ATM Tamil Romantic Novels

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 1,2,3 &4

ஆசை எப்போ..மோகமாச்சு சுந்தரா!!

காதல் இளவரசி (விஷ்ணுப்ரியா )

(இது ஒரு லாஜிக் இல்லா மேஜிக் கதை.லாஜிக் பார்ப்பவர்கள் டேக் டைவர்ஷன்!! சிரிக்க சிரிக்க சிரிக்க மட்டுமே!!)

ஆசை-1

அது சென்னையின் உயர்ரகமான, மேன்னாட்டு தரம் வாய்ந்த உணவகமொன்று. 

முழுமையாக மூன்று தளங்கள் கொண்ட அதன் சுவர்கள் அனைத்தும் கண்ணாடிச்சுவர்களாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் வெளிவளாகத்தில்.. கழுகுச்சிலையின் அலகிலிருந்து நீர் பாய்வது போல செயற்கை நீரூற்றொன்றும் வட்டவடிவில் பேரழகாக எழுப்பப்பட்டிருந்தது. 

ஆக மொத்தத்தில், சுருங்கச் சொல்லின், ஏழு நட்சத்திர விடுதியின் தரத்தை மிஞ்சும் வகையில் பிரம்மாண்டமோ பிரம்மாண்டத்துடன் காட்சி தந்தது அது.

அந்த கண்ணாடி உணவகத்தின் வெளியே..பரந்து விரிந்தது அழகான நடைபாதையொன்று!! அந் நடைபாதையோரத்தில் தளைத்தோங்கி விஸ்தாரமாக கிளைபரப்பி.. நானாவிதமான பறவைகளுக்கும், காக்கைகளுக்கும் வாழிடமாகிப் போயிருந்தது ஒரு மராமரமொன்று!! 

அம்மரத்தில் மஞ்சள் வண்ணத்தில் கொன்றைவேந்தன் பூக்களும் பூக்க.. நடைபாதையெங்கனும் தங்கம் சிதறியது போல கொட்டிக்கிடந்தன பூக்கள்!! அங்ஙனம் உதிர்ந்த பூக்களும் கூட காண்பதற்கு பேரழகு!! 

அம்மரத்தின் கீழே போடப்பட்டிருந்தது.. ஒரு மரபெஞ்சு. அதில் தன் கைகளைக் கோர்த்தவாறு..தலை தாழ்த்திய பார்வையுடன் அமர்ந்திருந்தாள் ஒருத்தி!! 

சங்ககால செய்யுள்கள் ‘இருபது தொடக்கம்.. இருபத்தைந்து வயதான பெண்டிரை வகைமைப் படுத்திய ‘அரிவை’ பருவத்துக்காரி அவள்!!

அவள் இப்புதினத்தின் நாயகி கமல நயனீ!! 

பெயருக்கேற்றாற் போல கமலம் என்னும் தாமரை மலர் போல விரிந்த அழகான நயனங்களுக்கு சொந்தக்காரி அவள்!! 

இருபத்து நான்கு வயது ஆன போதும் ,குழந்தை குமரியாய்.. துறுதுறுவென கண்ணைக் கவரும் பட்டாம்பூச்சி போல வலம் வரும் சுந்தரி அவள்!!

இன்னும் பக்குவப்படாமல் மழலை போல திரிந்து கொண்டிருந்தவள் ..சாதாரண பெண்ணில்லை.மாறாக, எம்.ஈ. என்ஜினீயரிங்க் முடித்திருக்கிறாள்!! 

ஆம், நானும் ரவுடி தான் என்பது போல அவள் அடிக்கடி , ‘நானும் என்ஜினீயர் தான்’ என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதுமுண்டு.

எப்போதும் ஓரிடத்தில் தேங்கி நில்லாமல் ..சலசலவென சரசரத்து ஓடும் காட்டாற்றுக்கும், இவளுக்கும் நிச்சயம் வேறுபாடு இல்லை. 

 அழகான நகைப்புக்கும், கேலிப் பேச்சுக்கும் என்றும் அவளிடம் பஞ்சமே நேர்ந்ததில்லை. அப்படியாப்பட்டவளுக்கும், இன்று என்னானது??

அதற்கு காரணம் அவளது தந்தை!! செந்தில் நாதன்!! 

எம்.ஈ என்ஜினீயரிங் படிப்பு முடித்தவளை.. இப்போது சம்சார சாகரத்தில் தள்ளிவிட பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார் அவளது தந்தை.

அதை எண்ணி ,கண்கள் இரண்டும் குளமாகிப் போக..நீர் மல்கி கண்ணிமையோரம் தடித்து நின்றது அவளுக்கு.

அகத்திலே ஒருத்தன் பட்டா போட்டு வாசம் செய்ய.. இன்னொருத்தனுக்கு எப்படி கோட்டா கொடுக்க முடியும் ??

அவள் தந்தை செந்தில்நாதனாகட்டும்!! தாய் காமாட்சி ஆகட்டும் !! யாருமே அவள் காதலை.. அவளது எண்ணத்தை..நயா பைசாவுக்கு கூட மதிக்கவில்லையே?? 

அதை எண்ணும் கணம்தோறும்.. பெரும் சோகம் எழுந்து.. அவளை ஆழிப்பேரலையாய் சுருட்டிக் கொள்ளலானது. 

இந்த அவனியில் அவளது காதலை உணரவும் யாருமில்லையோ?? ஐயகோ என்னேவொரு பரிதாபநிலை ‘ கமலநயனீ’ என்னும் அழகு நாமம் கொண்ட பெண்ணுக்கும்?? 

 

அவள் அங்கே மரபெஞ்சில் மனம் பரிதவிக்க தவிக்க யாருக்காக காத்திருக்கிறாளோ.. ??அந்நபர் இன்னும் அங்கே வந்தபாடில்லை!! 

ஆமாம்.யாரோ கனடாகாரனாம்!! தந்தை பார்த்திருக்கும் ‘மோஸ்ட் எலிஜிபிள் அன்ட் ஹேன்ட்சம் பேச்சுலராம்’!! 

அவளைப் பெண் பார்ப்பதற்கு.. ஒரு ‘டேட்டிங்க்’ போல,கனடாவிலிருந்து இன்று வருகிறானாம்!! அந்த அந்நியனுக்காகத் தான் ,வந்து காத்திருந்தாள் அவள்.

அப்படி அமைதியாய் அமர்ந்திருந்தவளுக்கு..தன் வாழ்வில் வந்து போனவனை எண்ணி ஒருபுறம் மனம் கலங்கியது மங்கைக்கு.

 மறுபுறம் தன் வாழ்வில் இனி வரப் போகிற கனடாகாரனை  எண்ணி.. இதயம் திக்திக் என்று வேகவேகமாக அடித்துக் கொண்டது. 

தன் வாழ்வில் வந்து போன அந்த அமானுஷ்யனைப் (?) ஆம் அமானுஷ்யன் தான்.அவனைப் பற்றி மனதும் சமயசந்தர்ப்பமே பாராது.. நினைவுகளை.. ஞாபகப்பெட்டகத்தில் நின்றும் திறந்து காட்சிப்படுத்த விழைந்தது. 

மறுகணம் இதயத்தை யாரோ இரு கையால் இழுத்துப் பிழிவது போல.. வலியும் அவளுக்கு மிகைத்தது. 

சட்டென்று தன் மனதுடன் மானசீகமாக உரையாடிக் கொண்டவளோ, “அவற்றை நினையாதிரு மனமே..நினையாதிரு” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவளின் இமையோரம் நின்றும் குபுக்கென்று எட்டிப் பார்த்தது கண்ணீர்த்துளியொன்று!! 

அது இமை தாண்டி கன்னம் வழி வழிந்து விடாத வகையில், அவள் பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. 

“நான் எதுக்கு அவனை நினைச்சு கண்ணீர் விடணும்..? வர்றதா சொல்லிட்டு போன அவன் தான் வரலையே.. இப்படியொரு ஃபிகரை மிஸ் பண்ணிட்டோம்னு.. எனக்காக அவன் தான் கண்ணீர் விடணும்”என்று வம்படியாக 

தன்னவன் பற்றிய எண்ணங்களை மனதிற்குள் பிடிவாதமாக  நின்று ஒதுக்கித் தள்ளியவளாக நின்றாள் நயன் என்னும் நயனீ!! 

அவள் மனமோ..அவனைப் பற்றி எண்ணத் துணிய.. அதற்கு கடிவாளம் இட்டவள், அவன் ஞாபகம் தன்னை தாக்காதிருக்கும் பொருட்டு,வலிய.. நேற்றிரவு அவள் தந்தை உகுத்த சொற்களை அசைமீட்டிப் பார்க்கலானாள்.

ஆசை-2

அவள் வீடு தேடி வந்த கல்யாண தரகர் தான் முதன்முதலாக அந்த வரனைப்பற்றி வீட்டில் சொல்லி, அவனது புகைப்படத்தையும்.. சுயவிபரங்களையும்,அவள் தந்தை செந்தில்நாதனின் கையில் கையளித்ததே!! 

அது மட்டும் போதாதென்று வாயில் வெற்றிலை போட்டுக் குதப்பிக் கொண்டே.. தானாக தகைந்து வந்த வரனைப் பற்றி எக்ஸ்ட்ரா பிட்டுக்களை போடலானார் தரகர்!! 

தன் வீட்டு திண்ணையோடு அமைந்திருக்கும் காரிடாரில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஒய்யாரமாக சாய்ந்து அமர்ந்தவாறே, விஷயத்தை பகிரலானார் அவர். 

“இதோ கனடா மாப்பிள்ளை.. பார்க்க ஹேண்ட்சமா வேற இருக்கான்.. எந்தவித கெட்டபழக்கமும் இல்லாத டீட்டோட்டலர் மாப்பிள்ளை.. சுத்த ஆச்சாரமான   பையன்.. இதே போல இன்னொரு வரன் உங்க பிள்ளைக்கு தேடினாலும் கிடைக்காது..பூர்வீகம் சென்னைன்றதுனால உங்க பொண்ணு போட்டோ காட்டினேன்.. சட்டுனு பிடிச்சு போயிருத்து.. அதான் மேற்கொண்டு பேசலாம்னு வந்திருக்கேன்” என்று சொல்ல.. தாய், தந்தையரின் மனநிலையை கேட்கவும் வேண்டுமோ? 

நல்ல வேளை அக்கணம்.. அவர்களின் ஏகப்புதல்வி வீட்டில் இல்லாதது கூட அவர்களுக்கு சாதமாகவே போயிற்று! 

