அத்தியாயம் 31
கணவனின் மோக சிரிப்பை கண்டு மனைவிக்கு வெட்கம் வந்துவிட்டது. “போங்க மச்சான்” என்று அவன் மார்பில் கை வைத்து தள்ளி டவலுடன் குளியலறைக்குள் நுழைந்தாள் முல்லை.
அவளுக்கு முன்னே குளியலறைக்குள் நுழைந்துவிட்டான் ராயன்.
“அச்சோ மச்சான் என்ன இது விளையாட்டு இன்னும் எல்லாரும் முழிச்சிருக்காங்க” என்று முல்லை சிணுங்கினாள்.
சிணுங்கியவளை சிவக்க வைத்தான் முத்தம்கொடுத்து. இருவரும் வெகுநாட்கள் கழித்து கொடுக்கும் முத்தம் அவனுக்கு அவள் இதழில் இருந்து பிரிந்து வரவே மனமில்லை. ஆனால் பெண்ணவள் இருக்கும் சூழ் கண்டு அவள் இதழை விட்டு பிரிந்து பெரும்மூச்சு விட்டு பின்னந்தலையை அழுந்தக்கோதிக்கொண்டான் அவனது ஆசையை அடக்க முடியாமல்.
கணவனின் நிலையை புரிந்துக் கொண்டவள் ராயனின் கன்னத்தை பற்றி தன்னை பார்க்க வைத்தவள் “மச்சான் ஏன் தயக்கம் டாக்டர் நம்மளை பாதுகாப்பா சேர்ந்துக்க சொல்லியிருக்காங்க நீங்க பயப்படத்தேவையில்லை” வெட்கப்புன்னகையுடன் அவனது முன் சட்டை பட்டனை கழட்டி வெற்று மார்பில் முத்தமிட்டாள்.
“புள்ளஅஅ” என்று அவன் இதழ்கள் மோகமாய் பிதற்றியது. கோபம் மறைந்து முதல் கூடல் இருவருக்கும். அவளது சேலை எப்போது அவளது மேனியிலிருந்து காணாமல் போனது என்று அவளுக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது.
கைகளில் தன்னவளை தூக்கிக்கொண்டு கட்டில் வரை போவதற்குள் மோகம் அவனை அலைக்கழித்தது. அவளது இதழில் முத்தமிட்டுக்கொண்டே மெத்தையில் கிடத்தியவன் பெண்ணவளின் நெற்றியில் மெல்ல இதழ் ஒற்றினான். அவள் அவன் கண்களை பார்த்திருந்தாள் அவனது கோபம் போய்விட்டாதாவென்று.
“கோபம் இப்போ இல்லடி” என்று அவளது மூக்கில் முத்தமிட்டு அவனது கன்னத்தையும் லேசாய் கடித்து வைத்தான்.
“மச்சான் நானும் கடிப்பேன் மெதுவா கடிங்க” என்றவளோ சொன்னதோடு அல்லாமல் அவனது கன்னத்தை கடித்தும் வைத்தாள்.
“நானும் கடிப்பேன்டி என்னை பத்தி தெரியும்ல” என்று இதழ்கடித்தவனின் பார்வை போன இடத்தை கண்டு “சீ போக்கிரி மச்சான்” என்று அவனது வெற்று மார்பில் மென்மைகள் அழுந்த புதைந்து கழுத்து வளைவில் முகம் புதைத்தாள்.
ராயனின் கைகள் அவளது பஞ்சுபொதிகளை ஆராய்ந்தது. அவளது காதில் ஏதோ இரகசியம் பேசினான். “ஆமா மச்சான் கொஞ்சம் பெ.” என்று அவளால் சொல்ல முடியாமல் உதடு கடித்தாள்.
அவளது ஆழிலை வயிற்றில் மெதுவாய் முத்தமிட்டான். “பட்டு பாப்பா அம்மாவுக்கு தொந்தரவு கொடுக்காதீங்க” என்று மீண்டும் மென்மையாய் ஒரு முத்தம் அவனது உதடு பட்டதில் அவளது உடலில் சிலிர்ப்பு உண்டாக “மச்சான்” என்று அவனது உச்சந்தலையை இழுத்து மேலே போட்டுக்கொண்டாள்.
அதற்குமேலும் அவனது உதடுகளும் கைகளும் சும்மா இருக்குமா! முன்னே போல முரட்டுத்தனம் இல்லாமல் பூபோல நடத்தினான் பெண்ணவளை. ஊடலுக்கு பிறகு வரும் கூடல் இனிக்கும் அல்லவா! பெண்ணவளின் மென்மையை பூ போல தொட்டு உதடுகளால் ஒத்தடம் வைத்தான்.
