ATM Tamil Romantic Novels

காதல் தானடி என் மீது உனக்கு!-11 & 12 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு? 

     [11]

 

மென்னிலாவின் தாத்தா ராஜமாணிக்கம், சரவணன் மற்றும் பரிதிவேல் வீரன் என மூவரும் இணைந்து தொடங்கவிருக்கும் ‘பற்பசை கம்பெனி’க்கான பேச்சு வார்த்தைகள்… அன்றும் மென்னிலாவின் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம் அது!!. 

‘தன்னவன்.. தன் வீட்டிற்கு வந்திருக்கிறான்’ என்ற சந்தோஷமே.. மென்னிலாவை ஏதோ ஒரு கனவு மயக்கத்தில் ஆழ்த்துவது போன்ற ஒரு சுகத்தைக் கொடுத்தது. 

‘’அவன் வந்திருக்கிறான்’ என்று தெரிந்து கொண்ட பின்னரும், அவளது அறையில்.. அவனைப் பாராமல் அவள் கழித்த பொழுதுகள்.. மனதுக்குள் பெரும் அவஸ்தையைக் கொடுப்பது போல இருக்கவே, மேற்கொண்டு தன் அறையில் நில்லாமல் ‘வியாபாரப் பேச்சுவார்த்தை’ நடந்து கொண்டிருக்கும் அறைப்பக்கம் நாடியை.. மாடிப்படிகள் கடந்து இறங்கி ஓடி வந்தாள் மென்னிலா. 

தன்னுடைய அடர்ந்த கூந்தலும், பெண்ணவளின் அங்கலாவண்யங்களும்.. அவளது துள்ளலோட்டத்துக்கு ஏற்ப துள்ளிக் குதிக்க, ‘வியாபாரப் பேச்சுவார்த்தை’ நடக்கும் அறைவாசல் வரை வந்தவளுக்கு.. உள்ளே நுழைய தயக்கம் வந்து சூழ்ந்து கொண்டது. 

அங்கே ‘பரிதிவேல்’ மட்டும் தனியாக இருக்கும் பட்சத்தில்.. மென்னிலா தாராளமாக உள்ளே நுழையலாம் தான். 

ஆனால் அவளது மன்னவனோடு.. அவள் தாத்தாவும், மாமாவும் இருக்க எங்கணம் உள்ளே நுழைவதாம்?? 

அவளுடைய நகங்கள் எல்லாம் பற்களில் சிக்குண்டு.. கொஞ்சம் இம்சையை அனுபவிக்கவே செய்தது.. அவளுள் எழுந்த யோசனையின் விளைவாக. 

சிறிது நேரத்தில்.. அவளுடைய மூளையில் ஓர் உபாயம் உதிக்கவே, வீட்டிலுள்ள பணியாளர்கள் யார் கண்ணுக்கும் உறுத்தாமல், அந்த அறையின் சுவற்றுக்கும், மாடிப்படியோடிணைந்த கீழ் சுவற்றுக்கும் இடையில் பல்லி போல சுவரோடு சுவராக ஒட்டி நின்ற மென்னிலாவின் நயனங்கள்.. 

அறையின் பாதி திறந்திருந்த சாளரங்கள் வழி.. உள்ளே இருந்த தன்னவனைக் காண பகீரதப் பிரயத்தனம் செய்தன. 

வெள்ளை வெளேரென்ற முறுக்கு மீசையுடன் தாத்தாவும், அருகே பச்சை நிற சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்து சரவணனும் சோபா மீது அமர்ந்து… டீபோய் மீதிருந்த மடிக்கணினியில்… ஏதேதோ சுட்டிக் காட்டியவாறு பேசிக் கொண்டிருப்பது புரிந்தது அவளுக்கு. 

ஆயினும் அவளது தேடல் எல்லாம் ‘அவன் எங்கே?’ என்றே ஒவ்வொரு நொடியும் கிடந்து தவிக்க, மென்னிலாவின் நயனங்களின்.. கருமணிகள் அலைபாயும் ஒரு மையல் தேடல் எட்டிப் பார்த்தது!! 

அவர்களைது தாண்டியிருந்த.. பக்கத்திருக்கையில் தன் மன்னவனை நாடித் தேடிய கண்கள் சோர்ந்து போய் ஏமாற்றத்தை தழுவியது. 

அந்தகணம் அவளே எதிர்பார்த்திராத வேளையில்.. அவளது வெண்மையான இடையில்.. ஒரு அழுத்தமான உள்ளங்கை.. வன்மையுடன் ஊர்ந்து.. இடுப்பு வளைவில் அழுத்திப் பிடித்து இழுக்க.. அவளது உள்மூச்சு ஒருகணம் நின்று.. விழிகள் விரிந்தது ஆழியளவுக்கு. 

அவள் சுதாரித்து நிமிர்வதற்குள்.. ஏதோ பலமான தேக்கில் மோதுண்டது போல மென்மையான உடல் கொண்டாளுக்கு உணர முடிந்தது. 

அச்சத்தில் கத்தப் போனவளின் அழகு நயனங்கள் கண்டு கொண்டன தன்னை.. ஏகபோக உரிமையாகக் கையாண்ட வலிமையான மார்பனை!!! 

அவனது முரட்டுக்கரங்கள்.. அவளது பின்னிடையை அநாயசமாக சுற்றி வளைக்க, அறையில் இல்லாத தன் ஆகாயச் சூரியனை.. மிக மிக அருகாமையில் கண்டதும் மலர்ந்தன நிலாவின் இதழ்கள்!! 

அவனைக் கண்டதும் காதல் கொண்ட மனம் அதில்.. மழைச்சாரல் துளிகள் தூவியது போல இதமாக இருக்க, அவன் முதுகோடு கையிட்டு அணைத்துக் கொண்டவள்.. உரிமையுடன்.. அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்!! 

அவன் நெஞ்சில் முகம் புதைத்து… மையலுடன், “திருடா… நான் உன்னை எட்டி எட்டிப் பார்த்து.. உள்ளாற தேடுறது தெரிஞ்சும்… அமைதியா அதை என் பின்னாடி நின்னு பார்த்துட்டிருந்திருக்கேல்ல?உன்னை என்ன செஞ்சா தகும்?”என்று சொன்னாள் பரிதியின் தையல்!! 

அம்முரடன் பரிதியின் இதழ்களோ.. அவளது மொழிகள் கேட்டதும்.. குறும்புக் கொப்பளிக்க மெல்ல மலர்ந்தது!! 

இந்த இரு காதல் ஜீவிகளும்.. ஒருவரையொருவர் ஆரத்தழுவி நின்றிருந்ததுவோ மாடிப்படிகளின் கீழ்வாரப் பகுதி!! 

அநேகமாக அங்கே பழைய பித்தளை விளக்குகளும், பழங்கால வியாபாரக் கணக்குப் புத்தகங்களைக் கொண்ட பீரோக்களுமே அங்கு ஜாஸ்தி உண்டு!! 

அது யார் கண்ணுக்கும் எளிதில் பட முடியாத மறைவான இடுக்குப்பகுதி என்பது கூடுதல் தைரியம் தர.. மார்போடு கிடந்தவளை இன்னும் கொஞ்சம் இறுக்கி அணைத்தான் அவன்!! 

அன்று.. அவனுடைய ஆண்டாள் ரொம்பவும் வித்தியாசமாக இருந்தாள். 

தன் உடல் அங்கங்களைக் காட்டாத… எந்தவிதமான அலங்காரமும் அற்ற ப்ளேய்ன் மஞ்சளை நிற சேலை உடுத்தி… தன் அடர்ந்த கூந்தலில் தலை நிறைய மல்லிகைப்பூச் சூடி..

விழிகளில் காஜல் தீட்டி.. பார்க்கவே லட்சுமி கடாட்சம் ஒளிரும் விழிகளுடன் நின்றிருந்தவளைக் காணக் காண.. புதுக் காதல் பிறந்தது பரிதியிற்குள். 

சற்றே அவளை நோக்கிக் குனிந்து.. அவள் சூடியிருந்த ஃப்ரஷ் மல்லிகையின் வாசம் முகர…அம்மணமும் அவன் நாசிக்குள் நுழைந்து அவனைக் கிறங்கடிக்கச் செய்ய, தன் மார்பில் முகம் புதைத்தவளை தலை நிமிர்த்தவே தோன்றவில்லை அவனுக்கு!! 

இப்படியே.. இந்த நிமிடங்கள் உறைந்து போகவேண்டும் என்று எண்ணியது காதல் கொண்ட மனம்!! 

காதல்ப்பெருக்கின் உச்சத்தில்.. அவளது உச்சிக்கூந்தல் தடவிக் கொடுத்த வண்ணம், அவளைத் தன் மார்பிலிருந்தும் பிரித்தெடுக்காமலேயே, “என்னயவேஹ் நெனச்சிட்டிருந்தீயாஹ் ஆண்டாளுஹ்..?”என்றவனின் குரலில் நேசம் கொட்டிக்கிடந்தது. 

அந்தக் கேள்வியில் சட்டென அவன் நெஞ்சிலிருந்து தலை தூக்கியவள், அவனது ஆண்மை சிந்தும் விழிகளைப் பார்த்தாள்;அவனோ அவள் பெண்மை விழிகளுக்குள் புதையுண்டு போனான். 

இவள் கேட்டாள், “நீங்க என்னை என்னான்னு கூப்பிட்டீங்க மாமா..?”என்று. 

அவன் உடனேயே அதற்கு பதில் சொல்ல நாடவில்லை. அவளது கேள்விக்கான பதிலும் அவன் நாவிலிருந்து அத்தனை சுலபமாக வெளிவரவும் இல்லை!! 

அவளது “மாமா”என்னும் ஒற்றை அழைப்பில் சர்வமும் உருகிப் போனவனாக.. அவளையே பார்த்திருந்தவன், 

“நீ என்னய “மாமா”ன்னு கூப்பிடுறப்போ… தேவலோகத்துக்கே போறாப்ள இதம்ம்மாஆஆ இருக்கு தெரியுமா? ஆனா என்ன.. எனக்கு ரம்பை, ஊர்வசி, மேனகைலாம் வேண்டாம் ஆண்டாளு.. ஜிலுஜிலுன்னு பார்வையாலேயே உசுப்பேத்துற நீ மட்டும் போதும்”என்று சொன்னவன்.. இன்னும் கொஞ்சம் அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்தான். 

அவனது இறுக்கமான அணைப்பு.. சற்றே வலியைக் கொடுத்தாலும்.. அவனது காதலுக்காக அதைச் சுகித்துக் கொண்டவள், சின்னக் குழந்தைகள் போல அடம்பிடித்தாள். 

“மா.. மா… முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க?? இப்போ நீங்க என்னை என்னான்னு கூப்பிட்டீங்க?”என்று பிடிவாதக் குரலில் கேட்க, 

அவளது காதோரம் நாடிப் போனவன், அதில் தன் நுனிமூக்கு நுழைத்தவனாக, ஹஸ்கி குரலில், “ஆண்டாளுன்னுஹ்.. கூப்பிட்டேன்”என்றான். 

அவனது சொல்லாடலில் அவளது விழிகளில் பளபளப்பு இன்னும் கொஞ்சம் கூட, அவள் வெகுவெகு அழகாக சொன்னாள்; தன் உள்ளத்திலிருந்து சொன்னாள், 

“அந்த ஆண்டாளோட நினைப்பில் இருந்து கண்ணன் கணப்பொழுதேனும் அகன்றானா? இல்லைல்ல? அப்போ உங்க ஆண்டாள் நினைப்பு மட்டும் எப்படியிருக்கும்?? எப்போவுமே உங்க நினைப்பு தான் மாமா”என்றவள் கைகள்.. சற்றே மேலெழுந்து அவனது கழுத்தில் மாலையாகக் கோர்த்துக் கொண்டது. 

அவளது பதிலில்.. அவள் காட்டும் அன்பில்.. அவன் காதல் உள்ளம் அவள் பால் கசிந்துருகியது. 

அவளது பிறை நுதலோடு தன் நுதல் முட்டி நின்றவன், “ நீ லவ் பண்ணுற பொண்ண விட.. உன்னய லவ் பண்ணுற பொண்ண கட்டிக்க.. வாழ்க்க சந்தோஷமா இருக்கும்னு சொன்னவன்.. ரொம்ப பெரிய தீர்க்கதரிசி ஆண்டாளு”என்றவன், அவளுக்குத் தான் தன் மேல் முதல் காதல் உண்டானதை ஞாபகப்படுத்திச் சொல்ல, அதை வேறுவிதமாக கற்பிதம் செய்து கொண்டாள் சூரியனின் நிலா. 

சட்டென முகம் வாடி, கண்கள் கலங்க, “.. அப்.. அப்படீன்னா.. நீங்க யாரையாச்சும் லவ் பண்ணீங்களா?? அ.. அவ.. உங்கள ஏத்துக்காம போனதும் தான்.. உங்களை லவ் பண்ற என்னை அக்ஸெப்ட் பண்ணிக்கிட்டீங்களா??? ஒருவே… ஒருவேள.. அவ உங்கள ஏத்துக்கிட்டிருந்தா.. என்.. என்னை ரிஜெக்ட் பண்ணியிருந்திருப்பீங்கள்ல??.. எ.. என் அன்பு.. உங்களுக்கு கடைசிவர புரிய வந்திருக்காதுல்ல?? என்னை.. வ்வி.. டு.. ங்க..நா..நான் செகன்ட் ஆப்.. ஷனா இருக்க விரும்ப.. லை..எ.. என்னை வ்விடுங்.. வ்விடுங்க..”என்றவள் அவளாகவே ஏதோ பேசி, அவளாகவே கேள்வியும் கேட்டு.. அவளாகவே முடிவுக்கும் வந்து.. அவனை விட்டு விலக எத்தனிக்க.. எப்பேர்ப்பட்ட முரடனாக இருந்தும் கூட.. பெண்ணவளின் ஊடல் சினத்தைத் தடுக்க முடியாது விழி பிதுங்கி நிற்கலானான். 

அவள் திமிறித் திமிறி.. அந்த அணைப்பில் இருந்து வெளிவரத் துடித்த கணமெல்லாம், அவன் பிடி இன்னும் இன்னும் இறுகிக் கொண்டே போனது. இறுதிவரை அவன் பிடியைத் தளர்த்தவேயில்லை அவன். 

அவளது நாடியை ஒற்றைக்கையால் நிமிர்த்தியவன், “ஆண்டா.. ஆண்டாளு..நான் சொல்றத ஒருவாட்டி கேளு.. சத்திய.. மா நான் எந்த பொண்ணயும் காதலிக்க.. வ்வேயில்லடி.. எனக்கெல்லாம் “காதல்”னு தமிழ்ல எழுத மட்டும் தான்டீஈஈ… தெரியும்..’ எனக்கும் காதலிக்க வரும்.. நானும் லவ்வர் பாய் தான்’னு.. எனக்கு காமிச்சுக் குடுத்ததே நீ தான்.. அத தான் அப்படி சொன்னேன் என்னய நம்பு!! ”என்று அந்த முரட்டு ஆசாமி.. தன் சித்தம் கலங்க வைக்கும் ஒரு மிருதுவான பெண்ணிடம் ‘தன்னைப் புரிந்து கொள்’ என்று கெஞ்சி நின்றான்!! 

