ATM Tamil Romantic Novels

என் இனிய ராட்சஷனே 14

அத்தியாயம் 14

 

கருப்பன் விசிலடித்துக் கொண்டே துள்ளலுடன் வீட்டின் உள்ளே வர அங்கே அவனுக்கு முன்பு வந்து அவனின் பெரிய அக்காவும் அவரின் மகள் நந்தினியும் காத்துக் கொண்டு இருந்தனர். 

 

கருப்பனின் துள்ளல் நடை உடனே தடைப்பட்டு நின்று போனது ஒரு கணம் அப்படியே தயங்கி எப்போதும் போல் நடந்து வந்து சோபாவில் பெரியப்பொண்ணுவின் முன் வந்து அமர்ந்தான் “என்ன அக்கா திடீர்னு வீட்டுக்கு வந்துருக்க எதாவது முக்கியமான விஷயமா” என்று கேட்க்கும் போதே சின்னப்பொண்ணு அங்கே காபியுடன் வந்தார். 

 

அவர் டேபிளில் காபியை வைத்து விட்டு போக பெரியப்பொண்ணு அவரை பார்த்து முறைத்து கொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தார் “ஏன் டா தம்பி எதாவது விஷயம் இருந்தா தான் நானும் என் மகளும் இந்த வீட்டுக்கு வரனுமா இது எனக்கும் தான் அம்மா வீடு இங்க இருக்கவங்களுக்கு மட்டும் இல்லை” என்றார் கோபத்துடன்.

 

“அய்யோ அப்படி இல்லை அக்கா சொல்லாம கொல்லாம வந்திருக்கியே அதனால தான் கேட்டேன்” என்றான் பதிலுக்கு தனிவாக கருப்பன். 

 

“உனக்கு தெரியாதது ஒன்னுமே இல்லை டா தம்பி நந்தினி உன் மேல உயிரையே வச்சிருக்கா” என்றார் தயக்கத்துடன் கருப்பன் நந்தினியை ஏறெடுத்து பார்க்க அவள் தலை குனிந்து அப்பாவியை போல் அமர்ந்து இருந்தாள்.

 

“அவளுக்கு நீ இல்லாமல் அன்னம் தண்ணீ இறங்க மாட்டேங்குது தனியா இருந்தா உன் நினைப்புல எதாவது பண்ணிக்கிவாளோன்னு பயமா இருக்கு டா” என்று கூறும் போதே அவரின் கண்கள் கலங்கியது கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்து கொண்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தார். 

 

இப்போது கருப்பனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டார் பெரியப்பொண்ணு அவனோ ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க 

“அதனால தான் தம்பி உன்னை பார்த்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் நீயே நம்ம நந்தினியை ரெண்டாம் தாரமா கட்டிக்கயேன் நம்ம ஊர்ல ரெண்டு பொண்டாட்டி கட்டுறது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாதே” என்று கூறி முடிக்க தீச்சுட்டார் போல அவர் கையில் இருந்த தன் கையை உதறினான் கருப்பன். 

 

சமயலறையில் இருந்த சின்னப்பொண்ணுவின் காதிலும் இது விழுந்தது ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது தன் மகளின் வாழ்க்கை இனி என்ன ஆகுமோ என்று நினைத்து கண்ணீர் விட ஆரம்பித்தார். 

 

அப்போது “அக்கா முதல்ல என் வீட்டை விட்டு வெளியே போ” கருப்பனின் கர்ஜனையான கோப குரல் சமயலறையை வந்தடைந்தது சின்னப்பொண்ணு உடனே வெளியே ஓடி வந்து பார்த்தார். 

 

பெரியப்பொண்ணு “என்ன டா தம்பி இப்படி சொல்ற” என்று அவனை பார்த்து அதிர்வுடன் கேட்க “அக்கா இந்த மாதிரி நினைப்போட வரன்னா இனி இந்த வீட்டு பக்கமே வராத என்னால ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையை வீணாக்க முடியாது” என்றான். 