“மச்சான்” என்று அவள் மோகத்தில் இதழ் கடித்தாள்.
“ரிலாக்ஸ் புள்ள” என்று அவளை மெல்ல அணைத்து இதழில் முத்தமிட்டு பெண்ணவளுக்குள் நுழைந்துக் கொண்டான்.
கூடல் முடிந்து அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து “இப்பவும் புது பொண்ணு போலவே இருக்கடி சோ சாஃப்ட்” என்று அவளது மார்பில் தலைசாய்த்தான்.
“இருக்கும் இருக்கும் எனக்கு மூச்சு முட்டுது தள்ளிப்போங்க மச்சான்” என்று அவனது முடியை பிடித்து இழுக்க அவன் செய்த வேலையில் “ஆவ் விடுங்க மச்சான் வலிக்குது” என்று அவள் கத்த வேண்டியதாய் போச்சு. அவளுக்கு பசியெடுக்க “மச்சான் பசிக்குது” என்றாள் சிணுங்கலாக.
“குளிச்சிட்டு சாப்பிட போகலாம்டி” என்றவனோ அவளை மீண்டும் கையில் ஏந்தி குளியலறைக்குள் சென்று குளித்து வந்ததும் “இந்த மாதிரி நேரத்துல நைட்டி போட்டுக்கோடி ஃப்ரீயா இருக்கும்ல” என்று அவளுக்கு கப்போர்ட்டிலிருந்து நைட்டியை எடுத்துக்கொடுத்தான்.
“ஆமா மச்சான் வயிறு பெருசாக பெருசாக ட்ரஸ் இறுக்கமா போடக்கூடாது அறைக்குள்ள இருக்கும்போது நைட்டியே போட்டுக்குறேன் பெரியம்மா ஏதும் சொல்லுவாங்கனு தான் பயமா இருக்கு” என்றாள் கண்களை சுழட்டி.
“பெரியம்மா பேசமாட்டாங்க புள்ள நீ அவங்களுக்காக பயப்படத்தேவையில்லை” என்றவனோ டைனிங் டேபிளுக்குச் சென்றவன் இட்லியை எடுத்து வந்து அவளுக்கு ஊட்டி விட்டான். அவளுக்கு இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிட்டதும் குமட்டிக்கொண்டு வந்தது.
“மச்சான் சாப்பிட முடியாது வாமிட் வரது போல இருக்கு” என்று முகம் சுளித்தாள்.
“இன்னும் ஒருவாய் சாப்பிடு புள்ள” என்று அவளை செல்லமாய் அதட்டி மூணு இட்லியை ஊட்டிவிட்டான். ஆனால் அடுத்த நிமிசம் ராயனின் மேல் சாப்பிட்டதை வாந்தி எடுத்து விட்டாள்.
“அச்சோ சாரி மச்சான் நான்தான் சொன்னேனே என்னால சாப்பிட முடியாதுனு” என்று இதழ் பிதுக்கினாள்.
“இப்போ என்ன வாஷ் பண்ணினா போகுது” அவளை தூக்கிக்கொண்டுச் சென்றவன் சுத்தப்படுத்தி அறைக்குள் கொண்டு வந்து படுக்க வைத்து சமையல்கட்டுக்குச் சென்று பால் ஆத்தி எடுத்து வந்தான்.
“மச்சான் உங்களை சிரமப்படுத்துறேன்” என்று சிணுங்கியவளை “எனக்கு புள்ளைய பெத்து கொடுக்குற மகராசிக்கு என் உயிரையே தருவேன் புள்ள பாலைக்குடிச்சிட்டு தூங்கு புள்ள” என்றான் அவளது தலையை வருடி.
அவளும் “இந்த பாலாவது தங்குமானு தெரியலை மச்சான்” என்று பாலைவாங்கிக்குடித்து விட்டு கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டாள். கதவை அடைத்து வந்தவன் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு தலையை வருடிக்கொடுக்க அப்படியே கண்உறங்கி விட்டாள். அவனுமே தன்னவளை சுமந்திருக்கிறோம் என்ற ஆனந்தத்தில் உறங்கிவிட்டான்.
தீபாவுக்கு வீட்டில் உள்ள அனைவரும் முல்லையை தலையில் வைத்து தாங்குகிறார்கள் தன்னை யாரும் சாப்பிட்டியா என்று கூட கேட்பதில்லை என்று வருத்தம் அவளுக்கு.
