ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 19

அத்தியாயம் 19

 எவ்வளவு, அதிர்ச்சியை தான் தாங்கும் அந்த குடும்பம் சுந்தரம் உடைந்து அமர்ந்து விட்டார். உடனே, கனகா என்னங்க என்று அருகில் வந்தார், சுந்தரம் கையை நீட்டி…தடுத்தவர் 

 வராதே என்றாரே, தவிர நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, கனகா என்னங்க.. என்னை.. மன்னிச்சிடு ங்க,ஏதோ அழகு மேல… இருந்த கோவத்துல இப்படி பண்ணிட்டே ன், என்று அழுதார். 

ஈஸ்வர், அம்மா நீங்களா? இப்படி பண்ணிங்க? உங்க கிட்ட நான் இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கலாமா? அவள அன்னைக்கு அடிக்கும் போது கூட, தடுக்கலையே…மா? வெளிய அனுப்பும்போது கூட அமைதியாதானே  இருந்திங்க? அவ என்னம்மா தப்பு பண்ணா உங்களுக்கு, 

 என்னையும்,, உங்க கூட சேர்த்து குற்றவாளியா.. ஆக்கிட்டீங்களே? உங்க பழியை என்ன வச்சி தீர்த்து க்கிடிங்க.. இல்ல…போங்க மா… என்றவன், 

 கனகா,மன்னிப்பு கேட்டு கதறி,   அழுதும் காரை எடுத்துக்கொண் டு, வெளியேறி விட்டான். 

 கனகா, கோபமாய் மாதங்கியை நோக்கி திரும்பியவர், அண்ணி.. நீங்க ஏன் இப்படி பண்ணீங்க என் மாமனாரை, கொல்ல உங்களுக்கு யார் உரிமைகொடுத்தது.பிடிக்காத உறவு, வேணாம்ன்னு…, சொன்னே னே, தவிர இவ்ளோ பெரிய காரிய த்தை.. செய்ய சொல்லி… சொல்லி  இருக்கமாட்டேன் நான் இந்த வீட்டு மருமகளா 28 வருஷம் இருந்திருக் கேன். 

 யாரும் என்ன ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது என் புருஷன் உட்பட,

ஆனா.. நீங்க நான் சொன்ன ஒரு வார்த்தைய பயன்படுத்தி பெரிய துரோகத்தை இந்த குடும்பத்துக்கு, பண்ணி இருக்கீங்க என்றவர்

 தன், அண்ணனிடம் அண்ணா நீ நல்லா இருக்கணும்னு,தான்  நான் இவ்வளவும்,செஞ்சேன். உன் பொண்ணு, என் குடும்பத்துக்கு வாக்கப்பட்டு வந்தா, சந்தோஷமா இருப்பானு..நினைச்சு தான், நான் ஈஸ்வருக்கு கட்டி வைக்க நினைச் சேன், ஆனா எப்ப அதுவே என் வாழ்க்கைய… சூனியாமக்குச்சோ அப்படிப்பட்ட, உறவு எனக்கு வேணாம்.

 எல்லாரும்,  இப்பவே இங்கிருந்து உடனே கிளம்புங்க அதுவும் இந்த நிமிஷமே என்றார். அழுகையுடன் அழுத்தமாய்….

தாஸ், ஏய், பணத்தாசை பிடிச்சவ ளே, பாத்தியா உன்னால தான் இவ்வளவு பிரச்சனையும், எவ்வள வு, சொன்னேன் கேட்டியா இப்போ என் தங்கச்சி வாழ்க்கை கேள்விக்  குறியா நிக்குது. எவ்ளோ செஞ்சு இருப்பா,என் தங்கச்சி உனக்காக,

ஒருத்தர கொலைபண்ற, அளவுக் கு, தைரியம் உனக்கு எப்படி…டி வந்துச்சு ஹான், இனி ஒரு நிமிஷ ம், கூட நீங்க இருக்க கூடாது. 

ஒழுங்கு மரியாதையா என்கூட வந்துடு, இதுக்கு மேல உனக்கு மரியாதை இல்லை என்றவர் 

பளீரென ஒரு அறை கொடுத்து, மாதங்கியை தர தரவென, வீட்டை விட்டு இழுத்து சென்று விட்டார். தர்ஷியும் அவர் பின்னே அழுதபடி சென்று விட்டாள். 

