அத்தியாயம் 29
“நீங்க சொல்றதை நான் நம்ப மாட்டேன் பொய் சொல்லுறீங்களா எங்களை போல பணம் இருக்க பெரிய மனிதர்களை பார்த்து காசு பிடுங்க பார்க்குறீங்களா இந்த மாதிரி எத்தனை போட்டோ வேணும் நான் ரெடி பண்ணித்தரட்டுமா?” என்று அவன் தந்தையின் மேல் உள்ள நம்பிக்கையில் குமுதாவிடம் எரிந்து விழுந்தான்.
“நான் சொல்றது உண்மை தம்பி உங்கம்மா இறந்து போன கொஞ்ச நாளுல என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு இதோ அவரு கட்டின தாலி” என்று குமுதா அவர் கழுத்தில் போட்டிருந்த தாலியை எடுத்து காட்டியதும் தென்னரசுக்கு கால்கள் தரையில் நிற்க முடியாமல் தடுமாறியது தூணை பிடித்து நின்றுக் கொண்டான்.
“ஆமா அண்ணா அம்மா சொல்றது உண்மைதான் எங்க வீட்டுக்கு தினமும் நைட் வந்துட்டு காலையில போயிடுவாரு என் மேல பாசமாத்தான் இருந்தாரு ஆனா இந்த ஒரு மாசமா அவரு வரவேயில்லை போன் போட்டா சுவிட்ச் ஆஃப்னு வருது. போன வாரம் நானும் அம்மாவும் இங்க வந்தப்ப அப்பா வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டே வீட்ல வேலை பார்க்கறவங்ககிட்ட அப்பா வீட்ல இல்லைனு சொல்ல சொன்னாரு ஆனா அப்பாவோட காரு இதோ இந்த இடத்துலதான் இருந்துச்சு அப்பாவை பார்க்காம நான் அழுதுக்கிட்டே போனேன் தெரியுமா அண்ணா” என்றாள் அரசி சிறு கேவலுடன்.
“நான் சொன்னா நம்புவியா தென்னரசு?” என்று அங்கே கை காப்பை ஏத்திவிட்டுக்கொண்டு வந்தான் ராயன்.
“அ.அண்ணா அப்பா தப்பு பண்ணியிருப்பாருனு என்னால நம்ப முடியலை நம்பாம இருக்கவும் முடியலை” என்றான் தவிப்பாக.
“உன் தோட்டத்து வீட்ல போய் பார்த்துட்டு வா உன் அப்பாவோட லீலைகளை” என்றான் அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி.
தென்னரசு தோட்டத்து வீட்டுக்கு வேகமாய் நடந்துச் சென்றான். வீட்டு பக்கம் சென்றதும் ஜன்னல் வழியே கண்ட காட்சியில் உறைந்து நின்றான். வேலைக்காரி சரசு பாதி ஆடையில் ராஜமாணிக்கத்துடன் நெருக்கமாய் இருந்ததை கண்டு “ச்சே” என்று சுவற்றில் கையை குத்திக்கொண்டான் தந்தையின் மேல் வைத்திருந்த மரியாதை சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.
சுவற்றில் சாய்ந்து அமர்ந்து “அம்மா” என்று வாயை பொத்திக்கொண்டு அழுதான் தாய் இறந்த காரணம் தெரிந்தால் இன்னும் என்ன பாடுபாடுவானோ தெரியவில்லை. அப்போதே கதவை உடைக்க எழுந்து நின்றவனின் கையை பிடித்துக்கொண்டான் ராயன். தென்னரசு ஆத்திரத்தில் முட்டாள் தனமாக முடிவு எடுத்து விடுவான் என்று தென்னரசு பின்னே சென்றிருந்தான்.
“இப்போ உன் அப்பாவை பத்தின இன்னொரு ரகசியத்தை பத்தி தெரிஞ்சுக்கற நேரம் வந்துருச்சு” என்றவனோ ராஜமாணிக்கம் வீட்டில் வேலை பார்க்கும் முனியனை கூப்பிட்டான்.
“என்ன இரகசியம் அண்ணா சொல்லுங்க” என்று கழுத்தை தடவிக்கொண்டு கேட்டான் தென்னரசு.
தன் மாமன் நீலகண்டனை ஊர் முன்னால அவமானப்படுத்த எண்ணிய ராஜமாணிக்கத்தை சமயம் பார்த்து அவரை தலைகுனிய வைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வந்திருந்தான் தென்னரசு வீட்டிற்கு ராயன்.
“நடந்தது என்னனு சொல்லுங்க முனியன் அண்ணா” என்றான் சிறு அதட்டலோடு.
முனியனோ “தம்பி ஐயாவுக்கு தெரிஞ்சா என்னை கொன்னு போடுவாரு” என்று தலையை சொறிந்தான்.
“இப்ப நீங்க உண்மையை சொல்லலைனா நான் உங்களை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று பல்லை கடித்துக்கொண்டு முனியனை மிரட்டி கையை ஓங்கிச் சென்றான் ராயன்.