கண்ணனுடன் இணக்கமாகத்தான் இருக்கிறாள். இந்த வீட்டில் முதல் மரியாதை ராயனுக்கு கிடைக்கிறது கண்ணனுக்கு எதுவும் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டாள். ராயன் கண்ணனை பாசத்துடன் நடத்துவதும் அவனுக்கு தொழிலை கற்றுக்கொடுப்பதை கவனிக்க மறந்துவிட்டாள். தையல்நாயகி ராயனை விடவும் கண்ணன் மேல் பாசம் கொண்டவர் கண்ணனுக்கு பிடித்த மீன்குழம்பை தனியாக எடுத்து வைத்திருந்து அவனுக்கு சாப்பிட கொடுப்பார். இவற்றையெல்லாம் வந்த மூன்று மாதத்தில் தீபா பார்த்திராதது அவளது தவறு.
எந்நேரமும் போனும் கையுமாக அறைக்குள் அடைந்து கிடப்பாள். வீட்டில் பெரியவர்கள் பேசினால் பதில் கொடுத்துவிட்டு வந்து விடுவாள். முல்லை இந்த வீட்டில் வேலை செய்த வேலைக்காரி என்று கோமளம் கூறியதிலிருந்து நான் வசதியான வீட்டுப் பொண்ணு நானும் அவளும் ஒன்னாவென்று முல்லையை இளக்காரமாக பார்த்தாள். முல்லையிடம் அதிகம் பேச்சு வைத்துக்கொள்ளவில்லை.
அறைக்குள் கதவை லாக் பண்ணிக்கொண்டு பரமசிவத்திடம் அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருப்பாள். கோமளமோ போனமாதம் தீபா தலைக்கு குளித்ததும் என்ன இந்த மாசமும் தலைக்கு குளிச்சிட்டியா சீக்கிரம் மாசம் ஆகி எனக்கு பேரனை பெத்துக்கொடு அவன் இந்த வீட்டை ஆளணும் என்று அவளை வெறுப்பேத்திக்கொண்டிருந்தார்.
ஆனால் ராயனுக்கு குடும்பம் கொடுக்கும் மரியாதையை கண்டு அத்தை சொல்வது சரிதான் நாம குழந்தைக்கு ப்ளான் பண்ணனுமென்று கண்ணனுடன் காதலுடன் கலந்திருந்தாள் தீபா.
அன்று காலை நேரமே எழுந்து கிச்சனுக்கு வந்தவள் “அமுதாம்மா நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றவளோ ப்ரிட்ஜிலிருந்து காய்கறிகளை எடுத்து நறுக்க ஆரம்பித்தாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வந்திருக்கலாம் மா நானே எல்லா வேலையும் முடிச்சிருப்பேன் உனக்கு ஏன் சிரமம்மா நான் பார்த்துக்குறேன்” என்றவரை
“இல்லம்மா எனக்கு நாலு பேருக்கு மட்டும் சமைக்க அளவு தெரியும் இந்த வீட்டுல யாருக்கு என்ன சமையல் பிடிக்கும்னு கத்துக்கிடலாம் பாருங்க! நான் இந்த வீட்டு சின்ன மருமகதானே உங்க மக போல இன்னும் எழுந்து வராம படுத்திருக்க முடியுமா?” என்றாள் ஊசி குத்தும் வார்த்தைகளில்.
அமுதா தீபா பேசியதில் அதிர்ந்து விட்டார். “முல்லை கர்ப்பமா இருக்காமா அதான் எழுந்து வர முடியலைமா இல்லைனா அவ என்னைக்கூட எதிர்பார்க்க மாட்டா ஒத்த ஆளா இருந்து சமையலை முடிச்சிடுவா” என்றார் கள்ளம் கபடம் இல்லாமல்.
“அப்போ எனக்கு சமைக்க வராதுனு சொல்ல வரீங்களா?” என்று மிளகாய் போல காய்ந்தாள்.
அழகம்மை டீ குடிக்க வந்தவர் “என்ன தீபா பெரியவங்க கிட்ட இப்படித்தான் வாயாடுவியா முல்லை கர்ப்பமா இருக்கா அதான் அவளால எழுந்துக்க முடியலை… உன்னையும் யாரும் இங்க கட்டாயப்படுத்தி வேலை பார்க்க சொல்லலையேமா இந்த வீட்டுக்குள்ள வேலை செய்ய இதுவரை யாரும் போட்டி போட்டது கிடையாதுமா! நீ படிச்ச பொண்ணு பக்குவமா நடந்துக்கோ..!” என்று பொறுமையாக பேசியவர்
“அமுதா எனக்கு காலையிலயே தலை வலிக்குது ஒரு டம்ளர் டீ போட்டுத்தரியா?” என்றார் தலையை பிடித்தபடியே.
“நான் பேசறதை கேட்டு உங்களுக்கு தலை வலி வந்துருச்சா சித்தி?” என்றாள் வம்பிழுக்க எண்ணி.