 

பெரியப்பொண்ணு உடனே கண்ணீர் விட ஆரம்பித்தார் “அப்போ இத்தனை நாளா என் மகள் மேல பாசமா இருக்க மாதிரி நடிச்சியா” என்று கேட்க 

“அக்கா எனக்கு இப்பவும் நந்தினி மேல பாசம் இல்லாம இல்லை நானே அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கட்டி வைக்கிறேன் கொஞ்சம் பொறுமையா இரு” என்றான். 

 

“நீங்க மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்பிங்கன்னு தான் நாங்க எங்க பிள்ளையை வச்சுக்கிட்டு இருக்கோமா போ டா நீ இல்லைன்னா என் பொண்ணுக்கு கல்யாணமே நடக்காது பாரு, இந்த ஊரே மெச்சுர அளவுக்கு ஜாம் ஜாம்ன்னு நான் கல்யாணம் பண்ணி வைப்பேன் 

தம்பியாச்சே உறவு விட்டு போக கூடாதுன்னு நினைச்சா உனக்கு அந்த கீழக்குடிக்காரி தான் அவ்வளவு முக்கியமா போய்ட்டால்ல” என்றார் கோபத்துடனே. 

 

“அக்கா இன்னொரு தடவை அவளை கீழ்க்குடிக்காரின்னு சொன்ன நான் மனுசனாவே இருக்க மாட்டேன் அவள் என் பொஞ்சாதி இந்த கருப்பனோட பொண்டாட்டி” என்றான் அவனும் ரோஷத்துடன் பதிலுக்கு சற்றும கோபம் குறையாமல். 

 

“ஓஹோ அந்த அளவுக்கு ஆகிப் போச்சா 

இந்தா வந்து நிக்குறாளே ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி இவள் சமத்து எல்லாம் எனக்கு ஆகாது பா கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணை கூட்டி கொடுத்துட்டு இந்த சொத்தை எல்லாத்தையும் வளைச்சி போட்டுட்டா நமக்கு அந்த சாமர்த்தியம் எல்லாம் வராது மா” என்று சின்னப்பொண்ணை பார்த்து கொண்டே கூற. 

 

அவர் பேச்சில் சின்னப்பொண்ணை அழுதேவிட்டார் “அக்கா என்ன இவ்வளவு மோசமா பேசுறிங்க” என்று கண்ணீருடன் சின்னப்பொண்ணு கேட்க 

“என்ன டி ரோஷமா உன் புத்தி தான உன் மகளுக்கும் வரும் நம்ம அப்பா அம்மாவை அசிங்கப்படுத்தி ஊரை விட்டு ஓடிப்போனவள் தான டி நீ நல்லா ஆடுறிங்க டி நாடகம்” என்று அவரை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே கூற. 

 

“அக்கா நீ வெளியே போ” என்று மீண்டும் கத்தினான் கருப்பன் அந்த வீடே அதிரும் படி அவன் கண்களில் அத்தனை கோபம் “டேய் தம்பி” என்று பேரதிர்ச்சியுடன் பெரியப்பொண்ணு அவனை பார்க்க “உன்னை வெளியே போன்னு சொன்னேன்” என்றான். 

 

பெரியப்பொண்ணு அழுது கொண்டே நிற்க “அம்மா வா போலாம்” என்று நந்தினி அவரின் கைப்பிடித்து இழுத்தவள் கருப்பனை முறைத்துக் கொண்டே விறுவிறுவென அங்கிருந்து தன் தாயை அழைத்துக் கொண்டு சென்றாள். 

 

இவர்கள் இருவரும் தன் வீட்டில் இருந்து வெளியே வருவதை வழியில் பார்த்த சிவகாமி “நந்தினி மா எப்போ வந்த” என்று அவளிடம் கேட்க அவள் அவரிடம் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டு சென்றாள். 

