ATM Tamil Romantic Novels

நெஞ்சில் வடித்த கவிதை

பிரபலமான மல்டி ஸ்பெஷாலட்டி ஹாஸ்பிட்டல் மகப்பேறு பிரிவில் பிரகூட்டம் நிரம்பி வழிந்தது.. வலியோட வந்த பெண்ணுக்கு ஹாஸ்பிட்டல் வந்ததும் வலி குறைந்து விட்டது. “வீட்டுல வலி இருக்குனு என் பொண்ணு துடிச்சதாலதானே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்தோம் இப்போ வலி குறைச்சிடுச்சுனு சொல்றாளே இன்னும் டாக்டர் யாரும் வந்து பார்க்கலையே.. இந்த ஹாஸ்பிட்டலில் சுக பிரசவம்தான் பார்ப்பாங்க.. குழந்தை பிறக்க ரொம்ப முடியலைனாதான் ஆப்ரேசன் பண்ணுவாங்கனு நம்பி வந்தோமே இந்த ஹாஸ்பிட்டலயும் பணம் பிடுங்க பார்க்குறாங்களா” என்று பணத்தட்டுப்பாடு கொண்ட குடும்பம் பெண் ஒருத்தி புலம்பலோடு
நின்றிருந்தவர் அங்கே கேஸ் சீட் நிரப்பிக்கொண்டிருந்த நர்சிடம் “எங்க பொண்ணுக்கு வலி இல்லனா நாங்க வீட்டுக்கு எங்க பொண்ணை அழைச்சிட்டு போயிடலாமா” என்றார் தயங்கியபடியே

“டாக்டர் வந்தாதான் எதுவும் சொல்ல முடியுமா! வீட்டுக்கு போற வழியில உங்க பொண்ணுக்கு வலி வந்துசுனா அம்மாவுக்கும் குழந்தைக்கும்தான் ஆபத்து எதுக்கு ரிஸ்க் எடுக்குறீங்க வலி இன்ஜெக்ஷன் போட்டு இருக்கோம் வலி வந்துடும் வெயிட் பண்ணுங்க. இது போல எத்தனை கேஸ் பார்த்திருக்கோம் என்றார் அந்த நர்ஸ் அலட்டிக்கொள்ளாமல்

அந்த பெண்ணின் மாமியாரோ “இன்னிக்கு முழுக்க வலி வரலைனா ஆப்ரேசன் பண்ணனும் சொல்லிடுவீங்க.. அப்புறம் பணம் நிறைய செலவு ஆகும்னு சொல்லுவீங்க நாங்க பணத்துக்கு எங்க போவோம் இந்த ஹாஸ்பிட்டல நார்மல் டெலிவரி ஆகிடும்னு சொன்னாதால தானே கரு உருவான நாளுலயிருந்து வந்துகிட்டு இருக்கோம் ” என்றார் ஆதங்கத்துடன்

“இப்படிதான் போன வாரம் வலி வந்துச்சு ஒரு பேஷண்டை கூட்டிட்டு வந்தாங்க ஹாஸ்பிட்டல் வந்ததும் வலி நின்னுபோச்சு அந்த பேஷண்டோட வீட்டுகாரர் நாங்க எவ்ளோ எடுத்து சொல்லியும் கேட்காம பேசண்டை வீட்டுக்கு அழைச்சிட்டு போனாரு போகுற வழியில வலி வந்து குழந்தை பிறந்து ப்ளீட்டிங் அதிகமாகி கிரிட்டிங்கல் நிலைமையில ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்து பதினைந்து நாளு தாயும் குழந்தையும் ஹாஸ்பிட்டல இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துருச்சு. இதுக்கு மேல உங்க விருப்பம்” என்று சொல்லிக்கொண்டிருக்க ஆனந்தி சிஸ்டர் டாக்டர் வந்தாச்சு” என்று அலார்ட் கொடுத்து விட்டு சென்றாள் அங்கே வேலைபார்க்கும் நர்ஸ் சாந்தி

