காதல் தானடி என் மீதுனக்கு?
[23]
வாசு மாமா அறையை விட்டும் நீங்கிய கணம்.. சாத்தப்பட்ட கதவில் முதுகு சாய்த்து… தன் உள்ளங்கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தவளுக்குள்ளே எத்தனை தடுக்க முயன்றும், முடியவே முடியாதவாறு..
அவள் நினைவடுக்குகளில் வந்து விட்டுச் சென்றது அந்த நாள் நினைவுகளின் ஞாபகம்!!
அவளுள் இருக்கும் வன்மத்தீயை எரிக்கும்.. தகிக்கும் நினைவுகள் அவை!!
அந்த நினைவுகள் எழுந்த மாத்திரத்தில்.. பரிதியின் மனம்பதறச் செய்யும் சிறுபராயம் அறிந்து.. உள்ளே துடித்த.. மென்னிலாவின் துடிப்புக்கள் எல்லாம் சிறுகச் சிறுக அடங்கிப் போயிற்று!!
அவள் விழிகள்… அகோரமாக சிவப்பேறி… அவனை எப்படியாவது.. தான் அடைந்த வேதனையை அடையச் செய்ய வேண்டும் என்ற வெறியையும் கொடுத்தது அந்த நினைவுகள்!!
அது.. அவளது தாத்தா.. மென்னிலாவை லண்டனுக்கு அனுப்பத் தீர்மானித்து, ‘லண்டன்’ செல்லவென டிக்கெட்டும், வீசாவும்.. வந்து சேர்ந்திருந்த தருணம் அது!!
இன்று இரவோடு இரவாக.. அவள் தாயை விட்டும்.. இழந்த தந்தையன்பைத் தரும்.. அவளது மாமா சரவணனை விட்டும்.. அவள் வளர்ந்த வீட்டை விட்டும்.. இந்த மன்னார் மண்ணின் உப்புக்காற்றை விட்டும் செல்லப் போகிறாள் அவள்!!
திரும்ப.. எப்பொழுது இலங்கை மண்ணை மிதிப்பாள்?? அவளது உயிருக்கு உயிரான தாய்முகம் காண்பாள்?? என்று பற்பல கேள்விகள் எழுந்து… அவளது நீள நயனங்களை.. ஈர நயனங்களாக மாற்ற,
தன் பால்கனிக்கதவையே இலக்கேயற்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மென்னிலா!!
நேரம்… விடிகாலை நான்கு.. நான்கரை மணி போல இருக்கும்.. விடியலை புணர்ந்தும், புணராமலும்.. அதை அணைத்துக் கொண்டிருந்தது இருள்!
அந்த பால்கனிக்கதவு.. அந்தக் கதவைக் காணும் போதெல்லாம்… அன்றொரு நாள்..
தலைவன், ‘தன் காதலை ஏற்காமல் போனானே’ என்று நெஞ்சம் மருக.. அவள் நின்றிருந்த வேளை..
பின்னிருந்து வந்து.. கள்வன் போல பதுங்கி வந்து.. அவளை வயிற்றோடு கையிட்டு அணைத்த.. தலைவனின் முரட்டுக்கைகள் பிரயோகித்த வன்மை.. அந்த வன்மையை இன்றும் கூட அனுபவிப்பது போல ஒரு உணர்வுமயக்கம் எழுந்து.. அவள் நெஞ்சை பிசையவாரம்பித்தது.
காதலிப்பது போல அச்சுபிசகாமல்.. உன்னால் எப்படி நடிக்க முடிந்தது பரிதி??
என் காதலோடு நடித்ததை விட்டு விட்டு.. நீ கேமரா முன்னாடியேனும் நடித்திருக்கலாம்!!
உன் இம்மி பிசகாத.. கனகச்சிதமான நடிப்புக்கு.. எழுவகைப் பெண்டிரும்.. உன் மேல் பித்தாகித் திரிந்திருக்கக் கூடும்!! என்ற எண்ணம் அவளுள் முகிழ்த்த போதே.. ஒரு நமுட்டுப் புன்னகை பூத்து மறைந்தது மென்னிலாவுக்குள்!!
பரிதியைப் பற்றி எண்ணும் போது.. முறுக்கேறிய கைத்தசை நார்களும், தோள்புஜங்களும்..திண்ணிய மார்பும், இறுகிய வயிறும், வாளிப்பான கால்களும் என.. அவனது ஆஜானுபாகுவான தோற்றம்.. சிந்தையில் வந்து போக.. அதை வெறித்துப் பார்த்தாள் மென்னிலா.
மனம் மயக்கும் கண்ணனாக.. அவன் இருந்தும் என்ன பயன்? மங்கையின் மனம் நோகாமல் நடந்து கொள்ளத் தெரியவில்லையே அவனுக்கு!!
ஊர்க்கோயில் தெருமுன்பாக.. அவளைத் தள்ளி விட்டு.. தாலியை இழுத்துப் பறித்த.. அவனது கோரச்செயல்.. ஞாபகம் வந்த.. அடுத்த நொடி..
அதன் வலியைத் தாங்க மாட்டாமல்.. இறுக கண்களை மூடிக் கொண்ட போது.. கண்ணிலிருந்தும் வழிந்தது ஒரு துளி உவர்நீர்!!
அந்த நேரம்.. அவளுடைய மென்மையான கன்னத்தில்.. இடியென வந்து இறங்கியது கரடுமுரடான கையின் அறை!!
அந்த அறை தந்த வலியில் துடிதுடித்துப் போய்.. கண்களைத் திறந்தவளின் முன்னே.. ருத்ரதாண்டவமாடும் வதனத்தையொக்கும்,
ரௌத்திர விழிகளுடன் நின்றிருந்தார் அவளது முரட்டுத் தாத்தா ராஜமாணிக்கம்!!
அவரைப் பார்த்ததுமே நெஞ்சோடு ஒரு அச்சம்.. திடுமென விரவிப் பரவ, தாத்தாவை மலங்க மலங்கப் பார்த்தாள் மென்னிலா!!
ஏற்கனவே சோர்ந்து நின்றிருக்கும் அவளது முகத்தைப் பார்த்தால்.. எப்பேர்ப்பட்ட முரடனுக்கும் மனம் இளகும்!!
ஆனால் தாத்தா என்னும் கொடூர அரக்கனுக்கோ.. அவளைக் கண்டதும்.. விழிகளில் கொலைவெறியே மிக, அடுத்த கன்னத்தில் மீண்டும் விழுந்தது இன்னோர் அறை!!
தாத்தாவின், ‘அறைகள் எதற்காக?’ என்று தெரியாமல்.. அவள் சுதாரித்து நிமிரும் முன்னம், அவளது பின்னந்தலைக் கூந்தலை.. இறுக்கிப் பிடித்தவர்,
தன் கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரிய, பற்களைக் கடித்துக் கொண்டு, “ஏன்டீஈஈ… நேத்து ராத்திரி வீட்டுக்கு வந்தது எவன்டீ..??அவ்வன் தானேஏஏ??…”என்று கேட்ட வண்ணம் மீண்டும் ஓர் அறை கன்னத்துக்கே விட,
அந்த அறையின் வீரியம் தாளாமல்.. நெற்றிப் போய் .. மஞ்சத்தின் தலைமாட்டு விளிம்பில் பட்டு.. தரையில் ஒரு மானாகத் துடித்து விழுந்தாள் மென்னிலா!!
மஞ்சத்தின் தலைமாட்டு விளிம்பு பட்டதும்…நெற்றித் தோல் பிளந்து.. குபுகுபுவென இரத்தம் எட்டிப் பார்க்க, அது தெரியாத வண்ணம்.. அவளது இதயத்தை மருளச் செய்தது தாத்தாவின் ரௌத்திரம்!!
பரிதியின் கையால் தாலி பறிக்கப்பட்டு வந்ததன் பின்னர்.. தாத்தா அடித்த அடிகளின் ரணமே.. இன்னும் உடம்பை விட்டு மறையாத நிலையில்.. மீண்டும் அவளில் வன்முறையை பிரயோகிக்கும் தாத்தா!!
ஒன்றும் அறியாமல் குழம்பிப் போனவளோ, அவரைப் பார்த்து திக்கித் திணறியவளாக,
“எ.. எ.. னக்குத் தெரியா.. து தாத்தா..நீ.. நீங்க என்ன சொல்றீங்கன்னே ப்புரியலைய்ய்??”என்றவளை.. கண்களாலேயே சுட்டெரிப்பது போல பார்த்தார் ராஜமாணிக்கம்!!
அவளது பிடரி மயிரைப் பிடித்து… மென்னிலாவை எழுப்பாட்டியவர், அவளை உற்று நோக்கியவராக, “உனக்குத் தெரியாதூஊ? நேத்து அர்த்த ராத்திரியில.. வீட்டுக்கு திருடன் வந்ததூஊஊ தெரியாதூஊ?? … அது பரிதீஈஈன்னு உனக்குத் தெரியாதூஊஊ??அவ்வன் எதுக்கூஊஊ இங்க வ்வந்தாஆஆன்னும் உனக்குத் தெரியாஆதூஊ?? சொல்லூஊஊ??எதுக்கு அவன் வந்தாஆன் சொல்லூஊஊ” என்று கேட்டவராக, கன்னத்துக்கு மீண்டும் ஒரு அறை விட.. திகுதிகுவென எரிந்தது அவளது இதயம்!!
நேற்று நடுச்சாமத்தில் திருடன் வந்தானா? அதுவும் அது பரிதியா?
தாத்தா சொல்வதை முதன்முறையாக கேட்டவளுக்கு, உள்ளத்தில் அதிர்ச்சியோடத் தான் செய்தது.
அப்படியே பரிதி தான்.. சுவரேறி குதித்து… திருடன் போல வந்திருந்தாலும் கூட.. பரிதியை நோவதை விட்டு விட்டு.. ஒன்றுமறியா பேத்தியை நோவினை செய்வது எவ்வகையில் ஞாயம்??
தாத்தாவை கண்ணீர் மல்கப் பார்த்தவள், “அ.. அவன் நே.. நேத்து அர்த்த ராத்திரி வந்.. த..தே..நீங்..சொல்..இ த்தான் தாத்தா துதெரியும்… சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதூஊஊ” என்று சொல்ல மீண்டும் விழுந்தது ஓர் அறை!!
அந்த அறையில் கீழுதட்டின் சருமம் வெடித்து.. வழிந்தது இரத்தம்!!
அவளை நம்பமாட்டாதவர் போல.. விழிகளை அகல விரித்தவராகப் பார்த்தவர்,
“அன்னைக்கு நடுச்சாமத்துல.. ஊர்க்கோயில் தெருவுல.. எப்படி விழுந்து கெடந்தேன்னு உனக்கு தெரியாது?? திருவிழா அப்ப.. சரவணன் அந்த குடோன்ல எப்படி மயங்கிக் கெடந்தான்னும் உனக்கு தெரியாது?? .. அதே மாதிரி இப்ப நடந்தது எதுவுமே உனக்குத் தெரியாது???”என்று சொன்னவர்,
பேத்தி.. பரிதியைக் காதலித்த போது.. மென்னிலா நிகழ்த்திய அத்தனை திருகுத் தாளத்தையும்.. சரவணன் மூலம் ஒன்று விடாமல் அறிந்து கொண்டவராகக் கேட்டார் ராஜமாணிக்கம்!!
அதையெல்லாவற்றையும் மறைத்து.. அவள் செய்தது அவனது காதல் தலைவனுக்காகத் தானே?? ஆனால் அவனே ஏமாற்றம் தந்து விட்டுச் சென்று விட்டானே??
காதலித்த போது.. அவள் செய்த தவறுகளின் குற்றவுணர்வு காரணமாகத் தான்.. தாத்தாவின் இத்தனை அடிகளையும், ‘ ‘கல்லெறி’ போன்ற சொற்களையும் தாங்கி நிற்கிறாள் மாது!!
இரத்தம் வழிய வழிய நின்றவள், இயலாமை நிறைந்த குரலில், “சத்தியமா தெரியாது தாத்தா..”என்று கூற, அவளை அப்போதும் நம்பாத பார்வை பார்த்தார் ராஜமாணிக்கம்!!
அந்த விழிகளில் வழிந்த நீரைக் கண்டு.. சினம் பொங்க.. ஆக்ரோஷமாக அவளைத் தள்ளி விட்டவர்,
“செத்துப் போடீஈஈ.. இன்னும் ஏன்டீஈஈ… உயிரோட இருக்க…. என் குடும்ப மானத்த வாங்க வந்த பிடாரீஈஈ.. செத்துப்போடீஈஈ..”என்று ‘காச்மூச்’ என்று கத்திவிட்டு வெளியேற,
அந்தோ பரிதாபம்.. மென்னிலாவின் நிலை!!
இம்முறை தாத்தாவிடமிருந்து காப்பாற்ற சரவணனும் இருக்கவில்லை;அவளது தாய் சிவகாமியம்மாளும் இருக்கவில்லை!!
இருவருமே.. ஒரு கருமாதி வீட்டுக்கு.. நேற்றிரவோடு இரவாக சென்றிருக்க.. தாத்தாவின் கையில்… நசுக்கப்பட்ட மலர் போல ஆனாள் மென்னிலா.
தாத்தா.. அறையை விட்டு நீங்கினாலும் கூட.. தாத்தா தன்னை தள்ளிவிட்டுச் சென்ற இடத்தை விட்டும் இம்மியளவு நகராமல்,
நெற்றியோரமும், இதழ்க்கடையோரமும் வழிந்த இரத்தம் காயக் காய… அப்படியே உணர்வு மரத்துப் போனவளாக அமர்ந்திருந்தாள் மென்னிலா.
நேரம் போய்க் கொண்டேயிருந்தது.விடிகாலை இருளைப் போக்கி… கீழ்வானில் சூரியனும் உதித்து.. கொஞ்சம் கொஞ்சமாக அது உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்த தருணமும் கூட.. அப்படியே தான் நின்றிருந்தாள் அவள்!!
உள்ளுக்குள்.. தன்னை ஏமாற்றிய அந்த முரடனின் முகமே மாறி மாறி சிந்தனையில் வந்து போக, திடும்மென தன் இடத்தை விட்டும் எழுந்தவள்,
முகத்தைக் கூட அலம்பாமல்.. இரத்தத்துடனும், சிவந்த கன்னத்துடனும்… ஆவேசமான விழிகளுடன்.. வீட்டை விட்டு வெளியே நடந்தாள்.
அவள் உடல் உள்ளே துணுக்கமுற்றுக் கொண்டிருந்தாலும் கூட, கால்களின் துரிதகதியோ கொஞ்சம் கூட மட்டுப்படவேயில்லை!!
வழியில் நின்றிருந்தவர்கள் எல்லாரும்… இரத்தம் வழிய வழிய.. தெருவில் நடந்து செல்லும் ராஜமாணிக்கத்தின் வாழாவெட்டியான பேத்தியை.. வியக்கும் கண் கொண்டு பார்க்க,
அதையெல்லாம் அலட்சியப்படுத்தியவள்.. நேர்கொண்ட பார்வையுடனும், நிமிர்ந்த நன்னடையுடனும்.. ஆக்ரோஷம் கிஞ்சிற்றும் குறையாமல்.. நாடிப் போனது யாரைத் தேடி?
அவளது தாலியைப் பறித்து.. அனைவர் முன்னாடியும் மானபங்கப்படுத்தி.. வாழாவெட்டியாக்கினானே அந்தப் பரிதியைத் தேடித் தான்!!
பரிதி.. இந்நேரம்.. ‘எங்கு நின்றிருப்பான்?’ என்று துல்லியமாகத் தெரிந்திருந்த பெண்ணவள் நேராகச் சென்றடைந்தது அவனுடைய தென்னந்தோப்பைத் தான்!!
ஆம்.. பரிதிவேல் வீரன்.. தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் தான் நின்றிருந்தான்!!
அதே தென்னந்தோப்பு!! அன்றொரு நாள் அவனுக்காக என்று ஆசை ஆசையாக சமைத்துக் கொண்டு வந்த அதே தென்னந்தோப்பு!!
அவனும்.. அவள் உணவை நிராகரித்து விட்டு, ‘உன் உயிரைக் காப்பாற்றியதுக்கு பதில்.. உன் கற்பைத் தா’ என்று கேட்ட.. அதே தென்னந்தோப்பு!!
தன்னுடைய தென்னந்தோப்பு கணக்குவழக்குகளை சரிபார்த்துக் கொண்டே, அந்த ஆவணங்களின் இறுதியில் கையொப்பமிட்டவாறு,
எதேர்ச்சையாக திரும்பிய பரிதிவேல் வீரனின் கண்கள் கண்டு கொண்டது மென்னிலாவை!!
இல்லை இல்லை அவனுடைய மனைவி ஆண்டாளை!!
அவளை விட்டுப் பிரிந்த.. முழுமையான ஆறு நாட்களின் பின்னர்.. தன் மென்னிலாவைப் பார்க்கிறான் பரிதி!!
‘இவள் எதற்கு இங்கே வருகிறாள்?’ என்று தோன்ற மெல்லிய இடுங்கிய பரிதியின் விழிகள் அவளை ஆராயத் தொடங்கியது.
கன்னத்தின் செழுமை முற்றிலும் இழந்து, கழுத்து என்புகள் புடைத்து வெளித்தெரிய.. உடலில் ஜீவனேயற்று மெலிந்து இளைத்துப் போயிருந்தாள் அவள்!!
அசுரவேகத்துடன்.. அவனை நாடி வந்தவள் இளநீரில் சொருகப்பட்டிருந்த.. அரிவாளையும் ஆக்ரோஷத்துடன் இழுத்து எடுத்துக் கொண்டே வந்து,
பரிதியின் கைகளில் திணித்தவள், அதைத் தன் மெல்லிய கழுத்தோடு அழுத்தி வைத்தவள்,
சீறும் குரலில், கண்களில் மௌனமாக கண்ணீர் வழிய,
“இன்னும் ஏன் பார்த்த்ட்டிருக்கஅஅஅ?? ..என் கிட்ட மிஞ்சியிருக்குறது இந்த உயிர் மட்டும் தாஆஆன்.. அதையும் எடுத்துடூஊஊ.. ஒரு பாவமும் பண்ணாமல்.. நான் தெனம் தெனம் சித்திரவத அனுபவிக்குறது எல்லாம்.. ப்போதும் ப்பரிதி.. எனக்கு இந்த உயிர் வேண்டாம்.. இந்த வ்வாழ்க்க வேண்டாம்.. எனக்கு நிம்மதி தான் வ்வேஏஏணும்!! … உனக்கும், தாத்தாவுக்கும் நடுவுல சிக்கித் தவிக்க என்னால முடியாஆதுஊஊ… அப்படி நீ என்ன வெறுக்குறேன்னா… கமாஆஆஆன்… டேக் இட்… என் உயிர எடுத்துக்கோஓஓஓ…”என்று கத்தியவளுக்கு,
அழுகையின் விளைவால் நாசிநுனிச் செர்ரிப் பழம் போல சிவந்து போயிற்று.
மென்னிலா.. திரும்பவும்.. இப்படியான ஒரு கோலத்தில் வந்து அவன் முன்னாடி நிற்கக் கூடும் என்று பரிதிவேல் வீரன் எதிர்பார்த்திருக்கவேயில்லை!!
மென்னிலா.. மீண்டும் மீண்டும்.. அரிவாளின் கூர்முனைப் பகுதியைத் தன் கழுத்தோடு அழுத்த… அது வெட்டுப்படாமல் இருக்க.. தன் கையை அழுத்தி… அவளை இழுக்கவிடாமல் செய்திருந்தான் பரிதி!!
தன் கண்ணெதிரே.. தன் இதயத்துக்கு உகந்த ஆண்டாள் விடும் கண்ணீர் ஏதோ செய்தது அவனை!!
அவனது பார்வையோ.. நெற்றியும், இதழ்களும் பிளந்து.. வழியும் இரத்தத்தைக் கண்டதும்.. உள்ளே வலி எழுந்து பரவியது அவனுக்கு!!
அவன்.. அவளது நம்பிக்கைக்கு துரோகம் செய்த.. கொடூரக் கணவனேயானாலும் கூட.. நிலா மீது இத்தனை வன்முறையை அவன் பிரயோகித்ததே இல்லையே??
அவளது இரத்தம்.. அவனது பழிவெறியையும் மீறி.. அவனுள் உறங்கிக் கொண்டிருக்கும் மென்மையான காதலை உசுப்பி எழுப்பி விட,
அவளது இரத்தத்தைத் துடைக்க அனிச்சையாக எழுந்தது அவனது கைகள்!!
உள்ளுக்குள் கழிவிரக்கத்தோடு, கோபமும் எட்டிப் பார்க்க, “ஆர்.. உன்னய அடிச்சத்..” என்று அவன் கேட்கப் போன கணம், கேட்டது, “நிலாஆஆ” என்னும் சரவணனின் குரல்!!
சரவணனின் குரல் கேட்டதும்.. மென்னிலாவும்… ஒரு அடைக்கலம் கிடைத்து விட்டாற் போன்று.. மிருதுவான குரலுடன், “மாமாஹ்” என்றுரைத்த வண்ணம் திரும்ப,
சரவணனை.. தன்னவள் ‘மாமா’ என்றழைத்ததில்.. இறுகிப் போனது முரடனின் வதனம்!!
கருமாதி வீட்டுக்கு சென்று விட்டு.. தன் அத்தை சிவகாமியம்மாளோடு வீடு வந்திருந்தவனுக்கு.. அறையில் மென்னிலாவைக் காணவில்லை என்றதும் உள்ளூற ஓர் நடுக்கம் பரவத் தான் செய்தது.
பணியாளர்களிடம் விசாரித்த போது.. தாத்தா மென்னிலாவை அடித்ததும், மென்னிலா ஆக்ரோஷமாக வீட்டை விட்டு வெளியே சென்றதும் தெரிய வந்தது சரவணனுக்கு!!
மென்னிலாவைத் தெருவில் கண்டவர்களிடம் எல்லாம்.. தடுமாற்றத்துடன் ஒரு பைத்தியக்காரன் போல விசாரித்து விசாரித்து.. பரிதியின் தென்னந்தோப்பை அடைந்தவன்.. மென்னிலாவைக் கண்டதும் தான் சற்றே ஆசுவாசம் எய்தினான்!!
பரிதியை உறுத்து விழித்துக் கொண்டே.. மென்னிலாவை அடைந்தவன், “இங்கன என்னம்மா அவன் கூட பேச்சி வேண்டி கெடக்கு? நீ வா… வீட்டுக்கு போகலாம்” என்ற வண்ணம்.. மென்னிலாவை.. அவன் அழைத்துச் செல்ல, முதன் முறையாக பரிதிக்குள் முகிழ்த்தது உரிமை போராட்டம்!!
அவன் தொட்டுத் தாலி கட்டிய மனைவியை, இன்னொருவன் கைப்பிடித்து அழைத்துச் செல்வதில்.. கோபத்தோடு.. எதையோ ஒன்றை இழந்த உணர்வும்.. அவனை ஆட்கொள்ள..
அன்று தூக்கம் வராமல் தவித்துப் போனான் பரிதி!! அவளை நீங்கியதன் பின் தூக்கம் என்பது ஏது அவனுக்கு?
அவனுக்குள் நிகழ்ந்த மனப்போராட்டம் அறியாத மென்னிலாவுக்கோ.. இன்று.. அவனைப் பற்றி நினைக்கும் போதும்… தன்னுடைய அழகான வாழ்க்கை சீரழிந்து போக.. அவன் தான் காரணம் என்றே தோன்றியது.
இன்று அவள் மேல்.. அளவில்லாத காதல் பொழிபவன்.. அன்று தாத்தா அவளை மாட்டை அடிப்பது போல அடித்த கணம் எங்கு தான் சென்றான் இவன்??
அப்போது அவனது காதல் எங்கு சென்றிருந்தது??
அப்போது வந்து உதவாமல்.. இப்போது வந்து.. ‘காதல் காதல்’ என்று பினாத்தினால்.. அவளால் பழையன மறந்து.. கருத்தொருமித்து, மனமொருமித்து வாழவும் தான் முடியுமோ??
ஒரு வாசு மாமா என்ன? அவனுக்காக ஆயிரம் வாசு மாமாக்கள் வந்து.. அவளிடம் பரிந்து பேசினாலும் தான்.. அடிபட்டிருக்கும் அவள் மனம்.. அவனுக்காக இளகவும் கூடுமோ??
தற்போது… பரிதியின் சாத்தப்பட்ட அறைக்குள் இருந்து வெடித்து அழுதவளின் இதழ்கள் வன்மத்தில் முணுமுணுத்தன.
“பரிதி.. உன்னோட காதல்ன்றது.. என்னைப் பொருத்தவரை.. முடிஞ்சு போன அத்தியாயம்.. இனி என் இதயத்தில்.. காதல்ன்ற ஒன்றுக்கு இடமே இல்லை” என்றவளின் கண்கள்..
சிதறப்பட்ட முத்துக்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
******
தாத்தாவின் வன்முறைக்குப் பின் இரவோடிரவாக.. இலங்கையை விட்டும்.. லண்டன் பயணித்தவளுக்கு.. மன்னாரில் சிறுத்தோப்பு கிராமத்தில் என்ன நிகழ்ந்தது என்பதைத் தானும் அறிய வாய்ப்பில்லை தான்!!
எவளொருத்தியின் தாலியைப் பறித்த பின்னர், எவளை இனி பார்க்கவே கூடாது என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்தானோ பரிதி,
தன் இதயத்துக்கு சொந்தக்காரியான அதே ஆண்டாளைக் கண்டதும்.. பழைய நேசம் ஊற்றெடுக்க.. தவித்துத் தான் போனான்!!
இந்த உலகமே அறியாத உண்மை.. நேற்று நடுச்சாமத்தில்.. நிலாவின் வீட்டுக்கு… சுவரேறி குதித்து வந்தது பரிதியே அல்ல!!
பரிதியை நிகர்த்த ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட நிஜத் திருடன்!!
திருடன் கூட பரிதியின் சாயலில் இருந்தது என்னமோ.. மென்னிலாவுக்கே அன்று பாதகமாகவே முடிந்தது. அப்படி பாதகமாக முடிந்ததுவும் கூட ஒருவகையில் நல்லதற்கே!!
தீமையிலும் ஓர் நன்மை உண்டு என்று சொல்வார்களல்லவா? அது போலத்தான் இதுவும்!!
தெரிந்தோ.. தெரியாமலோ.. மனம் ஒடிந்து போய்.. மென்னிலா… அன்று பரிதியைக் காண தென்னந்தோப்புக்கு விரைந்திருக்கா விடின்.. ராஜமாணிக்கத்தின் இன்னோர் முகத்தை அவன் காண நேரிட்டிருக்கவேயாது!!
அவன்.. மென்னிலாவுக்கு துரோகம் இழைக்கக் காரணமே.. ராஜமாணிக்கத்தின் தவறினால்.. ஒன்றுமறியாத சிறுவன்.. அவன் பட்ட வலியையும், கஷ்டத்தையும்.. ராஜமாணிக்கம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் தான்!!
உன் பேத்தி விடும் கண்ணீர் கண்டு வலிக்கிறதாடா கிழவா?? அப்படித் தானே என் தாயைக் கண்டு.. நிதம் நிதம் எனக்கும் வலித்திருக்கும்?? என்று புரிய வைப்பதற்காகத தான்!!
ஆனால் அங்கு தான் தப்புக்கணக்குப் போட்டான் பரிதி!!
மென்னிலாவின் கண்ணீர்.. ராஜமாணிக்கத்தை ஒருதுளியளவேனும் பாதிக்கவேயில்லை என்பதை.. அடிவாங்கிய நிலா முகம் காட்டிக் கொடுக்க… தான் போட்ட தப்புக் கணக்குத் தெள்ளத் தெளிவாக புரிந்தது அப்போது தான்.
என்று.. மென்னிலாவின் அடிப்பட்ட முகம் கண்டானோ.. அந்நொடி.. சர்வமும் உருக்குலைந்து போனான் பரிதி!!
அங்கே அவள் நிதமும் அந்தக் கிழவனிடம் சித்திரவதைக்குள்ளாவது அறிந்து.. உள்ளுக்குள் மனதைப் பிசைந்தது முரடனுக்கும் கூட!!
அவனது காதுக்குள் திரும்பத் திரும்ப ஒலித்தது மென்னிலாவின் உணர்ச்சி பொங்கும் குரல்!!
சாவுக்கு அஞ்சாதவளாக, அரிவாளை கழுத்தில் அழுத்தி நின்றவளின் முகம்.. மனக்கண்முன் விரிந்து அவனை இம்சித்தது.
“ஒரு பாவமும் பண்ணாமல்.. நான் தெனம் தெனம் சித்திரவத அனுபவிக்குறது எல்லாம் போதும் பரிதி.. எனக்கு இந்த உயிர் வேண்டாம்.. இந்த வாழ்க்க வேண்டாம்.. எனக்கு நிம்மதி தான் வேணும்… உனக்கும், தாத்தாவுக்கும் நடுவுல சிக்கித் தவிக்க என்னால முடியாஆதுஊஊ” என்ற அவளின் குரல்.. அவனை இருக்கவிடாமல்.. கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லவாரம்பித்தது!!
ஏற்கனவே.. காதலா? பழிவெறியா? என்ற இரண்டுதலை பாம்புக்கு நடுவில் சிக்கித் தவித்தவன்..
பழிவெறிக்கு முக்கியத்துவம் கொடுத்து.. அவள் வாழ்க்கையோடு.. அவன் வாழ்க்கையையும் பாழாக்கி நின்றது எத்தனை பெரிய தவறு!!
அவள் காதலோடு இழைந்த தருணம் எல்லாம்.. கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் நீர்த்துப் போன பழி வன்மத்தீயை.. அவன் மீண்டும் மூட்ட.. எத்தனை வேதனைப்பட்டுப் போனான்??
அவள் அருகில் அவன் இருந்த போதெல்லாம்.. இதயத்தின் கசடுகள் மறைந்து.. வானத்தில் உயர உயர பறப்பது போலல்லவா இருந்தான் அவன்??
தன் மேல் சுயநலமில்லாத காதல் வைத்திருந்தவளை.. ஒரு கொடூர கிழவனின் பிடியில் தள்ளிவிட்டோம் என்று தோன்ற..மறுநாள் காலை.. அவளுக்கு அந்த நரகத்தில் இருந்து விடுதலை கொடுக்கவே ஆசை கொண்டான் பரிதி!!
மீண்டும் தன் மன்னவன்.. தன்னை நாடி வந்தது அறியாத மென்னிலாவோ… லண்டனுக்குப் பிரயாணப்பட்டுக் கொண்டிருந்ததுவும் அவளது துரதிர்ஷ்டம்!!
அத்தனை கொச்சைப்படுத்திய காதல்.. மீண்டும் அவனுடன் இணையும் என்று எதிர்பார்க்கவில்லை தான் இருப்பினும், கொடூரக் கிழவனின் பிடியில் இருந்து அவளை தப்ப வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான் பரிதி!!
அவளை நேரில் கண்டு.. “நீ என்னய மன்னிச்சு என் கூட வாழணும்னு சொல்ற அருகத என்கிட்ட இல்ல.. நீ ஆசப்பட்டா.. இங்கேயிருந்து உன்னய கூட்டிப்போய்.. உனக்கு மணவிடுதலை தர்றேன்.. உனக்கான ஒரு வாழ்க்கய அமைச்சுக்குற வரைக்கும் என் நெழல்ல உனக்கு அடைக்கலம் தர்றேன்..என்னய நம்புறதுன்னா.. என் கூட வா”என்று கேட்டு விட வேண்டும் என்று ஆசையுடன்.. தான் அவளைத் தேடி.. மறுநாள் காலை..மென்னிலாவின் வீடு தேடி தைரியமாகப் போனான் பரிதி.
அந்த காலை வேளையில் ராஜமாணிக்கம்.. அங்கு இல்லாமல்.. தன் பால்ய நண்பனொருவனை சந்திக்கச் சென்றிருந்தது ராஜமாணிக்கத்தின் அதிர்ஷ்டம்!!
சின்ன வயதிலிருந்தே.. தன் தாய்க்கு நேர்ந்த கொடுமைகள் சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டவனுக்கு.. ராஜமாணிக்கத்தின் மேல் இயல்பிலேயே கொலைவெறி உண்டு!!
அவன்.. ராஜமாணிக்கத்துடன் இணைந்து பற்பசை கம்பெனி நடத்த முன்வந்த போதும் சரி.. மென்னிலாவை மணமுடித்ததும் கம்பெனி பேச்சுவார்த்தையுடனேயே நிறைவுக்கு வந்த போதும் சரி.. உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த கொலைவெறியை அடக்கிக் கொண்டு தான்.. ராஜமாணிக்கத்தோடு அவன் உரையாற்றுவதே!!
ஆனால் நேற்று.. மென்னிலாவுக்கு நேர்ந்த கொடூரம் தாளாமல்.. எரிமலை சீற்றத்துடன்.. வீடு வந்திருப்பவன் கண்களில் ராஜமாணிக்கம் விழாமல் போனது அவரின் அதிர்ஷ்டமே தான்!!
கிழவனின் வீட்டில் புயல்வேகத்தில் நுழைந்தவனின் கண்கள்.. அந்த வீட்டின் இண்டு இடுக்கு எங்கும் தன் ஆண்டாளைத் தான் தவிப்புடன் தேடியது!!
என்ன தோன்றியதோ.. பரிதிவேல் வீரனுக்கு.. அந்நிலையிலும் கூட அவளை நிலா என்று அழைக்க முடியாத வண்ணம், ‘ஆண்டாள்’ என்ற அழைப்பே வர,
அந்த வீட்டு நடுக்கூடத்தில், உறுதியான குரலில், “ஆண்டாளூஊஊ..?? ஆண்டாஆஆளுஊஊ” என்றபடியே தேட, அந்தச் சத்தம் கேட்டு வந்த சரவணன்,
தங்கள் குடும்பத்தின் பரம எதிரி அங்கு வந்திருப்பது கண்டு கொதித்துத் தான் போனான்.
ராஜமாணிக்கம் மட்டும் தன் ஜாதிவெறியை அன்றே களைந்திருந்தால்.. இந்நேரம் பரிதியும், சரவணனும் ‘அண்ணா – தம்பி’ என்று உறவுமுறைக் கொண்டாடியிருக்க கூடும்!!
‘ஜாதிவெறி’ என்ற அரக்கனால்.. குடும்ப சந்தோஷத்தை முற்றிலும் இழந்து தவிக்கும் கிழவனுக்கு.. நிச்சயம் இந்த இழப்பெல்லாம்.. இழப்பாகத் தெரியப் போவதேயில்லை!!
சரவணனைக் கண்டதும் சிறிதும் அஞ்சாமல்.. நிமிர்ந்த நெஞ்சோடு அவனை நாடிப் போனவன், தவிப்பைக் கட்டுப்படுத்த முடியாத குரலில், “என்னோட ஆண்டாளு எங்க?” என்று கேட்டான்.
பரிதி ‘ஆண்டாள்’ என்று அழைப்பது தன் முறைப்பெண்ணைத் தான் என்பது நன்கே புரிந்தாலும் கூட, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த பரிதியைக் கண்டு.. பொல்லாம கோபம் ஊற்றெடுத்தது சரவணனுக்கு.
அதிலும் தன் முறைப்பெண் நிலா மனதை மயக்கி.. கல்யாணம் செய்து கொண்டதோடல்லாமல்.. அவளை ஏமாற்றிய வலி வேறு சரவணனை கொலைகாரனாக மாற்றும் போல இருந்தது.
தனக்கென்று எண்ணியிருந்தவள்.. தனக்கில்லை என்றதும் கொலை வெறி மிக, சட்டென்று பாய்ந்து சட்டையைப் பிடித்த சரவணன்,
“உன்னோட ஆண்டாளா?? .. ஆர் வீட்டுக்கு வந்து ஆர தேடுற? .. ம்மரியாதைய்யாஆ… வ்வெளிய போயிடு..” என்று கத்த.. அதற்கா அஞ்சுவான் நம் பரிதிவேல் வீரன்??
சரவணனையும், தன் சட்டையைப் பற்றிய அவனது கைகளையும் தீவிர விழிகளுடன் பார்த்தவனுக்கு, கைமுஷ்டி மடக்கி, சரவணன் மூக்கிலேயே குத்து விட வேண்டும் போலத் தான் தோன்றியது.
இருப்பினும் சரவணனின் கோபமும் புரிய, மெல்ல தன் கோபத்தை மூச்சு விட்டு சமன்படுத்திக் கொண்டவன், தாழ்ந்த குரலில்,
“சரவணா.. சட்டையில் இருந்து கைய எடு… இப்ப நீ எடுக்கல… நீ தான் அசிங்கப்பட்டுப் போவ..”என்று எச்சரிக்கவும் செய்தான் பரிதிவேல் வீரன்!!
அவனது ஒற்றைப் பார்வையில் என்ன இருந்ததுவோ.. அதற்குப் பணிந்து போய்.. பரிதியின் சட்டையில் இருந்து.. தானாகவே தன் கைகளை விட்டான் சரவணன்.
பின் மீண்டும் தன்னவளைத் துலாவிய வண்ணம், “ஆண்டாளூஊஊ..?” என்று கேட்க, இறுகிய முகத்துடன் இடையிட்ட சரவணன்,
“நீ கூப்பிட்ற பேர்ல ஆரும் இங்கன இல்ல..” என்றான்.
சரவணன், ‘நிஜமாகவே நிலா இங்கே இல்லை’ என்று சொல்ல, பரிதிவேல் வீரனோ.. ‘ஆண்டாள்’ என்று தன்னவளை அழைப்பதால் தான்.. வீம்புக்கு சரவணன், ‘அப்படி சொல்கிறான்’ என்று மீண்டும் அவளை அழைக்கலானான்.
இம்முறை அவளது உண்மையான பெயரில் அழைக்க நாடி, “மென்னிலாஆஆ..”என்று அழைக்க, உள்ளிருந்து அவன் வரவில்லை!! மாறாக வந்தது மென்னிலாவின் தாயார் சிவகாமியம்மாள்!!
பரிதி தன் பெரிய தமையனின் ஒரே மகன் என்பதை அறிந்து எத்தனை பெரும் சந்தோஷம் அவருள் முகிழ்த்ததோ? அந்தளவுக்கு.. தன் மகளுக்கு அவன் இழைத்த துரோகத்தில் கோபமும் இருக்கத் தான் செய்தது.
அதனால் பரிதியை முறைத்துப் பார்த்தவர், வெடுக்கென்று, “அதான் அவ இங்கன இல்லைன்னு சரவணன் ஏற்னகவே சொல்லிட்டானே!!அப்புறம் என்ன?.. நிலா.. இங்க.. இல்ல” என்றார் அவர்.
‘நிலா அங்கு இல்லை’ என்பதை அப்போதும் நம்பத் தயாராக இல்லை என்பதை காட்டிக் கொடுத்தது அவனது பேச்சு!!
தன் அத்தையை நாடி மிடுக்குடனேயே வந்தவன், “என் பொண்டாட்டிய கூட்டிப் போகாம.. நான் இங்கிருந்து போக மாட்டேன்..”என்றதும்..தாய் சிவகாமியம்மாளுக்கும் வந்ததே கோபம்??
சீற்றம் துளிர்க்கும் குரலில், “என்னதூஊ?? உம் பொண்டாட்டியாஆஆ.. அதான் அவன் தாலிய பறிச்சு அனுப்பிப் போட்டேல்ல??. அப்புறமும் என்ன… பொஞ்சாதி-புருஷன்னுக்கிட்டு??… தாலிய அறுக்கும் போது.. எங்க போச்சு.. இந்த உறவெல்லாஆம்?”என்று கேட்க, பரிதிவேல் வீரனிடம் எந்த பதிலும் இருக்கவில்லை தான்!!
இருப்பினும்.. அவளுக்கும், தனக்குமான பந்தத்தை விட்டுக் கொடுக்காமலேயே பேசினான் பரிதி.
“இலங்கை சட்டப்படி.. நாங்க மணவிடுதலை பெறல.. நான் அவளுக்கு டிவோர்ஸ் குடுக்காத வர.. அவள் இன்னும் என் பொண்டாட்டி தான்..”என்று அசைக்க மாட்டா குரலில் சொன்னவன்,
சிவகாமியையும் உறவு முறைப்படி அழைத்து, “அத்த.. என் பொண்டாட்டி நிலா எங்க??”என்று கேட்க… அவனது ‘அத்த’ என்றழைப்பில் கரைந்து போனது அவரது உள்ளம்.
ஆயிரம் தான் இருந்தாலும்.. தமையன் மகன் அல்லவா?? பரிதியின் சாயல் வேறு.. முன்பிருந்தே.. தன் நெருங்கிய உறவினன் போல என்று தோன்றும் அவருக்கு.
ஆனால் இப்போது தானே அப்படித் தோன்றுவதன் உண்மைக் காரணமும் அவருக்குத் தெரியும்?
ஏனென்றால்.. நிஜமாகவே அவன் நெருங்கிய உறவினன் அல்லவா? அண்ணன் சாயல் அல்லவா??
கண்ணீரோடு ஆத்திரமும் முளைக்க, “யப்பாஆஆ… உன் அம்மா வள்ளியம்மைக்கு என் அப்பாரு.. பண்ணதூஊ… தப்பு தான்…அதுக்கு ஏன் நீ அப்பாவ தண்டிச்சிருந்தா அது ஞாயம்? எம் பொண்ணு உனக்கும் ,உன் அம்மாவுக்கும் என் பாவம் பண்ணாப்பாஆஆ??.. என் பொண்ணுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாதே..அப்போ அவ பொறந்திருக்கக் கூட இல்லயே?? .. எங்க எல்லாரையும் துச்சமா தூக்கியெறிஞ்சிட்டு.. உன் பின்னால.. நீ மட்டும் போதும்னு.. வந்தாளே.. அவளுக்கு துரோகம் பண்ண எப்படீஈஈ மனசூஊஊ.. வந்தது..??”என்று கேட்க, அவனிடம் எந்த பதிலும் இல்லை!!
‘பண்ணது தப்பு’ என்றாலும் அதை ஒத்துக் கொள்ள விடாமல் தடுத்தது அவனது வரட்டுக் கௌரவம்!!
அந்த முசுட்டுக் கிழவனின் வரட்டுக் கௌரவம்.. அவரின் இரத்தமான இந்த முரட்டுப் பேரனுக்கும் இருக்கத் தானே செய்யும்??
‘வேறு பேச்சு வேண்டாம்’ என்பது போல குரலில் அழுத்தம் காட்டி, “ந்நிலா எங்கஅஅ…?” என்று தான் மீண்டும் கேட்டான் அவன்.
தன் அண்ணன் மகனை நிமிர்ந்து பார்த்தவள், “எம் பொண்ணு இங்க அவ்வளவு கஷ்டப்பட்டாஆஆ.. அப்பல்லாம் நீ வரல..எல்லாம் முடிஞ்சு.. அவ ஊர விட்டு போனப்புறம் வந்து என்ன பிரயோஜனம்..?”என்று கேட்க, அவள் ஊரில் இல்லை என்பது தெரிந்து.. அதிர்ந்து போய் நின்றான் பரிதி.
அவனுக்கு இன்னும் அதிர்ச்சி தரும் வகையில் ஒரு உண்மையை சொல்ல நாடியவரோ,
“நீ ஆர்ரஅஅ.. ப்பழிவாங்கணும்னு நெனச்சியோ.. அந்த கல்லு மனிஷனை எதுவுமே பாதிக்காதூஊ.. .. நீ தப்பு கணக்கு போட்டுட்ட!! … நிலா அவரோட இரத்தமா இருந்திருந்தாஆஆல் தானே அவருக்கு வலிக்கூஊஊம்ம்?? அப்படி இல்லாதப்போ.. எப்படி வலிக்கூஊஊம்?”என்று கேட்க, வியப்பில் உச்சத்துக்கே சென்றவன்,
“எ.. என்ன சொல்றீங்க..?”என்று கேட்டான் அவன்.
உணர்ச்சிகள் கிளம்ப, “இன்னும் என்னத்த சொல்றதூஊ?.. நிலா எங்கயிருக்கான்னு என்னால சொல்ல முடியாது பரிதீஈஈஈ..ஏன்னா.. என் பொண்ணோட நிம்மதி எனக்கு முக்கியம்.. இனியாவது என் பொண்ண வாழ விடு.. இங்கேயிருந்து போயிடூஊஊ..” என்று இரு கரம் கூப்பிக் கெஞ்ச.. மனம் நொந்து போனான் அவன்.
ஏதும் பேசாமல்.. தோல்வியுடன் அங்கிருந்து கிளம்பியவனுக்கு, மூளையை வண்டாய்க்குடைந்தது, ‘நிலா “நிலா அவரோட இரத்தமா இருந்திருந்தாஆஆல் தானே அவருக்கு வலிக்கூஊஊம்ம்?? அப்படி இல்லாதப்போ.. எப்படி வலிக்கூஊஊம்”…
‘இதுக்கு என்ன அர்த்தம்?’ என்ற கேள்வி தான்.
அன்றிலிருந்து அவளது கேள்வியே அவனை ஆட்களை த் தொடங்க, மஞ்சுவின் தாய் மூலம் நிலவரம் அறிந்து கொண்டவனுக்கு, நிலா எங்கே என்ற உண்மை தான் அறியக் கிடைக்காமல் போனது!!
மஞ்சுவின் தாய் உரைத்தது நிலாவின் பிறப்பு சம்பந்தமான நிலவரம் அது.
நிலா சிவகாமியம்மாள் வயிற்றில் பிறக்காத குழந்தை என்னும் உண்மை அது!! நிலா அவரது பேத்தியில்லை என்ற நிஜம் அது!!
பேத்திக்கு நேர்ந்த கொடுமை.. அவரைப் பாதிக்காமல் போனது இதனால் தானா??
உண்மை அறிந்து காலங்கடந்து வருந்தினான் பரிதி. இருந்தும் என்ன பயன்?? ‘காலம் தான் கடந்து விட்டதுவே?”.
காதல் தானடி என் மீதுனக்கு?
(பதில் விரைவில் நவில்வாள்.)
காதல் தானடி என் மீதுனக்கு?
[24]
அன்று.. மென்னிலா.. லண்டன் சென்ற மறுநாள்!!
அவளோடு அவன் கழித்த.. குறுந்தீவின் கணப்பொழுதுகள் மீண்டும் வராதா? என ஏங்கித் தவித்தது அவன் மனம்!!
அன்றொரு நாள் குறுந்தீவில்… எங்கே அமர்ந்திருந்து, தன் ஆண்டாளுடன்.. பின்னப்பட்ட பனையோலை கிடுகில் பரிமாறப்பட்ட ‘மட்டி’ சாப்பிட்டானோ??
அங்கே தான் அமர்ந்திருந்தான் பரிதிவேல் வீரன்!!
அதுவும் ஓர் அடர்ந்த இருளில்… நிலவு மட்டும் தன் வெண்மை முகம் காட்டிக் கொண்டிருந்த தனிமையில்!!
அந்தக் குறுந்தீவு பக்கம் எங்கு திரும்பினும்.. அவள் ஞாபகமே முகிழ்த்தது தலைவனுக்குள்!!
கரையை அடித்து அடித்துத் தழுவிக் கொண்டிருந்த கடல் அலை நுரைகளில் கூட அவள் முகமே!!
எப்போதும் தீர்க்கமான ஒளிசிந்தும் அவன் கண்கள்.. இன்று இரத்த சிவப்ப நிறம் கொண்டதாக ஆகியிருக்க.. தாடி முழுவதையும் நிறைத்து வளர்ந்திருந்தது அடர்ந்த தாடை மயிர்கள்!!
கையில் ஒரு விஸ்கி பாட்டில் அடைக்கலமாகியிருக்க.. அந்த வானத்து மென்னிலாவையே ஏக்கத்துடன் பார்த்திருந்தான் அவன் சிறுகுழந்தைகள் போல!!
அவனை ஒரு பூனைக்குட்டி போல சுற்றி சுற்றி வந்த போது.. உண்டான காதலை.. பழிவெறிக்காக உபயோகித்துக் கொண்டவன்,
இன்று அவளை தொலைத்து விட்டதன் பின்னர்.. அவளது அன்புக்காக ஏங்கித் தவிக்கிறான்!!
இருந்தும் என்ன பயன்?
‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்பது பலனற்றது அல்லவா?
அவளின் தாலி பறித்து.. தெருவில் நிர்க்கதியாக தள்ளிவிட்ட பின்பும் கூட, காரில் சென்ற அவனை நோக்கி,
“மாமாஆஆஆ.. மாமாஆஆ.. என்னை விட்டுப் போகாதீங்க மாமாஆஆஆ.. ந்.. நாஆ..ன்.. உங்.. க்.. அ… ஆண்டாளூஊஊ மாமாஆஆ”என்று கத்திக் கொண்டே ஓடி வந்த.. அவளின் காதல் சிந்தும் முகம்.. நினைவுகளில் வந்து.. அவனைக் கொல்லவாரம்பித்தது.
அவள் ஓடி வருவதை சைட் மிரரில் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில்.. அப்போது நீர்த்தேங்கி நின்றது என்று சொன்னால் யாரும் நம்புவது கடினம்?
என்ன அந்நேரம் பரிதி அழுதானா? இதயம் துடித்துத் தவிக்க.. கண்களில் கண்ணீர் கட்டி நின்றதா??
எங்கே அவள் முகத்தை ஒரு தரம் பார்த்தால்.. காரை விட்டும் இறங்கி.. அவளிடம் ஓடோடி வந்து.. ‘என்னய மன்னிச்சிரு ஆண்டாளு’ என்ற வண்ணம்.. கட்டியணைத்து விடுவோமோ? என்ற பயத்தில் தானே..
வண்டியை அன்று.. அவள் பின்னாடியே ஓடி வருவது தெரிந்தும்.. கண்மண் தெரியாத வேகத்தில் வண்டியை விட்டான்!! ஆம் அன்று போலவே .. இன்றும் நீர் கட்டி நின்றது.
அந்த வலி… அவள் மீது காதலிருந்தும்.. அவள் தாத்தாவுக்கு வலிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக.. அவன் கொடுத்த ஏமாற்றத்தின் வலி…
துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தை.. பிளந்து வெளியே எடுத்து.. அதை நார் நாராக கிழிப்பது போல வலியெடுக்க,
அவன் கையில் அடைக்கலமாகியிருந்த விஸ்கி பாட்டிலை சரசரவென வாயில் சரித்துக் கொண்டான் பரிதி!!
எதையும் கலக்காமல்.. வெறும் வயிற்றுடன் விஸ்கியை அருந்தியதாலோ என்னவோ.. வயிறு காந்தியது அவனுக்கு!!
ஆனால் வயிற்றை விடவும்.. இதயம் காந்திய வலி.. அவனை பாடாய்ப்படுத்த, தன்னை விட்டும் சென்ற நிலாவின் ஞாபகத்தில்… வெண்ணிலாவை வெறித்துப் பார்த்தான் அவன்!!
அந்நேரம், அவனது தோள்புஜத்தில் பதிந்தது ஓர் கரம்!! அது, அவன் நன்கு பரிச்சயப்பட்ட அவன் வாசு மாமாவின் கரம்!!
பரிதிவேல் வீரன்.. திரும்பிப் பார்த்தானில்லை; இருப்பினும்.. நிலவை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே, தவிப்பு மீதூறும் குரலில்,
“ஏன் மாமாஆஹ்… என் நிலா.. எங்கன இருந்தாலும்.. நல்லா தானே இருப்பாஹ்?”என்று கேட்டவனின் விழிகளில் இருந்து மௌனமாக வழிந்தது ஒரு துளி கண்ணீர்.
வாசு மாமா.. என்ன தான் நடப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்ப்பவராக இருந்தாலும் கூட… மென்னிலாவை தன் மருமகன், ‘ஆண்டாளாக’ உருவகித்துக் கொண்டதையும்,
அவளை உயிருக்குயிராக நேசித்ததையும்,
காதலா? வலியா? என்று வந்த போது.. மனதை இரும்பாக்கிக் கொண்டு.. வலியை அவன் தேர்ந்ததெடுத்ததையும் அறிந்தவராயிற்றே!!
அதனால் மருமகனின் கேள்வியும், பிற வேலைகளை கவனிக்காது..
குறுந்தீவே கதியென்று கிடந்து, வாயில் வண்டி வண்டியாக சரக்கு ஊற்றிக் கொள்ளும் நிலையும்.. அவரை.. இரங்கலுக்கு உட்படுத்த,
தன் மருமகனின் புறமுதுகைப் பார்த்துக் கொண்டே, “அவ ஒண்ணும் சின்னக்குழந்த கெடயாது மாப்ள… எங்க இருந்தாலும்.. அவள பத்திரமா பார்த்துக்க அவளுக்கு தெரியும்.. அவ நல்லா தான் இருப்பா”என்று கூறிய வாசு மாமா, தன் மருமகப் பிள்ளையை அப்படியாவது தேற்ற நாடினார்.
இத்தனை நேரம் தனிமையில் இருந்தவனுக்கு, ஆதரவுக் கரம் போல மாமாவின் சகவாசம் கிடைத்ததும், உள்ளுக்குள் உள்ளதை எல்லாம் உளறிக் கொட்டி.. ஒரு தற்காலிக ஆதரவையேனும் தேடிக் கொள்ள நாடியது அவன் மனம்!!
மீண்டும் ஒருமுறை.. விஸ்கி ஒரு கல்ப் அடித்தவன்.. தொண்டைக் காந்த காந்த, வருத்தம் சொக்கும் குரலில்,
“இந்த உலகத்துலேயே.. அவள்.. என்ன தான்.. மாமாஹ்.. அதிகமா நேசிச்சா.. நம்பினா.. அவளுக்குப் போய்.. எப்படி துரோகம் பண்ண மனசு வந்ததூஊஊ?” என்றவன் ஆற்றாமை தாங்காமல்.. மீண்டும் ஒரு கல்ப் அடித்த வண்ணம்,
குழறும் குரலில், “எ.. என்.. என் ஆ.. ஆ.. ஆண்டாளு மாமா அவ.. என்னய பார்த்தவ்.. உடனே லவ் பண்ண.. எ.. என்.. ஆண்டாளு.. மாமா அவ.. இப்ப அவ எங்கேயிருக்கான்னு தெரியலீய்யே?”என்றவனின் முகமெல்லாம்..
நோயுற்றவன் முகம் போல வாடிப் போயிருந்தது.
பரிதி.. தன் மனைவிக்கு செய்ததை எவ்வகையிலும் ஞாயப்படுத்த விரும்பவில்லை அவனுடைய மாமா.
இருப்பினும்.. கிடக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளையும் போட்டுவிட்டு…
அவனது உயிரினும் இனிய ஆண்டாளை எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்பது தான் அவருக்கு பிடிக்காமல் போனது!!
அதனால் அவனுக்கு நல்புத்தி உரைக்க நாடி, “மாப்ள.. அதயே நெனச்சிட்டிருந்தா எப்படீஈஈ?”என்று கேட்க, அவரை மேற்கொண்டு பேசவிடாமல் இடையிட்டுக் கேட்டது அவன் குரல்!!
அன்றைய சம்பவம்.. இன்றும் மனக்கண் முன் விரிவது போல இருந்தது அவனுக்கு!!
அமைதியாக இரையும் கடலில் கூட.. அவள் முகம் வந்து போக,
உணர்ச்சிகள் மீதூற… மாமாவை பார்த்தவண்ணம், “ந்நாஆ.. ந்நாஆ… ஒரு.. வ்வெறியன் மாம்மாஆஆ.. ஒரு ம்முரடன்.. க்கெட்டவன்!! … அவ்வ தாஆஆத்தாஆஆவுக்கு வ்வலிக்க வைக்கணும்ன்றதுக்காஆஆக.. அவளை நடுத்தெருவில் தள்ளி… நாஆன்.. கட்.. டின தா… தாலிய்ய.. என் க்கையால பிடுங்கி மானபங்கப்படுத்தீய்.. யூஊஊம்… என் ப்பின்னாலேஏஏய்யே வ்வந்தாஆஆ மாமாஆஆ அவ்வ்வ… ‘மாஆமாஆ.. என்னை விட்டுப் போகாதீங்க மாமா.. ந்நாஆன் உங்க ஆண்டாளு மாமா’ன்னுக்கிட்டு பின்னாலேயேஏஏ.. வந்தாஆஆ ஆமாமா அவ்வ்வ…. அப்பேர்ப்பட்ட எ.. என் ஆண்டாளுக்கு துரோகம் பண்ணுட்டேனே நான்.. இனி நாஆன் எப்படி அவ முகத்துல முழிப்.. பேன்…??.. எ.. எப்படி முழிப்பேன்? அஅ.. தான் அவ.. எங்கூட இல்லீய்யே.. அப்புறம் எப்படி முழிப்பேன்??” என்றவன்.. உடைந்த மனோநிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு முரட்டுக்குழந்தை.
ஆயினும் அவன் மனதில் ஆற்றாமை கிளர்ந்தெழ, மாமா முன்னிலையில் அழுவது பிடிக்காமல் போனது போலும்!!
கையில் இருந்த விஸ்கி பாட்டிலை.. சரசரவென்று வாயில் முற்றிலுமாக சரித்துக் காலியாக்கியவன், தன் இருப்பிடத்தை விட்டும் எழுந்தான்.
தான் செய்த செயலில்.. தன் மீதே ஒரு வெறுப்பு தோன்ற.. தூரக்கடலை நோக்கி…பாட்டிலைத் தூக்கியெறிந்தவன், இடுப்பில் இரு கை வைத்தவனாக..
வாசு மாமாவுக்கு புறமுதுகிட்டு நின்று, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்!!
மருமகன் மனம் வருத்தப்படுவதைத் தாங்க மாட்டாது, “அவ நெனப்ப விட்டுத் தள்ளிப் போடு மாப்”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. சட்டென்று திரும்பியவன்.. தன் மேல் தனக்கு உண்டான வெறுப்பை.. தன் மாமனிடம் காட்ட எண்ணம் கொண்டவன்,
மாமன் முகத்தில் பாய்ந்தான் பரிதி!!
“எப்படீஈஈஈ மாமா.. அவஅவ நெனப்ப விட்டுத் தள்ளிப் போட முடியும்?? நீங்களும் அவ கூட நான் பழகினது.. சிரிச்சுப் பேசுனது எல்லாஆஆஆமே ந்நடிப்பூஊஊன்னு நெனச்சுட்டிருக்கீஈஈங்களாஆஆ?? .. இல்ல.. இல்லஅஅஅ!! நான் அவ கிட்ட.. ஒரு ந்நொ.. ந்நொ.. நொடி கூட நடிக்கல… நான் நடிச்சதெல்லாம்.. ஒரு.. ஒர்ரேஏஏ.. ஒரு நாள் தான்.. அஅதுவும்.. அவள நான் காதலிக்கலன்னு… அக்காஆஆ அவக்கிட்ட சொன்னஅஅ.. அந்த… நாஆஆள் தாஆஆன்ன்!!!” என்று தன் மனம் மட்டும் அறியும் உன்னத இரகசியத்தை அவன் சொல்ல, வாசு மாமா அதைக் கேட்டு அதிர்ந்து நின்றார் என்று நீங்கள் கணித்திருப்பின் அது தவறே!!
கூடவே இருந்து.. தன் மருமகனின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்தவராயிற்றே அவர்?
அவருக்குத் தெரியாதா அது காதலா? நடிப்பா என்று?
அதைத்தான்.. அவளை ஊர்க்கோயில் தெருமுன்பாக விட்டு வந்த பின்னரும் கூட, பால்கனியில் அலைக்கழிப்புடன் நின்றிருந்தவனின் முகம் உணர்த்தும் தவிப்பு கண்டு,
‘நீ ராஜமாணிக்கத்தோட பேத்திய காதலிக்குறேல்ல?’ என்று துல்லியமாகக் கேட்கவும் செய்தார் அவர்??
அவன் மன ஆறுதல் அடைய வேண்டும் என்பதற்காக, “எனக்கு எல்லாமும் தெரியும்ப்பாஆ” என்று வாசு சொல்ல, அதற்கும் சினந்து விழுந்தான் பரிதிவேல் வீரன்!!
மாமாவை கோபாவேச விழிகளுடன் பார்த்தவன், “என்னாஆத்… தெரிய்யூஊஊம்?? அப்படி எல்லாஆஆமும் தெரியும்னாஆஆஆ.. ஏன் மாமா.. என் ஆண்டாளு.. அந்தாளோட பேத்தியில்லைன்னு தெரியாஆம போச்சூஊஊ? மென்னிலாவுக்கு வலிச்சாஆஆ.. ராஜமாணிக்கத்துக்கு வலிக்காஆஆதுன்னு ஏன் த்தெ.. ர்ரியய்ஆஆஆமப் போச்சூஊஊஊ??”என்று கேட்க,
வாசுவுக்கு மருமகனின் ஆற்றாமை வலித்தது.
சட்டென குரல் மீண்டும் இளக, “ரார்..ராஜமாணிக்கத்துக்கூஊ.. வலிக்கூஊஊம்.. நான் பட்ட அதே வேதனையே அவனும் அனுபவிப்பாஆன்னு தாஆனேஏஏ.. இதெல்லாஆஆம்.. பண்ணேன்.. ஆனா.. நாஆஆன் பண்ணது எல்லாம் பாஆவக்க கணக்குஊஊஊ.!!.. என் அம்மாவ மானபங்கப்படுத்தின அந்த ராஜமாணிக்கத்துக்கும்… எனக்கும் என்ன வித்தியாசம்??…. இனி நான் நிலா முகத்துல எப்படி முழிப்பேன்.. ??”என்று கேட்க, அவனை ஆசுவாசப்படுத்துவதுக்காக, அவன் தோளில் ஆதரவாக கை வைக்கவும், அடுத்த நொடி ரொம்பவும் உடைந்து போனான் அவன்.
காற்றில் அகல கை நீட்டி.. உப்புக்காற்றை.. ஆழ உள் முகர்ந்தவன், “இந்த குறுந்தீஈஈஈஈவ்வு.. ம்முழுக்க அவள் வ்வாசம் மாமா.. என்னய்ய் நம்பி வந்த அவ மனச.. நம்பிக்கய உடைச்சிட்டேனேஏஏஏ மாமா?”என்றான் அவன்.
வாசு மாமா.. அன்று.. அவன் உடைந்திருந்த மனநிலையில்.. மீண்டும் அவன் மனதை திசைதிருப்பவே முயன்றார்.
அன்றொரு நாள்.. பதினோரு வயதுப் பரிதியின் மனதில், “ஆண்டாள்” கதை சொல்லி.. அன்புக்கு ஏங்கும் அவன் மனதுக்கு நம்பிக்கை கொடுத்தாரோ.. அதே போல இன்றும்..
நம்பிக்கை மிளிரும் குரலில், “மாப்ள.. அவ உன் ஆண்டாளு.. ஆண்டாளு தன் கண்ணனை வெறுத்ததா சரித்திரமே இல்ல.. அவ உன்னய.. உண்மையா காதலிச்சிருந்தாஆஆ.. அவ உன்னய புரிஞ்சுக்கிட்டு உன்னய தேடி வருவாஆ… என் வார்த்தய நம்பூஊஊ.. உன் ஆண்டாள காலம் உன்கிட்ட கொணர்ந்து சேர்க்கும்!!”என்று சொல்ல, அப்போதும் நிராதரவாக நின்ற பரிதி,
தவிப்புடன், “என் ஆண்டாளு.. என் கிட்ட வந்துருவாளா மாமா? அவ எங்கேன்னே தெரியலீய்யே?..” என்று கேட்டான்.
வாசு மாமாவோ.. அவனுடைய இரு தோள்களையும் பற்றியவராக, “உன்னய உண்மையா நேசிக்குற ஆண்டாளு.. உன்னத் தேடி வருவா மாப்ள.. அப்படி அவ உன்னய தேடி வரும் போது.. நீ அவன் முன்னாஆடி.. அவள ஏமாத்துன குத்தவாளியா.. இப்படியே இருக்கப் போறீய்யாஆ.. இல்ல.. நீ பண்ண துரோகத்துக்கு மனம் வருந்தி.. திருந்தின ஒரு நல்ல மனுஷனாஆ இருக்கப் போறீயாஆஆ??.. அதை முடிவு பண்ணு”என்றார் உறுதியாக.
அவரது சொற்களில் குழம்பிப் போயிருந்தவனோ, “எப்படி மாமா?” என்று கேட்க,
“அது எப்படீன்றது உன் கையில தான் இருக்கு.. நீ சுதந்திரமானவன் பரிதீஈ.. உன் சுதந்திரத்துக்கு ஆர்ரும் தட போட முடியாது .. இது வரை அக்கா பேச்ச கேட்ட..இனி..உன் பேச்ச கேளு.. உன் மனசு சொல்றத மட்டும் கேளூஊஊ… அவ வரும் போது.. நீ மனம் திருந்தினவன்னு நிரூபிச்சு காட்ட வேண்டியது உன் பொறுப்பூஊஊ.. இப்ப நீஈஈஈ முடிவு பண்ணூஊ… இங்கனயே குடிச்சிட்டு கெடக்கப் போறீய்யாஆஆ?? .. இல்ல புது பரிதியாஆ.. உன் மாமாகூட வரப்போறீய்யாஆஆ?? ”என்று கேட்க,
பரிதியின் உள்ளத்தில் புதுத் தெளிவு பிறந்தது.
அன்று, “எனக்குன்னு ஒரு ஆண்டாளு வருவாளா மாமா?” என்று தவிப்புடன் கேட்டான் சிறுவயது பரிதி. அது நிஜமாகவில்லை??
அதே போல இன்றும்.. “அவள் திரும்பி வரும் போது.. நீ நல்லவன் என்று நிரூபித்துக் காட்ட.. இப்போதே தயார் செய்து கொள்” என்கிறார் வாசு மாமா.
அவள் எப்போது திரும்பி வருவாள் என்று தெரியவில்லை!! ஆயினும், ‘வாசு மாமா வார்த்தை நிச்சயம் பலிக்கும்’ என்று ஆணித்தரமாக நம்ப ஆயத்தமானவனுக்கு..
அவள் ஒருநாள் நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கை பிறந்தது.
அது இரண்டு வருடக் காத்திருப்புக்குப் பின் உண்மையாகவும் செய்தது.
ஆனால் அவன் திருந்தி விட்டான் என்பதை அவள் ஏற்றுக் கொண்டாளா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும், இவனை அவள் ஏற்பாளா??
சந்தேகமே!!
அவள் பக்க ஞாயப்படி.. அவளது ரணங்களும் பெரிதல்லவா??
ஒரு முறை தீச்சுடும் என்று தெரிந்த குழந்தை.. நீர்த்துப் போன கங்கு தானே என்று.. தைரியமாக கையை வைக்கவும் கூடுமா?
அது அறியாமல்.. என்று சுறா மீனிடம் இருந்து.. தன் உயிரை பணயம் வைத்து அவளைக் காப்பாற்றினாளோ..அன்று அவள் காட்டும் காதலில் இருந்து..
வாசு மாமா.. வார்த்தை பலித்ததாக.. தன் உத்தமத் தனத்தை நிரூபித்துக் காட்டியதில்.. அவள் தன் காதலை ஏற்றுக் கொண்டதாக நினைத்திருந்தான் அப்பாவிப் பரிதி!!
******
இன்று…. எட்டுமாதக் கருவினை சுமந்து கொண்டிருந்தாள் பரிதிவேல் வீரனின் மனைவி!!
கண்ணை மூடிக் கண்ணைத் திறப்பதற்குள்… சிசுவின் வளர்ச்சிப் பெரிதாகி.. எட்டாவது மாதத்துக்குள் வந்து நிற்கும் மென்னிலா… தனக்குள் ஒரே ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாக முடிவெடுத்துக் கொண்டாள்!!
அது என்னவெனில், அவளுடைய சபதம் எல்லாம், தன் காதலுக்கு துரோகம் செய்த பரிதியைப் பழிவாங்குவதாகவே இருக்க, அதை சாக்காக வைத்து..
இந்தப் பழி வாங்கும் சதுரங்க ஆட்டத்தில்.. தன் குழந்தையை பகடைக்காயாக வைத்து.. காய் நகர்த்துவது இல்லை என்ற உறுதியே அது!!
ராஜமாணிக்கம்.. தன் தாய்க்கு செய்த தவறுக்காக.. ஒன்றுமறியா அப்பாவியான மென்னிலாவை அவன் வலிக்கச் செய்தது போல..
பரிதிவேல் தனக்கு செய்த பெரும் பிழைக்காக.. ஒன்றுமறியா அப்பாவியான குழந்தையை அவள் வலிக்கச் செய்ய நாடவே இல்லை!!
அவளது குரோதமும், விரோதமும் இருப்பது அவனோடே தவிர, அவன் தந்த குழந்தையோடு அல்ல!!
அந்த வகையில்.. குழந்தையை.. இந்த ஆட்டத்தின் இடையில் புகுத்துவது இல்லை என்று தெள்ளத் தெளிவாக எண்ணமிட்டிருந்தாள் அவள்.
தலைவனைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக.. அவள் இழைந்து பழகியதில்.. வேண்டாமல் வந்த குழந்தையே ஆயினும் கூட, பரிதி செய்த அதே தவறை செய்ய நாடவில்லை அவள்!!
இந்த சதுரங்க ஆட்டத்தில் அவனும், அவளும் மட்டும் என முடிவு செய்து கொண்டவள்.. குழந்தையின் வளர்ச்சிக்கு தடையாக எதையும் செய்யவில்லை!!
அதேநேரம் குழந்தையின் எதிர்காலம் என்னாகும்? என்று சிந்தித்து.. பழிவாங்கும் வெறியை ஆறப்போடவுமில்லை!!
அந்த வன்மம்.. என்றென்றும் நீர்த்துப் போகாமல்.. அவள் இதயத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே தானிருக்கும்!!
அதற்கு கீழ்வரும் சம்பவமே சான்று!!
எப்போதும் கணவனை.. எங்கு அடித்தால் எங்கு வலிக்கும்? என்று.. ஸ்பை வைத்துப் பார்க்காத குறையாக.. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தேடிக் கொண்டிருப்பவள்,
எப்போதும் அவனுடைய பழைய வாட்ரோப்பை, புத்தக இராக்கையை.. அவனது ஸ்டோர் ரூமில் இருக்கும் பழைய டிராயர் என எல்லாவற்றையும் அவள் சோதித்துப் பார்ப்பதுண்டு!!
வேலை விட்டு வீட்டுக்கு வரும் பரிதி… பழைய வாட்ரோப், புத்தக இராக்கை, பழைய டிராயர் என பொருட்கள் இருக்கும் பக்கம் செல்ல நேர்ந்தால்..
அதில் இருக்கும் அணுவளவு மாற்றத்தை தனியாக உய்த்து உணர்பவனுக்கு, இந்த அலசல் மனைவியின் வேலை தான் என்று அப்பட்டமாக புரிந்தும் விடும்!!
பின்னே அவன் வீட்டில்.. அவன் பொருட்களில்.. அவளைத் தவிர.. வேறு யாருக்கு தொட தைரியம் உண்டு??
ஆயினும், தன் சரிபாதிக்கு இல்லாத உரிமையா? என்று தோன்ற.. இதுநாள் வரை.. அதைப்பற்றி ஒரு கேள்வி கூட கேட்காமல்.. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வதும் கூட அவள் அறியாள்!!
இம்முறையும் அதே போலத்தான் ஏதேனும் சின்னத் துரும்பாவது கிடைக்காதா? என்ற நப்பாசையுடன், அவனுடைய வாட்ராப் லாக்கரை.. அவள் கிண்டிக் கொண்டிருக்கும் போது..
பழைய வன்மத்தை இன்னும் கொஞ்சம் பற்றியெரியச் செய்யும் வண்ணம்.. அவள் கைகளில் அகப்பட்டது.. தங்கக் கொலுசு!!
அன்றொரு நாள் குறுந்தீவில்.. அவள் பாதங்களுக்கு அவன் அணிவித்து விட்ட அதே கொலுசு!!
‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று நடுநிசியில்.. அழகிய தமிழில் வாழ்த்து கூறியவன்.. காதலோடு தந்த அந்தக் கொலுசு!!
நடுத்தெருவில் வைத்து.. மானபங்கப்படுத்தி..தாலி பறிக்கப்பட்ட போது, அவளோடு பறிபோனது தாலி மட்டும் அல்ல!! அந்தத் தங்கக் கொலுசும் தான்!!
அந்தக் கொலுசு எங்கு சென்று தொலைந்தது? என்று அவள் அங்கணம் சிந்தித்துப் பார்க்க முடியாதளவுக்கு,
பரிதி தந்த ரணங்கள்.. கனமாக.. மனதில் பதிந்திருக்க….அதைப் பற்றி தேடிப் பார்க்கும் எண்ணம் கூட அவளுக்கு இல்லை!!
ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொலைத்த கொலுசு.. இதெப்படி இங்கே? அதுவும் அவளது தலைவனிடத்தில்?? என்ற கேள்விகள் அவளுள் முகிழ்க்காமலும் இல்லை!!
அந்த கொலுசை எடுத்து.. தன் முகத்துக்கு நேராக வைத்துப் பார்த்தவளுக்கோ, மனதுக்குள் பழைய நினைவுகள் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது.
கொலுசுகளை.. தன் பாதத்தில் மலர் மாலை அணிவிப்பது போல மென்மையாக அணிவித்தவன்,
காதல் இழையோடும் ஹஸ்கி குரலில், “நம்ம வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி.. உன் கூட இருந்த இந்த பரிதிய மட்டும் நீ மறக்கவே கூடாது.. இது உன்னோட பரிதி.. உனக்கு மட்டுமே.. சொந்தமான பரிதி”என்றவனின் காதல் மொழிகள் நெஞ்சோடு ஞாபகம் வர… அந்த நாளின் நினைவுகளில் வெந்து தணிந்தது உள்ளம்!!
‘ஏன் மறக்கக் கூடாது?’ என்று அப்போது புரியவில்லையாயினும்.. இப்போது புரிந்தது.
இன்று இந்நொடி… அவன் தந்த, ‘காதல் வலியைத் தான் மறக்கக் கூடாது என்றிருக்கிறான்’ என்று புரிந்து கொண்டவளின் விழிகள் ரௌத்திரத்தில் அகல விரிந்தன.
உதடுகளோ, ‘நிச்ச்ச.. யமாஆஆ உன்னை மறக்க மாட்டேன் பரிதீஈஈ… என்னோட உயிருள்ள வரைக்கும் உன்னை ம்மறக்க ம்மாட்டேன்’ என்று கறுவிக் கொள்ள,
தன் பாதங்களைப் பார்க்கும் போதெல்லாம்..அவன் தனக்கு செய்த பிழை ஞாபகம் வர வேண்டும் என்பதற்காக.. அதனையெடுத்து தன் பாதங்களில் மாட்டிக் கொண்டாள் அவள்.
அந்தக் கொலுசு மணிகளின் சத்தம் “சலக்சலக்” என்று கேட்ட போதெல்லாம்.. அது இசைராகம் மீட்டியதோ இல்லையோ? அவளுள் வன்மராகம் மட்டும் நன்றாகவே மீட்டியது!!
அன்றிரவு…
ஏதும் பிரதான உணவுகள் எதுவும் வேண்டாம் என்று அனைத்தையும் புறந்தள்ளி விட்டு.. ஒரு கப் பாலை மட்டும் அருந்தி.. தன் இரவுணவை நிவர்த்தி செய்து கொண்டவள்…
அருந்திய பால் செரிமானம் அடைவதற்காக வேண்டியோ,
இல்லை.. அவள் அங்குமிங்கும் நடக்கும் போது வன்மராகம் மீட்டும் கொலுசோசை கேட்கும் போது.. பழைய நினைவுகள் எழுந்து… அவளை தூங்க விடாமல் செய்ததுவோ என்னவோ??
தூக்கம் இன்றி.. அவன் வீட்டுத் தோட்டத்தில்.. காலாற நடைபயின்று கொண்டிருந்தது கருசுமந்து நிற்கும் அழகான ஓர் நிலவு!!
ஏற்கனவே கருவின் பாரத்தில்.. கால்கள் வீங்கிப் போயிருந்தாலும் கூட.. அதை எல்லாம் சட்டை செய்யாதவள்.. கொஞ்சம் வேகநடையாகவே அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தாள் அவள்.
தன் அலுவலக அலுவல்களையும் எல்லாம் முடித்து விட்டு.. தன் ஆண்டாளை நாடி அறைக்கு விரைந்த நவீனக் கண்ணனோ.. அங்கு அவள் இல்லாதது கண்டு சோர்ந்து தான் போனான்!!
‘அவளெங்கே?’ என்று பால்கனியில் நின்று தேடியவனுக்கு, மனைவி… தோட்டத்தில் அங்குமிங்கும் வேகநடை பயில்வது கண்ட பின்னர் தான் சோர்வு நீங்கி, புதுத் தென்பு பிறந்தது போலிருந்தது!!
அதிலும் மனைவி.. இரவு நேர ஊதல்க்காற்றில் நடைபயில்வது, அவனுக்கு சின்ன வலியையும் கொடுக்க.. விறுவிறுவென மாடிப்படி விட்டும் இறங்கி.. தன் நேசத்துக்கு உகந்த மனையாளைத் தேடித் தான் போனான் பரிதி!!
மென்னிலா மேல் பித்தாகித் திரியும் பரிதிக்கு, அவளைக் காண்பது கூட ஒரு சுகம் என்றால்..
அவளோடு அவள் பக்கத்தில் இருப்பது.. குழந்தை சுமக்கும் அவளது தாய்மை முகத்தை.. இமைக்காது பார்த்து இரசிப்பது அலாதி ஆனந்தம்!!
அந்த அலாதி ஆனந்தத்தைப் பெற நாடி.. மனைவியை நோக்கி அரவமே எழுப்பாது வந்தவனின் செவிகளை நிறைத்தது, மிகுந்த நாட்களின் பின் அவன் கேட்டு மகிழும்… அவளது கொலுசோசை!!
அவன் தந்த அதே கொலுசின் நாதம்!!
உள்ளூற வியப்போடு, ஒரு மகிழ்ச்சிப் பிரவாகமும் ஊற்றெடுக்க, அவளது புறமுதுகுக்கு வெகு வெகு சமீபமாக நின்று கொண்டவன்,
தனக்கே உரித்தான கணீர் குரலில் “இந்த கொலுசு.. எப்படி உன்கிட்ட வந்தது ஆண்டாளூஊ..?” என்று கேட்க,
தனக்கு வெகு அருகாமையில் கேட்ட கணவனின் திடும்மென்ற குரலில் கொஞ்சம் திடுக்கிட்டுத் தான் திரும்பினாள் அவள்.
அவள் திரும்பிய திரும்பலில்.. உள்ளிருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தவன், அவள் இடையூடு கையிட்டு, அவளது மேனியைத் தழுவிப் பிடித்தவனாக,
அச்சம் இழையோடும் பதற்றமான குரலில், “ஹேய் பார்த்துடீஈஈ.. உள்ளாற இருக்குறது ‘நம்ம’ குழந்த!! சூதானமா இருக்க வேணாம்??? ” என்றவண்ணம் அவன் காட்டிய..
அவனது கரிசனையில்.. அவளது உள்ளம் சற்றே தடுமாறத் தான் செய்தது.
அதிலும் அவன் உரைத்த ‘நம்ம’ குழந்தை என்னும் வாசகம்.. ஓராயிரம் கோடி அன்பை பறைசாற்ற வேறு செய்யவே.. நிலைகுலைந்தது உள்ளம்.
தன் வயிற்றில் ஆதரவாகப் பதிந்திருக்கும் அவன் கையில், அவனது விழிகளையே.. வியந்து பார்த்தவளுக்கு, அடுத்த நிமிடம் அவள் செய்யும் விபரீதம் உறைத்தது.
அவனுக்காக.. இந்த பாழாய்ப்போன மனம் இளகுவதும் புரிந்தது.
இருந்தாலும் அவன் காட்டும் அன்பை தீவிரமாக வெறுத்து ஒதுக்கியவள்,
கறாரான குரலில், “அது நான் கேட்க வேண்டிய கேள்வி?? இந்தக் கொலுசு எப்படி உங்க வாட்ரோப்ல??”என்று கேட்க,
அந்தக் கொலுசு அவனை வந்தடைந்த நாளின் நினைவுகளில்.. அவனுடைய முகமோ.. இறுகிக் கறுத்து வாடிப் போனது!!
மனைவியைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு, தோட்டத்தில் இருக்கும் பெஞ்சை நாடிப் போனவன், அவளை அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான்!!
பின்பு.. அவளுடைய மிருதுவான உள்ளங்கையை தனக்குள் அடக்கிக் கொண்ட முரடன், பேசும் போது அந்த நாள் நினைவுகளின் தாக்கத்தில் கண்கள் இலேசாக கலங்கியிருந்தது.
அப்படி அவன் கண் கலங்கியவனாக சொன்ன விஷயத்தில் வியந்து தான் போனாள் மென்னிலா.
மென்னிலா வியக்கும் படி அப்படி அவன் என்ன தான் சொன்னான்?
இதோ அவன் சொன்னது எல்லாம் இவை தாம்!!
“அது.. அன்னைக்கு.. என்ன தான் கொடூரமா நடந்துக்கிட்டாலும்.. என்.. என்னால முடியல ஆண்டாளு.. உன்னய அநாதரவா விட்டுட்டுப் போக சத்.. சத்தியமாஆஆ முடியல!! .. அதனால உன் நிலவரம் பார்க்க..திரும்ப நான் ஊர்க்கோயில் தெருவுக்கு வந்தேன் ஆண்டாளு… அப்போ நீ இல்ல.. ஆனா அந்த இடத்துல உன் கொலுசு மட்டும் இருந்தது… உன் ஞாபகமா இருக்கட்டுமேன்னு எடுத்து வந்துட்டேன்.” என்று சொல்ல.. அவனது குரல்.. எப்போதும் அதிகாரத் தனமாக ஒலிக்கும் அவனது குரல்,
தன்னிடம் பணிந்து போவதைக் கேட்கும் போதே… மனதுக்குள் இதயவலைகள் அதிர்ந்தன அவளுக்கு.
அதிலும் அவன்.. தன் நிலையைக் காண.. அங்கு வந்திருக்கிறான் என்று சொல்வதைக் கேட்டு அதிர்ந்தாலும், அவளுக்கோ, அவன் அங்கே வந்திருந்தது எல்லாம்,
அவள் படும் வேதனையைக் கண்டு இரசிப்பதற்காகவே என்றே தோன்றியது!!
இருப்பினும் தன் மண்டைக்குள் ஓடிய எடக்குமடக்கான கேள்வியைக் கேட்க நாடியவள், “ஒருவ்வேள.. நான் அங்கேயே இருந்திருந்தால் என்ன பண்ணியிருப்பீங்க மாமா?”என்று கேட்க, அவன் முகத்தில் பரவியது வலியோடிணைந்த புன்னகை!!
“உன்னைய விட்டுப் பிரியுற வர.. இந்த முரடனுக்கு… காதல் இருந்தாலும்.. வரட்டுப் பிடிவாதம் ஜாஸ்தி ஆண்டாளு.. நிச்சயமா.. நாஆஆன் வந்து.. வ்வா வீட்டுக்குப் போகலாஆஆம்னு சொல்லியிருக்க மாட்டேஏஏன்.. ஆனாஆ.. உனக்கு உதவி பண்ணது நான் தான்னு தெரியாம.. வாசு மாமாவ அனுப்பி.. உன்னைய பத்திரமான இடத்துக்கு கூட்டிப்போக சொல்லியிருப்பேன்!! அதுக்காக தான் அங்கே வந்தேன்.. நீ தான் இருக்கல”என்ற அவன் பதிலில் விதிர் விதிர்த்துப் போனாள் அவனது அழகான ஆண்டாள்!!!
இவன் சொல்வது நிஜந்தானா?
நிஜத்துக்கும் அப்படி செய்திருப்பானா? என்ற கேள்வியில் அவள் விழிமலர்த்தி நிற்க, அவள் தான் தேடி வந்த காரணம் அறிந்து.. வியந்து நிற்பதாக எண்ணிக் கொண்டவன், தொடர்ந்தும் சொல்ல நாடியவனாக,
“இந்த உலகத்துல நீ அறியாத பல மர்மங்கள் இருக்கு ஆண்டாளு.. அது தெரியாத வரை நமக்கு நல்லது.. உன் நிம்மதிக்கு நல்லது”என்று சொல்ல.. மீண்டும் அந்த வன்ம நிலா அவளுள் இருந்து வெளிவர,
அவனது அர்த்தமில்லாத பேச்சு எரிச்சலைக் கிளப்பியது அவளுக்கு!!
அதை அப்படியே குரலில் காட்டி, “வ்வர வ்வர ந்நீ ம்மகான் போல பேச ஆரம்பிச்சிட்டேய்யா..” என்று ஒருமையில் கணவனை விழிக்க, மனைவியின் விழிப்பில்.. ஒரு சின்னப்புன்னகை வந்து போனது அவனுக்கு.
அவளது புஷ்டியான இரு கன்னம் பிடித்து ஆட்டியவன், “மகான்னு வைச்சுக்க.. மகாப் புருஷன்னு வைச்சுக்க.. ஆனால் உனக்கு தெரியாதது எல்லாம் கடைசி வரை தெரியாததாகவே இருந்துட்டுப் போகட்டும்.. இப்ப வா.. உள்ளே போகலாம்”என்றவன், மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க, கரு சுமந்து நிற்பவள் அல்லவா??
அவன் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவளால் ஏனோ நடக்க முடியாமல் போனது.
பரிதிக்கும் என்ன தோன்றியதோ? எப்போதும் மனைவியுடன் இணைந்து நடந்து வருபவன்.. இன்று வேக நடை நடந்தவனாக.. அவள் மெதுவாக நிதானித்து வரட்டும் என்று முன்னே சென்றதில் தான் பிரச்சினையே??
தன்னை விட்டும் இரண்டெட்டு செல்லும் கணவனின் திடகாத்திரமான முதுகைப் பார்த்துக் கொண்டே, “கொஞ்ச்ம்… ”என்று ஏதோ கூற முற்பட்ட வேளை தான் அது நடந்தேறியது!!
மனைவியின் குரலோசை வராமல்.. வெறும் முணகல் ஒலி மட்டும் கேட்க, சந்தேகத்துடன் திரும்பியவனுக்கு, அங்கே மனைவியைக் காணக் கிடைக்காதது சிறு சலனத்தை ஏற்படுத்தியது.
அந்தப் புதர்ப்பற்றைக்குள்.. அவளது கொலுசோசை சலசலப்பும், புதர்ப்பற்றைகளின் ஆட்டமும் விளங்க, புதர்ப்பற்றையை அப்புறப்படுத்திக் கொண்டே உள்ளே நுழைந்தவன், அங்கு மென்னிலா இல்லாததது கண்டு.. அவனுக்கு சர்வமும் ஆட்டம் கண்டு போனது.
சற்று நேரத்திற்கு முன்னம் வரை.. அவன் பின்னாடி நடந்து வந்து கொண்டிருந்த அவனது ஆண்டாள் எங்கே?
அந்தத் தோட்டப்பகுதி, புதர்ப்பற்றைகளும், காட்டுச்செடிகளும் அடர்ந்து வளர்ந்திருக்கும்.. சரிவர கண்காணிக்கப்படாத பகுதி!!
அதில் அவள் இல்லாவிடினும் அவளது பாதமணிகளின் சலசலப்பும், புதர்ப்பற்றையும் சரசரப்பும் மட்டுமே.. ஏதோ ஒன்று விபரீதமாக நடக்கிறது என்று உணர்த்தலானது.
தன் சட்டையை முட்புதர்கள் கிழித்தாலும் அதை சட்டையே செய்யாது.. சலசலப்பு வரும் திசையை நோக்கி அவன் முன்னேறிய போது.. அங்கே அவன் காணக்கிடைத்த காட்சி கண்டு.. ஒரு நிமிடம் உடல் வெளவெளக்கத் தான் நின்றான்.
அன்று பார்த்து.. அவள் அணிந்த கொலுசு… அவள் இருக்கும் திசையைக் காட்டிக் கொடுக்க,
அது அவளது உயிரோடு, குழந்தை உயிரையும் காத்தது என்று சொல்வது தான் சாலப்பொருந்தும்!!
அந்த நேரம் பார்த்து புதர்ப்பற்றைக்குள் கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் முழுவதும் கறுப்பினால் ஆடை அணிந்திருந்த ஒருவன்,
தோட்டத்து மதிலோடு.. அவளை சாய்த்து..வாயை இறுகப் பொத்தி.. கத்தியைக் கழுத்தில் அழுத்தி வைக்க பதறிப் போனாள் மென்னிலா.
அவளால் மூச்சு விடவும் முடியவில்லை. உதவி கேட்டு வாய் திறந்து கத்தவும் முடியவில்லை!!
தனங்களோ ஏறி இறங்கி.. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி.. சுவாசத்துக்கு போராடிக் கொண்டிருக்க.. குபுகுபுவென வியர்த்து வழியலானது அவளுக்கு.
தன் வாயை இறுக்கி மூடியிருக்கும்.. அவனது முகமூடி மனிதனின் கைக்கு.. அவள் சாரமாரியாக அடித்த கணம் எல்லாம்..
அவளது கால் கொலுசு மணியும் சேர்த்து சிணுங்க..
சத்தம் ஒலிக்கும் திசை வைத்து மனைவியை அடைந்தவன், அங்கு நிகழும் அசம்பாவிதம் கண்டு.. விதிர் விதிர்த்துத் தான் போனான்.
தைரியமாக அந்த முகமூடி முன் நின்ற நம் பரிதிவேல் வீரன், மிரட்டும் அதிகாரத் தொனியில், “ஆஆர் ந்நீஈஈ?..” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிய முகமூடித் திருடன், சற்றே அதிர்ந்து தான் திரும்பினான்.
அந்த அதிர்ச்சியில்.. மென்னிலாவின் இறுகப் பொத்திய வாயிலிருந்தும் தன் கையை அவன் இலேசாக விடுவிக்கவும் செய்தான்!!
அப்படி அவன் விடுவித்ததும், ஆழ ஆழ பெருப் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்ட வண்ணம், தொண்டைக்குழியில் இருந்து வியர்வை வழிந்தோட, “மா.. மாஹ்..” என்றாள் மென்னிலா.
அவளது ஈனக்குரலில்.. பலம் வாய்ந்த அவன் இதயமும் பலவீனப்படும் போல இருக்க, அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த கயவனும், எதையும் பேசாவிட்டாலும் கூட,
‘நீ ஓரெட்டு முன்னாடி வைச்சா.. அவளக் கொன்றுருவேன்’ என்பதுல போல அவள் கழுத்தில் கத்தியை வைத்தான்.
அந்த அழுத்தத்தில்.. தோல் கீறி.. இலேசாக இரத்தம் எட்டிப் பார்க்க, பரிதி.. ஐந்தரையடி உயர சிறு பெண்ணால்.. தன் முரட்டு இதயத்தையும் நடுநடுங்கச் செய்ய வைக்க முடியும் என்று உணர்ந்து கொண்டான்.
இருந்தாலும் தன் பதற்றத்தை ஒருதுளி கூட விழிகளிலும், முகத்திலும் காட்டிக் கொள்ளாததில் தான் அவனது சமயோசிதமும், சாமர்த்தியமும் இருந்தது!
கத்தியாளனின் விழிகளை சுட்டெரித்து விடுவது போல முறைத்துப் பார்த்தவன்,
தன் எதிராளியை அதட்டும் குரலில், “வ்வேண்டாம்.. ந்நீஈஈ இங்கேயிருந்து உயிரோட ப்போகணும்னா.. மரியாதையா அவள வ்விடு..”என்று மொழிய,
கத்தியாளன்.. மென்னிலாவின் மீது கத்தியை எடுக்காமல், பரிதிவேல் வீரனையே படபடக்கும் விழிகளுடன் பார்த்திருந்தான்
அந்நேரம் பார்த்து யாரும் எதிர்பாராத வண்ணம்.. அரவம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த வாசு மாமாவின் குரல்… மிக மிக பதற்றமாகக் கேட்டது .
முகமூடி மனிதனின் காலுக்கு அடியில் சுட்டிக் காட்டி, “ஐய்யோ பாம்பூஊஊ.. பாம்பூஊஊ..”என்று இல்லாத பாம்பை போலியாகச் சுட்டிக் காட்டிக் கத்தினார் வாசு மாமா.
அதில் பதறிய கத்தியாளன் சிந்தை தவறி.. தன் பாதங்களுக்கு இடையில் பார்வையை ஓட விட, மின்னல் வேகத்தில் அந்தக் கத்தியாளனை அண்மித்திருந்த பரிதி, தன் முஷ்டி மடக்கி, அவனது தாடைக்கே ஓங்கித் தாக்கினான்.
வாசு மாமா போட்ட சத்தத்தில் பணியாளர்களும் ஓடி வர.. அனைவராலும் சுற்றி வளைக்கப்பட் கத்தியாளன்.. தப்பிப் போக வழியின்றி.. தடுமாறிப் போனான்!!
அதிலும் மனைவியின் கழுத்தில் இரத்தம் வர வைத்த நிகழ்வு கண் முன் ஓட… கத்தி ஏந்திய கத்தியாளனின் கையைப் பிடித்து முதுகுக்குப் பின் சுழற்றியவன்…
கை முஷ்டி மடக்கி.. தன் மோதிர விரலால்.. அவனது இடநெஞ்சுக்கே..மாறி மாறி.. குத்து விட, அந்தக் குத்தல் தாங்க மாட்டாமல்..மிகப்பெரிய ஓலமிட்டுக் கொண்டே தரையில் சாய்ந்தான் அவன்.
அவன் உயிரை எடுக்க வந்த நபரையேனும் அவன் சும்மா விட்டிருக்கக் கூடும்!!!
ஆனால் கத்தியாளன் பறிக்க வந்தது உயிரினும் மேலான அவன் ஆண்டாளை அல்லவா?? அப்போது எப்படி அவன் சும்மா விடக்கூடும் என்று எதிர்பார்க்க முடியும்!!
இயல்பிலேயே கனத்த இதயம் கொண்ட.. முரடனான பரிதிக்கு.. ஒருவெறியே கிளம்ப, தாக்கியவனின் முகமூடியை பிய்த்துக் கழற்றியவனுக்கு.. அந்த முகத்திரைக்குப் பின்னாடி, அவளது சரவணனிடம் வேலை பார்க்கும், ‘முத்து’ இருப்பது கண்டு அதிர்ந்து போயினர் அனைவரும்!!
ரொம்பவும் அதிர்ந்து போனது என்னமோ நிலா தான்!!
சரவணனின் வலது கை.. அவளைக் கொல்லத் துணிவான் என்று கனவிலும் எதிர்பார்த்திராதவள், அதிர்ச்சியுடன், “நீஈஈய்யாஆஆ?? ” என்று கேட்க,
முத்துவின் விழிகள்.. குற்றவுணர்வில் தாழ்ந்தது.
பரிதியோ கொலைவெறி சிந்தும் கண்களுடன், முத்துவின் நழுவ விட்ட கத்தியை எடுத்து, அவன் நெஞ்சுக்கே பாய்ச்சப் போக,
அந்தக் கொடூர செயலைக் காணப் பிடிக்காமல், “வேண்டாஆஆம்..”என்று தடுத்து நிறுத்தியது என்னமோ அவளே தான்.
ஏக்கமும், தவிப்பும் போட்டி போட, மனைவியைப் பார்த்தவன், “இவன் உன்னயயும், என் குழந்தயயும் கொல்லப் பார்த்தவன்மா.. இவன கொல்லவா வேண்டாம்னு சொல்ற?”என்று கேட்க,
நிகழ்ந்த விபரீதத்தால் உண்டான பதற்றத்தை சமாளிக்கும் வகையில், அழுகையை அடக்கியவாறு “ந்ந்நநாஆஆ.. ன்.. நல்லா தான் இரு.. க்கேன்.. ப்ளீஸ் மாமாஹ்..”என்றவள், வேண்டாம் என்பது போல தலையாட்டிக் கெஞ்ச,
அவளது கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவனை மேற்கொண்டு முன்னேற விடாமல் கட்டிப் போட்டது.
மதம் கொண்ட ஆண் யானையான பரிதியையும் கட்டுப்படுத்தும் ஓர் அங்குசம் என்றால் அது மென்னிலாவே தான்!!
ஓங்கிய கை.. கத்தியுடன் அந்தரத்திலேயே இருக்க, இரங்கும் அவளது விழிகளையே நிர்மலமான முகத்துடன் பார்த்தவனுக்கு, கத்தியை அந்த முருகனின் இதயத்தில் பாய்ச்ச மனம் வரவில்லை!!
எழுந்த சீற்றத்தை அடக்கிக் கொண்டு, முத்துவை எதுவும் செய்யாமல் எழுந்து கொண்டவன் பணியாளர்களிடம், “இவன மாட்டுக் கொட்டில்ல கட்டுங்க.. நான் அப்புறம் வந்து பார்த்துக்கிடுறேன்”என்றவன்.. மனைவியை நோக்கித் திரும்பிய போது… அவன் உடல் பதற்றத்தில் தளர்ந்திருந்தது.
மாமா இருக்கிறார், பணியாளர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இன்றி.. உடலில் நடுக்கம் ஓட,
“உனக்கு ஒண்ணும் ஆகலைல?..”என்று ஓடி வந்தவன், கண்கள் கலங்க.. அடுத்த நொடி அவளை இறுகக் கட்டியணைத்துக் கொண்டான் பரிதிவேல் வீரன்.
அவனது நடுக்கம்.. அவனது நெஞ்சாங்கூட்டில் தலை புதைத்திருந்தவளுக்கு.. அச்சொட்டாகப் புரிந்தது.
உடல்மொழிகள் நடிப்பாக இருக்கலாம்.
இதயத்தின் எகிறல்கள் நடிப்பாக இருக்கவும் கூடுமோ? என்று தோன்ற.. அவனது பதற்றம், துணுக்கம்.. அவளுக்கு ஒன்று என்றானதும்..
அந்த முரடனில் உடைப்பெடுத்த கண்ணீர் அவளை இளக வைக்கும் போல இருக்க, அவன் அணைப்பை உதறித் தள்ளி விட்டு.. வெளியே வந்தவள்,
முகச் சுளிப்புடன், “நாலு பேரு சுத்தி நின்னிருக்கும் போது.. எப்படி பிஹேவ் பண்ணனும்னு தெரியாஆஆதூஊஊ?? நான் ரூமூக்குப் போறேன்” என்று விட்டுச் செல்ல,
வாசு மாமாவுக்கு அவள் உள்ளக்கிடக்கை புரிந்து.. தன் மருமகனின் அன்பை ஏற்காத அவள் மீது சின்னக் கோபமும் மீதூறியது.
‘ஆண்டாள் உன்னய நிச்சயம் ஏத்துக்குவா’ என்று எந்த உறவு நம்பிக்கை தந்ததோ.. அதே உறவு, இன்று ‘இது நீ நேசிச்ச ஆண்டாள் இல்ல இது’என்று சொன்னாராயின் என்ன பாடு படும்??
அந்த ஒரு காரணத்துக்காக..அனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்தவருக்கு, பரிதிவேலின் நிலை கழிவிரக்கத்தையே கொடுத்தது.
ஆனால் பரிதிவேல் தான்… ‘ரூமுக்கு வா… சிறப்புப் பரிசு காத்திருக்கிறது’ என்று அவள் சொல்லாமல் சொல்லிவிட்டுச் செல்வது போல தோன்ற… அவள் பின்னாடியே… புன்னகை முகம் மாறாமல் நடந்தான் அவன்.
அந்த சம்பவத்தின் பின் ஒரு நொடியேனும்.. மனைவியை நீங்க அச்சம் கொண்டவன்,.. அவள் பின்னாடியே.. காவல் காக்கும் நாய்க்குட்டிப் போல ஓட,
அவன் ஓடி வரும் காலடித்தடம் கேட்டு.. ஆனானப்பட்ட ‘ஆகாயச் சூரியனை’ மயக்கிகாதல் தானடி என் மீதுனக்கு?
[25]
அன்று விடிந்த பொழுது யாருக்கு நலவாக இருந்ததோ.. இல்லையோ??
சிறுத்தோப்பு கிராமத்தின் பெரும்புள்ளியாக செல்வாக்குப் பெற்றிருந்த முரட்டுக் கிழவன் ராஜமாணிக்கத்துக்கு மட்டும் நலவாக இருக்கவேயில்லை.
காலம் இருக்கிறதல்லவா? காலம்!! அது பொல்லாத நியூட்டனின் மூன்றாம் விதி போல!!
காலமும் சரி, நியூட்டனின் மூன்றாம் விதியும் சரி.. இரண்டுமே.. தன் விசைக்குச் சமனான எதிர் விசையொன்றினைத் தந்து விட்டே தான் நிற்கும்!!
சிறுத்தோப்பு கிராமத்தின் மக்களை.. கிட்டத்தட்ட சர்வாதிகாரி போல அடக்கி ஆண்டு கொண்டிருந்த கிழவன் ராஜமாணிக்கத்தின் ஒட்டுமொத்த கொட்டத்துக்கும், காலம் வைத்த கெடு முடியும் நாளும் இன்று தானோ?
ஆம், தன் வாழ்நாளில், ‘இப்படியொரு நிலை வரும்’ என்று எதிர்பார்த்திராதவர், அன்று நிலை தடுமாறித் தான் போனார்.
முற்பகல் வேளையில் எல்லாம்.. தன் உரமேறியிருந்த திண்ணிய உடலுக்கு, நல்லெண்ணெய் மஸாஜ் செய்த பின், உச்சிக்கு வெயில் ஏறியதும்..
வெயிலின் உஷ்ணத்தினால் சூடான மிதமான தண்ணீரில் குளிப்பது கிழவனின் அன்றாட வழக்கம்!!
வழமைப்போல இன்றும் அப்படித்தான்.. உடல் முழுக்க நல்லெண்ணைய் தேய்த்து நின்றிருந்தவருக்கு, தலைக்கு தண்ணீர் வார்க்கத் தான் நேரம் கூட வாய்க்கப் பெறவில்லை!!
அவர் செய்த வினைப்பயன்கள் எல்லாம் ஊழ்வினையாக உருவெடுத்து.. இந்தக் கோலத்தில் வந்து நிற்கும் என்று எதிர்பார்த்திரா ராஜமாணிக்கம்,
நல்லெண்ணெய் மசமசக்கும் உடலுடனும், கையில்லாத உள்பெனியன், வேஷ்டி சகிதம்… சித்த பிரம்மை பிடித்தாற் போன்று,
நடுக்கூடத்திலே.. வெறுந்தரைத் திட்டிலே… குந்தியிருந்தார்!!
நரைத்த முடி கொண்ட உச்சந்தலையில்.. வைத்த நல்லெண்ணெயின் விளைவாக…. தலையிலிருந்து இறங்கிய சூடு.. அவர் கண்களில் பிரதிபலித்ததுவோ?
இல்லை.. நிஜமாகவே நடப்பது அனைத்தும் கைமீறிப் போவது அறிந்து.. ஆத்திரத்துடன் நின்றிருந்ததன் சிவப்பு பிரதிபலித்ததுவோ…
அவரது சீறும் விழிகள் இன்று நன்றாக சிவப்பேறிப் போயிருந்தது.
அவர் பார்வையோ… தன்னை சுற்றி நின்றிருக்கும்.. அரசாங்க அதிகாரிகளுக்கு பதில் சொல்ல முடியாத வண்ணம்.. விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது!!
காலையில் எப்போதும் சுமூகமாக விடிந்த பொழுது.. முற்பகல் வேளையானதும்.. இத்தனை நாரசமான நாளாக அமையும் என்று அவர் என்ன கனவா கண்டார்??
ஆம், கனவு.. இது அத்தனையும் கனவாகப் போய் விடக்கூடாதோ? என்று தான் நப்பாசை கொண்டது கிழவனின் மனம்!!
சற்று நேரத்திற்கு முன்னர், அவர் வீட்டுக்கு முன்னாடி நாலைந்து கார்களும், ஒரு ஜீப்பும் வந்து.. திடுதிப்பென்று வந்து நிற்க,
அதில் இருந்து இறங்கினர் முழுநீளக்கை மற்றும் ‘டக் இன்’ செய்யப்பட்ட சட்டை, பேன்ட்டுடன் இருபது இருபத்தைந்து ஆடவர்கள்.
பார்த்ததுமே, ‘அரசாங்க உத்தியோகத்தர்கள்’ என்று முகத்தில் எழுதி ஒட்டினாற் போன்ற இறுமாப்புடன் வந்த அந்த ஆடவர்களைக் கண்டு,
நடுக்கூடத்தில் நல்லெண்ணெய் மஸாஜூடன், வெட்ட வெளிக் கூரை மூலம் வந்த சூரிய வெளிச்சத்தில்.. சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருந்த ராஜமாணிக்கத்தின் விழிகள் இலேசாக இடுங்கத் தான் செய்தது.
அவரை சட்டையே செய்யாமல் உள்ளே வந்த உத்தியோகத்தர்கள், அவரிடம் ஒரு ‘சர்ச் வாரண்ட்டைக்’ காட்டி, “மிஸ்டர். ராஜமாணிக்கம்..நாங்க வருமான வரித்துறையில இருந்து வந்திருக்கோம்… உங்க வீட்ட சோதன பண்ணனும்..எங்க கூட கொஞ்சம் கோஓபரேட் பண்ணுங்க” என்று சொன்னதும் தான் தாமதம்,
உள்ளுக்குள், ‘இடியேறு கேட்ட சர்ப்பம் போலத்’ தான் ஆனார் ராஜமாணிக்கம்!!
அவரைப் போலவே.. எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாது.. திடகாத்திரமாக நின்றிருந்த அவர் வீடும், அவரது இதயத்தைப் போலவே…
பல கள்ளத்தனங்களைக் கொண்டது அல்லவா??
அவர் இதயத்தை அலசினால் மட்டுமல்ல.. அவர் வீட்டை அலசினாலும் தான்.. அவரது, ‘முகத்திரை கிழியும் அபாயமுள்ளது’ என்பதை அறிந்தவர், அவசரமாக தன் இருப்பிடத்தில் இருந்தும் எழுந்து கொண்டவராக,
அதிகாரிகளைப் பார்த்துக் கன்னாபின்னாவென்று கத்தத் தொடங்கினார்.
“ஆரக் கேட்டு… என் வீட்டுக்கு வந்திருக்கீங்க?? எதுக்கு இந்த திடீர் செக்கிங்கு எல்லாம்?? அதாஆஆ.. வருஸாஆ வருஷம்.. வரி கட்டுப் போடுறேனில்ல?? பின்ன எதுக்கு இந்த செக்கிங்கு, மயிரு எல்லாஆம்??” என்று கத்த, அவர் சொல்வது காதிலே விழாதது போலவே நின்றிருந்தனர் அந்த அதிகாரிகள்!!
அவர், ‘எப்போது பேசி முடிப்பார்’ என்று காத்திருந்த.. அந்தக் குழுவின் தலைமை அதிகாரி, உணர்ச்சியே அற்ற ரோபோக்குரலில்,
“சார்.. இது திடீர் செக்கிங் எல்லாம் இல்ல சார்… இப்ப வந்திருக்குற அரசாங்கம்.. மன்னார் மாவட்ட பெரும்புள்ளிகளோட சொத்து விவரங்களை எல்லாம் கணக்கெடுக்குறாங்க.. அதனால எல்லார் வீட்டிலேயும்.. தான் இந்த செக்கிங் போய்ட்டு தான் இருக்கு.. இப்போ கூட பரிதி க்ரூப்ஸ் ஆப் கம்பனீஸ் ஓனர்.. மிஸ்டர். பரிதிவேல் வீரன் வீட்டுல செக்கிங் முடிச்சுட்டு தான் வரோம்.. அவர் எல்லாத்துக்கும் கரெக்ட்டா கணக்கு வைச்சிருக்காரு.. ப்ளீஸ் சார்.. நீங்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவீங்கன்னு நம்புறோம்.. ஐ ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட் தி சிட்ச்சுவேஷன்…”என்று பேசிய அதிகாரி,
எப்போது தன் பேச்சினில் “பரிதிவேல் வீரனின்’ பெயரை எடுத்தாரோ.. அப்போதே… அவருள் சொல்லவொண்ணா ஆத்திரமும், குரோதமும் எழுந்து அவர் இதயத்தை திகுதிகுவென பற்றியெரிய வைத்தது.
அதனால் விளைந்த ஆவேசத்துடன்.. கை முஷ்டி மடக்கி கிழவன் நிற்க, கிழவனின் உச்சபட்ச ஆத்திர முகபாவங்களையெல்லாம் அப்பட்டமாகக் கண்டும், அதைப்பற்றி சட்டையே செய்யாத தலைமை அதிகாரி,
தன் பிற அதிகாரிகளை நோக்கி, “டூ யோர் டியூட்டி”என்று தலையசைத்தவராகச் சொல்ல,,
இதர அதிகாரிகளும்.. ஷூக்கால்கள் தடதடக்க.. ராஜமாணிக்கத்தின் மாடமாளிகைக்குள் விரைந்தனர்.
ராஜமாணிக்கத்துக்கோ.. உள்ளே ஊழிகாலம் தான் வந்து விட்டதுவோ என்று… குறுகுறுக்க ஆரம்பித்தது.
குற்றமுள்ள நெஞ்சல்லவா??
தன்னுடைய சட்டவிரோதமாக சேமித்த சொத்தாக இருக்கட்டும்.. கறுப்புப் பணமாக இருக்கட்டும்.. இதர லொட்டு லொசுக்கு எல்லாமே உறைந்திருக்கும் கருவறை.. அவரது இந்த மாடமாளிகை!!
எந்தவித திடீர் அறிவிப்பும் இன்றி வந்து நின்றிருக்கும் வருமான வரித்துறையினர்.. எல்லாவற்றையும், ‘இனங்காணப் போவது நிச்சயம்’ என்று கிழவனுக்குப் புரிந்து விட,
சொத்துக்கள் சேர்க்க கிறுக்குத்தனமாக செயல்பட்ட மூளை அல்லவா?? அப்போதும் குறுக்குத் தனமாகவே செயல்பட நாடியது.
அவசர அவசரமாக செல்லை எடுத்து, பேரன் சரவணனுக்கு.. பதினெட்டு, பத்தொன்பது மிஸ்ட்கால்கள் தொடர்ந்து எடுத்திருந்தார் கிழவர்!!
இருந்தும் என்ன பயன்?
நேற்று மாலை வீட்டை விட்டு சென்ற சரவணன்.. இன்று முற்பகல் வேளையாகியும் கூட வீடு வந்து சேரவுமில்லை;கிழவனின் அழைப்பை ஏனோ ஏற்கவும் இல்லை!!
‘டேய்.. ஃபோன எடுடாஆஆ?? இந்த நேரம் பார்த்து இந்த எரும.. எந்த.. வே*** **வீட்ல படுத்துக் கெடக்காஆன்னு தெரியலீய்யே? எலேஏஏய் சரவணாஆ… ஃபோன எடுத்துத் த்தொலடாஆஆ…’ என்று எல்லாமே கையை விட்டுப் போகக் கூடிய ஆத்திரத்தில்.. கத்திக் கொண்டே இருந்தவருக்கு…
பேரன் வேறு அழைப்பை ஏற்காமல் போனதும்.. இருப்பு கொள்ளாமல் போனது!!
அடிக்கடி அவரது கோர விழிகள்.. வீட்டு சோபாவைக் கூட கிழித்து, இரண்டாய் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளை.. படபடப்புடன் பார்க்கலானது!!
அவருடைய பூஜையறை, பழைய பொருட்கள் திணித்து வைக்கப்படும் ஸ்டோர் ரூம் என்று.. ஒருஅறை கூட விடாமல் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த உயர் அதிகாரியின் விழிகளில் விழுந்தது.. கிழவன்.. செல்லில் யாருக்கோ அழைப்பெடுக்க நாடுவது!!
கிழவனை நோக்கி.. சீற்றத்துடன் வந்த அதிகாரி, ராஜமாணிக்கத்தின் கையில் இருந்த செல்லை.. பட்டென்று பிடுங்கிக் கொண்டவராக,
மறுத்துப் பேச முடியாத அதிகாரத் தொனியில், “ஸாரி சார்.. நாங்க இங்கேயிருந்து போற வரைக்கும்… நீங்க யாருக்கும் கால் பண்ண முடியாது” என்று சொல்லி விட, நெற்றியில் அரும்பிய வியர்வையை.. உள்ளங்கையால் துடைத்துக் கொண்டே… இடிந்து போனவராக..
வெறுந்தரையில் குத்திட்டு அமர்ந்து கொண்டவர் தான்.. அதற்குப் பிறகு எழவேயில்லை!!
எப்போதும் அவர் கூடவே இருக்கும்.. சரவணனின் வலது கையான ‘முத்து’, அவனுக்கு ஏவப்பட்ட வேலையைச் செய்து விட்டு.. இன்னும் நல்ல செய்தியுடன்.. வீடு வந்து சேராமை கூட… இன்னொரு பக்கத்தில் அலைக்கழிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது அவருக்கு!!
வீட்டையே குப்புறத் திருப்பிப் போட்டு.. வீட்டில் இருக்கும் கறையான், எறும்பு முதற்கொண்டு தேடி அறிந்த.. அதிகாரிகளுக்கு.. அவரது திருகுத் தாளங்களை கண்டறிவதா கடினம்??
அதிகாரிகளின் திடீர் விஜயத்தில்.. தன்னுடைய திருட்டுத்தனத்தை மறைக்கக் கூட நேரமின்றி இருந்த ராஜமாணிக்கத்துக்கு.. அன்று எல்லாமே எதிர்மறையாகவே நடக்கத் தொடங்கியது.
அரசாங்கத்தின் கண்களில் இருந்தும் மறைக்கப்பட்ட பல நில புலன்களின் பழைய ஆவணங்களும், அரசாங்கத்துக்கு காட்டப்பட்ட போலிக்கணக்குகளுக்கு மேலதிகமாக.. அங்கே இருந்த கட்டுக்கட்டான நோட்டுக்களும்,
அவர் வீட்டு தரையில்.. மலை போல குவிந்து நிற்கும் அளவுக்கு… பவுண் கணக்கில்… தங்க நகைகளும்…. இடிந்து போய் உட்கார்ந்திருந்த கிழவனின் முன்னிலையில் பரத்தப்பட்டிருந்தது.
அவரைச் சுற்றிலும்… பற்பல கேள்விகளை மனதில் தொக்கி வைத்து நின்ற அதிகாரிகளோ, அமர்ந்திருக்கும் ராஜமாணிக்கத்தை நோக்கி, சிற்சில பத்திரங்களைக் காட்டி,
“இது நீங்க தலைமன்னார்ல… முப்பது ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டதுக்கான பத்திரம்… இது ஏன்.. உங்க அசையா சொத்து பட்டியல்ல ஆட் ஆகவேயில்ல??”என்று கேட்க.. அவரிடம் எந்த பதிலுமில்லை!!
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்ட கதையாக.. வாயில் கொளுக்கட்டை வைத்து அடைத்தவர் போல..
தலையில் கை வைத்தவராக… விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு.. எதையோ இழந்து விட்டவர் போல அமர்ந்திருந்தார்.
உள்ளமோ, ‘ஐய்யோஓ.. ஐய்யோ.. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்தெல்லாம் போச்சே.. நல்ல வாயன் சம்பாதிச்சத நாற வாயன் தின்னப் போற கதையா ஆகிருச்சே.. என் கத’ என்று உள்ளே கிடந்து அடித்துக் கொள்ள,
கிழவன் வாய்ப்பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இன்னொரு அதிகாரியோ.. சின்ன மலைபோல குவிந்து நின்ற தங்கநகைகளை சுட்டிக்காட்டி, “இங்கே இருக்கற ஜூவல்ஸ்ல.. மூணு நெக்லஸ்க்கு… நீங்க பர்ச்சேஸ் பண்ண ரசீது எதுவுமேயில்லை… இது எப்படி சாத்தியம்?? எப்படி இந்த கணக்குலயிருந்து.. அது எல்லாம் தப்பிச்சது??”என்று கேட்க, அப்போதும் வாய் பேசாமலேயே அமர்ந்திருந்தார் ராஜமாணிக்கம்!!
அந்த நேரம் பார்த்து, சில கணக்குப் பேரேட்டுப் புத்தகங்களை காட்டிய, தலைமை அதிகாரி,
ராஜமாணிக்கத்தின் அருகே.. அவரைப் போலவே சாவதானமாக அமர்ந்தவராக,
மனத்தைக் கலங்க வைக்கும் இரும்புக் குரலில், “இந்த ஊரு கோயிலோட தர்ம கர்த்தாவாகவும் நீங்க இருந்திருக்கீங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஊர்க்கோயில் திருவிழாவுல மொத்தம்.. ஐம்பத்தைஞ்சு லட்சம் ரூபாய் நிதி கலெக்ட் ஆகியிருக்குன்னு.. நீங்க கவர்மென்ட்க்கு சப்மிட் பண்ண இந்த பென்ட்ரைவ்ல இருக்க டாக்குமெண்ட் சொல்லுது…”என்று தன் கையில் இருந்த பென்ட்ரைவ்வைக் காட்டியவர்,
“ஆனா.. உங்க கிட்ட இருக்குற இந்த மஞ்சளடிச்சுப் போன லெட்ஜர்ல… மொத்தம் அறுபத்தேழு லட்சம் கலெக்ட் ஆகியிருக்குன்னு கணக்கு காட்டப்பட்டிருக்கு?? அட் த சேம் டைம்.. உங்க பேரன் பேங்க் அக்கவுண்ட்ல.. பன்னிரண்டு லட்ச ரூபாய் டிரான்ஸ்பர் ஆகியிருக்கு.. அப்படீன்னா.. கோயில் பணத்த கையாடல் பண்ணியிருக்கீங்களா?இல்ல.. அக்கவுண்ட்க்கு டிரான்ஸ்பரான பன்னிரண்டு லட்ச ரூபா பணம்.. அது கோயில் பணம் இல்லைன்னு உங்களால ப்ரூவ் பண்ண முடியுமா??”என்று கேட்க,
எல்லாரையும் அதட்டி உருட்டி… ஒரு எஜமானன் போல நடந்து கொண்ட.. மமதைப் பிடித்த ராஜமாணிக்கம்.. முதன் முறையாக.. என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துப் போய் தான் நின்றார்.
வீட்டுப் பணியாளர்கள் வேறு.. ஒருபக்கம் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க… ராஜமாணிக்கத்துக்கு கழியும் ஒவ்வோர் நொடியும் அசிங்கமாகிப் போனது.
தலைமை அதிகாரியை… தொண்டைக்குள் ஏதோ அடைத்து விட்டது போல எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு,
என்ன சொல்லித் தப்புவது என்று தெரியாமல், “அஅ. அது.. இந்த. கணக்கு.. பணம்லாஆஆம்.. அது.. வவந்தூ… ” என்று சமாளிக்கத் தெரியாமல் உளறும் தாத்தாவை மட்டும் மென்னிலா பார்த்திருந்தாளேயானால்,
‘டெரார் பீஸூ தாத்தா.. ஒரு டம்மிபீஸாஆ?’ என்று எண்ணம் வலுக்க.. கர்ப்பிணி என்பதையும் மறந்து விழுந்து விழுந்து சிரித்திருப்பாள்.
குட்டு வெளிப்பட்டாயிற்று!! காப்பாற்ற வேண்டிய சரவணனும் அங்கு இல்லை!!
என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிப் போனவர், தன் மானம் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் போவதை தாளமாட்டாமல், தலைமை அதிகாரியை நோக்கி,
தன் வழமையான மரியாதை இல்லாத தொனியில், “ய்யோஓஓவ்… இந்த ஊரு முட்டாப் பயலுவளே.. என்ன கேள்வி கேட்க தயங்கிர்வானுக.. அம்புட்டும் மாட்டுப் பயலுவ.. அஞ்சோ பத்தோ தூக்கிப் போட்டா.. வாலாட்டிட்டு போயிருவானுக.. நீ ஆஆருய்யா பெருஸ்ஸாஆஆ.. தூக்கிட்டு வந்துட்ட?? .. ஆமாஆஆஆ!! .. திருவிழா மோசடி பணம் தான்ய்யாஆ அதூஊஊ… அதாஆஆன்.. எல்லாஆஆமே.. திருட்டு சொத்தூன்னு த்தெரியுதுல்ல?? உனக்கு எம்புட்டு வேணும்னு சொல்லு.. இங்கேயே ம்முடிச்சுக்கலாஆஆம்” என்று சொன்னதும் கூட.. அவரது கெட்டகாலம் தப்பாகவே போயிற்று.
வந்திருந்ததோ.. கை சுத்தமான அதிகாரி வேறு.. ராஜமாணிக்கம் தன்னை ‘யோவ்’ போட்டு மரியாதை இல்லாமல் அழைத்தது வேறு ஒருபுறம் அவரது சூட்டைக் கிளப்ப,
இன்னொரு பக்கம் அவர் செய்த தப்பில்.. தன்னையும் லஞ்சம் கொடுத்து கூட்டு சேர்க்க வைப்பது.. பெரும் கோபத்தைக் கிளறிவிட,
தன் குழுவினரை நோக்கி.. கண்ஜாடை மட்டும் தான் செய்தார் அவர்!!
மற்ற உத்தியோகத்தர்கள்.. தட்டு நிறைய மலை போல குவிந்து நின்ற நகைகள், பத்திரங்கள், ஆவணங்கள் என எல்லாவற்றையும் கற்றை கற்றையாக எடுத்துக் கொண்டு செல்ல அணிவகுக்க,
“நீங்க.. கோர்ட்க்கு வந்தே பேரம் பேசிக்குங்க.. மிஸ்டர். ராஜமாணிக்கம்.. அதுக்கு நான் ஆளில்லை!! ” என்றுரைத்தவராக எழுந்து கொண்டார் ராஜமாணிக்கம்.
அங்கே வந்திருந்த வருமான வரித்துறை குழுவில்… நெற்றியில் திருநீறு, கழுத்தில் சந்தனம் என்று முழுக்க முழுக்க பக்திப் பழமாக நின்றிருந்த ஒரு அதிகாரி நின்றிருந்தது வேறு…
பல பேரின் வாழ்வை சீரழித்த ராஜமாணிக்கத்திற்கு துரதிர்ஷ்டமாக அமையவே செய்தது.
கோயில் தர்ம கர்த்தாவாக இருந்து கொண்டு.. கோயில் பணத்திலேயே.. இந்த ராஜமாணிக்கம் மோசடி செய்திருப்பதை..
‘சட்டம் வந்து கடமையைச் செய்யும்’ வரை காத்திருக்க முடியாமல்.. கிழவனின் மோசடி.. நாடி, நரம்பெல்லாம்.. பக்தியோடிணைந்த ஆத்திரத்தைக் கிளப்பவே,
யாருக்கும் தெரியாமல்.. ‘ராஜமாணிக்கத்தின் வீட்டில் நடந்த ரைட்’டையும், கண்டெடுத்த அத்தனை சொத்துக்களையும்,
அதிகாரிகள் சூழ்ந்து நின்று ராஜமாணிக்கத்தைக் கேள்வி கேட்க, இறுதியில் அந்தக் கிழவன் தலைமை அதிகாரியுடன் பேரம் பேசியதையும் கூட…
ஒன்று விடாமல்… முகப்புத்தகத்தில் துல்லியமாக ‘லைவ்’ செய்து விடவே,
நவீன தொழிநுட்பம் வேறு.. அந்த நாசகார கிழவனுடன் சதி செய்யவே நாடியது போலும்!!
இலங்கை என்ன?? முழு உலகமும் கூட.. இந்த ராஜமாணிக்கத்தின் திருகுத்தாளத்தை நேரலையாக பார்த்து கொந்தளித்துப் போயிருக்க,
மன்னாரின்.. சிறுத்தோப்பு கிராமத்தின் இளசுகளோ..தங்கள் பணத்தில் நேர்ந்த கையாடலைப் பொறுக்கமாட்டாது நெஞ்சு பொரும நின்றனர்.
அதிலும்… இந்த எகத்தாளம் மிக்க கிழவன் வேறு.. கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக,
தன ஊர்க்காரர்களை, “இந்த ஊரு முட்டாப் பயலுவளே.. என்ன கேள்வி கேட்க தயங்கிர்வானுக.. அம்புட்டும் மாட்டுப் பயலுவ.. அஞ்சோ பத்தோ தூக்கிப் போட்டா.. வாலாட்டிட்டு போயிருவானுக.. நீ ஆஆருய்யா பெருஸ்ஸாஆஆ.. தூக்கிட்டு வந்துட்ட?? .. ஆமாஆஆஆ!! .. திருவிழா மோசடி பணம் தான்ய்யாஆ அதூஊஊ!! …”என்று விழித்ததோடு மாத்திரம் அல்லாமல்.. அதை ஒப்புக் கொண்டது வேறு… இளரத்தங்களை கொதிக்கச் செய்தது!!
இத்தனை காலம்.. முட்டாளாக இருந்த மக்களேயாயினும் கூட, ராஜமாணிக்கத்துக்கு மாடு போல உழைத்திருந்தும் கூட, ராஜமாணிக்கத்தின் பேச்சு.. அவரது விதியையே தலைகீழாக திருப்பிப் போட்டது.
படிக்காத பாமர மக்கள்.. சாதுவான மாட்டுப் பயல்களாக இருக்கலாம்!!
ஐந்தையோ பத்தையோ தூக்கிப் போட்டதும்.. வாலை ஆட்டும் நாயை ஒத்தும் இந்த ராஜமாணிக்கத்தின் கண்களுக்கு தெரியலாம்.
ஆனால் அவர் செய்த பெரும் பிழை… ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதை அறியாது போனது தான்.
மாடுகளும் ஒரு நாள் அவற்றின் மூக்கணாங்கயிறு அறுக்கும்; நாயும் வெறி வந்தால்.. வாலாட்டாமல் கடிக்கும் என்று அறிமால் போனது அவரது அறியாமை!!
அதிகாரிகள் வேறு.. அவருடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்ய எத்தனித்த நேரம்.. அந்தக் கிழவனின் இத்தனை வருட வாழ்வில்.. ஒரு இழிவு நிலைக்கான அத்திவாரமும் இடப்பட்டது.
அந்த கணம் ஒரு திருப்புமுனையாக…
ராஜமாணிக்கத்தின் வீட்டு வாசலில் இருந்து கேட்டது ஒரு பலத்த குரல்!! அது நன்கே பரிச்சயப்பட்ட குரலாக இருந்தாலும் கூட.. அந்தக் குரல் ஒலித்த தோரணையில்..
இருக்கும் களேபரமான சூழ்நிலையில்.. மனதுக்குள் கலவரம் உண்டாவது போல கலக்கம் முகிழ்த்தது.
அது பக்கத்து கிராமத்தின்.. பெயர் சொல்லும் படியான பெரிய புள்ளியின் குரல் அது!!
இந்தக் கிராமத்துக்கு ஒரு ராஜமாணிக்கம் போல.. பக்கத்து கிராமத்துக்கு ஒரு தங்கவேல் ஐயா!!
எல்லா ஊர்த் தலைவர்களும்.. இந்த மோசடிக்கார ராஜமாணிக்கம் இருப்பதைப் போல.. இருப்பதில்லை என்பதற்கு தலைசிறந்த உதாரணம் தங்கவேலு ஐயா!!
கிட்டத்தட்ட ராஜமாணிக்கத்தின் வயது தான் இருக்கும் அவருக்கும்!!
நரைத்த ‘கடாமீசையும்’, கூன் விழாத முதுகு நிமிர்ந்து நின்று விறைக்கும் கம்பீரமும், கூடவே ‘ஆஞ்சநேயர்’ டாலர் போட்ட தங்கச் சங்கிலியும்,
அப்பழுக்கற்ற வெள்ளை வேஷ்டி சட்டையும், அவரது ஆளுமை நிறைந்த தோற்றத்தை இன்னும் மெருகூட்டவே செய்யும்!!
ரௌத்திர விழிகளுடன் ராஜமாணிக்கத்தின் வாசலில் நின்றிருந்த தங்கவேலு ஐயா, தனக்கேயுரிய பெருங்குரலில், “ய்யோஓஓஓவ்..ர்ராஜமாணிக்கம் வெளிய்ய வாய்யாஆஆ!!!”என்று கத்த,
‘இது என்ன புது சோதனை?’ என்று மனதில் குமுறிக் கொண்டாலும், எதுவுமே நடவாதது போல.. “என்ன தங்கவேலு?…”என்று கேட்டுக் கொண்டே வந்தவரது கண்களில் விழுந்தது ஆவேசம் ததும்பும் விழிகளுடன் நின்றிருக்கும் ஒரு பட்டாளம்!!
அவர்களைக் கண்டதும் உள்ளுக்குள் அச்சம் முகிழ்த்தாலும் கூட.. அத்தனையும், ‘அயலூர்க்காரர்கள்’ என்ற பின் தான் சின்ன நிதானம் வந்து போக..
முறுக்கேறிய மரம் போலவே அவர்கள் நின்றிருந்தவரின் கண்கள்.. அந்தக் கூட்டத்தை மீண்டும் ஒரு முறை சுற்றி வரப் பார்த்தது.
அந்தக் கூட்டத்தின் நடுநாயகமாக தங்கவேலு ஐயா நின்றிருக்க, பக்கத்திலே தன் பேரன் தானா? என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு..
கண்களும், இதழ்களும் வீங்கிப் போய்.. நெற்றியின் ஓரம் பிளந்து.. இரத்தம் வடிய வடிய, கிழிந்த சட்டை வேஷ்டியுடன் நின்றிருந்த சரவணனைக் காணவும்… சர்வமும் ஆட்டம் கண்டு போனது கிழவனுக்கு.
வீட்டு வாசற்படி உச்சியில் நின்றிருந்தவர்.. தன் பேரனைக் கண்டதும்.. குடுகுடுவென இறங்கி வந்தவர், தன், ‘ஜாதியில் உதித்த ஒரே பேரன்’ என்ற பாசம் மீதூற,
சரவணனின் கன்னம் பற்றியவராக.. தழுதழுக்கும் குரலில், “எ.. என்னாச்சுப்பாஆஆ உன. உனக்கு?”என்று குசலம் விசாரிக்க, அந்தோ பரிதாபம் பக்கத்து ஊர் காரனிடம் செம்மையாக அடி வாங்கியிருந்த சரவணனுக்கு..
தாத்தாவை நேர் கொண்ட பார்வை பார்க்கவேனும் உடலில் தென்பு என்பது கிஞ்சித்தும் இருக்கவில்லை!!
இந்த தாத்தா – பேரனின் பாச நாடகத்தை பார்க்க விரும்பாத தங்கவேலு ஐயாவோ,
ராஜமாணிக்கத்தை நோக்கி, “நிறுத்துமய்யா உன் பாச நாடகத்தஅஅஅ!! பேரன ஒழுங்காஆ கண்டிச்சு வளர்க்க தெரியல.. உமக்கெல்லாஆஆஆம்.. எதுக்குய்யாஆஆ.. பெரீஈஈஈய்ய்ய.. மனுஷன் பட்டம்???. உன் பேரன்… பண்ண காரியத்துக்கு உம்மயும் சேர்த்து… வெட்டி பொலி போட்டா தான் என் ஆஆஆத்திரம் அடங்கும்…. நீயெல்லாம் ஒரு பெரீய்ய்ய மனுஷன்..” என்று கத்த,
‘பேரன் என்ன தவறு செய்திருப்பான்?’ என்று புரியவில்லையாயினும் கூட, சரவணனையும் விட்டுக் கொடுக்க நாடவில்லை கிழவனின் மனம்.
ஏற்கனவே வருமான வரித்துறையினரின் ரைடில்.. எரிச்சலில் கிடந்தவர், இன்று தங்கவேலுவின் பிரசன்னத்தைத் தொடர்ந்து,
கோபத்தின் உச்சிக்கே சென்றவராக, “சும்மா கத்தாதிருமய்யாஆஆ.. என்ன நடந்து போச்சுன்னு.. வீட்டு வாச முன்னாடி வந்து நின்னுக்கிட்டு.. ஓலம் போட்டுட்டு கெடக்குற? அதுவுமில்லாமல்.. இந்த ராஜமாணிக்கத்தோட பேரன் மேல கைய வைக்க ஆர் உனக்கு அதிகாரம் குடுத்தது?? ” என்று எரிந்து விழ,
தங்கள் ஐயாவை மரியாதைக் குறைவாக பேசும் ராஜமாணிக்கத்தை நோக்கி,
சிலம்புடன் வந்த ஒரு இளைஞன், “ஏய்.. எங்க ஐயாஆ கிட்ட மரியாதையா பேசு.. நீ சொன்ன மாதிரி.. நீயி.. அஞ்சோ பத்தோ போட்டதும் வாலாட்டிட்டுப் போற உன் ஊரு ஆளுங்க கெடயாது..அயலூர்க்காஆஆரனுங்க… தலைய சீவிட்டு தாஆன் மறுவேல ப்பார்ப்போம்!! ”என்று எகிற,
கிழவனுக்கோ.. ‘வீட்டுக்குள்ளே தான் பேசிய.. ஏகபோக வசனத்தை எப்படி..பக்கத்து ஊர் காரன் சரியாக இயம்புகிறான்?’ என்று அதிர்ச்சி ஒரு கணம் தோன்றி மறைந்தது.
அதற்கிடையில் தன் ஆளை அடக்கிய தங்கவேலு, ராஜமாணிக்கத்தை மிதப்பாக பார்க்க,
இன்னொரு அயலூர்க்கார ஆடவனோ, ஆவேசத்துடன் முன் வந்து,
“பொம்பள சுதி ஏறிப் போயி.. தினவெடுத்த நாஆஆயீஈ மாதிரீஈஈஈ.. திரியுற உன்னோட பேரன் கை வைச்சது ஆர் ம்மேல தெரியுமோஓ?? எங்க ஐயாஆஆஆ பேத்தி மேல…”என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட,
சரவணனின் கீழ்த்தரமான செயலில்.. கிழவனுக்குமே உள்ளூற கோபம் வந்தது உண்மை தான்!!
ஒரு அப்பாவிப் பெண்ணின் மேல் கை வைத்து விட்டானே பேரன் என்ற கோபமா அது? இல்லவே இல்லை.
மாறாக… சரவணன்.. போயும் போயும்.. இந்த தங்கவேலுவின் வீட்டுப் பெண் மீதா கை வைக்க வேண்டும் என்ற கோபமே அது என்றால்.. என்ன இழிபிறப்பான மனிதர் அவர்??
அந்த ஆடவனோ மீண்டும், “உன் பேரன் வேலி விட்டு வேலி பாஞ்சி மேஞ்சதும் அமைதியாகப் போக.. நாங்க ஒண்ணும் உன் வீட்டு வேலைக்காரி இல்ல..” என்று மஞ்சு பலாத்காரம் செய்யப்பட்டதையும், அது மறைக்கப்பட்டதையும் சாடைமாடையாக சொன்னவன்,
“மாறு கால் மாறுகால் வாங்கிருப்போம்.. ஐயாவுனால தான் உன் பேர உசுரோட தப்பிச்சாஆன்… இப்படியொரு பொம்பள பொறுக்கி பேரன பெத்துப் போட்டூ… .. எதுக்குய்யாஆ மானம் மரியாதன்னு வாழ்ந்துட்டிருக்க..?? த்தூஊஊஊ..”என்று காறி உமிழ்ந்து வாசலிலேயே துப்ப,
அவமானம் தாள மாட்டாமல் கன்றிச் சிவந்து போனது கிழவனின் முகம்!!
தன்னை மானபங்கப்படுத்தும் ஆடவனை உருக்கி விழித்தவர், “எலேஏஏ… வார்த்தய அளந்து ப்பேஏஏசுல?”என்று கத்த,
எகிறிப் பாய்ந்த இன்னொரு இளைஞன், அந்தக் கிழட்டு வயதில் கேட்க முடியாத நாராசமான வார்த்தைகளில் திட்டி, “என்ன ***.. **.. .. பேரன ஒழுங்கா வளர்க்க துப்பில்ல.. பேச வந்துட்டான் கெழவன்!!”என்று சொல்ல, விறுவிறுவென உடலில் பொங்கியது கோபம்.
உள்ளே வருமான வரித்துறையினர் வேறு இருக்கையில்.. அயலூர்க்காரன் வேறு வந்து பிரச்சினை செய்வது.. பெரிய தலையிடியாக இருக்க,
வீட்டுக்கு வருமான வரித்துறையினர் ரைட் வந்திருப்பது.. அயலூர்க்காரனுக்கு தெரியாமல்.. அப்படியே மறைத்து.. அவர்களை சீக்கிரமே கிளப்பி விட நாடிய.. அந்தக் குரூரக் கிழவன்,
பேத்தியை எண்ணி…. கலக்கத்தோடு நிற்கும் தங்கவேலுவை நோக்கி, தணிந்த குரலில்,
“என்ன தங்கவேலு நீரும்?.. இந்த சின்ன விஷயத்த பெருசு படுத்திக்கிட்டு.. இப்ப என்ன கெட்டுப்போச்சு?? நீரும், நானும் ஒரே ஜாதிக்காரன் தானே? அப்புறம் என்ன? உன் பேத்திய.. என் பேரனுக்கு கட்டிக் குடுத்துடு.. பொம்பளப்புள்ள விவகாரம்.. காதும் காதும் வைச்ச மாதிரி.. விஷயத்த முடிச்சுப் போடாம.. இப்படி ஊரெல்லாம் கூட்டி வந்து.. இத்தனூஊஊண்டு விஷயத்த.. ஜவ்வு மாதிரி இழுக்குறீய்யேய்யாஆ”என்று நாசூக்காக சம்பந்தம் பேசிப் பார்க்க,
நேர்மையும், கண்ணியமும் தவறாத தங்கவேலு ஐயாவுக்கும் வந்ததே கோபம்!!
சீற்றம் கமழும் விழிகளுடன்.. அடுத்த நொடி ராஜமாணிக்கத்தின் கழுத்தை.. ஒற்றைக் கையால் இறுக்கிப் பிடித்தவர்,
பற்களைக் கடித்துக் கொண்டு, “உன்னய்ய்ய.. ம்மாதிரி ஆளுங்களோஓஓஓட வளர்ப்புனால தான்டாஆஆ… பொண்ணுங்களால இந்த காலத்துலேயும் நடமாட ம்முடியல… ஒவ்வொரு ஆத்தாளும், அப்பனும் பூ மாதிரி வளர்க்குற ப்பொண்ண.. நாசம் ப்பண்ண தைரியம் குடுக்குறதேஏஏ.. உங்கள மாதிரி ஆட்கள் தான்டா.. உன் வீட்டு வேலக்காரிக்கு ஒரு அநீதி நடந்தப்போவே..உன் பேரன தண்டிச்சிருந்தேன்னாஆ.. இன்னைக்கு இந்த நிலம உன் பேரனுக்கு வந்திருக்காஆஆது.”என்றவருக்கு என்ன தோன்றியதோ??
ராஜமாணிக்கத்தின் கழுத்தில் இருந்து கையை எடுத்தவர், சிவந்த கண்களுடன், பற்களை ஆத்திரம் தாள முடியாமல் கடித்துக் கொண்டு,
“நாஆஆ உன் வீட்டுப் படியேறி நீதி தேடி வந்தேன்னு நெனச்சீய்யாஆஆ?? … இல்ல.. உன் பேரனோட நிலமய தெரியப்படுத்த தான் வந்தேஏஏன்… சரவணனுக்கு குடுக்கப் போஓஓற தண்டன.. இனி பொண்ணுங்க மேல அத்துமீர்ற.. ஒவ்வொருத்தனுக்கும் பாடமாஆ இருக்கட்டும்” என்றவர்,
தன் கூட்டத்தினருக்கு கண்களால் “ம்”என்று ஜாடை செய்தது மட்டும் தான் தாமதம்!!
மாட்டைக் கட்டியிழுப்பது போலத் தான்.. அந்த ஊர் மக்களினால் இழுத்துச் செல்லப்பட்டான் சரவணன்.
அவருக்கு கொள்ளி வைக்க.. இறுதிக் காலத்தில் அவரைப் பார்த்துக் கொள்ளவென்று… இருக்கும் ஒரே ஆண் வாரிசு..சரவணன்.
அவன் நிலையைக் கண்டு, உடலெல்லாம் வெளவெளக்க..
பரிதவித்துப் போன அந்தக் கிழவனுக்கு..அன்று தான் முதுமை தட்டியது போல.. உடலில் ஓர் பலவீனம் உண்டாகத் தொடங்கியது.
கைகால்கள் துணுக்குற… அப்போது தான் சுயநினைவு பெற்றவர் போல, “ஐய்யோஓஓ.. என் பேஏஏரன்..சரவணாஆஆ..சரவணாஆஆ” என்று ஓலமிட்டுக் கொண்டே அவர் பின்னாடியே செல்ல,
அவனை இழுத்துக் கொண்டு சென்றனர்.. சிறுத்தோப்பு கிராமத்தின் ஊர்க்கோயில் தெருவுக்கு!!
பரிதிவேல் வீரனின் தாய்… ஒரு கண்ணியவதி.. கணவனையே கண்கண்ட தெய்வமாகக் கொண்டு பூஜித்து.. பதிவிரதையாகவே வாழ்ந்த சத்தியவதியை.. அத்தனை பேர் முன்னாடியும் மானபங்கப்படுத்தினாரோ?
அதே ஊர்க்கோயில் தெரு!!
அந்த ஊர்க்கோயில் தெருமுன்பாக இருக்கும்.. விஸ்தாரமான வேப்பமரத்தில்.. அயலூர்க்காரர்களால் கட்டப்பட்ட சரவணன்.. தனக்கு பாசக்கயிறை விதித்ததை உணர்ந்து கொண்டானோ??
தப்பவே முடியாத நிலை வந்ததும்.. ஒரு வித மந்தமான முகபாவனையுடன்.. ‘தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது?’ என்று தெரியாமல்..
போதைப்பொருள் உட்கொண்டவன் போல.. தரை பார்த்து குனிந்து நிற்கலானான்!!
சரவணன்.. ஒரு வகையில்.. அவன் நிலை, ‘பரிதாபத்துக்குரியது’ என்று சொல்லின்.. வாசகர்கள் என்னோடு இணையச் சண்டைக்கு வரக்கூடும்!!
ஆயினும்.. அது தான் உண்மை. இப்படியாப்பட்ட சரவணனும்.. ஒருவகையில் பரிதாபத்துக்குரியவனே தான்.
அவன் மீசை முளைத்த நாளில் இருந்து.. பெண் சுதி தேடி அலைந்த.. காமுகன் அல்ல அவன்!!
சின்ன வயதில் இருந்தே.. அத்தை மகள் மென்னிலா தனக்குத் தான் என்று.. தூய காதலுடன் வளர்ந்தவன் அவன்.
பட்டணத்தில் படித்த மென்னிலா.. ஊருக்கு வரும் போது அணியும் அதிநவீன அரைகுறை ஆடைகள் வழியாகத் தெரியும் தன் முறைப்பெண்ணின் அங்கலாவண்யங்களைப் பார்ப்பவனுக்கு.. அப்போது கூட பெண் சுதி இருந்ததா? புத்தி அலைபாய்ந்ததா? என்று கேட்டால்.. இல்லவே இல்லை என்று கதையைத் தொடர்பவர்களுக்கு புரியும்!!
சரவணன்.. மென்னிலாவுக்காக..அவள் மேல் பூண்ட அன்புக்காக.. காத்திருந்து கண்ணியம் காத்து திருமணத்தின் பின்னர் அவளை பெண்டாள நாடினானே தவிர, ஒரு நாளும் அத்துமீற நாடியதே இல்லை !!
ஆனால் என்றைக்கு.. மென்னிலா – பரிதி காதல் விவகாரம் அறிந்து.. அதைத் தாங்க மாட்டாது.. தன் காதலை உணர்த்த..மென்னிலாவை அத்துமீறித் தொட்டானோ??
அன்றிலிருந்து அவனை சிறுகச் சிறுகப் பிடித்தாட்டலானது பெண் சுதி தேடச் செய்யும் காமப்பேய்!!
மறுநாளே.. மென்னிலா பரிதியோடு தாலியும், கழுத்துமாக வந்து நிற்க, வலி, அவமானம்,
‘அப்படி தன்னிடம் இல்லாதது பரிதியிடம் என்ன இருக்கிறது?’ என்ற கேள்வி தந்த வெறி.. கூடவே மென்னிலாவின் பூவுடல் தந்த சுகம்.. என எல்லாமும்.. அவனை ஒரு காமப்பித்தனாக மாற்றி..
ஆசையைக் கிளறிவிட.. அது ஒரு கட்டத்தில் முத்திப் போய்.. அவனது ஆசைக்கு பலியான ஒரு பெண் தான் பணிப்பெண் மஞ்சு!!
எப்போதும் மஞ்சுவை அப்படியான கண்ணோட்டத்தில் பார்த்திராதவனுக்கு, அன்று மஞ்சுவிடம் அத்துமீறியதும்,
‘ஐய்யைய்யோ.. உணர்ச்சிகள் ததும்ப.. மூளை மழுங்கி..இந்தக் குற்றத்தை செய்து விட்டோமே?? லண்டனில் இருக்கும் மென்னிலா.. இதை அறிந்தால்?” என்று அவன் குற்றவுணர்வில் தத்தளித்த போது தான்… அது நடந்தது.
ராஜமாணிக்கம் வேறு வந்து, ‘மஞ்சு பலாத்காரம் செய்யப்பட்டதை மறைக்க.. ரொம்ப உறுதுணையாக இருந்து விடவே..
அது குற்றவுணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்த சரவணனனின் மனநிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றலானது.
என்ன நடந்தாலும் காப்பாற்ற தாத்தாவின் செல்வாக்கான ஆள்புலம் இருக்க, லண்டனில் இருக்கும் மென்னிலாவோ.. உள்ளூரில் நடப்பது எதையும் அறியாதிருக்க.. அது வேறு சுதந்திரமான மனநிலையைத் தோற்றுவித்தது அவனுக்கு.
சுருங்கக் கூறின்.. துணிந்து தப்பு செய்ய.. தைரியம் பிறந்தது சரவணனுக்குள்.
இந்த உண்மையை அறிந்த பரிதிவேல் வீரன்.. அதனால் தான் சரவணனை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்,
“தாத்தா வேட்டிக்குள்ளேயே வளர்ந்த பய” என்று விழிப்பதுவும்,
அதைக் கேட்டதும் அந்த சொல்லில் இருக்கும், “தாத்தாவின் செல்வாக்கினால் தண்டனையில் இருந்து தப்பித்தவன்” என்று சொல்லாமல் சொல்வது புரிந்து.. சரவணன் சினப்பதுவும் நடக்கும்!!
அதன் பின்.. சம்சாரியாகாமலேயே.. பெண் சுகம் தேடி அலையும் கிறுக்கனாக மாறியிருந்தான் அவன்.
என்ன தான் சரவணன் காமம் தேடும் ஆணாக இருந்தாலும் கூட, சின்ன வயதில் இருந்தே மனதுக்கு சொந்தக்காரியாக “மென்னிலா”வை வடித்துக் கொண்டதாலோ என்னவோ,
அவளை அப்போதும் பெண்டாளவே துணிந்தான்.
அதனாலோ என்னவோ.. மென்னிலா இலங்கை வந்த பின்னரும் கூட தன் காமுகப் பக்கத்தை.. அவளிடம் திரை விலக்கி காட்டவேயில்லை அவன்!!
பரிதியாக நிரூபிக்கும் வரை.. அவளுமே அறிந்து கொள்ள சந்தர்ப்பமும் நேர்ந்திருக்காது.
அனைத்துப் பெண்களிலும் காமம் தேடுவது.. ஒரு வகையில் ஒரு மனநோய்.ஒருவேளை சரவணன்..மென்னிலாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வந்திருந்தாலும் கூட,
மென்னிலாவை மனைவியாக வைத்துக் கொண்டு, காமுகனாகவே அப்போதும் அவன் அலைந்திருக்கக் கூடும்!!
ஒரு நல்லவன்.. பெண்கள் விஷயத்தில் அத்துமீறும் மனநோய்க்காரனாக மாறியது கூட.. ஒருவகையில் பரிதாபத்துக்குரியது தானே??
அப்படி.. இப்படி என்று.. இறுதியில்.. அடுத்த ஊர் தலைவர் பேத்தி மீது கை வைத்ததில் சரவணனுக்கு இறுதிக்காலமே வந்தது.
சட்டத்தின் பிடியில் தப்பியவன், இன்று தங்கவேலுவின் உருவில் வந்த ஊழ்வினையின் பிடியில் அகப்பட்டுக் கொண்டான்.
அந்த ஊரில் உள்ள மக்களும் மெல்ல மெல்ல அந்த முச்சந்தி பக்கம் குவிந்து.. நடப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்க்கத் தொடங்க,
கோபாவேசமும், கொலைவெறியும் மிகுந்த அயலூர்க்காரர்கள், தங்களின் ஊர்த்தலைவர் ‘தங்கவேலுவின்’ கண்ணசைவுக்காக காத்திருக்க,
தங்கவேலுவும்.. தன் கைகளை மிடுக்குடன் முதுகுக்குப் பின்னால் கட்டிக் கொண்டு,
சுற்றிவர இருந்த மனிதர்களைப் பார்த்து, “இப்ப குடுக்கப் போற தண்டனையில.. பொண்ணுங்கள தப்பான கண்ணோட்டத்துல பார்க்கவும்.. இனி பயம் வரோணும்!..ம்ம்!” என்றவர்
கண்களால் ஜாடை காட்டியதும் தான் தாமதம், அயலூர்க்காரர்கள் கையில் ஏந்தியிருந்த கற்கள்.. சரவணனை நோக்கி குறிபார்த்து எறியப்பட்டன.
அவனது மேனி எங்கும் வந்து தைத்த கற்களின் விளைவால்.. அவனது வெள்ளைச் சட்டையில்.. பழைய இரத்தக்கறைக்கும் மேலாக.. புது இரத்தம் நனைக்கத் தொடங்கியது!!
நடக்கும் சம்பவத்தைப் பற்றி.. யாரோ மஞ்சுளாவின் தாய்க்கு தகவல் சொல்ல.. வீறு கொண்ட பெண்புலியைப் போல சம்பவ இடத்துக்கு விரைந்தவர், அங்கு நடப்பதை.. சுகமான விழிகளுடனேயே.. இமைக்காமல் இரசித்துப் பார்க்கலானார்.
இந்த தரிசனம்.. இன்னும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் கூட… இனி கிடைக்காது என்பது போல.. அவரது நெஞ்சமெல்லாம் ஆலங்கட்டி மழை பெய்தது போல குளிர்ந்து போனது.
தன் பெண்ணுக்கு நேர்ந்த அநீதிக்கு, தங்கவேலு ஐயாவின் உருவில் நீதி கிடைப்பதாகவே எண்ணிக் கொண்டார் அவர்.
நல்லதோ.. கெட்டதோ.. நாம் இன்னுமொருவருக்கு செய்யும் செயல்கள்.. நியூட்டனின் விதி போல!!
அது கர்மாவாக… ஊழ்வினையாக.. காலத்தின் திரும்பலாக மீண்டும் உரியவரையே வந்து சாரும்!!
அன்று தன் மருமகள் வள்ளியம்மை.. வேறு ஜாதிப் பெண் என்பதற்காக, எந்த இடத்தில் வைத்து.. எந்த ஊர்மக்கள் பார்க்க மானபங்கப்படுத்தினாரோ??
அதே இடத்தில்.. அவரது பேரனை வைத்து.. அழகு பார்க்கிறது காலம்!!
தன் மகள் வயிற்றுப் பிள்ளை இல்லை என்பதனால், மென்னிலாவைத் தன் வாரிசாக எண்ணாத அவர் மனம், வேறு ஜாதிப் பெண்ணின் கருவில் உதித்தவன் என்பதால் பரிதியை தன் பேரனாகக் கூட நினைக்காத அவர் மனம்..
இன்னும் ஏன்.. பெண்ணாக பிறந்து விட்டதால்.. தன் மகள் சிவகாமியம்மாளைக் கூட.. ஒட்டி உறவாடாத அவர் மனம்…
தன் ஒரே பேரனாக, ஒரே வாரிசாக, ஒரே குல ஜீவனாக எண்ணியிருந்த சரவணனுக்காக இரங்குகிறது; அல்லல்படுகிறது.
அவமானம்.. அந்த ஐந்தெழுத்துச் சொல் தரும் கொடூர வேதனையை இத்தனை வருடங்கள் கழித்த பின்னர்.. உணர்ந்து கொண்டிருந்தான் கிழவன்.
அந்த ஊரில் மிடுக்காக திரிந்த ராஜமாணிக்கம், தன் பேரன் கல்லடி வாங்குவதை தாங்க முடியாமல், கல்லெறியும் ஒவ்வொருத்தனின் கால்களிலும்..
தள்ளாத வயதில்.. குனிந்து குனிந்து விழுந்து எழுந்து கொண்டிருந்தார் ராஜமாணிக்கம்.
“ஐய்யோஓஓ.. என் பேரன விட்ருங்கப்பாஆஆ… என் பேரன விட்ருங்க.. அவன் ஏதோ தெரியமா பண்ணிட்டான்ப்பாஆ..” என்று கண்ணீர் மல்க கெஞ்சியவர்,
அயலூர்க்காரர்கள் அடிப்பதை தன்னூர் காரர்கள் வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டவர், தன் மக்களை நோக்கி,
வெறித்த கண்களுடன், “என்னய்யாஆஆ.. பார்த்துட்டிருக்கீங்க.??. நம்ம சரவணன.. அசலூர்க்காரன் போட்டு அடிச்சிட்டிருக்கான்.. கை கட்டி வேடிக்க பார்த்துட்டிருக்கீங்க.. இது தான் நீங்க எனக்கு காட்டுற விசுவாசமாஆ?” என்று கேட்டவர்,
ஒருவேளை தங்கவேலு ஐயா மாத்திரம் வேற்று ஜாதியாக இருந்திருந்தால்.. இரு ஊர்களுக்கும் இடையில் ஜாதிக்கலவரத்தைக் கூட.. தூண்டி விட்டிருப்பார் அவர்!!
ஆனால் தங்கவேலு ஐயா கூட.. அவர் ஜாதியாகப் போனதும் கூட ராஜமாணிக்கத்துக்கு துரதிர்ஷ்டமாகப் போனது.
வருமான வரித்துறையினர் சோதனையின் போது நேரலையாக வெளிவிடப்பட்ட அவரது காணொளிப் பேச்சில், கொதித்துப் போயிருந்த இளைஞர்களில் ஒருவன்,
ஆத்திரம் துளிர் விட, “நாங்க தான் ஒண்ணும் தெரியாத முட்டாப் பயலுவ ஆச்சே?? அஞ்சோ பத்தோ போட்டாஆஆ.. வாலை ஆட்டிக்கிட்டு அடங்கிப் போற ஆட்களாஆஆச்சே.. நாங்க எதுக்கு.. உம்ம பேரன்.. ஒரு பொம்பள பொறுக்கிய காப்பாத்தணும்??” என்று கேட்க,
பேசியது அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்புவிக்கும் இளைஞனை அதிர்ச்சி மல்கப் பார்த்தார் ராஜமாணிக்கம்.
அதிலும் இன்னொரு ஆடவன், கூட்டத்தை பிளந்து கொண்டு வந்து, “கோயில் பணத்த களவாண்ட களவாணி பய நீஈஈ.. உன்னய சும்மா விடுறோம்னு நெனக்காத…எப்படியும் நீ.. கம்பியெண்ண போறேன்னு தான் அமைதியா பொறுத்துகிட்டு இருக்கோம்”என்று சொல்ல,
கிழவனுக்கு.. திரும்பும் இடமெல்லாம் சுவற்றில் மோதுவது போல மூச்சு முட்டலானது.
சரவணன் வேறு.. அடிவாங்கியே செத்துவிடுவான் போல இருக்க, ஓடி வந்து.. சரவணன் முன்னாடி கேடயம் போல.. கண்ணீர் மல்க நின்ற கிழவனுக்கும்,
நெற்றியைக் குறிபார்த்து வந்த கல்லொன்று பட்டு.. இரத்தம் குபீரிட்டது.
“அடிக்காஆஆதீஈங்க… அடிக்காஆஆதீஈங்க”என்று கை கூப்பி கெஞ்சிய போதும் கூட யாரும் அதை நிறுத்தவுமில்லை; உள்ளூர்க்காரர்கள் வந்து தடுக்கவுமில்லை.
ஒருகட்டத்தில் கல்லடி தாங்காது இரண்டாக மடிந்து கீழே விழுந்த ராஜமாணிக்கத்தின் நிலையை.. அன்றைய வள்ளியம்மையின் நிலையை ஒத்திருந்தது.
வள்ளியம்மை அன்று அனுபவித்த அவமானம், வலி, அந்த இக்கட்டான மனோநிலை எல்லாமும்… அவரையும் ஆட்கொண்டிருந்தது.
அப்போதும் கூட.. தன் இழிநிலையை புறம் செய்து, தவழ்ந்து தவழ்ந்து வந்து தங்கவேலுவின் கால்களைப் பிடித்துக் கொண்ட கிழவன்,
இரத்தமும், கண்ணீரும் இரண்டற வழிய, “யேப்பாஆஆ.. தங்கவேலு..நிறுத்தச் சொல்லுப்பாஆஆ… உன் கால்ல விழுந்து கேட்டுக்கிடுறேஏஏன்…என் குலத்த அழிச்சிராஆஆதய்யாஆ.. ” என்று கெஞ்ச,
தன் குலதெய்வமாக கருதும் பேத்தியை பாழ்ப்படுத்தி விட்டு, ‘குலத்தை’ பற்றி பேசும் கிழவன் மேல் வெறுப்பு தான் வந்தது அனைவருக்குமே.
ராஜமாணிக்கத்தை இகழ்ச்சியுடன் குனிந்து பார்த்தவர், “நிறுத்தோணுமோஓஓ?? எல்லாஆஆத்தையும் நிறுத்தோஓஓணுமோஓ?? சரி.. அவர் சொன்னாஆ நிறுத்துரேஏஏன்”என்றவர், ராஜமாணிக்கத்தின் பின்னால் கை காட்ட,
கை காட்டிய திசை பக்கம் பார்த்தவர் அதிர்ந்து தான் போனார்.
அங்கே தன் கருகரு மீசை.. அவன் இதழோடு சுளித்து.. மேலேறித் தெரிய, சிவப்பேறிய விழிகளுடன், இடுங்கிய புருவங்களுடனும்,
தன் நெஞ்சு நிமிர்த்தி, முதுகுக்குப் பின் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தது சாட்சாத் பரிதிவேல் வீரனே தான்!!
‘இவன் எப்போது இங்கு வந்தான்?’ என்பது போன்ற பார்வையில் கிழவன், அதிர்ந்து நிற்க…
அவனது விழிகளோ.. ஈவிரக்கம் என்பதை துளியளவு கூட சிந்தாமல்.. நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.
எப்போது அந்தக் கிழவன்.. கரு சுமந்து நிற்கும் மென்னிலாவைக் கொள்ள, முத்துவை அனுப்பினாரோ??.
அதை முத்து வாயிலாக அறிந்து கொண்ட மறுவிநாடியிலிருந்தே.. கிழவனுக்கான ஈவிரக்கத்தை எல்லாம் சுத்தமாக துடைத்து தூர எறிந்தும் விட்டிருந்தான் பரிதி.
எல்லாரையும் போல சரவணனின் வலது கையான முத்துவை.. நேற்றிரவு கொலைகாரனாக பார்த்ததும்,
‘ சரவணன் தான் இதுக்குப் பின்னுள்ள காரணகர்த்தா’ என்று தான் அவனும் எண்ணினான்.
ஆனால் பெண் தேடி அலையும் சரவணனுக்கு, மென்னிலாவை கொல்ல ஆள் ஏவும் அளவுக்கு யோசனையும் இல்லை;நேரமும் இல்லை.
முத்துவை தக்க தருணத்தில் உபயோகித்துக் கொண்டது என்னமோ கிழவனே தான்.
வேற்று ஜாதிப் பெண்ணுக்கு பிறந்த பரிதியின் குழந்தை.. நாளை எதிர்காலத்தில் தாத்தா என்று உறவு கொண்டாடிக் கொண்டு,
சொத்தில் பங்கு கேட்டுக் கொண்டு வந்து விடுமோ என்ற அச்சத்தில்.. கருவோடு மென்னிலாவையும் கொல்ல ஏவியிருந்த அந்தக் கிழவன்.. மானுடத்துக்கே ஓர் அவமானம் தான்!!
அவரது கொடிய எண்ணத்தை.. அடி தாங்க முடியாமல் கக்கிய முத்து சொன்னது அனைத்தும் ஞாபகம் வர, பரிதியின் கண்களுக்கு ராஜமாணிக்கம், “தன் குழந்தையை கொல்ல வந்த கொலைகாரனாகவே’ தோன்றினார்.
தன்னை நோக்கி.. உயிர்ப்பிச்சை வேண்டி… மூச்சிறைக்க இறைக்க, நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஓடிவரும் கிழவனையே அசிங்கத்தைப் பார்ப்பது போல பார்த்தான் அவன்.
எல்லாம் கைமீறிப் போனதும் அப்போது தான் பேரன் என்ற உறவே நினைவில் வந்தது போல,
அவன் காலில் விழுந்த கிழவன், அண்ணாந்து கை ஒரு கூப்பிப் பார்த்தவனாக,
குழறும் குரலில், “பரிதீஈஈ.. காப்பாத்துப்பா.. என்னயயும்.. உன் தம்பீஈஈ சரவணனயயும் காப்பாஆத்த்ப்பா… உன் தம்பீஈஈ.. ஏதோ தெரியாஆம செஞ்ச்ப் பொட்டாஆன்ப்பாஆஆ.. நீயும் எனக்கு சரவணன் மாதிரி தான்ய்யாஆஆ… .. பரிதீஈஈ..”என்று கெஞ்சியதைக் காண…
உள்ளுக்குள் இத்தனை வருடங்களாக.. அவன் தாய்க்காக எரிந்த வன்மத்தீ கொஞ்சம் கொஞ்சமாக தணிவது போல இருந்தது அவனுக்கு.
அவன் முகம்அரக்கனை வதம் செய்ய வந்த தேவர்களைப் போல… அன்று விகசித்திருந்தது.
எப்போதுமே.. எதற்குமே பணிந்து போகாத ராஜமாணிக்கம்.. இன்று பரிதியின் கால்களில் உயிர்ப்பிச்சைக் கேட்டு நிற்கிறான்.
அவனோ கமுக்கமாக வெற்றிச் சிரிப்பு உதிர்த்தவன், தீவிரமான குரலில், “உன் வீட்டுக்கு திடீஈஈர் ரைடு.. சரவணனுக்கு இந்த தண்டன.. இதெல்லாம் தானாவே அந்தக் கடவுள் குடுத்ததுன்னு நெனச்சுக்கிட்டீய்யாஆ.. கெடயவே கெடயாது.. எல்லாமே என் ஸ்கெட்ச்சு..” என்றவன் விழிகள், பழிவன்மம் தீரும் சுகத்தில் பளபளத்தது.
ராஜமாணிக்கத்தின் சட்டைக்காலரைப் பற்றி எழுப்பாட்டியவன், “நாஆனு மென்னிலாவுக்கு அடிச்சா உனக்கு வலுக்கூம்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன் கெழவ்வாஆஆ.. முதல்லய்யேஏஏ.. சரவணன அடிச்சிர்ருக்கணூஊஊஊம்.. அப்ப.. இங்க வ்வலிச்சிருக்கும்ல?? பெண்களை தெய்வமா மதிக்கத் தெரியாத உன்னய ம்மாஆதிரி ஆட்களுக்கும், சரவணனுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்!! நாஆஆஆன் உனக்கு வேண்டாத பேரனாச்சேஏஏ?? இனியும் அப்படிய்யேஏ இருந்துக்குறேன்.. ர்ராஜமாணிக்கம்”என்று எகத்தாளமான குரலில் கூறியவனின் செய்தி கேட்டு,
கையாலாகாத நிலைக்குத் தள்ளப்பட்ட கிழவன், அடுத்து பரிதிவேல் உரைத்த விஷயம் கேட்டு திக்பிரமை பிடித்தாற் போன்று தான் ஆனான்.
அவனது விழிகளில் செந்நரம்புகள் ஓட, கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரிய, உறுத்து விழித்தவன்,
“இந்த தண்டன.. என் அம்மா வள்ளியம்மைக்காஆக!! .. பெத்த பொண்ணுன்னு கூட பார்க்காம.. ‘மென்னிலா அம்மா’ என் வீட்டுப் படியேறி வந்தாங்கன்ற… ஒரே காரணத்துக்காக.. அவங்களை அடிச்சே கொன்னீய்யே.. அதுக்காஆஆஆக!.. அப்பாவிப் பொண்ணு மஞ்சுக்காஆஆக! என் மென்னிலாஆஆவுக்காஆஆக!!” என்று அவர் அநீதி இழைத்த பெண்களின் பட்டியலில்,
யாரும் அறியா பரம இரகசியமான மென்னிலாவின் தாய், தன் மகள் ‘சிவகாமியம்மாளின்’ பெயரையும் சொல்ல.. திடுக்கிட்டு விழித்தான் கிழவன்.
ஆம், சிவகாமியம்மாளின் மரணம் என்ன இயற்கையாக நிகழ்ந்ததா?
இல்லவே இல்லை!!
காலையில் கொதிக்கும் மேனியுடன்.. பரிதி வீட்டு வாசல் வந்து.. கை கூப்பி, ‘என் பொண்ண என் கூட அனுப்ச்சிருய்யாஆஆ’என்று கெஞ்சு விட்டுச் சென்ற சிவகாமியம்மாள்.. மாலையில் பிணமானதும் எப்படியாஆஆம்??
கிழவனும், சரவணனும் சேர்ந்து, பரிதி வீட்டு முன்னிலையில் இரந்து கேட்ட… சிவகாமியம்மாள் செய்தது இழிசெயல் என்று கருதி… அடித்தே கொன்றது…
எப்பேர்ப்பட்ட இறுகிய இதயம் கொண்டவருக்கும் கண்களில் ஈரம் வரவழைக்கும்!!
அடிவாங்கி… ஞமஞமத்துப் போயிருக்கும் தாய்முகம் கண்டால்.. எங்கே மென்னிலா மனம் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்துக்காகத் தானே..தாயின் ஈமக் கிரியைகளுக்கு செல்ல விடாமல் அவனும் அவளை தடுத்தான்.
அப்படி தடுத்ததுவே.. தன்னை ஒரு வில்லனாக மனைவிக்கு விம்பம் போட்டு காட்டுகிறது என்று அறியாமல் போனான் ஒரு முரட்டுக் குழந்தை!!
வெறுத்துப் போன முகத்துடன், “எப்படிய்யாஆஆ.. ப்பெத்த பொண்ண.. நோய்ல இருக்கும் போது அடிச்சுக் கொள்ள உனக்கு மனசு வந்ததூஊ? முதல்ல.. மனசுன்னு ஒண்ணு இருக்காய்யாஆஆ உனக்கூஊ…?”என்று கேட்க, தன் குட்டு அனைத்தும் அறிந்திருப்பது கண்டு விக்கித்துப் போனான் கிழவன்.
பரிதியொருவனைத் தவிர.. தன்னை இந்த இக்கட்டான நிலையில் இருந்து காப்பார் யாருமிலர் என்று புரிந்து கொண்ட கிழவனோ,
மீண்டும் பரிதியின் காலில் விழுந்து கெஞ்சியவனாக, “யப்பாஆஆ.. நான் பண்ணது தப்பு தான்பா.. கரிசன காட்டு.. க்காட்டுப்பாஆஆஆ..”என்று சொல்ல, அவன் வெகு வெகு நிதானமாக கிழவன் முகம் பார்த்தான்.
“என் அம்மா உன் கால பிடிச்சு கதறினப்போ.. நீ கரிசனம் காட்டினீய்யா?? .. இல்லல?? .. பெத்த பொண்ணுக்கு கரிசனம் காட்டினீய்யா?? .. இல்லல?? மஞ்சுவுக்கு ஒரு அநீதி நடந்தப்ப கரிசனம் காட்டினீய்யா?? .இல்லல? . அப்புறம் நான் மட்டும் என்ன மயித்துக்கு.. கரிசன காட்டணும்?? .. நான் நல்லவன் கெடயாஆஆதுடாஆ கெழவ்வாஆஆ…. கெட்டவன்!!!..”என்றவன்,
அவர் உயரத்துக்கு குனிந்து, மெல்லிய குரலில், “நீ கைய வைச்சது என் ஆண்டாளு ம்மேல.. சும்மாஆ விடுவேனா சொல்லு?? பயப்புடாத.. என்னய கொல்ல ஆள் அனுப்பினது நீ தான்னு.. கடைசி வரை உன் பேத்திக்கிட்ட விஷயத்தை சொல்லப் போறதில்ல… அதுவர சந்தோஷப்பட்டுக்க…” என்றவன், நிராதரவாக எழுந்தவன்,
தங்கவேலுவைப் பார்த்து, அவர் மகளுக்காக ஆழ்ந்தவி இரங்கும் பார்வையொன்றை உதிர்த்தவன், ‘நீங்க செய்ய வேண்டியதை செய்யுங்கள்’ என்று வாயால் சொல்லாமல்,
செயலால் உணர்த்தி விட்டு தன் காரை நோக்கி செல்ல,
சூடு, சுரணை மறந்து உயிர் ஒன்றையே காத்துக் கொள்ள நாடிய கிழவன், “பரிதீஈஈ.. பரிதீஈ..” என்றவராக பின்னாடியே ஓடினார் அவர்.
அவனுடைய கார், யாருக்காகவும் காத்திருக்காமல் பறந்தது.
ஒரு வரண்டநிலத்தில் இருந்த காடொன்று.. சூரியனின் உஷ்ணம் தாங்க முடியாமல்… பற்றியெரியத் தொடங்குகிறது. எரிகிறது ;எரிகிறது ; ஓயாமல் நெடுங்காலம் எரிந்து கொண்டேயிருக்கிறது.
காட்டுத்தீ பற்றி எரிந்த காட்டில்… அந்த தீயை அணைக்கும் வகையில்… சோவென்று பெய்தது ஓர் மழை!!
வெந்து தணிந்த காடு.. மழையின் குளிர்ச்சியில்… முற்றாகக் கழுவித் துடைக்கப்பட்டு… மீண்டும் ஒரு பசுமையான காடாக நிச்சயம் முளைவிடும்!!
இதில்.. அந்த வரண்ட காடு உண்டல்லவா? அது தான் பரிதிவேல் வீரனின் அடிபட்ட முரட்டு இதயம்!!
பற்றியெரிந்த ஓயாத காட்டுத்தீ இருக்கிறதல்லவா? அது தான் சித்தி பார்வதியம்மாளால் விதைக்கப்பட்ட.. என்றென்றும் நீர்த்துப் போகாத ராஜமாணிக்கம் மேலுள்ள வன்மத்தீ!!
அதிலும் அந்தத் தீயை அணைக்கும் வகையில் வந்த வான் மழை.. அது மென்னிலாவின் காதல் மழை!!
ஆம், காதல் மழை..அவனது இதய வன்மத்தீயை அணைக்கவே செய்தது!!
அவன் முரட்டு இதயம்.. அவளது காதல் என்னும் நேச மழையில்.. மீண்டும் பசுமையாக முளைவிடும் என்பது பரிதிவேல் வீரனின் நம்பிக்கை!!
ராஜமாணிக்கத்தைப் பழிவாங்குவதாக எண்ணி.. தன் உயிரினும் இனிய ஆண்டாளைத் தண்டித்த போது.. வலியில் துடித்த ஒரு முரட்டு இதயம்..
இன்று ராஜமாணிக்கத்தை நேரடியாக தண்டித்ததும் ஆசுவாசம் பெறுகிறது.
மழையே இல்லாத வரண்ட பூமியில்.. பருவக்காற்று வீசி.. மேகம் கருக்கட்டி.. தூறல்கள் விழும் போது.. மனம் உவப்பது போல.. உவப்பில் மிளிர்ந்து கொண்டிருந்தது அவன் மனம்!!
ஆனால் அவனுள் பற்றியெரிந்த வன்மத்தீ.. இன்றோடு அணைந்தது.
இவனால் மென்னிலாவுக்குள் பற்றியெரிந்து கொண்டிருக்கும் தீ அணைவது எப்போது??
அணையவும் கூடுமா??
அன்றிரவு….
என்றுமேயில்லாத உவகை இதயத்தில் பொங்க, ஆசையோடு மனைவியைக் கட்டியணைத்த வண்ணம், காதலோடு கிறங்கும் குரலில், “ஆண்டாஆஆஆளுஊஊஊஹ்”என்று தன் ஒட்டுமொத்த காதலையும் அவளுக்கு உணர்த்த விழைந்தான் பரிதி!!
கணவனின் உவகைக்கான காரணம் அறிந்தும், அவனது செயல்கள் யாவற்றையும் அறிந்தும், அவனது சந்தோஷத்தை ஏற்க முடியாமல்.. அவன் கையை தன்னிலிருந்தும் தட்டிவிட்ட மென்னிலா…
அவனுடன் இழைவது போல நடிக்கவே முடியாமல் தான் நின்றாள்.
அவளது விலகல் வலியை கொடுத்தது அந்த முரடனுக்கு.
இவளோ அதை அலட்சியம் செய்தவளாக, அடிபட்ட குரலில், “இன்னைக்கு பண்ணதை ஏன் மாமா.. அன்னைக்கே செய்யலை?.. அன்னைக்கு பழிவாங்க நான் மட்டும் தான் கிடைச்சேனா?? .. என் காதல் மட்டும் தான் கெடச்சுதா??”என்று கேட்டு விட,
இதயத்தில் முள் தைத்தாற் போன்ற வலியுடன், தன் ஒட்டுமொத்த சந்தோஷமும் வழிய நின்றான் பரிதிவேல் வீரன்!!
மனைவியின் வலி தரும் கேள்விக்கு அவனிடம் உகந்த பதில் இல்லை!!
ஆயினும் தப்பை உணர்ந்த வலி மட்டும் மலையளவுக்கு கொட்டிக்கிடந்தது அவனுள்.
அவளது கேள்வி தந்த அதிர்வு அது அபாயகரமானது. ஆயினும் புண்ணான அவன் இதயத்திற்கு மருந்தாக அமைவதும் கூட, இதே அதிர்வில் பூத்த அவனது காதல் மலரே!!
காதல் தானடி என் மீதனுக்கு?
(பதில் விரைவில் நவில்வாள். )
காதல் தானடி என் மீதுனக்கு?
[25]
அன்று விடிந்த பொழுது யாருக்கு நலவாக இருந்ததோ.. இல்லையோ??
சிறுத்தோப்பு கிராமத்தின் பெரும்புள்ளியாக செல்வாக்குப் பெற்றிருந்த முரட்டுக் கிழவன் ராஜமாணிக்கத்துக்கு மட்டும் நலவாக இருக்கவேயில்லை.
காலம் இருக்கிறதல்லவா? காலம்!! அது பொல்லாத நியூட்டனின் மூன்றாம் விதி போல!!
காலமும் சரி, நியூட்டனின் மூன்றாம் விதியும் சரி.. இரண்டுமே.. தன் விசைக்குச் சமனான எதிர் விசையொன்றினைத் தந்து விட்டே தான் நிற்கும்!!
சிறுத்தோப்பு கிராமத்தின் மக்களை.. கிட்டத்தட்ட சர்வாதிகாரி போல அடக்கி ஆண்டு கொண்டிருந்த கிழவன் ராஜமாணிக்கத்தின் ஒட்டுமொத்த கொட்டத்துக்கும், காலம் வைத்த கெடு முடியும் நாளும் இன்று தானோ?
ஆம், தன் வாழ்நாளில், ‘இப்படியொரு நிலை வரும்’ என்று எதிர்பார்த்திராதவர், அன்று நிலை தடுமாறித் தான் போனார்.
முற்பகல் வேளையில் எல்லாம்.. தன் உரமேறியிருந்த திண்ணிய உடலுக்கு, நல்லெண்ணெய் மஸாஜ் செய்த பின், உச்சிக்கு வெயில் ஏறியதும்..
வெயிலின் உஷ்ணத்தினால் சூடான மிதமான தண்ணீரில் குளிப்பது கிழவனின் அன்றாட வழக்கம்!!
வழமைப்போல இன்றும் அப்படித்தான்.. உடல் முழுக்க நல்லெண்ணைய் தேய்த்து நின்றிருந்தவருக்கு, தலைக்கு தண்ணீர் வார்க்கத் தான் நேரம் கூட வாய்க்கப் பெறவில்லை!!
அவர் செய்த வினைப்பயன்கள் எல்லாம் ஊழ்வினையாக உருவெடுத்து.. இந்தக் கோலத்தில் வந்து நிற்கும் என்று எதிர்பார்த்திரா ராஜமாணிக்கம்,
நல்லெண்ணெய் மசமசக்கும் உடலுடனும், கையில்லாத உள்பெனியன், வேஷ்டி சகிதம்… சித்த பிரம்மை பிடித்தாற் போன்று,
நடுக்கூடத்திலே.. வெறுந்தரைத் திட்டிலே… குந்தியிருந்தார்!!
நரைத்த முடி கொண்ட உச்சந்தலையில்.. வைத்த நல்லெண்ணெயின் விளைவாக…. தலையிலிருந்து இறங்கிய சூடு.. அவர் கண்களில் பிரதிபலித்ததுவோ?
இல்லை.. நிஜமாகவே நடப்பது அனைத்தும் கைமீறிப் போவது அறிந்து.. ஆத்திரத்துடன் நின்றிருந்ததன் சிவப்பு பிரதிபலித்ததுவோ…
அவரது சீறும் விழிகள் இன்று நன்றாக சிவப்பேறிப் போயிருந்தது.
அவர் பார்வையோ… தன்னை சுற்றி நின்றிருக்கும்.. அரசாங்க அதிகாரிகளுக்கு பதில் சொல்ல முடியாத வண்ணம்.. விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது!!
காலையில் எப்போதும் சுமூகமாக விடிந்த பொழுது.. முற்பகல் வேளையானதும்.. இத்தனை நாரசமான நாளாக அமையும் என்று அவர் என்ன கனவா கண்டார்??
ஆம், கனவு.. இது அத்தனையும் கனவாகப் போய் விடக்கூடாதோ? என்று தான் நப்பாசை கொண்டது கிழவனின் மனம்!!
சற்று நேரத்திற்கு முன்னர், அவர் வீட்டுக்கு முன்னாடி நாலைந்து கார்களும், ஒரு ஜீப்பும் வந்து.. திடுதிப்பென்று வந்து நிற்க,
அதில் இருந்து இறங்கினர் முழுநீளக்கை மற்றும் ‘டக் இன்’ செய்யப்பட்ட சட்டை, பேன்ட்டுடன் இருபது இருபத்தைந்து ஆடவர்கள்.
பார்த்ததுமே, ‘அரசாங்க உத்தியோகத்தர்கள்’ என்று முகத்தில் எழுதி ஒட்டினாற் போன்ற இறுமாப்புடன் வந்த அந்த ஆடவர்களைக் கண்டு,
நடுக்கூடத்தில் நல்லெண்ணெய் மஸாஜூடன், வெட்ட வெளிக் கூரை மூலம் வந்த சூரிய வெளிச்சத்தில்.. சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருந்த ராஜமாணிக்கத்தின் விழிகள் இலேசாக இடுங்கத் தான் செய்தது.
அவரை சட்டையே செய்யாமல் உள்ளே வந்த உத்தியோகத்தர்கள், அவரிடம் ஒரு ‘சர்ச் வாரண்ட்டைக்’ காட்டி, “மிஸ்டர். ராஜமாணிக்கம்..நாங்க வருமான வரித்துறையில இருந்து வந்திருக்கோம்… உங்க வீட்ட சோதன பண்ணனும்..எங்க கூட கொஞ்சம் கோஓபரேட் பண்ணுங்க” என்று சொன்னதும் தான் தாமதம்,
உள்ளுக்குள், ‘இடியேறு கேட்ட சர்ப்பம் போலத்’ தான் ஆனார் ராஜமாணிக்கம்!!
அவரைப் போலவே.. எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாது.. திடகாத்திரமாக நின்றிருந்த அவர் வீடும், அவரது இதயத்தைப் போலவே…
பல கள்ளத்தனங்களைக் கொண்டது அல்லவா??
அவர் இதயத்தை அலசினால் மட்டுமல்ல.. அவர் வீட்டை அலசினாலும் தான்.. அவரது, ‘முகத்திரை கிழியும் அபாயமுள்ளது’ என்பதை அறிந்தவர், அவசரமாக தன் இருப்பிடத்தில் இருந்தும் எழுந்து கொண்டவராக,
அதிகாரிகளைப் பார்த்துக் கன்னாபின்னாவென்று கத்தத் தொடங்கினார்.
“ஆரக் கேட்டு… என் வீட்டுக்கு வந்திருக்கீங்க?? எதுக்கு இந்த திடீர் செக்கிங்கு எல்லாம்?? அதாஆஆ.. வருஸாஆ வருஷம்.. வரி கட்டுப் போடுறேனில்ல?? பின்ன எதுக்கு இந்த செக்கிங்கு, மயிரு எல்லாஆம்??” என்று கத்த, அவர் சொல்வது காதிலே விழாதது போலவே நின்றிருந்தனர் அந்த அதிகாரிகள்!!
அவர், ‘எப்போது பேசி முடிப்பார்’ என்று காத்திருந்த.. அந்தக் குழுவின் தலைமை அதிகாரி, உணர்ச்சியே அற்ற ரோபோக்குரலில்,
“சார்.. இது திடீர் செக்கிங் எல்லாம் இல்ல சார்… இப்ப வந்திருக்குற அரசாங்கம்.. மன்னார் மாவட்ட பெரும்புள்ளிகளோட சொத்து விவரங்களை எல்லாம் கணக்கெடுக்குறாங்க.. அதனால எல்லார் வீட்டிலேயும்.. தான் இந்த செக்கிங் போய்ட்டு தான் இருக்கு.. இப்போ கூட பரிதி க்ரூப்ஸ் ஆப் கம்பனீஸ் ஓனர்.. மிஸ்டர். பரிதிவேல் வீரன் வீட்டுல செக்கிங் முடிச்சுட்டு தான் வரோம்.. அவர் எல்லாத்துக்கும் கரெக்ட்டா கணக்கு வைச்சிருக்காரு.. ப்ளீஸ் சார்.. நீங்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவீங்கன்னு நம்புறோம்.. ஐ ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட் தி சிட்ச்சுவேஷன்…”என்று பேசிய அதிகாரி,
எப்போது தன் பேச்சினில் “பரிதிவேல் வீரனின்’ பெயரை எடுத்தாரோ.. அப்போதே… அவருள் சொல்லவொண்ணா ஆத்திரமும், குரோதமும் எழுந்து அவர் இதயத்தை திகுதிகுவென பற்றியெரிய வைத்தது.
அதனால் விளைந்த ஆவேசத்துடன்.. கை முஷ்டி மடக்கி கிழவன் நிற்க, கிழவனின் உச்சபட்ச ஆத்திர முகபாவங்களையெல்லாம் அப்பட்டமாகக் கண்டும், அதைப்பற்றி சட்டையே செய்யாத தலைமை அதிகாரி,
தன் பிற அதிகாரிகளை நோக்கி, “டூ யோர் டியூட்டி”என்று தலையசைத்தவராகச் சொல்ல,,
இதர அதிகாரிகளும்.. ஷூக்கால்கள் தடதடக்க.. ராஜமாணிக்கத்தின் மாடமாளிகைக்குள் விரைந்தனர்.
ராஜமாணிக்கத்துக்கோ.. உள்ளே ஊழிகாலம் தான் வந்து விட்டதுவோ என்று… குறுகுறுக்க ஆரம்பித்தது.
குற்றமுள்ள நெஞ்சல்லவா??
தன்னுடைய சட்டவிரோதமாக சேமித்த சொத்தாக இருக்கட்டும்.. கறுப்புப் பணமாக இருக்கட்டும்.. இதர லொட்டு லொசுக்கு எல்லாமே உறைந்திருக்கும் கருவறை.. அவரது இந்த மாடமாளிகை!!
எந்தவித திடீர் அறிவிப்பும் இன்றி வந்து நின்றிருக்கும் வருமான வரித்துறையினர்.. எல்லாவற்றையும், ‘இனங்காணப் போவது நிச்சயம்’ என்று கிழவனுக்குப் புரிந்து விட,
சொத்துக்கள் சேர்க்க கிறுக்குத்தனமாக செயல்பட்ட மூளை அல்லவா?? அப்போதும் குறுக்குத் தனமாகவே செயல்பட நாடியது.
அவசர அவசரமாக செல்லை எடுத்து, பேரன் சரவணனுக்கு.. பதினெட்டு, பத்தொன்பது மிஸ்ட்கால்கள் தொடர்ந்து எடுத்திருந்தார் கிழவர்!!
இருந்தும் என்ன பயன்?
நேற்று மாலை வீட்டை விட்டு சென்ற சரவணன்.. இன்று முற்பகல் வேளையாகியும் கூட வீடு வந்து சேரவுமில்லை;கிழவனின் அழைப்பை ஏனோ ஏற்கவும் இல்லை!!
‘டேய்.. ஃபோன எடுடாஆஆ?? இந்த நேரம் பார்த்து இந்த எரும.. எந்த.. வே*** **வீட்ல படுத்துக் கெடக்காஆன்னு தெரியலீய்யே? எலேஏஏய் சரவணாஆ… ஃபோன எடுத்துத் த்தொலடாஆஆ…’ என்று எல்லாமே கையை விட்டுப் போகக் கூடிய ஆத்திரத்தில்.. கத்திக் கொண்டே இருந்தவருக்கு…
பேரன் வேறு அழைப்பை ஏற்காமல் போனதும்.. இருப்பு கொள்ளாமல் போனது!!
அடிக்கடி அவரது கோர விழிகள்.. வீட்டு சோபாவைக் கூட கிழித்து, இரண்டாய் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளை.. படபடப்புடன் பார்க்கலானது!!
அவருடைய பூஜையறை, பழைய பொருட்கள் திணித்து வைக்கப்படும் ஸ்டோர் ரூம் என்று.. ஒருஅறை கூட விடாமல் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த உயர் அதிகாரியின் விழிகளில் விழுந்தது.. கிழவன்.. செல்லில் யாருக்கோ அழைப்பெடுக்க நாடுவது!!
கிழவனை நோக்கி.. சீற்றத்துடன் வந்த அதிகாரி, ராஜமாணிக்கத்தின் கையில் இருந்த செல்லை.. பட்டென்று பிடுங்கிக் கொண்டவராக,
மறுத்துப் பேச முடியாத அதிகாரத் தொனியில், “ஸாரி சார்.. நாங்க இங்கேயிருந்து போற வரைக்கும்… நீங்க யாருக்கும் கால் பண்ண முடியாது” என்று சொல்லி விட, நெற்றியில் அரும்பிய வியர்வையை.. உள்ளங்கையால் துடைத்துக் கொண்டே… இடிந்து போனவராக..
வெறுந்தரையில் குத்திட்டு அமர்ந்து கொண்டவர் தான்.. அதற்குப் பிறகு எழவேயில்லை!!
எப்போதும் அவர் கூடவே இருக்கும்.. சரவணனின் வலது கையான ‘முத்து’, அவனுக்கு ஏவப்பட்ட வேலையைச் செய்து விட்டு.. இன்னும் நல்ல செய்தியுடன்.. வீடு வந்து சேராமை கூட… இன்னொரு பக்கத்தில் அலைக்கழிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது அவருக்கு!!
வீட்டையே குப்புறத் திருப்பிப் போட்டு.. வீட்டில் இருக்கும் கறையான், எறும்பு முதற்கொண்டு தேடி அறிந்த.. அதிகாரிகளுக்கு.. அவரது திருகுத் தாளங்களை கண்டறிவதா கடினம்??
அதிகாரிகளின் திடீர் விஜயத்தில்.. தன்னுடைய திருட்டுத்தனத்தை மறைக்கக் கூட நேரமின்றி இருந்த ராஜமாணிக்கத்துக்கு.. அன்று எல்லாமே எதிர்மறையாகவே நடக்கத் தொடங்கியது.
அரசாங்கத்தின் கண்களில் இருந்தும் மறைக்கப்பட்ட பல நில புலன்களின் பழைய ஆவணங்களும், அரசாங்கத்துக்கு காட்டப்பட்ட போலிக்கணக்குகளுக்கு மேலதிகமாக.. அங்கே இருந்த கட்டுக்கட்டான நோட்டுக்களும்,
அவர் வீட்டு தரையில்.. மலை போல குவிந்து நிற்கும் அளவுக்கு… பவுண் கணக்கில்… தங்க நகைகளும்…. இடிந்து போய் உட்கார்ந்திருந்த கிழவனின் முன்னிலையில் பரத்தப்பட்டிருந்தது.
அவரைச் சுற்றிலும்… பற்பல கேள்விகளை மனதில் தொக்கி வைத்து நின்ற அதிகாரிகளோ, அமர்ந்திருக்கும் ராஜமாணிக்கத்தை நோக்கி, சிற்சில பத்திரங்களைக் காட்டி,
“இது நீங்க தலைமன்னார்ல… முப்பது ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டதுக்கான பத்திரம்… இது ஏன்.. உங்க அசையா சொத்து பட்டியல்ல ஆட் ஆகவேயில்ல??”என்று கேட்க.. அவரிடம் எந்த பதிலுமில்லை!!
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்ட கதையாக.. வாயில் கொளுக்கட்டை வைத்து அடைத்தவர் போல..
தலையில் கை வைத்தவராக… விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு.. எதையோ இழந்து விட்டவர் போல அமர்ந்திருந்தார்.
உள்ளமோ, ‘ஐய்யோஓ.. ஐய்யோ.. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்தெல்லாம் போச்சே.. நல்ல வாயன் சம்பாதிச்சத நாற வாயன் தின்னப் போற கதையா ஆகிருச்சே.. என் கத’ என்று உள்ளே கிடந்து அடித்துக் கொள்ள,
கிழவன் வாய்ப்பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இன்னொரு அதிகாரியோ.. சின்ன மலைபோல குவிந்து நின்ற தங்கநகைகளை சுட்டிக்காட்டி, “இங்கே இருக்கற ஜூவல்ஸ்ல.. மூணு நெக்லஸ்க்கு… நீங்க பர்ச்சேஸ் பண்ண ரசீது எதுவுமேயில்லை… இது எப்படி சாத்தியம்?? எப்படி இந்த கணக்குலயிருந்து.. அது எல்லாம் தப்பிச்சது??”என்று கேட்க, அப்போதும் வாய் பேசாமலேயே அமர்ந்திருந்தார் ராஜமாணிக்கம்!!
அந்த நேரம் பார்த்து, சில கணக்குப் பேரேட்டுப் புத்தகங்களை காட்டிய, தலைமை அதிகாரி,
ராஜமாணிக்கத்தின் அருகே.. அவரைப் போலவே சாவதானமாக அமர்ந்தவராக,
மனத்தைக் கலங்க வைக்கும் இரும்புக் குரலில், “இந்த ஊரு கோயிலோட தர்ம கர்த்தாவாகவும் நீங்க இருந்திருக்கீங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஊர்க்கோயில் திருவிழாவுல மொத்தம்.. ஐம்பத்தைஞ்சு லட்சம் ரூபாய் நிதி கலெக்ட் ஆகியிருக்குன்னு.. நீங்க கவர்மென்ட்க்கு சப்மிட் பண்ண இந்த பென்ட்ரைவ்ல இருக்க டாக்குமெண்ட் சொல்லுது…”என்று தன் கையில் இருந்த பென்ட்ரைவ்வைக் காட்டியவர்,
“ஆனா.. உங்க கிட்ட இருக்குற இந்த மஞ்சளடிச்சுப் போன லெட்ஜர்ல… மொத்தம் அறுபத்தேழு லட்சம் கலெக்ட் ஆகியிருக்குன்னு கணக்கு காட்டப்பட்டிருக்கு?? அட் த சேம் டைம்.. உங்க பேரன் பேங்க் அக்கவுண்ட்ல.. பன்னிரண்டு லட்ச ரூபாய் டிரான்ஸ்பர் ஆகியிருக்கு.. அப்படீன்னா.. கோயில் பணத்த கையாடல் பண்ணியிருக்கீங்களா?இல்ல.. அக்கவுண்ட்க்கு டிரான்ஸ்பரான பன்னிரண்டு லட்ச ரூபா பணம்.. அது கோயில் பணம் இல்லைன்னு உங்களால ப்ரூவ் பண்ண முடியுமா??”என்று கேட்க,
எல்லாரையும் அதட்டி உருட்டி… ஒரு எஜமானன் போல நடந்து கொண்ட.. மமதைப் பிடித்த ராஜமாணிக்கம்.. முதன் முறையாக.. என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துப் போய் தான் நின்றார்.
வீட்டுப் பணியாளர்கள் வேறு.. ஒருபக்கம் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க… ராஜமாணிக்கத்துக்கு கழியும் ஒவ்வோர் நொடியும் அசிங்கமாகிப் போனது.
தலைமை அதிகாரியை… தொண்டைக்குள் ஏதோ அடைத்து விட்டது போல எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு,
என்ன சொல்லித் தப்புவது என்று தெரியாமல், “அஅ. அது.. இந்த. கணக்கு.. பணம்லாஆஆம்.. அது.. வவந்தூ… ” என்று சமாளிக்கத் தெரியாமல் உளறும் தாத்தாவை மட்டும் மென்னிலா பார்த்திருந்தாளேயானால்,
‘டெரார் பீஸூ தாத்தா.. ஒரு டம்மிபீஸாஆ?’ என்று எண்ணம் வலுக்க.. கர்ப்பிணி என்பதையும் மறந்து விழுந்து விழுந்து சிரித்திருப்பாள்.
குட்டு வெளிப்பட்டாயிற்று!! காப்பாற்ற வேண்டிய சரவணனும் அங்கு இல்லை!!
என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிப் போனவர், தன் மானம் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் போவதை தாளமாட்டாமல், தலைமை அதிகாரியை நோக்கி,
தன் வழமையான மரியாதை இல்லாத தொனியில், “ய்யோஓஓவ்… இந்த ஊரு முட்டாப் பயலுவளே.. என்ன கேள்வி கேட்க தயங்கிர்வானுக.. அம்புட்டும் மாட்டுப் பயலுவ.. அஞ்சோ பத்தோ தூக்கிப் போட்டா.. வாலாட்டிட்டு போயிருவானுக.. நீ ஆஆருய்யா பெருஸ்ஸாஆஆ.. தூக்கிட்டு வந்துட்ட?? .. ஆமாஆஆஆ!! .. திருவிழா மோசடி பணம் தான்ய்யாஆ அதூஊஊ… அதாஆஆன்.. எல்லாஆஆமே.. திருட்டு சொத்தூன்னு த்தெரியுதுல்ல?? உனக்கு எம்புட்டு வேணும்னு சொல்லு.. இங்கேயே ம்முடிச்சுக்கலாஆஆம்” என்று சொன்னதும் கூட.. அவரது கெட்டகாலம் தப்பாகவே போயிற்று.
வந்திருந்ததோ.. கை சுத்தமான அதிகாரி வேறு.. ராஜமாணிக்கம் தன்னை ‘யோவ்’ போட்டு மரியாதை இல்லாமல் அழைத்தது வேறு ஒருபுறம் அவரது சூட்டைக் கிளப்ப,
இன்னொரு பக்கம் அவர் செய்த தப்பில்.. தன்னையும் லஞ்சம் கொடுத்து கூட்டு சேர்க்க வைப்பது.. பெரும் கோபத்தைக் கிளறிவிட,
தன் குழுவினரை நோக்கி.. கண்ஜாடை மட்டும் தான் செய்தார் அவர்!!
மற்ற உத்தியோகத்தர்கள்.. தட்டு நிறைய மலை போல குவிந்து நின்ற நகைகள், பத்திரங்கள், ஆவணங்கள் என எல்லாவற்றையும் கற்றை கற்றையாக எடுத்துக் கொண்டு செல்ல அணிவகுக்க,
“நீங்க.. கோர்ட்க்கு வந்தே பேரம் பேசிக்குங்க.. மிஸ்டர். ராஜமாணிக்கம்.. அதுக்கு நான் ஆளில்லை!! ” என்றுரைத்தவராக எழுந்து கொண்டார் ராஜமாணிக்கம்.
அங்கே வந்திருந்த வருமான வரித்துறை குழுவில்… நெற்றியில் திருநீறு, கழுத்தில் சந்தனம் என்று முழுக்க முழுக்க பக்திப் பழமாக நின்றிருந்த ஒரு அதிகாரி நின்றிருந்தது வேறு…
பல பேரின் வாழ்வை சீரழித்த ராஜமாணிக்கத்திற்கு துரதிர்ஷ்டமாக அமையவே செய்தது.
கோயில் தர்ம கர்த்தாவாக இருந்து கொண்டு.. கோயில் பணத்திலேயே.. இந்த ராஜமாணிக்கம் மோசடி செய்திருப்பதை..
‘சட்டம் வந்து கடமையைச் செய்யும்’ வரை காத்திருக்க முடியாமல்.. கிழவனின் மோசடி.. நாடி, நரம்பெல்லாம்.. பக்தியோடிணைந்த ஆத்திரத்தைக் கிளப்பவே,
யாருக்கும் தெரியாமல்.. ‘ராஜமாணிக்கத்தின் வீட்டில் நடந்த ரைட்’டையும், கண்டெடுத்த அத்தனை சொத்துக்களையும்,
அதிகாரிகள் சூழ்ந்து நின்று ராஜமாணிக்கத்தைக் கேள்வி கேட்க, இறுதியில் அந்தக் கிழவன் தலைமை அதிகாரியுடன் பேரம் பேசியதையும் கூட…
ஒன்று விடாமல்… முகப்புத்தகத்தில் துல்லியமாக ‘லைவ்’ செய்து விடவே,
நவீன தொழிநுட்பம் வேறு.. அந்த நாசகார கிழவனுடன் சதி செய்யவே நாடியது போலும்!!
இலங்கை என்ன?? முழு உலகமும் கூட.. இந்த ராஜமாணிக்கத்தின் திருகுத்தாளத்தை நேரலையாக பார்த்து கொந்தளித்துப் போயிருக்க,
மன்னாரின்.. சிறுத்தோப்பு கிராமத்தின் இளசுகளோ..தங்கள் பணத்தில் நேர்ந்த கையாடலைப் பொறுக்கமாட்டாது நெஞ்சு பொரும நின்றனர்.
அதிலும்… இந்த எகத்தாளம் மிக்க கிழவன் வேறு.. கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக,
தன ஊர்க்காரர்களை, “இந்த ஊரு முட்டாப் பயலுவளே.. என்ன கேள்வி கேட்க தயங்கிர்வானுக.. அம்புட்டும் மாட்டுப் பயலுவ.. அஞ்சோ பத்தோ தூக்கிப் போட்டா.. வாலாட்டிட்டு போயிருவானுக.. நீ ஆஆருய்யா பெருஸ்ஸாஆஆ.. தூக்கிட்டு வந்துட்ட?? .. ஆமாஆஆஆ!! .. திருவிழா மோசடி பணம் தான்ய்யாஆ அதூஊஊ!! …”என்று விழித்ததோடு மாத்திரம் அல்லாமல்.. அதை ஒப்புக் கொண்டது வேறு… இளரத்தங்களை கொதிக்கச் செய்தது!!
இத்தனை காலம்.. முட்டாளாக இருந்த மக்களேயாயினும் கூட, ராஜமாணிக்கத்துக்கு மாடு போல உழைத்திருந்தும் கூட, ராஜமாணிக்கத்தின் பேச்சு.. அவரது விதியையே தலைகீழாக திருப்பிப் போட்டது.
படிக்காத பாமர மக்கள்.. சாதுவான மாட்டுப் பயல்களாக இருக்கலாம்!!
ஐந்தையோ பத்தையோ தூக்கிப் போட்டதும்.. வாலை ஆட்டும் நாயை ஒத்தும் இந்த ராஜமாணிக்கத்தின் கண்களுக்கு தெரியலாம்.
ஆனால் அவர் செய்த பெரும் பிழை… ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதை அறியாது போனது தான்.
மாடுகளும் ஒரு நாள் அவற்றின் மூக்கணாங்கயிறு அறுக்கும்; நாயும் வெறி வந்தால்.. வாலாட்டாமல் கடிக்கும் என்று அறிமால் போனது அவரது அறியாமை!!
அதிகாரிகள் வேறு.. அவருடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்ய எத்தனித்த நேரம்.. அந்தக் கிழவனின் இத்தனை வருட வாழ்வில்.. ஒரு இழிவு நிலைக்கான அத்திவாரமும் இடப்பட்டது.
அந்த கணம் ஒரு திருப்புமுனையாக…
ராஜமாணிக்கத்தின் வீட்டு வாசலில் இருந்து கேட்டது ஒரு பலத்த குரல்!! அது நன்கே பரிச்சயப்பட்ட குரலாக இருந்தாலும் கூட.. அந்தக் குரல் ஒலித்த தோரணையில்..
இருக்கும் களேபரமான சூழ்நிலையில்.. மனதுக்குள் கலவரம் உண்டாவது போல கலக்கம் முகிழ்த்தது.
அது பக்கத்து கிராமத்தின்.. பெயர் சொல்லும் படியான பெரிய புள்ளியின் குரல் அது!!
இந்தக் கிராமத்துக்கு ஒரு ராஜமாணிக்கம் போல.. பக்கத்து கிராமத்துக்கு ஒரு தங்கவேல் ஐயா!!
எல்லா ஊர்த் தலைவர்களும்.. இந்த மோசடிக்கார ராஜமாணிக்கம் இருப்பதைப் போல.. இருப்பதில்லை என்பதற்கு தலைசிறந்த உதாரணம் தங்கவேலு ஐயா!!
கிட்டத்தட்ட ராஜமாணிக்கத்தின் வயது தான் இருக்கும் அவருக்கும்!!
நரைத்த ‘கடாமீசையும்’, கூன் விழாத முதுகு நிமிர்ந்து நின்று விறைக்கும் கம்பீரமும், கூடவே ‘ஆஞ்சநேயர்’ டாலர் போட்ட தங்கச் சங்கிலியும்,
அப்பழுக்கற்ற வெள்ளை வேஷ்டி சட்டையும், அவரது ஆளுமை நிறைந்த தோற்றத்தை இன்னும் மெருகூட்டவே செய்யும்!!
ரௌத்திர விழிகளுடன் ராஜமாணிக்கத்தின் வாசலில் நின்றிருந்த தங்கவேலு ஐயா, தனக்கேயுரிய பெருங்குரலில், “ய்யோஓஓஓவ்..ர்ராஜமாணிக்கம் வெளிய்ய வாய்யாஆஆ!!!”என்று கத்த,
‘இது என்ன புது சோதனை?’ என்று மனதில் குமுறிக் கொண்டாலும், எதுவுமே நடவாதது போல.. “என்ன தங்கவேலு?…”என்று கேட்டுக் கொண்டே வந்தவரது கண்களில் விழுந்தது ஆவேசம் ததும்பும் விழிகளுடன் நின்றிருக்கும் ஒரு பட்டாளம்!!
அவர்களைக் கண்டதும் உள்ளுக்குள் அச்சம் முகிழ்த்தாலும் கூட.. அத்தனையும், ‘அயலூர்க்காரர்கள்’ என்ற பின் தான் சின்ன நிதானம் வந்து போக..
முறுக்கேறிய மரம் போலவே அவர்கள் நின்றிருந்தவரின் கண்கள்.. அந்தக் கூட்டத்தை மீண்டும் ஒரு முறை சுற்றி வரப் பார்த்தது.
அந்தக் கூட்டத்தின் நடுநாயகமாக தங்கவேலு ஐயா நின்றிருக்க, பக்கத்திலே தன் பேரன் தானா? என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு..
கண்களும், இதழ்களும் வீங்கிப் போய்.. நெற்றியின் ஓரம் பிளந்து.. இரத்தம் வடிய வடிய, கிழிந்த சட்டை வேஷ்டியுடன் நின்றிருந்த சரவணனைக் காணவும்… சர்வமும் ஆட்டம் கண்டு போனது கிழவனுக்கு.
வீட்டு வாசற்படி உச்சியில் நின்றிருந்தவர்.. தன் பேரனைக் கண்டதும்.. குடுகுடுவென இறங்கி வந்தவர், தன், ‘ஜாதியில் உதித்த ஒரே பேரன்’ என்ற பாசம் மீதூற,
சரவணனின் கன்னம் பற்றியவராக.. தழுதழுக்கும் குரலில், “எ.. என்னாச்சுப்பாஆஆ உன. உனக்கு?”என்று குசலம் விசாரிக்க, அந்தோ பரிதாபம் பக்கத்து ஊர் காரனிடம் செம்மையாக அடி வாங்கியிருந்த சரவணனுக்கு..
தாத்தாவை நேர் கொண்ட பார்வை பார்க்கவேனும் உடலில் தென்பு என்பது கிஞ்சித்தும் இருக்கவில்லை!!
இந்த தாத்தா – பேரனின் பாச நாடகத்தை பார்க்க விரும்பாத தங்கவேலு ஐயாவோ,
ராஜமாணிக்கத்தை நோக்கி, “நிறுத்துமய்யா உன் பாச நாடகத்தஅஅஅ!! பேரன ஒழுங்காஆ கண்டிச்சு வளர்க்க தெரியல.. உமக்கெல்லாஆஆஆம்.. எதுக்குய்யாஆஆ.. பெரீஈஈஈய்ய்ய.. மனுஷன் பட்டம்???. உன் பேரன்… பண்ண காரியத்துக்கு உம்மயும் சேர்த்து… வெட்டி பொலி போட்டா தான் என் ஆஆஆத்திரம் அடங்கும்…. நீயெல்லாம் ஒரு பெரீய்ய்ய மனுஷன்..” என்று கத்த,
‘பேரன் என்ன தவறு செய்திருப்பான்?’ என்று புரியவில்லையாயினும் கூட, சரவணனையும் விட்டுக் கொடுக்க நாடவில்லை கிழவனின் மனம்.
ஏற்கனவே வருமான வரித்துறையினரின் ரைடில்.. எரிச்சலில் கிடந்தவர், இன்று தங்கவேலுவின் பிரசன்னத்தைத் தொடர்ந்து,
கோபத்தின் உச்சிக்கே சென்றவராக, “சும்மா கத்தாதிருமய்யாஆஆ.. என்ன நடந்து போச்சுன்னு.. வீட்டு வாச முன்னாடி வந்து நின்னுக்கிட்டு.. ஓலம் போட்டுட்டு கெடக்குற? அதுவுமில்லாமல்.. இந்த ராஜமாணிக்கத்தோட பேரன் மேல கைய வைக்க ஆர் உனக்கு அதிகாரம் குடுத்தது?? ” என்று எரிந்து விழ,
தங்கள் ஐயாவை மரியாதைக் குறைவாக பேசும் ராஜமாணிக்கத்தை நோக்கி,
சிலம்புடன் வந்த ஒரு இளைஞன், “ஏய்.. எங்க ஐயாஆ கிட்ட மரியாதையா பேசு.. நீ சொன்ன மாதிரி.. நீயி.. அஞ்சோ பத்தோ போட்டதும் வாலாட்டிட்டுப் போற உன் ஊரு ஆளுங்க கெடயாது..அயலூர்க்காஆஆரனுங்க… தலைய சீவிட்டு தாஆன் மறுவேல ப்பார்ப்போம்!! ”என்று எகிற,
கிழவனுக்கோ.. ‘வீட்டுக்குள்ளே தான் பேசிய.. ஏகபோக வசனத்தை எப்படி..பக்கத்து ஊர் காரன் சரியாக இயம்புகிறான்?’ என்று அதிர்ச்சி ஒரு கணம் தோன்றி மறைந்தது.
அதற்கிடையில் தன் ஆளை அடக்கிய தங்கவேலு, ராஜமாணிக்கத்தை மிதப்பாக பார்க்க,
இன்னொரு அயலூர்க்கார ஆடவனோ, ஆவேசத்துடன் முன் வந்து,
“பொம்பள சுதி ஏறிப் போயி.. தினவெடுத்த நாஆஆயீஈ மாதிரீஈஈஈ.. திரியுற உன்னோட பேரன் கை வைச்சது ஆர் ம்மேல தெரியுமோஓ?? எங்க ஐயாஆஆஆ பேத்தி மேல…”என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட,
சரவணனின் கீழ்த்தரமான செயலில்.. கிழவனுக்குமே உள்ளூற கோபம் வந்தது உண்மை தான்!!
