அத்தியாயம் 34
தாய்மையின் பூரிப்பில் புது தாமரைப்பூவாய் மலர்ந்த முல்லையை பட்டு வேஷ்டி சட்டையில் கையை கட்டி நின்று இரசித்துக்கொண்டிருந்தான் வல்லவராயன்.
“மாப்பிள்ளை எல்லாரும் நலங்கு வச்சாச்சு நீங்க வந்து நலங்கு வைங்க” என்றார் நீலகண்டன்.
அவனோ முல்லையின் பக்கம் நின்ற நதியாவின் கையை பிடித்து வந்தவன் “முல்லை நதியாவுக்கு வளையல் போட்டு விடு” என்றவுடன் அங்கிருந்த பெண்கள் கூட்டம் “அட நமக்கு கூட இந்த யோசனை தோணலையே” என்று பேசி சிரித்தனர்.
முல்லை நதியாவுக்கு வளையலை போட்டு “அடுத்த வருஷம் உனக்கும் வளைகாப்பு நடக்கும்டி” என கன்னக்குழி தெரிய சிரித்தாள்.
நதியாவுக்கோ கை நிறைய வளையல் போட்டதும் தானும் கூடிய விரைவில் தாய்மை அடைய போகிறோம் என்ற சந்தோசம் பூரிப்பில் கையை தூக்கி வளையல் ஓசையை இரசித்தவள் தன்னவன் எங்கே நிற்கிறான் என்று கூட்டத்தை சுற்றிப்பார்த்தாள்.
பாலாஜி ராயன் பக்கம்தான் நின்றிருந்தான்.. பாலாஜி மட்டும் தனியே நிற்க அவனுடன் சென்று பக்கத்தில் நின்றவள் “என் கைக்கு கண்ணாடி வளையல் நல்லாயிருக்கா மாமா?” என்றாள் கண்களை உருட்டி.
“உன் அண்ணன் வாங்கி கொடுத்த வளையல் நல்லாயிருக்காமலா இருக்கும் நல்லாயிருக்கு ஆனா இன்னிக்கு நைட் இந்த வளையல் எல்லாம் உடைஞ்சிடுமே” என்றான் கூட்டத்தை சுற்றிப்பார்த்தபடியே கன்னத்தின் உள்ளே நாக்கை சுழட்டியபடி.
நதியா முதலில் கணவன் கூறியது புரியாமல் விழித்தவள் அவன் சிரிப்பில் கள்ளம் இருக்க அடுத்த நொடி அவன் சிரிப்பிற்கான காரணம் புரிந்து அவனை செல்லமாய் முறைத்தவளின் கன்னம் செங்காந்தள் மலராக மலர்ந்தது.
கோமளமோ இருவரின் செயலை கண்டு “இத்தனை சொந்த பந்தங்கள் கூடி இருக்கற இடத்துல நின்னுக்கிட்டு ரெண்டும் சேர்ந்து அலப்பறை பண்ணுதுங்க எல்லாம் கலி காலம்” என்று மகளை முறைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். மகள் மருமகனிடம் சந்தோசமாக இருக்கிறாளென்று ஆனந்தப்படாமல் பொங்கிவிட்டுச் சென்றார். இன்னும் பாலாஜியை அவரால் மருமகனாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
பாக்கெட்டில் வைத்திருந்த முத்து பதித்த வளையலை முல்லைக்கு போட்டு விட்டு அவளது கன்னத்தில் சந்தனத்தை தடவிவிட்டு யாரும் அறியாமல் இதழ் குவித்து முத்தமிட்டான் ராயன்.
“ம்ம் எல்லாரும் இருங்காங்க மச்சான்” என்று அவளது செர்ரி பழ உதடுகள் அசையவும் அவளது இதழ்களை கவ்விக்கொள்ள ஆசைப்பட்ட மனதை அடக்கிக்கொண்டு எழுந்து நின்றான்.
ராயனுக்கும் முல்லைக்கும் வளைகாப்பு சாப்பாடு முதலில் பரிமாறிவிட்டு சொந்தங்களுக்கு சாப்பாடு பரிமாறினார்கள்.
தென்னரசுவும் பாலாஜியும் பந்தியை கவனித்தனர். சாம்பார் ஊற்றிக்கொண்டு வந்த பாலாஜியோ கோமளம் அமர்ந்து சாப்பிடுவதை கண்டு பக்கத்து இல்லைக்கு சாப்பாடு வைத்துக்கொண்டிருந்த தென்னரசுவின் தோளில் இடித்ததும் “சொல்லுடா” என்று திரும்பினான் தென்னரசு.
“என் மாமியார் என்னை பார்த்ததும் எழுந்து போய்டுவாங்க நீ குழம்பு ஊத்துடா” என்று தென்னரசுவிடமிருந்து சாப்பாடு பாத்திரத்தை வாங்கிக்கொண்டான் பாலாஜி.
“சீக்கிரம் குழந்தை பெத்து பெரியம்மா முகத்துல உச்சா போக வைடா அதுக்கப்புறம் பாரு மாப்பிள்ளை மாப்பிள்ளைனு உன்னை தலையில தூக்கி வச்சு கொண்டாடுவாங்க” என்றான் கிண்டலுடன்.
