ATM Tamil Romantic Novels

இதய காவலன் 3

அத்தியாயம் 3

 

சோழன் பெரியவரை எரிப்பதை போல பார்த்து கொண்டே சினத்துடன் நின்றிருந்தான் ஏனெனில் ஒரு சாதாரண ஒருவரின் மகளாக இருந்திருந்தால் இத்தனை மருத்துவர்களும் இங்கே வந்து ஒன்று கூடி நின்றிருப்பார்களா என்ற கோபம் அவனுக்கு கேவலம் ஒரு ரெளடியின் மகளுக்கு இத்தனை மரியாதை என்று ஏளனமாக நினைத்தான். 

 

சோழன் முறைத்து கொண்டே நிற்க பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிள் நல்லசிவம் “சார் இது பெரியவர் பொண்ணு தான் நான் கூட இவரு தம்பி வீட்டு விசேஷத்துல பார்த்திருக்கேன்” என்றார் அதற்க்கும் அவன் எதுவும் பதில் கூறாமல் தான் நின்றிருந்தான். 

 

பெரியவர் மருத்துவர்களிடம் தன் மகளை பற்றி கேட்டு முடித்தவருக்கு தன் கோபம் மொத்தமும் கல்லூரியின் தாளாளரின் மீது தான் திரும்பியது

“ஏன் மா உனக்கு கொஞ்சமாவது அறிவுயிருக்கா நீயெல்லாம் என்ன காலேஜ் நடத்துற உன்னை நம்பி தான என் பிள்ளையை காலேஜ்க்கு அனுப்புறேன் கரன்ட் எங்கே வருதுன்னு கூடவா தெரியாது, 

ஒத்த பொம்பளை பிள்ளை அதுவும் தாயில்லா பிள்ளை அது உசுருக்கு மட்டும் எதாவது ஆகிருந்துச்சு உன்னை உயிரோட வெட்டி இங்கேயே புதைச்சு இருப்பேன் பொம்பளையாச்சே மேல கை வைக்க கூடாதுன்னு பார்க்குறேன்” என்று கை நீட்டி மிரட்டி கொண்டு இருக்க அந்த தாளாளர் அவர் மிரட்டியதில் பயத்தில் அழுதேவிட்டார்.

 

கீர்த்தனா சத்யாவையும் பெரியவரையும் பார்த்து பயந்தேவிட்டாள்

வெள்ளை வேட்டி சட்டையில் பெரியவர் கொடூரமாக முகத்தை வைத்து பேசிக் கொண்டு இருக்க சத்யா கீர்த்தனாவையும் அந்த தாளாளரையும் கொன்று விடுவதை போல் பார்த்த பார்வையிலேயே அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது 

 

சோழனுக்கு கோபம் தலைக்கு ஏறியது கை நரம்புகள் புடைத்தன பற்களை நரநரவென கோபத்தில் கடித்தவன் அவரை தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அங்கிருந்து விறுவிறுவென நடந்து வெளியே சென்றான் ஏனெனில் பெரியவருக்கு மிகுந்த அரசியல் செல்வாக்கு இருந்தது போதிய ஆதாரம் இல்லாமல் அவர் மீது கை வைக்க முடியாது. 

 

சோழன் வெளியே வர அந்த வார்டின் வெளியே பெரியவரின் ஆட்கள் சாதாரண மக்கள் யாரையும் உள்ளே வர விடாமல் தடுத்து “உள்ளே எங்க ஐயா பொண்ணு இருக்கு போங்க எல்லாம் அப்புறமா வாங்க” என்று விரட்டி அடித்து கொண்டு இருந்தனர். 

 

அதை பார்ததவனுக்கு இன்னும் கோபம் தலைக்கு ஏறியது “நல்லசிவம் போய் ஜீப்ல இருந்து லத்தியை எடுத்துட்டு வா” என்று கூற அவரும் அங்கிருந்து ஓடிச் சென்றார். 