“என்ன சத்தம் இங்கே?” என்று வந்தார் கோமளம்.
அழகம்மையோ “அண்ணி நீங்க கூட என்னை இந்தளவு பேச வச்சதில்லை” என்று சலித்துக்கொண்டதும்
“அழகு இந்த வீட்டுப் பொண்ணு… எனக்கு கொடுக்கற மரியாதையை அழகுக்கும் கொடுக்கணும தீபா” என்றார் சிறு அதட்டலுடன்.
“நேத்து நீங்கதானே சொன்னீங்க அத்தை உனக்கு சரினு படறதை தைரியமா பேசுனு இந்தவீட்டுல உங்களுக்கு மட்டும்தான் நான் மரியாதை கொடுப்பேன் இவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை” என்று பொரிந்து தள்ளியவளின் சத்தம் கேட்டு வந்த கண்ணனோ
“என்னடி வாய் நீளுது கன்னம் பழுத்திடும் பார்த்துக்கோ முல்லை அண்ணி யாரையும் ஒரு வார்த்தை எதிர்த்து பேசினது கிடையாது தெரியுமா” என்று கையை ஓங்கிக்கொண்டு வந்தான்.
கோவிலுக்குச் சென்று வந்த தையல்நாயகியோ “சின்னவனே என்ன இது நடு வீட்டுல பொண்டாட்டி மேல கையை நீட்டுற பழக்கம்” என்று அவர் அதட்டியதும்
கோமளம் கண்ணனை முறைத்தார். “தீபா உன்னை யாரு சமையல்கட்டுக்கு போகச் சொன்னது?” என்றார் கோமளம் கோபத்துடன்.
“நம்ம வீட்டு பழக்கத்தை கத்துக்கட்டும்னு நான்தான் சமையல்கட்டுக்கு போச்சொன்னேன்மா இப்போதான் இவளை ஏன் சமைக்க போகச்சொன்னேனு வருத்தமா இருக்கு” என்றான் தீபாவை முறைத்தபடி கண்ணன்.
“இந்த வீட்டுல எனக்கு ஒரு மரியாதையும் முல்லைக்கு ஒரு மரியாதையும் கிடைக்குது. அவளுக்கு அழகு அம்மா ஜுஸ் கொடுக்குறாங்க..! நாயகி அத்தை இஞ்சி டீ போட்டுக்கொடுக்கறாங்க மகளுக்காக அமுதாமா சமையல்கட்டுல எல்லாம் வேலையும் பார்க்குறாங்க..! என்னை யாருமே ஒருவாய் டீ குடிச்சியானு கேட்கலையே ஒரு கண்ணுல வெண்ணெய்யும் ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வைக்குறீங்க” என்று எண்ணெயில் போட்ட கடுகாக வெடித்தாள்.
ராயன் தீபா பேசுவதை காதில் கேட்டுக்கொண்டுதான் இருந்தான் பெண்கள் பிரச்சனைகளில் தலையிடக்கூடாது என்று ஒதுங்கி இருந்தான்.
இதெல்லாம் தெரியாமல் முல்லை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். கதவை வெளியே லாக் போட்டு விட்டு வந்த ராயனோ கண்ணனை பார்த்தவன் “கம்பெனிக்கு வராம இங்க என்ன பண்ணுற கிளம்பி வா நிறைய வேலை இருக்கு” என்றவனோ “அம்மா நான் கிளம்புறேன் ” என்று ஹேங்கரில் மாட்டியிருந்த கார் கீயை எடுத்தான்.
“ஒரு நிமிசம் நில்லுங்க ராயன்” என்றாள் தீபா.
வீட்டு பெரியவர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டனர். கண்ணனோ “என்னடி அண்ணாவை பேரு சொல்லி கூப்பிடற!” என்று அறைந்தே விட்டான் தீபாவின் கன்னத்தில்.
“கண்ணா இந்த பக்கம் வா” என்ற ராயனோ தீபாவின் முன்னே நின்றவன் “என்னனு சொல்லுமா” என்றான் நிதானமாக.
“எனக்கு இந்த வீட்டோட சாவிக்கொத்து வேணும் அப்புறம் பால்பண்ணையை எங்க வீட்டுக்காரர் பேர்ல எழுதி வச்சிடுங்க” என்றாள் அதிகாரமாக.
கோமளம் ராயனிடம் கேட்கமுடியாமல் மருமகளிடம் ஏவிவிட்டிருந்தார் நீ கேட்டா ராயனால் கொடுக்க மாட்டேன்னு சொல்லமுடியாதென்று.