கழுத்தில் ஸ்தெட்டஸ்கோப்புடன் பிரவச வார்ட்டிற்குள் வேக நடையுடன் வந்துகொண்டிருந்தாள் ஒருத்தி மகப்பேறு மருத்துவப்படிப்பை உயிர் மூச்சாக கொண்டு படித்தவள் .. குழந்தையில்லா தம்பதிகளின் துயர் போக்க குழந்தைகளை கொடுக்கணும்” என்று மருத்துவபடிப்பை முடித்து வந்திருக்கிறாள் அபிலாஷினி

“குட்மார்னிங் டாக்டர்” என்ற சாந்திக்கு

“குட்மார்னிங் ஈவ்னிங் ஆப்ரேசன் இருக்கு தியேட்டர் ரெடியா இருக்கணும்” என்றபடியே மணிகட்டை திரும்பி நேரத்தை பார்த்தபடியே அந்த அறைக்குள் நுழைந்தாள் அபிலாஷினி

“டாக்டர் என் பொண்ணுக்கு இன்னும் வலி வரலையே ஆப்ரேசன் பண்ணுனும்னா எங்ககிட்ட பணவசதி இல்லையே” என்று அந்த பெண்ணின் பெற்றோர் புலம்பவும்

“யார் சொன்னாங்க ஆப்ரேசன் பண்ணனும்” என்றாள் சற்று குரலை உயர்த்தி

அந்த பெண்ணின் தாய் அமைதியாக நின்றார்

“நீங்களா எதையும் கற்பனை பண்ணக்கூடாதுமா நான் செக் பண்ணிட்டு சொல்லுறேன் வெளியே வெயிட் பண்ணுங்க” என்றாள் பொறுமையாக..

மருத்துவபடிப்பிற்கு பொறுமையே அவசியம்தானே பொறுமையில் பூமாதேவி நம் நாயகி அபிலாஷினி

குழந்தையின் துடிப்பை சோதித்து பார்த்துவிட்டு “எல்லாம் நார்மலா இருக்கு உங்கள வலி வந்தவுடன்தானே ஹாஸ்பிட்டல் வரச்சொன்னேன்” என்றாள் அந்த பெண்ணின் பல்ஸ் செக்பண்ணிக்கொண்டு

“வலி வந்தபிறகுதான் ஹாஸ்பிட்டல் வந்தோம் டாக்டர்.. இது பிரசவ வலி இல்ல வலி வரணும்னு இன்ஜக்சன் போடுறேனு போட்டு விட்டாங்க வலி சுத்தமா நின்னுடுச்சு. எனக்கு வலியே வராதா ஆப்ரேசன் தான் பண்ணணுமா” என்று அந்த பெண் பரிதாபமாக கேட்கவும்

புருவம் சுருக்கிய அபிலாஷினியோ தன் பக்கம் நின்ற ஆனந்தியை பார்த்தாள். “அது வந்து மேடம் இவங்க அட்மிட் ஆனதும் சீப் டாக்டர் இன்சக்’ன் போடச் சொன்னாங்க” என்றாள் தயங்கியபடி

“என்ன இன்சக்சன்” கண்களை உருட்டினாள் அபிலாஷினி

பேஷண்ட்டிடம் மட்டும்தான் பொறுமைகாப்பாள் தவறு செய்பவர்களை கண்டால் காளியாக உருவெடுத்துவிடுவாள் பெண்ணவள்

“அது வந்து” என்று ஆனந்தி எச்சில் விழுங்கினாள்.

“ஐபி பேசண்ட் ரவுண்ட்ஸ் முடிச்ச பிறகு என்னோட அறைக்கு வாங்க” என்று கடுகடுத்தவள்

இன்னும் பயத்தோடு இருந்த வயிற்றை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த பெண்ணின் தோளில் கைவைத்து “உங்களுக்கு சுகபிரசவம்தான் ஆகும் கவலைப்பட தேவையில்லை” என்று புன்முறுவல் பூத்தவளோ அடுத்த அறைக்குச் சென்றாள்.

