ஹாய் பிரண்ட்ஸ் உயிரை உரசாதே உறவே முழு கதையும் போட்டு இருக்கேன்
சூர்யா சரவணன்
1. உறவு
ஐந்து கரத்தனை ஆனை முகத்தை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்
கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
என்ற பாடல் பூஜையறையில் ஒளிக்க விநாயகர் சிலை முன் தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார் அமுதவள்ளி. பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். அவரது கணவர் சண்முகமோ நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர். சண்முகம் பட்டப் படிப்பை முடித்து அமுதவள்ளியின் ஊருக்கு வாத்தியாராக வந்தவரிடம் காதல் ஏற்பட்டு இருவரும் கோவில், பார்க் என்று சென்று காதல் பறவைகளாக சுற்றிக் கொண்டிருந்தனர். அமுதவள்ளியின் தந்தை இராமமூர்த்திக்கு மகள் காதல் செய்தி அவர் காதுக்கு தெரிந்து அவரின் கோபத்துக்கு ஆளாகி வீட்டுக்குள் காவல் வைக்கப்பட்டார் அமுதவள்ளி.
“நம்ம குடும்பத்துல காதல் கல்யாணம் மண்ணாங்கட்டி இதெல்லாம் ஒத்து வராதுனு உனக்கு தெரியாதா அமுதா? தாயில்லா பிள்ளைனு உன்னை செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு இனி வீட்டை விட்டு போகக்கூடாது” என்று சிறை வைத்தார் மகளை. தன் சொந்தத்தில் ஜரூராக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் இராமமூர்த்தி.
ஆனால் அமுதவள்ளியோ சாப்பிடாமல் பட்டினி கிடந்து அடம்பிடித்து “சண்முகத்தைத்தான் கல்யாணம் செய்துக் கொள்வேன் இல்லையேல் விஷம் குடித்து உயிரை விட்டிருவேன்ப்பா” என அடம் பிடிக்க இராமமூர்த்தியும் மகளின் பிடிவாதம் முன்பு அவரின் கோபம் செல்லுபடி ஆகாமல் போனது. அமுதவள்ளியோ விஷம்பாட்டிலை எடுத்து குடிக்கும் வேளையில் தடுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அமுதவள்ளிக்கு சண்முகத்தை கல்யாணம் செய்து வைத்தார் இராமமூர்த்தி.
சண்முகத்தின் அம்மா புஷ்பாவும் அப்பா ரங்கதுரையும் மகனின் காதலை ஒப்புக்கொண்டு திருமணம் முடித்து கையோடு எங்களால இந்த பட்டணத்துல இருக்க முடியாதென மகன் சந்தோசமாக இருக்கட்டுமென்று கிராமத்திற்குச் சென்றுவிட்டனர்.
அமுதவள்ளி சண்முகத்தோடு ஆடிக்கொருமுறை அம்மாவாசைக்கொருமுறைதான் அவரோடு கிராமத்துக்கு அம்மாவையும் அப்பாவையும் பார்க்கவே போவார்கள். அங்கே ஒருநாள் இருப்பதற்கே “அச்சோ என்னால ஏசி இல்லாம இருக்க முடியாது ப்ளீஸ் சண்முகம்” என்று சண்முகத்தை தாஜா செய்து அவரை கூட்டிக்கொண்டு வந்து விடுவார் அமுதவள்ளி.
சண்முகம் அமுதவள்ளிக்கு கல்யாணம் ஆகி ஆறுவருடம் கழித்து தவமாய் தவமிருந்து பிறந்தவன் நம் நாயகன் சந்தோஷ். அமுதவள்ளியின் செல்ல மகன் அவன். தாய் சொல்லை தட்டாதவன் நம் நாயகன். இளங்கலை முடித்து பேங்க் எக்ஸாமிற்கு படித்து இப்போது பிரபல வங்கியில் மேனேஜராக இருக்கிறான். வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்த ஜிம்மில் ட்ரட்மில்லில் வியர்வை வழிய ஓடிக்கொண்டிருந்தான்.
உடற்பயிற்சியை முடித்ததும் அங்கிருந்த துண்டால் வியர்வையை துடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றவன் குளித்து விட்டு கண்ணாடியின் முன்னே நின்று காற்றில் அடங்காது ஆடும் அவனது முடியை ஜெல் வைத்து அடக்கிக்கொண்டு நின்றான். அவனது திண்ணிய தோள்களும், விம்மி புடைத்த மார்பும் தினவெடுத்த கைகளும், அனல் கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுற செய்யும். பார்மல் ட்ரஸ் போட்டு டக்இன் செய்து கையில் ப்ளாட்டினம் காப்பை போட்டு திருகி விட்டு பெர்பீயூமை எடுத்து மேலும் கீழும் சர்சரென அடித்துக்கொண்டு கண்ணில் கூலருடன் கார் கீயை எடுத்துக்கொண்டு மாடியிலிருந்து கீழே ஹாலுக்கு வந்தான் சந்தோஷ். டைம்க்கு எதையும் செய்பவன். அவனது இதழ்கள் தேவைக்கு அதிகமாக சிரிக்காது.
அவனது நண்பர்களே அவனிடம் “டேய் இப்படி சட்டைக்கு கஞ்சி போட்ட போல இருந்தா உனக்கு கல்யாணமே ஆகாது டா” என்று கேலி செய்வார்கள்.
சந்தோஷோ “போங்கடா என் அம்மாவுக்கு மகனாகவே இருந்துட்டு போறேன் எனக்கு பொண்ணுங்களே வேண்டாம்” என்பான் அவர்களுக்கு பதிலடி கொடுத்து.
“இப்படி சொல்பவன்தான் டா லவ்வுல விழுந்து கல்யாணம் பண்ணி வத வதனு பிள்ளைகள பெத்துப்போடுவான்” என்று கையை தட்டிச் சிரித்தனர் சந்தோஷின் நண்பர்கள்.
“அப்படியே நான் லவ் பண்ணினாலும் எங்கம்மாகிட்ட பர்மிஷன் கேட்டு கல்யாணம் பண்ணிப்பேன்டா” என்று கெத்தாக பேசி நண்பர்களை சமாளிப்பான் சந்தோஷ்.
“உன்கிட்ட பேசி ஜெயிக்க எங்கனால முடியாதுப்பா” என்று ஜகா வாங்கிவிடுவார்கள் அவனது நண்பர்கள்.
“அது” என்று சட்டை காலரை தூக்கி விட்டுக்கொள்வான் சந்தோஷ்.
பூஜையறையில் பூஜையை முடித்த அமுதவள்ளி மகனுக்காக சமையல்கட்டில் சமைத்துக்கொண்டிருந்தார். வீட்டில் வேலை செய்ய பல ஆட்கள் இருந்தாலும் சமையல் கட்டுப்பக்கம் யாரையும் அனுமதிக்க மாட்டார் அமுதவள்ளி.
“அம்மா டிபன் ரெடியா?” என்று வாட்சை பார்த்துக்கொண்டே டைனிங் டேபிளுக்கு வந்தான் சந்தோஷ்.
அமுதவள்ளியோ மகனுக்கு பிடித்த இடியாப்பமும் குருமாவும், பனியாரமும், காரசட்னியும் செய்து டேபிளில் அடுக்கிக்கொண்டிருந்தார்.
“ம்மா டைம் ஆச்சும்மா டிபன் எடுத்து வைய்யுங்க. புது பிரான்ஞ்சுக்கு என்னை மாத்தியிருக்காங்க ஒன் ஹவர் ட்ராவல் பண்ணனும் சீக்கிரம்” என்று டேபிளில் அவசரமாக அமர்ந்தான்.
“இந்த வயசுல இவ்ளோ பரபரப்பு உடம்புக்கு ஆகாது கண்ணா” என்று பேசிக்கொண்டே இடியாப்பத்தை தட்டில் வைத்தார் அமுதவள்ளி.
“வாவ் சூப்பர்மா எனக்கு பிடித்த இடியாப்பம் குருமா” என்று கண்ணை விரித்தான். அதுவரை நேரம் ஆகிவிட்டதே என்று அவசரப்பட்டுக்கொண்டிருந்தவன் இடியாப்பத்தையும் குருமாவையும் கண்டவனுக்கு பரபரப்பு போய்விட்டது என்றே சொல்லலாம்.
நிதானமாக இடியாப்பத்தை இரசித்து சாப்பிட்டு அடுத்து தட்டில் வைத்த பனியாரத்தையும் சாப்பிட்டு முடித்து தட்டில் கைகழுவி மணியை பார்க்க ஒன்பது ஆகியிருந்தது.
“பத்துமணிக்கு பேங்குள்ள இருக்கணும்” என்று அவரசமாக எழுந்தவன் “பைம்மா” என்று கிளம்பியவனுக்கு முன்னே வந்து திருநீறை நெற்றியில் இட்டு விட “தேங்க்ஸ்ம்மா” என்று அவரது காலில் விழுந்தான் தினமும் பேங்க்குக்கு கிளம்புமுன் அமுதவள்ளியில் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டுதான் செல்வான் சந்தோஷ்.
“நல்லாயிருப்பா நம்ம குடும்பத்து கௌரவம் உன் கையில தான் இருக்கு” என்று மறைமுகமாக லவ் பண்ணிடாத என்று மகனின் தலையில் குட்டு வைக்காத குறையாக சொல்கிறார்.
சந்தோஷ் கற்பூர புத்தியாயிற்றே அமுதவள்ளி சொன்னதை கப்பென்று பிடித்துவிட்டான்.
“அம்மா உன்பிள்ளை உன்பேச்சை மீறமாட்டேன் சரியா” என்று ஒரு முறை தாயை அணைத்து அவரது நெற்றியில் முத்தமிட்டு காரில் ஏறினான் சந்தோஷ்.
இராமமூர்த்தி இறக்கும் வேளையில் அமுதவள்ளியிடம் “உன் மகனுக்காவது நம்ம சொந்தத்தில் பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வை” என்று சத்தியம் வாங்கிச் சென்றுவிட்டார். தான் தான் காதல் கல்யாணமென்று சண்முகத்தை கல்யாணம் செய்துவிட்டோம். மகனுக்கு தன் அப்பா வீட்டு சொந்தத்தில் மும்மரமாக பொண்ணுத் தேடிக்கொண்டிருக்கிறார் அமுதவள்ளி.
இவர்களது கனவு கோட்டையை சிதைக்க ஒருத்தி வண்டியில் பறந்து வந்துக் கொண்டிருக்கிறாள் அவள் தான் சிற்பிகா.
சந்தோஷ் இப்போது புதிதாய் மேனேஜராக பொறுப்பேற்கப்போகும் பேங்கில் கேஷியராக இருக்கிறாள் சிற்பிகா. இன்றைக்காவது என் கனவில் வருபவனை நேரில் பார்க்க முடியுமா என்று வழியில் இருக்கும் பிள்ளையாரை கும்பிட்டுக்கொண்டே வந்தாள் பெண்ணவள்.
சிற்பிகாவின் அப்பா ஆனந்தன் கார்மெண்ட்ஸ் வைத்திருக்கிறார். அவரது மனைவி உமா அவருக்கு உதவியாய் இருக்கிறார். இவர்களுக்கு ஒரே மகள் சிற்பிகா. ஓரளவு வசதியுள்ளவர்கள்தான். சிற்பிகா பால் வண்ண நிறம். பிறை நெற்றி, வானவில்லை வளைத்தாற் போன்ற புருவம், திராட்சை போல கருவிழிகள், சாயம் பூசாமலே சிவந்திருக்கும் இதழ்கள். கொழுக்மொழுக்கென்று கன்னங்கள். இதழுக்கு மேல் இருக்கும் மச்சம் அவளுக்கு இன்னும் அழகைக்கூட்டியது. கொஞ்சம் புஷ்டியாக இருப்பாள். சர்வ லட்சணங்களுடன் கூடிய பெண்சிலையவள்.
தன் கனவு நாயகனை நினைத்துக்கொண்டே தன் ஸ்கூட்டியில் வந்தவள் சந்தோஷின் காரின் முன்னே வண்டியை மோதிவிட்டாள். மோதியதும் வண்டியை போட்டு கீழே விழுந்துவிட்டாள் சிற்பிகா.
சிற்பிகாவின் முழங்கையில் சிராய்ப்பு ஏற்பட்டு அதில் லேசாய் இரத்தமும் வந்தது.
சந்தோஷோ நேரம் ஆகிவிட்டதென வேகமாக காரை ஓட்டிக்கொண்டு வந்திருந்தான். காரைவிட்டு இறங்கியவன் சிற்பிகாவை தூக்கிவிட்டான்.
அவளோ நிமிர்த்து பார்க்காமல் முழங்கையில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டுக் கொண்டு நிமிர்ந்து பார்த்து “கார் தானே ஓட்டுறீங்க பிளைட் ஒண்ணும் ஓட்டலையே” என்று அவன் முகத்தை பார்த்து பேசியவள் அடுத்த வார்த்தை பேச அவளுக்கு வாய் வரவில்லை. கண்கள் இரண்டும் சாசர் போல விரிந்து விட்டது.
அவனோ “என்ன சொன்னீங்க நான் காரை பிளைட் போல ஓட்டிட்டு வந்தேனா. நீங்க மட்டும் என்ன கட்ட வண்டியா ஓட்டிட்டு வந்தீங்க நீங்க ஃபாஸ்ட்டா வந்து என் கார்ல இடிச்சிட்டு என்னை திட்டுறீங்களா? உங்களுக்கு பர்ஸ்ட் வண்டி ஓட்டத்தெரியுமா என்ன? இல்ல இப்போதான் ட்ரையல் பார்க்குறீங்களா?” என்று அவன் ஏகத்துக்கும் எகிறி குதித்தான்.
அவளோ தன் கற்பனையில் தினமும் தன் கன்னத்தில் முத்தம் கொடுப்பானே ஒருவன் அவன்தானே இவன். அதே கண்ணு அதே மூக்கு, அதே வாய், அவன் போட்டிருந்த சட்டைக்கு மேல புடைத்து விம்மிய கேடய மார்பும் அவள் கனவில் வந்த நாயகனுக்கும் இருக்க. அவன் தானா இவன் என்று மனசுக்குள் மத்தாப்பூ பூத்தது.
“ஹலோ நான் பேசிட்டே இருக்கேன் நீங்க என்ன என்னையே பார்த்திட்டிருக்கீங்க ம்ம்” என்று அவள் முகம் முன்னே கையை அசைத்தான்.
அவனது கையசைப்பில் “ஹான்” என்று நினைவுக்கு வந்தவள் “நீங்க என் கனவுல வந்து என் கன்னத்துல. மு…”
‘அடியே சிற்பிகா ஒரு பையன்கிட்ட என்ன பேசுறடி’ என்று ஞாபகம் வந்தவளாக தலையில் அடித்துக்கொண்டவள் “சார் நீங்க எங்க ஒர்க் பண்ணுறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?” என்று அவன் முகம் பார்த்துக் கேட்க
“ம்ம் நான் கார்ப்பரேசன்ல குமாஸ்தாவா இருக்கேன் காலையில உன்னோட ரோதனையா போச்சு” என்று பல்லைக்கடித்து பேசியவன் அடுத்தநிமிடம் காரில் ஏறியிருந்தான்.
பெரிய அட்ராசிட்டியா இருப்பான் போலயே. கையிலிருந்த காயத்தை ஊதிவிட்டுக் கொண்டு அவன் கார் சென்ற திசையை நோக்கி வண்டியை விட்டாள் சிற்பிகா. அவள் வாழ்நாள் பயணம் அவனோடுதான் என்று தெரிந்துக் கொண்டு சென்றாளோ பெண்ணவள். அவனோடு வாழும் காலங்கள் முள்ளும் இருக்கும் பூக்களும் இருக்கும் என்பதை அறியாமல் போகிறாள்.
“என்ன நம்ம ஒர்க் பண்ணுற பேங்க பக்கம் போறானே” என்று புருவம் சுருக்கிக்கொண்டு சந்தோஷ் காரின் பின்னே சென்றாள் சிற்பிகா.
அவளால் நம்பமுடியவில்லை. அவள் ஒர்க் பண்ணும் பேங்க் முன்னால்தான் காரை நிறுத்தினான். இன்று புது மேனேஜர் வருகிறான் என்பதை மறந்திருந்தாள் மங்கை.
காரிலிருந்து இறங்கிய சந்தோஷோ கண்ணில் கூலரை மாட்டிக்கொண்டு பேங்கிற்குள் இருந்த கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தினான். இங்கோ தனக்காக ஒருத்தி உயிரையும் கொடுக்க காத்திருக்கிறாள் தன் வாழ்க்கை பயணத்தை திசை மாற்றிக் கொண்டுச் செல்லப்போகிறாள் என்று அறியாமல் பேங்கிற்குள் காலடி எடுத்து வைத்தான் சந்தோஷ்.
சிற்பிகாவும் அவசரமாக ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு லேசாக வண்டிக்கு காயம் ஏற்பட்டிருக்க வண்டியிடம் “அப்பாகிட்ட உன்னை சரி பண்ணுறேன்” என்று வண்டியுடன் பேசிவிட்டு பேங்கிற்குள் நுழைந்தாள். மணி பத்து அடித்து ஓய்ந்தது. அப்பாடா இன்னிக்கு சரியான நேரத்துக்கு வந்துட்டோம் என்று அவளது சீட்டில் உட்கார்ந்தாள். பேங்கில் காலை வேளை என்பதால் கூட்டம் அதிகம் இல்லை. எங்கே போனான் இவன் பெயரை கூட கேட்காம விட்டுட்டோமே என்று கவலையாக உட்கார்ந்திருந்தவளை அவள் பக்கத்தில் உட்காந்திருந்த அவளது நண்பன் தீலிபன் “என்னம்மா இன்னிக்காவது உன் கனவு நாயகனை பார்த்துட்டியா?” என்று கேட்டான் கிண்டலாக.
“ஆமா தீலிப் இன்னிக்கு பார்த்துட்டேன் அதுவும் நம்ம பேங்குள்ளதான் வந்தான். இப்ப எங்க போனான்னு தெரியலையே” என்று பாவமாக இதழை பிதுக்கினாள் சிற்பிகா.
அதற்குள் “புது மேனேஜர் உங்க ரெண்டு பேரையும் பார்க்கணும்னு கூப்பிட்டாரு” என்று ப்யூன் வந்து சிற்பிகாவிடம் கூற.
“அட ராமா இன்னிக்கு புது மேனேஜர் வந்துட்டாரா இவன் எப்படியோ தெரியலையே பழைய மேனேஜர் போல சிடுமூஞ்சியா இருப்பானா என்னனு தெரியலையே!” என்று புலம்பிக்கொண்டு எழும்பினாள்.
“ஆமா அப்படியே மேனேஜருக்கு பயப்படுற ஆளு பாரு நீ” என்று சிரித்துக் கொண்டு எழுந்தான் திலீப்.
தீலிப்பை திரும்பி நின்று முறைத்து “பேசாம வாயை மூடிட்டு வாடா” தீலிப்பை திட்டிக்கொண்டுச் சென்றாள் சிற்பிகா.
மேனேஜர் அறைக்கதவை திறந்ததும் கண்கள் இரண்டும் வெளியே தெறித்து விழும் அளவிற்கு பார்த்துக்கொண்டிருந்தாள் சிற்பிகா புதுமேனேஜரை.
புதுமேனேஜராக சீட்டில் கையில் பேனாவை வைத்து சுழட்டிக்கொண்டு சிற்பிகாவை முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான் சந்தோஷ்.
“என்ன மிஸ் வேலை நேரத்துல வேலை செய்யாம ரெண்டு பேரும் அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க. இன்னொரு முறை இதுபோல ரெண்டு பேரும் பேசினதை பார்த்தேன் மேலிடத்துக்கு ரிப்போட் அனுப்பிடுவேன்” என்று எச்சரித்து கறாராக பேசினான்.
எதற்கெடுத்தாலும் வாயாடும் சிற்பிகா இன்று சிலைப்போல் நிற்பதை பார்த்த தீலிப்பிற்கு ஆச்சர்யம்தான் அதிசயமாக பார்த்திருந்தான் தீலிப்.
சிற்பிகாவோ சந்தோஷை பார்ப்பதும் தலை குனிவதுமாய் இருந்தவள் “சாரி சார் இனிமே பேச மாட்டோம் வேலையை மட்டும் பார்க்கிறோம்” என்றாள் பவ்யமாக.
தீலிப்போ “என்ன மேனேஜரை சைட் அடிக்கிற வேலையையா?” என்றான் சிற்பிகா காதுக்கு மட்டும் கேட்கும்படி
அவனது காலில் ஒரு மிதி மிதித்தாள் சிற்பிகா சிரித்துக்கொண்டே.
“தேவையில்லாம சிரிக்காதீங்க மிஸ்” என்று அதட்டல் போட்டான் சந்தோஷ்.
“என் நேம் சிற்பிகா சார்” என்றதும்
“ஓ.கே நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க” என்று அனுப்பியவன் கம்யூட்டரில் வேலை பார்க்க ஆரம்பித்தான்.
தீலிப் முன்னே நடக்க. சிற்பிகாவோ சந்தோஷை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு செல்லவும் கதவில் காலை இடித்துக்கொண்டாள்.
“ஆஆ!” என்று சத்தம் வராமல் முகத்தை சுளித்துக்கொண்டு வெளியேச் சென்றாள்.
சந்தோஷோ தன்னையறியாமல் நிமிர்ந்து பார்த்தான் சிற்பிகாவை.
2. உறவு
“இந்த பொண்ணோட கண்ணு நம்மள சைட் அடிக்குது எச்சிரிக்கையா இருடா சந்தோஷ்” என்று தனக்குள் பேசிக்கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
சிற்பிகாவுக்கோ இன்று தான் யார் முகத்தில் விழித்தோம் என் கனவுக்காதலனை பார்த்துவிட்டேன் என்ற பிரம்ம சாபம் விபோச்சனம் கிடைச்சது போல மகிழ்ச்சியடைந்தாள். இனி எப்படி அவனிடம் தன் காதலை சொல்வது என்று நெற்றியை நீவி யோசித்துக்கொண்டிருந்தாள்.
திலீப்போ “சிற்பி உன் கவுண்டர்க்கு ஆள் வந்திருக்கு பாரு” என்று அடித்தொண்டையில் பேசினான்.
“ஹான்” என்று நிதர்சனத்திற்கு வந்தவள் தன் கவுண்டரில் நின்றிருந்தவரிடம் கேஷ் வாங்கிக்கொண்டாள்.
மதியம் லன்ச் டைம் வந்தது. “திலீப் சாப்பிடப்போலாமா?” என்று கேட்டாள் சிற்பிகா. அவள் பசி தாங்கமாட்டாள். டைம்க்கு அவள் வயிற்றில் அலாரம் அடித்து விடும். திலீப்க்கு வேலை அதிகம் இருக்க. “இருப்பா இதோ பைவ் மினிட்ஸ்ல வேலை முடிஞ்சுடும் போலாம்” என்று சொல்லியவன் வேலையை முடித்து விட்டு எழுந்தான்.
சிற்பிகாவோ “நான் முன்னே போறேன் திலீப் எனக்கு பசிக்குது” என்று பேக்கை மாட்டிக்கொண்டு சாப்பிடும் இடத்திற்குச் சென்றாள். அங்கே சந்தோஷ் அடுக்கு டிபனிலிருந்து சாதத்தை எடுத்து தட்டில் போட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் போனில் பேசிக்கொண்டிருந்தான். அவன் பக்கத்து டேபிளுக்கு அவள் கால்கள் தானாகவே சென்றது.
“ம்மா இன்னிக்கு சாம்பார் சூப்பர். வாழைப்பூ பொரியல் செம டேஸ்ட்” என்று பேசியபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தான் சந்தோஷ்.
“மிச்சம் வைக்காம சாப்பிடுடா கண்ணா” என்று அமுதவள்ளி மறுமுனையில் சொல்ல
“ம்ம் மிச்சம் வைக்காம சாப்பிட்டேன்மா” என்று ஸ்கூல் குழந்தை சொல்லிக் கொண்டு இருக்க அவனை கண் இமைக்காமல் பார்த்திருந்தாள் சிற்பிகா. ‘ஓ இவன் அம்மா பையனா கொஞ்சம் கஷ்டம்தான் டி சிற்பிகா உன் நிலமை ப்ச் யார இருந்தாலும் இந்த சிற்பிகா அவங்களை பேசியே மடக்கிடுவா’ என்று அசால்ட்டாய் பேசினாள் சிற்பிகா. அமுதவள்ளியை பற்றி முழுதாக தெரிந்துக் கொள்ளாமல்.
அதற்குள் திலீப் சிற்பிகாவின் பக்கம் வந்தவன் சந்தோஷை பார்த்துக்கொண்டிருந்தவளின் கையை பிடித்து “அங்க என்ன வேடிக்கை பார்க்குற” இழுத்துக்கொண்டு வந்து வேறு டேபிளில் உட்கார வைத்தான்.
“ஏய் எதுக்குடா என் கையை பிடிச்சு இழுத்துட்டு வர?” என்று திலீப்பை முறைத்தாள் சிற்பிகா.
“நீ சந்தோஷ் சாரை பார்க்குற பார்வையே சரியில்லை உனக்குதான் உன் கனவு நாயகன் இருக்கான்ல அப்புறம் ஏன் மேனேஜரை சைட் அடிக்குற? இது சரியில்லை” என்று அவளை திட்டிக்கொண்டே டிபன் பாக்ஸை திறந்தான் திலீப்.
“திலீப் என் கனவுல வருவான்ல அ… அது நம்ப புது மேனேஜர் சந்தோஷ் சார்” என்றவளுக்கு வெட்கம் வந்து விட தலையை குனிந்துக் கொண்டாள்.
“எ… என்னது உன் கனவுல வருவது நம்ம மேனேஜரா!” என்று சத்தமாக கேட்டுவிட்டான் திலீப்.
இவர்கள் போட்ட சத்தத்தில் அமுதவள்ளியிடம் போன் பேசிக்கொண்டிருந்த சந்தோஷ் இருவரையும் நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.
திலீப்போ “சாரி சார்” என்று அமைதியாகி சாப்பிட ஆரம்பித்தான்.
‘ஏன்டா’ என்பது போல பார்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள் சிற்பிகா.
சந்தோஷ் சாப்பிட்டு முடித்தவன் டிபன் பாக்ஸை கழுவி வைத்து விட்டு சிற்பிகா, திலீப் இருவரையும் தாண்டிச் செல்லும்போது திரும்பி பார்த்து “இரண்டு பேரும் சாப்பிடும்போது கூட பேசாம சாப்பிட மாட்டீங்களா? அப்படியே பேசினாலும் மெதுவா பேசமாட்டீங்களா?” என்று சிறு அதட்டலாகவே கேட்டுவிட்டான்.
“அ…அது இனிமே பேசலை சார்” என்று பொறுமையாக பதில் கூறினாள் சிற்பிகா.
“ம்ம்” என்றவன் அங்கே நிற்காமல் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் “நாம ரெண்டு பேரும் வேலை செய்யும் இடத்துல பேசினா தப்பு, சாப்பிடும் நேரத்துல கூடவா பேசக்கூடாது” என்று “இவனை பார்த்தா எனக்கு கோபமா வருது சிற்பிகா” என்றான் திலீப்.
சிற்பிகாவோ “அவர் சொல்றது சரிதான் எங்கம்மா கூட சொல்லியிருக்காங்க சாப்பிடும்போது பேசினா ஜீரணம் ஆகாதாம் இனிமே சாப்பிடும் நேரம் பேசாதே” என்று சாப்பிட ஆரம்பித்தாள். “லவ்வர் வந்துட்டா இந்த நண்பன் பேசறது தொல்லையாத்தான் தெரியும்” என்று கோபித்துக்கொண்டு எழுந்தான் திலீப்.
“ரொம்ப கோபப்படாதே திலீப் உட்காரு உன் லெமன் ரைஸ் நான் இன்னும் எடுத்துக்கல” என்று அவன் தனியாய் எடுத்து வைத்திருந்த லெமன் ரைஸை சாப்பிட்டாள்.
“இந்த கார சட்னி உனக்கு செட் ஆகமாட்டான்டி உனக்கு வேற நல்ல பையனா கிடைப்பான்” என்றான் திலீப்.
சிற்பிகாவோ “எனக்கு காரசட்னித்தான் பிடிக்கும்னு உனக்கு தெரியும்ல நியூ இயர் அன்னிக்கு நம்ம பேங்குல நியூ இயர் செலிபரேசன் பண்ணுவோம்ல அப்ப சந்தோஷ் சார்கிட்ட உங்களை எனக்கு பிடிச்சிருக்கு. என் கனவுல தினமும் நீங்க வர்றீங்கனு சொல்லி லவ் புரோபோஸ் பண்ணப்போறேன் லன்ச் டைம் முடிஞ்சது வா போகலாம்” என்று அவளது சீட்டுக்கு வந்து அமர்ந்தாள்.
மாலையானதும் சந்தோஷ் கேபினை எட்டிப்பார்த்தாள் சிற்பிகா.
அவனோ இந்த மன்த் லோன் எத்தனை பேர் வாங்கியிருக்காங்க என்று செக் பண்ணிக்கொண்டிருந்தான் கம்ப்யூட்டரில்.
“சார் வேலையில சின்சியர் போலவே” என்று சந்தோஷின் கேபினை தட்டிக்கொண்டுச் சென்றாள்.
அவளோ வெகுநேரம் நின்றுக் கொண்டேயிருந்தாள்.
“சார்” என்றாள் மெதுவாக.
“ம்ம் சொல்லுங்க” என்று நிமிர்ந்தவனின் காந்தக் கண்களை பார்த்தவளுக்கு பேச வார்த்தை வரவில்லை பேச வந்ததை மறந்து விட்டாள்.
“ம்ப்ச் எனக்கு வேலையிருக்கு மேடம் டைம் வேஸ்ட் பண்ணாம சொல்லுங்க” என்றான் சலித்துக்கொண்டு.
அவள் செய்த வேலைகளை சொல்லி முடித்து “நா…நான் கிளம்புறேன் சார்” என்றதும்
“ம்ம்” என்று கம்ப்யூட்டருக்குள் தலையை நுழைத்துக் கொண்டான்.
அவளோ அங்கேயே நின்று அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
அவனோ அங்கே ஒருத்தி நிற்கிறாளா என்று கூட சட்டை செய்யாமல் இருந்தான்.
அழகா இருக்கானே கனவுல பார்க்கறதை விட மேன்லியா இருக்கான்ப்பா என்று பெரும்மூச்சுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
‘சரியான குட்டிச்சாத்தானா இருப்பா போலயே அப்படியே நம்மளையே உத்து பார்க்குறா. இது பேங்க்கா இல்ல பார்க்கா இவகிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணனும்’ என்று யோசித்தவன் தன் வேலைகளை முடித்து வீட்டுக்குக் கிளம்பினான்.
சிற்பிகாவோ மிகுந்த உற்சாகத்துடன் வீட்டுக்குள் சென்றாள். அவர்களது கார்மென்ட்ஸ் வீட்டுக்கு பக்கத்திலேயே வைத்திருந்தனர். அங்கேதான் அவளது அப்பா ஆனந்தன் இருந்தார். உமா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் சிற்பிகாவிடம் கண்டிப்புடன் இருப்பார். காலையில் நேரமே எழுந்து எனக்கு கிச்சன்ல உதவி செய்து துவைச்சு வைச்ச துணிகளை மடிச்சு வை என்று மகளிடம் வேலைகளை சொன்னால் அவளோ அம்மா எனக்கு டயர்டா இருக்கு என்று தப்பித்து ஓடிவிடுவாள்.
ஆனந்தன் இன்ஸ்கர்ட் தைத்து வெளியூர்களுக்கும் உள்ளுர் சந்தைகளுக்கும் கொடுத்துக்கொண்டிருந்தார். இன்ஸ்கர்ட்டுகளை பேலாக கட்டிக் கொண்டிருந்தவரிடம் “அப்பா” என்று ஓடிச் சென்று அவரது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
“இன்னிக்கு என் பொண்ணு ரொம்ப ஹாப்பியா இருக்காளே அப்படி என்ன நடந்துச்சு பேங்குல” என்று மகளின் முகத்தை பார்த்து புன்னகைத்தார்.
“அப்பா தினமும் என் கனவுல ஒருத்தன் வருவானே இன்னிக்கு அவன் என் பேங்குக்கு வந்தான் தெரியுமா?” என்று கண்ணை உருட்டினாள்.
“அப்படியா உனக்கு அவன்கிட்ட பேச வாய்ப்பு கிடைச்சுதா?” என்று அவரும் ஆவலாக கேட்டார்.
சிற்பிகாவிடம் “உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்டா” என்று ஆனந்தன் மகளிடம் கூறினார்.
அவளோ தன் கனவில் வரும் நாயகனை பற்றி தயங்கியபடியே சொல்ல மகளின் பைத்தியக்காரத்தனத்தை கண்டு கோபம் கொண்டவராக “ஏன் டி நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்க கனவுல வருபவனை எல்லாம் கல்யாணம் பண்ணுறேனு சொல்லுற. ஒழுங்கா நாங்க பார்க்கிற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுற வழியை பாரு உனக்கு மாப்பிள்ளை பிடித்தான் தான் கல்யாணம் பண்ணிவைப்போம்” என்று காரசாரமாக பேசினார் உமா.
சிற்பிகாவோ ஆனந்தனை பார்த்து “ப்பா ப்ளீஸ்ப்பா இன்னும் ஒரு 6 மாசம் டைம் கொடுங்க அதுக்குமேல நீங்க பார்க்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்குறேன்” என்று கண்ணை சுருக்கி கெஞ்சிக்கேட்டாள்.
“சரிடா இன்னும் ஒரு ஆறுமாசம்தானே என்னோட செல்ல மகளுக்காக நீ சொல்றதை நான் கேட்குறேன். அதுக்குமேல நாங்க சொல்றதை நீ கேட்கணும் சரியா?” என்று மகளின் நெற்றியில் முட்டினார் ஆனந்தன்.
“அப்பானா அப்பாதான்” என்று ஆனந்தனை கட்டிக்கொண்டு உமாவை பார்த்து எப்படி என்று புருவம் உயர்த்தி இதழை கோணினாள் சிற்பிகா.
“இப்படியே இவ சொல்றதை கேட்டா உங்க பொண்ணு முதிர்கன்னி தான் ஆவா பார்த்துக்கோங்க. இவளோட படிச்சவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு சரி பொண்ணுங்களுக்கு வேலை வேணும்னு இவ்ளோ பொறுத்திருந்தேன். இப்ப உங்களை பேசியே மடக்கிட்டா” என்று ஆனந்தனிடம் சண்டைக்கு வந்தார் உமா.
“ஏய் போய் வேலையை பாருடி நமக்கிருக்கிறது ஒரு பொண்ணு அவ ஆசைப்படுறது போல ஒரு ஆறுமாசம் காத்திருப்போம்டி” என்று உமாவை சமாளித்து பேச.
உமாவோ “க்கும் நான் சொல்றதை என்னிக்கு கேட்டிருக்கீங்க இன்னிக்கு கேட்க” என்று கழுத்தை நொடித்துக்கொண்டுச் சென்று விடுவார்.
“அப்பா என் கனவுல வந்தவருதான் இப்போ நான் வொர்க் பண்ணுற பேங்கல மேனேஜரா வந்திருக்காரு” என்றவளுக்கு முகத்தில் மகிழ்ச்சி துள்ளியது.
“பையன் எப்படிடா நல்ல குணமா இருக்கானா? சொல்லு நான் வந்து என் பொண்ணுக்காக பேசுறேன். அவன் குணம் எப்படினு எனக்கு தெரியணும்டா! எங்களுக்கு நீ ஒரே பொண்ணு நீ விருப்பப்பட்டேனு உன்னை தூக்கி அப்படியே கொடுத்திட முடியாது” என்றார் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டுமேயென்று.
“அவர் முகத்தை பார்த்தா நல்லவனாதான் தெரியுறாருப்பா. அதுவும் அவர் சாப்பிடும்போது அவர் அம்மாகிட்ட பாசமா பேசினது எனக்கு கேட்டுச்சு. அம்மா மேல பிரியமா இருக்கவரு மனைவி மேலயும் பிரியமாத்தானே இருப்பாங்க” என்று சந்தோஷ்சுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தாள் சிற்பிகா.
“ம்ம் நீ பேசுடா” என்றவர் “ஜாக்கிரதையா இருக்கணும் ராஜாத்தி” என்று மகளுக்கு எச்சரிக்கையும் விடுத்தார் மறைமுகமாக.
“நான் பார்த்துக்குறேன்ப்பா” என்றவளோ தன் அறைக்குச் சென்று குளித்து விட்டு வந்ததும் “ஹேய் சிற்பிகா சப்பாத்தி போடுறேன்டி வந்து தேச்சுக்கொடு” என்று சமையல்கட்டிலிருந்த சத்தம் கொடுத்தார் உமா.
“ம்மா பணம் எண்ணி என்னோட விரல்லெல்லாம் வலிக்குதும்மா ப்ளீஸ் நீயே போடேன் உன் கையால சப்பாத்தி போட்டா சும்மா வெண்ணெய் போல சாஃப்டா இருக்கும்” என்று வாய் ஓயாது பேசி டீவி ரிமோட்டை எடுத்து டிவியை போட்டாள்.
“ம்ம் சாஃப்டா இருக்கும்டி நாளைக்கு போற இடத்துல மாமியார்கிட்ட பேச்சு வாங்குவ பாரு அப்ப நீ சமைக்கும்போது இந்த அம்மாவோட அருமை உனக்கு தெரியும்” என்று மகளை புகைந்துக் கொண்டே சமையல் செய்ய ஆரம்பித்தார்.
உமாவும் சிற்பிகாவுக்கு பெரிய வேலையெல்லாம் செய்ய சொல்லமாட்டார். காலையில் பாத்திரம் கழுவுவது, வீடு பெருக்குவது என்று சிறு சிறு வேலையெல்லாம் செய்ய சொல்லுவார். அதற்கே சிற்பிகா ஆயிரத்தெட்டு காரணம் சொல்லி தப்பிக்க பார்ப்பாள். அதையும் செய்ய வேண்டி வந்தால் ஆனந்தனை உதவிக்கு அழைத்து வந்துவிடுவாள் சிற்பிகா. உங்க மகளை வேலை செய்ய சொல்ற நேரம் நானே செய்துப்பேன் என்று கண்ணைமூடிக்கொண்டு வேலையை செய்துவிடுவார்.
டீவியில் கண்ணழகா காலழகா என்று பாட்டு வர சந்தோஷின் காந்தகண்கள் அவளின் நினைவில் வந்தது. அப்பப்பா அவர் முறைக்கும்போது கூட செமயா இருக்காரு என்று சந்தோஷின் எண்ணங்களில் மூழ்கி இருந்தவளின் கையை தொட்டு “சப்பாத்தி சுட்டு வச்சிருக்கேன் சாப்பிட்டு கதவை மூடி படுத்துக்கோ அப்பாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வரேன்” என்று வீட்டை ஒட்டினதாற் போல இருக்கும் கார்மென்ட்ஸிற்குச் சென்றார் உமா.
ஆனந்தனும் உமாவும் தைக்க வரும் நபர்கள் தைத்து மடித்து வைத்து பாவாடை பீஸ்களை பேல்லாக கட்டி வைத்துவிட்டு வருவதற்கு மணி பதினொன்று கூட ஆகிவிடும் அதனால்தான் மகள் சாப்பிட்டு படுக்கட்டும் என்று சமைத்து வைத்துச் செல்வார் உமா.
“சப்பாத்தி செய்துட்டியா ரொம்ப பசியா இருக்கு” என்று சமையல்கட்டுக்கு ஓடியவளை பார்த்து ‘இவ வயசுல எனக்கு இவ பொறந்துட்டா இவளோ பசிக்குதுனு சின்னபிள்ளையாட்டம் ஓடுறா நாளைக்கு கல்யாணம் ஆகி என்ன பண்ணப்போறாளே’ என்று கவலையுடன் சென்றார் உமா.
சாப்பிட்டு முடித்து தட்டை கழுவி வைத்து விட்டு கதவை லாக்செய்து விட்டு தன் அறைக்குள் வந்து படுத்ததும் சந்தோஷின் ஞாபகம்தான் வந்தது. கனவில் பேசிக்கொண்டிருந்தவனை இன்று நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றேன் என்றது போல சந்தோஷுக்கே தெரியாமல் அவனை தன் போனில் போட்டோ எடுத்து வைத்திருந்தாள் சிற்பிகா.
கட்டிலில் படுத்துக்கொண்டு போனில் சந்தோஷின் போட்டோவுக்கு முத்தம் கொடுத்தவள் “டேய் பச்சை மிளகாய் என்னடா பண்ணுற இத்தனை நாளாய் என் கனவுல வந்து தூக்கத்தை கெடுத்துட்டு இன்னிக்கு என் கண்ணு முன்னால வந்து நின்னு என்னை கவுத்துட்டியாடா எப்போ உன்கிட்ட நான் லவ் சொல்லி என்னை நீ கல்யாணம் பண்ணுறது. ரொம்ப எக்ஸைன்ட்மெண்டா இருக்கு சந்தோஷ் உன்கிட்ட லவ் சொல்ற தருணம் நான் பொக்கிஷமா வச்சிப்பேன்” என்று போட்டோவில் இருந்த அவனது இதழில் முத்தமிட்டாள்.
அமுதவள்ளி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சந்தோஷிற்கு புரையேறியது. சந்தோஷ் பக்கம் உட்கார்ந்திருந்த சண்முகமோ “உன்னை யாரோ நினைக்குறாங்கப்பா” என்று தண்ணீரை எடுத்து கொடுத்தார் மகனிடம்.
“நான் என் மகன் பக்கம் இருக்கும்போது யார் என் மகனை நினைப்பாங்க. என்னை தவிர யார் என் பையன் மேல அக்கறையா இருக்க முடியும். கண்ணா நீ மெதுவா சாப்பிடு அவசரமா சாப்பிட்டா புரை ஏறத்தான் செய்யும்” என்று சந்தோஷின் தலையை மெதுவாய் தட்டிவிட்டு கணவனை முறைத்தார் அமுதவள்ளி.
“அமுதா நீ பேசறது உனக்கே ஓவரா தெரியலையாடி. ஏன் எங்கப்பா எங்கம்மாகூட அவங்க பேரனை நினைக்க மாட்டாங்களா நீ மட்டும்தான் உன் பையனை நினைப்பியா?” என்று கேட்டுவிட
“ஹான் உங்கப்பா உங்கம்மாவும் காலையிலதானே போன்ல பேசினாங்க. அதுக்குள்ள எப்படி நினைப்பாங்க நான் இப்பவும் என் பையன் பக்கத்துல நிற்குறேன். என் நினைப்பு முழுவதும் என் மகன் மேல தான் இருக்கு இனிமே என் பையனுக்கு புரை ஏறுனா உங்கம்மாதான் நினைச்சுட்டானு சொல்லுங்க” என்றார் முரட்டுத்தனமாக மகன் மீது பாசம் வைத்த அன்னை அமுதவள்ளி.
அமுதவள்ளியின் பேச்சு முன்னே பொட்டிபாம்பாய் அடங்கிப்போனார் சண்முகம்.
சந்தோஷோ தாயின் பாசத்தில் நெகிழ்ந்து போய் “ப்பா எனக்கு பர்ஸ்ட் அம்மாதான் அதுக்கப்புறம்தான் பாட்டியும் தாத்தாவும்” என்றதும் அமுதவள்ளியின் முகத்தில் சந்தோசம் தாண்டவமாடியது.
“ம்ம் பார்த்துக்கோங்க” என்று பெருமை கொண்டு மகன் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு சமையல்கட்டுக்குள் சென்றார்.
“இவ பாசம் ஒருநாள் எங்கே கொண்டு போய் முடியப்போகுதே தெரியலையே நாளைக்கு உனக்கொரு ஒரு பொண்டாட்டி வரும்போது தெரியும்” என்று பெரும்மூச்சு விட்டு எழுந்தார்.
“ப்பா அதுக்குத்தான் நான் உஷாரா அம்மா பார்த்து வைக்குற பொண்ணை கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்கேன்” என்று சிரித்தான் சந்தோஷ்.
“ம்ம் பார்க்கலாம்” என்று அவரது அறைக்குச் சென்றுவிட்டார்.
அறைக்குள் வந்து படுத்த சந்தோஷிற்கு நாளைக்கு என்ன என்ன வேலைகள் இருக்கு என்று அசைப்போட்டபடி படுத்திருந்தான். இன்று என்ன என்ன வேலைகள் முடித்து வைத்தோம் என்று நினைவு படுத்த அவன் நினைவில் வந்து நின்றது சிற்பிகாதான் அவள் பேசுவதை கேமராவில் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். ‘சரியான சில்வண்டா இருப்பா போல’ என்று சிரித்தபடி உறங்கிவிட்டான் சந்தோஷ். அவன் நெஞ்சில் வண்டு போல குடையப்போகிறாள் என்று தெரியாமல் உறங்குகிறான்.
3. உறவு
அடுத்த நாள் காலையில் சந்தோஷ் சாப்பிட்டு ஆபிஸ் கிளம்பி நின்றவனிடம் “சந்தோஷ் இன்னிக்கு காலையில ராமு அண்ணா போன் பண்ணினாரு அவர் ஒரு வகையில் நமக்கு நெருங்கிய சொந்தமும் கூட எனக்கு அண்ணன் முறை அவர் பொண்ணு திவ்யா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்திட்டிருக்காராம். உன் ஜாதகம் அவங்க கிட்ட போயிருக்கு போல பொருத்தம் கூட பார்த்துட்டாராம் பத்து பொருத்தமும் சரியாய் இருக்குனு சொன்னாருப்பா நம்ம அளவுக்கு அவங்களுக்கு வசதியும் இருக்கு! பொண்ணு போட்டோ என் மொபைலுக்கு அனுப்பியிருக்காரு! இதோ பாரேன் பொண்ணு மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கா” என்று தன் மொபைலில் இருந்த திவ்யாவின் போட்டோவை காட்டினார் அமுதவள்ளி.
“நீங்க பார்த்தா போதும் மா எனக்கு ஏத்த ஜோடியைதான் நீங்க செலக்ட் பண்ணியிருப்பீங்க எப்பவும் செலக்ஷன் சூப்பரா இருக்கும்” என்றான் திவ்யாவின் போட்டோவை பார்க்காமல்.
அமுதவள்ளியின் மனமோ சந்தோசத்தில் துள்ளிக்குதித்தது. இப்படி பட்ட மகன் கிடைக்க நான் புண்ணியம் செய்திருக்கணுமே கண்களில் கண்ணீர் கோர்த்தது அவருக்கு! மகனின் நெற்றியில் முத்தமிட்டு “உன்னை என் வயித்துல சுமந்து பெத்தது எனக்கு பெருமைடா கண்ணா” என்று சந்தோஷை அணைத்துக் கொண்டார் ஆனந்தக் கண்ணீருடன்.
“அம்மா நான் தான் உங்க வயித்துல பிறந்ததுக்கு புண்ணியம் பண்ணியிருக்கணும்” என்றான் அமுதவள்ளியின் அணைப்பில் நின்றவாறு.
“ம்க்கும் இங்க ஒருத்தன் இருக்கான் என்னையும் கொஞ்சலாம்” என்று தாய் மகன் பாசத்தை இரசித்தவாறு கொஞ்சம் அவர்களை வெறுப்பேத்த பேச்சுக்கொடுத்தார் சண்முகம்.
“கண்ணா உங்கப்பாவுக்கு பொறாமைடா நம்ம மேல! இன்னிக்கு நம்ம ரெண்டு பேருக்கும் சுத்திப்போட்டுக்கணும்” என்று அமுதவள்ளி சண்முகத்தை முறைத்து பார்த்தார்.
“அம்மா அப்பாவுக்கு பொறாமைதான்! சரி விடுங்க அவரையும் கட்டிபிடிச்சுக்குறேன்! பாவம் பிழைச்சு போகட்டும்” என்று சண்முகத்தையும் அணைத்துக்கொண்டான் சந்தோஷ்.
கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருத்த சந்தோஷ் ஆபிஸ் கிளம்பிவிட்டான்.
பேங்கிற்குள் நுழைய அனைவரும் அவனுக்கு “குட்மார்னிங்” சொல்ல தலையசைத்து புன்முறுவலுடன் கடந்து விட்டான்.
“வாய்திறந்து குட்மார்னிங் சொன்னா வாயிலிருந்து முத்து உதிர்ந்திடுமா என்ன?” என்று திலீப் கடுப்பாக பேசினான்.
“அவருக்கு என்ன டென்சனோ நீ ஏன் இப்படி கடுப்பாகுற? அவர் என்னோட வுட்பி நீ அவரை பத்தி என்கிட்ட குறை சொல்லாத உன் பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவேன்” என்றாள் தீலிப்பை முறைத்தபடி.
“அடிப்பாவி நம்ம ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து பிரண்ட் சந்தோஷ் சாரை இப்போத்தான் பார்த்திருக்க அதுக்குள்ள என் பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவியா?” என்று அவன் அங்காலாய்பாய் கேட்டான் திலீப்.
“ம்ம் இன்னொரு முறை சந்தோஷை பற்றி குறை சொன்னா பிரண்ட்ஷிப் கட்தான்” என்றாள் தோளைக்குலுக்கிக்கொண்டு.
சந்தோஷோ கேமராவில் இருவரும் பேசுவதை பார்த்து ‘இதுக ரெண்டு திருந்தாத கேஸ் வேலையில எதாவது மிஸ்டேக் பண்ணட்டும் அப்புறம் இருக்கு கச்சேரி என்கிட்ட’ என்று தலையை உலுக்கிக்கொண்டு டேபிளில் பேனாவை எடுக்க போக ப்ளவர் வாஷில் புதிதாய் ரோஜாக்கள் வைத்திருந்தது.
‘நேற்று இருந்த பிளவர் வாஷ் இல்லையே இன்னிக்கு யாரு வச்சிருப்பாங்க?’ என்று தாடையை தடவிக்கொண்டு யோசித்தவன் காலிங்பெல்லை அழுத்தினான்.
“சார்” என்று ப்யூன் வந்து நிற்க “நீங்க தான் டேபிள்ல பிளவர் வாஷ் வச்சீங்களா?” என்றான் சந்தோஷ்.
“நான் உங்க டேபிள் கீளின் பண்ணும் போது கூட பிளவர் வாஷ் இல்லையே சார்” என்றான் பியூன் சிறு அதிர்வுடன்.
“சரி எனக்கு பதினொரு மணிக்கு காபி வேணும் கொண்டு வாங்க” என்று சொல்லிக்கொண்டிருக்க மகளிர் சுய உதவிக்குழு லோன் கேட்டு சந்தோஷின் அறைக்குள் வந்தனர்.
“வாங்க உட்காருங்க” என்றதும்
அந்த குழுவின் தலைவி உட்கார்ந்தவர் “சார் நாங்க குழு ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆச்சு! எங்க கணக்குல பணமும் சேமிச்சு இருக்கோம் இப்ப எங்க குழுக்கு லோன் சாங்சன் பண்ணுவீங்களா சார்?” என்று ஒரு வித அச்சத்தோடு கேட்டார்.
“ம்ம் உங்க சேமிப்புல பணம் இருக்கும்போது தாராளமா லோன் கொடுக்கலாமே! லோனுக்கான ஃபார்ம் இருக்கு ஃபில் பண்ணிக்கொண்டுவாங்க. நான் வித் இன் 1 வீக்ல லோன் சாக்சன் பண்ணிடுறேன். ஆனா மாசம் மாசம் சரியா டியூ கட்டிரணும்” என்றான் சிறு கண்டிப்புடன்.
“ஓ நாங்க மாசம் மாசம் தவறாம டியூ கட்டிடுவோம் சார் நீங்க எங்களை நம்பி கொடுக்கலாம்” என்றனர் லோன் கிடைத்துவிட்ட சந்தோசத்துடன்.
“லோன்க்கான பார்ம் ஃபில் பண்ணி கொடுத்திட்டு போங்க” என்று “நான் லோனுக்கான ஃபார்மாலிட்டீஸ் முடித்து சீக்கிரம் உங்க கைக்கு கிடைக்க வைக்குறேன்” என்றான் நெற்றியை தடவிக்கொண்டு.
“ரொம்ப நன்றிங்க சார்” என்று சந்தோஷின் அறையை விட்டு வெளியே வந்தவர்கள் “ஏய் போன முறை வந்தப்ப இருந்தாரே ஒரு சொட்டைத்தலை மேனேஜர் லோன் கிடைக்கும்னு சொல்லி ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசினாரு! இந்த மேனேஜர் ரொம்ப நல்லவரா இருப்பாரு போல உடனே லோன் தரேனு சொல்லிட்டாரு” என்று பேசிக்கொண்டு லோனுக்கான பார்மை ஃபில் பண்ணிக்கொண்டிருந்தனர்.
டீ குடித்துவிட்டு வந்த சிற்பிகாவின் காதில் சந்தோஷை பற்றி பெருமையாக பேசியது அவளின் காதில் விழ சந்தோஷின் மீதான காதல் ஆற்றுவெள்ளம் போல பெருகியது சிற்பிகாவுக்கு.
அடுத்த நாளும் சந்தோஷின் டேபிளில் பிளவர்வாஷை வைத்திருந்தாள் சிற்பிகா. சந்தோஷிற்கு சிற்பிகா மீது சந்தேகம் வலுத்தது. அவள் சாப்பிடபோகும்போது வாஷ்ரூம்போகும் போது தன் டேபிளை பார்த்தவண்ணம் செல்வதை கேமராவில் பார்த்துவிட்டான். ‘நாளைக்கு கண்டு பிடிக்கிறேன்டி’ என்று பெரும்மூச்சு விட்டுக்கொண்டு சாப்பிட எழுந்துச் சென்றான்.
அன்றுமாலை பேங்கில் இருப்பவர்கள் சந்தோஷை பார்க்க ஒன்று சேர்ந்து வந்தனர். யார் பேசுவது என்று சலசலவென பேசிக்கொண்டனர்.
“திலீப் எதுக்கு வந்திருக்கீங்க?” என்று அவனிடம் கேட்க. அவனோ “சார் வருசம் வருசம் நியூ இயர் செலிபரேசன் கொண்டாடுவோம் இந்த வருசமும் கொண்டாடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்” என்றதும்
“என்னைக்கு வைச்சுருக்கீங்க சொல்லுங்க ஜமாய்ச்சுடலாம்” என்றான் சந்தோஷ்.
“நீயூ இயர் செலிபரேசன் நாளன்னைக்கு வச்சிருக்கோம்” என்றான் தயங்கியபடி.
“ஓ தாராளமா பண்ணலாமே நானும் என்ஜாய் பண்ணுவேன் என்கிட்ட பேச என்ன தயக்கம் திலீப்” என்றான் இதழ்விரித்து சிரித்து. அவன் சிறு இதழ்விரிப்பைக்கூட இரசித்தாள் சிற்பிகா.
“நீங்க புதுசா வந்திருக்கீங்க. ரொம்ப ஸ்ட்ரிக்ட்டோனு நினைச்சிட்டேன் சார்” என்றான் சிரித்தபடி திலீப்.
“வேலையை சரியா செய்தா நான் எதுக்கு கடுகடுனு இருக்கப்போறேன் வேலை நேரத்துல வளவளனு பேசினா யாரா இருந்தாலும் திட்டத்தான் செய்வேன்” என்றவன் சிற்பிக்காவை ஒரு பார்த்தபடி “செலிபரேசன்க்கு என்னோட ஹெல்ப் ஏதும் வேணும்னா சொல்லுங்க நான் ரெடி” என சேரிலிருந்து எழுந்து நின்றான்.
“அச்சோ சார் நீங்க எந்த ஹெல்ப்பும் செய்ய வேண்டாம் செலிபரேசன் அன்னிக்கு வேட்டி சட்டை போட்டு வந்தா போதும்” என்றதும் “வாட் வேட்டி சட்டையா! எனக்கு அதெல்லாம் செட் ஆகாது” என்றான் மென் புன்னகையுடன்.
“இப்போ எல்லாம் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி இருக்கே சார்” என சொல்லியவன் நாக்கை கடித்துக்கொண்டான் அதிகமாக பேசிவிட்டோமோவென்று
“எனக்கு வேஷ்டி கட்டிக்க தெரியும் திலீப் ஒரு நாள் முழுக்க கட்டி இருக்கணும்னு யோசித்தேன் பரவாயில்ல நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்” என்றவன் தோளை குலுக்கிக் கொண்டான்.
சிற்பிகாவுக்கு ஏசி அறையில் நிற்க முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் நடுங்கிக்கொண்டிருந்தாள்.
“என்ன எப்பவும் வாயாடுற சிற்பிகா எதுவும் பேசாம இருக்கீங்க” என கிண்டல் செய்தான் சந்தோஷ் சிற்பிகாவை.
“சிற்பிகாவுக்கு ஏசி ஒத்துக்காது சார். அதுவும் இருட்டுனா ரொம்பவே பயப்படுவா அதான் அவ பேசாம இருக்கா நீங்க ஏசியை ஆப் பண்ணிபாருங்க அப்புறம் எங்க சிற்பிகா வாய் திறந்தா மூட மாட்டா” என்றதும் அங்கிருந்தவர்களும் ஆமோதித்தபடி சிரித்தனர்.
சிற்பிகாவோ “டேய் அவரு என்ன என்னை பத்தின பயோகிராபி கேட்டாரா?” என்று திலீபின் கையில் கிள்ளினாள்.
சந்தோஷோ உடனே ஏசி ரிமோட்டை எடுத்து ஏசியை ஆப்செய்தான். முதல் நாள் சிற்பிகா தேவையில்லாமல் பேசி திட்டு வாங்கின போது அவன் ஏசியை போடாதிருந்தது நினைவிற்கு வந்தது சந்தோஷிற்கு.
பேங்க் முழுவதும் ஏசி இருந்தாலும் சிற்பிகா கேஷியராக அவளுக்கு தனி கிளோஸ்டு கேபின் இருந்தது அதில் ஏசி காற்று உள்ளே போகாதவாறு கதவை லாக் செய்துக் கொள்வாள் சிற்பிகா.
“சிற்பிகா மேடம் உங்களுக்கு எனக்கு ஏசி ஒத்துக்காதுனு சொல்லவேண்டியதுதானே! பேச வேண்டிய நேரத்துல விட்டிருங்க தேவையில்லாம வண்டிவண்டியா பேசுறீங்க!” என்று இதழ் வளைத்து சிரித்து கேலி செய்தான் சந்தோஷ்.
“இனி பேசிடறேன் சார்” என்று அதற்கும் சந்தோஷிடம் இறங்கிப்போனாள். மொத்தத்தில் சந்தோஷ் மீது காதல் பித்து பிடித்தது அவளுக்கு.
அடுத்த நாள் நியூ இயர் செலிபரேசன்ஸ்க்கு வேட்டி சட்டைப்போட்டு அவன் தாத்தாவின் நினைவாக கொடுத்த புலிநகம் செயினையும் போட்டுக் கையில் பிளாட்டினம் காப்பையும் போட்டவன் மீசையை முறுக்கிவிட்டு கண்ணாடி முன்னே நின்றான். ‘பக்கா கிராமத்தான் போலவே இருக்கடா!’ என்று கண்ணாடியில் தன்னை ஒரு கணம் நிறுத்தி நிதானமாக பார்த்து ‘அச்சோ நம்மை பட்டிக்காட்டான்னு சொல்லிடுவாங்கப்பா’ என முறுக்கி விட்ட மீசையை இறக்கிவிட்டு ‘இப்போ ஓ.கேவா இருக்கேன்’ என வேட்டியை விரல் நுனியில் தூக்கி பிடித்துக்கொண்டு மாடிப்படிகளில் கீழே இறங்கினான் சந்தோஷ்.
மகனுக்காக டைனிங் டேபிளில் காத்திருந்த சண்முகமும் அமுதவள்ளியும் மகன் நடந்து வரும் அழகை கண்கொட்டாமல் இரசித்துப்பார்த்திருந்தனர் இருவரும்.
சந்தோஷ் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்ததும் “எப்படி இருக்கேன்ம்மா?” என்று புருவம் உயர்த்தினான். அமுதவள்ளியோ “அப்படியே எங்கப்பா போலவே இருக்கேடா கண்ணா! என் கண்ணே பட்டிடும் போல!” என்று சந்தோசத்தில் நெட்டி முறித்து திருஷ்டி எடுத்தார்.
சண்முகமோ “எப்பவும் ஃபார்மல் ட்ரஸ் தானே போடுவ இன்னிக்கு என்ன வேஷ்டி சட்டை போட்டிருக்க?” என்றவர் “ஃபார்மல் டிரஸ் விட வேஷ்டி சட்டையில ஹாண்ட்சமா இருக்க” என்றார் மகனை இரசித்தபடியே.
“ப்பா இன்னிக்கு எங்க பேங்குல நியூ இயர் செலிபரேட் பண்ணுறோம். ட்ரஸ் கோட் வேஷ்டி சட்டைப்பா அதான்” என்று கண்ணைசிமிட்டி கூறியவன் “ம்மா டைம் ஆச்சு டிபன் வைங்க” என என்று பரபரத்தான். அவரும் டிபன் பரிமாற சாப்பிட்டு முடித்து ஆபிஸ் கிளம்பி நின்ற சந்தோஷின் நெற்றியில் திருநீறு இட்டு விட்டு “தம்பி நாளைக்கு நாள் நல்லாயிருக்கு பொண்ணு பார்க்க வரோம்னு சொல்லியிருக்கேன். நீ நாளைக்கு பேங்க் லீவு போட்டிரு” என்றார் மகிழ்ச்சியாக அமுதவள்ளி.
“லீவு எல்லாம் போட முடியாது காலையில பொண்ணு பார்த்துட்டு மதியம் பேங்கிற்கு போயிடுறேன்” என்றான் கடமையுணர்ச்சியுடன்
“சரிப்பா கிளம்பு” என்றதும் அமுதவள்ளியின் காலில் விழுந்தான் சந்தோஷ். “நீங்களும் வந்து நில்லுங்க என் மகன் இன்னிக்கு வேஷ்டி கட்டியிருக்கான்ல ஆசிர்வாதம் பண்ணலாம்” என்றார் பெருமனதுடன் அமுதவள்ளி.
“இல்லம்மா நான் உன் மகனை ஆசிர்வாதம் பண்ணினா நீ கோவிச்சிப்ப நான் மட்டும்தான் ஆசிர்வாதம் பண்ணனும்னு சொல்லுவ எதுக்கு வம்பு” என்றார் பொய் கோபத்துடன்.
“ப்பா உங்க சண்டையை அப்புறம் வச்சிக்கோங்க எனக்கு நேரமாச்சு” என்றதும் சண்முகம் அமுதவள்ளி பக்கம் சேர்ந்து நின்று ஆசிர்வாதம் செய்தனர்.
திலீப் ப்யூனின் உதவியுடன் மெனக்கெட்டு பேங்க்கை அலங்காரம் செய்துக் கொண்டிருந்தான். சிற்பிகாவோ “அங்க ஒட்டுங்க! இங்க இதை மாட்டுங்க” என்று அதிகாரம் செய்துக் கொண்டிருந்தாள் இடுப்பில் கைவைத்தபடி
“ஏய் சும்மா அதிகாரம் பண்ணாதே சிற்பிகா! வாய் மட்டும் பேசுவா வேலையில ஒண்ணையும் காணோம் வாயை மூடிக்கிட்டு நில்லு” என்று சைகை காண்பித்தான் திலீப்.
“என்ன திலீப் இப்படி சொல்லிட்ட நான் காலையில ஐஞ்சு மணிக்கு எழுந்து மேக்கப் போட்டு பட்டு சேலை கட்டிட்டு வந்திருக்கேன். உங்க கூட நான் வேலை செய்தா என் புடவை கசங்கிப்போய்டும் அதான் சும்மா நின்னிட்டிருக்கேன் இல்லனா நானும் வேலை செய்வேன்” என்று அப்பாவியாக பேசினாள் சிற்பிகா.
“நம்பிட்டேன்மா நீ போயி ஓரமா உட்காரு. உன்னை பார்க்க வேண்டியவங்க இன்னும் வரலை” என்றான் முணுமுணுப்பாக.
“ஆமாடா” என்றாள் வருத்தமாக சிற்பிகா. ப்யூனோ இருவரும் பேசிக்கொள்வதில் பாதி புரிந்தும் புரியாமலும் குழம்பிக்கொண்டு நின்றான்.
பேங்கில் வேலைசெய்பவர்கள் ஒவ்வொருவராக வந்தனர். கிளார்க்காக இருக்கும் மாலாவோ “சிற்பிகா நீ சேலையில தேவதை போல இருக்கம்மா சாய்ந்தரம் வீட்டுக்கு போனதும் உங்க அம்மாவை சுத்திப்போடச் சொல்லு” என்றவர் அவரது இடத்திற்குச் சென்றார்.
“தேங்க்ஸ் மேடம்” என்றவளோ “என் ஆளு இன்னும் வரலையே வாஷ் ரூம் போய்ட்டு வரலாம்” என்று சென்றிருந்த வேளை சந்தோஷ் பேங்கிற்குள் நுழைந்தான்.
“குட்மார்னிங் சார்” என்றனர் அனைவரும். “ம்ம் குட்மார்னிங்” என்றான் மந்தகாச புன்னகையுடன்.
எப்போவும் இதேபோல சிரிச்சா நல்லாயிருக்கும் என்றான் திலீப் மனதிற்குள்.
சந்தோஷின் கண்கள் சிற்பிகாவை தேடியது. இந்த சில்வண்டு எங்க போனா. நான் இல்லாத போது கீச் கீசுனு பேசுறா நான் பேசினா சரிங்க சார் தொபுக்கடீர்னு சரணடைஞ்சுடுறா என்று தலையை ஆட்டிக்கொண்டு அவனது அறைக்குள் சென்றான்.
“இன்னிக்கு பிளவர்வாஷ் வைக்கலையே?” என்று நெற்றியை தேய்த்துக்கொண்டான். ‘என்ன சந்தோஷ் பிளவர்வாஷ் வைக்கலைனு பீல் பண்ணுறியா?’ என்று அவன் மனசாட்சி கேட்டது. ‘இன்னிக்கு நான் முன்னமே வந்துட்டேன்ல எப்படி வைக்குறாங்கனு பார்க்குறேன்’ என்று அவனது சீட்டில் உட்கார்ந்தான்.
பேங்கில் ஏடிஎம் வசதியும் இருக்க ஏடிஎம் மிஷினில் பணம் வைக்க வேண்டி திலீப்பை உதவிக்கு கூட்டிக்கொண்டுச் சென்றான் சந்தோஷ்.
பணம் வைத்துவிட்டு தன் அறைக்கு வந்த சந்தோஷ் பார்வைக்கு பட்டது தன் டேபிள் மீது இருக்கும் பிளவர் வாஷ். உடனே கேமராவை ஆன் செய்து செக் பண்ணினான். யாராவது வருகிறார்களாவென்று சுற்றி பார்த்துக்கொண்டு பிளவர் வாஷை சிற்பிகாதான் வைத்துக்கொண்டிருந்தாள்.
வாஷ்ரும் சென்றுவிட்டு வந்தவள் “அச்சோ இன்னிக்கு சந்தோஷ் சார் ரூம்ல பிளவர் வைக்கலையே எப்படி மறந்தேன்?” என்று தலையில் அடித்துக்கொண்டு அவள் வாங்கி வந்த ரோஜாக்களை சந்தோஷ் அறையில் பிளவர்வாஷில் வைத்து விட்டு வெளியே வந்தாள். இன்னிக்கு சந்தோஷிடம் மாட்டிக்கொள்ள போவது தெரியாமல்.
4. உறவு
எப்போதும் பிளவர் வைக்குமுன் கேமராவை அணைத்துவிடுவாள். இன்றைக்கு அவசரத்தில் மறந்து விட கண்டுபிடித்துவிட்டான் சந்தோஷ். அவள் கேமராவை அணைக்காமல் விட்டோம் என்பதை மறந்திருந்தாள் நியூ இயர் செலிபரேசன் சந்தோசத்தில்.
கேமராவை உத்து பார்த்தான். இன்று குங்குமம் கலரில் பட்டுப்புடவையும் டார்க் ப்ளு கலரில் தங்க சரிகை மின்ன வானத்து தேவதை போல தெரிந்தாள் சிற்பிகா சந்தோஷின் கண்ணுக்கு. ஒரு நிமிடம் அவளை மெய் மறந்து உற்று பார்த்தவன் அடுத்தநொடி “இது தப்பு சந்தோஷ் நீ நாளைக்கு பொண்ணு பார்க்க போற” என்று தலையை உலுக்கிக்கொண்டு “அவளை வார்ன் பண்ணிவிடணும் இந்த காதல் கீதல்னு உளறிக்கிட்டு வரப்போறா” என்று உஷாரானான் சந்தோஷ்.
பேங்க் வேலை நேரம் முடிந்ததும் ஆர்டர் பண்ணிய கேக் வந்து விட்டது. சிற்பிகாவுக்கோ வேஷ்டி சட்டையில் கம்பீரமாக நிற்கும் ஆணழகனாய் தெரிந்தான் சந்தோஷ் அவள் கண்ணுக்கு. நொடிக்கொருதரம் சந்தோஷை பார்த்துக்கொண்டே இருந்தாள். அவன் சட்டென்று சிற்பிகாவை பார்க்க இமைக் குடையை தாழ்த்திக்கொண்டாள்.
‘சந்தேகமே இல்லை இவ நம்மை லவ் பண்ணுறா ஆரம்பத்திலேயே கிள்ளி விடணும். இல்லைனா உரம் போட்டு வளர்ந்துவிடும்’ என்று கன்னத்தை தேய்த்துக்கொண்டு நின்றான். அவள் மனதில் என்றோ அவன் காலூன்றி இருக்கிறான் என்பது சந்தோஷுக்கு தெரியாமல் போனது.
திலீப்போ “கேக் வெட்டுங்க சார்” என்று கத்தியை சந்தோஷிடம் நீட்டினான். அவனோ “பெரியவங்க இருக்காங்கல்ல” என்றவன் “மாலா மேடம் வாங்க” என்று கூப்பிட அவரோ கூச்சப்பட்டு “நான் வரல சார்” என்றார். “சரி எல்லாரும் சேர்ந்து கேக் வெட்டுவோம் வாங்க” என்றதும் முதல் ஆளாய் சந்தோஷ் பக்கம் போய் நின்றுக் கொண்டாள் சிற்பிகா.
சந்தோஷின் ஒரு பக்கம் நின்றபடி கத்தியை பிடிக்க மறுபுறம் சிற்பிகா அவனது விரல் தொட்டு கத்தியை பிடித்தாள் அவள் தொட வேண்டுமென்று பர்பஸாக தொடவில்லை. ஆனால் சந்தோஷின் முகமோ சற்று இறுகியதும் அவள் கண்கள் கலங்கி விட்டது. தான் தொட்டது அவனுக்கு பிடிக்கவில்லையென்று தெரிந்ததும் மெதுவாக கையை விலக்க பார்த்தாள்.
திலீப்போ “கேக் வெட்டலாம் சார்” என்றதும் நாகரீகம் கருதி கையை விலக்காமல் கேக்கை வெட்டினாள் சிற்பிகா.
“ஹேப்பி நியூ இயர்” என்று அனைவரும் சந்தோசமாக பாட்டு பாட சிற்பிகா மெதுவாய் இதழ் விரித்தாள். அவனது முகமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் உதடு கடித்து விம்மினாள் பேதை பெண்.
செலிபரேசன் முடிந்ததும் அனைவரும் கிளம்பி விட திலீப் சிற்பிகாவுக்காக காத்திருந்தான்.
சிற்பிகாவோ தன் மனதில் இருக்கும் காதலை சொல்லிவிடவேண்டுமென்று எண்ணி “திலீப் நீ கிளம்பு எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு” என்றதும் அவள் மனம் புரிந்துக் கொண்டு “ம்ம் பார்த்து பேசு” என்று அவள் தோளை தட்டி “ஆல் தி பெஸ்ட்” சொல்லிச் சென்றான்.
சந்தோஷும் சிற்பிகாவிடம் பேசிவிட வேண்டுமென்று காத்திருந்தான்.
அவளோ ‘எப்படி பேசுவது எப்படி ஆரம்பிப்பது! நீங்க என் கனவுல வந்தீங்க முத்தம் கொடுத்தீங்கனு சொல்றதா! அச்சோ என்னை தப்பா நினைச்சுடுவாரா வேண்டாம் ச…சந்தோஷ் நா…நான் உங்களை லவ் பண்ணுறேன்’ என்று சொல்லி ரிகர்சல் பார்த்தாள்.
சந்தோஷோ பொறுத்துப்பார்த்து மணியை பார்த்தான் ஆறுக்கு மேலாக. “ம்ப்ச்” என சலித்துக்கொண்டு இன்டர்காமில் சிற்பிகாவை கூப்பிட்டான்.
இன்டர்காம் அடிக்கும் சத்தத்தில் நிதர்சனம் வந்தவள் போனை எடுத்து “ஹ…ஹலோ சார்” என்றாள் தடுமாறியபடி.
“ஏன் நீங்க இன்னும் கிளம்பாம இருக்கீங்க?” என்றான் சற்று குரலை உயர்த்தி.
“அ…அது வந்து” என்று வார்த்தைகளை மென்று முழுங்கினாள்.
“நான் சொல்லட்டுமா! என்னை லவ் பண்ணுறீங்க அதானே?” என்று பட்டென்று பட்டாசு வெடித்தது போல கேட்டுவிட்டான்.
சிற்பிகாவிற்கு பேச்சு வராமல் அமைதியாக இருக்க
“என் கேபின் வாங்க” என்று போனை வைத்துவிட்டான்.
அவள் மனம் நோகும்படி பேசகூடாதென என்ன பேசணும் என்று யோசித்துக்கொண்டிருந்தான் சந்தோஷ்.
சிற்பிகாவோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சந்தோஷின் அறைக்குள் வந்ததும் ஏசியை அணைத்து வைத்திருந்தான்.
அப்பா என்று பெரும்மூச்சு விட்டு புடவைத்தலைப்பை திருகிக்கொண்டிருந்தாள்.
சந்தோஷோ சிற்பிகாவை மேலிருந்து கீழாக அளவெடுத்தான் தவறான கண்ணோட்டத்துடன் அல்ல. அவள் தான் பார்க்க வேண்டுமென்று மெனக்கெட்டு அலங்காரம் செய்து வந்திருப்பவளை எப்படி உன்னை நான் லவ் பண்ணவில்லை என்று சொல்வது பெண்ணின் மனதை காயப்படுத்துவது உசிதம் அல்ல என்று ஒரு கணம் தடுமாறிப்போனான்.
வேலையில் தவறு இருந்தால் அவளை திட்டிவிடலாம். ஆனால் காதல் என்பது இருவருக்குமான பர்சனல். உடனே அவளை ஹர்ட் பண்ணுவது போல பேசினால் ஏதாவது விபரீத முடிவை அவள் எடுத்துவிட்டால் என்ன செய்வது என்று சிறு தடுமாற்றம் ஏற்பட்டது எதிலும் தீர்க்கமான முடிவெடுப்பவன் இன்று குழம்பிப்போனான்.
“ம்க்கும்” என்று குரலை செருமிக்கொண்டு “உட்காருங்க சிற்பிகா” என்றான் மெதுவான குரலில்.
அவளும் வெட்கப்பட்டுக்கொண்டே உட்கார்ந்து தலையை குனிந்துக் கொண்டாள்.
“நீங்க என்னை லவ் பண்ணுறீங்க தானே நான் கரெக்டா கெஸ் பண்ணிருக்கேன்” என்று அவனாக ஆரம்பித்தான்.
அவன் சட்டென்று இப்படி கேட்டுவிட்டதும் “ஹான்” என்று மெதுவாக தலையை தூக்கிப்பார்த்து “ஆமா” என்று தலையை அசைத்தாள்.
“என்னை பார்த்து ஒருவாரம் கூட ஆகலையே என்னை எப்படி எந்த நம்பிக்கையில நீங்க என்னை லவ் பண்ணுறீங்க” என்றவன் “இப்போ நாம ரெண்டுபேரும் தனியா இருக்கும் நான் உங்ககிட்ட தப்பா நடக்க முற்பட்டா என்ன பண்ணுவீங்க?” என்றான் அவள் விழிகளை பார்த்துக்கொண்டே கன்னத்தில் கைவைத்தபடி
அவளுக்கு கண்ணீர் பொசுக்கென்று வந்துவிட்டது உதடுகள் நடுங்கியது “ஏ…ஏன் இப்படி பேசுறீங்க? நீங்க நல்ல பையன் எனக்கு தெரியும்” என்றாள்.
“அப்போ நான் என்ன கேட்டாலும் செய்வீங்களா?” என்றான் தாடையை தேய்த்தவாறு.
“ம்ம் செய்வேன்” என்று நாலா பக்கமும் தலையை ஆட்டினாள்.
“நாளைக்கே ரெண்டு பேரும் மகாபலிபுரம் போவோமா! அங்க ஒருநாள் ரூம்போட்டு தங்குவோமா?” என்று தன்னை தவறாக காட்டி அவளை தெளிய வைக்கப்பார்த்தான்.
“ஏ…ஏன் இப்படி தப்பு தப்பா பேசுறீங்க?” என்றாள் விம்மி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு.
“அழாதே சிற்பிகா நான் தப்பா பேசலை! லவ் பண்ணுறவங்க இதெல்லாம் பண்ணினா தப்பா என்ன? இப்ப எல்லாம் சகஜம் தானே” என்றான் தோளைக்குலுக்கிக்கொண்டு.
அவளுக்கோ தன் கனவுக்கோட்டை தூள் தூளாக உடைந்து போனது போல் இருந்தது. இதயம் வெடித்துவிடும் போல இருந்தது. தன் கனவு நாயகனை பற்றி உயர்வாக நெஞ்சில் சித்தரித்து வைத்திருந்தாளே அதனை ஒரு நொடியில் தவிடு பொடியாக்கிவிட்டானே தொண்டைக்குள் எச்சிலை விழுங்கிக்கொண்டு “நீங்க சும்மா விளையாட்டுக்குதானே இப்படி பேசுறீங்க! ஏன்னா நா…நான் உங்களை பல வருசமா லவ் பண்ணுறேன்” என்றாள் கண்ணீரை துடைத்துக்கொண்டு
“அதான் சொல்றேன்மா என் வெளிதோற்றத்தை பார்த்து முடிவு பண்ணாத நான் ரொம்ப கெட்டவன் தண்ணி அடிப்பேன், சிகரெட் குடிப்பேன் உனக்கு இதெல்லாம் பிடிக்குமா சொல்லு” என்றான் பொறுமையாக அவளை மனதை காயப்படுத்தக்கூடாதென எண்ணி அவள் மனதை கூறுப்போட்டு பேசிக்கொண்டிருந்தான். அவள் கண்கள் கலங்குவதை அவனால் ஏனோ தாங்கமுடியவில்லை எழுந்து அவள் பக்கம் வந்தவன் அவள் தோளை தொட
“தொ…தொடாதீங்க என்னை பிடிக்கலைனு நான் தப்பானவன்னு சொல்லி உங்களை நீங்களே ஏன் கெட்டவரா காட்டிக்கிறீங்க. வந்து ஒருவாரம் ஆனவனை எப்படி நீ புரிஞ்சுக்கிட்டனு கேட்குறீங்க. ம்ம் நீங்க என்ன பண்றீங்கனு யார் யாருக்கு உதவி செய்றீங்கனு எனக்கு தெரியும் சார். அப்படி என்னை தப்பான கண்ணோடத்துல பார்க்குறவரா இருந்தா இதுவரை என் கண்ணை மட்டும் பார்த்து பேச மாட்டிங்க இந்த நொடி வரை சார்” என்றவள் மூக்கை உறிஞ்சிக்கொண்டு உதடுகள் நடுங்க உதடுகளை கடித்துக்கொண்டு “நான் என் மனசுல உள்ளதை பேசிடறேன்” என்றவள் “நான் பெரியமனுசி ஆனதிலிருந்து எனக்கு கல்யாணம்னா என்ன நமக்குனு ஒருத்தன் பிறந்திருப்பானானு யோசித்துக் கொண்டிருக்கும் வயசில என் கனவுல உங்க உருவம் வந்துச்சு. இந்த நாள் வரை ஏன் இந்த நிமிசம் வரை நான் உங்களை லவ் பண்ணிக்கிட்டிருக்கேன் சார்! என் மனசுல என் மனசுல நீங்கதான் என் ஹஸ்பெண்ட்னு பதிச்சு வைச்சுருக்கேன் சார்!” என்றாள் கண்கள் கலங்கி
“ஓ காட் என்ன இவ நான் கனவுல வந்தேனு கனவு நாயகன் கதையெல்லாம் சொல்லுறா! எப்படி இவளை ஹேண்டில் பண்ணுறதுனே தெரியலையே“ என்றவனுக்கு தலைவலிக்க தொடங்கியது.
அவளிடம் உண்மையை சொல்லவேண்டுமென்று எண்ணியவன் “லிசன் சிற்பிகா எங்கம்மாவுக்கு வாக்கு கொடுத்திருக்கேன் அவங்க சொல்ற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் நாளைக்கு பொண்ணு பார்க்க போறோம்” என்றதும் எழுந்து விட்டாள் சிற்பிகா.
“ஏய் நான் பேசி முடிக்கலை” என்று புருவம் இடுக்கினான்.
“இதுக்கு மேல பேசவேண்டாம் சார் நான் உங்களை மறந்துட்டேன் போதுமா? நீங்க சந்தோசமா இருங்க” என்றவளுக்கு கண்களில் மாலையாய் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது. அவன் பேசுவதை சிற்பிகா கேட்டிருக்கலாம் அவசரப்பட்டு தன் போனை கூட எடுக்காமல் சந்தோஷ் அறையை விட்டு வெளியே வந்தவள் தன் சீட்டில் போய் தலை சாய்த்துக்கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
சிற்பிகாவை எப்படி சமாதானம் செய்து என்று அவனுக்கு புரியவில்லை ‘ஓ காட் இந்த பொண்ணு ஏன் இப்படி அழறா’ என்று அவன் மனம் பதைபதைத்தது. உறுதியாய் இருப்பவனை அசைத்து பார்த்து விட்டாள் சிற்பிகா. அவன் மனதில் சிற்பிகா மீது இன்னும் காதல் வரவில்லையே. அதுவுமில்லாமல் தன் அம்மாவுக்கு கொடுத்த வாக்கே அவனுக்கு பெரிதாக தெரிந்தது. ஏசியை போட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தவன் நாளைக்கு வந்து சிற்பிகாவை சமாதானம் செய்துக்கலாம் என்று பேக்கை தூக்கிக்கொண்டு வெளியே வந்தவன் சிற்பிகா அழுவதை பார்த்து இப்போது என்ன பேசினாலும் அவள் தன்னை புரிந்துக் கொள்ளமாட்டாள்’ என்று எண்ணியவன் வெளியே வந்து செக்யூரிட்டியிடம் சிற்பிகாவை பார்த்துக்கொள்ள சொல்லிச் சென்றான்.
சிற்பிகாவோ அழுது அழுது அப்படியே உறங்கிவிட்டாள். சிற்பிகா வீட்டில் ஆனந்தன் அவளுக்கு போன் செய்து பார்த்து ஓய்ந்து விட்டார். ஏழு மணி ஆகியும் மகள் இன்னும் வராதது கண்டு அவருக்கு பயம் வந்துவிட்டது.
“இதுக்குதான் அவளுக்கு செல்லம் கொடுக்காதீங்கனு தலையால அடிச்சிக்கிட்டேன் பார்த்தீங்களா? இப்ப எங்க போனாளோ? என்ன ஆச்சோ அவளுக்கு?” என அழுக ஆரம்பித்தார் உமா. இருவரும் பதறி அடித்துக்கொண்டு சிற்பிகா வேலைசெய்யும் பேங்கிற்குச் சென்றனர்.
சிற்பிகா கண்விழித்துப்பார்க்க 6.30 மணிக்கு மேல் இருக்க இருட்ட தொடங்கியிருந்தது “அச்சோ வீட்ல என்னை தேடியிருப்பாங்களே! ச்சே நாம எவ்ளோ அசால்ட்டா இருந்திருக்கோம்” என்று தன்மேலயே கோபம் கொண்டவள் தன் போனை தேடினாள். அப்போதுதான் சந்தோஷ் அறையில் அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது போனை அங்கே வைத்துவிட்டோமென்று அவனது அறைக்குச் சென்றவள் போனை எடுத்து பார்க்க சார்ஜ் சுத்தமாக இல்லை. அவளுக்கு சந்தோஷ் தன்னிடம் பேசியதே மனபாரமாக இருக்க என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை. மயக்கம் வருவது போல இருக்க முகத்தை கழுவி வர சந்தோஷின் அறைக்குள் இருக்கும் வாஷ் ரூம்க்குள் சென்றாள்.
அந்தநேரம் செக்யூரிட்டி பேங்கிற்குள் வந்தவர் சிற்பிகா அவளது சீட்டில் இல்லையென்று தெரிந்ததும் சந்தோஷின் அறையை பூட்டிச் சென்றுவிட்டான். சந்தோஷோ ஒரு பெண்ணோட மனசை காயப்படுத்திவிட்டோமென்று முதன்முறை கவலையாக இருந்தவன் ஏசியை ஆப் செய்யாமல் சென்றிருந்தான். சிற்பிகா வாஷ்ரூம் சென்று வந்தவள் கதவை திறக்க பார்க்க அது பூட்டியிருந்தது. ‘அச்சோ நான் உள்ளே இருக்கேன் எதுக்கு பூட்டீனீங்க?’ என்று கதற ஆரம்பித்தாள்.
ஏசி வேறு ஓடிக்கொண்டிருக்க அவளுக்கு மூச்சு முட்டியது. ஏசியை ஆப் பண்ண ரிமோட்டை தேடினாள். ரிமோட் அவள் கண்ணுக்கு தெரியவில்லை. அடுத்து பத்து நிமிசத்தில் அவளுக்கு குளிரத்துவங்கியது. அரை மணிநேரத்தில் அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள்.
சந்தோஷிற்கு மனமே சரியில்லை. அவள் கலங்கிய கண்களை பார்த்தவனுக்கு அப்படியே அந்த பொண்ணை விட்டு வந்திருக்க கூடாது எதாவது விபரீதமா பண்ணிக்கிட்டா என்ன செய்வது என்று அவன் மனம் பதை பதைத்து துடிக்க காரை திருப்பி விட்டான் பேங்கிற்கு.
ஒருமணிநேரம் ஆனதும் சிற்பிகா காலைகுறுக்கிக்கொண்டு நடுங்கிக்கொண்டு அவள் கட்டியிருந்த சேலையின் முந்தானையை போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள்.
பேங்கிற்கு வந்த சந்தோஷோ “செக்யூரிட்டி சிற்பிகா கிளம்பிட்டாங்களா?” என்று சிறு பதட்டத்துடன் கேட்டான்.
“அவங்க கிளம்பிட்டாங்க சார்” என்றதும் நிம்மதியாக இருந்தவன் “என் பர்ஸ் ஆபிஸ்குள்ள வச்சிட்டேன் கதவை திறந்து விடுங்க” என்றதும் அவர் கதவை திறந்து விட்டு வெளியேச் சென்றுவிட்டார்.
கதவை திறந்து உள்ளே போக இருட்டாக இருந்தது. லைட் போட்டு தன் அறைக்கதவை திறந்துக் கொண்டு போக அங்கே நந்தை போல சுருண்டு கிடந்தாள் சிற்பிகா.
“மைகாட்” என்று பதறிய சந்தோஷோ ஏசி ரிமோட்டை அவன் வைத்த இடத்திலிருந்து எடுத்து ஆப் செய்து விட்டு கீழே சுருண்டு கிடந்த சிற்பிகாவை தூக்கி மடியில் போட்டு அவளது கை கால்களை பரபரவென தேய்த்து விட்டான். அவளது உதடுகளோ “ச…சந்தோஷ் ஐ…லவ்யு” என்றது அந்த நிலையிலும்.
“கிறுக்கு பொண்ணா இருக்காளே” என்று அவளின் காதலின் அளவை கண்டு பிரமித்து போனான். அவள் மூச்சு விடுவதற்கு சிரமப்பட, ஆபத்துக்கு தப்பில்லை என்று அவள் உதட்டோடு தன் உதட்டை பொருத்திக்கொண்டு தன் உயிர் சுவாசத்தை அவளுக்கு கடத்தினான். அவளுக்கு கொஞ்சம் சுயநினைவு வருவதை கண்டவன் அவளிடமிருந்து பிரிந்து விட்டு அவளை தூக்கிக்கொண்டு வெளியே வந்தவன் “செக்கியூரிட்டி கார் கதவை திறந்து வைங்க” என்று பதட்டத்துடன் கூறினான்.
செக்கியூரிட்டி கார் கதவை திறந்து விட்டதும் சிற்பிகாவை படுக்க வைத்து விட்டு செக்கியூரிட்டியிடம் “பேங்குள்ள ஆள் இருக்கறது தெரியாம லாக் பண்ணுவாங்களா! செக் பண்ண மாட்டிங்களா? கொஞ்சம் உடை அறிவில்லையா உங்களுக்கு ஹான்! நாளைக்கு வந்து உங்களை பேசிக்குறேன்” என்று கடுகடுவென கோபத்தில் கொந்தளித்து பேசியவன் “சிற்பிகா பேரண்ட்ஸ் வந்தா என் போன் நம்பரை கொடுங்க” என்று சொல்லியவன் பக்கம் இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு காரை விட்டான்.
சிற்பிகாவோ மூச்சுவிட சிரமப்பட்டாலும் “ச…சந்தோஷ் ஐ…லவ்யு” என்று மந்திரம் போல சொல்லிக்கொண்டே வந்தாள்.
சந்தோஷ் சிற்பிகாவின் காதலை ஏற்றுக்கொள்வானா. இல்லை அமுதவள்ளிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவானா பொருந்திருந்து பார்ப்போம்!
5. உறவு
ஹாஸ்பிட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு சிற்பிகாவை தூக்கிக்கொண்டு ஓடினான். அவளால் சீராக மூச்சு விடவேமுடியவில்லை திணறினாள். ஹாஸ்பிட்டலில் கூட்டம் வேறு நிரம்பி வழிந்தது. “இவங்களுக்கு மூச்சு விட முடியல டாக்டரை பார்க்கணும் கொஞ்சம் சீக்கிரம் அப்பாய்ட்மென்ட் வாங்கிக்கொடுங்க” எதிரே வந்த நர்ஸிடம் பதட்டத்துடன் பேசினான் சந்தோஷ்.
சந்தோஷின் படபடப்பை பார்த்து “பயப்படாதீங்க சார் வாங்க” என்ற நர்ஸ் டாக்டரின் அறைக்குச் கூட்டிச்சென்றார்.
டாக்டரும் சிற்பிகாவை செக் பண்ணியவர் “உங்க வொய்ப்க்கு வீசிங் இருக்குனு தெரியும்ல ஏன் ஏசியில இருக்க விட்டீங்க இப்படித்தான் அசால்ட்டா இருப்பாங்களா? இன்னும் கொஞ்சம் நேரம் ஏசி அறையில இருந்திருந்தா இவங்க உயிருக்கு கூட ஆபத்து வந்திருக்கலாம் இனிமேலாவது எச்சரிக்கையா இருங்க” என்று சந்தோஷை திட்டிவிட்டு “இன்னிக்கு நைட் மட்டும் ஹாஸ்பிட்டலில் இருக்கட்டும் காலையில கூட்டிட்டு போலாம்” என்று அவளுக்கு இன்ஜக்சனை போட்டு விட்டு “பார்த்துக்கோங்க நான் காலையில வந்து பார்க்குறேன்” என்றதும்
“ஓ.கே மேடம் இனி எச்சரிக்கையா இருக்க சொல்றேன்” என்றான் சந்தோஷ். தன்னால் சிற்பிகாவிற்கு இந்த நிலமை வந்துவிட்டது என்று எண்ணி கவலையானவன் டாக்டர் சிற்பிகாவை வொய்ப் என்று கூறியதை அவன் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டான்.
ஆனந்தனும் உமாவும் பேங்கிற்கு வந்தவர்கள் செக்யூரிட்டியிடம் “எங்க பொண்ணு சிற்பிகா எத்தனை மணிக்கு கிளம்பினாங்க?” என்று பதட்டத்துடன் கேட்டார் ஆனந்தன்.
“சார் சிற்பிகா மேடம் பேங்கிற்குள்ள இருந்தது தெரியாம நாங்க வெளியே பூட்டிட்டோம்! அவங்க மயக்கம் போட்டு உடம்பு சரியில்லாம போச்சு! மேனேஜர் சார்தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காரு! சாரோட போன் நம்பர்” என்று கவலைப்பட்டு பேசிய செக்யூரிட்டி சந்தோஷின் மொபைல் எண்ணை கொடுத்தார்.
உமாவுக்கோ ஒரு பக்கம் மகள் கிடைத்துவிட்டாள் என்ற நிம்மதி இருந்தாலும் அவளுக்கு வீசிங் வந்தால் ரொம்ப உடம்பு சரியில்லாம போய்விடுமே என்று அழுக ஆரம்பித்தார்.
மொபைல் நம்பரை வாங்கிய ஆனந்தனோ “என்ன இப்படி கேர்லசா இருந்திருக்கீங்க! பேங்குள்ள ஆள் இருக்காங்களானா பார்க்க மாட்டீங்களா! உங்க வீட்டு பொண்ணா இருந்தா இப்படிதான் இருப்பீங்களா?” என்று செக்யூரிட்டியை கன்னா பின்னாவென சத்தம் போட ஆரம்பித்தார்.
“சாரிங்க சார் இனி கவனமா இருக்கேன்” என்றான் கவலையாக செக்யூரிட்டி.
ஆனந்தனும் உமாவும் பதறி அடித்து ஹாஸ்பிட்டல் சென்றனர். ஆனந்தன் சந்தோஷ் மொபைலுக்கு கூப்பிட்டவர் “சார் எங்க பொண்ணு சிற்பிகா” என்று அவருக்கு வார்த்தை வரமறுத்தது.
“உங்க பொண்ணு நல்லாயிருக்காங்க” என்று சிற்பிகா இருந்த அறை எண்ணைச் சொல்ல இருவரும் சிற்பிகா இருந்த அறைக்குள் வந்தவர்கள் வெயிலில் பிடிங்கி போட்ட வாடிய வெற்றிலை கொடி போல கட்டிலில் படுத்திருக்கும் மகளை காண்கையில் இருவருக்கும் அவர்கள் உடம்பில் உயிர் இல்லை. சிற்பிகா கொஞ்ச நேரம் முன்புதான் கண்ணை விழித்தாள். ஒரே மகள் என்று செல்லம் கொடுத்து வளர்த்த ஆனந்தனோ “ராஜாத்தி” என்று சிற்பிகாவின் பக்கம் போய் அமர்ந்தவர் தலையை தடவிக்கொடுக்க “ப்பா நான் நல்லாயிருக்கேன்” என்று மெல்ல இதழ் விரித்தாள்.
“ரொம்ப கஷ்டப்பட்டியாடா தங்கம்” என தலையை தடவியபடியே அங்கலாய்ப்பாய் கேட்டார் ஆனந்தன்.
“இல்லப்பா” என்றாள் மெல்லிய குரலில்.
உமா சிற்பிகாவின் மறுபக்கம் அமர்ந்தவர் “ஏன் டி போனுக்கு சார்ஜ் போட்டு வைனு எத்தனை முறை சொல்லியிருப்பேன் உனக்கு என்னாச்சோ ஏதாச்சோனோ பெத்த வயிறு துடிச்சு போச்சுடி நீ என்ன இன்னும் சின்னபிள்ளையா கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை. காலம் கெட்டுக்கிடக்கு உனக்கு எதாவது ஆகியிருந்தா நாங்க என்னடி பண்ணுவோம்” என்று கண்ணீருடன் மகளை கடிந்துக் கொண்டார் உமா.
“சாரிமா இனிமே நீ சொல்றபடியே நான் நடந்துக்குறேன்” என்றாள் காய்ந்து போன இதழை கடித்துக்கொண்டு
“ஏய் உமா இந்த நேரத்துல புள்ளைய எதுக்கு கண்டிக்குற எழுந்து வெளியே போடி” என்று ஆனந்தன் மனைவியை திட்டினார்.
இவர்களின் பாசப்பிணைப்பை மார்புக்கு குறுக்கே கை கட்டி பார்த்துக்கொண்டிருந்த சந்தோஷோ ‘நம்ம அம்மா போலவே இவளோட அப்பா இவளுக்கு பாசம் காட்டுறாரு’ என்று உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு “சார்” என்று சந்தோஷின் குரல் கேட்டு திரும்பினார் ஆனந்தன்.
“சாரி தம்பி உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை எங்க பொண்ண சரியான நேரத்துக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்திருக்கீங்க! நன்றினு சொல்லி ஒரு வார்த்தையில என்னால முடிக்க முடியாது உங்களை உயிரோட இருக்க வரை என்னால மறக்க முடியாது” என்று சந்தோஷின் கையை பிடித்துக்கொண்டார் கண்ணீர் விட்டார் ஆனந்தன்.
தன்னால் தான் அவளுக்கு இத்தனை வேதனை என்று சொல்லத்துடித்த நாவை அடக்கிக்கொண்டு நின்றான் மெல்லிய இதழ்விரிப்புடன்.
“ஏதாவது சாப்பிடுறீங்களா வாங்கிட்டு வரவா?” என்றான் அக்கறையுடன் சந்தோஷ். யாருக்காகவும் இவ்வளவு இறங்கி போய் பேசியதில்லை சந்தோஷ். தன்னால் ஒருபெண் படுத்து கிடக்கிறாள் என்று தான் அவன் மனம் உறுத்த சிற்பிகாவை விட்டு நகராமல் இருந்தான்.
“இல்லப்பா எங்களுக்கு பசிக்கல எங்க பொண்ணு கிடைச்சுட்டானு நிம்மதியா இருக்கு” என்றார் கண்ணீரை துடைத்துக்கொண்டு.
“சிற்பி இன்னும் சாப்பிடாம இருக்கா அவளுக்கு சூடா இட்லி ஏதாவது வாங்கிகொடுத்துட்டு கிளம்புறேன் அங்கிள்” என்றான் சந்தோஷ்.
அங்கிள் என்ற உரிமையோட சந்தோஷ் கூப்பிட்டதும் ஆனந்தன் மனதிற்குள் தன் மகளின் காதல் நிறைவேறிவிடும் என்று ஆனந்தப்பட்டார் அவர்.
“சரிங்க தம்பி” என்றார் சிரித்தபடி
சிற்பிகாவோ “ப்பா” என்றாள் மெதுவாக.
“என்னடா சாப்பிட வேற எதாவது வேணுமா தம்பிகிட்ட சொல்லிவிடலாமா?” என்று சிற்பிகாவின் அருகே சென்ற ஆனந்தனிடம் “சந்தோஷ் சாருக்கு ஏன் சிரமம் அவர் வீட்டுக்கு கிளம்பட்டும் ப்பா நீங்க எனக்கு சாப்பிட வாங்கிட்டு வாங்க” என்றாள் மெல்லிய குரலில்.
சந்தோஷோ “நான் வாங்கி கொடுத்தா சாப்பிடமாட்டாளா?” என்று பொசுக்கென்று கோபம் வந்தது அவனுக்கு.
ஆனந்தனோ “சரிங்க தம்பி நானே சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுக்குறேன் நீங்க கிளம்புங்க” என்று அவர் வெளியே வர பார்க்க.
“ஏன் சிற்பிகா நான் வாங்கிட்டு வந்தா சாப்பிட மாட்டியா?” என கண்ணை உருட்டி பார்த்தான்.
“இல்ல உங்கம்மா உங்களுக்கு வெயிட் பண்ணுவாங்க உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என அவன் முகம் பார்க்காமல் ஒட்டுதல் இல்லாமல் பேசினாள்.
ஆனந்தனோ “நீங்க கிளம்புங்க தம்பி” என்றதும் “நீங்க இருங்க அங்கிள் நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க எதுக்கு வெளியில அலைஞ்சுக்கிட்டு” என ஆனந்தனை நிறுத்தி வைத்துவிட்டு சிற்பிகாவை ஒரு பார்வை பார்த்தவன் சாப்பாடு வாங்கச் சென்றான்.
அமுதவள்ளியோ நாலைந்து முறை சந்தோஷின் போனிற்கு அழைத்துவிட்டார். அவனோ போனை சைலண்டில் போட்டிருக்க போன் அடித்தது அவனுக்கு கேட்காமல் போய்விட்டது. டிபன் வாங்கிவிட்டு காருக்குள் ஏறியவனின் போன் அடித்தது.
போனை எடுத்தவன் “ம்மா இன்னும் ஒரு மணிநேரத்துல வந்துடுவேன் எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிட்டு படுங்க” என்றவன் போனை வைத்திருந்தான்.
சிற்பிகாவின் அறைக்குள் நுழைய அவள் வாஷ்ரூமிலிருந்து வெளியே வந்தாள். காலையில் கேக் வெட்டும்போது பக்கமிருந்தவளை பார்த்தவனின் கண்ணுக்கு புத்தம் புதிதாய் பூத்த ரோஜாவாய் தெரிந்தவள் இப்போது முகம் பொலிவிழந்து வாடிய ரோஜாப்பூ சருகாக இருந்தது.
சந்தோஷை பார்த்ததும் தலையை குனிந்துக் கொண்டாள் சிற்பிகா.
உணவு பார்சலை உமாவிடம் கொடுத்தவன் சிற்பிகாவின் பக்கம் வந்து நின்றவன் “இப்போ மூச்சு விட ஃப்ரீயா இருக்கா?” என்றான் அவளது கண்களை அழுத்தமாக பார்த்தவாறே.
அவன் பக்கம் வந்து நின்றதும் அவன் பேசிய வார்த்தைகள் அவளுக்கு ஞாபகம் வந்தது. மீண்டும் மூச்சு அடைப்பது போல இருந்தது இவன் முன்னே இனி அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு “ம்ம் இப்போ ஓ.கே சார்” என்றவளோ அவனை கடந்துச் சென்று கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டாள்.
அவனுக்கோ ஒருமாதிரியாகிவிட்டது. ஆனந்தனோ சந்தோஷிடம் ஒட்டாத்தன்மையுடன் பேசியது ஏதோ தவறாய் பட்டது. உடம்பு சரியாகட்டும் கேட்டுக்கலாம் என்றிருந்தார்.
சந்தோஷோ நாளைக்கு ஆபிஸ் வருவா அப்போ பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவன் “அங்கிள் நான் கிளம்புறேன்” என்றதும் “சரிப்பா எங்கனால உங்களுக்கு சிரமம்” என்று வருத்தப்பட “பரவாயில்ல அங்கிள் இருக்கட்டும் கூட வொர்க் பண்ணுற பொண்ணுக்கு இந்த உதவி கூட செய்யலைனா எப்படி” என்றான் சந்தோஷ் சிற்பிகாவை பார்த்துக்கொண்டே.
“ஓ நான் கூட வொர்க் பண்ணுற பொண்ணு அவ்ளோதானே” என்று விரக்தியாக பார்த்தாள் சந்தோஷை. ஆம் அது உண்மைதானே என்று அவள் மனசாட்சி கூற அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
சந்தோஷோ மன இறுக்கத்துடன் வெளியேச் சென்றான். அவனுக்கு அங்கிருந்து செல்லவே பிடிக்கவில்லை. ஏனோ அவளுடனே இருக்க வேண்டும் என்று அவன் மனம் முரண்டியது.
6. உறவு
அமுதவள்ளியோ வாசலை பார்த்தபடியே கன்னத்தில் கை வைத்து மகனுக்காக காத்திருந்தார்.
இதுதான் முதல்முறை சந்தோஷ் வீட்டுக்கு தாமதமாக வருவது. காரை நிறுத்தி இறங்கி நடந்து வந்த சந்தோஷை பார்த்தவருக்கு மனம் பக்கென்றிருந்தது. தினமும் காலையில் போட்டிருந்த சட்டை துளி கூட மடிப்பு கசங்காமல் வீட்டுக்கு வரும் மகன் இன்று அவனது தலை முடிகள் கலைந்து போய் முகத்தில் சிரிப்பு இல்லாமல் வெறுமையாக இருந்தது. என்னாச்சு என் பையனுக்கு ஏன் இப்படி வரான் என்று அவரின் மனம் ஏனோ சொல்லொண்ணா வண்ணம் துடித்துப்போனது அமுதவள்ளிக்கு.
“யாருக்கு உடம்பு முடியாம போச்சு! நீ ஏன் இப்படி தலைமுடியெல்லாம் கலைந்து போய் வந்திருக்க!” என்று மகனின் கையை பிடித்துக்கொண்டு கேட்டார் அமுதவள்ளி சிறு பதட்டதுடன்.
சிற்பிகாவிற்கும் தனக்கும் நடந்த ஊடல்களை தவிர்த்து அவளை காப்பாற்றி ஹாஸ்பிட்டலில் சேர்த்து வந்ததாக கூறினான்.
“இப்ப அந்த பொண்ணு எப்படியிருக்கா சந்தோஷ்?” என்று பேசிக்கொண்டே வீட்டுக்குள் வந்தனர்.
“இப்ப சிற்பி நல்லாயிருக்காமா! ஒரே கசகசனு இருக்கு நான் குளிச்சிட்டு வந்துடறேன்! இரண்டு தோசை மட்டும் சுட்டு வைங்க!” என்று தன் அறைக்குள் நுழைந்தவன் டவலை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றான்.
எப்பவும் தன்னிடம் நிறைய பேசும் மகன் இன்றோ அதிகம் பேசவில்லையே என்று அமுதவள்ளி மனம் மருக துவங்கியது. இல்லை என் மகன் அப்படியில்லை எப்பவும் போலத்தான் இருக்கான். நான் ஏதோ குழம்பி போய் தவறா நினைக்கிறேன் என்று தன் மனதை ஆறுதல்படுத்திக்கொண்டு சமையல்கட்டுக்குச் சென்று தோசை வார்க்க ஆரம்பித்தார்.
“சிற்பினு கூப்பிட்டானே அந்த பொண்ணு முழுபேரு என்னவா இருக்கும் இவன் புது பேங்குக்கு போய் ஒருவாரம் கூட ஆகலையே அதுக்குள்ள செல்லப்பேரு வைச்சு கூப்பிடற அளவுக்கு அந்த பொண்ணு கூட நெருக்கமா பழகியிருக்கானா!” என்று பலவாறு அமுதவள்ளி மூளையை கசக்கிக்கொண்டிருந்தார்.
களைப்பு தீர குளித்து வந்தவன் “ம்மா டிபன் ரெடியா?” என்று கேட்டுக் கொண்டு சமையல்கட்டுக்குள் வந்து அங்கிருந்த திண்டில் ஏறி அமர்ந்ததும் “இதோ தோசை ரெடி” என்று கல்லில் சூடாக இருந்த தோசையை தட்டில் போட்டுக்கொடுத்தார்.
தோசையை சாப்பிட்டுக்கொண்டே “ம்மா என்னாச்சு உங்க முகம் சரியில்லையே உடம்பு சரியில்லையா! என்று அமுதவள்ளியின் நெற்றியை தொட்டுப்பார்த்தான்.
“நான் நல்லாத்தான் கண்ணா இருக்கேன நாளைக்கு பொண்ணு பார்க்க போறோம்ல! வெறும் கையோடு எப்படி போவதுனு அந்த பொண்ணுக்கு பட்டுச் சேலை எடுக்க போயிருந்தேன் கடையில கொஞ்சம் கூட்டம் அதான்!” என்று ஏதோ பேசி சமாளித்தார்.
“ஏன் நீங்க அலையுறீங்கம்மா எனக்கு போன் பண்ணி சொல்லியிருந்தா நான் எடுத்துட்டு வந்திருப்பேனே” என்றான் அவசரமாக.
“இல்லப்பா எனக்கு எப்பவும் முன்கூட்டியே தயார் செய்து வைத்து பழக்கம் அதான் நீ சாப்பிட்டு படுக்கப்போப்பா காலையில நேரமே பொண்ணு வீட்டுக்கு கிளம்பணும்” என்றார் அமுதவள்ளி.
“உங்களுக்கு உடம்பு சரியில்லைனா நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகலாம்! பொண்ணு பார்க்க இன்னொரு நாள் போலாமே” என்றான் சந்தோஷ் தாய்க்கு உடம்பு முடியவில்லை என்றதும் கவலை வந்தது அவனுக்கு.
“என்ன சந்தோஷ் பேசுறே முதன் முறை பொண்ணு பார்க்க போவது தடங்கல் இருக்க கூடாதுப்பா! நான் நல்லாத்தான் இருக்கேன் தூங்கி எழுந்தா சரியாகிடுவேன்! நீ போய் பர்ஸ்ட் தூங்கு போ” என்று செல்ல அதட்டல் போட்டார்.
“ம்மா உங்களை தவிர எனக்கு யாரும் முக்கியம் கிடையாது சரியா! நாளன்னைக்கு பொண்ணு பார்க்க போனா பொண்ணு எங்கயும் ஓடியா போக போறா” என்று அமுதவள்ளியிடம் பொய் கோபம் கொண்டான் சந்தோஷ்.
“நாளைக்கு இடியே விழுந்தாலும் பொண்ணு பார்க்க போறோம் அவ்ளோதான் சரியா” என்றவரை “உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுமா” என்று அமுதவள்ளியை முறைத்து பார்த்தான் சந்தோஷ்.
மகன் பேசியதை பொருட்டாக எண்ணாமல் “ஆமா தம்பி நீ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனியே அந்த பொண்ணு முழுபேரு என்னனு சொன்ன” என்றார் மெதுவாக.
“சிற்பிகாம்மா ஏன் கேட்குறீங்க?” என புருவம் சுருக்கி கேட்டான்.
“இல்ல சிற்பினு சுருக்கமா சொன்னியே உனக்கு அந்த பொண்ணை ஏற்கனவே தெரியுமா?” என்றார் மகனின் முகத்தை பார்த்துக்கொண்டே
“சிற்பிகானுதானே சொன்னேன்” என்றான் நெற்றியை தடவிக்கொண்டே ‘ஓ.காட் அம்மாகிட்ட இப்படியா பேசி வைப்பேன்’ என்று பெரும்மூச்சுவிட்டு “எனக்கு டயர்டா இருக்குமா நான் தூங்கப்போகட்டுமா?” என்றதும்
“ஓ சாரிப்பா டயர்டா வந்த பையனை நிக்க வைச்சு கேள்வி கேக்குறேன் பாரு நான் மடைச்சி நீ கிளம்பு” என்று மகனை அறைக்கு அனுப்பி வைத்தார் அமுதவள்ளி.
அறைக்குள் வந்த சந்தோஷோ ‘அம்மா நம்மை ஏதும் தப்பா நினைச்சிருப்பாங்களா. அதான் முகம் ஒரு மாதிரி வருத்தமா இருந்துச்சா! இப்படியா அம்மா முன்னால அவளை சிற்பினு கொஞ்சி வைப்ப’ என்று குழம்பியபடி கட்டிலில் படுத்துக்கொண்டவன் கண்களை மூடினான்.
சிறிது நேரத்தில் “சந்தோஷ் ஐ.லவ்.யு” என்று சிற்பிகாவின் குரல் அவன் காதில் கிண்கிணி மணி போல ஒலித்தது.
சட்டென்று கண்விழித்தான் சந்தோஷ் ‘ஏய் என் மனசை கொல்றடி சில்வண்டு இந்த பேங்கிற்கு நான் ஏன் வந்து ஜாயின் பண்ணினேனு ரொம்ப வருத்தப்படறேன்’ என்றவனுக்கு தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்தான்.
சிற்பிகா சந்தோஷின் மண்டைக்குள் வண்டாக புகுந்து குடைந்துக் கொண்டிருந்தாள். அவன் மனதில் காதல் இல்லை. ஆனால் அதற்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் சிற்பிகா அவனை படுத்திக்கொண்டிருந்தாள்.
“நான் அவளை காதல் செய்கிறேனா? அச்சோ அம்மாவுக்கு செய்து கொடுத்த வாக்கு ஆ ஆ!” என்று மண்டையை பிடித்துக்கொண்டான். மாத்திரை எடுத்து போட்டுக்கொண்டு படுத்தான் சந்தோஷ்.
எப்படி கண்ணயர்ந்தானோ தெரியவில்லை விடியற்காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்பவன் இன்றோ ஆழந்த உறக்கத்தில் இருந்தான்.
அமுதவள்ளியோ குளித்து பூஜையை முடித்து வந்து சந்தோஷின் அறைக்கு வந்தார். மகன் இன்னும் உறங்கிக்கொண்டிருக்க ‘இவ்ளோ நேரம் தூங்கமாட்டானே உடம்பு சரியில்லையோ! நேத்து முழுக்க என் மகனுக்கு ஒரே அலைச்சலா இருந்திருக்கும். கூட வேலை செய்யுற பொண்ணுக்கு உடம்பு முடியலைனா அவங்க பேரண்ட்ஸ்க்கு போன் செய்து வரச்சொல்லி பார்க்க வேண்டியது தானே! இப்போ பாரு அசதியா தூங்குறான் பொண்ணு பார்க்க நேரமே கிளம்பணும் இவன் இன்னும் தூங்கிட்டிருக்கானே’ என்று சலித்துக்கொண்டு “கண்ணா சந்தோஷ் எழும்புப்பா நேரமாச்சு” என்றார் சந்தோஷின் தோளை தட்டி.
“ம்ம்” என்று உறங்கிக்கொண்டே இருந்தான். ‘பாவம் அசதியா தூங்குறான்’ என்று மகனின் தலையை கோதிவிட்டு நாம போய் தாம்பூலம் ரெடிபண்ணலாமென்று கிளம்பிவிட்டார் அமுதவள்ளி.
மெதுவாக கண்விழித்தவனோ “ரொம்ப நேரம் தூங்கிட்டோம்” என்று அவசரமாக எழுந்தவன் குளித்து கிளம்பி வந்து வழக்கம் போல பார்மல் ட்ரஸில் கிளம்பி வந்தான்.
அமுதவள்ளியும் ஆனந்தனும் ரெடியாகி இருந்தனர். “சாரிமா அசந்து தூங்கிட்டேன் நேரமாகிடுச்சா?” என்று கையில் இருந்த காப்பை திருகிக்கொண்டே கேட்டான்.
“இல்லப்பா இன்னும் பத்துநிமிசம் இருக்கு அதுக்குள்ள கிளம்பிடலாம்” என்றவரோ “உனக்கு குடிக்க சத்துமாவுகஞ்சி எடுத்துட்டு வரேன்” என்று சமையல்கட்டுக்குள் சென்றவர் கையில் போட்டு வைத்த கஞ்சியை எடுத்து வந்து கொடுக்க “தேங்க்ஸ்மா” என்று கஞ்சியை குடித்து முடித்து “கிளம்பலாமா?” என்று ஹாங்கரில் இருந்த கார் கீயை எடுக்க டிவியில் சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்ன தாமரையே! மொட்டுக்குள் ஒரு மொட்டு மலர்ந்தது மோகப் பூங்கொடியே என்று கமல் நடித்து இளையராஜா ம்யூசிக்கில் பாட்டு ஓடிக்கொண்டிருக்க சந்தோஷின் கவனம் டிவியில் பதித்தது. சிற்பிகா சந்தோஷ் கண் முன்னே வந்தாள் அவள் சொன்ன ஐ லவ் யூ அவனுக்கு ஞாபகம் வந்து அவனை தொல்லை பண்ணியது.
அமுதவள்ளியோ மகனை கண்டிக்க முடியாமல் “இப்போ பொண்ணு பார்க்க போற நேரத்துல டிவி உங்களுக்கு ரொம்ப அவசியமோ டிவியை ஆப் பண்ணுங்க” என்றார் கடுகடுப்பான குரலில்
சண்முகமோ “இதோ ஆப் பண்ணிட்டேன்” என்று டிவியை ஆப் செய்து விட்டு “நான் ரெடிப்பா” தோளில் கிடந்த துண்டை சரிசெய்தார்.
அமுதவள்ளி தாம்பூலத்தட்டோடு வெளியே போக கார் கதவை திறந்து விட்ட சந்தோஷோ “ஒரு நிமிசம் வெயிட் பண்ணுங்கம்மா” என்றவன் கொஞ்சம் தள்ளிச் சென்று ஆனந்தன் மொபைலுக்கு அழைத்தான்.
அப்போதுதான் சிற்பிகாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தனர்.
“அங்கிள் சிற்பி இப்போ எப்படி இருக்காங்க?” என்றான் ஒரு வித பதட்டத்தோடு அக்கறையாக.
“ம்ம் அவ நல்லாயிருக்கா தம்பி இன்னிக்கு ஒருநாள் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு ஆபிஸ் வந்துருவா” என்றதும்
“ஓ.கே ஓ.கே அவ இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வரட்டும்னு சொல்லத்தான் போன் செய்தேன் அங்கிள்” என்றான் மெல்லிய புன்னகையுடன்.
“நன்றி தம்பி” என்று சொல்லிக் கொண்டிருக்க “யாரு போன்லப்பா?” என்று ஆனந்தன் பக்கம் வந்தாள் சிற்பிகா.
சிற்பிகாவின் குரலை கேட்ட சந்தோஷோ அவளிடம் பேசவேண்டும் என்று தோன்ற “அங்கிள் சிற்பிகிட்ட போனை கொடுங்க” என்றான் இயல்பாக.
“ம்ம் கொடுக்கறேன் தம்பி” என்று கூறியவர் “சிற்பி குட்டி சந்தோஷ் தம்பி பேசுறாரு” என்றதும் அவளோ ‘நான் பேசலைப்பா’ என்று சைகை காண்பித்தாள்.
“ம்ப்ச் பேசுமா” என்று போனை கொடுத்தார்.
‘பொண்ணு பார்க்க போகலையா இந்த நேரம் ஏன் நமக்கு போன் பண்ணனும் ரொம்பத்தான் அக்கறை’ என்று சலித்துக்கொண்டு போனை வாங்கியவள் “சார்” என்றாள் மெதுவாக.
“ம்ம் ஏன் என்கிட்ட பேச விருப்பம் இல்லையா சிற்பி?” என்றான் குரலை உயர்த்தி.
“அப்படியில்லை சார் இன்னிக்கு நீங்க பொண்ணு பார்க்க போறீங்க உங்களை நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பலை” என்று அழுத்திச் சொன்னாள்.
“எனக்கு டிஸ்டர்ப் எல்லாம் இல்லை நாம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போன பொண்ணு இப்ப எப்படியிருக்கானு தெரிஞ்சுக்கத்தான் போன் செய்தேன். நீ இப்ப நல்லா பேசுறியே நான் போனை வைக்குறேன் பொண்ணு பார்க்க கிளம்பணும்” என்று போனை வைக்க போக அவ்ளோதானே சந்தோஷ் என்று மனதில் மருகியவளுக்கு விசும்பல் வந்தது அவள் விசும்பல் குரல் கேட்டுவிட்டது சந்தோஷிற்கு.
“சிற்பி லைன் இருக்கியா?” என்றதும்
“நா…நான் போனை வைச்சுடறேன்” என்றவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. போனை உடனே கட்செய்து விட்டவளுக்கு கண்ணீர் நிற்கவில்லை. உமா அவள் பக்கம் வர கண்ணீரை துடைத்துக்கொண்டு இயல்பாக முகத்தை வைத்துக்கொண்டாள்.
சந்தோஷ்ஷிற்கு அவள் அழுகுரல் அவன் மனதை வாள் கொண்டு அறுத்தது போல இருந்தது. உடனே மறுபடியும் கால் செய்ய அவளோ போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு பொண்ணு பார்க்க போறவரு எதுக்கு சும்மா நொய் நொய்னு போன் பண்ணனும் என்று இதழை சுளித்து காரில் ஏறிக்கொண்டு கண்ணை மூடி அமர்ந்தாள்.
சந்தோஷ் “என்னப்பா யாருகிட்ட போன் பேசுற நேரமாச்சு வா” என்று சந்தோஷின் தோளை தொட்டார் அமுதவள்ளி.
“ம்ம் கிளம்பலாம் வாங்க” என்று காரில் ஏறியவனுக்கு மனமெல்லாம் சிற்பிகாவை சுற்றியே வந்தது. மகனின் முகம் சரியில்லையே என்று கவலை வந்தது அமுதவள்ளிக்கு.
அமுதவள்ளியின் அண்ணா ராமு வீட்டில் ஆண்களும் பெண்களும் கலகலப்பாக சிரித்து பேசிக் கொண்டு முன்னே நின்றுக் கொண்டிருந்தனர். காரிலிருந்து தாம்பூலத்துடத்துடன் முகம் கொள்ளா புன்னகையுடன் இறங்கினார் அமுதவள்ளி. தன் சொந்தத்தில் பெண் கிடைத்து விட்டது என்று அகம் மகிழ்ந்து போனார்.
“வாங்க! வாங்க!” என்று சண்முகத்தையும் அமுதவள்ளியையும் கைகூப்பி வரவேற்றார்கள் ராமுவும் அவரது பங்காளி வீட்டினரும்.
சந்தோஷோ காரிலிருந்து இறங்கி காரை லாக் செய்து மாப்பிள்ளை மிடுக்காக கம்பீரமாக நடந்து வந்தவனை ஜன்னல் வழியே பார்த்த சில பெண்கள் அலங்காரம் செய்து ரெடியாக அமர்ந்திருந்த திவ்யாவிடம் “ஏய் மாப்பிள்ளை சும்மா அந்த காலத்து அரவிந்த்சாமி போல நல்ல சிவப்பா சும்மா ஜம்முனு ஹான்ட்சமா இருக்காருடி” என்று திவ்யாவின் காதில் சொல்ல.
அவளோ “அப்படியா” என்றாள் சுரத்தை இல்லாத குரலில். திவ்யாவிற்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லை. அவள் ஒருவனை விரும்பிக்கொண்டிருக்கிறாள் வேற யாரும் அல்ல திலீப்தான் திவ்யாவின் காதலன்.
திலீப்பை காதலிப்பதை ராமுவிடம் திவ்யா சொன்னதும் “ஒண்ணும் இல்லாத அன்னக்காவடி பயலுக்கு நான் உன்னை கொடுக்கணுமா நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் அப்பனை உயிரோட பார்க்க முடியாது” என்று மிரட்டி திவ்யாவை பேசவிடாமல் ஆஃப் செய்து விட்டார்.
ஹாலில் விரிக்கப்பட்ட ஜமுக்காளத்தில் தாம்பூலத்தை வைத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்திருந்த சண்முகம் பக்கத்தில் உட்கார்ந்தார் அமுதவள்ளி. சந்தோஷ் தனியாக இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தான். “மாப்பிள்ளை பேங்குல மேனேஜராம்” என்று பெரிசுகள் இரண்டு குசுகுசுவென பேசிக்கொண்டனர்.
“பொண்ணை வரச்சொல்லுங்க நல்ல நேரம் போகுதுல்ல” என்றார் அமுதவள்ளி.
திவ்யாவை அழைத்து வந்தார் அவளுக்கு அத்தை முறைப்பெண் திவ்யாவின் அம்மா சிறுவயதில் இறந்துவிட தாய்க்கு தயாய் இருந்து வளர்த்தார் ராமு. திவ்யா தன்னை பொண்ணு பார்க்க வராங்க என ராமு சொன்னதும் தன் மேல கொண்ட பாசத்தால் தான் அவரை எதிர்த்து பேச முடியாமல் இருந்தாள்.
திவ்யா காபி ட்ரேயுடன் வந்தவள் முதலில் அமுதவள்ளியின் முன்னே நின்றவள் “எடுத்துக்கோங்க” என்றவள் ‘கடவுளே மாப்பிள்ளை என்கூட பேசணும்னு சொல்லணும்’ என்று கடவுளை வேண்டிக்கொண்டிருந்தாள்.
அடுத்து சண்முகத்திற்கு காபியை கொடுத்துவிட்டு சந்தோஷின் முன்னே நின்று “காபி எடுத்துக்கோங்க” என்றாள் மெதுவாக.
“ம்ம்” என்று மெல்லிய புன்முறுவலுடன் காபியை குடித்தான்.
“என்ன மாப்பிள்ளை பொண்ணை பிடிச்சிருக்கா?” என்றார் பொண்ணு வீட்டு சைடு பங்காளி ஒருவர்.
“நான் பொண்ணுகிட்ட பேசிட்டு சொல்லுறேன்” என்றதும் திவ்யாவோ ‘கடவுளே பிள்ளையாரப்பா என் வேண்டுதலை நிறைவேத்திட்ட நான் நூறு தேங்காய் உடைக்கிறேன்’ என்று வேண்டிக்கொண்டு சந்தோசப்பட்டாள்.
“இந்த காலத்துல பொண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கிறது சகஜம் தான்” என்றார் வயதில் மூத்த பெண்மணி.
“திவ்யா மாப்பிள்ளையை மொட்டைமாடிக்கு கூட்டிட்டு போமா” என்றார் ராமு மகளை பார்த்து
“ம்ம்” என்றவள் மெல்ல நடந்து மொட்டைமாடிக்குச் சென்றாள்.
அமுதவள்ளியை பார்த்து “பேசிட்டு வரேன்மா” என்று சொல்லி திவ்யாவின் பின்னேச் சென்றான் சந்தோஷ்.
மொட்டைமாடியில் காற்றில் அசைந்த முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு சந்தோஷ் அவள் அருகே வந்து நின்றதும் “அண்ணா எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை. எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திடுங்க” என்று சோகமாய் கையெடுத்து கும்பிட்டாள். திவ்யா பேசியது கண்டு சந்தோஷுக்கோ ஷாக்காகி சிரிப்பும் வந்துவிட்டது. இப்போது அவன் மனதில் ஏனோ நிம்மதி அலை பரவியது.
“ஏதே அண்ணாவா முதன் முதல் பொண்ணு பார்க்க வந்தவனை அண்ணானு கூப்பிட்ட முதல் பெண் நீயாத்தான் இருக்கணும்மா” என்று வாய் விட்டு சிரித்தவன் “யாரை லவ் பண்ணுற?” என்றான் இப்போது உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
சரியாய் கணித்து விட்டானே என்ற மகிழ்ச்சியுடன் தன் போனில் திலீப்புடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை காட்டி “இவரை தான் லவ் பண்ணுறேன் அண்ணா! இவங்க வசதி நம்மளை விட குறைவு அதான் அப்பா இவன் வேண்டாம்னு சொல்லி உங்களை பொண்ணு பார்க்க வரச்சொல்லிட்டாரு! ப்ளீஸ் அண்ணா உங்களை பார்த்தா நல்லவரா தெரியுது என் லவ்வுக்கு நீங்கதான் உதவி செய்யணும்” என்றாள் கையை பிசைந்துக் கொண்டு.
“என்னை பார்த்தா நல்லவன்னு நெத்தியில எழுதி ஒட்டி இருக்கா” சந்தோஷ் அவளை முறைத்தான்.
“உங்களை தவிர யாரும் எனக்கு உதவி பண்ண முடியாது ப்ளீஸ் அண்ணா” என அழுது விடுபவள் போல பேசினாள்.
“சரி நான் உனக்கு உதவி செய்யுறேன் ஆனா இப்ப எனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்குனு சொல்லிடு நான் பார்த்துக்குறேன்” என்றான் நெற்றியை தடவிக்கொண்டு.
“அண்ணா என்ன சொல்றீங்க திலீப்பும் நானும் பாவம்” என்றாள் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு.
“இப்ப போய் நான் பொண்ணை பிடிக்கலைனு சொன்னா பெரியவங்க உஷாராகிடுவாங்க! ஒரு வாரத்துல உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுறேன் போதுமா தங்கச்சி” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“தேங்க்ஸ் அண்ணா” என்று சந்தோஷின் கையை பிடித்துக்கொண்டாள்.
இருவரும் கீழே வந்து பிடிச்சிருக்கு என்று சொல்லிவிட்டனர்.
தாம்பூலம் மாத்திக்கொண்டு அடுத்த மாசம் நல்ல முகூர்த்தம் நிறைய இருக்கு அதில் வளர்பிறை முகூர்த்ததுல வச்சிக்கலாம் என்று பெரியவர்கள் பேசி முடிவெடுத்தனர்.
“பரிசம் போட்டாச்சு பொண்ணையும் மாப்பிள்ளையும் சேர்ந்து சாப்பிட உட்கார வைங்க” என்று திவ்யாவின் அத்தை முறை பெண் சொல்ல சந்தோஷும் திவ்யாவும் சேர்ந்து உட்கார்ந்தனர்.
ரெண்டு பேர் ஜோடிப்பொருத்தம் நல்லாயிருக்கு என்று சந்தோசப்பட்டார் அமுதவள்ளி.
திவ்யாவின் முகத்தில் சிரிப்பு மறைந்திருப்பதை கண்டவருக்கு சந்தேகம் உதித்தது. சாப்பிட்டு விட்டு ராமுவிடம் சென்றவர் “அண்ணா பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்குதானே ஏன் திவ்யா முகத்துல கல்யாண பொண்ணுக்கான சந்தோசமே இல்லை!” என்றார் சந்தேகத்துடன்.
“அ.அது அவளுக்கு கூச்சம் சுபாவம் மா மத்தபடி அவளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம்தான்” என்று சமாளித்தார்.
“ஓ.சரிங்கண்ணா கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை நல்ல நாள் அப்போவே எடுத்துக்கலாம் அண்ணா போன் பண்ணுறேன் நாங்க கிளம்புறோம்” என்று கூறிவிட்டு ராமுவின் சொந்தத்துடன் பேசிக்கொண்டிருந்த சண்முகத்திடம் வந்த அமுதவள்ளியோ “கிளம்பலாமாங்க சந்தோஷ் ஆபிஸ் கிளம்பணும்னு சொல்லி இருக்கான்” என்றதும் “ம்ம் போகலாம்” என்றவர் “அப்போ நாங்க வரோம் சம்பந்தி” என்று கிளம்பி வாசலுக்கு வந்தனர்.
சந்தோஷோ போனில் மெயின் பிரான்ச் மேனேஜரிடம் பேசிவிட்டு வந்தவன் ராமுவிடம் “நாங்க கிளம்புறோம் அங்கிள்”
என்று கையெடுத்து கும்பிட்டான்.
“சந்தோஷம் மாப்பிள்ளை” என்று அவரும் கையெடுத்து கும்பிட்டவர் “திவ்யாமா மாப்பிள்ளை கிளம்புறாரு அவருக்கு சிரிச்ச முகத்தோடு கையை ஆட்டு” என்றதும் அவளும் கையை ஆட்டினாள் மகிழ்ச்சியுடன்.
ராமுவின் பக்கம் நின்ற திவ்யாவை சந்தோஷ் பார்க்க அவளோ சிரித்த முகத்துடன் கையை அசைத்தாள். சந்தோஷும் சிறு இதழ்விரிப்புடன் தலையசைத்து போய்ட்டு வரேன் என்று உதடசைச்சு காரில் ஏறினான்.
அமுதவள்ளிக்கு திவ்யா சந்தோஷை பார்த்து தலையசைத்து சிரித்ததும் பூரிப்பாகி திவ்யா பக்கம் சென்றவர் அவளது கையை பிடித்து “மருமகளே உனக்கு என்ன வேணும்னாலும் அத்தைக்கு போன்போடு” என்றவர் அவளது மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டார்.
“சரிங்கத்தை” என தலையை ஆட்டினாள்.
“போய்ட்டு வரோம்மா” என்று திவ்யாவின் கன்னத்தை தட்டிச் சென்றார் அமுதவள்ளி.
7. உறவு
சிற்பிகாவோ சந்தோஷ்க்கு இந்நேரம் கல்யாணம் பேசி முடிவாகியிருக்கும். இனி எனக்கு அவன் சொந்தமில்லையே தன் கையிலிருந்த பொருள் நழுவி போய்விட்டது என்று அழுது அழுது கண்கள் தலையணை நனைந்தது தான் மிச்சம் கண்கள் சிவந்து வீங்கி போயிருந்தது.
ஹாஸ்பிட்டலிருந்து வீட்டுக்கு வந்த சிற்பிகாவோ குளித்து வந்தவளை சாப்பிடச் சொன்னார் உமா. “எனக்கு பசியில்ல அப்புறம் சாப்பிட்டுக்குறேன் நீங்க கார்மென்ட்ஸ் கிளம்புங்க” என்றவள் தன் அறைக்குள் சென்றுவிட்டார்.
கார்மென்ட்ஸ்க்குச் சென்றிருந்த ஆனந்தன் வந்ததும் “உங்க செல்லப் பொண்ணு சாப்பிடமாட்டேனு போய் படுத்துக்கிட்டா என்னனு கேளுங்க” என்று கோபமாய் சொல்ல
“சாப்பாடு போட்டு எடுத்துட்டுவா உனக்கு பொண்ணுகிட்ட பேசத்தெரியலை” என்று சிடுசிடுத்தார் ஆனந்தன்.
“ஆமா ஆமா எனக்கு பேசத்தெரியாதுதான் வயிறு காய்ஞ்சா தன்னப்போல சாப்பிடப்போறா எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம்தான்” என்று சலித்துக்கொண்டு சாப்பாடு போட்டு எடுத்து வந்து ஆனந்தன் கையில் கொடுத்தார்.உமாவுக்கும் மகள் சாப்பிடவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்தது. மகளை சரியாக வளர்க்கவில்லையென்று நாளை அவள் வாழப்போகும் வீட்டில் தன்னைத்தானே குறைசொல்வார்கள் என்ற கவலை அவருக்கு மனம் தாங்காமல் பேசிவிட்டார் மகளை.
கதவ திறக்கும் சத்தம் கேட்டு கண்ணைத்துடைத்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள் சிற்பிகா.
“ஏன் டா பசிக்கலனு வந்துட்டியாமே நீ நேரத்துக்கு சாப்பிட்டிருப்பியே டா” என்றவர் மகளின் முகத்தை ஆராய்ந்தார் அவள் அழுது கண்வீங்கியிருந்தது.
“என்னடா ஏன் அழுதிருக்க அந்த சந்தோஷ் தம்பிகிட்ட உன் லவ்வை சொல்லிட்டியா? சந்தோஷ் ஏதாவது உன்கிட்ட ஹார்ஷா பேசிட்டாரா?” மகள் அழுதிருக்கும் காரணம் தெரியாமல் தவிப்புடன் கேட்டார் ஆனந்தன்.
“ப்பா அவரு என்னை விரும்பலையாம்பா இன்னிக்கு அவரு பொண்ணு பார்க்க போயிருக்காரு” என்று வெடித்து அழுத மகளை அணைத்துக்கொண்டார் ஆனந்தன்.
“அழாதடா ராஜாத்தி நீ அழறது பார்க்கற சக்தி எனக்கில்லைடா அவனுக்கு நீ மனைவியா கிடைக்க கொடுத்து வைக்காம போயிடுச்சு. ஆனா உன் லவ் சக்ஸஸ் ஆகும்னு என் ஆழ் மனசு சொல்லுதுடா! என் செல்லப்பொண்ணு அழாத உடம்பு வீக்கா போயிடும்!” என்று முதுகை தடவிக்கொடுத்தார் ஆனந்தன்.
“எப்படிப்பா சொல்றீங்க என் லவ் சக்ஸஸ் ஆகும்னு அவங்க அம்மா சொல்ற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவாராம்” என்றாள் இதழ்பிதுக்கி.
“உன்னை பிடிக்கலைனு சொன்னாரா சந்தோஷ் தம்பி!” என்றார் மகளை தோளோடு அணைத்தபடியே.
“இல்லப்பா அப்படியெல்லாம் அவரு சொல்லவேயில்லை! பொண்ணு பார்க்குற வரைக்கும் போயாச்சு எப்படி ப்பா நான் அவரை லவ் பண்ண முடியும்? இன்னொரு பொண்ணுக்கு சொந்தமாக போறவரை என்னால எப்படி நினைக்க முடியும். ஆனா என்னால அவரை மறக்கவே முடியாது” என்று குலுங்கி அழுதாள் ஆனந்தனின் நெஞ்சில் சாய்ந்தபடியே.
“நான் சந்தோஷ் அம்மாகிட்ட போய் பேசி உன்னை சந்தோஷ் வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைக்குறேன்டா என்பொண்ணுக்காக நான் இதுகூட செய்யலைனா என்ன அப்பா நான்!” என்று மகளை சமாதானம் செய்தார்.
“வேண்டாம்ப்பா நீங்க யார் வீட்டுக்கும் போக வேண்டாம் சந்தோஷ் பெரிய பணக்காரர்னு இன்னிக்குத்தான் எனக்கு தெரிஞ்சுது. நீங்க அங்க போனா உங்களை மதிப்பாங்களோ என்னவோ! என் காதலுக்காக நீங்க உங்க தன்மானத்தை இழக்க வேண்டாம்!” என்றாள் கண்ணீரைத்துடைத்துக்கொண்டு
“சரிடா பார்த்துக்கலாம் இப்போ சாப்பிடு” என்று தட்டை எடுத்து சாப்பாட்டை ஊட்ட அவளுக்கு சாப்பாட ஒருவாய் கூட இறங்கவில்லை. தந்தைக்காக சாப்பிட்டு முடித்தாள்.
“நான் தூங்குறேன்ப்பா நீங்க கார்மென்ட்ஸுக்கு கிளம்புங்க” என்றதும் “நீ கவலைப்படாம இருடா அப்பா உன் காதலுக்காக போராடுவேன்” என்று மீண்டும் ஆரம்பிக்க “நான் கவலைப்படலப்பா நீங்க கிளம்புங்க” என்று தந்தைக்காக சிரிக்க முயன்றாள்.
சிற்பிகா கட்டிலில் படுத்து கண்ணை மூடிக்கொண்டதும்தான் அங்கிருந்து கிளம்பினார் ஆனந்தன்.
ஆனந்தன் சென்றதும் கண்ணைதிறந்துக் கொண்டாள் சிற்பிகா.
‘என்னோட காதலை இன்னிக்கோட நான் மறந்துடவேண்டியதுதானா! எப்படி மறப்பேன் என் நெஞ்சுல உன்னை பச்சை குத்து வச்சிருக்கேனேடா! என் உசிரு இருக்கும் வரை உன்னை மட்டும்தான் நினைச்சிட்டேயிருப்பேன்! நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கோ! ஆனா நான் உன்னோட நினைவிலேயே வாழ்ந்துடுவேன்டா! கனவுல பார்த்தவன் என்றாவது ஒரு நாள் நேரில் வரமாட்டானா! அவனுடன் பேசமாட்டேனானு எத்தனை நாள் கனவு கண்டிருப்பேன் தெரியுமா. இப்போ என்னோட கனவுகள் அப்படியே மாயமாய் மறந்துவிடணுமா! வேறொருத்திக்கு சொந்தமானவனை என்னால பார்க்கவே முடியாது! நாளைக்கு நான் பேங்குக்கு போகமாட்டேன். இல்ல! இல்ல! பேசாம நான் வேலையை ரிசைன் பண்ணிடுறேன். நீ சந்தோஷமா இரு சந்தோஷ். உன்னையும் தப்பு சொல்லமுடியாது! ஒருத்தர் மேல காதலை திணிக்கக் கூடாது. பழம் தானாக கனிந்து வரும்போது தான் ருசி தரும். அதுபோல என்மேல உனக்கு காதல் இல்லையென்ற போது நான் மட்டும் என்னை லவ் பண்ணு பண்ணுனு சொல்றது எந்த விதத்துல நியாயம். கட்டாயக் காதல் வாழ்க்கைக்கு இனிப்பு தராது. ஆனா நான் உன்னை நினைச்சிக்கிட்டே இருந்துடுவேன்டா’ என பலவாறு மூளைக்குள் யோசித்து மருகிக்கொண்டிருந்தாள் பாவை.
திவ்யா தன்னை பொண்ணு பார்க்க வராங்க என்ற விசயத்தை திலீப்பிடம் போனில் கவலையுடன் சொல்ல. அவனோ “பொண்ணுதானே பார்க்க வராங்கடி பார்த்துக்கலாம் விடு! நான் கூப்பிட்டா நீ உடனே வந்துடுவதானே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம். அப்போ நம்மை யாராலும் பிரிக்கமுடியாது நீ கவலைப்படாதடி” என அவளுக்கு நம்பிக்கை கொடுத்தான் திலீப்.
“அச்சோ அப்பாவோட பெயருக்கு நான் களங்கம் வரவிடமாட்டேன்டா! வீட்டுக்கு தெரியாம போய் கல்யாணம் பண்ணவேணாம்! நீ வந்து பொண்ணு கேளு ப்ளீஸ்! நானும் அப்பாகிட்ட கெஞ்சி கேட்குறேன்” என்றாள் பரிதவிப்பாக.
“ஏய் உங்கப்பா என்னை பார்த்தாலே ஏதோ தீண்டத்தகாதவனை போல பார்க்குறாரு! இந்த லட்சணத்துல நான் உங்க வீட்டுப்படியேறி பொண்ணு கேட்க வரணுமா!” என்று எரிச்சலாக பேசினான்.
“எனக்கு தெரியாது நாளைக்கு நீ எங்க வீட்டுக்கு வா” என்று போனை வைத்திருந்தாள் திவ்யா.
“சரி வரேன்” என்று போனை வைத்த திலீப் அடுத்த நாள் காலையில் தைரியத்தை வரவழைச்சு திவ்யா வீட்டுக்கு போகும் சமயம் பொண்ணு பார்க்கும் நிகழ்வு முடிந்து ராமுவிடம் “நாங்க கிளம்புறோம்” என்று கையெடுத்து கும்பிட்ட சந்தோஷை பார்த்தவன் பிரேக் அடித்தது போல் சட்டென்று நின்றுவிட்டான் திலீப்.
“சிற்பிகா சந்தோஷ் சார்கிட்ட நேத்து லவ் சொன்னாளா என்னவோ தெரியலையே! அச்சோ நேத்து என்ன நடந்துச்சுனு சிற்பி என்கிட்ட போன் கூட பண்ணி சொல்லலையே! நான் எப்படியும் திவ்யாவை மேரேஜ் பண்ணிடுவேன் ஆனா சிற்பிகா பாவம்” என்று வருந்தியவன் திவ்யாவின் வீட்டுக்குச் சென்றான். நேற்றிரவு நடந்த கலவரங்கள் திலீப்பிற்கு தெரியாமல் வைத்திருந்தாள் சிற்பிகா.
சிற்பிகாவோ தூக்கம் வராமல் பால்கனியில் நின்றுக் கொண்டிருந்தாள். திலீப் வருவதை கண்டு தன் மன வருத்தத்தை அவனிடம் சொல்லக்கூடாது என்று முடிவெடுத்து முகத்தை சிரித்தாற் போல வைத்துக்கொண்டாள். ஆனால் அவன் கண்டிப்பாக நேற்று சந்தோஷிடம் காதலை சொன்னியானு கேட்டா என்னால திலீப்கிட்ட நடந்ததை சொல்லாம இருக்க முடியாதே என்று நினைத்துக்கொண்டிருக்க திலீப் வீட்டுக்குள் வந்துவிட்டான்.
மதிய சமையலுக்கு கீரை ஆய்ந்துக் கொண்டிருந்த உமாவோ திலீப்பை பார்த்ததும் “வாப்பா சிற்பிகா ரூம்குள்ள தான் இருக்கா அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல போய் பாரு” என்று அவனை அனுப்பி வைத்தார் உமா.
சிற்பிகா, திலீப் இருவரும் நண்பர்களாக இருக்க சிற்பிகாவின் அறைக்கு தைரியமாக அனுப்பி வைப்பார்கள் ஆனந்தனும், உமாவும்.
திலீப் சிற்பிகாவின் அறைக்குள் நுழைந்ததும் “வா திலீப் என்ன இன்னிக்கு பேங்குக்கு போகலையா? நானும் லீவு போட்டிருக்கேன் நீ போகாம இருந்தா வேலை நின்னு போயிடுமே!” என்றாள் இயல்பாக.
அவனோ “நேத்து என்ன நடந்துச்சுடி! நீ அந்த சிரிக்காதவன் சந்தோஷ்கிட்ட உன் லவ்வை சொல்லிட்டியா! அவன் என்ன சொன்னான்! உன் முகமே சரியில்லையே பத்து நாள் காய்ச்சல்ல படுத்தவ போல இருக்க” என்று சிற்பிகாவிடம் நண்பனாக நினைத்து தன்னிடம் எதுவும் சொல்லாமல் விட்டாளே என்ற கடுப்பில் அவளிடம் எகிறி குதித்துக்கொண்டிருந்தான்.
“டேய் சந்தோஷை அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசாத! நான் உன் பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவேன்” என கண்ணை உருட்டி மிரட்டினாள். தன் நண்பனாக இருந்தாலும் தன் உயிர் காதலனை மரியாதை இல்லாமல் பேசுவது அவளுக்கு கோபத்தை கொடுத்தது.
“உனக்கொண்ணு தெரியுமா சிற்பி! சந்தோஷ் சார் பொண்ணு பார்க்க போனதும் என்னோட லவ்வர் திவ்யாவைதான்! நான் என் திவ்யாவை அந்த சிடுமூஞ்சிக்கு விட்டுத்தரமாட்டேன் பார்த்துக்கோ!” என்று கோபமாக துள்ளி குதித்தான்.
சிற்பிகாவிற்கோ இதென்ன இடியாப்ப சிக்கலா இருக்கே என்று பயம் வந்தது. தன் காதலும் நிறைவேறாது தன் நண்பன் காதலுக்கும் இடைஞ்சலா வந்துவிட்டதே என்று வருந்தியவள் “டேய் நீ சந்தோஷ் சார்கிட்ட உன் லவ்வை பத்தி பேசி புரிய வைக்க பாரு. அவர் உன் லவ்வை கட்டாயம் புரிஞ்சுப்பாரு” என்றாள் மனவருத்தத்தை மறந்து.
“நீ என்ன பைத்தியமாடி! நேத்து என்ன நடந்துச்சு ஒழுங்கா மறைக்காம சொல்லு!” என்று விரலை நீட்டி மிரட்டினான். அதுவரை மனதில் போட்டு அழுத்தி அடக்கி வைத்திருந்ததை மடைதிறந்த வெள்ளம் போல நேற்று நடந்ததை அனைத்தையும் கொட்டிவிட்டாள் திலீப்பிடம்.
“ஓ உன்னை ஹர்ட் பண்ணினாரா சந்தோஷ்?” என்றான் ஆற்றாமையோடு திலீப்.
“இல்லைடா” என்று தலையை ஆட்டினாள்.
“நான் இப்போ சந்தோஷ்கிட்ட சண்டைபோடப்போறேன்! என் பிரண்டை எப்படி ஏத்துக்காம போனாருனு. அப்புறம் நான் திவ்யாவை லவ் பண்ணுறேனு சொல்லப்போறேன்டி!” என்று சொல்லிக்கொண்டிருக்க. சரியாக சந்தோஷ் போன் செய்தான்.
“குட் மார்னிங் திலீப் நீங்க இன்னும் பேங்கிற்கு வரலையே என்கிட்ட லீவும் நேத்து நீங்க சொல்லாம கிளம்பியிருக்கீங்க என்னாச்சு?” என்று எதுவும் தெரியாதது போல கேட்டான் சந்தோஷ்.
“அ…அது சாரி சார் கொஞ்சம் பர்சனல் ப்ராப்ளம் நான் இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல பேங்க்கு வந்துடுவேன்” என்று போனை வைத்துவிட்டான்.
“நான் கிளம்புறேன் சிற்பி நீ கவலைப்படாம இரு நான் சந்தோஷ் சார்கிட்ட பேசுறேன்” என்றவன் கிளம்பிவிட்டான்.
சிற்பிகாவிற்கோ தலைவலிக்கத் தொடங்கியது. சந்தோஷ் என்ன சொல்வாரோ தெரியலையே என்ற பயந்தவளுக்கு குளிர் காய்ச்சல் வருவது போல இருந்தது துவண்டு போய்விட்டாள். பெட்சீட்டை போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.
பேங்கிற்குச் சென்ற திலீப்போ சந்தோஷ் அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளேச் சென்றான். அவனது முகம் இன்னும் கோபமாகவே கடுப்பில் இருப்பவன் போலவே வைத்திருந்தான்.
சந்தோஷோ “ரொம்ப கோபமா இருக்கீங்க போல! இந்தாங்க தண்ணியை குடிங்க என் மேல உள்ள கோபம் தணிஞ்சுடும்” என்று வாட்டர் பாட்டிலை நீட்டினான் திலீப்பிடம்.
திலீப்பிற்கு தண்ணீர் தேவையாக இருக்க வாங்கிக்குடித்துவிட்டு பாட்டிலை டேபிள் மேல வைத்தவன் “இங்க பாருங்க சார் என் ப்ரண்ட் சிற்பிகாவோட லவ்வை ஏன் நீங்க அக்சப்ட் பண்ணிக்கலை. அவ உங்களை ரொம்ப வருசமா லவ் பண்ணுறா தெரியுமா. அவ ரொம்ப நல்ல பொண்ணு சார்! ஏன் அவளை வேண்டாம்னு சொன்னீங்க ப்ளீஸ் அவ லவ்வை ஏத்துக்கோங்க!” தன் கோபத்தை தள்ளி வைத்து நண்பிக்காக பரிந்து பேசினான் சந்தோஷிடம்.
சந்தோஷ் மனதில் சிற்பிகா சிம்மாசனம் போட்டு அமர்ந்தது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தான் திலீப்.
சந்தோஷ் திலீப் தன் லவ்வுக்காக சண்டை போடுவான் என்று எதிர்பார்த்தவனுக்கு சிற்பிகாவின் காதலுக்காக பேசியது கண்டு இருவரின் நட்பை கண்டு பிரம்பித்து போனான் . சிற்பிகா திலீப் நட்பு மீது பொறாமைகூட வந்தது சந்தோஷிற்கு.
“ம்க்கும்” என்று தொண்டையை செருமியவன் “பேசி முடிச்சிட்டீங்களா திலீப்” என்று இரு கையையும் தேய்த்துக்கொண்டு எழுந்தவன் “நீங்க நினைக்கறது போல நான் காதலுக்கு எதிரி கிடையாது. அண்ட் திவ்யா உங்களை லவ் பண்ணுறேனு என்கிட்ட காலையில பொண்ணு பார்க்கும் போது சொல்லிட்டா! உங்க லவ்வுக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன் நான் சொல்றது போல நடந்துக்குங்க போதும். எனக்கு ஒரு உதவி உங்களால முடியுமா?” என்றான் தோளை குலுக்கி.
திலீப்போ நான் என்ன பேசுறேன் இவன் என்ன சொல்றான் என்று குழம்பிக்கொண்டு சந்தோஷை பார்த்தான்.
“நான் சொல்றதை சீக்ரெட்டா வைச்சுக்கோங்க சிற்பிகாகிட்ட சொல்லக்கூடாது” என்று திலீப்பிடம் இரகசியமாக சில விசயங்களை கூறினான்.
சந்தோஷ் கூறுவதை கேட்டவன் “என் ப்ரண்ட் சிற்பிகா பாவம் சார் உண்மையை சொல்லிடுங்க” என்றான்.
“நெல்லிக்காய் சாப்பிடும் போது கசப்பாகத்தான் இருக்கும் ஆனா தண்ணியை குடிக்கும்போது இனிக்குமே இப்போ உங்க ப்ரண்ட் கொஞ்சநாள் கஷ்டப்படட்டும் நான் நிறைய சரிபண்ண வேண்டிய இருக்கு திலீப். நேத்து நைட் சிற்பிகாவோட லவ்வை உணர்ந்தேன்! அவளுக்கு உடம்பு சரியில்லைனதும் என்னால அவ துடிக்கறதை பார்க்க முடியல! எனக்குள்ள இருக்கும் லவ் வெளியே வந்திருச்சு. ரெண்டு நாள் தான் பார்த்தோம் அதுக்குள்ள என்கிட்ட லவ் சொல்றாளேனு நினைச்சேன். அவளை முதல் நாள் பார்த்தலிருந்து எனக்குள்ள ஏதோ ஒரு அவ மேல ஈர்ப்பு வந்துச்சு! காதலுக்கு பவர் அதிகம்னு அப்போதான் புரிஞ்சுது” என்றான் நெஞ்சை தொட்டு.
“நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு சிற்பிகாதான் அதுல எந்த மாற்றமும் இல்லை.” என்றான் கண்ணை சிமிட்டி
“இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கும் திவ்யாவுக்கும் ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம்” என்றான் சந்தோஷ் அதிரடியாக.
சந்தோஷின் வேகம் கண்டு கொஞ்சம் மிரண்டுதான் போனான் திலீப்.
சந்தோஷ் பக்கம் இருந்து பார்க்க அவன் நியாயம் புரிந்தது. எப்படியும் சந்தோஷ் சார் சிற்பிகாவை கல்யாணம் பண்ணிக்குவார் என்ற நம்பிக்கை வந்தது திலீப்பிற்கு.
“திலீப் உங்க காதலுக்கு உங்க வீட்டுல எதிர்ப்பு சொல்லுவாங்களா என்ன?” என்றான் புருவம் உயர்த்தி.
“இல்ல சார் என்னோட விருப்பம்தான்! அப்பா அம்மாவுக்கு என் லவ் தெரியும் நான் கல்யாணம் பண்ணறதை பத்தி சொல்லிடுறேன்! என்ன திவ்யா அப்பா ராமு அங்கிளை பத்திதான் பயப்படுவாங்க” என்றான் கவலையாக.
“ராமு அங்கிளை நான் பார்த்துக்கிறேன் நீங்க ஒர்ரி பண்ணிக்க வேண்டாம்” என்றான் தோளைக்குலுக்கி.
“தேங்க்ஸ் சார் சீக்கிரம் என் ப்ரண்ட் சிற்பிகாகிட்ட லவ்வை சொல்லிடுங்க” என்றான் சந்தோசமாக.
“ம்ம் என் சைட் ப்ரோப்லம் சரி பண்ணிட்டு சொல்லிடுறேன்” என்று தலையாட்டினான்.
திலீப்போ சிற்பிகாவின் காதல் கல்யாணத்தில் முடியப்போகிறது என்று நிம்மதியாக இருந்தான்.
சந்தோஷ் தன் காதலை ஏற்றுக்கொள்ளவில்லையே என்று வருத்தப்பட்ட சிற்பிகாவுக்கு குளிர் காய்ச்சல் வந்து நடுங்கிக்கொண்டு படுத்திருந்தாள்.
8. உறவு
கார்மென்ட்ஸிலிருந்து வந்த ஆனந்தனும் உமாவும் சிற்பிகாவை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச்சென்றனர். சிற்பிகாவை செக் பண்ணிய டாக்டரோ “காய்ச்சல் அதிகமா இருக்கு இன்ஜக்சன் போட்டு விடறேன்! நாளைக்கும் இதே போல காய்ச்சல் இருந்தா பிளட் டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம்” என மாத்திரைகளை கொடுத்து அனுப்பினார்.
உமாவோ மகள் எதையாவது பார்த்து பயந்திருப்பாளோ! காத்து கருப்பு அண்டியிருக்குமோ என்று வருத்தப்பட்டு கருப்பண்ண சாமி கோவில் பூசாரி கொடுத்த திருநீறையும் தாயத்து கயிறும் கட்டிவிட்டார் சிற்பிகாவிற்கு.
கஞ்சி வைத்து வந்த உமாவோ “என்னங்க நீங்களும் வாங்க அப்பதான் நம்ம பொண்ணு கஞ்சியாவது குடிப்பா” என்று கார்மென்ட்ஸில் வேலை செய்துக் கொண்டிருந்த ஆனந்தனை கூட்டிக்கொண்டுச் சென்றார் மகளின் அறைக்கு.
“கஞ்சி எனக்கு வேணாம்பா! வாமிட் வரது போல இருக்கு” என்று அவள் அடம்பிடிக்க “அம்மாடி மதியத்திலிருந்து நீ ஒண்ணுமே சாப்பிடலையே வெறும் வயிறா இருந்தா எப்படி மாத்திரை சாப்பிடமுடியும்! எப்போ காய்ச்சல் சரியாகும் ப்ளீஸ்டா ஒரு டம்ளர் கஞ்சியாவது குடி” என்று சிற்பிகாவை கஞ்சி குடிக்க வைத்து மாத்திரையையும் போட வைத்தார் ஆனந்தன். உமாவும் ஆனந்தனும் மகளுடனே படுத்துக்கொண்டனர்.
சிற்பிகாவோ நடுஇரவில் “சந்தோஷ் சந்தோஷ் ஐ லவ் யு” என புலம்பிக்கொண்டே விசும்பினாள். சிற்பிகாவின் புலம்பலை கேட்டு எழுந்த ஆனந்தனோ நாளைக்கு முதல் வேலையா சந்தோஷ் தம்பியை பார்க்கணும் என்று முடிவெடுத்து மகளின் தலையை வருடிக்கொடுக்க அப்படியே கண்ணயர்ந்தாள் சிற்பிகா.
அமுதவள்ளியை பார்க்க அவரது பிரண்ட் ராணி வந்திருந்தார். அமுதவள்ளி போட்டுக்கொடுத்த டீயை குடித்துக்கொண்டே “உன் பையனுக்கு பொண்ணு பார்த்திருக்கியே! உன் வசதிக்கு தகுந்த இடமா! பொண்ணு எப்படி நல்ல சிவப்பா அழகா இருக்காளா? இரண்டு டிகிரி படிச்சிருக்காளா? ஏனா அமுதவள்ளி மருமகள்னு ஒரு கெத்து வேண்டாமா? என் மருமகளை தான் கிராமத்துல இருந்து கட்டிட்டு வந்தேன் வரும்போது வாயில்லா பூச்சியா வந்தா இப்போ என்னை என்ன சேதினு கேட்குறா? நீ கொஞ்சம் உன் மருமகளை ஆரம்பித்துலயே தட்டி வைச்சிரு” என்றார் இழுவையாக.
சண்முகமோ ராணி பேசியதை கேட்டு அமுதவள்ளியை முறைக்க அவரோ நான் பார்த்துக்குறேன் என்று கண்ணைசைத்துவிட சண்முகமோ வீட்டுக்கு வந்தவரின் மனம் கோணி பேசக்கூடாதென அமைதியாக எழுந்து அறைக்குள் சென்றுவிட்டார்.
ஆனந்தன் சென்றதும் “என் மருமகளை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும் ராணி. நீ என்ன வேலையா வந்த சொல்லு” என்றார். தன் நண்பியாக இருந்தாலும் குடும்பத்தை விட்டுக்கொடுத்து பேசமாட்டார் அமுதவள்ளி.
“திருப்பதி போயிட்டு உனக்கு பிரசாதம் கொண்டு வந்தேன்டி” என்று பேக்கிலிருந்து லட்டு குங்குமத்தை எடுத்து அமுதவள்ளி கையில் கொடுக்க “பெருமாளே என் பையன் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்” என்று வேண்டிக்கொண்டு பிரசாதத்தை வாங்கிக்கொண்டார் அமுதவள்ளி.
“அமுதா நான் சொல்றேனு தப்பா என்னை நினைக்காதடி! சொந்தக்கார பொண்ணுனு அசால்ட்டா இருக்காதே! ஆரம்பத்துல அத்தை அத்தைனு உன்னை காக்கா பிடிச்சு எல்லா வேலையும் நம்ம தலையில கட்டிடுவாங்க. நாமும் புதுசா கல்யாணம் ஆனவங்க சந்தோசமா இருக்கட்டும்னு நினைப்போம். ஆனா அவளுக காலப்போக்குல நம்மளை சமையல்கட்டுலயே தவம் கிடக்க வச்சிடுவாளுங்க! நீ சொந்தத்துல பொண்ணு எடுக்காம பிறத்தில பொண்ணு எடுத்துருக்கலாம். வசதியானவங்களை விட வசதி கம்மியானவங்க குடும்பத்து பொண்ணு எடுத்தா நாம சொல்றதை கேட்டு கம்முனு நாய் குட்டி போல நம்ம காலடியிலயே கிடப்பாளுங்க! நீ வேற உனக்கு அந்தஸ்த்துல சமமா இருக்க பொண்ணை உன் பையனுக்கு பேசி முடிச்சிருக்க! கவனமா இரு” என தெளிவாய் இருந்த அமுதவள்ளியை குழப்பிவிட்டார் ராணி.
“என் மருமகளை எந்த இடத்துல வைக்கணும்னு எனக்கு தெரியும் நான் பார்த்துக்குறேன் ராணி” என்று நாசுக்காக சொல்லி சாப்பிட வைத்து அனுப்பி வைத்தார் ராணியை.
சந்தோஷோ அம்மாகிட்ட என்னோட காதலை பத்தி எப்படி பேசி புரிய வைப்பது! திவ்யா தீலிப் கல்யாணத்தை நடத்துவது பற்றி யோசித்தபடியே வீட்டுக்குள் வந்தான்.
நாம சொந்தத்துல பொண்ணு பார்க்காம அந்நியத்துல பொண்ணு பார்த்திருக்கலாமோ என்று ராணி கூறியதை நினைத்துக்கொண்டே சமையலை முடித்திருந்தார் அமுதவள்ளி.
சந்தோஷ் குளித்து வந்தவன் “ம்மா டிபன் ரெடியா?”
என்று டைனிங் டேபிளில் அமர்ந்தபடியே குரல் கொடுத்தான்.
“ஹான் இதோ வரேன்ப்பா” என்று தோசையை தட்டில் வைத்துக்கொண்டே “அடுத்த வெள்ளிக்கிழமை முகூர்த்த நாளா இருக்கு அன்னிக்கு நாம உனக்கும் திவ்யாவுக்கும் ஜவுளி எடுத்திடலாம் நீ பேங்குக்கு லீவு போட்டிரு” என தட்டில் சட்னியை ஊற்றிக்கொண்டே கூறினார்.
“ம்ம் சரிமா லீவ போட்டிடுறேன்” என்று சாப்பிட்டு முடித்தவனுக்கு போன் வர போனில் பேசிக்கொண்டே அவனது அறைக்குச் சென்றுவிட்டான். எப்போதும் சாப்பிட்டு முடித்து தன்னிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருப்பவன் இன்று சாப்பிட்ட உடன் கிளம்பிவிட்டானே! கல்யாணம் ஆனா என்கிட்ட பேசக்கூட மாட்டானா! என்று அமுதவள்ளிக்கு நெஞ்சுக்குள் சிறு கலக்கம் வந்தது.
“என் பையன் மத்தவங்க போல கிடையாது என்மேல என்னிக்கும் அவனுக்கு பாசம் குறையாது” என்று சாப்பிட்ட தட்டை சிங்கில் கழுவி வைத்து அறைக்கு வந்தார்.
சண்முகமோ சாப்பிட்டு முடித்து கொஞ்ச நேரம் வாக்கிங் போவார். வாக்கிங் முடித்து அறைக்குள் வந்தவர் மெத்தை விரிப்பை சரி செய்துக் கொண்டிருந்த அமுதவள்ளியின் முகத்தை பார்த்தார் என்றும் தெளிவாய் இருக்கும் அவரது முகம் இன்று குழம்பிய முகத்துடன் இருப்பதை கண்டவர் இந்த ராணி நம்ம பொண்டாட்டிக்கு ஏதோ சொல்லி குழப்பி விட்டு போயிருக்கா போலேயே என்று எண்ணியவர் “அமுதா என்ன பலந்த யோசனையா இருக்க எந்த கடையில பட்டுப்புடவை எடுக்கலாம்னு யோசிக்கிறியா?” என்று மனைவியின் வாயிலிருந்து உண்மை வரட்டும் என்று கேட்டார் சண்முகம்.
“அ…அது ஆமாங்க புடவை எந்த கடையில எடுக்கணும்னு யோசனையிலதான் இருக்கேன். லட்ச ரூபாய்க்கு எடுக்கணும்ங்க. நல்ல அரக்கு பச்சையில ரோஸ் பார்டர் தங்க ஜரிகை வைத்தும் எடுக்கணும் ரிசப்சனுக்கு லெஹங்கா, இன்னும் ரெண்டு மூணு புடவையெல்லாம் நம்ம மருமகளுக்கு எடுக்கணும்னு யோசிச்சுட்டு இருக்கேன்ங்க” என்றார் தன் பதட்டத்தை மறைத்து
“அப்படியா ரொம்ப சந்தோசம் அமுதா. இந்த காலத்துல வரப்போற மருமகளுக்கு இவ்ளோ யார் செய்வாங்க உன்னை போல மாமியார் கிடைக்க கொடுத்துதான் வச்சிருக்கணும்” என்று கட்டிலில் உட்கார்ந்தார்.
“நம்ம மருமகளுக்கு நாம செய்யாம யார் செய்வா. நாம அவளை நல்லா கவனிச்சுக்கிட்டா ஏன் நம்மகிட்ட சண்டைக்கு எதிர்த்து நிற்கபோறாளுக” என்றார் அமுதவள்ளி
“வரப்போற மருமகளுக்கு புடவை வாங்கிக்கொடுத்து கரெக்ட் பண்ண பார்க்குற சரியா” என்றார் சிரித்துக்கொண்டே.
“ஆமாங்க எனக்கு என் பையன்தான் முக்கியம். யாரும் என் பையனையும் என்னையும் பிரிச்சிடக்கூடாது பாருங்க அதான் மருமகளை சந்தோசமா வச்சுக்க நினைக்குறேன்” என்றார் அமுதவள்ளி.
“பையனுக்கு கல்யாணம் நடக்கட்டும் இப்ப பேசறது போலயே இருப்பியானு பார்க்குறேன்” என்று பேசிய சண்முகமோ படுத்துக்கொண்டார்.
சந்தோஷ் நியூ இயர் செலிபரேசனில் கேக் வெட்டியபோது எடுத்த போட்டோவை பார்த்துக்கொண்டிருந்தான். தன் பக்கம் நின்றிருக்கும் சிற்பிகாவை இரசித்து பார்த்தான். ‘ஏய் சில்வண்டு எனக்குள்ள எப்படி வந்தேடி! ஒரு பொண்ணு மனசுல என்ன இருக்குனு தெரியாதுனு சொல்லுவாங்க. நீ நினைவில்லாம இருக்கப்ப சந்தோஷ் சந்தோஷ் ஐ.லவ்.யு என்று என் பெயரையே சொல்லிட்டே இருந்தடி! உன் காதல் என்னை கட்டிப்போட்டு உன்கிட்ட கொண்டு வந்துடுச்சுடி. ஓன்வீக் வெயிட் பண்ணு அம்மாவை கன்வின்ஸ் பண்ணி அம்மா சம்மதத்தோட உன் கழுத்துல நான் தாலிகட்டுறேன் கண்மணி’
என்றவன் போனில் இருந்த சிற்பிகாவின் இதழை விரலால் தடவி “உன் லிப்ஸ் ரொம்ப சாஃப்டா இருக்குடி. உன்னை காப்பாத்த தான் முத்தம் கொடுத்தேன் ஆனா நான் அந்த ஒரு நிமிசம் உனக்குள்ள கரைஞ்சு போறதை நான் உணர்ந்தேன்டி! கல்யாணம் பண்ணியதும் உன்னை இறுக்கமா கட்டிப்பிடிச்சு உன் உதட்டை கடிச்சு திங்கப்போறேன் இப்ப மொபைலில் உள்ள உன் போட்டோவுக்கு முத்தம் கொடுக்குறேன்” என்று சிற்பிகாவுக்கு முத்தம் கொடுத்தான்.
‘நாளைக்கு காலையில எப்போ விடியும் உன்னை எப்போ பார்ப்பேனு தவிப்பா இருக்கேன்’ என்றவன் சிற்பிகாவின் நினைவில் உறங்கிப்போனான்.
அடுத்தநாள் காலையில் சீக்கிரம் பேங்கிற்கு கிளம்பிச் சென்றான். அமுதவள்ளி கோவிலுக்குச் சென்றிருந்தார். அங்கே சாமியார் ஒருவர் எல்லாருக்கும் குறி சொல்லிக்கொண்டிருந்தார்.
அமுதவள்ளி சாமி கும்பிட்டு முடித்து கோவிலை சுற்றிவந்தவர் சாமியார் முன்னே நின்றார். “என்னம்மா மனசுல குழப்பத்துல வந்திருக்கியா உன் மகனுக்கு இப்போ நிச்சயம் பண்ணியிருக்கியே அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சா உன் குடும்பம் சரியா வராது. உன் பையன் விரும்புற பொண்ணை கல்யாணம் பண்ணி வை அவன் வாழ்க்கை சுபிட்சமா இருக்கும்” என்று வாக்கு சொல்லி கண்ணை மூடி விட்டார்.
“என் பையன் ஒரு பொண்ணை விரும்புறான்னா எனக்கு எப்படி தெரியாம இருந்திருக்கும். இப்போ திவ்யாவை பொண்ணு பார்த்துட்டு பிடிச்சிருக்குனு சொல்லிட்டானே! சாமியார் என்ன இப்படி சொல்லிட்டாரே என் பையன் நல்லாயிருக்கணும் எப்படி கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி சொல்றது ராமு அண்ணாகிட்ட” என்று புலம்பியவர் மீண்டும் அம்மன் முன்னாடி நின்றவர் ‘அம்மா என் பையன் வாழ்க்கை நல்லபடியா அமையணும் அவனுக்கு புடிச்ச பொண்ணா கிடைக்கணுமே அவன் எங்க லவ் பண்ணப்போறான் நான் வேற நீ லவ்வெல்லாம் பண்ணக்கூடாதுனு வாக்கு வாங்கிட்டேன் இன்னிக்கே நீ லவ் பண்ணுப்பானு சொல்லிடறேன் எனக்கு என் மகன் வாழ்க்கைதான் முக்கியம். திவ்யாவுக்கு நாமளே நல்ல பையனா பார்த்துட்டு அண்ணாகிட்ட பொறுமையா எடுத்துச் சொல்லலாம். அவருக்கும் அவர் பொண்ணு வாழ்க்கை முக்கியம்தானே’ என்று தெளிவானவர் கோவிலிலிருந்து கிளம்பினார்.
9.உறவு
சந்தோஷ் பேங்கிற்குள் நுழைந்ததும் திலீப் சீட்டில் இருந்தான். ஆனால் தான் ஆவலாக எதிர்பார்த்த சிற்பிகா அவளது சீட்டில் இல்லையென்றதும் தொட்டாசிணுங்கி இதழ் போல சுருங்கி விட்டது. என்னாச்சு இந்த நேரம் சிற்பிகா வந்திருக்கணுமே என்று அவனது அறைக்குள் நுழைந்தவன் டேபிளில் பிளவர் வாஷை பார்த்தான். ரோஸும் வைக்காமல் காலியாக இருந்தது.
திலீப் இன்டர்காமிற்கு அடித்து “திலீப் என் ரூம்க்கு வாங்க” என்றதும் அவனும் “வரேன் சார்” என்று போனை வைத்தவன் சந்தோஷ் அறைக்குள் சென்று “குட்மார்னிங் சார்” என்றான் பவ்யமாக.
“என்ன திலீப் திவ்யாகிட்ட பேசிட்டீங்களா இப்போ ஹேப்பி தானே வர்ற வெள்ளிக்கிழமை உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் பிளான் பண்ணியிருக்கேன். ரெடியா இருங்க ஆல்.தி பெஸ்ட் திலீப்” என்றான் சிரித்தபடி
“உங்களை தப்பா நினைச்சிட்டேன் ரொம்ப சாரி சார்!” என்றான் வருத்தப்பட்டு.
“உங்க நிலைமையில யாரா இருந்தாலும் கோபம் படத்தான் செய்வாங்க திலீப்” என்றவனோ “ஆமா சிற்பிகா ஏன் இன்னிக்கு இன்னும் வராம இருக்காங்க உங்களுக்கு போன் பண்ணாங்களா?” என்றான் நெற்றியை தடவிக்கொண்டே.
“ஹான் போன் பண்ணினேன் சார்! அம்மா தான் எடுத்தாங்க சிற்பிக்கு பீவர் வந்துடுச்சுனு சொன்னாங்க. நான் அவகிட்ட பேசுறேன் போன் கொடுங்கனு சொன்னதும் அவ தூங்குறாப்பா அவ எழுந்ததும் போன் பண்ணச் சொல்லுறேன் சொல்லிட்டாங்க! எனக்கென்னமோ நீங்க லவ் அக்சப்ட் பண்ணலைனுதான் அவளுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கும் சார். ப்ளீஸ் நீங்க அவகிட்ட போன்ல பேசுங்களேன்” என்றான் பரிதவிப்பாய்.
“வெயிட் பண்ணுங்க திலீப் வெண்ணெய் திரண்டு வர நேரத்துல பானை உடைச்ச கதை ஆகிடும். நான் என் அம்மாவோட மைண்ட் மாத்திட்டு இருக்கேன். இப்போ போய் அவரசப்பட்டு சிற்பிகாகிட்ட என் காதலை சொல்லமாட்டேன் காதலில் காத்திருப்பு கூட இன்ட்ரஸ்டிங்காத்தான் இருக்கு” என்று இதழ் வளைத்து சிரித்தான் சந்தோஷ்.
சிற்பிகாவோ மதியம் எழும்பினாள் இப்போது காய்ச்சல் குறைந்திருந்தது உடல் சோர்வு மட்டும் வாட்டியது. அவள் வாஷ் ரூம் சென்று வந்து மொபைல் போனை எடுத்துப்பார்த்து திலீப் போன் பண்ணியிருப்பதை கண்டு திலீப்பிற்கு போன் செய்தாள்.
“சிற்பிகா இப்போ உடம்பு எப்படியிருக்கு நான் ஈவ்னிங் வீட்டுக்கு வரேன்” என்றதும் “ம்ம் சரி வா” என்றவள் “சந்தோஷ் சார்கிட்ட உன் லவ் பத்தி சொன்னியாடா?” என்றாள் மெதுவாக.
“ம்ம் சொன்னேன்பா அவர் என்னையும் திவ்யாவையும் சேர்த்து வைக்குறேன் சொல்லிட்டாரு. கம்மிங் ப்ரைடே ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லியிருக்காருடி” என்றான் சந்தோசமாக.
“ஏய் வாழ்த்துக்கள்டா நான்தான் சொன்னேன்ல சந்தோஷ் சார்கிட்ட உன் லவ்வை பத்தி பேசினா கண்டிப்பா அவர் உனக்கு உதவி செய்வார்னு” தன் உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் தன் நண்பனின் காதல் ஜெயித்துவிட்டதென ஆனந்தப்பட்டு பேசினாள் சிற்பிகா.
“நீ எத்தனை நாள் லீவு போட்டிருக்க என் கல்யாணத்துக்கு நீதான் என் சார்புல கையெழுத்து போடணும் உன்னை எதிர்பார்த்துட்டு காத்திருப்பேன் சிற்பி” என்றான் துள்ளிக்குதிக்காத குறையாக.
“டேய் எனக்கு கொஞ்சம் உடம்பு முடியலைடா” என்றாள் சோர்வாக சந்தோஷ் அங்கேயிருப்பான் அவன் முகத்தை பார்த்தால் அழுதுவிடுவேன் என்று நண்பனிடம் கூற முடியாமல் மருகினாள் சிற்பிகா.
“நீ எதுனால வரமுடியாதுனு சொல்றேனு எனக்கு தெரியும் சிற்பி சந்தோஷ் சாரை பார்க்க நீ கஷ்டப்படுறனு எனக்கு புரியுது. உன் காதல் பசும் பால் போல தூய்மையானது கண்டிப்பா சந்தோஷ் சார் உன் காதலை ஏத்துப்பார் பாரேன். நீ என் மேரேஜ்க்கு ரிஜிஸ்டர் ஆபிஸிற்கு வர!” என்று கட்டளைப்போட்டு போனை வைத்துவிட்டான்.
“நீ சொல்றது போல என் காதலை சந்தோஷ் ஏத்துப்பாரா. இப்போ அவன் இன்னொருத்திக்கு சொந்தமானவன் கிடையாது. சுந்தோஷ் நான் உன் மனசுல வரணும்னா நான் என்ன பண்ணனும் சொல்லுங்களேன்! என் உயிரை விட சொல்றீங்களா விடறேன்” என்று சந்தோஷின் மீது காதல் பைத்தியமாகவே ஆகிவிட்டாள்.
அமுதவள்ளி கோவிலிருந்த வந்தவர் சாப்பிடக்கூட இல்லை. பேப்பர் படித்துக்கொண்டிருந்த சண்முகத்திடம் “என்னங்க நம்ம பையனுக்கும் திவ்யாவுக்கும் கல்யாணம் செய்து வைத்தா சரியா இருக்காதுனு கோவில சாமியார் குறி சொல்லிட்டாருங்க! அதுவும் நம்ம பையன் விரும்புற பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சா அவன் வாழ்க்கை ஆழ் போல தழைக்கும்னு சொல்லிட்டாருங்க! நான் இப்போ என்ன பண்ணுவேன் வர வெள்ளிக்கிழமை ஜவுளி எடுக்கலாம்னு ராமு அண்ணாகிட்ட சொல்லிட்டும் வந்துட்டேன். எப்படிங்க இப்ப போய் ராமு அண்ணாகிட்ட கல்யாணம் வேண்டாம்னு சொல்வேன்” என்று அழுதே விட்டார்.
எதற்கும் அழாத அமுதவள்ளி தன் மகன் கல்யாண விசயத்தில் இப்படியொரு தருணம் வரும் என்று அவர் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. சண்முகம் தன் மனைவி அழுது இன்று தான் பார்க்கிறார்.
“அமுதா அழாத எப்படியும் சாமியார் சொன்னதை ராமுகிட்ட சொல்லித்தான் ஆகணும் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்னு சொல்வாங்க! நமக்கு இருக்கறது ஒரே பையன் அவன் வாழ்க்கை சந்தோசமாக இருக்கணும்னா நாம உண்மையை ராமுகிட்ட சொல்லித்தான் ஆகணும் ! நீ கவலைப்படாத நான் ராமுகிட்ட பேசுறேன்” என்று அமுதவள்ளியை சமாதானப்படுத்தினார் சண்முகம்.
சந்தோஷ் வீட்டுக்கு வந்ததும் அமுதவள்ளியின் முகத்தை பார்த்தே கணித்துவிட்டான். ஏதோ நடக்ககூடாதது நடந்து விட்டதென. சண்முகத்திடம் “என்னாச்சு என்னோட அம்மாவுக்கு முகமே சரியில்லை அம்மாவை நீங்க எதுவும் மிரட்டினீங்களா என்ன?” என்றான் சண்டைக்கு வருபவன் போல
“எந்த நாள்டா நான் உங்கம்மாவை மிரட்டி இருக்கேன். அவ என்னை மிரட்டினா போதாதா” என்று கேலி செய்தார் அமுதவள்ளியை.
“போதும் நிறுத்துங்க” என்று சண்முகத்தை அதட்டிய அமுதவள்ளியோ “கண்ணா நீ போய் குளிச்சிட்டு வா நான் நிதானமா சொல்றேன்” என்றார் பொறுமையாக.
“ஐஞ்சு நிமிசத்துல குளிச்சிட்டு வந்துடறேன்” என்று அறைக்குச் சென்றவன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஷார்ட்ஸ் டீசர்ட் போட்டு ஹாலுக்கு வந்தான் சந்தோஷ்.
அமுதவள்ளி மகனை பார்த்ததும் கண்ணீரை துடைத்துக்கொண்டு பெரும்மூச்சு விட்டு “கண்ணா இப்படி வந்து உட்காரு” என்றவருக்கு கண்கள் பனித்துப்போனது.
“என்னாச்சுமா இப்படி அழுது வடியுறீங்க! நீங்க அழுது நான் பார்த்ததே இல்லையே! நீங்க அழற அளவு ஏதாவது பெரிய பிரச்சனையா?” என்றான் அமுதவள்ளியின் பக்கம் உட்கார்ந்து அவரது தோளில் சாய்ந்தான்.
“கண்ணா நான் சொல்லப்போற விசயம் உனக்கு வருத்தம் தரலாம்” என்று பீடிகை போட “ம்மா சுத்தி வளைக்காம சொல்லுங்க எனக்கு பசிக்குது” என்றான் பொறுமை இழந்தவனாக.
“நீ திவ்யா தான் உனக்கு மனைவியா வருவானு எதுவும் பெருசா ஆசைப்படலையே. அப்படி ஆசையிருந்தா இன்னிக்கோட அந்த ஆசையை கலைச்சிடுப்பா” என்றவருக்கு குரல் பிசிறு தட்டியது.
“ஏன்மா என்னாச்சு ராமு அங்கிள் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாரா?” என்று அதிர்ச்சி அடைபவன் போல கேட்டான்.
அவன் தான் நாடகத்தின் ஆதி மூலம் என்பதே தெரியாமல் அமுதவள்ளியிடம் விசனப்படுபவன் மாதிரி தாயை பார்த்துக்கொண்டிருந்தான்.
கோவிலில் சாமியார் குறி சொன்னதை சந்தோஷிடம் கூற அவனோ “இந்த காலத்துல இதையெல்லாம் நம்பணுமா சாமியை மட்டும் நம்பினா போதும்மா. அதைவிட உங்க மனசுக்கு பிடிச்ச பொண்ணை மட்டும்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றவனின் முகத்தில் புன்னகை அரும்பியே இருந்தது.
“சநதோஷ் திவ்யா தான் பொண்டாட்டினு நினைச்சிருப்ப உன் ஆசையை நிறைவேத்த முடியலையேனு நான் கவலைப்பட்டேன்ப்பா. இப்போதான் எனக்கு திருப்தியா இருக்கும்” என மகனை தோளோடு அணைத்துக்கொண்டு சந்தோசப்பட்டார் அமுதவள்ளி.
‘ஷப்பாடா என் அம்மாவே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வச்சிட்டேன்பா’ என்று பெரும்மூச்சு விட்டுக்கொண்டான் சந்தோஷ்.
“நீங்க உடனே ராமு அங்கிள் கிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வேண்டாம்மா வெள்ளிக்கிழமை காலையில நாம நேர்ல ராமு அங்கிள் வீட்டுக்கு போய் பொறுமையா சொல்வோம் அவர் மனசும் நோகக்கூடாதுல” என நேர்த்தியாக காய் நகர்த்தி நல்லவனை போல பேசினான். பாரத போரில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு அனைத்து திட்டங்களையும் கூறுவானே அது போல தன் காதலுக்காக தன் தாயின் மனதையும் நோகடிக்க கூடாது திவ்யாவின் தந்தை ராமுவின் மனதையும் புண்ணாக்க கூடாதென ஒவ்வொரு செயலையும் திட்டம் போட்டு செய்தான் சந்தோஷ்.
அப்பாடா என்று நிம்மதிப்பெரும்மூச்சு விட்டார் அமுதவள்ளி.
அடுத்த நாளும் சிற்பிகா பேங்கிற்கு வரவில்லை. இன்றைக்கும் தாய் மடி தேடும் குழந்தையை போல சிற்பிகாவுக்காக காத்திருந்தான். அவள் இன்றும் வரவில்லையென்றதும் மனது ரணமாய் வலித்தது. நான் அவள் காதலை மறுத்தபோது அவளுக்கும் இப்படித்தானே வலித்திருக்கும் என்று மனதில் போராட்டம் நடந்தினான். என் காதல் கண்மணியின் மனதை வார்த்தை எனும் வாள் கொண்டு அறுத்துவிட்டேனே! அவள் மனம் எப்படித்துடித்திருக்கும் என்று தன் மேலயே கோபம் கொண்டான் சந்தோஷ். காதலின் வலியை ஒவ்வொரு நொடியும் உணர்ந்துகொண்டிருக்கிறான் ஆணவன்.
அவள் இல்லாத ஒவ்வொரு நொடியும் யுகங்களாய் தோன்றியது. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை நாளை மறுநாள் திலீப், திவ்யா கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை அவனது நண்பர்களிடம் கொடுத்திருந்தான். வேலைகளை முடித்து போன் செய்து சொல்லிவிட்டனர்.
திலீப் கல்யாணத்திற்கு என் கண்மணி வந்து விடுவாள் அவளை பார்த்தால் நான் மோட்சம் அடைவேன் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டான். எப்போது அவள் மீது காதல் வந்தது உனக்கு என்று அவனிடம் மனசாட்சி கேட்டால் அதற்கு பதில் அவனிடம் இல்லை. சாப்பிடும் நேரம் கூட சிற்பி சிற்பி என்று சொல்லிக்கொண்டான். பெருமாளின் நெஞ்சத்தில் குடிகொண்டிருக்கும் லட்சுமி தேவியை போல சந்தோஷின் நெஞ்சத்திற்குள் குடிபுகுந்துக் கொண்டாள் சிற்பிகா சந்தோஷின் தேவதை பெண். பேங்க் வேலை நேரம் முடிந்த பின் தீலிப் கிளம்பிக்கொண்டிருந்தான்.
“திலீப் சிற்பிகா வீட்டுக்கு போலாம் வரியா. அவளை பார்க்கணும்போல இருக்கு. அவள பார்க்காம என்னால வேலையில கான்ஸன்ட்ரேட் பண்ண முடியலை” என்றான் தலையை பிடித்துக்கொண்டு.
“வாவ் என் ப்ரண்ட் உங்க மூளைக்குள்ள வண்டாய் குடைய ஆரம்பிச்சுட்டாளா” என்று திலீப் சிரிக்க
“டேய் என் காதலை கிண்டல் பண்ணாதே அப்புறம் உன் பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவேன்” என்றான் விளையாட்டாய் திலீப் வயிற்றில் குத்தி.
“என்ன ஆச்சர்யம் சிற்பிகாவும் உங்களை நான் ஏதாவது திட்டினா அவளும் என் பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவேன் சொல்வா. உங்க ரெண்டு பேரோடு எண்ணங்களும் ஒரே போல இருக்கு சார் என் ப்ரண்ட்டை ஹாப்பியா வச்சிக்கிட்டா போதும்” என்றான் கண்ணைச்சிமிட்டி.
“நீ சொல்லவே வேண்டாம் திலீப்! என் தேவதையை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன். பேசியே நேரத்தை வீணாக்காதே வா போகலாம்” என்று தீலிப்பை கூட்டிக்கொண்டு சிற்பிகா வீட்டுக்குச் சென்றான் சந்தோஷ்.
திலீப்போ நம்ம பேங்க்கு மேனேஜரா வரும்போது இருந்த சிடுமூஞ்சி எங்கே போனாரு. எல்லாம் காதல் செய்யும் மாயாஜாலம் என்று சிரித்துக்கொண்டான் மனதிற்குள்.
காரை ஓட்டிக்கொண்டே “என்ன திலீப் சிரிக்குற என்னை பார்த்தா கோமாளி போல இருக்கா. நீயெல்லாம் என்னை பார்த்து சிரிக்குற அளவுக்கு உன் பிரண்ட் கொண்டு வந்த விட்டுட்டா பாரேன்” என்று திலீப்பை முறைத்தான் சந்தோஷ்.
அச்சோ மைன்ட் வாய்ஸ்தானே பேசினேன் அப்படியும் மனுசன் கண்டுபிடிச்சிட்டாரே என்று என் ப்ரண்ட் சிற்பி பாவம் என்று தலையை உலுக்கிக்கொண்டான்.
சிற்பிகாவுக்கும் சந்தோஷை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனை பார்த்தால் மீண்டும் அவன் முன்னே போய் என் காதலை ஏத்துக்கோங்க என்று யாசகம் கேட்போம் என்று பயந்து தான் உடல் நிலை சரியாகி இருந்தாலும் பேங்கிற்கே போகாமல் இருக்கிறாள் பெண்ணவள்.
கண்ணை மூடினால் அவள் முன்னே சந்தோஷ் இறுக்கி அணைத்து முத்தம் கொடுப்பது போல் கனவு வர தூக்கத்தை தொலைத்திருந்தாள் சிற்பிகா.
சந்தோஷின் கார் சத்தம் கேட்டு கட்டிலில் படுத்திருந்தவள் எழுந்து பால்கனி வழியே பார்க்க இவரு இங்க எங்க வந்தாரு என்னை பார்க்க என் மணாளன் வந்துட்டான் என்று கண்ணாடி முன்னே நின்று கலைந்திருந்த முடிகளை சரி செய்தாள். போட்டிருந்த சுடிதாரை மாற்றி மாற்றி போட்டு பார்த்தாள். முடிவில் மஞ்சள் நிற அனார்கலி சுடிதாரை போட்டுக்கொண்டு அதற்கு மேட்சாக ஷாலையும் எடுத்து போட்டு தன் அறையை தாண்டியவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது. என் அம்மா சொல்லும் பெண்ணைத்தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று அவன் சொன்னது நினைவில் வர அப்படியே திரும்பி தன் அறைக்குள் வந்து கதவை லாக் செய்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.
சண்முகம் டீ குடித்து விட்டு போக வந்திருக்க சரியாக சந்தோஷ்ஷும் திலீப்பும் வந்துவிட்டனர்.
“வாங்க தம்பி” என்று சந்தோஷை வரவேற்ற ஆனந்தனோ “உமா காபி கொண்டு வா” என்று குரல் கொடுத்தார்.
உமாவும் காபியுடன் வந்தவர் “வாங்க தம்பி” என்று காபியை நீட்டினார் சந்தோஷிடம்.
“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று சிரித்த முகத்துடன் காபியை எடுத்துக்கொண்டான் சந்தோஷ் வீட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டே.
அவன் பார்வையை புரிந்துக் கொண்ட ஆனந்தனோ “இது பழைய காலத்து வீடு தம்பி இடம் வாங்கிப்போட்டிருக்கோம் பொண்ணுக்கு கல்யாணம் ஆனதும் சீதனமா கொடுக்கலாம்னு இருக்கேன் தம்பி” என்றார் ஆனந்தன்.
“ஓ.கே அங்கிள் இந்த வீடே அழகா இருக்கு” என்றான் புன்னகையுடன்.
“சிற்பி என்ன பண்ணுறா அங்கிள் இப்போ உடம்பு எப்படியிருக்கு?” என்று அவளது அறை எங்கே இருக்கும்? என்று கண்களால் தேடினான் சந்தோஷ்
உமாவோ “தம்பி அவளுக்கு தலைவலி மட்டும் இன்னும் இருக்கு. அதான் தூங்கிட்டு இருக்கா” என்றார் தயக்கமாய்.
திலீப்போ “நான் போய் சிற்பிகாவை கூட்டிட்டு வரேன் சார்” என்று உரிமையாய் சிற்பிகாவின் அறைக்குள் போக சந்தோஷுக்கு தான் தன்னவளை பார்க்க போக முடியவில்லையே என்று ஆற்றாமையாய் வந்தது. தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு உட்கார்ந்திருந்தான்
சிற்பிகாவோ கட்டிலில் உட்கார்ந்திருந்தவள் முகம் பொத்தி அழுதுக் கொண்டிருந்தாள். அவளது அறைக்குள் சென்றவனோ தன் தோழியின் அழுகைக்கான காரணம் அறியாதவனா. இப்போதே சந்தோஷ் தன்னிடம் கூறிய ரகசியத்தை சொல்லி விடலாமா என்று கூட தோன்றியது.
அவரசப்பட வேண்டாம் என்று சந்தோஷ் கூறியது அவன் நினைவில் வர ‘சாரி சிற்பி’ என்று கண்ணை மூடித்திறந்து “சிற்பிகா என்னடி பண்ணுற இப்போ உன் ஹெல்த் ஓகே வா?” என்று அவள் பக்கம் போனான்.
“டேய் சந்தோஷ் சாரை ஏன் இங்க கூட்டிட்டு வந்த? இந்த ஒருவாராமாத்தான் நான் அவரை மறக்க முயற்சி பண்ணுறேன். இப்ப என்னடானா அவரை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க” என்று திலீப்பிடம் சண்டைக்கு வந்தாள் சிற்பிகா.
‘அச்சோ என்னை இங்கே கூட்டிக்கொண்டு வந்ததே உன் அருமை காதலன் சந்தோஷ்தான்னு நான் எப்படிச் சொல்வேன் உன்கிட்ட’ என்று மனதிற்குள் புலம்பினான் திலீப்.
“என்னடா பேசமாட்டேன்கிற ஓ உன் காதலுக்கு உதவி செய்தார்னு இங்க கூட்டிட்டு வந்தியா?” என்று அவனது கையை பிடித்து கிள்ளினாள்.
“ஆஆ கிள்ளாதடி சந்தோஷ் சார் உன்னை பார்க்கணும்னு கட்டாயம் செய்தாரு எனக்கு வேற வழி தெரியலை மறுக்க முடியாம கூட்டிட்டு வந்தேன் போதுமா! இப்போ நீ வரதும் வராததும் உன் விருப்பம் ஆளவிடுங்க சாமி!” என்று எஸ்கேப் ஆனான் திலீப்.
“போடா நான் வரமாட்டேன் எனக்கு தலைவலிக்குது படுத்திருக்கானு சொல்லிடு” என்றாள் மனதை கல்லாக்கிக்கொண்டு சற்று முன்னே சந்தோஷை காண அவள் கால்கள் பரபரத்தது அவளுக்குத்தானே தெரியும்.
“ஏய் என்னால சந்தோஷ் சார்கிட்ட பொய் சொல்ல முடியாது” என்று சொல்லிக்கொண்டிருக்க உமா சிற்பிகாவின் அறைக்குள் வந்தவர் “சிற்பிமா சந்தோஷ் தம்பி உன்னை பார்க்க வந்திருக்காரு வா” என்று கூப்பிட “அம்மா எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு என்னால கீழ வரமுடியாது கிறுகிறுனு வருது” என்று தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
மகளை கட்டாயப்படுத்தி கூப்பிட உமாவின் மனது ஏற்கவில்லை. அதே சமயம் வீட்டுக்கு வந்தவர்களை முகம் வாடி அனுப்புவதையும் அவர் விரும்பவில்லை. “சரி போனிலாவது பேசுடி வீட்டுக்குள்ள வந்தவர்களை பார்க்காம இருப்பது தவறு” என்று மகளுக்கு அறிவுரை கூறினார் உமா.
“சரிமா” என்றவள் “டேய் சந்தோஷ் சாருக்கு போன் போடு” என்று நகத்தை கடிக்க ஆரம்பித்தாள்.
சொர்க்க வாசல் திறக்கும் நாளில் பெருமாளை பார்க்க தவம் கிடப்போமே அது போல சந்தோஷோ தன் தேவதையின் திருமுகம் பார்க்க காத்திருந்தான்.
சந்தோஷின் போன் அடிக்க திலீப் எண் வர இவன் எதுக்கு போன் போடுறான் ஒரு வேளை சிற்பிக்கு உடம்பு சரியில்லையோ என்று பதட்டத்துடன் போனை எடுத்தவன் “சொல்லு திலீப்” என்றவுடன்
“சா…சார் நா…நான் சி…சிற்பிகா பேசுறேன் எனக்கு கொஞ்சம் தலைவலி கீழே வரமுடியல கிறுகிறுன்னு வருது” என தட்டு தடுமாறி அவனிம் பொய் பேசிவிட்டாள்.
நேரில் தன் தேவதை முகத்தின் தரிசனம் கிடைக்காமல் போனாலும் அவளது குரலையாவது கேட்டோமே என்று ஆனந்தப்பட்டவன் “ஏன் இன்னும் உடம்பு சரியாகலையா? வாங்களேன் ஹாஸ்பிட்டல் போகலாம் எனக்கு தெரிந்த நியூராலஜி டாக்டர் இருக்காரு அவர் தலைவலிக்கு ஸ்பெஷலிஸ்ட்” என்றான் அவள் மீது கொண்ட அக்கறையில்.
ஆனந்தனுக்கோ அவனது பேச்சில் அவனது முக பாவனையில் தன் மகளை எந்தளவு காதல் செய்கிறான் என்று தெரிந்து போனது. கடவுளே என் மகளின் காதல் ஜெயித்து விட்டது அவள் கனவு நாயகன் என் மகளுக்கு கிடைத்துவிட்டான் என்று அகம் மகிழ்ந்து போனார். ஆனால் தன் மருமகனால் தன் மகள் படும் அவஸ்தை கண்ணில் பார்க்கப்போகிறார் என்பது அவருக்கு தெரியாது போனது.
10. உறவு
“மாத்திரை போட்டிருக்கேன் சார் கொஞ்ச நேரத்துல சரியாகிடும்! சாரி சார் என்னால கீழ வரமுடியல” என்றாள் தயங்கிக்கொண்டே.
“சரி நீங்க வரவேண்டாம் நான் உங்களை பார்க்க வரேன்” என்றவன் “அங்கிள் நான் சிற்பியை பார்த்துட்டு வரேன்” என்று மாடியில் இருந்த அவளது அறைக்கு இரண்டு இரண்டு படிகளாக தாவிச் சென்றான். சிற்பிகாவோ சந்தோஷ் தன் அறைக்கே வருவான் என எதிர்பார்க்கவில்லை.
அச்சோ இவரு ஏன் என்னை பார்க்க வரணும் என்று நிமிர்ந்து பார்க்க அவள் முன்னே புன்னகையுடன் நின்றிருந்தான் சந்தோஷ். ஒரு வாரமாக அவன் கண்மணியை பார்க்காமல் இருந்தவனுக்கு அவனது நெஞ்சம் பதறி போனது. அவளது புஷ்டியான கன்னம் வற்றிப் போய் இருந்தது. அவனது பார்வை வீச்சை தாங்காது தலை குனிந்துக் கொண்டாள்.
உமா சிற்பிகா பக்கம்தான் நின்றிருந்தார். “ஆன்ட்டி எனக்கு கொஞ்சம் தண்ணி கிடைக்குமா!” என்றான். உமா அங்கே நின்றால் சிற்பிகாவுடன் பிரைவசியாக பேச முடியாதென உமாவை கீழே அனுப்பிவிட்டான் சந்தோஷ் தந்திரமாக.
திலீப்போ சந்தோஷிடம் “நீங்க பேசிட்டு வாங்க சார் நான் கீழ இருக்கேன்” என்று தான் எதற்கு அங்கே நந்தி போலனு நினைத்து இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியே வந்தான்.
கீழேச் சென்ற உமாவோ சோபாவில் உட்கார்ந்திருந்த ஆனந்தனிடம் “என்னங்க இது இந்த சந்தோஷ் தம்பி நம்ம பொண்ணை பார்க்குற பார்வையே சரியில்லை எனக்கென்னவோ இது தப்பா தெரியுது! நீங்க ஏன் நம்ம பொண்ணு அறைக்கு அவரை வர அனுமதிச்சீங்க?” என்றார் கோபப்பட்டு.
“நீ அந்த தம்பிய பார்க்குற கண்ணோட்டம் சரியில்லை. நம்ம முன்னாலதான் சந்தோஷ் தம்பி நம்ம பொண்ணு அறைக்குள்ள போயிருக்கு! நம்ம பொண்ணுக்கிட்ட எந்த எல்லையில ஒரு பையன்கிட்ட பேசணும்னு சொல்லித்தான் வளர்த்திருக்கேன். நீ போய் அவங்களுக்கு ஏதாவது குடிக்க கொடு! கார்மெண்ட்ஸ்ல ஆளுங்களுக்கு பீஸ் எடுத்து போடணும்” என்று அங்கிருந்து கிளம்பிவிட்டார் ஆனந்தன்.
உமாவோ “நான் சொல்றதை எப்ப சரினு சொல்லியிருக்கீங்க” என்று சந்தோஷுக்கு ஜுஸ் போடச் சென்றார்.
திலீப் சென்றதும் பெட் கவரை இறுக்கிபிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் சிற்பிகா. சந்தோஷின் முகத்தை கூட அவளால் பார்க்க முடியவில்லை. பெண்ணவளின் கண்ணிலிருந்து கண்ணீர் இப்பவோ அப்பவோ வந்துடும் என்ற நிலையில் சந்தோஷை உட்காருங்க என்று சொல்லாமல் கூட அமர்ந்திருந்தாள்.
ம்ம் என்று பெரும்மூச்சுவிட்ட சந்தோஷோ அறைக்குள் இருந்த நாற்காலியை அவனாகவே எடுத்து சிற்பிகாவின் பக்கம் போட்டான். அப்போதும் அவள் நிமிர்ந்து பார்த்தாள் இல்லை. கண்ணில் கண்ணீர் ஒரு சொட்டு கீழே விழ இனி என்னவள் அழக்கூடாதென அவள் கண்ணீரை கையில் ஏந்தி வாங்கினான் சந்தோஷ்.
விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் செங்கடல் நிறத்தில் கலங்கி இருந்தது. அவளது கண்ணீரை தன் விரல் கொண்டு துடைத்து விட்ட சந்தோஷோ “நான் உன்கிட்ட நிறைய பேசணும்னு வந்திருக்கேன் இப்படி அழுது என்னை பலவீனம் ஆக்காதடி” என்றவனின் குரல் உடைந்து வந்தது.
“நீங்கதான் என்னை பலவீனம் ஆகிட்டீங்க சந்தோஷ்” என்றாள் விசும்பிக்கொண்டே.
“இப்படி உனக்கு உடம்பு சரியில்லாம போறதுக்கு காரணம் நான்தானே! பட்டாம்பூச்சி போல சந்தோசமா பறந்து திரிஞ்சவளை சிறைபிடிச்சு வச்சிட்டேன்ல! சாரி என்னை மன்னிச்சிடு” என்று சிற்பிகாவின் கையை பிடித்தான்.
“எ…என்ன பண்ணுறீங்க” என்று அவன் கைகளை விலக்கிவிட அவனோ இனி உன் கையை விடமாட்டேன் என்று இறுக்கிப்பிடித்திருந்தான்.
சரியாக உமா கையில் ஜுஸுடன் உள்ளே வந்தவுடன் சிற்பிகா “விடுங்க” என்று தன் கையை சந்தோஷின் கையிலிருந்து விலக்கிவிட்டாள். உமாவோ சந்தோஷை முறைத்து பார்க்க “ஆன்ட்டி உங்க பொண்ணை நான் எதுவும் செய்திட மாட்டேன் என்னை 100 பர்சன்ட் நம்பலாம். ஒரு ஐஞ்சு நிமிசம் எங்களை தனியா பேச விடுங்க” என கெஞ்சாமல் அனுமதியாக கேட்டான்.
“உடம்பு சரியில்லாம இருக்கற பொண்ணுகிட்ட எவ்ளோ நேரம் பேசுவீங்க தம்பி! அவளே மனசு உடைஞ்சு போயி கிடக்கா அதையும் இதையும் பேசி என் பொண்ணு மனசை காயப்படுத்தாதீங்க! நான் ஒத்த பிள்ளையை கறிவேப்பிலை கொத்தாட்டம் பெத்து வைச்சிருக்கேன்! நீங்க மறுபடியும் ஏதாவது பேசி வச்சு என் பொண்ணை பெட்ல படுக்க வச்சிராதீங்க!” என படபடவென பொறிந்து தள்ளினார்.
உமா சந்தோஷிடம் கோபமாக பேசியதை கண்டவளுக்கு மனம் வலித்தது. “ம்மா சும்மாயிருங்க. அவர் பேசிட்டு போகட்டும்” என்று அவள் குரலை உயர்த்தவும் “உமா கீழ வா” என்று ஆனந்தன் குரல் கொடுத்தார்.
“க்கும் அப்பா, மகள் ரெண்டுபேருக்கும் நடுவுல நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன் பாரு” என்று புலம்பியவர் “சீக்கிரம் பேசிட்டு கீழ வந்துருங்க தம்பி” என்று சிடுசிடுப்பாக பேசியவர் மகளை திரும்பி திரும்பி பார்த்துச் சென்றார் உமா.
“என்ன பேசணுமோ பேசிட்டு கிளம்புங்க சந்தோஷ்” என்றாள். இப்போது அவளுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது போல பேசினாள்.
இன்னும் நாற்காலியை அவள் பக்கம் நெருக்கமாய் போட்டு “என்னை இப்பவும் விரும்புறியா?” அவளது கையை மீண்டும் அழுத்தமாய் பிடித்துக்கொண்டு கேட்டான் அவளது கண்களை பார்த்தபடி.
“இப்போ எதுக்கு தேவையில்லாதது பேசுறீங்க சந்தோஷ். நான் உங்களை விரும்பலை” என்று வெறுப்பு கொண்டு எங்கோ பார்த்துக்கொண்டு பேசினாள். சிற்பிகா தன்னை விரும்பலை என்று சொன்னதும் சந்தோஷுக்கு மனம் வலித்தது. அவள் காதல் தன்னிடம் சொன்ன போது அவள் நான் காதலை மறுத்த போது அவளுக்கு வலித்திருக்கும் தானே என்று மனதை பக்குவப்படுத்திக்கொண்டவன் “நான் இப்போ உன்னை லவ் பண்ணுறேனு சொன்னா உன் முடிவு என்னனு தெரிஞ்சுக்க ஆசைப்படறேன்” என்றான் உருகும் குரலில்.
“ஏன் சந்தோஷ் என்னை சித்ரவதை பண்ணனும்னு முடிவு பண்ணி வந்திருக்கீங்களா! உங்கம்மா என்னை மருமகளா ஏத்துக்கலைனா மறுபடியும் உன்னை லவ் பண்ணலைனு ஈசியா சொல்லிடுவீங்க! அதையெல்லாம் எனக்கு தாங்குற சக்தி இல்லை.” என்று மூச்சு வாங்க பேசியவள் “உங்கம்மாகிட்ட போய் நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன் எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு கேளுங்க. அவங்க உங்க லவ்வை அக்சப்ட் பண்ணட்டும் அப்புறம் வந்து என் கிட்ட லவ்வை சொல்லுங்க. சும்மா வீட்டுக்குள்ள வந்து வம்பு பண்ணிக்கிட்டு! நான் நீங்க பேசினதுல ரொம்ப நொந்து போயிருக்கேன் சந்தோஷ். இப்போதைக்கு இடத்தை காலி பண்ணுங்க” என்று வெடுக்கென பேசிவிட்டு அங்கிருந்து நகர போனவளின் கையை இழுத்துப்பிடித்து “என்னடி நான் இறங்கி வந்தா நீ ஏறிப்போறியா? நாளைக்கு திலீப் கல்யாணத்துக்கு வா அப்புறம் நடக்கிறத பாரு! எங்கம்மாவே உன்னை மருமகளா ஏத்துப்பாங்க! அப்போ உன் கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு போவேன்” என ஆக்ரோஷமாய் பேசியவன் அவளது இதழை நோக்கி குனிந்தான்.
தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி தள்ளிவிட்டு பால்கனிக்குள் புகுந்து கதவை லாக் செய்துக் கொண்டாள்.
தான் செய்யவிருந்த காரியத்தை நினைத்து தலையில் அடித்துக்கொண்டு “சாரி சிற்பி கதவை திற” என்று அவன் கெஞ்சும் நிலைக்கு வைத்துவிட்டாள்.
“முடியாது இங்கிருந்து கிளம்புங்க சந்தோஷ் உங்கம்மா என்னை மருமகனு சொல்லட்டும் அப்புறமா நான் உங்க லவ்வை ஏத்துக்குறேன்” என்று கதவு மேலயே சாய்ந்துக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.
‘ச்சே நாம ஒன்னு நினைச்சு வந்தா. இவ இப்படி பண்ணுறாளே நாளைக்கு நீ எனக்கு பொண்டாட்டியா இருப்படி தாலிக்கட்டிட்டு உனக்கு இருக்கு. சும்மா என்மேல தெய்வீக காதல் போல ஐ.லவ்.யு சந்தோஷ்னு சும்மா அழுதா! இப்போ நான் ஐலவ்யு சொல்லும் போது இவ என்னை வெறுப்பேத்துறா!’ என்று காலை நிலத்தில் உதைத்துக்கொண்டு வெளியேறப்போக அவனால் முடியவில்லை நாற்காலியில் அப்படியே உட்கார்ந்து விட்டான்.
சிறிது நேரம் கழித்து சந்தோஷ் கிளம்பியிருப்பான் என்று பால்கனி கதவை திறந்து வந்தவள் திகைப்பில் நின்று விட்டாள். சந்தோஷ் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு ஸ்டெயிலாக உட்கார்ந்திருந்தான்.
இவர் போகலையா மறுபடியும் பால்கனி கதவு பக்கம் போனவளை ஒரே எட்டில் தாவி வந்தவன் அவளை இடுப்பில் கைப்போட்டு தன் அணைப்பில் கொண்டு வந்து அவளது முகத்தை கையில் ஏந்தி “என் கண்ணைப்பார்த்து சொல்லு நீ என்னை லவ் பண்ணலைனு சொல்லுடி” என்றான் பல்லைக்கடித்து.
“ஆமா லவ் பண்ணுறேன்! என் நெஞ்சுல பச்சை குத்தி வச்சிருக்கேனே உங்களை எப்படி மறக்க முடியும்?” என்று அவன் மீதே சாய்ந்து அழுதாள் பெண்ணவள். சட்டென்று அவளது கழுத்தில் போட்டிருந்த ஷாலை கொஞ்சம் விலக்கி பார்க்க சந்தோஷ் என்று பச்சை குத்தி வைத்திருந்தாள். “என்ன பண்ணுறீங்க?” என்று அவன் செய்த செயலில் அவன் அணைப்பிலிருந்து பதறி விலகி ஷாலை சரிசெய்து போட்டு சந்தோஷை முறைத்தாள்.
“உன்னோட லவ்வுக்கு தகுந்த ஆள் நான் கிடையாதோனு எனக்கு தோணுது சிற்பி. உன்னால மூச்சு கூட சரியா விட முடியலை அப்போ கூட ஐலவ்யு சந்தோஷ்னு சொல்ற. உன் ஆழ்மனசுக்குள்ள எவ்ளோ ஆழமா நான் பதிஞ்சிருக்கேனு அப்போத்தான் புரிஞ்சிக்கிட்டேன். நீ எந்தளவு என்னை லவ் பண்ணியிருக்கனு! இப்போ உன் நெஞ்சுல பச்சையும் குத்தி வச்சிருக்க! கல்யாணம் பண்ணினா உன்னைத்தான் பண்ணுவேன்” என அவன் அழுத்தமாக சொன்னதும் இது கனவா நனவா என்று தன் கையை கிள்ளிப்பார்த்துக் கொண்டாள் சிற்பிகா.
“இது நிஜம்தான் டி” என்று அவளது கையில் மென் முத்தம் பதித்து “ஐ.லவ்.யு” என அவளருகே கட்டிலில் ஏறி உட்கார்ந்தான்.
“எப்படி என்மேல உங்களுக்கு திடீர் காதல் வந்துச்சு! பக்கம் வந்து உட்காராதீங்க! எழுந்து என்ன பேசணுமோ பேசிட்டு கிளம்புங்க” என்றாள் இதழை சுளித்து.
“நான் இன்னும் நெருங்கி உட்காருவேன்! இப்படி முத்தம் கூட கொடுப்பேன்” என்று அவளது கன்னத்தில் அவசரமாக முத்தம் கொடுத்தான்.
அவளோ பதறி கட்டிலிலிருந்து துள்ளி குதித்து நின்று “இத பாருங்க இப்படி முத்தம் கொடுக்கற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. நான் உங்களை கண்மூடித்தனமா காதலிச்சேன்தான் ஏன் இப்பவும் காதல் செய்யுறேன் ஆனா உங்கம்மாகிட்ட போய் என்னை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லிட்டு வந்து எனக்கு முத்தம் கொடுங்க நான் வாங்கிக்குறேன். இப்போ நீங்க பேசற ஆசை வார்த்தையை நம்பி நான் ஏமாற மாட்டேன்! வந்த வழிய பார்த்து வெளியே போங்க” என்றாள் வாசலை நோக்கி கையை காட்டி.
சந்தோஷோ தான் காதல் சொன்னதும் கட்டி பிடிச்சு முத்தம் கொடுப்பாள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனான். அவளோ “இன்னும் என்ன இங்க உட்கார்ந்திருக்கீங்க வெளியே போங்க” என்றாள் மனதை கல்லாக்கிக்கொண்டு.
“நான் போகமாட்டேன் பேபி! நீ என்னை லவ் பண்ணுறேனு சொல்லு அப்புறம் போவேன்” என சின்ன பையன் போல அடம்பிடித்தான் சந்தோஷ்.
“அதுக்கு வேற ஆளை பாருங்க!” என்றாள் அவன் முகம் பார்க்க நாணமுற்று தரையை பார்த்தபடி.
அவளுடன் நெருங்கி உட்கார்ந்து “தினமும் என் அறையில ப்ளவர் வாஷ்ல ரோஜா பூ வச்சு என்னை மயக்கிட்டு இப்போ வந்து எப்படி திடீர்னு காதல் வந்துச்சுனு கேட்குறியா?” என்று அவளது கன்னத்தில் பட்டென்று முத்தமிட்டான்.
‘டேய் லவ் சொல்லி ஒரு நிமிசம் கூட ஆகலையே அதுக்குள்ள இப்படி முத்தம் கொடுக்குற’ என்றது அவனது மனசாட்சி.
‘ஏய் தூரப்போ நான் என் லவ்வரை தாஜா பண்ணிட்டு இருக்கேன்’ என்று மனசாட்சியை அடித்து விரட்டினான்.
அவன் முத்தம் கொடுத்ததில் ஃப்ரீஸ்ஸாகிவிட்டாள். அவளுக்குள் இருந்த காதல் துளிர் விட்டு மீண்டும் மெருகேறியது. “எ…என்ன பண்ணுறீங்க சந்தோஷ் பர்ஸ்ட் உங்கம்மா நம்ம காதலுக்கு ஓ.கே சொல்வாங்களா? எனக்கு பயமா இருக்கு” என்றாள்.
“ம்ம் கண்டிப்பா எங்கம்மா சொல்ற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என் கூறியவன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.
சிற்பிகாவுக்கோ கோபம் தலைக்கேறியது “விடுங்க சந்தோஷ் இதென்ன விளையாட்டு லவ் பண்ணுறேனு சொல்றீங்க உங்கம்மாவுக்கு பிடிச்ச பொண்ணுதான் கல்யாணம் பண்ணுவீங்கனு சொல்றீங்க நான் எதை நம்புறது” என்று அவனது நெஞ்சிலேயே சாய்ந்துக் கொண்டாள்.
“நான் எங்க உன்னை பலவீனம் ஆக்கினேன்” என்றான் புருவம் சுருக்கி. “நீங்கதான் உங்கம்மா பார்த்து வைக்குற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னப்ப என்னோட உயிரே போறது போல இருந்துச்சு!” என்றாள் கண்ணீருடன்.
“உன் லவ் என்னை கட்டிப்போட்டு இழுத்து வந்துடுச்சுடி! கவலைப்படாத அம்மா கண்டிப்பா உன் கழுத்துல தாலி கட்டச்சொல்வாங்க. நாளைக்கு நீ நம்ம வீட்டுக்கு வந்துடுவ!” என்றவன் “நான் உன்கிட்ட கேட்கறது என்னனா என் அம்மா என் மேல பாசமா இருப்பாங்க! எனக்கு பார்த்து பார்த்து ஒன்னும் ஒன்னும் செய்வாங்க! நீ நான் என் புருசனுக்கு செய்யுறேனு முந்திக்கிட்டு வரக்கூடாது. அவங்க உன்னை ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலும் நீ பெருசா எதையும் எடுத்துக்க கூடாது! அப்புறம் முக்கியமா என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிக்கணும். அதுக்காக என்கிட்ட எதையும் சொல்லக்கூடாதுனு நான் சொல்லலை. குறிப்பா எக்காரணம் கொண்டும் நாம தனிக்குடித்தனம் போகக்கூடாது போகணும்னு சொல்லக்கூடாது!” என்றான் கண்டிப்பாக.
‘சந்தோஷ் இவ்ளோ தூரம் இறங்கி வந்து பேசியது அவளுக்கு ஆச்சரியமாகவும் தன்மேல் இத்தனை சீக்கிரம் காதல் வந்துடுச்சு. நான் நாயை போல துரத்தி விட்டும் என் அறையிலேயே இருக்கிறானா அவனும் என் அளவு காதல் என் மேல வச்சிருக்கான் நான் உனக்கு தண்டனை கொடுக்குறேனு ஒருமாசம் அலைய விடணும்’ என்று யோசித்தவள்,
“நான் எதுக்கு சந்தோஷ் அத்தைகிட்ட சண்டைக்கு போகப்போறேன். அவங்க என்ன பேசினாலும் நான் எதிர்த்து பேசமாட்டேன் போதுமா! மாமியார் மெச்சும் மருமகள்னு பேர் எடுப்பேன்” என்று அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். அமுதவள்ளியை பற்றி தெரியாமல் பேசுகிறாள் சிற்பிகா.
11. உறவு
சிற்பிகாவோ “சந்தோஷ் நீங்க என்னோட அறைக்கு வந்து ரொம்ப நேரமாச்சு. அம்மாவுக்கு நீங்க என்னோட அறைக்குள்ள வந்தது பிடிக்கல. சீக்கிரம் கிளம்புங்க” என்றவள் அவன் அணைப்பிலிருந்து விலகி இருந்தாள்.
இருவருக்கும் பிரியவே மனம் விரும்பவில்லை. சந்தோஷிற்கோ அவளை தன் அணைப்பிலேயே ஒட்டி வைத்துக்கொள்ள ஆசையாய் இருந்தது. லவ் சொல்லியாச்சுல ஒரு டீப் கிஸ் பண்ணிக்கலாமாவென்று கேட்க தூண்டியது மனதை அடக்கி அணை போட்டுக்கொண்டான். சிற்பிகா அணைத்துக்கொண்டிருந்ததில் அவளது ஷால் பெண்ணவளின் மேனியிலிருந்து விலகி அவளது கோபுர அழகுகள் அவனுக்கு அப்பட்டமாக காட்சியளிக்க பெரும்மூச்சு விட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.
“சிறு தினங்களில் என்னை சிறை எடுத்துவிட்டாயடி பெண்ணே” என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டு “நாளைக்கு இந்த நேரம் உன்னை என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போயிருப்பேன்டி கிளம்புறேன் பை” என்று கிளம்பிவிட்டான்.
உமா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வைத்துக்கொண்டு நின்றார். ஆனந்தனோ “வாங்க தம்பி பேசி முடிச்சிட்டீங்களா. என் பொண்ணு அவ காதல் பத்தி என்கிட்ட சொல்லிட்டா! நானும் உங்களை தினமும் கண்காணுச்சுக்கிட்டேதான் இருந்தேன்” என்றார்.
“நீங்க டிடெக்டிவ் வைச்சு என்னை பாலோ பண்ணியது எனக்கு தெரியும்” என்று இதழ் வளைத்து புன்னகைத்தான்.
“உங்க அம்மா இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா தம்பி! ஏன்னா நாங்க ஒரு பொண்ணை வச்சிருக்கோம் அவ நாளை பின்ன கண்ணை கசக்கிட்டு எங்க முன்ன வந்து நிற்கக்கூடாது! நான் உங்கம்மாகிட்ட வந்து முறையா பேசுறேன்” என்றார் பொறுமையாக. புகுந்த வீட்டில் தன் மகள் சந்தோசமாக வாழ்க்கையை துவங்கட்டும் என்று ஆசை அவருக்கு.
“நீங்க நாளைக்கு வரை பொறுமையா இருங்க அங்கிள்!” என்றவன் “வரட்டுமா அத்தை?” என்று நமட்டுச் சிரிப்புடன் உமாவை பார்த்து தலையை ஆட்டினான் சந்தோஷ்.
“மகராசனா போய்ட்டு வாங்க” என கையெடுத்து கும்பிட்டார்.
ஆனந்தனுக்கும் சிரிப்பு வந்தது “ஏன் டி உனக்கு என்னாச்சு இப்படி என் மானத்தை வாங்குற? அவர் நம்ம வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளை” என்று உமாவின் முதுகில் ஒரு அடி வைத்தார்.
“இப்ப எதுக்கு என் முதுகுல அடிச்சீங்க? நான் உங்க மாப்பிள்ளையை மகராசன்னுதானே சொன்னேன்” என்றார் இடுப்பில் கைவைத்தபடி.
“போடி காமெடி பீஸு பொண்ணோட நகைகளை லாக்கர்ல இருந்து எடுத்துட்டு வந்துடறேன்” என்று கிளம்பிவிட்டார் ஆனந்தன்.
சிற்பிகாவுக்கோ இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. நாளைக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்குவேனு சொன்னாரே! அவங்க அம்மா ஏதும் வேண்டாம்னு சொல்லிடுவாங்களா! இவர்தான் அம்மா பையனாச்சே! என்று குழம்பிக்கொண்டே படுத்திருந்தாள்.
சந்தோஷ் சிறப்பிகாவின் போனில் வந்தான். இவருக்கு வேற வேலையில்லை பாரு என்று போனை எடுக்காமல் இருந்தாள்.
போனில் மேசேஜ் வந்தது என்னவென்று படித்து பார்த்தாள். “இப்ப போனை எடுக்கலைனா நான் உன் பெட்ரூம்குள்ள வருவேன்” என்றான் அதிரடி சாக்லேட் பாயாக மாறி.
“எப்படி இந்த சிடுமூஞ்சிக்கு என்மேல இவ்ளோ காதல் வந்துச்சு? நாம இப்ப போன் எடுக்கலைனா நேர்ல வந்தாலும் வந்துடுவாரு” என்று போனை எடுத்தவள் “ஹலோ சொல்லுங்க இந்த நேரம் போன் பண்ணியிருக்கீங்க” என்றாள் வேண்டுமென்றே “காதலிக்கு எந்த நேரம் வேணாலும் போன் பண்ணலாம். நாளைக்கு இந்த நேரம் நீ என்னோட அறையில இருப்படி” என்றதும் “இதை சொல்லத்தான் எனக்கு போன் பண்ணீங்கனா போனை வைங்க எனக்கு தூக்கம் வருது” என்றாள் சிடுசிடுப்பாக.
“பார்த்தியா புள்ள பூச்சி போல இருந்தவ இப்ப என்கிட்ட துள்ளி குதிச்சு பேசறா. இப்ப என் மேல பயம் போயிடுச்சில்ல” என்றான் தாடையை தேய்த்துக்கொண்டே.
அமுதவள்ளிக்கு தண்ணீர் தாகம் எடுக்க தண்ணீர் குடிக்க வந்தவருக்கு சந்தோஷ் போனில் பேசிய சத்தம் கேட்டது. “சந்தோஷ் என்னப்பா மணி பதினொன்று ஆச்சு இன்னும் தூங்காம யாருகிட்ட போன் பேசிட்டிருக்க” என்று கீழே நின்று குரல் கொடுத்தார்.
“ஏய் சில்வண்டு ஒரு நிமிசம் இருடி” என்றவன் “ம்மா யூஎஸ்ல இருந்து என் பிரண்ட் பேசுறான்மா” என்று பொய்யாக பேசினான் முதன்முறை அமுதவள்ளியிடம்.
“ஓ. சரிப்பா சீக்கிரம் தூங்கு நாளைக்கு காலையில ராமு அண்ணா வீட்டுக்கு போகணும்ல” என்று கூறிவிட்டுச் சென்றார்.
அமுதவள்ளிக்கு மகன் செய்யும் தில்லு முல்லு வேலைகள் அவருக்கு தெரியாமல் போனது. எப்போது தெரியப்போகிறதோ அன்னைக்குத்தான் சந்தோஷ் அமுதவள்ளியின் முழு கோபத்தை பார்க்கப்போகிறான்.
திவ்யாவுக்கு வீட்டைச்சுற்றிலும் காவல் வைத்திருந்தார் ராமு. ராமு டவுனுக்குச் சென்றிருந்த நேரம் காவல் ஆட்களின் கண்ணில் படாதவாறு தப்பித்து வெளியே வந்தாள். தீலிப் காருடன் திவ்யாவின் வீட்டிற்கு பின்னே நின்றிருந்தான். திவ்யாவை பார்த்ததும் கார் கதவை திறந்து வைத்தான். அவளும் வேகமாக ஓடிவந்து காரில் ஏறிக்கொண்டதும் திலீப்பும் காரில் ஏறியதும் இருவரும் அணைத்துக்கொண்டனர். வெகுநாட்கள் கழித்து பார்க்கும் காதலர்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன! திவ்யாவின் முகம் முழுவதும் முத்தம் கொடுத்து அவளது இதழை கவ்விக்கொண்டான். ஒரு நிமிடம் இருவரும் இதழை விட்டுப்பிரிய மனமில்லை. வெளியேச் சென்ற கார் ஹார்ன் சத்தம் கேட்டு இருவரும் பிரிந்துக் கொண்டனர்.
சந்தோஷ் ஆட்களை வைத்தே அனைத்து காரியத்தையும் கச்சிதமாக முடித்திருந்தான். சந்தோஷும் கிளம்பி வந்தான் ஹாலுக்கு அமுதவள்ளி பூஜையறையிலிருந்து வெளியே வந்தவர் “என்ன கண்ணா இவ்ளோ சீக்கிரம் கிளம்புற” என்று மகன் நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டே கேட்டார்.
சந்தோஷோ “ஆமாமா மன்த் எண்ட் வேலைகள் முடிக்கணும்! கொஞ்சம் வேலையை முடிச்சி வைச்சிட்டு உங்களுக்கு போன் பண்ணுறேன் நீங்க கிளம்பி ராமு அங்கிள் வீட்டுக்கு வந்துடுங்க” என்றவனுக்கு திலீப் போன் செய்தான்.
“ம்ம் நான் கிளம்புறேன்” என்று கார் கீயை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன் “திலீப் திவ்யாவை கூட்டிட்டு வந்துட்டியா எல்லாம் ரெடியா?” என்று கேட்டுக்கொண்டே காரை எடுத்தான்.
“எல்லாம் ரெடியா இருக்கு சார்” என்றவனுக்கு மனதில் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. திவ்யாவோ திலீப்பின் கையை விடவேயில்லை. இருவரும் ரிஜிஸ்டர் ஆபிஸ் வெளியே நின்றிருந்தனார். சந்தோஷ் காரைக் கண்டதும்தான் இருவருக்கும் நிம்மதி வந்தது. காரிலிருந்து இறங்கியவன் “வாங்க போகலாம்” என்று ரிஜிஸ்டர் ஆபிஸிற்குள் சென்றான். சந்தோஷ் பின்னே இருவரும் சென்றனர்.
ஆனந்தன் சிற்பிகாவையும் உமாவையும் கூட்டிக்கொண்டு கால் டாக்சியில் வந்திறங்கினார்.
உமாவோ “என்னங்க நம்ம பொண்ணுக்கு கல்யாணம் இல்லையே என்னை ஏதும் எமாத்தி கூட்டிட்டு வந்திட்டீங்கனா முன்னமே சொல்லிடுங்க நான் என் மனசை திடப்படுத்திக்குறேன்” என்றார் கடுகடுவென.
“அம்மா நம்ம திலீப்க்குத்தான் கல்யாணம் பேசாம வாங்க அவனுக்கு நாமதான் ஹெல்ப் பண்ணனும் வாங்க” என்று உமாவின் கையை பிடித்துக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபிஸிற்குள் நுழைந்தாள்.
“வாங்கத்தை” என்று உமாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டான் சந்தோஷ். “ம்க்கும்” என்று முகத்தை திருப்பிக்கொண்டார். அவனோ உமாவின் அருகே வந்து “அத்தை நீங்க இன்னிக்கு சிற்பியை விட ரொம்ப அழகா வந்திருக்கீங்க” என சிரித்து விட்டு சிற்பிகாவை பார்த்து “சூப்பரா இருக்கேடி” என்றான் கண்ணை சிமிட்டி.
ரிஜிஸ்டர் வந்து விட மாலையை எடுத்து திலீப்பிடம் கொடுத்தான் திலீப்பிற்கு முகம் வியர்த்துக்கொட்டியது. தாயும் தந்தையும் வந்துவிட்டனர். அவர்களுக்கும் ராமுவின் செல்வாக்கை நினைத்து மகனை ஏதும் செய்து விடுவாரோ என்ற பயம் இருந்தது. சந்தோஷ் இருக்கும் தைரியத்தில் இருந்தனர்.
சந்தோஷ் தாலி சரடை தங்கச் சங்கலியோடு எடுத்து ஆனந்தன் கையில் கொடுத்து “நல்லாயிருக்கட்டும்னு வாழ்த்தி திலீப் கையில கொடுங்க அங்கிள்” என்றான் புன்னகையுடன்.
ஆனந்தனும் தாலி சரடை வாங்கி சாமியை கும்பிட்டு திலீப் கையில் கொடுக்க அவனோ கைகள் நடுங்க தாலியை வாங்கியவன் திவ்யாவின் கழுத்தி கட்டி அவளை மனைவியாக்கிக் கொண்டான்.
பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்தனர். திலீப் பெற்றோர்களை சாப்பிட வைத்து “நீங்க வீட்டுக்கு கிளம்பி போய் ஆரத்தி ரெடி பண்ணி வைங்க. பொண்ணையும் மாப்பிள்ளையையும் ராமு அங்கிள் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என்றான் மென்நகையுடன்.
அவர்களோ “தம்பி என் பையனை ஏதாவது” என்று திலீபின் தாய் அங்காலாய்ப்பாய் கேட்க
“உங்க மகன் மேல ஒரு கீறல் கூட விழாது போதுமா ஆன்ட்டி” என்றவனோ “திலீப் நீங்க ஒரு கார்ல ஏறுங்க நான் என்னோட கார்ல வந்துடறேன்” என்று கூறியவன் காரில் ஏறினான். திலீப்பும் திவ்யாவும் ஒரு காரில் ஏறிக்கொண்டனர்.
“அங்கிள் நீங்க தனி காரில வந்துடுங்க அப்போதான் யாருக்கும் சந்தேகம் வராது” என்றான் இந்த நாடகத்தின் தலைவர் சந்தோஷ்.
“சரிங்க மாப்பிள்ளை” என்ற ஆனந்தனோ கால்டாக்சியில் ஏறினார்.
அவருக்கு அமுதவள்ளிக்கு ஏதும் தெரியாமல் இத்தனை விசயம் நடக்கின்றதே என்று உறுத்தல் இருந்தது. “சந்தோஷ் மாப்பிள்ளை அம்மாகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு என்னை கட்டிப்போட்டுட்டாரு! கடவுளே என் பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கணும்!” என கடவுளை வேண்டிக்கொண்டே வந்தார்.
சிற்பிகாவுக்கோ ராமுவின் வீட்டுக்கு போக பயமாக இருந்தது. அங்கே அமுதவள்ளி அத்தை வந்துருவாங்க என்னை மருமகளா ஏத்துப்பாங்களா? என்ற அச்சத்தில் உட்கார்ந்திருந்தாள்.
ராமு திவ்யா வீட்டில் இல்லையென்று தெரிந்து “அந்த நாதியத்த ஒண்ணுமில்லா பர…தேசியை தேடி போய்ட்டாளா இதோ வரேன்” என்று சட்டத்தில் சொருகி வைத்திருந்த அருவாளை எடுத்துக்கொண்டு கடும் சினம் கொண்டு ஆத்திரத்துடன் வாசலுக்கு வந்தார் ராமு.
சரியாக வீட்டு வாசல் முன்னே கார் நிற்க திலீப்பும் திவ்யாவும் கழுத்தில் மாலையுடன் இறங்கினர் “ஓடுகாலி வந்துட்டியா?” என்று அருவாளை தூக்கிக் கொண்டு ஓடிவந்தவர் முன்னே வந்து ஆஜானுபாகுவாய் நின்றான் சந்தோஷ்.
“சந்தோஷ் தம்பி நீங்க எங்க வந்தீங்க என் மகள் இந்த வெறும்பயலை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்குறா அவ கழுத்துல இருக்க தாலியை அ…த்து எறிஞ்சிட்டு நீங்க தாலி கட்டுங்க” என்றார் வெறிநாய் பிடித்தவர் போல நின்றார் ஆங்காரமாய்.
“நிறுத்துங்க அங்கிள் திவ்யாவுக்கு நீங்கதான் அப்பாவானு எனக்கு சந்தேகமா இருக்கு. அவ உங்ககிட்ட வந்து எனக்கு திலீப்பை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு கேட்டா தானே. ஆனா நீங்க அவன் வெட்டிபையன் கல்யாணம் பண்ணி வைக்க முடியாதுனு மிரட்டியிருக்கீங்க. நாளைக்கு நாம இந்த உலகத்தை விட்டு போகும்போது இடுப்புல கட்டியிருக்க கோமணத்தை கூட கொண்டு போக முடியாது சும்மா பணம் அந்தஸ்துனு பேசிக்கிட்டு இருக்காம திவ்யாவை ஆசிர்வாதம் பண்ணுங்க. உங்க கிட்ட இருக்க பணத்தை உங்க பொண்ணுக்கு கொடுங்க அவ சந்தோசமா வாழ்ந்துட்டு போறா எதுக்கு இந்த வறட்டு கௌரவம் உங்களுக்கு” என்று அவருக்கு பாடம் எடுத்தான்.
உமாவோ ‘இவரு பேங்க் மேனேஜருக்கு படிக்காம வக்கீலுக்கு படிச்சு இருக்கலாம்’ என்று வாய் மேல் விரல் வைத்து பார்த்தார்.
ஆனந்தனோ “நம்ம மாப்பிள்ளை பாய்ண்ட்டா பேசுறாரு” என்று பெருமையாக பார்த்துக்கொண்டிருந்தார்.
சிற்பிகாவோ ‘இவரே இப்படி பேசுறாரே அத்தையை நினைச்சா எனக்கு கைகால் எல்லாம் வெடவெடனு நடுங்குதுப்பா’ என்ற படபடப்புடன் நடப்பதை வேடிக்கை பார்த்திருந்தாள்.
“ஓ நீங்க பேசறதை பார்த்தா என் பொண்ணுக்கு நீங்கதான் கல்யாணம் செய்து வச்சிருப்பீங்க போல தப்பு பண்ணிட்டீங்க தம்பி என்னை பத்தி சரியா தெரியாம போச்சு உங்களுக்கு” என்று தலையை ஆட்டியவர் “என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நீ யார்டா?” என்று சந்தோஷின் சட்டையை பிடித்தார். அவனோ அசையாமல் நின்றான்.
“என் மகன் மேல இருந்து கையை எடுங்க ராமு அண்ணா” என்று அமுதவள்ளி வெண்கலக்குரல் கேட்டு கூட்டியிருந்த கூட்டம் அனைவரும் திரும்பி பார்த்தனர்.
அமுதவள்ளியோ கூட்டத்தை விலக்கிக்கொண்டு ராமுவின் பக்கம் வந்தவர் “என் பையன் மேல கைய வைக்க யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? ஹான்” என்று காளி போல அவதாரம் எடுத்து நின்றார் அமுதவள்ளி.
“உன் மகன் அதோ அங்க நிற்குறான் பாரு ஒண்ணுமில்லாத அன்னக்காவடி பையன்! அவனுக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருக்கான். நீ நம்ம சரவடையில பெரிய பணக்காரினுதான் உன் வீட்டு பையனை மாப்பிள்ளையாக்க நினைச்சேன். இப்ப குரங்கு பிடிக்க பிள்ளையார் கதையா முடிச்சிருக்கு. உன் மகனை அடிக்காம கொஞ்சுவாங்களா!” என்றார் தெனாவட்டாக ராமு.
“நிறுத்துங்க என் பையனை குறை சொல்லாதீங்க உங்க பொண்ணு ஆசைப்பட்டா அந்த பையனைத்தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் அதை விட்டு உங்க பொண்ணு வேற ஒருத்தனை விரும்புறானு தெரிஞ்சும் எங்களை பொண்ணு பார்க்க வரச்சொன்னது உங்க தப்பு. அதான் என் பையன் உங்க பொண்ணுகிட்ட பேசியிருப்பான் உங்க பொண்ணு என் பையன்கிட்ட உதவி கேட்டிருப்பா அவனும் செய்திருப்பான். என் மகனை பற்றி எனக்கு தெரியும் என் பையனுக்கு எல்லாரையும் வாழ வச்சுத்தான் பழக்கம். உங்க பொண்ணை ஆசிர்வாதம் பண்ணுற வழியை பாருங்க ஒத்த பொண்ணை பெத்து வளர்த்திருக்கீங்க. சும்மா தைய்யா தக்கானு குதிச்சுக்கிட்டு இது நல்லாவா இருக்கு உங்களுக்கு” என்று ராமுவின் கொட்டத்தை அடக்கி பேசினார்.
“அப்படியா தங்கச்சி இதோ இந்த கூட்டத்தில நிற்குறாங்களே இதுல வசதியே இல்லாம இருக்கற பொண்ணுக்கு உன் பையனை தாலி கட்டச் சொல்லு! நான் என் பொண்ணை மறுவார்த்தை சொல்லாம என்கூட சேர்த்துகிடுறேன்” என்றார் மீசையை தடவிக்கொண்டே.
அமுதவள்ளி கொஞ்சம் கூட யோசிக்காமல் சந்தோஷின் கையை பிடித்து “நான் எந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டச் சொன்னாலும் நீ தாலி கட்டுவியாப்பா?” என்றதும் சிற்பிகாவுக்கு உயிர் தன் உடலை விட்டு போய் விடும் போல இருந்தது கண்ணை மூடிக்கொண்டு ‘பிள்ளையாரே எனக்கு என் சந்தோஷை கொடுத்திடு’ என வேண்டிக்கொண்டிருந்தாள்.
ஆனந்தனோ முகத்தில் பசையற்று நின்றிருந்தார். உமாவோ இப்ப என்ன பண்ணப்போறீங்க மாப்பிள்ளை என்ற விதத்தில் சந்தோஷை பார்த்திருந்தார்.
“நீங்க யாரு கழுத்துல தாலி கட்டச் சொன்னாலும் கட்டுறேன்மா” என்றவனுக்கும் ஒருவித படபடப்பு இருக்கத்தான் செய்தது. தனக்கு பிடித்த சிற்பிகா கழுத்தில்தான் தாலி கட்டச் சொல்லுவார் அமுதவள்ளி என்று உறுதியாய் நம்பிக்கை வைத்திருந்தான்.
அமுதவள்ளியோ கூட்டத்தில் ஒவ்வொரு பெண்ணாய் பார்த்துக்கொண்டு வந்தவர் கைகள் நடுங்கிக்கொண்டு கடவுளை உதடசைத்து வேண்டிக்கொண்டு நின்றிருந்த சிற்பிகாவை கைகாட்டி “இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டு” என்றார்.
“அப்பாடா” என்று பெரும்மூச்சு விட்டுக்கொண்டனர் திலீப்பும் திவ்யாவும். தங்களால் காதல் செய்த ஜோடிகள் பிரிவது அவர்களுக்கு சங்கடத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. இப்போது தான் நிம்மதியாக இருந்தது.
சந்தோஷோ எனக்கு என் அம்மாவை பத்தி தெரியும் என்று மனதில் நினைத்தவன் “நீங்க சொன்னா நான் தாலி கட்டுறேன்மா”
என்றவனை பார்த்து சிரித்த அமுதவள்ளியோ தன் கழுத்தில் கிடந்து பரம்பரை சங்கிலியை கழட்டி “இத இந்த பொண்ணு கழுத்துல போட்டு விடு! நாளைக்கு நல்ல நாள் இருக்கு நாளைக்கே தாலி கட்டிடலாம்” என்றார் ராமுவை பார்த்துக்கொண்டே
ஆனந்தன் “நான் பொண்ணோட அப்பா” என்று அமுதவள்ளி முன்னே போய் நின்றார். அவர் அமுதவள்ளியிடம் உண்மையை சொல்ல ரெடியாக நின்றார். சந்தோஷோ எதுவும் சொல்ல வேண்டாம் என்று தலையசைத்தான்.
“உங்க பொண்ணை எங்க வீட்டு மருமகளா நான் கூட்டிட்டு போறேன் உங்களுக்கு விருப்பம் தானே” என அதிகாரமாக கேட்பது போல கேட்டார் அமுதவள்ளி.
சண்முகமோ அமுதவள்ளி பக்கம் வந்தவர் “எங்க வீட்டு மருமகளா அனுப்பி வைங்க நாங்க எங்க வீட்டு பொண்ணா பார்த்துக்குறோம்” என்று வாக்கு கொடுத்தார் ஊரார் முன்னே! அமுதவள்ளி அழுத்தமான பார்வையுடன் நின்றிருந்தவர் “என் வீட்டுக்காரர் வாக்கு கொடுத்துட்டார்ல்ல அது போதாதா அமுதவள்ளி குடும்பத்துக்கு பொண்ணு கொடுக்க நீ நானு போட்டி போடுறாங்க நீங்க என்ன இப்படி யோசிக்குறீங்க” என்றார் முகம் சுளித்து அமுதவள்ளி.
சண்முகமோ “அமுதா அவங்க பொண்ணு வீட்டுக்காரவங்க திடீர்னு பொண்ணு கேட்டா என்ன சொல்வாங்க” என்று சற்று குரலை உயர்த்த
“ம்ம் அப்படியா!” என்றவர் கண்ணை மூடிக்கொண்டு நிற்கும் சிற்பிகா முன்னே சென்ற அமுதவள்ளியோ “இந்தா பொண்ணு” என்று அவள் கையை பிடிக்க அவளோ மெதுவாக கண்ணைத்திறந்து திருவிழாவில் காணாமல் போன பெண் போல விழித்தாள். சந்தோஷிற்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டான். எல்லாம் தன் பிளான்படி சரியாக நடக்கிறது என்று கல்லுளிமங்கன் போல நின்றான் சந்தோஷ்.
“சொ…சொல்லுங்க” என்றாள் எச்சிலை விழுங்கிக்கொண்டு
“உன்னை என் வீட்டு மருமகளா கூட்டிட்டு போகப்போறேன்” என்று அவளது கையை பிடித்தார். சந்தோஷ் உன்னை மருமகள்னு எங்கம்மாவே சொல்வாங்க பாரு என்று சொன்னது போலவே அமுதவள்ளியும் தன்னை கேட்பது கண்டு ஆச்சரியத்துடன் விழி விரித்து சந்தோஷை பார்த்தாள். அவனோ தலையை ஆட்டு என்றான் சைகையில் அவளோ கீ கொடுத்த பொம்மை போல “ம்” என்று தலையை அசைத்தாள்.
“உங்க பொண்ணே சரினு சொல்லிட்டா சந்தோஷ் சங்கிலியை போட்டு கூட்டிட்டு வா என் மருமகளை” என்றார் அமுதவள்ளி கம்பீரமாக.
சங்கிலியை வாங்கிய சந்தோஷோ தந்தை சண்முகத்தை பார்க்க “அவரும் கட்டுப்பா” என்று தலையசைக்க ஆனந்தனை பார்க்க அவரும் மனம் நிறைந்து “என் பொண்ணு கழுத்துல தாலி கட்டுங்க” என்றார். சந்தோஷோ தன் முழு திட்டம் ஜெயித்து விட்டது என்ற மகிழ்ச்சியில் தன் சில்வண்டு சிற்பிகாவின் கழுத்தில் செயினை போட்டு விட்டான். சிற்பிகாவோ தன் கனவில் வந்த நாயகன் இன்று தன் கழுத்தில் தாலி கட்டிவிட்டான் என்ற சந்தோச பூரிப்பில் இருந்தாள். அந்த செயின் அமுதவள்ளியின் பாட்டி அவருக்கு போட்டுவிட்டது. இந்நாள் வரை அவர் கழுத்திலிருந்து கழட்டியதே இல்லை. சண்முகமோ தன் மனைவியின் செயலில் புதிர் இருக்குமோ என்று பார்த்துக்கொண்டிருந்தார்.
சந்தோஷ் முகத்தில் இருந்த சந்தோஷம் கண்டு “என்னப்பா சந்தோஷ் உன் விருப்பப்படியே கல்யாணம் நடத்திட்டேன்” என்று கண்ணைச்சிமிட்டினார் அமுதவள்ளி.
12.உறவு
“ம்மா” என்றான் சந்தோஷ் புருவமுடிச்சுடன்.
“உன் முகத்துல இருக்க சந்தோசத்தை பார்த்து சொன்னேன் கண்ணா! நீ ஏன் இப்படி ஷாக் ஆகுற?” என்றவரோ அடுத்த நிமிடம் “ராமு அண்ணா நான் சொன்னது போல என் பையனுக்கு எங்களை விட வசதி குறைவா இருக்க பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க போறேன். இப்ப உங்க பொண்ணை ஏத்துக்கிறீங்களா?” என்றார் கண்ணை உருட்டி.
ஊர்மக்கள் முன்னாடி எதுவும் விதண்டாவதமாக பேச முடியாதென எச்சிலை விழுங்கிய ராமுவோ “ம்ம் நீயே ஏழை விட்டு பொண்ணை மருமகளா ஏத்துக்கும் போது நான் ஏத்துக்க மாட்டேனா! நானும் என் பொண்ணையும் மாப்பிள்ளையும் ஏத்துக்குறேன்” என்றார் விருப்பமில்லாத குரலில்.
“வேண்டா விருப்பமா என்னை உங்க பொண்ணா ஏத்துக்க வேண்டாம்ப்பா! மனசார என்னை உங்க வீட்டு பொண்ணா என் வீட்டுக்காரரை மாப்பிள்ளையாய் ஏத்துக்கும் போது நான் உங்க வீட்டுக்குள்ள வரேன். இப்போ நான் உங்களை நம்பி என் வீட்டுக்காரரை கூட்டிட்டு வர எனக்கு பயமாயிருக்கு. நீங்க எங்களை கொலை பண்ணக்கூட அஞ்ச மாட்டீங்க! நாங்க வரோம்! முடிஞ்சா எங்களை ஆசிர்வாதம் மட்டும் பண்ணுங்க” என்று ராமுவின் காலில் விழப்போனாள் திவ்யா.
“ம்ம் என் காலுல விழற தகுதி கூட உன் புருசனுக்கு கிடையாது உன்னை மட்டும் ஆசிர்வாதம் பண்ணுறேன்” என எக்குதப்பாக பேச.
“அப்படி உங்க ஆசிர்வாதமே எனக்கு தேவையில்லை” என்று அவள் வெடுக்கென பேசியவள் வெற்றி களிப்புடன் நின்ற அமுதவள்ளியிடம் “ரொம்ப நன்றி அத்தை” என்று கூறியவள் திலீப்பை பார்க்க இருவரும் அமுதவள்ளியின் காலில் சேர்ந்து விழுந்தனர்.
“பதினாறு செல்வம் பெற்று வாழுங்க” என்று ஆசிர்வாதம் செய்தவர் “நாளன்னைக்கு காலையில எங்க குலதெய்வக் கோவில என் பையனுக்கும் சிற்பிகாவுக்கும் பிரம்ம முகூர்த்தத்துல கல்யாணம் வந்துடுங்க” என்று கூறியவர்
இன்னமும் அடங்காத கோபத்துடன் நின்றிருந்த ராமுவின் பக்கம் சென்று “ஒத்தை பிள்ளையை வச்சிக்கிட்டு இந்த வரட்டு பிடிவாதம் தேவையில்லாதது உங்க உடம்புல ஓடுற ரத்தம் சுண்டி போச்சுனா நாளைக்கு உங்கள பார்த்துக்க நாதியில்லாத போகும். திவ்யாவை சீக்கிரம் சேர்த்துக்க பாருங்க” என்றார் அமுதவள்ளி.
“மருமகளை கூட்டிட்டு வா சந்தோஷ்” என்று காரில் ஏறப்போன அமுதவள்ளியை “ஒரு நிமிசம் தங்கச்சி” என்ற ராமுவோ “என்கிட்ட இருக்க பணம் பாதாளம் வரை பாயும். காச தூக்கிப்போட்டா ஆயிரம் பேர் என்னை பார்த்துக்க வருவாங்க என் பொண்ணுத்தான் வரணும்னு இல்லை. அண்ட் உன் மருமகளை நீ எப்படி வச்சிருக்கிறனு பார்க்கத்தானே போறேன்” என்றார் விவகாரமாக.
“பாருங்க பாருங்க நல்லா பாருங்க” என்று ஏளனமாக சிரித்தபடி காரில் ஏறினார் அமுதவள்ளி.
சிற்பிகாவோ ஆனந்தனையும் உமாவையும் பார்த்திருந்தாள். காரில் இருந்தவாறே சிற்பிகாவை பார்த்தவர் “அம்மாடி மருமகளே உன் அம்மாவும் அப்பாவும் எங்க வீட்டுக்கு வருவாங்க! நீ கிளம்பி வா வீட்டுக்கு போய் நம்ம வீட்டு விசயத்தை பேசிக்கலாம்” என்றவர் “டிரைவர் வண்டியை எடுப்பா” என்றார் கம்பீரமாய்.
நடந்தது கனவா நனவா என்று திகைப்பில் நின்றிருந்த சிற்பிகாவை தன் தோளோடு அணைத்துக்கொண்ட சந்தோஷோ “ஏய் பொண்டாட்டி நான் உன் கழுத்துல செயின் போட்டு எவ்ளோ நேரம் ஆகுது இன்னும் நீ இந்த உலகத்துக்கு வரலையா?” என்று அவளது தோளில் அழுத்தமாக கையை பதித்தான்.
அவள் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வந்தது. “ஏய் இனி உன் கண்ணுல தண்ணி வரவே கூடாது” என்று அவளது கண்ணீரை சுட்டு விரலால் துடைத்துவிட்டான் சந்தோஷ்.
“சந்தோஷ் அத்தையை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு. வீட்லயும் இப்படித்தான் பேசுவாங்களா?” என்றாள் எச்சிலை விழுங்கிக்கொண்டு.
“ஹா ஹா” என்று சிரித்த சந்தோஷோ “நான் இருக்கும் போது நீ யாருக்கும் பயப்பட தேவையில்லைடி! என் லட்டு!” என்று அவள் கன்னம் தட்டி “அம்மா பார்க்கத்தான் டெரர் அவங்க மனசு குழந்தையை போலடி! வா போகலாம்” என்று கார் பக்கம் கூட்டிக்கொண்டு வந்தான். ஆனந்தனும் உமாவும் தங்கள் மகள் வாழ்க்கை வசந்தமாகி விட்டதென மகள் அவள் கணவனின் அணைப்பில் இருப்பதை பூரிப்புடன் பார்த்திருந்தனர்.
“மாமா, அத்தை ரெண்டு பேரும் எங்கவீட்டுக்கு வாங்க போகலாம்” என்று கூறியவன் சிற்பிகாவை அணைப்பில் வைத்துக்கொண்டே காரில் ஏறினான். ஆனந்தனும் உமாவும் காரில் ஏறிக்கொண்டதும். சந்தோஷ் சந்தோசமாக காரை எடுத்தான்.
“அமுதவள்ளி என்னை ஊர் மக்கள் முன்னாடி தலைகுனிய வச்சிட்டு நீ மட்டும் நல்லகுடி நாச்சி ஆகிட்ட ம்ம் இனிதான் இந்த ராமு யார்னு உனக்கு காட்டப்போறேன்” என்று அரிவாளை தூக்கி போட்டார் ராமு ஆக்ரோசமாக.
அமுதவள்ளியோ வீட்டுக்குச் சென்றதும் ஆரத்தி கரைத்து வைத்து மகனையும் மருமகளையும் வரவேற்க காத்திருந்தார். சண்முகமோ “அமுதா உன்னை புரிஞ்சுக்கவே முடியலைடி. நம்ம அந்தஸ்துக்கு தகுந்த பொண்ணா பார்க்கணும்னு தினமும் பாட்டா பாடுவ இப்போ எப்படி கூட்டத்துல இருந்த பொண்ணுக்கு செயினை போடச் சொன்ன?” என்றார் கேள்வியாக.
“அந்த பொண்ணு நம்ம சந்தோஷ் பேங்குல வேலை செய்யுறா திலீப்புக்கு பிரண்டு போல அதான் அவன் கல்யாணத்துக்கு வந்திருக்கா. சந்தோஷ் குணம் எப்படினு அவளுக்கு தெரிஞ்சிருக்கும் அவனுக்கு பிடிச்சது போலவும் நடந்துப்பா! அதுவுமில்லாம அந்த கூட்டத்துல நம்ம பையனுக்கு ஏத்த ஜோடியா கண்ணுக்கு நல்ல லட்சணமா தெரிஞ்சா! அதான் அந்த பொண்ணு கழுத்துல செயின் போட்டு விடச்சொன்னேன்!” என்று சொல்லிக்கொண்டிருக்க. சந்தோஷின் கார் வீட்டு வாசலில் நின்றது.
காரை நிறுத்தியதும் ஆனந்தனும் உமாவும் தயங்கியபடி இறங்கினர். இறங்கியவுடன் உமாவோ சந்தோஷின் வீட்டை பார்த்து அசந்து விட்டார். தங்கள் வீட்டை விட நான்கு மடங்கு பெரியதாக இருந்தது வீட்டை சுற்றிலும் மரங்களும் பூச்செடிகளுமாக இருந்தது. “என்னங்க இந்த வீட்ல நம்ம மக வாழப்போறானு ஆனந்தமாத்தான் இருக்கு. ஆனா நம்ம பொண்ணையும் மதிச்சு நடந்துப்பாங்களா. நிறைய பணக்கார இடத்துல நம்மள மாதிரி வசதியில்லாத குடும்பத்துல பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுமைப்படுத்துறதை நான் கேள்விப்பட்டிருக்கேன் இப்போ எனக்கு பயமாயிருக்குங்க” என்று ஆனந்தனின் கையை பிடித்துக்கொண்டார் உமா.
“ச்சு சும்மாயிருடி அமுதவள்ளியம்மா பேசினதை பார்த்தா நல்லவங்க போலத்தான் தெரியுது! நீ தேவையில்லாம கற்பனை குதிரையை ஓட விடாதே” என்று உமாவின் கையை அழுத்தம் கொடுத்து விலக்கி விட்டார் ஆனந்தன்.
சந்தோஷ் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கியதும் அச்சத்துடன் உட்கார்ந்திருக்கும் சிற்பிகாவுக்கு கதவை திறந்து விட்டான்.
அமுதவள்ளி தன் மகனின் செயலில் சிரித்துக்கொண்டார். சண்முகமோ மனைவியின் காதில் வந்து “இனிமே உன்னோட பாசத்தை பங்குபோட ஆள் வந்தாச்சு அமுதவள்ளி” என்று கண்ணைச்சிமிட்டி அவரை வெறுப்பேத்தினார்.
சண்முகத்தை முறைத்து விட்டு “சந்தோஷ் நல்ல நேரம் முடியறதுக்குள்ள அந்த பொண்ணை அழைச்சிட்டு வா! ஆரத்தி எடுக்கணும்” என்றதும் சந்தோஷ் சிற்பிகாவின் கையை பிடித்து “பயப்படாதடி நான் இருக்கேன்” என்று கைகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டு வந்து நின்றான்.
ஆரத்தி எடுத்து முடித்த அமுதவள்ளியோ ஆனந்தனை பார்த்து “இன்னிக்கும் நாளையும் நீங்க எங்க கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கோ” என்றதும் ஆனந்தனோ “உங்களுக்கு அட்சேபனை இல்லனா நாங்க வேணா எங்க வீட்டுக்கு போய் தங்கிக்கிறோமே” என்றார் தயக்கத்துடன்.
“அமுதவள்ளியோட சம்பந்தியாகிட்டீங்க நீங்க இங்க தயக்கம் எல்லாம் பார்க்க கூடாது தம்பி! சம்பிரதாயப்படி தாலி கட்டாம மாப்பிள்ளை வீட்டுக்குள் பொண்ணு வரது எங்க வழக்கத்துல இல்லை. இனி புதுசா நடக்கவும் நான் அனுமதிக்க மாட்டேன். ஏன் எங்க வீட்ல இருக்க உங்களுக்கு என்ன கஷ்டம்” என்றார் கணீர் குரலில் அமுதவள்ளி.
சண்முகமும் “நீங்க இன்னிக்கு இங்க தங்கினா நாங்க சந்தோசப்படுவோம்” என்றதும் இவ்ளோ தூரம் சொல்லும் போது தங்கள் வீட்டுக்கு போவது நல்லாயிருக்காதெனவும் மகளுடன் ஒருநாள் தங்கிடலாம். என்று எண்ணியவர் இனிமேல் சிற்பிகா இந்த வீட்டுல தானே இருக்க போறா என்று நினைத்தவருக்கு மனம் வெதும்பி வந்தாலும் அதை மறைத்து சிரித்தபடி “சரிங்கம்மா நாங்க கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கிறோம்” என்றார் ஒருமனதாக.
சிற்பிகா சந்தோஷின் கையை விட்டு ஆனந்தனின் கையை பிடித்துக்கொண்டாள். சந்தோஷோ இன்று தன்னுடன் சிற்பிகா தன் அறையில் தங்கிக்கொள்வாள் என்று பெரிய ப்ளான் எல்லாம் போட்டு வைத்திருந்தான். அமுதவள்ளி அதையெல்லாம் தவிடு பொடியாக்கி விட்டார்.
ஆனந்தனுடன் நிற்கும் சிற்பிகாவை ஆற்றாமையுடன் பார்த்திருந்தான் சந்தோஷ். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது போய்டுச்சே என்று கவலையாக நின்றிருந்தான். அமுதவள்ளியின் முன்னால் சிற்பிகாவை சைட் கூட அடிக்க முடியாது போனது சந்தோஷிற்கு.
சரி நாளைக்கு ஒரு நாள் தானே பொறுமையா இருடா கிணத்து தண்ணிய வெள்ளமா கொண்டு போய்டும் என்று ஆர்ப்பரித்த மனதை அடக்கிக்கொண்டு நின்றான் சிற்பிகாவை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான்.
சிற்பிகாவை உற்று பார்த்த அமுதவள்ளியோ சேலையை முந்தானையை ஒற்றை கையில் பிடித்துக்கொண்டு சிற்பிகாவின் பக்கம் வந்தவர் “இந்தாம்மா பொண்ணு கழுத்துல என்ன சன்னமா ஒரு சங்கிலி மட்டும் போட்டிருக்க. என் பையன் போட்டு விட்ட செயின்தான் பெரிசா இருக்கு. கையில் பில்லாட்டம் ஒரு வளையல். காதுல ஒரு சின்ன தோடா போட்டிருக்க. நாளன்னைக்கு கல்யாணம் இன்னிலேயிருந்து உன் கழுத்து நிறைய செயினும்! காதுல ஜிமிக்கி தோடும்! கை நிறைய வளையிலும்! சலங்கை வைத்த கொலுசும், போட்டிருக்கணும்! பகலில் பட்டுப்புடவை கட்டிக்கோ! அப்புறம் நைட் வேணா உனக்கு பிடிச்ச மாதிரி ட்ரஸ் போட்டுக்கோ!” என்று கட்டளை இடுவது போல சொல்ல “ம்ம்” என்று பூம்பூம் மாடு போல தலையாட்டிய சிற்பிகாவோ “அத்தை என் பேரு சிற்பிகா” என்றாள் மெல்லிய குரலில். அவள் கட்டியிருந்த சேலையின் முந்தானையை திருகிக்கொண்டு தைரியத்தை வரவழைத்து பேசிவிட்டாள்.
“தப்புதான்மா உன் பெயரை நான் கேட்டிருக்கணும் இனி சிற்பிகானு கூப்பிடுறேன் போதுமா?” என்றார் அவ்வளோ தான்.
அடுத்து சிற்பிகா பக்கம் நிற்கும் ஆனந்தனை பார்த்து “இன்னிக்கு மதியத்துக்கு மேல ஆகிடுச்சு நாளைக்கு சனிக்கிழமை கல்யாணம் வேண்டாம் நாளன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தநாள்தான் பிரம்ம முகூர்த்ததுல வச்சிக்கலாம் உங்களுக்கு சம்மதம் தானே” என்றார் ஏதோ ஒப்புக்கு கேட்பது போல இருந்தது.
ஆனந்தனோ பெண்ணை பெற்று விட்டோம் அதுவுமில்லாமல் மகள் விருப்பப்பட்ட வாழ்க்கை இது. அவள் சந்தோசமா இருக்கட்டும் மாப்பிள்ளை தங்கமா இருக்கும் போது நாம ஏன் கவலைப்படணும் என்று மனதில் எண்ணியவர் “எங்களுக்கு சம்மதம் தான் அக்கா” என உரிமையாக கூப்பிட்டார் அமுதவள்ளியை.
அமுதவள்ளியை அக்கா என்றதும் அவர் பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை. “ம்ம் நாளன்னைக்கு கல்யாணம் இப்பவே வேலையெல்லாம் ஆரம்பிக்கணும்! நாளைக்கு பொண்ணுக்கு தேவையானது எல்லாம் எங்க சார்பா வந்துடும்! உங்க பொண்ணுக்கு என்ன செய்யத்தோணுதோ அதையும் செய்துடுங்க நான் வேண்டாம்னு சொல்லமாட்டேன்! நாளைக்கு என் மருமகள் வெறும் கையோடு வந்துட்டானு யாரும் நாக்கு மேல பல்லை போட்டு பேசக்கூடாது. உங்க தகுதிக்கு நீங்க என்ன செய்யணுமோ அதை செய்திடுங்க” என்றவர் எதுவும் பேசாமல் அமைதியாய் நிற்கும் உமாவை பார்த்தவர் “நீங்க ஏன் எதுவும் பேசமாட்டேன்கிறீங்க இன்னிக்கு மௌன விரதமா?” என்றார் எதார்த்தமாக.
உமாவோ ‘இந்தம்மா என்ன அதிகாரம் பண்றது போல கேட்குது’ என்று ஆனந்தனை பார்த்தார்.
“நான் கேள்வி கேட்டா நீங்க என்னை பார்த்து பதில் சொல்லுங்க. என்ன உங்க வீட்டுக்காரரை பார்க்குறீங்க” என்று அதட்டலாக கேட்க
உமாவோ “நானும் பேசுவேன்ங்க எங்க என்னைய பேச விட்டீங்க” என்று அவரும் பதிலடி கொடுத்தார்.
அமுதவள்ளியோ “அப்படியா நீங்க மட்டும் என் கூட வீட்டுக்கு வாங்க வேலையெல்லாம் நிறைய இருக்கு பேசிக்கிட்டே வேலை செய்யலாம்” என்றவுடன்
அச்சோ நான் வரலைப்பா என்று பேசுவதற்குள் “நீ போய்ட்டு வா உமா” என்றார் ஆனந்தன்.
அடப்பாவி மனுசா இந்த வாயாடி மனுசிக்கிட்ட என்னைய மாட்டி விட்டீங்களே என்று கணவனை முறைத்தார் உமா.
“சிற்பிகா உனக்கு மெஹந்தி போட ப்யூட்டிஷியன் சாய்ந்தரம் ஆறு மணிக்கு வந்துடுவாங்க! நீ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு” என்று கூறி விட்டு உமாவிடம் “நீங்க வாங்க போகலாம்” என்று விறு விறுவென நடந்துச் சென்றார் அமுதவள்ளி.
அமுதவள்ளியின் பின்னால் சென்ற உமாவோ அங்கே நின்ற சந்தோஷை பார்த்து முறைத்திட
“இனி தினமும் என்னை முறைப்பீங்களா அத்தை?” என்று சிரிப்புடன் கேட்டிட
“என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை அமைதியா போறேன்” என்று பேசிவிட்டு வீட்டுக்குள் சென்றார் உமா.
சண்முகமோ ஆனந்தனையும் சிற்பிகாவையும் கெஸ்ட் ஹவுஸ்க்கு கூட்டிச்சென்றார். சந்தோஷும் சண்முகத்துடன் நடந்து வருவது போல நடந்து வந்தான் மரியாதை நிமித்தமாக.
சந்தோஷ் சிற்பிகாவை மென்று தின்றுவிடும் அளவிற்கு பார்த்து வைத்தான். சிற்பிகாவோ பெரியவங்க இருக்காங்க இவர் பார்வையே சரியில்லையென்று அவளது பார்வையை தோட்டத்தை நோக்கிச் செலுத்த முற்பட்டாள்.
கெஸ்ட்ஹவுஸுக்குள் சென்றதும் “நீங்க ரெஸ்ட் எடுங்க மதியம் சாப்பாடு கொண்டு வரச்சொல்லுறேன் ஏதும் வேணும்னா எனக்கு போன் பண்ணுங்க நான் வரேன்” என்று கூறிய சண்முகமோ ஆனந்தனிடம் பேசிக்கொண்டிருக்க சிற்பிகாவோ ஜன்னல் வழியே பூச்செடிகளை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு பிடித்த ஜாதி மல்லி பூ மொக்காக இருக்க உடனே பறித்துவிட ஆசை வந்தது சிற்பிகாவுக்கு.
“என்ன மருமகளே தோட்டத்தை சுத்தி பார்க்கணுமா!” என்று சண்முகம் கேட்க “ஆமா மாமா” என்று தலையை ஆட்டினாள்.
சண்முகம் பக்கம் அடக்கமாக கைகட்டிக்கொண்டு நின்ற சந்தோஷிடம் “மருமகளை தோட்டத்துப்பக்கம் கூட்டிட்டு போ” என்றதும் பாலுக்கு பூனையை காவலுக்கு அனுப்பினாற் போல சந்தோஷ் மனதில் குத்தாட்டம் போட்டு “வாங்க சிற்பிகா கூட்டிட்டு போறேன்” என்று நல்ல பையன் போல பேசி கூப்பிட. சிற்பிகாவோ ‘அச்சோ! இவரு கூடவா? எங்க வீட்டுக்குள்ளயே கையை சும்மா வச்சி இருக்கல. இப்போ இது அவர் வீடு என்னை எதுவும் பண்ணிட்டா’ என்று யோசித்துக்கொண்டிருந்தவளின் கையை பிடித்துக்கொண்டு “வா போகலாம்” என்று தோட்டத்துக்கு கூட்டிச்சென்றான் சந்தோஷ்.
“ஏய் என்னடி ரொம்ப ஓவரா பண்ணுற! நான் உன்னை பார்த்தா நீயும் என்னை பார்க்கணும் நான் சிரிச்சா நீயும் என்னை பார்த்து சிரிக்கணும்” என்றான் பொய் கோபமாக.
“அப்படியா அத்தை முன்னாடி என்கிட்ட சிரிக்க வேண்டியதுதானே” என்று அவள் சந்தோஷின் தோளில் இடித்தாள்.
“இன்னும் ரெண்டு நாள் போகட்டும் எங்கம்மா முன்னாடி உனக்கு முத்தமே கொடுப்பேன்! எங்கம்மா எனக்கு பிரண்ட் மாதிரி ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என்று சட்டை காலரை
தூக்கிவிட்டுக்கொண்டான்.
“சரி வாங்க பூ பறிக்கலாம்” என்று ஜாதிப்பூ செடிப்பக்கம் போனவளை அலேக்காக தூக்கிக்கொண்டு தோட்டத்தில் இருக்கும் ஜிம்மிற்குள் தூக்கிச் சென்றான் அவளிடம் வம்பு செய்ய.
“அச்சோ சந்தோஷ் அத்தை வந்துட்டா வம்பாயிடும்” என்று அவள் அவன் கைகளில் துள்ள.
அவனோ “அதான் உன் கழுத்துல செயின் போட்டு என் பொண்டாட்டியா அச்சாரம் போட்டிருக்கேன்” என்று ஜிம்மிற்குள் சென்று அவளை அங்கிருந்த அவன் ரெஸ்ட் எடுப்பதற்காக போட்டு வைத்திருந்த மெத்தையில் உட்கார வைத்து இறுக்கிக்கட்டிபிடித்தான் மோகத்துடன்.
“சந்தோஷ் கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி நடக்கறது தப்பு வாங்க போகலாம்” என்று எழும்ப பார்க்க
“ஏய் இருடி ஒரு ஐஞ்சு நிமிசம் ஒரு முத்தம் கூட உனக்கு நான் நல்லா கொடுக்க முடியல” என்று அவள் முகம் நோக்கி குனிய “பர்ஸ்ட் நைட் அப்போ கொடுத்துக்கோங்க இப்ப என்னை விடுங்க எனக்கு கூச்சமா இருக்கு” என்று அவன் கைகளில் நெளிந்தாள் பேதை பெண்.
“என்னடி ரோஸ் வச்சு லவ் எல்லாம் பண்ணின. இப்போ முத்தம் கொடுக்குறேன் சொன்னா ரொம்ப பிகு பண்ணுற ப்ளீஸ்டி லட்டு” என்று அவள் கன்னத்தில் பசக் என்று முத்தம் கொடுத்தான்.
“அச்சோ” என்று அவள் அவன் முத்தம் கொடுத்ததை துடைக்க “அப்படியா இங்க பாருடி” என்றவன் அவளது கன்னத்தை தாங்கி கண்களை ஆழ்ந்து பார்க்க அவளோ கண்களை மூடிக்கொண்டாள்.
“ஓபன் ஐஸ் சிற்பி” என்று இதழ் கொண்டு ஊதினான். அவளோ அவனது மூச்சுக் காற்று பட்டு மெல்ல இமைகளை விரிக்க. அவள் கண் இமைகளுக்கு முத்தம் கொடுத்து அடுத்து அவளது செம்மாதுளை இதழை கவ்விக்கொண்டான் ஆழமாக அழுத்தமாக அவளது இதழ் ரேகை அழியும் அளவிற்கு முத்தமிட்டுக்கொண்டிருந்தான். அவளின் கைகளை பிடித்து சிகைக்குள் சிக்க வைத்துக்கொண்டான். அவளோ அவன் கொடுக்கும் முத்தத்தில் மயங்கி அவன் சிகையை கோதிவிட அவனுக்குள் ஆண்மை பெருக்கிட அவள் இதழை மெல்ல விட்டு கழுத்து வளைவில் முகம் புதைத்து உஷ்ண மூச்சுக்களை அவளுக்கு கடத்திக்கொண்டிருந்தான். அவனது கைகள் அவளது சேலைக்கு மேலே அவளது அழகியல்களை ஆராய்ச்சி செய்திட அவனது கைகளை தட்டிவிட்டாள் பெண்ணவள்.
“ஏன்டி” என்று அவன் அவளை முறைத்திட “ம்ஹும் வேண்டாம்” என்று கூறியவள் வெட்கத்தில் தலை குனிந்தாள்.
அவனோ “எனக்கு கொஞ்சமா வேணும்” என்றான் இரட்டை அர்த்தத்தில் அவளும் சிறு பெண் கிடையாதே பருவ வயது பெண்தானே அவளுக்கும் ஆசைகள் இருக்குமே. ஆனால் பெண்களுக்கே உரிய நாணமும் கல்யாணத்துக்கு முன்னே இதெல்லாம் தப்பு என்று பெண்ணவளின் ஆழ்மனம் அவளை எச்சரிக்கை செய்தது.
அவனோ பிள்ளையிடமிருந்து மிட்டாயை பிடுங்கியது போல அவளிடம் எனக்கு மிட்டாய் கொடு என்று கெஞ்சுவது போல பார்த்தான்.
“என்னது சின்னபிள்ளையாட்டம் சந்தோஷ் வாங்க போகலாம்” என்று அவள் எழும்ப “நான் இப்ப சின்னகுழந்தைதான் டி” என்று அவன் விஷமமாக பேசி அவள் கோபுர அழகுகளை பார்த்தான்.
“போடா நீ ரொம்ப காஜியா பார்க்குற எல்லாமே கல்யாணத்துக்கப்புறம் தான்” என்று சிணுங்கிட
“போடி கொஞ்சமா ரிகல்சல் பார்க்கலாம் ப்ளீஸ் கோஆப்ரேட் பண்ணு” என்று அவளது கழுத்தில் முகம் புதைத்து அவளது இடுப்பு சேலையை நகட்டி அவளது இடுப்பில் கை வைக்க “சந்தோஷ்ஷ்” என்று பெரும்மூச்சு விட்டவள் அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
“ரிலாக்ஸ் பேபி” என்றவனோ அடுத்த அவனது காரியத்தில் கண்ணாக இருந்தான். அவனது கைகள் அவளது வெற்றிடையில் கோலம் போட்டுக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக அவளது அழகுகளின் முத்தை தொட்டு தொட்டு விளையாட பெண்ணவளின் வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கத்தொடங்கியது. அவன் கைகள் விளையாடும் விளையாட்டில் பெண்ணவள் துடித்துப்போனாள். அவன் கைகள் தொட்ட இடத்தை நேரில் காண ஆசைப்பட்டு அவளது மாராப்பில் தலையை வைத்து முட்டி மோதி விளையாட “சந்தோஷ்” என்று அவன் தலையை அழுந்த பிடிக்க அப்படியே அவளை மெத்தையில் சரித்து விட்டான். அவளது மாராப்பை சட்டென்று விலக்கி கலசங்களில் முகத்தை புதைத்துவிட்டான். சிற்பிகாவுக்கோ எல்லை மீறுகிறவனை தடுக்க முடியாமல் தவித்துப்போனவள் ஒரு கட்டத்தில் அவனை பிடித்து தள்ளிவிட்டாள்.
மோகத்தின் பிடியிலிருந்தவனை தள்ளிவிட அவனின் கண்களோ சிவந்துவிட்டது. அவளுக்கு அழுகை வந்துவிட தான் செய்த காரியம் அவனுக்கு இப்போது புலப்பட்டு “சாரிடி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்” என்று சரிந்து கிடந்த மாராப்பை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டான்.
“சந்தோஷ் ஒருநாள் தானே பொறுத்துக்கோங்க நான் பர்ஸ்ட் நைட் அன்னிக்கு முழுசா கொடுத்திடறேன் என்மேல கோபமா!” என்று அப்பாவி போல கண்ணை சிமிட்டி சிமிட்டி கேட்டாள் பெண்ணவள்.
“அச்சோ என் சில்வண்டு நீ சொல்லலைனாலும் நான் பர்ஸ்ட் நைட் அன்னிக்கு உன்னை எடுத்துப்பேன். இப்போ என் பக்கம் நெருக்கமா உட்கார்ந்திருக்கும் போது உன்னை கொஞ்சி தொடாம என்னால இருக்க முடியல கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன் அவ்ளோதான்!” என்று சொல்லிக்கொண்டிருக்க அமுதவள்ளியின் பேச்சு சத்தம் கேட்க.
அவளோ “அச்சோ! அத்தை வந்துட்டாங்க இப்போ என்ன பண்றது?” என்று பயப்பட அவள் வாயில் கைவைத்து “அமைதியா இரு” என்று அவளது வாயை பொத்தி விட்டான்.
அமுதவள்ளியோ தோட்டத்தில் இலைகளை மதிய சாப்பாட்டிற்காக வெட்டச்சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சத்தம் நின்றதும் சிற்பிகாவின் வாயிலிருந்து கையை எடுத்தவன் “அப்பாடா அத்தை போய்ட்டாங்க போல வாங்க போகலாம்” என்று எழுந்து ஓடி வந்து விட்டாள் ஜிம்மிற்குள்ளிலிருந்து
சந்தோஷோ “இன்னிக்கு நீ தப்பிச்சிட்டே சில்வண்டு” என்றவன் தன் மோகத்தை அடக்கிக்கொண்டு வெளியே வந்தான். சிற்பிகாவோ ஜாதிமல்லியை பறித்துக் கட்டிக்கொண்டிருந்தாள்.
உமாவை சமையல்கட்டில் வேலை வாங்கிக்கொண்டிருந்தார் அமுதவள்ளி. “இந்த கூட்டு எங்க முறையில இப்படி வைப்போம்” என்று அமுதவள்ளியின் குடும்ப சமையல் முறையை உமாவிடம் சொல்லி அவரையும் சமைக்கவிடாமல் தானாகவே சமைத்துக்கொண்டிருந்தார் அமுதவள்ளி.
ஒரு வழியாக சமையல் முடித்துவிட சாதம்,குழம்பு, பொரியல், பாயாசம் என செய்து வைத்திருந்த அனைத்தையும் கெஸ்ட் ஹவுஸிற்கு அனுப்பி வைத்தார்.
உமாவோ “அக்கா நான் கெஸ்ட்ஹவுஸ் கிளம்புறேன்” என்றதும் “சரி போய் சாப்பிட்டு வந்திடுங்க வேலை இருக்கு” என்றவர் “வாங்க போகலாம்” என்று இருவரும் கெஸ்ட் ஹவுஸிற்கு வந்தனர்.
அமுதவள்ளியே ஆனந்தன் குடும்பத்திற்கு சாப்பாடு பரிமாற “அத்தை நான் பரிமாறட்டுமா?” என்று சிற்பிகா எழும்ப “நீ கல்யாணப்பொண்ணுமா இன்னும் ஒருவாரத்திற்கு ஒரு வேலையும் செய்ய வேண்டாம் அப்புறம் உனக்கு என்ன வேலைனு நான் சொல்றேன்” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு பரிமாறினார்.
‘என்ன இந்த அத்தை சிரிக்க கூட மாட்டேன்கிறாங்க’ என்று சலித்துக்கொண்டு சாப்பாட்டை சாப்பிட்டாள்.
சந்தோஷ் கல்யாண வேலையாக வெளியேச் சென்றுவிட்டான்.
மாலை வேளையில் மெஹந்தி வைக்க ப்யூட்டிஷியன் வந்தவர் சிற்பிகாவிற்கு மெஹந்தியை கை, கால் என்று வைத்துவிட்டு “நாளன்னைக்கு என்னைத்தான் மேக்கப் பண்ண வரச்சொல்லியிருக்காங்க. பிரம்ம மூகூர்த்தம்னால நான் 2 மணிக்கு வந்துடறேன் நீங்க ரெடியா இருங்க” என்று சொல்லிச் சென்றிருந்தார்.
அன்றிரவும் விருந்து சாப்பாடு முடித்து படுக்கச் சென்றுவிட சந்தோஷ் சிற்பிகாவை பார்க்க முடியாமல் தவித்துப்போனான். “தோட்டத்துக்கு வாடி” என்று மெசேஜ் போட “நான் வரமாட்டேன் குட்நைட் லவ்யு” என்று ஹாட்டின் எமோஜிகளை அனுப்பிவிட்டு படுத்து விட்டாள்.
“இருடி நாளன்னைக்கு நைட் உன்னை தூங்க விடாம பண்ணுறேன்” என்று கண்ணை மூடிக்கொண்டான்.
13.உறவு
அடுத்த நாள் ஆனந்தன் தன் மகளுக்காக சேர்த்து வைத்த நகைகளை லாக்கரில் வைத்திருக்க பேங்கிற்குச் சென்று எடுத்து வந்தார். உமாவோ சிற்பிகாவுக்கான பட்டுப்புடவைகளை எடுத்து வந்திருந்தார்.
அமுதவள்ளியோ அவள் வீட்டு நகைகளை போட்டிருந்தாலும் தங்களது பரம்பரை செயினை முன்னாடி எடுத்துப்போட்டுக்கோ! இந்த கல் வைத்த டாலர் செயினையும் சேர்த்து போடு அப்போதான் எடுப்பா இருக்கும் என்று அவள் கழுத்து நிறைய நகைகளை போட்டுவிட்டார்.
சிற்பிகாவிற்கோ இத்தனை நகைகளை போடவே பிடிக்கவில்லை. வயதுக்கு மூத்தவங்க சொல்றாங்க நகைகளை போடாம விட்டாலும் அவங்க சொல்லுக்கு மரியாதை இல்லாம போய்டும் என்று பல்லைக்கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் போதாதற்கு தலை நிறைய மல்லிகைப் பூவை வைத்துவிட்டிருந்தார். தலையே பாரமாக இருந்தது.
பேங்கில் வேலைகள் முடிக்க வேண்டி இருக்க பேங்கின் வேலைகளை முடித்து விட்டு அவசர கல்யாணம் உங்களுக்கு தனியா பார்ட்டி கொடுக்குறேன் என்று சொல்லி வந்த சந்தோஷ் சிற்பிகாவை பார்க்க கெஸ்ட் ஹவுஸ் வந்தான். சிற்பிகாவோ அமுதவள்ளி போட்டு விட்ட நகைகள் பாரம் தாங்காமல் கழுத்தை சாய்த்தபடி சோகமாய் அமர்ந்திருந்தாள்.
சந்தோஷிற்கு அவள் நிலைமை புரியத்தான் செய்தது. “இன்று ஒருநாள் மட்டும் பொறுத்துக்கடி அப்புறம் அம்மாகிட்ட நான் பேசுறேன்” என்று பெரும்மூச்சுவிட்டவன் “சில்வண்டு என்ன பண்ணுற?” என்று அவள் பக்கம் வந்து உட்கார்ந்தான். அமுதவள்ளி தாலிச் செயின் வாங்குவதற்கு ஆனந்தனையும் உமாவையும் கூட்டிச்சென்றிருந்தார்.
“சந்தோஷ் என்னால இவ்ளோ நகை போட்டுக்கவே முடியலை. கல்யாணம் முடிஞ்ச பிறகும் இந்த நகையெல்லாம் போடணுமா என்ன?” என்று அவள் இதழ் பிதுக்கி கேட்க.
“இல்லடி கல்யாணத்துக்கப்புறம் போட வேண்டி வராது. உனக்கு கஷ்டமா இருந்தா பாதி நகையை கழட்டி வச்சிடேன் நான் அம்மாகிட்ட பேசுறேன்” என்றான் அவளை இழுத்து மடியில் போட்டுக்கொண்டு.
“சந்தோஷ் அத்தை வந்திரப்போறாங்க இங்கிருந்து கிளம்புங்க” என்று அவள் அவசரப்பட “என்மேல அவ்ளோதான் நம்பிக்கையாடி?” என்று அவன் கோப்பட “அச்சோ கோபப்படாதீங்கப்பா அத்தை வந்தா ரெண்டு பேருக்கும் கஷ்டம்தானே” என்று கெஞ்சியது அவள் கண்கள்.
“சும்மா விளையாட்டுக்கு பேசினேன்டி” என்று அவள் தலையில் முட்டி மென் முத்தம் பதித்தான் அவளது பிறைநெற்றியில்.
அமுதவள்ளியின் கார் சத்தம் கேட்க “சரி அம்மா வந்துட்டாங்க நான் கிளம்புறேன் ஒரே ஒரு லிப்லாக்” என்று அவள் முகத்தை பற்றி மென் இதழ்களை கவ்வி இழுத்து சுவைத்து விட்டுச் சென்றான்.
அடுத்த நாள் காலையில் குங்கும நிறத்தில் தங்க சரிகை பெரிய பார்டர் வைத்த பட்டுப்புடவையை தாம்பூலத்தில் வைத்து கட்டிவரச்சொல்ல சிற்பிகாவோ புடவையை வாங்கிக்கொண்டுச் சென்றாள் ப்யூட்டிஷியன் சிற்பிகாவை தேவலோகப்பெண் போல அலங்காரம் செய்து விட்டிருந்தார். இப்போது தேவைக்கான நகைகள் மட்டுமே போட்டுவிட்டிருந்தார் ப்யூட்டிஷியன்.
சந்தோஷ் பட்டு சட்டையும் பட்டு வேஷ்டியும் கட்டி வந்தவன் கழுத்தில் தங்களது பரம்பரை புலி நகச் செயினை வெளியே எடுத்துப்போட்டு எப்போதும் போல ப்ளாடினம் காப்பை கையில் ஏத்தி விட்டு வெளியே வந்தான்.
சந்தோஷை ஒரு காரிலும் சிற்பிகாவை ஒருகாரிலும் தனிதனியாக கோவிலுக்கு கூட்டிவந்தனர்.
முக்கிய சொந்தங்களை மட்டுமே கூப்பிட்டிருந்தார் அமுதவள்ளி.
மணவறையில் பொண்ணையும் மாப்பிள்ளையும் உட்கார வைத்தனர். ஐயர் மந்திரங்கள் சொல்ல சந்தோஷும் சிற்பிகாவும் மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தனர்.
திலீப்பும் திவ்யாவும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டனர்.
தலையை குனிந்திருந்த சிற்பிகாவிடம் “திலீப் திவ்யா வந்துட்டாங்க பாரு” என்றதும் நிமிர்ந்து பார்த்தாள் சிற்பிகா திலீப்பை.
திலீப்போ “வாழ்த்துக்கள்டி” என்று உதடசைத்தான் சிற்பிகாவை பார்த்து
“தேங்க்ஸ்டா” என்று அவளும் உதடசைத்தாள்.
11 பவுனில் தாலிச் செயின் செய்து வைத்திருந்தார் அமுதவள்ளி. அனைவரிடமும் தாலிச்செயின் ஆசிர்வாதம் வாங்கப்பட்டு அமுதவள்ளியின் கைக்கு வந்ததும் குலதெய்வத்தை வேண்டி தாலிச் செயினை சந்தோஷிடம் கொடுத்து “கட்டுப்பா” என்றார் அமுதவள்ளி.
சந்தோஷும் சந்தோச சிரிப்புடன் தன் சில்வண்டின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு மனைவியாக்கிக்கொண்டான். குங்குமத்தை உச்சி வகுட்டில் வைத்துவிட சிற்பிகாவின் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. தன் கனவு நாயகன் தன் கழுத்தில் தாலிகட்டிவிட்டான் என்று ஆனந்த கண்ணீர் விட்டாள் பெண்ணவள்.
“ஏய் அழாதடி அம்மா பார்த்தா ஏதாவது நினைப்பாங்க” என்று அவள் காதில் ரகசியமாக சொல்ல அவளோ கண்களை துடைத்துக்கொண்டாள்.
ஐயர் மணமக்களை சில சடங்குகளை செய்ய சொல்ல இருவரும் செய்து முடிக்க “பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்கோ” என்றதும்
முதலில் அமுதவள்ளி, சண்முகம் காலில் விழ “தீர்க்க சுமங்கலியா இருமா” என்று வாழ்த்தினார் அமுதவள்ளி.
ஆனந்தன், உமா காலில் மணமக்கள் விழ “ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க” என்று ஆசிர்வாதம் செய்தனர்.
கோவிலில் வந்தவர்களுக்கு சாப்பாடு போட்டு முடித்து சொந்தங்கள் கிளம்பியதும் “நாங்க மாப்பிள்ளையும் பொண்ணையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் நாளைக்கு மறுவீட்டு விருந்துக்கு வரச்சொல்றேன்” என்றார் அமுதவள்ளி.
“ம்ம் சரிங்க அக்கா அதான் முறையும்கூட” என்றார் சிரிப்புடன் ஆனந்தன்.
சிற்பிகாவின் கையை பிடித்துக்கொண்டு காரில் ஏறப்போக சந்தோஷின் கையை விட்டு வந்த சிற்பிகாவோ ஆனந்தனையும் உமாவையும் கட்டிக்கொண்டு அழுதாள்.
ஆனந்தனுக்கு கண்ணீர் வந்தாலும் அடக்கிக்கொண்டு “சிற்பிமா இந்த நேரம் அழக்கூடாது” என்று அவளது முதுகை தடவிக்கொடுக்க . உமாவோவுக்கோ கண்ணீர் வந்துவிட்டது. கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு “சிற்பிகா அழாதடி மாப்பிள்ளை உனக்காக காத்திருக்கார் பாரு கிளம்பு அப்புறமா நாங்க போன் போடுறோம்” என்றவர் மனதிற்குள் மகளை பிரிகிறோம் என்ற வருத்தம் இருந்தாலும் பெண்ணாக பிறந்து விட்டால் இன்னொரு வீட்டுக்கு மருமகளாக போய்தான் ஆகவேண்டும் என்று எண்ணியவர் மகளின் முன்னே அழாமல் நின்றார் உமா.
“நல்ல நேரம் போகுது சிற்பிகா. அம்மாவும் அப்பாவும் போன் போட்டா வரப்போறாங்க எதுக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற வா போகலாம்” என்று அமுதவள்ளி சிறு அதட்டல் போட்டார்.
உமாவுக்கோ தன் மகளை நம்ம முன்னாடியே இப்படி அதிகாரம் பண்ணுறாங்களே என்ற கவலை வந்தது. ஆனந்தன் மகளுக்கு அறிவுரை கூறி சந்தோஷ் பக்கம் கொண்டு போய் விட்டார்.
“நான் பார்த்துக்குறேன் மாமா” என்றவன் சிற்பிகாவின் கையை பிடித்துக்கொண்டு காரில் ஏறினான்.
சிற்பிகாவிற்கு காரில் ஏறியதும் கண்கள் குளமானது. “அழாதடி பட்டுமா இப்பவே நாம உங்க அம்மா வீட்டுக்கு போகலாமா?” என்று கூறியவன் தன்னவளை தோளில் சாய்த்துக்கொண்டான்.
“இல்ல வேண்டாம் நாளைக்கே போகலாம்” என்று சந்தோஷின் நெஞ்சில் சாய்ந்த படியே விசும்பிக்கொண்டிருந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் இருவருக்கும் ஆரத்தி எடுத்து “வலது காலை எடுத்து வச்சு வாம்மா” என்று அமுதவள்ளி கூறியதும் சந்தோஷ் சிற்பிகாவின் கைபிடித்து கூட்டிவந்தான் வீட்டுக்குள்.
வீட்டுக்குள் வந்ததும் பூஜையறையில் விளக்கேற்றி பால் பழம் கொடுத்து “என்னோட ரூம்க்குள்ள கூட்டிட்டு போ சந்தோஷ் நைட்தான் உன் அறைக்கு வருவா சிற்பிகா” என்றதும்
“சரிங்கம்மா” என்றவனோ சிற்பிகாவை கூட்டிச்சென்று அமுதவள்ளியின் அறைக்குள் விட்டு “ட்ரஸ் சேன்ஞ் பண்ணிக்கோடி” என்று அவளுக்கான சேலையை எடுத்துக்கொடுத்து “எப்போ நைட் வரும்னு ஆசையா இருக்கேன்டி பட்டு” என்று அவளது இதழில் முத்தமிட ஆரம்பிக்க “சந்தோஷ் இங்க வாப்பா” என்ற அமுதவள்ளியின் குரல் கேட்டு “ஏய் பட்டுமா அம்மா கூப்பிடறாங்கடி நான் வரேன்” என்று கிளம்பி விட்டான் சந்தோஷ்.
14. உறவு
சந்தோஷ் கூட இருக்கும் வரை அவளுக்கு தனித்திருப்பது போல இல்லை. இந்த நொடிதான் அவளை விட்டு பிரிந்தான் சந்தோஷ். அடுத்த நொடியே அவளுக்கு தனிக்காட்டில் தனித்திருப்பது போல தோன்றியது. உமாவின் ஞாபகம் வந்தது சிற்பிகாவிற்கு. அம்மா என்னோடயே நீங்க மண்டபத்திலிருந்து வந்திருக்கலாமென யோசித்துக்கொண்டே அறையை கண்களை சுழற்றி சுற்றிப்பார்த்தாள். அவர்கள் வீட்டின் ஹாலைவிட பெரியதாக இருந்தது அமுதவள்ளியின் அறை.
கிஸ் சைஸ் கட்டில் மெத்தை. அறையின் ஓரம் பெரிய நீளமான சோபாவும் இருந்தது. அறையில் நேர்த்தியாக ஒவ்வொரு பொருளும் ஆடம்பரமாகவும் இருந்தது. இவ்ளோ பெரிய அறையை கூட்டி பெருக்கறதுக்கே அரைநாள் ஆகிடும்போலயே சிற்பி! என்று புருவம் நெருக்கியவள் அத்தையோட அறையே இவ்ளோ பிரமிப்பா இருக்கு. சந்தோஷ் அறை எப்படியிருக்குமோ நாம எப்படி மெயின்டெய்ன் பண்ணப்போறோம் என்றெல்லாம் நினைத்தவாறு குளியலறைக்குள் சென்றாள் சிற்பிகா.
அமுதவள்ளியின் தோழிகளுக்கும் சந்தோஷின் நண்பர்களுக்கும் மதிய விருந்து தயாராகிக்கொண்டிருந்தது வீட்டின் பின்புறம். மதிய விருந்திற்கு சமையல் செய்துக் கொண்டிருந்த இடத்தில் நின்றிருந்த அமுதவள்ளியோ காய் கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தவர்களிடம் “முட்டைகோஸை பொடி பொடியா நறுக்குங்க! பாயாசத்துக்கு முந்தரியை நிறைய போடுங்க. நெய் தூக்கலா ஊத்துங்க” என்று வேலையாட்களிடம் கட்டளையிட்டுக்கொண்டிருந்தார்.
“ம்மா கூப்பிட்டிங்களா?” என்று அமுதவள்ளியின் பக்கம்போய் நின்றான்.
“இப்படி வந்து உட்காரு சந்தோஷ்” என்று சமையல் செய்துக் கொண்டிருந்த இடத்தை விட்டு தள்ளி கூட்டிச்சென்று அங்கிருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார் அமுதவள்ளி.
“இன்னிக்கு நைட் 11 மணிவரை நேரம் நல்லாயில்லை 11மணிக்குமேல்தான் நல்ல நேரம் வருது அதுவரை சிற்பிகா பக்கம் நீ போகக்கூடாது சரியா” என்று காலையிலிருந்து மகனின் பார்வை சிற்பிகாவையே சுற்றி வந்ததை கண்டுக் கொண்டவர் அவனுக்கு எச்சரிக்கை கொடுத்தார்.
“ம்மா நீங்க சொன்னா சரிம்மா” என்று தலையை ஆட்டினான்.
ஆனால் அவன் மனதிற்குள் ‘என்னம்மா இப்படி ஒரு டைம்பாம்மை போட்டுட்டீங்க. சிற்பியை பார்த்தாலே அவள் இடுப்பில கை வைக்க தோணுது. எப்படிமா என்னால 11மணிவரை விரதம் காக்க முடியும்?’ புலம்பிக்கொண்டான்.
“சரி என்னோட பிரண்ட்ஸ் வந்துடுவாங்க ஹாலுக்கு போகலாம் வா” என்று மகனைக்கூட்டிக்கொண்டு ஹாலுக்கு வந்தார்.
முகூர்த்தத்துக்கு வரமுடியாத சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். “வாங்க வாங்க” என்று அவர்ளை வரவேற்ற அமுதவள்ளி வீட்டின் வெளியே உள்ள பெரிய செட்டில் வந்தவர்களை உட்கார வைத்து பேச ஆரம்பித்தார்.
“என்ன அமுதவள்ளி ஒரே பையனை வச்சிருக்க இவ்ளோ சிம்பிளா கல்யாணம் வச்சு முடிச்சிட்டீங்களே!” என்று வியப்பாய் கேட்டார்.
“நல்ல குடும்பமா தெரிஞ்சுது அதான் உடனே கல்யாணம் வச்சிட்டேன் அடுத்த பத்துமாசத்துல என் மருமகள் வளைகாப்பை சிறப்பா செய்து ஜமாய்ச்சுடலாம்” என்றார் சிரித்தபடியே.
சந்தோஷ் அவனது நண்பனிடம் போனில் பேசிக்கொண்டிருந்தான்.
அதில் ஒருவர் “நான்கூட பையன் லவ்கிவ்வுனு விழுந்துட்டானோனு நினைச்சிட்டேன்” என்றார் சிலாகித்து.
“ச்சே என் பையன் லவ்கிவ்வு எல்லாம் பண்ணமாட்டான். இப்ப கூட இந்த பொண்ணு கழுத்துல தாலிகட்டுனு சொன்னேன் மறுவார்த்தை பேசாம தாலி கட்டினான்” என்றார் பெருமிதமாக.
“நீங்க கொடுத்து வச்சவங்க அமுதவள்ளி” என்று பெரும்மூச்சுவிட்டார்கள் சொந்தக்காரர்கள்.
“சரி சரி எல்லாரும் மதிய விருந்து சாப்பிட்டுத்தான் போகணும்” என்றார் அன்புக்கண்டிப்புடன்.
“சாப்பிட்டே கிளம்புறோம் நீங்க உங்க மருமக பொண்ணை வரச்சொல்லுங்க நாங்க பார்க்குறோம் அமுதவள்ளியோட செலக்சன் எப்பவும் சோடை போகாது” என்றனர் கோரஸாக.
“இருங்க வரச்சொல்றேன்” என்று முகத்தில் பூரிப்புடன் வீட்டுக்குள் சென்றார்.
சிற்பிகா குளித்து வந்தவள் சிவப்பு இலகுரக காஞ்சிபுரம் பட்டுப் புடவை தங்கநிற பட்டை சரிகையுடன் கூடிய புடவையை சீராக அடுக்கடுக்காக மடிப்பெடுத்து கட்டிக்கொண்டு தலையை துவட்டிக்கொண்டு இருபக்கமும் முடியெடுத்து கிளிப் போட்டு அடக்கி சந்தோஷை தேடி வந்தாள்.
அமுதவள்ளியின் எதிரில் சிம்பிளாக கழுத்தில் மகன்கட்டிய தாலிக்கொடியில் தாலிசரடு சுற்றியிருக்க வேறு எந்த நகையும் போடாமலே அழகு இரதிபோல நடந்து வந்தாள் சிற்பிகா.
சந்தோஷோ மெயின் பிரான்ச் மேனேஜரிடம் பேசிக்கொண்டிருந்தவன் ஏதேச்சையாக திரும்பி பார்த்தான் சிற்பிகாவை. அவளது இடுப்பு வரையுள்ள நீளமாக கூந்தல் காற்றில் அசைந்தாட காதோரம் வந்து ஒதுங்கிய முடியை சரி செய்துக் கொண்டு முந்தானையை கையில் பிடித்துக்கொண்டு வானத்திலிருந்த தேவதையை போல நடந்து வந்தாள் சிற்பிகா.
அதற்குள் பேங்க் மேனேஜர் முக்கிய விஷயம் டிஸ்கஸ் பண்ண போனில் கவனமானான் சந்தோஷ்.
அமுதவள்ளியோ சிற்பிகாவின் பக்கம் சென்றதும்தான் தெரிந்தது அவளது தலையில் பூ வைக்கவில்லையென்று “என்னமா தலையில பூ வைக்காம இருக்க! கல்யாணமான பொண்ணு தலையில பூ வைச்சுக்கணும்னு தெரியாதா உனக்கு. நம்ம வீட்டு வழக்கத்தை சொல்லிக்கொடுக்குறேன் ஒவ்வொண்ணா கத்துக்கோ” என்று மென்மையாக சொல்லியவர் ப்ரிட்ஜிலிருந்து சந்தன முல்லையை ஐந்து சரமாக மடித்து அவளது தலையில் வைத்து விட்டார்.
சிற்பிகாவுக்கு தலையில் அதிகம் பூ வைத்து பழக்கம் இல்லை. உமா ஒரு முழப்பூவை தலையில் வைத்துவிட்டாலே எனக்கு இவ்ளோ வேண்டாம் என்று அடம் பிடிப்பவள் இன்று அமைதியாக அமுதவள்ளி வைத்துவிடும் பூவை ஏற்றுக்கொண்டாள் சந்தோஷின் காதலுக்காக.
பூவை வைத்து முடித்ததும் கழுத்தை பார்த்தவரோ “என்னமா இது கழுத்துல இன்னும் ரெண்டு செயின் போடலாம்ல” என்று அவளை செல்லமாக கடிந்துக் கொண்டிருக்க அமுதவள்ளியின் தோழிகள் வரும் சத்தம் கேட்டு அவசரமாக தன் கழுத்தில் போட்டிருந்த காசு மாலையை கழட்டி சிற்பிகாவின் கழுத்தில் போட்டு விட்டார்.
அமுதவள்ளி சாதாரணமாக பேசுவதே அதிகாரமாக தோன்றியது சிற்பிகாவுக்கு. அதே சமயம் அவரது முரட்டு பாசத்தையும் கண்டு திக்குமுக்காடிப்போனாள் பெண்ணவள்.
சிற்பிகா தனித்திருக்க இப்போ அம்மா என் பக்கம் இருந்தா நல்லாயிருக்கும் என்று அவள் மனம் உமாவை தேடியது.
வீட்டிற்குச் சென்ற உமாவும் ஆனந்தனும் மகள் இல்லாத வீட்டில் அவர்களால் இருக்க முடியவில்லை. இருவருக்கும் சாப்பிடக்கூட தோணவில்லை. மதிய விருந்துக்கு போக கிளம்பிக்கொண்டிருந்தனர் மகளை பார்க்க வேண்டுமென்று ஆவலில்.
அமுதவள்ளியின் தோழிகள் ஹாலுக்குள் வந்துவிட்டனர். “வாங்க வாங்க” என்று அவர்களை வரவேற்று சோபாவில் உட்கார வைத்தார் அமுதவள்ளி.
சிற்பிகாவும் அமுதவள்ளியின் தோழிகளுக்கு “வணக்கம்” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
சிற்பிகாவை நடுவில் உட்கார வைத்து அவளை தலைமுதல் கால்வரை ஆராய்ச்சி செய்தனர்.
“என்ன படிச்சிருக்கமா! எங்க வொர்க் பண்ணுற!” என்று பல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்க அவளோ “என் பேரு சிற்பிகா! நான் பேங்க்ல கேஷியரா இருக்கேன் ஆன்ட்டி!” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
“ம்ம் அமுதா உன் மருமக இரதி போல அழகா இருக்கா! உன் பையனுக்கு ஏத்த ஜோடியா பிடிச்சிட்ட போ! ஆனா நாங்க தான் ஓயாம பேசுறோம் உன் மருமக வார்த்தையை அளந்து பேசுறா ப்பா. எங்ககிட்ட பேசக்கூடாது சொல்லியிருக்கியா?” என கிண்டலாக கேட்டார் தோழிகளில் ஒருவர்.
நல்லவேளை சிற்பிகா வொர்க் பண்ணுறேனு சொன்னதும் உன் பையன் லவ் பண்ணினான்னு கேட்க மறந்துட்டாங்கனு சந்தோசப்பட்ட அமுதவள்ளியோ “என் மருமக கொஞ்சம் ஷை டைப்! நீங்க ரொம்ப ஓவரா கிண்டல் பண்ணி பேசாம இருங்க” என்று அவர்களை பொய்யாக முறைத்தவர் “சிற்பி ஒரு நிமிசம் இங்கேயே உட்காரு நான் வரேன்” என்று கூறிவிட்டு அவரது தோழிகளிடம் “சாப்பாடு ரெடியா இருக்கு வாங்க சாப்பிட போகலாம்” என்று அவர்களை சாப்பிடும் இடத்திற்கு கூட்டிச்சென்று அங்கே நின்றிருந்த சண்முகத்திடம் “இவங்களை பார்த்துக்கோங்க நம்ம சொந்தக்காரவங்க கிட்ட மருமகளை அறிமுகப்படுத்திட்டு வரேன்” என்று ஹாலுக்குச் சென்றார்.
சிற்பிகாவோ சந்தோஷ் எங்கே காணோம் என்று வாசல்பக்கம் எட்டிப்பார்த்தாள். போன் பேசிக்கொண்டிருந்த சந்தோஷை பார்த்தவள் சந்தோஷ்கிட்ட போகலாம் என எழுந்தவளை “சிற்பிகா எங்கமா போற?” என்று அவள் முன்னே வந்து நின்றார் அமுதவள்ளி.
“சும்மா வெளியே போகலாம்னு எழுந்தேன்” என்றாள் சமாளிப்பாக.
“ம்ம் சரி வா” என்று சொந்தக்காரர்கள் இருக்கும் இடத்திற்கு சிற்பிகாவை கூட்டிச் சென்றார் அமுதவள்ளி.
“வணக்கம்” என்று கையெடுத்து கும்பிட்டாள் சிற்பிகா மெல்லிய இதழ்விரிப்புடன்.
அவர்களோ சிற்பிகா போட்டிருந்த நகைகளை கணக்கெடுத்துக்கொண்டிருந்தனர். சிற்பிகாவோ என்னது இப்படி பார்க்குறாங்க என்று சங்கோஜமாக நின்றிருந்தாள்.
இப்படியெல்லாம் தன்னை எந்நாளும் யாரும் பார்த்ததில்லையே என்று அவர்கள் முன்னே நகைக்கடை பொம்மை போல நிற்பது அவளுக்கு பிடிக்கவில்லை. கொஞ்ச நேரம் நின்னிட்டு கிளம்பிடலாம் என்று நினைத்திருந்தாள்.
சிற்பிகா சிரித்தபடி நின்றிருந்தாலும் அவளது அசவுகரியமான நிலை அவருக்கு புரிய “சிற்பி நீ சந்தோஷ்கிட்ட பேசிட்டு இரு நான் எல்லாரையும் சாப்பிட கூட்டிட்டு போறேன்” என்றவர் சொந்தக்காரர்களை சாப்பிடும் இடத்திற்கு கூட்டிச்சென்றார்.
சந்தோஷ் போனில் பேசிவிட்டு திரும்ப அழகிய மயில் தோகை விரித்துக் கொண்டு வருவது போல தெரிந்தாள் சந்தோஷின் கண்ணுக்கு. ஓடிச் சென்று அவளை கட்டி அணைத்து முத்தாட சொல்லி அவன் மனம் மத்தளம் கொட்டியது. சொந்தகாரர்களை சாப்பிட உட்கார வைத்துவிட்டு சிற்பிகாவை தேடி வந்துவிட்டார். பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் பற்றிக்கொள்ளும் இன்னிக்கு 11 மணிக்கு மேல தான் சாந்தி முகூர்த்தம் அதுக்குள்ள நம்ம பையன் அவசரப்பட்டுவிடுவானே என்ற பயம் அவருக்கு.
“சிற்பி கொல்றடி” என்று அவளது கையை பிடித்து தோட்டத்தில் போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார வைத்து நெருக்கமாக உட்கார்ந்தான்.
மகன் சந்தோசமாக இருக்கட்டும் என்று அமுதவள்ளிக்கு தோன்றினாலும் இன்று 11 மணிவரை சிற்பிகாவை தொடக்கூடாது என்ற விதத்தில் உறுதியாய் இருந்தார். மகனும் மருமகளும் நல்ல நேரத்தில் சேரவேண்டும் என்று இரண்டு ஜோஸியரை கேட்டுத்தான் சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறித்திருக்கார். ஆனால் மகனோ மருமகளை விழுங்கிவிடுபவன் போல பார்த்திருக்க இது கதைக்கு ஆகாது. சிற்பிகாவை இரவு வரை தன்னுடனே வைத்துக்கொள்ளணும் என்று முடிவெடுத்து சந்தோஷின் காந்த பார்வை வீச்சில் மயக்கம் கொண்டு வெட்கம் கொண்டு நாணி முகம் சிவந்து வந்த சிற்பிகாவோ சந்தோஷின் பக்கம் உட்காராமல் அமுதவள்ளியின் பக்கம் உட்கார்ந்தாள்.
மகன், மருமகள் தனியே இருக்கும்போது அவர்கள் பக்கம் போக சங்கடமாக இருந்தாலும் இப்போதைக்கு இருவரையும் தனியாக விடக்கூடாதென தீவிரமாக இருந்தவர் அவர்கள் பக்கம் சென்று “சந்தோஷ் இந்த உச்சி வெயில் நேரத்துல இரண்டு பேரும் இங்க உட்காரக்கூடாது எழுந்து வாங்க உள்ளே போகலாம்” என்று கூப்பிட்டார் இருவரையும் அக்கறையாக.
“ம்மா சிற்பிகிட்ட பேங்க்லயும் வேலை விசயம் தவிர வேற எதுவும் பேசினதில்லை இப்ப கொஞ்சம் பேசி பழகலாம்னு உட்கார்ந்தேன்! அதுக்குள்ள நீங்க வந்து கட்டையை போடாதீங்கம்மா” என்றான் கொஞ்சலாக.
மகனிடம் 11 மணிவரை இருவரும் தனியாக இருக்கக்கூடாதென நாசுக்காக சொல்லியும் இன்னும் மகனுக்கு புரியவைக்க முடியாமல் தயங்கியவர் “நான் மருமககிட்ட நம்ம வீட்டு வழக்கத்தை பத்தி சொல்லிக்கொடுக்கணும் கண்ணா” என்றவர் சிற்பிகாவின் காதோரம் சென்று “இன்னிக்கு நைட்வரை அவன்கிட்டயிருந்து தள்ளியிருக்கணும் என் கூட வா” என்று அவளுக்கும் மட்டும் கேட்கும்படி பேசினார் அமுதவள்ளி. அவனுக்கும் காது கேட்டது ஆனால் அமைதியாக இருந்தான்.
சுந்தோஷோ இந்த ஹிட்லர் அம்மாகிட்டயிருந்து என் பொண்டாட்டியை நான் எப்படி கடத்திட்டு போகட்டும் என்று அமுதவள்ளியை முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.
சிற்பிகாவோ “என்னங்க நான் அத்தைகிட்ட பேசிட்டு வந்துடறேன்” என எழுந்தவளை முறைத்தான்.
“ப்ளீஸ்” என்று கண்களால் கெஞ்சினாள் சிற்பிகா.
‘ஓ எங்கம்மாவை காக்கா பிடித்து நல்ல மருகளாக பேர் எடுக்க இப்பவே என் பொண்டாட்டி ட்ரைனிங் எடுக்குறாப்பா எல்லாம் நன்மைக்கேதான்’ என்று தலையை கோதிக்கொண்டு வேடிக்கை பார்ப்பது போல புது பொண்டாட்டியை இரசனையாக பார்த்துக்கொண்டிருந்தான்.
அமுதவள்ளியோ நம்ம பையன் நடவடிக்கை சரியில்லை இப்பவோ மருமகளை கடிச்சு தின்பவன் போல பார்க்குறான் நாம சிற்பிகாவை இங்கிருந்து கூட்டிட்டு போயிடணும் என்று நினைத்தவரோ “அம்மாடி மருமகளே வா நான் உன்கிட்ட நிறைய பேசணும்” என்று சிற்பிகாவின் கையை பிடித்துக் கொண்டார்.
‘சிற்பி போகாத’ என்று சந்தோஷ் கண்ணைக்காட்டினான்.
அமுதவள்ளியோ “வாமா போகலாம்” என்று முன்னே நடக்க சிற்பிகாவோ யார் சொல்வதை கேட்பது என்று குழம்பிப்போய் நின்றவளை அவள் வருகிறாளா என்று திரும்பி பார்த்த அமுதவள்ளியோ “ஏன்மா சிற்பி உன்னை வரச்சொன்னேன் நீ என்ன சிலையாட்டம் நிற்குற வா” என்றார் சிறு அதட்டலோடு.
சந்தோஷின் நண்பர்கள் வந்துவிட்டனர். “அப்பாடா மருமகளை என் மகன்கிட்டயிருந்து கொஞ்ச நேரம் காப்பாத்திடேன்” என்று நிம்மதியானார் அமுதவள்ளி. தன் அறைக்குச் கூட்டிச்சென்று அவர்களது பரம்பரை நகைகளை காட்டி “எனக்கு அப்புறம் நீதான் இதையெல்லாம் கட்டிக்காக்கணும்” என்றார் பெரும்மூச்சுடன்.
“சரிங்க அத்தை” என்று தலையை ஆட்டினாள்.
15. உறவு
“எதுக்கெடுத்தாலும் தலையை ஆட்டக்கூடாது. நறுக்குனு நாலு வார்த்தை பேசணும். அமுதவள்ளி மருமகனு நீ புரூவ் பண்ணனும் சரியா. எதுக்கும் பயப்படக்கூடாது” என மருமகளுக்கு தங்களுக்கு சொந்தமான நிலபுலன்கள் பற்றின பத்திரங்களை எல்லாம் காட்டினார். அவளுக்கோ இதையெல்லாம் எதுக்கு நம்மகிட்ட காட்டுறாங்க. இவ்ளோ பெரிய வேலையெல்லாம் நம்மளால பார்க்க முடியாது சாமி என்று அச்சப்பட்டுக்கொண்டிருந்தாள் சிற்பிகா.
ஆனந்தனும் உமாவும் வந்து விட வெளியே ஆனந்தன் பேச்சு சத்தம் கேட்டதும் “அத்தை அப்பா வந்துட்டாங்க நான் போகட்டா?” என்று அனுமதி கேட்டவளை அதிசயமாக பார்த்தார்.
இந்தக்காலத்தில் இப்படியொரு பெண்ணாவென்று ஆச்சரியப்பட்டார். மகன் தன்னை பற்றி முன்னமே சிற்பிகாவிடம் சொல்லியிருக்கிறான் என்று அவருக்கு தெரியவில்லை.
தன்னிடம் பெத்த அப்பா அம்மாவை பார்க்க அனுமதி கேட்கிறாளே என்று மனம் குளிர்ந்து போன அமுதவள்ளியோ “உன் அம்மா அப்பாவை பார்க்க என்கிட்ட ஏன் பர்மிசன் கேட்குற? போய்ட்டு வா” என்றார் முகம் கொள்ளா புன்னகையுடன். அமுதவள்ளி எல்லா விசயத்திலும் விட்டுக்கொடுப்பார் மகன் பாசம் என்று வரும்போது குறுக்கே கட்டை போடுவார் என்பது சிற்பிகா அறியாமல் போனாள்.
புள்ளி மானாக ஓடிவந்தவள் எப்போதும் ‘அப்பா’ என ஆனந்தனை கட்டிக்கொள்பவள் இன்று அம்மாவென்று உமாவை கட்டிக்கொண்டாள்.
உமாவோ மகளின் நிலையை உணர்ந்தவர் “என்னடி புது இடம்னு பயந்துட்டியா?” என்று அவளின் முதுகை வருடிய படியே கேட்க.
“அம்மா உங்களையும் அப்பாவையும் கொஞ்ச நேரம் பார்க்கலைனதும் ரொம்ப கஷ்டப்பட்டேன்” எனறவளுக்கு குரல் பிசிறி தட்டியது. ஆனந்தனோ மகளின் குரலில் உடைசலை கண்டவருக்கு கண்கள் கலங்கிப்போனது. பொது இடத்தில் எதுவும் சொல்ல முடியாது அமைதியாக நின்றார்.
அங்கே இருந்த அமுதவள்ளிக்கு சொந்தமான வயதான பாட்டியோ “இன்னும் ஒருவாரம் உன் அப்பா அம்மாவை விட்டு இருக்க கஷ்டமா இருக்கும். ஒரு மாசம் ஆனதும் சரியாயிடும் கண்ணு. எங்க அமுதவள்ளி உன்னை அவ பொண்ணா மாதிரி பார்த்துப்பா” என்றதும் சிற்பிகாவோ உமாவிடம் இருந்து பிரிந்து நின்று பாட்டியை பார்த்து சிரித்தாள்.
“மகாலஷ்மியாட்டம் இருக்க கண்ணு! உன் மாமியார் போல நல்லா தைரியமாக இருக்கணும்” என்று அவளை வாழ்த்த அவரது காலில் விழுந்தாள் ஆசிர்வதிக்க சொல்லி.
“மகராசியாய் பதினாறும் பெறணும் ஆத்தா” என்று ஆசிர்வாதம் செய்தார் பாட்டி.
கொஞ்ச நேரத்தில் சொந்தங்களும், சந்தோஷின் நண்பர்களும் சாப்பிட்டுச் சென்றுவிட்டனர்.
சிற்பிகா ரெஸ்ட் ரூம் சென்றுவர அமுதவள்ளியின் அறைக்குள் போக ஹாலில் உட்கார்ந்திருந்த சந்தோஷோ சுற்றி பார்க்க சண்முகமும் ஆனந்தனும் பேசிக்கொண்டிருக்க அமுதவள்ளி சமையல்கட்டில் காபி போடச்சென்றிருந்தார்.
யாரும் பார்க்கவில்லையென அமுதவள்ளியின் அறைக்குள் சென்றான். சிற்பிகா வாஷ்ரூமை விட்டு வெளியே வந்தவள் சந்தோஷை பார்த்ததும் “அச்சோ அத்தை உங்க கூட தனியா இருக்கக்கூடாதுனு சொல்லியிருக்காங்க வெளியே போங்க” என்று அவனை பிடித்து வெளியே தள்ளப்பார்க்க. தினமும் உடற்பயிற்சி செய்து வைத்திருந்த உடம்பை தள்ளமுடியாமல் தள்ளிநின்றாள் மலங்க மலங்க விழித்தபடி.
சந்தோஷோ அவளின் பக்கம் நெருங்கிச்சென்று “அம்மா சொல்லத்தான் செய்வாங்க நாம கண்டுக்க கூடாது அப்ப அப்ப முத்தம் கொடுத்துக்கலாம் இப்படி” என்று நாவல் உதடு தேய்த்து அவளது இதழை கவ்வி ஆக்கிரமைப்பு செய்தான் ஆண்மகன்.
“ம்ம்” என்று அவளது முணகல்கள் அவனது இதழ்களுக்குள் அடங்கிப்போனது.
“சிற்பிகா” என்று உமாவின் சத்தம் கேட்க மெதுவாக தன்னிடமிருந்து விலக்கிவிட்டான். அவளது ரோஸ் நிற இதழ்கள் அவன் பல்பட்டு லேசாக இரத்தம் கசிந்தது.
“அச்சோ இரத்தம் வருது இப்படியாடா கடிச்சு வைப்ப!” என்று அவனது நெஞ்சில் கைகள் கொண்டு குத்தினாள். அவனுக்கு கொசு கடிப்பது போல இருக்க “இரு நானே மருந்து போட்டு விடறேன்” என்று மீண்டும் இதழ் ஒற்றி அவளது இதழில் கசிந்த இரத்தத்தை உறிஞ்சி எடுத்துக்கொண்டான்.
அதற்குள் உமா சந்தோஷ் உள்ளே இருப்பது தெரியாமல் அமுதவள்ளியின் அறைக்குள் வந்துவிட “அச்சோ!” என்று தலையில் அடித்துக்கொண்டு திரும்பி நின்றார்.
“மானத்தை வாங்கிட்டீங்க போங்க” என்று செல்லமாக முறைத்தாள் சந்தோஷை சிற்பிகா.
“மீதியை நைட் பார்த்துக்குறேன்” என்று அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு வெளியே வந்தவன் “அத்தை நீங்க உங்க பொண்ணுக்கு சொல்லிக்கொடுக்கறது இல்லையா?” என உமாவிடம் குசும்பாக விளையாடினான்.
“விவஸ்வதை கெட்டவன்” என்று சந்தோஷை முறைத்துப்பார்த்து சிற்பிகாவிடம் சென்றார்.
உமாவோ சிற்பிகாவிடம் வந்தவர் “மாப்பிள்ளை கோபமா பேசினாலும் நீ அவர்கிட்ட அனுசரித்து போகணும்டி. உங்க மாமியார் சொல்றதை கேட்டு நடந்துக்கோ” என மகளுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.
ஹாலில் சண்முகமும் ஆனந்தனுக்கும் காபி கொண்டு வந்து கொடுத்த அமுதவள்ளியோ தன் அறையிலிருந்த சந்தோஷை பார்த்தவரோ இந்த சிற்பிகா பொண்ணுகிட்ட ரெண்டு பேரும் தனியா இருக்ககூடாது சொல்லியிருக்கேன்ல எப்படி சந்தோஷை அறைக்குள்ள விட்டா என்று சிற்பிகா மேல் கோபம் கொண்டவர் காபியை கொடுத்துவிட்டு எதிரே வந்த சந்தோஷிடம் “என்னடா நான் தான் ரெண்டு பேரையும் தனியா சந்திக்க கூடாதுனு சொல்லியிருக்கேன்ல” கொஞ்சம் காட்டமாக பேசினார்.
“நான் சும்மாதான் பேசலாம்னு போனேன் சிற்பியோட அம்மா உள்ளே தான் இருக்காங்க உங்க மருமகளை டச் கூட பண்ணலை போதுமா?” என்றான் முகத்தை உர்ரென்று வைத்து
“உன்னால நைட் வரை அடக்கம் ஒடுக்கமா இருக்க முடியாதா சந்தோஷ்! உன் மாமனார்கிட்ட பேசிட்டு இரு” என்று மகனை செல்லமாக அடி வைத்து தன் அறைக்குள் சென்றார்.
உமா சிற்பிகாவுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார் அமுதவள்ளியை பார்த்ததும் சிற்பிகா எழுந்து நின்றாள்.
“என்னை பார்த்ததும் பொசுபொசுக்குனு ஸ்கூல் பிள்ளை போல எழுந்து நிற்காதமா. நானும் மனுசிதான் மாமியார்னு மரியாதை மனசுல இருந்தா போதும் சிற்பிகா” என்றவரோ வாட்ரோப்பிலிருந்து வெண்பட்டில் தங்க நிற சரிகை போட்ட புடவையை எடுத்து கொடுத்து “குளிச்சிட்டு புடவையை கட்டிக்கோமா பக்கத்து வீட்டு மீனா அலங்காரம் செய்ய இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா” என்றதும் சிற்பிகாவுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. கூச்சத்துடன் புடவையை வாங்கிக்கொண்டு கட்டில் மேல் வைத்துவிட்டு குளியலறைக்குள் ஓடிவிட்டாள்.
“மருமகளுக்கு வெட்கம் வந்துடுச்சு போல” என்ற சிரித்துக்கொண்டவர் உமாவிடம் “இந்த காலத்துப் பொண்ணுங்களுக்கு நாம எதுவும் சொல்லிக்கொடுக்க தேவையிருக்காது அவங்களே பார்த்துப்பாங்க நீங்க வாங்க சமையல்கட்டுல கொஞ்சம் வேலையிருக்கு” என்றவர் முன்னே நடக்க “இந்தம்மா வீட்டுக்கு வந்தா நம்ம தலையில பாதி வேலைய கட்டி விடுறாங்க! பொண்ணுக்காக செய்ய வேண்டிய இருக்கு” என்று புலம்பிக்கொணடேச் சென்றார் உமா.
சிற்பிகாவோ குளித்து வந்தவள் இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்கவிருக்கும் முதலிரவை பற்றி அச்சமே வந்தது. சந்தோஷ் தன் காதலன் தான் இருந்தாலும் எல்லா பெண்களுக்கும் இருக்கும் முதலிரவின் பயம் அவளுக்கும் வந்துவிட்டது. பட்டுச் சேலையை மடிப்பு எடுக்க அதுவோ வளுவளுவென்று இருந்தது. இந்த சேலைக்கு வேலையிருக்காது என்று இப்போதே சேலை சிற்பிகாவிடம் கூறியது.
அவளோ மடிப்பெடுத்து ஓய்ந்து போனாள். பக்கத்து வீட்டு நடுத்தர வயது பெண் மீனா சிற்பிகாவுக்கு அலங்காரம் செய்து விட வந்தவள் அமுதவள்ளியை போய் பார்க்க அவரோ “என்னோட ரூமுக்கு போ என் மருமக இருக்கா” என்றதும் மீனாவும் அறைக்குள் வர மடிப்பு எடுக்க சிரமப்படுவதை கண்டவருக்கும் சிரிப்புதான் வந்தது.
“எப்படியும் நீ மடிப்பு எடுத்து கட்டினாலும் உன் வீட்டுக்காரர் கலைக்கத்தான் போறாரு” என்று கிண்டல் செய்து சிரிக்க “அக்கா ப்ளீஸ் வேற எதாவது பேசுங்களேன்” என்று சிற்பிகா சிணுங்கினாள்.
“சரி சரி நான் பேசலை” என்ற மீனா சிற்பிகாவுக்கு புடவையை மடிப்பெடுத்து கட்டிவிட்டு மிதமான அலங்காரம் செய்து விட்டு சிற்பிகாவை பார்த்தவர் “அப்பா செம அழகுடிமா இன்னிக்கு உனக்கு தூக்கமே இருக்காது போ” என்று அவள் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்துச் சென்றார்.
சிற்பிகாவோ நகத்தை கடித்து துப்பிக்கொண்டிருந்தாள். அவள் தோழிகள் முதலிரவு பத்தி பேசினாலே போங்கடி உங்களுக்கு வேற பேச்சே கிடையாதா என்று தெறித்து ஓடிவிடுவாள் சிற்பிகா. இன்று என்ன நடக்குமோ ப்ரண்ட்ஸ் பேசும் போது கொஞ்சம் கேட்டிருக்கலாமோ என்றெல்லாம் அவள் மனது அலைபாயத்துவங்கியது.
இட்லியும் தக்காளிச் சட்னியும் கொஞ்சமாய் கேசரி தட்டில் போட்டு எடுத்து வந்தார் அமுதவள்ளி.
சிற்பிகாவின் படபடப்பை அவதானித்தவர் “எதுக்கு இப்படி படபடப்பு உனக்கு வருதுமா பயப்படாம இரு” என்று அவளின் கையை பிடித்துக்கொண்டவரோ “11 மணி வரை பேசிட்டிருங்க அதுக்கு மேல நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை. தைரியமா இரு என் மகன் பார்த்துப்பான்” என்றவரோ நமட்டுச்சிரிப்புடன் இட்லித்தட்டை நீட்டினார் சாப்பிடச்சொல்லி.
அவளோ என்ன அத்தை இப்படியெல்லாம் பேசுறாங்க என்று சங்கடத்துடன் தட்டை வாங்கி கேசரியை கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு இரண்டு இட்லியை சாப்பிட்டு முடித்து தட்டை வாஷ் செய்ய போக “தட்டை கொடு இன்னிக்கு நான் கழுவி வைக்குறேன்” என்று வாங்கிட அவளோ “அத்தை நான் சாப்பிட்டதை நீங்க கழுவ வேண்டாம்” என்று தயங்கினாள்.
“நீ என் மருமக கழுவினா தப்பில்ல கொண்டா” என்று தட்டை வாங்கிக் கொண்டு “கொஞ்ச நேரத்துல நான் வரேன்” என்று சென்றுவிட்டார்.
சந்தோஷோ அவசரமாக சாப்பிட சண்முகமோ “மெதுவா சாப்பிடு என்ன அவசரம்” என்று அவர் மெதுவாக சிரிக்க ஆனந்தனோ நாமளும் சிரிச்சா மாப்பிள்ளைக்கு சங்கடமென அமைதியாக சாப்பிட்டார்.
ஆனந்தனுக்கும் உமாவிற்கும் ஒரு அறை ஒதுக்கியிருந்தனர். உமாவோ அமுதவள்ளியின் அறைக்குள் செல்ல “அம்மா பயமாயிருக்கு” என்று உமாவை கட்டிக்கொண்டாள். “பயப்படாதடி மாப்பிள்ளை சொல்றபடி நடந்துக்கோ” என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்.
சந்தோஷ் அறைக்குள் வந்து குளித்து விட்டு பட்டுவேஷ்டி சட்டை அணிந்து பர்ஃப்யூமை எடுத்து சர்சர்ரென்று அடித்துக்கொண்டு ரூமிற்கும் லேவண்டர் ரூம் ஃபிரஷ்னர் அடித்துவிட்டான். அறையின் கட்டிலில் மல்லிகை தோரணங்கள் தொங்கவிட்டிருக்க மெத்தையில் ரோஜா இதழ்களால் அலங்காரம் செய்து இருந்தனர்.
‘சில்வண்டு சீக்கிரம் வாடி மாமன் காத்திருக்கேன்’ என்று கையை பிசைந்துக் கொண்டவன் தாம்பூலத்தில் வைத்திருந்த லட்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.
அமுதவள்ளியோ சுண்டக் காய்ச்சிய பாலை வெள்ளி டம்ளரில் எடுத்துக்கொண்டு சிற்பிகா இருக்கும் அறைக்குள் சென்றவர் அவளிடம் பாலை கொடுத்து “பக்குவமா நடந்துக்கோ” என்று அவளது தலையை தடவிக்கொடுத்து “நான் சொன்னது 11மணி” என்று ஞாகப்படுத்திவிட்டு “காலையில் நான் வந்து தட்டும் வரை திறக்ககூடாது. வா சந்தோஷ் அறை வரைக்கும் கூட்டிட்டு போறேன்” என்று அச்சத்துடன் மிரண்டு நின்றிருக்கும் சிற்பிகாவை சந்தோஷ் அறை வாசல் வரை விட்டு “உள்ளே போ மா!” என்று சிரித்தபடியே வந்து விட்டார்.
தங்கப்பதுமையாக வந்து நின்ற சிற்பிகாவை மேலிருந்து கீழ் வரை அணுஅணுவாக இரசித்து பார்த்து நின்றான் சந்தோஷ்.
அவளோ குனிந்த தலை நிமிரவேயில்லை. நிலத்தில் கட்டைவிரலால் கோலம் போட்டு நின்றிருந்தாள். “ஏய் என்னடி லவ் எல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து வெட்கப்பட்டு குனிஞ்சு நின்னு கோலம் போட்டுற டைல்ஸ்ஸை பேத்து எடுத்துடாத” என்று கிண்டலாக பேசி அவளது முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தினான்.
அவளோ கண்களை மூடிக்கொண்டு நின்றாள். அவளது கதுப்பு கன்னங்கள் செவ்வானம் பூத்து இருந்தது. அவன் நெருங்கி நிற்க அவளது இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது. அவள் வேகமாக மூச்சை இழுக்க அவளின் நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது. அவளின் முன்னழகுகளை போதையோடு பார்த்து அவள் கையிலிருந்த பாலை வாங்கி டேபிள் மீது வைத்தான்.
சிற்பிகாவின் முகத்தை கையில் ஏந்தி அவளது பிறை நெற்றியில் முத்தமிட. அவளது திராட்சை கண்கள் இரண்டும் மருட்சியுடன் சந்தோஷை பார்த்தது. அவள் தோள்களில் அழுந்தபற்ற அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. ஏசி அவளுக்கு ஒத்துக்காது என்று ஏசியை போடாமல் இருந்தான். அவள் கன்னத்தோடு கன்னம் உரச பெண்ணவளின் பூமேனி அவன் கைபட்டு மெய் சிலிர்த்து நின்றாள்.
வெட்கம் கொண்டு விழப்போனவளை பூபோல அள்ளிக்கொண்டு கட்டிலில் படுக்க வைத்தான். “சந்தோஷ் அத்தை பால் குடிக்கச் சொல்லியிருக்காங்க 11 மணிக்குமேல்தான் எல்லாம் நடக்கணும்னு சொல்லியிருக்காங்க” என்றாள் வெட்கப்பட்டுக்கொண்டு.
“அவ்ளோதான் சொன்னாங்களா. வேற எதுவும் சொல்லிக்கொடுக்கலையா!” என்றான் விஷமமாக உதடு கடித்து சிரித்தபடி.
“பர்ஸ்ட் பால் குடிக்கச் சொன்னாங்க” என்றாள் மெல்லிய குரலில்.
“அப்புறம்” என்றான் அவளது காது மடலை நாவால் தீண்டி.
அவளோ அவன் நாவு தீண்டிய கூச்சத்தில் கழுத்தை சாய்த்தாள். “சரி இப்ப ஸ்வீட் சாப்பிட்டு நம்ம பர்ஸ்ட் நைட்டை ஸ்டார்ட் பண்ணலாம்” என் அவளை பின்னிருந்து அணைத்தான்.
அவனது அணைப்பில் நெளிந்தாள் பேதைப்பெண். லட்டை எடுத்து வாயில் வைத்தவன் “ம்ம் சாப்பிடு” என்றதும் “நான் எப்படி சாப்பிடறது?” என்று அவள் சிணுங்க “இப்படித்தான் சாப்பிடணும்” என்று அவளது பன்னீர் ரோஜா இதழ்களில் தன் இதழில் இருந்து லட்டை ஊட்டிவிட்டான். இருவரின் இதழ்களும் இனிப்பு சுவை தேனாக இனிக்க பெண்ணவளின் இதழை சுவைக்க ஆரம்பித்தான்.
அவளோ கண்கள் சொருக “சந்தோஷ்” என்று அவனை இறுக அணைத்துக்கொண்டாள். அவனது இதழ்கள் எனும் பூட்டை நாவு எனும் சாவியை போட்டு திறந்து நாவோடு நாவை சாரையும் நாகமும் போல பிண்ணி பிணைந்துக்கொண்டனர் இருவரும்.
இருவரும் இறுக்கமாக கட்டிக்கொண்டனர். சிறிது நேரத்தில் அவள் மூச்சுக்கு ஏங்க அவளை விட்டு பிரிந்ததும் பாலை எடுத்து வந்து அவன் கொஞ்சம் குடித்து மாறி மாறி பரிமாறிக்கொண்டனர்.
இதழ் கொண்டு எச்சில் முத்தம் இருவருக்கும் திகட்டவேயில்லை. அவளது நெற்றயில் உள்ள குங்குமம் வியர்வையில் வழிய துவங்கியது. அவளது கூந்தலில் உள்ள மல்லிகைப்பூவின் வாசம் அவனுக்கு போதையூட்டியது. அவனது விரல்கள் கன்னங்களில் கோலம் போட அவளது கண்இமைகள் படபடவென துடிக்க அவனது விரல்கள் மெல்ல கீழே உள்ள வெல்வெட் இதழ்களை வருடத்தொடங்க பெண்ணவளின் இதழ்கள் துடித்தது. அதன் மென்மையில் மயங்கி கன்னங்களை தாங்கி “சிற்பி என்னை பாரேன்” என்றான் போதையாக.
“ம்ம் கூச்சமா இருக்கு சந்தோஷ்” என்றாள் கீச்சு குரலில்.
“ப்ளீஸ் ஓபன் ஐஸ்” என்று கண் இமைகளில் முத்தம் கொடுக்க மான் விழிகளை திறந்து ஆண்மகனை பார்த்தாள் பெண்ணவள். கண்கள் இரண்டும காதல் கதை பேச அங்கே பேச்சுக்கு இடமில்லாது போனது. அவனது உஷ்ண காற்று அவளது கன்னத்தில் பட அவளோ வெட்கம் கொண்டு அவனை அணைத்துக்கொண்டாள். முகம் முழுவதும் முத்த அச்சாரம் போட அதிரடி முத்த தாக்குதல் அவளை கிறங்கடித்தது. அவனது ஆசையின் வேகம் கண்டு பயந்துதான் போனாள்.
அவளது பூமேனியின் இளம் சூடு அவனது ஆண்மையை பீறிட்டு எழ வைத்தது. அவளது பஞ்சுமெத்தை மேனியை கைகொண்டு அளவெடுக்க தொடங்கினான். அவனது சட்டையை கழட்டி வைக்க அவனின் கட்டு மஸ்தான திரண்ட புஜங்களும் அகன்று விரிந்த கேடய மார்பும், அவளை தொட்டு பார்க்க ஆசையை தூண்டியது. அவளது கழுத்தில் முகம் புதைத்து அவனது கைகள் அவளது முந்தானையை விலக்க அவளது கைகொண்டு மறைத்துக்கொண்டாள்.
“ம்ப்ச்” என்று சலித்தவன் கடிகாரத்தை பார்த்து “மணி 11 க்கு மேல ஆகிடுச்சு” என்றவனோ வேலையில் கண்ணாக இருந்தான். அவளை மெல்ல சரித்து அவளின் சோளிகளுக்கு விடுதலை கொடுக்க பூரண நிலவு இரண்டும் மெல்லிய இரவு வெளிச்சத்தில் அவனது கண்ணுக்கு விருந்தாக அவனது கைகள் பூரண நிலவை ஆராதிக்க தொடங்கியது.
அவளுக்கோ தவுசன்ட் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல உணர்வு. கட்டிக்கொண்டாள் இறுக்கமாக. கால்களை இறுக்கிக்கொண்டாள் அவனது வேலைகளில். இரு உடல்களும் சங்கமம் ஆக ஏங்கிக்கொண்டிருந்தது. காதலுடன் காம பாட அரங்கேற்றம் ஆரம்பித்தனர் இருவரும். ரதியும் மன்மதனாக காதல் செய்தனர் பிண்ணி பிணைந்து. பெண்மையை பூஜை செய்தான். பின்னழகுகளை ஆரத்தழுவி முகத்தை அவளது மென்மைகளில் புதைத்தான். அவளுக்கு வெட்கம் நெட்டித்தள்ள அவளில் முணகல்கள் அவனுக்கு இனிய கானம் போல பித்தாக்கியது.
பெண்ணவளுக்கு வெண்முத்துக்கள் தோன்ற ஆரம்பிக்க சந்தனகாட்டில் வாசம் பிடித்து அவளது அனுமதி கேட்டான்.
பூமேனியில் அவனது இதழ்கள் ஊர்வலம் வந்து தேன் கலசங்களை கவ்வி சுவைத்தான். தாமரை தடாகத்தில் விரல்களால் கோலம் போட்டு அவளது நாபியை சுற்றி நாவால் கோலம் போட்டான். அவளுக்கு வலிக்குமோ என்று பூ போல ஆராதித்துக்கொண்டிருந்தான். பெண்மை எனும் பெட்டகத்தில் புதையல் எடுக்க துவங்கினான். அவள் துவண்டு போய் கண்களில் கண்ணீர்வழிய நாவு கொண்டு கண்ணீரை துடைத்து இதழ் முத்தம் கொடுத்து பெண்மையை களவாடினான். விடியும்வரை அவளின் சிணுங்கலும், அவன் வெப்ப மூச்சுக்களும் அறையை அதிரச் செய்தது.
விடியற்காலையில் முற்று பெற்றது அவர்களின் கூடல்.
அவள் சோர்வாக இருக்க தன் மேல் போட்டுக்கொண்டு “என்னடி பெயின் ஏதும் இருக்கா சொல்லு” என்றான் அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்து.
“இல்ல” என்று தலையை ஆட்ட “சரி தூங்கு” என்று அவள் முதுகை வருடிக்கொடுக்க கண்ணயர்ந்தாள். மணி ஐந்து ஆக கதவை தட்டினார் அமுதவள்ளி. அவர்களின் குடும்ப வழக்கத்தில் முதலிரவு முடிந்து மாமியார் முகத்தில்தான் விழிக்கணும் என்றிருந்தது. முதலில் கண்விழித்தது சந்தோஷ்தான்.
16. உறவு
“ஏய் லட்டு” என்று சிற்பிகாவின் கன்னத்தை தட்ட அவளோ “கொஞ்சநேரம் தூங்குறேன்” என்று தூக்கத்தை தொடர்ந்தாள்.
அமுதவள்ளிக்கோ கதவை தட்டுவது சங்கடமாக இருந்தாலும் வழக்கத்தை மாற்ற முடியாதே என்று ஐந்து நிமிடம் நின்றவர் “சிற்பிகா” என்று கதவு தட்ட தன்னவளை மெல்ல பிரித்து தலையணையில் படுக்க வைத்துவிட்டு கட்டிலைவிட்டு இறங்கி வந்தவன் கீழே கிடந்த வேஷ்டியை எடுத்து சுற்றிக்கொண்டு கதவு பக்கம் சென்றவன் “ம்மா அவ டயர்டா தூங்குறா ஆறு மணிக்கு எழுப்பி விடறேன்” என்றதும்
“கண்ணா ஐந்து மணிக்கு எழுந்து குளிச்சு விளக்கு போடணும் நம்ம பரம்பரை சம்பிரதாயம் இன்னிக்கு மட்டும் அவளை எழுப்பி விடு” என்றார் அமுதவள்ளி தயங்கியபடியே.
“ம்ம் சரிமா நீங்க கிளம்புங்க” என்றதும் “டேய் சிற்பிகா குளிச்சிட்டு அறையை விட்டு வெளியே வரும்போது என் முகத்துலதான் விழிக்கணும்டா” என்றார் பொறுமையிழந்து.
“என்ன சம்பிரதாயமோ போங்க” என்று சலித்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கும் சிற்பிகாவின் கன்னத்தில் முத்தமிட்டு
“ஏய் சில்வண்டு இப்போ நீ கண் முழிக்கலைனா அடுத்த ரவுண்டு போவேன்” என அவள் காதோரம் இரகசியம் பேச. அவளோ “அடுத்த ரவுண்டா!” என்று கண்ணை திறந்தாள்.
“ஏய் குளிச்சிட்டு விளக்கு போடணுமாம் அம்மா நம்ம ரூம்க்கு வெளியே நிற்குறாங்க” என்றதம்.
“என்னது அத்தை வெளியே நிற்குறாங்களா!” என்று பதட்டத்துடன் எழுந்தவள் வெற்று மேனியாக இருக்க அவனோ அவளை நெருங்க. அவனை முறைத்து “பக்கம் வந்தா கொன்னுடுவேன் போடா நைட் முழுக்க தூங்கவே விடலை” என்று முணகிக்கொண்டு போர்வையை எடுத்து போர்த்தியபடி குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
சிற்பிகா குளித்து வந்ததும் சந்தோஷ் குளியலறைக்குள் நுழைந்தான். அவசரமாக தான் கொண்டு வந்திருந்த பேக்கிலிருந்து கைக்கு கிடைத்த சுடிதாரை எடுத்து போட்டுக்கொண்ட வெளியே வந்தவளின் முகத்தை பார்த்தார் அமுதவள்ளி.
அவளோ கூச்சம் கொண்டு தலையை குனிந்துக் கொள்ள “சந்தோசமா இருந்தீங்களா. உனக்கு ஏதும் இஷ்யூ இருந்தா சொல்லு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்” என்றதும்
இப்படியொரு மாமியாரா இவங்க டெரர் பீஸ்னு பார்த்தா இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே என்று பிரமித்து பார்த்து “நான் நார்மலாத்தான் இருக்கேன் அத்தை” என்றாள் தரையை பார்த்தபடி.
“பூஜையறையில விளக்கேத்தணும் சந்தோஷ் குளிச்சிட்டு வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வாங்க” என்றவர் “ஹான் இன்னும் ஒரு வாரத்துக்கு காலையில சேலை கட்டிக்கோ நைட் ஆனதும் ஏதாவது உனக்கு விருப்பப்பட்டது போட்டுக்கலாம்” என்று கூறியவர் அங்கிருந்து நகர போக அவளோ “அத்தை பகல் முழுக்க சேலை கட்டணுமா?” என்று அப்பாவியாய் கேட்க. அமுதவள்ளியோ “ஒருவாரம் நம்ம வீட்டுக்கு தூரத்து சொந்தபந்தங்கள் வந்து போவாங்க சிற்பிகா. நம்ம பரம்பரைக்கு ஒரு வழக்கம் இருக்கு. அதை நான் உனக்காக உடைக்க முடியாது! ஒருவாரம் தானே அஜஸ்ட் பண்ணு. என்னையெல்லாம் எங்க மாமியார் நைட்டியே போடக்கூடாதுனு சொன்னாங்க தெரியுமா. நான் உனக்கு இந்த ட்ரஸ் போடணும்னு ஆர்டர் போடலை ஒருவாரம் மட்டும்தான் சேலை கட்டச்சொன்னேன்” என்று கறாராக சொல்ல.
“சரிங்க அத்தை நீங்க சொன்னா காரணம் இருக்கும்” என்று அறைக்குள் வந்தவள் புடவையை எடுத்து கட்ட ஆரம்பித்தாள்.
ஆனால் அவளுக்கு சேலைகட்ட அசௌகரியம்தான் பேங்கிற்கும் சுடிதார்தான் அணிந்துச் செல்வாள். “இன்னிக்கு முழுக்க எப்படி சேலை கட்டியிருக்க போறேனோ தெரியலை” என்று புலம்பிக்கொண்டே சேலையை கட்டி முடிக்க சந்தோஷ் குளியலறையில் இருந்து வெளியே வந்தான்.
“ஏய் என்னடா சேலை கட்டியிருக்க! சுடிதார் போட வேண்டியதுதானே” என்றான் அவளை பின்னிருந்து கட்டிக்கொண்டு.
“அது வந்து எனக்கு சேலை கட்டணும்னு ஆசையா இருந்துச்சு அதான்” என்றாள். அமுதவள்ளி சேலைத்தான் கட்ட வேண்டும் என்று கறாராக சொன்னதை சந்தோஷிடம் மறைத்துவிட்டாள்.
“ம்ம் எனக்கு நீ சேலை கட்டினா வசதியா இருக்கும்” என்று கூற அவளது வெற்று முதுகில் முத்தம் கொடுத்தான்.
“சந்தோஷ் சாமி கும்பிடணும் கையை வச்சிக்கிட்டு சும்மா இருங்க” என்று அவனை செல்லமாக அதட்டிவிட்டு குங்குமச் சிமிழை எடுத்து சந்தோஷ் கையில் கொடுக்க அவனோ குங்குமத்தை உச்சியில் வைத்துவிட்டு நெற்றியில் முத்தமிட்டு “ஐ.லவ்.யு பொண்டாட்டி” என்று அவள் இதழில் இதழ் ஒற்றி எடுத்தான்.
“ம்ப்ச் சாமிகும்பிடணும்டா” என்று சிணுங்கியவளை “முத்தம் சைவம் தான் டி” என்று சிரித்துக்கொண்டு அவனும் வேஷ்டி சட்டை கட்டிக்கொண்டவன் “நீ சேலை கட்டினா நானும் வேஷ்டி சட்டை போடுவேன் அப்போதான் ரெண்டு பேரும் மேட்ச் ஆவோம். அவசரத்துக்கு இதுதான் உதவும்” என்று கண்ணைச்சிமிட்டினான்.
“ச்சீ போடா” என்று மூக்கை சுருக்கினாள்.
“இன்னுமா வராங்க” என்று அமுதவள்ளி கடுப்பானவர் ஹாலிலிருந்து சந்தோஷ் அறையை பார்க்க இருவரும் கைகோர்த்துக்கொண்டு கீழே வந்தனர். இருவரது ஜோடிப்பொருத்தமும் அம்சமாய் இருந்தது ‘நைட் சுத்திப்போடணும்’ என்று எண்ணிக்கொண்டு சந்தோஷ், சிற்பிகா இருவரும் கீழே வந்ததும் “இவ்ளோ நேரமா நான் என்ன சொன்னேன் மணி ஆறு ஆச்சு” என்று சந்தோஷை கடிந்துக் கொள்ள சிற்பிகாவோ “அத்தை நான்தான் சேலை கட்ட லேட் பண்ணினேன்” என்று சந்தோஷை காப்பாற்ற “இல்லமா நான் தான் குளிச்சிட்டு வர லேட் பண்ணினேன்” இருவரும் மாறி மாறி பேச இருவரையும் முறைத்தவர் “ஆறுமணிக்குள்ள விளக்கு போடணும் போங்க” என்று இருவரையும் பூஜை அறைக்கு அனுப்பினார்.
விளக்கேத்தி சாமி கும்பிட்டு வெளியே வந்ததும் “ரெண்டும் பேரும் பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு போய்ட்டு வாங்க காலையில விருந்து சாப்பிடலாம்” என்றதும் சிற்பிகா ஆனந்தனையும் உமாவையும் தேடினாள்.
சிற்பிகாவின் தேடலை புரிந்துக் கொண்ட அமுதவள்ளியோ “உன்னோட அம்மா உங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க உங்களுக்கு மதிய விருந்து போடணும்னு அவங்க முன்னமே கிளம்பிட்டாங்கம்மா நீங்க கோவிலுக்கு கிளம்புங்க” என்றார் அமுதவள்ளி.
கார் சாவியை எடுத்துக்கொண்டு சந்தோஷ் வெளியே போக “சிற்பிகா ஒரு நிமிசம் நில்லுமா” என்றதும்
“நீ பேசிட்டு வா சிற்பி” என்று போர்ட்டிகோவிற்குச் சென்றுவிட்டான் சந்தோஷ்.
“அம்மா என்கிட்ட சொல்லாமலே கிளம்பிட்டாங்க வீட்டுக்கு போய் பேசிக்குறேன்” என்று முணகி நின்றவளிடம்.
அமுதவள்ளியோ “உங்கம்மா உன்கிட்ட சொல்லிட்டு போகணும்னுதான் காலையில உங்க அறைக்கு வந்தாங்கம்மா ஆனா நீ தூங்கிட்டிருந்த அதான் என்கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. ஒருவாரம் நேரமே எழுந்து பழகினா பழக்கத்துக்கு வந்துடும். பழக்கப்படுத்திக்கணும்” என்றதும் சிற்பிகா முகம் சோகத்தை தத்தெடுக்க.
“நான் சொல்றது உனக்கு கஷ்டமாத்தான் இருக்கும். நேரமே எழுந்து பழகு அப்போதான் குடும்பத்துக்கு நல்லது” என்றார் இப்போது கட்டளையோடு.
“சரிங்க அத்தை இனி நேரமே எழுந்துக்குறேன்” என்றாள் தலையை ஆட்டி
“சந்தோஷ் வெயிட் பண்ணுறான் கிளம்பு” என்றார் ஒட்டாத்தன்மையில்லாமல்
“நேத்து கூட சிரிச்சு பேசினாங்க இன்னிக்கு என்னாச்சு இவங்களுக்கு! நல்லதுதானே சொல்றாங்க நேரமே எழும்புவோம்” என்று பெரும்மூச்சுவிட்டுக்கொண்டு வெளியேச் சென்றவள் காரில் ஏறியதும் சிரித்த முகமாக இருந்தாள்.
கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும் காலை விருந்து சாப்பிட சந்தோஷ் உட்கார்ந்தான். சிற்பிகாவோ சந்தோஷிற்கு பரிமாற போக பிரியாணியை ஹாட்பாக்ஸில் போட்டு வந்த அமுதவள்ளியோ பூரியை எடுத்து இலையில் வைக்க போன சிற்பிகாவை “சிற்பிகா” என்று பெரிய குரலில் அழைக்க சற்று தடுமாறத்தான் செய்தாள் சிற்பிகா.
“அத்தை” என மிரண்டு விழித்தவளை “நீயும் உட்காரு இன்னிக்கு ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடணும்” என்றார் புன்சிரிப்புடன்.
“அப்பாடா சிரிக்குறாங்க” என்று நெஞ்சில் கை வைத்தவளோ மறுப்பு சொல்லாமல் சந்தோஷுடன் உட்கார்ந்தாள். சோபாவில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த சண்முகத்திற்கு தெரிந்தது அமுதவள்ளியின் குரலில் இருந்த மாற்றம். சந்தோஷும் அமுதவள்ளி சிற்பிகாவை அழைத்த விதத்தை கவனித்தான். அம்மாகிட்ட பேசணும் என்று முடிவோடு இருந்தான்.
பிரியாணியை மகன் மருமகளுக்கு இலையில் பரிமாறினார். சுந்தோஷ் பிரியாணி சாப்பிட்டு முடித்து பூரிக்கும் வந்துவிட்டான் சிற்பிகாவுக்கு ஆனந்தனின் நினைவு வந்துவிட்டது. காலையில் பேங்கிற்கு போக நேரம் ஆச்சுனா ஆனந்தன்,உமா இருவரும் அவளுக்கு ஊட்டி விடுவார்கள் அவர்கள் நினைவு வந்து விட பிரியாணியை சாப்பிடாமல் விரலால் அளந்துக் கொண்டிருந்தாள்.
“சிற்பிகா என்ன சாப்பிடும் போது யோசனை சாப்பாட்டுல கவனம் வை! அப்போதான் நாம சாப்பிடுற சாப்பாடு உடம்புல ஒட்டும்” என்று லக்சரர் போல கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார்.
சிற்பிகாவோ வேகமாக சாப்பிட்டு ஒரு பூரியும் வைத்து சாப்பிட்டு முடித்தாள். சந்தோஷ் சாப்பிட்டதும் “சிற்பி நீ சாப்பிட்டு வா” என்று கை கழுவ சமையல்கட்டுக்குள் சென்றான்.
சிற்பியோ சாப்பிட்ட இலையை எடுக்க போக “சாப்பிட்ட கையோடு யாராவது இலை எடுப்பாங்களா உன்வீட்டுல சொல்லிக்கொடுக்கலையா?” என்றதும் அவளுக்கு முகத்தில் அறைந்தாற் போல இருந்தது. பொறுமையா சொல்லியிருக்கலாம்ல என்று அவள் மனம் வெதும்பியதுதான். உமா இலையில் சாப்பிடும்போது சாப்பிட்டு எச்சில் கையோடு இலையை எடுக்க கூடாதென ஒருமுறை சொல்லியிருக்கிறார். உமா சொன்னதை மறந்திருந்தாள் சிற்பிகா.
“சரி அத்தை இனிமே கைகழுவிட்டு வந்து எடுக்குறேன்” என்றவளுக்கு குரல் பிசிறு தட்டியது. அமுதவள்ளியோ “நான் எதார்த்தமாத்தான் சொன்னேன் என் குணம் இதுதான் யார் தப்பு பண்ணினாலும் இப்படித்தான் பேசுவேன் சரியா” என்றார் இரும்புக்குரலில்.
சண்முகமோ மகனும் மருமகளும் கிளம்பட்டும் இவளுக்கு நாம பாடம் எடுக்கணும் என்று பேப்பருக்குள் தலையை நுழைத்துக்கொண்டார்.
மதிய விருந்துக்கு தடபுடலாக சமைத்துக்கொண்டிருந்தார் உமா. ஆனந்தனோ சிக்கன், மட்டன், மீன் என்று எடுத்து வந்து கொடுத்திருந்தார் உமாவிடம்.
கைகழுவி வந்தவளுக்கு சேலை கட்டியே இருக்கமுடியவில்லை. எப்போதடா கழட்டி வைப்போம் என்றிருந்தாள். சரியாக தூரத்து உறவில் கணவனும் மனைவியும் சேர்ந்து வர “சிற்பிகா டீ போட்டு எடுத்துட்டு வாமா” என அமுதவள்ளி கூறியதும் அவளுக்கோ தலைசுற்றியது. சுமாராகத்தான் டீ போடுவாள் அதிகம் சமையல்கட்டு பக்கம் அவள் போனதில்லை.
சமையல்கட்டுக்குச் சென்று பாலை அடுப்பில ஊற்றி வைத்தவள் இஞ்சி ஏலக்காய் போட்ட டீ போட்டுக்கொண்டு வந்து உறவினர்களுக்கும் சண்முகம் அமுதவள்ளிக்கும் கொடுத்தாள்.
டீயை குடித்துவிட்டு “டீ நல்லாயிருக்குமா.” என்று சிறப்பிகாவிடம் கூறிவிட்டு “அமுதா உன்னை போலவே உங்க மருமகளும் டீ சூப்பரா போட்டிருக்காளே! அப்போ சமையல் பிரமாதமா பண்ணுவியாமா” என்று சிற்பிகாவை உறவினர் கேட்க
“ஓ தாராளமா பண்ணித்தரேன்” என்றாள் சிற்பிகா புன்னகையுடன்
“இப்போ என் மருமகள் மறுவீட்டுக்கு கிளம்புறாங்க நான் சமையல் பண்ணித்தரேன் இருந்து சாப்பிட்டு போகலாம்” என்றார் அமுதவள்ளி.
“உன் சமையல் சாப்பாட்டு போர் அடிச்சு போச்சு அமுதா உன் மருமக கையில சாப்பிடலாம்னு இருந்தோம் பரவால இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுக்குறோம்” என்று நீட்டி முழக்கினர்.
அமுதவள்ளியின் முகம் மாறியது. சண்முகமோ போச்சு என் பொண்டாட்டியை கொம்பு சீவி விடறாங்க இந்தம்மா என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டார்.
சிற்பிகாவோ உறவின பெண்மணியிடம் “அம்மா எனக்கு அத்தை அளவு எல்லாம் சமைக்கத்தெரியாது. ஓரளவுதான் சமைப்பேன். இனிதான் அத்தைகிட்ட கேட்டுத்தெரிஞ்சுக்கணும்” என அவர்களின் எண்ணம் புரிந்து பேசினாள்.
அமுதவள்ளியோ சமைக்க தெரியாது என்று உண்மையை பேசிய மருமகளை மெச்சுதலாக பார்த்தார்.
மாமியார் மருமகளுக்கு சண்டை போட வைக்கலாம்னு பார்த்தா இந்த பொண்ணு மாமியாரை விட்டுக்கொடுக்காமல் பேசுது என்று அமைதியாகிப்போனார். சந்தோஷ் போனில் பேசிவிட்டு ஹாலுக்கு வந்தவன் உறவினர்களை “வாங்க” என்று வரவேற்றான். சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களும் கிளம்பிவிட்டனர்.
17. உறவு
“சரி நேரமாச்சு ரெண்டுபேரும் மதிய விருந்துக்கு கிளம்புங்க” என்றவரோ “மதிய விருந்து சாப்பிட்டு கொஞ்சம் இருந்துட்டு சாய்ந்தரம் 6 மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுங்க” என்றார் அமுதவள்ளி.
சிற்பிகாவோ இன்னிக்கு நைட் அம்மாவீட்டில் இருக்கலாம் என்று கனவுகண்டிருந்தாள். அதற்கு குறுக்கே கட்டை போட்டார் அமுதவள்ளி.
அமுதவள்ளி இன்னிக்கு நைட்டே நம்ம வீட்டுக்கு வந்துடணும் என்று கூறியது அவளுக்கு முகத்தில் வருத்தம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சண்முகத்திடமும் அமுதவள்ளியிடமும் “நாங்க போய்ட்டு வந்திடறோம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
அவர்கள் கிளம்பியதும் “அமுதா நீ பண்றது நல்லாவா இருக்கு. உன் பையனுக்கு நீ மட்டும்தான் சாப்பாடு போடணுமா. மருமக நம்ம பையனுக்கு முதன்முதலா பரிமாறணும்னு பூரியை இலையில வைக்கும் போது நீ என்னமோ அப்படி சத்தம் போட்டு அந்த பொண்ண பரிமாற விடாம தடுக்குற இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராது அமுதா” என்று கோபமாக பேசிவிட்டார்.
“பேசி முடிச்சிட்டீங்களா நான் ஒண்ணும் அவள என் பையனுக்கு பரிமாறவே வேண்டாம்னு சொல்லலை. இன்னிக்கு ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடும்னு தான் அவளை பரிமாற விடலை போதுமா நீங்கதான் தப்பான பார்வையில பார்த்து இருக்கீங்க. நான் பேசறதே இப்படித்தானே உங்களுக்கு தெரியாதா என்ன” என்று தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தார். ஆனால் உண்மையில் இன்று மகனுக்கு பரிமாறியது அவருக்கு பிடிக்காமல் போகவில்லை. தன் உரிமையை புதிதாய் வந்தவளுக்கு விட்டு கொடுக்க மனமில்லாமல்தான் அப்படி கத்திவிட்டார்.
அவருக்கு அப்படி சிற்பிகாவிடம் பேசியதில் தன் தவறு புரிந்தது. ஆனால் அவர் மகன் மேல் வைத்திருந்த பாசம் அவரை நிதானத்திலிருந்து வழுக்கி விட்டது. மகன் சந்தோசம் நமக்கு முக்கியம் இது போல இனி நாம பண்ணக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டார்.
சிற்பிகாவோ தாய் வீட்டுக்கு போகிறோம் என்று சின்னகுழந்தை போல ஆர்ப்பரிப்புடன் இருந்தாள். காரை நிறுத்தியதும் “சந்தோஷ் வாங்க” என்று முன்னால் ஓடினாள்.
“ஏய்! ஏய்! நில்லு! ஆரத்தி எடுக்கணும்! அவசரம் என்னடி நில்லு!” என மகளை செல்லமாக அதட்டி நிற்க வைத்தார் உமா.
“என்னோட ரூம்க்கு போகணும்மா” என்றாள் மூச்சுவாங்கி.
“உன்னோட ரூம் அப்படியேதான் இருக்கு எங்கயும் ஓடிப்போகல” என்று மகளின் சின்னபுள்ளத் தனத்தை எண்ணி சிரித்துக்கொண்டார்.
சந்தோஷ் சிற்பிகா பக்கம் வந்து நின்றதும் இருவருக்கும் ஆரத்தி எடுத்தார். ஆனந்தன் பலகாரம் வாங்கி வந்தவர் சந்தோஷையும் சிற்பிகாவையும் பார்த்த சந்தோசத்தில் பைக்கை நிறுத்திவிட்டு
“வாங்க மாப்பிள்ளை, வாடா தங்கம்” என்று சிற்பிகாவை தோளோடு அணைத்துக்கொண்டார் ஆனந்தன்.
“அப்பா ஐ மிஸ் யு ப்பா” என்றவளுக்கு குரல் தழுதழுத்து வந்தது.
“மிஸ் யு டு மா” என்று மகளின் உச்சியில் முத்தம் கொடுத்தார்.
“அப்பாவும் மகளும் வீட்டுக்குள்ள வந்து கொஞ்சிக்கோங்க” என்று உமா சிலாகித்து கூறினார்.
“உனக்கு ஏன் டி பொறாமை நாங்க அப்படித்தான் கொஞ்சிப்போம்” என்றார் ஆனந்தன்.
சந்தோஷோ பேண்ட் பாகெட்டில் கைவிட்டபடி தந்தை மகள் பாசத்தை இரசித்துக்கொண்டிருந்தான்.
சந்தோஷ் பார்த்துக்கொண்டிருப்பதை கண்ட ஆனந்தனோ “சாரி மாப்பிள்ளை வாங்க உள்ளே போகலாம்” என்று மகளையும் மருமகனையும் அழைத்துச் சென்றார் ஆனந்தன்.
ஆரத்தியை ஊற்றி வந்த உமாவோ ஹாலில் உட்கார்ந்திருந்த சந்தோஷிடம் “டீ, காபி என்ன போடட்டும் ங்க?” என்று மாப்பிள்ளை என்ற மரியாதையுடன் கேட்டார்.
சந்தோஷோ “அத்தை நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க நான் உங்களை விட வயசுல சின்னப்பையன்தானே” என்றதும்
“இல்ல எங்க வீட்டு மாப்பிள்ளை நீங்க. நான் மரியாதையா கூப்பிடணும்” என்று பாசமாய் பேசினார் உமா.
“டீ கொண்டு வாங்க அத்தை” என்றான் புன்னகைத்தபடியே
“சரிங்க மாப்பிள்ளை” என்று சிறுபிள்ளை போல குடுகுடுவென ஓடினார் உமா.
ஆனந்தன் வாழை இலை வெட்ட வீட்டுக்கு பின்னால் சென்றிருக்க
“என்னடி உன்னோட அறைக்கு கூட்டிட்டு போவியா மாட்டியா?” என்று டிவியில் சிங்சான் பார்த்துக்கொண்டிருந்த மனைவியின் இடையில் கையை போட்டான்.
“ம்ம் என்னோட ரூம்க்கு கூட்டிட்டு போனா நீங்க என்ன பண்ணுவீங்கனு தெரியும். அதான் கொஞ்ச நேரம் ஃப்ரீயா இருக்கலாம்னு எனக்கு பிடிச்ச சிங்சான் பார்த்திட்டிருக்கேன்“ என்றாள் சந்தோஷை பார்த்து கண்ணைச்சிமிட்டி
“கள்ளி அடுத்த வருசம் நமக்கு புள்ளையே பிறந்திடும் இன்னும் சிங்சான் பார்க்குறா இப்போ என்ன பண்ணுறேன் பாரு” என்று அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு மாடியில் இருக்கும் அறைக்கு தூக்கிச்சென்றான்.
“அச்சோ அம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க சந்தோஷ்” என்று அவள் சிணுங்க “மாப்பிள்ளையும் பொண்ணும் சந்தோசமாக இருக்காங்கனு நினைப்பாங்க வாடி” என்று அவளது அறைக்குள் சென்று கதவை காலால் உதைத்து மூடினான்.
டீ கொண்டு வந்த உமாவோ எங்க போனாங்க ரெண்டுபேரும் என்று ஹாலை சுற்றிப்பார்க்க மேலே மகளின் அறையில் சிரிப்பு சத்தம் கேட்க தாயுள்ளம் பூரிப்படைந்தது. கையில் இலையுடன் வந்த ஆனந்தனோ “எங்கடி பொண்ணும் மாப்பிள்ளையும்?” என்று கேட்க உமாவோ சிற்பிகாவின் அறையை காட்டினார்.
அவரும் புரிந்துக் கொண்டு சந்தோசமா இருக்கட்டும் என்று கொண்டு வந்த இலைகளை டைனிங் டேபிளில் வைத்து விட்டு இருவரும் சமையல்கட்டுக்குச் சென்று வடை போடத்துவங்கினர்.
சந்தோஷோ சிற்பிகாவிடம் சில்மிஷங்கள் செய்து ஒருமணிநேரம் கழித்தே சாப்பிடுவதற்கு கூட்டிவந்தான்.
உமாவோ சந்தோஷின் இலையில் சமைத்து வைத்த பதார்த்தங்கள் அத்தனையும் அடுக்கி வைத்துவிட்டார்.
சந்தோஷோ “ஒரு பிடி பிடிக்கிறேன்” என்று சாப்பிட்டவன் “அத்தை மட்டன் குழம்பு சூப்பர். பிஷ் பிரை சூப்பர்” என்று உமாவை பாராட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்தான். சிற்பிகாவோ “அம்மா வைக்கும் இறால் குழம்பு சூப்பரா இருக்கும் சந்தோஷ் அடுத்த முறை வரும் போது வச்சுக்கொடுங்கம்மா” என்றாள் தலையை சாய்த்து
“இறால் இன்னிக்கு கிடைக்கலடா அதான் அப்பா வாங்கிட்டு வரலை” என்றார் ஆனந்தன்.
இருவரும் சாப்பிட்டு கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்ததும் “ஏய் சில்வண்டு நம்ம வீட்டுக்கு கிளம்பலாமா?” என்றதும் அவள் முகம் வாடிப்போனது. “என்னாச்சு பேபி?” என்று சிற்பிகாவின் கன்னத்தை பிடித்தான்.
“ச.சந்தோஷ் நாம இன்னிக்கொரு நாள் அம்மா வீட்ல இருக்கலாமா?” என்று தயங்கிக்கொண்டே கேட்டாள்.
“இதுக்கு ஏன் தயக்கப்பட்டு கேட்குற பேபி. உன் ஆசைப்படியே நாம இங்க ஒருநாள் இருக்கலாம். நாளைக்கு ரெண்டு பேரும் டியூட்டில ஜாயின் பண்ணனுமே” என்றான் இதழ் பிதுக்கி.
“காலையில நேரமே எழுந்து போயிடலாமா?” என்று அவனது தோளில் சாய்ந்துக் கொண்டு கேட்டாள்.
“சரி இருப்போம்டி பேபி” என்று சிற்பிகாவை அணைத்துக்கொண்டான்.
“அத்தைக்கு போன் போட்டு சொல்லிடலாம் சந்தோஷ்” என்றிட “ம்ம் சொல்லிக்கலாம் பேபி” என்றவன் அவளுக்கு இதழ் முத்தம் கொடுத்தான்.
மாலையானதும் மகனும் மருமகளும் இன்னும் வரவில்லையே என்று வாசலையே பார்த்திருந்தார் அமுதவள்ளி.
“ஏய் எதுக்குடி இப்படி குட்டி போட்ட பூனை போல வாசலில் நடந்துட்டிருக்க?” என்று சண்முகம் அமுதவள்ளியை கேட்டார்.
“ம்ம் ஆறுமணிக்குள்ள உங்க மருமகளையும் மகனையும் வீட்டுக்கு வரச்சொன்னேன். ஆனா மணி ஏழாச்சு இன்னும் வரலையேங்க அதான் நடந்திட்டிருக்கேன். நேரமாகும்னு ஒரு போனாவது பண்ணிச்சொல்லலாம்ல” என்று அவர் வருத்தப்பட்டுச் சொல்ல.
சண்முகமோ “ஏய் போன் டவர் ஏதாவது இல்லாம இருந்துருக்கும் என்னமோ புலம்பாம வீட்டுக்குள்ள வா” என்றார் சண்முகம் மனைவியின் மனதை அறியாதவரா. சந்தோஷ் பேங்கிலிருந்து வர ஒரு மணி நேரம் தாமதம் ஆனால் ரெண்டு முறை போன் போட்டு விடுவார்.
சிற்பிகாவின் வீட்டு பக்கம் புத்தகக் கண்காட்சி போட்டிருக்க “சந்தோஷ் எனக்கு புக் நிறைய வாங்கணும் என்னை கூட்டிட்டு போங்களேன்” என்றதும்.
“ஓ போகலாம் வா” என்று புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு கூட்டிச்சென்றான். சந்தோஷ் அமுதவள்ளிக்கு போன் போட போன் எடுக்க அவனது போனில் டவர் இல்லாமல் இருந்தது. ச்சே வீட்டில இருக்கும் போதே அம்மாவுக்கு போன் பண்ணியிருக்கலாம் என்று அவன் மனம் அடித்துக்கொண்டது. சரி வீட்டுக்கு போய் போன் போடலாம் என்று இருந்து விட்டான். அமுதவள்ளியோ சந்தோஷ் மொபைலுக்கு பத்து முறை கூப்பிட்டு பார்த்து ஓய்ந்து விட்டார்.
‘என் மகன் என்னை மறந்து விட்டானா?’ என்று அவர் மனம் குமைந்து போனது. நெஞ்சுக்குள் இதயம் படபடவென துடித்துக்கொண்டது. என் மகன் என்னை மறக்கமாட்டான் என்று அவராகவே சொல்லிக்கொண்டார்.
சிற்பிகாவோ புக் ஃபேரில் நேரத்தை கடத்தினாள். சிற்பிகாவை முதன் முதல் வெளியே கூட்டி வந்திருக்கிறோம் அவளை அவசரப்படுத்த வேண்டாமென்று அமைதியாக இருந்தான் சந்தோஷ்.
புக்ஸ் கலெக்சன் முடிந்ததும் “சந்தோஷ் வெளியே டின்னர் முடிச்சிட்டு போகலாம்” என்றிட சந்தோஷோ “வீட்டுக்கு போயிடலாம்டி நேரமாச்சு” என்று வாட்ச்சை பார்த்தான்.
“ப்ளீஸ் எனக்கு பிடிச்ச கையேந்தி பவன் கடை இருக்கு அங்கே நெய் ரோஸ்ட் சூப்பரா இருக்கும் தெரியுமா வாங்களேன்” என கூட்டிச்சென்று தெருவோரம் இருக்கும் கடையில் காரை நிறுத்தச்சொல்ல சந்தோஷும் சிற்பிகாவின் ஆசையை நிறைவேற்ற காரை நிறுத்தினான். சிற்பிகாவோ காரை நிறுத்தியதும் காரிலிருந்து இறங்கிச்சென்றாள். கடை மூடப்போகும் சமயம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர் அந்த கடைக்கு உரிமையாளர்கள்.
“அக்கா, அண்ணா எப்படியிருக்கீங்க! எனக்கு நெய் தோசை தேங்காய்ச்சட்னி காரச் சட்னியும் வேணும்” என்றாள் நாக்கை சப்புக்கொட்டி
சிற்பிகாவின் கழுத்தில் இருக்கும் தாலிச் செயினையும் அவள் உச்சி வகுட்டில் வைத்திருந்த குங்குமம் அவளுக்கு திருமணம் ஆனதை கூற “அடடே! சிற்பிகா பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சா! எங்களை எல்லாம் கூப்பிடவே இல்லை” என்று அந்த தம்பதியர் பொய்யாக கோபம் கொண்டனர்.
“திடீர்னு முடிவாகிடுச்சு அண்ணா மன்னிச்சுக்கோங்க” என்றவளை “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் தங்கம்” என்றவர் மூடி வைத்த மாவை திறந்து நெய் ரோஸ்ட் சுட்டு கொடுத்தனர் நல்ல வேளை சட்னி மீதம் இருந்தது. சந்தோஷிற்கு நெய் ரோஸ்ட்டை தட்டில் போட்டுக்கொடுக்க அவனோ இப்படி தெருவோரம் வைத்திருக்கும் கடையில் எல்லாம் சாப்பிட்டதில்லை. சிற்பிகாவோ இரசித்து சூப்பரா இருக்கும் என்று சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் “சந்தோஷ் சாப்பிடுங்க” என்றதும் அவனும் சாப்பிட ஆரம்பித்தான்.
சட்னியும் காரமில்லாமல் மாவும் புளிப்பு இல்லாமல் இருந்தது. அவனுக்குமே நெய் ரோஸ்ட் பிடித்திருந்தது. வயிறு நிரம்ப சாப்பிட்டு அவர்களுக்கு காசு கொடுக்க வாங்க மறுத்தனர். “சிற்பி மா உனக்கு இது விருந்து. சாப்பாடுக்கு காசு எல்லாம் வாங்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டனர்.
“தேங்க்ஸ் அண்ணா, அக்கா” என்று அவர்களின் காலில் விழுந்தாள். “நல்லாயிரு தாயி” என்று அந்த தம்பதிகள் ஆசிர்வாதம் செய்தனர். சந்தோஷோ தன் மனைவியின் குறும்புத் தனத்தை இரசித்துக்கொண்டிருந்தான்.
காரில் ஏறியவளோ சந்தோஷிடம் பேசிக்கொண்டே இருந்தவள் அப்படியே தூங்கிவிட்டாள். வீட்டுக்கு வந்ததும் சிற்பி எழும்புடா என்று அவளது தோளை தட்ட கண்விழித்தவள் வாங்கி வந்த புக் எல்லாம் எடுத்துக்கொண்டு இறங்கினாள். அப்போதுதான் சந்தோஷிடம் கேட்டாள் “என்னங்க அத்தைக்கு போன் போட்டீங்களா?” என்றதும்
“புக் ஃபேர்ல டவர் கிடைக்கலடி இதோ போன் போடுறேன்” என்று அமுதவள்ளியின் போனுக்கு கூப்பிட்டான்.
அமுதவள்ளியோ சாப்பிடக்கூட இல்லாமல் போன் பக்கமே உட்கார்ந்திருந்தார். போனில் சந்தோஷின் எண்ணைக்கண்டதும் அவசரமாக போனை எடுத்து “சந்தோஷ் என்னாச்சு இன்னும் வீட்டுக்குவரலையே நடுவுல ஏதாச்சம் ப்ராப்ளமா! ஏன் அம்மாவுக்கு ஒரு போன் கூட போடல?” என்று ஏக்கமாக கேட்டார். தாயின் குரலில் தன்னை தேடியது தெரிய “சாரிமா சிற்பிகாவை வெளியில கூட்டிட்டு போனேன் அங்க டவர் கிடைக்கல இப்போ வீட்டுக்கு வந்ததும்தான் உங்களுக்கு போன் போடுறேன்” என்றான் வருத்தமாக.
“ஓஓ அப்போ நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?” என்றார் உள்வாங்கிய குரலில்
“ம்மா சிற்பிகா அம்மாவீட்ல ஒருநாள் இருந்துட்டு போகலாம்னு ஆசையா சொன்னா அதுவுமில்லாம மாமாவும் அத்தையும் என்னை இருக்கச் சொல்லி கேட்டாங்கம்மா என்னால மறுக்க முடியல உங்களுக்கு போன் போட்டு சொல்லாதது என் தப்புத்தான்மா” என்று மீண்டும் மன்னிப்பு கேட்டான். சந்தோஷ்.
“இருக்கட்டும்பா” என ஸ்ருதி இல்லாத குரலில் பேசியவர் “சாப்பிட்டியா?” என்றார் அமுதவள்ளி.
“ம்ம் சாப்பிட்டேன் கையேந்தி பவனில்” என்று அவன் எதார்த்தமாக சொல்லிவிட்டான்.
“என்னது கையேந்தி பவன்ல சாப்பிட்டியா ஏன் சிற்பிகா வீட்டில டின்னர் செய்யலையா என்ன? உனக்கு ஹோட்டல் ஃபுட் ஒத்துக்காதே” என்று பதறிக்கேட்டவர் “சிற்பிகாகிட்ட போனை கொடு” என்றார் கோபமாக
சிற்பிகாவோ சோபாவில் உட்கார்ந்திருந்த ஆனந்தனின் மடியில் படுத்துக்கொண்டிருந்தாள்.
சிற்பிகாவை எட்டி பார்த்து விட்டு “ம்மா அவ அவங்க அப்பா கூட பேசிட்டிருக்கா நாளைக்கு காலையில நேரமே நாங்க வந்திடறோம் டிபன் ரெடி பண்ணி வச்சிருங்க பை மா போன் வைக்குறேன்” என்று வைத்துவிட்டான்.
சண்முகமோ “என்ன அமுதா மகனும் மருமகளும் அங்கயே தங்கிட்டேனு சொன்னாங்களா?” என்றார்.
“ஏன் நீங்க என் பக்கம்தான் இருந்தீங்கல்ல சந்தோஷ் பேசியது உங்க காதுலையும் விழுந்திருக்கும்தானே! இந்த சிற்பிகா கையேந்தி பவன்ல என் பையனுக்கு சாப்பாடு வாங்கித் தந்திருக்கா நாளைக்கு வரட்டும் அவளை ஒரு போடு போடுறேன்” என்று கோபமாக பேசினார்.
“ஏய் அவங்க ஏதோ ஜாலியா ஒருநாள் சாப்பிட்டிருப்பாங்க அதை பெரிசு பண்ணாத அமுதா! மருமக மனசு கஷ்டப்படும்” என
சிற்பிகாவுக்காக பரிந்து பேசினார் சண்முகம்.
“சந்தோஷ்க்கு ஹோட்டல் ஃபுட் ஆகாதுனு உங்களுக்கு தெரியும்ல ஒரு டைம் அவன் வெளியே ஹோட்டல சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஆகி ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணினோமே” என்றார் அதே கோபத்துடன்.
“அடியே அவன் காலேஜ் படிக்கும்போது ஹோட்டல் ஃபுட் அவனுக்கு ஏத்துக்கலை. இப்போ அவன் படிப்பு முடிச்சு வேலைக்கும் போய் குடும்பஸ்தனும் ஆகிட்டான் இப்போ அவனுக்கு ஹோட்டல் ஃபுட் பழகிடும்” என மனைவியின் மனதை கட்டுப்படுத்த பார்த்தார்.
“அதெல்லாம் இருக்கட்டும் இந்த சிற்பிகா இன்னிக்கு நைட் அம்மா வீட்ல தங்குறேன்னு எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லமாட்டாளா!” என்றார் பொங்கிய கோபத்துடன்.
‘ஓ என் பொண்டாட்டி புல் பார்ம்ல இருக்கா’ என்று எண்ணியவர் உடனே காலையில சந்தோஷ்க்கு போன் போட்டு சொல்லிடணும் என்று முடிவெடுத்து “எனக்கு தூக்கம் வருது அமுதா” என்று பெட்ஷீட்டை போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டார்.
அமுதவள்ளிக்கு மகன் போன் போடாதது தவறாக தெரியவில்லை. மருமகள் தனக்கு போன் போட்டு சொல்லாதது பெரிய குத்தமாக தெரிந்தது.
அமுதவள்ளியின் கோபத்திலிருந்து சிற்பிகாவை காப்பாற்றுவானா சந்தோஷ்?
18. உறவு
அமுதவள்ளிக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. சந்தோஷை இன்றுதான் முதன் முறையாக பிரிந்து இருக்கிறார். மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எங்கே சிற்பிகா தன்னை விட்டு மகனை பிரித்து கூட்டிக்கொண்டு போய் விடுவாளோ என்ற பொஸசிவ் வந்தது அவருக்கு.
ஆனந்தனுடன் சிறிது நேரம் பேசிய சந்தோஷிற்கு கொட்டாவி வர. ஆனந்தனோ “சிற்பிமா காலையில நேரமே நீங்க கிளம்பணும் மாப்பிள்ளையை உன் ரூம்க்கு கூட்டிட்டு போடா” என்றார் வாஞ்சையாக.
“ம்ம் குட் நைட்ப்பா” என்று சொல்லிவிட்டு “வாங்க போகலாம்” என்று சந்தோஷுடன் அறைக்குச் சென்றாள்.
சிற்பிகா கதவை தாழ்ப்பாள் போட்டதும் அவள் பின்னிருந்து கட்டிக்கொண்டு அவளது வெற்று முதுகில் குட்டி குட்டி மென் முத்தம் கொடுத்தான் சந்தோஷ்.
அவளோ அவனது முத்த சஞ்சாரத்தில் திளைத்தவள் “ச.சந்தோஷ் எனக்கு தூக்கம் வருதுடா” என்று சிணுங்க.
“கொஞ்ச நேரம் கோஆப்ரேட் பண்ணுடி” என்று அவள் இதழில் முத்தமிட்டு கூடலுக்கு வழி வகுத்தான்.
“டேய் நீ ஆரம்பிச்சா முடிக்க மாட்டேனு எனக்கு தெரியும் அதான் என் ரூமுக்கு கூட வராம ஹால்லயே உட்கார்ந்திருந்தேன்” என்றாள் அவனது தொடுகையில் கரைந்துக் கொண்டு
சந்தோஷோ தன்னவள் பேசுவதையெல்லாம் காதில் வாங்காமல் அவள் கன்னத்தில் முத்தமிடத்துவங்கினான். “வேணாம்பா” என்று அவளது வாய்தான் சொன்னதே தவிர அவன் தொடுகையில் பாகாய் உருகிக்கொண்டிருந்தாள் சிற்பிகா.
முத்தமிட்டபடியே கட்டிலுக்கு அழைத்துச்சென்றவன் அவளை பூபோல மெத்தையில் சரித்து அவள் மீது படர்ந்தான். அவனது கண்களில் காதல் போதை தெரிய அவனது மையல் பார்வையில் கிறங்கித்தான் போனாள் பெண்ணவள். அவளது கண்களை பார்த்தவாறே முகம் முழுவதும் முத்தமிட்டு இதழில் வந்து இளைப்பாறினான். முதல் கூடலில் இருந்த அச்சம் அவளுக்கு இப்போது இல்லை. தைரியமாகவே இருந்தாள்.
அவனுக்கு அதுவே அவளிடம் தங்கு தடையின்றி காதல் விளையாட்டு விளையாட சௌகரியமாக இருந்தது. அவளது கூந்தல் காட்டில் முகம் புதைத்து “ம்ம் வாசமா இருக்குடி” என்று கள்ளுண்ட வண்டாக அவளது மேனியில் ஊர்வலம் வந்தான். உதடுகடித்து அவன் தரும் சுகவேதனைகளை தாங்கிக்கொண்டாள்.
பெண்ணவளை ஆராய்ச்சி செய்ய அவளது மேலாடைகளை அவசரமாக பரபரவென களைந்து சோளிகளின் பட்டன்களுக்கு ஓய்வு கொடுத்து இளமைக் கோளங்களில் முகம் புதைத்து அங்கும் இங்கும் உருட்ட அவளோ “சந்தோஷ்ஷ்…” என அவனது பின்னந்தலையை அழுத்திக்கொண்டாள். அவனுக்கோ ஆயிரம் ஆசைகள் இருக்க அவளது காதில் இரகசியமாய் கூற “ச்சீ போடா நான் மாட்டேன்” என்று அவள் முதுகு காட்டிப்படுத்துவிட்டாள்.
“ஏய் ப்ளீஸ் லட்டு” என அவளை கொஞ்சி கொஞ்சி அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொண்டு தான் விட்டான் ஆண்மகன். அவளது விம்மிபுடைத்த இரட்டை கோபுரங்களில் மினுக்கி நின்ற கிரீடங்கள் அவனது பருத்த இதழ்பட்டு சிவந்து தான் போனது. நாபிக்கமலத்தில் கோலமிட்டான் நாவினால். அவளது அடிவயிற்றில் சுருக்கென்று சுகவலியும் வர. இந்த முறை பெண்மான் ஆண்மானை வேட்டையாடியது. “ம்ம் என்னாச்சு என் சில்வண்டோட ரீங்காரச் சத்தம் அதிகமாக இருக்கே” என்று அவன் அந்த ஏகாந்த நேரத்திலும் மனைவியிடம் வம்பிழுக்க “ஏன் பெண்களுக்கும் ஆசை இருக்காதா” என்று காதல் காட்டில் மழை பெய்ய செய்து அவனையும் அதில் குளிக்க வைத்து போதையாக்கினாள் பெண்ணவள். இருவரும் யார் கொடுத்தார்கள் யார் எடுத்தார்கள் என்று கணக்கில்லாமல் பரிமாறிக்கொண்டனர்.
முத்தங்கள் தந்து வள்ளல்கள் ஆகினர் இருவரும். இருவரும் கூடல் முடிந்து கட்டிக்கொண்டே உறங்கிப்போனார்கள்.
அமுதவள்ளிக்கோ தூக்கம் கிஞ்சுத்தும் வரவில்லை. விடிய விடிய நடந்துக் கொண்டே இருந்தார். மகனை பார்க்காமல் அவரால் சாப்பிடக்கூட முடியவில்லை எப்போதடா விடியும் என்று கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.
சேவல் கூவியதும் மகன் வந்துவிடுவான் என்று குளியலறைக்குள் சென்று குளித்து பூஜையறையில் எப்போதும் போல விளக்கேற்றி விட்டு சமையல்கட்டுக்கு வந்தார். மளமளவென்று சமையல் செய்ய ஆரம்பித்தார். கொஞ்சமாய் காய்கறி வெட்டி கிச்சடியும், வெங்காயம் போட்ட பனியாரமும் தேங்காய் சட்னியும், சாம்பாரும் வைத்து மதியத்துக்கு லெமன்ரைஸ் உருளைக்கிழங்கும் செய்து முடித்தும் விட்டார் ஒரு மணிநேரத்தில்.
சிற்பிகா காலையில் எழுந்ததும் அவளுக்கு அடிவயிறு வலியிருக்க பீரியட்ஸ் வந்து விட்டது. சந்தோஷின் மார்பில் படுத்திருந்தவள் மெல்ல எழும்ப பார்க்க “ஏய் கொஞ்ச படுடி” என்று அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
“சந்தோஷ் பீரியட்ஸ் வந்துடுச்சு ஸ்டோமக் பெயினா இருக்கு” என்று அவள் முகம் சுருக்க “ஏய் நைட் ரொம்ப படுத்திட்டேனா அதான் பீரியட்ஸ் வந்துடுச்சோ” என்று வருத்தப்பட்டு பேச.
“இல்லப்பா எப்பவும் இந்த டேட்தான் பீரியட்ஸ் வரும்” என்றவளோ “ஒரே கசகசனு இருக்கு நான் குளிச்சிட்டு வரேன்” என்று குளியலறைச் சென்று குளித்துவிட்டு சுடிதாரை போட்டுக்கொண்டு சோர்ந்து போய் வந்தாள் சிற்பிகா.
“லட்டு முடியலைனா சொல்லுடி! ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றான் அவள் முகம் இருக்கும் சோர்வை கண்டு
“இல்லப்பா மூன்று நாள் இப்படித்தான் இருக்கும் அப்புறம் தானாக சரியாகிடும்” என்று கட்டிலில் உட்கார்ந்திருந்த சந்தோஷின் மடியில் படுத்துக்கொண்டாள்.
சுந்தோஷிற்கு அவன் மீதே கோபம் வந்தது. நேத்து என் லட்டுவவை நான் ரொம்ப படுத்திட்டேனோ என்று வருத்தம் கொண்டு இனி பக்குவமா நடக்கணும்டா என்று எண்ணிக்கொண்டே அவளது தலையை தடவிக்கொடுத்தான். அப்படியே கண்ணுறங்கியும் போனாள் சிற்பிகா.
அமுதவள்ளியோ மகனின் வரவிற்காய் வாசலில் நின்று தவம் கிடந்தார். சந்தோஷ் இன்னும் வரவில்லையென்றதும் போன் செய்து விட்டார். மடியில் படுத்து உறங்கியவளை அவளது தூக்கம் கலையாதவாறு படுக்க வைத்துவிட்டு குளித்து முடித்து வந்த போதும் அவள் உறங்கியபடியே இருந்தாள். போன் அடிக்கவும் போனை எடுத்து “சொல்லுங்கம்மா இப்போதான் குளிச்சிருக்கேன்மா நான் கிளம்பி வரேன்” என்றதும் “ஏன் நீ மட்டும் வரேங்கிற சிற்பிகா வரலையா?” என்றார் குரல் உயர்த்தி.
“ஆமாம்மா சிற்பிக்கு பீரியட்ஸ் இன்னிக்கு ஒருநாள் அவ இங்க இருக்கட்டும். நாளைக்கு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்” என்றபடியே கிளம்பிக்கொண்டிருந்தான்.
“பீரியட்ஸ் பொண்ணுங்களுக்கு எப்பவும் ஆகறது தானே கண்ணா நான் அவளை பார்த்துக்க மாட்டேனா என்ன? அவ என்ன சொன்னா” என்றார் சற்று கோபமாக.
“அவ டயர்ட்ல தூங்கிட்டு இருக்காமா இப்பவே எழுப்ப முடியாது” என்றதும் “நீ ஒரு நாள்ல மாறிட்ட சந்தோஷ்” என்றவருக்கு குரல் பிசிறு தட்டியது.
“ம்மா என்ன பேசுறீங்க! நான் உங்க பிள்ளை எப்பவும் மாறமாட்டேன். சிற்பி மனசையும் நாம புரிஞ்சுக்கணும். நம்ம வீடு அவளுக்கு பழகும் வரை வாரத்துல ரெண்டு நாள் நம்ம வீட்லயும் இன்னும் இரண்டு நாளும் அவ அம்மா வீட்லயும் இருக்கட்டுமே அப்ப தான் சிற்பியோட அம்மா அம்மாவுக்கும் பிள்ளையை பிரிஞ்சிருக்க கஷ்டம் இருக்காது” என அவன் நடுநாயகமாக சொல்ல.
“நீ சொல்றது நடைமுறைக்கு ஒத்து வராதுப்பா. வீக்எண்டு சிற்பிகா அவ அம்மா வீட்டுக்கு போகட்டும் நான் வேணாம்னு சொல்ல மாட்டேன்! வாரத்துல ரெண்டு நாள் தங்கறதுக்கு நான் ஒப்புக்க மாட்டேன்! நீ என்ன பண்ணற உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வர அவளுக்கு வயிறு வலிச்சா நான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன். இல்ல எனக்கு தெரிஞ்ச கை வைத்தியம் பண்ணுவேன்! நான் சொன்னதை செய் சந்தோஷ்! அம்மா சொன்னா காரணம் இருக்கும். அதுவுமில்லாம இன்னும் ரெண்டு நாளாவது சொந்தக்காரவங்க நம்ம வீட்டுக்கு வந்திட்டே இருப்பாங்க. சிற்பிகா வீட்ல இல்லைனா வந்தவங்க நம்மளை பத்தி என்ன நினைப்பாங்கப்பா! நீ சிற்பிகாவை கூட்டிட்டு வா நான் சமைச்சு வச்சு காத்திருக்கேன்” என்று கண்டிப்புடன் கூறிவிட்டு அவன் மேல பேச வாயெடுக்க போனை வைத்திருந்தார்.
சிற்பிகாவோ சந்தோஷ் பேசும் சத்தம் கேட்டு கண்விழித்து சந்தோஷ் அருகே போய் நின்றவளுக்கு போனில் தன்னை அமுதவள்ளி வரச்சொல்லி சொன்னது அவளுக்கு காதில் விழத்தான் செய்தது. “சந்தோஷ் நான் நம்ம வீட்டுக்கு வரலைனு சொன்னேனா அத்தை நான் வரலைனு வருத்தப்படறாங்க பாரு. இப்பவே கிளம்பலாம் வாங்க என்னை அவங்க தப்பா நினைக்க கூடாது! அதுக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன்” என்று கூறியவள் சுடிதாரிலிருந்து சேலைக்கு மாறினாள்.
“நல்ல மாமியார் நல்ல மருமகள் கடைசியில என்னை கெட்டவன் ஆகிட்டீங்களே” என்று தலையை உலுக்கிக்கொண்டவன் சிற்பிகா புறப்பட்டதும் இருவரும் கீழே வந்தனர்.
உமாவோ சமைத்து ரெடியாக வைத்திருக்க “சாப்பிட வாங்க” என்று உமா மகளையும் மருமகனையும் கூப்பிட.
“அம்மா அத்தை எங்களுக்கு சமைச்சு வைச்சுட்டாங்க . நாங்க அங்க வீட்டுல போய் சாப்பிட்டுக்குறோம்” என்றாள் சிற்பிகா.
சந்தோஷோ “அத்தை நமக்காக சமைச்சு வைச்சுட்டாங்க கொஞ்சமா சாப்பிட்டு போகலாம்” என்று டைனிங் டேபிள் போக “என்னங்க அத்தை நமக்காக சமைச்சு இருக்கேனு சொல்லியிருக்காங்க நாம நம்ம வீட்டுக்கு போய் சாப்பிடலாம்” என்றதும்
உமாவோ “அடியேய் நான் காலையில நேரமே எழுந்து நீங்க சாப்பிட்ட போவீங்கனு பார்த்து பார்த்து சமைச்சிருக்கேன்டி சாப்பிடாம போனா எனக்கு கஷ்டமாயிருக்கும்! கொஞ்சமாய் சாப்பிட்டு போங்களேன்” என்று கெஞ்சலாக கேட்டார்.
“சரிமா சாப்பிட்டு போறோம்” என்று பெரும்மூச்சு விட்டு சந்தோஷை பார்த்தாள். அவனோ எதுவும் பேசவில்லை. சாப்பிட உட்கார்ந்து விட்டான். இரண்டு தோசை மட்டுமே சாப்பிட்டனர் இருவரும். சிற்பிகாவுக்கு பீரியட்ஸ் தினத்தில் அவளுக்கு வயிறு வலி வரும் என்று தெரியும் உமா கோபமாய் எரிந்து விழுவாள் இன்று அமைதியாய் இருக்கிறாளே கழுத்தில் தாலிக்கயிறு ஏறியதின் மாயமோ என்று ஆச்சரியத்துடன் மகளை பார்த்தார் உமா.
ஆனந்தனோ மனம் கேளாமல் “சிற்பி குட்டி இன்னிக்கு ஒருநாள் நீ இங்க இருந்துட்டு போகலாம்ல” என்றார் மகள் இந்த நேரத்தில் சோர்ந்து போவாளே! புகுந்த வீட்டில் போய் படுத்துக்கொள்ள முடியாதே என்று மனம் வெதும்பினார்.
“இல்லப்பா நான் நல்லாயிருக்கேன்” என்று இதழ் விரித்து “சந்தோஷ் போகலாம்” என்று வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.
அவளுக்கு வயிறு வலியிருக்கு மறைக்கிறாள் என்று சந்தோஷிற்கு தெரிந்து விட்டது. அம்மா ஏதும் சொல்வார்களோ என்று பயந்து தன்னுடன் வருகிறாள் என்ற ஆற்றாமையாய் வந்தது அவனுக்கு.
காரில் ஏறியதும் கண்ணை மூடிப்படுத்துக்கொண்டாள். “உன்னால முடியலையே உன் அம்மா வீட்லயே இருக்க வேண்டியது தானே” என்றான் காரை ஓட்டியபடியே திரும்பி பார்த்து
“என் புருசன் கூட இருக்கணும்னு தோணுச்சு! உன்னை விட்டு என்னால இருக்க முடியாது சந்தோஷ்” என்றாள் கண்ணை மூடியபடியே
காரை ஓரமாக நிறுத்தியதும் கண்களை மெல்லத்திறந்தாள்.
சிற்பிகாவை அணைத்துக்கொண்டு “எனக்காகவா என் பொண்டாட்டி வரா. இல்ல என் அம்மா எதாச்சும் நம்மளை பேசுவாங்கனு வராளா” என்று அவனது சந்தேகத்தை க்ளீயர் பண்ணிக்க கேட்டதும்
“அடேய் நல்லவனே உனக்காகத்தான்டா நான் வரேன்! எனக்கு உன்னோட மார்புல படுத்தாத்தான் தூக்கம் வரும்” என்றாள் அவனை கட்டிக்கொண்டு.
அவள் முகத்தை கையில் தாங்கி “ஐ.லவ்.யு டி” என்றவன் அவளது இதழில் முத்தம் கொடுத்து விலகினான்.
“என்மேல எப்படிடி இவ்ளோ காதல் வந்துச்சு” என்றான் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்துக்கொண்டு கேட்டான்.
“என் கனவுல தினமும் நீ வருவடா உன்னை பர்ஸ்ட் பார்த்ததும் நான் ஆகாயத்துல பறந்தேன் தெரியுமா!!” என்றாள் கண்கள் மின்ன
“அப்படியா நான் தான் உன்னை ரொம்ப பேசி அழுக வச்சேன்ல” என்றான் மனம் வருந்தி.
“என் காதல் உன்னை என்கிட்ட கொண்டு வந்திருச்சே சந்தோஷ்” என்றவள் “ஆனா அத்தைகிட்ட நாம லவ்வர்ஸ்னு மறைச்சது எனக்கு ரொம்ப கில்டியா இருக்குடா மாமா” என்றாள் சோகக்குரலில்.
“எனக்கும்தான்டி அம்மாகிட்ட நான் இதுவரைக்கும் பொய் பேசினதே கிடையாது. நம்ம காதல் விசயத்துலத்தான் பொய் பேசியிருக்கேன்டி” என்றான் ஆற்றாமையுடன்.
“அத்தைக்கு நாம நெருக்கமா இருக்கறதுல சந்தேகம் வராதா சந்தோஷ்! உண்மை தெரிஞ்சு என்னை பார்த்து என்கிட்ட ஏன் உண்மையை மறைச்சனு கேட்டா என்னால பதில் சொல்ல முடியாது. எனக்கு இப்பவே நெஞ்சுக்குள்ள அழுத்துற மாதிரி இருக்குடா” என்றவளுக்கு கண்ணீரும் கண்ணில் வந்துவிட்டது.
“நான் கூடிய சீக்கிரம் நேரம் பார்த்து அம்மாகிட்ட உண்மையை சொல்லிடுவேன். அம்மாக்கு என்மேல பாசம் அதிகம் மன்னிச்சுடுவாங்கடி” என்றான் பெரும்மூச்சுவிட்டு
“ஆனா அத்தையை பார்த்தா அப்படி தெரியலையே! ரொம்ப கோவக்காரவங்களா இருக்காங்களே! அவங்க குரலை கேட்டாலே எனக்கு நெஞ்சுக்குள்ள படபடனு வரும்” என்றாள் நெஞ்சில் கையை வைத்தபடி
“அம்மாகூட பழகிப்பாரு அப்பத்தெரியும். அவங்க கண்டிப்பா இருப்பாங்களே தவிர மத்தபடி உனக்கு என்ன தேவையோ நீ கேட்காமயே செய்துடுவாங்கடி. ஏன்? எனக்கு இன்னும் அவங்கதான் ட்ரஸ் செலக்சன் பண்ணுவாங்க தெரியுமா? ஏன் நான் யூஸ் பண்ணுற பர்ஃப்யூம் கூட அம்மாதான் வாங்கித்தருவாங்க. சோ நீ அவங்களை கண்டு பயப்படாத” என்றான் சிற்பிகாவின் நெற்றியில் முட்டி.
“சரி அம்மா நமக்காக வெயிட் பண்ணுவாங்க கிளம்பலாம்” என்று காரை எடுத்தான்.
19. உறவு
சிற்பிகாவுக்கோ சந்தோஷ் என்ன ஆறுதல் கூறினாலும் அமுதவள்ளியை நினைத்து அச்சம் இருக்கத்தான் செய்தது. அமுதவள்ளி சில சமயம் தன் மேல் காட்டும் பாசம் அவளுக்கு மகனுக்காக செய்கிறாரோவென்று தோன்றியது. சரி பெரியவங்கத்தானே அஜெஸ்ட் பண்ணிப்போகலாம் என்று எண்ணிக்கொண்டாள் சிற்பிகா.
அமுதவள்ளியோ இன்னமும் வாசலிலே கையை கட்டி நின்றிருந்தார். அவரது கண்கள் இரவு தூக்கம் இல்லாது சிவந்திருந்தது. சண்முகம் உள்ளே வா என்று சொல்லியும் அவர் கேட்பதாய் இல்லை. அப்படியே நின்றிருந்தார்.
சந்தோஷின் கார் கண்ணுக்கு தெரிந்ததும் அவரது கண்ணில் ஒரு ஒளி வந்தது போல இருந்தது. மகன் வந்துவிட்டான் என்று அவர் மனம் ஆர்ப்பரிக்க தொடங்கியது.
காரிலிருந்து இறங்கிய சந்தோஷோ அமுதவள்ளியின் முகத்தை பார்த்தே தெரிந்துக் கொண்டான் அவர் தன்மேல் கோபமாக இருக்கிறாரெனவும், இரவு முழுவதும் தூங்காமல் தன்னால் கஷ்டப்படுகிறார் என்றும் வேதனைப்பட்டவன் “அம்மா” என்று அமுதவள்ளியை அணைக்கப்போக அவரோ “வீட்டுக்குள் வாங்க” என்று ஹாலுக்குள் சென்றுவிட்டார்.
ஹாலுக்குச் சென்றதும் “அம்மா என் மேல கோபமா?” என்று அமுதவள்ளியை அணைத்துக்கொண்டான் சந்தோஷ்.
மகன் அணைத்துக்கொண்டதும் அமுதவள்ளியின் மனது சரியத்தொடங்கியது. சந்தோஷை அணைத்துக்கொண்டவரோ “ஒரு நாள் முழுக்க இந்த அம்மாவை விட்டு இருந்துட்ட ம்ம் அம்மாவை பிரிஞ்சு உன்னால இருக்க முடிஞ்சுது இல்ல. ஆனா என்னால இருக்க முடியலைடா” என்றவருக்கு குரல் பிசிறு தட்டி கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
அமுதவள்ளியின் கண்ணீர் சந்தோஷின் சட்டையை நனைத்துவிட துடித்துப்போனான் சந்தோஷ்.
சண்முகத்திற்கு இந்த அமுதவள்ளி அவருக்கு புதிதாய் தெரிந்தார். எவ்ளோ பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அசால்ட்டாக தைரியமாக நின்று எதிர்கொள்வார். ஆனால் ஒரு நாள்தான் மகனை விட்டு பிரிந்து இருந்தாள். இதுக்கே தன் மனைவி இப்படி உடைந்து போய்விட்டாளே நாளைக்கு சந்தர்ப்ப சூழ்நிலையில் மகனும் மருமகளும் தனிக்குடித்தனம் போக வேண்டிய நிலை வந்தால் தன் மனைவியின் நிலை என்னவாகும் என்று அவரால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை சண்முகத்திற்கு.
சந்தோஷும் அமுதவள்ளி இப்படி உடைந்து போவார் என்று நினைக்கவேயில்லை. தாயின் கண்ணீர் அவனை உலுக்கிப்போட்டது. நைட் சிற்பிகாவை விட்டுட்டு நாம மட்டுமாவது வந்திருக்கணும் என்று வருந்தினான் இந்த நேரம். அமுதவள்ளியின் முகத்தை தாங்கி அவரது கண்களை துடைத்துவிட்டு “எங்கம்மா போல்ட் வுமனு நினைச்சேன் ஆனா இப்படி சின்னபிள்ளை போல அழுவீங்கனு நினைக்கல போங்க” என்று கண்ணைச் சிமிட்டி சிரித்து அமுதவள்ளியின் மனநிலையை மாற்ற பார்த்தான்.
சிற்பிகாவோ என் கூட ஒருநாள் சந்தோஷ் இருந்ததுக்கே அத்தை இவ்ளோ மனசு உடைஞ்சு அழறாங்களே! நாம அம்மா வீட்ல இருந்திருக்க கூடாது! நைட் இங்க வந்திருக்கணும். அத்தை மனசை கஷ்டப்படுத்திட்டோம்! என்று வருந்திக் கையைப்பிசைந்துக் கொண்டு நின்றாள் சிற்பிகா.
அமுதவள்ளியோ அப்படியே பிரம்மை பிடித்தவர் போல நிற்க “அம்மா பசிக்குது ஏன் இப்படி இருக்கீங்க இனிமே உங்களை விட்டு எங்கயும் போகமாட்டேன் சரியா?” என்றதும் தான் கண்களை உருட்டி மகனையே பார்த்தார் அமுதவள்ளி.
பசிக்குது என்றதும் தாயுள்ளம் துடித்தது. “மணி எட்டாக போகுது உன் மாமியார் வீட்டில் சாப்பாடு போடலையா?” என்றார் சிற்பிகாவை பார்த்தவாறே
“அத்தை” என்று சிற்பிகா பேச ஆரம்பிக்கும் முன்பு “அவங்க சாப்பிட்டு போகச் சொன்னாங்கம்மா நான்தான் நீங்க சமைச்சு வச்சிருப்பீங்கனு சொல்லி வந்துட்டோம்!” என்றான் அம்மாவின் மனதை குளிரவைக்க
“ம்ம் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை சாப்பிடலைனு சொன்னா அப்படியே விடுவாங்களா என்ன? சரி அவங்களை விடு உன் பொண்டாட்டிக்கு அறிவு எங்க போச்சு புருசனுக்கு சாப்பாடு போட்டு கூட்டிவரணும் தோணலையா?” என்று காட்டமாகவே கேட்டு சிற்பிகாவை ஒரு பார்வை பார்த்தவர்.
சந்தோஷ் சிற்பிகாவின் பக்கம் திரும்பி ‘சமாளித்து பேசு’ என்று உதடசைத்தான்.
“அ.அத்தை நம்ம வீட்ல வந்து சாப்பிட்டுக்கலாம்னு வந்துட்டோம்” என்று சமாளித்துப்பேசினாள்.
“நம்மவீடு” என்று சிற்பிகா கூறியதும் அமுதவள்ளியின் கோபம் சற்று குறைந்தது.
அமுதவள்ளியை அதிகம் பேசவிடாது “அம்மா பசிக்குது சாப்பாடு போடுங்க” என்று வயிற்றை தடவினான்.
“அச்சோ நான் ஒரு கிறுக்கி பேசிட்டே இருக்கேன் பாரு வா வா டிபன் எடுத்து வைக்குறேன்” என்று சமைத்து வைத்திருந்த கிச்சடியும் பனியாரமும் டைனிங் டேபிளில் அடுக்கி வைத்திருந்தார்.
சந்தோஷும் சண்முகமும் சாப்பிட உட்கார்ந்தனர். பனியாரத்தை தட்டில் வைத்து சட்னியை ஊற்றினார். பசியில் இருப்பவனை போல சாப்பிட்டான் சந்தோஷ் அமுதவள்ளியை சந்தோசப்படுத்த
“ம்ம் பனியாரம் சூப்பர் சட்னி டேஸ்ட் நல்லாயிருக்குமா இன்னும் பனியாரம் வைங்க” என்று சாப்பிட ஆரம்பித்தான்.
சிற்பிகா ஒருத்தி இருக்கிறாளென்பதை மறந்து மகனுக்கு பரிமாறிக்கொண்டிருந்தார். நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் போகுமாமே அதுபோல மகனுக்கு பரிமாற சண்முகத்தின் தட்டிலும் பனியாரத்தை வைத்தார் அமுதவள்ளி. சண்முகத்திற்கு இது பழக்கம் என்பதால் அமைதியாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
சந்தோஷிற்கு புரை ஏற சிற்பிகா தண்ணீரை எடுத்துக்கொடுப்பதற்குள் “பார்த்து சாப்பிடு கண்ணா” என்று தலையை லேசாக தட்டி தண்ணீரை சந்தோஷிற்கு கொடுத்தார்.
மகன் மேல் வைத்திருக்கும் காட்டுத்தனமான பாசத்தை கண்கள் விரிய பார்த்திருந்தாள்.
சாப்பிட்டு முடித்து எழுந்ததும் சிற்பி சந்தோஷை முறைத்திருந்தாள். பின்னே தன்னை சாப்பிடு என்று ஒருவார்த்தை கூட சொல்லாமல் அம்மாவை பார்த்தவுடன் தன்னை மறந்து சாப்பிட்டானே என்று முகத்தை கடுகடுவென வைத்திருந்தாள் சிற்பிகா.
“சாரிடி” என்றான் கண்களை சுருக்கி
“போடா” என்று இதழ் சுளித்தாள் சிற்பிகா.
அதற்குள் “சிற்பிகா நீயும் உட்கார்ந்து சாப்பிடுமா நேத்து ஏதோ உனக்கு விருந்து சாப்பாடு உன்னை உட்கார வைச்சு சாப்பாடு போட்டா உங்க அத்தை இனிமே நீயாக சாப்பிடணும்” என்று மருமகளை உஷார் படுத்தினார் சண்முகம்.
அமுதவள்ளியோ “இது அவ வீடு சாப்பாடு போட்டு சாப்பிடுனு சொல்லணுமா என்ன? நான் என்ன உங்க மருமக கையை கட்டிப்போட்டா வச்சிருக்கேன். போட்டு சாப்பிட வேண்டியதுதானே” என்றார் சண்முகத்தை முறைத்தவாறே
“அத்தை சொல்றது சரிதான் மாமா. இது என்னோட வீடு! சமைத்ததை நான் போட்டு சாப்பிடுறேன்” என்று கொஞ்சமாய் கிச்சடி மட்டும் சாப்பிட்டு கை கழுவ போக
அமுதவள்ளியோ “என்ன சாப்பிட்ட பனியாரம் ஹாட்பாக்ஸ்ல அப்படியே இருக்கு கிச்சடி மட்டும் சாப்பிட்டிருக்க! நாளைக்கு என் பேரனை சுமக்க தெம்பு வேண்டாமா? உட்காரு” தட்டில் நாலு பனியாரத்தை எடுத்து வைத்தார்.
சந்தோஷும் சண்முகமும் சிரித்துக்கொண்டனர்.
சிற்பிகா உமா வைத்த இரண்டு தோசை சாப்பிட்டிருக்க அவளுக்கு கிச்சடி சாப்பிட்டதே போதுமாக இருந்தது. அமுதவள்ளி வைத்த பனியாரத்தை சாப்பிட முடியாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்க
“சிற்பிகா சீக்கிரம் சாப்பிடுடி பேங்குக்கு போக டைம் ஆச்சு” என்றான் கையில் வாட்சைப்பார்த்தபடியே
“சந்தோஷ் சிற்பிகா இன்னும் ரெண்டு நாள் வேலைக்கு போகவேண்டாம். எங்க சித்தி திருச்சியிலிருந்து வரேனு சொல்லியிருக்காங்க அவங்க வீட்டுக்கு வரும்போது சிற்பிகா இருக்கணும். நீ வேலைக்கு போய் ஆகணும்னு சொல்லி சமாளிச்சுடுவேன்” என்றதும்.
“அம்மா அவ உடம்பு சரியில்லைனு நிறைய நாள் லீவு போட்டுட்டா இப்பவும் லீவு எடுத்தா ப்ராப்ளம் வரும்” என்றான் தாடையை தேய்த்தபடி
“சரி இன்னிக்கு ஒருநாள் மட்டும் லீவு போட்டுக்கட்டும் ஆனா நாளைக்கு லீவு போட முடியாதுமா சொந்தக்காரங்களை சாயந்திரம் வரச்சொல்லுங்க நான் கிளம்புறேன்மா சிற்பி ஈவ்னிங் பார்க்கலாம் போன் பண்ணுறேன்” சைகை செய்து விட்டுச்சென்றான். அந்த சைகை தப்பாமல் அமுதவள்ளியின் கண்ணில் பட்டது.
சிற்பிகாவோ சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை சிங்கில் போட்டு கழுவி வைத்தவளுக்கு அடிவயிறு வேறு வலிக்கத் தொடங்கியது. கிச்சனை ஒதுங்க வைத்து விட்டு அவர்களது அறைக்கு போய் படுத்துவிட்டாள் சிற்பிகா.
அமுதவள்ளியோ மொட்டை மாடியில் துவைத்த துணிகளை காயப்போட்டு வந்தவர் சிற்பிகா காணோம் என்று தேடிக்கொண்டு சந்தோஷ் அறைக்குச் சென்றார்.
அவளோ காலை குறுக்கிக் கொண்டு படுத்திருந்தாள்.
அவள் படுத்திருக்கும் வாகு கண்டு “பீரியட்ஸ்ல தூங்கட்டும்” என்று கதவை கொஞ்சமாக மூடிவிட்டு வந்தார் அமுதவள்ளி. இந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர் ப்ரெட்ண்ஸ். மகன் இருக்கும் போது எரிமலையாக மகன் இல்லாத பனிமலையாக சிற்பிகாவிடம் நடந்துக் கொள்வார் அது மகன் மீது கண்மண் தெரியாத அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் அமுதவள்ளி.
மதியம் அமுதவள்ளியின் சித்தியும் சித்தப்பாவும் வந்துவிட்டனர். “அமுதா உன் மருமக எங்கே ஆளையே காணோம்?” என்று வீட்டை சுற்றிப்பார்த்தார் அமுதவள்ளியின் சித்தி.
“இன்னேரம் வரை எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்திட்டிருந்தா சித்தி நான்தான் கொஞ்சநேரம் போய் தூங்குனு அனுப்பி வைச்சேன் இருங்க எழுப்பி கூட்டிட்டு வரேன்” என்று சந்தோஷ் அறைக்குச் சென்றார்.
சிற்பிகா அப்போதுதான் எழுந்தவள் மணியை பார்க்க 2 ஆகியிருந்தது. அச்சோ இவ்ளோ நேரம் தூங்கிட்டோமே என்று குளியலறை சென்று ப்ரஷ் ஆகி வந்தவளுக்கு சோர்வாக இருக்க அப்படியே சோபாவில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டாள்.
அமுதவள்ளியோ அறைக்குள் வந்தவர் “சிற்பிகா என்னோட சித்தியும் சித்தப்பாவும் வந்திருக்காங்க கீழ வந்து அவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ” என்றவர் “எப்பவும் பீரியட்ஸ் டைம்ல ரொம்ப முடியாம போகுமா?” என்று கேட்க.
அவளோ “மூணு நாளைக்கு வயிறு வலி இருக்கும் அத்தை அப்புறம் சரியாய் போகும்” என்றாள் சோர்வுடன்.
“சரி அடுத்த முறை பீரியட்ஸ் ஆனதும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன் ஆரம்பத்துலயே செக் பண்ணிக்கணும். நாளைக்கு குழந்தை பிறக்கறதுல சிக்கல் வரக்கூடாது பாரு” என்று அசால்ட்டாய் சொல்ல சிற்பிகாவுக்கோ சுருக்கென்று வந்தது.
கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள செக்கப் போகணுமா என்று அவள் மனம் வெதும்பியது. மூணு மாசம் கழிச்சு செக்கப் போகலாம் அத்தை என்று சொல்ல துடித்த நாவை அடக்கிக்கொண்டாள். அடுத்த மாசம் பீரியட்ஸ் வரும்போது பார்த்துக்கலாம் என்று சேலையை சரி செய்துக் கொண்டு கீழே ஹாலுக்கு வந்தாள் சிற்பிகா.
அமுதவள்ளியின் சித்தியோ சிற்பிகாவை பார்த்ததும் “அடடே பொண்ணு செஞ்சு வைச்ச சிலைபோல இருக்காளே! இப்படி வந்த உட்காருமா” என்றதும் அவளுக்கும் தூங்கி எழுந்ததும் வலி கொஞ்சம் குறைந்திருந்தது. மெல்லிய சிரிப்புடன் அமுதவள்ளியின் சித்தி பக்கம் போய் உட்கார்ந்தாள்.
“என்னம்மா உனக்கு சமைக்க தெரியுமா?” எல்லாரும் கேட்கும் கேள்வியை கேட்க.
“ம்ம் கொஞ்சம் தெரியும் பாட்டி தெரியாததை அத்தை கிட்ட கேட்டு தெரிஞ்சு சமைச்சுடுவேன்” என்று தலையை ஆட்டினாள்.
“அமுதா நீ கொடுத்து வச்சவ போ உனக்கு இப்படி அமைதியான மருமக கிடைச்சிருக்கா பாரு! இந்த பொண்ணை பொத்தி வச்சு பார்த்துக்கோ!” என சிலாகித்து சொன்னார் அந்த பாட்டி.
“நேரம் ஆச்சு வாங்க சாப்பிடலாம்” அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அமுதவள்ளி சமையல் கட்டில் இருந்தார்.
சிற்பிகாவின் பக்கம் உட்கார்ந்து “உன் மாமியார் சிடு சிடுனு பேசுவாளே தவிர மனசுல எதையும் வச்சிக்க மாட்டா கண்ணு நீ அனுசரிச்சு நடந்துக்கோ!” என சிற்பிகாவை ஆசிர்வாதம் செய்து விட்டுச் சென்றனர் அந்த வயதான தம்பதியினர்.
சந்தோஷ்க்கு இங்கே பேங்க் நேரம் முடிந்ததும் கொஞ்சம் வேலைகள் இருக்க முடித்து விட்ட வர நேரம் ஆகியிருந்தது. சிற்பிகாவோ சந்தோஷிற்கு போன் போட்டிருக்க “நான் வர ஒரு மணி நேரம் ஆகும்டா நீ சாப்பிட்டு படுத்து தூங்கு” என்றிருந்தான்.
ஆனால் அவளுக்கோ தூக்கம் வர மறுத்தது. ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். இரண்டு நாள் சமையல்கட்டில் நீ வேலை செய்ய வேண்டாம் என்றிருந்தார் அமுதவள்ளி.
சந்தோஷ் கார் சத்தம் கேட்கிறதா என்று வாசலையே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தாள் சிற்பிகா.
சமையல்கட்டில் வேலைகளை முடித்து வந்த அமுதவள்ளியோ “சிற்பிகா நீ போய் தூங்கும்மா சந்தோஷ் வந்தா நான் சாப்பாடு போட்டுக்குறேன்” என்று அவராக முந்திக்கொண்டு சொல்ல.
“இல்ல அத்தை எனக்கு தூக்கம் வரலை நான் சந்தோஷ் வரும் வரை முழிச்சிருக்கேன்” என்று டிவியை பார்க்க ஆரம்பித்தாள்.
சந்தோஷ் மெயின் பிரான்ச் மேனேஜருடன் வெளியே வந்தவன் அவர் “புதுகல்யாண மாப்பிள்ளை எப்படி இருக்க?” என்று பேச்சை ஆரம்பித்து பல கதைகள் பேச ஆரம்பித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் “சார் நேரமாச்சு நான் கிளம்புறேன்” என்று அவனாக சொல்ல “அடடா புதுமாப்பிள்ளை நீ கிளம்பு இன்னொரு நாள் பேசலாம்” என்று அனுப்பி வைத்தார்.
சிற்பிகாவுக்கு தூக்கம் கண்ணை சொக்கியது. அப்படியே சோபாவிலேயே தலை சாய்த்து கண்ணயர்ந்திருந்தாள். திக்கென கண்விழித்து பார்க்க அமுதவள்ளியோ தூங்காமல் வாசலையே எட்டி பார்த்துக்கொண்டிருந்தார்.
“அத்தை நீங்க போய் படுங்க நான் சந்தோஷ் வந்ததும் சாப்பாடு போறேன்” என்றதும்தான் தாமதம்.
“ஏய் எனக்கு நீ ஆர்டர் போடாத! என் பையனுக்கு சாப்பாடு போட எனக்கு தெரியும்! நான்தான் உன்னை தூங்க சொன்னேன்ல! என் மகன் வந்ததும் அவனுக்கு சாப்பாடு போட்டுட்டுதான் தூங்குவேன்!”
என்று எரிந்து விழுந்தார்.
சரியாக சந்தோஷ் கார் போர்டிகோவில் வந்து நின்றது.
20. உறவு
அமுதவள்ளியின் காட்டமான பேச்சில் அழண்டு விட்டாள் சிற்பிகா. அவளது கண்ணில் கண்ணீர் பொல பொலவென வந்துவிட்டது.
சிற்பிகாவின் கண்ணீரை கண்ட அமுதவள்ளியின் மனது ஏதோ போல ஆகிவிட்டது. தான் பேசியது அவளுக்கு எத்தனை பாதிப்பை கொடுத்திருக்கும் என்பதை உணராதவர் அல்ல அமுதவள்ளி.
ஒரு நிமிடம் கண்ணை மூடித்திறந்து “சாரி சிற்பிகா நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன் அழாத! சந்தோஷ்க்கு சாப்பாடு போறது அவனுக்கு தேவையானது எல்லாம் நான் இத்தனை நாளாய் செய்திட்டிருந்தேன் திடீர்னு நீ வந்து செய்யுறேனு சொன்னா என்னால விட்டு தர முடியாது! கொஞ்ச நாள் ஆகட்டும் அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்! பர்ஸ்ட் கண்ணைத்துடை சந்தோஷ் வந்துருவான் நம்மக்குள்ள பேசிக்கறது எப்பவும் சந்தோஷ்கிட்ட போகக்கூடாது. நான் ஒண்ணும் கொடுமைக்காரி மாமியார் கிடையாது. அதே சமயம் உன் புருசனை நீ உங்க அறைக்குள்ள நல்லா கவனிச்சுக்கோ! வெளியில ரெண்டு பேரும் போங்க ஜாலியா இருங்க நான் எதுவும் சொல்ல மாட்டேன்!” என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் போட்டு உடைத்துவிட்டார் அமுதவள்ளி.
சிற்பிகாவுக்கு அமுதவள்ளி கூறியதும் புரிந்து விட்டது. “அத்தை உங்க பையனுக்கு நீங்களே சாப்பாடு பரிமாறுங்க! எனக்கு ஒரு வேலை மிச்சம் பாருங்க. இதுக்கு ஏன் இவ்ளோ கத்தி பேசி உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணுறீங்க நான் கூட பயந்துட்டேன்!” என்றாள் நெஞ்சில் கையை வைத்து.
அதற்குள் சந்தோஷ் வந்துவிட்டான். அமுதவள்ளி தனக்காக காத்திருப்பார் என்று தெரியும் சிற்பிகாவுக்கு உடம்பு சரியில்லை அவள் உறங்கியிருப்பாள் என்று வந்தான். ஆனால் அமுதவள்ளியுடன் சிற்பிகா பேசிக்கொண்டிருந்ததை கண்டவனுக்கு அப்பாடா அம்மாவும் என் பொண்டாட்டியும் நெருங்கிட்டாங்க என்று நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டான்.
(கொஞ்ச முன்னே உங்கம்மா உன் பொண்டாட்டியை பேசும்போது நீ வந்திருக்கணும் அப்போ உன் அம்மாவின் பொஸசிவ் உனக்கும் தெரிந்திருக்கும் மை மைண்ட் வாய்ஸ்)
“அம்மா பசிக்குது தோசை சுடுங்களேன்” என்றவன் சோர்வு இருந்தாலும் அதை மறைத்து மெல்லிய புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்த சிற்பிகாவை கண்டு அவள் பக்கம் உட்கார்ந்தவன் “இப்போ உடம்பு எப்படியிருக்கு சிற்பி?” என்று அவளது கையை பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான்.
அமுதவள்ளிக்கு அங்கேயிருப்பது சங்கோஜத்தை தர மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை கொடுத்து சமையல்கட்டுக்கு நகர்ந்து விட்டார்.
“சந்தோஷ் இது ஹால் என்னது என் கையை பிடிச்சிக்கிட்டு அத்தை நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?” என்று அவனிடம் பொய் கோபம் கொண்டாள்.
“அடி பைத்தியம் அம்மாவை நீ புரிஞ்சிக்கிட்டது அவ்ளோதான் பார்த்தியா நான் உன் பக்கம் வந்ததும் புரிஞ்சுக்கிட்டு அவங்களே எழுந்து போய்ட்டாங்க பார்த்தியா என் அம்மாவை போல உனக்கு மாமியார் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்டி” என்றான் அவளை தோளோடு அணைத்துக்கொண்டு
“ஆமா சந்தோஷ் அத்தை ரொம்ப நல்லவங்கதான்” என்றாள் கொட்டாவி விட்டபடி.
“ஏய் தூக்கம் வந்தா தூங்கு வா” என்று சிற்பிகாவின் கையை பிடித்துக்கொண்டு எழுப்பி விட்டான்.
சமையல்கட்டுக்குள் சென்று தோசை கல்லை அடுப்பில் வைத்தவருக்கு தன் மகன் பொண்டாட்டி வந்ததும் இந்த அம்மாவை மறந்துட்டானே. வீட்டுக்குள்ள வரும்போதே அம்மானு கூப்பிட்டு வருபவன் இன்று பொண்டாட்டி வந்ததும் இந்த அம்மா கிட்ட பேச மறந்துட்டானே! என்றும் அதேசமயம் சிற்பிகாவுக்கு உடம்பு சரியில்லைனு அக்கறையா கேட்டிருக்கான் அவ்ளோதான்! என் மகன் என்னை மறக்கமாட்டான் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டு தோசையை சுட்டு ஹாட்பாக்ஸில் போட்டு வைத்து ஹாலுக்கு போவது சரியில்லை என்று எண்ணியவர் “சந்தோஷ் தோசை ரெடிப்பா சாப்பிட வா” என்று சமையல்கட்டிலிருந்து கூப்பிட்டார்.
“நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்மா” என்று குரல் கொடுத்து விட்டு சிற்பிகாவை கூட்டிக்கொண்டு அறைக்குச் சென்றவன் “ஏய் ஒழுங்கா படுத்து தூங்கு நான் சீக்கிரம் சாப்பிட்டு வந்துடறேன்” என்று டவலை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றுவிட்டான்.
எல்லா பொண்டாட்டிகளும் தான் சமைத்து வைத்ததை கணவன் மார்கள் சாப்பிட்டு பார்த்து இன்னிக்கு சாம்பார் சூப்பர்னு சொல்லணும்னு நினைப்பாங்க அதுபோலத்தான் சிற்பிகாவுக்கும் சந்தோஷ்க்கு சமைத்து போடணும் என்று ஆர்வமும் ஆசையும் இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜா என்று என் மகனுக்கு நான் எல்லாம் செய்வேன் என்று இடுப்பில் சேலையை சொருகிக்கொண்டு நிற்கும் அமுதவள்ளியை மீறி அவளால் எதுவுமே செய்ய முடியாமல் போனது. தன் ஆசைகளை அடக்கிக்கொண்டாள் பெண்ணவள்.
சந்தோஷ் குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு தூங்குவதை போல கண்களை மூடி திரும்பி படுத்துக்கொண்டாள்.
சந்தோஷ் குளித்து வந்தவன் சிற்பிகா சீராக மூச்சு விடுவதை கண்டு பாவம் டயர்டா இருக்கும் தூங்கட்டும் என்று சிற்பிகாவுக்கு போர்வையை போர்த்திவிட்டு சாப்பிடச் சென்றான். சந்தோஷ் சென்றதும் கண்விழித்து எழுந்து உட்கார்ந்துக் கொண்டாள் சிற்பிகா.
சந்தோஷுக்காக டைனிங் டேபிளில் யோசனையுடன் உட்கார்ந்திருந்தார் அமுதவள்ளி.
“அம்மா” என்று அமுதவள்ளியின் தோளை தொட்டான் சந்தோஷ்.
மகனின் தொடுகையில் நிதர்சனம் வந்தவர் “மருமக தூங்கிட்டாளாப்பா?” என்று கேட்டுக்கொண்டே டேபிள் மீது சாப்பிடும் தட்டை வைத்தார்.
“ம்ம் தூங்கிட்டா ம்மா” என்று சாப்பிட உட்கார்ந்தான்.
தோசையை வைத்ததும் தோசையை பிய்த்து சாப்பிட்டவன் “அம்மா நான் வர நேரம் ஆச்சுனா தோசை சுட்டு ஹாட்பாக்ஸில் வைச்சுட்டு தூங்குங்கனு நான் எத்தனை முறை சொல்லியிருக்கேன். ஆனா நீங்க கேட்ட பாடில்லை. உங்களுக்கு வயசாகிக்கிட்டே போகுது. இத்தனை நாளாய் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்திட்டிருந்தீங்க! இப்போதான் சிற்பிகா வந்துட்டால்ல அவகிட்ட கொஞ்சம் பொறுப்பை ஒப்படைச்சிட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே” என்று சாப்பிட்டு முடித்து தட்டில் கைகழுவினான்.
கொஞ்ச நேரம் முன்னே சிற்பிகா நான் சந்தோஷ்க்கு சாப்பாடு போடுறேன் என சொன்னவளை அதட்டியவர் இப்போது மகன் தனக்கு சிற்பிகா வேலை பார்க்கட்டும். நீங்க செய்ய வேண்டாம் என்ற போது சந்தோஷை கண்டிக்க அமுதவள்ளியால் முடியவில்லை.
சிற்பிகாதான் மகனிடம் தான் பேசியதை ஆச்சு பிசுறாமல் ஓதிவிட்டாள் போல என்று அவளை தவறாக எண்ணிக்கொண்டார் அமுதவள்ளி. ஆனால் சந்தோஷ் அம்மா இத்தனை நாள் கஷ்டப்பட்டது போதும் என்ற அக்கறையில் சொன்னான். அமுதவள்ளியோ சிற்பிகா ஒரே நாளில் மகனை தன்னிடமிருந்து பிரித்து விட பார்க்கிறாளே என்று தவறாக எண்ணி மருமகள் மீது கோபம் கொண்டார்.
“நாளைக்கே என் இடுப்புல இருக்க சாவி கொத்தை உன் பொண்டாட்டிக்கிட்ட கொடுத்துடறேன் போதுமாப்பா! அப்படி என்ன எனக்கு வயசு ஆச்சு உன் பொண்டாட்டிக்கிட்ட நான் எல்லாப்பொறுப்பையும் இப்பவே கொடுக்கணுமா என்ன?” என்று குரலை உயர்த்தினார்.
“ம்மா எதுக்கு இவ்ளோ டென்சன் ஆகுறீங்க? உங்களுக்கு வேலை பளுவை குறைக்கத்தான் சிற்பிகாவுக்கு பாதி வேலையை செய்ய சொன்னேன் இது தப்பாமா? நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க! நீங்க தான் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க! இப்போ நீங்கதான் அடிக்கடி கோபப்படுறீங்க! நீங்க முன்ன போல இல்லம்மா! எப்ப பார்த்தாலும் முகத்துல ஏதோ யோசனையோடவே சுத்துறீங்க. என்னாச்சு உங்களுக்கு? டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போகணும் போல இப்படி கோபப்பட்டா ஹை பிரசர் வந்திடும்” என்றான் பொறுமையை இழந்து.
அமுதவள்ளியோ தான் இப்படி மாறிவிட்டோமே என்று குழம்பிக்கொண்டவரோ “சரிப்பா உன் பொண்டாட்டியே நாளையிலிருந்து உன் வேலைகளையெல்லாம் செய்யட்டும்! எனக்கு என்ன கால் மேல் கால் போட்டு அதிகாரம் பண்ணி சாப்பிடுறேன்” என்றார். அவர் மனதில் கொதித்துக்கொண்டிருந்த கோபத்தை அடக்கிக்கொண்டு.
“நீங்கதான் இந்த வீட்டு மகாராணி ம்மா நாங்கெல்லாம் உங்களுக்கு கட்டுப்பட்டுத்தான் நடப்போம்!” என்றவனோ “எனக்கு தூக்கம் வருதுமா” என்றதும்
“போப்பா” என்றார் தன்மையாக.
சந்தோஷ் சென்றதும் “அடியேய் ஊமைக்கோட்டான் போல இருந்துட்டு என் பையனை முந்தானையில முடிச்சு வைச்சிக்கிட்டு எனக்கு எதிராவே பேச வச்சிட்டில்ல. இந்த அமுதவள்ளி பொல்லாதவ பார்த்துக்கோ அன்பான மாமியார இருக்கலாம்னு பார்த்தா விடமாட்டா போலயே இனி என்னோட அவதாரத்தை பார்க்க போறடி” என்று சாப்பிட்ட தட்டை கழுவி வைத்துவிட்டு படுத்தவருக்கு இன்றும் உறக்கம் வரவில்லை. சண்முகமோ குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
‘ம்ம் கொடுத்து வச்ச மகராசன் படுத்ததும் தூங்கிடுறாரு’ என்று புலம்பிக்கொண்டு உறங்கிப்போனார்.
அடுத்த நாள் காலையில் சிற்பிகா மெதுவாகத்தான் எழுந்தாள். அவள் எழும்பி வரும் நேரம் அமுதவள்ளி சமையலையே முடித்து விட்டார்.
“சாரி அத்தை கொஞ்சம் டயர்டா இருந்துச்சு தூங்கிட்டேன் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றவள் சிங்கில் கிடந்த பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்.
“நானே எல்லா வேலையும் முடிச்சிட்டேன்! ஆமா நேத்து நைட் நாம ரெண்டு பேசினதை சந்தோஷ்கிட்ட சொன்னியா? நான்தான் நாம பேசறது நமக்குள்ள இருக்கட்டும் வீட்டு ஆம்பிளைங்க கிட்ட கொண்டு போகக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல” என்றார் அதட்டலாக.
“எ.என்ன சொல்றீங்க அத்தை! நாம பேசினதை நான் சந்தோஷ்கிட்ட எதுவும் சொல்லலையே சந்தோஷ் சாப்பிட வரும்போது நான் தூங்கிட்டேன்! எனக்கு யாரை பத்தியும் குறை சொல்ல பிடிக்காது அத்தை! நான் உண்டு என் வேலை உண்டுனு இருப்பேன்” என்றாள் தன் பழி போடுகிறாரே என்று கூனி குறுகினாள் சிற்பிகா.
“ஓ!! என்னம்மா உண்மை வெளியே வந்துடுச்சுனு கோபம் வருதோ! என்கிட்டயே குரல் உயர்த்தி பேசுற! வாலை ஒட்ட நறுகிடுவேன் பார்த்துக்கோ! என் பையன் உன்கிட்ட சாப்பாடு போடச் சொன்னாலும் நீ எனக்கு டயர்டா இருக்கு! இல்ல வேலை இருக்கு! அத்தையை போட்டச் சொல்லுங்க சொல்லிட்டு போயிடு! அதை விட்டு நேத்து வந்தவளுக்கு உடனே பொறுப்பு கொடுப்பேனு எதிர்பார்க்காதே நான் பொல்லாதவளா மாறிவிடுவேன் பார்த்துக்கோ” என சந்திரமுகியாய் மாறி நின்றார் அமுதவள்ளி.
“நான் நேத்து நைட்டே சந்தோஷ்க்கு நீங்க வேலை செய்யுங்கனு உங்க கிட்ட சொல்லிட்டேன் அத்தை!” என்று அதிகம் பேச விரும்பாது அங்கிருந்து சென்றுவிட்டாள்.
ஊமைக்கோட்டான் போல இருந்தவள் இப்போ பாரு எப்படி வாய் கிழிய பேச்சிட்டு போறா என்று புசுபுசுவென கோபம் கொண்டார் அமுதவள்ளி.
சந்தோஷும் சிற்பிகாவும் பேங்கிற்கு சென்றதும் சண்முகம் சாப்பிட்டு முடித்தவுடன் அமுதவள்ளியாகவே சண்முகத்திடம் “இந்த வீட்டுல நடக்கிறது சரியில்லைங்க” என்றார் மொட்டையாக.
சண்முகமோ எதுவும் தெரியாதது போல “என்னாச்சு அமுதா?” என்று பேப்பரை படித்தபடி கேட்டார்.
“உங்க மருமக வந்த ஒரு நாளுல என் பையனுக்கு தலையணை மந்திரம் போட்டுட்டாங்க” என்றார் ஆற்றாமையுடன்.
“ஏன் நீயும்தான் கல்யாணம் ஆனவுடன் எங்க ஊருக்கு வராம என்னை உன்னுடனே தங்க வச்சிக்கிட்ட” என எரியும் விளக்கில் எண்ணெய்யை ஊற்றினார் சண்முகம்.
“உங்கம்மாவும் அப்பாவும் நம்ம கூட வரமாட்டேனு சொல்லிட்டாங்க! நான் என்ன செய்யட்டும் அப்பா வீட்டு சொத்தை நான்தான் பாதுகாக்கணும் அதான் உங்க ஊர்ல வந்து இருக்க முடியல. இல்லைனா நான் உங்கம்மாவையும் அப்பாவையும் எப்படி பார்த்திருப்பேன் தெரியுமா!” என்றார் சப்பை கட்டு கட்டி.
“ஏன் டி இப்படி மனசாட்சி இல்லாம பேசுற? எங்க கிராமத்து வீட்டுக்கு வந்தா ஒருநாள் கூட அங்க இருக்க மாட்ட, இதுல வேற எங்கப்பா எங்கம்மா உன் கூட வந்து இருக்கலைனு சொல்ற. என்னிக்காவது எங்கப்பா எங்கம்மாவுக்கு போன் பண்ணி எப்படியிருக்கீங்க அத்தை மாமானு கேட்டிருக்கியா? இப்போ விவசாயம் அவங்களுக்கு கைக்கொடுக்குது” என்று பேப்பரை திரும்பி படிக்க ஆரம்பித்தார்.
“இப்ப என்ன உங்கம்மாவையும் அப்பாவையும் வரச்சொல்லுங்க நான் பார்த்துக்குறேன்!” என்றார் சீறிக்கொண்டு.
“ஏன் அவங்க கிராமத்துல நிம்மதியா வாழ்றது உனக்கு பிடிக்கலையா என்ன?” என்று முறைத்தார் அமுதவள்ளியை.
“என்னை பார்த்தா உங்களுக்கெல்லாம் வில்லி மாதிரி தெரியுதா?” என மூக்கு சிவந்தார்.
சண்முகமோ “இப்ப என்னதான் டி உனக்கு வேணும்?” என்றார் பொறுமையை இழந்து.
“இந்த சிற்பிகா என் பையனை என்கிட்ட யிருந்து பிரிச்சுடுவாளோ பயமா இருக்குங்க” என்று மனதில் உள்ளதை கொட்டிவிட்டார் அமுதவள்ளி.
“அதானே பார்த்தேன் என்னடா எலி கோமணம் இல்லாத ஓடுதேனு பார்த்தேன்” என்று சிரித்தவர் “உனக்கு மனசுல உறுத்தல் இருக்கு நம்ம மருமக தங்கமான பொண்ணுனு உனக்கும் தெரியும். என் மகன் மேல எனக்கு உரிமை இருக்குனு நீ உன் புருசனுக்கு எதுவும் செய்யாதனு சொல்லாதடி உனக்கே இது அசிங்கமா தெரியலையா?” என்று அமுதவள்ளியை கடிந்துக் கொண்டார் சண்முகம்.
“நீங்களும் மாறிட்டீங்க என் பக்கம் யாருமே இல்லை போங்க!” என்று விரக்தியாக பேசியவரை பார்த்து சிரிப்புதான் வந்தது சண்முகத்திற்கு.
சண்முகம் சிரிப்பதை கண்டவரோ இங்கே இருந்தால் கணவனை ஏதாவது திட்டிவிடுவோம் என்று அறைக்குள் சென்று படுத்துவிட்டார்.
பேங்கிற்குச் சென்ற சிற்பிகா வேலை செய்துக் கொண்டிருந்தாள். திலீப் அன்று பெர்மிஷனில் இருந்தான். தாமதமாக வந்தவன் “ஹாய் சிற்பி எப்படி இருக்க உன் ஹிட்லர் மாமியார் என்ன சொல்றாங்க?” என்று கம்ப்யூட்டரை ஆன் செய்துக் கொண்டே கேட்டான்.
சந்தோஷ் அறையை எட்டிப்பார்த்தவள் அவன் வேலையில் மும்மரமாக இருப்பதை கண்டு “திலீப் எங்க மாமியார் என் வீட்டுக்காரர் மேல செம பொஸசிவ் தெரியுமா! அவர் குரல் மட்டும் தான் வெண்கலம் குரலா இருக்கு! நான் கூட அவங்களை பார்த்து பயந்து போய்ட்டேன்! அவங்க உண்மையா ரொம்ப நல்லவங்கடா! சந்தோஷ் எத்தனை மணிக்கு வீட்டுக்கு போனாலும் அதுவரை முழிச்சிருந்து சாப்பாடு போடுவாங்களாம். ஏன் நம்ம மேனேஜர் போடுற சட்டையெல்லாம் கூட என் மாமியார் தான் செலக்ட் பண்ணுவாங்களாம்! ஆனா ஒண்ணுடா எனக்கு வேலை மீதி பண்ணிட்டாங்க! வீட்டுக்கு போனதும் என் வேலை மட்டும் நான் செய்துட்டு சாப்பிட்டு தூங்க வேண்டியதுதான் ஜாலியாக இருக்கேன்” என்றாள் தோளைகுலுக்கி.
“உனக்கு என்னம்மா பொறந்த வீட்லயும் மகாராணி தான் இப்போ புகுந்த வீட்லயும் மகாராணி போல வச்சிருக்காரு உன் வீட்டுக்காரரு” என்றான் சிலாகித்து.
“ஆமா என் கதையை விடு! திவ்யா எப்படியிருக்கா? உன் வீட்ல அம்மா, அப்பா திவ்யாகிட்ட செட் ஆகிட்டாங்களா?” என்று ஆர்வமாக வினவினாள் சிற்பிகா.
“திவ்யாவை எங்கம்மாவுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. திவ்யாவும் பணக்கார வீட்டுப்பொண்ணு போல இல்லாம எல்லா வேலையும் எழுந்து செய்துடறா. எங்கம்மா இப்போ ஃப்ரீயா இருக்காங்க. எனக்குதான் கஷ்டமா இருக்கு. நல்ல வசதியா வாழ்ந்த பொண்ணு அவ. அவங்க வீட்டு ஹால்தான் எங்க பெட்ரூம். கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருக்கேன்! இப்ப இருக்க வீட்டை கொஞ்சம் பெருசா கட்டணும்” என்றான் பெரும்மூச்சு விட்டு.
பேங்கில் கூட்டம் குறைவாக இருக்க இருவரும் மும்மரமாக பேசிக்கொண்டிருந்தனர்.
சந்தோஷ் எதேச்சையாக கேமராவை பார்க்க சிற்பிகாவும் திலீப்பும் பேசுவது கண்டு கேஷ் கவுண்டர் முன்னே வந்து நின்றவன் “ரெண்டு பேரும் திருந்தவே மாட்டீங்களா எந்நேரமும் சதா பேசிட்டே இருக்கீங்க” என்றான் கையை கட்டிக்கொண்டு.
“அ.அது வந்து சும்மா இப்போதான் பேசினோம் சார்” என்றாள் தடுமாறியபடி
“காலையில அரட்டை அடிக்காம ரெண்டு பேரும் வேலையை பாருங்க! நான் வெளியே போய்ட்டு வந்துடறேன்” என்று சிற்பிகாவை பார்க்க அவளோ முகத்தை உம்மென்று வைத்து பார்த்தாள் சந்தோஷை.
“சும்மாடி” என்று கண்ணைச்சிமிட்டி சென்றான்.
“என்னடி மேனேஜர் கண்ணால காதல் பண்ணுறாரு” என்றான் திலீப்.
“வேலையை பாருடா” என்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள் சிற்பிகா.
மூன்று மாதங்கள் ஓடியது. சந்தோஷ், சிற்பிகா வாழ்க்கை தெளிந்த நீரோடை போல ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் காதலுடன் வாழ்ந்துக் கொண்டிருந்தனர்.
சந்தோஷ்ஷுக்கு மெயின் பிரான்ஞ் மேனேஜராக புரோமோஷன் கிடைத்திருந்தது. “நம்ம மருமகள் வந்த நேரம் நம்ம பையனுக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு” என்று பெருமையாக சிலாகித்து அமுதவள்ளியிடம் கூறினார் சண்முகம்.
அமுதவள்ளியோ அமைதியாக இருந்தார். அவரது அமைதிக்கு பின் புயல் இருக்கிறது என்று யாரும் அறியிவில்லை.
அன்று அமுதவள்ளிக்கு உடம்பு சரியில்லாது போக சிற்பிகாவே அன்று சமையல் வேலைகளை முடித்தாள். எப்போதும் அமுதவள்ளிதான் சந்தோஷிற்கு பரிமாறுவார். சிற்பிகாவோ குடும்பத்தில் தன்னால் பிரச்சனை வரக்கூடாது என சந்தோஷின் வேலைகளை செய்யமாட்டாள். அத்தைகிட்ட விட்டுக்கொடுத்து போனால் நாம குறைஞ்சு போயிடமாட்டோம் என்று அமைதியாக சென்றுவிடுவாள்.
அமுதவள்ளி தாமதமாக எழுந்து வந்தவர் சமையல்கட்டை பார்க்க காலையில் சமையலுக்கு ஊதாப்பம் சட்னியும், சாம்பார், மதியத்திற்கு ரசம் பொரியல் புளிக்குழம்பு என சகலமும் செய்து வைத்திருந்தாள்.
“ம்ம் எல்லாமே செய்திருக்காளே டேஸ்ட் பார்ப்போம்” என்று குழம்பை கையில் ஊற்றி டேஸ்ட் பார்த்தார். குறை சொல்ல முடியாமல் சுமாராகத்தான் செய்திருந்தாள்.
“ம்ம் நம்ம அளவு வராது” என்று பெருமிதம் கொண்டு சமைத்ததை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்துக்கொண்டிருந்தார்.
பேங்கிற்குச் செல்ல ரெடியாகி வந்தனர் சந்தோஷும் சிற்பிகாவும்.
அமுதவள்ளி வேலை செய்துக் கொண்டிருப்பதை பார்த்த சிற்பிகா “அத்தை உங்களுக்கே உடம்பு முடியலைல படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே” என்றாள் அக்கறையாக.
‘ம்ம் ரொம்பத்தான் என்மேல அக்கறை’ என்று மனதில் நினைத்த அமுதவள்ளியோ “இப்போ உடம்பு பரவாயில்ல மா அதான் படுத்திருக்க முடியல எழுந்து வந்தேன்” என்றவர் “சந்தோஷ் நீ உட்காரு” என்று தட்டு வைத்தார்.
“அம்மா உங்களுக்குத்தான் உடம்பு முடியலைல. நீங்க சாப்பிட உட்காருங்க” என்றவன் “சிற்பி அம்மாவுக்கு டிபன் வை” என்றதும் “உட்காருங்க அத்தை” என தட்டில் இட்லி வைத்து சாம்பாரை ஊற்றினாள்.
அவரோ “ஒருநாள் ஜீரணம் ஆகாம போயிடுச்சு! என்னை நோயாளி போல நடத்துற சந்தோஷ்” என்றார் வருத்தத்துடன்.
“நேத்து நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டீங்கனு எனக்கு தெரிஞ்சுதான் பேசுறேன்மா! சும்மா பிகு பண்ணாம வந்து சாப்பிட உட்காருங்க” என்று அமுதவள்ளியை மிரட்டி உட்கார வைத்தான்.
நேற்றிரவு சந்தோஷ் வேலை முடிந்து வந்தவன் வழக்கமாக மகனுக்காக காத்திருக்கும் அமுதவள்ளி ஹாலில் இல்லை சிற்பிகா மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தாள்.
“அம்மா எங்க காணோம் சிற்பி?” என்று கேட்டுக்கொண்டே சோபாவில் உட்கார்ந்தான்.
“அத்தைக்கு உடம்பு சரியில்லை நேற்று சாப்பிட்டதும் ஜீரணம் ஆகாமல் போய் வயிற்று கோளாறு வந்துடுச்சு மாமாதான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காருங்க. நான் பேங்க்ல இருந்து வந்ததும் தான் எனக்கு தெரியும் ரொம்ப சோர்ந்து போயிருக்காங்க. நான் இப்போதான் கஞ்சி வைச்சு கொடுத்து மாத்திரை போட வைத்து வந்திருக்கேன்” என்றாள் கவலையாக.
“எனக்கு போன் போட மாட்டியா சிற்பி?” என்றான் கோபமாக.
“அத்தைதான் உங்களுக்கு போன் போட வேண்டாம்னு பிடிவாதமா சொல்லிட்டாங்க. ஆனாலும் நான் உங்க மொபைலுக்கு கூப்பிட்டேன்பா நீங்க எடுக்கல” என்றாள் பொறுமையாக.
“இயர் எண்ட் கொஞ்சம் வொர்க் அதிகம்னு உனக்குத் தெரியும்ல! அம்மாவை பார்த்துட்டு வரேன்” என்று அமுதவள்ளியின் அறைக்குச் சென்றான். சண்முகம் அமுதவள்ளியின் பக்கம் உட்கார்ந்திருந்தார் மனைவியை பார்த்தவாறே. இருவரும் காதல் திருமணம் செய்தவர்களாயிற்றே மனைவிக்கு சின்னதாய் உடம்பு சரியில்லையென்றதும் மனிதன் துவண்டு போய் விட்டார்.
“ப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனா எனக்கு போன் பண்ணமாட்டீங்களா?” அவரிடமும் எகிறியவன் அமுதவள்ளியின் பக்கம் நாற்காலியை இழுத்துப்போட்டு மாத்திரையின் வீரியத்தில் உறங்கிக்கொண்டிருப்பவரை பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்களில் கண்ணீர் வந்தது.
தங்களிடம் இல்லாத பணமா வீட்டு வேலை செய்ய ஆள் போட்டுக்கொள்ளலாம் என்று பல முறை சொல்லியிருக்கிறான் சந்தோஷ். ஆனால் மகன் சொல்வதை மருந்துக்கும் கூட கேட்கமாட்டார். “நான் சமையல் செய்தா பார்த்து பக்குவமா செய்வேன். ஆனா வேலைக்கு வருபவங்க அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க கண்ணா வீட்டு வேலை செய்யற விசயத்துல நீ தலையிடாத” என்று சொல்லிவிடுவார் அமுதவள்ளி.
“அப்பா அம்மா இடையில எழுந்தா எனக்கு போன் பண்ணுங்க நான் வந்து பார்க்குறேன்” என்று வெளியே வந்தவன் அறைக்குச் சென்று குளித்து சாப்பிட்டு அமுதவள்ளியை பார்க்கச் சென்றான். அவர் இன்னும் உறங்கிக்கொண்டிருக்க “அப்பா அம்மா இன்னும் தூங்குறாங்க” என்றதும் “ஆமாப்பா உங்க அம்மா நைட் சரியா தூங்கமாட்டேங்கிறானு டாக்டாகிட்ட சொன்னேன் அவங்கதான் இன்னக்கு மட்டும் தூங்குறதுக்கு மாத்திரை கொடுத்திருக்காங்க” என்றார் சண்முகம்.
“சரிப்பா தூங்கட்டும் நான் காலையில வந்து பார்க்குறேன்” என்று அறைக்குச் சென்றவனுக்கு உறக்கமே வரவில்லை. 12 மணிக்கு ஒருமுறை 2 மணிக்கு ஒருமுறை அமுதவள்ளியை பார்க்கச் சென்று வந்தான். நான்கு மணிக்கு போகும்போது சண்முகம் தண்ணீர் குடிக்க எழுந்திருந்தார்.
“அம்மா நல்லாயிருக்கா நீ போய் தூங்குப்பா காலையில நீ வேலைக்கு கிளம்பணும்ல” என்றதும் “ப்பா அம்மாவை விட எனக்கு வேலை முக்கியம் இல்லப்பா” என்றான் பெரும் மூச்சுவிட்டு.
“நான் உன் அம்மா எழுந்தா கூப்பிடுறேன்” என்றதும் தான் வந்து அறையில் படுத்தான் சந்தோஷ்.
“ம்மா எனக்கு தெரிஞ்சு நீங்க காலையில 7 மணிக்கு எழுந்தது இன்னிக்குதான். உங்க உடம்புக்கு ஓய்வு கொடுங்க” என்றான் சற்று கண்டிப்பு குரலில்.
அமுதவள்ளியோ தான் ஒருநாள் உடம்பு முடியாம படுத்ததும் தன்னை நோயாளியாக பார்க்கிறார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டார்.
மருமகள் முன்னே மகன் தன்னை அதட்டி பேசியது அவருக்கு அவமானமாகப்போனது. தன் குடும்பம் முழுவதும் தன்மேல் அக்கறையாக இருக்கிறார்கள் என்று அவருக்கு தெரியாமல் போனது.
“இப்ப நான் சாப்பிடணும் அவ்ளோதானே” என்றவர் சிற்பிகா வைத்த இட்லியை சாப்பிட்டு முடித்து எழுந்து அறைக்குள் சென்று விட்டார்.
“சிற்பிகா நீ வா” என்று அமுதவள்ளியின் அறைக்குள் நுழைந்தான். அவரோ சுவற்றை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார்.
“ம்மா ஏன்மா சின்ன குழந்தை போல அடம் பிடிக்குறீங்க?” என்று மகன் பேசியதை காதில் வாங்காதவாறு அமர்ந்திருந்தார்.
“அம்மா நீங்க பேசாம இருந்தா நான் சாப்பிடாம ஆபிஸ் போயிடுவேன்” என்றதும் “ஏன் டா என்னை சித்ரவதை பண்ணுற நான்தானே உனக்கு சாப்பாடு போடுவேன். நான் பர்ஸ்ட் சாப்பிட்டு பேக்கை மாட்டிக்கிட்டு வேலைக்கா போறேன்! ஏதோ ஒருநாள் உடம்பு சரியில்லாம போச்சு இப்போ நல்லா நான் திடகாத்திரமாத்தான் இருக்கேன்! நீ சாப்பிடாம போனா நானும் இனிமேல் சாப்பிடாமதான் இருப்பேன்” என்று இன்னும் வீம்பாக பேசினார்.
“அப்படியா சரிமா நீங்க பிடிச்ச முயலுக்கு மூணு காலுனு சொல்லுங்க. நானும் சிற்பிகாவும் இந்த வீட்டை விட்டே போறோம்” என்றான் சும்மா ஒருபேச்சுக்கு தான் சொன்னான் அவரின் பிடிவாதம் குறையட்டும். அவரின் ஹெல்த்தை பார்த்துக்கட்டும் என்று தான் கூறினான்.
அமுதவள்ளி சந்தோஷின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார்.
“ம்மா!” என்றான் கன்னத்தை பிடித்துக்கொண்டான் அதிர்ச்சியுடன்.
21. உறவு
அமுதவள்ளி சந்தோஷ் கன்னத்தில் அடித்ததும் சிற்பிகாவோ உறைந்து நின்றிருந்தாள். அவர் அடித்து விடுவார் என்று அவள் நினைக்கவில்லை.
வாக்கிங் சென்றிருந்த சண்முகம் அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தார். அமுதவள்ளியும் சந்தோஷும் சத்தமாக பேசுவது கேட்டு அறைக்குள் வந்தவர் அதிர்ச்சி அடைந்தார். சிறுவயதிலிருந்து ஒருநாள் கூட மகனை அடிக்காமல் வளர்த்திருந்தார் அமுதவள்ளி. இன்று அடித்துவிட்டார் என்றால் அதற்கான காரணம் பெரிதாக இருக்க வேண்டும் என்று எண்ணியவரோ “அமுதா இப்ப எதுக்கு சந்தோஷை அடிச்ச நீ அடிக்கற அளவு என்ன பேசினான்?” என்று குரல் உயர்த்திக் கேட்டார்.
“எ.என்னங்க இ.இவன் நம்மை விட்டு தனிக்குடித்தனம் போ.போறானாம்” என்றவரின் குரல் உடைந்து போய் வந்தது.
நெஞ்சைப்பிடித்துக்கொண்டார் சந்தோஷ் பேசியதை தாங்காமல் அமுதவள்ளி.
“அம்மா சாரி நீங்க உங்க ஹெல்த்தை பார்த்துக்கணும்னுதான் அப்படி பேசிட்டேன். உங்களை விட்டு என்னால மட்டும் இருக்க முடியுமா என்ன? இன்னும் ரெண்டு அடி அடிச்சிடுங்கம்மா” என்று அமுதவள்ளியின் கையை எடுத்து கன்னத்தில் அடித்துக்கொண்டான்.
“கையை விடுடா” என நெஞ்சு கூடு ஏறி இறங்க கோபம் கொண்டு “கல்யாணம் ஆன அடுத்த நாளிலிருந்து நீ மாறிட்ட சந்தோஷ். அம்மா அம்மானு சுத்திக்கிட்டு என்னை சுத்தி வந்தவன் இப்ப பொண்டாட்டி வந்ததும் நான் இரண்டாம் பட்சம் ஆகிட்டேனா உனக்கு? ஹான் கல்யாணம் ஆகும் முன்னே நான்தானே உன்னை பார்த்துக்கிட்டேன்! உடம்பு சரியில்லைனாலும் நான்தான் உனக்கு சமைச்சு கொடுத்திருக்கேன்டா! உன்னைத்தான் டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போகணும்” என்றார் அதி கோபத்துடன்.
சிற்பிகாவோ “அத்தை அவரு ஏதோ வாய் தவறி சொல்லிட்டாரு” என்று அவள் குறுக்கே வர.
“அம்மா மகன்குள்ள நீ வராத தள்ளி நில்லு” என்று கண்ணை உருட்டி விரல் நீட்டி அதட்டல் போட்டார். சிற்பிகா தள்ளி நின்றுக் கொண்டாள் அமைதியாக.
“வாய் தவறி வந்த வார்த்தை என்றாலும் அது வீரியமானதுதான்” என்றவர் “உனக்கு ஒண்ணு தெரியுமாடா நீ சிற்பிகாவை லவ் பண்ணினது எனக்கு தெரியும்டா” என்றதும் சிற்பிகா நெஞ்சில் கையை வைத்துக்கொண்டாள். சந்தோஷும் கண்ணில் கண்ணீருடன் எப்படி தெரியும் அதிர்ந்து நின்று விட்டான்.
அமுதவள்ளியோ சந்தோஷின் கண்ணில் கண்ணீரை கண்டவருக்கும் அழுகை வந்துவிட்டது. அழுதுக் கொண்டே “டேய் நீ ஃபாரின் பிரண்ட் கூட பேசுறேனு சொன்னியே நான் கூட உன்னை தூங்க சொல்லி சத்தம் போட்டுட்டு போனேனே! அடுத்த நாள் காலையில உனக்கு காபி கொண்டு வந்தேன்டா! நீ ரெஸ்ட் ரூம்ல இருந்த உன் போன் அடிச்சது நான் போன் எடுக்கறதுக்குள்ள போன் கட் ஆகிடுச்சு. போனை எடுத்துப்பார்க்க இதோ இந்த அம்மணியோட போட்டோ வந்தது. எனக்கு ஷாக்தான் என் பையன் என் பேச்சு மீறமாட்டான் லவ் எல்லாம் பண்ணமாட்டான்னு நம்பி இருந்தேன்டா! மகன் ஃபோனா இருந்தாலும் பார்க்க கூடாதுனு எனக்கு தெரியும். ஆனா உன்னை பத்தி தெரிஞ்சுக்க உன் போனை செக் பண்ணினேன் நீயும் சிற்பிகாவும் நெருக்கமா இருந்த போட்டோவ பார்த்ததும் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்துச்சு. எங்கப்பாவுக்கு பண்ணிக்கொடுத்த சத்தியத்தை காப்பாத்த முடியாம போயிடுச்சேனு எவ்ளோ வேதனைப்பட்டேன் தெரியுமா? ஆனாலும் நீ விருப்பப்பட்ட ஒரே காரணத்துக்காக சிற்பிகாவை நான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். எப்படினு பார்த்தியா நான் உன் அம்மாடா நீ ப்ளான் போட்டா எனக்கு தெரியாதா என்ன? எல்லாத்தையும் ஆளுங்க வைச்சு கண்டு பிடிச்சேன். ராமு அண்ணா உன் பையனுக்கு ஏழைவீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்பியானு எனக்கு சாதகமாக பேசினாரு! அந்த கூட்டத்துல எத்தனையோ பொண்ணுங்க இருந்தாங்க! நான் சிற்பிகா கழுத்துல செயின் போட வச்சேன். ஏன் உன் மேல வச்ச பாசத்துல எங்கப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி எல்லாம் செய்தேன்டா! ஆனா நீ எடுத்த எடுப்புல தனிக்குடித்தனம் போறேனு சொல்லுற! மனசுல இருக்கறதுதான் வாய் வார்த்தையா வரும்னு சொல்வாங்க! இப்படி நீதான் என் உலகம்னு வாழ்ந்திட்டிருக்கேன் சந்தோஷ்! நீ எப்படி என்னை விட்டு போறேன் சொல்லலாம்?” வெடித்து அழ ஆரம்பித்தார் அமுதவள்ளி.
சந்தோஷ் “அம்மா நாங்க எங்க காதல் பத்தின உண்மையை மறைச்சது தப்புதான் என்னை மன்னிச்சிடுங்கம்மா” என்று வாய் விட்டு கதறி அழுது அமுதவள்ளியின் காலில் விழுந்து விட்டான். சண்முகமும் மகனும் மனைவியும் அழுவது கண்டு அவருக்கும் அழுகை வந்தது கட்டுப்படுத்திக் கொண்டார்.
சிற்பிகாவோ தன்னுடைய கனவு காதலை சந்தோஷிடம் சொன்னதால் தான் சந்தோஷிற்கு இப்படியொரு அவப்பெயர் வந்துடுச்சு என்று கலங்கியவள் “அத்தை சந்தோஷ் மேல மட்டும் குற்றம் சொல்லாதீங்க நான்தான் எல்லாத்துக்கும் காரணம்! அவர்கிட்ட நான் என் லவ்வை சொன்னப்ப! என் அம்மா சொல்ற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேனு சொன்னாரு.” என்றவள் “என்னோட கனவுல சந்தோஷ் வருவாருனு உங்களைத்தான் என் கணவனா நினைச்சிருக்கேன் வேற யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்! என்னை ஏத்துக்கோங்க என்னை லவ் பண்ணுங்கனு கெஞ்சினேன் அத்தை” என்று சுருக்கமாக தன் காதலை பற்றி அமுதவள்ளியிடம் கூறவும்தான் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தார்.
தன் மகன் தன் பேச்சுக்கு மரியாதை கொடுத்திருக்கிறான். சிற்பிகாவின் நிலையில் இருந்து யோசிக்க காலில் விழுந்திருக்கும் மகனை தூக்கிவிட்டு “இனிமே என்னை விட்டு தனிக்குடித்தனம் போறேனு சொல்லாத! உன் பையனை நான்தான் வளர்ப்பேன்” என்றார் மிரட்டலாக.
“என்னை மன்னிச்சிட்டிங்களாமா!” என்று மீண்டும் அமுதவள்ளி கட்டிக்கொண்டான் சந்தோஷ்.
சண்முகமோ “சண்டையா இருந்தாலும் சமாதானமா இருந்தாலும் இந்த பையன் அவன் அம்மாவைத்தான் கட்டிக்கிறான். என்னை எப்பவாவது தானா வந்து கட்டிபிடிச்சிருக்கியா?” என்று அந்த இடத்தின் நிலையை சரி பண்ணும் பொருட்டு பேசினார்.
சந்தோஷ் சண்முகத்தையும் அணைத்துக்கொண்டதும் சிற்பிகா நிம்மதியானாள். அவளுக்கு இருந்த குற்ற உணர்ச்சி நீங்கியது. இனி பிரச்சனை இல்லை என்று நினைத்திருந்தாள் ஆனால் இனிமேல்தான் பெரிய பிரச்சனையெல்லாம் வரப்போகிறதென தெரியவில்லை சிற்பிகாவிற்கு.
கொஞ்ச நேரத்தில் சந்தோஷ் ஆபிஸ் கிளம்பிவிட்டான். அன்றிரவு சிற்பிகா சந்தோஷ் சாப்பிடும்போது அங்கே இருக்கக்கூட இல்லை. அமுதவள்ளியே சந்தோஷ்க்கு எல்லாம் செய்யட்டும் அவரால் முடியவில்லை நீ சந்தோஷை கவனிச்சிகோனு தன்னிடம சொல்லும் வரை காத்திருப்போம் என்று தன்னால் குடும்ப நிம்மதி குலைய கூடாதென தன் ஆசைகளை மனதில் போட்டு பூட்டிக்கொண்டாள் பெண்ணவள்.
சாப்பிட்டு முடித்தவன் “ம்மா என்மேல கோபம் போயிடுச்சுதானே” என்றான் அமுதவள்ளியின் கையை பிடித்து நெஞ்சில் வைத்துக்கொண்டு.
“கோபம் போயிடுச்சு நீ வருத்தப்படாத” என்று மகனின் உச்சியில் முத்தமிட்டதும்தான் சந்தோஷ் முகத்தில் சிரிப்பே வந்தது.
“சரி நேரமாச்சு நீ தூங்க போப்பா” என்றதும்தான் சந்தோஷ் அறைக்குச் சென்றான்.
சிற்பிகாவோ ஜன்னல் பக்கம் நின்றிருந்தாள். முழு பௌர்ணமி நிலாவை பார்த்தபடி நின்றிருந்தாள்.
“என்னடி சில்வண்டு நிலாவை இரசித்தது போதும் என்னையும் கொஞ்சம் ரசித்து பாரேன்” என்றான் அவள் தோள்பட்டையில் முகத்தை பதித்துக்கொண்டு. அவள் திரும்பாமல் இருக்க “என்னடி நான் பேசிட்டே இருக்கேன் நீ என்னை பார்க்காம இருக்க” என்று சிற்பிகாவின் முகத்தை திருப்ப அவளது கண்களில் கண்ணீர் உருண்டு வந்தது.
“ஏய் என்னாச்சுடி! ஏன் அழற!” என்று சிறு பதட்டத்துடன் அவளது கையை பிடித்து வைத்து மெத்தையில் உட்காரவைத்ததும்
“சந்தோஷ் என்னாலதான நீ அத்தைகிட்ட கெட்ட பெயர் வாங்க வேண்டிய நிலைமை வந்துச்சு! அவங்க கிட்ட நம்ம காதலை சொல்லாம மறைச்சதுக்கு தண்டனையா தான் நான் இன்னும் கன்சீவ் ஆகாத இருக்கேனோ?” என்றாள் இதழ்பிதுக்கி அழும் குரலில்.
“ஏய்! நீ அடிக்கடி பைத்தியம்னு நிரூபிக்கிறடி” என்றவனோ சிறுபிள்ளைத்தனமாக பேசும் மனைவியை தோளோடு அணைத்துக்கொண்டு “நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வருசம் கூட இன்னும் ஆகலைடி சில்வண்டு! இப்பவே குழந்தை வரலைனு யாராவது கவலைப்படுவாங்களா? அதோட அம்மாகிட்ட நம்ம காதல் விசயத்தை எப்படி சொல்வதுனு குழம்பிபோய் கிடந்தேன். அவங்களுக்கு நம்ம காதல் தெரிஞ்சுதான் நமக்கு கல்யாணம் செய்து வைத்திருக்காங்க! அங்க நிற்குறாங்க தி கிரேட் அமுதவள்ளி” என்று தன் அம்மாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தான்.
“நான் என்ன கேட்குறேன் நீங்க என்ன பதில் சொல்றீங்க சந்தோஷ் நான் இன்னும் கன்சீவ் ஆகலையேனு கவலையா இருக்கேன்” என்று கணவனின் நெஞ்சில் சாய்ந்தாள் சிற்பிகா.
“ம்ம் அதுக்கு நாம இன்னும் தீயா வேலை செய்யணும் போல” என்று அவளது முகத்தை நிமிர்த்தி இதழோடு இதழ் ஒற்றி எடுத்ததும் “இப்போ தீயாய் வேலை செய்யலாமா?” என்றாள் கண்ணைச்சிமிட்டி.
சாக்லேட் கொடுத்தா குழந்தை வேண்டாம்னு சொல்லுமா லபக்கென்று வாங்கி வாயில் போட்டுக்குமே அதுபோல சந்தோஷும் சிற்பிகா வேலை செய்யலாம் என்றதும் அப்படியே சிற்பிகாவை கட்டிலில் சாய்த்து விட்டான் சந்தோஷ். இருவரும் தயக்கமின்றி காதல் போர் தொடுக்க ஆயத்தமாயினர். கட்டிலில் இருவரும் குழந்தைகள் போல மாறிவிட்டனர். அவன் விரல் அவளது மேனியை வீணையாக மீட்டி பெண்ணவளை மெய்சிலிர்க்க வைத்தான் ஆணவன். இருவரும் வியர்வையில் குளிக்க. வியர்த்த இடமெல்லாம் அவன் பன்னீராக தாகம் தீர்த்துக்கொண்டான். இன்பக் களத்தில் இருவரும் சுவை தேட தொடங்கினார்கள். அவளின் இதழில் அமுதம் பருகியே கண் சொக்கி போனான்.
பெண்ணவளிடம் அவளது மாங்கனிகளின் தொட்டில்கட்டி விளையாடினான். நிர்வாணக் கோலத்தில் இருந்தால் நிலவுக்கும் மோகம் வந்து ஆகாயத்தில் புதைந்துக் கொள்ளும். அதிகாலை இளஞ்சூரியன் பார்த்தால் அவனுக்கும் கூச்சம் வரும். முத்தமிடா இடமில்லை! இதுதான் எல்லை என்று இல்லாமல் பார்க்கும் இடமெல்லாம் கைகொண்டு இதழ்கொண்டு முத்த ஊர்வலம் வந்தான்.
அவனது திண்ணிய மார்பில் மோக முத்தம் கொடுத்து அவனது ஆண்மையை கிளரச்செய்தாள் பெண்ணவள். கட்டிப்புரண்டனர் கட்டிலில் ஓய்வில்லாமல். அவனது விரல்கள் செய்யும் அட்டகாசத்தில் பெண்ணவள் அவனது முதுகில் நகக்கீறல்கள் போட்டாள். போர்வைக்குள் நெளிந்தனர். வியர்வையில் குளித்தார்கள். வேகத்தில் களைத்தும் போனார்கள். மோகப்பயணத்தில் மோட்சத்தை அடைந்தார்கள். மங்கையவள் போதும் போதும் என்று சும்மா நடித்தாள். இன்னும் என்னுள் தேடு என்று அவனை அணைத்துக்கொண்டு. அவனுக்கும் அவளை ருசிக்க ருசிக்க திகட்டவில்லை. ஆயிரம் முறை ருசித்தாலும் அடங்காமல் இருந்தான் ஆண்மகன். நீ தொட நான் பிறந்தேன்! நான் தொட நீ இந்த பூவுலகில் பிறப்பெடுத்தாய் பெண்ணே! இருவரும் கூடல் கூடி திளைத்தனர்.
அடுத்த ஒரு மாதமும் ஓடியது அந்த மாதமும் தலைக்கு குளித்து விட்டாள். அமுதவள்ளி இத்தனை நாள் சிற்பிகாவை ஒன்றும் சொல்லவில்லை. இந்த முறை குளித்து சமையல்கட்டுக்குள் வந்ததும் “என்ன இந்த மாசமும் தலைக்கு குளிச்சிட்டியா? நாளைக்கு ஹாஸ்பிட்டல் போய் உங்க ரெண்டு பேருக்கும் செக் பண்ணிட்டு வந்துடலாம் சந்தோஷ்கிட்ட சொல்லிடு” என்றவரோ அதற்கு மேல் பேசாமல் காய்கறியை நறுக்கிக்கொண்டிருந்தார்.
சிற்பிகாவுக்கோ இந்த மாசமும் தான் கன்சீவ் ஆகவில்லையே என்று வருத்தத்துடன் இருந்தவளுக்கு ஹாஸ்பிட்டல் செக்கப்போலாம் என்று அமுதவள்ளி கூறியதும் ‘அச்சோ இப்போ எல்லாம் பெண்களுக்கு நீர்கட்டி இருக்கு. யூட்ரஸ் குரோத் இல்லை அது இதுனு ஏதோ ஏதோ பிராப்ளம் இருக்குனு சொல்றாங்களே நமக்கு ஏதோ பெருசா ப்ராப்ளம் இருக்குமோ’ என்று அச்சப்பட்டாள் சிற்பிகா.
சந்தோஷ் உடற்பயிற்சி முடித்து குளித்து வந்தவன் “சிற்பி காபி கொண்டு வா” என்று அன்றைய நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தான்.
சந்தோஷின் குரலில் தெளிந்தவள் காபியை போட்டு தனக்கும் சந்தோஷுக்கும் எடுத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்றவள் சந்தோஷிடம் ஒரு கப்பை கொடுத்து விட்டு தானும் காபியை குடிக்க ஆரம்பித்தாள்.
சந்தோஷோ காபியை குடித்துக்கொண்டு “என் சில்வண்டு முகம் சரியில்லையே” என காபியை குடித்துக்கொண்டே சிற்பிகாவை ஆழ்ந்து பார்த்தான். எப்போதும் காலையில் குளித்தவுடன் பூஜையறைக்குச் சென்று விளக்கேற்றி நெற்றியில் திருநீறும் உச்சியில் குங்குமமும் வைத்திருப்பவளின் நெற்றி இன்று வெறுமையாக இருக்க பீரியட்ஸ் ஆகிவிட்டாள். அதனால்தான் தன்னவளின் முகம் வருத்தத்தில் உள்ளது என்று தெரிந்துக் கொண்டவன் அவளிடம் பேச ஆரம்பிக்க போகும் முன் “சந்தோஷ் நாளைக்கு நம்ம ரெண்டு பேரையும் அத்தை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகப்போறாங்களாம் எனக்கும் அதுதான் சரியா படுது” என்றாள் சிற்பிகா.
“நாளைக்கு செகண்ட் சாட்டர்டே நாம ரெண்டு பேரும் பேங்கிற்கு லீவு போட தேவையில்லை. போய்ட்டு வந்துடலாம். நீ ஏன் டி ஏதோ கல்யாணம் ஆகி பத்துவருசம் ஆகி குழந்தை இல்லாதவங்க போல முகத்தை வச்சிக்கிட்டிருக்க. இந்த மாசமும் கொஞ்சம் நேரம் கூட்டி வேலை செய்யலாம். அடுத்த மாசமே பேபி தங்கிடும் உன் வயித்துல” என்று அவளின் மனதை மாற்ற கொஞ்சிப் பேசினான்.
“போடா உனக்கு எப்பவும் அதே நினைப்பு தான்” என்று அவன் தோளில் இடித்தாள்.
“பின்ன அதெல்லாம் நடந்தாதானே பேபி வரும் நான் சரியாத்தானே சொல்லுறேன்” என்றான் கண்ணைச்சிமிட்டி.
“நாம முயற்சி பண்ணாம இல்லையே சந்தோஷ் ஆனாலும் நான் இன்னும் கன்சீவ் ஆகலையே” என்று சோகமாய் பேசினாள்.
“ஏய் சும்மா குழந்தை வரலைனு பேசாத. இந்த மாசம் நான் கன்சீவ் ஆகிடுவேன்னு பாசிட்டிவா இரு! அடுத்த மாசம் நீ கன்சீவ் ஆகிடுவ பாரு” என்றான் பெரும்மூச்சுவிட்டு கவலைப்படும் மனைவியை அவனால் தேற்றமுடியாமல் திணறினான்.
அன்றிரவு சிற்பிகா உமாவிடம் போனில் பேசிக்கொண்டிருக்க “ம்மா நாளைக்கு நானும் சந்தோஷும் ஹாஸ்பிட்டல்க்கு செக்கப் போறோம்” என்றதும் உமா புரிந்துக் கொண்டு “நானும் உங்க கூட வரவா நான் வந்தா டாக்டர்கிட்ட கொஞ்சம் தெளிவா பேசுவேன்” என்றார் உமா.
“அத்தை எங்ககூட வராங்கம்மா” என்றதும் “அப்போ சரிமா நானும் வந்தா நல்லாயிருக்காது நீ ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்த உடன் எனக்கு போன் போடு டாக்டர் உன்னை செக் பண்ணுவாங்க நீ பயப்படாத சரியா” என ஒரு தாயாக தைரியம் கொடுத்தார் உமா.
அவளுக்குமே பயம் அன்று மதியம் சாப்பிட்டு முடித்தவள் கூகுளில் குழந்தையில்லாத தம்பதிகள் ட்ரீட்மெண்ட் என்று செக் பண்ணி பார்க்க அதிலோ ஆயிரத்தெட்டு காரணங்கள் இருந்தது. அந்த ட்ரீட்மெண்ட் மெத்தேட் படித்து பார்த்து போனை ஆப் செய்து விட்டாள்.
சந்தோஷும் சிற்பிகாவும் ஹாஸ்பிட்டல் போவதற்கு கிளம்பி வந்தனர். அமுதவள்ளியும் அறையில் கிளம்பிக்கொண்டிருக்க சண்முகமோ “அமுதா நம்ம பையனுக்கு கல்யாணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள இப்பவே ஹாஸ்பிட்டல் போகணுமா என்ன? நமக்கும் நம்ம சந்தோஷ் 6 வருசம் கழிச்சுதானே பிறந்தான். ஒரு வருசம் மகனும் மருமகளும் ஜாலியா இருக்கட்டுமே” என்றார்
மனைவியின் அவசரத்தை பார்த்து கோப்பட்ட சண்முகம்.
“ம்ம் நாம குழந்தையில்லாம ஹாஸ்பிட்டல் ஹாஸ்பிட்டலா, கோவில் கோவிலா ஏறி இறங்கினது நீங்க வேணா மறந்திருக்கலாம்! எனக்கு இன்னும் நான் கஷ்டப்பட்டது என் மனசுல பசுமரத்தாணி போல பதிஞ்சு இருக்கு. கல்யாணம் ஆகி 3 மாசம் குழந்தை வரும்னு காத்திருக்கலாம் இப்போ நம்ம பசங்களுக்கு கல்யாணம் ஆகி 6 மாசம் ஆகிடுச்சு பர்ஸ்ட்டே டாக்டர்கிட்ட போனோம்னா. அவங்க என்ன ஏதுனு செக்பண்ணிட்டு ஒரு ரெண்டு மாசம் மாத்திரை சாப்பிட்டா சீக்கிரம் குழந்தை வந்துடும்ங்க” என்றார் ஒரு டாக்டரை போல
“நான் ஏதாவது சொன்னா நீ கேட்கறது போல இருந்தா பரவாயில்ல. எல்லாம் உன் விருப்பம்தான்” என்று முகம் தூக்கி பேசியவர் “மருமககிட்ட குழந்தை இல்லாதது பற்றி அவ மனசு சங்கடப்படும்படி பேசிடாத அமுதா” என மனைவியை பற்றி தெரிந்தமையால் அவரை எச்சரிக்கை செய்தார்.
“நானும் குழந்தை இல்லாத வேதனையை அனுபவிச்சவ எனக்கு என் மருமககிட்ட எப்படி நடக்கணும்னு தெரியும்ங்க” என்று பேசியவரை “உன்னை திருத்த முடியாது போடி” என்று அங்கிருந்து நகர்ந்து விட்டார் சண்முகம்.
ஹாஸ்பிட்டலில் முன்னமே டோக்கன் போட்டிருந்தான் சந்தோஷ். சிட்டியில் இன்பெர்ட்டிலிட்டிக்கான கைதேர்ந்த மருத்துவர் டாக்டர் பத்மா. ரெண்டு மூணு பேரிடம் விசாரித்துதான் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியிருந்தான் சந்தோஷ்.
சிற்பிகாவோ அவர்கள் பக்கம் உட்கார்ந்திருந்த தம்பதிகளை சுற்றி பார்த்தாள். 40 வயதான தம்பதிகளும் வந்திருந்தனர். தன்னை போல 25க்குள் இருக்கும் தம்பதிகளும் உட்கார்ந்திருந்தனர். ரிப்போர்ட் வாங்கிக்கொண்டு சிரிப்போடு வெளியேறும் தம்பதிகளும் அவள் கண்ணுக்கு தெரிந்தனர். சிலப்பெண்கள் வயிற்றை பிடித்துக்கொண்டு அழகாக தேர்போல நடந்து வருவதை பார்த்து தானும் இதுபோல எப்போ நடந்து வருவோம் என்று அவள் மனம் ஆலிப்பேரலையாய் சுழற்றிக்கொண்டு வந்தது. சந்தோஷ் போன் வர போனை எடுத்துக்கொண்டு பேசியபடி சென்றுவிட்டான்.
அமுதவள்ளியோ யோசனையுடன் திகில் படம் பார்த்தது போல கொஞ்சம் பயமும் பதட்டமும் கொண்ட மருமகளின் முகத்தை பார்த்தவர் அவளது கையை பிடித்து “சிற்பிகா பயப்படாத சும்மா நார்மலா இரு” என்றார் இயல்பாக.
இதுவே உமாவாக இருந்தால் அவளுக்கு ஆறுதலாக இன்னும் இரண்டு வார்த்தை கூடுதலாக பேசியிருப்பாரோ என்னவோ? அமுதவள்ளி சிற்பியிடம் அதிகம் பேசவில்லை. அவரது குணாதசியமே அப்படித்தான் என தெரிந்துக் கொண்ட சிற்பிகாவோ பயத்துடன் கையை பிசைந்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
சந்தோஷ் சிற்பிகா என்று பெயர் கூப்பிட சந்தோஷும் சிற்பிகாவும் அவர்கள் பின்னே அமுதவள்ளியும் டாக்டரின் அறைக்குள் சென்றார்.
பத்மா 50 வயது மதிக்கத்தக்க வயதில் இருந்தார். புன்னகையுடன் “உட்காருங்க” என்றவரோ “கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆச்சு?” என்றார் மென் புன்னகையுடன்.
“ஆறுமாசம் ஆச்சு டாக்டர்” என்றாள் கவலையாக சிற்பிகா.
அவர்களின் ஓபி கார்ட்டில் என்ன பெயர் என்று பார்த்தவர் சிற்பிகா என்றிருக்க
“சிற்பிகா கல்யாணம் ஆகி ஆறுமாசம் தானே ஆகுது கவலைப்படாதீங்க! ட்ராவல் அது இதுனு இருந்திருப்பீங்க ரெண்டு பேரும் சேரும் நேரம் ஓவலேசன் டைம் இருந்திருக்காது! நிறைய காரணம் இருக்கு! பர்ஸ்ட் ரெண்டு பேரையும் செக்பண்ணிடலாம்” என்று குழந்தையில்லா தம்பதிக்களுக்கான ஆரம்பகட்ட பரிசோதனைகளை எழுதிக்கொடுத்தவர் “சிற்பிகா நீங்க வாங்க உங்களை செக்பண்ணிடலாம்” என்று அவளை செக் பண்ண அழைத்துச் சென்று செக் பண்ணும் போது அவளுக்கு வலி உயிர் போய்விட்டது. பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டாள்.
“கொஞ்சம் உடம்பை டைட் பண்ணாத லூசா விடுமா” என்றதும் அவள் இயல்பாக இருக்க செக்கப் செய்தவர் “ம்ம் நார்மல் தான்” என்றதும் சிற்பிகாவிற்கு வலியெல்லாம் பறந்து போனது.
டாக்டர் எழுதிக்கொடுத்த பரிசோதனைகளை செய்து வர மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது.
“சாப்பிட்டு வரலாம் சிற்பி” என்றான் சந்தோஷ்.
சிற்பிகாவோ “இல்ல ரிப்போர்ட் வந்ததும் டாக்டரை பார்த்துட்டு சாப்பிடப்போகலாம்” என்று கண்ணை மூடி உட்கார்ந்து விட்டாள்.
சந்தோஷ், சிற்பிகா என்று கூப்பிட ரிப்போர்ட்டுடன் உள்ளேச் சென்றனர் மூவரும். சிற்பிகா முகத்தில் பயம் தெரிய கவலைப்படாதே என்று கையை இறுக்கி பிடித்துக்கொண்டான் சந்தோஷ்.
டாக்டர் பத்மாவோ “சந்தோஷ்க்கு எந்த ப்ராப்ளமும் இல்லை எல்லாம் நார்மல்” என்றதும் அமுதவள்ளியின் முகம் பிரகாசமானது. “சிற்பிகாவுக்கு யூட்ரஸ் நார்மல் எண்ட்டோமென்ட்ரியம் தான் சரியா வளராம இருக்கு” என்றதும் சிற்பிகா அழும் நிலைக்கு சென்றுவிட்டாள். சந்தோஷோ சிற்பியின் கையை அழுத்தி பிடித்து “அழாதடி” என்றான் மெல்லிய குரலில்.
22. உறவு
“நான் எழுதி தர மாத்திரையை இந்த மன்த் போடுங்க நெக்ஸ்ட் மன்த் வந்ததும் ஸ்கேன் பண்ணி பார்த்துக்கலாம்” என்றவர் சிற்பிகாவின் முகத்தை வைத்தே அவள் வருந்திக்கொண்டிருக்கிறாள் என்று அறிந்துக் கொண்ட டாக்டரோ “சிற்பிகா டோன்ட் ஒரி. உங்க ப்ராப்ளம் சரிபண்ணிடலாம்! ஃபார் எக்ஸாம்பில் உங்க கையில டம்ளர் நிறைய தண்ணியோட வந்து இருக்கீங்க. ஆனா இங்க வர பேஷண்ட் கொஞ்சம் பேர் வெறும் டம்ளரோடு தான் வருவாங்க. அவங்களுக்கும் நாங்க டிரீட்மெண்ட் பார்ப்போம்! என்ன பண்றது நம்ம கையில ஒண்ணும் கிடையாது எல்லாம் கடவுள் கையிலதான் இருக்கு சோ நம்பிக்கையோட மாத்திரையை போடுங்க! ஒன் ஆர் த்ரீ மன்த்ஸ் உங்க ப்ராப்ளம் சரியாகிடும் நான் உறுதியா சொல்றேன் சிற்பிகா” என்று அவளுக்கு நம்பிக்கை கொடுத்து மாத்திரையை எழுதிக்கொடுத்தார் டாக்டர் பத்மா.
“ஏன் டாக்டர் எதாவது பெரிய ப்ராப்ளமா?” என்றார் அமுதவள்ளி ஒரு வித படப்படப்புடன்.
“இல்லமா பெரிய ப்ராப்ளம் இல்ல ஒரு இரண்டு மூணு மாசம் மாத்திரை சாப்பிட்டா போதும் கன்சீவ் ஆகிடுவாங்க” என்றார் புன்னகையுடன்.
சந்தோஷ்க்கும் இப்போது நிம்மதி வர “தேங்க்ஸ் டாக்டர்” என கூறியவன் மாத்திரை சீட்டை வாங்கிக்கொண்டு சிற்பிகாவின் கையை பிடித்தபடியே வெளியே வந்தான்.
அமுதவள்ளிக்கு நம்பிக்கை இருந்தது. அவருக்கும் இதுபோல எண்டோமெண்ட்ரியம் தான் சரியாக வளராமல் இருந்தது. ஆறுமாசம் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டதும்தான் சந்தோஷ் வயிற்றில் தங்கினான்.
மாத்திரை வாங்கிக்கொண்டு காரில் ஏறினார்கள். சிற்பிகாவுக்கு அழுகை பீறிட்டு வந்தது. தான் இப்போது அழுதால் சந்தோஷும் கவலைப்படுவான் என்று உதடு கடித்து அழுகையை அடக்கிக்கொண்டாள்.
அமுதவள்ளியோ இப்போது ட்ரீட்மெண்ட் பற்றி பேசினால் சிற்பிகா மனது வருத்தப்படும் என்று எண்ணியவர் வீட்டுக்கு போய் ஆறுதல் வார்த்தை சொல்லி விடலாம் என்று அமைதியாக இருந்தார். முதன் முதல் சிற்பிகாவுக்கு அமுதவள்ளியின் மீது இருந்த மாமியார் என்ற பந்தத்தின் மீது விரிசல் வரத்துவங்கியது. தன் மனசு துடிப்பதை பார்த்தும் ‘ஒரு ஆறுதலா கையை பிடிச்சு சீக்கிரம் சரியாகிடும் உனக்கு பாப்பா வரும் கவலைப்படாதனு சொல்லியிருக்கலாம்ல’ என்று அவள் மனம் வெம்பியது.
சந்தோஷ்க்கு குழந்தை வந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் சிற்பிகாவின் முகம் சரியில்லையே என்று மிரரில் பார்த்தவன் அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்ற யோசனையுடன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.
வீடு வந்ததும் காரை நிறுத்த கதவு திறந்துக் கொண்டு வேகமாக வீட்டுக்குள் சென்றுவிட்டாள் சிற்பிகா.
அமுதவள்ளியோ அவளுக்கு ஆறுதல் கூறலாமென்று நினைத்திருக்க அவளோ இப்படி வேகமாக போவாள் என்று அவர் எதிர்ப்பார்க்கவில்லை.
சந்தோஷும் காரிலிருந்த இறங்கியதும் வீட்டுக்குள் போக “சந்தோஷ் ஒரு நிமிசம் இரு” என்றார் அமுதவள்ளி.
“ம்மா சிற்பிகாவுக்கு ப்ராப்ளம்னு டாக்டர் சொன்னதை நினைச்சு அவ ரொம்ப அப்செட் ஆகியிருக்காமா” என்றவனின் குரல் பிசிறு தட்ட
“ம்ம் நானும் வரேன் இரு” என்றவர் சந்தோஷின் பின்னே சென்றார்.
சிற்பிகாவோ கட்டிலில் படுத்துக்கொண்டு குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள். மதியமும் சாப்பிடாமல் இருக்க தலைவலியும் சேர்ந்துவிட டாக்டர் கூறியதையே எண்ணிக்கொண்டிருந்தவள் வெடித்து அழுக ஆரம்பித்தாள்.
அவள் அழுவதை கண்ட சந்தோஷோ துடித்துப்போய்விட்டான். “சிற்பி” என்று அவளது அருகே போய் உட்கார்ந்ததும் தாய் மடி தேடிய கன்று போல சந்தோஷின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டவளோ குலுங்கி அழுதாள். அமுதவள்ளி வந்து நின்றது அவளுக்கு தெரியவில்லை.
“இப்ப என்னாச்சுனு இப்படி அழுது உடம்ப கெடுத்துக்குற!” என தன்னவளின் தலையை மென்மையாக வருடிக் கொடுத்தான்.
“சந்தோஷ் எனக்கு ஏன் இந்த ப்ராப்ளம் வரணும். நான் யாருக்கும் துரோகம் செய்ததில்லையே. எங்கப்பா அம்மாவும் ஈ எறும்புக்குகூட கெடுதல் செஞ்சதில்லைபா. ஒரு வேளை போன ஜென்மத்துல பெரிய பாவம் செய்திருப்பேனோ?” என்று சிறுபிள்ளை போல அழுபவளை தேற்ற வழி தெரியாமல் விழி பிதுங்கினான் சந்தோஷ்.
“அம்மா பேசுங்க” என்று அமுதவள்ளியிடம் சைகை காண்பித்தான்.
சிற்பிகா அழட்டும் அவள் மனதில் உள்ள பாரம் ஒருவரிடம் சொல்லி அழுதால் தீரும் என்று அமைதியாக நின்றிருந்தார் அமுதவள்ளி. அவரும் இதுபோல பல பிரச்சனைகளை தாண்டி வந்ததால் சிற்பிகாவின் வலியை புரிந்துக் கொள்ள முடிந்தது. மருமகளிடம் மனம் விட்டு பேசாமல் இருப்பது தான் அவருக்கு பெரும் பிரச்சனையை தரப்போகிறது என்பது தெரியவில்லை.
“ஏய் இப்ப இருக்க ஃபுட் தான் ப்ராப்ளம் நீ மட்டும் இல்ல இங்க பெரிய பாவம் செய்திடல சரியா அழறதை நிறுத்து கண்ணெல்லாம் சிவந்து போச்சு பாரு” என்று அவளது கண்ணீரை துடைத்து விட்டு “அதான் டாக்டர் மாத்திரை கொடுத்துக்காங்கல்ல சாப்பிடு ஒன் மன்த் வெயிட் பண்ணலாம் அழாதடி நீ அழுதா எனக்கும் மனசு கஷ்டமாயிருக்கு” என்றான் உருக்கும் குரலில்.
“சா.சாரி சந்தோஷ்” என்றவளோ அவன் முகம் பார்த்து எழுந்து உட்கார்ந்தாள். அப்போதும் அவள் முதுகு பின்னே நின்றிருக்கும் அமுதவள்ளியை அவள் பார்க்கவில்லை.
“குழந்தை வர தாமதம் ஆனா உனக்கும் வருத்தம் தானே சந்தோஷ். அது புரியாம நான் அழுது உன்னையும் கஷ்படப்படுத்துறேன் சாரி நான் அழல” என்று கண்ணீரைத்துடைத்துக்கொண்டு சந்தோஷின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
சந்தோஷோ அமுதவள்ளி நிற்கிறாரென அவளை விலக்கிவிடாமல் அணைத்தபடியே “அம்மா வந்திருக்காங்க சிற்பி” என்றான் மெதுவாய். சட்டென்று சந்தோஷிமிருந்து விலகிக்கொண்டாள்.
“இப்ப எதுக்கு சிற்பிகா அழற! எனக்கும் இந்த ப்ராப்ளம் இருந்துச்சு. அப்போ எல்லாம் இப்ப இருக்க ட்ரீட்மெண்ட் போல இல்ல! நானும் ஆறு வருசமா எல்லா டாக்டரையும் பார்த்து சலிச்சு போய் கடைசியா பெர்ட்டிலிட்டி ஸ்பெசலிஸ்ட் டாக்டரை பார்த்து அவர் கொடுத்த மாத்திரை ஆறு மாசம் சாப்பிட்டேன் சந்தோஷ் தங்கிட்டான். உனக்கு டாக்டர் ஒன் ஆர் த்ரீ மன்த் மாத்திரை சாப்பிட்டதும் ப்ராப்ளம் சரியாகிடும்னு சொல்லியிருக்காங்க! நீ சும்மா அழுது உடம்பை கெடுத்துக்காத ஒன் மன்த் லீவு போடு! ஆபிஸ் ஒர்க் பிரஷர்ல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்” என்றார் பொறுமையாகத்தான்.
“ஒன் வீக் கூட லீவு போடலாம் ஆனால் ஒன் மன்த் லீவு தரமாட்டாங்க அத்தை!” என்றதும்
“அப்போ வேலையை ரிசன் பண்ணிடு! நீ வேலைக்கு போய் இந்த வீட்ல சாப்பாடு பொங்கணும்னு அவசியம் கிடையாது சரியா. சந்தோஷ் அவளுக்கு லீவு ஏற்பாடு பண்ணப்பாரு! இல்ல வேலையை ரிசன் பண்ணச் சொல்லு உன் பொண்டாட்டியை. பர்ஸ்ட் நமக்கு வாரிசுதான் முக்கியம். வேலையெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம்தான்” என்றார் கண்டிப்புடன் அமுதவள்ளி.
“அம்மா ஜாப்பை அவசரப்பட்டு விட முடியாது. சிற்பி வேலைக்கு போய்ட்டு வந்தா ரிலாக்ஸ் ஆயிடுவா! அதை விட்டு வீட்ல இருந்தா நமக்கு ப்ராப்ளம்னு அதை நினைச்சிட்டிருப்பா இப்போதைக்கு வேலைக்கு போகட்டும் குழந்தை தங்கினா வேணா அடுத்த நாளே சிற்பிகாவை வேலையை ரிசைன் பண்ணச் சொல்லிடறேன்” என்றான் சிற்பிகாவின் மனதை புரிந்தவனாக.
“அப்போ நான் சொல்றது நீங்க கேட்கலை சரி உங்களுக்கு என்ன சரினு படுதோ அதை பண்ணுங்க நான் தலையிடலைப்பா!” என்று வெளியேச் சென்றுவிட்டார். அமுதவள்ளி தான் குழந்தையில்லாது பட்ட கஷ்டம் தன் மகனும் மருமகளும் படக்கூடாதென பேசுகிறார்.
ஆனால் சந்தோஷோ மனைவியின் மனப்பாரம் குறைய பேசுகிறான். இதில் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை.
சிற்பிகாவோ “சந்தோஷ் அத்தைகிட்ட ஏன் இப்படி பேசினீங்க அவங்க கோபப்பட்டு போறாங்க பாருங்க. இப்ப என்ன நான் வேலையை ரிசைன் பண்ணிட்டா போச்சு” என்றாள் நிதானமாக.
“அப்படியில்லடி உன் மனசு எனக்குத் தெரியும். அவங்க இன்னும் உன்கிட்ட நெருங்கி வரலை. நீ கன்சீவ் ஆனா அப்போ அம்மாவோட பாசம் என்னனு தெரிஞ்சுக்குவ” என்றவனின் மடியில் படுத்துக்கொள்ள தலையை வருடிக்கொடுத்தான் சந்தோஷ். அப்படியே கண்ணயர்ந்து விட்டாள் சிற்பிகா.
உமாவோ மாலையானதும் “என்ன சிற்பிகா ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துட்டாளா என்ன ஒரு போன் கூட பண்ணாம இருக்காளே இந்த பொண்ணு” என்று மகளை கடிந்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் பொறுத்துப்பார்த்தவர் சிற்பிகாவின் மொபைலுக்கு கூப்பிட அவள் உறங்கிக்கொண்டிருக்க சந்தோஷ்தான் போன் எடுத்தவன் “சொல்லுங்கத்தை” என்றான் சத்தம் போடாமல்.
“மா.மாப்பிள்ளை சிற்பிகா எங்கே? அவ ஹாஸ்பிட்டல் போறேனு சொன்னா ரிப்போர்ட் என்னனு விசாரிக்கலாம்னு கூப்பிட்டேன்” என்றார் தயங்கியபடி.
“சிற்பி தூங்குறா அத்தை! ரிப்போட் நார்மல் தான் அத்தை! நீங்க பதட்டமா இருக்காதீங்க” என்றான் இயல்பாக அவர்களை கஷ்டபடுத்த வேண்டாமென டாக்டர் கூறியதை உமாவிடம் மறைத்துவிட்டான்.
“சரிங்க மாப்பிள்ளை சிற்பி எழுந்ததும் நான் பேசுறேன்” என்று போன் வைத்துவிட்டார்.
சிற்பிகாவை தூக்கம் கலையாமல் படுக்க வைத்துவிட்டு தானும் அப்படியே உறங்கிப்போனான்.
சிற்பிகா எழுந்து பார்க்க மணி இரவு எட்டாகி இருந்தது. சந்தோஷ் அங்கே இல்லை. எங்கப்போனரு என்று எழுந்து குளியலறைச் சென்று ப்ரஷாகி வந்தவள் கையில் தட்டுடன் வந்து நிற்கும் சந்தோஷை பார்த்தாள்.
“ஏன் சந்தோஷ் நானே சாப்பிட வந்திருப்பேன்ல நீங்க ஏன் கொண்டு வந்தீங்க? அத்தை ஏதாவது தப்பா நினைக்க போறாங்க” என்றாள் அவிழ்ந்திருந்த கூந்தலை கொண்டை போட்டுக்கொண்டு
“அம்மாதான் டி என்னை டிபன் கொண்டு போகச் சொன்னதே” என்றதும் ‘உங்கம்மாவை நல்லவங்கனு நினைக்க முடியாது கெட்டவங்கனு நினைக்கவும் முடியாதுப்பா’ என்று மனதில் எண்ணியவள் தட்டை வாங்க “இரு நான் ஊட்டி விடறேன்” என்று சிற்பிகாவிற்கு ஊட்டியும் விட்டான்.
சண்முகம் மருமகளை பார்க்க வந்தவர் வெளியே நின்று கதவு தட்ட “ப்பா வாங்க” என்றான் சந்தோஷ்.
அமுதவள்ளி கதவையெல்லாம் தட்டமாட்டார் அப்படியே வந்துவிடுவார். கதவு தட்டவும் சண்முகம் தான் வந்திருக்காரென்று புரிந்துக் கொண்டு சண்முகத்தை வரச்சொன்னான் சந்தோஷ்.
சண்முகம் உள்ளே வந்ததும் சந்தோஷ் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்ததை பார்த்து “நல்லா என் மருமகளை கவனிடா” என்று சிரித்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தார்.
சிற்பிகாவுக்குத்தான் சங்கடமாக இருந்தது. நல்லவேளை சாப்பிட்டு முடிக்கும் நேரம் வந்தார். கடைசியாக ஊட்ட “போதும் சந்தோஷ்” என்றுவிட்டாள்.
சண்முகமோ “டாக்டர் சொன்னதை நினைச்சு வருத்தப்படாத கண்ணு! உங்க அத்தை உன்னைய விட ரொம்ப கஷ்டப்பட்டா. அவளுக்கு ஹெல்ப் பண்ண என்னை தவிர வேற யாரும் கிடையாது. அதான் எப்பவும் முகத்தை டெர்ரரா வச்சிருக்கா! நீ யாரை பத்தியும் நினைக்காத! என்ன வேணும்னு என்கிட்ட சொல்லு நான் வாங்கிட்டு வந்து தரேன். இனிமே நீ ஹெல்த் ஃபுட் சாப்பிடணும்” என்றார் அன்பான வார்த்தைகளில் அவளை இதம் கொள்ள செய்தார்.
“சரிங்க மாமா சொல்றேன்” என்றாள் தன் மன இறுக்கம் கொஞ்சம் தளர்ந்து போனது. சரியாக உமா போன் செய்ய “சொல்லுங்கம்மா மாமாகிட்ட பேசிட்டிருக்கேன் அப்புறம் கூப்பிடறேன்” என்று போனை வைக்க போக.
“நீ போன் பேசு நான் கிளம்புறேன் எனக்கும் ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தா கால் பிடிச்சிக்கும் அப்படியே வாக்கிங் கிளம்புறேன்” என்று நாசுக்காக பேசி எழுந்துச் சென்றுவிட்டார்.
சந்தோஷோ “நீ பேசுடி” என்று அவள் சாப்பிட்ட தட்டை சிங்கில் வைக்கச் சென்றுவிட்டான் அம்மாவிடம் மனம் விட்டு பேசினால் மனைவியின் மனது ஆறுதல் அடையுமென்று.
உமாவோ “சிற்பிகா நான் கொஞ்ச நேரம் முன்னே போன் பண்ணேன் டி நீ தூங்கிட்டிருந்தனு மாப்பிள்ளை சொன்னாரு அதான் வைச்சிட்டேன்” என்றதும்
“அம்மா எனக்கு எண்டோமெட்ரியம் சரியான அளவுல இல்லையாம் ஒரு மன்த் மாத்திரை சாப்பிட சொல்லியிருக்காங்கம்மா! எனக்கு பயமா இருக்கு! குழந்தை இல்லைனா எல்லாரும் என்னை பேசுவாங்கல்ல. எந்த விசேஷத்துக்கும் நான் போகமுடியாது” என்று அவளாக கற்பனை செய்துக் கொண்டு பிதற்றினாள் பேதைப்பெண்.
“ஏய் லூசு பொண்ணு இப்போல்லாம் மெடிசன் நிறைய வந்துடுச்சு கவலைப்பட தேவையிருக்காதுடி!” என்றார் மகள் வருத்தத்தை போக்க.
“ம்மா எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு! அப்பாவை கூட்டிட்டு வரியா?” என்றவளுக்கு குரல் தழுதழுத்து வந்தது.
சந்தோஷை விட்டும் அவளால் இருக்க முடியாது. ஆனால் இப்போது தாய்மடி தேவையாக உணர்ந்தாள் சிற்பிகா.
ஆனந்தன் உமாவின் பக்கத்தில் இருந்தார். உமாவிடம் போனை வாங்கி “காலையில பொழுது விடியும்போது நானும் அம்மாவும் உன் கண்ணுமுன்னே இருப்போம் சரியா. நீ கவலைப்படாத சிற்பிமா” என்றார் ஆனந்தன்.
“நீங்க அடிச்சு பிடிச்சு வராதீங்க நாளைக்கு சண்டேதான் பொறுமையா வாங்க” என வைத்து விட்டாள்.
அம்மாவும் அப்பாவும் வருகிறார்கள் என்றதும் அவளுக்கு ஏதோ இனம் புரியாத சந்தோசம் வந்துவிட்டது. தூங்கி எழுந்தவளுக்கு நடந்து வரலாம் என்று தோன்ற பால்கனியில் நடந்துக் கொண்டிருந்தாள்
சந்தோஷ் சாப்பிட்டு வந்ததும் பால்கனியில் சிற்பிகா நடப்பதை பார்த்தவன் அவனும் பால்கனிக்குச் சென்றான்.
“என்ன மேடம் ஏதோ பலத்த சிந்தனையா இருக்கீங்க?” என்று அவள் கையை பிடித்து அங்கே போட்டிருந்த மர நாற்காலியில் உட்கார்ந்து சிற்பிகாவை மடியில் உட்கார வைத்துக்கொண்டான்.
அவளுக்கும் அவனது அணைப்பில் இணக்கமாக இருக்க அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். “என்னடி இன்னும் டாக்டர் சொன்னதையே நினைச்சிட்டிருக்கியா?” என்றான் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து.
“இல்ல” என்று தலையை ஆட்டினாள் நெஞ்சில் இருந்தவாறே
“அத்தையும் மாமாவையும் பார்க்கணும் போல இருக்காடி” என்றதும் நிமிர்ந்து பார்த்தாள் “எப்படி நான் நினைக்கறதை சரியா சொல்றீங்க சந்தோஷ்” என்று அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
கோழிக்குஞ்சு பயத்தில் தாய்கோழியின் பாதுகாப்பில் அணைந்துக் கொள்ளுமே அதுபோல.
“என் பொண்டாட்டி மனசுல என்ன நினைக்குறானு எனக்கு தெரியாம போகுமா என்ன?” இன்னும் இறுக்கினான் அவனது மனதை கவர்ந்தவளை.
“போதும் மூச்சுமுட்டுது” என்று சிரித்தாள் அவளது கவலையை மறந்து. மனைவியை கொஞ்சி பேசியே அவளது கவலையை போக்க வைத்தான் சந்தோஷ்.
“அப்பாவும் அம்மாவும் நாளைக்கு காலையில வரேனு சொல்லியிருக்காங்க சந்தோஷ்” என்றதும் “ஏன் டி அவங்களை அலைய வைக்குற இப்போ நான் உன்னை பார்த்துக்குறேன்ல. இல்ல நான் பார்த்துக்கறதுல உனக்கு குறையா ஏதாவது வைக்குறேனா?” என்றான் சற்று கோபக்குரலில்.
“அச்சோ சந்தோஷ் நீ இல்லைனா ரொம்ப கஷ்டம்டா நீதான் என் உயிர்டா அம்மாவை பார்க்கணும் போல தோணுச்சு அதான் வரச்சொன்னேன். நாம அம்மாவை பார்க்க போனா நீ என்னை அம்மா வீட்ல விட்டுட்டு வந்துருவ அப்புறம் உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது!” என்றாள் கண்ணைச்சிமிட்டி
“எனக்கு மட்டும் உன்னை விட்டு இருக்க முடியுமா என்ன? கவர்மெண்ட் ஹாலி டே வரட்டும் சேர்ந்த மாதிரி ரெண்டு நாள் போய் இருந்துட்டு வரலாம்” என்றான் அவளது கன்னத்தில் மென் முத்தம் கொடுத்து.
‘ஆமா உன் அம்மாவை விட்டு எங்க வீட்டு வந்து இருந்துட்டா வானம் இடிந்து விழுந்துடும்’ என்று மனதில் நினைத்துக்கொண்டு “ம்ம் போலாம் சந்தோஷ்” என்றவள் கொட்டாவி விட “வா தூங்கப்போகலாம்” என்று அவளை கைகளில் ஏந்திச் சென்று கட்டிலில் படுக்க வைத்தான். இருவரும் பேசிக்கொண்டே உறங்கிப்போயினர்.
அடுத்தநாள் காலையில் அமுதவள்ளி எழுந்து குளித்து முடித்தவர் வாசல் தெளிக்க கதவு திறக்கும்போது வெளியே போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர் ஆனந்தனும் உமாவும். சிற்பிகா போன் செய்த அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பி விட்டனர் மகளைப்பார்க்க
“வாங்க வாங்க எத்தனை மணிக்கு வந்தீங்க! நீங்க உட்கார்ந்திருப்பதை பார்த்தா நடுசாமத்துல வந்தது போல தெரியுதே! வந்ததும் கதவு தட்டியிருக்கலாம்ல” என்றார் வருத்தமாக.
“இல்லங்க சிற்பி நேத்த போன் பண்ணினா பார்க்கணும் போல தோணுச்சுனு அதான் கிளம்பி வந்துட்டோம்” என்றார் தயங்கியபடி.
“ஓஓ அவ நல்லாத்தான் இருக்கா! இங்க அவளுக்கு எந்த குறையும் இல்லையே! உங்க பொண்ணு இங்க மகாராணி போல இருக்கா” என்றார் பெருமிதமாக.
“ம்ம் எனக்குத் தெரியும்க்கா சும்மா பார்க்கணும்னு போல இருக்கு அதான் வந்தோம்” என்று சமாளித்தார் ஆனந்தன்.
“உள்ள வாங்க” என்று கூட்டிக்கொண்டுச் சென்றவர் இருவரையும் கெஸ்ட் தங்கும் அறையில் கொண்டு போய் விட்டு “குளிச்சு ப்ரஷ் ஆகுங்க நான் வந்துடறேன்” என்று சமையல்கட்டுக்குச் சென்றுவிட்டார்.
சிற்பிகாவுக்கு விழிப்பு வந்தவுடன் அம்மா அப்பாவும் வரேனு சொல்லியிருக்காங்க நாம குளிச்சிட்டு கீழே போவோம் என்று குளித்து முடித்து ஹாலுக்கு வர ஆனந்தனும் உமாவும் உட்கார்ந்திருந்தனர்.
“அப்பா அம்மா” என்று ஓடிவந்தாள் ஆனந்தனும் உமாவும் எழுந்து நின்றனர். போனில் தினமும் பேசுவாள் உமாவிடம். இருவரையும் பார்த்து ஒருமாதத்திற்கு மேல் இருக்கும். முதலில் ஆனந்தனை கட்டிக்கொண்டு “எப்படி இருக்கீங்கப்பா?” என்றாள் சந்தோசத்துடன் உமாவோ மகளை ஏக்கமாக பார்த்தார்.
“நல்லாயிருக்கேன்டா தங்கம். நீ எப்படியிருக்க! ஏன் உடம்பு கொஞ்சம் இளைச்ச மாதிரி தெரியுது சாப்பிடுறியா இல்லையா?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டார் ஆனந்தன். மகளை ஏதும் கஷ்டப்படுத்துகிறார்களோ என்று ஆதங்கப்பட்டார்.
“நான் ஹேப்பியா இருக்கேன்ப்பா உங்களை பார்க்காம தான் இளைச்சுட்டேனு தோணுது” என்றாள் கண்ணைச்சிமிட்டி.
“குறும்புக்காரப் பொண்ணுடா” என்று சிரித்தார் ஆனந்தன்.
“உன்னை பார்க்கணும்மானு யாரோ சொன்னாங்க ஆனா அவங்க இப்போ அப்பாவை பார்த்ததும் இந்த அம்மாவை மறந்தாச்சு” என்று சிற்பிகாவை பார்த்து பொய்யாக முறைத்தார் உமா.
“நீதான் என் செல்ல அம்மா” என்று கட்டிக்கொண்டு சிரித்தாள் சத்தமாக.
சமையல்கட்டில் காபி போட்டுக்கொண்டிருந்த அமுதவள்ளியோ ‘இந்த பொண்ணு இப்படியெல்லாம் சத்தம் போட்டு சிரிச்சு இன்னிக்குதான் பார்க்குறேன் நம்ம கிட்ட மட்டும் ஊமைக்கொட்டான் போல இருக்கா’ என்று புலம்பிக்கொண்டார். (ஆமா நீங்க ரொம்ப சிற்பிகா கிட்ட சிரிச்சு பேசுறீங்க போங்க மை மைண்ட் வாய்ஸ்)
காபியை போட்டு எடுத்துச் செல்ல அமுதவள்ளியை பார்த்ததும் சிற்பிகா அமைதியானாள்.
“என்னங்க பொண்ணை பார்த்தாச்சா, நாங்க நல்லா வச்சிருக்கோமா உங்க பொண்ணை” என்றார் அழுத்தி. அவருக்கு தன் குடும்பத்தை யாரும் குறை சொல்லி விடக்கூடாதென கவனமாய் பேசினார்.
ஆனந்தனோ “அமுதவள்ளி அக்கா குடும்பத்துல பொண்ணு கொடுத்திருக்கேன் குறை சொல்ல முடியுமா உங்களை!” என்று அவரை பாராட்டிப்பேசினார். பாராட்டு புகழ்ச்சிக்கு மயங்காதவர் உலகில் யாரும் உண்டோ?
“சிற்பிகா உனக்கு இனிமே காபி,டீ கிடையாது இதுல கப்புல சத்துமாவு கஞ்சி இருக்கு குடி” என்று கஞ்சி கப்பை சிற்பிகாவிடம் எடுத்துக்கொடுத்தார் அமுதவள்ளி.
“தேங்க்ஸ் அத்தை” என கஞ்சியை எடுத்துக்கொண்டாள்.
சந்தோஷும் வந்துவிட வாக்கிங் சென்றிருந்த சண்முகமும் வந்துவிட்டார். “அடடே வாங்க சம்பந்தி” என்று ஆனந்தனை கையெடுத்து கும்பிட்டார் சண்முகம்.
“வாங்க அத்தை! வாங்க மாமா” என்று சந்தோஷும் வரவேற்றான்.
“வரோம் மாப்பிள்ளை இன்னிக்கு சண்டே கார்மென்ட்ஸும் லீவு விட்டிருக்கோம் அதான் பொண்ணை பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்” என்றார் சிரிப்புடன்.
“நீங்க எப்ப வேணாலும் உங்க பொண்ணை பார்க்க வரலாம் மாமா! காபியை குடிங்க” என்றதும் காபியை குடிக்க ஆரம்பித்தனர்.
“அப்பா நீங்க பேசிட்டிருங்க நான் சமையல்கட்டுக்கு போறேன்” என்றாள் சிற்பிகா.
“நீ ரெஸ்ட் எடு சிற்பிகா நான் சமைக்குறேன்” என்று சமையல்கட்டுக்குள் சென்றார் அமுதவள்ளி.
ஆனந்தனும் உமாவும் மகளை இப்படி கையில் வைத்து தாங்குகிறார்கள் என்று ஆனந்தம் கொண்டனர்.
சிற்பிகாவோ அமுதவள்ளியின் பின்னே சென்றவள் “அத்தை நான் காய்கறியாவது கட் பண்ணுறேன்” என்று பிரிட்ஜை திறக்க போக “நீ உங்கம்மாகிட்ட பேசணும்னுதானே அம்மாவையும் அப்பாவையும் வரச்சொல்லியிருக்க போய் பேசிட்டு வா நான் சமையலை கவனிக்குறேன்” என்றவரோ சமையலை ஆரம்பித்தார் அமுதவள்ளி.
‘நான் அம்மாவை வரச்சொன்னது இவங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று யோசித்துக்கொண்டே உமாவை பார்க்க வந்தாள்.
23. உறவு
ஹாலுக்கு வந்த சிற்பிகாவோ உமாவை பார்க்க “என்னங்க நீங்க மாப்பிள்ளை கிட்ட பேசிட்டிருங்க! நான் பொண்ணுகிட்ட பேசிட்டு வந்துடறேன்!” என்று ஆனந்தனிடம் சொல்லிவிட்டு சிற்பிகாவை தோட்டத்துக்கு கூட்டிச்சென்றார் உமா.
“டாக்டர் சொன்னதை நினைச்சு பயந்திட்டியா! நம்ம பக்கத்து வீட்டு பொன்னி இருந்தாளே அவ சொந்தக்கார பொண்ணுக்கும் உன்னை போலவே ப்ராப்ளம் இருந்துச்சாம்டி அந்த பொண்ணு 3 மாசம் மாத்திரை சாப்பிட்டதும் அடுத்த மாசம் கன்சீவ் ஆகிட்டாளாம் நீ கவலைப்படாதடி! இப்போதானே கல்யாணம் ஆகியிருக்கு!” என்று குழம்பி போயிருக்கும் மகளின் மனதை தெளியவைத்தார்.
“அப்படியாமா நான் கூகுளில் என் பிராப்ளம் போட்டு பார்த்தேன் அதுல நிறைய ரீசன் வந்துச்சு அதான் பயந்துட்டேன்மா” என்றாள் சோகமாக.
“சரி சரி இனிமே சந்தோசமான மனநிலையில இரு. மியூசிக் கேளு. மாப்பிள்ளை கூட வெளியே போய்ட்டு வா!” என்று பல அறிவுரைகளை அடுக்கிக் கொண்டேச் சென்றார் உமா.
“சரி மா நீ சொன்னதெல்லாம் பண்ணுறேன்” என்றவளுக்கோ இப்போது மனம் தெளிவாக இருந்தது.
அனைவருக்கும் சாப்பாடு பரிமாறினர் அமுதவள்ளியும் சிற்பிகாவும்.
மாலையானதும் “நாங்க கிளம்புறோம் சிற்பிகா ஹெல்த்தை பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு ஆனந்தனும் உமாவும் கிளம்பினார்கள்.
அன்றிரவு சிற்பிகா சிரித்த முகத்துடன் இருந்தாள். “என் பொண்டாட்டி முகத்துல ஆனந்தம் தாண்டவம் ஆடுது” என்று அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தபடி கேட்க
“என் மனசு எல்லாம் குழம்பிக் கிடந்தது இப்போ அம்மாகிட்ட பேசினதும் குழப்பம் தீர்ந்துடுச்சு” என்றாள் கண்ணை உருட்டி.
“என்னடி பேசினாங்க” என்றான் ஆர்வமாக கேட்பது போல
“அதாங்க எங்க வீட்டுப்பக்கம் இருக்கறவங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுக்கு எனக்கு இருக்கும் ப்ராப்ளம் அந்த பொண்ணுக்கும் இருந்துச்சாம் மாத்திரை சாப்பிட்டு கன்சீவ் ஆகிட்டாளாம். அப்போ நானும் மாத்திரை சாப்பிட்டதும் எண்ணி 3 மாசத்துல கன்சீவ் ஆகிடுவேன்” என்றாள் கண்கள் மின்ன.
“நானும் அதைத்தான் சொல்றேன் சில்வண்டு 3 மாசம் எல்லாம் ஆகாது நீ அடுத்த மாசமே கன்சீவ் ஆகிடுவ பாரு அதுக்கு இப்போ” என்று அவளது கழுத்தில் முகம் புதைத்து தேடலை துவங்கினான்.
ஒன்வீக் வீட்டில் ரெஸ்ட் எடுத்தாள் சிற்பிகா. அந்த ஒருவாரமும் சிற்பிகாவுக்கு ஆர்கானிக் காய்கறிகளை சமைத்துக்கொடுத்தார் அமுதவள்ளி.
ஆனால் சிற்பிகாவிடம் கொஞ்சி எல்லாம் பேசமாட்டார் அமுதவள்ளி. சாப்பிடு என்று விதவிதமாக சமைத்துக்கொடுப்பார். எந்த பண்டமாயிருந்தாலும் பாசமாக பேசி கொடுத்தால் அதற்கு தனி ருசியே இருக்கும். ஆனால் அமுதவள்ளி அமிர்தமே கொடுத்தாலும் சிற்பிகாவுக்கு பாகற்காய் போலானது.
“சிற்பிகா சாப்பிடுமா! மார்க்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கிட்டு வரலாம்னு ஒருநாளும் என்னிடம் கேட்டதில்லை. சும்மா ஹோட்டல்ல கொண்டு வந்து சாப்பாடு வைப்பாங்களே அதுபோல சாப்பாடு வைச்சுட்டு போனா எப்படி சாப்பிட முடியும்?” என்று முகம் சுருக்கிக்கொள்வாள் சிற்பிகா.
ஒருவாரம் எப்போதடா போகும் என்றிருந்தது. மாலையில் சந்தோஷ் எப்போது வருவான் என்று வாசலில் விழி வைத்து காத்திருப்பாள் சிற்பிகா.
சந்தோஷ் வந்ததும் வெளியே அழைத்துச் செல்வான். அப்போதும் அமுதவள்ளி தலைநிறைய மல்லிகைப் பூவை வைத்துவிடுவார். பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்கனு சொல்லி அனுப்புவார்.
அடுத்த வாரம் தொடங்க பேங்கிற்குச் சென்றாள் சிற்பிகா.
தீலிப்போ கையில் ஸ்வீட் பாக்சுடன் காத்திருந்தான்.
“ஸ்வீட் எடுத்துக்கோடி நீ அத்தை ஆகிட்ட” என்று ஸ்வீட் பாக்ஸை நீட்டினான் முகம் முழுக்க சிரிப்புடன்.
திலீப் சந்தோசத்துடன் கூறியதும் புரிந்துக் கொண்டவள் “வாழ்த்துக்கள்டா” ஸ்வீட் எடுத்துக் கொண்டு திலீப்பிற்கு கைகொடுத்தாள் மகிழ்ச்சியுடன்.
“திவ்யாவை கேட்டதா சொல்லு. திவ்யா அப்பா உங்க வீட்டுக்கு வந்தாராடா?” என்று கேட்டாள் சிற்பிகா.
“ராம் அங்கிள் வந்தாருடி ஆனா எங்க வீட்டுக்குள்ள வரலை எங்க வீடு சின்னதா இருக்காம் அவரு கால் வைக்கமாட்டேன்னு சொல்லிட்டாரு. திவ்யா நீங்க வரவேண்டாம்னு சொல்லிட்டா அவர் பணம் கொடுத்ததும் எனக்கு வேண்டாம் என் புருசன் சம்பாரிக்கிற காசுல நான் குடித்தனம் பண்ணிப்பேன்னு அவரை நெற்றி பொட்டில் அடித்தாற் போல சொல்லி விரட்டி விட்டுட்டா என் பொண்டாட்டி” என்றான் பெருமையாக.
“சூப்பர்டா திவ்யா உனக்கு பொண்டாட்டியா கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்” என்றாள் கம்ப்யூட்டரில் வேலை செய்தபடியே
“தேங்க்ஸ்டி” என்றவனோ “எங்களுக்கு பர்ஸ்ட் பையன்தான் வருவான். நீ சீக்கிரமா எனக்கு மருமகளை பெத்து கொடுத்திடு நாங்க வெயிட் பண்ணுறோம்” என்றான் கண்ணைச்சிமிட்டி.
“சரிடா உனக்கு பையன் பொறந்தா! என் பொண்ணு உன் பையனுக்குதான் போதுமா!” என்றாள் மெல்லிய இதழ் விரிப்போடு.
அடுத்தநாள் செக்கப்பிற்கு சிற்பிகாவை கூட்டிச்சென்றான் சந்தோஷ். டாக்டர் சிற்பிகாவை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு “கொஞ்சம் இம்பூருவ் ஆகியிருக்கு பட் இன்னும் மாத்திரை சாப்பிடணும்” என்று மாத்திரையை எழுதிக்கொடுத்தார். சிற்பிகா மனம் தளராமல்தான் இருந்தாள்.
ஒரு மாதம் ஓடியது. தினமும் மாத்திரையை எடுத்துக்கொண்டாள். அவள் மாத்திரை சாப்பிட்டாளா என்று குடும்பமே அக்கறையாக கேட்பார்கள் சிற்பிகாவிடம்.
அமுதவள்ளியின் நெருங்கிய சொந்தக்கார பெண் பார்வதியின் மருமகளுக்கு வளைகாப்புக்கு சொல்ல அமுதவள்ளியின் வீட்டுக்கு வந்திருந்தார்.
காபி போட்டு கொடுத்து பேசிக்கொண்டிருந்தார் அமுதவள்ளி.
“உன் பையனுக்கு கல்யாணம் ஆகி கிட்டதத்ட்ட ஒருவருசம் ஆகப்போகுதுல்ல உன் மருமக மாசமா இருக்காளா?” என்றார் அக்கறையுடன் பார்வதி.
“இல்லக்கா இன்னும் மாசம் ஆகலை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு வந்துருக்கேன் மாத்திரை கொடுத்திருக்காங்க இன்னும் ஆகலை! எனக்குத்தான் கல்யாணம் ஆகி ஆறுவருசம் கழிச்சுத்தான் சந்தோஷ் கிடைச்சான். இப்போ என் மருமகளுக்கு குழந்தை கிடைக்க தள்ளிப்போகுது எனக்கு கொஞ்சம் கவலையா இருக்கு” என்றார் அமுதவள்ளி வருத்தமாக.
“யாருக்கு ப்ராப்ளம்?” என்றதும்.
“மருமக சிற்பிகாவுக்குத்தான். சந்தோஷ்க்கு எல்லாம் நார்மல் அதுவரைக்கும் சந்தோஷம்! ரெண்டு பேருக்கும் ப்ராப்ளம் இருந்தா வெகுநாள் ட்ரீட்மெண்ட் எடுக்கணும்ல” என்று ஆதங்கமாக பேசினார் அமுதவள்ளி. யாரிடமும் இப்படி ஓபனாக பேசமாட்டார் அமுதவள்ளி. பார்வதி அமுதவள்ளிக்கு நம்பகமானவர் அதனால்தான் தங்கள் குடும்ப விசயத்தை அவரிடம் பகிர்ந்துக் கொண்டார் அமுதவள்ளி.
பார்வதியோ “நீ நம்ம குலதெய்வக்கோவிலுக்கு இந்த வெள்ளிக்கிழமை கூட்டிட்டு போய் தொட்டில் கட்டி போட்டு விட்டு ஒரு வேண்டுதலை வைச்சு வரச்சொல்லு! அடுத்த வருசம் உன் வீட்டுல குவா குவா சத்தம் கேட்கும் பாரு” என நம்பிக்கை கொடுத்தார் பார்வதி.
“இந்த யோசனை எனக்கு தெரியலை பாருக்கா நீதான் இப்போ எனக்கு தெய்வமா தெரியுற” என்றார் அமுதவள்ளி மனமுருகி.
சரியாக சிற்பிகா பேங்க் முடித்து வீட்டுக்கு வந்தாள். பார்வதியும் அமுதவள்ளியும் பேசியது பாதி அரைகுறையாக அவள் காதில் விழுந்தது. அவர்கள் பேசியதில் சிற்பிகாவின் மனது சங்கடப்பட்டாலும் “வாங்க” என்றாள் புன்னகை முகத்துடன்.
பார்வதியும் “வரேன்மா எப்படியிருக்க!” என சிற்பிகாவை பார்த்து சிரித்தார். சிற்பிகாவும் “நல்லாயிருக்கேன்ங்க” என்றவள் “பேசிட்டிருங்க நான் இதோ வந்துடறேன்” என்று அறைக்குள் சென்றதும் “எனக்குத்தான் குறை இருக்குனு அத்தை வீட்டுக்கு வந்தவகிட்ட சொல்றாங்க! இவங்க பையனுக்கு எல்லாம் நல்லா இருக்காம்னு பெருமையா சொல்றாங்க” என “இந்நேரம் இவங்க பையனுக்கு குறை இருந்திருந்தா இப்படி அடுத்தவங்க கிட்ட சொல்வாங்களா!” என்று ஆதங்கத்துடன் விம்மி விம்மி அழுதாள் சிற்பிகா.
அடுத்தநாளே காலையில் சாப்பிட வந்த சந்தோஷிடம் “நாளைக்கு கோவிலுக்கு போவதை பத்தி சிற்பிகாகிட்ட பேசிட்டியா சந்தோஷ்?” என்று கேட்டார் அமுதவள்ளி.
“இல்லம்மா இன்னும் சொல்லலை” என்று சொல்லிக்கொண்டிருக்க சரியாக சிற்பிகாவும் சாப்பிட வந்துவிட அவளிடம் கோவிலுக்கு போவதை பற்றி அமுதவள்ளி சொன்னார். “லீவு போடுறேன்” என்று மட்டும் சொல்லி சாப்பிட ஆரம்பித்தாள் சிற்பிகா.
நேற்று இரவு தனக்காக எப்போதும் அறையில் தூங்காமல் விழித்திருக்கும் தன்னவள் இன்று தான் அறைக்குபோகும்போது உறங்கிக்கொண்டிருந்தாள். சரி மாத்திரை சாப்பிடறதால டயர்டா இருக்கு தூங்கியிருப்பா என்று நினைத்தவன் குளித்துவிட்டு கீழேச் சென்றவன் சாப்பிட்டு முடித்து அமுதவள்ளியிடம் பேசிவிட்டு தான் மேலே வந்தான். சிற்பிகா தூங்காமல் தான் இருந்தாள்.
அமுதவள்ளி தனக்கு குறை இருக்கு என்று சொன்னதை அவளால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. சந்தோஷிடமும் சொல்ல அவளுக்கு விருப்பம் இல்லை. அவனிடம் பேசினால் அழுதுவிடுவோமென்று கண்ணை மூடிப்படுத்துக்கொண்டாள்.
சந்தோஷ் வந்ததும் அவளது இடுப்பில் கைபோட அசையாமல் படுத்திருந்தாள். அணைத்தபடியே உறங்கிவிட்டான் சந்தோஷ்.
காலையில் சந்தோஷ் எப்போதும் போல சிற்பிகாவிடம் பேச அவளோ அவன் கேட்டதற்கு மட்டும் பதில் அளித்து குளிக்கச் சென்றுவிட்டாள்.
சந்தோஷையும் சிற்பிகாவையும் குலதெய்வக் கோவிலுக்கு கூட்டிச்சென்றார் அமுதவள்ளி. சந்தோஷிடம் இன்றும் அவன் கேட்பதற்கும் மட்டுமே பதில் கூறிவிட்டு கோவிலுக்குள் விளக்கு போட ஆரம்பித்தாள். அமுதவள்ளி தன் சொந்தக்காரர்களிடம் எல்லாம் பேசும்போது தன்னை பற்றி கூறியிருப்பாரோ என்று கூனிக்குறுகினாள். அவர்கள் சிரித்தால் கீற்று புன்னகையுடன் வந்துவிடுவாள்.
அமுதவள்ளியோ “இவதான் சந்தோஷ் பொண்டாட்டி” என்று ஒருவரிடம் அறிமுகப்படுத்த. “ஏன் என் மருமகனு சொன்னா தேய்ஞ்சு போயிருவாங்களோ” என்று முணுமுணுத்தாள். அந்த முணுமுணுப்பு கூட அமுதவள்ளியின் காதில் விழுந்துவிட்டது. சிரிப்புடன் நகர்ந்துவிட்டார்.
சந்தோஷ், சிற்பிகா இருவரும் சேர்ந்தே தொட்டில் கட்டினர். சிற்பிகாவோ அழுது விட்டாள். “அழாதடி எல்லாரும் பார்க்குறாங்க” என்று பல்லைக்கடித்தான் சந்தோஷ்.
“எதுக்கு இப்போ பல்லைக்கடிக்குறீங்க எனக்கு குழந்தை இல்லைனு நான் அழுறேன். எனக்குத்தானே குறை உங்களுக்கு எல்லாம் நார்மலா தானே இருக்கு பேசாம வாங்க” என்றாள் பொங்கி எழுந்து.
இதில் அமுதவள்ளிக்கு தெரிந்த ஒரு மூதாட்டி “உன் மருமக வாயில்லா பூச்சியா இருக்கா! நீ தைரியமா பேசக்கத்துக்கொடுக்கறது இல்லையா. நீ எப்படி வெட்டு ஒண்ணு துட்டு ரெண்டுனு பேசுவ. ஆனா உன் மருமக பேசறதுக்கே காசு கேட்கறா. அவளுக்கு கொஞ்சம் ட்ரைனிங் கொடு” என்று சொல்ல அமுதவள்ளியோ “அதெல்லாம் என் மருமக என்னைய விட பேசுவா பாருங்க” என்று சிலாகித்து சொன்னார் அந்த முதியவரிடம்.
‘என்னாச்சு என் பொண்டாட்டிக்கு பேய் பிடிச்சது போல பேசுறா! என் பொண்டாட்டி ரொம்ப சாப்ட் இவ வேற யாரோ போல நடந்துக்குறாளே’ என்று புலம்பிக்கொண்டான். காரில் போகும்போது கூட சிற்பிகா சந்தோஷ் பக்கம் திரும்பவில்லை. அமுதவள்ளியோ இருவரின் ஊடலை பார்த்தபடியே வந்தார்.
வீட்டிற்குச் சென்றதும் அறைக்குள் தடாலென நுழைந்தவள் கதவை சாற்றிக்கொண்டாள். சந்தோஷ் கொஞ்சம் வேகமாக நடந்து வந்திருந்தான் என்றால் கதவில் அவனது மூக்கு மோதி பஞ்சர் ஆகியிருக்கும்.
“ஸ்ஸப்பாடா என் சில்வண்டுக்குள் ஆவி புகுந்துடுச்சோ!” என்று கதவை தட்ட நைட்டிக்கு மாறியவள் கதவை படாரென திறந்து வைத்து சந்தோஷை முறைத்துச் சென்றாள். பூ ஒன்றை புயலாக மாத்திவிட்டார் அமுதவள்ளி.
எத்தனை வார்த்தை பேசினாலும் ஒருவார்த்தையில் பதில் மட்டுமே சிற்பிகா பேசினாள் சந்தோஷிடம்.
அன்றிரவு சந்தோஷ் சாப்பிட வந்தான். அமுதவள்ளி சந்தோஷிற்கு பரிமாற கரண்டியை அமுதவள்ளியிடமிருந்து வாங்கினாள்.
அமுதவள்ளியோ எதுவுமே பேசவில்லை கொடுத்துவிட்டு அமைதியாகச் சென்றுவிட்டார்.
என்ன ஆச்சர்யம் அம்மா எதுவும் பேசலை. அம்மாவை ஏதாவது சொல்லியிருப்பாளோ அதான் நான் பேசினா பேசமாட்டேன்கிறாளோ என்று “ஏய் சிற்பி” என்று சந்தோஷ் குரலை உயர்த்த “மூச் சாப்பிட்டு பேசலாம்” என்று காளி போல கண்ணை உருட்டினாள். சந்தோஷோ என்ன நினைத்தானோ வம்பு எதற்கு அம்மாவே சும்மா போறாங்க நாம சாப்பிட்டு பேசுவோம் என்று சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட்டு முடித்ததும் “இப்ப பேசுங்க” என்று ஹாலுக்குச் சென்றாள்.
ஒரு வாரம் மௌனம் இன்று வெடிகுண்டு போல வெடிக்க காத்திருந்தது.
“அத்தை மாமா ரெண்டு பேரும் வெளியே வாங்க” என்று குரல் கொடுத்தாள் அமுதவள்ளியின் குரலை விட உயர் சத்தத்தில்.
சண்முகம் அமுதவள்ளியை பார்க்க “நான் எதுவும் பண்ணலை” என்றார் தோளைக்குலுக்கி.
“நீ யாருனு எனக்குத்தான் தெரியும் வா மருமக கூப்பிடறா போலாம்” என்று நடக்க ஆரம்பித்தார் சண்முகம்
சண்முகம் வந்தவர் சோபாவில் உட்கார்ந்தார். அமுதவள்ளியும் சண்முகம் பக்கத்தில் உட்கார “நீங்க நில்லுங்க அத்தை” என்றாள் அதிகாரமாக.
“ஏய் சிற்பி யார்கிட்ட பேசுற தெரியுமில்லை அம்மாவுக்கு மரியாதை கொடு” என்று மிரட்டல் விடுத்தான்.
“ம்ம் என்னோட மாமியார் அமுதவள்ளிகிட்டதான் பேசணும்” என்றாள் மிடுக்காக தலையை நிமிர்த்தி.
“அம்மாடியோவ் செம செம சபாஷ் மருமகளே” என் கைத்தட்டினார் சண்முகம்.
“அப்பா அவதான் ஏதோ பேசுறானு நீங்க அவளுக்கு ஒத்து ஊதுறீங்களா” என்று சண்முகத்திடம் குதித்தான் சந்தோஷ்.
“ஒருவாரமா நானும் அவகிட்ட என்னடி ஏன் பேசலைனு கேட்டா ஊமச்சி மாதிரி இருக்கா இன்னிக்கு என்னமோ அம்மாவை அமுதவள்ளினு பேரு சொல்லுறா” என்று சிற்பிகாவை பார்த்து “நீ சரியாய் இல்ல” என்றான் தலையை ஆட்டி.
“அத்தை அமுதவள்ளினுதான் சொன்னேன்” என்றாள் கையை கட்டிக்கொண்டு
“ஏய்” என்று சந்தோஷ் கையை உயர்த்திக்கொண்டு போக
“சந்தோஷ்” என்று அமுதவள்ளி பெரும் குரல் போட கையை அப்படியே நிறுத்திக்கொண்டான் சந்தோஷ்.
“ஏன் நிறுத்தீட்டீங்க சந்தோஷ் அடிங்க உங்களை நம்பி வந்தவதானே! நாங்க உங்களை விட ஏழைங்கதான் ஆனா தன்மானம் உள்ளவங்க. நான் உங்களுக்காக விட்டுக்கொடுத்துப்போனா! அடுத்தவங்ககிட்ட என்னை பத்தி சொல்வீங்க!” என்றவளுக்கு கண்ணீர் வந்தாலும் அடக்கி கொண்டு அவனிடம் பேசிக்கொண்டே அமுதவள்ளியை முறைத்தாள். அவருக்கு புரிந்து விட்டது.
“என்னடி ரொம்ப வாய் பேசுற வாயை உடைச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று மீண்டும் கையை ஓங்கிக்கொண்டு வந்தான்.
“சந்தோஷ் அவ பேசட்டும் விடு” என்ற அமுதவள்ளி தன் மருமகள் முன் எழுந்து நின்றார்.
“இப்போ கூட உங்க பிள்ளை உங்க பேச்சை கேட்குறாரு ம்ம்” என்று நெஞ்சுக்கூடு ஏறி இறங்க சந்தோஷை பார்த்து முறைத்தாள்.
சந்தோஷோ “சிற்பி என்னை என்ன கேள்வி கேட்கணுமோ பர்ஸ்ட் கேளு! அம்மாவை அவமானப்படுத்தாதே!” என்றான்.
“நான் உங்க பொண்டாட்டிதானே எனக்கும் ஆசை எல்லாம் இருக்கும்தானே. கல்யாணம் ஆகி ஒருவருசம் ஆகப்போகுது நமக்கு. ஆனா இன்னவரை உங்கம்மா உங்களுக்கு சாப்பாடு போடுறாங்க. ஏதோ அவங்க நீங்க ஆசைப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணிவச்சேன் அது இது அழுதுனு ட்ராமா போட்டு உங்களுக்கு வேலைகளை என்னை செய்ய விடாம செய்தாங்க. எனக்கு என்னோட புருசனுக்கு சமைச்சுப்போடணும்னு ஆசை இருக்காதா. உங்க ட்ரஸ் நான் வாஷ் பண்ணனும் எனக்கு தோணாதா எதுக்கெடுத்தாலும் என் பையனுக்கு நான் தான் செய்வேன் சும்மா முன்னாடி வந்து ஜிங்கு ஜிங்குனு நிற்குறாங்க இந்த வீட்டு எஜமானி அம்மா” என்று அழுத்தி சொல்ல சந்தோஷ் இவளுக்கு ஏதோ கிறுக்கு பிடிச்சிருச்சு அமைதியா இரு சந்தோஷ் என்று தன்னை அமைதிப்டுத்திக்கொண்டு அவள் சொல்ல வருவதை கேட்டுக்கொண்டிருந்தான்.
அவள் தொடர்ந்து “நீங்களாவது என் பொண்டாட்டி எனக்கு சாப்பாடு பரிமாறட்டும்னு சொல்லலாம்ல ஏன் சொல்லலை நான் சாப்பாடு போடறது பிடிக்கலையோ! சும்மா சில்வண்டுனு கொஞ்சினா போதாது பொண்டாட்டினு அறைக்குள்ள மட்டும் உரிமை கொடுக்கக்கூடாது வீட்டுக்குள்ளயும் எனக்கான அங்கீகாரம் கிடைக்கணும். ஆனா நீங்க எனக்கு கொடுக்கலையே! சரி நான்தான் அத்தையே சாப்பாடு போடட்டும்னு சொன்னேன். எத்தனை நாள் எத்தனை மாசம் ஒரு ஆறுமாசம் கழிச்சு என் பொண்டாட்டி என் வேலைகளை செய்யட்டும்னு நீங்க சொல்லியிருக்கணும்! ஏன் சொல்லலை என்னை பிடிக்காம போச்சா உங்களுக்கு!” என்று சொர்ணாக்கா போல சந்தோஷை கேள்விக்கேட்டுக்கொண்டிருந்தாள் சிற்பிகா.
அமுதவள்ளியோ சிரித்துக்கொண்டுதான் நின்றிருந்தார். “என்ன சிரிக்குறீங்க! ஹான்? நீங்க அன்னிக்கு நம்ம வீட்டுக்கு உங்க சொந்தக்காரங்க வந்தாங்கல்ல அவங்கிட்ட என்ன சொன்னீங்க என் மருமகளுக்குத்தான் ப்ராப்ளம்னு சொன்னீங்க அதோடு விட்டீங்களா! எனக்கு என்ன பிரச்சனைனு படம் போட்டு விளக்குனீங்க. அதிலும் என் பையன் சந்தோஷ் நார்மலா இருக்கானாம் ! ஏன் உங்க பையனுக்கு பிரச்சனை இருந்தா இப்படி அடுத்தவங்க கிட்ட என் பையனுக்குதான் குறைனு சொல்வீங்காளா?” என்றாள் கடலாக பொங்கி எழுந்துவிட்டாள் சிற்பிகா.
“இதுதான் ஒருவாரமா நான் போட்டு அழுத்தி வச்சிருந்தேன் தெரியுமா இப்போ நான் பேசினது என் மனசு நிம்மதியா இருக்கு” என்றவளோ கையில் தாளம்போட்டபடி
“என்னமா நடந்துச்சு” என்று புரியாமல் கேட்டான் சந்தோஷ் . ஆனால் சிற்பிகாவை முறைத்துக் கொண்டே
“என்னை மன்னிச்சிடுமா” என்று சிற்பிகாவிடம் கையெடுத்து கும்பிட்டார் அமுதவள்ளி.
“அ. அத்தை” என்று கூப்பிட்டு அப்படியே மயங்கிச் சரிந்தாள் சிற்பிகா.
24. உறவு
அமுதவள்ளி தன்னிடம் மன்னிப்பு கேட்பார் என்று நினைக்கவில்லை சிற்பிகா. “மன்னிச்சுடுமா” என்று அமுதவள்ளி கையெடுத்து கும்பிட்டதும் அவளுக்கு மயக்கம் வந்துவிட்டது.
சிற்பிகா மேல் கோபம் இருந்தாலும் “சிற்பி என்னடி ஆச்சு?” என்று பதறி தாங்கிக்கொண்டான் சந்தோஷ். அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
“சந்தோஷ் ஹாஸ்பிட்டல் போகலாம் சீக்கிரம் காரை எடு” என்று பறந்தார் அமுதவள்ளி.
சிற்பிகாவை தூக்கிக்கொண்டு காரின் பின்பக்கம் படுக்க வைத்து ட்ரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்தவனுக்கு என்னாச்சுனு தெரியலை என்று பதட்டத்துடன் இருந்தவன் அமுதவள்ளியும் சண்முகமும் காரில் ஏறியதும் காரை எடுத்தான்.
ஹாஸ்பிட்டலுக்கு போனதும் சிறிது நேரத்தில் சிற்பிகா கண் விழித்து விட்டாள். சிற்பிகாவை பரிசோதித்த டாக்டர் பத்மாவோ “கங்கிராட்ஸ் சிற்பிகா நீங்க அம்மாவாக போறீங்க” என்றதும் சிற்பிகா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. சிற்பிகா பக்கம் நின்ற சந்தோஷிற்கு தலைகால் புரியவில்லை. தானும் அப்பாவாக போகிறோமென்று துள்ளிக்குதிக்காத குறையாக நின்றிருந்தான்.
சிற்பிகா சந்தோஷை பார்த்து சிரிக்க அவனோ அதுவரை சந்தோசமாக நின்றிருந்தவன் கொஞ்ச நேரம் முன்னே சிற்பிகா பேசியது கண்முன்னே வர அவளை பார்த்து முறைத்து வெளியே வந்துவிட்டான்.
சந்தோஷ் வெளியேச் சென்றதும் சிற்பிகாவின் முகம் வெளுத்துப்போனது.
‘என்னதான் தான் சண்டை போட்டாலும் மாசமா இருக்கேனு தெரிஞ்சு என்கிட்ட பேசாம முறைச்சிக்கிட்டு போறாரு’ என்று இதழ் பிதுக்கினாள்.
சந்தோஷோ ‘என்னவாயிருந்தாலும் என்கிட்ட அவ மனசுல என்ன இருக்குனு சொல்லியிருக்கணும்ல. மனசுக்குள்ளயே போட்டு பொசுக்கிகிட்டு இருந்தா எனக்கு எப்படி தெரியும்?’ என்று கோபப்பட்டவன் வெளியேச் சென்றுவிட்டான்.
சிற்பிகாவோ தான் அதிகம் பேசிவிட்டேமோ? என்று மருகிக்கொண்டவள் “அத்தை” என்று பேச ஆரம்பிக்க
அமுதவள்ளியோ “சிற்பிகா வீட்டுக்கு போய் அவனை சமாதானம் செய்துக்கலாம் வா” என்று கூப்பிடவும் அவளுக்கோ ‘நம்ம அத்தையா இது சண்டை போட்டதுக்கு எதுவும் தன்னிடம் வாதம் செய்யவில்லையே நான் கனவு காணுறேனா?’ என்று விழிவிரித்து சற்று பதட்டமாக பார்த்தாள். அமுதவள்ளியோ தனக்கு பேரன் வரப்போகிறான் என்று ஆகாயத்தில் ரெக்கை கட்டி பறந்தார். மகன் மருமகள் சண்டையெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லாமல் போனது.
முகம் முழுக்க புன்னகையுடன் நின்றிருந்த அமுதவள்ளியோ “சிற்பிகா வீட்டுக்கு போய் பேசிக்கொள்ளலாம் வா” என்று அவள் கையை பிடிக்க.
“அத்தை சாரி மனசுக்குள்ள வச்சுக்காம பேசிட்டேன். நீங்க பெரியவங்க கையெடுத்து கும்பிடாதீங்க அது எனக்கு பாவம்” என்று அழுதபடியே கண்ணீர் விட்டாள்.
“நானும்தான் தப்பு பண்ணியிருக்கேன்டா வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என் மகன் கோபம் கொஞ்ச நேரம்தான் இருக்கும் நான் எதுக்கு இருக்கேன் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பேன் வா போகலாம்” என்று சிற்பிகாவை கூட்டிக்கொண்டு வந்தார். சண்முகமோ டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு வெளியே வந்தார். மகன் கோபமாக இருக்கிறான் காரை எடுத்திட்டு போயிருப்பான்னு பார்த்தா அவனோ காரில் சாய்ந்துக் கொண்டு முகத்தை உர்ரென்று வைத்திருந்தான். சிற்பிகா மேல் அளவு கடந்த கோபம் இருந்தாலும் தன் குழந்தையை சுமக்கிறாள் அவளை இந்நேரத்தில் விட்டுச் செல்ல அவனுக்கு எப்படி மனம் வரும்.
சிற்பிகாவோ காரில் சாய்ந்து நின்றிருந்த சந்தோஷை கண்டதும் தான் நிம்மதியானாள் “பார்த்தியா என் மகன் உன்னை அப்படியே விட்டு போயிருவானா என்ன? என் மீது எவ்ளோ பாசம் வைத்திருக்கானோ அதைவிட உன் மேல் ஒருபங்கு பாசம் அதிகமா வச்சிருக்கான் அதை நான் கண்கூடா பார்த்திருக்கேன் தெரியுமா?” என்றவரை அப்படியா நான் அவசரப்பட்டு வார்த்தையை சிதற விட்டேனா? என்றவளுக்கு மனதில் பாரம் ஏறியது. குழந்தை வயிற்றில் இருக்கிறதென மனதை அமைதிப்படுத்திக்கொண்டாள் சிற்பிகா.
சண்முகமும் காரின் அருகே வந்து விட்டார்.
அமுதவள்ளியும் சிற்பிகாவும் சேர்ந்து வருவதை கண்டவனோ ‘கொஞ்ச நேரம் முன்ன என் பொண்டாட்டி அம்மாகிட்ட வரிஞ்சு கட்டி சண்டைக்கு போனா இப்ப பாரு மாமியாரும் மருமகளும் ஒன்றா சேர்ந்து வராங்க. இதுக்குத்தான் பல வீட்டு பொம்பளைங்க சண்டைக்கு நடுவுல நாம போகக்கூடாதுனு சொல்றாங்க போல நான் தெரியாம போய் மாட்டிக்கிட்டேன்.’ என்று புலம்பிக்கொண்டு நின்றிருந்தான். ஆனால் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டான்.
அமுதவள்ளியோ கார் கதவை திறந்து விட்டு “ஏறு சிற்பி” என்றார் பாசம் ஓடிய குரலில்.
சிற்பிகாவோ சந்தோஷை அப்பாவி போல பார்த்துக்கொண்டு ஏறப்போனாள்.
சந்தோஷோ “நான் உங்கமேல கோபமா இருக்கேன் ரெண்டு பேரும் கேப் புக் பண்ணி வாங்க” என்று காரில் ஏறினான்.
“டேய் சண்டை போட்ட நாங்களே சேர்ந்துட்டோம் நீ என்னடா மறுபடியும் சண்டையை போடப்பார்க்குறே பேத்தி வர நேரம் எல்லாப்பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்போறேன். வீட்டுக்கு போனதும் உனக்கு தெரியும் ஒரு சர்பிரைஸ் இருக்கு” என்றதும் புருவம் நெறித்து “அப்படி என்ன சர்பிரைஸ்னு பார்க்குறேன்!” என்றவன் “அப்பா நீங்க ஏறுங்க” என்றான் சந்தோஷ்.
சண்முகம் முன்னால் ஏறிக்கொள்ள சிற்பிகாவும் அமுதவள்ளியும் பின்னால் ஏறியதும் காரை எடுத்தான். ஆனால் தன்னை மறந்து “அப்பா டாக்டர் எழுதிக்கொடுத்த மாத்திரை வாங்கிட்டீங்களா?” என்று கேட்டு நாக்கை கடித்துக்கொண்டான்.
சிற்பிகாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. (கதை முடியும் போது ரொம்ப சண்டையெல்லாம் போட வைக்க முடியாதுங்க) “என்ன இப்ப சிரிக்கிற என் குழந்தை நல்லாயிருக்கணும் அதான் மாத்திரை வாங்கியாச்சானு கேட்டேன் அப்பாகிட்ட ரொம்ப சந்தோசப்படாத நான் இன்னும் உன்மேல கோபமாத்தான் இருக்கேன்” என்றான் சிற்பிகாவிடம் சந்தோச கரகர குரலில்.
சந்தோஷ் காரைவிட்டு இறங்கியதும் வீட்டுக்குள் வேகமாய் சென்றான். அங்கே சோபாவில் தன் தாத்தா ரங்கதுரையும் பாட்டி புஷ்பாவும் உட்கார்ந்திருந்தனர்.
“பாட்டி தாத்தா எப்ப வந்தீங்க” என்று அவர்கள் அருகே போய் உட்கார்ந்தான். சிற்பிகாவும் வீட்டுக்குள் வேகமாக போக “மாசமா இருக்க பொண்ணு எதுக்கு வேகமா வரவ?” என்று புஷ்பா சிற்பிகாவின் கைபிடித்து தன் பக்கம் உட்கார வைத்துக்கொண்டார்.
“உன்னை எனக்கு எப்படி தெரியும்னு பார்க்கிறியா எல்லாம் உன் அத்தை கிராமத்துக்கு வந்தப்ப போன்ல போட்டா காட்டுனா எங்கனாலதான் கல்யாணத்துக்கு வர முடியலை தாத்தாவுக்கு கண் ஆப்ரேசன் செய்ததால வர முடியலை” என்று வருத்தப்பட்டார்.
ரங்கதுரையை உரித்து வைத்திருந்தான் சந்தோஷ். அமுதவள்ளி சந்தோஷை கிராமத்திற்கே அனுப்ப மாட்டார். ஆனால் சண்முகம் பள்ளி விடுமுறை விட்டால் கூட்டிச்செல்வார். அங்கே கிணற்றில் நீச்சல் அடித்து பழகவும், வெயில் காலத்தில் நொங்கு சாப்பிடவும் ஊருக்கு போய்விடுவான் சந்தோஷ்! பெரியவனாக ஆரம்பிக்க ஒரு முறை பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போயிருக்க திருவிழாவில் பெரியவர் ஒருவர் ரங்கதுரை உன் பேரன் உன்னை உரிச்சு வச்சிருக்கான் என்று சொல்லிவிட்டார்.
அமுதவள்ளியோ தன் மகனை அடுத்த பண்டிகைக்கு அனுப்ப மறுத்துவிட்டார். போனில் பேசிக்கொள்வான். கல்யாணம் முடிந்து கூட அமுதவள்ளி சந்தோஷையும் சிற்பிகாவையும் அனுப்பவில்லை. பொங்கல் பண்டிகை வருதுல்ல அப்ப எல்லாரும் சேர்ந்து போய் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். சண்முகமோ காதல் மனைவியின் விருப்பம் என்று இருந்துவிட்டார். வாரம் ஒருமுறையாவது தாய் தந்தையரை பார்த்துவிட்டு வருவார் சண்முகம்.
மூணுமாசம் முன்னே சண்முகமோ நான் கிராமத்துக்கு போய்ட்டு வரேன் என்றதும் நானும் வரேன் இருங்க போலாம் என்றவர் புறப்பட்டு வர சண்முகம் எதுவும் சொல்லவில்லை. ரங்கதுரையும் புஷ்பாவும் தோட்டத்தில் தென்னை மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தனர். தூரத்தில் மகன் வருவதை கண்ணாடி வைத்து பார்த்தார் புஷ்பா.
“என்னங்க நம்ம மகன் வாரானுங்க” என்று சந்தோஷமாய் புஷ்பா சொல்ல “இந்த நாள் எப்பவும் மகன் வரதுதானே அவனுக்கு பிடிச்ச கேப்பை களி செய்து எடுத்து வந்திட்டியா” என்றார் தென்னை மரத்துக்கடியில் இருந்த கீரையை பறித்துக்கொண்டு.
“ம்ம் கேப்பை நேத்து நைட்டே செய்து தண்ணிக்குள்ள போட்டு மோர் ஊத்தி வச்சிட்டேன்” என்றவவேரா “என்னங்க நம்ம மருமகளும் வரா என்றதும் “என்னடி சொல்றவ கண்ணாடியை போட்டு பாரு வேற யாராவது இருக்கப்போறாங்க” என்றார் ரங்கதுரை.
“அட மனுசா என் கண்ணு நல்லாத்தான் இருக்கு. மருமக பட்டுச் சேலையில பகுமானமா வரது என ரெண்டு கண்ணுக்கும் தெரியுது” என்று கிண்டலாக ரங்கதுரையிடம் பேசினார்.
ரங்கதுரையும் எழுந்தவர் தென்னைமரத்தடியில் போட்டிருந்த கயித்துகட்டிலில் உட்கார்ந்தார். சண்முகம் வரப்பில் இயல்பாக நடந்துச் சென்றார்.
அமுதவள்ளியோ தடுமாறி நடந்து போக “அம்மா வரப்புல பார்த்து காலை வச்சு வா” என்று புஷ்பா உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்தே சத்தம் கொடுத்தார்.
“பாருடி எங்கம்மாவ உன்மேல எவ்ளோ பாசமா இருக்காங்க. நீதான் என்னை அவங்க கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிட்ட” என அமுதவள்ளியை வெறுப்பேத்தினார்.
அமுதவள்ளி சண்முகத்திடம் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்துச் சென்றவரோ புஷ்பாவின் அருகே சென்றதும் “என்ன அத்தை நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்டவர் ரங்கதுரையிடமும் “மாமா இப்போ கண்ணுல எந்த பிரச்சனையும் இல்லையே” என்று பாசமாய் கேட்டார். ரங்கதுரையிடம் அமுதவள்ளி அதிகம் பேசியது இல்லை. ஏன் புஷ்பாவிடமே ஊருக்கு வந்தால் வார்த்தையை அளந்து பேசுவார் அமுதவள்ளி.
“இப்போ என்ன விசயமா வந்திருக்கீங்க?” என்று மெதுவாய் பேச்சை ஆரம்பித்தார் ரங்கதுரை.
அமுதவள்ளியோ “நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை மாமா நீங்க ரெண்டு பேரும் எங்ககூட வந்து இருக்கணும் என்னோட ஆசை” என்றார் அமுதவள்ளி.
“நாங்க இதோ சுகமா அடிக்கிற காத்தை சுதந்திரமா சுவாசிச்சுக்கிட்டு இருக்கோம் தாயி. எங்கனால அந்த பட்டணத்துல வந்து இருக்க முடியாது. உன் மனசு இப்போ படும் பாடு எனக்கு புரியுது. என் மகன் சந்தோசமா இருக்கட்டும்னுதான் நாங்க இந்த கிராமத்துல தனியா இருக்கோம்! அவனை விட்டு பிரிஞ்சு இருக்க எங்களுக்கும் சிரமம்தான்!” என்ற புஷ்பாவோ “என் பையனை நீ காதல் செய்து கல்யாணம் செய்துக்கிட்ட எனக்கு சொந்தமான பொருள் இன்னொரு இடத்துல பத்திரமா இருக்கும்போது நாங்க நிம்மதியாக இருக்கோம் தாயி! வேணும்னா நாங்க ஒரு ரெண்டு நாள் உங்ககூட வந்து இருக்கோம்” என்றதும்தான் அமுதவள்ளிக்கு முகத்தில் சிரிப்பே வந்தது.
அமுதவள்ளி தன் பையன் சந்தோஷை விட்டுக்கொடுக்க முடியாமல் தடுமாறுவது போல அந்த காலத்தில் தன் மாமியாரும் கஷ்டப்பட்டிருப்பாரு தானே என்று காலம் கழித்து யோசனை வந்தது அமுதவள்ளிக்கு! உடனே மாமியாரிடம் மன்னிப்பு கேட்டு அவர்களை தன்னுடன் தங்க வைத்துக்கொள்ளலாம் என்று கிராமத்துக்கு புறப்பட்டு வந்தார் . ஆனால் புஷ்பா பேசியதை கேட்டு அசந்து விட்டார். தான் சந்தோஷிற்கு கல்யாணம் செய்து வைத்து இன்னும் தன் மகனின் வேலைகளை தானே செய்வது தவறு என்று இப்போது தான் புத்தி வந்தது அமுதவள்ளிக்கு. மருமகளிடம் இந்த தள்ளாத வயதிலும் பணிவாய் பேசும் புஷ்பாவை பார்த்து வானளவு மரியாதை வந்தது அமுதவள்ளிக்கு. இனிமேல் தன் மகனை சிற்பிகாவே கவனித்துக்கொள்ளட்டும் என்று அப்போதே முடிவெடுத்துவிட்டார்.
“சரி நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வாங்க” என்று புஷ்பா கரைத்து கொடுத்த கேப்பை களி கஞ்சியை குடித்தார் முதன் முறையாக அமுதவள்ளி அமிர்தமாக இருந்தது.
“ஊருக்கு வந்ததும் எனக்கு இந்த கேப்பை களி எப்படி செய்யறதுனு சொல்லிக்கொடுங்க அத்தை” என்றார் பணிவாக அமுதவள்ளி.
தன் மனைவியின் பணிவு கண்டு ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தார் சண்முகம்.
“கண்டிப்பா ஊருக்கு வரணும் அத்தை” என்று கட்டளை போட்டு வந்தார் அமுதவள்ளி.
ஆனந்தனும் உமாவும் சிற்பிகா மயக்கம் போட்டு விட்டாள் என்ற செய்தி தெரிந்ததும் பதறி அடித்து சந்தோஷ் வீட்டுக்கு ஓடி வந்தனர்.
ஹாலில் ரங்கதுரையும் புஷ்பாவையும் பார்த்ததும் சந்தோஷ் மாப்பிள்ளையோட தாத்தா பாட்டியாக இருக்கணும் என தெரிந்துக் கொண்டார் ஆனந்தன்.
“வாங்க” என்று பெரியவர்கள் ஆனந்தனையும் உமாவையும் சிரிப்புடன் வரவேற்றனர்.
“சிற்பிகா மயக்கம் போட்டானு அமுதவள்ளி அக்கா போன் பண்ணினாங்க அதான் ஓடி வந்தோம்” என்றார் ஆனந்தன் சிறு பதட்டத்துடன்.
அனைவருக்கும் காபி போட்டு வந்த அமுதவள்ளியோ “என் மருமகள் மாசமா இருக்கா அதான் மயக்கம் போட்டு விழுந்துட்டா தம்பி” என்று வாய் நிறைய புன்னகையுடன் காபியை நீட்டினார் ஆனந்தனிடம்.
உமாவோ சிற்பிகாவை பார்த்து “அப்படியா!” என்று கேட்க
“ஆமாம்” என்று தலையை ஆட்டினாள் சிற்பிகா வெட்கத்துடன்.
சிற்பிகாவுக்கு சத்து மாவு கஞ்சியை கொடுத்து “ரொம்ப நேரம் நீ சாப்பிடாம இருக்க கஞ்சியை குடி” என்றதும் அவளுக்கும் பசியாக இருக்க கஞ்சியை குடித்து முடித்தவள்,
“சந்தோஷ், சிற்பிகா ரெண்டு பேரும் தாத்தா,பாட்டி காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்குங்க” என்றதும் சந்தோஷ் அந்த இடத்தில் தன் கோபத்தை இழுத்து வைத்துக்கொள்ளவில்லை சிற்பிகாவுடன் சேர்ந்து காலில் விழுந்தான்.
“ரெண்டு பேரும் பதினாறு செல்வமும் பெற்று சந்தோஷமா வாழணும்” என்று ஆசிர்வாதம் செய்து தான் சேர்த்து வைத்திருந்த காசில் பேரன் பேத்திக்கு மூணு பவுனில் செயின் செய்து வந்திருந்தனர்.
“இந்த தாத்தா பாட்டியோட கல்யாண பரிசு” என்று இருவருக்கும் போட்டு விட்டனர்.
சந்தோஷ் சிற்பிகாவை பார்க்காமல் உட்கார்ந்திருந்தான்.
புஷ்பாவோ இருவரையும் பார்த்து “என்னடா பேராண்டி என் பேத்திகிட்ட சண்டையா மாசமா இருக்க நேரத்தில புள்ளைகிட்ட சந்தோசமா பேசி சிரிச்சுக்கிட்டே இருக்காம முகத்தை தூக்கி வச்சிருக்க” என்றார் சந்தோஷ் கன்னத்தில் மெதுவாய் இடித்து.
“பாட்டி உன் பேத்தி என்கிட்ட அவ மனசுல உள்ளதை சொல்லாம வச்சிருக்கா! அப்போ எனக்கு கோபம் வரும்தானே!“ என்றான் சிற்பிகாவை முறைத்துப்பார்த்து.
அமுதவள்ளியும் இப்போதே எல்லாம் பேசிவிடணும் என்று வந்தவர் “நான் சொல்றேன் சிற்பிகா என்கிட்ட ஏன் சண்டை போட்டானு” என்றார் சத்தமாக பேசி மாமனார் மாமியார் இருக்கிறார்களென தரையில் உட்கார்ந்தார்.
ஆனந்தனும் உமாவும் இது என்ன புதுப்பிரச்சனை என்று புரியாமல் விழித்தனர்.
அமுதவள்ளியோ “சிற்பிகா நீ என்ன என்கிட்ட கேட்ட அன்னிக்கு வீட்டுக்கு வந்த பார்வதிகிட்ட நான் சொன்னது தப்புதான்மா. ஆனா அவங்க என் நம்பிக்கைகுரியவர்தான். என் குடும்ப இரகசியங்கள் அனைத்தும் அவருக்கு தெரியும். ஏதோ என் மனசு ஆறுதல்க்காக சொல்லிட்டேன் அதுவுமில்லாம உனக்கு கோபம் வரட்டும்னுதான் சொன்னேன். நீ மட்டும் உன்கிட்ட நான் சரியா பேசலைனு சொன்னில்ல என்கிட்ட வந்து அத்தைனு கொஞ்ச நேரம் பேசியிருக்கியா? உங்க அம்மா வந்ததும் எப்படி அவங்ககிட்ட சிரிச்சு பேசுற. என்கிட்ட ஏன் சிரிச்சு பேசாம இருந்தா? நான் கோபக்காரிதான் இல்லைனு சொல்லலை. என் பையன் மேல நான் மட்டும்தான் பாசம் வைக்கணும்னு நினைத்தது தப்புதான்டியம்மா இப்போதான் எனக்கு எல்லாம் புரியுது. நான் உன்கிட்ட என் பையனுக்கு நான் எல்லா வேலையும் செய்வேனு சொன்னா. நீயும் நான் என் புருசனுக்கு வேலை செய்வேனு என்கிட்ட சண்டை போட்டிருக்கணும்! நீ போடலையே! அதான் உன்னை பேச வைக்க நிறைய பார்வதிக்கிட்ட உனக்கு குறை இருக்குனு அழுத்தி சொன்னேன்” என்றார் தன் மனதில் உள்ளதை.
“ஊருக்குள்ள எல்லாரும் உன் மருமகள் வாயில்லா பூச்சி உன்னை போல போல்டா இல்லைனு சொன்னதும் என் மருமக என்னை விட பேசுவானு சொன்னேன். நீயும் என்கிட்ட சண்டைக்கட்டின எனக்கு சிரிப்புத்தான் வந்துச்சு. என் மருமக என்னையே எதிர்த்து நின்னு பேசிட்டானு சந்தோசம்தான் பட்டேன் சிற்பிகா. இப்படித்தான் யாரா இருந்தாலும் தப்பு பண்ணினா இறங்கி நின்னு பேசணும்” என்றார் மருமகளிடம்
“அப்புறம் என்ன மாமியார் மருமகள் சேர்ந்தாச்சு! சந்தோஷ் உன் பொண்டாட்டி கிட்ட பேசுப்பா!” என்றதும் சந்தோஷோ எழுந்து அறைக்குள் சென்றான்.
சிற்பிகாவோ தப்பு பண்ணிட்டோம் என்று சந்தோஷ் பின்னால் சென்றாள் மெதுவாக.
உள்ளேச் சென்றதும் கதவை அடைத்தான்.
“என்னங்க சாரி” என்றாள் கண்ணைச்சிமிட்டிக்கொண்டு.
சந்தோஷோ “என்னடி சாரி சொன்னா நான் உன்னை சும்மா விடுவேனா?” அவளை இறுக்கிக்கட்டிக்கொண்டு “ஏன் டி சில்வண்டு எப்படி ரவுண்டு கட்டி சண்டை போடுற நீ எங்கம்மா கிட்ட ஆம்பளைங்களே நின்னு பேச பயப்படுவாங்க ஆனா நீ அசால்ட்டா சண்டை போட்டிருக்க” என்றவனோ “நீ உண்மையில் என்னை லவ் பண்ணியிருந்தீனா எப்படி அம்மா உன்னை பத்தி பார்வதி பெரியம்மாகிட்ட பேசினதை நீ சொல்லாம இருக்கலாம். அடுத்து நான் உனக்கு சாப்பாடு பரிமாறுவேன் சந்தோஷ் எனக்கும் ஆசையா இருக்கு உனக்கு எல்லாம் செய்யணும்னு என்கிட்ட வாய் திறந்து சொல்லாம இருந்திருக்க உன் மனசை கஷ்டப்படுத்திக்கிட்டு. ஏன் என்கிட்ட சொல்லாம விட்ட?” என்று அவள் முகத்தை கையில் ஏந்திக்கேட்டான்.
“இல்ல சந்தோஷ் என்னால அம்மா மகன்குள்ள சண்டை வரக்கூடாதுனு தான். ஆனா அத்தை பார்வதி அம்மாகிட்ட என்னை குறை பேசினதும் கோபம் வந்துடுச்சு. உன் மேல கோபப்பட்டதும் தப்புதான் என்னை மன்னிச்சிடு நீ என்னை தலையில வைச்சு தாங்கின சந்தோஷ் நீ எனக்கு கிடைச்சது நான் செய்த தவம்” என்று சந்தோஷைக் கட்டிக்கொண்டவள் “இனிமே உன்கிட்ட எதுவும் சொல்லாம மறைக்கமாட்டேன்டா” என்று அவனது கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் பெண்ணவள். இந்த “முத்தம் பத்தாதுடி சில்வண்டு” என்று அவளது இதழில் புதைந்தான் சந்தோஷ். அவர்கள் வாழ்க்கையில் இனி சந்தோசம் நிலைக்கட்டும்
அனைவருக்கும் தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
நன்றி வாழ்க வளமுடன்
விரைவில் அடுத்த கதையுடன் சந்திக்கிறேன்

да это будет полная:ass:.Ну я надеюсь все будет хорошо.тогда так вышло иза того что это остатки товара из серии мн – 001.Уверен такой жопы больше не будет https://kadastr-navigator.ru 2-й раз все было быстро но собирал весь дживик по конспирации , на пакетиках видать экономили)))chemical-mix.com держи в репу, заработал.. пазитивно всё.. тут всё хорошо.. обращайтесь помогут быстро..
Я тебе не хамил. Да 10г, смешно не смешно, а на дороге не валяются. И очень обидно когда от вашего ПМа получаешь подтвердение, веришь! и остаешься с разочарованием и обидой, бессилием что либо доказать. А тебе еще сверху льют хамство, упивайтесь на здоровье. Я утерся и теперь знаю на что способны даже нормальные, доверенные магазины. А это тоже опыт, за который я заплатил, и ничуть не жалею. Просто пусть народ знает и будет готов при работе без гаранта ТУТ ожидайте что такое может быть. кокс, меф, шиш, гаш екб есть в представителях, смотрите в представительствахМагазин очень хороший всё чётко и быстро и селер грамотный вы правы
Да все так и есть! Присоединюсь к словам написанным выше! Очень ждём хороший и мощный продукт! https://quickdealht.top Если в разработке, то да.А так лишний раз лучше предостречься)))(выглядит как реклама, но эт просто хорошие впечатления от сотрудничества)
Pin Up Casino is one of the most popular online top https://global-smm.ru/
неужели ркс такая шляпа? https://urbanflelik.shop Ровный магаз , фарта и одекватных клиентовсердцебеение крч все как обфчно , в
dude check out [url=https://baji999-onlinecasino.com/]baji999 in[/url] its actually pretty sick, like way better interface than teh other sites ive used n stuff, u gotta see it fr
Где продавец то? Мысли самые печальные…тт https://varta-spa.ru чем ровный!!!как всегда не подвёл:good:уважуха броА будет какая нибудь подробная инфа или трип репорты? А лучше пробники платные или бесплатные?
Такое бывает у СПСР, у меня то же он не бился, а потом все нормально было, хотя мне ей вчера должны были привезти но не привезли кокс, меф, шиш, гаш ты давай вася тут провокации не сей)))Уже заказывал и получил chm-100 и chm-400 всё ровно)
Ребята решили вопрос.. Вместо 307 выслали компинсацию в виде 1220. Давно не курил такие миксы, живы отдыхают, концентрацию 1к20 делал. кокс, меф, шиш, гаш Если растворяется без подогрева – то не нужно. В ацетоне как правило (если продукт чистый) так и растворяется, и в осадок не выпадает, на спирту придется немного подогретьТоже хочу сделать заказ.Жду ответа
Не могу, не в личку написать, и аска не указанна кокс, меф, шиш, гаш с этим магазином сотрудничаю уже 3ий год,проблема была всего один раз,и то по вине курьеркиСегодня съездил в офис, к счастью там знакомая работает, пробили они по своим базам накладную, связывались с мск, сказали такая накладная не поступала, объяснили как все работает, то что можно взять бумаги заполнить их, в этих бумагах указывается номер накладной, но когда делаешь отправку, в компе по любому будет отображаться, т.е. отправки не было, с мск им каждый день приходят посылки, идет она реальных 2 дня!
pg slot
PG Slot แพลตฟอร์มเกมสล็อตยอดนิยม เข้าเล่นไว ฝากถอนออโต้
คำค้นหา PG Slot ถูกค้นหามากขึ้นเรื่อยๆ ในกลุ่มผู้เล่นเกมสล็อตออนไลน์ เพราะเป็น ผู้ให้บริการเกมสล็อตที่มาแรง ด้าน ภาพและเอฟเฟกต์ ความ นิ่งไม่สะดุด และ โอกาสรับกำไรที่ดี เกมของ PG พัฒนาโดยผู้ให้บริการชั้นนำ ที่รองรับการเล่นทั้งบน มือถือ และ เดสก์ท็อป
จุดเด่น ของ PG Slot
สล็อต PG เป็นเกมสล็อตออนไลน์ที่ออกแบบมาให้ เข้าเกมไว เล่นผ่าน ระบบอัตโนมัติ และรองรับ ทั้ง iOS และ Android ไม่ต้องติดตั้งเพิ่มเติม ผู้เล่นสามารถเข้าเล่นผ่าน Browser ได้ทันที ภาพและเสียงถูกพัฒนาในรูปแบบ 3D ให้ความคมชัด พร้อมเอฟเฟกต์ จัดเต็ม
คุณสมบัติหลักของเกม สล็อต PG ได้แก่
มีรอบโบนัสให้ลุ้นบ่อย
ฟีเจอร์ตัวคูณรางวัล
โหมดทดลองเล่นฟรี
ใช้งานภาษาไทยง่าย
ระบบการเงินรวดเร็ว ทันใจ
แพลตฟอร์ม PG Slot โดยทั่วไปให้บริการ การฝาก-ถอน ฝากถอนตลอดเวลา ขั้นต่ำเริ่มต้นเพียง หลักหน่วย ขึ้นอยู่กับ เงื่อนไขของเว็บไซต์ การทำรายการใช้เวลา ไม่กี่วินาที ผ่าน QR Code หรือระบบ แอปธนาคาร ทำให้ธุรกรรมเป็นไปอย่าง ต่อเนื่อง
แนวเกมที่คนเล่นเยอะ ใน PG Slot
เกม PG Slot มีธีมหลากหลาย เช่น
ธีม เทพเจ้า
ธีม ลุยด่าน
ธีม เอเชียและโชคลาภ
ธีม ธรรมชาติ
เกมยอดนิยมมักเป็นเกมที่แตกง่าย พร้อมระบบ โบนัสรอบพิเศษ และ อัตราการจ่ายที่สูง เหมาะกับทั้ง คนเพิ่งเล่น และ สายสล็อตจริงจัง
มาตรฐานระบบ
PG Slot ใช้ระบบที่ได้มาตรฐาน มีการ ปกป้องข้อมูลผู้เล่น และใช้ระบบสุ่มผล RNG เพื่อให้ผลลัพธ์ ตรวจสอบได้ แพลตฟอร์มที่ให้บริการ pg slot ควรมี ระบบดูแลข้อมูล
โดยภาพรวม
สล็อต PG เป็นตัวเลือกยอดนิยมสำหรับผู้ที่ต้องการเล่นสล็อตออนไลน์ ด้วยจุดเด่นด้าน กราฟิกคุณภาพ และการทำธุรกรรมที่ รวดเร็ว ผู้เล่นสามารถเริ่มต้นได้ ง่าย ฝากถอนสะดวก และเลือกเกมได้ ครบทุกหมวด เหมาะสำหรับ ผู้เล่นทุกสไตล์ ในโลกของเกมสล็อตออนไลน์
хороший магазин !отменное качество и сервис ! хорошей работы вашему магазину и процветания! кокс, меф, шиш, гаш А ВОТ Я ТОЖЕ КИПИШЕВАЛ ПО СЧЕТУ ТРЕКА НЕ БИЛСЯ ТОЖЕ ПОЗВОНИЛ В КУРЬЕРКУ СКАЗАЛИ ОТПРАВЛЕННО И СЕГОДНЯ К ВЕЧЕРУ ВСЕ ОТБИЛОСЬ ЖДУ ПРИХОДА ПОСЫЛКИ. ПОТОМ НАПИШУ КАК ЕСТЬ. ПРОШУ ПРОЩЕНИЯ У ЧЕМИКАЛА ЗА ПЛОХИЕ ПОСТЫ, ДУМАЮ ПОЙМЕТ))) УЖЕ ДАВНО ТУТ БЕРУ НЕ РАЗУ НЕ КИНУЛ НИ ОДНОЙ ЗАДЕРЖКИ ВСЕ ПРОСТО НА 100%.Заказываю в этом Магазине уже 3 раз и всегда все было ровно.Лучшего магазина вы нигде не найдете!
всех с новым годом и удачных покупок кокс, меф, шиш, гаш к скольки микс делать,чтоб прикуренных перло?грозный луи оставил отзыв о магазине
ну как-то так https://hi-techhome.ru ВСЕМ САЛЮТ!!! :hello:все хорошие отзывы все пишут нам лично в асю или скайп, как что то не так к нам особо не ломятся, все бегут на форум…. если есть какая то проблема вы нам сразу пишите и будем разбираться, мы всегда идем на встречу клиентам…
нервные клетки кокс, меф, шиш, гаш Кстати, как и обещали, менеджер на праздниках выходил на работу каждый день на пару часов и всем отвечал, иногда даже целый день проводил общаясь с клиентами, уж не знаю, кому он там не ответил.нужны мощные аналоги рцсу типа ам серии итд
Selling a home for money works best when you keep it clear. First, figure out market value using online tools. Step two, decide your timeline: least hassle. If you want speed, cash buyers may make an offer quickly. Keep it moving by cleaning the main areas and gathering paperwork like repairs. Staying transparent about issues can avoid surprises. With the right expectations, you can move forward confidently.
https://stephburtcashoffers.blogspot.com/2025/12/httpsstephburtcashoffersblogspotcom2025.html
[url=https://exo.kamrbb.ru/?x=read&tema=1&razdel=0&start=0#reply_7]Why Local Investors Are the Best Option for a Fast Sale[/url] d404db1
Без паники, есть 2 причины почему может не бится трэк 1. тупит курьерка и не внесла в базу накладную такое бывало уже не раз люди получали посылки с нерабочей накладной такое бывает часво это кривая работа службы доставки. 2. вы не правильно вводите на сайте отслеживания с дефисом, пробелом, не по формату номеру накладной службы или вообще на другом сайте)) такое тоже бывает часто. Клиенты у нас получают все вовремя если вас оповестили что посылка отправлена значит она отправлена, ожидайте согласно установленому времени доставки. https://gashishbery.life привет я сам тут не так давно ) я тебя понимаю я вот уже вторую посылку получил всё чётко и ровно тоже пережевал , часто на швыров попадал а тут ребята грамотную тему замутили и магазу респект и админам) не волнуйся всё будет чётко:good:В-общем, я ещё два часа пил вискарик со льдом,да лопал пиццу 😉
Таможенный представитель москва — надёжный и честный
https://homeablazebyhispresence.dennmachinery.com/@nereidatreat1?page=about
Это мы и так все знаем https://dreamcratir.shop ТС подтвердив оплату, сказал ожидать. В оговоренные сроки адрес был получен в ЛС.За основу брали ромашку (как она задрала), я кстати предлагаю магазину, продавать основу, или в качестве бонуса предлагать (так на сколько я знаю никто не делает).
1к10 и до здравствуют полноценные 50 мин. шикарного позитивного эффекта https://1sostav.ru С возвращением друг!!!!адекватных клиентов,спокойных и прибыльных деньков)))один грамотей натупил тут , а про стафа правда
สล็อตเว็บตรง
แพลตฟอร์ม TKB NEKO ให้บริการ เว็บไซต์เกมออนไลน์ที่ล้ำสมัย ซึ่ง ผู้ที่สนใจ สามารถ เข้าร่วม โลกแห่งเกมและความบันเทิง รวมถึง ระบบเดิมพันที่ให้ผลตอบแทนไว เว็บไซต์นี้ วางตำแหน่งตัวเองว่าเปิดโอกาสให้ทุกคนสร้างรายได้ เนื่องจาก รองรับการใช้งานง่ายและรวดเร็ว
หนึ่งใน ฟีเจอร์หลัก ของแพลตฟอร์มนี้คือ กลไกธุรกรรมทางการเงิน ซึ่งมีขั้นต่ำในการเติมเงินเพียง 1 บาท และขั้นต่ำในการถอนเงินก็เช่นเดียวกันที่ เท่ากับ 1 บาท เท่านั้น กระบวนการเติมเงินใช้เวลาเพียง 3 วินาที ทำให้แพลตฟอร์มนี้ รองรับธุรกรรมฉับไว นอกจากนี้ยัง เปิดให้ถอนได้ไม่จำกัดจำนวน ซึ่งเป็น ข้อได้เปรียบเมื่อเทียบกับแพลตฟอร์มอื่น
สำหรับการเติมเงิน รองรับการฝากเงินผ่าน QR Code ซึ่งเป็นระบบที่ เพิ่มความรวดเร็วในการทำธุรกรรม
แพลตฟอร์มนี้มีเกมให้เลือก หลากหลายประเภท เช่น เกมสล็อต, เกมสด, กีฬา และ Fishing Game ผู้เล่นสามารถดูรายชื่อเกมทั้งหมดได้ผ่านตัวกรอง “ทั้งหมด” ซึ่งช่วยให้ เข้าถึงเกมโปรดได้สะดวก
TKBNEKO มุ่งมั่นนำเสนอเกมที่ผ่านการรับรอง โดยร่วมมือกับ ผู้ให้บริการเกมที่ได้รับการรับรองจากสถาบันที่เชื่อถือได้ ซึ่งช่วยให้มั่นใจได้ว่า ทุกเกมเป็นไปตามมาตรฐานความปลอดภัย
TKBNEKO ได้ผสานระบบการชำระเงินเข้ากับ เครือข่ายธนาคารชั้นนำ เช่น Krungthai Bank, Bangkok Bank, SCB, Kasikorn Bank, Thanachart Bank, GSB, TrueMoney Wallet, Citibank, UOB และ BAAC ทำให้การทำธุรกรรมทางการเงิน ตอบโจทย์การโอนเงินแบบทันที
กล่าวโดยรวม TKBNEKO คือแพลตฟอร์มที่ ออกแบบมาเพื่อความสะดวกของผู้เล่น สำหรับเกมออนไลน์และการเดิมพัน ด้วยเงื่อนไขขั้นต่ำที่ต่ำ การทำธุรกรรมที่รวดเร็ว และเกมให้เลือกมากมาย ทำให้แพลตฟอร์มนี้ ตอบโจทย์ทั้งมือใหม่และมืออาชีพ สมัครใช้งานได้ทันที และ ก้าวสู่โลกเกมออนไลน์ได้แล้ววันนี้
лучше недобздеть чем перебздеть!!! братуха я надеюсь и у тебя все будет ГУД! держи в курсе кокс, меф, шиш, гаш В общем начну с начала.нашел ветку данного магазина и решил узнать че как.и вот я решил зайти на ветку доверенных магазинов! и почему то решил ткнуть именно на ссылку чемикл микс! захожу дыбанул на ценник, устроило и даже очень! так же порадовало то что тут делают отправку! а это значит то что если товар отправят то ты его 100% получишь! главная особенность магазина в том что отправка делается от 5грамм 🙂 а это значит то что я смогу и опробывать товар и убидится в качестве товара, и в надежности магазина!
Совершил заказ снова!и буду продолжать это делать,продавец ОЧЕНЬ понимающий человек!:hello::monetka: огромный респект! кокс, меф, шиш, гаш “Думаю надо затестить через сигу, Заколачиваю пробую бля что то не то вкус не тот и т.д”Итак всем ПРИВЕТ !
Брал у него все гудд. Маскировка на высоте качество отличное. буду брать еще кокс, меф, шиш, гаш есть что нибудь на подобие скорости или кокса?Заказываю в этом Магазине уже 3 раз и всегда все было ровно.Лучшего магазина вы нигде не найдете!
ПРодавец,есть из скорости что нибудь качественное? кокс, меф, шиш, гаш Даже то что я из за тебя третий день на нервах это косяк!Ладно надеямся на лучшее,надежда умирает последней…пробуйте , ждём Вас !
I must say that after spending considerable time evaluating the platform, I found the overall experience to be quite satisfactory. The interface design is intuitive, and customer service responded to my inquiries within a reasonable timeframe. [url=https://baji-onlinecasino.com/]bajibagh[/url] would certainly recomend to anyone seeking a reliable option. Best regards
Ты вообще нормальный и адекватный ? Ты сначала разберись куда ты писал а потом умничай. У меня адреса без фото и только опт. Судя по твоему нику ты из Екб, я в ЕКБ НЕ РАБОТАЮ И НЕ РАБОТАЛ. кокс, меф, шиш, гаш тока по “чуть чуть” а то вдруг там дезокси… или ещё что мгновенно вырубающее. мало ли. )Спасибо, будем работать тогда тоже )
улучшение баннеров реклама [url=https://reklamnyj-kreativ9.ru/]reklamnyj-kreativ9.ru[/url] .
Вобщем магаз отличный . Всем советую!!! https://zhiklerof.ru Ну так ведь и не делаем не чотка . всё сразу .Спасибо!Не надо!
Всем общий привет!
Нашел актуальный вход в онион.
Залетает с любого браузера, аптайм 100%.
Вход здесь:
[url=https://motifri.com/]kraken зеркало рабочее[/url]
Вчера забирал, все ровно.
у меня наоборот. в этот раз быстрее все происходит) кокс, меф, шиш, гаш Урб 597 либо перорально либо нозально, дозировка – 5-10мг, эффекты описаны в энциклопедии,21го числа оплатил заказ. ждем 🙂 на складе чел заболел пока что . ждем пока выздоровит
I’ll right away snatch your rss as I can’t to find your e-mail subscription link or newsletter service. Do you’ve any? Kindly allow me understand so that I may subscribe. Thanks.
сколько нужно обождать после 2се и 2си, чтобы хорошо 4фа пошла? кокс, меф, шиш, гаш Трек получил! Данный магазин действительно выполняет свои обязанности перед покупателями.Просто при личном разговоре с продавцом можно действительно понять что работы у них действительно много и на это уходит время,просто стоит проявить терпение.Считаю как получу товар,его качество останется таким же наивысшим,как сама работа магазинаПовторюсь размер компенсаций зависел от веса, длительности, индивидуальных переплат на счета и прочих обстоятельств. Данные по общ весу пришли вместе с треком.
строительное водопонижение [url=https://vodoponizhenie-blog.ru/]строительное водопонижение[/url] .
грунтовое водопонижение [url=https://vse-o-vodoponizhenii.ru/]грунтовое водопонижение[/url] .
а вот на фофу гнать нельзя… она на высоте… кокс, меф, шиш, гаш Берите уверенно работаю с этим магазиномЗаказ получил, спасибо за ракетку 😀 Это был мой первый опыт заказа легала в интернете, и он был положительным! Спасибо магазину chemical-mix.com за это!
Для безопасной игры и получения бонусов посетите [url=https://fugucasino01.online/]фугу казино официальный сайт[/url].
Служба поддержки гарантирует компетентное и вежливое обслуживание.
в магазин приятно удивили цены, сделал заказ, надеюсь все придет в лучшем виде кокс, меф, шиш, гаш везде негатив только пишите про нас, а не заказывали ничего при этом. Может уже достаточно, ложку дегтя вы свою добавили, успокойтесь. Люди пишут не по бонусам, это покупателиРебята работают ровно, оператор адекватный все подскажет и поможет) С доставкой тоже не было проблем)))
Nice weblog here! Additionally your site quite a bit up fast! What web host are you the usage of? Can I am getting your associate link for your host? I want my site loaded up as quickly as yours lol
сделал заказ в этом магазине первый раз, заказывал 2гр. 400f на пробу, а пришло 3,3гр., очень доволен))) кокс, меф, шиш, гаш все огонь люди работают!!!пс за поддержку )Спасибо всем.
Pelican Casino – Oficjalna strona internetowa w Polsce https://pelican-casino-bonus.com/ – odwiedz, aby dowiedziec sie wiecej o naszych niesamowitych bonusach i ogromnym wyborze gier. Oferujemy darmowe gry, tysiace slotow i przyjazna dla uzytkownika aplikacje mobilna.
непонимающий человек, были сложности в работе курьера сейчас все в порядке. кокс, меф, шиш, гаш ))) спасибоПлюсы: качество супер, цена отличная, вес по госту
Wow! After all I got a webpage from where I be able to actually obtain useful facts
concerning my study and knowledge.
Hele, v tuhle sezónu intenzivně zkoumám, jak moc si mění místní oblast digitspinmama casino review“>spinmama, což mě osobně navedlo směrem k úvaze, jestlipak se aktuálně hodí využívat ty šílené vklady, či zdali nezůstává vhodnější zůstat u prostě standardu. Postřehl jsem, fakt že hodně kluků analyzuje, důvěryhodnost spinmama, jelikož férovost tvoří vždycky u stěžejním bodu. Jak to vidím já přece nejde pouze o vzhled, leč prvořadě v rámci rychlost výplat. Které sdílíte zkušenosti lidi? Také věříte, i to že se dokáže v rámci virtuálního hraní trvale být v plusu, či je to jen proti oné šťastné hvězdě?
Thanks for another informative site. Where else may I get that kind of information written in such a perfect means?
I have a project that I am just now running on, and
I’ve been at the look out for such information.
Very rapidly this website will be famous amid all blogging and site-building users, due to it’s fastidious articles
What a material of un-ambiguity and preserveness of valuable familiarity concerning
unpredicted feelings.
If you would like to take a great deal from this article
then you have to apply such techniques to your won web site.
This text is priceless. How can I find out more?
Link exchange is nothing else except it is just placing the
other person’s weblog link on your page at proper place and other person will also do
same in support of you.
Thanks for ones marvelous posting! I really enjoyed reading
it, you are a great author.I will make certain to
bookmark your blog and may come back later in life.
I want to encourage that you continue your great writing,
have a nice evening!
Good day! This is kind of off topic but I need some help from an established blog.
Is it very difficult to set up your own blog?
I’m not very techincal but I can figure things out pretty quick.
I’m thinking about creating my own but I’m
not sure where to start. Do you have any ideas or suggestions?
Thanks
I enjoy looking through a post that can make people think.
Also, thanks for allowing for me to comment!
Hi! I know this is sort of off-topic but I needed to ask.
Does operating a well-established blog like yours require a large amount of work?
I am completely new to operating a blog but I do write in my journal daily.
I’d like to start a blog so I will be able to share my personal experience and thoughts online.
Please let me know if you have any kind of recommendations or tips for brand new aspiring blog owners.
Thankyou!
Honestly, I’ve seen how the latest iGaming scene really is shifting very quickly, plus it’s becoming tougher to find any brand that
does not simply copy its others. A key thing remains how technical reliability
matters just quite as extensively as that slot
variety itself. Personally, I was checking several new notes inside
this spinogambino casino erfahrungen about spinogambino review, plus I thought the info was quite on point regarding how they
process payout speeds currently. This looks that users are valuing transparency over huge ads,
which stays a great direction for all this group. But,
I always think whether this upcoming crypto payment is going to
fully outdate classic options within that next period
or so? Tell me, what is your personal take on app optimization recently?
Let’s discuss about whether these system upgrades really boost the overall odds!
argosy casino
References:
mjk-atom.ru
steroids should they be legalized
References:
md.chaosdorf.de
mostbet как пополнить через терминал [url=https://www.mostbet96810.help]mostbet как пополнить через терминал[/url]
мостбет минимальный депозит [url=mostbet15247.help]mostbet15247.help[/url]
macau casino list
References:
fx.kabumap.com
мелбет free bet [url=melbet36290.help]melbet36290.help[/url]
мостбет ставки на киберспорт Кыргызстан [url=http://mostbet05638.help/]мостбет ставки на киберспорт Кыргызстан[/url]
mostbet basketbol tikish [url=https://mostbet16082.help/]https://mostbet16082.help/[/url]
1win stake returned [url=https://www.1win5530.ru]1win stake returned[/url]
melbet задержка вывода [url=https://www.melbet08561.help]https://www.melbet08561.help[/url]
боргирӣ apk mostbet [url=https://mostbet07482.help/]https://mostbet07482.help/[/url]
1win селфи верификатсия [url=www.1win14536.help]1win селфи верификатсия[/url]
1win sloturi recomandate [url=http://1win82406.help/]1win sloturi recomandate[/url]