“அட போடா உங்க பெரியம்மாவுக்கு இந்த ஜென்மத்துல முதல் எதிரி நானாத்தான் இருக்கும் அங்க பாரு என்னை பார்த்து எப்படி முறைக்குறாங்க என்ன என்னை ஒன்னுமில்லாதவன்னு சொல்லும் போது கஷ்டமாத்தான் இருக்கு! பட் எனக்கு அவங்க ஒதுக்கத்தால முன்னேறணும்னு ஒரு உத்வேகம் வருது. என்னை மோட்டிவேட் பண்ணுறாங்க ஒருவகையில சந்தோசம்தான் என் நண்பன் ராயனுக்காக என்னை யார் என்ன பேசினாலும் நான் சகிச்சுக்கிட்டு இருப்பேன்டா” என்றான் கண்ணைச்சிமிட்டி.
“நீ நல்லவன்டா உன்னை பெரியம்மா ஏத்துப்பாங்க காலம் வரும்டா பந்தியை கவனிப்போம்” என்று வேலையை பார்த்தனர் இருவரும்.
வளைகாப்பில் ஒரே இடத்தில உட்கார்ந்ததில் முல்லை சோர்ந்து போய் விட்டாள். வளைகாப்பு முடித்ததும் “ரெஸ்ட் எடுமா” என்று அழகம்மை அவளை அறைக்கு அனுப்பி வைத்தார்.
சொந்தங்களை வழியனுப்பி வைத்து விட்டு அறைக்குள் நுழைந்தான் ராயன். நகைகளை கழட்டிக்கொண்டிருந்தவளின் கையை பிடித்து “நீ ஸ்டெய்ன் பண்ணிக்காதே புள்ள நான் உதவி பண்ணுறேன்” என்று அவளது கழுத்தில் போட்டிருந்த நகைகளை அகற்றி விட்டு “சேலையை மாற்றிவிட உதவட்டுமா?” என்று அவளது காதில் மீசையை உரசினான்.
“மச்சான் நம்ம வீடு முழுக்க சொந்தம் நிறைஞ்சு இருக்காங்க என்ன பண்ணுறீங்க நதியாவும் பாலாஜி அண்ணாவும் கிளம்பணும்னு சொல்லிட்டிருந்தாங்க அவங்கள வழி அனுப்பி வச்சிட்டு வந்து வைச்சுக்கலாம் நம்ம ரொமான்ஸை” என்றாலும் அவனது தாடையை பிடித்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“இந்த முத்தம் உன் மச்சானுக்கு பத்தாதுடி” என்று அவளது கன்னத்தோடு கன்னம் இழைந்தவன் அவளது இதழில் அவளுக்கு வலிக்காவண்ணம் முத்தாடினான்.
ராயன் போன் சிணுங்கவும் “கொஞ்சம் நேரம் முத்தம் கொடுக்க விடமாட்டானுங்களே கரடி போல வந்துடுவாங்க” என்ற சலிப்புடன் மனைவியின் இதழை விட்டு பிரிந்தவன் “ரொம்ப பண்ணுறாங்கடி” என்று பெரும்மூச்சுவிட்டு “சொல்லு மாப்பிள்ளை” என்றான் கோபத்தை விட்டு.
“நா.நாங்க கிளம்புறோம்டா” என்ற பாலாஜியை
“இப்ப என்ன அவசரம் கிளம்புறேனு பறக்குற… பால்கறக்க நம்ம பண்ணையிலிருந்து ரெண்டு ஆளை அனுப்பி வச்சிருக்கேன் நைட் கிளம்பலாம்” என்று பேசிக்கொண்டே கதவு திறந்து வந்தான்.
நதியா தையல்நாயகி கொடுத்த பலகாரப் பையை கையில் வைத்து ரெடியாக நின்றாள்.
“பாப்பா நைட் இருந்துட்டு காலையில கிளம்பலாம்” என்று அவளது கையிலிருந்து பையை வாங்கினான் ராயன்.
“அண்ணா நாங்க கிளம்பறோம் என்வீட்டுக்காரருக்கு மரியாதை இல்லாத இடத்துல என்னால ஒரு நிமிசம் இருக்க முடியாது” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“உன் மேல இருக்க கோபம் போகணும்னா நீ அடிக்கடி வந்து போக இருக்கணும் பெரியம்மா மனசு மாறிடுவாங்க… சும்மா கத்துவாங்களே தவிர மனசுல எதையும் வச்சிக்கமாட்டாங்கடா ஒருநாளைக்கு அண்ணா கூட இருக்க மாட்டியா” என்றான் பாசக்குரலில் தங்கையின் தலையை வருடிக்கொண்டே.
“ம்க்கும் போறவங்களை ஏன் இழுத்து பிடிச்சு வைப்பானேன் போகட்டும் விடு ராயா” என்றார் அடக்கமாட்டாமல் கோமளம்.
“இதுக்கு மேல இங்க இருக்கணுமா அண்ணா நாங்க ஒண்ணும் இல்லாதவங்க கிடையாது நீங்களெல்லாம் மூக்கு மேல விரல் வச்சு பார்க்கும்படி நாங்களும் உயரத்துக்கு வருவோம்… உங்களை விட பெரிய பால்பண்ணையா வைப்போம்… இப்போ நாக்கு மேல பல்லை போட்டு எங்களை கேலி பேசறவங்களெல்லாம் அப்போ எங்க முகத்தை கொண்டு வச்சிப்பாங்கனு பார்க்குறேன்” என்று பொரிந்து தள்ளி விட தன்னை விட்டுக்கொடுக்காத மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த பாலாஜியின் கையை பிடித்து “வாங்க போகலாம்” என்று நாயகி கொடுத்த பலகாரப்பையையும் வாங்காமல் வைத்து விட்டுச் சென்றாள் கோபத்துடன்.