இன்றேல் தான் தரகரின் காபியில், தயவு தாட்சண்யம் பாராது, மிளகாய் பொடி அள்ளி அள்ளிப் போட்டு.. அங்கிருந்தும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியிருப்பாளே?? 

செந்தில் நாதனோ.. வந்த சம்பந்தத்தை விட மனமின்றி.. கப்பென்று பிடித்துக் கொண்டார். 

அது போக.. தன் ஏக புதல்விக்கு  மாப்பிள்ளை போட்டாவைக் காட்டினார் நயனீக்கு!!

நயனீயோ.. தன் பிராணநாதனை மனதில்,மணாளனாக வரித்திருக்க .. அந்தப் புகைப்படத்தை பார்க்கவும் மறுத்து விட்டிருந்தாள்.

அவள் செயலில் கோபமும்,கவலையும் ஒருங்கே முளைத்தது,தந்தை செந்தில்நாதனுக்கு.

“இங்கே பாரு நயனீ..பையன் போட்டோல சூப்பரா இருக்கான்..வயசு கூட கம்மி தான்.. ஜிம்மில் ஜிம்மும் ஜிம்பாடி !!இருபத்தாறு வயசாம். ஆனா கற்பூரம் அடிச்சு சொன்னா கூட எவனும் நம்ப மாட்டான்.. வயசு அதை விட குறைவு போல தான் தெரியுது ..இப்படி ஒரு வரன் தாங்களாகவே பார்த்திருந்தாலும் மாட்டியிருக்காது.. ஆனா யார் செய்த புண்ணியமோ நம்ம கையில தொக்கா மாட்டியிருக்கு..ஒரு தடவை மாப்ள போட்டோ மட்டுமாச்சும் பாரேன்மா” 

ஆசையாய் தவமாய் தவமிருந்து பெற்ற மகளிடம் கோபத்தைக் காட்டத் தெரியாத மனிதர்..சற்றே தழைந்து தான் பேசினார் .

நடுக்கூடத்தில்..உத்திரத்துடன் பிணைக்கப்பட்டிருந்த மர ஊஞ்சலில் தன்பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தாள் மகள் .

மடிநிறைய திராட்சை தட்டை வைத்தபடி சாவகாசமாக வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தாள் அவள்.

தந்தையின் பேச்சுக்கு சிறிதும் காது கொடுக்கவில்லை,அவள்.

ஒரு திராட்சையைப் பிய்த்து வாய்க்குள் போட்ட வண்ணம் , “முடியாதுன்னா முடியாது.. எனக்கு..அவன் ..வேண்..டாம்!!” என்று ஒரே மறுப்பாக மறுத்திருந்தாள் நயனீ.

சரியான காரணங்களின்றி மறுக்கும் பெண்ணை ஆயாசத்துடன் பெருமூச்செறிந்தவராக பார்த்தார் தந்தை செந்தில்நாதன்.

அவள் அருகில் அமர்ந்தவர்.. தன்னிலையில் நின்றும் இறங்கி வந்து இதமாக,பதமாக நண்பன் போலவும் பேசிப் பார்க்கலானார் .

“கனடாவுல சின்ன சாப்ட்வேர் கம்பனி வச்சிருக்கான்.. இன்னும் ஐஞ்சு,ஆறு வருஷத்துல பெரிய கோடீஸ்வரனா ஆயிருவான்..?”

அவர் என்ன தான் பிள்ளையார்சுழி போட்டாலும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றாள் நயனீ.

“நீங்க என்ன ஆசை காட்டினாலும் நோ..நோ..நோஓஓ” – ரொம்ப பிகு பண்ணிக் கொண்டாள் அவள்.

அப்போதும் விடாமல்..அவனைப் பற்றி ஆஹா,ஓஹோ என்று புகழ்ந்தாவது மகள் மனதில்..கனடாகாரன் பற்றி நல்லவற்றை விதைக்கவும் செய்தார் அவர்.இவை எல்லாவற்றிற்கும் பின்னாடி ..தன் மகள் நன்றாக வாழ வேண்டும் என்ற சுயநலம்தான் இருந்தது.

“ஆளு நல்லா உயரமா வேற இருக்கான்..கம்பீரமா ஓங்குதாங்கா மாடல் போல இருக்கான் அவன்.. ..ஆனா நீ ..எலிக்குட்டி கணக்கா இருக்க..இடுப்புல தூக்கி வைச்சுக்கற பொம்மை போல. ஞாயமா பார்த்தா அவன் தான் உன்ன வேணாம்னு சொல்லணும்..நீ எப்படி வேணாம் சொல்லலாம்”

தந்தையே அவளை கலாய்த்ததில், முகம் காணாத அவன் மீது இன்னும் கோபம் மூண்டது. மகளோ ஒற்றைப் பிடிவாதத்தில் மறுத்துவிட செந்தில் மூச்சுமுட்டித் தவித்தார்.

“ஊர்ல ஆமைக்குஞ்சுக கணக்கா ஆறேழு பெத்தவன்லாம் அசால்ட்டா இருக்கான். குரங்கு குட்டி போல ஒண்ணு பெத்துட்டு..முடியலடீ கோதாவேரி” என்று மனைவியைப் பார்த்து ..இவர் அலுத்துக் கொள்ள..இடையிட்டாள் மகள்.

“அப்பா ..அம்மா பேரு காமாட்சி” என்று திருத்தம் செய்தாள் மகள்.

“ஆமா இப்போ இந்த திருத்தம் ரொம்ப முக்கியம்?” என்று தலையில் துண்டை போட்டுக் கொண்டு ‘கப்பலே முழுகிப் போனது போன்ற தோரணையில்,ஊஞ்சலில் அமர்ந்திருக்க..செந்திலின் துணைக்கு வந்தது என்னமோ தாய் காமாட்சி தான்.

மகளின் மறுபக்கத்தில் வந்தமர்ந்து உச்சந்தலை தடவிக் கொடுத்தவராக..மென்மையாக சொல்லிப் பார்த்தார் தாயார்.

“அப்பா தான் இவ்வளவு சொல்றாருல..போ..எதுக்கும் போய் பார்த்துட்டு தான் வாயேன்..அந்த பையன் வேற உனக்காக கனடாவுல இருந்து இம்புட்டு தூரம் வர்றான்ல?அதுக்காச்சும் மதிப்பு கொடுக்க வேணாமா?”

தாயின் கூற்றில் இலேசாக அவள் மனதும் அசைந்தது. தாய்க்கோ இப்படி நாசூக்காக சொல்லியாவது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் எண்ணம்!!

ஆனால் மகளோ..தாய் தந்தை இருவரையும் விட எமகாதகியாக இருந்தாள்.எப்படியும் அந்த முகமறியா ஆடவனை நிராகரித்து விடும் எண்ணத்துடன்..நாளை அவனை சென்று பார்த்திட முடிவெடித்திருந்தாள் அவள்.

இருந்தாலும் மனம் ஆற்றாமையில் பொங்க..முகமறியா கனடா காரனை ஏக திட்டு திட்டிக் கொண்டேயிருந்தாள்.

“பெரிய கனடாகாரன்..ஊர்ல இல்லாத ராஜபரம்பரை.. போறேன்.. போய் பார்க்க்…கறேன்..அவன பார்த்து ரிஜெக்ட் பண்ண தான் போறேன்.” என்று முணுமுணுத்தவளாக எழுந்து சென்றாள் நயனீ.

ஆனால் அன்றிரவு, கனடாகாரனுடனான முதல் சந்திப்பே..தன் வாழ்வில் எதிர்பாராத பல திருப்புமுனைகளைக் கொண்டு வரக்கூடும் என்பதை அவள் அறிந்திருந்தால்??நயனீ அவனை முதன்முதலாக சென்று பார்ப்பதற்கு ஒரு சிறிதும் இசைந்திருக்க மாட்டாளோ என்னவோ ??

ஆயினும் ,எல்லாவற்றிலும் வலிமையான விதியோ..அவள் வாழ்வின்..அடுத்த பக்கங்களை புரட்டி வைத்துக் கொண்டு ..அவளுக்காக காத்திருந்தது.

ஆசை -3

இதோ இன்று!! இந்நொடி!!

அவள் நினைத்தது போல அவளை டேட்டிங் செய்ய வந்திருக்கும் கனடா மாப்பிள்ளைக்கு அவள் , ‘நோ’ சொல்ல துணிந்திருந்த நொடி அது!!

அவள் இதயம்.. தன் வாழ்வில் கடந்து போன அவள் மீது பக்தனாக மாறி பித்தனாய் திரிந்த.. அந்த ‘உன்மத்தனை’ பற்றி சிந்திக்கத் தொடங்கியது .

இக்கணமும் கூட அவனிலிருந்து கமழும் உயர்ரக வாசனை..காற்றில் அவளைச்சூழ அடிப்பது போல தோற்றமயக்கமும் எழுந்தது. 

அவனை கைகள் நீட்டி அணைத்துக் கொள்ள ஆசை..மனதில் தோன்றுவதையெல்லாம் படபடவென பேசித்தள்ள ஆசை!!

ஆம்,அவளது அமானுஷ்யக் காதலன்..ஒரு போதும் அவளது பேச்சுக்களை வைத்து அவனை ஜட்ஜ் செய்ததே இல்லை!! 

அவள் இதழ்கள் திறந்து உதிர்ப்பது எல்லாம் முத்து என்பது போல  அதைச் சேகரிக்கும் எண்ணத்துடன் காது தாழ்த்தி இருப்பான் அவன்!!.

அவளது காதல் நாயகனோ, ‘நான் திரும்பி வருவேன்..உனக்காக வருவேன்’ என்று சொல்லிச்சென்றவன்..இறுதிவரை இந்த இராஜகுமாரியை காத்திருக்கவே வைத்து விட்டான்.

அவனைப் பற்றி எண்ணுகையில்..இதயம் நொறுங்க..விழிகள் கண்ணீரில் பனித்தன.

அவன் நினைவு அவளுள் எழுந்து அலைப்புறுதலுக்குள்ளாக்க..அவள் அக்கணம் தன் காதலனை நிரம்பவும் மிஸ் செய்தாள். அவன் ஞாபகம் வந்த நிமித்தம்..அவள் கைகளோ , தன்னருகே வைத்திருந்த கைப்பைக்குள் எதையோ தீவிரமாகத் துழாவியது.

இதோ அவள் தேடிய பொருள்!! அது அவள் கைகளுக்குள் சிக்கியது. அது பழைய கால தேக்கு மரத்தினாலான ஒரு பெட்டகம்!!