அடுத்த அறையில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்காது என்று கையை விரித்த நிலையில் அபியிடம் ட்ரீட்மெண்ட் வந்தவர்கள் ஆறுமாதத்திற்கு பிறகு தாய்மை அடைந்திருந்தார். இன்று காலையில் அட்மிஷன் போட்டு இரவு ஆப்ரேசன் பண்ணித்தான் குழந்தை எடுக்கணும்” என்று சொல்லியிருந்தாள் அபிலாஷினி

“எப்படியிருக்கீங்க” என்று சிறு சிரிப்புடன் குழந்தையின் துடிப்பை கவனித்தாள்.

“பதட்டமா இருக்கு டாக்டர் 35 வயசுக்கு மேல ஆச்சு இனி எனக்கு குழந்தை பிறக்காதுனு இருந்தேன் ஆனா எனக்கு நீ குழந்தை வரத்தை கொடுத்த தெய்வம் “; என்று கண்கலங்கினார் அந்த பெண்

“கடவுளுக்கு நன்றி சொல்லுங்க எத்தனையோ ஹாஸ்பிட்டல் போன உங்களை என்னை பார்க்க அனுப்பியிருக்கார்ல ஈவ்னிங் ஆப்ரேசன் பண்ணிடலாம் பேபியை பார்க்க ரெடியா இருங்க” என மென்சிரிப்புடன் அடுத்த அறைக்குச் சென்றவள் ஐபியை முடித்துக்கொண்டு ஓபி பார்க்க அவளது அறைக்குச் சென்றவள் முதல் வேளையாக ஆனந்தியை வரச்சொன்னாள்

ஆனந்தியோ “அப்பா பொண்ணுக்கு இடையில நான் மாட்டிக்கிட்டு முழிக்குறேன் சாந்தி” என்று புலம்பிக்கொண்டு அபிலாஷினியின் அறைக்குள் பயந்துகொண்டே சென்றாள்

“மேடம் நான்” என்று ஆனந்தி பேசும் முற்படும் முன்பு

“இடியட் என்னோட பேசண்ட்க்கு என்னை கேட்காம வலியை நிறுத்த இன்ஜெக்ஷன் எப்படி போடுவீங்க உங்களையெல்லாம் யாரு வேலைக்கு எடுத்தது.. அடுத்து இது போல ஏதாவது செய்தீங்கனா வேலையை விட்டு தூங்கிடுவேன் மைண்ட் இட். ” என காரசாரமாக வறுத்து எடுத்தாள் ஆனந்தியை

பெல்லை அழுத்தி பிடிக்க “எஸ் மேம்” என அபியின் முன்னே நின்றாள் சாந்தி

“அந்த 10 நெம்பர் அறையில இருக்க பொண்ணுக்கு வலி வர இன்சக்சன் போட்டு விடுங்க இனிமே நீங்க ஐபில பேசண்டை பாருங்க. ஓபில சாந்தி இருக்கட்டும்” என்றவள் கையை பிசைந்து நின்ற சாந்தியை உறுத்து பார்த்த அபியோ “உங்களால ரெண்டு ஒபி பார்க்கற டைம் போச்சு எனக்கு ரிசப்சனல நில்லுங்க முகத்தை பாவமா வச்சிக்கிட்டா போதுமா? உயிர் காக்குற தொழிலில் இருக்கோம் நாம மணி மைண்டா இருக்க கூடாது என்னை கேட்காம ஏதும் பண்ணக்கூடாது” என்று ஆனந்தியின் காதில் இரத்தம் வரும் வரை பேசி அனுப்பிவைத்தாள் அபிலாஷினி

ஓபி பார்த்து முடிக்கவே மதியம் மூணு ஆகியிருந்தது. இடையில் ஜூஸ் மட்டும் குடித்துக்கொள்வாள் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்று தன்னுடடைய ஆரோக்கியத்தில் கண்ணாக இருப்பாள்.

“மேம் உங்களை சீப் டாக்டர் ஒபி முடிஞ்சதும் வரச்சொல்லியிருக்காரு” என்றதும்

பெரும்மூச்சு விட்டு “நான் பார்க்குறேன் பேசண்ட் யாரும் ;வெளியே இருக்காங்களா” என்றபடியே எழுந்தாள்.