“ஏன் அக்கா இப்படி பேசுனீங்க வீட்டு புள்ளை மனம் நோக அனுப்பக்கூடாது” என்று ராயன் கையில் இருந்த பலகாரப் பையை வாங்கிக் கொண்டு ஓடினார் தையல்நாயகி. அழகம்மையும் கோமளத்தை முறைத்து விட்டு நாயகி பின்னே சென்றார்.
ராயனோ “இப்போ திருப்தியா பெரியம்மா நம்ம வீட்டுப் பொண்ணை நாமளே மதிக்கலைனா எப்படி!” என்று கடுப்பாக பேசியவன் வாசலுக்குச் சென்றான்.
பாலாஜி காரில் ஏறிவிட்டான் கார் கதவை வேகமாக திறந்தவளின் கையை பிடித்து நிறுத்தி விட்டான்.
தையல்நாயகியோ “பாப்பா உனக்கு பிடிக்குமேனு அதிரசமும், ரவாலட்டும், இனிப்பு சீடையும் செஞ்சு வைச்சிருக்கேன். உன் கோபத்தை தள்ளி வைச்சுட்டு சித்தி செய்த பலகாரங்களை வாங்காம போனா என் மனசு தாங்காது தங்கம்” என்று மகளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார் நாயகி.
அழகம்மையோ “அண்ணி இவ்ளோ தூரம் சொல்லும்போது நீ பலகாரப் பையை வாங்காம இருக்க நதியா… இதுதான் எங்களுக்கு நீ கொடுக்கற மரியாதையா?” என்று சிடுசிடுக்கவும்
“என்னை மன்னிச்சிடுங்க அத்தை இந்த வீட்டு ராஜமாதா எங்களை மதிக்காம பேசுறாங்க. எப்படி இந்த பலகாரத்தை கொண்டு போறது. ஏதோ எங்ககிட்ட ஸ்வீட் வாங்க காசு இல்லாத மாதிரி இருக்கு இந்த பலகாரத்தை எடுத்துட்டு போறது போல இருக்கு அத்தை” என்று மூச்சு வாங்க பேசினாள் நதியா.
ராயனோ “நல்லா பேசக் கத்துக்கிட்ட பாப்பா இப்போ பையை வாங்க போறியா இல்லையா?” என்று அதட்டல் போட்டதும் பாலாஜியை பார்த்தாள் நதியா.
“வாங்கிட்டு வா” என உதடசைத்தான் பாலாஜி.
“ஓ மெயின் ஸ்விட்ச் அங்க இருக்கா..? உங்க வீட்டு விசேஷம் வரும்ல அப்போ நானும் இதே போல நடந்துக்குறேன்” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
“அச்சோ அண்ணா நான் சும்மா ஏதோ பேசிட்டேன் எனக்கு உன்னை விட்டா யாரு ண்ணா சொந்தம்னு இருக்காங்க அம்மா பேசினதும் கோபம் வந்துருச்சு” என்று ராயன் நெஞ்சில் சாய்ந்து விசும்பினாள்.
“அத்தையோட இயல்பு குணம் உனக்கு தெரியும்தானே நதியா எங்க வீட்டு இளவரசி இப்படியே அழுதுக்கிட்டே இருந்தா எப்படி” என்று கட்டைப்பையில் பழங்களை கொண்டு வந்து பாலாஜியின் காரில் வைத்தாள் தீபா.
“நான் பலகாரமே வேணாம்னு சொல்றேன் நீங்க என்ன அண்ணி இத்தனை பழங்களை கொண்டு வந்து வைக்குறீங்க?” என்று முகத்தை தூக்கினாள்.
“ரொம்ப பண்ணாதடி நாங்க பாசமா கொடுக்கறதை ஒழுங்கா வாங்கிட்டு போ” என்று செல்ல கோபத்துடன் வயிற்றை பிடித்துக்கொண்டு நடந்து வந்தாள் முல்லை.
முல்லையை பார்த்ததும் கோபம் குறைந்து நதியாவின் முகத்தில் லேசாக சிரிப்பு வந்தது.
கண்ணனோ கையில் நகைப்பெட்டியுடன் வந்தவன் “பாப்பா உனக்கு அண்ணாவோட கிஃபிட்” நகைப் பெட்டியிலிருந்து செயினை தங்கையின் கழுத்தில் போட்டு விட போக “நான் சாப்பிடற பொருளையே வேணாம்னு சொல்லுறேன் நீங்க தங்கத்துல செயினை போட்டு விடுறீங்க அண்ணா… எனக்கு உங்க அன்பு ஒண்ணே போதும். நம்ம குடும்பத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தின எனக்கு இன்னும் பாசத்தை குறையாம அள்ளிக்கொடுக்குறீங்க… எந்த ஜென்மத்துல புண்ணியம் பண்ணினேனோ தெரியல” என்றாள் கண்ணனின் கையை பிடித்துக்கொண்டு கண்கள் கலங்கினாள் நதியா.