அதனை எடுத்து தன் மடிமீது வைத்துக் கொண்டவளின் கண்ணெல்லாம் காதல்ப்பெருக்கு!! 

மெல்ல அதனை அவள் திறந்து பார்த்த போது.. அப்பெட்டகத்தில் திரும்பவும் அது ..அந்த முட்டை இருக்காதோ என்று நப்பாசையில் ஏங்கியது அவள் மனம்.

‘பைத்தியமா நயனீ நீ..நீ முதல் முதலா திறந்தப்பவே உடைந்து போன முட்டை..மீண்டும் எப்படி முழுசா உடையாமல் ..திரும்ப இந்த பெட்டகத்துக்குள் வரும்?’ என்று அவளைக் கேலி செய்து குற்றவாளிக்கூண்டில் இருத்தி வைத்து கேள்வி கேட்டது மூளை.

அதை நம்ப மறுத்து நின்ற பாழும் மனமோ, ‘எனக்குத் தெரியும் ..உடைந்த முட்டை திரும்ப முழுசா வராதுன்னு ஆனா..இது தான் மந்திரப்பெட்டகமாச்சே??இது மூலமா தானே அவன் எனக்கு கிடைச்சான்??அது போல திரும்பவும் என்கிட்ட அவன் முயற்சி பண்ணியிருந்தா…முட்டையும் திரும்ப வந்திருந்தா’ என்று சித்தம் பிறழ்ந்தவள் போல ஏதேதோ யோசித்தாள் நயனீ .

காதல்..அவன் மீது கொண்ட தீராத காதல்..அழகிய பெண்ணவளையும் சித்தம் பிறழும் வகையில் ஆட்டுவிக்கிறது.என்னே விந்தை??

கண்கள் படபடக்க..இதயம் தடதடக்க..கைகளும் பரபரக்க..அந்தப் பெட்டகத்தை ஆவலுடனும்,அன்புடனும்..எத்தனையோ முறை திறந்திருக்கிறாள் தான்!!

எண்ணற்ற முறைகள் பெட்டகம் திறந்த போதும்..அவள் எதிர்பார்த்த பலன் என்பது சுழியமே!!

எத்தனை முறை திறந்திருந்த போதிலும், முதன்முறை திறந்த போதிருந்த அந்த பதகளிப்பும்,பதற்றமும் அவளை விட்டு கிஞ்சித்தும் குறைந்ததேயில்லை.

இதோ இன்றும் அதே எதிர்பார்ப்புடன்..தன் மடிமீது பெட்டகத்தை சற்றே துணுக்கத்துடன் திறந்தாள் அவள்!!

கண்கள் எதிர்பார்ப்பில் விரிய.. பெட்டகத்தை ஏறிட்டாள் மையல் மாது!!

முதன்முறையாக ..அப்பெட்டகத்தை திறந்த போது..அவள் கண்ணை பளபளக்கச் செய்ததே ஒரு பெரும் பிரகாசம்??

அது ஒரு சிறிதும் இன்று அவள் அதனை திறந்த போது இல்லவேயில்லை.மாறாக,உள்ளே வெறுமையை மட்டுமே கொண்டு காட்சி தந்தது காலி பெட்டகம்.

பெட்டகத்தில் இருந்த உயிர்ப்பும் எங்கே போனது? அதைத் தந்தவனோடு அதன் உயிர்ப்புத்தன்மையும் பறிபோனதோ??

கண்களை ஆற்றாமையுடன் அவள் ஒரு கணம் மூட..மஸ்காரா விழிகளில் நின்றும் வழிந்தது சரேலென ஒரு துளி கண்ணீர்.

அவளது மூடப்பெற்ற விழிகளுக்குள் வந்து போனான்..ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட..இரட்சிக்கும் இராட்சசன் ஒருவன்!!

காற்றில் அலைபாயும்.. அக்கால ராஜ க்ஷத்திரியர்களைப் போல கற்றை சிகை!!

எதிராளியை கூர்போடும் தீட்சண்ய விழிகள்!!

ஆண்மைக்கு அழகு சேர்க்கும் வண்ணம் நீண்ட நாசி!! கச்சிதமான தாடைகள்!! இறுகித் தெரிந்த வன்மார்புகள்!! திட்டாய் திட்டாய் தசை கொண்ட வயிறு!!

பார்ப்பதற்கு..அசுரர்களுக்கான பத்துப் பொருத்தமும் பொருந்தும் வகையில் இருக்கும் ஆணழகு அசுரன் அவன்!!

அவன் நினைவுகளில்.. அவள் இதயம் ரணம் காண..அவள் ஒரு முறை பிரார்த்திக்கலானாள்.

அவனுக்காக!! அவனது ஆண்மை சிந்தும் முரட்டு வதனத்தை ஒரே ஒருமுறையேனும் மீண்டும் காண்பதற்காக!!

‘ஓ காட்..அவனை திரும்ப நான் பார்க்கணும்.அவன் என்கிட்டயே வந்து சேரணும்’என்று விழிகள் மூடி முணுமுணுவென்று வேண்டினாள்.

அவனது சொரசொரப்பான கன்னம் இரு கைகளிலும் தாங்க வேண்டும் என்று ஆசை !!

கற்பூரம் தோற்கும் மணத்தை ஒத்த அவன் வாய் மணம் சுவைக்க ஆசை!!

அவன் வன்மாரினை தலையணையாய் கொண்டு அன்றொரு நாள் உறங்கியது போல துஞ்சவும் ஆசை!!

தனக்காக அத்தனை சேவகம் செய்யும் அவனை..தன் நெஞ்சோடு கட்டியணைத்து முத்தாடிடவும் ஆசை.

கன்னிப் பெண்ணவளின் ஆசை யாவும் நிராசையாகிப் போனது.

ஆற்றாமை அதிகமாக..இதோ அரிவைப் பருவத்து கன்னியின் மடல்விழிகளில் மல்கியது கண்ணீர்.

“ஏன் என்னை விட்டு போன? எனக்கு மட்டும் வல்லமை இருந்தது.. உன்னை என் கருவறைக்குள் பொ..த்தி வைச்சு பாதுகாத்திருப்பேன்டா..” என்று இதழ்கள் முணுமுணுக்க அவனோடு மானசீகமாக அகத்துக்குள் கதை பேசினாள் கமலநயனீ.

“நீ வருவேன்னு வாக்குறுதி கொடுத்திருக்க..அதுக்காக தான்..இத்தனை நாள்..ஒண்ணில்ல இரண்டில்ல ஐந்து வருஷமா காத்திருக்கேன்..ஆனா..என்னை நித்தமும் தவிக்கவிடுறீயே” என்றவள் மெல்ல விழிகள் திறந்தாள்.

அவளில் இருந்தும் இறங்கிய நீர்த்திவலைகள் .. ஒன்றிரண்டு பெட்டகத்தின் உள்ளே விழுந்து சிதறின.

அப்படிச் சிதறிய நீர்த்திவலைகள் முத்துப் போல மின்னி மறைந்தன. அதனைக் கண்டு..அந்த சின்ன பிரகாசத்தைக் கண்டு..மனம் அன்றைய நாளினை நோக்கி பயணப்படத் தொடங்கியது.

அது.. தன் காதல்காரனை..முதன்முறையாக சந்தித்த தருணம்!! 

கமலநயனீ தன் மரணப்படுக்கையில் அந்திம நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் தருவாய் வந்தாலும் மறக்கவே மாட்டாத தருணம் அது!!

ஆசை-4

ஐந்து வருடங்களுக்கு முன்பு ,

அது காடும்,காடு சார்ந்த இடமும் என பண்டைய தமிழ்கூறும் நல்லுலகம் வகுத்து வைத்த தமிழ்நாட்டின் முல்லை நிலப் பிரதேசங்களுள் ஒன்று.

மலையும்,மலை சார்ந்த பிரதேசமுமான குறிஞ்சி நில எழில் சொட்டும் உதகமண்டலத்தின் அடிவாரத்தில்..அமைந்திருக்கும் ஈரவலயக் காடு அது!!

அங்கே முற்பகல் வெயில் ஏறிக் கொண்டிருந்த பொழுது அது!! 

விஸ்தாரமாக கிளைபரப்பி வளர்ந்திருந்த காட்டுமரக் கிளைகளின் இடையே தன் ஒளிக்கற்றைகள் கொண்டு..எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் பகலவன்!!

காட்டின் இருமருங்கிலும் பற்பல விதமான மூலிகைச்செடிகளும்,கொடிகளும் வளர்ந்திருக்க..அதை ஊடறுத்துப் போய்க் கொண்டிருந்தது ஓர் ஒற்றையடிப் பாதை.

அந்த ஒற்றையடிப் பாதையில் தான் உடலை ஒட்டிப் பிடித்திருக்கும் டிரெக்கிங் ஸூட் சகிதம்..தன் முதுகில் ஒரு பேக்பேக்குடன்.. கூந்தலை எல்லாம் போனிடெயிலில் அடக்கியவளாக மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க நடந்து கொண்டிருந்தாள் கார்குழலி.

ஒற்றையாளாக எப்போதும் டிரெக்கிங் வருவது என்பது அவளது பொழுது போக்கு!! அதன் பொருட்டு இன்றும் டிரெக்கிங் வந்திருந்தவள்..தன்னையும் அறியாமல் வந்த பாதை மறந்து.. காட்டில்  வழி தவறிப் போயிருந்தாள்.

கடந்த இரண்டரை மணித்தியாலத்திற்கும் அதிகமாக அவ்விடத்திலேயே எங்கெங்கோ அலைந்து திரிந்து..குட்டிப் போட்ட பூனை போலச் சுற்றிக் கொண்டிருந்தாள் நயனீ.

என்ன தான் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் கூட..தன் சரியான பாதை தான் கண்ணில் படவேயில்லை. அந்தோ பரிதாபம்!!

நெற்றியெல்லாம் வியர்த்து நனைய.. இன்னும் இன்னும் நடந்ததில் தன் பெருந்தனங்கள் ஏறியிறங்கியது, அவளுக்கு.

தன் பேக்கிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து கடகடவென தொண்டையில் சரித்துக் கொண்டவளோ..ஒரு கணம் தன் முழந்தாளைப் பிடித்துக் கொண்டு குனிந்தாள்.