 

நல்லசிவம் ஜீப்பில் இருந்த லத்தியை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க அடுத்த கணம் சோழன் அங்கிருந்த பெரியவரின் ஆட்கள் அத்தனை பேரையும் அடித்து வெளுக்க ஆரம்பித்தான் 

“அய்யோ அம்மா” என்று கத்தி கதறி அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஒவ்வொருவராக ஓட ஆரம்பித்தனர். 

 

அங்கிருந்த அனைவரையும் தன் கோபம் தீரும் மட்டும் அடித்து வெளுத்தவன் 

“இனிமே இங்கே எவனாவது வந்திங்க தோலை உருச்சிருவேன்” என்று கூறியவனுக்கு அப்போதும் கோபம் குறையவேயில்லை அவன் உடல் வியர்த்து அதிகப்படியான வியர்வை வர ஆரம்பித்தது. 

 

அவனுக்கு அதிகமாக வியர்ப்பதை பார்த்த நல்லசிவம் “சார் உங்களுக்கு என்னாச்சு” என்று விசாரிக்க “ஒன்னும் இல்லை” என்று மூச்சு வாங்க கூறியவன் தன் பாக்கெட்டில் இருந்த மாத்திரை ஒன்றை எடுத்து வாயில் போட்டு கொண்ட பின் தான் சாதாரண நிலைக்கு வந்தான். 

 

அதன் பின் அங்கிருந்து இருவரும் கிளம்பி சென்றனர் 

சோழனுக்கு ஹை பிபி இருந்தது அதற்க்காக மருத்துவரிடமும் சிகிச்சைக்கு பெற்று வந்து கொண்டிருக்கிறான். 

 

பெரியவரின் அடியாள் ஒருவன் அடிப்பட்ட ரத்த காயத்துடன் உள்ளே ஓடினான் “ஐயா அந்த டி. எஸ். பி எங்க எல்லாரையும் அடிச்சிட்டான் யா” என்று பெரியவரிடம் அழுது கொண்டே கூற “ஓ*** இவனை இன்னைக்கு என்ன பண்றேன்னு பாரு” என்று சத்யா கோபத்துடன் இடையில் சொருகி இருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டு வெளியே செல்ல போக அவன் கையை பிடித்து தடுத்தார் பெரியவர்  

“சத்யா எல்லாத்துக்கும் நேரம்ன்னு ஒன்னு இருக்கு பொறுமையா இரு நம்ம பிள்ளையோட உயிரையே இன்னைக்கு அவன் தான் காப்பாத்தி கொடுத்து இருக்கான்” என்றார். 

 

“அதுக்காக அவனை சும்மா விட சொல்லுறிங்களா நம்ம ஆளுங்க மேலேயே கை வைச்சிருக்கான் அப்பா” என்று கோபத்துடன் சத்யா கூற

“நான் உன்னை சும்மா இருக்க சொல்லலை சத்யா பொறுமையா இருன்னு தான் சொல்றேன் நான் சொல்லும் போது பார்த்துக்கலாம்” என்றார். 

 

அப்போது உள்ளே இருந்து நர்ஸ் ஒருவர் வெளியே வந்தார் “சார் உங்க பொண்ணு கண் முழிச்சிட்டாங்க” என்று கூற அதன் பின் இருவரும் உள்ளே ஓடிச் சென்றனர். 

 

சத்யாவுக்கும் பெரியவருக்கும் இசைவாணி என்றால் உயிர் 

அவளுக்கும் அவர்களை பிடிக்கும் தான் ஆனால் அவர்கள் செய்யும் தொழிலை தான் பிடிக்காது. 

 

இது தான் சமயம் என்று கீர்த்தனா தாளாளர் பெண்மணியை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள் “சரியான கொலைக்கார கூட்டமா இருக்கும் போல மேம்” என்று புலம்பிக் கொண்டே சென்றாள். 