ராயனோ கோமளத்தை ஆழ்ந்து பார்த்தவன் “கம்பெனியை கொடுக்க முடியாதுமா பெரியம்மாகிட்ட இருக்க சாவியை வேணா வாங்கி வச்சிக்கோ” என்றான் பொறுமையாக.
“ஏன் கொடுக்க முடியாது நீங்க எப்படி இந்த வீட்டு பேரனோ அதுபோலத்தான் என் புருசனும் இந்த வீட்டு பேரன்” என்றாள் தெனாவெட்டாக.
கண்ணனோ “ஏய் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன்டி ராயன் அண்ணா அந்த பால்பண்ணையை உருவாக்கினவரு. எத்தனை நாள் தூக்கம் கூட இல்லாம உழைச்சு இருக்காரு தெரியுமா. ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட சொத்து இருந்தாலும் அதை இன்னும் ஏழு தலைமுறை உட்கார்ந்து சாப்பிட உழைச்சு உயர்த்தியிருக்காரு. அண்ணாகிட்ட கேள்வி கேட்க உனக்கு உரிமை கிடையாதுடி… என்னை மீறி அண்ணாவை கேள்வி கேட்டா இந்த நிமிசமே வெளியே போயிடு” என்று அடிக்க கையை ஓங்கியவனை “கண்ணா” என்று ராயன் குரல் உயர்ந்து தடுத்து நிறுத்தியது.
“அண்ணா அவ ரொம்ப வாய் பேசுறா அவளுக்காக நான் மன்னிப்பு கேட்குறேன்” ராயனின் கையை பிடித்துக்கொண்டான்.
“வீட்டு வேலை விசயத்துல நான் தலையிடமாட்டேன் ஆனா பால்பண்ணையை ஒருநாளும் யாருக்கும் எழுதி தரமாட்டேன் பால்பண்ணை பொதுவுலதான் இருக்கும். மத்த சொத்துக்கள் என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ” என்று பொறுமையாகவே பேசியவன் கோமளத்தை பார்த்தான்.
கோமளோ “தீபா சின்னப் பொண்ணு ராயா அவ ஏதோ தெரியாம பால்பண்ணையை எழுதிக்கொடுக்க கேட்டுட்டா அவளை மன்னிச்சிடுப்பா அவ சார்பா நான் மன்னிப்பு கேட்குறேன்” என்றார் வருத்தமாக.
“பெரியம்மா பெரிய வீட்டு சொத்தை இதுவரைக்கும் யாரும் பிரிக்காமதான் இருந்தோம் நீங்களா பார்த்து சொத்தை பிரிச்சு வைச்சுடுங்க… நான் இதுல தலையிடமாட்டேன் எங்க கையெழுத்து போடணுமோ நான் போடறேன்” என்றதும் கோமளத்திற்கு இப்போதுதான் கண்ணன் தங்களது குலத்தொழிலை கற்றுக்கொண்டிருக்கிறான். சொத்தை பிரித்துவிட்டால் கண்ணனை கைவிட்டுவிட்டால் என்ன செய்வது கொஞ்சம் காலம் கண்ணன் தொழிலை கற்றுக்கொள்ளட்டும் சொத்து எங்கே போய்விடப்போகிறது! இப்போதைக்கு சொத்தை பற்றி பேச தேவையில்லை என்று நரித்தனமாக யோசித்தவர்
“ராயா நான் தான் சொன்னேனே தீபா சின்னப் பொண்ணு தெரியாம பேசிட்டானு நான் பார்த்துக்குறேன் எந்த சொத்தும் பிரிக்க வேணாம்ப்பா நாம எல்லாம் கூட்டுக்குடும்பமாகவே இருக்கலாம் நீ பண்ணைக்கு கிளம்பு” என்று அனைத்து பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
ராயனுக்கு எங்கே அடித்தால் எங்கே வலிக்குமென்று மந்திரம் தெரியுமே கோமளத்திடம் சூட்சமமாக பேசிவிட்டான்.
“ஏய் தீபா உனக்கு யார்கிட்ட என்ன பேசணும்னு அறிவு இல்லையா ராயன் இந்த வீட்டோட ஆணிவேர் அவன் இல்லாம ஒரு அணுவும் அசையாது” என்று கண்ணைச்சிமிட்டி அவளை அதட்டவும்
“நீங்கதானே அத்தை என்னை பேச சொன்னீங்க” என்று அவள் குசுகுசுவென்று கோமளத்தின் காதை கடித்தாள்.
“வாயை மூடு அழகு நம்மளையே பார்க்குறா நான் என்னோட ரூமுக்கு போறேன் கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம்” என்று மெல்லமாய் பேசி விட்டுச் சென்றார்.