“ஹாஹ்..ஹாஹ்..இதுக்கு மேல என்னால முடியாது சாமீ ..இவனுங்க எங்கே போய் பாதைய வைச்சு தொலைஞ்சானுங்கன்னு தெரியலையே.. சென்னையில தொலைஞ்சாலே கண்டுபிடிக்க கஷ்டம்.இந்த காட்டுல எங்க போய் பாதை தேடுறது?”என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவளுக்கு..பாதத்தை ஓரடி எடுத்து வைத்து நகர்த்தக் கூட இஷ்டமில்லை.

அந்தளவுக்கு வெளியேறுவதற்கான ஒற்றையடிப் பாதையைத் தேடித் தேடி களைத்துப் போயிருந்தாள் மிருதுவான பெண்.

அக்கணம்..அவள் காதுகளோ வித்தியாசமாக ஏதோ ஓர் அரவத்தை செவிமடுக்கவே..பெண்ணவளின் காது நுனியும் மெல்ல உயர்ந்து தாழ்ந்தது.

ஏதோ சரசரப்பது போன்ற தோற்றமயக்கம் தோன்ற..மெல்ல நிமிர்ந்து பார்த்தவள்..அங்கே விரிந்த அற்புதமான காட்சியைக் கண்டு..ஸ்தம்பித்துப் போனாள் ஆச்சரிய அதிர்ச்சியில்.

ஆம்,அவள் கண் முன்னே தங்கநிற ஒளியுடன் பட்டப்பகலில் பறந்தேறிக் கொண்டிருந்தன, பல்லாயிரக் கணக்கான குட்டிக் குட்டி பட்டாம்பூச்சிகள்.

இத்தனை பட்டாம்பூச்சிகளை..அதுவும் தங்கநிறத்தில் ஒருபோதும் பார்த்திராத அழகியின் விழிகள் விரிந்தன.

அவளது கருவிழிப்படலம் அப்படியே தங்கநிறத்தில் பளபளக்கலானது.பட்டாம்பூச்சிகள் இவளும் கைகால்கள் முளைத்த ஐந்தரையடி உயர ரோஜாப்பூ என்று எண்ணிக் கொண்டனவோ??

பறந்தேறி வந்து..அவள் அங்கமெங்கும் மொய்க்கலாயின அவை!!தன் தேகமெல்லாம் பட்டாம்பூச்சிகள் அமர்ந்ததும் ..உள்ளே ஓடியது உல்லாசப் பரவசம்!!

.அவள் இருந்த இடத்திலேயே.. 360 பாகையில் சுழன்றாள்,இன்பானுபவத்துடன். அப்படி அவள் சுழன்றதும் பட்டாம்பூச்சிகளும் .. பொற்காசுகள் பட்டுத்தெறித்தாற் போல..பறந்தேறிய காட்சி விழிகளுக்கும்,இதயத்திற்கும் தந்தது மனோ இரம்மியம்!!

பட்டாம்பூச்சிகளின் தரிசனத்தையெல்லாம் விழிகள் இமைக்க மறந்து இரசிக்கலானது.

அது மட்டுமா??அக்கணம்..அவள் நாசி எஞ்ஞான்றும் உணர்ந்திராத தேவலோக சுகந்தத்தை உணரத் தொடங்கியது.

ஒற்றையடிப்பாதையின் இருமருங்கிலும் சரசரவென அவள் கண்ணெதிரே பூக்கத் தொடங்கின வண்ணமயமான மந்திரப் பூக்கள்!!

அந்த தங்கநிற பட்டாம்பூச்சிகளை அவள் கைநீட்டித் தொட விழைய..அவள் தொடுவதற்கு முன் தூரமாகி ஓடின அவை.

“ஹேய் எங்கே போற நில்லு!!” என்று இவள் மீண்டும் அவற்றைத் தொட முயல..இன்னும் கொஞ்சம் விலகி ஓடி..அவளுக்குப் போக்குக் காட்டின அவை.

அவள் கண்களுக்கு மட்டுமே தெரியும் அதிசய பட்டாம்பூச்சிகள்!!

அவள் முத்துப்பற்கள் விகசித்தன, அவள் காணும், அபூர்வக் காட்சியைக் கண்டு.

பூக்களும் சரி..தங்கநிற பட்டாம்பூச்சிகளும் சரி..ஒரே பக்கத்தில் சுழன்று சுழன்று காட்டியது.

‘இந்தப் பக்கம் ..கமான்..கமான்” என்று அழைப்பது போல பிரம்மை தந்தன.

இவள் பாதங்களும் ஏதோ புரிந்து கொண்டாற் போல அனிச்சையாய் அத்திசை வழி நடக்கத் தொடங்கின.

இதுகாறும் தன்னை படுத்திக் கொண்டிருந்த சோர்வு..முழுவதும் அவளை விட்டும் எங்கோ தூரமாகி ஓடியிருந்தன.

 

அவள் பாதங்கள் நடக்க நடக்க..இருமருங்கிலும் அவளை வரவேற்கத் தயாரான சேடிப் பெண்களைப் போல.. ‘முழுக் முழுக்’ என்று மூன்றரையடி உயரத்தில் முளைத்தன பூஞ்செடிகள்!!

அந்த பூஞ்செடிகளின் இறுதியில் ..ஓங்குதாங்காக வளர்ந்திருந்தது பல்லாயிரம் வருடங்கள் பழைமையான பெரும் காட்டுமரமொன்று!!

அம்மரத்தின் அடிவாரத்தில்.. அவள் சிந்தையை,கருத்தை..கவனத்தை கச்சிதமாக கவரும் வகையில் இருந்தது ஒரு பெட்டகமொன்று.

“வாயேன்..வாயேன்..என்னைத் திறந்து பாரேன்” என்று அழைக்காமல் அழைப்பது போலிருக்க.. அவள் ஈர்ப்பு விசைக்கு ஈர்க்கப்பட்டது போல ..சொற்ப நொடிகளில் அந்த பெட்டகத்தின் முன்..விழிகள் பளபளக்க நின்றிருந்தாள்.

அதன் பக்கத்தில் முழந்தாளிட்டமர்ந்த கார்குழலிக்கு..அதற்குள் என்ன இருக்கின்றது என்பதைப் பார்க்கும் பேரார்வம் முகிழ்க்கலானது .

‘இதுல என்ன இருக்கும்??”

 “தங்கம்!!” 

“இல்ல..இல்ல வைடூழியம்.. !”

“இல்ல..பழைய கால பொக்கிஷங்கள். வைரம்..விலைமதிப்பற்ற சிலைகள்??!!’

‘இம்’மென்னும் முன்னம்..’அம்’ என்று..ஆயிரத்தெட்டு ஊகங்கள் பெண்ணவளுக்குள்.

‘எதுக்குடா வீண் டென்ஷன் ..தெறந்து பார்த்துட்டா போச்சு..சிம்பிள்..எதா இருந்தாலும் சேட்டு கடையில வைச்சு லம்பா அமவுன்ட் பாத்துர வேண்டியது தான்..” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவள்..அதன் முகப்பை ஆராய்ந்து பார்க்கலானாள்.

பெட்டகத்தினை பூட்டும்பகுதியில் பச்சை நிறத்தில் ஏதோ பட்டன் போல.. நவரத்தினத்தில் தெரிய..அதனை ஓர் அழுத்து அழுத்தியிருப்பாள் கார்குழலி.

இதோ மறுகணம்!! பட்டென்று பெட்டகத்தின் வாய் திறந்து கொண்டது!!

கண்கள் கூசச்செய்யும் வண்ணம் பெரும் பிரகாசம், அவ்விடத்தை முற்றுமுழுதாக பேரொளியில் அரவணைத்துக் கொண்டது. இவளோ அதன் ஒளியை வெற்றுக்கண் கொண்டு பார்க்க முடியாதவளாக..தன் கண்களுக்கு மேல்..கேடயம் போல கைகளை உயர்த்திப் பிடித்தவளாக ஓரிரு கணங்கள் சுதாகரித்துக் கொண்டு நின்றாள்!!

சில நிமிடங்களில்..அப்பேரொளி ஒளிர்ந்து அடங்கியதும் உள்ளே இருப்பது புலனானது,அவளுக்கு.

உள்ளே தங்கம்,வைரம் ,வைடூழியம் என்று ஏதேதோ விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இருக்கக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்தவள் ..அதில் இருந்தது கண்டு ஏமாந்து போனாள்.

அப்படி அவள் ஏமாறும் வகையில் என்ன இருந்தது??

அவள் பாஷையில் சொல்லப்போனால்.. ‘ஒன்றுக்குமே உதவாத தீக்கோழி சைஸ் முட்டை!!’ ஒன்று மாத்திரமே இருந்தது.

“இது ஏது முட்டை.?.சரி ஆம்லெட் போட்டுக்க சரி யூஸ் ஆகும்” என்று எண்ணியவளை கண்டித்தது மூளை.

‘முட்டாள்..காண்ற எல்லா முட்டையும் ஆம்லெட் போட்டுக்கலாமா என்ன?பக்கத்துலயே ஆறு வேற இருக்கு..முதலை முட்டைன்னா என்ன பண்றது ?? வந்து உன்னை கடிச்சு குதறப் போகுது பாரு’ என்று இடித்துரைக்கலானது

அதனை எண்ணி ,  ‘ஐயோ’ என்று வெளவெளத்தது தேகம்.

உண்மையில் அது என்ன முட்டை?முதலை முட்டை தானா?

ஆர்வக்கோளாறில் அவள் அம் முட்டையைக் கையில் எடுத்தது தான் பெரும்பிழை!!

அதை எடுத்ததும்..அக்காட்டில் அவளைச் சுற்றியிருந்த மரம்,செடி,கொடிகள் யாவும் சூறைக்காற்றுக்கு பிய்த்துக் கொண்டு போவது போல அசையத் தொடங்கின.

அப்படி பேய்த்தனமாக வீசிய காற்றில்..இவள் விழிகளுக்குள் சமயசந்தர்ப்பமே பாராது மணல்துகள்களும் நுழைந்திருந்தது.

அதில் கண்கள் உறுத்தத் தொடங்கிற்று அவளுக்கு. படபடவென கண்களை இமைத்துக் கொண்டு..தன்னையும் மீறி.. முட்டையை விட்டிருந்தாள் கமலநயனீ.

அவள் கையை எடுத்து கண்ணுக்கு கேடயம் போல வைத்து மூடிக் கொள்ளவும் செய்தாள்.

எக்கணம் அவள் முட்டையை பட்டென்று விட்டாளோ..அக்கணம் என்னேவொரு ஆச்சரியம்?

அவளைச்சூழ அடித்த பேய்க்காற்றும் கூட..வீசியது பொய்யோ?கனவோ ?கற்பனையோ என்று வியக்கும் வண்ணம் நின்று போனது.

இவள் விழுந்த முட்டையை பதறிப் போய் பார்த்திருக்க.. அந்தோ பரிதாபம் முட்டை ஓடும் வெடித்து உடைந்திருந்தது.

அச்சோ ஓருயிர் பறிபோனதே!! இவள் தடுமாறி மனம் கவலை கொண்டு நின்றவளாக ..உடைந்த முட்டை ஓட்டை எட்டிப் பார்த்தாள் நயனீ.

உள்ளே மஞ்சள் கருவோ..?வெள்ளைக் கருவோ , இல்லை! மாறாக, எதுவுமே அற்ற கூமுட்டை அது!!

‘கூமுட்டைக்கா இவ்ளவு பில்டப்பு?’ என்று அசடுவழிய நின்றிருந்த கணம்..அவள் கனவிலும் எதிர்பார்த்திராத சிற்சிலவையும் நடந்தேற சித்தமானது.

ஆம். முட்டையின் உடைந்த ஓட்டுக்குள் இருந்து.. ஒரு மஞ்சள் கருவொன்று பார்ப்பதற்கு அச்சு அசல் சின்ன லட்டு சைஸ் ‘மினி சூரியன்’ போல பளபளத்து எரிந்தது.

அது வளியில் மெல்ல மெல்ல காற்றுக்கு ஆடும் இறகினைப் போல ..அவள் விழிகளைச் சூழ எழுந்து பறக்கவாரம்பித்தது.

இவள் நயனங்களில் வியப்புடன் பார்த்திருக்க..அந்த மினி சூரியன்..உயரே..உயரே..வானத்தில் எழுந்து பறக்கலானது.

விழிகளாலேயே அதனை டிராக் செய்த வண்ணம் பார்வை செலுத்தினாள் அவள்.

ஆனால் மினி சூரிய பந்தோ அவளுக்கு போக்குக் காட்டி விட்டு, விழி இமைத்த கணப்பொழுதில் மறைந்து விட்டிருந்தது அது.

அக்கணம்..அந்த மினி சூரியப் பந்து.. அவள் கண்களை விட்டும் மறைந்து மறைந்து வந்து .. நீர்வீழ்ச்சியின் பின்னால் இணைந்திருக்கும் குகைக்குள்ளே  நுழைந்தது.

உள்ளே பகலவனின் கிரணங்கள் கூட உட்புகாத குகையிருட்டின் ஆழத்திற்குள்..இன்னும் இன்னும் ஆழமாகப் புதைந்து போனது.

அங்கே குகைக்குள் ..மலையைப் போல அளவுள்ள இராட்சத பாறாங்கல்லொன்று சிம்மாசனமாக அமைந்திருந்தது.

அதில் தன் பருத்த உடல்வாகுடன்..நீண்ட மீசையுடன்.. கல்லாய் போன தோரணையுடன் விழிகள் மூடி படுத்துக் கிடந்தது ஒரு டிராகனொன்று!!

டிராகன் ???

ஆமாம்,டிராகனே தான். அதன் நீண்ட வால், அனுமார் வால் போல நீ..ண்டு சென்று கொண்டிருந்தது.

வாலின் முடிவிடம் எங்குள்ளது என்று அனுமானிப்பது என்பது நிரம்பவும் கடினம்!!

எனில்,அவள் உடைத்த முட்டை ??அது மந்திர டிராகன் முட்டையோ?? 

ஆம்,அது பால்வெளி வீதியிலிருந்து, நம் பூலோகம் வந்த டிராகன் இளவரசனின் முட்டை!!

பால்வெளியில் அதன் அட்டூழியம் தாளாமல் அதனை சிறைப்படுத்தி அனுப்பி வைத்திருந்தனர்,டிராகனின் உலகைச் சார்ந்தவர்கள்!!

அது இத்தனை வருடங்களாக சிறைப்பட்டு துஞ்சிக் கொண்டிருந்த குகையே இது!!

பறந்து வந்த மினி சூரியப்பந்தோ..அதன் பிரம்மாண்டமான நாசித்துவாரத்திற்குள் நுழைந்தது.

மறுவிநாடி.. இதுவரை உதிரவோட்டம் அற்றுக் கிடந்த அதன் நரம்பு,நாளங்களில் எல்லாம் சுருசுருவென உஷ்ணத்துடன் ஓடியது,உதிரம்!!.

இதோ , பட்டென்று துயில் கலைந்து.. “அச்சு..அச்சூம்” என்று தும்மல் போட்டுக் கொண்டு எழுந்தது ,தங்கநிற டிராகன்!!

சூரியப்பந்துகள் அதன் பெருவிழிகளில் சுடர் விட்டு தங்கநிறத்தில் எரியலானது.

பன்னெடுங்காலமாக சிறைப்பட்டுக்கிடந்த டிராகன்!! அதன் உயிர் .. இத்தனைக் காலமும்,

அகப்பட்டிருந்தது, முட்டைக்குள்.

இதோ அவள் கைகளால் உடைக்கப்பட்டது டிராகன் முட்டை!!

அதன் விளைவாக விடுதலையடைந்தது அது!!

தன் இராட்சத இறக்கைகளை .. படபடவென அடித்துக் கொண்டு ….உடல் பயிற்சி செய்து கொண்டது டிராகன்.!!

துயில் களைந்து எழுவோர் உடல் முறுக்கி நெட்டி முறிப்பது போல இருந்தது அதன் செய்கை. 

மறு விநாடி..அந்தக்குகை விட்டும்.. பெருந்தொனியில் “ஊஊஊஊ” என்று கத்திக் கொண்டு வெளியில் வந்தது,டிராகன்!!

குகை வாயிலில் பீறிட்டு ஓடும் நீர்வீழ்ச்சியில் மேனியில் நீர்த்தெறிக்க நீராடிக் கொண்டே..சூரியன் தேடி பறக்கும் பீனிக்ஸ் பறவை போல.. உயர உயர.. உச்சம் வரை பறந்தது .

தன்னருகாமையில் இருந்த நீர்வீழ்ச்சியில் நின்றும் விகாரமான சப்தம் கேட்டு இதயம் திடுக்கிட ..நயனீயும் திரும்பியிருந்தாள்.

அக்கணம்..ஏதோ நாயக்கர் மஹால் தூணிண் மீது மோதியது போல அவள் நெற்றியும் எதிலோ பட்டு மோதுண்டது.

“அஹ்” என்று அடிபட்ட நெற்றியை தேய்த்து விட்டவளாக நிமிர்ந்தவளோ.. அவள் முற்றிலும் எதிர்பாராத வகையில் ஒருவன் நின்றிருப்பதைக் கண்டு விழிகள் விரிய அதிர்ந்து ஸ்தம்பித்து நின்றாள்.

மூச்சுக்காற்றும் சரிவர வெளிவர மறுக்க..அவள் விழிகளில் சூழ்ந்தது அச்சம்;தேகத்தில் தவழ்ந்தது பீதி !!

அங்கே  அவள் முன்னால்??.

ஆறடி உயரத்தில் இராட்சதனாக .. நீரில் சொட்டச் சொட்ட நனைந்தவனாக திடும்மென ஓர் அழகான அந்நியன் நின்றிருப்பதைக் கண்டாள் நயனீ.

அவள்.. திடுக்கிட்டு..உருக்குலைந்து போனாள்,அந்நியனின் பிரசன்னத்தில்!!.

சமநிலை தடுமாறி..கைகளை அந்தரத்தில் , ‘தெத்தபித்தே’ என்று ஆட்டிக் கொண்டு பின்னோக்கி விழ எத்தனித்திருந்தாள்.

அவ்விநாடி.. அவள் விழுந்து விடாமல் நரம்போடிய அவனது வெண்ணிற வாளிப்பான கைகளில் ஒன்று நீண்டு.. அவள் சிற்றிடையூடு கையிட்டு அணைத்துப் பிடித்துக் கொண்டது.

உடல் நாணாய் பின்னோக்கி வளைய..அவன் கைவளைவில் கிடந்த வண்ணமே அந்நியனைப் பார்த்தாள் அவள்.

நீரில் சொட்டச் சொட்ட நனைந்திருந்தவனின் பரந்த நெற்றியில் .. படிந்திருந்தது அவன் கேசம்.

கேசம் விட்டிறங்கிய நீர்த்துளிகள் சில அவனது புருவத்தில் இறங்கிக் கொண்டிருந்தன.இன்னும் சில மூக்கில் சரேலென வழிந்து இதழ்களில் திரண்டு நின்றன.

அவளது விழிகளுக்கு மிக மிக அருகாமையில் புடைத்துத் தெரிந்தது ,அவனது கழுத்தின் ‘ஆதாம் ஆப்பிள்!!’.

அது அவனது ஆண்மைக்கு இன்னும் மெருகு சேர்க்கலானது.

எங்கும் எதிலும் அப்பழுக்கில்லாமல் எலைட் லுக்கில் இருந்தவனையே விழிகள் விதிர்விதிர்த்துப் போய் மெய்மறந்து பார்த்திருந்தாள் அவள்.

அது மனித உருவில் இருக்கும் ஒரு டிராகன் !! டிராகன் இளவரசன் !!

அவன் நாமம் கூட ‘ஆதித்திய வர்தன்’ என்பதைக் கூட..அப்போதைக்கு அறியாமல் ..அவனையே இமையாமல் பார்த்திருந்தாள் அவள்.

இடம்,பொருள்,ஏவல் மறந்து.. கால,நேரம் மறந்து ,அவள் இதற்குமுன் கண்டிராத ஆடவனையே..தன் இதயப் பெட்டகத்துக்குள் எஞ்ஞான்றும் சேமித்து வைப்பது போலப் பார்த்திருந்தாள் அவள்!!

ஆசை-5

பழைய நினைவுகளுக்குள்..சிக்கித் தவித்தது பெண்மனம்..

நடப்புக்கு வரவே அடம்பிடித்தது. அவளது அன்பு ‘ஆதித்திய வர்தனின்’ நினைவுகளைச் சுமந்த வண்ணம்..கடந்தகாலத்திலேயே உழன்று தவிப்பதும் சுகமெனத் தோன்றியது நயனீக்கு.

குறிப்பாக முதன்முதலாக அவளைச் சந்தித்த தருணத்தை நினைவு கூர்ந்தவளுக்குள்  விழிகளில் காதல் அலை!!