ஒரு அப்பாவிப் பெண்ணின் மேல் கை வைத்து விட்டானே பேரன் என்ற கோபமா அது? இல்லவே இல்லை.
மாறாக… சரவணன்.. போயும் போயும்.. இந்த தங்கவேலுவின் வீட்டுப் பெண் மீதா கை வைக்க வேண்டும் என்ற கோபமே அது என்றால்.. என்ன இழிபிறப்பான மனிதர் அவர்??
அந்த ஆடவனோ மீண்டும், “உன் பேரன் வேலி விட்டு வேலி பாஞ்சி மேஞ்சதும் அமைதியாகப் போக.. நாங்க ஒண்ணும் உன் வீட்டு வேலைக்காரி இல்ல..” என்று மஞ்சு பலாத்காரம் செய்யப்பட்டதையும், அது மறைக்கப்பட்டதையும் சாடைமாடையாக சொன்னவன்,
“மாறு கால் மாறுகால் வாங்கிருப்போம்.. ஐயாவுனால தான் உன் பேர உசுரோட தப்பிச்சாஆன்… இப்படியொரு பொம்பள பொறுக்கி பேரன பெத்துப் போட்டூ… .. எதுக்குய்யாஆ மானம் மரியாதன்னு வாழ்ந்துட்டிருக்க..?? த்தூஊஊஊ..”என்று காறி உமிழ்ந்து வாசலிலேயே துப்ப,
அவமானம் தாள மாட்டாமல் கன்றிச் சிவந்து போனது கிழவனின் முகம்!!
தன்னை மானபங்கப்படுத்தும் ஆடவனை உருக்கி விழித்தவர், “எலேஏஏ… வார்த்தய அளந்து ப்பேஏஏசுல?”என்று கத்த,
எகிறிப் பாய்ந்த இன்னொரு இளைஞன், அந்தக் கிழட்டு வயதில் கேட்க முடியாத நாராசமான வார்த்தைகளில் திட்டி, “என்ன ***.. **.. .. பேரன ஒழுங்கா வளர்க்க துப்பில்ல.. பேச வந்துட்டான் கெழவன்!!”என்று சொல்ல, விறுவிறுவென உடலில் பொங்கியது கோபம்.
உள்ளே வருமான வரித்துறையினர் வேறு இருக்கையில்.. அயலூர்க்காரன் வேறு வந்து பிரச்சினை செய்வது.. பெரிய தலையிடியாக இருக்க,
வீட்டுக்கு வருமான வரித்துறையினர் ரைட் வந்திருப்பது.. அயலூர்க்காரனுக்கு தெரியாமல்.. அப்படியே மறைத்து.. அவர்களை சீக்கிரமே கிளப்பி விட நாடிய.. அந்தக் குரூரக் கிழவன்,
பேத்தியை எண்ணி…. கலக்கத்தோடு நிற்கும் தங்கவேலுவை நோக்கி, தணிந்த குரலில்,
“என்ன தங்கவேலு நீரும்?.. இந்த சின்ன விஷயத்த பெருசு படுத்திக்கிட்டு.. இப்ப என்ன கெட்டுப்போச்சு?? நீரும், நானும் ஒரே ஜாதிக்காரன் தானே? அப்புறம் என்ன? உன் பேத்திய.. என் பேரனுக்கு கட்டிக் குடுத்துடு.. பொம்பளப்புள்ள விவகாரம்.. காதும் காதும் வைச்ச மாதிரி.. விஷயத்த முடிச்சுப் போடாம.. இப்படி ஊரெல்லாம் கூட்டி வந்து.. இத்தனூஊஊண்டு விஷயத்த.. ஜவ்வு மாதிரி இழுக்குறீய்யேய்யாஆ”என்று நாசூக்காக சம்பந்தம் பேசிப் பார்க்க,
நேர்மையும், கண்ணியமும் தவறாத தங்கவேலு ஐயாவுக்கும் வந்ததே கோபம்!!
சீற்றம் கமழும் விழிகளுடன்.. அடுத்த நொடி ராஜமாணிக்கத்தின் கழுத்தை.. ஒற்றைக் கையால் இறுக்கிப் பிடித்தவர்,
பற்களைக் கடித்துக் கொண்டு, “உன்னய்ய்ய.. ம்மாதிரி ஆளுங்களோஓஓஓட வளர்ப்புனால தான்டாஆஆ… பொண்ணுங்களால இந்த காலத்துலேயும் நடமாட ம்முடியல… ஒவ்வொரு ஆத்தாளும், அப்பனும் பூ மாதிரி வளர்க்குற ப்பொண்ண.. நாசம் ப்பண்ண தைரியம் குடுக்குறதேஏஏ.. உங்கள மாதிரி ஆட்கள் தான்டா.. உன் வீட்டு வேலக்காரிக்கு ஒரு அநீதி நடந்தப்போவே..உன் பேரன தண்டிச்சிருந்தேன்னாஆ.. இன்னைக்கு இந்த நிலம உன் பேரனுக்கு வந்திருக்காஆஆது.”என்றவருக்கு என்ன தோன்றியதோ??
ராஜமாணிக்கத்தின் கழுத்தில் இருந்து கையை எடுத்தவர், சிவந்த கண்களுடன், பற்களை ஆத்திரம் தாள முடியாமல் கடித்துக் கொண்டு,
“நாஆஆ உன் வீட்டுப் படியேறி நீதி தேடி வந்தேன்னு நெனச்சீய்யாஆஆ?? … இல்ல.. உன் பேரனோட நிலமய தெரியப்படுத்த தான் வந்தேஏஏன்… சரவணனுக்கு குடுக்கப் போஓஓற தண்டன.. இனி பொண்ணுங்க மேல அத்துமீர்ற.. ஒவ்வொருத்தனுக்கும் பாடமாஆ இருக்கட்டும்” என்றவர்,
தன் கூட்டத்தினருக்கு கண்களால் “ம்”என்று ஜாடை செய்தது மட்டும் தான் தாமதம்!!
மாட்டைக் கட்டியிழுப்பது போலத் தான்.. அந்த ஊர் மக்களினால் இழுத்துச் செல்லப்பட்டான் சரவணன்.
அவருக்கு கொள்ளி வைக்க.. இறுதிக் காலத்தில் அவரைப் பார்த்துக் கொள்ளவென்று… இருக்கும் ஒரே ஆண் வாரிசு..சரவணன்.
அவன் நிலையைக் கண்டு, உடலெல்லாம் வெளவெளக்க..
பரிதவித்துப் போன அந்தக் கிழவனுக்கு..அன்று தான் முதுமை தட்டியது போல.. உடலில் ஓர் பலவீனம் உண்டாகத் தொடங்கியது.
கைகால்கள் துணுக்குற… அப்போது தான் சுயநினைவு பெற்றவர் போல, “ஐய்யோஓஓ.. என் பேஏஏரன்..சரவணாஆஆ..சரவணாஆஆ” என்று ஓலமிட்டுக் கொண்டே அவர் பின்னாடியே செல்ல,
அவனை இழுத்துக் கொண்டு சென்றனர்.. சிறுத்தோப்பு கிராமத்தின் ஊர்க்கோயில் தெருவுக்கு!!
பரிதிவேல் வீரனின் தாய்… ஒரு கண்ணியவதி.. கணவனையே கண்கண்ட தெய்வமாகக் கொண்டு பூஜித்து.. பதிவிரதையாகவே வாழ்ந்த சத்தியவதியை.. அத்தனை பேர் முன்னாடியும் மானபங்கப்படுத்தினாரோ?
அதே ஊர்க்கோயில் தெரு!!
அந்த ஊர்க்கோயில் தெருமுன்பாக இருக்கும்.. விஸ்தாரமான வேப்பமரத்தில்.. அயலூர்க்காரர்களால் கட்டப்பட்ட சரவணன்.. தனக்கு பாசக்கயிறை விதித்ததை உணர்ந்து கொண்டானோ??
தப்பவே முடியாத நிலை வந்ததும்.. ஒரு வித மந்தமான முகபாவனையுடன்.. ‘தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது?’ என்று தெரியாமல்..
போதைப்பொருள் உட்கொண்டவன் போல.. தரை பார்த்து குனிந்து நிற்கலானான்!!
சரவணன்.. ஒரு வகையில்.. அவன் நிலை, ‘பரிதாபத்துக்குரியது’ என்று சொல்லின்.. வாசகர்கள் என்னோடு இணையச் சண்டைக்கு வரக்கூடும்!!
ஆயினும்.. அது தான் உண்மை. இப்படியாப்பட்ட சரவணனும்.. ஒருவகையில் பரிதாபத்துக்குரியவனே தான்.
அவன் மீசை முளைத்த நாளில் இருந்து.. பெண் சுதி தேடி அலைந்த.. காமுகன் அல்ல அவன்!!
சின்ன வயதில் இருந்தே.. அத்தை மகள் மென்னிலா தனக்குத் தான் என்று.. தூய காதலுடன் வளர்ந்தவன் அவன்.
பட்டணத்தில் படித்த மென்னிலா.. ஊருக்கு வரும் போது அணியும் அதிநவீன அரைகுறை ஆடைகள் வழியாகத் தெரியும் தன் முறைப்பெண்ணின் அங்கலாவண்யங்களைப் பார்ப்பவனுக்கு.. அப்போது கூட பெண் சுதி இருந்ததா? புத்தி அலைபாய்ந்ததா? என்று கேட்டால்.. இல்லவே இல்லை என்று கதையைத் தொடர்பவர்களுக்கு புரியும்!!
சரவணன்.. மென்னிலாவுக்காக..அவள் மேல் பூண்ட அன்புக்காக.. காத்திருந்து கண்ணியம் காத்து திருமணத்தின் பின்னர் அவளை பெண்டாள நாடினானே தவிர, ஒரு நாளும் அத்துமீற நாடியதே இல்லை !!
ஆனால் என்றைக்கு.. மென்னிலா – பரிதி காதல் விவகாரம் அறிந்து.. அதைத் தாங்க மாட்டாது.. தன் காதலை உணர்த்த..மென்னிலாவை அத்துமீறித் தொட்டானோ??
அன்றிலிருந்து அவனை சிறுகச் சிறுகப் பிடித்தாட்டலானது பெண் சுதி தேடச் செய்யும் காமப்பேய்!!
மறுநாளே.. மென்னிலா பரிதியோடு தாலியும், கழுத்துமாக வந்து நிற்க, வலி, அவமானம்,
‘அப்படி தன்னிடம் இல்லாதது பரிதியிடம் என்ன இருக்கிறது?’ என்ற கேள்வி தந்த வெறி.. கூடவே மென்னிலாவின் பூவுடல் தந்த சுகம்.. என எல்லாமும்.. அவனை ஒரு காமப்பித்தனாக மாற்றி..
ஆசையைக் கிளறிவிட.. அது ஒரு கட்டத்தில் முத்திப் போய்.. அவனது ஆசைக்கு பலியான ஒரு பெண் தான் பணிப்பெண் மஞ்சு!!
எப்போதும் மஞ்சுவை அப்படியான கண்ணோட்டத்தில் பார்த்திராதவனுக்கு, அன்று மஞ்சுவிடம் அத்துமீறியதும்,
‘ஐய்யைய்யோ.. உணர்ச்சிகள் ததும்ப.. மூளை மழுங்கி..இந்தக் குற்றத்தை செய்து விட்டோமே?? லண்டனில் இருக்கும் மென்னிலா.. இதை அறிந்தால்?” என்று அவன் குற்றவுணர்வில் தத்தளித்த போது தான்… அது நடந்தது.
ராஜமாணிக்கம் வேறு வந்து, ‘மஞ்சு பலாத்காரம் செய்யப்பட்டதை மறைக்க.. ரொம்ப உறுதுணையாக இருந்து விடவே..
அது குற்றவுணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்த சரவணனனின் மனநிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றலானது.
என்ன நடந்தாலும் காப்பாற்ற தாத்தாவின் செல்வாக்கான ஆள்புலம் இருக்க, லண்டனில் இருக்கும் மென்னிலாவோ.. உள்ளூரில் நடப்பது எதையும் அறியாதிருக்க.. அது வேறு சுதந்திரமான மனநிலையைத் தோற்றுவித்தது அவனுக்கு.
சுருங்கக் கூறின்.. துணிந்து தப்பு செய்ய.. தைரியம் பிறந்தது சரவணனுக்குள்.
இந்த உண்மையை அறிந்த பரிதிவேல் வீரன்.. அதனால் தான் சரவணனை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்,
“தாத்தா வேட்டிக்குள்ளேயே வளர்ந்த பய” என்று விழிப்பதுவும்,
அதைக் கேட்டதும் அந்த சொல்லில் இருக்கும், “தாத்தாவின் செல்வாக்கினால் தண்டனையில் இருந்து தப்பித்தவன்” என்று சொல்லாமல் சொல்வது புரிந்து.. சரவணன் சினப்பதுவும் நடக்கும்!!
அதன் பின்.. சம்சாரியாகாமலேயே.. பெண் சுகம் தேடி அலையும் கிறுக்கனாக மாறியிருந்தான் அவன்.
என்ன தான் சரவணன் காமம் தேடும் ஆணாக இருந்தாலும் கூட, சின்ன வயதில் இருந்தே மனதுக்கு சொந்தக்காரியாக “மென்னிலா”வை வடித்துக் கொண்டதாலோ என்னவோ,
அவளை அப்போதும் பெண்டாளவே துணிந்தான்.
அதனாலோ என்னவோ.. மென்னிலா இலங்கை வந்த பின்னரும் கூட தன் காமுகப் பக்கத்தை.. அவளிடம் திரை விலக்கி காட்டவேயில்லை அவன்!!
பரிதியாக நிரூபிக்கும் வரை.. அவளுமே அறிந்து கொள்ள சந்தர்ப்பமும் நேர்ந்திருக்காது.
அனைத்துப் பெண்களிலும் காமம் தேடுவது.. ஒரு வகையில் ஒரு மனநோய்.ஒருவேளை சரவணன்..மென்னிலாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வந்திருந்தாலும் கூட,
மென்னிலாவை மனைவியாக வைத்துக் கொண்டு, காமுகனாகவே அப்போதும் அவன் அலைந்திருக்கக் கூடும்!!
ஒரு நல்லவன்.. பெண்கள் விஷயத்தில் அத்துமீறும் மனநோய்க்காரனாக மாறியது கூட.. ஒருவகையில் பரிதாபத்துக்குரியது தானே??
அப்படி.. இப்படி என்று.. இறுதியில்.. அடுத்த ஊர் தலைவர் பேத்தி மீது கை வைத்ததில் சரவணனுக்கு இறுதிக்காலமே வந்தது.
சட்டத்தின் பிடியில் தப்பியவன், இன்று தங்கவேலுவின் உருவில் வந்த ஊழ்வினையின் பிடியில் அகப்பட்டுக் கொண்டான்.
அந்த ஊரில் உள்ள மக்களும் மெல்ல மெல்ல அந்த முச்சந்தி பக்கம் குவிந்து.. நடப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்க்கத் தொடங்க,
கோபாவேசமும், கொலைவெறியும் மிகுந்த அயலூர்க்காரர்கள், தங்களின் ஊர்த்தலைவர் ‘தங்கவேலுவின்’ கண்ணசைவுக்காக காத்திருக்க,
தங்கவேலுவும்.. தன் கைகளை மிடுக்குடன் முதுகுக்குப் பின்னால் கட்டிக் கொண்டு,
சுற்றிவர இருந்த மனிதர்களைப் பார்த்து, “இப்ப குடுக்கப் போற தண்டனையில.. பொண்ணுங்கள தப்பான கண்ணோட்டத்துல பார்க்கவும்.. இனி பயம் வரோணும்!..ம்ம்!” என்றவர்
கண்களால் ஜாடை காட்டியதும் தான் தாமதம், அயலூர்க்காரர்கள் கையில் ஏந்தியிருந்த கற்கள்.. சரவணனை நோக்கி குறிபார்த்து எறியப்பட்டன.
அவனது மேனி எங்கும் வந்து தைத்த கற்களின் விளைவால்.. அவனது வெள்ளைச் சட்டையில்.. பழைய இரத்தக்கறைக்கும் மேலாக.. புது இரத்தம் நனைக்கத் தொடங்கியது!!
நடக்கும் சம்பவத்தைப் பற்றி.. யாரோ மஞ்சுளாவின் தாய்க்கு தகவல் சொல்ல.. வீறு கொண்ட பெண்புலியைப் போல சம்பவ இடத்துக்கு விரைந்தவர், அங்கு நடப்பதை.. சுகமான விழிகளுடனேயே.. இமைக்காமல் இரசித்துப் பார்க்கலானார்.
இந்த தரிசனம்.. இன்னும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் கூட… இனி கிடைக்காது என்பது போல.. அவரது நெஞ்சமெல்லாம் ஆலங்கட்டி மழை பெய்தது போல குளிர்ந்து போனது.
தன் பெண்ணுக்கு நேர்ந்த அநீதிக்கு, தங்கவேலு ஐயாவின் உருவில் நீதி கிடைப்பதாகவே எண்ணிக் கொண்டார் அவர்.
நல்லதோ.. கெட்டதோ.. நாம் இன்னுமொருவருக்கு செய்யும் செயல்கள்.. நியூட்டனின் விதி போல!!
அது கர்மாவாக… ஊழ்வினையாக.. காலத்தின் திரும்பலாக மீண்டும் உரியவரையே வந்து சாரும்!!
அன்று தன் மருமகள் வள்ளியம்மை.. வேறு ஜாதிப் பெண் என்பதற்காக, எந்த இடத்தில் வைத்து.. எந்த ஊர்மக்கள் பார்க்க மானபங்கப்படுத்தினாரோ??
அதே இடத்தில்.. அவரது பேரனை வைத்து.. அழகு பார்க்கிறது காலம்!!
தன் மகள் வயிற்றுப் பிள்ளை இல்லை என்பதனால், மென்னிலாவைத் தன் வாரிசாக எண்ணாத அவர் மனம், வேறு ஜாதிப் பெண்ணின் கருவில் உதித்தவன் என்பதால் பரிதியை தன் பேரனாகக் கூட நினைக்காத அவர் மனம்..
இன்னும் ஏன்.. பெண்ணாக பிறந்து விட்டதால்.. தன் மகள் சிவகாமியம்மாளைக் கூட.. ஒட்டி உறவாடாத அவர் மனம்…
தன் ஒரே பேரனாக, ஒரே வாரிசாக, ஒரே குல ஜீவனாக எண்ணியிருந்த சரவணனுக்காக இரங்குகிறது; அல்லல்படுகிறது.
அவமானம்.. அந்த ஐந்தெழுத்துச் சொல் தரும் கொடூர வேதனையை இத்தனை வருடங்கள் கழித்த பின்னர்.. உணர்ந்து கொண்டிருந்தான் கிழவன்.
அந்த ஊரில் மிடுக்காக திரிந்த ராஜமாணிக்கம், தன் பேரன் கல்லடி வாங்குவதை தாங்க முடியாமல், கல்லெறியும் ஒவ்வொருத்தனின் கால்களிலும்..
தள்ளாத வயதில்.. குனிந்து குனிந்து விழுந்து எழுந்து கொண்டிருந்தார் ராஜமாணிக்கம்.
“ஐய்யோஓஓ.. என் பேரன விட்ருங்கப்பாஆஆ… என் பேரன விட்ருங்க.. அவன் ஏதோ தெரியமா பண்ணிட்டான்ப்பாஆ..” என்று கண்ணீர் மல்க கெஞ்சியவர்,
அயலூர்க்காரர்கள் அடிப்பதை தன்னூர் காரர்கள் வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டவர், தன் மக்களை நோக்கி,
வெறித்த கண்களுடன், “என்னய்யாஆஆ.. பார்த்துட்டிருக்கீங்க.??. நம்ம சரவணன.. அசலூர்க்காரன் போட்டு அடிச்சிட்டிருக்கான்.. கை கட்டி வேடிக்க பார்த்துட்டிருக்கீங்க.. இது தான் நீங்க எனக்கு காட்டுற விசுவாசமாஆ?” என்று கேட்டவர்,
ஒருவேளை தங்கவேலு ஐயா மாத்திரம் வேற்று ஜாதியாக இருந்திருந்தால்.. இரு ஊர்களுக்கும் இடையில் ஜாதிக்கலவரத்தைக் கூட.. தூண்டி விட்டிருப்பார் அவர்!!
ஆனால் தங்கவேலு ஐயா கூட.. அவர் ஜாதியாகப் போனதும் கூட ராஜமாணிக்கத்துக்கு துரதிர்ஷ்டமாகப் போனது.
வருமான வரித்துறையினர் சோதனையின் போது நேரலையாக வெளிவிடப்பட்ட அவரது காணொளிப் பேச்சில், கொதித்துப் போயிருந்த இளைஞர்களில் ஒருவன்,
ஆத்திரம் துளிர் விட, “நாங்க தான் ஒண்ணும் தெரியாத முட்டாப் பயலுவ ஆச்சே?? அஞ்சோ பத்தோ போட்டாஆஆ.. வாலை ஆட்டிக்கிட்டு அடங்கிப் போற ஆட்களாஆஆச்சே.. நாங்க எதுக்கு.. உம்ம பேரன்.. ஒரு பொம்பள பொறுக்கிய காப்பாத்தணும்??” என்று கேட்க,
பேசியது அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்புவிக்கும் இளைஞனை அதிர்ச்சி மல்கப் பார்த்தார் ராஜமாணிக்கம்.
அதிலும் இன்னொரு ஆடவன், கூட்டத்தை பிளந்து கொண்டு வந்து, “கோயில் பணத்த களவாண்ட களவாணி பய நீஈஈ.. உன்னய சும்மா விடுறோம்னு நெனக்காத…எப்படியும் நீ.. கம்பியெண்ண போறேன்னு தான் அமைதியா பொறுத்துகிட்டு இருக்கோம்”என்று சொல்ல,
கிழவனுக்கு.. திரும்பும் இடமெல்லாம் சுவற்றில் மோதுவது போல மூச்சு முட்டலானது.
சரவணன் வேறு.. அடிவாங்கியே செத்துவிடுவான் போல இருக்க, ஓடி வந்து.. சரவணன் முன்னாடி கேடயம் போல.. கண்ணீர் மல்க நின்ற கிழவனுக்கும்,
நெற்றியைக் குறிபார்த்து வந்த கல்லொன்று பட்டு.. இரத்தம் குபீரிட்டது.
“அடிக்காஆஆதீஈங்க… அடிக்காஆஆதீஈங்க”என்று கை கூப்பி கெஞ்சிய போதும் கூட யாரும் அதை நிறுத்தவுமில்லை; உள்ளூர்க்காரர்கள் வந்து தடுக்கவுமில்லை.
ஒருகட்டத்தில் கல்லடி தாங்காது இரண்டாக மடிந்து கீழே விழுந்த ராஜமாணிக்கத்தின் நிலையை.. அன்றைய வள்ளியம்மையின் நிலையை ஒத்திருந்தது.
வள்ளியம்மை அன்று அனுபவித்த அவமானம், வலி, அந்த இக்கட்டான மனோநிலை எல்லாமும்… அவரையும் ஆட்கொண்டிருந்தது.
அப்போதும் கூட.. தன் இழிநிலையை புறம் செய்து, தவழ்ந்து தவழ்ந்து வந்து தங்கவேலுவின் கால்களைப் பிடித்துக் கொண்ட கிழவன்,
இரத்தமும், கண்ணீரும் இரண்டற வழிய, “யேப்பாஆஆ.. தங்கவேலு..நிறுத்தச் சொல்லுப்பாஆஆ… உன் கால்ல விழுந்து கேட்டுக்கிடுறேஏஏன்…என் குலத்த அழிச்சிராஆஆதய்யாஆ.. ” என்று கெஞ்ச,
தன் குலதெய்வமாக கருதும் பேத்தியை பாழ்ப்படுத்தி விட்டு, ‘குலத்தை’ பற்றி பேசும் கிழவன் மேல் வெறுப்பு தான் வந்தது அனைவருக்குமே.
ராஜமாணிக்கத்தை இகழ்ச்சியுடன் குனிந்து பார்த்தவர், “நிறுத்தோணுமோஓஓ?? எல்லாஆஆத்தையும் நிறுத்தோஓஓணுமோஓ?? சரி.. அவர் சொன்னாஆ நிறுத்துரேஏஏன்”என்றவர், ராஜமாணிக்கத்தின் பின்னால் கை காட்ட,
கை காட்டிய திசை பக்கம் பார்த்தவர் அதிர்ந்து தான் போனார்.
அங்கே தன் கருகரு மீசை.. அவன் இதழோடு சுளித்து.. மேலேறித் தெரிய, சிவப்பேறிய விழிகளுடன், இடுங்கிய புருவங்களுடனும்,
தன் நெஞ்சு நிமிர்த்தி, முதுகுக்குப் பின் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தது சாட்சாத் பரிதிவேல் வீரனே தான்!!
‘இவன் எப்போது இங்கு வந்தான்?’ என்பது போன்ற பார்வையில் கிழவன், அதிர்ந்து நிற்க…
அவனது விழிகளோ.. ஈவிரக்கம் என்பதை துளியளவு கூட சிந்தாமல்.. நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.
எப்போது அந்தக் கிழவன்.. கரு சுமந்து நிற்கும் மென்னிலாவைக் கொள்ள, முத்துவை அனுப்பினாரோ??.
அதை முத்து வாயிலாக அறிந்து கொண்ட மறுவிநாடியிலிருந்தே.. கிழவனுக்கான ஈவிரக்கத்தை எல்லாம் சுத்தமாக துடைத்து தூர எறிந்தும் விட்டிருந்தான் பரிதி.
எல்லாரையும் போல சரவணனின் வலது கையான முத்துவை.. நேற்றிரவு கொலைகாரனாக பார்த்ததும்,
‘ சரவணன் தான் இதுக்குப் பின்னுள்ள காரணகர்த்தா’ என்று தான் அவனும் எண்ணினான்.
ஆனால் பெண் தேடி அலையும் சரவணனுக்கு, மென்னிலாவை கொல்ல ஆள் ஏவும் அளவுக்கு யோசனையும் இல்லை;நேரமும் இல்லை.
முத்துவை தக்க தருணத்தில் உபயோகித்துக் கொண்டது என்னமோ கிழவனே தான்.
வேற்று ஜாதிப் பெண்ணுக்கு பிறந்த பரிதியின் குழந்தை.. நாளை எதிர்காலத்தில் தாத்தா என்று உறவு கொண்டாடிக் கொண்டு,
சொத்தில் பங்கு கேட்டுக் கொண்டு வந்து விடுமோ என்ற அச்சத்தில்.. கருவோடு மென்னிலாவையும் கொல்ல ஏவியிருந்த அந்தக் கிழவன்.. மானுடத்துக்கே ஓர் அவமானம் தான்!!
அவரது கொடிய எண்ணத்தை.. அடி தாங்க முடியாமல் கக்கிய முத்து சொன்னது அனைத்தும் ஞாபகம் வர, பரிதியின் கண்களுக்கு ராஜமாணிக்கம், “தன் குழந்தையை கொல்ல வந்த கொலைகாரனாகவே’ தோன்றினார்.
தன்னை நோக்கி.. உயிர்ப்பிச்சை வேண்டி… மூச்சிறைக்க இறைக்க, நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஓடிவரும் கிழவனையே அசிங்கத்தைப் பார்ப்பது போல பார்த்தான் அவன்.
எல்லாம் கைமீறிப் போனதும் அப்போது தான் பேரன் என்ற உறவே நினைவில் வந்தது போல,
அவன் காலில் விழுந்த கிழவன், அண்ணாந்து கை ஒரு கூப்பிப் பார்த்தவனாக,
குழறும் குரலில், “பரிதீஈஈ.. காப்பாத்துப்பா.. என்னயயும்.. உன் தம்பீஈஈ சரவணனயயும் காப்பாஆத்த்ப்பா… உன் தம்பீஈஈ.. ஏதோ தெரியாஆம செஞ்ச்ப் பொட்டாஆன்ப்பாஆஆ.. நீயும் எனக்கு சரவணன் மாதிரி தான்ய்யாஆஆ… .. பரிதீஈஈ..”என்று கெஞ்சியதைக் காண…
உள்ளுக்குள் இத்தனை வருடங்களாக.. அவன் தாய்க்காக எரிந்த வன்மத்தீ கொஞ்சம் கொஞ்சமாக தணிவது போல இருந்தது அவனுக்கு.
அவன் முகம்அரக்கனை வதம் செய்ய வந்த தேவர்களைப் போல… அன்று விகசித்திருந்தது.
எப்போதுமே.. எதற்குமே பணிந்து போகாத ராஜமாணிக்கம்.. இன்று பரிதியின் கால்களில் உயிர்ப்பிச்சைக் கேட்டு நிற்கிறான்.
அவனோ கமுக்கமாக வெற்றிச் சிரிப்பு உதிர்த்தவன், தீவிரமான குரலில், “உன் வீட்டுக்கு திடீஈஈர் ரைடு.. சரவணனுக்கு இந்த தண்டன.. இதெல்லாம் தானாவே அந்தக் கடவுள் குடுத்ததுன்னு நெனச்சுக்கிட்டீய்யாஆ.. கெடயவே கெடயாது.. எல்லாமே என் ஸ்கெட்ச்சு..” என்றவன் விழிகள், பழிவன்மம் தீரும் சுகத்தில் பளபளத்தது.
ராஜமாணிக்கத்தின் சட்டைக்காலரைப் பற்றி எழுப்பாட்டியவன், “நாஆனு மென்னிலாவுக்கு அடிச்சா உனக்கு வலுக்கூம்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன் கெழவ்வாஆஆ.. முதல்லய்யேஏஏ.. சரவணன அடிச்சிர்ருக்கணூஊஊஊம்.. அப்ப.. இங்க வ்வலிச்சிருக்கும்ல?? பெண்களை தெய்வமா மதிக்கத் தெரியாத உன்னய ம்மாஆதிரி ஆட்களுக்கும், சரவணனுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்!! நாஆஆஆன் உனக்கு வேண்டாத பேரனாச்சேஏஏ?? இனியும் அப்படிய்யேஏ இருந்துக்குறேன்.. ர்ராஜமாணிக்கம்”என்று எகத்தாளமான குரலில் கூறியவனின் செய்தி கேட்டு,
கையாலாகாத நிலைக்குத் தள்ளப்பட்ட கிழவன், அடுத்து பரிதிவேல் உரைத்த விஷயம் கேட்டு திக்பிரமை பிடித்தாற் போன்று தான் ஆனான்.
அவனது விழிகளில் செந்நரம்புகள் ஓட, கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரிய, உறுத்து விழித்தவன்,
“இந்த தண்டன.. என் அம்மா வள்ளியம்மைக்காஆக!! .. பெத்த பொண்ணுன்னு கூட பார்க்காம.. ‘மென்னிலா அம்மா’ என் வீட்டுப் படியேறி வந்தாங்கன்ற… ஒரே காரணத்துக்காக.. அவங்களை அடிச்சே கொன்னீய்யே.. அதுக்காஆஆஆக!.. அப்பாவிப் பொண்ணு மஞ்சுக்காஆஆக! என் மென்னிலாஆஆவுக்காஆஆக!!” என்று அவர் அநீதி இழைத்த பெண்களின் பட்டியலில்,
யாரும் அறியா பரம இரகசியமான மென்னிலாவின் தாய், தன் மகள் ‘சிவகாமியம்மாளின்’ பெயரையும் சொல்ல.. திடுக்கிட்டு விழித்தான் கிழவன்.
ஆம், சிவகாமியம்மாளின் மரணம் என்ன இயற்கையாக நிகழ்ந்ததா?
இல்லவே இல்லை!!
காலையில் கொதிக்கும் மேனியுடன்.. பரிதி வீட்டு வாசல் வந்து.. கை கூப்பி, ‘என் பொண்ண என் கூட அனுப்ச்சிருய்யாஆஆ’என்று கெஞ்சு விட்டுச் சென்ற சிவகாமியம்மாள்.. மாலையில் பிணமானதும் எப்படியாஆஆம்??
கிழவனும், சரவணனும் சேர்ந்து, பரிதி வீட்டு முன்னிலையில் இரந்து கேட்ட… சிவகாமியம்மாள் செய்தது இழிசெயல் என்று கருதி… அடித்தே கொன்றது…
எப்பேர்ப்பட்ட இறுகிய இதயம் கொண்டவருக்கும் கண்களில் ஈரம் வரவழைக்கும்!!
அடிவாங்கி… ஞமஞமத்துப் போயிருக்கும் தாய்முகம் கண்டால்.. எங்கே மென்னிலா மனம் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்துக்காகத் தானே..தாயின் ஈமக் கிரியைகளுக்கு செல்ல விடாமல் அவனும் அவளை தடுத்தான்.
அப்படி தடுத்ததுவே.. தன்னை ஒரு வில்லனாக மனைவிக்கு விம்பம் போட்டு காட்டுகிறது என்று அறியாமல் போனான் ஒரு முரட்டுக் குழந்தை!!
வெறுத்துப் போன முகத்துடன், “எப்படிய்யாஆஆ.. ப்பெத்த பொண்ண.. நோய்ல இருக்கும் போது அடிச்சுக் கொள்ள உனக்கு மனசு வந்ததூஊ? முதல்ல.. மனசுன்னு ஒண்ணு இருக்காய்யாஆஆ உனக்கூஊ…?”என்று கேட்க, தன் குட்டு அனைத்தும் அறிந்திருப்பது கண்டு விக்கித்துப் போனான் கிழவன்.
பரிதியொருவனைத் தவிர.. தன்னை இந்த இக்கட்டான நிலையில் இருந்து காப்பார் யாருமிலர் என்று புரிந்து கொண்ட கிழவனோ,
மீண்டும் பரிதியின் காலில் விழுந்து கெஞ்சியவனாக, “யப்பாஆஆ.. நான் பண்ணது தப்பு தான்பா.. கரிசன காட்டு.. க்காட்டுப்பாஆஆஆ..”என்று சொல்ல, அவன் வெகு வெகு நிதானமாக கிழவன் முகம் பார்த்தான்.
“என் அம்மா உன் கால பிடிச்சு கதறினப்போ.. நீ கரிசனம் காட்டினீய்யா?? .. இல்லல?? .. பெத்த பொண்ணுக்கு கரிசனம் காட்டினீய்யா?? .. இல்லல?? மஞ்சுவுக்கு ஒரு அநீதி நடந்தப்ப கரிசனம் காட்டினீய்யா?? .இல்லல? . அப்புறம் நான் மட்டும் என்ன மயித்துக்கு.. கரிசன காட்டணும்?? .. நான் நல்லவன் கெடயாஆஆதுடாஆ கெழவ்வாஆஆ…. கெட்டவன்!!!..”என்றவன்,
அவர் உயரத்துக்கு குனிந்து, மெல்லிய குரலில், “நீ கைய வைச்சது என் ஆண்டாளு ம்மேல.. சும்மாஆ விடுவேனா சொல்லு?? பயப்புடாத.. என்னய கொல்ல ஆள் அனுப்பினது நீ தான்னு.. கடைசி வரை உன் பேத்திக்கிட்ட விஷயத்தை சொல்லப் போறதில்ல… அதுவர சந்தோஷப்பட்டுக்க…” என்றவன், நிராதரவாக எழுந்தவன்,
தங்கவேலுவைப் பார்த்து, அவர் மகளுக்காக ஆழ்ந்தவி இரங்கும் பார்வையொன்றை உதிர்த்தவன், ‘நீங்க செய்ய வேண்டியதை செய்யுங்கள்’ என்று வாயால் சொல்லாமல்,
செயலால் உணர்த்தி விட்டு தன் காரை நோக்கி செல்ல,
சூடு, சுரணை மறந்து உயிர் ஒன்றையே காத்துக் கொள்ள நாடிய கிழவன், “பரிதீஈஈ.. பரிதீஈ..” என்றவராக பின்னாடியே ஓடினார் அவர்.
அவனுடைய கார், யாருக்காகவும் காத்திருக்காமல் பறந்தது.
ஒரு வரண்டநிலத்தில் இருந்த காடொன்று.. சூரியனின் உஷ்ணம் தாங்க முடியாமல்… பற்றியெரியத் தொடங்குகிறது. எரிகிறது ;எரிகிறது ; ஓயாமல் நெடுங்காலம் எரிந்து கொண்டேயிருக்கிறது.
காட்டுத்தீ பற்றி எரிந்த காட்டில்… அந்த தீயை அணைக்கும் வகையில்… சோவென்று பெய்தது ஓர் மழை!!
வெந்து தணிந்த காடு.. மழையின் குளிர்ச்சியில்… முற்றாகக் கழுவித் துடைக்கப்பட்டு… மீண்டும் ஒரு பசுமையான காடாக நிச்சயம் முளைவிடும்!!
இதில்.. அந்த வரண்ட காடு உண்டல்லவா? அது தான் பரிதிவேல் வீரனின் அடிபட்ட முரட்டு இதயம்!!
பற்றியெரிந்த ஓயாத காட்டுத்தீ இருக்கிறதல்லவா? அது தான் சித்தி பார்வதியம்மாளால் விதைக்கப்பட்ட.. என்றென்றும் நீர்த்துப் போகாத ராஜமாணிக்கம் மேலுள்ள வன்மத்தீ!!
அதிலும் அந்தத் தீயை அணைக்கும் வகையில் வந்த வான் மழை.. அது மென்னிலாவின் காதல் மழை!!
ஆம், காதல் மழை..அவனது இதய வன்மத்தீயை அணைக்கவே செய்தது!!
அவன் முரட்டு இதயம்.. அவளது காதல் என்னும் நேச மழையில்.. மீண்டும் பசுமையாக முளைவிடும் என்பது பரிதிவேல் வீரனின் நம்பிக்கை!!
ராஜமாணிக்கத்தைப் பழிவாங்குவதாக எண்ணி.. தன் உயிரினும் இனிய ஆண்டாளைத் தண்டித்த போது.. வலியில் துடித்த ஒரு முரட்டு இதயம்..
இன்று ராஜமாணிக்கத்தை நேரடியாக தண்டித்ததும் ஆசுவாசம் பெறுகிறது.
மழையே இல்லாத வரண்ட பூமியில்.. பருவக்காற்று வீசி.. மேகம் கருக்கட்டி.. தூறல்கள் விழும் போது.. மனம் உவப்பது போல.. உவப்பில் மிளிர்ந்து கொண்டிருந்தது அவன் மனம்!!
ஆனால் அவனுள் பற்றியெரிந்த வன்மத்தீ.. இன்றோடு அணைந்தது.
இவனால் மென்னிலாவுக்குள் பற்றியெரிந்து கொண்டிருக்கும் தீ அணைவது எப்போது??
அணையவும் கூடுமா??
அன்றிரவு….
என்றுமேயில்லாத உவகை இதயத்தில் பொங்க, ஆசையோடு மனைவியைக் கட்டியணைத்த வண்ணம், காதலோடு கிறங்கும் குரலில், “ஆண்டாஆஆஆளுஊஊஊஹ்”என்று தன் ஒட்டுமொத்த காதலையும் அவளுக்கு உணர்த்த விழைந்தான் பரிதி!!
கணவனின் உவகைக்கான காரணம் அறிந்தும், அவனது செயல்கள் யாவற்றையும் அறிந்தும், அவனது சந்தோஷத்தை ஏற்க முடியாமல்.. அவன் கையை தன்னிலிருந்தும் தட்டிவிட்ட மென்னிலா…
அவனுடன் இழைவது போல நடிக்கவே முடியாமல் தான் நின்றாள்.
அவளது விலகல் வலியை கொடுத்தது அந்த முரடனுக்கு.
இவளோ அதை அலட்சியம் செய்தவளாக, அடிபட்ட குரலில், “இன்னைக்கு பண்ணதை ஏன் மாமா.. அன்னைக்கே செய்யலை?.. அன்னைக்கு பழிவாங்க நான் மட்டும் தான் கிடைச்சேனா?? .. என் காதல் மட்டும் தான் கெடச்சுதா??”என்று கேட்டு விட,
இதயத்தில் முள் தைத்தாற் போன்ற வலியுடன், தன் ஒட்டுமொத்த சந்தோஷமும் வழிய நின்றான் பரிதிவேல் வீரன்!!
மனைவியின் வலி தரும் கேள்விக்கு அவனிடம் உகந்த பதில் இல்லை!!
ஆயினும் தப்பை உணர்ந்த வலி மட்டும் மலையளவுக்கு கொட்டிக்கிடந்தது அவனுள்.
அவளது கேள்வி தந்த அதிர்வு அது அபாயகரமானது. ஆயினும் புண்ணான அவன் இதயத்திற்கு மருந்தாக அமைவதும் கூட, இதே அதிர்வில் பூத்த அவனது காதல் மலரே!!
காதல் தானடி என் மீதனுக்கு?
(பதில் விரைவில் நவில்வாள். )

You’re so awesome! I don’t believe I have read a single thing like this before. So good to discover someone with a few genuine thoughts on this subject. Seriously.. thank you for starting this up. This website is something that’s needed on the internet, someone with a little originality!
Even during his days off, Raul Morales gets spotted by fans. On a recent visit to Universal Studios Hollywood, Morales, owner of Taqueria Vista Hermosa in Los Angeles, was waiting in line when he heard shouting.
“People called out ‘Chef Al Pastor! Chef Al Pastor!’” Morales said, laughing. Morales, who was born in Mexico City, came by the nickname through decades of hard work.
[url=https://trip-scan39.org]трип скан[/url]
He’s the third generation of his family to make al pastor tacos, their fresh tortillas filled with richly seasoned pork shaved from a rotating vertical spit.
“My recipe is very special, and very old,” he said.
Yet while Morales’ family recipes go back generations, and similar spit-roasted meats like shawarma and doner have been around for hundreds of years, his tacos represent a kind of cuisine that’s as contemporary and international as it is ancient and traditional. When you thread meat onto a spinning spit to roast it, it turns out, it doesn’t stay in one place for long.
https://trip-scan39.org
tripskan
‘Any place you have a pointy stick or a sword’
Roasting meat on a spit or stick is likely among humans’ most ancient cooking techniques, says food historian Ken Albala, a professor of history at the University of the Pacific.
Feasts of spit-roasted meat appear in the Homeric epics The Iliad and The Odyssey, writes Susan Sherratt, emeritus professor of East Mediterranean archaeology at the University of Sheffield, in the journal Hesperia.
Iron spits that might have been used for roasting appear in the Aegean starting in the 10th century BCE. Such spits have been unearthed in tombs associated with male warriors, Sherratt writes, noting that roasting meat may have been a practice linked to male bonding and masculinity.
“I think the reason that it’s associated with men is partly because of hunting, and the tools, or weapons, that replicated what you would do in war,” Albala said. “When you celebrated a victory, you would go out and sacrifice an animal to the gods, which would basically be like a big barbecue.”
Roasting meat is not as simple as dangling a hunk of meat over the flames. When roasting, meat is not cooked directly on top of the heat source, Albala says, but beside it, which can generate richer flavors.
“Any place you have a pointy stick or a sword, people are going to figure out very quickly … if you cook with it off to the side of the fire, it’s going to taste much more interesting,” Albala said.
проект перепланировки квартиры в москве [url=https://www.proekt-pereplanirovki-kvartiry5.ru]https://www.proekt-pereplanirovki-kvartiry5.ru[/url] .
It is appropriate time to make a few plans for the long run and it is time to be happy. I have read this post and if I could I want to recommend you few interesting things or advice. Perhaps you could write subsequent articles regarding this article. I wish to learn more issues about it!
I do trust all of the ideas you have introduced on your post. They are really convincing and will definitely work. Still, the posts are too quick for starters. May you please extend them a little from subsequent time? Thanks for the post.
buy zyban in uk
Для игровых клубов аренда игр — это оптимальный способ всегда иметь под рукой новые проекты для совместного времяпрепровождения. Если у вас есть дети, можно взять на время детским играм, а потом сменить их на новые.
Также аренда игр полезна для тех, кто хочет попробовать новинку перед покупкой. Не всегда проект оправдывает ожидания, и именно аренда даёт возможность не тратить лишнее.
На https://gamehaul.ru/ регулярно обновляется список игр. Поэтому каждый подберёт для себя подходящий жанр — будь то онлайн-шутер.
В итоге аренда игр для PS4/PS5 — это доступно, интересно и актуально.
Cracker Barrel’s modern makeover doesn’t stop with redoing its restaurants. It’s dropping the barrel and the man from its logo, too.
On Tuesday, the Southern-inspired casual dining chain unveiled a new logo “rooted even more closely to the iconic barrel shape,” but without the barrel itself — a central part of the brand’s identity since 1977. (As for the the barrel itself, it was “essentially the water coolers of the day,” Cracker Barrel explained in a blog post.)
[url=https://tripskan39.cc]трипскан[/url]
The identity refresh also includes new TV commercials, a redesigned menu and several new fall-themed foods, part of a larger $700 million transformation plan to shake off its stodgy image and lure in new diners.
“The way we communicate, the things on the menu, the way the stores look and feel … all of these things came up time and time again in our research as opportunities for us to really regain relevancy,” said CEO Julie Felss Masino in 2024.
https://tripskan39.cc
tripskan
In particular, the new logo is the latest in a string of changes angering some of its loyal fans who fear the 56-year-old chain is drifting too far from its bucolic roots. On social media, some users griped, with one writing that the “changing the logo just feels like another little piece of culture dying off.” The change also angered some conservatives, too, like President Donald Trump’s son.
Cracker Barrel has also been remodeling some of its 660-plus restaurants. The chain has “decluttered” the interiors by removing the country-themed trinkets that lined the walls and lightened up the interiors, shifting away from the dark woods. So far, reaction has been mixed on social media, with some videos on TikTok going viral voicing their displeasure.
Masino remains adamant that the renovations are working, telling ABC News this week that “people like what we’re doing” and that feedback has been “overwhelmingly positive.”
In June, Cracker Barrel posted an unusual earnings report for a restaurant: It’s taking a $5 million hit from tariffs because of its retail shops, which largely has products imported from overseas. Restaurant revenue and same-store sales both slightly grew, mirroring other increases casual dining chains are experiencing.
No-code automation
Build AI Agents and Integrate with Apps & APIs
AI agents are revolutionizing business automation by creating intelligent systems that think, decide, and act independently. Modern platforms offer unprecedented capabilities for building autonomous AI teams without complex development.
Key Platform Advantages
Unified AI Access
Single subscription provides access to leading models like OpenAI, Claude, Deepseek, and LLaMA—no API keys required for 400+ AI models.
Flexible Development
Visual no-code builders let anyone create AI workflows quickly, with code customization available for advanced needs.
Seamless Integration
Connect any application with AI nodes to build autonomous workers that interact with existing business systems.
Autonomous AI Teams
Modern platforms enable creation of complete AI departments:
– AI CEOs for strategic oversight
– AI Analysts for data insights
– AI Operators for task execution
These teams orchestrate end-to-end processes, handling everything from data analysis to continuous optimization.
Cost-Effective Scaling
Combine multiple LLMs for optimal results while minimizing costs. Direct vendor pricing and unified subscriptions simplify budgeting while scaling from single agents to full departments.
Start today—launch your AI agent team in minutes with just one click.
—
Transform business operations with intelligent AI systems that integrate seamlessly with your applications and APIs.
https://muckrack.com/person-27512890
I like what you guys are up too. This type of clever work and exposure! Keep up the good works guys I’ve incorporated you guys to my blogroll.
недвижимость в оаэ
Dubai id
Cracker Barrel’s modern makeover doesn’t stop with redoing its restaurants. It’s dropping the barrel and the man from its logo, too.
On Tuesday, the Southern-inspired casual dining chain unveiled a new logo “rooted even more closely to the iconic barrel shape,” but without the barrel itself — a central part of the brand’s identity since 1977. (As for the the barrel itself, it was “essentially the water coolers of the day,” Cracker Barrel explained in a blog post.)
[url=https://tripskan39.cc]трипскан вход[/url]
The identity refresh also includes new TV commercials, a redesigned menu and several new fall-themed foods, part of a larger $700 million transformation plan to shake off its stodgy image and lure in new diners.
“The way we communicate, the things on the menu, the way the stores look and feel … all of these things came up time and time again in our research as opportunities for us to really regain relevancy,” said CEO Julie Felss Masino in 2024.
https://tripskan39.cc
трип скан
In particular, the new logo is the latest in a string of changes angering some of its loyal fans who fear the 56-year-old chain is drifting too far from its bucolic roots. On social media, some users griped, with one writing that the “changing the logo just feels like another little piece of culture dying off.” The change also angered some conservatives, too, like President Donald Trump’s son.
Cracker Barrel has also been remodeling some of its 660-plus restaurants. The chain has “decluttered” the interiors by removing the country-themed trinkets that lined the walls and lightened up the interiors, shifting away from the dark woods. So far, reaction has been mixed on social media, with some videos on TikTok going viral voicing their displeasure.
Masino remains adamant that the renovations are working, telling ABC News this week that “people like what we’re doing” and that feedback has been “overwhelmingly positive.”
In June, Cracker Barrel posted an unusual earnings report for a restaurant: It’s taking a $5 million hit from tariffs because of its retail shops, which largely has products imported from overseas. Restaurant revenue and same-store sales both slightly grew, mirroring other increases casual dining chains are experiencing.
трип скан Трипскан – это сообщество единомышленников, где можно делиться своим опытом, получать советы и находить новых друзей.
Excellent web site. Plenty of useful info here. I am sending it to some buddies ans additionally sharing in delicious. And certainly, thanks in your effort!
https://pl.quora.com/profile/%D0%9A%D1%83%D0%BF%D0%B8%D1%82%D1%8C-%D0%AD%D0%BA%D1%81%D1%82%D0%B0%D0%B7%D0%B8-%D0%9A%D0%BE%D0%BA%D0%B0%D0%B8%D0%BD-%D0%90%D0%BC%D1%84%D0%B5%D1%82%D0%B0%D0%BC%D0%B8%D0%BD-%D0%9F%D0%B0%D0%BB%D0%B5%D1%80%D0%BC%D0%BE
Hi, i think that i saw you visited my website so i came to “return the favor”.I am attempting to find things to enhance my website!I suppose its ok to use a few of your ideas!!
https://bio.site/baodadxfob
Hi there very nice web site!! Guy .. Excellent .. Superb .. I’ll bookmark your site and take the feeds also? I am happy to search out a lot of useful info here in the submit, we’d like work out extra techniques on this regard, thanks for sharing. . . . . .
https://mez.ink/intjarenisi
занятия с детским психологом онлайн
https://fr.quora.com/profile/%D0%9A%D1%83%D0%BF%D0%B8%D1%82%D1%8C-%D0%9A%D0%BE%D0%BA%D0%B0%D0%B8%D0%BD-%D0%9C%D0%B0%D1%80%D0%B8%D1%85%D1%83%D0%B0%D0%BD%D1%83-%D0%9C%D0%B5%D1%84%D0%B5%D0%B4%D1%80%D0%BE%D0%BD-%D0%95%D0%BB%D0%B3%D0%B0%D0%B2%D0%B0
https://www.montessorijobsuk.co.uk/author/igafedegdy/
https://539bc06a5759b8941509a40645.doorkeeper.jp/
I’m really enjoying the design and layout of your website. It’s a very easy on the eyes which makes it much more pleasant for me to come here and visit more often. Did you hire out a developer to create your theme? Great work!
https://say.la/read-blog/128572
Urasi malarthathe mara thidirnu amazon la upload panna intha site la padikuravanga??????
Discover the perfect balance of comfort and support with [url=https://asicssport.ru/]asics gel kayano[/url], which is perfect for runners at any distance.
Many runners favor the Asics Gel Kayano due to its exceptional comfort and support. The design of this shoe incorporates innovative technology to enhance performance. A key aspect of the Gel Kayano is its outstanding cushioning system. This technology absorbs impact and provides a smooth ride.
The stability offered by the Gel Kayano is particularly impressive. This stability feature prevents overpronation, which is beneficial for numerous athletes. This shoe is particularly advantageous for runners needing extra arch support. Overall, the Gel Kayano combines comfort, support, and performance.
Another reason for its popularity is the shoe’s durability. Made with high-quality materials, the Gel Kayano can withstand the rigors of training. This model assures runners of reliable long-term wear. This durability, combined with its comfort, makes it a worthwhile investment.
When considering the Asics Gel Kayano, it’s important to try them on. It’s essential to achieve the right fit because foot shapes differ from one person to another. Useful insights can be garnered from a visit to a specialized running shop. Ultimately, the Asics Gel Kayano could be the perfect shoe for your running needs.
https://tripscan41.cc/ Tripscan – это ваш верный помощник в планировании идеального путешествия. Мы предлагаем широкий выбор направлений, удобный поиск и выгодные предложения, чтобы каждое ваше приключение было незабываемым.
Super ma, சீக்கிரம் பரிதியை மென்னிலா புரிஞ்சிக்கனும்
ко ланта ко ланта
концентрат моющих средств Концентрированное моющее средство – это экономичное и эффективное решение для вашего дома. Благодаря высокой концентрации активных веществ, наши продукты обеспечивают максимальную чистоту при минимальном расходе. Одного флакона концентрированного моющего средства хватает на длительное время, что позволяет существенно экономить ваши средства и ресурсы.
ко ланте ко ланте
Обучение Xrumer xrumer обучение телеграм
кайт благовещенская кайтсёрфинг анапа
https://www.tdk-evak.kz/
Донат в Rise of Kingdoms Донат в FC Mobile – это распространенная практика среди поклонников этого мобильного футбольного симулятора. Игроки часто используют донат для приобретения внутриигровых наборов с футболистами, улучшения состава и получения конкурентного преимущества в онлайн-матчах. Это позволяет быстрее продвигаться по уровням и достигать лучших результатов в игре.
моющее средство для пола концентрат Концентрат моющее средство для моющих пылесосов – это специально разработанная формула, обеспечивающая максимальную эффективность при уборке с использованием моющих пылесосов. Наше средство не оставляет пены, не засоряет фильтры и обеспечивает глубокую очистку ковров и обивки мебели, возвращая им свежий и обновленный вид.
ко ланте Ко ланта
органические моющие средства Биоразлагаемые моющие средства – это инновационное решение для тех, кто стремится к экологически чистому образу жизни. Мы гордимся тем, что наши продукты разлагаются в естественных условиях в кратчайшие сроки, не нанося вреда окружающей среде. Мы используем только безопасные и эффективные ингредиенты, которые обеспечивают безупречную чистоту, заботясь о будущем нашей планеты.
курс диспетчера для домохозяек
кайт анапа кайтсёрфинг анапа
Донат в Rise of Kingdoms Донат в Rise of Kingdoms – неотъемлемая часть стратегии развития в этой популярной мобильной игре. Игроки часто используют донат для ускорения строительства, тренировки войск, получения ресурсов и приобретения различных бонусов. Это позволяет быстрее развивать свою цивилизацию и занимать лидирующие позиции в мире игры, конкурируя с другими игроками. Грамотное использование доната может значительно повысить шансы на победу.
доход диспетчера грузоперевозок с опытом
blsp at check
скачать тикток мод последняя версия андроид бесплатно Тренды Модификаций TikTok в 2025: Что Нас Ждет В 2025 году мы можем ожидать еще больше инноваций в мире модов TikTok. Улучшенные алгоритмы рекомендаций, расширенные инструменты редактирования видео, интеграция с другими социальными сетями – все это может стать реальностью. Разработчики, вероятно, сосредоточатся на создании более стабильных и безопасных версий, а также на добавлении функций, недоступных в официальном приложении.
скачать мод тикток 2025 Scarlet и TikTok Моды: Симбиоз Персонализации и Контроля Scarlet на iPhone представляет собой возможность устанавливать приложения, не проходя через официальный магазин App Store. В контексте TikTok, это означает, что пользователи могут устанавливать модифицированные версии приложения (моды), предлагающие расширенный функционал: загрузку видео без водяных знаков, доступ к региональному контенту, кастомизацию интерфейса и многое другое. Такой симбиоз позволяет пользователям создавать уникальный опыт использования TikTok, настроенный под их индивидуальные потребности.
https bs2web store
тик ток мод россия 2025 Преимущества Модов TikTok: Почему Стоит Попробовать Основное преимущество модов – расширенный контроль. Вы больше не ограничены стандартными настройками и функциями. Можете настраивать приложение под свои нужды, будь то изменение темы, разблокировка дополнительных фильтров или авто-пролистывание ленты. Разработчики модов активно работают над улучшением своих продуктов, адаптируя их к последним обновлениям TikTok и добавляя новые, уникальные функции.
https blsp at check
тик ток мод синий Риски и Предостережения: Баланс между Свободой и Безопасностью Использование Scarlet и TikTok модов сопряжено с определенными рисками. Установка приложений из неофициальных источников может подвергнуть устройство вирусным угрозам и утечкам личных данных. Важно соблюдать осторожность, загружать файлы только из проверенных источников и пользоваться антивирусным программным обеспечением. В конечном итоге, решение об использовании модов должно быть взвешенным и осознанным, основываясь на понимании потенциальных рисков и преимуществ.
http bsme
удаленная работа для подростков Удаленная работа – это не просто тренд, а фундаментальный сдвиг в парадигме занятости. Это возможность выстраивать жизнь вокруг работы, а не наоборот, обретая контроль над своим временем и пространством. Это шанс реализовать профессиональный потенциал, не будучи скованным рамками офисного режима и географическими ограничениями.
биржа фриланса Удаленная работа – это гибкий формат занятости, который разрушает традиционные представления о рабочем месте. Она предоставляет не только свободу выбора графика и локации, но и возможность более эффективно сбалансировать профессиональную деятельность с личной жизнью. Это выбор для тех, кто ценит независимость, продуктивность и комфорт.
онлайн работа без опыта Удаленная работа – это современный формат занятости, стирающий географические границы и предлагающий небывалую гибкость. Она позволяет адаптировать рабочий график под личные нужды, освобождает от утомительных поездок и открывает двери к сотрудничеству с компаниями по всему миру. Это эволюция трудовых отношений, где ценится результат, а не присутствие в офисе.
m bs2web at
работа хостес отзывы Работа хостес в Южной Корее привлекает девушек со всего мира своей кажущейся легкостью и возможностью быстро заработать. Однако, перед тем как принять решение, необходимо изучить рынок труда, ознакомиться с отзывами тех, кто уже работал в этой сфере, и оценить свои возможности и готовность к трудностям.
онлайн работа без опыта Вакансии удаленной работы – это калейдоскоп возможностей, который требует внимательного анализа и стратегического подхода. Важно не только видеть привлекательные предложения, но и оценивать соответствие своих навыков и опыта требованиям работодателя. Успешный поиск удаленной работы – это комбинация самоанализа, целеустремленности и умения представлять свои достоинства.
работа для девушек в корее Работа хостес в Корее для девушек – это шанс увидеть страну, познакомиться с новыми людьми и заработать деньги. Однако, это также ответственность и необходимость соблюдать правила, быть внимательной и осторожной.
2 bs2best at
https m bs2best at
blsp at сиськи
http bsme
https bs2web store
m bs2web at
http bs2best at
ИНН: 245729251161 публичная оферта ИНН: 245729251161 публичная оферта
замена жесткого диска на ssd ноутбук великий новгород Сервисный центр телефонов в Великом Новгороде – это место, где квалифицированные мастера используют профессиональное оборудование для диагностики и устранения неисправностей любой сложности. Будь то разбитый дисплей, проблемы с зарядкой или программные сбои, опытные специалисты помогут вернуть вашему устройству работоспособность.
ремонт ноутбуков hp великий новгород Сбои в работе SIM-карты, сети Wi-Fi, Bluetooth или GPS – распространенные проблемы, с которыми сталкиваются владельцы iPhone. Ремонт данных компонентов в Великом Новгороде – это замена SIM-коннектора, восстановление работоспособности Wi-Fi модуля или GPS-антенны. Профессиональный подход позволяет быстро и эффективно устранить неполадки.
парк отель москва Глэмпинг, словно шепот ветра в кронах вековых деревьев, манит уставшего горожанина в объятия природы, где комфорт цивилизации деликатно переплетается с дикой красотой окружающего мира. Это уже не просто отдых, а искусство созерцания, возможность замедлить ритм жизни и ощутить себя частью чего-то большего.
blsp at
контракт женщине на сво добровольцем женщине
контракт на сво подольск
lchat.biz/to/bsbot
служба по контракту иркутск
blsp at что это за сайт
микропайка samsung в великом новгороде цена Цена ремонта зависит от сложности поломки, модели устройства и используемых запчастей. Однако, в Великом Новгороде можно найти сервисные центры, предлагающие ремонт телефонов недорого, при этом гарантируя высокое качество работ. Также часто предоставляется гарантия на выполненные работы и замененные детали.
https://ufalift.ru/
геймдев Новости игровой индустрии: Будьте в курсе событий. Игровая индустрия постоянно развивается, появляются новые технологии, тренды и возможности. Важно следить за новостями индустрии, чтобы быть в курсе последних событий, узнать о новых играх, платформах и технологиях, а также получить вдохновение для создания собственных проектов. Игровая индустрия является одной из самых быстрорастущих и прибыльных развлекательных отраслей.
ремонт ноутбуков Помимо ремонта iPhone, в Великом Новгороде можно отремонтировать телефоны Samsung, Xiaomi, Honor, Huawei и других производителей. Сервисные центры оснащены современным оборудованием для диагностики и ремонта различных неисправностей, от замены экрана до восстановления после попадания влаги. Бесплатная диагностика позволяет определить причину поломки и оценить стоимость ремонта.
трансы иркутск Медитативные практики в Иркутске укоренены в древних традициях и адаптированы к современным потребностям. Здесь можно найти группы випассаны, школы осознанности и центры, предлагающие медитации, направленные на снижение стресса и развитие эмоционального интеллекта. Байкальская природа словно сама располагает к погружению в состояние созерцания и внутреннего покоя.
геймдев Игровая вселенная: портал в другие миры. Видеоигры позволяют нам исследовать фантастические миры, принимать на себя роли героев и переживать захватывающие приключения, не покидая своего кресла. Разнообразие жанров и стилей поражает воображение: от реалистичных шутеров до стратегических симуляторов, от ролевых игр с глубоким сюжетом до простых аркад, способных скрасить несколько минут ожидания.
bs2best at что за сайт
трансы волгоград Гипнотерапия в Волгограде – это профессиональная помощь квалифицированных специалистов, использующих гипноз для решения широкого спектра психологических проблем. От избавления от фобий и тревог до работы с зависимостями и повышения самооценки, гипноз становится мощным инструментом в руках опытного терапевта.
блекспрут
трансы пермь Медитация в Перми представлена широким спектром техник и направлений. От классических практик осознанности и випассаны до современных методов релаксации и визуализации, местные центры и студии предлагают как групповые, так и индивидуальные занятия. Медитация позволяет успокоить ум, снять стресс и обрести внутреннюю тишину, необходимую для погружения в состояние транса.
Матрешки купить Матрешка – это уникальный артефакт, рожденный из дерева и таланта художника. Искусно выточенная из липы, березы или осины, она становится холстом, на котором разворачивается целая история. Классические мотивы – крестьянские девицы в ярких платках, цветочные узоры, сцены из народных сказок – уступают место современным интерпретациям, отражающим дух времени.
マネックス証券 ログイン画面
Убрать скол на плитке Ремонт керамической поверхности требует особого подхода и специальных материалов. Сколы, трещины и царапины могут быть устранены с помощью специальных составов, восстанавливающих целостность и внешний вид керамики.
Moomoo証券ログイン
みんなの外為
みんなの為替
мужской массаж краснодар Мужской массаж Краснодар: Расслабление, оздоровление и раскрытие потенциала В Краснодаре мужской массаж представлен в различных вариантах: от классического и спортивного до расслабляющего и эротического. Независимо от выбранного вида, массаж способствует улучшению общего самочувствия, повышению тонуса мышц, снятию стресса и восстановлению энергетического баланса. Правильно проведенный массаж может помочь раскрыть внутренний потенциал, повысить уверенность в себе и улучшить качество жизни.
telegram kanal guclendirme izmir Telegram Boost Sat?n Al: An?nda Etki, Uzun Vadeli Faydalar Telegram boost sat?n alarak, kanal?n?z?n gorunurlugunu k?sa surede art?rabilirsiniz. Bu, ozellikle yeni bir kanal act?ysan?z veya mevcut kanal?n?z? buyutmek istiyorsan?z onemli bir avantaj saglar. Daha fazla etkilesim, daha fazla abone ve daha fazla potansiyel musteri demektir.
manage manage manage managefg managerey
купить отзывы на Яндекс картах Кто такой репутолог? В современном мире, где информация распространяется со скоростью света, а первое впечатление часто формируется онлайн, управление репутацией становится не просто желательным, а жизненно необходимым для любого бизнеса. И здесь на сцену выходит репутолог – специалист, чья задача – строить, поддерживать и защищать доброе имя компании в цифровом пространстве.
мужской массаж краснодар Тантрический массаж Краснодар: Путь к гармонии тела и духа Тантрический массаж в Краснодаре – это не просто физическое воздействие, а сакральный ритуал, направленный на раскрытие сексуальной энергии и достижение духовной гармонии. Это уникальная практика, позволяющая соединить телесное наслаждение с глубоким чувственным опытом, открыть новые грани восприятия и ощутить полноту жизни. В отличие от обычного массажа, акцент делается не только на расслаблении мышц, но и на стимулировании энергетических центров, пробуждении чувственности и налаживании связи между телом и подсознанием.
жуйкан Жуйкан стоматология Хайхэ: Качество, доступность, совершенство Жуйкан – это не просто название клиники, это символ заботы о здоровье, который известен далеко за пределами Хэйхэ. Клиника, расположенная в самом сердце приграничного города, является эталоном качества и инноваций в сфере медицинских услуг.
https://svbeloglazov.ru/ svbeloglazov
mange manae maage mangefg anagerey
Пицца Куба Воронеж Пицца Куба
https://trade-mark.store/product-category/banketki-etazherki/ банкетки для обуви оптом в москве, этажерки для обуви оптом в москве, банкетки для обуви купить оптом в москве, этажерки для обуви купить оптом в москве, этажерки для обуви купить оптом в москве.
https://trade-mark.store/product-category/stremyanki-bytovye/ стремянки бытовые оптом в москве, стремянки бытовые купить оптом в москве.
https://trade-mark.store/product-category/skaterti-i-salfetki-gotovye/ гибкое стекло оптом в москве, купить гибкое стекло оптом в москве, гибкое стекло оптом со склада в москве.
сравнение литиевого и кислотного аккумулятора Тяговый аккумулятор: щелочной или литиевый? Выбор аккумулятора для тяжелой техники – задача, требующая учета множества факторов. Щелочные аккумуляторы, известные своей долговечностью и надежностью, постепенно уступают место литиевым, которые демонстрируют более высокую энергоемкость и меньший вес. Литиевые аккумуляторы предлагают более эффективную зарядку и разрядку, а также меньший саморазряд, что делает их предпочтительным выбором для интенсивной эксплуатации.
где познакомиться в Мелитополе Онлайн-досуг Мелитополь и городской сервис досуга предлагают разнообразные варианты времяпрепровождения, а актуальные анкеты Мелитополя помогут сделать правильный выбор. Ночная жизнь Мелитополя богата на события, и всегда можно найти что-то интересное.
акб на 100 ач литий сравнение Щелочные или литиевые тяговые АКБ: Выбор между щелочными и литиевыми тяговыми АКБ зависит от специфики применения. Щелочные аккумуляторы более устойчивы к экстремальным температурам, но литиевые обладают большей удельной энергией и меньшим весом, что делает их более привлекательными для широкого спектра задач.
стиль бот
литиевые аккумуляторы для складской техники купить Важно помнить, что правильная зарядка Li-ion аккумуляторов является залогом их долгой и бесперебойной работы. Использование несовместимого зарядного устройства может привести к повреждению аккумулятора и сокращению его срока службы.
https://vc.ru/smm-promotion
сравнение свинцовых тяговых аккумуляторов и литиевых Щелочные или литиевые тяговые АКБ: Выбор между щелочными и литиевыми тяговыми АКБ зависит от специфики применения. Щелочные аккумуляторы более устойчивы к экстремальным температурам, но литиевые обладают большей удельной энергией и меньшим весом, что делает их более привлекательными для широкого спектра задач.
Li-ion аккумуляторы для электротележек Замена тяговой кислотной батареи на литиевую требует внимательного подхода к совместимости с электрооборудованием погрузчика и подбору зарядного устройства. Необходимо учитывать напряжение, емкость и габариты аккумулятора, а также убедиться в наличии системы управления батареей (BMS) для обеспечения безопасной и эффективной эксплуатации.
Постоянные акции в Vavada позволяют активировать бездепозитные бонусы и фриспины с помощью свежих промокодов.
Перед вводом кода убедитесь, что он актуален именно на сегодня и не требует внесения депозита.
Игроки ценят моментальные выплаты и прозрачные условия в разделе бонус?правил.
Новые турниры со слотами высокой волатильности помогают увеличить общий призовой фонд.
Свежие промокоды и инструкции по активации доступны здесь: промокод вавада.
Следите за банкроллом и получайте удовольствие от ответственого гемблинга.
Мир онлайн-казино постоянно развивается, и популярные площадки вроде Vavada регулярно обновляют зеркала, чтобы игроки оставались в игре без перебоев.
Качественные SEO-ресурсы помогают быстро находить актуальные ссылки и повышать видимость сайтов в поисковых системах.
Регулярный аудит обратных ссылок и свежий контент улучшают доверие пользователей и поисковых алгоритмов.
Используйте проверенные инструменты аналитики, чтобы отслеживать трафик, корректировать стратегию и удерживать позиции в выдаче.
Подробности и полезные материалы ждут здесь: https://grow-your.website.
Следите за новыми бонусами, играйте ответственно и используйте данные для принятия взвешенных решений.
BlackSprut marketplace сайт
bs2best at
BlackSprut marketplace сайт
bs2best at
BlackSprut marketplace сайт
bs2best at
BlackSprut marketplace сайт
bs2best at