பார்க்க பஞ்சாட்சரத்துக்கும் கிரிதரனுக்கும் ஆச்சரியம் தான்…
“பரவால்லடா நான் தூக்கி வளர்த்த பையன் தான எங்க போயிட போறான்… பார்த்துக்கலாம் அவனே வந்து வாங்க மாமா கூப்பிடற காலம் வராமலா போக போகுது… நீ போ தாயீ உம்ம நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாதாவே நடக்கும் அப்பா எப்பவும் உனக்கு உறுதுணையா உன் கூடவே இருப்பேன்… நீ போற இடத்துல பொறுப்பா வாழறத நான் என் கண்ணாற பார்க்கணும்… படிச்ச புள்ள உனக்கு சொல்ல தேவை இல்லை… என பெரு மூச்சு விட்டு உள்ளே பார்த்தவர்… என் தாயீ குணத்துக்கு எல்லாம் சரி ஆகிடும் நீ நிம்மதியா போ வாழு தாயீ…!!” என மகளை ஆசீர்வாதம் செய்ய…
கிரிதரனிடம் வந்தவள் அவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க போனவளை பிடித்து… “நல்லா இருமா எனக்கு அப்பா மாதிரி அட்வைஸ் பண்ணத் தெரியாது… அதற்கான தகுதியும் என்கிட்ட இருக்கான்னு தெரியல… ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் நமக்கு பிடிச்சவங்கள எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க கூடாது… நமக்கு பிடிச்சதை அடைய எவ்வளவு வேணாலும் போராடலாம்… என்னைக்காவாது ஒரு நாள் நம்மள புரிஞ்சி கிட்டு நம்மள ஏத்துப்பாங்க அதுவரை மனசு விட்ராம போராடுறதில தான் இருக்கு… நம்மளோட வாழ்க்கை என்ன புரிஞ்சிதா…!!” என தன் அனுபவத்தை வைத்து அறிவுரை வழங்கி மேனகையை அனுப்பி வைத்தான்…
உள்ளே சென்ற மேனகை சீராளனை தேடி போக அவனோ உள் அறைக்குள் முகத்தை மூடி படுத்து கிடந்தான்… உறங்கவில்லை முழித்து கொண்டு தான் இருந்தான் அவன் உடல் மொழியை வைத்து கண்டு பிடித்தாள்…
தயங்கி தயங்கி அவன் கைகளை தொட போக…
சட்டென்று முகத்தை மறைத்து இருந்த கையை விலக்கியவன் கண்ணில்… அத்தனை ரௌத்திரம்… தீ பிழம்பென கண்கள் சிவக்க… செங்குருதி வழிந்தோட நீட்டி இருந்த மேனகையின் கைகளை படார் என்று தட்டி விட்டவன்…
“இப்போ உனக்கு சந்தோசமா… முன்ன போனவளாவது எனக்கு **** பட்டத்தை மட்டும் தான் வாங்கி கொடுத்தா… ஆனால் நீ, ஆறாத பழியையும் துரோகிங்குற பட்டத்தையும் வாங்கி கொடுத்துட்டியே ராட்சசி… இனி எப்படி நான் என் அக்கா முகத்துல முழிப்பேன்… இந்த ஊரே என் மூஞ்சில காறி துப்ப வச்சிட்டல்ல…!!” என மேனகையின் கன்னத்தில் பளார் பளார் என்று அடிக்க…
அவள் ஆஆ மாமா மாமா நா… என வார்த்தை வராமல் சீராளனின் முரட்டு தனத்தில் மிரண்டு போய் முழிக்க…
“ஏண்டி ஏண்டி இப்படி செஞ்ச… இதோ இந்த தாலிய வாங்க தான இத்தனையும் செஞ்ச… அந்த தாலிய எப்படி உன் கழுத்துல இருந்து எடுக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்… என்ன பார்க்கிற நான் உயிரோட இருந்தா தான இந்த தாலி கழுத்துல தொங்கும்… நான் போறேன்… உன் கண் காணாமல் எங்கேயாவது போய் செத்துப் போறேன்…நீ இந்த தாலியவே கட்டிக்கிட்டு அழுவு என்று ஆத்திரத்தில் அறிவிழந்து கத்தி விட்டு மேனகையை பிடித்து தள்ளி விட்டு வெளியே சென்ற சீராளன் இரவாகியும் வீடு திரும்பவே இல்லை…
Strategies for a Successful Business Start, key moments.
renewable energy for businesses [url=buisenessdays.com/sustainable-business-practices-how-going-green-can-boost-your-brand]buisenessdays.com/sustainable-business-practices-how-going-green-can-boost-your-brand[/url] .
New Technologies for Construction, to reduce costs.
latest construction methods [url=https://www.rapidlybuild.com/]https://www.rapidlybuild.com/[/url] .
Checking the History.
types of car insurance coverage [url=https://livelycars.com/a-beginners-guide-to-car-insurance-types-and-coverage-options/]types of car insurance coverage[/url] .
How to prepare yourself for starting a business, learn, a step-by-step approach.
small business loans for startups [url=http://timetobuiseness.com/funding-your-business-how-to-find-investors-and-secure-capital/]http://timetobuiseness.com/funding-your-business-how-to-find-investors-and-secure-capital/[/url] .
Affordable vehicles for rent, with a simple process.
rent a car paphos [url=neochorion.com ]neochorion.com [/url] .