ATM Tamil Romantic Novels

நீயே என் சகி என்பேன்

சகி 2

 

 

சூர்யா தாய் காமாட்சி, தந்தை சங்கரலிங்கம் , தம்பி சந்திரசேகரன்  ,தங்கை நந்தினி திருமணத்திற்கு வந்த சொந்தங்கள் என அனைவரும் அதிர்ச்சியில் இருக்க தாலி கட்டிவிட்டு ஏதும் பேசாமல் சென்றுவிட்டான்..

 

 

அவர்கள் திருமணம் முடிந்து நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது..தாலி கட்டிய கையோடு சூரியதேவன் விட்டுட்டு போனவன் தான் இன்னும் வீட்டிற்கே வரவில்லை..

 

துளசி  கண்ணில் நீர் வற்றி போய் இருந்தது….என்று தான் கூற வேண்டும்..

 

 

அம்மாடி ..துளசி …,இன்னும் எவ்வளவு நேரம் இப்படி உக்காந்துட்டு இருப்ப..எப்படியோ என் அண்ணன் மவனே எனக்கு மருமகனா வந்துட்டாரு..துளசி கண்களில் நீருடன் ம்ம்மா அப்போ எனக்காக வருத்த பட மாட்டியா..

 

இதுல வருத்த பட எதுவும் இல்லை..உன் அக்கா பண்ண காரியத்துக்கு அவளை கொன்னு போட தோணுது. என் மானத்தை வாங்கிட்டு போய்ட்டா..அவள நா சரியா வளர்க்கலை …அவ பண்ணதுக்கு நீ எங்க மேல பழி சொல் விழாம காப்பாத்திருக்க..உன்னை என்னோட பொண்ணுன்னு சொல்லும் போது பெருமையா இருக்கு..இனிமே என்னோட அப்பா அம்மா வோட பேசவே முடியாதுன்னு நினைக்கும் போது நீ வந்து நா இருக்கேன் அம்மான்னு சொன்ன பார்த்தியா அப்போ தா நினைச்சேன் எங்க தேவாவுக்கு நா வைரத்தை கைல வச்சுட்டு பித்தளைய கொடுக்க நினைச்சிருக்கேன்..இப்போ வைரம் அவனுக்கு சொந்தம் ஆகிட்டு..எல்லாம் கடவுள் போட்ட முடிச்சு..

 

 

அம்மா..அவர் பேசுன பேச்செல்லம் எனக்கு பிடிகலம்மா.. நம்ம ரம்யா பத்தி என்னம்மா தெரியும்..மனசு வலிக்குது..

 

 

ரம்யாவை பற்றி எனக்கே ஒன்னும் தெரியலேயே டா..பெத்ததுல ஒன்னு இப்படி என் மானத்தை வாங்கிருச்சு ..இன்னிக்கு மட்டும் கல்யாணம் நடக்கலனா உன் அம்மா செத்திருப்பா..,

 

 

என்னப்பா சொல்றிங்க..

 

 

ஆமாம்மா..நீ தா அம்மா உயிரோட இருக்க காரணம்..

 

உன்னை கட்டி கொடுத்துருக்க புகுந்த வீட்டோட மரியாதை, எங்களோட மரியாதை எல்லாம் நீ தேவா கூட நல்லா வாழ்றதுலதான் இருக்கு..

 

அப்பா அவரை பார்த்தா பயமா இருக்கு.. என்னைய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்களேன்.

 

ராஜலிங்கம் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார்..

 

துளசி இங்க வா..அவள் தயங்கி நிற்கவும்.. வா ம்மா..என் பேரன் பண்ணதுக்கு மன்னிச்சுக்கோ ம்மா..தாத்தா அவர் அம்மா அப்பாவா பேசவும் தான் எனக்கு கோவம் வந்தது..மத்த படி உங்க மேல கோவம் இல்ல. நா தப்பா பேசிட்டேன் தான் மன்னிச்சுக்கோங்க தாத்தா..