கண்ணனோ கோமளமும் தீபாவும் பேசுவதை கண்டு எல்லாம் அம்மாவோட ப்ளான்தானா “ஏய் தீபா என்கூட வா” என்று அவனது அறைக்குள் இழுத்துச் சென்று கதவை மூடியவன் “நீ எப்படி அண்ணாவை மரியாதை குறைவா பேசலாம்?”
“அத்தைதான் இந்த வீட்டுல உனக்கு மரியாதை கிடைக்கணும்னா எல்லாரையும் எதிர்த்து சண்டை போடணும்னு சொன்னாங்க” என்று பழியை தூக்கி கோமளத்தின் மீது போட்டாள்.
“இங்கபாருடி குடும்பம் ஒத்துமையா இருக்கணும்னா நாம விட்டுக்கொடுத்து போகணும். சும்மா காசு பணம்னு எப்பவும் அலையக்கூடாது… சொந்தம் பந்தம்தான் நாளைக்கு ஏதோ ஒன்னுனா கூட இருப்பாங்க. பணம் பணம்னு ஆசைப்பிடிச்சு திரிஞ்சா ஆபத்துலதான் முடியும். அம்மா ஏதாவது உளறி வைப்பாங்க கடைசியா ராயன் அண்ணா மடக்கி பேசினதும் அவங்க நீ சொல்றது சரிதான் ராயானு அந்தர் பல்டி அடிச்சிருவாங்கடி நீதான் வாயாடி மருமகள்னு பேர் எடுக்கணும். நான் அப்போ உனக்கு உதவிக்கு வரமாட்டேன் பார்த்துக்கோ” என்று தீபாவுக்கு எச்சரிக்கை கொடுத்து பால் பண்ணைக்கு கிளம்பியிருந்தான்.
தூக்கம் தெளிந்து எழுந்து வந்த முல்லையை “இப்படித்தான் ஏழுமணி வரை தூங்குவியாடி?” என்று கடிந்துக் கொண்டார் அமுதா.
“அம்மா எனக்கு நைட் தூக்கமே வரலை காலையிலதான் அசந்து தூக்கம் வந்துச்சு” என்று சமாளித்தாள் கணவனும் மனைவியும் விடிய விடிய தூங்கவில்லை என்று அம்மாவிடம் சொல்ல முடியாமல் மறைத்துவிட்டாள்.
மேலோட்டமாக விசயத்தை கூறிய அமுதாவோ “நாளையிலிருந்து கொஞ்சம் நேரமே எழுந்து சின்ன சின்ன வேலையை பாருடி உன்னால இந்த வீட்டுல பிரச்சனை வரக்கூடாது பார்த்துக்கோ” என்று மகளை கண்டித்தார்.
“சரிங்கம்மா நான் நாளையிலிருந்து நேரமே எழுந்து வேலை பார்க்குறேன். ஆனா தீபா மச்சானை பேர் சொல்லி கூப்பிட்டிருக்க கூடாதுல” என்று கணவனின் தன்மானம் அடிப்பட்டதே என்று கவலைப்பட்டாள்.
“ராயன் தம்பி பெரிசா எடுத்துக்கல. கண்ணன் தம்பி தீபாவை அடிச்சிட்டாரு முகமெல்லாம் வீங்கிப்போச்சு” என்றார் மனத்தாங்கலாக.
“வயசுல பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு தீபா அக்காவுக்கு தெரியலை அதான் கண்ணன் மாமா அவங்களை அடிச்சிருக்காரு எல்லாம் சரிதான்மா எனக்கு பசிக்குது சாப்பாடு போடுங்க” என்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
நாளும் பொழுதும் காத்திருக்காமல் சென்றது.
நதியாவோ காலையில் பாலாஜி எழும்போது எழுந்து குளித்து சாணத்தில் வாசல் தெளித்து கோலம் போட்டு பூஜையறையில் விளக்கேற்றி சாம்பிராணி போட்டு வீட்டை தெய்வீகமாக மாற்றிக்கொண்டிருந்தாள். அனைத்தும் பக்கத்து வீட்டு பாட்டி கொடுக்கும் டிப்ஸ்… நாயகியையும் அழகம்மையையும் கோவிலில் பார்த்த நதியா “சித்தி, அத்தை நீங்க கூட என்னை பார்க்க வரவேயில்லை என்னை மறந்துட்டீங்கல்ல” என்று இருவரையும் அணைத்துக்கொண்டே மூக்கை உறிஞ்சினாள்.
“உன்னை யாரும் மறக்கல கண்ணு..!” என்று நாயகி மகளின் முதுகை வருடிக்கொடுத்தார்.