“அழுது சீன் போட்டு நகையை ஆட்டைய போட்டுட்டு போறா பாரு” என்று ஹாலுக்குள் அமர்ந்துக் கொண்டு பொருமினார் கோமளம்.
“மாப்பிள்ளை காரை விட்டு இறங்கி வாங்க” என்றார் தெய்வநாயகம்.
காரை விட்டு இறங்கி வந்த பாலாஜியோ தெய்வநாயகம் பக்கத்தில் சென்றவன் “அப்பா என்னை மாப்பிள்ளைனு மரியாதை கொடுத்து பேசாதீங்க… வழக்கம் போல பேரு சொல்லியே கூப்பிடுங்க” என்றான் சங்கோஜத்துடன்.
“ராயன் நண்பனா இருக்கும்போது பேரு சொல்லி கூப்பிடலாம் தப்பில்ல… இப்போ எங்க வீட்டு மருமகனை வா போனு கூப்பிட முடியாதுப்பா” என்று சிரித்தவரோ ராயனை பார்த்தார்.
அவனோ பாக்கெட்டில் வைத்திருந்த டாலர் செயினை எடுத்து “வாசல்ல வைச்சு கொடுக்குறேனு தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை என் தங்கச்சி வீட்டுக்குள்ள நிற்கமாட்டேன்குறா வாசலில் வச்சு உங்களுக்கு சீர் பண்ணுறோம்” என்று ராயனின் குரல் வருத்தப்பட்டு வந்தது.
“என்ன ராயா இப்படியெல்லாம் பேசற உன் பாசம் எனக்கு எப்போதும் போதும் நகையெல்லாம் வேணாம் அப்புறம் நகைக்கு ஆசைப்பட்டுத்தான் நான் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிட்டதா ஆகும்” என்றவனின் குரல் கரகரத்தது.
“இப்போ நாங்க ஆசையா எங்க வீட்டு மருமகனுக்கு சீர் பண்ண நினைக்குறோம் நீ மறுக்காம வாங்கணும் இது என்னோட அன்புகட்டளை” என்று சொல்லியதோடு அல்லாமல் பாலாஜியின் கழுத்தில் ஐந்து பவுன் பட்டை செயினை போட்டு விட்டான் ராயன்.
கண்ணனோ “மாப்பிள்ளை இது என்னோட சீர்” என்று பாலாஜியின் கையை பிடித்து கைகாப்பை போட்டு விட்டான் பாலாஜிக்கு கண்கள் கலங்கியது.
“யாரும் இல்லாத அனாதை பயலுக்கு பார்த்து பார்த்து சீர் பண்ணுறீங்க” என்றவனின் கண்களில் கண்ணீர் வழிந்து விட்டது.
“அடேய் மாப்பிள்ளை என்ன அழுதுக்கிட்டு இனிமே நாம எல்லாம் சந்தோசமா இருக்கப்போறோம் இனிமே ஒவ்வொரு விசேஷமும் நீயும் தங்கச்சியும் இல்லாது எங்க வீடு நிறையாது ரொம்ப நேரம் ஆச்சு கிளம்புங்க” என்றவனோ சந்தோச முகத்துடன் பாலாஜியை அணைத்துக்கொண்டான்.
“ரொம்ப நன்றிடா நண்பா” என்று அவன் காதில் கிசுகிசுத்தான்.
“நீ என் தங்கச்சியை லவ் பண்ணவே இல்லைனு எனக்கு தெரியும்டா என் குடும்ப மானம் போகக்கூடாதுனு உன் மேல பழியை போட்டுக்கிட்டேல்ல உன்னை நண்பனா அடைய நான்தான் பாக்கியம் பண்ணி இருக்கணும்டா” என்று இருவரும் பேசிக்கொண்டேயிருந்தனர்.
“ராயா மாப்பிள்ளை கிளம்பட்டும் நேரமாச்சு” என்று தெய்வநாயகம் கூறவும்
“கிளம்புடா நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் அடுத்த வருசம் என்னை மாமன் ஆக்கணும் உங்க பிள்ளையை என் மடியில வச்சு காது குத்தணும்” என்றான் முகம் முழுக்க புன்னகையுடன்.
பாலாஜிக்கு வெட்கச் சிரிப்பு வந்துவிட்டது. சந்தோசமாக சிரித்தபடியே காரில் ஏறினான்.
தென்னரசுவோ “எனக்கு எந்த செயினும் இல்லையா அண்ணா” என்று வந்து நின்றான் ராயன் பக்கத்தில் தியாவை தூக்கிக்கொண்டு.
“உனக்குத்தான் என் அத்தை பொண்ணு பூங்கொடியை தங்கமாட்டம் தாரை வார்த்துக்கொடுத்திருக்கேன்லடா” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து வைத்துக்கொண்டு.
“ஆமா ஆமா சொக்கத்தங்கம் அண்ணா” என புன்னகைத்தவன் “நாங்களும் கிளம்பறோம்” என்று காரில் ஏறினான்.
குமுதாவும் அரசியும் காரில் ஏற பூங்கொடியின் கையில் பலகாரப் பையை கொடுத்தார் தையல்நாயகி. “உனக்கு பிடிச்ச லட்டும் குலோப்ஜாமூனும் வச்சிருக்கேன்மா” என்றார் சிரித்த முகத்துடனே.