 

துளசி நீயும் என் பேத்தி தான்..உங்கள சின்ன பிள்ளையில் இருந்து வளர்க்கலனாலும்  என் குடும்ப ரத்தம் நியாயமா நேர்மையா நடந்துக்க தான் வைக்கும்..நீ தான் என்னோட சூர்யாவுக்கு ஏத்த ஜோடி..அவன் கோபபடுவான் ஆனா ரொம்ப நல்லவன் மா..போக போக புரிஞ்சுக்குவ..அவள் சரி என்று உதட்டளவில் மட்டும் சிரித்து வைத்தாள்..அவளுக்கு தெரியாத அவன் மனதில் உள்ள வஞ்சம் தீர்க்கும் பகை என்னவென்று..

 

“ஏமாற்றம் அடைஞ்சா கொஞ்சம் கோவம் வரத்தான் செய்யும் துளசி…அதுல மாப்பிள்ளை கத்திட்டு போயிருக்கார்..சரி ஆகிடும்..உன் குணம் அவர் குணத்தை மாற்றும்ன்னு நம்புறேன்..

 

 

இப்போ வா வந்து முகத்தை கழுவிட்டு வரலாம் வாம்மா..தமயந்தி கூட்டி சென்றார்..

 

செல்வத்தை ராஜலிங்கம் தேடிவர .ம..மா..மாமா நீங்களா..கூப்பிட்டு விட்டா நானே வந்துருப்பேனே..என்று பணிவுடன் நின்ற தந்தையை வெறுப்புடன் பார்த்தாள் துளசி..

 

என்னைய மன்னிச்சுறுங்க மாப்பிள்ளை..அவன்  பேசுனதுக்கு நா மன்னிப்பு கேட்டுக்குறேன்…. 

 

என்ன மாமா நீங்க மன்னிப்பு அது இது ன்னு என்கிட்ட பேசலாமா..நீங்க எனக்கு தெய்வம் இப்படி மன்னிப்பு கேட்டா நா பாவம் பண்ணியவன் ஆயிடுவேன்..

எல்லாம் சரி ஆகிடும் மாமா ..நம்புங்க..

 

 

ம்ம்ம் என்ற பெருமூச்சு விட்டவர்.. தன் மனைவி ராஜேஸ்வரி புகைப்படத்தை பார்த்து கண்கள் கலங்கினார்..

 

 

சூர்யாவின் தாய் காமாட்சி வந்து துளசி.. நீ இனிமே  எங்க வீட்டு மருமகள் ..நீ இப்படி அழுதுட்டே இருக்கிறது எனக்கு பிடிக்கல .. நடந்த எதையும் மாதிக்க முடியாது ஆனா, உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கையை அமைச்சு நீயும் சூர்யாவும் சந்தோசமா இருக்கலாம்..அரண்மனை மருமகள் மாதிரி நடந்துக்கோ..

 

துளசி முகம் கழுவி பூஜை அறையில் கடவுளை வேண்டி விளக்கு ஏற்றி 

கொண்டிருக்கும் போது சூர்யா வீட்டிற்குள் வந்து பூஜையில் இணைந்து கொண்டான்.அனைவருக்கும் பயம் பிடித்து கொண்டது…ஆனால் அவன் முகம் முழுவதும் அவ்வளவு சாந்தம்..கண்களில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்தான்…

 

என்ன எல்லாரும் அப்படி என்னைய பார்த்துட்டு இருக்கீங்க..கல்யாணம் ஆனதும் வேற முகம் வந்துருச்சா..முகம் அதே தான என்ன டா சந்திரா …ஆமா அண்ணா என்றான்..போங்க எல்லாரும் அவரவர் வேலைய பாருங்க..எனக்கு இந்த ஜென்மத்தில் ஒரு கல்யாணம் தான் அது அவ கூட முடிஞ்சு போச்சு..

 

தம்பி ..அவன் தாய் காமாட்சி தயங்கி நிற்கவும்

 

என்னம்மா..

 

கல்யாணம் முடிஞ்ச மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் பால் பழம் கொடுக்கணும்..

 

இருவருக்கும் கொடுக்கப்பட சூர்யா சாப்பிட பால் பழம் கொடுக்கப்பட்டது..