“என்னை ஒருநாளாவது வீட்டுல வந்து பார்த்தீங்களா அத்தை தென்னரசு அண்ணாவும் பூங்கொடியும் லவ் பண்ணுறாங்கனு தெரிஞ்சு அவங்களுக்கு காதல் கல்யாணம் செய்து வச்சீங்க… என்னோட காதலை மட்டும் ஏத்துக்கல நீங்க” என்று அவள் பண்ணிய தவறை மறந்து பேசிக்கொண்டிருந்தாள்.
அழகம்மையோ “பூங்கொடி தென்னரசுவை லவ் பண்ணுறேன்னு ராயன்கிட்ட சொல்லியிருக்கா எனக்கு பிடிக்கலைனாலும் அவ விரும்பிட்டானு கல்யாணம் பண்ணி வச்சோம்… நீயும் மண்டபத்துல நம்ம வீட்டுக்கு தலைகுனிவு வரும்படி நடந்துக்கிட்ட பூங்கொடியோட காதலை ஏத்துக்கும்போது உன் காதலுக்கு நாங்க ஏன் மறுப்பு தெரிவிக்கப்போறோம்?
உன் அம்மா முதலில் கத்துவாங்க அப்புறம் ராயன் எடுத்துச்சொன்னா கேட்டுவாங்க ஆனா நீயோ உங்க அம்மா மாதிரி எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ணி வச்சிருக்க. நாங்களே உன்னை பார்க்க வீட்டுக்கு வரதா இருந்தோம்” என்றதும் “அப்போ இப்பவே வாங்க வீட்டுக்கு போகலாம் அத்தை” என்று அழகம்மையின் கையை பிடித்துக்கொண்டாள் நதியா.
“இந்த வாரத்துல நல்லநாள் பார்த்து உனக்கு சீர் கொண்டு வரோம் கண்ணு அம்மாவையும் சமாதானம் செய்து கூட்டிட்டு வரோம்” என்றிருந்தனர் நாயகியும் அழகம்மையும்.
“நீங்க வருவீங்கனு எதிர்ப்பார்ப்போடு இருப்பேன் சித்தி” என்றாள்.
“வரோம் கண்ணு” என்று கோவிலிருந்து கிளம்பியிருந்தனர். வீட்டுக்கு வந்து கோமளத்திடம் கூறவும் “நான் அவளை பார்க்க வரமாட்டேன் என்னை சொந்தங்கள் மத்தியில சந்தி சிரிக்க வச்சவளை பார்க்க மாட்டேன்” என்று உறுதியாக கூறிவிட்டார்.
ராயனிடம் “நம்ம நதியா யாரும் அவளை பார்க்கப்போகலைனு ஒரே அழுகை ராயா” என்று வருத்தப்பட்டு கூறவும்
“பெரியம்மா போகலாம்னு சொன்னதும் நாம போகலாம் அத்தை அவளுக்கு நான் பண்ண வேண்டியதை பண்ணிக்கிட்டுதான் இருக்கேன் நீங்க நதியா பாப்பாவை பத்தி கவலைப்படாதீங்க” என்றிருந்தான் பெரும்மூச்சுடன்.
ஆஹா ஓஹோவென்று சமைக்கவில்லையென்றாலும் வாய்க்கு ருசியாக சமைத்து வைக்கிறாள் நதியா. பக்கத்து வீட்டு பாட்டியை தெய்வமாக பார்த்தாள் நதியா.
நதியாவுக்கு தேவையானதை அவள் கேட்கும் முன் வாங்கி வந்து கொடுத்து விடுவான் பாலாஜி. இப்போதெல்லாம் அவளை திட்டுவதில்லை. திட்டுவதற்கான காரணமும் இருக்கவில்லை. அதுபோல பாலாஜி என்ன நினைக்கிறான் என்று அவன் கண்ணை வைத்து கண்டு பிடித்து விடுகிறாள் நதியா. இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் தாமரை இலை போல ஒட்டியும் ஒட்டாமலும்தான் வாழ்கின்றனர். இருவரும் சேர்ந்து இரவு உணவு உண்கிறார்கள். ஒரே மாறாக இருவரும் ஒரே அறையில் உறங்குகின்றனர். பாலாஜி தூக்கத்தில் கூட நதியாவின் பக்கம் திரும்பி படுக்கமாட்டான்.
பாலாஜி இன்னும் பத்து மாடுகள் லோன் போட்டு வாங்கிவிடலாம் என்று லோன் கேட்டு பேங்கிற்குச் சென்றான். பேங்கில் லோன் கேட்டு சென்ற போது பேங்க் மேனேஜர் “என்ன ஷுரிட்டி இருக்கு யாராவது ஜாமீன் போடச்சொல்லுங்க…” பாலாஜி அமைதியாக இருக்கவும் “இப்போ வேலை இருக்கு நாளைக்கு வாங்க” என்று தாட்டு வார்த்தை பேசி அனுப்பியிருந்தார்.