“அடிக்காதீங்க தம்பி நா.நான் உண்மையை சொல்லிடறேன்” என்றவரோ தென்னரசுவின் தாய் ராணியை அடித்து கொடுமை படுத்தியதையும் அவரை தள்ளி விட்டு ராஜமாணிக்கம்தான் கொன்றார் என்பதை கூறியதும் கற்சிலையாக நின்றுவிட்டான் தென்னரசு.
“உன் அம்மா மேல காதலா இருந்தேன் அவ உன்னை என் கையில கொடுத்துட்டு போய்ட்டா என்கிட்ட எப்படியெல்லாம் நடிச்சான் அந்த ஆளு” என்று நரம்புகள் புடைக்க கொதித்து பேசினான். ராஜமாணிக்கத்தை அப்பா என்று பாசமாக அழைப்பவன் இன்று “அந்த ஆளு” என்று பேசும் அளவிற்கு ராஜமாணிக்கத்தின் மீது வெறுப்பு வந்தது.
“எங்க அம்மாவை கொன்னவனை இப்போதே கொல்லப்போறேன் அண்ணா” என்று மோட்டுவலையில் சொருகியிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு ஐய்யனார் போல நின்றவனின் கையிலிருந்த அரிவாளை வாங்கிப்போட்டவன் “ஆத்திரப்படலாம் அவசரப்படக்கூடாது உன் சித்திக்கு தெரியும் உன் அப்பம் பொம்பளை பொறுக்கினு… ஆனா உன் தங்கச்சி உன் அப்பன் நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கு… இப்போ நீ உன் அப்பாவோட தவறை வெளியே தெரியப்படுத்தினா… நீ இப்போ எப்படி உன் அப்பாவை பத்தி தெரிஞ்சு துடிக்கிறியோ அதுபோல உன் தங்கச்சியும் அப்பா கெட்டவருனு துடிக்கணுமா! உங்கப்பாவுக்கு தண்டனை கொடு அவருக்கு உயிர் போகக்கூடாது உயிர் போகிற வலியை கொடு ஏன்னா உங்கப்பாவால பல குடும்பம் பாதிக்கப்பட்டு இருக்கு!” என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு.
“நான் தண்டனை கொடுக்குறேன் அண்ணா எங்கப்பாவை பத்தி எனக்கு தெரியப்படுத்தினதுக்கு உங்களுக்குத்தான் கோடி முறை நன்றி சொல்லணும்” என்று மூக்கை உறிஞ்சியவன் ராயனின் கையை பிடித்துக் கொண்டு அழுக ஆரம்பித்தான்.
“டேய் நீ ஆம்பிள்ளைடா இப்படி பொண்ணு போல அழற” என்ற அவனது தோளில் தட்டிக்கொடுத்தான் ஆதரவாக ராயன்.
“அண்ணா அப்பா மேல ரொம்ப நம்பிக்கையா இருந்தேன் என் நம்பிக்கை குப்பையா போச்சு அண்ணா” என்று ராயனின் தோளில் சாய்ந்து அழுதான். அவன் அழுது முடியட்டும் என்று காத்திருந்தவன் அவனது அழுகை நின்றவனுடன் “நாம வந்து ரொம்ப நேரம் ஆச்சு வா போகலாம்” என்று குமுதாவின் பக்கம் வந்து நின்றனர்.
அரசியோ “அண்ணா அப்பா எங்களை பார்க்க வரமாட்டேன்னு சொல்லிட்டாரா இந்த செமஸ்டர் ஃபீஸ் கட்ட முடியாதா?” என்று புலம்பியவளை தோளோடு அணைத்துக்கொண்டவன் “அப்பா ஃபீஸ் கட்டலைனா என்னடா இந்த அண்ணா இனிமே உன் படிப்பு செலவை பார்த்துப்பேன் இனிமே அண்ணாகூட இந்த வீட்டுலதான் இருப்பீங்க நீ சந்தோசமா இருக்கலாம்” என்றான் கண்ணைச்சிமிட்டி.
“ஐ இவ்ளோ பெரிய வீட்ல நான் இருக்கப்போறேனா ஹேப்பி அண்ணா” என்று துள்ளிக்குதித்தாள் அரசி.
“அச்சோ தம்பி அவருக்கு தெரிஞ்சா இங்க எதுக்கு வந்தேனு என்னை கொன்னு போடுவாரு நாங்க கிளம்பறோம். இவ அப்பாவை பார்க்கணும்னு அடம் பிடிச்சா அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றார் குமுதா தயங்கியபடியே.
“சித்தி வீட்டுக்குள்ள போங்க அவரு வந்து என்ன பண்ணுறாருனு நான் பார்க்குறேன்” என்றான் கோபக்குரலுடன்.
“அம்மா அண்ணாதான் போக சொல்றாங்கல்ல வாங்க போகலாம்” என்ற தாயின் கையை பிடித்துக்கொண்டு தென்னரசுவின் வீட்டுக்குள் சென்றாள்.
“அப்போ நான் கிளம்புறேன் தென்னரசு… கோபத்துல ஏதாவது கிறுக்குத் தனமா பண்ணிடாதே உன்னை நம்பி பூங்கொடியும் தியாவும் மட்டுமல்ல இப்போ உன் சித்தி உன் தங்கச்சியும் இருக்காங்க மறந்துடாதே” என்று எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றான் ராயன்.
நதியாவோ இரவு சமையல் எப்படி செய்வது என்று வெளியே வீட்டு திண்ணையில் அமர்ந்து யோசனையில் இருந்தாள்.
‘இந்த நேரம் எங்க வீட்டுல இருந்தா சித்தி காபி போட்டு கொடுத்திருப்பாங்க காபி போடக்கூட தெரியலை எனக்கு! சமையல் கத்து வச்சிருந்தா இன்னேரம் விதவிதமா சமைச்சு பாலாஜி மனசுல இடம்பிடிச்சிருக்க முடியும்’ என்று கவலைப்பட்டு உட்கார்ந்திருந்தாள்.
பக்கத்து வீட்டு பாட்டியோ “என்ன கண்ணு தனியா உட்கார்ந்திருக்க உன் வீட்டுக்காரனை காணோம் இந்த வீடு கட்டும்போது அடிக்கடி என்கிட்ட வந்து பேசிட்டு நான் சுட்டுக்கொடுக்கும் வடையை சாப்பிட்டு இரண்டு வடை நூறு ரூபாய் கொடுத்துட்டு போகும் நல்ல குணம் தம்பிக்கு” என்று சிரித்தவரிடம்
“பாட்டி எனக்கு சமையல் கத்துக்கொடுக்குறீங்களா?” என்று பாட்டியிடம் அவசரமாக கேட்டாள்.
“ஏன் கண்ணு உனக்கு சமைக்க வராதா?” என குமட்டில் கைவைத்துக் கேட்கவும்
“தெரியாது” என்று இதழ் பிதுக்கினாள்.
“வீட்ல செல்லப்பிள்ளையா வளர்த்தாங்களோ?”
“ஆமா பாட்டி எங்க வீட்டுல எல்லாருக்கும் நான் செல்லப்பிள்ளைதான்”
“சமையல் என்ன கம்பசூத்திரமா நான் சொல்லிக்கொடுக்குறேன் வா” என்று வீட்டுக்குள் நதியாவை அழைத்துச்சென்றவர் “சப்பாத்தி மாவு இருக்கா?” என்று கேட்கவும்
“ஓ நேத்து நைட் மளிகை சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாரு” என்று மாவு டப்பாவை எடுத்து பாட்டியின் கையில் கொடுத்தாள்.
“நான் எப்படி மாவு பிசையுறேன்னு கவனமா பாரு எப்பவும் பொண்டாட்டி சாப்பாடு விசயத்துல தான் புருசனை கட்டிப்போட முடியும். அப்புறம் இப்படி தலை வாராம ஏதோ பத்து நாள் காய்ச்சல படுத்து எழுந்தவ போல இல்லாம விளக்கு வைக்கும் நேரம் குளிச்சிட்டு தலைவாரி பூ வைச்சு கை நிறைய கண்ணாடி வளையல் போட்டு சாய்ந்தரம் வேலை முடிஞ்சு வர புருசனை வரவேற்கணும் நீ என்னமோ இப்படி அழுக்கு முகத்தோட நிற்குற” என்று சலித்துக்கொண்டே மாவை பிசைந்து முடித்தவர் குருமா எப்படி வைக்கணும் என்பதை வெங்காயம் நறுக்கி தாளித்து மசாலா போடுவது முதல் ஒவ்வொன்றாக சொல்லிக்கொடுத்தார் பாட்டி.
பாலாஜியின் மனதில் எப்படியாவது இடம்பிடிக்கவேண்டுமென்று பாட்டி சொல்லி கொடுத்ததை கற்பூரம் போல கற்றுக்கொண்டாள் நதியா.
“சரி கண்ணு எங்க வூட்டுக்காரர் எனக்காக சாப்பிடாம காத்திருப்பாரு நான் கிளம்புறேன் அப்புறம் வரேன்” என்று கிளம்பிவிட்டார்.
நதியாவோ குளித்து முடித்து தலைவாரியவள் இப்போ பூவுக்கு என்ன பண்ணறது என்று யோசித்துகொண்டிருக்க வீட்டுக்கு பின்னே மல்லிகை பூத்திருந்ததை பார்த்தது நினைவு வர பூவை பறித்து வந்து பந்தாக கோர்த்து தலையில் வைத்துக்கொண்டு சாமிபடத்துக்கு பூ வைத்து விளக்கு ஏற்றி பாலாஜிக்காக காத்திருந்தாள். எட்டு மணி ஆகியும் பாலாஜி வரவில்லை.
“ப்ச் போனும் என்கிட்ட இல்லை இப்ப எங்க இருக்காருனு தெரியலையே! தனியா இருப்பாளே எனக்கு ஒரு போன் வாங்கித்தரணும்னு தோனுச்சா என் மாமாவுக்கு” என்று பாலாஜியின் மீது கோபமும் வந்தது நதியாவுக்கு.
ஒன்பது மணியாகவும் நதியாவுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது. சரி ஒரு ரெண்டு சப்பாத்தி சுட்டு சாப்பிடலாம் என்று சமையல்கட்டுக்குள் சென்றவளுக்கு சப்பாத்தி சாப்பிட விருப்பமில்லை பூரி சாப்பிடணுமென்று தோன்ற கடாயில் எண்ணெயை ஊத்தி விட்டு எண்ணெய் காய்ஞ்சதும் மாவை தேய்க்க தெரியாமல் பிய்த்து எப்படியோ வட்டமாக தேய்த்து மாவை எண்ணெய்க்குள் வேகமாக போட்டதும் எண்ணெய் அவளது கையில் தெறித்துவிட்டது.
“ஆஆ அம்மா கையில எண்ணெய் பட்டிருச்சு” என்று கத்தி கூப்பாடு போட்டதும் நல்ல வேளை பாட்டி வீட்டுக்குள் வந்துவிட்டார்.
அவள் கையை உதறி துடிப்பதை கண்டு “என்ன பாப்பா இப்படியா கவனம் இல்லாம சமையல் பண்ணுவ நான் வரேன்னு சொல்லி இருதேன்ல” என்று அவளை கடிந்துக் கொண்டவர் ஹாலுக்கு நதியாவை கூட்டி வந்து உட்கார வைத்தவர் வேகநடையுடன் அவரது வீட்டுக்குச் சென்று தோசை மாவை எடுத்து வந்து அவளது கையில் எண்ணெய் தெறித்த இடத்தில் போட்டு விட்டதும்தான் அவள் அலறுவதை நிறுத்தினாள். அவளது கண்களில் மாலையாக கண்ணீர் சொரிந்துk கொண்டே இருந்தது.
“உங்க கல்யாணம் காதல் கல்யாணமா கண்ணு?” என்று நதியாவின் தலையை வருடிக்கொண்டு கேட்க
“ம்ம் ஆமா பாட்டி ராயன் பால்பண்ணை வீட்டோட பொண்ணு நான்” என்றாள் கண்ணீரைத்துடைத்துக்கொண்டு.
பாலாஜியின் பைக் சத்தம் கேட்டு எழுந்து “அவரு வந்துட்டாரு போல பாட்டி” என்று வேகமாக எழுந்தவள் வாசலுக்கு போக பெரிய வேன் வாசல் முன்னே நின்றது அதில் ஐந்து கறவை மாடுகளும் கன்றுக்குட்டியும் மே மே என்று கத்திக்கொண்டிருந்தது.
“பார்த்து மெதுவா இறக்குங்க” என்று மாடுகளை இறக்குபவர்களிடம் கவனமாய் இருந்தான் பாலாஜி.
தன் வீட்டுக்கு பின்னே இருந்த காலியிடத்தை வாடகைக்கு கேட்டிருந்தான். மாடுகள் புது இடமாக இருக்க கத்திக்கொண்டே இருந்தது. மாடுகளை தொழுவத்தில் கட்டி விட்டு மாட்டு வியாபாரிகளுக்கு பணத்தை கொடுத்தவன் “ரொம்ப நன்றிங்க வீட்டுக்கே மாடுகளை கொண்டு வந்து கொடுத்ததுக்கு” என்று கையெடுத்து கும்பிட்டான்.
“ராயன் தம்பியோட நண்பன் நீங்க உங்களுக்கு இதுகூட பண்ணலைனா எப்படி..! நீங்க மாடு வேணும்னு எனக்கு போன் பண்ணியதும் நான் ராயன் தம்பிக்குத்தான்னு நினைச்சு ராயன் தம்பிக்கு போன் போட்டேன். அவருதான் மாடு நான் கேட்கல என் நண்பன் கேட்டு இருப்பான் உங்க வீட்டுக்கே மாட்டை கொடுத்துட்டு வாங்கனு சொன்னாரு” என்றார் புன்னகையுடன்.
பாலாஜிக்கு கண்கள் கலங்கிவிட்டது. உன்னை போல நண்பன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்டா நான் தான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன் விழியோரம் கசிந்த நீரை துடைத்துக்கொண்டு திரும்பினான்.
கையை பின்னால் மறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் நதியா. ராயனும் தானும் பிரிவதற்கு நதியாதானே காரணம் அவளை தன் கண்முன்னே பார்த்ததும் “என்னடி” என்றான் எரிச்சலாக.
“நாம பால் வியாபாரம் பண்ணப்போறோமா!”