“ஈவ்னிங் அப்பாயிண்ட் இருக்கு டாக்டர்” என்றதும்

ஈவ்னிங் ஐஞ்சு மணிக்கு சர்ஜரிக்கு இருக்குனு லோகேஷ் டாக்டர்க்கு இன்பார்ம் பண்ணிட்டீங்களா.. டாக்டர் கவிதா நாளைக்கும் லீவு எழுதி கொடுத்திருக்காங்களா” என்றபடியே வெளியே வந்தாள்

“எஸ் டாக்டர் சொல்லியாச்சு கவிதா டாக்டர் நாளைக்கு வந்துடுறேன் சொல்லியிருக்காங்க” என்றாள் ஆனந்தி

“சர்ஜரிக்கு தியேட்டர் ரெடிபண்ணுங்க நான் அப்பாவை பார்த்துட்டு வந்துடறேன்” என்று
டாக்டர் அன்புகனி ஆடீடீளு.இ ஆ.னு புநநெசயட ஆநனiஉiநெ என்ற பெயர் பொறிக்கப்பட்ட தந்தையின் கதவை லேசாக தட்டினாள். பெயர்தான் அன்புகனி அபிலாஷினிக்கு எதிர்பதம் பேசண்ட்டிடம் சிரித்து கூட பேச மாட்டார்.

“எஸ் கம்மின்” என்றார் கரகரகுரலுடன்

அபிலாஷினி உள்ளே சென்றதும் “உட்காருமா” என்று தனக்கு எதிரே இருந்த நாற்காலியை காட்டினார்

“நான் நிற்குறேன் வலியோட வந்த பேஷண்ட்க்கு வலியை நிறுத்தி வைக்க இன்ஜெக்ஷன் போட சொன்னீங்களாமே” என்றாள் மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு கோப முகத்துடனே

“ஏன் நான் வலியை நிறுத்த இன்சக்ஜன் போட சொன்னேனு உனக்கு தெரியாதா அபி” என்றார் அசராமல்

“டாட் உங்களை போல எனக்கு மணி மைண்ட் கிடையாது” என்றாள் எரிச்சலாக

“எனக்கு மணி மைண்ட்தான் அப்படியில்லைனா சிட்டில பெரிய பிரசவ ஹாஸ்பிட்டல் நிர்வாகம் பண்ணமுடியுமா? அபி என்றார் பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டே

“அப்போ நான் தனியா ஹாஸ்பிட்டல் ஆரம்பிக்குறேன் ” என்று எதிர்த்து நின்றவளை பார்த்து பெரும்மூச்சு விட்டவர்

“நான் உன்னை தனியா ஹாஸ்பிட்டல் ஆரம்பிக்க விடமாட்டேன் என்னை பத்தி தெரியும்ல அபி” என்றார் உயர்ந்த குரலில்

“நல்லாத்தெரியும் நீங்க ஒரு பணத்திமிர் கொண்ட திமிங்கலம்னு” என்றாள் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு

“அப்பாவை எதிரியா பார்த்தா எப்படி பேபிமா” என்று சுழல்நாற்காலியிலிருந்து எழுந்து வந்தவர் “உனக்கு மருத்துவ உலகம் இன்னும் புரியல.. சர்ஜரி பண்ணினா ஐந்து நாள் ஹாஸ்பிட்டல இருக்கணும் பில் அதிகம் போடலாம். நார்மல் டெலிவரினா மூணு நாளுல வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்டா பொழைக்க தெரியாத பொண்ணா இருக்க.. நீ என்ன பண்ணுற இனிமே வர்ற பேசண்ட்க்கு சர்ஜரிதான் பண்ணனும் சொல்லு.. அப்பா சொல்றதை கேட்டு நட.. அப்பா உன்னோட ப்யூசர் லைப் நல்லா இருக்கணும்னு இவ்ளோவும் பண்ணுறேன்” என சக்கரை போல பேசி அபிலாஷினியின் தோளை தொட்டார்