 

இசைவாணி கண்விழித்து எழுந்து அமர்ந்து இருந்தாள் இருவரும் அவள் அருகில் சென்றனர் “அம்மாடி எப்படி இருக்க மா” என்று பெரியவர் கேட்க சத்யா கண்களாலேயே தன் தங்கையை நலம் விசாரித்தான் ஏனெனில் அவன் இந்த தொழிலுக்கு வந்த புதுதில் இருந்து இப்போது வரை இசைவாணி தன் அண்ணனிடம் பேசுவதே கிடையாது. 

 

“ம்ம் நல்லாருக்கேன் பா” என்றாள் சோர்வுடன் இசைவாணி பதிலுக்கு “இனிமே நீ காலேஜ்க்கே போக வேண்டாம் பாப்பா முதல்ல உன் கல்யாணத்தை முடிக்கனும் செல்வாவுக்கு போன் பண்ணி வர சொல்லு சத்யா” என்க. 

 

இசைவாணியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது பெரியவரின் கையை பதட்டத்துடன் கெட்டியாக பிடித்துக் கொண்டவள் “அப்பா பிளீஸ் இன்னும் ஒரு வருஷம் மட்டும் எனக்காக வெயிட் பண்ணுங்க பா நான் படிக்கனும்” என்று கெஞ்ச மகளின் கண்ணீரை பார்த்த பெரியவருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. 

 

“பாப்பா நமக்கு இருக்க சொத்தே இன்னும் இரண்டு தலைமுறைக்கு தாங்கும் நீ படிச்சி என்ன பண்ண போற” என்று கேட்க “எனக்கு படிக்கனும்ன்னு ஆசையா இருக்கு பா” என்றாள் கெஞ்சுவதை போல பெரியவருக்கு தன் மகள் கண்ணீர் விடுவதை பார்த்து மனம் பொறுக்கவில்லை “சரி ஆனா ஒன்னு இனிமே கவனமா இருக்கனும்” என்றார் 

அவளும் பதிலுக்கு மகிழ்ச்சியுடன் தலையை ஆட்ட அதன் பின் அன்று மாலையே இசைவாணியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்க்கு அழைத்து சென்றனர். 

 

மறுநாள் காலை இசைவாணி கல்லூரிக்கு கிளம்பி நிற்க 

பெரியவர் “இன்னும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு போ பாப்பா” என்று எவ்வளவு கூறியும் கேட்காமல் அடம்பிடித்து கல்லூரிக்கு கிளம்பி சென்றாள். 

 

அவள் சென்ற பின் பெரியவரின் வீட்டின் குடும்ப ஜோசியர் ஒருவர் வந்திருந்தார் 

“வணக்கம்ங்க ஐயா” என்று கூறியவரை “வாங்க” என்று பெரியவர் அவரை வரவேற்று அமர வைத்தார். 

 

“காபி டீ எதாவது சாப்பிடுறிங்களா” என்று பெரியவர் கேட்க “இல்லைங்க ஐயா வீட்ல சாப்பிட்டு தான் வந்தேன் பாப்பா ஜாதகத்தை கொடுங்க” என்று வாங்கி கொண்டார். 

 

பெரியவரும் சத்யாவும் அவரின் முன்னே அமர்ந்து அவர் என்ன கூறப் போகிறார் என்று பார்த்து கொண்டு இருந்தனர் 

அவரும் ஜாதகத்தை பார்த்து தன் நோட்டில் குறிப்பு எடுத்து கொண்டு பேச ஆரம்பித்தார். 

 

“ஐயா பாப்பாவுக்கு ஆயுள் ரேகையில எந்த பிரச்சனையும் இல்லை அமோகமா இருக்கு ஜாதகப்படி நல்லபடியா வாழுவா குழந்தை” என்று கூற பெரியவரின் முகம் மலர்ந்தது “கல்யாணம் எப்போ வச்சிக்கலாம் ஜோசியரே” என்று கேட்டார் பெரியவர். 