தென்னரசு கார் கிளம்பியவுடன் பரமசிவமும் மங்களமும் “நாங்களும் கிளம்பறோம் ராயன் மாப்பிள்ளை” என்றதும்
கலகலப்பாக இருக்கும் பிரனேஷின் முகம் களையிழந்து போயிருந்தது. அமைதியாக கையை கட்டி தலைகுனிந்து நின்றிருந்தான்.
“மாப்பிள்ளை ஊருக்குள்ள பல தவறை பண்ணிட்டு நல்லவன் வேஷம் போட்டு சுத்துறாங்க நீ தப்பே பண்ணாம தலைகுனிஞ்சு நிற்கக்கூடாது உன் கம்பெனியை அடுத்த லெவலுக்கு கொண்டு போ… வீடியோவை எல்லாம் டெலீட் பண்ண வச்சிட்டேன் பேசறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்கப்பா… பிஸ்னஸ்ல கவனம் செலுத்து காலம் எல்லாத்தையும் மாற்றும்” என்று பிரனேஷின் தோளில் தட்டிக்கொடுத்தான் ஆதரவாக.
“தேங்க்ஸ் மாமா” என்று ராயனை அணைத்துக்கொண்டான் பிரனேஷ்.
பரமசிவமும் ராயனின் கையை பிடித்து “ரொம்ப நன்றி மாப்பிள்ளை” என்று கண் கலங்கினார்.
“நீங்க பிரனேஷ்க்கு துணையா இருங்க மாமா” என்றான் இதழ் விரிப்புடன்.
காரில் ஏறிய பரமசிவமோ ‘உனக்கு துரோகம் நினைச்சேன் ராயா… படுக்குழியில விழப்போன என் குடும்பத்தை கரை ஏத்தி விட்டிருக்க நீதான் உயர்ந்த மனிதன்’ என்று மனதில் எண்ணியவர் ராயனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தீபாவை பார்த்து கண்ணசைத்து காரை எடுத்தார். மங்களமோ வரேன் பார்த்துக்கோ என்று கையசைத்தார்.
கார் கிளம்பினதும் “முல்லை நம்ம வீட்டுக்கு போகலாமா?” என்றார் நீலகண்டன்.
“அது வந்துங்கப்பா” என்று முந்தானையை திருகிக்கொண்டு ராயனை பார்த்தாள் தயங்கியபடியே.
அவனோ “போய்ட்டு வா வளைகாப்பு முடிச்சா அப்பா வீட்டுக்கு போகணும் தானே என்னை பார்க்குற” என்றான் மந்தகாச புன்னகையுடன்.
‘என்னை போகவிடாம தடுப்பாருனு பார்த்தேன் போக சொல்லுறாரு’ என்று ராயன் பேசியதில் சிறு கோபம் கொண்டு “சரிங்கப்பா கிளம்பலாம் வாங்க” என்று நீலகண்டனின் கையை பிடித்துக்கொண்டாள்.
கண்ணனோ “அண்ணி வாசலை தாண்டினா அழகு அத்தை வீடு என்னமோ ஊரு தாண்டி போறது போல பேசுறீங்க” என்று கேலி செய்து சிரித்தான்.
அழகம்மையோ “டேய் கண்ணா என்னோட வீட்டை பக்கத்துல வச்சிக்கிட்டு நான் ஒரு நாள் கூட முழுசா இருந்தது இல்லை இனி மூணுமாசம் என்னோட வீட்டுல என் பொண்ணுகூட சேர்ந்து இருக்கப்போறேன்டா நீ அதை கெடுக்காதே” என்று ஆனந்த புன்னகையுடன் முல்லையின் கையை பிடித்து அழைத்துச் சென்றார்.
முல்லையோ பல மைல் தூரம் கணவனை விட்டுச் செல்பவள் போல விசனத்துடன் ராயனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள்.
இந்த பெரிய வீட்டில் மகளுக்கு கிடைத்த அங்கீகாரத்தில் அமுதாவின் கண்கள் பனித்து போனது.
இரவு முல்லை சாப்பிட்டு முடித்து அழகம்மையின் மடியில் படித்திருந்தவள் “அம்மா மச்சான் இங்க வருவாரு தானே?” என்று கேட்டவளிடம் “அம்மா வீட்டுக்கு வந்துட்டா மருமகன் வரமாட்டாங்கடா உன்னையும் ராயனையும் சேர விடக்கூடாது அதான் இந்த ஏற்பாடு” என்றார் நமட்டுச் சிரிப்புடன் முல்லையின் கன்னத்தை கிள்ளி.
“மச்சானை பார்க்கணும் போல இருக்கு!” என எழுந்து உட்கார்ந்து விட்டாள் முல்லை.
“இந்த வீட்டுக்கு வந்ததுலயிருந்து மச்சான் மச்சான்னு நூறு முறை சொல்லியிருப்ப முல்லை பேசாம தூங்கு” என்று அவளது தலையை வருடிக்கொடுத்தார் அழகம்மை.
‘யோவ் மச்சான் நான் உன் நினைப்பாவே இருக்கேன் நீ என்ன பண்ணுற என்னை பார்க்க வரமாட்டியா?’ என்று சோக முகத்துடன் ராயனை கடிந்துக் கொண்டிருந்தாள்.