 

அம்மா எனக்கு வேலை இருக்கு நைட் வர டைம் ஆகிடும்…

 

 

கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட ஆகலை அதுக்குள்ள எங்க டா போற..ராஜலிங்கத்தின் இரண்டாவது மனைவி அம்பிகா கேட்கவும்..

 

 

பாட்டி..வந்துருவேன் முக்கியமான வேலை கொஞ்சம் அவளுக்கும் டைம் வேணுமில்ல..நா கிட்ட இருந்தா தயக்கமா இருக்கும்..

 

என் பேரன் எம்புட்டு அழகா புரிஞ்சுக்குறான்..

 

 

 

இரவு நெருங்க நெருங்க பயம் பிடித்து கொண்டது துளசிக்கு அவன் 

அமைதி வயிற்றில் அமிலத்தை சுரந்தது..

 

 

துளசி இங்கன வா..இதுல எங்க அத்தையோட  நகை புடவை எல்லாம் இருக்கு..குளிச்சுட்டு ரெடி ஆகு..

 

எதுக்கு…,அத்தை குளிக்கணும் நா காலையிலே குளிச்சுட்டேன்..என்றாள்

 

அட கடவுளே.., என் புள்ள பாவம்..இது கூட தெரியல உனக்கு உன் வயசு புள்ளைங்க எல்லாம் எல்லாமே தெரிஞ்சு விவரமா இருக்கும்..நீ இப்படி என்ன ஏதுன்னு கேக்குற..துளசி இப்போ இரவு நடக்குற சம்பிரதாயம் இருக்குடியம்மா அந்த சடங்குக்கு தா குளிக்க சொல்றாங்க..போ போய் ரெடி ஆகு..

 

அம்பிகா பாட்டி அங்கு வந்து அடியே காமாட்சி…என்ன பண்ணிட்டு இருக்கீங்க..

 

சூர்யா, துளசி சாந்தி முகூர்த்ததுக்கு நேரம் ஆவுது.. சீக்கிரம் தயாராகி கூட்டிட்டு வாங்க..இந்தா இதுல என் அக்காவோட நகை எல்லாம் இருக்கு..போட்டு கூட்டிட்டு வாங்க மசமசன்னு நிக்கமா வாங்க டி..

 

துளசி குளித்து தயாராகி வரவும் நல்லா அழகா தான்  இருக்க என் பேரனுக்கு பொருத்தமா  இருக்க..அவளுக்கு அலங்காரம் செய்து சூர்யா அறைக்கு அனுப்ப பட்டாள்..

 

அண்ணா இன்னும் வரல அண்ணி.உங்க முகமே சரி இல்லை..சின்ன பெண் நந்தினி மட்டும் தான் அவளுக்கு தைரியம் கொடுத்தாள்..

 

 

.நீங்க தூங்கிருங்க..அண்ணா தூங்கும் போது யாரையும் எழுப்ப மாட்டான்..பயப்படாதீங்க.. அவளுக்கு தெரிந்ததை வைத்து கூறினாள்.. ஆனால் துளசிக்கு தெரியுமே இன்னைக்கு அவன் பேச்சால் காயப்படுத்துவான் என்று நன்றாக புரிந்துகொண்டாள்…

 

 

சூர்யா வந்ததும் நல்ல நேரம் ஆரம்பிக்கவும் ..,துளசி எனக்கு பத்து மாசத்துல குட்டி சூர்யா வேணும்..”இந்தா இது பாதாம் பால் இருக்கு,  ராத்திரி 11 மணி வரைக்கும் அவனை உன் மேல தொட விடாத..அப்படியே பாஞ்சிருவான் ன்னு நினைப்பு ..நல்ல நேரம் ஆரம்பிக்கும் போது அவனை அனுப்பி விடுவாக உன் தாத்தனும் அப்பனும் ..,துளசிக்கு கொஞ்சம் கூச்சமாக நெளிந்தாள்..எதுக்கு இப்படி பாம்பு மாதிரி நெளியுற நம்ம பூங்காவனம்  சோசியர் நல்ல நேரம் குறிச்சு கொடுத்துட்டு போயிருக்கார்..அதுவரைக்கும் கொஞ்சம் பேசிட்டு இருக்கணும்..என் பேரனை மாதிரி ஒரு ஆம்பளை புள்ளை பெத்து போட்டிரு தாயி..என்று சூர்யா வின் பாட்டி அம்பிகா கூறினார்..