ராயன் நேத்து பேங்கிற்கு வந்தவன் பாலாஜி லோன் கேட்டு மேனேஜர் நாளைக்கு வாங்க என்று கூறியதை பார்த்துவிட்டான். பாலாஜி மேனேஜர் அறையிலிருந்து லோன் கிடைக்கவில்லையென்று முகம் வெளிறிபோய் வெளியே வந்ததை கண்ட ராயனுக்கு மனம் பதறியது.
“என் நண்பனுக்கு லோன் இல்லைனு சொல்லிடுவாங்களா?” என்று மேனேஜர் அறைக்குள் வேகமாக நுழைந்ததும் “வாங்க ராயன் சார் உட்காருங்க” என்று அவனுக்கு மரியாதை கொடுத்தார். இந்த பேங்கில்தான் ராயன் கணக்கில் பல லட்சம் போட்டு வைத்திருக்கிறான்.
“சார் இப்போ லோன் கேட்டு வந்துட்டு போனாருல அவருக்கு நான் ஜாமீன் போடுறேன் எத்தனை லட்சம் கேட்குறாரோ அந்த பணத்தை கொடுத்துடுங்க” என்றிருந்தான் உயர்ந்த குரலுடன்.
“சார் உங்க பேரை அவர் சொல்லியிருந்தா ud லோன் கொடுத்திருப்பேன்” என்றிருந்தார் பேங்க் மேனேஜர்.
அடுத்தநாள் பாலாஜி பேங்க் மேனஜரை பார்க்க போகும்போது அவனிடம் ஷுரிட்டி எதுவும் கேட்கவில்லை.
“வல்வராயன் சாரை தெரியும்னு சொல்லியிருந்தா நேத்து உங்களுக்கு லோன் சாங்ஷன் பண்ணியிருப்பேனே” என்று மேனேஜர் வாயெல்லாம் பல் தெரிய சிரித்தார்.
‘டேய் ராயா எனக்கு இன்னும் எத்தனை நல்லது பண்ணுவடா என்னை மேலும் மேலும் கடன்காரன் ஆக்குற! எனக்கு எப்பவும் நல்லது செய்யுற உனக்கு நான் நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேன்டா’ என்று மனம் சுணங்கினான்.
லோன் பணத்தில் இன்னும் பத்து மாடுகளை வாங்கிவிட்டான். சாணத்தை நாற்றம் அடிக்குது என்று சொல்லிய நதியாவோ இன்னும் மாட்டுச் சாணங்களை அவள் தான் சுத்தம் செய்கிறாள். பாலாஜிக்கு ஏற்ற மனைவியாக மாறிவிட்டாள்.
அன்றிரவு பாலாஜியும் நதியாவும் சாப்பிட்டு முடித்து நதியா பாத்திரங்களை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.
“ஏய் உன் போன் கொடு என் போன்ல சார்ஜ் இல்லை” என்று நதியாவின் போனை எடுத்தவன் போன் பேசி முடித்து ஏதேச்சையாக அவளது அக்கௌண்டை செக் பண்ணினான்.
ராயன் அக்கௌண்ட்டிலிருந்து பணம் வந்திருந்தது. பணம் வேணும்னா என்கிட்ட கேட்டு இருக்க வேண்டியதுதானே எதுக்கு அண்ணாகிட்ட கேட்டு வாங்கியிருக்கா… அதுவும் பணம் போட்டு இரண்டு மாதங்களாக என்னிடம் மறைத்திருக்கிறாளே என்ற கோபம் அவனுக்கு. நதியா ராயன் போட்ட பணத்தை திருப்பி அனுப்பினால் அண்ணனுக்கு மரியாதையாக இருக்காது என்று எண்ணி பணத்தை தன் அக்கௌண்டில் வைத்துக்கொண்டாள்.
பாத்திரங்களை சுத்தம் செய்து வந்தவளிடம் “என்ன இது எப்போ ராயன்கிட்ட பணம் கேட்ட என்னை அவமானப்படுத்துறதே உனக்கு வேலையா போச்சு டி” என்று தன்னிடம் உண்மையை மறைத்து விட்டாளென்று கன்னத்தில் அடித்து விட்டான்.
“என்னை சும்மா சும்மா அடிக்குறீங்க என்னை அடிச்சா யாரும் வரமாட்டாங்கனுதானே அடிக்குறீங்க” என்று இதழ் பிதுக்கி அழ ஆரம்பித்தாள் நதியா.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis