அத்தியாயம் -1
மெல்லிய நிலா வெளிச்சம் அந்த இரவை ஏகாந்த இரவாக மாற்றிக் கொண்டிருக்க.
அந்த கரு நிற நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது அந்த கார் , அந்த தார் சாலையில் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன . நெடுஞ்சாலையின் மத்தியில் வைக்கப்பட்டு இருந்த செடிகளில் பூக்கள் பூத்த வண்ணம் இருக்க அந்த இரவிலும் அழகாக காட்சி அளித்தது அந்த பூக்கள் அதே நேரம் சாலை ஓர மரங்களோ மீண்டும் வருக என்பது போல் தங்கள் கிளைகளை அசைத்த வண்ணம் இருந்தன.
அந்த காரில் ஒருவரோ இந்த இரவுக்கு ஏற்றார் பாடலை கேட்டுக்கொண்டே வர மற்றொருவரோ என் பணி வாகனம் ஓட்டுவதே என்பது வந்து கொண்டிருந்தான் அவன் அருண் அவனை அழைத்தால் அஞ்சலி
டேய் அருண்
ம்ம் சொல்லுடி
அருணே என மீண்டும் அழைக்க
என்னடி வேணும்
பசிக்குதுடா என அஞ்சு கூற
அவளை பார்த்த அருணோ இப்போ தானடி சாப்ட்டோம்
அஞ்சுவோ அதுலாம் தெரியாது எனக்கு
சாப்பாடு வேணும் என்று அவள் முகத்தை தூக்க
அருணோ சரி இருடி பாக்கலாம் என்றவாறு அவன் கடை எதாவது இருக்கிறதா என்று பார்த்தவாறு வர
அஞ்சலியோ இன்னும் எவ்வளவோ நேரம் என்று சலித்துக்கொள்ள
அருணோ இது ரோடுடி அதுவும் நைட் டைம் கொஞ்சம் பார்த்துதான் தேடனும் என்று அவர்கள் தங்களுக்குள் இவ்வாறு பேசியவாறு வர அதே நேரம் ஏதோ ஒரு உருவம் அவர்கள் காரின் முன் விழுந்தது
அருணோ சட்டென பிரேக் போட்டு விட
அஞ்சுவோ அவன் பிரேக் போட்டதில் தலையை இடித்துக் கொள்ள அவளோ ஏன்டா என அவனை பார்க்க
அருணோ வண்டி முன்னாடி யாரோ விழுந்துட்டாங்கடி என்க
அவளோ பயத்துடன் என்னடா சொல்ற
ஆமா என அருண் கூற
அவளோ வாடா போய் பார்க்கலாம் என்று இருவரும் காரை விட்டு இறங்கினர் .
வண்டி முன் கிடந்த உருவத்தை பார்த்த அஞ்சலியோ அந்த உருவத்தை திருப்ப அதுவோ ஒரு பெண் , சிறு வயது பெண் , வயது இருந்தால் 18-20 இருக்கும் , ஒரு பச்சை வண்ணம் பாவடை, சட்டை , ஓடி வந்திருப்பதால் தலை முடி எல்லாம் கலைந்து உடல் எல்லாம் வேர்த்து காணப்பட்டால் அவள், கழுத்தில் ஒரு செயின், கையில் ஒரு வளையல் , கால்களில் சிறு சிறு அடிகள் அதுவும் இப்போது விழுந்ததால் ஏற்பட்டது ,
அஞ்சு டேய் பொண்ணுடா என அதிர்ச்சியுடன் கூற
அது தெரியுதுடி முதல்ல அந்த பொண்ண எழுப்பு என்று இருவரும் அந்த பெண்ணை எழுப்ப முயற்சி செய்ய அவளோ கண் முழித்து காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று முனகி விட்டு மயங்கிவிட இருவருக்கும் ஒரு சேர பதட்டம் கூடிப் போனது
டேய் அருண் இப்போ என்னடா பண்றது என அஞ்சு கேட்க
அருணோ எனக்கும் தெரியலடி என்று கூற
அவனை முறைத்த அஞ்சலியோ எதாவது பண்ணுடா அடி கூட அவ்வளவு இல்ல , முதல்ல நீ ஒரு டாக்டர் டா அதை மறந்துட்டு பேசுற என அவனைத் திட்ட
அருணோ இருடி தண்ணி தெளிச்சு எழுப்பி பாக்கலாம் என்றவாறு அவன் தண்ணீரை
அப்பெண்ணின் முகத்தில் தெளிக்க அவளோ கண் திறப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.