அந்நொடி.. அவளை நடப்புலகுக்கு இழுத்து வரும் வகையில்..அவள் காதோரம் கேட்டது ஆண்மை சிந்தும் கரகரத்த டெஸ்டெஸ்டரான் குரலொன்று!!

“ஹாய்!!”

வசீகரிக்கும் வகையில் ‘ஹாய்’ சொன்ன   ஆடவனை ஏறிட்டுப் பார்த்தன பெண்ணவளின் நயனங்கள்!!

கருகருவென விழிகள் கொண்டு அலைஅலையாய் தோள்வரை வளர்ந்து காற்றில் ஆடிக் கொண்டிருந்து அவன் சிகை.

பின்னந்தலை கேசத்தின் ஒரு பாதியை..வூல் கொண்டு.. குட்டியாக கொண்டை போட்டிருந்தான் அவன்!!

அவனது தாடிமயிர்கள் அவனது ஆண்மைக்கு இன்னும் ஆண்மை சேர்க்க.. அவனது சிகையலங்காரமும்,தாடியும்.. அவனை அத்தனை கனகச்சிதமான மாடல் லுக்கில் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

கூடவே..அவன் அணிந்திருந்த டெனிம் துணியிலான ஷர்ட்..அவனது பரந்து விரிந்த தோள்களையும், புஜங்களையும் இறுக்கிப் பிடித்திருந்தது வெகு அழகு!!

அவனது முறுக்கேறிய உடலும்,வன்மையான பாதங்களும் அவன் ‘ஒரு ஃபிட்னஸ் ப்ரீக்’ என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

ஆக மொத்தத்தில் பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை அரிவை,தெரிவை மற்றும் பேரிளம்பெண் வரையான எழுவகைப் பெண்டிரும் கண்டு காதலறும் வகையில்..அத்தனை சுந்தரனாக இருந்தான் அந்த ஆடவன்!!

அவன் பார்த்து வைக்கும் கழுகுப்பார்வை எங்கேயோ அவள் பார்த்திருப்பது போல மாயை தந்து போனது அவளுக்கு.

‘ஒருவேளை…இது..??.அவளுடைய டிராகன் வர்தனுக்கு தங்கநிற விழிகள்..இவனுக்கோ கருவிழிகள்..ச்சேச்சே இருக்க வாய்ப்பில்லை. ’ என்று மனத்தை அதட்டி ..அடக்கி வைத்தாள்.

‘யாரிவன்..இவன் எதற்கு எனக்கு ஹாய் சொல்லணும்?ஒருவேளை டைம் கேட்டு வந்திருப்பானோ?’ என்று எண்ணிக் கொண்டவள்..அவன் கேட்க முதல் நேரத்தை தன் செல்லில் பார்த்துக் கொண்டாள் அவள்.

அவன்..தன்னிடம் மணி கேட்கக்கூடும் என்று அவள் எதிர்பார்த்திருக்க..அவனோ சட்டென்று கவிதைச் சொல்வது போல சொன்னான் அவள் நாமத்தை.

 “கமலநயனீ??” 

அவன் விழியுயர்த்தி கேட்க..இவனெப்படி என் நாமம் அறிந்தான் ?என்று விழிகள் இடுங்க சுந்தரனை ஏறிட்டாள் நயன்.

அவனோ கைக்குலுக்குவதற்காக ,ஒரு கை நீட்டியவனாக, “ஐ ஆம் ஹம்ரித் அருள்ஜோதி..” என்று சொன்ன போதும் இடுங்கிய விழிகள் தெளியவில்லை அவளுக்கு.

‘யாரவன்?பேரெல்லாம் சொல்றான்?’ என்று அவனை சந்தேகக் கண் கொண்டு ஏறிட  அவனே தன்னைத் தானே உரிய முறையில் அறிமுகப்படுத்திக் கொள்ளலானான்.

“உன் அப்பா பார்த்த மாப்பிள்ளை..ஹம்ரித் அருள் ஜோதி ப்ரொம் கனடா!!” என்று கைகளை இன்னும் நீட்டிக் கொண்டே நின்றிருந்தான் அவன்.

அவள் அப்போதும் கைகளை கொடுக்காமல் அமைதியாக நிற்க..இவன் தோளை குலுக்கிக் கொண்டு தன் உள்ளங்கையை பார்த்தான்.

“உனக்கு குடுத்து வைச்சது அவ்ளவு தான்டா..அன்லக்கி ஃபெல்லோ” என்று அவள் கரம் பதியாத தன் கையோடு அளவளாவவும் செய்தான் ஹம்ரித்.

பின்பு,அவள் சொல்லாமலேயே அவள் பக்கத்தில் இன்முகத்துடன் அமர்ந்து கொண்டவன், “நைஸ் டு மீட் யூ..பை தி வே யூ லுக்கிங் கார்ஜியஸ்!!” என்று நெடுநாள் பழக்கமானவன் போல அவளிடம் சகஜமாக உரையாடலானான், புதிதாக வந்த ஹம்ரித்.

அவனது  பார்வையோ  அவளை மேலிருந்து கீழாக  இரசனையுடன் பார்த்து வைத்தது.

ஆனால்,பெண்ணவளுக்கோ முதல் சந்திப்பிலேயே இப்படி வளவளக்கும் அவனைக் கண்டதும்,‘சரியான ப்ளேபாயா இருப்பான் போல .இப்டி ப்ளர்ட் (flirt) பண்றானே..கனடாவுல இந்த பேச்சால் எத்தனை பொண்ணுங்கள மயக்கினானோ?’ என்கின்ற எண்ணம் மிகைக்கலானது.

அவனை மறுத்திட வந்தவள்..அவனை ஓரிரு கணங்கள் இமையாமல்  பார்த்திருக்கலானாள். 

பின்னர் தன்னைத் தானே கட்டுக்குள் கொண்டு வந்தவளோ

..அவனை மறுத்திடும் எண்ணத்துடன் , தான் ஏற்கனவே தயாரித்து வைத்த பொய்களை ஒவ்வொன்றாக எடுத்து விடலானாள்.

“இங்கே பாருங்க.. என் அம்மா,அப்பா வேணா உண்மைய மறைக்கலாம்..ஆனா என்னால மறைக்க முடியாது ..நா..நான் உங்க கிட்ட  ஒரு உண்மை சொல்லியே ஆகணும்”

சுவாரஸ்யமான விழிகளுடன் நயனீயைப் பார்த்தவனின் குரல்.. கம்பீரமானதாக  ஒலித்தது.

“என்ன உண்மை!!”

“நான் இன்னும் வயசுக்கே வரலைங்க!!!..”

 அவள் அடித்து விட்ட உருட்டில் அவன் புருவங்கள் இரண்டும் மெல்ல மேலுயர்ந்தன.

அவன் பதறியடித்துக் கொண்டு , ‘வாட்??’ என்று கேட்கக்கூடும் ; அப்புறம் எப்படி தாம்பத்தியம் நடத்துவது என்று பின்வாங்கக்கூடும் என்று அவனில் நின்றும் எத்தனையோ எதிர்வினைகளை அவள் எதிர்பார்த்திருக்கலானான்.

ஆனால் அவனோ அவள் எதிர்பார்ப்புக்களை நிராசையாக்கும் விதத்தில்..ஒன்று சொன்னானே பாருங்கள்!!

“இன்ட்ரஸ்டிங்க்!!” என்று இளநகையுடன் அவளுக்கு அருகில் கால்மேல் காலிட்டு..வெகுவெகு கர்வனாக அமர்ந்தான் அவன்.

“எதே இன்ட்ரஸ்டிங்கா?ஏங்க இது உங்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்..நீங்க என்னென்னா கொஞ்சம் கூட ஷாக் ஆகாம இன்ட்ரஸ்ட்டிங்க்னு சொல்றீங்க??” என்று புரியாமல் அவனிடமே வாய் விட்டு கேட்டிருந்தாள் நயன்.

அவனோ..அவள் புறமாக சாய்ந்து திரும்பியவனாக. அவளுக்கு புன்னகையையே பதிலாக தந்தான்.

“இதுல என்ன இருக்கு?? நீ ஏஜ் அட்டென்ட் பண்றப்ப பண்ணு.. இயற்கைக்கு தெரியும் எப்போ எதெது பண்ணனும்னு..மோர் ஓவர் டெக்னாலஜி ரொம்ப பெருசா வளர்ந்திருச்சு.. குழந்தை ஆசை வந்ததுன்னா தத்து கூட வளர்த்துக்கலாம்..சிம்பிள்!!” என்று சொல்லி இலகுவாக தோள் குலுக்கிக் கொண்டான் ஹம்ரித்.

இவளுக்கோ..தலையைக் கொண்டு போய் குட்டிச்சுவற்றில் மோதிக் கொள்ளலாம் என்பது போலிருந்தது அவன் தந்த பதிலில்.

இருப்பினும் விக்கிரமாதித்தனை விடாது கதை கதையாய் சொல்லி துளைத்த வேதாளம் போல.. ஹம்ரித்திடம் கதை கதையாய் சொல்லி துளைத்தெடுக்கும் வேதாளமுமாக மாற எண்ணம் கொண்டான் அவன் !!

“இது கூட பரவாயில்லைங்க..இத விட ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு இருக்கு.. யாருக்கும் தெரியாத சீக்ரெட்..இன்னும் ஏன்..என் அப்பா ,அம்மாவுக்கு கூட தெரியாத இரகசியம்..கிட்ட வாங்க.. அட வாங்கன்றேன்ல? காதை தாங்க” என்று இவள் குழந்தை போல அழைக்க.. ‘இவ எதுக்கு கூப்பிடுறா?’ என்று நெற்றியில் சுருக்கம் உண்டானது அவனுக்கு.

‘ஒருவேள காதை கடிச்சி வைச்சிருவாளோ?’ என்று எண்ணியபடி அவள் இதழ்களோரம் தன் காதை வைத்தான் அவன்.

அவளோ அவனுக்கு கிச்சுகிச்சு மூட்டும் கிசுகிசுப்பான குரலில், “எனக்கு பத்து பாய் ப்ரண்டு இருக்கு..” என்றவள் தானொரு அல்ட்ரா மாடர்ன் டூக்கே கிட் என்பதை பதிவு செய்யவும் விரும்பினாள் .

அதைக் கேட்டு..இவன் ஜர்க்காகி , ‘இவ கேரக்டரே சரியில்லையே..ம்ஹூஹூம் இது சரிப்பட்டு வராது’ என்ற முடிவுக்கு வருவான் என எதிர்பார்த்திருக்க..எல்லாமே புஸ்வானமாகிப் போனது.