“நோ டாட் கிரிட்டிக்கல் பேசண்ட்க்கு மட்டும்தான் நான் சர்ஜரி பண்ணவேன் என்னை கன்ட்ரோல் பண்ணாதீங்கப்பா” என்று தன் தோளில் வைத்திருந்த கையை தட்டிவிட்டாள்

“ஹேய் பேபிமா எதுக்கு இவ்ளோ கோபம் வருது உனக்கு அப்படியே உன் அம்மாபோல நீ இருக்க! டென்சனை குறை பேபிமா”

“எனக்கு டெலிவரி கேஸ் இருக்கு நீங்க வலி வராம இருக்க இன்சக்ச்ன போடச்சொன்னீங்கள்ள அந்த பேசண்ட்க்கு இப்போ லேபர் பெயின் ஸ்டார்ட் ஆகிடுச்சு நான் கிளம்புறேன்” என்று அவசர பட்டவளை

“வெயிட் அபிமா” மகளின் கையை பிடித்து கொண்டார்

“சொல்லுங்க” என்ற விதமாக அன்புக்கனியை பார்த்தாள்

“உன் இஷ்டப்படி ஹாஸ்பிட்டல நடக்கணும்னா நீ கல்யாணம் பண்ணிக்கணும்” என்றார் அழுத்தமான குரலில்

“கல்யணாம் பண்ணினா ஹஸ்பண்ட் பிள்ளைனு என்னை வீட்ல உட்கார வச்சிட்டு உங்க இஷ்டப்படி இங்க இருக்க டாக்டரை ஆட வைக்கலாம்னு பார்க்குறீங்க இல்ல” என்று காய்ந்து விழுந்தாள்

“எந்த தகப்பணும் பெத்த பொண்ணு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுவாங்கதானே எனக்கும் ஆசை இருக்காதாடா” என்றார் ஆயாசமாக

“இப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கணும் அவ்ளோதானே” என்றாள் குரலை உயர்த்தி எரிச்சலாக

“ஆமாடா பேபிமா” என்றார் அலட்டல் இல்லாத புன்னகையோடு

கண்ணைமூடித்திறந்த அபியோ “ஓ.கே பண்ணிக்குறேன்” என்றவளோ வேக நடையுடன் கதவு திறந்து சென்றாள்

“என்னோட ரத்தம்ல சூடாத்தான் இருக்கும்” என சிரித்துக்கொண்டவரோ ப்ரதாப்பிற்கு போன் செய்தார்

பிரதாப் சர்ஜரி முடிந்து அவனது அறையில் முகம் கழுவி நாற்காலியில் உட்கார்ந்து தலையை சாய்ந்தவனுக்கு அன்பு கனியின் போன் வந்ததும் “சொல்லுங்க அங்கிள்” என்றான்

“எங்க இருக்கப்பா உனக்கு சர்ஜரி இருந்துச்சே முடிச்சிட்டியா உன்னை டிஸ்டாப் பண்ணிட்டேனா” என்றார் தன்மையாக

“யா இப்போதான் சர்ஜரி முடிச்சு வந்து என்னோட அறையில இருக்கேன் அங்கிள்” என்றான் தன் சோர்வை மறைத்து

“உனக்கு ஒரு குட் நீயூஸ் அபி மேரேஜ்க்கு ஓ.கே சொல்லிட்டாப்பா அவ மைண்ட் மாறுவதற்குள்ள கல்யாணத்தை நடத்திடணும் பிரதாப்” என்றார் துள்ளல் குரலுடன்

“உண்மையா சொல்றீங்களா அங்கிள் என்னால நம்ம முடியலை” என்று தான் கேட்பது உண்மையாவென்று கையை வேறு கிள்ளிப்பார்த்தான் பிரதாப்

அன்புக்கனியின் அக்கா பரிமளாவின் மகன்தான் பிரதாப் அவனும் மருத்துவன்தான்.

