காவியம் – 22
தேவாவின் மார்பில் சாய்ந்து நின்ற இளவேனிலின் மனதில் நேற்று முழுதும் கொந்தளித்துக் கொண்டிருந்த புயல், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருந்தது.
அவளது கண்ணீரைத் துடைத்த தேவா, அவளது நெற்றியில் தன் உதடுகளை அழுத்தமாகப் பதித்தான்.
“இனிமே இந்த மாதிரி யோசிச்சு உன்னையே நீ கஷ்டப்படுத்திக்காத வேனில்…” என்றான் மென்மையாக.
இளவேனில் அவனை நிமிர்ந்து பார்த்து “நான் உண்மையாவே உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா ஜங்கிள் கிங்?” என்றாள்.
“கஷ்டப்படுத்துனியா? என்னை பார்த்தா உனக்கு அப்படி தெரியுதா?” தேவா சிரித்தான்.
“அப்போ இல்லையா?”
“இல்ல.”
“உன்னைப் பற்றி யோசிக்கிறதுக்கு எனக்குப் பிடிக்கும். உன் பின்னாடி சுத்துறதுக்கும் பிடிக்கும். நீ என்கிட்ட சண்டை போடுறதும் பிடிக்கும். நீ என்னைக் கஷ்டப்படுத்துறேன்னு நினைச்சு முகத்தைத் தூக்கி வச்சுட்டு நிற்கிறதுதான் எனக்குப் பிடிக்கலை!” என்று அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
“நீ என் பொண்டாட்டி டி. உன்னைப் பற்றிய எந்த விஷயமும் எனக்குக் கஷ்டம் இல்லை புரிஞ்சுதா?” என்று அவள் நெற்றியில் முட்டினான்.
அப்புறம் நீ என்னை கஷ்டப்படுத்துறதுனு எப்படியாகும்?” என்று குறும்பாக அவளது மூக்கில் முத்தம் வைத்தான்.
அவனது வார்த்தைகளில் இருந்த காதலைக் கேட்டதும் இளவேனிலின் கண்கள் மீண்டும் கலங்கின.
“என்னடா பார்பி டால்? “இன்னைக்கு ரொம்ப அழுதுட்ட…” என்று அவளது கன்னத்தை வருடினான் தேவா.
“அதெல்லாம் சந்தோஷக் கண்ணீர்…” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.
தேவாவோ அவளது முதுகை மெதுவாக வருடிக் கொடுத்தான்.
சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை.
அந்த அமைதியே அவர்களுக்குள் காதல் மொழியாக மாறியிருந்தது.
திடீரென்று இளவேனில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“ஜங்கிள் கிங்…”
“ம்ம்…”
“உங்களுக்கு என்னைப் பிடிக்க ஆரம்பிச்சது எப்போ?”
“அது தெரிஞ்சு என்ன பண்ணப் போற?” தேவா புருவத்தை உயர்த்தினான்.
“சும்மா சொல்லுங்க.”
அவன் சிரித்துக் கொண்டே படுக்கையின் ஓரத்தில் எழுந்து அமர்ந்தான்.
இளவேனிலும் அவன் அருகே வந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
“உன்னை முதல்ல பார்த்தப்போ எனக்கு கோபம்தான் வந்துச்சு.”
“ஏன்?”
“என் விஷயத்துல மூக்கை நுழைக்கிற ஒரு வம்புக்கார பொண்ணுன்னு நினைச்சேன்.”
இளவேனில் உதட்டைச் சுழித்தாள்.
“அப்புறம்?” அப்புறம்…”
“நான் உன்னை மிரட்டினாலும் பயப்படாம என் கண்ணைப் பார்த்து பேசின முதல் பொண்ணு நீதான்.” என்று அவளது முகத்தை ஆழமாகப் பார்த்தான்.
“எல்லாரும் என்னை தாதாவா பார்த்தாங்க வேனில்… நீ மட்டும் தேவாவைப் பார்த்த.” அவனது குரல் மெதுவாக இருந்தாலும் அதில் இருந்த உண்மை இளவேனிலின் இதயத்தைத் தொட்டது.
“உண்மையைச் சொல்லணும்னா… நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சதே எப்போன்னு எனக்கே தெரியல.” என்றான்.
“ஆனா ஒரு நாள் திடீர்னு எனக்கு புரிஞ்சது…”
“என்ன?” என்று ஆர்வமாகக் கேட்டாள் இளவேனில்.
“ஒரு நாள் உன்னை பார்க்காம இருந்தாக் கூட கோபம் வந்துச்சு.” தேவா சிரித்தான்.
“நீ வேற யார்கிட்ட பேசினாலும் எரிச்சலா இருந்துச்சு.”
“நீ சிரிச்சா சந்தோஷமா இருந்துச்சு.”
“நீ அழுதா மனசு வலிச்சுச்சு.”
“அப்போதான் புரிஞ்சது… இந்த ஜங்கிள் கிங் மொத்தமா உன்கிட்ட சரணாகதி ஆகிட்டான்னு.”
இளவேனிலின் முகம் முழுவதும் வெட்கம் பரவியது.
தேவா அவளது தாடையைப் பிடித்து நிமிர்த்தினான்.
இப்போ சொல்லு…
இன்னும் ஏதாவது சந்தேகம் இருக்கா?”
இளவேனில் தலையசைத்தாள் “இல்ல.” என்று…
“நிஜமாவா?”
“ம்ம்…”
“பொய்.”
“இல்ல.”
“பொய்.”
“இல்லன்னு சொல்றேன்ல!” என்று அவள் சிணுங்க,
தேவா சட்டென்று அவளது இதழில் முத்தமிட்டு “இப்போ?” என்று குறும்பாகக் கேட்டான்.
“ஜங்கிள் கிங்!” என்று வெட்கத்தில் அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
தேவாவின் சிரிப்பு அறை முழுவதும் எதிரொலித்தது.
அந்த இரவு… இளவேனிலின் மனதில் இருந்த கடைசி சந்தேகமும் கரைந்து போயிருந்தது.
தான் வேணியின் நிழல் இல்லை. தேவாவின் வாழ்க்கையில் தனக்கென்று ஒரு இடம் இருக்கிறது.
அவன் காதலிப்பது இளவேனிலை மட்டும் தான். என்ற உண்மையை அவளது இதயம் முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் காலை…
கோட்டை முழுவதும் திருமணக் களைகட்டும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
காலை வெயிலின் பொன்னிற ஒளி கோட்டையின் கல் சுவர்களில் பட்டுத் தெறிக்க, வேலை ஆட்கள் அங்கும் இங்கும் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருந்தனர்.
இளவேனில் கண் விழித்தபோது, தேவா ஏற்கனவே எழுந்து கிளம்பியிருந்தான்.
படுக்கையின் அருகே இருந்த சிறிய காகிதத்தில், “எழுந்ததும் சாப்பிடு. வேலை விஷயமா வெளியே போயிருக்கேன். சீக்கிரம் வந்துடுவேன்.” என்று எழுதி வைத்து விட்டு சென்றிருந்தான். அதைப் பார்த்ததும் இளவேனிலின் இதழ்களில் தன்னிச்சையாக ஒரு புன்னகை மலர்ந்தது. நேற்று வரை அவளை வாட்டிய சந்தேகங்கள் அனைத்தும் இப்போது எங்கோ காணாமல் போயிருந்தன. மனம் முழுதும் அளவில்லா காதலால் திருப்தியடைந்து காகிதத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள், “முரட்டு ஜங்கிள் கிங்…” என்று வெட்கத்தோடு முணுமுணுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள்.
அவள் குளித்து கீழே வந்ததும் மலர்விழி அவளைப் பார்த்து கண்களை உருட்டினாள்.
“அக்கா… இப்போதான் எழுந்தீங்களா?”
“ஏன்?”
“மணி ஒன்பதரை ஆகுது!” இளவேனில் அதிர்ந்து போனாள்.
“என்னது?!” என்றவளை அதைப் பார்த்த நளினியும் சிரித்தாள்.
“நேத்து ராத்திரி யாரோ தூங்கவே இல்ல போல…” என்று நக்கலடிக்க,
இளவேனிலின் கன்னங்கள் சிவந்து போயின.
“ஏய்! வாயை மூடுடி!” என்று வெட்கத்தோடு துரத்த,
மூவரும் சிரித்துக் கொண்டனர்.
அந்தச் சிரிப்புச் சத்தம் கோட்டை முழுவதும் எதிரொலித்தது.
………….
கோட்டையிலிருந்து சற்று தூரத்தில்… ஒரு கருப்பு நிற கார் மர நிழலில் நின்றிருந்தது.
காருக்குள் அமர்ந்திருந்தவன் தொலைநோக்கி வழியாக கோட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் முகத்தில் கோபமும்,பழி வெறியும்,வெறுப்பும் கலந்திருந்தது. “தேவா… உன் சந்தோஷம் இன்னும் கொஞ்ச நாள் தான்.” என்று பற்களைக் கடித்தான்.
அவனது அருகில் இருந்த ஆள் பதற்றமாகக் கேட்டான்.
“சார்… நிச்சயமா அந்தப் பொண்ணு கோட்டைக்குள்ளதான் இருக்காங்களா?”
“இருக்கா மட்டும் இல்ல…” என்று சிரித்த ருத்ரன். “தேவாவோட உயிராகவும் இருக்கா.” அவனது கண்கள் கொடூரமாக மின்னின.
“ஒருத்தனை அழிக்கணும்னா… அவன் உயிரையே அடிக்க வேண்டிய அவசியம் இல்ல. அவன் உயிருக்கு உயிரானவங்களை அடிச்சாலே போதும்.” என்று சொல்லிவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
……………..
கோட்டைக்கு ருத்ரன் பின்னும் சூழ்ச்சிகள் எதுவும் தெரியாமல் இளவேனில் தோட்டத்தில் இருந்த மலர்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
அவளைத் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த தேவாவின் விழிகளில் மென்மையான காதல் நிரம்பியிருந்தது.
“அண்ணே…” என்று அவன் அருகே வந்தான் ரகு..
“ஒன்னுமில்லை.” என்று தலையை ஆட்டினான்.
“பொய்.”
“ஏன்டா?”
“இப்போ எல்லாம் உங்க கண்ணுல கோபமே தெரியல.” ரகு சிரிக்க,
தேவாவின் பார்வை மீண்டும் இளவேனிலின் மேல் விழுந்தது.
“கோபப்படுறதுக்கான காரணம் எல்லாம் போயிடுச்சுடா… இப்போ வாழணும்னு மட்டும் தோணுது.” என்றான் மெதுவாக.
அண்ணன் சொன்ன வார்த்தைகளை கேட்ட ரகுவின் முகத்திலும் நிம்மதி பரவியது.
ஆனால்… அந்த நிம்மதி இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கப் போகிறது என்பதை அப்போது யாருமே அறிந்திருக்கவில்லை.
ஏனெனில்…
கோட்டையைச் சுற்றி ருத்ரனின் வலை மெல்ல மெல்ல இறுகிக் கொண்டிருந்தது…!
மாலை நேரம்…
கோட்டையின் பின்புறத் தோட்டத்தில் இளவேனில் தனியாக அமர்ந்திருந்தாள். அவள் கையில் இருந்தது பழைய புகைப்பட ஆல்பம். மலர்விழி தான் சிறிது நேரத்திற்கு முன்பு கொண்டு வந்து கொடுத்திருந்தாள்.
“இதுல நம்ம சின்ன வயசு போட்டோ எல்லாம் இருக்கும் அக்கா…” என்று சொல்லிவிட்டு சென்றிருந்தாள்.
ஆர்வமாகப் பக்கங்களைப் புரட்டிய இளவேனில், தேவாவின் சிறுவயது புகைப்படத்தைப் பார்த்து சிரித்தாள்.