 

சிவகாமி வீட்டின் உள்ளே வந்தவர் கருப்பனிடம் “டேய் உங்க அக்காவை என்ன டா சொன்ன அழுதுட்டே போறா” என்று கேட்க “அக்காவை நான் எதுவும் சொல்லலை மா அவங்க தான் என் கிட்ட தப்பா பேசிட்டு போறாங்க” என்றவன் நடந்த அனைத்தையும் கூற. 

 

“அவள் சொன்னதுல என்ன தப்பு இருக்கு” என்று அவனிடம் கேட்க 

“என்ன மா நீயும் இந்த மாதிரி பேசுற” என்று அவன் கேட்க. 

 

“ஆமாம் டா என் பேத்தி வாழ வேண்டிய இடத்துல இன்னொருத்தி வந்து வாழுறாளே” என்றார் ஆதங்கத்துடன்

“அம்மா அப்போ இளமதி யாரு” என்று அவன் கேள்வி கேட்க “அவள் என் பேத்தி இல்லை” என்றார் கொஞ்சம் கூட யோசியாமல் அதைக் கேட்ட சின்னப்பொண்ணு மனம் தாங்க முடியாமல் அழுது கொண்டே உள்ளே சென்றுவிட்டார். 

 

கருப்பனும் அதற்க்கு மேல் அவரிடம் பேசி எந்த பயனும் இல்லை என்று நினைத்தவன் அங்கிருக்க பிடிக்காமல் வெளியே சென்றுவிட்டான் 

அவனின் மனம் வலித்தாலும் தான் செய்த தவறுக்கு தன் அக்கா காயப்படுவதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை அதனால் தான் தன் பெரிய அக்காவிடம் அவ்வாறு நடந்து கொண்டான். 

 

நந்தினி வீட்டுக்கு வந்தவுடன் தன் தாயை முதல் வேலையாக திட்ட ஆரம்பித்தாள் “அம்மா உனக்கு கொஞ்சம் கூடவா அசிங்கமா இல்லை அங்க போய் அந்த ஆளு கிட்ட கெஞ்சிட்டு இருக்கியே” என்றாள். 

 

“ஆமாம் டி இவன் இப்படி மாறுவான்னு நான் கனவுல கூட நினைக்கல” என்று பெரியப்பொண்ணு கண்ணீர் விட 

“அம்மா நீ அழாத நமக்கான நேரம் வரும் அன்னைக்கு அவங்களை கவனிச்சிக்கலாம்” என்று வன்மத்துடன் அவரிடம் கூறினாள் நந்தினி இருப்பினும் பெரியப்பொண்ணு அழுவதை நிறுத்தவேயில்லை. 

 

கருப்பனுக்கு மனதில் அவன் அக்காவை காயப்படுத்தியது அவன் தாயின் பேச்சு மிகவும் வலிக்க செய்ய மனம் தாங்க முடியாமல் வழமை மாறாமல் குடிக்க சென்றான் 

குடித்துவிட்டு வந்தவனுக்கு அப்போதும் அவனின் மனதின் ரணம் ஆறாமல் வலிக்க இரவு தன் அறையின் உள்ளே சென்று படுக்கையில் விழுந்தான். 

 

அவன் போதையில் படுத்திருக்க அவன் அலைப்பேசி ஒலித்தது அதை எடுத்து திரையில் யார் என்று பார்க்க பொண்டாட்டி என்று பக்கத்தில் அழகிய ஹார்ட் வேறு இருந்தது இளமதி தான் அழைத்திருந்தாள்.