அபிலாஷினியோ கல்யாணம் செய்துகொண்டால் வீட்டுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தாள். பிரதாபோ அபியை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் அவளுக்காக காத்திருப்பேன் என்று உறுதியாக பெரியவர்களிடம் கூறியிருந்தான்.
இப்போது அபி கல்யாணத்திற்கு சம்மதம் கூறியதும் அவனுக்கு சந்தோசம் தாங்கவில்லை

“தேங்க்ஸ் அங்கிள் கல்யாண ஏற்பாட்டை பார்க்கலாம் என்றான் உற்சாகமாக

அப்போது சாப்பிட உட்கார்ந்த அபியின் முன்னே வந்த நர்ஸ் சாந்தியோ “டாக்டர் பேசண்ட்க்கு லேபர் பெயின் அதிகம் வந்துடுச்சு” என்றதும் பாதி சாப்பிட்டில் எழுந்தவள் கையை கழுவி பிரசவ அறைக்குள் ஓடினாள்.

“அப்பா முருகா காப்பாத்துங்க” என்று அந்த பெண் அலறிக்கொண்டிருந்தாள்

“புஷ் கொஞ்சம் புஷ் பண்ணுங்கம்மா அவ்ளோதான் பேபி தலை வெளியே வந்துருச்சு”

“டாக்டர் முடியல”

“முடியுமா கொஞ்சம் புஷ் பண்ணுங்க” என்ற அடுத்த நிமிடம் அழகிய ஆண்குழந்தையை கையில் எடுத்திருந்தாள் அபிலாஷினி

“வெல்கம் பேபி” என்று இதழ் விரித்த அபிலாஷினியோ “பாய் பேபி பிறந்திருக்கு” என்றாள் அந்த தாயிடம்

உதடுகள் காய்ந்த வலியை மறந்து புன்னகைத்தாள். பிரசவம் என்பதே பெண்களுக்கு மறுபிறவிதானே!

குழந்தையை சுத்தம் செய்து நர்ஸிடம் கொடுத்து அந்த பெண்ணுக்கு சூச்சர் போட்டு முடித்தவள் “சாந்தி டாக்டர் லோகேஷ் வந்தாச்சா பார்த்துட்டு வந்து சொல்லுங்க ஆப்ரேசன் பண்ண வேண்டிய பேசண்டை தியேட்டருக்கு ரெடி பண்ண கூட்டிட்டு வந்துருங்க” என்று அவளது அறைக்கு வந்தவள் டீயும் பிரட்டும் சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டிருந்தாள்

“எக்ஸ்கீயூஸ்மி மேம்” என்று அபியின் அறைக்கு சென்ற ஆனந்தியோ லோகேஷ் டாக்டர் அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு இன்னிக்கு வர முடியாது சொல்லிட்டாரு மேம் அவருக்கு பதில் இன்னிக்கு நீயுவா புது டாக்டர் அருள் மொழி வர்மன் ட்யூட்டிக்கு வந்துடுவாருனு சொன்னாங்க என்றதும்

“அருள்மொழிவர்மனா ஓ.கே அவர் வந்ததும் ஆபரேசன் தியேட்டருக்கு வரச்சொல்லிடுங்க” என்றவள் கழுத்தில் ஸ்தெடஸ்கோப்பை மாட்டிக்கொண்டு ஆப்ரேசன் தியேட்டருக்குள் நுழைந்தாள் அபிலாஷினி

 

 

5 thoughts on “நெஞ்சில் வடித்த கவிதை”

  1. Агрегатор.топ – единый агрегатор для контрактов, финансов и страхования.

    Агрегатор контрактов – подряды, товары и услуги в одном месте.
    Агрегатор финансов – банковские гарантии, лизинг, страхование от 80+ банков и 20+ лизинговых и страховых компаний.

    Одна заявка – множество предложений. Экономьте время и деньги.

    Сайт
    https://aggregator.top

  2. Вы покупаете диплом через надежную и проверенную временем компанию. Приобрести диплом института– [url=http://domdiplom.ru/kupit-diplom-v-reestre-bez-xlopot-i-problem/]domdiplom.ru/kupit-diplom-v-reestre-bez-xlopot-i-problem/[/url]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top