“இல்ல பன்னிக்குட்டி வியாபாரம் பண்ணப்போறோம் பசிக்குது உனக்குதான் ஒரு மண்ணும் செய்ய தெரியாது நான்தானே ஏதாவது சமைக்கணும் தள்ளிப்போடி மனுஷனை கடுப்பேத்திக்கிட்டு” என்று அவளது கையை பிடிக்கவும் “ஆஆ அம்மா வலிக்குது” என்று கத்திவிட்டாள்.
“என்ன பண்ணித்தொலைச்சடி” என்று மிரட்டினாலும் அவளது கையை பிடித்துப்பார்த்தான்.
கையில் எண்ணெய் பட்ட இடமெல்லாம் சிவந்து கொப்பளம் போட்டிருந்தது.
“ஏன் டி இம்சை என்னை படுத்துற வண்டியில ஏறுடி” என்ற கடுகடுத்தவன் பைக்கில் ஏறி அமர்ந்து எக்ஸ்லேட்டரை முறுக்கினான் பாலாஜி.
“இல்ல கை வலிக்கல” என்று அவனுடன் பைக்கில் ஏறாமல் திரும்பி நின்றாள்.
“என் கோபத்தை கிளறாதே நதியா” என்று மீண்டும் காய்ந்ததும் பைக்கில் ஏறியதும் உட்கார முடியாமல் தடுமாறினாள் பிடிப்பு இல்லாமல்.
“தோளுல சாய்ஞ்சுக்கோடி” என அவன் குரல் இளகி வரவும் அடுத்த நொடி அவனது முதுகில் சாய்ந்திருந்தாள் நதியா.
பக்கத்தில் இருந்த கிளீனிக்கில் அவளது காயத்தை ஆராய்ந்த மருத்துவரோ “பார்த்து வேலை பார்க்க வேணாமா மா” என்றபடியே மருந்தை எழுதிக்கொடுத்து “இன்ஜக்சன் போடணும்” என்றதும்
“எ.எனக்கு மாத்திரை கொடுங்க டாக்டர் இன்ஜக்சன் வேணாம்” என்றாள் பயத்தோடே.
“இன்ஜக்சன் போடலனா செப்டிக் ஆகிடும்மா என்னப்பா தம்பி உங்க வொய்ஃப் கிட்ட சொல்லுங்க” என்றதும்
அவன் பார்த்த பார்வையில் அமைதியாகி விட்டாள் நதியா.
இன்ஜக்சன் போடும் போது பாலாஜியின் கையை இறுக்கிப்பிடித்துக்கொண்டு கண்ணைமூடிக்கொண்டாள். அவனோ அவளது தோளில் கைபோட்டுக்கொண்டான் அக்கறையோடு.
வெளியே மழைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. பாட்டி பாலாஜி வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்தார்.
“பாட்டி இந்த பேய் காத்துல ஏன் வெளியே உட்கார்ந்திருக்கீங்க?” என்று பைக்கிலிருந்து இறங்கினான் பாலாஜி.
“இல்லப்பா பாப்பா கையில எண்ணெய் பட்டுச்சுல அவளால வேலை பார்க்க முடியாது நான் உங்க ரெண்டு பேருக்கும் தோசை சுட்டு கொண்டு வந்தேன் உங்க பைக் வெளியே போனதை பார்த்துட்டு இப்படியே உட்கார்ந்துட்டேன் தம்பி” என்றவர் “இப்போ கைவலி எப்படி இருக்கு கண்ணு?” என்றார் நதியாவிடம்.
“இப்போ வலி குறைஞ்சிருக்கு பாட்டி” என்று கூறிக்கொண்டிருக்க மழை பெய்யத்துவங்கிவிட்டது.
“நீங்க சாப்பிடுங்க மழை வேகமாக வருவதற்குள்ள வீட்டுக்குள்ள போயிடறேன் நான் காலையில வந்து பார்க்குறேன்” என்று பாட்டி கிளம்பி விட்டார்.
“வீட்டுக்குள்ள போய் உட்காரு மாட்டுக்கு தீவனம் வச்சிட்டு வந்துடறேன்” என்றவனை
“மழை வருது”
“வீட்டுக்குள்ள போடினு சொன்னேன் ரொம்பத்தான் அக்கறை” என்று பல்லைக்கடித்ததும்
நதியா கதவோரம் நின்றவள் பாலாஜியை பார்த்து நின்றாள். அவன் மாடுகளுக்கு தீவனம் வைத்து விட்டு வீட்டுக்குள் வந்தவனுக்கு பயங்கர அலுப்பாக இருந்தது குளித்து விட்டு வந்தவன் பாட்டி சுட்டு வைத்த தோசையை போட்டு வந்து நதியாவின் முன்பு அமர்ந்தவனிடம் “எனக்குத்தான் கையில அடி பட்டிருக்கே” என்று பாவமாய் விழித்தாள்.
“நீயே சாப்பிடுனு நான் சொன்னேனாடி என்கிட்ட திட்டு வாங்கணும்னு உனக்கு தலையெழுத்தா?” என்றபடியே அவளுக்கு தோசையை பிய்த்து ஊட்டி விட்டான். அவளுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
“யாரு குழம்பு வச்சாங்க?”