நேற்று இரவு தன் நெஞ்சில் சாய்ந்து படுத்திருந்தவள் இன்று பக்கம் இல்லையென்றதும் ராயனுக்கு உறக்கம் வரவில்லை. இப்பவே போயிரலாம் என்னால என் பொண்டாட்டியை பார்க்காம இருக்க முடியாது என்று எழுந்தவனோ விறு விறுவென அழகம்மையின் வீட்டின் கதவை தட்டினான்.
முல்லை உறங்கியதும் அழகம்மையும் நீலகண்டனும் சாப்பிட்டு ஹாலில் பேசிக்கொண்டிருந்தனர். கதவு தட்டும் ஓசையில் “உன் மருமகன் வந்துட்டான் பொண்டாட்டிய விட்டு ஒரு நிமிசம் கூட இருக்க முடியல போல” என்று ராயனை கேலி செய்து புன்னகைத்தார்.
அழகம்மையோ “நீங்க என்னோடவே இருந்துட்டீங்க அதான் பிரிவோட அருமை தெரியலை” என்று கணவனை முறைத்துவிட்டு கதவை திறந்ததும்
“அத்தை முல்லை தூங்கிட்டாளா மாத்திரை போட்டாளானு தெரியல பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்றான் தயக்கத்துடனே.
“மாத்திரை எல்லாம் போட்டாச்சு மருமகனே நீ கிளம்பு” என்றார் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
“வந்தது வந்துட்டேன் முல்லையை பார்த்துட்டு போயிடறேன்”
“அடியே புள்ளை பொண்டாட்டியை பார்க்க வந்திருக்கான் உள்ளே அனுப்பறதை விட்டு சும்மா வம்பு இழுத்துக்கிட்டு இருக்கா நீங்க வாங்க மாப்பிள்ளை” என்று அறைக்கதவிற்கு பக்கம் சென்று ராயனை வரவேற்றார் நீலகண்டன்.
அடுத்த நொடி வீட்டுக்குள் ராயன் வந்ததுதான் தெரியும் முல்லை இருந்த அறைக்குள் சென்றுவிட்டான்.
“மருமகன் எல்லாத்துலயும் ஸ்பீடுதான்” என்றார் நமட்டுச் சிரிப்புடன் நீலகண்டன்.
முல்லைக்கு தூக்கம் வரவில்லை பேசாம மச்சான் கிட்ட போயிடலாம் என்று எழுந்து உட்கார்ந்தாள் ராயனை கண்டதும் “மச்சான் வந்துட்டீங்களா?” என்று சந்தோசமாக கேட்டவள் கட்டிலை விட்டு இறங்க சிரமப்பட “ஏய் புள்ள இரு நான் வரேன் அவசரப்படாதே” என்று ஒரே எட்டில் நடந்து வந்தவன் அவள் பக்கம் அமர்ந்து அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் ராயன்.
“மச்சான் நீங்க இல்லாம எனக்கு தூக்கமே வரலை” என்றாள் சோகம் வழிந்த குரலில்.
“எனக்கும்தான் புள்ள” என்று அவளை மெதுவாய் அணைத்து நெற்றியில் முத்தமிட்டதும்
“ஆஆ உதைக்குறான் உங்க பையன்” என்று சிணுங்கினாள் முல்லை.
“அப்படியா” என்று முல்லையின் வயிற்றில் கையை வைத்தான் குழந்தை அசைந்தது.
“உங்க குரல் கேட்டதும் வயித்துக்குள்ள சும்மா துள்ளி குதித்து வருவான்” என்றாள் கண்ணைச்சுழட்டி
“என் மகன் என்னை போல ஸ்பீடா இருப்பான்டி” என்று மீசையை முறுக்கினான் ராயன்.
“அச்சோ அழகு மச்சான் இந்த மீசை உங்களுக்கு அழகு” என்று மீசையை பிடித்து இழுத்தாள்.
“வலிக்குது புள்ள” என்று போலியாக நடித்தான் ராயன். இருவரும் கொஞ்சிக்குலாவினர் காதல் கிளிகளாக.
பாலாஜி காரில் போகும் போது “ஏன் டி இத்தனை கோபம் மூக்குக்கு மேல வருது?” என்றான் ரோட்டில் கவனம் வைத்து நதியாவின் முகம் பார்க்காமல்.
“பின்ன உங்களை குறைச்சு பேசினா என்னால பார்த்துட்டு இருக்க முடியாது குத்து கல்லாட்டம் பொண்டாட்டி இருக்கேன் உங்களை சும்மா அனாதை பயல் ஒன்னும் இல்லாதவன்னு குத்தி குத்தி காட்டி பேசினா சாமியாடாம இருப்பேனா எங்கம்மா இனி வாயை திறக்கட்டும் அப்புறம் இருக்கு சங்கதி” என்று காருக்குள்ளும் சாமி ஆடினாள் நதியா.
தனக்காக ராயன் மட்டும்தான் இருக்கிறான் என்றிருந்தவனுக்கு நதியாவின் காதல் முதலில் பாகற்காயாய் கசந்தாலும் அவளின் வெள்ளை உள்ளம் கொண்ட காதலை கண்டு மனம் மாறி அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள மனம் இறங்கிவிட்டான் பாலாஜி.
காரிலிருந்து இறங்கியதும் பாலாஜியின் பார்வை மாறியிருந்தது. கோபக் கண்களுடன் தன்னை பார்ப்பான் இன்று அவனது கண்கள் காதல் கதை பேசியது. நதியாவுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.
