ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

21. மோகவிழியால் எனை தைக்காதே
 
“அவரு சொன்னதால  மட்டும் இல்லடா.. நீயும் இரா பகலா கஷ்டப்பட்டு படிச்சிருக்க அதுக்கு கிடைத்த பலனும் கூடடா” என்று சந்தோசத்துடன் கூறினாள் தங்கமீனா.
 
கிருஷ்ணாவின் மீது அதீத காதல் உண்டானது. தங்கமீனாவுக்கு.. தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறான்.. இப்போத கிருஷ்ணாவை பார்க்கணும் போல இருந்தது அவளுக்கு.. 
அருளுக்கும் கிருஷ்ணாவை பற்றி இன்னும் நல்ல எண்ணம் அவன் மேல் தோன்றியது.. 
 
“அக்கா நான் ஆபிஸ் வரைக்கும் போய்ட்டு வரேன்” என்று எழும்ப.
 
“மாமா இன்னிக்கு தான் ஹாஸ்பிட்டல இருந்து வந்திருக்கீங்க.. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் போகலாம்” என்று அருள் மேல் அக்கறையாகக் கூற.
 
“எனக்கென்னடா உன்னோட வீட்டுக்காரர்தான் எனக்கு எதுவும் இல்லைன்னு சர்ட்டிப்பிகேட் கொடுத்து அனுப்பியிருக்காரு.. அதோடு ஆபிஸ் பக்கமா தான இருக்கு.. கொஞ்ச நேரம் இருந்துட்டே வரேன்” என்று கூறியவன் அவனது டிராவல்ஸ்க்கு சென்றான்.. பழனியிடம் போன் செய்து ஈஸ்வரியின் அம்மா எப்படியிருக்காங்க என்று விசாரிக்கவும் அருள் தவறவில்லை.. பழனியிடம், ஈஸ்வரியை விட்டு எங்கயும் போக வேண்டாம் என்றும் சொல்லி வைத்திருந்தான்.
 
டிராவல்ஸில் இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்த கணக்குகளை கொஞ்சம் பார்த்துக்கொண்டிருக்க.. கலைவாணி இரவு நேரமானதும் அருளை கூட்டிக்கொண்டு வர பிரபுவை அருளின் ஆபிஸுக்கு அனுப்பிவிட்டார்.. அருளும், பிரபுவும் வீட்டுக்கு சாப்பிட வர.. சாப்பிட்டு முடித்துவிட்டு.. “அக்கா, என் ரூம்க்கு போறேன்” என்றதும் 
 
“அருளு உன்னை தனியா விடமுடியாது” என்று அருளை அனுப்ப மறுக்க.. 
 
கிருஷ்ணா இன்றிரவு வந்தால் அவருக்கு சங்கடமாக இருக்கும் என்று எண்ணியவன் இங்க தங்க விரும்பவில்லை.. “சரிக்கா பிரபுவை என்னோட கூட்டிட்டுப் போறேன்” என்றதும் ஒருமனதாக அருளையும் ,பிரபுவையும் அனுப்பி வைத்தார் கலைவாணி.
 
தங்கமீனாவும் சாப்பிட்டு விட்டு அறைக்குள் போக.. “ஏய் உன் வீட்டுக்காரர் வருவாராடி” என்று டீவி பார்த்துக்கொண்டே கேட்க.
 
“ஆப்ரேசன் எத்தன்னை மணிக்கு முடியும்னு சொல்ல முடியாதும்மா.. நீங்க தூங்குங்க நான் பார்த்துக்குறேன்” என்றவள் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
 
கிருஷ்ணாவுக்கு போன் செய்யவும் தயக்கமாய் இருந்தது. ஆப்ரேசன் தியேட்டரில் இருந்தால் போனை சுவிட் ஆப் செய்து விடுவான் கிருஷ்ணா.. அப்படியில்லையென்றால் அறையிலேயே வைத்துவிடுவான். போன் செய்தாலும் வீண் தான்.. நம்மளும் அவர் கூட போயிருக்கலாம்.. என்று அவள் மனதில் ஏதோ ஏதோ தோன்றியது.. மணியைப் பார்க்க அது 12.30 ஐ காட்ட இனி வரமாட்டாரு என்று அயர்ந்து தூங்கிவிட்டாள்.
 
கிருஷ்ணா ஆப்ரேசன் முடிந்ததும் அவனது அறைக்குச் சென்று குளித்துவிட்டு கட்டிலில் படுக்கப் போக அறைமுழுவதும் தங்கமீனா இருப்பது போலவே தோன்றியது.. படுக்கையில் படுத்து கண்ணைமூட ஒரு பொட்டு தூக்கம் வரவில்லை.. அவளை அணைத்துக்கொண்டு தூங்கியவனுக்கு இன்று படுக்கை முள் போன்று இருந்தது.. கிளம்பிவிட்டான் தங்கமீனாவை தேடி.
நடு இரவில் கதவு லேசாக தட்ட ஹாலில் படுத்திருந்த கலைவாணிக்கு சத்தம் கேட்டு கண்விழித்துப்பார்த்து கண்டிப்பா மீனாவோட வீட்டுக்காரராதான் இருக்கணும்.. என்று கதவு பக்கம் சென்று “யாருங்க” என்று கேட்க.
 
“நான் கிருஷ்ணா” என்று கம்பீரமாக பேச.
 
“ம்க்கும்.. இதுக்கொண்ணும் கொறைச்சல் இல்ல” என்று கதவு திறந்து வைத்து சமையல் கட்டுக்குள் சென்றுவிட்டாள்..
 
கிருஷ்ணாவோ கதவு திறந்து உள்ளே வந்தவன் கலைவாணியை பற்றியெல்லாம் அவன் ஒரு பொருட்டாக எண்ணாமல் ஹாலை சுற்றிப்பார்த்தான்.. அங்கே அருள், பிரபு யாரும் இல்லை.. வெடு வெடுவென தங்கமீனா இருந்த அறைக்குள் சென்று கதவை லாக் செய்து விட்டு கட்டிலில் மீன் குஞ்சு உதடு பிளந்து உறங்கிக்கொண்டிருந்த மனைவியை அணைத்துக்கொண்டு உறங்க அவன் உள்ளம் ஏங்கியது.. 
 
டீசர்டை கழட்டி வைத்தவன் அவளருகே சென்று அவள் இடுப்போடு கைப்போட யாரு.. என்று அவள் சட்டென்று சத்தம் போட  அவள் சத்தம் எல்லாம் அவன் இதழுக்குள் மறைந்து போனது.
 
தன்னவனின் இதழ் முத்தத்தில் கரைந்தவள் அவனுள் மூழ்கிப்போனாள் பெண்ணவள்.. தன்னை தேடி வந்ததை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துப்போனாள்.. அவனோ, அவள் இதழை சுவிங்கமாய் மென்று தின்று கொண்டிருந்தான்.. இரவு நேரத்தில் நைட்டி போட்டிருக்க.. அவன் கைகள் ஜிப்பை ஓபன் பண்ணப் போக அவளோ கைக்கொண்டு அணைப்போட அதை தூசி போல தட்டிவிட்டு ஜிப்பை திறந்து மென்பாகத்ததை கை கொண்டு அளவெடுத்தான்.. கொட்டை பாக்கு அவன் விரல் நகம் கொண்டு அதன் வீரியம் பார்க்க கணவனின் முதுகில் நகக்கீறல் போட்டாள் பெண்ணவள்.. அவனது ஆசைக்கு தீனி போட்டுக்கொண்டிருந்தாள் கிருஷ்ணாவின் கோல்ட்.
 
அவனது கைவிரல் நகம் பட்டு சோதித்து பார்த்த இடத்தை உதட்டால் ஒத்தடம் கொடுக்க எண்ணி கருநாவல் பழத்தை கவ்விச் சுவைக்க.. ஹக் ஹக் என்று அவள் உடல் அதிரத் துவங்கியது.. காயாக இருந்ததை கைகொண்டும், இதழ் கொண்டும் கனியவைத்தான்.. அவளை மாயலோகத்துக்கு கூட்டிச்சென்றான் மாயகிருஷ்ணன்.. அவள் இடையை அழுந்த பிசைந்து குட்டித் தெப்பக்குளத்தில் உதட்டால் ஊர்வலம் வந்தான்.. அவள் முகத்தை பார்க்க உதடு கடித்து கண் சொருகி இருப்பவளை அவள் இதழை கவ்விக்கொண்டு இன்றைக்கு இது போதுமென்று நினைத்தானோ தெரியாது.. அவள் இதழை சுவைத்துவிட்டு அவள் மார்பில் முகம் புதைத்து உறங்கத்துவங்கினான்.
 
தங்கமீனாவும், கிருஷ்ணாவை அணைத்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.. காலையில் இருவரும் ஒன்றாகவே கண் விழித்தனர்.. ஆனால் யார் முதலில் எழுந்திருப்பது என்று இருவரும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தனர். கிருஷ்ணாவின் பார்வை அவள் கழுத்துக்கு கீழ் போக.. அவன் அடுத்த என்ன செய்வான் என்று புரிந்து கொண்ட தங்கமீனா அவனிடமிருந்து சட்டென்று எழுந்து கொள்ள.. விடுவானா அந்த மாயக்கண்ண்ன் இழுத்து அணைத்து அவன் செய்ய நினைத்ததெல்லாம் செய்து முடித்தே அவளை விட்டான்..
 
“ச்சே.. டாக்டர் நீங்க ரொம்ப மோசம்பா” என்று சிணுங்கிக்கொண்டே குளியறைக்குள் சென்றாள்.. அவள் குளித்து வந்த பிறகு கிருஷ்ணாவும் குளிந்து வந்தான்.
 
கலைவாணி காலை சமையலை செய்து முடிந்திருந்தார்.. “அம்மா” என்று சமையல்கட்டுக்குப் போக.. 
 
“உன் வீட்டுக்காரர் இன்னிக்கு நம்ம வீட்ல சாப்பிடுவாரா.. நிறைய சமைச்சிருக்கேன்டி” என்று கூற
 
“நான் சாப்பிட ரெடி அத்தை.. என்று தலைமுடியை துவட்டிக்கொண்டு சமையல்கட்டுக்குள் கிருஷ்ணா வர.
 
கிருஷ்ணாவை கண்டதும் கலைவாணி வாயை கப்சிப்பென்று மூடிக்கொண்டார்.
 
அருளும், பிரபுவும் இலையுடன் வீட்டுக்கு வந்தனர்.. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை கவனிக்க மும்மரமாய் இருந்தனர்..
 
கிருஷ்ணாவும், தங்கமீனாவும் சாப்பிட உட்கார.. “அருள் நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம்” என்றிட..
 
“நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க நாங்க அப்புறம் சாப்பிட்டுக்கறோம்”  என்றான் அருள்.
 
“இந்த நேரத்திற்கு சாப்பிட்டிருக்கணும்ல.. இன்னும் மாத்திரை எழுதி கொடுத்திருக்கேன்ல.. இப்ப எங்க கூட சாப்பிடனும் இல்லனா நாங்களும் சாப்பிடல” என்று நெருங்கிய உறவினர் போல குடும்பத்தில் ஒருத்தனாய் மாறிப்போனான் கிருஷ்ணா.. இந்த நல்ல எண்ணமெல்லாம் குருமூர்த்தியிடமிருந்து வந்தது.. கிருஷ்ணா பாரின் போய் படித்திருந்தாலும் நமது தாய் மண்ணின் பழக்கவழக்கத்தை கிருஷ்ணா என்றைக்கும் மறக்கவில்லை.
கிருஷ்ணாவின் பேச்சை கேட்டு கலைவாணிக்கே, அவனை பிடிக்க ஆரம்பித்திருந்தது.. மனநிறைவுடன் அனைவருக்கும் பரிமாறினார் கலைவாணி.
 
“குழம்பு ஊத்துங்க.. எனக்கு லட்டு பிடிக்கும் இன்னொரு லட்டு வைங்க” என்று மருமகன் போல பேசாமல் அந்த வீட்டு பிள்ளைபோல கேட்டு வாங்கி சாப்பிட்டான்.
 
அருள், கிருஷ்ணாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.. அருள் தன்னை பார்ப்பதைப் பார்த்து “அருள் ஏதாவது என்கிட்ட பேசணுமா” 
இல்லையென்று தலையாட்ட “சாப்பிட்டு முடித்து உங்க டிராவல்ஸ்க்கு கூட்டிட்டுப் போங்க” என்றான்.
 
“சரிங்க சார்” போலாம்.. என்று தலையாட்டினான்.
 
பிரபு வேலை கிடைத்த விசயத்தை கிருஷ்ணாவிடம் பகிர்ந்து கொண்டான்.. “கன்கிராட்ஸ் பிரபு” என்று கைநீட்ட அருளிடம் உரிமையாக பழகியவன் போல் கிருஷ்ணாவிடம் பிரபு ஒன்றவில்லை.. 
 
“தேங்க்ஸ் மாமா” என்று கைக்கொடுத்து எனக்கு கொஞ்சம் வெளியே வேலையிருக்கு என்று கிளம்பிவிட்டான்.
 
அருள்.. கிருஷ்ணாவை கூட்டிக்கொண்டு டிராவல்ஸ்க்குப் போக.. அவனது ஆபிஸ் கொஞ்சம் பெரியஅளவில் தான் வைத்திருந்தான்.. நாலு டெம்போ டிராவலர்ஸ்.. மூன்று டாக்ஸியும்.. அதுபோக வண்டி வாங்கி விற்பது பல வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
 
ஆபிஸில் உட்கார்ந்ததும் கடைப்பையனிடம் இருவருக்கும் காபி கொண்டு வரச்சொல்ல.. இப்பதான சாப்பிட்டோம் அருள் கொஞ்சம் நேரம் கழித்து சொல்லிக்கலாம்.. என்று கூறி விட்டு அருளின் கல்யாணப் பேச்சை துவங்கினான்.
 
“அருள்.. நான் சொல்றத கேட்பீங்களா?”
 
கிருஷ்ணா.. என்ன சொல்வான் என்று ஒரளவு யூகித்து வைத்து 
“சொல்லுங்க சார்.”
 
“என்ன சார்னு கூப்பிடுறது நிறுத்துங்க கிருஷ்ணானு பெயர் சொல்லி கூப்பிடுங்க”
 
“சொல்லுங்க சிறு சிரிப்புடன் சொல்லுங்க கிருஷ்ணா.”
 
 
“நீங்க கல்யாணம் பண்ணிக்கணும் அருள்.. தங்கமீனா ரொம்ப பீல் பண்ணுறா.. நீங்க கல்யாணம் பண்ணனும்னு எங்களுக்கும் ஆசை.. உங்க மனசுல என்ன நினைக்கிறீங்கனு எனக்கு தெரியல.. உங்களுக்கு சடனா கல்யாணம் பண்றது முடியாதுனு எனக்கு தெரியும்.. சீக்கிரம் உங்க கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்படறேன்.. உங்க கல்யாணத்துக்குப்புறம்தான் எங்க வாழ்க்கை ஆரம்பிக்கபோறோம் அருள்” என்றே சொல்லிவிட்டான் கிருஷ்ணா.. அப்போதுதான் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்வான் என்று அப்படி கூறிவிட்டான்.
 
“கிருஷ்ணா சார்.. நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன் இப்படியே சன்யாசியா வாழ மாட்டேன்.. நீங்களே ஒரு பொண்ணு பாருங்க” என்று எண்ணி கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தான்.
 
“வாவ் சூப்பர் அருள்.. நான் கூட ரொம்ப பயந்தேன் நீங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க நாளை தள்ளிப்போடுவீங்கன்னு” என்று அவன் கையை பிடித்துக் கொண்டான்.
 
அருள் எதோ பேச வாய்யெடுக்க.. அந்நேரம் கிருஷ்ணாவிற்கு ஹாஸ்பிட்டலிலிருந்து போன் வர.. அந்த செய்தியை கேட்டவன் “ஓ இதோ வரேன்” என்று போனை அணைத்துவிட்டு.. 
 
“அருள், ஈஸ்வரியோட அம்மா காலமாகிட்டாங்க” என்று கூற.. 
 
“சார் நாம இப்பவே கிளம்பலாம் நான் வேற பழனியை கொஞ்சம் நேரம் முன்ன ஒரு சின்ன வேலையா வெளியே அனுப்பிட்டேன்.. அங்க ஈஸ்வரி தனியா இருப்பா” என்று கடையில் இருந்த பையனிடம் பார்த்துக்க சொல்லிவிட்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றனர். போகும் வழியில் ஈஸ்வரிக்கு ஆறுதலாய் இருக்கும் என்று தங்கமீனாவையும் கூட்டிச்சென்றனர்.
 
ஈஸ்வரி தனிந்து நின்று யாரும் இல்லையே என்று அழுதுகொண்டிருந்தாள்.. சற்று நேரம் முன்பு அவர்களது சொந்தங்களுக்கு அம்மா இறந்துவிட்டார் என்று சொல்ல காரியம் செய்ய எங்கே அவர்களிடம் ஈஸ்வரி பணம் கேட்டுவிடுவாள் என்று ஒருவரும் போன் எடுக்கவில்லை.. நமக்கே யாருமேயில்லையே என்று தனிக்காட்டில் நிற்பவள் போல் இருந்தவளுக்கு அருளைக்கண்டதும் அணைத்துக்கொண்டு அழத்தோன்றியது..
 
தங்கமீனா.. ஈஸ்வரியை அணைத்து பிடித்துக்கொண்டாள்.. கிருஷ்ணா டாக்டர்கள் செல்லும் பாதையில் ஐ.சி.யுவிற்குள் சென்று அனைத்து பார்மாலிடிஸ்ஸீம் முடித்து பாடியை வெளியே கொண்டுவந்தான்.. வெள்ளை துணியில் பரிமளாவின் முகம் மூடியிருக்க அதை திறந்து பார்த்து ஓவென்று கதறினாள்.. அழவேண்டாம் என்று யாரும் அவளிடம் சொல்லவில்லை.. அவள் அழுது விட்டாள்தான் அவள் மனப்பாரம் நீங்கும் என்று எண்ணி நின்றனர்..
 
அருள்.. அவள்பக்கம் சென்று “ஈஸ்வரி. அம்மாவ வீட்டுக்கு கொண்டு போலாமா” என்று கேட்க..
 
“வேண்டாம் சார் மின் மயானத்துக்கு கொண்டு போலாம்.. எங்களுக்கு சொந்தம் யாரும் இல்ல” என்று அதற்கும் ஒருமூச்சு அழுதாள்.
 
“ஈஸ்வரி அழாதா நாங்க இருக்கோம்” என்று தங்கமீனா அவளை பிடிக்க.. மீனா, அம்மானு கூப்பிட எனக்கு இனி யார் இருக்கா.. என்று அழுது அழுது மயங்கியே போனாள். அவளை தாங்கி பிடிக்கவே முடியவில்லை தங்கமீனாவால்.. “தங்கா அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொடுக்கலாமா” அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்க கண்விழித்துப் பார்த்து “அம்மா.. அம்மா” என்று மீண்டும் விக்கி விக்கி கதறி அழ. கிருஷ்ணா, அருளை பார்த்து கண்ணசைக்க..
 
 
பரிமளாவின் உடலை மின் மயானத்துக்கு கொண்டு சென்றனர்.. அனைத்து காரியங்களும் அருள் முன்நின்று செய்தான்..
 
ஈஸ்வரியின் பக்கத்துக்கு வீட்டு பாட்டி மட்டும் வந்து நின்று காரியத்தில் கலந்து கொண்டு ஈஸ்வரிக்கு ஆறுதல் கூறி சென்றார்.
 
அனைத்து காரியங்களும் முடித்து ஈஸ்வரியை தங்கமீனாவின் வீட்டுக்கு கூட்டிட்டுவந்தனர்.. ஈஸ்வரிக்கு ஆறுதல் கூறவே யாராலும் முடியவில்லை.. குளித்து முடித்து காரியங்கள் செய்ய வைத்தனர்.. எப்படியோ அவளை சாப்பிட வைத்தனர் அழுது கொண்டே உறங்கிப்போனாள் ஈஸ்வரி.. அடுத்த நாள் ஈஸ்வரி அவளது வீட்டுக்கு போகிறேன் என்றதும் கலைவாணி.. நீயும் என் பொண்ணுபோல இங்கயே இரு. அங்கே போய் தனியா என்ன பண்ணுவ.. அங்கயிருந்தா உங்க அம்மா நியாபகம் வரும்.. என்று அவளை வலுக்கட்டாயமாக இருக்க வைத்தார்.
 
கிருஷ்ணா மட்டும் இரண்டு முறை ஊருக்கு சென்று குருமூர்த்தியின் உடல்நிலையை சரிபார்த்து வந்தான்.. மருமகள கூட்டிட்டு வரல.. என்று கிருஷ்ணாவை குற்றம் சாட்டினார் குருமூர்த்தி.
 
“ஈஸ்வரியின் விசயம் கூறி.. அந்தப் பொண்ணுக்கும், அருளிற்கும் கல்யாணம் முடிச்சிட்டு உங்க மருமகள கூட்டிட்டு வரேன்ப்பா நம்ம ஊரிலே ஒரு ஹாஸ்பிட்டல் விலைக்கு வாங்கிட்டேன் இனி சென்னைக்கு வாரம் இருமுறை மட்டும் விசிட் போகப்போறேன்” என்றதும் மகனை கட்டிக்கொண்டார் குருமூர்த்தி. ஆனால் அவன் இங்கே தங்கினால் பல பிரச்சனைகள் வரும் என்பதை இருவரும் மறந்திருந்தனர்.
 
ஈஸ்வரி இப்போது பரிமளாவை எண்ணி அழுவதை கொஞ்சம் நிறுத்தியிருந்தாள்.. கிருஷ்ணா, ஈஸ்வரியிடம் அருளை திருமணம் செய்ய கேட்க.. அவள் பேசவில்லை.. அப்போது அருளும் அங்கேதான் இருந்தான்.. அருளிற்கு, இந்தப் பொண்ணுக்கு நம்மள கல்யாணம் செய்ய விருப்பம் இல்லை போல.. என்று நினைத்துவிட்டான்.
 
கிருஷ்ணா, அருளிடம் “நீங்க ஈஸ்வரிகிட்ட பேசுங்க அவ சம்மதிப்பா” என்றிட..
 
ஈஸ்வரியை தனியாக விட்டு அனைவரும் ஹாலில் இருக்க.. அருள் அவள் இருந்த அறைக்குள் சென்றான்.
 
ஈஸ்வரி ஜன்னலின் ஓரம் நின்றிருந்தாள்.. தலைக்கு குளித்து கிளிப்போட்டு தலைமுடியை அடக்கியிருந்தாள்.. அலைஅலையாய் அவளது கார்குழல் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது.. ஜன்னலில் இரு ஜோடிப்புறாக்கள் கொஞ்சி கொண்டு உணவை கொத்தி தின்பதை பார்த்துக்கொண்டிருந்தாள்.. அருள் தன்னிடம் பேச வருவது அவளுக்குத் தெரியும்.. யாரும் இல்லாத அனாதைபோல நின்றபோது தனக்கு ஆதரவு கொடுக்கும் குடும்பத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. என்று எண்ணியபடி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிவிட வேண்டும் என்று ஜோடி புறாக்கள் கொஞ்சி கொள்வதை தானும் குடும்பமாய் வாழவேண்டும் என்று நின்றிருந்தாள்.
 
அருள் அறைக்குள் வந்ததும் “க்கும்” என்று குரலைச் செரும..
 
சேலையின் நுனியை பிடித்துக்கொண்டு திரும்பினாள்.. நெற்றியில் குட்டியாய் ப்ரவுன் நிற பொட்டு, கழுத்தில் அவள் தந்தை ஆசையாய் வாங்கிப்போட்டுவிட்ட மெல்லிய டாலர் வைத்த செயின் மட்டும் மின்னிக்கொண்டிருந்தது.. அருளிற்கும் எப்படி பேசுவது எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று அவனுக்கும் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது.
 
 
“ஈஸ்வரி நான் என்ன பேசப்போறேன்னு உனக்குத் தெரியும்.. பர்ஸ்ட் என்னைப் பத்தி உனக்கு முழுசா தெரியுமா.. என்று அவள் முகத்தில் உணர்வுகளை பார்த்துக்கொண்டு நெற்றியை விரலால் தடவியபடி கேட்டான்.
 
“நீங்க தங்கமீனாவ விரும்பியிருக்கீங்க”
 
“அது அப்போ.. இப்ப அவ என் அக்காப் பொண்ணு.. கிருஷ்ணாவோட மனைவி.. என்னைப் பத்தி வேற என்ன தெரியும் உனக்கு” என அவள் கண்களை அழுத்தமாக பார்த்தபடி கேட்டான்.
 
அவன் பார்வை வீச்சை தாங்கமுடியாமல் தலைகுனிந்திருந்தவள்.. அவன் முகம் நிமிர்ந்து பார்த்து “வேற எதுவும் தெரியாது” என்று இதழ் பிதுக்கி தலையை ஆட்டினாள்.
 
 
“கொஞ்ச நாள்ல என்னப் பத்தி புரிஞ்சுக்காம கல்யாணம் பண்ணிக்க விரும்புறியா? எனக்கு அம்மா அப்பா யாரும் கிடையாது.. கலைவாணி அக்கா என் கூடத்தான் இருப்பாங்க.. நமக்கு கல்யாணம் ஆனாலும் அக்காவ வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்.. பிரபுக்கு நான் தான் திருமணம் செய்து வைக்கணும்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு நிறைய பொறுப்பு இருக்கும்.. இப்பச்சொல்லு என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் இத்தனை கேள்வி கேட்கிறான்.
 
சில நொடிகள் அமைதியாய் இருந்தவள் வாய்திறந்து “எனக்கும் தான் அம்மா அப்பா இல்ல.. நான் கலைவாணியம்மாவ என்னோட அம்மாவ நினைச்சுப்பேன்.. பிரபுவ என் தம்பியா ஏத்துக்குறேன்” என்று அருளை திருமணம் செய்ய சம்மதத்தை மறைமுகமாக கூறினாள்.
 
“என்னை மட்டும் இவ்ளோ கேட்கீறீங்க என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா”. என்று அவன் கண்ணை அங்கும் இங்கும் சோலி போல உருட்டிப்பார்க்க.
 
“எனக்கு.. உன்னை கல்யாணம் பண்ண சம்மதம்.. ஆனா உடனே நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்க வேணாம்.. இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிக்கலாம்.. மீண்டும் ஒரு முறை.. இப்ப சம்மதமா சொல்லு” என்றான்.
 
தங்கமீனாவின் மனதில் என்ன இருக்கு என்று முன்னவே கேட்டு தெரிந்திருந்தால் அவன் மனம் அவளை ஆசைப்பட்டிருக்காதுதானே.. மீண்டும் ஒரு காதல் அவஸ்தை தனக்கு வேண்டாமென்று அனைத்தையும் சிந்தித்து பார்த்துத்தான்.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டும்..
 
 ஒருவரையொருவர் புரிந்துகொண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.. என்று இவ்வளவு தூரம் ஈஸ்வரியிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.
 
“எனக்கு சம்மதம்” என்று தலையை ஆட்டினாள்.. அவள் முகத்தில் வெட்கம் தாண்டவம் ஆடியது
 
ஒரு நிமிடம் ஈஸ்வரியின் வெட்கத்தை இரசித்துப் பார்த்தான்.. இப்போதே அவளை விரும்ப ஆரம்பித்துவிட்டான்.. ஈஸ்வரி வீட்டில் இருந்த ஒருமாதமும் அருள் வந்து போவதே தெரியாது.. அக்கா மகள் வேறு ஈஸ்வரி வேறு.. தங்கமீனாவிடம் அக்கா மகள் என்ற உரிமையிருந்தது.. ஈஸ்வரியை யாரும் தன் கூட சேர்த்து வைத்து தவறாக பேசக்கூடாது என்று கலைவாணியின் வீட்டுக்கு சாப்பிட மட்டுமே வந்து போவான்.. அப்போது ஈஸ்வரி அவன் கண்ணில் பட்டால் அவள் நலம் மட்டும் விசாரித்து சென்றுவிடுவான்.. ஆனால் கலைவாணியிடம் ஈஸ்வரியை தனியேவிட்டு எங்கும் போக வேண்டாம் என்று சொல்லியிருந்தான்.. அவனுக்கு ஈஸ்வரியின் மீதிருந்த அக்கறையை கண்டு தான் குடும்பம் முழுவதும் அருளிற்கு ஈஸ்வரியை திருமணம் செய்து கொள்ள கேட்டனர்.
 
வெளியில போய் எல்லார்கிட்டயும் நம்ம சம்மதத்தை சொல்லலாம் வா.. என்று அருள் தனது கையை நீட்ட.. அவன் கண்களை பார்த்துக்கொண்டே அவளும் கையை கொடுக்க.. அவளது கையை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டு இனி வாழ்நாள் முழுக்க உன்கைய விடமாட்டேன்.. என்று அவளது கையை பிடித்து இழுக்க அவனது மார்பில் மோதுவது போல நின்றாள்.. இருவரது முகமும் அருகருகே.. ஆணவன் விடும் மூச்சுக்காற்று பெண்ணவளின் கழுத்தில் பட்டு தென்றலாய் வீசியது.. அதில் அவளது கார்குழல் அசைந்தாட.. அவனுக்குள் ஆண்மை ஆழிப்பேரழையாய் சுழண்டு வர.. டேய் அருள் கொஞ்சம் நிதானமாயிரு.. அவசரப்பாடாத என்று அவனுக்குள் சொல்லிக்கொண்டு அமைதியாய் அவளின் கைப்பிடித்து வெளியே செல்ல..
 
“என்னங்க ஒரு நிமிசம் நில்லுங்க” என்று பட்டுக்குரல் போல அவள் பேச..
 
“என்ன” என்று புருவம் தூக்கினான்.
 
“இல்ல நீங்க ஒருத்தரையொருத்தர் புரிஞ்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னீங்களே.. ஒருமாசம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாமா?” என்று தயக்கம் கொண்டு அருளிடம் கேட்க.
 
“இல்ல.. கல்யாணம் பண்ணிக்கிட்டு புரிஞ்சுக்கலாம்.. நாம இப்ப கல்யாணம் பண்ணலைனா எல்லாருக்கும் வருத்தம்தான் மிஞ்சும்” என்று சிரித்தபடி கண்சிமிட்டி சொன்னவன்.. அவள் கைகளை விடாமல் பிடித்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான்.
 
இருவரும் கைக்கோர்ந்து வருவதைக் கண்டு அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி அலை வீசியது.. அதில் மிகவும் சந்தோசப்பட்டது தங்கமீனாதான்.. இத்தனை நாள் அவள் உள்ளம் குற்ற உணர்ச்சியில் தவித்துப்போயிருந்தாள்.. அது இப்போது தீர்ந்து விட்டது.. என்று ஆனந்தப்பட்ட தங்கமீனா ஓடிவந்து ஈஸ்வரியை அணைத்துக்கொண்டு “என் மாமாவ, நீ கல்யாணம் பண்ண கொடுத்து வச்சிருக்கணும் ஈஸ்வரி” என்று அவளிடம் தன் சந்தோசத்தை பகிர்ந்துகொண்டாள்.
 
 
“வாழ்த்துக்கள் அருள்” என்று கைக்கொடுத்த கிருஷ்ணா அருள் உள்ளே சென்றிருந்த நேரமே நகைக்கடையில் மோதிரம் ஆர்டர் செய்துவிட்டான்.. சரியாக நகை கடையிலிருந்து மோதிரமும் கொண்டு வந்து கொடுக்க.. “அருள் இப்ப உங்க கல்யாணத்துக்கு அச்சாரமா இந்த ரிங்க ஈஸ்வரி கையில போட்டு விடுங்க” என்று இரு மோதிரத்தையும் அருள் கையில் கொடுத்தான்.
 
தங்கமீனாவுக்கு கிருஷ்ணா மீது ஆசையும் காதலும் கடல் போல பொங்கியது..எனக்காக இவ்வளவும் செய்றீங்க.. என்று அவள் விழியோரம் ஆனந்தக்கண்ணீர் வந்தது.. அதை யாரும் பார்க்காது துடைத்துக்கொண்டு கிருஷ்ணாவின் அருகே போய் நின்று “ரொம்ப நன்றிங்க” என்று கிருஷ்ணாவின் கையை பிடித்துக்கொண்டாள்.
 
 
“வெறும் நன்றிதானா வேற எதுவும் இல்லையா? என்னையும் நீ கட்டிக்க கொடுத்து வைச்சுருக்கணும்” என்று அவளை பார்த்து உதடு குவித்து முத்தம் கொடுக்க.. இருவரும் ஹால் என்பதை மறந்து பேசிக்கொண்டிருந்தனர்.
 
“நான் மோதிரம் போடலாமா” என்று அருள் கேலியாக கேட்க..
 
“ஓ சாரி மோதிரத்தை போடுங்க” என்று அசடு வழிந்தான் கிருஷ்ணா.
 
முதலில் அருள், ஈஸ்வரியின் கைப்பிடித்து அவள் கண்களை பார்த்து “சம்மதமா” என்று கண்ணால் கேட்க
 
 “ம்ம்.. சம்மதம்” என்று தலையசைக்க அவளது மென்பஞ்சு விரலில் மோதிரத்தை அணிவித்தான் அருள்.
 
இன்னொரு மோதிரத்தை ஈஸ்வரியின் கையில் கொடுக்க.. அவள் அருளின் முகம் பார்த்து இதழ் விரித்து மோதிரத்தை போட்டு விட்டாள்.. இந்த நேரம் தாய் இல்லையென்ற வருத்தமும் அவளுக்கு இருந்தது.. அது கண்ணீராய் வெளிப்பட..
 
“அக்கா” என்று அருள், ஈஸ்வரியின் பக்கம் வா என்று கண்ணைக் காட்ட கலைவாணி ஈஸ்வரியின் பக்கம் போய் நின்று அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டார்.
 
தங்கமீனா சமையல்கட்டுக்குச் சென்று ஸ்வீட் எடுத்து வந்து அருள் கையில் கொடுத்து ஈஸ்வரிக்கு ஊட்டிவிடச்சொல்ல அருள் லட்டுவை எடுத்து ஈஸ்வரிக்கு ஊட்டிவிட்டான்..அவன் விரல் நகம் இதழ் முட்டாமல் கொடுத்தான்.
 
“இனி கல்யாண பேச்சுதான் நம்ம வீட்டில்.. நாளைக்கே பட்டு எடுத்திரலாம்.. தாலிக்கும் ஆர்டர் கொடுத்திரலாம் அருள்” என்று கலைவாணி சந்தோசப்பட்டுக் கூற..
 
“பொண்ணுக்கு வேண்டிய சீர் எல்லாம் அண்ணன் முறையில நான்தான் செய்வேன்” உரிமையை பேசி” என்று கிருஷ்ணா தன் மனைவியைப் பார்க்க.. அச்சோ நெட்டக்கொக்கு உன் மேல காதல் வெள்ளம் பெருகுதே.. இப்பவே உன்னை கட்டிபிடிச்சு முத்தம் கொடுக்க தோணுதே என்றெல்லாம் தங்கமீனாவின் மனது மகிழ்ச்சியில் திழைத்துப்போனது.
 
ஈஸ்வரிக்கு பேச்சுவரவில்லை.. யாரும் நமக்கில்லை என்று நினைத்திருந்தேன்.. என்னோட அப்பாவும் அம்மாவும் உங்க ரூபத்துல இருந்து எனக்கு உதவி செய்யுறாங்க அண்ணா.. என்று கிருஷ்ணாவின் கையைப்பிடித்துக்கொண்டு அழுக.
 
“ஏய் எதுக்கு எமோசனல் ஆகுற” என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டு என் தங்கையா நினைச்சுதான் உனக்கு சீர் செய்யுறேன்.. என்று அவள் தலையை நீவிக்கொடுத்தான் கிருஷ்ணா.
 
கிருஷ்ணாவும், தங்கமீனாவும் ஹாஸ்பிட்டல் கிளம்பிவிட.. கலைவாணியும் சமையல்கட்டில் வேலையை பார்க்கப் போக.. அருளும், ஈஸ்வரியும் தனித்திருந்தனர்..
 
“என் கூட ஆபிஸ் வரியா.. ஆனா டிரைவரா இல்ல.. என்னோட வொய்பா” என்று கள்ளப்பார்வை பார்த்து கேட்க.
 
“ம்ம்.. வரேன்” என்றதும்
 
“அக்கா.. நானும், ஈஸ்வரியும் என்னோட ஆபிஸுக்கு கிளம்புறோம்” என்க.
 
நேற்றிரவே கலைவாணியிடம், ஈஸ்வரி வீட்டுக்குள்ளயே இருந்தானா அவ அம்மா நியாகம் வந்திட்டேயிருக்கும் அவள என்னோட ஆபிஸ் கூட்டிட்டுப் போறேன்.. என்று கூறியிருந்தான்.. அருள்.
 
“சரி அருள் கூட்டிட்டுப் போ.. வெளிச்சம் இருக்கம் போதே ஈஸ்வரியை கூட்டிட்டு வந்திரு” என்று குரல் கொடுத்தார்
 
“சரிக்கா நாங்க கிளம்புறோம்”
 
“இருங்க நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்”
 
“ஹே எனக்கு இன்னிக்கு ஆர்.டி. ஓ ஆபிஸ் போகணும்.. இப்பவே நேரமாச்சு” என்று ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு ஆபிஸ் சென்றான்.
 
 
 
பைக்கில் செல்லும்போது இடைவெளி விட்டே அமர்ந்திருந்தாள்.. அருளும் நெருங்கி உட்காரு என்றெல்லாம் கூறவில்லை.. இருவரும் புரிந்து கொண்டு வாழலாம்.. என்று முடிவு செய்திருந்தனரே.
 
கிருஷ்ணா அமைதியாக காரை ஓட்டினான்.. அவனின் அமைதிக்கு காரணம் இருந்தது.. வீட்டிலிருந்து கிளம்புன் முன் குருமூர்த்தி போன் செய்து கிராமத்தில் நடக்கும் பிரச்சனையை கூற.. நான் வந்து பார்த்துக்குறேன் ஐய்யா நீங்க எதிலையும் தலையிடாதீங்க.. என்று போனை வைத்திருந்தான்.
 
கிருஷ்ணா அமைதி கண்டு “என்னங்க என்னாச்சு.. ஏன் அமைதியா இருக்கீங்க ஏதும் ப்ராப்ளமா”
 
“நத்திங் கோல்ட்” என்று காரை ஓட்ட.. கிருஷ்ணாவின் கன்னத்தில் எக்கி முத்தம் கொடுத்தாள்..
 