கனகா யாருமின்றி தனியாக அமர்ந்திருந்தாள், சுந்தரம் தோட்ட த்து, வீட்டுக்கு சென்று விட்டார். ஈஸ்வர், வீட்டுக்கே வரவில்லை. வீடு யாரும் இல்லாமல் நிசப்தமாய் இருந்தது.கனகா,அழுதுகொண்டே இருந்தார்.

சென்னையில் மாலை புவனாவுட ன், அமர்ந்து டீ அருந்தி கொண்டு இருந்தாள் வஞ்சி, 9வது மாதம் நெருக்கம் என்பதால், பள்ளிக்கு, விடுப்பு எடுத்து இருந்தாள் 

குழந்தை பிறப்பு தேதிக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தது வஞ்சிக்கு காலையிலிருந்து வலி லேசாக வந்து.. வந்து..  போனது 

ஆகாஷ் உடன் வாக்கிங் சென்று வந்தபோதே,  கூறி இருந்தாள். லேசாக வலி இருப்பதை, மாலை 5 மணி அளவில் வலி எடுக்க ஆரம் பித்து இருந்தது.

புவனா,அவளின் முகமாற்றத்தை கண்டவர், வஞ்சிமா… என்னாச்சு வலிக்குதா, என்றார் பதட்டமாய், 

 அவள், ஆ..மா மா… வலி வர ஆரம்பிச்சுடுச்சு என்றாள் உதடு கடித்து,

புவனா உடனே ஆகாஷுக்கு அழைத்து விஷயத்தை கூறியவர் அவளை டிரைவரின், உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.அடுத்த அரைமணி நேர த்தில் ஆகாஷ், மருத்துவமனை வந்திருந்தான், அடித்து பிடித்து 

நான்குமணிநேர போராட்டத்திற்கு பிறகு வஞ்சி பெண் குழந்தை பெற்றெடுத்தாள்,சுகப்பிரசவத்தில் 

முதலில் குழந்தையை  கையில் வாங்கியது ஆகாஷ் தான். அவனுக்கு பெண் குழந்தையை வாங்கியதும், உடல் சிலிர்த்தது. அவன் கண்களில் கண்ணீர். 

 பின், புவனாவிடம் குழந்தையை கொடுத்தான். அவரும் வாங்கி உச்சிமுகர்ந்தார்.ஒருவாரம் கழித்து வீட்டிற்கு அழைத்துவரப்பட்டாள் வஞ்சி 

அதேநேரம்,கம்பத்தில் தர்ஷிகாவி ற்கும், உதயன்பனுக்கும், மாதங்கி யின், வற்புறுத்தலின் பெயரில் திருமணம் நடைபெற்றது. பணம் அதிகமாக தருகிறேன், என்றதும் கட்சி மாறிவிட்டார் மாதங்கி.

 இதன் பிறகு கனகாவை ஏமாற்றி சுகவாழ்வு வாழமுடியாது, அல்ல வா.., அதனால் அன்பன் வந்து பேசியதும் ஒத்துக்கொண்டார். 

இதையெல்லாம் கேள்விப்பட்ட கனகா, மனம் நொந்து போனார். இத்தனை, வருடங்களும் பணத்து க்காக, தான் என்னோடு உறவாடி னார்களா? அப்போ…  எனக்காக இல்லையா, பாசத்தால் இல்லையா என, வேதனையில் உடல்நிலை சரியில்லாமல் போனது.

தர்ஷிகாவின் திருமண விஷயம் கேள்விப்பட்ட ஈஸ்வர் விரக்தியா க, சிரித்துக் கொண்டான். 

 வஞ்சியை தேடும் பணியை தனக்கு தெரிந்த அதிகாரிகளின் மூலம் தொடர்ந்தான். 

கண்களை மூடினால்,  அவள் பயந்தது, அவள் அழுதது. கடைசி யாக,, அவள் பார்த்த பார்வை,என மாறி மாறி வந்தது.

படுக்கையிலிருந்து எழுந்தவன்  பால்கனி பிடியை இறுக்கப்பற்றிக் கொண்டான்.  தன் அறையை திரும்பிப் பார்த்தான். இருவரும் சேர்ந்து நிற்பது போல் ஒரு புகைப் படம் கூட இல்லை. பெருமூச்சு விட்டவன் திரும்பவும் வந்து படுத்துக் கொண்டான். 