 

அதை பார்த்துவிட்டு அழைப்பை எடுக்காமல் படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டு இருந்தான் மீண்டும் மீண்டும் அழைப்பை வர கோபத்துடன் அழைப்பை எடுத்தவன் காதில் வைக்க “ஹலோ மாமா” என்று இளமதி அழைக்க

“ஒரு தடவை எடுக்கலைன்னா விட மாட்டியா சும்மா சும்மா தொல்லை பண்ணிக்கிட்டு” என்று மறுமுனையில் இருந்து அவன் எரிந்து விழ அவள் அழுது கொண்டே அழைப்பை துண்டித்தாள்.

 

‘ஏதோ நைட் போன் பண்றேன்னு சொன்னாரு போன் பண்ணினா இப்படி எரிஞ்சு விழறாரு’ என்று மனதில் நினைத்தவள் கோபத்துடன் படுத்து கொண்டாள் ஆனால் அவளும் உறங்கவில்லை. 

 

கருப்பனுக்கு இன்று உறக்கமே வரவேயில்லை சிறிது நேரம் அலைபேசியில் எதையாவது பார்க்கலாம் என்று தள்ளிக் கொண்டு இருக்க அவன் நண்பர்கள் அடங்கிய பக்தி வாட்சாப் குரூப்பில் ஏதோ ஒரு வீடியோ வந்திருக்க தெரியாமல் அதை எடுத்து பார்த்துவிட்டான் அதை பார்த்த பின் அதற்க்கு முன் அவன் மனதில் இருந்த அனைத்து கோபங்களும் இறங்கி முழுதாக இளமதி நினைவு ஒன்று மட்டுமே இருந்தது. 

 

அவளை நினைத்து கொண்டே அவளுக்கு அழைக்க அவள் அழைப்பை எடுக்கவில்லை இரண்டு முறை அழைத்தும் அவள் எடுக்கவில்லை என்றவுடன் போதையில் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு அவள் விடுதிக்கே சென்றுவிட்டான். 

 

பின்பக்கம் இருந்த வனத்தில் வண்டியை நிறுத்தி விட்டு நடந்து வந்து காம்பெளவுன்ட் சுவர் வழியாக உள்ளே குதித்தான் வெளியே வேறு இடியும் மின்னலுமாக இருந்தது செக்யூரிட்டி உறங்கி கொண்டு இருக்க சத்தமில்லாமல் அவனை கடந்து சென்றான். 

 

ஹாஸ்ட்டல் உள்ளே வந்தவன் இளமதி அறை எங்கு இருக்கிறது என்று தெரியாமல் அவளுக்கு அழைக்க இந்த முறை அவள் எடுத்துவிட்டாள். 

 

“உன் ஹாஸ்ட்டல் ரூம் நம்பர் என்ன” என்று அவன் கேட்க 

“எதுக்காக கேட்க்குறிங்க” என்றாள் அவள் பதிலுக்கு “சொல்லு டி” என்று அவன் கத்த அவளும் நம்பரை கூறினாள் சரியாக அந்த அறையின் வாசலில் சென்று நின்றவன் கதவை தட்ட. 

 

இளமதி போனில் “மாமா இருங்க யாரோ கதவை தட்டுறாங்க வரேன்” என்று கதவை திறக்க அங்கே தன் முன்னே நின்றிருந்த தன் மாமனை பார்த்து விழி விரித்து நின்றுவிட்டாள். 

 

அவளின் அறை தோழி உடல்நிலை சரியில்லாமல் ஊருக்கு சென்றிருக்க அறையில் அவள் மட்டுமே தனியாக இருந்தாள் வெளியே யாரோ வரும் அரவம் கேட்க அவனின் கைப்பிடித்து உள்ளே இழுத்து கதவடைத்தாள் சரியாக அந்த நேரம் மின்சாரமும் துண்டானது “மாமா எதுக்காக இங்கே வந்திங்க” என்று அவன் அருகில் வந்து அவள் சத்தமில்லாமல் கேட்க அடுத்த நொடி அவளை தன் கைகளில் தூக்கி சென்றான். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 thoughts on “என் இனிய ராட்சஷனே 14”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top