அத்தியாயம் 16
தனக்கு இது போன்று வெளியில் சந்திப்பது பிடிக்கவில்லை என்று இளமதிக்கு தன் மாமனிடம் கூறவும் முடியவில்லை அதை உள்ளேயும் வைத்து கொள்ளவும் முடியவில்லை அவனுக்காக தன் மனதில் தோன்றிய எதையும் வெளியே சொல்லாமல் உள்ளேயே வைத்து பூட்டி கொண்டாள்.
மறுநாள் காலை இளமதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட கருப்பனும் தன் வீட்டுக்கு சென்றான் அவன் வீட்டின் உள்ளே நுழைய மகனை வாசலிலேயே நிறுத்தி கேள்வி கேட்க ஆரம்பித்தார் சிவகாமி “எங்க டா போன ராத்திரியெல்லாம் ஏதோ பத்து லோடு மூட்டையை தூக்கி போட்டவன் மாதிரி களைச்சு போய் அசதியா வர” என்று கேட்க “மா நேத்து மில்லுல லோடு வந்துச்சு அதை இறக்கி வச்சுட்டு வந்தேன் அதான் அசதியா இருக்கு” என்றான்.
“ஏன் டா லோடு இறக்க தான் ஆளுங்க இருக்காங்கலே உனக்கு என்ன அப்படி ஒரு அசதி” என்று கேட்க “அம்மா சும்மா கேள்வி மேல கேள்வி கேட்க்காத எனக்கு தூக்கம் வருது வழியை விடு” என்றவன் உள்ளே சென்று தன் அறையில் படுத்து உறங்க ஆரம்பித்தான்.
சிவகாமி அவனை ஆச்சிரியமாக பார்த்து கொண்டே நின்றிருந்தார்
எப்போதும் பகலில் உறங்காத தன் மகன் இன்று பகலில் உறங்குவதை பார்த்தவருக்கு ஆச்சரியமாக தான் இருந்தது கருப்பன் நேற்று இரவு முழுவதும் இளமதியுடன் இருந்ததால் அவன் நேற்று இரவு ஒரு நேரம் கூட கண் மூடவேயில்லை அதனால் தான் பகலில் உறங்கி கொண்டு இருந்தான்.
அதே நேரம் கல்லூரியில் தன் வகுப்பறையில் அமர்ந்து இருந்த இளமதி பாடம் நடக்கும் வேளையில் பாடத்தை கவனியாமல் உறங்கி விழுந்து கொண்டே இருந்தாள் பாடம் நடத்தி கொண்டிருந்த பேராசிரியர் இதை பார்த்துவிட “இளமதி” என்று அந்த வகுப்பே அதிரும் படி கத்தினார்.
இளமதி அவர் கத்திய சத்தத்தில் அடித்து பிடித்து கொண்டு எழுந்து நின்றாள் அவள் “நான் என்ன டாப்பிக் எடுத்துட்டு இருக்கேன் சொல்லு” என்று அவர் தன் கையை கட்டிக் கொண்டு அவளிடம் கேள்விக் கேட்க அவளோ பதிலுக்கு ஒன்றும் தெரியாமல் திருதிருவென விழிக்க “நீயெல்லாம் எதுக்கு படிக்க வர உனக்கு படிக்க விருப்பம் இல்லைன்னா வீட்லயே இருந்துக்க வேண்டியது தான நீ தூங்கி வழிய இது என்ன உன் வீட்டு பெட் ரூமா இங்கே வந்து தூங்கி எதுக்கு ஒரு சீட்டை வெஸ்ட் பண்ற இடியட் வெளியே போ” என்று திட்ட வகுப்பில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் அவளை வேடிக்கை பார்க்க அவளுக்கு ஒரே அவமானமாக இருந்தது அழுது கொண்டே வெளியே ஓடினாள்.
அந்த வகுப்பு முடியும் வரை வெளியே தான் நின்றிருந்தாள் இளமதி அழுது கொண்டே நின்றிருக்க பேராசிரியர் வெளியே வந்தவர் “இளமதி என்னோட ரூம்க்கு வா” என்று கூறிவிட்டு சென்றார்.
இளமதியும் அவரின் பின்னே கண்களை துடைத்து கொண்டே வந்தவள் வாசலில் நின்று “எக்ஸ்கியூஸ் மீ மேம்” என்றாள்
“கம் இன்” என்றார் அந்த பேராசிரியர்
அவளும் அவரின் முன்னே வந்து தலை குனிந்து நின்றாள்.