“பாட்டிதான் வச்சாங்க”
“காரமா இருக்கா?” தண்ணீர் டம்ளரை எடுத்துக்கொடுத்தான்.
“இல்ல என் மேல கோபமா இருந்தாலும் ஊட்டி விடறீங்கல்ல என் மேல பாசம் வந்துருச்சுனு சந்தோஷத்துல” கண்ணீர் என்றதும்
“ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு சாப்பிடு எரிச்சலை கிளப்பாதே” என்று கடிந்துக் கொண்டதும்
“இதுக்கு நான் பட்டினியாவே இருந்திருக்கலாம் இப்படி திட்டினா எனக்கு தோசையே வேணாம்” என்று முகத்தை திருப்பினாள்.
“சரி பேசல சாப்பிடுடி மாத்திரை போடணும்ல” என்று முதன்முறை அவளிடம் பொறுமையாக பேசினான்.
அவள் சாப்பிட்டு முடித்ததும் கொட்டாவி விட்டாள். அவளுக்கு வாயை துடைத்து விட்டு தட்டை சிங்கில் கழுவி வைத்து விட்டு தானும் இரண்டு தோசையை சாப்பிட்டவன் சமையல்கட்டை ஒழுங்குபடுத்திவிட்டு ஹாலுக்குச் சென்று பார்க்க நதியா சாமியாடிக்கொண்டிருந்தாள்.
“மாத்திரையை போடு” என்று அவளிடம் நீட்ட
“மாத்திரை கசக்கும் எனக்கு வேணாம்” முகத்தை திருப்பினாள்.
“ஓங்கி அறைஞ்சிடுவேன் பார்த்துக்கோ” என்றதும் மாத்திரையை வாங்கி போட்டு தண்ணீரைக்குடித்தாள்.
“ரூம்க்குள்ள போய் படு” என கதவை அடைத்து வந்து ஹாலில் பாயை விரித்தான்.
“நானும் இங்கயே படுத்துக்கட்டுமா வானம் இடி இடிக்குது எனக்கு பயமா இருக்கும்” என்றாள் தயங்கியபடியே.
“படுத்துத்தொலை” என்று தலையணையும் போர்வையும் அவளுக்கு எடுத்து வந்து கொடுத்தவன் இன்னொரு பாயை போட்டு படுத்துவிட்டான் படுத்தவன் உடனே உறங்கியும் விட்டான்.
வெளியே இடி பயங்கரமாக விழவும் “அர்ச்சுனா அர்ச்சுனா” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே பக்கத்தில் படுத்திருக்கும் பாலாஜியை பார்த்தாள் அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
“பாவம்ல என்னால ரொம்ப கஷ்டப்படுறாரு” என்று உச்சு கொட்டியவள் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள். நடுஜாமத்தில் நதியாவுக்கு குளிரெடுத்தது முணக ஆரம்பித்தாள்.
சட்டென பாலாஜி கண்விழித்தவன் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த நதியாவை பார்த்தான். அவனுக்கு பயம் வந்துவிட்டது “ஏய் நதியா என்னாச்சு?” என்று படுத்தவாறே கூப்பிட்டான் அவள் அனத்தல் நிற்கவில்லை. பட்டென்று எழுந்து வந்தவன் அவளது கழுத்தில் கைவைத்தான் அனலாக உடம்பு கொதித்தது. அவளை தூக்கி மடியில் போட்டுக்கொண்டு அவளது கையை தேய்த்துவிட்டான். அவளோ அவனது இடுப்பைக்கட்டிக்கொண்டாள்.
“ஏய் அம்மு” என்று அவளது கன்னத்தை தட்டினான்.
“குளிருதுடா மாமா” என்று உளறினாள்.
அவளை அணைத்துக்கொண்டு படுத்துக்கொண்டான் மோகம் அவனுக்கு வரவில்லை அவள் மீது பரிதாபம்தான் வந்தது.
“ஏன் டி உன் அண்ணன் பார்த்துவைத்தவனை திருமணம் செய்திருந்தா இப்படி என்கூட வந்து கஷ்டப்படவேண்டிய அவசியம் இருந்திருக்காதுல” என்றான் அவள் உறங்குகிறாள் என்று நினைத்து.
அவளோ ‘என்ன கஷ்டம்னாலும் உன் கூட இருக்கறதுனா நான் தாங்கிப்பேன்டா’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அவனது அணைப்பில் அப்படியே உறங்கியும்விட்டாள்.
ராயன் மெதுவாக அறைக்கதவை திறந்து உள்ளே வந்ததும் தூங்குவது போல கண்ணைமூடிப்படுத்திருந்தாள் முல்லை.