அருணோ அஞ்சலி இது சரிபட்டு வராது இந்த பொண்ண ஹாஸ்பிட்டல தான் கூட்டிட்டு போகனும் , லோ பிரஷர் அதனால கூட மயக்கம் போட்டு இருக்கலாம் , ஓடி வந்திரக்கும்
அதான் மயக்கம் போட்டிருச்சு என அருண் கூற
அஞ்சலியோ அங்குமிங்கும் கண்களை சுழலவிட அவள் கண்ணில் பட்டது அந்த கருப்பு பை
டேய் அருண் அங்க பார் ஒரு பேக் இருக்கு அது இந்த பொண்ணோடதா இருக்கும் அதை எடு
அருணோ அதை எடுத்து ஆராயத் தொடங்க
அஞ்சுவோ டேய் அதை அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல
இங்கிருந்து கிளம்பலாம் எதாவது ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம் என இருவரும் அப்பெண்ணுடன் அங்கிருந்து கிளம்பினர் .
காரில் சென்று கொண்டே அருணோ அஞ்சலி யாருன்னு தெரியாத பொண்ணுடி இப்போ என்னடி பண்றது .
அஞ்சலியோ அதுலாம் அப்புறம் பாத்துக்கலாம் டா நீ மொதல்ல காரை எடுடா என்க
அவனோ காரை அங்கிருந்து கிளப்பினான்.
தங்க நிற சூரிய ஒளி அந்த சன்னல் திரை விலகலில் மெல்ல உள் நுழைய அந்த வெளிச்சத்தில் கண் முழித்தால் அவள்
சுற்றியும் கண்களை சுழலவிட்டவளோ தான் இருப்பது வேரெங்கோ என்பதை உணர்ந்து சட்டென எழுந்து அமர்ந்தால்
அதே நேரம் அருகில் இருந்த அஞ்சலியோ கண் முழிச்சுட்டியா என கேட்டுக்கொண்டே அவள் அருகில் வர
அவளோ அவளை பயத்துடன் பார்க்க
அஞ்சலியோ நீ ஓகே தான என கேட்க
அவளோ ஆம் என தலையாட்ட
அஞ்சலியோ ஆமா நீ யாரு, உன் பேர் என்ன, நீ எப்படி அங்க வந்த என கேள்விகளாக அடுக்க
அதே அந்த அறையின் உள் நுழைந்த அருணோ ஏய் அஞ்சலி எதுக்கு இப்படி அந்த பொண்ண கேள்வியா கேட்கிற என்று
அப்பெண்ணை ஆராய்ந்து விட்டு நீங்க ஓகே தான என கேட்க
அவளோ ஆம் என்று தலையாட்ட
மீண்டும் அஞ்சலியோ சரி இப்போ சொல்லு நீ யார் என கேள்வி கேட்க
அவளோ நீங்க யாரு என கேள்வி கேட்க
அஞ்சலியோ எம்மா நேத்து நைட் எங்க கார் முன்னாடி தான் விழுந்த நாங்க தான் உன்ன காப்பாத்தி இப்போ ஹாஸ்பிட்டல்ல வச்சிருக்கோம் என சற்று குரல் உயர்த்தி கூற
அவள் கத்தலில் சட்டென கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு
அருணோ ஏய் அஞ்சலி எதுக்கு இப்போ இப்படி கத்து பாரு அந்த பொண்ணு பயந்து போயடுச்சு
அஞ்சலியோ பின்ன என்னடா காப்பாத்துன நம்மளையயே யாருன்னு கேட்குது என்க
அந்த பொண்ணு மயக்கத்தில் இருந்தச்சுடி அப்புறம் எப்படி அந்த பொண்ணுக்கு தெரியும் .
சரிடா எப்பா நீயே கேளு என்று அவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டால்
அருணோ உன் பேர் என்னம்மா
அவளோ நிலா என பேரைச் சொல்ல
அஞ்சலயோ நல்ல பேர் தான் ஆனா நீ எதுக்கு அங்க வந்த
நிலாவோ அது அது என்ன கொல்ல வந்தாங்க அதான் நான் ஓடி வந்துட்டேன் என அழுகையுடன் கூற
இருவருக்கும் ஒரு சேர அதிர்ச்சி அருணோ யாரு கொல்ல வந்தாங்க என கேள்வி கேட்க
நிலாவோ தெரியல என தலையாட்ட
அஞ்சலியோ சரி உனக்கு அப்பா , அம்மா, யாரு இல்லையா ,
நிலாவோ இல்லை ஒரு பாட்டி மட்டும் தான்
அதுவும் இப்போ இல்ல என மீண்டும் அழுக
இருவருக்கும் பார்க்க பாவமாக இருந்தது அவள் அருகில் வந்த அஞ்சலியோ சரிடாமா அழுகாத என அவளை அணைத்து கொள்ள
அஞ்சலியோ உன்ன பார்த்தா சின்ன பொண்ணுமாதிரி இருக்கே வயசு என்ன , உன் ஊர்
நிலாவோ 19 வயசு , நீலகிரி பக்கம் என்க
அருணோ சரிமா நீ தூங்கு நாங்க சாப்பட எதாவது வாங்கிட்டு வர்றோம் என்று அவர்கள் வெளியேற நிலாவோ பயத்துடன் படுத்துக்கொண்டால் .
தொடரும்…