“ஹேய் என்னாச்சு இன்னிக்கு என் பொண்டாட்டிக்கு முத்தமெல்லாம் கொடுக்கிறா” என்று காரையோட்டிக்கொண்டே ஒரு கையால் அவளது இடுப்பை வளைத்து தன் பக்கம் இழுத்து உட்கார வைத்து “அருள், ஈஸ்வரி கல்யாணம் முடித்ததும் நாம ஹனிமூன் போகப் போறோம்.. ஆனா அது எந்த இடம்னு சொல்லமாட்டேன் ..சர்பிரைஸ்” என்று கூறியபடி காரை ஓரம் கட்டி நிறுத்தி அவள் முகம் தாங்கி அவள் இதழில் முத்தமிட்டு “இன்னிக்கு காலையிலிருந்து என் பொண்டாட்டிக்கு முத்தமே கொடுக்கல” என்று மீண்டும் முத்தமிடப் போக.. இன்று அவளாக சென்று கிருஷ்ணாவின் இதழில் முத்தமிடத் துவங்கினாள்.. இருவரும் முத்தச் சண்டை போட்டனர்.. அவன் கைகள் எப்போதும் செய்யும் லீலைகளை செய்ய தவறவில்லை.. அவளின் இடுப்பின் சதையை அழுந்தப்பிசைந்தான்.. அவன் கைகளில் மெழுகாக உருகினாள் பாவையவள்.
 
இருவரும் பிண்ணிப்பினைந்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.. வெளியே போகும் வண்டியின் ஹாரன் சத்தம் கேட்டு இருவரும் விலகினர்.. கிருஷ்ணாவின் ஆளுமையில் தங்கமீனாவுக்கு வெட்கம் வந்து அவள் முகம் குங்குமமாய் சிவந்தது.. அடுத்த வாரத்தில் வந்த முகூர்த்த நாளில் அருள்.. ஈஸ்வரியின் கழுத்தில் பொன்தாலியிட்டு மனைவியாக்கிக் கொண்டான்.
 
கல்யாணம் முடித்து அணைத்து சடங்குகளும் முடித்த பின் அருளுக்கும் ஈஸ்வரிக்கும் வாழ்த்து சொல்லி விட்டு கிருஷ்ணா தங்கமீனாவை காதல் நகரம் என்று அழைக்கப்படும் பாரிஸ்க்கு அழைத்து சென்றான்.
 

26 thoughts on “மோகவிழியால் எனை தைக்காதே”

  1. Натяжной потолок подходит для ремонта, для клиентов в городе Москва, в компании Потолки Москвы, когда хочется чистого результата за день, скрытый карниз под шторы позволяет подобрать оттенок под стены и мебель; можно выбрать профиль https://potolki-decarat.ru/

  2. [url=https://mirrorpokerdom.vip/]покердом[/url] покердом вход, покердом официальный сайт, покердом сайт, покердом вход на сайт, покердом доступ, покердом онлайн, покердом вход сегодня, покердом рабочий сайт, покердом зеркало, покердом рабочее зеркало, покердом новое зеркало, покердом зеркало сегодня, покердом без блокировки, покердом мобильная версия, покердом приложение, покердом личный кабинет, покердом аккаунт, покердом онлайн покер

  3. Discover the exciting world of gambling on [url=https://777bet-spin.com/]777 bet[/url], where every spin can be a winner!
    Users who are new to betting can quickly create an account and begin wagering on 777bet.

  4. Is It Worth engaging the Social Security long-term disability counsel.
    The government benefits office controls SSI programs for claimants who are no longer able to hold a job due to severe impairment.
    Because the system follows specific standards, benefit applications must be put together carefully to avoid rejections.
    Retaining an experienced impairment legal expert can aid you navigate the process, submit medical reports, and keep up with deadlines.
    If a claim is refused, they can also stand for you for an hearing, improving the likelihood of a positive outcome.

    https://www.tumblr.com/sacramentosocialdisability/803578392826019840/eligibility-requirements-for-ssdi-in-sacramento

    [url=https://karta-probok.ru/trassa-p-176/#comment-25626]The Essential Role of the Counselor Specialized in Disability Matters[/url] e9861a5

  5. Simply wish to say your article is as amazing.
    The clearness in your post is just excellent and i
    could assume you’re an expert on this subject. Well with your permission let me to grab
    your feed to keep up to date with forthcoming post. Thanks a million and please
    carry on the rewarding work.

  6. Helpful info. Lucky me I discovered your web site
    by chance, and I’m surprised why this coincidence didn’t came about in advance!

    I bookmarked it.

  7. Hi there! Do you know if they make any plugins
    to protect against hackers? I’m kinda paranoid about losing everything I’ve worked hard on. Any suggestions?

  8. บทความนี้ อ่านแล้วเข้าใจง่าย ค่ะ
    ดิฉัน ไปเจอรายละเอียดของ
    เรื่องที่เกี่ยวข้อง
    ซึ่งอยู่ที่ Ruthie
    น่าจะถูกใจใครหลายคน
    มีการยกตัวอย่างที่เข้าใจง่าย
    ขอบคุณที่แชร์ บทความคุณภาพ นี้
    และหวังว่าจะมีข้อมูลใหม่ๆ มาแบ่งปันอีก

  9. Hi there! This article couldn’t be written much better! Looking at this article
    reminds me of my previous roommate! He always kept preaching about this.
    I most certainly will send this post to him. Pretty sure he’ll have
    a great read. Thanks for sharing!

Leave a Reply to S88bet Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top