அவனோ அவளது பக்கம் வந்து அவளையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் அவளது கருமணிகள் அசையவும் “தூங்கமாத்தான் படுத்திருக்காளா கேடி” என்று முணுமுணுத்தவன் சட்டையை கழட்டி வைத்து குளிக்கச் சென்றவன் டீசர்ட் பேண்ட்டுடன் வந்தவன் தலையை துவட்டி துண்டை சோபாவின் மேல் காய வைத்துவிட்டு அவளது அருகே எப்போதும் போல படுத்துக்கொண்டான் ராயன்.
அவளோ ராயன் மேல் தூக்கத்தில் கை போடுவது போல அவனது இடுப்பில் கையை போட்டு காலை அவனது கால் மீது போட்டாள்.
“ரொம்ப படுத்துறாளே” என்று இதழ் குவித்து ஊதினான்.
ராயனோ அவளது கையை மெதுவாக எடுத்து விட்டு திரும்பி படுத்தான். அவளோ அதற்கு மேல் ஒருபடியாக அவன் பக்கம் நெருங்கி வந்து அவனது முதுகோடு ஒட்டிப்படுத்துக்கொண்டாள்.
“வயித்துல புள்ள இருக்கு ஞாபகம் இருக்கட்டும்” என்றான் இயந்திர குரலில்.
“மெதுவாத்தான் கட்டிபிடிச்சிருக்கேன் மச்சான். உங்களுக்கு பிடிக்கலைனா கையை எடுத்துக்குறேன்” என்று மூக்கை உறிஞ்சி அவன் இடுப்பிலிருந்து கையை எடுக்க அவளின் கையை பிடித்து நெஞ்சில் அழுத்தி வைத்துக் கொண்டான்.
அவனாக தன்னை அணைக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் இந்தளவு அவனை தொட விடுகிறானே என்று கண்ணில் கசிந்த நீரை துடைத்துக்கொண்டு அவன் முதுகோடு ஒட்டிப்படுத்துக்கொண்டாள்.
அவள் உறங்கிவிட்டாள் என்று உறுதிப்படுத்தியவன் அவளது புறம் திரும்பி படுத்து அவளை தூக்கி தன் நெஞ்சில் போட்டுக்கொண்டவன் அவளது வயிற்று சேலையை விலக்கி மெதுவாக வருடியவன் “பாப்பா உன்னை கொஞ்ச கூட என்னால முடியலை உன் அம்மா பண்ணியிருக்க காரியம் அப்படி… அவகிட்ட நான் கல்யாணம் ஆன நாளுல இருந்து எதையும் மறைச்சது கிடையாது ஆனா அவளுக்கு என் தங்கச்சி காதல் தெரிந்தும் அதை பற்றி ஒருநிமிசம் என்கிட்ட பேச நேரம் இல்லையா… என் தங்கச்சி காதலை என்கிட்ட சொல்லியிருந்தா எங்க குடும்பம் அத்தனை பேர் முன்னாடியும் அவமானப்பட்டு நின்றிருக்கவேண்டிய அவசியம் இல்லையே..! உன் அம்மாவுக்கு தண்டனையை கொடுத்துட்டு நானும் தினம் தினம் வேதனைப்படுறேன்” என்று சத்தம் வராமல் ஊமையாக அழுதான் ராயன்.
முல்லையின் வயிற்றை வருடியதும் கண் முழித்துக்கொண்டாள். தான் கண் முழித்து விட்டேனென்று தெரிந்தால் இப்படி தன்னவன் நெஞ்சில் சாய்ந்திருக்க முடியாதே என்று மனம் வெதும்பியவள் மனதிற்குள்ளே அழுதுக் கொண்டு அப்படியே தூங்குவது போல நடித்துக்கொண்டிருந்தவள் ‘மச்சான் என்னை மன்னிச்சுடுங்க நான் சொல்ல வந்த நேரம் பண்ணைக்கு தீ வைச்சிட்டாங்க உங்க கோபம் எப்போ தணியும் அந்த நாளுக்கு காத்திருக்கேன் மச்சான்’ என்று அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டாள்.
அடுத்த நாள் காலையில் நதியா எழுந்த போது பாலாஜி மாட்டுத்தொழுவத்தில் இருந்தான் பால்காரர்கள் வண்டி வீட்டின் முன்னே நின்றிருந்தது. அதிகாலை மூன்று மணியிலிருந்து பால்கறந்து பால்காரரின் கேனில் ஊற்றிக்கொண்டிருந்தான்.
“நாளையிலிருந்து பால் கணக்குக்கு கார்டு போட்டு கொடுக்குறேன் அண்ணா” என்றதும் “சரிங்க தம்பி” என்று பால்காரரும் கிளம்பி விட்டார்.
நதியா நின்றுக் கொண்டிருப்பதை கண்டு பால் சொம்புடன் அவளருகே வந்தவன் “இப்போ வலி எப்படி இருக்கு?” என்றான் முகம் இறுக்கத்துடன்தான்.
“இப்போ வலி குறைஞ்சிடுச்சு”
“வெளியே வரும்போது மேல ஷால் போட்டுக்கிட்டு வந்து நில்லு இனிமே நம்மகிட்ட பால் வாங்க நிறையபேர் வருவாங்க அப்போ நீ இப்படி நின்னா நல்லாயிருக்காது” என்றவனோ வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.