அவளை ஒரு முறை பார்த்தவர் “உனக்கு என்ன தான் ஆச்சு இளமதி நீ நல்லா படிக்கிற ஸ்டூடன்ட் கிளாஸ் டாப்பர் லாஸ்ட் செமஸ்ட்டருக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு பட் உன் கவனம் படிப்புல சுத்தமா இல்லை கிளாஸ்ல தூங்கி வழியுற இன்டர்ன்ல்ஸ் மார்க் கூட ரொம்ப லோவா இருக்கு இப்படியே போனா நீ கண்டிப்பா டிகிரி வாங்க மாட்ட உனக்கு என்ன பிராப்ளம்ன்னு என்கிட்ட சொல்லு” என்றார்.
இளமதி அவரிடம் எப்படி என்ன சொல்வது என்று தெரியாமல் தவிப்புடன் நின்றிருந்தாள் அவளின் கணவனுடன் இருந்த இந்த கொஞ்ச நாட்களில் தான் அவளால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை இரவு முழுவதும் அவனுடன் கழித்தவள் பகலில் தூங்கி வழிந்து கொண்டு இருந்தாள் அதை எப்படி அவரிடம் கூறுவது என்று தெரியாமல் தவித்தவள் “சாரி மேம் இனிமேல் இப்படி நடக்காது” என்றாள் அழுத விழிகளுடன்.
அவளை ஒரு முறை பார்த்த அந்த பேராசிரியர் “உனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான முதல் நாள் இந்த காலேஜ்க்கு வந்து சேரும் போது உன் அம்மா என் கிட்ட வந்து பேசுனாங்க என் பொண்ணு ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணுன்னு சொன்னாங்க அதை சொல்லும் போது அவங்க கண்ணுல அப்படி ஒரு பெருமை அவங்களை ஏமார்த்திடாத போய் ஒழுங்கா படி” என்று அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தார்.
இளமதி அழுது கொண்டே வெளியே வந்தவளுக்கு தன் தாயின் நினைவு வந்தது அவர் அவமானப்பட்டு நின்ற நாட்கள் அனைத்தும் கண்ணில் வந்து போனது தன் தாய்க்காகவாது நன்றாக படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டாள்.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவளின் அறை தோழி ஊருக்கு கிளம்பி இருந்தாள் இதை முன் கூட்டியே இளமதி கருப்பனிடம் கூறியிருக்க அவனும் எப்போதும் போல இரவு பன்னிரெண்டு மணிக்கு அவள் அறையின் கதவை தட்டினான்.
இளமதி படித்து கொண்டு இருந்தவளுக்கு கதவை தட்டும் சத்தத்திலேயே தெரிந்து போனது அது தன் மாமன் தான் என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வந்து கதவை திறந்தாள் அடுத்த கணம் அவளின் இடையில் கைக் கொடுத்து தன் கைகளில் தூக்கியவன் கதவை காலால் எட்டி உதைத்து மூடினான்.
இளமதி கன்னத்தில் முத்தமிட்டவன் “தங்கம் என்ன டி ரொம்ப நேரமா மாமனுக்காக காத்துக்கிட்டு இருந்தியா ” என்று கேட்க அவளோ பதிலுக்கு எந்த வித எதிர்வினையும் காட்டாமல் தன் இடையில் இருந்த அவன் கையை எடுத்து கொண்டாள்.
அவள் திடீரென தன்னிடமிருந்து விலக கருப்பனின் முகம் வாடியது “என்னாச்சு கண்ணு மாமா மேல கோவமா” என்று கேட்க இளமதி அவனிடம் எப்படி கூறுவது என்று தடுமாறியவள் “மாமா நான் படிக்கனும்” என்றாள்.
கருப்பன் அவளின் கைக்கொடுத்து மீண்டும் அவளை தன்னோடு சேர்த்தணைத்தவன் “இவ்வளோ தானா அப்புறமா படிக்கலாமே” என்று கூறிக் கொண்டே அவளின் இதழின் அருகில் நெருங்கி வர “மாமா நான் படிக்கனும் பிளீஸ் எனக்கு எக்ஸாம் இருக்கு” என்றாள்.
“நாளைக்கு படிச்சிக்கலாம் டி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சரியா” என்று அவள் அருகில் அவன் நெருங்கி வர அவனை பிடித்து தள்ளினாள் இளமதி “மாமா நான் படிக்கனும் பிளீஸ் என் கிட்ட வராதிங்க” என்றாள் இளமதி அவனை தடுத்து நிறுத்தி.