ஆனால்,அவனோ அவள் சொல்வதை சுவாரஸ்யம் மூண்ட விழிகளுடன் இனிக்க இனிக்கக் கேட்கலானான்.

“இஸிட் ?வாவ்..நான் உன்னை விட மூணு லீடிங்..ஐ ஹாவ் தர்ட்டீன் கேர்ள்ப்ரன்ட்ஸ்” என்று தன் பங்குக்கு தானும் தன் வாயில் வந்த எண்ணிக்கையை அடித்து விட்டவன்..குறுகுறுவென நயனீயின் முகத்தையே ஆராயலானான்.

‘இதென்ன இவன்  உலகமகா ப்ளேபாயா இருப்பான் போலவே..தீராத விளையாட்டுப் பிள்ளை அந்த கண்ணனுக்கே டஃப் கொடுப்பான் போலிருக்கே?’ என்று எண்ணிக் கொண்டவள்  ..வெளிக்கு எதையும் காட்ட ப்ரியப்படவில்லை.

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள், தான் தயாராக வந்தவற்றை அப்படியே முகத்தில் உணர்ச்சிகளுடன் பக்காவாக ஒப்பிக்கலானாள்.

“இப்போ ரீசெண்டா கூட லவ் பண்ணேன் ஹம்ரித்” என்றவளுக்குள்.. தற்போது அவள் உருகி உருகிக் காதலித்த டிராகன் மன்னவனின் ஞாபகம் வந்து போனது.

பட்டாம்பூச்சி போல சிறகடித்து பறந்து கிடந்தவளின்..இறகு பிய்த்து போட்டு ..கண்காணாமல் அல்லவா போய் விட்டான் அவன்.

இது எதையும் கணக்கில் கொள்ளாது,தன்னருகே அமர்ந்திருக்கும்,செவச்செவ என்று தோள் சிவந்த தேகக்காரி,பக்கம் பக்கமாக கதை பேச..விடிய விடிய கேட்டிருக்கும் பேரார்வம் புதிதாக வந்த மிஸ்டர்.ரோமியோவுக்குள்.

தன்னை விட்டும் மீண்டும் பால்வெளிக்கு பறந்து போன டிராகன் காதலனை எண்ணி இவள் சொன்னாள் கீழ்வருமாறு.

“சின்சியரா லவ் பண்ணேன்..ஆனா இப்போ அவன் உலகத்துலயே இல்ல.”

“ஏன் செத்துப்போயிட்டானா?”

சிரிக்காமல் அவன் கேட்டு வைத்த தினுசில்..யாராவது இவர்கள் உரையாடலை கேட்டிருந்தால்.. குபீரென்று சிரித்திருக்கக்கூடும்.நல்லவேளை,யாரும் அங்கே கேட்பதற்கு இருக்கவில்லை.

ஆனால் ,கமல நயனீக்கோ..வந்தவன் தன் காதலை துச்சமாக எண்ணியது மாத்திரமல்லாமல் ..அபசகுனமாக பேசியதும் எரிச்சல் மூண்டது.

“உன் பதின்மூணு காதலிகள்னா தெய்வீகம்..என் காதல்னா உனக்கு இளக்காரமா?? போய்யா டபராசெட்டு மண்டையா..இப்போ சொல்றேன் கேட்டுக்கோ..இப்டிலாம் என் காதலை அபசகுனமா பேசற உன்னை..பிடிக்கல பிடிக்கல..பிடிக்கல ..” என்று கோர்ட் டவாலியைப் போல மூன்று தரம் சொன்னவள் ..மேல்மூச்சு ,கீழ்மூச்சு வாங்க அவனை சுட்டெரிப்பது போலப் பார்த்தாள்.

“ பதின்மூணு பொண்ணுங்க பின்னாடி வந்தா..நீ என்ன பெரிய மன்மதனா??ஒரு பொண்ணு மனச புரிஞ்சுக்க முடியாத உன்கூடலாம் யார் வாழ்வா??எந்த ஊர்ல இருந்து வந்தீயோ.. அங்கேயே போ..”

அவள் சீற்றத்தில் பதிலுக்கு பதில் வாயாட..புதிதாக வந்த புதியவனுக்குள்ளோ ஓர் நகைப்பு!!

தன்முன்னே வந்து நிற்கும் ஆடவன் யாரென்று அடையாளம் தெரியவில்லையா அவளுக்கு??

வந்திருக்கும் ஹம்ரித் என்னும் பெயர்தாங்கியவன்..யாரென்ற உண்மையை அவள் மட்டும் அறிந்திருந்தால்??

உலகமே மறந்து..அது பொதுவெளி என்னும் நாகரிகம் கூட துறந்து.. அவனை கட்டியணைத்து முத்தாடியிருப்பாள் நயனீ.

அதேசமயம் அவளுக்கோ..தன்னை உற்று உற்றுப் பார்க்கும் அவனது கழுகுப் பார்வை எங்கேயோ பார்த்த ஞாபகத்தை அவளுள் தூண்டிவிட்டு போகலானது.

தன் ஒற்றைவிரலால் கன்னத்தை தட்டித் தட்டி .. சிந்திக்கலானாள் நயனீ. அழகாய் மழலை போல.

“ஹேய் இரு..இந்த கழுகு பார்வைய எங்கேயோ பார்த்திருக்கேனே..” என்று சொல்ல , ‘கண்டுபிடித்து விட்டாளோ?’ என்று இதயம் பக்கென்றானது அவனுக்கு.

இவன் முகம் இருண்டு நிற்க..அவளோ ..அவன் முகத்தை நாடி குளோசப்பில் வந்தவளாக கீழ்வருமாறு சொன்னாள்.

“நீ ஒரு வேள என் கூட ஒண்ணாம் கிளாஸ் படிச்சிருக்கீயா..?” என்று அவள் கேட்டு வைத்ததில் உள்ளுக்குள் பொத்திக் கொண்டு வந்தது சிரிப்பு .

‘நிஜமாகவே தான் யாரென்பதை அவள் கண்டுபிடிக்கவில்லையா?’ என்று தோன்ற..அவளை சீண்டிச் சீண்டி  டீஸ் பண்ணும் ஆர்வம் மிகைத்தது அவனுக்குள்.

“இப்டி லூசு மாதிரி பேசுறீயே??நீ எம்.ஈ தான் படிச்சிருக்கீயா..?”

அவன் விளையாட்டாகக் கேட்க..இவள் தான் எம்.ஈ படித்து பரீட்சை எழுதின கதையையெல்லாம் சொல்லவாரம்பித்தாள்.

“நான் எங்கே படிச்சேன்?? பரீட்சையப்ப பக்கத்துல இருக்க பொண்ணு என்ன எழுதுதோ?..அதை அப்டியே நானும் எழுதி வைச்சேன்.அதான் ஈசி..பாஸ் ஆர் பெயில் அதெல்லாம் அப்றம் தான்..”என்று சொன்னவளை..விழிகள் உருட்டி உருட்டி நயந்தான்;வியந்தான்;அவளிடம் அதிகம் கதை கேட்கவும் பயந்தான்.

இவளோ தன்னை பெண்பார்க்க வந்தவனிடமே.. தன் காதல் கதை சொல்லி நிஜத்திலும் வெறுப்பேற்றும் எண்ணமும் கொண்டாள்.

“என் காதல் காவியம் சொல்றேன். கேட்கறீயா..?”என்று இந்தம்மா தன்னவனுடனான காதலை காவியமாக நினைத்து சொல்ல எத்தனிக்க.. கை உயர்த்தி தடுத்திருந்தான் அவன் .

“முடியாது ..போ ஓல்ட் பீஸூ.காவியம் ஓவியம்னுக்கிட்டு..” என்று சொன்னான் அவன்.

‘என்ன சொன்னாலும் ‘நோஸ்கட்’ செய்ய ஒரு பதில் வச்சிருக்கானே’ என்ற புகைச்சல் நயனீக்கு.

ஆனால்,அவன் பார்வையோ ..தற்சமயம்..மரபெஞ்சில் இருந்த அவளது வெண்டைப்பிஞ்சு விரல்களை நோட்டம் விட்டது.

நீள்விரலில் சின்ன கல்லு பதித்த அழகான மோதிரத்துடன்..மெழுகில் செய்தது போல புஷ்டியான விரல்கள் அவை!!

பேரழகு கைகள்!! பட்டுப் போல மிருதுவோ??

அதனைப் பிடித்திட பெரிதும் பிரயாசை கொண்டான் அவன்.

துறுதுறுவென்று உள்ளுக்குள் உந்த..அவளது கைப்பிடிக்கும் எண்ணம் கட்டுக்கடங்காமல் பொங்கியது.

கைப்பிடித்தால் தான் யாரென கண்டு கொள்வாள் என்று தோன்ற அதற்கு விடாமல் இன்னும் சீண்டிப்பார்க்கும் எண்ணம் பிறந்தது அவனுக்கு.

ஆகையால் , தன் வெறியை அடக்கிக் கொண்டவனுக்கு.. அவளிடமிருந்து தள்ளி நிற்பது .கண்ணை கட்டியது.

தன்னை யாரென அடையாளம் தெரியாமல் .. பேதையாய் வெள்ளந்தியாய் உளறிடும் அவளைக் கண்டு மென்னகை சிந்தினான் அவன் .

“உலகம் மாறினாலும் இது மாறாத கேஸூ.”என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டான் அவன்.

சற்றே உடலியல் மாற்றங்களோடு மீண்டும் அவள் பக்கத்தில் டிராகன் இளவரசன்!!

அவளது காதல் டிராகன் அவன் தான் என்பதை இம்மியும் வெளிப்படுத்தாது அவனோடு விளையாடி பார்க்க எண்ணம் கொண்டான்,புதிதாக ஹம்ரித் என்னும் அவதாரம் எடுத்திருந்தவன்!!

(இதோ நேரடி அமேசான் புக்..விஜி சித்தி நம்ம சைட் நேயர்களுக்கு ‘எக்ஸ்க்க்ளூசிவ்வா போட சொன்னதுனால..இங்கேயும் படிச்சிக்கலாம்.அதேசமயம் அமேசானில் படிக்க விரும்புறவங்க மொத்தமா படிச்சிக்கலாம்.குட்டி ஸ்டோரி தன் .டெடெய்லி எபி மழை உண்டு.முடிச்சதும் படிக்கலாம்னு மட்டும் நோ வெயிட்டிங் .. முடிந்ததும் எடுத்துருவேன்.அப்றம் நீங்க அமேசானில் மட்டுமே படிக்கலாம் .அதனால போட போட சுடச்சுட படிச்சிருங்க.Much love and godbless 😘😍❤️💜♥️💖💋)

58 thoughts on “ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 1,2,3 &4”

  1. Backlinks for seo
    Inbound links for SEO include anchor and non-anchor links.

    Anchors include the main keyword, because such a query plays a crucial role in search engine optimization.