கண்களில்கண்ணீர்,சாரிடி.. வஞ்சி மன்னிக்க முடியாத தப்பு பண்ணி  ட்டேன். திரும்ப.என்கிட்ட  வருவி யாடி.. என் தப்பா மன்னிச்சி.., என க்கு, திரும்பவும் ஒரு வாய்ப்பு தருவியாடி.. உன் கூட வாழ என்றான்.

அவன் கண்களை,மூடியதும் சிறு வயது வஞ்சி வந்து, அவன்    கண் ணீரைத் துடைத்து… ஆதி மாமா… அழாதீங்க… நான் இருக்கேன் உங்களுக்கு என்றாள்.

ஆதி,கனவிலேயே அவள் கையை பிடித்துக் கொண்டு என்ன விட்டு போகாதடி போகாதடி என காற்றில் கையை வீசி கொண்டு இருந்தான் 

கனகா சிறிது,  உடல்நிலை தேறிய வர், ஆதி வீட்டுக்கு வந்ததை அறி ந்தவர், மேலே அவனைப்  பார்த்து பேச சென்றார்.

அறையில் நுழைந்தவர் ஆதி வஞ்சி, வஞ்சி, என உறக்கத்தில் புலம்புவதை கண்டவர், தலையில் அடித்துக் கொண்டு அழுதவர் கிழே சென்றுவிட்டார். என் புள்ள வாழ்க்கையை நானே அழிச்சிட் டேனே… என கதறினார்.

 இங்கே, சென்னையில் வஞ்சிக்கு குழந்தை பிறந்ததும் சுந்தரமூர்த்தி க்கு விஷயத்தை சொல்லி ஆகாஷ் வீட்டிற்கு அழைத்து வந்தனர். சுந்தரமூர்த்தி… விஷயம் கேள்விப் பட்டதும், உடனே சென்னை கிள ம்பி, விட்டார் பேத்தியை பார்ப்பத ற்கு, யாரிடமும் சொல்லாமல்,,

வஞ்சியை,இத்தனை மாதம்கழித் து பார்த்தவர், அம்மாடி சின்னவ ளே, என் தங்க பொண்ணே எப்படி டா, இருக்க. என்குழந்தை  பொண் ணுக்கு, இன்னொரு குழந்தையா நம்பவே முடியல… ராசாத்தி, என பேத்தியை தூக்கி முத்தமிட்டு கொண்டாடி விட்டார். 

 அதன் பிறகு, அடிக்கடி சென்னை வந்து வஞ்சியையும் தன் பேத்தி யையும்,பார்த்து விட்டு செல்வார் அவள் அப்படியே ஈஸ்வரை உரித் து வைத்து பிறந்திருந்தாள்.இடது காதின் கம்மல் போடும் இடத்தில் மச்சம் ஒன்று இருக்கும் ஈஸ்வருக் கு,இவளுக்கும் அதேபோல் இருந்தது.

பிரதன்யா என அவளுக்கு பெயர் வைத்திருந்தனர். இப்படியே நாட்களும் சென்றது. ஈஸ்வர் வஞ்சியை தேடி களைத்துப் போனான்.

ஒரு வருடம் ஓடி இருந்தது. பிரதன் யா, பிறந்த நாளை வீடு வரைக்கும் கொண்டாடினர். குழந்தை வஞ்சி யை, அம்மா…என்று அழைக்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் அப்பா என்று இன்னும் சொல்லவில்லை. 

 

தொடரும்….

 

 

 

 

13 thoughts on “எனக்கென வந்த தேவதையே 19”

  1. Здравствуйте! Мы, Шестаков Юрий Иванович, дерматолог с многолетним опытом работы, и доктор Шестакова Т.В., специалист по уходу за кожей, хотим поделиться с вами ценной информацией, которые помогут справиться с угревой сыпью.

    Акне – это не просто воспаления на коже, а проблема, требующая комплексного подхода. За годы нашей практики мы помогли десяткам людей избавиться от акне, используя новейшие технологии. Мы уверены, что каждый заслуживает ухода и заботы, и хотим рассказать, как это осуществить.

    Проблемная кожа – это проблема, известная многим. Современные способы борьбы с воспалениями на коже позволяют обрести здоровую кожу уже за минимальный срок.

    Эффективное лечение акне: как очистить кожу, со сверхбыстрым действием
    акне симптомы у взрослых [url=https://www.kpacota.top/]https://www.kpacota.top/[/url] .

Leave a Reply to Lakshmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top