அதில் பத்து வயது கூட இருக்காது. முகம் முழுக்க குறும்பு. கண்களில் திமிர். ஆனால் இப்போது இருக்கும் முரட்டுத்தனம் இல்லை. ‘அடப்பாவி… சின்ன வயசுல இவ்வளவு க்யூட்டா இருந்திருக்கீங்களா ஜங்கிள் கிங்?’ என்று சிரித்துக் கொண்டாள்.
“என்னடி… ஆல்பத்துல இருக்கிற என் போட்டோவை பார்த்து ரசிக்கிறயா? ஒரிஜினல் தேவா உன் முன்னாடிதானே நிக்கிறான் பார்த்து ரசிக்கலாம்!” என்றபடியே அவளருகே வந்து நின்றான்.
அவனைப் பார்த்ததும் இளவேனில் சிரிப்பை அடக்க முடியாமல் மீண்டும் புகைப்படத்தை நீட்டி…
“இதுல இருக்குற பையன் யாரு?” என்றாள்.
தேவா முகத்தைச் சுளித்தான்.
“அது நான் தான்.”
“பொய் சொல்லாதீங்க.”
“ஏன்டி?” என்று கண்ணை சுருக்கினான்.
“இந்தப் பையன் ரொம்ப நல்லவனா இருக்கான்.” என்று அவள் கண்ணை சிமிட்டினாள்.
“அப்போ இப்போ?” என்று அவள் பக்கம் ஒட்டி உட்கார்ந்தான்.
“இப்போ முரடன்.” என்று சொல்லிவிட்டு ஓடி விட முயன்றாள்.
ஆனால் தேவா அவளது கையைப் பிடித்து இழுத்த வேகத்தில் நேராக அவனது மார்பில் வந்து மோதினாள்.
“யாருடி முரடன்?” என்று அவன் புருவத்தை உயர்த்த,
இளவேனில் சிரிப்போடு, “நீங்கதான்…” என்றாள்.
தேவாவும் சிரித்துவிட்டான்.
அந்த நேரம்… கோட்டைக்கு வெளியே…
ஒரு ஆள் பதற்றமாக ஓடி வந்து ருத்ரனின் முன்னால் நின்றான்.
“சார்…”
“என்ன?”
“நாளைக்கு மறுநாள் கல்யாணமாம்.” ருத்ரனின் கண்கள் சுருங்கின.
“யாருக்கு?”
“தேவாவோட தம்பி ரகுவுக்கும்… அந்த மலர்விழி பொண்ணுக்கும்.”
சில நொடிகள் ருத்ரன் அமைதியாக இருந்தான்.
பிறகு மெதுவாக சிரிக்கத் தொடங்கினான்.
அந்த சிரிப்பில் கொடூரம் மட்டுமே இருந்தது.
“குடும்பமா சந்தோஷப்படுறாங்களா?” அவன் எழுந்து நின்றான்.
“அப்படின்னா…” அவனது விழிகள் விஷமாக மின்னின.
“அவங்க சந்தோஷத்தையே நாசம் பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சு.” என்று நாராசமாய் சிரித்தான்.
கோட்டையின் மாடியில் நின்றிருந்த தேவாவுக்கு ஏனோ மனம் அமைதியாக இல்லை. தூரத்தில் இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இளவேனில் மெதுவாக வந்து அவனருகே நின்றாள்.
“என்ன யோசனை?”
“ஒன்னுமில்லை.” என்றான் தேவா சிரிக்கமல்..
“பொய்.” அவன் கண்களைப் பார்த்தான்.
“ஏன் அப்படி சொல்ற?”
“உங்க முகம் சொல்லுது.”
சில நொடிகள் அமைதியாக இருந்த தேவா இளவேனிலின் கையைப் பிடித்தான்.
“ரகுவோட கல்யாணம் முடியுற வரைக்கும் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு வேனில்.”
“ஜங்கிள் கிங்குக்குப் பயமா?” இளவேனில் அதிர்ந்தாள்.
“எனக்காக இல்ல.” அவன் அவளது கையை இறுக்கமாகப் பற்றினான்.
“என் குடும்பத்துக்காக.” அந்த வார்த்தையில் இருந்த பாசத்தை உணர்ந்த இளவேனில் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அதே நேரத்தில்… கோட்டையிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில்…
தேவா வீட்டுல நடக்குற கல்யாண விசேஷம் தான் தேவாவோட வாழ்க்கையில மறக்க முடியாத நாளா இருக்கணும்…” என்று விஷமாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.
குலதெய்வக் கோவிலில் கெட்டிமேளம் முழங்கிக் கொண்டிருந்தது.
தேவா, இளவேனிலின் கழுத்தில் தங்கள் குடும்பப் பாரம்பரிய தாலியை கட்டி முடித்த பிறகும், அவள் கழுத்தில் ஏற்கனவே இருந்த மூலிகைத் தாலியை அகற்றவில்லை.
அந்த மூலிகைத் தாலியை விரலால் வருடியவன், “இது நம்ம காதலுக்கு சாட்சி வேனில்… இதை எந்தக் காலத்திலும் நீ கழற்ற கூடாது…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான்.
இளவேனிலின் கண்கள் உடனே கலங்கின.
காட்டின் நடுவே அவசர சூழ்நிலையில் கட்டப்பட்ட அந்த மூலிகைத் தாலிக்கு கூட அவன் இவ்வளவு மதிப்பு கொடுக்கிறான் என்பதை உணர்ந்தவளின் மனம் காதலில் கரைந்து போனது.
தேவா அவர்களது பரம்பரை தாலியை இளவேனில் கழுத்தில் கட்டியதும் என் அம்மாவோட ஆசை நிறைவேறியது என்று சந்தோசம் கொண்டாள் மலர்விழி .
அந்த நேரம் பூசாரி ரகுவின் கையில் மாங்கல்யத்தை எடுத்து வைத்தார்.
“முகூர்த்த நேரம் முடிஞ்சிடப் போகுது தம்பி… தாலியைக் கட்டுங்க…” என்றதும் மலர்விழி வெட்கத்தில் தலைகுனிந்து நின்றாள். ரகுவோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ரகு … தாலியைக் கட்டுங்க !” என்று ஜீவா சத்தமாகக் கத்தினான்.
அனைவரும் திரும்பிப் பார்க்க, “சைட் அடிச்சது போதும். இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு இருந்தா முகூர்த்த நேரமே முடிஞ்சிடும்!” என்று வாயைச் சுளித்தான்.
அதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் சிரித்துவிட்டனர்.
ரகுவோ, “என் பொண்டாட்டியை நான் பார்க்குறேன். உனக்கு என்னடா?” என்று கேட்டான்.
“அடப்பாவி! இன்னும் தாலியே கட்டல. அதுக்குள்ள பொண்டாட்டியா?” என்று ஜீவா தலையில் அடித்துக் கொண்டான்.
மலர்விழி வெட்கத்தில் இன்னும் தலைகுனிந்தாள்.
அடுத்த நொடி… கெட்டிமேளம் விண்ணைப் பிளக்க, ரகு மலர்விழியின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.
மூன்று முடிச்சுகளும் விழுந்த அந்த நொடியில் மலர்விழியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அது வெறும் கண்ணீர் இல்லை. பல வருடங்களாக மனதுக்குள் பாதுகாத்து வைத்திருந்த காதல் நிறைவேறிய சந்தோஷம். ரகு மெதுவாக அவளது நெற்றியில் குங்குமம் வைத்தான். மலர்விழி கண்களை மூடிக் கொண்டாள். அவளது முகம் முழுக்க புதுமணப் பெண்ணின் வெட்கம் பூத்திருந்தது.
அனைவரும் அட்சதைத் தூவி வாழ்த்தினர்.
தேவா மகிழ்ச்சியோடு தம்பியை அணைத்துக் கொண்டான்.
“சந்தோஷமா இருக்கனும் ரகு…” என்றான்.
ரகுவின் கண்களும் கலங்கின.