பக்கத்து வீட்டு பாட்டி கார் சத்தம் கேட்டு வந்தவர் “வளைகாப்பு விருந்து முடிஞ்சுதா புள்ள முகத்துல இருக்க சந்தோசத்தை பார்த்தா எல்லாம் ராசி ஆகிட்டீங்க போல” என்று பால் பாத்திரத்தை திண்ணையில் வைத்தார்.
“அம்மாவை தவிர எல்லாரும் ராசிதான் பாட்டி” என்றவளோ வீட்டுத்திண்ணையில் பலகாரப் பையை வைத்தவள் அதிலிருந்த கொஞ்சம் பலகாரங்களை எடுத்து “இந்தாங்க பாட்டி தாத்தாவும் நீங்களும் சாப்பிடுங்க” என்று கொடுத்தாள் மலர்ந்த முகத்துடன்.
“வயசான காலத்துல இதெல்லாம் சாப்பிட்டா ஜீரணம் ஆகாது கண்ணு இருந்தாலும் பாசமா கொடுக்குற கோவிந்தவனுக்கு இனிப்புனா ரொம்ப பிடிக்கும்” என்று அவள் கொடுத்த பலகாரத்தை வாங்கிக்கொண்டு “நாளைக்கு காலையில உனக்கு பிடிச்ச சுண்டல் குழம்பு வைக்குறேன் நீ காலையில குழம்பு வைக்க வேணாம்… விருந்து அலுப்பு இருக்கும் வாசலும் நானே தெளிச்சு பெருக்கிடறேன்” என்றார் பொக்கை வாய் சிரிப்புடன்.
“நானே எழுந்து வாசல் தெளிச்சு பெருக்குறேன் நீங்க சிரமப்படவேணாம்” என்றவளிடம் சிரித்து விட்டுச்சென்றார் பாட்டி.
“எதுக்கு பாட்டி என்னை பார்த்து சிரிக்குறாங்க” என்று குழம்பிக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள் நதியா.
பாலாஜியின் கண்கள் பலாப்பழத்தை மொய்க்கும் ஈ போல நதியாவை பார்த்துக்கொண்டிருந்ததை கண்டு தான் சிரித்துச் சென்றார் பாட்டி.
அறைக்குள் சென்றவள் தாய் வீட்டிலிருந்து எடுத்து வந்த பொருட்களை சமையல்கட்டில் அடுக்கி வைத்து பாட்டி கொண்டு வந்த பாலை காய்ச்சி விட்டு அலுப்பாக இருக்கவும் பெட்ரூமிற்குள் வந்தாள்.
பாலாஜி குளித்து விட்டு இடுப்பில் துண்டோடு வெளியே வந்தவன் நதியாவின் முகத்தருகே வந்து தலையை சிலுப்பி விட்டு தலையை துண்டால் துவட்டினான்.
“மாமா என்ன இது” என்றவளை மோகமாய் பார்த்தான்.
“என்ன இது ரொமான்டிக் லுக் இந்த லுக் சரியில்லையே!” என்று இடுப்பில் கையை வைத்து முறைத்தாள்.
“ம்ம் உன் அண்ணனுக்கு அடுத்த வருசம் மருமக வேணுமாம் அப்போ ரொமான்டி லுக் விடணும்ல டெய்லி உன்கூட சண்டை போட்டு இருக்கேன் போரே அடிச்சு போச்சு… இனிமே அப்படியில்ல ஒரே லவ்ஸ்தான் நீ காட்டின லவ்வை நான் உனக்கு காட்டப்போறேன்டி என்னோட லவ்வை நீ பார்த்தது இல்லையே!” என்று உதடு கடித்தான்.
அச்சோ நான் காண்பது கனவா இல்லை நனவா என்று அவள் கையை கிள்ளிப்பார்த்தாள்.
சட்டென்று நதியாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான் பாலாஜி.
பெண்ணவளின் கண்கள் சாசர் போல விரிந்தது.
“முட்டை கண்ணை விரிக்காதடி குளிச்சிட்டு வா மாமன் வெயிட்டிங்” என்று அவளை இறுக்கினான்.
“அண்ணா சொன்னதுக்காக என்கூட” என்றவளை முறைத்தான்.
“இங்கபாரு டி நதி உன் மேல லவ் ஆரம்பத்துல இல்ல. ஆனா என் பின்னாலயே பொமேரியன் நாய்க்குட்டி போல லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன்னு சுத்திக்கிட்டே இருந்த ஒரு கட்டத்துல உன் மேல காதல் வந்துச்சுத்தான் ஆனா என் நட்பு முன்னால காதல் காணாம போயிடுச்சு உன்னை பார்ப்பதை தவிர்த்தேன்டி! உன்கிட்ட எரிஞ்சு விழுந்தேன். ஏன் அடிக்கவும் கூட செய்தேன்… அதிகப்படியா அவமானமும் படுத்தினேன். ஆனா உன் காதல் உண்மையாக இருக்க நீ ஜெயிச்சிட்ட உன் மேல இன்னமும் கோபத்தோடத்தான் இருக்கேன்டி. மண்டபத்துல முட்டாள் போல என் முன்னால சேலையை கழட்டி போட்டு நிற்குற வேற யாராவது இருந்தா எதாவது செய்துட்டு ஓடி போயிருந்தா என்னடி பண்ணுவ நீ அறிவுக் கெட்டவளே” என்று அவளை இப்போதும் திட்டினான் பாலாஜி.