“சரி நீ படி நான் கிளம்புறேன்” என்றவனின் முகம் வாடிப் போனது அவன் அங்கிருந்து செல்லும் போது அவள் போகதே என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
கருப்பன் அங்கிருந்து செல்வதை இளமதி மேலே இருந்து பார்த்து கொண்டு தான் இருந்தாள் அதன் பின் நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன
இளமதி அவன் கொடுத்த போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்துவிட்டாள் தன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் இறுதி தேர்வை நல்லபடியாக முடித்தாள் ஆனால் கருப்பன் அவள் இன்றி கவலைக் கொள்ள ஆரம்பித்தான்.
இளமதி இறுதி வருடத்தில் இருந்ததால் கல்லூரிக்கு வந்த கேம்ப்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி இருந்தாள்.
இந்த நிலையில் அவர்கள் ஊரின் இஷ்ட தெய்வமான முள்ளையூர் அம்மன் கோவில் திருவிழா நாளும் வந்தது
முழு கிராமமும் களைக்கட்டிது நாதஸ்வரம், தப்பாட்டம், மலர் தூவி பூஜைகள் நடந்தது ஊரில் அனைவரின் வீட்டிலும் சொந்த பந்தங்கள் வந்திருந்தனர் சப்பாத்தி, இடியாப்பம், கோழி குழம்பு வாசனை என்று ஊரே மணம் வீசியது காப்பு கட்டி முடிக்க சின்னப்பொண்ணுக்கு தன் மகளின் நினைவாக இருந்தது.
இளமதியை ஊருக்கு வர சொல்லி சின்னப்பொண்ணு அழைக்க அவளும் வந்திருந்தாள் பஸ்சில் இருந்து இறங்கியவள் தெருவில் பையை எடுத்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அவள் வரும் வழியில் எதிரே நந்தினி தன் தங்கையுடன் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள் இளமதியை பார்த்த நந்தினி கண்களாலேயே எரிப்பதை போல் பார்த்துவிட்டு முறைத்து கொண்டே செல்ல பதிலுக்கு அவளை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றாள்.
இளமதி வீட்டின் உள்ளே வர சின்னப்பொண்ணு அவள் கையில் இருந்த பையை வாங்கி கொண்டவர் “தங்கம் எப்படி இருக்க” என்று அவளை வாசலிலேயே வரவேற்றார்
இளமதி பதிலுக்கு “ம்ம் நல்லாருக்கேன் மா” என்று சோர்வுடன் கூறியவளின் கண்கள் தன் மாமனை தான் முதலில் தேடியது அவன் எங்கே என்று கண்களால் வீடு முழுக்க தேட அவனோ அங்கே இல்லாமல் வயலில் வேலை பார்த்து கொண்டு இருந்தான்.
அப்போது சிவகாமி தன் அறையின் உள்ளே இருந்து வந்தார் “இந்தா டி நீ எப்போ வந்த” என்று அவள் அருகில் வந்து கேட்க.
“இப்போ தான் பாட்டி வந்தேன்” என்றாள் பதிலுக்கு இளமதி “ஆஊன்னா கிளம்பி வந்துடுறியே உனக்கு காலேசுல படிக்குற வேலையே இல்லையா என் மவன் பின்னாடியே தான் அலையுவியா” என்று கேட்க “அம்மா என்ன பேசுற நீ” என்று சின்னப்பொண்ணு கோபத்துடன் கத்த “என்ன டி ரோஷம் பொத்துக்கிட்டு வருதோ நான் உண்மையை தான சொன்னேன் ஏற்கனவே ஊரே இவளை பார்த்து சிரிச்சது போதாது இன்னும் திருவிழாவுக்கு வேற இவள் வந்து இவளை பார்த்து சிரிக்கனுமா இவள் என்ன முறையாவா கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்தா முறை கெட்டு வந்தவள் தான” என்று கேட்டார்.
இளமதிக்கு உடனே கோபம் வந்து விட
“இல்லையே பாட்டி மாமா முறையா தான என் கழுத்துல தாலி கட்டுனாரு நான் பண்ணுனது தப்புன்னா உங்க மகன் அன்னைக்கு என் கூட இருந்ததும் தப்பு தான” என்று கேள்வி கேட்டாள் முகத்தில் அடித்ததை போல.
“இந்தா டி இந்த மாதிரியெல்லாம் பேசிக் கிட்டு இருந்த உன் காலை உடைச்சு அடுப்புல வச்சிருவேன் என் மகன் எந்த பொண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன்” என்று சிவகாமி கோவப்பட சின்னப்பொண்ணு இளமதியை சமாதானம் செய்து அவருடன் அழைத்து சென்றார்.
Next epi plz daily 2 us poduga sis
Waiting for next epi pa
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Analyst Says This New Meme Coin Could Be The Next Pepe