 

ஜோசியர் மீண்டும் நோட்டை பார்த்தவரின் முகம் மாறியது பெரியவரை பயத்துடன் நிமிர்ந்து பார்த்தவர் “பாப்பா ஜாதகத்துக்கு மாப்பிள்ளையை அவளே தான் அழைச்சிட்டு வருவான்னு போட்டுருக்கு” என்று பயத்துடனே கூற

“ஜோசியரே புரியுற மாதிரி சொல்லுங்க” என்று சத்யா கேட்க. 

 

“காதல் திருமணம் தான் பண்ணுவான்னு கட்டம் சொல்லுது அதுவும் மூணு மாசத்துல நடக்கும்” என்று கூறி முடிக்க அவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் பெரியவர்

“என் வீட்டுக்கு வந்து என் பொண்ணை பக்தியே தப்பா பேசுறியா” என்று கோபத்துடன் கூறியவர்

“டேய் சத்யா இவனை அடிச்சி வெளியே துரத்து” என்று கூற

“ஐயா நான் இதுவரை எல்லாமே உங்களுக்கு சரியா தான சொல்லியிருக்கேன் என்னை நம்ப மாட்டிங்களா” என்று கேட்க சத்யா அவரின் மறு கன்னத்தில் ஓங்கி அறைந்தவன். 

 

அந்த ஜோசியரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளினான் கீழே விழுந்து அந்த ஜோசியர் “என்னையேவா டா வெளியே துரத்துறிங்க அந்த பொண்ணு இன்னும் மூணு மாசத்துல ஓடி போகல நான் ஜோதிட சிகாமணி இல்லை” என்று கத்தி புலம்பிக் கொண்டே கீழே கிடந்த தன் பையை எடுத்து கொண்டு வெளியே சென்றார். 

 

சத்யா உள்ளே வர பெரியவர் யோசனையுடனே அமர்ந்து இருந்தார். 

 

அதே நேரம் இசை எப்போதும் போல காரில் வந்து இறங்க அந்த கல்லூரியில் இருந்த அனைவரும் அவளை வித்தியாசமாக பார்த்தனர் ஏனெனில் இதுவரை அவள் பெரியவரின் மகள் என்று யாருக்கும் தெரியாது, இப்போது அவள் பெரியவரின் மகள் என்று தெரிந்தவுடன் அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவள் மீது தான் இருந்தது. 

 

அவள் வகுப்பின் உள்ளே செல்ல அங்கிருந்தவர்களும் அவளை வித்தியாசமாக தான் பார்த்தனர் ஏனோ அவர்களின் பார்வை இசைவாணிக்கு எரிச்சலை தான் வரவழைத்தது தன் இடத்திற்க்கு சென்று அமர்ந்து கொண்டாள். 

 

கீர்த்தனா எப்போதும் போல கிளம்பி வகுப்பின் உள்ளே வந்தவள் ஒரு வித பயத்துடனும் தயக்கத்துடனும் வந்து இசைவாணி பக்கத்தில் அமர்ந்தாள். 

 

அவளை பார்த்த இசைக்கு ஒன்றும் புரியவில்லை “என்னாச்சு கீர்த்தி என் மேல எதாவது கோவமா” என்று கேட்க 

கீர்த்தனா திரும்பி அவளை கோபத்துடன் பார்த்தவள் “ஆமாம் நீ பெரியவர் பொண்ணுன்னு ஏன் என் கிட்ட சொல்லை” என்று கேட்டாள். 

 

இசை உடனே அழுக ஆரம்பித்துவிட 

கீர்த்தனாவுக்கு ஒன்றும் புரியவில்லை தான் எதாவது தப்பாக கேட்டுவிட்டோமோ என்று நினைத்தவள் “இசை என்னாச்சு” என்று அவளின் தோளில் கை வைத்து கேட்க. 

 

“நான் அவரோட பொண்ணுன்னு சொல்ல எனக்கு அசிங்கமா இருந்துச்சு” என்றாள் தலைகுனிந்து கொண்டே இசைவாணி. 

 

 

 

 

 

 

 

 

 

 

1 thought on “இதய காவலன் 3”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top