 

ஆம்பள வேகமாத்தான் இருப்பான்..உன் தாத்தா மாதிரி ..என்று கூறி வெட்கப்பட்டு..,நீ தான் அவனை நல்லா உன் முந்தானைல முடிஞ்சு வச்சுக்கனும். ஆமா முந்தானையில் முடியுற உருவமா அது என்று மனதில்  கவுண்டர் கொடுத்தாள்….

 

காலைல ஒரு அஞ்சு ஆறு மணிக்கு எழுந்து வந்தா போதும்..தூங்கிப்புடாத துளசி அவன் கேட்க கேட்க கொடுத்துட்டே இரு அப்போ தான் உன் மடிலேயே கிடப்பான் ..அவன் மனசு கோணாம நடந்துக்கோ..என் பேரனை போல ஒரு 10 ஆம்பளை புள்ள பெத்து போடு நா வளர்த்துக்குவேன்..என்னது பத்தா மயக்கம் வராத குறையாக இருந்தது..அப்படியே இவ மேல விழுந்து புள்ள கொடுக்குற மாதிரி தான்..காலைல பேசுன பேச்சுக்கு வாய உடைக்க போறான்..அவள் மனதில் உங்களுக்கு பொண்ணுனா புள்ள பெத்து போடுற மிஷினா என்று கேட்டுக்கொண்டாள்.. அறிவுரை கூறியவர்களுக்கு சின்ன சிரிப்பை உதிர்த்தவள் சொம்பு நிறைய பாலை கொண்டு சென்றாள் துளசி..

 

சூர்யா தேவின் அறைக்குள் சென்றவள் திகைத்துபோய் நின்றாள்..அந்த தளம் முழுவதும் சூர்யாவிற்காக உருவாக்க பட்டது..அதிலும் அவன் அறை ஒரு முழு விளையாட்டு மைதானம் போன்று இருந்தது.. அறை உள்ளே அவனது புகைப்படம் வெஸ் காத்திருந்த துளசி தூங்கிவிட்டாள்..

 

இது தான் பெண்கள் வாழ்க்கை..பிடிக்குது பிடிக்கலை கல்யாணம் செய்யணும்..குழந்தை பெத்து போடணும்..அவளுக்கு பிடித்த அனைத்தும் பறிக்கப்படுவது தான் திருமண வாழ்க்கை.

10 thoughts on “நீயே என் சகி என்பேன்”

  1. Кто у Чемикала в последнее время брал ОПТ ( от 1 КГ и более) !!! Все ОК?????? ОПТ давно кто получал???? Задержки были…..????? купить закладку мефедрон кокаин скорость Доброго всем времени, товарищи подскажите как посыль зашифрована? паранойя мучит, пару лет с доставкой не морочился. Ежели палево то можно и в ЛС)) Заранее благодаренсогласен с вами ребят

  2. Если вам нужна комфортная и надежная [url=https://arenda-avto-s-voditelem03.ru/]авто с водителем новосибирск[/url], обращайтесь к нам — мы обеспечим безопасность, пунктуальность и высокий уровень сервиса в любой точке Новосибирска.
    Клиенты сервиса регулярно отмечают, что подобный способ передвижения значительно улучшает комфорт поездки.

  3. клад забрал, все ровняк! завтра отпишу за качество! https://losika.ru Доброго времени суток. 3-й заказ шел ровно неделю с момента оплаты. Спасибо за приятный сувенир :good:. Сам бы себе такой не знаю когда приобрел :). Вобщем за сервис снова 5+спасибо магазу)

  4. Вы можете оформить [url=https://kommercheskij-transport-v-lizing07.ru]коммерческие автомобили лизинг[/url] и значительно расширить возможности вашего бизнеса.
    Налоговая база снижается за счет учета лизинговых платежей в бухгалтерии.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top