அவள்.. அவனது விழிகளைப் பாராமல், அவனது பிடியிலிருந்து விலகுவதிலேயே குறியாக நின்றவளாக, “இல்லை.. வ்வேணாம்.. என்னை விடுங்க.. விடுங்.. கன்னு சொல்றேன்ல??”என்று திணறித் திமிறி வெளியேற முனைய, 

அவளை அடங்கச் செய்யும் வழிவகை தெரியாது திண்டாடியவனுக்கு, ஒரு நல்ல உபாயம் வந்து போனது மூளைக்குள். 

அவளே எதிர்பார்த்திராத சமயம்.. சட்டென்று குனிந்து அவளது மெல்லிய செவ்வதரங்களை வெடுக்கென்றுக் கவ்விச் சுவைக்கலானான் மென்னிலாவின் காதலன்!! 

அவனது ஈர இதழ்கள் பட்டதும்.. இன்னும் கொஞ்சம் சிலிர்த்துக் கொண்டது ஓர வண்ண நிலவு!!விடுவானா சூரியன்??

நிலவின் பொல்லாத ஊடல் அடக்க, தன் நாவு என்னும் ஆயுதம் கொண்டு.. அவளது பற்கள் என்னும் எல்லை தாண்டி.. சமர் புரிய.. உள்ளே நுழைய எத்தனித்தான் பரிதி. 

உண்மையில், முழுமூச்சாக எட்டுத்திக்கும் வியாபாரம் செய்து, செல்வத்தை விருத்தி செய்வதையே ஒரே இலக்காக கொண்டிருந்தவனுக்கு.. காதல் உணர்வு என்பது புதிது!! பெண்ணின் தீண்டல் கூட புதிது!! 

காதலிக்கத் தெரியாவிட்டாலும் கூட இந்தச் சின்ன ஊடல்,அவ்வப்போது இடம்பெறும் சிற்றின்பத் தேடல் மற்றும் இன்ன பிறவைகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் காதலிக்கக் கற்றுக்கொள்கிறான் அவன்!! 

அம்முரடன் காட்டிய அதிரடியைத் தாங்க மாட்டாது.. அவள் தலை அவனை விட்டும் பின்னோக்கி செல்ல.. விலகும் இதழ்களின் சேய்மையை இரத்துச் செய்ய, அவள் பின்னந்தலையை தன்னிரு கைகள் கொண்டு அழுத்திப் பிடித்தான் அவன். 

அதில் மூச்செடுக்கத் தடுமாறி உணர்ச்சி வசப்பட்டவளின் கைகள்.. அவனது இடைக்கச்சையிலிருந்து மேலேறி வயிற்றைத் தழுவிய, அந்த கணம்.. இதழ்களைப் பிரித்துக் கொண்டவன், “ஸ்ஸ்.. ஆ” என்ற வண்ணம் கத்திய வண்ணம் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டான் பரிதி. 

இத்தனை நேரம் அவன் மேல் ஊடல் கொண்டிருந்த மென்னிலவு.. தன் சூரியனுக்கு ஒன்று என்றானதும் பரிதவித்துப் போனது. 

விழித்திரை கலங்க, பதற்றத்துடன், “ஹேய் என்னாச்சு மாமா?”என்றவாறு அவனது சட்டையை உயர்த்தியவள் அங்கே கண்டது.. வயிற்றைச் சுற்றி மருந்திடப்பட்ட ப்ளாஸ்டரை. 

அதைக் கலக்கத்துடன் தடவிக் கொடுத்தவளாக, “இது எப்படி ஆச்சு?”என்று கேட்க, கலங்கிய விழிகளையே உணர்ச்சிகள் மீதூறப் பார்த்தான் பரிதி!! 

தனக்காகப் பதறும் ஓர் ஜீவன்.. அதை எண்ணும் போது ஒருபக்கம் சந்தோஷம் எழுந்தாலும் கூட.. இன்னொரு பக்கம் அவளது கலக்கம் ஏனோ கவலையைக் கொடுத்தது அவளுக்கு!! 

அவளது கலக்கத்தைக் காணப் பிடிக்காமலேயே.. நடந்தை சின்ன நிகழ்வாக விளக்கிக் கூற நாடியவன், “அது ஒண்ணுயில்லமா.. உனக்கு காய்ச்சல்னதும்.. அன்னைக்கு பதறியடிச்சுப் போய்.. உன்னய பார்க்க.. சுவரேறி குதிச்சு வந்தேன்ல?? அப்ப..உன் வீட்டு கம்பிவேலி.. இலேசா கீறிடுச்சு..இது இப்ப பழைய காயம்தா.. ஆறிடும்”என்று சமாளித்தவனாக.. சமாதானம் செய்ய, “இது அவளால் உண்டான காயம்”என்பதே ஆற்றாமையைக் கொடுத்தது அவளுக்குள். 

வயிற்றைத் தடவிக் கொடுத்தவளாக, “பார்த்து வரக்கூடாதா மாமா.. ரொம்ப வலிக்குதா??..”என்று கேட்க, என்ன தான் காயம் வலித்தாலும்,

 ‘ஆம்’என்று தலையாட்டினால்.. அவளுக்கு வலிக்கும் என்பதற்காக, அவளையே இமைக்காமல் பார்த்திருந்தவன் தலை, “இல்லை”என்பது போல தானாக ஆடியது. 

அங்கே உள்ளேயிருந்த.. சரவணனுக்கோ… 

வியாபாரப் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கும் போது.. தன் செல்லுக்கு ஒரு அழைப்பு வரவும், ‘முக்கியமான ஃபோன்கோல்.. இப்ப வந்திட்றேன்”என்றவனாக எழுந்து வெளியே வந்த பரிதி.. ‘இன்னும் ஏன் வரவில்லை?’ என்ற யோசனை உள்ளூற ஓடிக் கொண்டேயிருந்தது!! 

அதனாலோ என்னவோ பரிதிக்கு அழைப்பெடுத்துப் பார்க்க நாடி..சரவணனும் அறைக்குள் இருந்த வண்ணமே அழைப்பெடுக்க.. பரிதியின் சட்டை பாக்கெட்டில்.. ‘வைப்ரேட் மோடில்’ இருந்த செல்லோ.. குறுகுறுக்கவாரம்பித்தது. 

எடுத்துப் பார்த்தவனுக்கு.. சரவணன் அழைப்பெடுத்திருப்பது புரிய, தன் ஆண்டாளை நீங்கிச் சென்றேயாக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டான் நவீன கண்ணன்!! 

அவளிடமிருந்து விலக மனமேயில்லாமல் விலக முயன்ற பரிதி… அதற்கு முன்னர், அவளது நெற்றியை மறைத்து வீழ்ந்த கார்குழல்க் கற்றையை ஒற்றை விரலால் ஒதுக்கியவனாக, 

அவளது விழிகளையே காதல் சிந்த பார்த்தவனாக, “ஆண்டாளு.. நான் என்ன கேட்டாலும் செய்வீயாஆஆஹ்?” என்று கேட்டான்.

அவளால் தானே அவனுக்கு துன்பம் என்றானதும் நிமிடமும் தாமதிக்காமல் தீர்க்கமான குரலில் வெளிவந்தது அவள் குரல், 

“ம்.. அதிலென்ன சந்தேகம்??..”என்று.

மோகம் ஏற்றும் அந்த அதரங்களைப் பார்த்த வண்ணமே அவன் கேட்டான்,

 “அப்படீன்னா.. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி.. உன்னோட நாட்களில்.. முழுசா இருபத்தி நாலு மணி நேரம்.. எனக்காக தர முடியுமாஹ்….?? நீயும், நானும் மட்டும்!!! .. ஒவ்வொரு நொடியும்.. அது எனக்கானதா தான் இருக்கோணும்!! தர முடியுமாஹ்?”என்று அவன் ஏக்கத்துடன் கேட்க, அவள் உள்மனம் சரியென்று இசைந்தாலும் ஏதோ ஓர் தடுமாற்றம் வந்து போனது அவளுள். 

அவனைப் பாராமல் தலை குனிந்து சேலைத்தலைப்பின் நுனியை… சுட்டுவிரலில் சுழற்றிச் சுழற்றிக் கழற்றியவளாக அவன் பேச, அவள் அழகை கண்கள் கனிய இரசித்துப் பார்த்தான் பரிதி! 

“எப்ப கூப்பிட்டாலும் உங்க கூட வர்றதுக்கு நான் ரெடி தான்.. ஆ.. ஆனால்.. நான் வீட்டுல என்ன சொல்றது…?தாத்தா, சரவணன் மாமாவை சமாளிச்சிட்டு எப்படி வர்றது பரிதி?”என்று மலங்க மலங்க விழித்தவளாகக் கேட்டவளின் நாடி பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தினான் அவன்!! 

அந்த படபடக்கும் வலது இமையில் மாத்திரம் மீசை குத்தக் குத்த முத்தம் வைத்தவன், “என்னமாவது சொல்லு ஆண்டாளு.. என்ன சொல்லி சமாளிக்க முடியுமோ.. அத சொல்லு… ஆனா நாளை காலையில பஸ் ஸ்டாப்க்கு வந்துடு… உனக்காக காத்துட்டிருப்பேன்..”என்றவனை மேற்கொண்டு பேசவிடாமல் மீண்டும் கிறுகிறுத்தது பரிதியின் செல்!! 

மீதமாக இருந்த அவளது இடது இமையும்.. “எனக்கு முத்தம் ?? எனக்கு முத்தம்??”என்று படபடத்துக் கொள்வதாய் எண்ணம் தோன்ற,

 “உன்னோட வலது இமைக்கு மட்டும் முத்தம் குடுத்ததும்.. இடது இமையும் என் முத்தத்துக்காக அலையுது பாரேன்..?? என்னால எப்பவும் உன் விஷயத்துல.. ஓரவஞ்சனை காட்ட முடியாது ஆண்டாளு..அதனாலஅஅ.. ” என்று சற்றே இழுத்தவனுக்கு தோன்றியதோ.. என்னவோ.. இடது இமைக்கும் கண்கள் மூடி முத்தம் வைத்து விட்டே சென்றான் பரிதி. 

தன் முரடன்.. காதல் வயப்பட்டு… கவிஞனாக மாறி ‘தற்குறிப்பேற்ற அணியில்’, “ஒரு இமை முத்தம் வாங்கியதும்.. மறு இமையும் முத்தம் கேட்டு அலைவதாக” உருவகித்துக் காதல் மொழிகள் இயம்பி விட்டுச் செல்வதை.. இமைக்க மாட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் கன்னக்கதுப்புக்கள் இரண்டும் வெட்கத்தில் சிவந்திருந்தது. 

***

‘பரிதி கேட்ட, “முழுமையான இருபத்து நான்கு மணிநேர”த்தை எப்படி எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் பரிசளிப்பது…??’என்று தலைவன் தன்னை விட்டு.. நீங்கிச் சென்ற கணம் முதல் யோசித்துக் கொண்டே மதிய உணவுக்காக… ‘டைனிங் டேபிளில்’ அமர்ந்திருந்தவளுக்கு.. அன்னந்தண்ணி ஆகாரம் தொண்டையில் இறங்குவது பெரும்பாடாகிப் போனது. 

அவளுக்கு சாப்பாடு பரிமாறிய போது, சாப்பாட்டு மேசையில் அமர்ந்து.. சரிவர சாப்பிடாமல், தட்டில் சாதத்தை அளைந்து கொண்டேயிருந்த மகளின் முகம் யோசனை வயப்பட்டிருப்பதைக் கண்ட அவள் தாய் சிவகாமிக்கு, எப்போதும் தொணதொணக்கும் மகளின் அமைதி துக்கத்தையே கொடுத்தது.

சாப்பாடு பரிமாறுவதை விடுத்து, மகளின் மோவாயை வாஞ்சையுடன் பற்றியவராக, “என்ன கண்ணு?.. ஒரே யோசனையா இருக்கற??ஏதாவது.. உடம்புக்கு முடிலையோ?”என்று கேட்ட வேளை தான்.. காதல் பித்துப் பிடித்திருக்கும் நிலாவின் மூளையில்.. எக்குத்தப்பாக உதயமானது அந்த உபாயம்!! 

தாயை விட்டால்.. கூரிய விழிகளும், முறுக்கிய மீசையும் கொண்ட.. முரட்டுப் பேர்வழி தாத்தாவிடம்.. தான் சொல்லப் போகும் விஷயத்தை யாரும் எத்தி வைப்பது கடினம் என்று தோன்ற, 

தாயின் வளையல் சிணுங்கும் கைகளைப் பற்றிக் கொண்டவள், ஏக்கத்துடன் தாய் முகம் பார்த்தவளாக, “அம்மா”என்றாள். 

மகளின் அழைப்பில் இதயம் கசிய, “என்ன கண்ணு?”என்று தாய் கேட்க, இவளும் தட்டுத் தடுமாறியவளாக, 

“அம்மா.. என் கேம்பஸ்ல இருந்து.. இன்னைக்கு மத்தியானம் தான் கோல் வந்தது.. அங்கே என்னோட சில டாக்குமென்ட்ஸ் இருக்கும்மா.. அதையெல்லாம் நானே வந்து அத்தாட்சிப்படுத்தி என் சைன் வைச்சா தான்.. அதையெல்லாம் தருவாங்களாம்மா… அதனால நாளைக்கு நான்.. மாத்தறை போகணும்மா.. அதுக்கு நீங்க… தான் எப்படியாவது தாத்தாக்கிட்ட பர்மிஷன் வாங்கித் தரணும்.. ப்ளீஸ்மா…”என்று தாயின் கன்னத்தைப் பிடித்துக் கெஞ்ச.. தாயின் முகத்திலே சின்னதாக ஓர் முறுவல் வந்து போனது. 

அது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக, “ஃப்பூ.. இம்புட்டு தானா சேதி?? இப்ப நீ.. எத பத்தியும் யோசன பண்ணாம சாப்பிடு.. தாத்தாக்கிட்ட நான் பேசிப் போட்டு.. சம்மதம் வாங்கித் தரேன்..இதுக்குப் போயா இத்தாம் பெரிய்ய யோசன??.. நானிருக்கும்போது.. எம்மவளோட புருவங்கள் ஒருநாளும் யோசனையில சுளிக்கக் கூடாது.. புரிஞ்சிட்டுதோ??”என்றவர்..

அவளது புருவம மத்தியில் விழுந்த முடிச்சினை சுட்டுவிரலால் அழுத்தியவராகச் சொல்ல, மனம் இலேசாகி.. தாயின் வயிற்றை கட்டியணைத்துக் கொண்டே, 

“தேங்க்ஸ்மா.. அம்மான்னா அம்மா தான்”என்று அவரது புறங்கைக்கு முத்தம் வைக்க, தாயின் இதயம் நனைந்து போயிற்று தாய்மையில்!!

ஆனால் தாயை ஏமாற்றுகிறோம் என்ற குற்றவுணர்வும் சேர்ந்து அவளை வாட்ட.. மெல்ல வாடலானது அவள் இதயம்!! 

அவளது தாய் சிவகாமியம்மாள்.. “தாத்தா” என்னும் பயங்கர விழிகள் கொண்ட ஜீவனுக்கும், மிருதுவான பேத்தியான “மென்னிலா”வுக்கும் இடையில் உறவுப்பாலமாக மாத்திரமல்ல..தகவல்களைப் பரிமாற உதவும் ‘தொடர்பாடல் பாலமாகவும்’ கூட இருப்பது என்னமோ அவர் தான்!! 

ஏனோ இயற்கையிலேயே தாத்தாவின் அந்த முசுட்டு விழிகளைப் பார்த்து பேசும் தைரியம் அவளிடம் வாய்க்கப் பெறவேயில்லை!! 

அந்த பயங்கர விழிகளும், அதரங்கள் இருக்கின்றதா என்று கூட தெரியாத மீசை சூழ்ந்த வாயும்..பணியாளர்களை அவர் அடக்கி, அதட்டி வேலைவாங்கும் பாங்கும்…சின்ன வயதிலிருந்து தாத்தா என்றால் அச்சத்தையே தருவித்தது அவளுக்கு!! 

அது வளர்ந்த பின்னும் நீடிக்க… தாத்தா முன் வருவது கூட அரிதாகிப் போனது அவளிடத்தே!! 

ஆனால் ராஜமாணிக்கமோ.. பேத்தி தன்னைக் கண்டால் அஞ்சுவது அறிய மாட்டாமல் அதை ஒரு வகையான மரியாதை என்று எடுத்துக் கொள்ளலானார் அவர்!! 

அன்றைய முன்னிரவிலேயே.. தாத்தாவிடம் இருந்து கிடைத்த சம்மதம்.. தாயின் வழியாக வந்து சேர, நாளை “வடமேல் இலங்கையில்” இருந்து.. “தென்னிலங்கை” நோக்கி.. பிராயணப்படப் போகிறோம் என்று வீட்டினரை நம்ப வைப்பதற்காக, 

தன் கைப்பையில் ஒரு செட் உடை, பற்தூரிகை மற்றும் இத்தியாதிகளை எல்லாம் எடுத்து வைத்து ஆயத்தமானாள் மென்னிலா. 

நாளை காலை பொழுது விடிந்ததும்.. தலைவனின் மடியில்..நினைக்கவே இனித்தது மென்னிலாவுக்கு!! 

கைகள் தான் வேலை செய்தாலும் கூட.. இதழ்கள் புன்னகைக்க, மனதோரம் “ஜிலுஜிலு”வென்று காற்று வீசுவது போல இருந்தது. 

தன் ஆகாயச் சூரியனை எண்ணியவளுக்கு.. இதழோரம் பாட்டொலி பிறக்க, 

“ஆகாயச் சூரியனை.. ஒற்றை ஜடையில் கட்டியவள்.. நின்றாடும் விண்மீனை நெற்றிச்சுட்டியில் ஒட்டியவள்.. 

இவள் தானே எரிமலை அள்ளி.. மருதாணி போல் பூசியவள்.. 

கொடி தான்.. உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட கொடி நான்.. 

என் எண்ணம் என்னவோ?”என்று வெகு அழகான குரலில்.. பாடியவளுக்கு, அந்தப் பாடல் தனக்காகவே எழுதப்பட்டது போன்ற பிரம்மை எழுந்தது. 

“அவள் எண்ணம் என்னவென்று’ அவளுக்கு மட்டும் தான் தெரியும் என்றான போது.. “ஆகாயச் சூரியனான அவளது முரடன் பரிதியைக்”கட்டியடைத்த பெருமையில் விகசித்தது அவள் மனம்!! 

அது காதல் வயப்பட்டவர்களுக்கென்றே உரித்தான மனநிலை!!

 ஒரு பெண்ணுக்கென்று சமூகம் விடுத்திருக்கும் கட்டுப்பாடுகளைத் தகர்த்து.. உல்லாச வானில் சிறகடித்துப் பறக்கும் மகோன்னத மனநிலை!! 

பாடலை “ஹம்”செய்து கொண்டே.. மெல்ல நிமிர்ந்தவளின் விழிகளில் அப்போது தான் தென்பட்டான்.. இதுவரை காலமும்.. அவளிருந்த உல்லாச மனநிலையை.. கதவு நிலைப்பக்கம் மார்புக்கு குறுக்காக கைகட்டி சாய்ந்து நின்று.. இரசித்துக் கொண்டிருந்த சரவணன்!! 

இத்தனை நேரம் பாடியதை தன் முறைமாமன் கேட்டிருக்கிறான் என்றானதும்.. அத்திப்பூத்தாற் போன்று.. ஒரு வெட்கம் வந்து சூழ்ந்து கொண்டது அவளது கன்னங்களோரம். 

தன் அத்தைப் பெண்ணின் மாடர்ன் உடைகள் மாறி.. அவள் நம் கிராமத்துப் பெண்கள் போல சேலை அணிவதும், தன் தொனியினை அடக்கி உரையாற்றுவதும்.. அவ்வப்போது.. கன்னங்கள் செம்மையுற அழகாக வெட்கப்படுவதையும் கண்டவனுக்கு.. அவளுள் நிகழ்ந்திருந்த காதல் மாற்றங்கள் அப்பட்டமாகவே புரிந்தது. 

ஆனால், ‘யார் காதலினால் விளைந்த மாற்றங்கள்?’ என்பது புரியாமல்.. தானாகவே, ‘அந்த மாற்றத்திற்கு தன் காதல் தான் காரணம்’ என்று கற்பிதம் செய்து கொண்டது ஏனோ.. அவன் செய்த பெரும் பிழையாகப் போயிற்று. 

அத்தைப் பெண் தன்னைக் கண்டு நாணப்புன்னகை சிந்தியதும் சிரித்துக் கொண்டே உள்ளே வந்தவன், “நானும் உட் கூடவே வாரேன் நிலா..”என்று சொல்ல, சந்தோஷமான மனநிலையில் குண்டைத் தூக்கிப் போட்டதைப் போல.. தூக்கிவாரிப்போட்டுக் கொண்டு நிமிர்ந்தாள் மென்னிலா. 

‘என்ன சரவணனும் அவள் கூட வர பிரியப்படுகிறானா? கிழிஞ்சு போச்சு கிருஷ்ணகிரி’என்று தோன்ற திருதிருவென விழிக்கலானாள் அவள். 

சரவணன் மாமா தன்னோடு.. தான் படித்த தென்னிலங்கையில் இருக்கும் பல்கலைக்கழகமான “ருஹூணு கேம்பஸிற்கு” உண்மையிலேயே வருவானேயானால் அவள் கதி? நிச்சயமாக அதோகதி தான்!!! 

பதற்றத்தில் கைகளைப் பிசைந்து கொண்டே மஞ்சத்தை விட்டும் எழுந்தவள், நாவு திக்கித் திணற, “எ.. எதுக்கு..??உங்.. உங்களுக்கு வீண் சிரமம்..?? நா.. நான் பார்த்துக்குறேன் மாமா.. இங்கேயிருந்து டவுன் சவுத் போய் சேர.. டென் ஹவர்ஸ் ஆகும்.. வேலையெல்லாம் முடிச்சிட்டு… திரும்பி வர அகேய்ன் டென் ஹவர்ஸ் ஆ.. ஆகும்… ட்ரேவலிங்கிலேயே… டுவென்டி ஹவர்ஸ் கழியுதுன்னா.. மு.. முழுசா ஒன்றரை நாளாவது ஆகும் மாமா… நா.. நான் தி.. திரும்ப வர்றதுக்கு?? அஅ.. அதான்.. உங்களுக்கு எதுக்கு கஷ். டம்?? எனக்காக வீணா கஷ்டப்பட்டுக்கிட்டு??” என்று அப்பாவியாக புன்னகைப்பது போல நகைத்து வைக்க, முறைப்பெண்ணின் கரிசனத்தில்.. மெய்யாலுமே அவள் பால் கனிவு பிறந்தது அவனுக்கு. 

அவளை நோக்கி நேசப்புன்னகை உதிர்த்த வண்ணம் நடந்து வந்தவன், “அதெல்லாம் ஒரு கஷ்டமுமில்ல… உன்னய தனியா அனுப்ப நான் தயாரில்ல.. அதனால நானே நின்னு.. உன்னய கூட்டிப் போய்.. கூட்டி வாரேன்”என்று கரிசனையுடன் அவன் சொல்ல, “ஹைய்யோ.. இந்த லூசு மாமா வேற..??’என்று அவன் மேல் உள்ளுக்குள் ஏகத்துக்கும் கடுப்பானாள் அவள். 

அவனைத் தடுத்தி நிறுத்தியே ஆக வேண்டும் என்று உள்மனம் கிடந்து அல்லாட, வாய்க்கு வந்தவைகளையெல்லாம் இயன்றவரை திணறவேயாமல் பேசினாள் அவள். 

அவள் பேசும் போது அவளது மருண்ட நயனங்கள் ஆயிரத்தெட்டு பாவங்கள் காட்டலானது. அதை தன் மாமன் இரசித்துப் பார்ப்பது அறியாமல், விழிகளை மலர்த்தி, 

“ஹைய்ய்யோ.. நான் தனியா போறேன்னா பயப்படுறீங்க? .. இல்லை மாமா.. நான் தனியா போகலை.. கூடவே என்னோட யூஜி ஃப்ரண்ட்ஸூம் வருவாங்க மாமா..எல்லாரும் ப்ளான் பண்ணி டிரெயின்ல போ.. போறோம்.. விடியற்காலையில நாலரை மணிக்கு டிரெயின்ல புறப்பட்டேன்னா.. மன்னார் தாண்டி.. ‘தந்திரிமலை, மதவாச்சி, அநுராதபுரம், குருநாகல், ரம்புக்கன’ இப்படி அடுத்தடுத்து வர்ற ஊர்ல எ.. என் ஃப்ரண்ட்ஸ் ஏறுவாங்க மாமா.. மதியம் இரண்டு, மூனு மணி ஆகுறப்போ.. அங்கே கேம்பஸ்ல இருப்போம்.. வேலை முடிஞ்சதும் ரிட்டர்ன் வந்துருவோம்.. 

மன்னார் தாண்டியதும்… நான் பார்த்துக்குறேன் மாமா.. அது.. அது ஃப்ரண்ட்ஸ் நாங்க பாட்டுக்கு அரட்டையடிக்கும் போது.. நீ.. நீங்க இருந்தீங்கன்னா.. எனக்கு… என.. க்கு நர்வஸா இருக்கும்.. ஃப்ரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ண முடியாது.. இங்கே.. தி…திருவிழா கடைசி நாள் வேற நெருங்கிட்டு இருக்கே மாமா…. நீ.. நீங்க என்கூட வ.. வந்தா.. யா.. யார் பார்த்துக்கு.. வாவாங்க?? சொ.. சொல்லுங்க.. ”என்று பின்னங்கழுத்தை சொறிந்து கொண்டே அவள் தலை குனிய, அவளது பாவங்கள் ஒவ்வொன்றையும் கூட அணுவிடாமல் இரசித்துப் பார்த்திருந்தான் அவன்!! 

அதே சமயம்.. ‘முறைப்பெண் சொல்வது பொய்’ என்று சந்தேகிக்க முடியாதளவுக்கு.. அவள் மேல் அவன் பூண்ட காதல்.. கண்களை மறைக்க.. மென்னிலா தன் நண்பர்களுடன் ஜாலியாக இந்தப் பயணத்தைக் களிக்க, “ப்ரைவசி” ஒதுக்குவதே நலம் என்று தோன்றியது சரவணனுக்கு!! 

“சரி உன்னிஷ்டம்!!”என்று மட்டும் அரைமனதாக சம்மதித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தவனுக்கு.. மென்னிலாவை அத்தனை தூரம் தனியாக அனுப்ப வேண்டுமா?? அனுப்ப வேண்டுமா?? என்று கேள்வி உள்ளூற எழுந்து அவனை மனசங்கடத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தது. 

அந்த சங்கடமே.. அன்றிரவு முழுவதும் அவனைத் துயில் கொள்ள விடாமல் அலைக்கழித்தாலும் கூட.. அடுத்த நாள் விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து.. தன் ஹேன்ட்பேக்கைத் தூக்கிக் கொண்டு.. அவள் புகையிரத நிலையம் பயணமாக, ஸ்டேஷன் வரையும் கூட.. கூடவே வந்தான் சரவணன்!! 

விடிந்தும் விடிந்திராத பொழுது.. அங்கு வீசிய கூதல் காற்று ஜீவனை வாட்டியெடுக்க, தான் அணிந்திருந்த சேலையால் உடலை இழுத்துப் போர்த்திக் கொண்டு தான் வண்டியேறினாள் மென்னிலா. 

ஏற்கனவே குறிப்பிட்டிருப்பது போல.. மென்னிலாவின் ஊரான ‘சிறுத்தோப்பு’ கிராமத்தில்.. அது பிரதான ரயில்வே நிலையம் இல்லையாதலால்.. ஐந்தாறு நிமிடங்கள் தான் ரயில் நிற்கும் ஆதலால், 

ரயில்வே நிலையம் வந்து சேர்ந்ததுமே ரயிலும் வந்துவிட, அவசரமாகவே ரயில் ஏறியிருந்தாள் மென்னிலா. 

சரவணன் மாமாவோ அவளை விட்டு அப்படியே விடைபெற்று வர நாடாமல், தண்ணீர் பாட்டில் எல்லாம் வாங்கிக் கொடுத்த பின்னர், ரயில் ஜன்னல் வழியாக அவளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டேயிருந்தான். 

‘உன் லெட்டரப் படிச்சேன் நிலா.. நானும் லவ் யூ தான்’ என்று பட்டென்று அவள் விழிகள் பார்த்துச் சொல்லிவிடு.. சொல்லிவிடு என்று தவியாய் தவித்தது சரவணனின் காதல் கொண்ட மனம்!! 

சரி சொல்லி விடலாம் என்று முடிவெடுத்தவனாக.. அவன் அவளது விழிகளைப் பார்த்து நிமிர்ந்த போது.. அந்தோ பரிதாபம்!! 

அந்த ஸ்டேஷனில் இளைப்பாறிய ரயிலும், ‘ஊஊஊ’என்று விசிலடித்துக் கொண்டே, கிளம்ப எத்தனிக்க, 

கிளம்பிய ரயிலோடு தானும்.. நடந்து வந்தவன், “சூதானமா இருந்துக்க… அங்க போனதும் கோல் பண்ணு.. என்ன? .. டிரெயின்ல விக்குற கண்டதையும் சாப்பிட்டுராத.. பார்த்து வாங்கி சாப்பிடு.. பத்திரமா இரு” என்று கரிசனை மொழிகள் கூறும் மாமனைப் பார்த்தவளுக்கு.. 

இயற்கையிலேயே எழும் பாசம் மீதூற, “நான் பார்த்துக்குறேன் மாமா.. நீங்க முதல்ல வீட்டுக்குப் போனதும் கொஞ்ச நேரம் தூங்கியெழுந்திருங்க.. அப்புறம் திருவிழா வேலைகளை கவனிச்சிக்கலாம்.. பாருங்க கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு..”என்று முறைப்பெண் சொன்னதும்.. அவனது இதயத்தில் ஓர் இதமான வீணை ராகம் வாசிக்கப்பட்டது. 

ரயில் முழுதாக வேகமெடுக்கவும் தன் நடையை நிறுத்தி விட்டு நின்றவன், அவளையே ஆசை மீதூறப் பார்த்தபடி கையசைத்துக் கொண்டேயிருந்தான்.

ஆனால் மென்னிலாவுக்கோ.. அவன் முகம் சற்று நீங்கியதும் தான்..’ஹப்பாடா’ என்று பெருமூச்சு விட முடிந்தது. 

தன் குடும்பம் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைத்து, தவறு செய்கிறோம் என்று தெள்ளத்தெளிவாக புரிகிறது; ஒருபுறம் மனமும், ‘நீ செய்வது சரியில்லை’என்று குமைகிறது தான்!! 

இருப்பினும்.. பரிதிவேல் வீரன் உருகிய படி கேட்ட, “முழுசா இருபத்தி நாலு மணி நேரம்.. எனக்காக தர முடியுமாஹ்….?? நீயும், நானும் மட்டும்!!! .. ஒவ்வொரு நொடியும்.. அது எனக்கானதா தான் இருக்கோணும்!!”என்ற வசனங்கள்.. அவள் உள்ளம் புகுந்து.. அவளை காதல்ப்பெண்ணாக மாற்ற, குமையும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு.. 

அடுத்த ஸ்டேஷனிலேயே இறங்கியவள், அங்கிருந்து ஆட்டோ பிடித்தாள் தன் தலைவன் சொன்ன பஸ் ஸ்டாப்பிற்கு. 

இன்னும் அவன் அங்கே வந்திருக்கவில்லை. விடிகாலை வேளையில், தெருவோரம் இருந்த கடைகளின் ஷட்டர்கள் கூட திறக்கப்படாத இருட்டு சூழ்ந்த காலை அது!! 

ஒன்றிரண்டு தெருநாய்கள் மாத்திரம் சோம்பல் நெளித்துக் கொண்டு.. நடைபயில.. காக்கைகள் கூட்டமாக, இரை தேடி.. மரங்களை விட்டகன்று கொண்டிருந்த ஆகர்ஷிக்கும் காலை அது!! 

அது கொஞ்சம்.. அனைத்து ஊர்க்காரர்களும் வந்து போகும் டவுன் பகுதி என்பதால்.. தன் தாத்தாவுக்கு தெரிந்தவர்களினதும், முக்கியமாக ஊர்க்காரர்களினதும் என.. யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்பதற்காக… தலை வரை சேலைத்தலைப்பை இழுத்துப் போர்த்து, முக்காடு இட்டவளாக.. 

கைப்பையில் கொண்டு.. வந்த கூலர்ஸையும் எடுத்து அணிந்தவளாக, “பழங்கால ஹீரோயின் சரோஜா தேவி” போல அவள் நின்றிருந்த வேளை.. அவளது பின்புறமாக இருந்து ஷோல்டரில் பதிந்தது ஓர் வலிய கை. 

பக்கென்றாகி.. அவள் திரும்பிப் பார்த்த வேளை, அங்கே சந்தோஷப்புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் பரிதிவேல் வீரன்!! 

அவனுக்கு, யார் பார்த்தாலும் கவலையில்லை என்று தோன்ற, 

‘தனக்காக வந்திருக்கிறாள்’ என்னும் போது நாடி, நரம்பெங்கும் காதல் பெருக்கெடுத்தோட, “நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா ஆண்டாளு.. ??”என்றவன், மின்னல் வேகத்தில் அவளைக் கட்டியணைத்திருந்தான்!! 

கொஞ்சம் பிரதான வீதித் தெருவோரம் என்பது சங்கடத்தைக் கொடுத்தாலும், ஆகாயச் சூரியனின் கண்களில் ஒளிர்ந்த சந்தோஷத்தின் தரத்தைப் பார்த்ததும்… அவனைத் தன்னிலிருந்தும் விலக்கத் தோன்றாமல் நின்றாள் மென்னிலா. 

ஓரிரு நாழிகைகளின் பின்னர் அவளில் இருந்தும் பிரிந்தவன், “சரி வா நாம கெளம்பலாம்!!..”என்றவன் அவள் விரல்களைப் பற்றிக் கொண்டே நடந்தான்!!

அவன் அன்று அடைந்த சந்தோஷத்தை கனகச்சிதமாக விளக்க.. கம்பனும், புகழேந்தியும் உயிர்த்தெழுந்து வந்து.. ஓராயிரம் கோடி உவமைகள் சொல்லியிருந்தாலும் கூட.. ஈடாகாத முடியாதளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் அவன். 

தன் அதரங்கள் விரிந்து.. முத்துமூரல்கள் மின்னலைத் தோற்க.. பளிச்சிட்டு சிரித்தவன் குறுநகை மட்டும்.. இறுதிவரை மாறவேயில்லை!! 

அது காதல் கொண்ட ஆண்மகன்.. தன் உள்ளங்கவர்ந்தாளுடன் இருக்கும் போது அனுபவித்துத் துய்க்கும்.. பேரானந்தம் அது!!! 

தொடரும்!! 

காதல் தானடி என் மீதுனக்கு? 

     [12]

 

‘தனக்காக.. அவள் வந்திருப்பது தனக்காகவே தனக்காகவென்று’ என்ற எண்ணம் உள்ளூற வலுக்க, அவனுள் பூத்த காதல் இன்னும் கொஞ்சம் அதிகமானது. 

அவனது முரட்டுக் கரங்கள்.. அவளை தன் ஜீப்பிற்கு அழைத்துச் சென்ற போதும் சரி, ஜீப் அவன் நாடிய இடத்திற்கு பயணப்பட்ட போதும் சரி.. அவனது கைகள்.. ‘இனி ஒரு போதும் யான் உன்னை நீங்கிலேன்’என்று கட்டியம் கூறுவது போல.. அவளது கரத்தை விடாமல் சேர்த்துப் பிடித்திருந்தது. 

மென்னிலாவுக்கு… அவனோடு கழியும் கணப்பொழுதுகள்.. தான் மரிக்காமலேயே சுவர்க்கலோகம் வந்தது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியது. 

ஒரு பத்துப் பதினைந்து நிமிட நேர பிரயாணத்தின் பின்பு.. அவனது ஜீப்.. அவளை அவன் அழைத்து வர நாடிய இடத்துக்கு நின்றது!! 

அப்போதும் கூட.. டிரைவர் சீட்டிலிருந்து இறங்கி வந்து.. அவள் இறங்குவதற்காக தன் கை நீட்டி..ஒரு காதல் சேவகனாக நின்றவனைக் கண்டதும், மென்னிலாவின் விழிகள் பளபளத்தன. 

அவன் அவளை அணைத்துக் கொண்டான்; அவள் தோள்வளைவோடு கையிட்டு.. அவளது பக்கவாட்டு உடல்.. அவன் உடலோடு அழுந்த மோத.. உரிமையுடன் அவளை அணைத்துக் கொண்டான் .

அவனிலேயே.. சர்வமும் மறந்து போனவளாக பார்வை பதித்திருந்தவள், கால்களில் ஈரம் வந்து தழுவுவது போன்று தோன்றவே.. 

அதில் சுய உணர்வு சற்றே வரப்பெற்று.. தன் அழகு நயனங்களை சுழற்றிய போது தான்.. தான் வந்திருப்பது “என்ன மாதிரியான இடம்?’ என்பதைக் கண்டு கொண்டாள் மென்னிலா. 

சுற்றிலும் நீர்.. ஆறும், கடலும் கலக்கும் ‘முகத்துவாரம்’ அது!!

 காற்றுக்கு அலை அலையாக ஆடியபடி கரை நோக்கி வந்த தண்ணீர் தான்.. அந்த செவ்வரலி மொட்டைப் போன்ற மிருதுவான பாதங்களை நனைக்கவாரம்பித்திருந்தது. 

தண்ணீரின் ஜில்லிப்பு.. நரம்பு வழி ஊடுருவி.. அவள் மூளையை ஊடுருவவே..”ஆ..ஸ்ஸ்” என்ற வண்ணம்.. இரண்டெட்டு பின்னாடி நகர்ந்தவள், 

தன் தலைவனின் நெஞ்சாங்கூட்டில் குஞ்சுப் பறவையாக ஒதுங்கலானாள். 

தன்னில் ஒதுங்கும் குமரியை.. மெல்லிய சிரிப்பு மீதூறப் பார்த்த பரிதி, அவள் காதோரம் கிசுகிசுப்பாக, “இதுக்கேஹ் இப்படீன்னாஹ்.. எப்படிஹ்?நீ பார்க்க வேண்டியது இன்னும் இருக்கேஹ் ஆண்டாளுஹ்?”என்று தன் புருவங்கள் உயர்த்திச் சொல்ல, அவன் குரலில் சித்த பிரம்மை பிடித்தது போலானாள் பெண்!! 

ஆனாலும்.. அவன்.. தான் விரும்பும் பெண்ணிடம்.. கண்ணியவானாக நடக்க நாடினானோ என்னவோ? பரிதி தன்னுடைய முரட்டுத்தனத்தையெல்லாம் கொஞ்சம் ஒத்தி வைக்கவே செய்தான்!! 

தன்னுடைய வேஷ்டியை.. இடது கரண்டைக்காலால் தூக்கியெடுத்து, முழங்கால் வரை மேலேற்றிக் கட்டிய வண்ணமே தண்ணீரை நோக்கி நடந்தான் அவன். 

அந்த முகத்துவாரப் பகுதியில்..சிலவகையான தண்ணீர்த் தாவரங்களும் வளர்ந்திருக்க.. அந்த இடத்திலேயே.. முழுதும் மரப்பலகையிலான.. ஒரு ஓடம் ஒன்று.. அமைதியாக முகம் குப்புறக் கவிழ்ந்து கிடந்ததை அப்போது தான் கண்டாள் அவள்.

தண்ணீர் சலசலக்க.. தண்ணீர்த்தாவரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த பகுதிக்கு சென்றவன், தன் வாளிப்பான கைகள் நீட்டி.. அந்த ஓடத்தை எடுத்து.. மல்லாக்காக திருப்பிப் போட்ட தினுசில்.. 

ஓடத்தோடு மேலுயர்ந்த தண்ணீர்த் திவலைகள் பீய்ச்சியடித்தது மென்னிலாவின் மாசுமருவற்ற முகத்தில்!! 

பீய்ச்சியடித்த தண்ணீர் துளிகள்.. முகத்தை விட்டும் வழிந்தோட.. அப்போது தான் உதித்த சூரியனின் கிரணங்கள் பட்டு…தண்ணீர்த்திவலைகள் ஜொலித்தவாற்றில்.. கூடவே ஜொலித்தது அவள் முகமும்!! 

அதை இரசித்துப் பார்த்திருந்தவனுக்கு.. அந்த ஈரத்தையெல்லாம்.. தன் இதழ்களினாலேயே துடைத்தெடுக்க வேண்டும் என்ற அவாவும் பிறந்தது. 

மல்லாக்காகத் திருப்பிப் போட்ட ஓடத்தை.. தண்ணீரில் வைத்து இழுத்த படியே.. தன்னவளை நோக்கி நடந்து வந்தான் பரிதி!! 

மன்னவன் வருவதைக் கண்டதும், தண்ணீரில் கால்கள் நனைய.. அவனை நோக்கி ஓடி வரப்போனவளை தடுத்தது அந்தக் கம்பீரமான விழிகள்!! 

அங்கேயிருந்த கரையிலிருந்து நீரை நோக்கி… கட்டப்பட்ட பலகைப் பாதையை தன் விழிகளில் சுட்டிக்காட்டியவனாக, “நான் சொல்லுற வரைக்கும்.. உன் கால்கள் தண்ணீரில் படக்கூடாது..வா..இந்த பக்கம் வந்து ஏறு!!”என்று சொல்ல, தன் முத்துமூரல்கள் பளிச்சிட சிரித்துக் கொண்டே, பலகைப் பாதை வழி ஏறி.. அவனை நாடிப் போனாள் அவள். 

ஒரு கையால் ஓடத்தைப் பிடித்திருந்தவன், மறு கையால்.. அவளுக்கு அழைப்பு விடுத்தான். 

தண்ணீரில் கால் பாவக்கூடாது என்பதற்காக.. ஓடத்தை பலகைப்பாதை வரை இழுத்து வந்திருந்தவனின் கண்ணியத்தில்.. பழைய நேசம் உயிர்த்தெழுந்தது அவளுள். 

அவனது கையில் கை வைத்தவள், ஓடத்துக்கு கால் வைக்க சற்றே தடுமாறியது ஓடம்!! 

ஓடத்தோடு இருந்தவளும் தடுமாறி விழுந்து விடாமல் இருக்க.. அவள் கையை விடுத்து.. பக்கென்று அவள் இடையை அவன் பற்றிக் கொள்ள, 

அவனது தீண்டலில் உடலில் இருக்கும் கோடானு கோடி ரோமக்கால்களும்.. சிலிர்த்தது பெண்ணவளுக்கு. 

அவள் கண்கள்.. அவன் கை விளைவித்த உஷ்ணத்தின் விளைவாக செந்நிறம் கொள்ள.. உள்ளுக்குள்ளே நிகழ்ந்தது உடலியல் மாற்றங்கள்!! 

அவளது செந்நிறக் கண்களோடு.. தன் கண்கள் கலந்தவன்.. காதலோடு புன்னகைத்தான். 

ஓடத்தின் முனையில் சென்று அவள் அமர்ந்ததும்.. பலகைப் பாதைப்பக்கம் இருந்து.. துடுப்புக்கள் எடுத்தபடி.. ஓடத்தின் இன்னொரு முனையில் அமர்ந்தவனின் கைகள்.. துடுப்பு வலிக்கவாரம்பித்தது. 

அவளது காதல் வயப்பட்ட கண்களோ.. தண்ணீரில் துடுப்பை அசைத்த போது.. இறுகி இறுகித் தளர்ந்த அவனது முறுக்கேறிய ஆர்ம்ஸினையே பார்த்திருக்க.. தன்னெதிரே அமர்ந்திருக்கும் வெண்ணெய்ச்சிலை தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதில் ஓர் கர்வமும் உள்ளூற பிறந்தது அவனுக்கு!! 

பாதி தூரம் சென்றதும்.. கடலும், நதியும் சங்கமிக்கும்.. அந்த மையமும் வந்தது!! அந்த மையப்புள்ளிக்கு அப்பால் தெரிந்தது முடிவேயற்ற வானம் தொடுகடல்!! 

ஓடத்தின் அசைவில் கொஞ்சம் பதகளிப்பு உருவானாலும் கூட.. அவனிருக்கிறான் என்ற நம்பிக்கையில் அமைதியாகவே வந்தாள் அவள். 

அவன் வலித்த துடுப்புக்கள்.. பெருங்கடலின் பக்கம் செல்லாமல், சற்றே திரும்பி..இன்னொரு பக்கமாக சென்றது!! 

மன்னார் மாவட்டம்.. கடலும், கடல் சார்ந்த ‘நெய்தல்’நிலமாக இருந்ததனாலோ என்னவோ.. கடவுளாக அளித்த.. கடல்-தரை தோற்ற வேறுபாடுகள் அங்கு அதிகம்!! 

பெருங்கடலின் பக்கம் செல்லாதவன்.. துடுப்பு வலித்தது எல்லாமல்.. சிறுகடலை நோக்கி!! 

அலைகள் அவ்வளவாக அடிக்காத.. கரையோடு அண்மித்திருக்கும் கடல்.. ‘சிறுகடல்’ என்பார் அப்பிரதேச மக்கள்!! 

ஓடம்.. அவனது வாளிப்பான கைகளின் அசைவால் போய்க் கொண்டேயிருந்தது..

அங்கே.. கடலைத்தாண்டியும்.. பனைமரங்களின் தலைகள் புள்ளியாக விரிய.. அவள் கண்களில் விரிந்தது எல்லாம் அவை அல்ல.. அவன் தான்!! 

தன்னையே பார்த்திருந்தவளை.. கண்டவனுக்கு.. ஒரு பெண்ணால்.. இப்படியான காதல் பார்வை பார்க்கப்படுவதே கிளுகிளுப்பை மூட்டியது. 

ஓடம் வலித்துக் கொண்டே கேட்டான் அவன், “ஏன் ஆண்டாளு?? ஒரு தடவ கூட.. நாம எங்க போறோம்?’னு என்கிட்ட கேட்கணும்னு தோணவேயில்லையா?” என்று. 

அவளோ… அவனது கள்ளூறும் தாப நயனங்களையே பார்த்த வண்ணம் சொன்னாள், “ம்ஹூஹூம்.. நான் கேட்க மாட்டேன்..நீங்க என் கூடவே வர்றதா இருந்தால்.. நரகத்துக்கு கூட.. சந்தோஷமா போவேன் மாமா.. என்னோட மனசுல இப்போ என்ன தோணுது தெரியுமா?? யாரும் இல்லாத இந்த நடுக்கடலிலேயே.. நாம ரெண்டு பேரும் மட்டும் தனியா இருந்துடக் கூடாதா?’ன்னு தான் தோணுது.. உங்க மார்புல ஒரு பூனைக்குட்டி போல சுருண்டுக்கணும்னு தோணுது..”என்று.

அவளது பதிலில்.. அவள் தன் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த காதல் புலப்பட.. இன்னும் கொஞ்சம் வேகமாக வலித்தான் துடுப்பை. 

ஓடத்தின் அசைவும்.. அவன் வாளிப்பான கைகளின் அசைவும் ஒரு கணம் நிற்க, புன்னகைத்துக் கொண்டே அவன் சொன்னான், “என்னய தவிர.. நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு ஆண்டாளு…?? இந்த கண்களால கொஞ்சம் திரும்பியும் பார்க்கலாம்”என்று. 

முரடனின் மென்மையான மொழிகளில் கவரப்பட்டவள்.. அவன் சொன்னது போலவே.. திரும்பிப் பார்க்க.. கொஞ்சம் மலைத்துத் தான் போனாள் அவள்!! 

நாற்பக்கமும் கடலில் சூழப்பட்ட குட்டித்தீவு அது. இலங்கைத் தீவுக்குச் சொந்தமான குறுந்தீவு!! 

கரைதட்டி நின்ற ஓடத்தை விட்டும் இறங்கி.. அந்தத் தீவினுள் பிரவேசித்தவளின் கண்கள் அகல விரிந்தன. 

சுற்றிலும் கடற்கரை மணல்கள்.. வெள்ளை வெளேரென கண்களில் விரிய, அதைத் தாண்டி.. ஒருபக்கத்தில்.. கடற்கரையோரம் வளரும் கண்டல்நிலத் தாவரங்கள் வளர்ந்திருந்தன. 

கடற்கரை மணல் பாதை முடிய.. அதையடுத்து.. புற்கள் வளர்ந்து.. அந்த வெள்ளைமணலை மறைக்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது. 

ஆங்காங்கே.. சவுக்குமரங்களின்.. இலையட்டை போன்ற குறுகுறுக்கும் நார்கள் கொண்ட இலைகள்.. நிலத்தில் வீழ்ந்து கிடக்க.. மறுபக்கம் பனைமரங்கள்.. நின்றன சல்யூட் வைக்கும் இராவணுவ அதிகாரிகள் போல!! 

அந்தத் தீவு.. சுற்றிவர கடல் சூழ்ந்த தீவு.. அவள் கண்களில்.. முடிவெல்லை வரை தெரிந்தது. 

ஈ, காக்கையோ, பூனை, நாய்கள் போன்ற வீட்டு விலங்குகளோ, நரி சிறுத்தைகள் போன்ற காட்டு விலங்குகளோ இல்லாத.. இன்னும் ஏன் சுற்றிவர மனிதத் தலைகள் கூட தென்படாத அதிசயத் தீவு போலும் அது!! 

ஆனால்.. ஒரே ஒரு மரப்பலகை வீடு மட்டும்.. சற்றே பாழடைந்து நிராதரவாக நிற்க, அதை விடுத்து.. அந்த தீவைப் பார்த்து அதிசயித்து நின்றவளின் காதோரம் கிசுகிசுப்பாகக் கேட்டது அவன் குரல்!! 

அவன் கைகள்.. அவளுடைய வயிற்றுக்கும், மார்புக்கும் இடையிலான தூரத்தை.. கைகளாலேயே அளவெடுப்பது போல துலாவியளைய, 

அவள் பின்னழகோடு.. தன் உடல் முட்டி உரசி நின்றவன், காதோரம், “இங்கனஹ் நீயும் நானும் மட்டும்.. உன் மாமாவும், என் ஆண்டாளும் மட்டும்.. உன்னிஷ்டம் போல இருக்கலாம்.. அத கேக்க தாத்தாவும் கெடயாது.. சரவணனும் கெடயாது..”என்று சொல்ல, 

தலைவனின் நேசத்தில்.. ஜிலுஜிலுவென்று மழைச்சாரல் அடித்தது போல இருந்தது.

இருந்த நிலையிலேயே.. பின்னாடி கைகள் கொண்டு சென்று.. தன் கன்னம் இழையும்.. அவன் கன்னத்தை வருடியவள், ‘பச்சக்’என்று சத்தம் வரும் வண்ணம் முத்தம் வைத்தவள், 

அவன் அந்த முத்த அதிர்ச்சியில் நிற்பது கண்டு கிளுக்கி நகைத்தாள். 

அந்த நகைப்பின் நாதம்.. இன்னும் கொஞ்சம் அவனை பித்தனாய் ஆக்க, அவன் காதுக்குள் தன் மெல்லிய அதரங்கள் நுழைத்தவள், “தேங்க்ஸ்”என்றதோடு நில்லாமல்.. அவன் எதிர்பார்த்திராத நேரம்.. பட்டென்று அவன் காதை கடித்து விட்டு ஓட, 

“ஸ்ஸ் ஆ” என்று அவளை விலக்கிக் கொண்டு வலியில், காதுகளைத் தேய்த்துக் கொண்டே.. கடித்து விட்டு ஓடும்.. அவளைப் பிடிக்க எண்ணி.. தானும் ஓடினான் பரிதி. 

கிண்கிணி நாதமாக சிரித்துக் கொண்டே.. ஈரமான கடற்கரையில்.. கால்கள் புதையப் புதைய… அவள் ஓட.. அவளது காலடிச் சுவற்றில் எல்லாம் தன் கால்கள் பதிய ஓடியவாறு, 

“ஓடாம நில்லு ஆண்டாளு.. நீயா நின்னா.. பாவம்னு விட்டுருவேன்..நானா பிடிச்சா.. அப்புறம் நீ தான் அரியந்தப்படோணும் (கஷ்டப்பட வேண்டி வரும்)…இந்தப் பரிதிக்கிட்டேயாவா உன் வேலய காட்டுற?? ”என்று எச்சரிக்கை விடுக்க.. அவளா கேட்பாள்?? 

ஓடிக் கொண்டே திரும்பி அவனைப் பார்த்தவன், அவனுக்கு அழகு காட்ட நாடி, “இந்தப் பரிதிக்கிட்டேயாவா உன் வேலய காட்டுற??”என்று கிள்ளை மொழியில் சொல்லிக்காட்ட.. அவனுள் சட்டென துளிர்விட்டது ஓர் மூர்க்கத்தனம்!! 

“நீங்க வேணா.. பரிதியா இருக்கலாம்.. நா.. நான் நிலா… மென்னிலா!! சூரியன் கையில் சிக்க மாட்டேனே??”என்று கை விரல்களை மடித்தாட்டி பழிப்புக் காட்டிய வேளையில், 

ஓரெட்டில் பாய்ந்து வந்து.. அவள் தோளினைப் பற்றிக் கொண்டான் அவன். 

அவனது முரட்டுப்பிடியில்.. மேற்கொண்டு அசைய முடியாமல்.. நிலா ஈர நிலத்தில் விழ, அவளைப் பின்தொடர்ந்து வந்து பிடித்தவனும், எக்குத்தப்பாக அவள் மேனியில் குப்புற விழுந்தான். 

அவளது முன்னெழில்கள் இரண்டும்.. பரந்த நெஞ்சின் அழுத்தத்தினால் அபாயகட்டத்தை அடைய, இதுவரை நேரமும் இருந்த குழந்தைத் தனமான மனநிலை மாறி.. ஏதேதோ உணர்ச்சிகள் மீதூற..தன் மேல் கிடந்தவனின் தோள்புஜங்களை இறுகப் பற்றிய வண்ணம் உருகி நின்றாள் அவள்!! 

ஆனால் பரிதியோ.. பெண்ணவள் மனம் வேறு போன போக்கில் அறியாமல், போலிக்கோபம் மீதூறும் குரலில், “என்னையவா க்கடிச்ச?? இப்ப உன்னய எங்கெல்லாம் க்கடிக்கிறேன் ப்பார்” என்று கறுவிக் கொண்டே, பற்களை விகாரமாக்கிக் கொண்டே.. அவள் காதுப்பக்கம் விரைந்தான் அவன். 

அவன் காட்டிய பற்களின் விகாரத்தில்.. கிளுக்கி நகைத்தவளுக்கு.. காதோரம் தீண்டிய அவனது பற்களின் எச்சில் தந்த உஷ்ணம்.. அவளை நிலையில் இருக்க விடாமல் தடுமாற்றம் அடையச் செய்ய, 

இவள் சொன்னாள், “இந்த மென்னிலா உங்களுக்கு சொந்தமானவள் மாமா.. நீங்க என்னை எங்கேயும் கடிக்கலாம்” என்று. 

அவளது சொற்களும், அது தாங்கி வந்த தாபத் தொனியும்.. பரிதிவேல் வீரனுக்கு ஏதோ ஒன்றை உணர்த்த, அவள் காதுகளை விட்டும் பட்டென்று அகன்றவன்,

 “ம்ஹூஹூம்… இன்னும் நீ எனக்கு முழுசா சொந்தமானவ இல்ல ஆண்டாளு… கல்யாணத்துக்கு அப்புறம்.. இதுக்கெல்லாம் சேர்த்து.. வட்டியும், முதலுமா கடி வாங்க ரெடியாயிரு.. அப்பய்யிர்ருக்கு உனக்கு!!”என்று கண்களில் சில்மிஷம் கொப்பளிக்க சொன்னவனையே, மரியாதை கமழப் பார்த்தாள். 

ஆளில்லா தனிமை.. பெண்ணே விரும்பிக் கொடுக்கும் இனிமை.. வேண்டாமென்று கண்ணியமாக மறுப்பவன்.. எப்பேர்ப்பட்ட ஆண்மகன்?? 

அவனது விழிகளையே.. ஆசையுடன் பார்த்திருந்தவளின் சிந்தனையை கலைத்தது.. அவர்கள் இருக்கும் இடம் வரை.. கரை தாண்டி வந்த நீளமான அலை!! 

அந்த நுரை பொங்கும் அலையின் ஈரம்.. நிலத்தில் வீழ்ந்து கிடந்தவளின் கூந்தலை நனைக்க, அவனை விட்டும் பட்டென்று எழுந்து கொண்டவளின் கண்களில் பட்டது அது. 

அதைக் கண்டதும் உற்சாகத்தில், “ஹேய் மாமா மட்டீஈஈ..மட்டீஈஈ!!”என்று கத்த, எதைக் கண்டு இப்படி கத்துகிறாள்?? என்று பதறிய வண்ணம் பார்த்தவன், அவள் காட்டிய ‘மட்டி’யைக் கண்டதும் புன்னகைத்துக் கொண்டு நின்றான். 

‘மட்டி’ என்பது ஆங்கிலத்தில் “ஓய்ஸ்டர்”என்று அழைக்கப்படும் ஒருவகையான சிப்பியுணவுக்கு.. இலங்கை தமிழ் மக்கள் வழங்கும் பெயர்!! 

பெரும்பாலும்.. கடலில் இருந்து கரையொதுங்கும் சிப்பிகளில் இருவகை உண்டு!! ஒன்று சிப்பி தன் மூடிகள் திறந்து.. கிடக்கும் சிப்பிகள்!! இவை உயிரற்றவை!! 

இரண்டாவது வகையொன்று உண்டு!! மூடி திறக்காமல்.. கடல் மணலினுள் அமிழ்ந்து கிடக்கும் சிப்பிகள்!! இவைகளுக்கு உயிருண்டு!! இதுவே மட்டி!! 

மண்ணினுள் அமிழ்ந்து கிடக்கும் சிப்பியைக் கண்டு.. தன் காதலி கூச்சலிடுவதைக் கண்டவன்.. “உனக்கு மட்டின்னா ரொம்ப பிடிக்குமா ஆண்டாளு?”என்று கேட்க, அவள் புருவங்கள் அகல விரிந்தன. 

“ரொம்ப்ப்ப” என்று இமைகள் மூடித் திறந்து சொல்ல.. அதில் இதயம் கசிந்துருகிப் போனது முரட்டுக்காளைக்கு. 

அடுத்த கணம்.. அவனும் ஓர் விடலைப் பையனாக மாறிப் போனவன், அவளுக்காக.. அந்தத் தீவின் கடல் மணலினுள்.. அலை வந்து கால்களை மோத மோத நடந்தான் மட்டி சேகரிப்பதற்காக. 

அவனது ஷேர்ட்டின் முதுகு முனையைப் பிடித்துக் கொண்டு.. மட்டி பொறுக்கும்.. தன்னவனை இன்பமான இதயவலைகள் படரப் பார்த்தாள் அவள். 

“மன்னாரில்” நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில்.. திமிறித் திரிந்த காளையை.. அநாயசமாக அடக்கிய ஓர் வீரன்.. இன்று.. அவள் முன்னிலையில் சின்னக் குழந்தைகள் போல.. அவளுக்குப் பிடிக்கும் என்பதற்காக மட்டி பொறுக்குவது.. அவளுள் அசைக்க முடியாத காதலை உருவாக்கியது. 

அவன் ஒவ்வொரு மட்டியாக சேகரித்துத் தர.. அதைத் தன் சேலைத்தலைப்பு விரித்து.. வாங்கிக் கொண்டே அவனோடு சுற்றி வர நடந்தாள் மென்னிலா. 

அவள் விரித்து வைத்த சேலைத்தலைப்பில் இடப்பட்ட ‘மட்டி’களின் பாரம், நேரம் செல்லச் செல்ல அதிகமாகிக் கொண்டே போக, “மாமா போதும் மாமா.. இதுவே அதிகம்.. ரொம்ப பாரமா இருக்கு.. என்னால தூக்கவே முடியலை”என்று அவள் சிணுங்க, 

“இருமா.. இதோ இன்னும் ஒண்ணு”என்று கடல்நீரை நோக்கிக் குனிந்தவனின் மேல் சின்ன கோபம் போனது அவளுக்கு!! 

சட்டென அவனது சட்டைக்காலர் பற்றி.. தன்னை நோக்கி திருப்பியவள், “ய்யோவ்.. அதான் சொல்றேன்ல?? உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? இத்தனையும் தூக்கிக்கிட்டு நான் வீட்டுக்குப் போனேன்னா.. ‘மன்னார்க்கடல்ல இல்லாத மட்டியையா.. காலி கடல்ல இருந்து தூக்கிட்டு வந்த?’ன்னு கேட்பாங்க.. ப்ளீஸ்.. இதையெல்லாம் தூக்கிட்டுப் போறது கஷ்டம்.. போதும்யா”என்று அலைக்கழிப்புடன் சொல்ல, 

அவளது “ஒருமைப்” பேச்சு கூட கிளுகிளுப்பு மூட்டுவதாகவே இருந்தது. 

இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்.. இடுப்பில் கை வைத்தபடி.. அலையில் பாதி நனைந்தும், நனையாத வண்ணம் இருந்தவளை ஆசைகள் முட்டப் பார்த்தவன், “இந்த மட்டியையெல்லாம்.. உன்னய ஆரு.. உன் வீட்டுக்கு எடுத்துப் போக சொன்னது?”என்று கேட்க, இவள் குழம்பிப் போனாள். 

“அப்போ பொறுக்கின மட்டியையெல்லாம்.. கடல்லயே போட்டுடச் சொல்றீயாஆ?” என்று ஆதங்கம் மீதூறக் கேட்டாள் அவள். 

“ம்ஹூஹூம்.. இங்கன சமைச்சு போட்டு.. இங்கனயே சாப்பிடலாம்” என்றவன், கடலை விட்டும் கரையேறி நடக்க, அவனது சொல்லின் அர்த்தம் புரிய மாட்டாமல்.. அவனைத் தொடர்ந்து கரையேறினாள் அவளும். 

அவன் அவளைப் பாராமல் விடுவிடுவென்று முன்னேற.. அவனது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஈரக்கால்களில் காய்ந்த மணல் ஒட்ட ஒட்ட நடந்தவாறு, “இங்கனயே.. சமைச்சு.. இங்கனயே சாப்புட்றதுன்னாலும்.. உப்பு புளி மிளகு எல்லாம் வேணுமே?? அட்லீஸ்ட் உப்பாவது வேணுமே பரிதி?? உப்பில்லா பண்டம் குப்பையிலேன்னு சொல்றதில்ல?”என்று அவள் பேசிக் கொண்டே வர.. அதற்கு அவன் பதிலளிக்கவேயில்லை. 

மாறாக.. அந்தக் குட்டிப் பலகை வீட்டை நாடிப் போனவன், அதற்குள் நுழைய.. அவனைத் தொடர்ந்து உள் நுழைந்தவளின் அதரங்கள் அதற்கு மேலும் ஒருமொழி பேசவேனும் திறக்கவேயில்லை. 

அந்தக் குட்டிப் பலகை வீடு.. ஒரு பக்கம் படுக்கையறை, அடுக்களை, குளியலறை என அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதைப் பார்த்தவளின் கண்கள்.. தன்னவனின் முன்னேற்பாட்டைக் கண்டதும் ஸ்தம்பித்துப் போயிற்று!! 

அவளைப் பார்த்து மனநிறைவுடன் திரும்பியவன் , “உன்னோட முழுசா.. இருபத்தி நாலு மணிநேரம் வேணும்னவன்.. இந்த விஷயத்த கூடவா யோசிக்காம இருப்பேன்?” என்று கேட்க, தன் மன்னவனின் புத்திசாலித்தனம் வியப்பையே கொடுத்தது அவளுக்கு. 

பொறுக்கி வந்த சிப்பிகளை.. அடுப்பு மூட்டி.. தண்ணீரில் வேக வைத்து விட்டு.. தண்ணீரின் சூட்டில், சிப்பிகள் திறக்கும் வரை.. ஆவலோடு காத்திருக்கலானாள் அவனது ஆண்டாள். 

நிலத்தோடு இருந்த விறகடுப்புக்கு அருகிலேயே முழங்கால்களைக் கட்டிக் கொண்டு.. மட்பானையையே… விழிகள் விரிய பார்த்திருந்த அழகு தனைக் காண்கையிலே.. அள்ளி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது. 

கூடவே அவள் “யோவ்.. யா” என்று ஒருமையில் பேசியது ஞாபகம் வர, அங்கிருந்த ஹேங்கர் பக்கம் சென்று.. தன் சட்டையைக் கழற்றி மாட்டி, வெறும் ஆர்ம்லெஸ் உள்பெனியனுடன்.. ஒரு மாடல் போல கச்சிதமான உடலமைப்புடன் நின்றவன், 

அவளைப் பார்த்து, “நீ என்னய “யோவ்” போட்டு கூப்பிட்றதும் கூட நல்லா தான் இருக்கு!!!” என்று பேசிக் கொண்டே அவனை நாடி வந்தவன்,அவளது இதழ்களை தன் இதழ்களால் தீண்டும் அணுவளவு இடைவெளியில் அமர்ந்தவனாக.. அவள் வதனம் பார்த்தான். 

அந்த அருகாமையில்.. இதயம் தாறுமாறாக துடிப்பது புரிய, அவனையே அவள் பார்க்க, இவனோ புன்னகைத்த வண்ணமே, 

“ஆனா நம்மூர் பொண்ணுங்க.. புருஷன ‘யோவ்’ போட்டு கூப்பிட்றது அரிது…ஆனாலும் இந்த வாயால நீ “ய்யோவ்”ன்னு சொல்லும் போது.. கிக்கா இருக்கு” என்றவன்.. அவளது கீழதரங்களை தன் விரல்களால் வருட, கூசியது அவள் உடல். 

ஏதோ மின்னதிர்வலைகள் படர்ந்தது போல ஒரு கணம் உடல் துடித்தடங்க.. உணர்ச்சி மிகுதி தாளமாட்டாமல்.. அவனது கையைப் பற்றி அழுத்தினாள் அவள். 

அவளது செய்கையில் விலகி நின்ற காளைக்கும்.. உந்துதல் பிறக்க, அவளை கிறங்கும் விழிகளுடன் பார்த்தவன், அவள் காதோரம் குனிந்து.. எதையோ இரகிசயமாக முணுமுணுத்தவன்,

“அப்ப மட்டும்.. “யோவ்”னு கூப்பிட்டுக்க ஆண்டாளு.. ஏன்னா நீ “யோவ்”னு சொல்லும் போது.. என்னென்னமோ பண்ண சொல்லி என் ஆசை என்னய தூஊஊண்டுது”என்று சொன்னான். 

‘அவன் எப்போது மட்டும் “யோவ்”னு கூப்பிட்டுக் கொள்’ என்றான்?? 

 அது அவனுக்கும், அவளுக்குமான அந்தரங்க இரகிசயம்!! 

அதைக் கேட்டதும், தன் உடலில் உற்பத்தியான உஷ்ணம் தாங்க மாட்டாமல், தன் கீழுதட்டை அழுத்திக் கடித்துக் கொண்டாள் அவள். 

அவள் அதரங்கள்.. பற்களுக்கிடையில் சிக்குண்ட தினுசில்.. இவனுக்குள் காதல் ஹோர்மோன்கள் சுரக்க, அடுத்த கணம்.. அவள் இதழ்களை.. அந்தப் பற்களிடம் இருந்து விடுதலையடையச் செய்தவன்.. தன் இதழ்களால் அதைக் கவ்விக் கொண்டான்.

மன்மதனின் முரட்டு அதரங்கள் காட்டிய மாயாஜாலத்தில், விர்ரென்று ஓர் மின்சாரம் பாய.. அவனது முதுகை.. இறுக்கிக் கட்டிக் கொண்டாள் மாது!! 

அவளாகவே தந்த அவளுடலின் மென்மை அழுத்தம் வேறு.. அவனை சொக்க வைக்க, அவளது முதுகு தாண்டி.. ஒரு அபாயகரமான மேட்டை நாடி இறங்கியது முரடனின் கைகள்!! 

அவனது உடலைக் காட்டிலும்… இவளது உடலில் இருந்து வந்த வெம்மைத் தீ… அவனை பித்துப் பிடிக்கச் செய்யும் போலிருந்தது பரிதிக்கு!! 

உணர்ச்சிகள் தாளமாட்டாமல்.. அவளது கழுத்தில் ஊர்ந்த முடிகுத்தும் அவனது அதரங்கள்.. அவளது தனங்கள் நோக்கி இறங்க, அதற்குத் தடையாக இருந்தது அவள் அணிந்திருந்த சேலை முந்தானை!! 

ஒரே உருவலில் சேலையைக் கையில் எடுத்து வீசியவனின் கண்களில்.. மூளையை மழுங்கச் செய்யும் அளவுக்கு.. அவள் பால் ஆசைகள் மலையளவு பொங்க, 

அவளது நெஞ்சுக்குழிக்குள் மூக்கு நுழைத்து.. அவளுக்கே அவளுக்கென்றிருக்கும் பிரத்தியேக மணம் முகர்ந்தான் அவன்!! 

அதில் ஓர் தாபமூச்சு அவளிடம் இருந்து வெளிப்பட.. தன்னெதிரே ஓர் மோகனச்சிலையாய் தத்தளித்தவளினை அப்போதே பெண்டாளத் துணிந்தது ஆண் உள்ளம். 

அங்கணம் உச்சிக்கேறிய வெயில்.. பலகைவீட்டில் கூரை இடுக்கு வழியாக.. அவள் கண்களில் விழுந்து.. அவளைக் கூசச்செய்ய, சூரியஒளி படாமல்.. உள்ளங்கை காட்டி மறைத்துக் கொண்டே, “உச்சுக்” கொட்டினாள் அவள். 

அந்த உச்சுக் கொட்டலில்.. இதயம் கலைந்தவனுக்கு, இன்னும் சிறிது நேரம் கழித்திருந்தாலும் கூட.. எல்லை மீறியிருப்போம் என்று தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. 

அவன் மெல்ல குனிந்து அவள் முகம் பார்த்தான். இன்னமும் கூட அவளது சொக்கும் பார்வையில் கொட்டிக்கிடந்த காதல் யாசகம் அவனில் மந்தகாசப் புன்னகையைத் தோற்றுவித்தது!! 

“நான் கட்டுப்பாடா இருக்க நெனச்சாலும் இவ விட மாட்டா போலிருக்கே?”என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தவன்.. அவளை குழந்தை தூக்குவது போல கைகளில் தூக்கிக் கொண்டான். 

அவன் தூக்கிய போது.. அவளுக்கு பக்கென்றாக.. அவனது வலிய கழுத்தில் மாலை போல கோர்த்துக் கொண்ட கைகள் இறுக்கிப் பிடித்தன அவனை. 

“மட்டி வேகுறவரை.. லெட்ஸ் ஹேவ் சம் ஃபன்”என்று சொன்னவன் அவளை ஏந்திக் கொண்டே, கடற்கரை மணலில் கால்கள் புதைய.. கடலை நாடிப் போனான். 

அவனிலேயே விழிகள் பதித்து இருந்தவளுக்கு, அவளது அண்மையில் தெரிந்த தாடை.. இதயத்தைக் குளிர்விக்க.. தாடியோடு இணைந்த கன்னத்தை.. இரு கைகளாலும் வலிமையாகப் பிடித்தாட்டினாள் மென்னிலா. 

தாடியின் மயிர்கள்.. கன்னத்து தோலோடு இழுக்கப்பட்டதும்.. சுர்ரென்று ஓர் வலி எழுந்து பரவ, “ஆஆஆ.. வலிக்குதுடீஈஈ” என்று கத்தியவனைக் கண்டு, 

பொற்காசுகளை தரையில் சிதறவிட்டது போல வானத்தைப் பார்த்து அண்ணாந்து நகைத்தவள், “என்ன மாமா நீ.. இந்த சின்ன வலிய கூட பொறுத்துக்க முடியலை?? .. ஆனா.. பேர் மட்டும் பரிதிவ்வேல் வ்வீஈரன்!!”என்று இழுத்துச் சொல்ல, காதலியின் கலாய்ப்பில் போலிக் கோபம் ஏறியது அவனுக்கு. 

“என்னயவே கலாய்க்கிறீயா..? இரு உன்னய்ய்..என்ன ப்பண்ணுறேன்னு ப்பாரு” என்றவன்.. அலைகள் மோதும் கடலுக்குள் இறங்கி.. இடுப்பளவு ஆழம் வரை சென்றவன்.. தன் கையில் ஏந்திய மலர்க்கொடியாளை ‘தொபுக்கட்டீர்’ என்று இட்டான் கடலில்!! 

அவனது முரட்டுத்தனமான செய்கையில்.. எதிர்பாராமல் கடலுக்குள் விழுந்தவள்… இரண்டு மிடர் உவர்நீர் பருகியபடியே.. சமாளித்து எழ.. 

கடலில் முழுதாக நனைந்து… அங்கலாவண்யங்கள் தெரிய நின்றவளை… உடம்பில் புது இரத்தம் பாய கல்லாய் சமைந்து நின்றவனாகப் பார்த்தான் பரிதி!! 

அவளுடைய கார்குழல் எல்லாம் தண்ணீரில் நனைந்து… கற்றை கற்றையாகத் தெரிய, மார்புக்கு மேற்பகுதியிலும், சின்னத் தொப்புள் கொண்ட போதையேற்றும் வயிற்றுப் பகுதியிலும்.. கற்கண்டாக ஒட்டியிருந்தது மணல் துகள்கள்!! 

பல்லவன் காலத்துக் கைதேர்ந்த சிற்பி.. செதுக்கி செதுக்கி செய்தது போல.. பருத்த தொடைகளின் இடுக்கில்.. சேலை நனைந்து.. உடலோடு ஒட்டித் தெரிந்து.. அவளை ஒரு தேவலோக மங்கை போல காட்ட, 

அவளை நோக்கி முன்னேற ஒரு எட்டு வைத்தவன், கைமுஷ்டி மடக்கி.. உடல் இறுக நின்றான். 

‘இன்னும் கொஞ்சம் அவளைப் பார்’ என்று பொல்லாத மனம் சலசலத்தாலும், மனதை அடக்கிக் கொண்டு அவளுக்கு புறமுதுகிட்ட வண்ணம் ஓரிரு நாழிகைகள் நின்றவன், அவளை விட்டும் கரையை நோக்கி நடந்தான். 

கண்களில் மன்மதன் மலர்க்கிரணங்கள் துளைக்க நின்ற தலைவன், எல்லை தாண்டாமலேயே செல்வது.. மென்னிலாவுக்கு உறுத்தலைக் கொடுக்க, தண்ணீர் சலம்ப ஓடி வந்து.. அவனுடைய முதுகில் தன் எழில்கள் ‘நச்சென்று’ மோத அவனைக் கட்டியணைத்து நின்றாள் அவள். 

சொக்க வைக்கும் ஹஸ்கி குரலில், 

“நான் என்ன பெண்ணில்லையாஹ் என் கண்ணாஹ்??

அதை நீ காண கண்ணில்லையாஹ் என் கண்ணாஹ்.. 

உன் கனவுகளில் நான் இல்லையாஹ்??” என்று தன் ஏக்கம் சுட்டி அவள் பாட, அழகாக தலை சிலுப்பி நகைத்தான் அவன். 

அவளை நோக்கித் திரும்பியவன் அவள் கண்களைத் தவிர மற்றதைப் பார்க்காமல் இருக்க பகீரதப் பிரயத்தனம் செய்தான். 

அவளுடைய கன்னத்தை இரு கைகளாலும் தாங்கியவன், “ஆண்டாளு.. உன் கூட இருபத்தி நாலு மணி நேரம் தான் கேட்டேன்.. உன் உடம்பு கூட இருபத்தி நாலு மணிநேரம் கேட்கல.. அப்படி எனக்கு காமம் தான் வேணும்னா.. நீ என் வீட்டுக்கு வந்தப்போவே.. அதை எடுத்துக்கிட்டிருப்பேன்.. ஆனா எனக்கு வேண்டியதெல்லாம் உன் காதல்….. உன்னோட குழந்தைத்தனமான பேச்சு.. இது தான்.. உன்னை நான் காதலிக்கிறேன் ஆண்டாளு.. கல்யாணத்துக்கு முதல்.. ஒரு தூய காதல் அனுபவிக்கணும்னு ஒரு பேராசை… ஒரு காமம் இல்லாத காதல் அனுபவிக்கணும் ஆசை ஆண்டாளு..”என்றவன் மீண்டும் ரகசியம் பாட, இம்முறை சிலிர்த்தது அவள். 

“ஒரு காமம் இல்லாத காதல் அனுபவிக்கணும் ஆசை ஆண்டாளு..”என்ற இவனது இறுதிவார்த்தைகள்.. இதயத்தில் கிடுக்கிப்பிடி போட்டது போல அழுந்தப் பதிய,

மையல்ப்பெருக்கு அதிகமாகி.. அவனுடைய தாடி அடர்ந்த கன்னங்களை இரு கைகளிலும் ஏந்தியவள்.. கன்னங்கள் மூக்கு, நெற்றி, இமைகள் என அவன் முகமெங்கிலும் இடைவிடாது பொழிந்தான் முத்தங்களை!! 

காதலியின் அன்பு கண்டு.. வெள்ளந்தியாக சிரித்தவன், “சரி வா.. உனக்கு பசிக்கும்ல?? நாம போய் நம்ம ‘மட்டி’க்கு என்னாச்சுன்னு பார்த்துட்டு வரலாம்”என்று அழைத்தவன், அவளது விரல்கள் கோர்த்துக் கொண்டு.. 

குச்சிப்பலகை வீட்டை நாடிப் போனான். 

அவன் கணித்த நேரம் சரியானது என்பது போல.. அவன் மண்சட்டியின் மூடியைத் திறந்ததும்.. உள்ளுக்குள் திறந்திருந்தது சிப்பிக்களும்!! 

மட்டிக்களை எடுத்து.. வெந்நீரில் கழுவி.. அங்கிருந்த அடுக்களையில் இருந்த உப்பு, புளி, மிளகு இட்டு.. சரிவிகித சமனாக.. நாக்கில் நச்சென்று படக் கலந்து.. 

அவன் அங்கே ஏற்கனவே வாங்கி வந்து வைத்திருந்த “சாஸ்”ஸோடு கலந்து.. கை தேர்ந்த.. ஐந்து நட்சத்திர ஹோட்டல் “செஃப்” போல அவன் வேலை பார்க்க, 

அதை முழுங்கால்களை ஊன்றிப் பிடித்து அமர்ந்த வண்ணம்.. இரசனையுடன் பார்த்திருந்தாள் மென்னிலா. 

எல்லாம் பக்காவாக வந்ததும்.. ஒரு மட்டியை எடுத்து.. அவள் வாயில் அவன் ஊட்ட, வேண்டுமென்றே.. அவன் தந்த மட்டியோடு.. அவனது விரல்களையும் இதழ்களில் வைத்து சூப்பினாள் அவள். 

கண்களில் எதிர்பார்ப்பு மீதூற, “எப்படியிருக்கு ஆண்டாளு?’என்று அவன் கேட்க, மட்டியை ருசித்து சாப்பிட்டவள், இதழ்களையும் ஈரமாக்கியவளாக, “ம்ம்.. டிலீஷியஸ்!!”என்று சொல்ல, சற்றே பெருமையில் விரிந்தது அவன் நயனங்கள். 

“சரி பசியில இருப்ப.. வா சாப்பிடலாம்”என்று அவன் மட்டியை பரிமாறப் போக, அவனது கைப்பற்றித் தடுத்தவள், “இங்கே வேணாம் மாமா.. நான் இந்த ஐலண்ட்க்குள்ள வரும்போதே ஒரு இடம் பார்த்து வைச்சிருக்கேன்.. அங்கே போய் சாப்பிடலாமே ப்ளீஈஈஸ்”என்று கண்களில் குழைவுடன் கெஞ்ச, தானாகவே “சரி” என்று ஆடியது அவள் தலை!! 

பலகை வீட்டுக்கு வெளியே.. பனைமரங்களின் கீழே அநாதரவாக விழுந்து கிடந்த பனையோலைகளை எடுத்து வந்து, கச்சிதமாக கிடுகு பின்னியவன், 

பனையோலைக் கிடுகையே பாத்திரமாக்கி.. மட்டியை அள்ளிப் போட்டுக் கொண்டு.. அவளோடு அவள் விரும்பும் இடத்தை நோக்கி நடந்தான் பரிதி. 

அவளோ.. அவனது முழங்கை மடிப்பின் இடைவெளியில் கைவிட்டு அவனை அணைத்துக் கொண்டே, சின்னஞ்சிறு கதைகள் பேசிய வண்ணம் அவனை வழிநடாத்திச் சென்றாள். 

பல மேடுபள்ளமான பாலைவனம் போன்ற இடம் தாண்டி, சவுக்கு மரக் காடுகள் தாண்டி.. போய்க் கொண்டேயிருந்தது பயணம்!! 

இத்தனைக்கும் அவள் வாயோ ஓயாமல் கதை பேச.. அவளது நயனமணிகளின் அசைவை.. கதைகளை விவரிக்கும் போது.. கைகள் காட்டிய பாவத்தையெல்லாம் இமைகொட்டாமல் பார்த்திருந்தவனுக்கு தோன்றியது எல்லாம், 

“என் ஆண்டாள் எவ்வளவு அழகு என்பதேயாம்!”. 

அவள் பேசிக் கொண்டிருந்த போதே.. ஏதோ மயக்கும் சிநதனையுடன் வாய் திறந்தவன், 

“மனதுக்கு இனிய பெண்ணுடன்.. அதுவும் என்னய நிமிஷத்துக்கு நிமிஷ்ம்,.. “மாமா மாமா”ன்னு கூப்பிட்ற பொண்ணோட.. பீச்சோரம் காலாற நடக்குறது கூட.. ஒரு தனி ஃபீலிங்கா தான் இருக்கு ஆண்டாளு”என்று சொல்ல, அந்த வார்த்தைகளால் கவரப்பட்டவள், சட்டென்று குதிக்கால் எம்பி, கன்னத்தில் முத்தம் வைத்தவளாக… அவனை விட்டும் ஓடினாள் கடலை நோக்கி. 

அங்கே கடற்கரை மணலில் இருந்து.. கடலின் ஆழமான பகுதிவரை பலகையிலான நடைபாதை கட்டப்பட்டிருக்க.. வெறும் பாதங்களுடன் பலகையில் கால்கள் தடதடக்க கடலை நோக்கி விரைந்தவள், 

அதன் அந்திம இடத்தில்.. அமர்ந்து கொண்டவள், பக்கத்திலிருந்து இடம் காட்டி, “சீக்கிரம் வா.. மாமா.. உன் ஆண்டாளுக்கு ரொம்ப பசிக்குதூஊஊஊ”என்றாள். 

பரிதிக்கோ..ஒரு சின்னப் பெண்ணால்… தான் பணிக்கு ஏவப்படுவதா? என்ற ஆண்கர்வ எண்ணங்கள் அவளிடம் மாத்திரம் எழாமல் போனதைக் கண்டு வியந்து தான் போனான். 

இருவரும்.. அந்தப் பலகைப் பாதையில் இருந்து.. கால்களை தண்ணீரில் இட்டுக் கொண்டு.. கிடுகு நிறைய இருந்த மட்டியை.. கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்யவாரம்பித்தனர். 

அவ்வப்போது அவள் அவனுக்கு ஊட்டிவிட, மனதோரம் அவனுக்கு தாயின் நினைவும் வந்து போனது. 

பரிதி அளவாகவே உண்டாலும்.. மென்னிலாவுக்கு தான் வயிறு முட்ட உண்ட மயக்கத்திலும்..அமைதியாக வீசிக் கொண்டிருந்த கடல் காற்றிலும் தூக்கம் கண்களை சுழற்றவாரம்பித்தது. 

அந்த கணம்.. வந்த தூக்கத்தையும் பாழாக்கும் வண்ணம்.. அவளது கண்களில் விழுந்தது அந்த விசித்திர கடல் உயிரினம்!! 

நீரில் கிடந்த காலை லபக்கென்று எடுத்துக் கொண்டவள், “அதோ பாருங்க மாமா… ஜெல்லி ஃபிஷ்!! .. ஜெல்லி ஃபிஷ்!!”என்று கத்த, அவனும் அவள் கை காட்டிய திசை நோக்கிப் பார்த்தாள். 

ஆம், அவள் சொன்னது போல.. ஜெலி ஃபிஷ் தான்.. அவர்களை நோக்கி தன் உடலை உந்தி உந்தி.. கூட்டமாக நீந்தி வந்து கொண்டிருந்தது. 

அவைகளைக் காணவும்.. அவற்றில் ஒன்றைப் பிடித்துப் பார்க்கும் ஆர்வம் மீதூற, கடல்நீரிற்குள் கைகளை விடலானாள் அவள். 

அவளது பைத்தியக்கரத்தனமான செய்கையில் இதயம் ஒரு முறை நின்று துடிக்க, “வேணாம் ஆண்டாளு..நா..நான் சொல்றதைக் கேளு.. ஆண்டாளு… அது கொட்டும்!! ..”என்று எச்சரிக்கை செய்ய, அதையெல்லாம் கேட்காது அமைதியாக நீரில் கையிட்டுக் காத்திருந்தவள், 

ஒரு ஜெல்லி ஃபிஷ் தன்னை நோக்கி நீந்தி வர, அதன் தலைப்பகுதியைக் கைகளால் அள்ளி எடுத்தாள் மென்னிலா. 

ஜெல்லி ஃபிஷ்ஷின் ஆபத்துணராதவள் போல அவள் நடந்து கொள்ளும் விதத்தில் கோபம் கொண்டவன், அவளை முறைக்க, அவளோ மொட்டுநகை அரும்ப, 

“எங்கே மாமா கொட்டவேயில்லையே??.. மாமா.. நான் மெரைன் பயாலஜிஸ்ட்… எனக்கும் கடல்வாழ் உயிரினங்கள் பத்தி தெரியும்.. இது மூன் ஜெலிஃபிஷ்.. நோ ஹார்ம் எட் ஆல்.. பாக்ஸர் ஜெலி ஃபிஷ் தான் மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று சொல்லிக் கொண்டே, 

மூன் ஜெல்லி ஃபிஷ்ஷை தண்ணீரில் விட்ட கணம்.. அவளது முன்னங்கையில் சுள்ளென்று ஏதோ கொட்டியது போல வலித்தது. 

உடலின் முதுகந்தண்டு வடம் உட்பட அந்த வலி எழுந்து பரவுவது போல கிர்கிர்ரென்று தலை சுற்ற, “ஸ்ஸ்.. ஆஆ..”என்ற வண்ணம் நீரில் இருந்து கை எடுத்துப் பார்த்தவளுக்கு.. அப்போது தான் மற்றுமொரு ஜெல்லிபிஷ் கடித்திருப்பதே புரிந்தது. 

வலது முன்னங்கையை.. இடது கையால்.. இறுக்கிப் பிடித்துக் கொண்டே.. உயிர் போகத் துடிப்பவளை… கண்களில் நீர் ததும்ப.. அதே வலியை தான் அனுபவிப்பது போலப் பார்த்தான் பரிதி. 

“நான் தான் சொன்னேன்ல? அது கொட்டும்னு.. ஏன்மா இப்படியெல்லாம் பண்ற?..இந்த மாதிரி நேரத்துல நா.. நான் எங்கே போவேன்??” என்று தாடையை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டு மொழிந்தவன் உடல் துணுக்குற்றுக் கொண்டிருந்தது. 

அடுத்த கணம் ஏதேதோ யோசனைகள் தோன்ற.. உடனே பலகை வீட்டை நாடி ஓடினான். 

அங்கே மட்கலத்தில் கிடந்த தண்ணீரையும், ஒரு பிடி கடல் மண்ணையும் அள்ளிக் கொண்டு அவளை நாடி வந்தவன், ஜெல்லி ஃபிஷ்.. கொட்டிய அவள் கையை நீரால் கழுவினான். 

அதன் செதில்கள் பட்ட சிவந்த தடம்.. அவளது முன்னங்கையில் தெளிவாகத் தெரிய.. கீழுதட்டைப் பற்களால் கடிக்கும் அவளைக் கண்டு இதயம் வலிக்க, 

“வலிக்குதா..?? பொறுத்துக்கிடு ஆண்டாளு.. சரியாப் போயிரும்” என்றவன்.. கையோடு கொண்டு வந்த மணலை அள்ளி…அவள் கையில் வைத்து.. மணலாலேயே காயத்தை மறைத்தான். 

இந்த மாதிரி ஜெல்லி ஃபிஷ் கொட்டிய சந்தர்ப்பங்களில் ஏதும் இரசாயன தைலங்களோ, மூலிகைத் தைலங்களோ கைவசம் இல்லாது போனால்.. சிறந்த கைமருந்து தான் கடல் மண்!! 

சமயோசிதமாக யோசித்து, தாமதியாமல் முதலுதவி செய்த மன்னவன், இன்னும் பதறிக் கொண்டிருப்பது.. அவளுள் புது மாதிரியான உணர்வுகளை கிளப்பி விட்டது. 

தன் மேல் அக்கறை கொண்டவனையே லயித்துப் பார்த்திருந்தவளுக்கு, அவள் அடைந்த வலியையும் விட.. அவனது காதல் அதிக பலத்தைக் கொடுப்பது போல இருந்தது. 

கொஞ்சம் கொஞ்சமாக வலி நீங்குவது போல இருக்க.. அவனது நெஞ்சாங்கூட்டில் தலை வைத்துக் கொண்டே.. அந்தத் திண்ணிய மார்புகளுக்கு மையலுடன் குட்டிக்குட்டி முத்தங்கள் வைத்தாள் அவள். 

அவனோ.. அவள் தலை கோதியவாறு.. கொஞ்சம் கொஞ்சமாக பொழுது சாய்ந்து தொடுகடலோடு சங்கமித்துக் கொண்டிருந்த தங்கச் சூரியனை பார்த்துக் கொண்டே, 

உள்ளங்கையையே தலையணையாக மாற்றி.. பலகையோடு அண்ணாந்து படுத்துக் கொள்ள, இவளும் அவனது மார்புக் கூட்டோடு தலை புதைத்து.. அவன் வியர்வை வாசம் முகர்ந்தவளாக வானம் பார்த்தாள்!!

“ஆண்டாளு?” – அவனது கம்பீரக் குரல் செவி வழி நுழைந்து ஏதோ செய்ய, மோனக் கிறக்கத்துடன், “ம்?” என்றாள் அவள்!! 

வானத்தை தன் கையுயர்த்தி சுட்டிக் காட்டியவன், அழகான ஹஸ்கி குரலில், “இந்த வானத்தை பார்க்குறப்போ.. எனக்கு என்ன தோணுது தெரியுமா?”என்று கேட்டான். 

மெல்ல அவன் மார்பில் நாடி பதித்து எம்பி.. அவனது சூரிய முகம் பார்த்தவள் கேட்டாள், “என்ன தோணுது?” என்று. 

காதலியின் ஆர்வம் அவனுள் கிளுகிளுப்பை மூட்ட, “ஒவ்வொரு தடவை வானத்தைப் பார்க்குறப்போவும்.. அது கைதேர்ந்த ஓவியன் வரைஞ்ச மனோரம்மியம் தரும் ஓவியம்னு தோணும் ஆண்டாளு!!”என்றான் அவன். 