    Non-anchor links are just as important – these are simple hyperlinks, and user interaction plays a key role because it provides a route for bots; search engines access your website and subsequent pages, which benefits your project.

    I provide majestic. If there are fewer links for one of the services, the analysis focuses on the service with the highest count of inbound links due to indexing delays.

  2. Ментам зачастую пофиг,легал-нелегал.Был Р±С‹ человек хороший,статья найдётся.РЎРџРЎР  тоже чёт РЅРµ нравится.РќРѕ Рё РЅР° Мажор экспрессе случаи принималова были,так что С….Р·….Увидел РЅР° сайте “ждём…”.Рћ.флюрокока Рё rti 111!Очень ждём!РђРњРў тож вкусняшка,РЅРѕ тут обьебосам РЅРµ завидую.РџСЂРёРјСѓС‚ РїРѕ полграмма Рё айда 20 часов как РєРѕС‚ РІ стиральной машине
    https://ilm.iou.edu.gm/members/faditykizawilix/
    РАБОТА КАЧЕСТВЕННАЯ И БОЛЬШОЙ, БОЛЬШОЙ, БОЛЬШОЙ, БОЛЬШОЙ, БОЛЬШОЙ, БОЛЬШОЙ, БОЛЬШОЙ, БОЛЬШОЙ, БОЛЬШОЙ, БОЛЬШОЙ, БОЛЬШОЙ, БОЛЬШОЙ РЕСПЕКТ ВАМ качество продукции еще не пробывал, в ближайшие время расскажу OOO

  3. брал все как всегда на 10 баллов забил
    https://odysee.com/@tremblaymrazbrittany
    Хочу грамульку взять и угостить определенный круг людей,

  4. Ваш дом – ваши правила:
    выбирайте, как быстро
    хотите заехать
    Вы сами решаете, на каком этапе завершить строительство. Дом можно получить в базовой комплектации, подготовленным к чистовой отделке или укомплектованным к заселению
    Фиксированные сроки строительства и стоимость по договору для любого варианта готовности.

    [url=https://ms-stroy.ru/]построить дом в подмосковье под ключ[/url]

    Теплый контур
    Включает в себя:

    Подготовительные работы: выбор или разработка проекта дома
    Устройство фундамента с устройством закладных под коммуникации
    Устройство несущих стен, внешних и внутренних
    Устройство перекрытий
    Монтаж внутренних перегородок
    Устройство монолитной железобетонной лестницы
    Устройство утепленной кровли
    Изготовление и монтаж окон
    Рассчитать стоимость >
    White box
    Включает в себя «теплый контур», а также:

    Работы по отделке фасада
    Монтаж водосточной системы
    Подшивка карнизных свесов
    Внутренняя штукатурка стен и откосов
    Монтаж системы отопления и водоснабжения
    Монтаж черновой электрики со щитом и заземлением
    Устройство черновой стяжки пола
    Рассчитать стоимость > [url=https://ms-stroy.ru/stroitelstvo_domov_iz_gazobetonnyh_blokov/]строительство домов из газобетона москва[/url]
    Под ключ
    Включает в себя «вайтбокс», а также:

    Подготовка стен к финишному покрытию
    Покраска оконных откосов и монтаж подоконников
    Поклейка обоев, покраска стен, монтаж плитки
    Монтаж напольных покрытий (плитка, ламинат и пр.)
    Монтаж потолков и приборов освещения
    Монтаж межкомнатных дверей
    Монтаж чистовой сантехники, розеток и выключателей
    Меблировка помещений и установка бытовой техники (Набор опций и материалов подбирается индивидуально)
    Рассчитать стоимость >
    https://ms-stroy.ru/stroitelstvo_monolitnyh_domov/
    ипотека под строительство

  5. оформил заказ жду. продавец общительный
    https://07c2de9b1d5cf82899f9ce9ead.doorkeeper.jp/
    Если неактуальные сообщения выше, откорректируйте сами. По компенсациям, если останутся вопросы после получения посылки, пишите в новом году, размер зависел от веса, длительности, индивидуальных переплат на счета и прочих обстоятельств. :ok:

  6. Если представитель РЅРµ торгует нашим товаром – то представительство РјС‹ закрываем Рё ответственности тоже РЅРµ несём.
    https://bio.site/cedefayhe
    классный магазин

  7. https://about.me/candetoxblend

    Superar un test antidoping puede ser arriesgado. Por eso, se ha creado una alternativa confiable con respaldo internacional.

    Su mezcla precisa combina nutrientes esenciales, lo que sobrecarga tu organismo y disimula temporalmente los trazas de sustancias. El resultado: un analisis equilibrado, lista para ser presentada.

    Lo mas notable es su capacidad inmediata de respuesta. A diferencia de detox irreales, no promete resultados permanentes, sino una herramienta puntual que responde en el momento justo.

    Miles de profesionales ya han comprobado su seguridad. Testimonios reales mencionan resultados exitosos en pruebas preocupacionales.

    Si no deseas dejar nada al azar, esta formula te ofrece confianza.

  8. Ищете подарок, который расскажет о ваших чувствах без слов? Серебряные изделия ручной работы из Кубачи от «Апанде» сохраняют тепло мастера и становятся семейной ценностью. Филигрань, чеканка и кубачинские орнаменты оживают в каждой ложке, чаше или подстаканнике. Ознакомьтесь с коллекцией на https://www.apande.ru/ и выберите вещь, которая подчеркнет вкус и статус. Поможем подобрать, сделать гравировку и аккуратно доставим заказ. Дарите серебро, которое радует сейчас и будет восхищать долгие годы.

  9. Hello everyone, it’s my first pay a quick visit at this web page, and post is actually fruitful in favor of me,
    keep up posting these types of content.

  10. I know this if off topic but I’m looking into starting my own blog and was
    curious what all is needed to get set up? I’m assuming having
    a blog like yours would cost a pretty penny? I’m not very internet smart so I’m not 100% certain. Any recommendations or advice would be greatly appreciated.
    Kudos

    My blog :: stashpatrick login

  11. Hello There. I found your blog using msn. This is an extremely well written article.
    I’ll make sure to bookmark it and return to read more of your useful info.
    Thanks for the post. I’ll certainly comeback.

    Check out my website; bclub

  12. I’m curious to find out what blog platform you have been utilizing?
    I’m experiencing some small security problems with my latest website and
    I’d like to find something more secure. Do you have any solutions?

    my webpage: infodig

  13. During an appearance on The View, the acclaimed actor talked about how sex
    differs as you get older while speaking to co-hosts Joy Behar, Sara Haines, Ana Navarro, Sunny
    Hostin, and Alyssa Farah Griffin.

  14. Normally I do not learn post on blogs, however I
    would like to say that this write-up very compelled me to try and do so!
    Your writing taste has been surprised me. Thank you, very
    great article.

  15. And all this despite the network’s comically bizarre
    humble-brag that ‘The Project is the only news program in the world that doesn’t
    use canned laughter’. (Er, we must have missed all those belly laughs on Four
    Corners).

  16. Please let me know if you’re looking for a article author for your weblog.
    You have some really great posts and I feel I would be a
    good asset. If you ever want to take some of the load off, I’d really
    like to write some content for your blog in exchange for a link back
    to mine. Please send me an email if interested. Regards!

  17. Howdy! This is my first visit to your blog! We are a collection of volunteers and starting a new project in a community in the same niche.
    Your blog provided us useful information to work on. You have done a marvellous job!

  18. Heya i’m for the first time here. I found this
    board and I find It truly useful & it helped me out a lot.
    I hope to give something back and aid others like you aided me.

  19. My family members all the time say that I am wasting my time here at net, however I know I am getting familiarity all the time by reading
    such good posts.

  20. Howdy just wanted to give you a quick heads up.
    The words in your article seem to be running off the
    screen in Safari. I’m not sure if this is a format issue or something to do with browser
    compatibility but I thought I’d post to let you know.
    The design look great though! Hope you get the issue fixed soon.
    Cheers

  21. I was wondering if you ever considered changing the page layout of your
    blog? Its very well written; I love what youve got
    to say. But maybe you could a little more in the way of content so people could connect with
    it better. Youve got an awful lot of text for only having 1 or 2 pictures.
    Maybe you could space it out better?

  22. Hi there, i read your blog from time to time and i own a
    similar one and i was just wondering if you get a lot of spam comments?
    If so how do you reduce it, any plugin or anything you can suggest?
    I get so much lately it’s driving me mad so any support is very much appreciated.

  23. I’m truly enjoying the design and layout of your blog.
    It’s a very easy on the eyes which makes it much more enjoyable for me to come here
    and visit more often. Did you hire out a designer to create your theme?
    Outstanding work!

  24. Hi there would you mind stating which blog platform you’re using?
    I’m planning to start my own blog in the near future
    but I’m having a difficult time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your design seems
    different then most blogs and I’m looking for something completely
    unique. P.S Apologies for being off-topic but I
    had to ask!

  25. Wonderful beat ! I wish to apprentice while you amend your web site,
    how can i subscribe for a blog website? The account aided me a acceptable deal.
    I had been tiny bit acquainted of this your broadcast provided
    bright clear concept

  26. I like the helpful info you provide in your articles. I’ll bookmark your weblog
    and check again here regularly. I’m quite certain I will learn many new stuff right
    here! Best of luck for the next!

  27. Thanks for the marvelous posting! I seriously enjoyed reading
    it, you happen to be a great author. I will always bookmark your
    blog and will often come back later on. I want to encourage you to ultimately
    continue your great posts, have a nice afternoon!

  28. Casinos with small starting deposit levels create an accessible wway to begin. Through reduced deposit thresholds,
    participants try games with ease. Such a welcoming structure supports mindful play habits.
    Clear deposit guidelines enhance overall satisfaction. Overall, this approach fosters
    an enjoyable introduction for various player profiles.

  29. Undeniably believe that which you said. Your favorite justification seemed to be on the net the simplest thing to be aware
    of. I say to you, I definitely get irked while people think about worries that
    they plainly do not know about. You managed to hit
    the nail upon the top as well as defined out the
    whole thing without having side effect , people can take a
    signal. Will probably be back to get more. Thanks

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top