பாலாஜி பின்னால் குட்டி போட்ட பூனையாக சென்றவளை “வீட்டு வேலை செய்ய வேண்டி பயந்து கையில காயத்தை பண்ணிவச்சிக்கிட்ட போய் தொந்தரவு பண்ணாம உட்காரு” என்று அதட்டினான்.
அவளோ “நைட் என்னை ஹக் பண்ணி படுத்திருந்தீங்கதானே ஐ லவ் யு பாலாஜி” என்றவளை திரும்பி முறைக்கும் முன் ஹாலுக்குள் ஓடிவிட்டாள்.
இவள் என்ன டிசைனோ என்று இதழ் குவித்து ஊதிக்கொண்டு பாலை காய்ச்சி டீ போட்டு இரண்டு டம்ளர்களில் கொண்டுச் சென்றவன் அவள் கையில் ஒரு டம்ளரை கொடுத்து விட்டு “பல்லு விலக்குனியா” என்றதும் “ம்ம் விலக்கிட்டேன் பசிக்குது” என்று டீ டம்ளரை வாங்கிக்குடித்தாள்.
“இவ வேணும்னே நடந்துக்கறாளா இவ இயல்பே இப்படித்தானா” என்று குழம்பிக்கொண்டே டீயை குடித்து முடித்து காலை சமையலை அவனாகவே செய்து வைத்து விட்டு மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து வந்தவன் “இன்னும் குளிக்கலையா?” என்றதும் “கையில காயம் இருக்கு ட்ரஸ் கழட்ட முடியலை” என்றாள் தயங்கியபடியே.
“வந்து தொலை தாலி கட்டி இருக்கேன்ல” என்று அவனது அறைக்குள் இருக்கும் குளியலறைக்குள் கூட்டிச்சென்று அவளது கைக்கு பாலீதின் கவர் போட்டு விட்டு கண்ணைமூடிக்கொண்டு அவளது சுடிதார் கழட்டுவதற்கு உதவி செய்தான்.
“பொண்டாட்டிதானே பார்த்தா தப்பில்ல” என சிரித்தவளின் கன்னத்தில் மெதுவாய் அடி வைத்து அவளுக்கு குளிக்க வைத்து அவளுக்கு சுடிதார் போட்டு விடவும் செய்தான்.
அவளோ ‘இப்படி எனக்கு பார்த்து பார்த்து எல்லாம் பண்ணுவார்னு தெரிஞ்சிருந்தா இன்னொரு கையையும் எண்ணெய்க்குள் விட்டிருப்பேன்’ என்றாள் மனதிற்குள்.
அவளுக்கு தலைமுடியை துவட்டி கிளிப் போட்டு விட்டு சாப்பாடு போட்டு வந்து கிட்டத்தட்ட குழந்தையை பார்த்துக்கொள்வது போல பார்த்துக்கொண்டான் பாலாஜி.
ராஜமாணிக்கம் சரசுவுடன் சல்லாபம் கொண்டு கைகளை நெட்டி முறித்து “ராஜமாணிக்கம் நீ எப்பவும் ராஜாதான் டா அந்த காலத்துல வாழ்ந்த ராஜாவை விட தினம் தினம் ஒரு பொண்ணோட மஜா பண்ணுறேன்” என்று சந்தோசமாக கிணற்றில் தண்ணீரை இறைத்து குளித்துவிட்டு கொடியில் காய்ந்த வேஷ்டியை எடுத்துக்கொண்டவர் தோட்டத்து வீட்டில் மாடத்தில் வைத்திருந்த திருநீறை அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டு நல்லவனை போல வீட்டுக்குச் சென்றவர் வீட்டு வாசலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த அரசியை கண்டு அதிர்ச்சியில் பேயறைந்தது போல நின்றார்.
குளித்து விட்டு கையில் வாட்ச்சை கட்டிக்கொண்டு வந்த தென்னரசுவோ “என்னப்பா அப்படி பார்க்குற இந்த பொண்ணை உனக்கு தெரியுமா?” என்றான் கை முஷ்டியை இறுக்கி அடக்கப்பட்ட கோபத்துடன்.
“ஓ எல்லாம் உனக்கு தெரிஞ்சுடுச்சா ஆமாடா எனக்கு இன்னொரு குடும்பம் இருக்கு உன்கிட்ட சொல்லி உன் மனசை காயப்படுத்த வேணாம்னு சொல்லலை. நானே ஒருநாள் உனக்கு சித்தியும் ஒரு தங்கச்சியும் இருக்காங்கனு சொல்லலாம்னு இருந்தேன் அதுக்குள்ள இவங்க என்னை தேடி வந்துட்டாங்க” என்றார் அசால்ட்டாக.
அடுத்த நொடி தரையில் கிடந்தார் ராஜமாணிக்கம் தென்னரசு அறைந்த வேகத்தில்.
super sis sema……
Next episode please