அவன் தொடர்ந்து சொன்னான், 

“ஒருபக்கம் வானம்.. தொடுகடலோடு சூரியன் அஸ்தமித்து… வானத்தை தங்கமுலாம் பூசியது போல… படுகவர்ச்சியாக இருக்குல்ல?? இதை பார்க்குறப்போ எப்படியிருக்கு தெரியுமா?”என்று கேட்க, அவன் காட்டிய தங்கமுலாம் பூசிய வானம் பார்த்துக் கொண்டே இவள் கேட்டாள், “எப்படியிருக்கு மாமா?”என்று. 

அவன் முறுவலித்துக் கொண்டே, “இந்த ஆகாய சூரியன்.. ‘இதோ வந்துட்றேன்’னு சொல்லிட்டுப் போன.. தன்னோட காதலி நிலாவுக்காக.. ‘இப்போ வருவா.. இப்போ வருவா’ன்னு கால் கடுக்க கடுக்க காத்திருந்து.. நிலா வராமல் போனதும்… கோவத்துல சிவக்குறது போல இருக்கு தெரியுமா??”என்று சொல்ல, அமைதியாக இளநகை புரிந்தாள் அவள். 

“கற்பனை அபாரம் புலவரே!!” என்று அவள் ‘புலவர்’ என்று அவனை சிலாகிக்க, இவன் இரசனையோடு சொன்னான்,

 “இன்னைக்கு சூரியன் டியூட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போனதும்.. தன்னோட நிலா கூட ஒரு ஊடல் இருக்குன்னு நெனக்கிறேன்”என்று மேலும் அந்தக் கற்பனைக்கு வலு சேர்த்து. 

ஆனால் அதை மறுத்த இந்த நிலா சொன்னாள், “இல்ல மாமா.. எனக்கென்னமோ.. அந்த நிலாவுக்கு.. சூரியனை பிடிக்கலையோன்னு தோணுது.. பின்னே? … சூரியன் டியூட்டி முடிஞ்சதும்.. நிலாவோட டியூட்டி ஆரம்பமாகிடுதே.. அப்புறம் எப்படி நிலாவும், சூரியனும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கவேனும் சந்தர்ப்பம் கிடைக்கும்??லவ்வும் ஆரம்பமாகும்.. பாவம் சூரியன்.. தாடி வைச்சுக்க வேண்டியது தான்” என்றவள் ஏதோ ஹாஸ்யம் பேசியது போல கிளுக்கி நகைக்க, அவன் முகமோ ஏனோ இறுகியது. 

“அந்த நிலாவை விடு.. இந்த நிலாவுக்கு எப்படி?? இந்த சூரியனை பிடிக்குமா?” என்று தவிப்புக்கள் கொந்தளிக்கக் கேட்க, அவள் வெகுவெகு அழகாகச் சொன்னாள்; அவன் இதயம் பெயர்ந்து வந்து அவள் மடியில் வீழும் வண்ணம் சொன்னாள், 

“இன்னும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்.. இந்த நிலாவுக்கு.. இந்த சூரியன மட்டும் தான் பிடிக்கும் மாமா” என்று. 

அதில் மின்னல் மின்னிய வானம் போல.. தன் முத்துமூரல்கள் தெரிய.. சந்தோஷமாக நகைத்தவன்.. “ஆண்டாளுஹ்”என்று கிறக்கத்துடன் அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான். 

இன்னும் சற்று நேரத்தில்.. கடும்நீல வானத்தில்.. வெள்ளை மேகங்கள்.. கருமேகங்களாக காட்சி தர.. ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்தது நட்சத்திரங்கள்!! 

நிலாவும் இரவு வானில் ஊர்வலம் போக.. வந்து விட.. அந்தத் தீவு முழுமைக்கும்… ஏகாந்தமான நிலவொளி வீழ்ந்த மந்தகாசம் சிந்தும் இரவு அது!! 

அதில் என்னவோ ஆசைகள் கிளர்ந்தெழ, தன் ஆண்மைக்கேயுரிய கம்பீரமான குரலில், 

“என்ன நெனச்ச

நீ என்ன நெனச்ச

என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது”என்று அவன் பாட, பாடுவது தன் முரடன் தானா? என்ற இன்பஅதிர்ச்சி பொங்க, அவனைப் பார்த்தாள் அவள்.

 

 

காதலோடு அவன் நெற்றியில் முத்தம் வைத்தவள்,அவனை கொள்ளையடிக்கும் மென்மையான குரலில், 

“சொக்கி தவிச்சேன்

சொக்கி தவிச்சேன்

நான் சொக்கத்தங்கம் கிட்டியதா

துள்ளி குதிச்சேன்

 குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர

உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்

எந்த பூர்வ ஜென்ம

புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்” என்றவள்..

அதற்கு மேலும் பாட முடியாமல் அவனை.. ஆசைகள் கரை புரண்டோட இறுக்கி அணைக்க, நெக்குருகிப் போனவன், தானும் அவளைக் கட்டியணைத்தான். 

இருவர் உடல்களும் காற்றுக்கூட புகமுடியாதளவுக்குப் பின்னிப் பிணைந்தது காதலில்!! 

அது ஒருவகையான மோன நிலை அது!! காமத்தை எட்டாமலேயே காமத்தை அடைந்த காதல் மனநிலை!!

அவன் கைகள்.. அவளது மிருதுவான மேனியில் எங்கெல்லாமோ பவனி வர.. உணர்ச்சிகள் தாங்க மாட்டாது.. அந்தக் கண்ணன் தன் வாயோடு ஆண்டாளின் வாயைப் பதிக்க.. அங்கே வரையப்பட்டது இதழ்களினால் ஓர் ஓவியம்!! 

பெண்ணவளின் மென்மை.. அவனை ஓர் மஜ்னுவாக மாற்ற.. கிறக்கக் கண்களுடன் பாதிக் கண் மூடி இருந்தவளைக் காணக் காண இன்னும் இன்னும் இதழ்கள் தாண்டி துலாவச் சொன்னது ஆண்மனம்!! 

இருவர் நாவுகளும்.. சுழன்றடித்து பொருதிட்டுக் கொள்ள, அவனது தோள்புஜங்களின் முறுக்கில் ஆழ இறங்கியது அவள் கை நகம்!! 

மோனமாக ஓர் சிணுங்கல் அவளிடமிருந்து வெளிப்பட.. அவளில் சுரந்த ஒட்டுமொத்த விடாமல் பருகியவன்.. அவளை ‘இன்னும்.. இன்னும்’என்று ஏங்கச் செய்தான்!! 

அந்த நீண்ட நெடிய முத்தத்தின் பின்.. அவளை அவன் விலக்க, அந்த நிலவொளியில் செம்மையுற்றிருந்த அவள் முகம் பார்த்து.. காதல் கூடியது அவனுக்கு!! 

தன் வேஷ்டி பாக்கெட்டிலிருந்து ஜொலிக்கும் ஓர் பொருளை எடுத்தவன்.. அவள் முன் நிலைக்குத்தாக ஒரு பொருளைத் தொங்கவிட.. அதைக் கண்டவளின் விழிகள் பளபளத்தது. 

அதுவொரு தங்கக் கொலுசு!! 

தன் மடியில் அவளது அனிச்சம்பூப் பாதங்கள் கிடத்தி அதை அணிவித்து விட்டவன், நெற்றிக்கு முத்தம் கொடுத்தவனாகச் சொன்னான், 

“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..” என்று. 

இவனுக்கு எப்படி அவள் பிறந்தநாள் இன்று நடுநிசியுடன் பிறக்கின்றது என்று தெரியும் என்று அவள் விழிகள் மலர்த்தி பார்க்க, 

அந்தப் பார்வையில் காதல் மிகுதியாகி கட்டியணைத்தவன், “இதுக்காக தான்.. உன்னோட இருபத்தி நாலு மணிநேரம் வேணும்ன்னு சொன்னேன் ஆண்டாளு.. நம்ம வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி.. உன்னோட இருந்த இந்தப் பரிதியை மட்டும் நீ மறக்கவே கூடாது ஆண்டாளு… இது உன் பரிதி.. உனக்கு மட்டுமே சொந்தமான பரிதி”என்று கண்கள் கலங்க சொல்ல, அவள்.. தன் மன்னவனையே காதல் கமழப் பார்த்திருந்தாள். 

அது அவள் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்த நாளாக மாறிப் போயிற்று. 

 

 

10 thoughts on “காதல் தானடி என் மீது உனக்கு!-11 & 12 (விஷ்ணுப்ரியா)”

  1. Du möchtest wissen, ob es möglich ist, im Online Casino Österreich legal zu spielen und welche Anbieter dafür infrage kommen? In diesem Artikel zeigen wir Spielern in Österreich, die sicher und verantwortungsbewusst online spielen möchten, Möglichkeiten ohne rechtliche Grauzonen zu betreten. Lies weiter, um die besten Tipps und rechtlichen Hintergründe zu entdecken: Online Casino Österreich

  2. Hello would you mind letting me know which webhost you’re utilizing? I’ve loaded your blog in 3 different web browsers and I must say this blog loads a lot faster then most. Can you recommend a good hosting provider at a fair price? Cheers, I appreciate it!

  3. Получите [url=https://konsultaciya-yurista21.ru/]консультацию юриста бесплатно[/url] прямо сейчас для решения ваших юридических вопросов!
    Важность юридической консультации в современном обществе. Юридическая помощь становится неотъемлемой частью жизни каждого человека.

    Сложности в законодательстве часто приводят к проблемам. Консультирование с профессионалом поможет разобраться в ситуации.

    Разные правовые области требуют специализированных знаний. Компетентный юрист может объяснить все тонкости законодательства.

    Найти хорошего юриста – это важный шаг к решению задач. Квалифицированный юрист обеспечит грамотный подход к проблеме.

  4. Studying GPCR opens up new horizons in the field [url=https://www.chemdiv.com/]custom chemistry.[/url]
    By studying these receptors, scientists can develop innovative treatments for a range of diseases.

  5. Получите бесплатную консультацию у квалифицированного юриста на сайте [konsultaciya-yurista42.ru](https://konsultaciya-yurista42.ru/), где вы можете задать вопрос адвокату онлайн и получить профессиональную помощь по юридическим вопросам.
    Получение юридической консультации играет ключевую роль в разрешении различных правовых ситуаций. Профессиональные юристы помогут вам понять сложные правовые аспекты и отстоять ваши права.

    Первоначальный контакт с юристом — это ключ к успешному разрешению вашей правовой ситуации. Юрист выслушает вас и предоставит рекомендации, основанные на вашем конкретном случае.

    Многие опасаются обращаться за помощью к юристам, не понимая всей важности консультаций. Тем не менее, качественная юридическая помощь может сэкономить значительные средства и время в будущем.

    На сайте konsultaciya-yurista42.ru вы найдете широкий спектр услуг. На платформе трудятся опытные юристы, которые готовы прийти на помощь в любое время.

  6. Получите профессиональную помощь на [url=https://konsultaciya-yurista3.ru]бесплатна юридическая помощь[/url].
    Получение юридической консультации помогает эффективно справляться с правовыми проблемами. Знание своих прав и обязанностей крайне важно, и юрист может предоставить необходимые рекомендации.

    Первый этап – это определение типа юридической проблемы. Например, это может быть гражданское право, уголовное или административное.

    Вторым шагом является выбор юриста. Выбор юриста лучше всего основывать на знакомстве с его предыдущими делами и успехами.

    Для эффективной консультации желательно подготовить все материалы, касающиеся вашего дела. Хорошо подготовленные данные помогут вам получить более качественную помощь от юриста.

  7. Как выбрать источник бесперебойного питания, в статье.
    Рейтинг лучших ИБП, изучайте.
    Преимущества использования ИБП, узнайте больше.
    Рекомендации по выбору источников бесперебойного питания, на нашем сайте.
    Источники бесперебойного питания: что важно знать, разберитесь.
    Как не ошибиться при выборе ИБП, узнайте.
    Обзор актуальных источников бесперебойного питания, обратите внимание.
    Технические аспекты ИБП, разберитесь.
    Как продлить срок службы источника бесперебойного питания, в нашем блоге.
    Тенденции рынка источников бесперебойного питания, ознакомьтесь.
    Основные рекомендации по использованию ИБП, здесь.
    Идеальные источники бесперебойного питания для бизнеса, узнайте.
    Инсайдерские советы по выбору источников бесперебойного питания, в нашем анализе.
    Рейтинг популярных источников бесперебойного питания, читайте.
    Пошаговая инструкция по установке ИБП, в нашем материале.
    Что выбрать: ИБП или альтернативу?, в гиде.
    Ремонт источников бесперебойного питания: основные советы, узнайте.
    Как выбрать ИБП для игры, в статье.
    Топ-10 источников бесперебойного питания на рынке, узнайте.
    ИБП [url=istochniki-bespereboynogo-pitaniya.ru#ИБП]istochniki-bespereboynogo-pitaniya.ru[/url] .

  8. Станок с ЧПУ — это незаменимый инструмент для домашнего мастерской, позволяющий создавать точные детали и изделия, такие как [url=https://plusstanok.ru/]токарный станок по металлу с чпу для дома|настольный чпу токарный станок|токарный станок с чпу настольный|токарный станок чпу по дереву|мини токарные станки с чпу|токарный чпу цена|токарный станок чпу цена|настольный токарный станок по металлу с чпу купить цена|токарный станок чпу по металлу купить|токарный станок по дереву чпу|токарный станок с чпу по металлу купить|токарный чпу станок по металлу купить|мини токарный станок с чпу по металлу купить|купить токарный станок по металлу с чпу|мини токарный чпу|токарный станок по металлу с чпу купить|мини токарный станок по металлу с чпу|купить токарный станок по дереву с чпу|токарный станок чпу по металлу|токарный станок чпу купить|чпу токарный станок купить|станок токарный с чпу купить|токарный станок с чпу по металлу цена|маленький токарный станок с чпу по металлу|маленький токарный чпу|самый дешевый токарный станок по металлу|станок с чпу по металлу токарный|станок чпу по металлу токарный|станок чпу токарный по металлу|купить токарный станок с чпу по металлу|чпу токарный по дереву|купить токарный с чпу по металлу|бытовой токарный станок|сколько стоит токарный станок по дереву|токарный станок с чпу по дереву|мини токарный станок чпу|токарный чпу|купить станок чпу токарный|токарный станок недорого|чпу токарный станок|токарные станки|токарные станки с чпу|купить токарные станки|станки по металлу|токарный чпу станок|токарный станок полуавтомат|токарный полуавтомат с чпу|российские токарные станки с чпу|токарные станки по металлу|токарный полуавтомат|учебный токарный станок по металлу|мини токарный станок по металлу купить в спб|токарный станок по металлу купить новый для дома|чпу токарный станок по металлу|чпу станки|чпу станок по металлу купить|станок чпу купить|станки с чпу купить|барфидер для токарного станка с чпу купить|станок с чпу купить|токарные станки с чпу купить|чпу станки купить|сколько стоит чпу станок|маленький токарный станок с чпу|станок чпу по металлу цена|токарный станок с фрезерной головкой|учебный токарный станок с чпу|чпу станок маленький|токарный станок с чпу по металлу купить цена|токарка чпу по металлу|русские чпу станки|токарный станок малогабаритный с чпу|станок с чпу[/url].
    Станок с ЧПУ — это современное оборудование, применяемое в различных отраслях промышленности.

Leave a Reply to yurist_iyMr Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top