“நீ ராயா அண்ணாவோட ப்ரண்ட் பாலாஜி. அண்ணா துரோகம் பண்ணுறவங்களை பக்கத்துல கூட சேர்க்க மாட்டாரு உன் மேல எனக்கு நம்பிக்கை நீ என்னை கைவிடமாட்டனு கடைசி வரை போராடி உன்னை கல்யாணம் பண்ணியிருக்கேன். நான் என் காதலை அடைஞ்ச விதம் வேணா முறை இல்லாம இருக்கலாம் உன் மேல வச்சிருக்க காதல் தாய்ப் பாலை விட சுத்தம்… அதுல பொய் கிடையாதுடா” என்று பாலாஜியை தாவி அணைத்துக்கொண்டு அவன் முழுக்க முத்தம் கொடுத்தாள் நதியா.
அவள் கன்னத்தை பற்றி “என் நண்பனை யாரும் அனாதைனு சொல்லக்கூடாது நான் இருக்கேன்னு ராயன்தான் சொல்லுவான் அவனுக்கு பிறகு எனக்கு என் பொண்டாட்டி இருக்கா இனிமே நான் அனாதை கிடையாதுடி” என்றான் நெகிழ்ச்சியானவனின் கண்கள் கலங்கவும்
“மாமா நான் இருக்கேன்டா உனக்கு” என்று அவள் இதழ்கள் நடுங்கியது.
நடுங்கிய இதழ்களை கவ்விக்கொண்டான் ஆணவன்.
அவளை கையில் ஏந்திக்கொண்டு கட்டிலுக்குச் சென்றவன் “எனக்கு இருக்க ஆசையில் இப்பவே எல்லாம் பண்ணனும்னு தோணுது கொஞ்சம் காதலிச்சுட்டு முழுசா எடுத்துக்குறேன் இப்ப கொஞ்சமா மினி மில்ஸ் சாப்பிடுறேன் “என்று அவளது இதழைக் கவ்வினான்.
இதழ் முத்தம் மட்டும் போதவில்லை அவனுக்கு. கழுத்தில் மீசையை உரசியவன் “முழு மீல்ஸ் கிடைக்குமா என்னால முடியல பப்ளிமாஸ்” என்றவனின் கைகள் அவளது மாராப்பு சேலையை விலக்கியது.
“நான் உனக்கு சொந்தம்டா இப்பவே எடுத்துக்கோ என்கிட்ட கேட்கணுமா” என்று அவனை அணைத்துக்கொண்டாள்.
அவளது கண்களை பார்த்தவன் “ஐ லவ் யு டி” என்றவன் அவளது இதழ்களை முற்றுகையிட்டவன் “இனிப்பு ரொம்ப சாப்பிட்டியா ஒரே தித்திப்பா இருக்கு” என்று அவளது சோளிகளுக்கு விடுப்பு கொடுத்ததும் அவளுக்கு வெட்கம் வந்து சட்டென்று முதுகுகாட்டி படுத்துக்கொண்டாள்.
“ஏய் என்னடி வெட்கம்” என்று அவளை பின்னிருந்து அணைத்தான். அவனது கைகள் அவளது மென் அங்கங்களில் பட்டு விட அவள் தேகம் சிலிர்த்து அடங்கியது.
“திரும்புடி” என்றான் மோகமாய்.
அவளோ “மாட்டேன் வெட்கமா இருக்கு மாட்டேன்” என்று சிணுங்கினாள்.
“இப்போ திரும்பலைனா மாமா எழுந்து போயிடுவேன் போகவா?” என்று அவன் பேசி முடிக்கவில்லை அவன் புறம் திரும்பி படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.
அவளது இமைக்குடைகளுக்கு முத்தம் கொடுத்தான் மெதுவாய் கண்ணை விரித்தாள்.
“பேசுடி வாய் ஓயாம பேசுவ” என்றான்.
“இந்த நேரத்துல யாராவது பேசுவாங்களா?” என்றாள் உதடு கடித்து.
“விவரம்தான்டி நீ” என்றவனின் கரங்கள் அவளது தேகத்தை வீணையாய் மீட்டியது. இதோ அவளது மேடு பள்ளங்களில் உதடுகள் கொண்டு விளையாடினான். ஆணவனின் ஒவ்வொரு தொடுதலிலும் மெய் சிலிர்த்தாள் மங்கை. இருவரும் ஒரே போர்வைக்குள் வியர்வையால் குளித்தனர். அவனது இதழ்கள் அவளது மேனியில் நத்தையாய் ஊர்ந்தது. அவளது அழகுகளை கண்டு எச்சில் விழுங்கினான் காளையவன். அவளோ “மாமா” என்று மோகமாய் பிதற்றியதும் அவள் மார்புக்குழிக்குள் முகம் புதைத்தான். அவனது அணைப்பினில் பாகாய் உருகினாள் மங்கையவள். அவனது வேகம் கண்டு அச்சப்பட்டு அவளுக்கு கண்ணீர் கண்களில் உருண்டோடியது.
“ரிலாக்ஸ்டி” என்று அவளது இதழில் முத்தமிட்டு அவளை ஆசுவாசப்படுத்தி பெண்ணவளை களவாடினான். விடியும் வரை அவ
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