“அண்ணா…” என்று அவன் தேவாவைக் கட்டிக்கொண்டான். அந்த அணைப்பில் ஆயிரம் நன்றிகள் இருந்தன.
அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த நேரத்தில்… “சரி… அடுத்த கல்யாணம் எப்போ?” என்று ஜீவா கேட்டான்.
எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். குலதெய்வக் கோவிலில் கெட்டிமேளம் முழங்கிக் கொண்டிருந்தது.
“யாரோட?” என்று ரகு கேட்டான்.
“என்னோடதான்!” என்று ஜீவா பாவமாகச் சொன்னான்.
“இந்த கோட்டையில எல்லாருக்கும் ஜோடி கிடைச்சாச்சு. நான் மட்டும் அனாதையா சுத்திட்டு இருக்கேன்!”
அவன் முகத்தைப் பார்த்ததும் எல்லோரும் சிரித்துவிட்டனர். அந்த நேரம் நளினி அங்கே வந்தாள்.
“உங்களுக்கு முதல்ல பொறுப்பு வரட்டும். அப்புறம் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம்!” என்றாள்.
உடனே ஜீவாவின் முகம் சுருங்கியது. “பாருங்க தேவா அண்ணே! நான் காதலிக்கிறதுக்கு முன்னாடியே என்னை அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க!”
“அது உனக்கு தேவைதான்!” என்று தேவா சிரித்தான்.
“ஆமாம். இல்லனா இவன் உருப்படவே மாட்டான்!” என்று ரகுவும் சேர்ந்து சொல்ல,கோவிலே சிரிப்பலையில் மூழ்கியது.
திருமணம் முடிந்ததும் எல்லோரும் கோவிலைச் சுற்றி வந்து குலதெய்வத்தை வணங்கினர்.
இளவேனில் மட்டும் சற்றுத் தள்ளி நின்று அம்மன் சன்னதியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது மனம் நிறைந்திருந்தது.
ஒரு காலத்தில் ஆதரவற்றோர் காப்பகத்தில் தனியாக நின்றவள்… இன்று இவ்வளவு பெரிய குடும்பத்தின் நடுவில் நின்று கொண்டிருக்கிறாள். அவளது கழுத்தில் இரண்டு தாலிகள். ஒன்று… காதலின் அடையாளம். மற்றொன்று… உரிமையின் அடையாளம். மெதுவாக அவளருகே வந்த தேவா, “என்ன யோசனை பார்பி டால்?” என்று கேட்டான்.
“எனக்கு இவ்வளவு பெரிய குடும்பம் கிடைக்கும்னு நான் கனவுல கூட நினைச்சதில்லை.” இளவேனில் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
தேவாவின் முகம் மென்மையாகியது. “இது ஆரம்பம் மட்டும் தான் வேனில்…” என்றான்.
“இனிமே உனக்கு கிடைக்கப் போற சந்தோஷம் இன்னும் நிறைய இருக்கு.” அவன் அவளது கையைப் பற்றிக் கொண்டான். இளவேனிலும் புன்னகையோடு அவனோடு நடக்கத் தொடங்கினாள்.
ஆனால்… அவர்கள் யாருக்கும் தெரியாமல்…
கோவிலுக்கு எதிரே இருந்த மலையின் உச்சியில் ஒரு பைனாகுலர் வழியாக அவர்களை ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் கண்களில் எரிந்தது வெறி. அவன் கரங்களில் இறுகச் சுருண்டிருந்தது ஒரு புகைப்படம்.
அந்தப் புகைப்படத்தில்… தேவா, இளவேனில், ரகு, மலர்விழி அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
“சிரிங்கடா…” என்று பற்களைக் கடித்தான் அவன்.
“இன்னும் கொஞ்ச நாள்தான்…” “அதுக்கப்புறம் உங்க வாழ்க்கையில இந்த சிரிப்பே இருக்காது.” என்ற ருத்ரனின் உதட்டில் கொடிய புன்னகை மலர்ந்தது.
காவியம் – 23
திருமணம் முடிந்த பிறகு அனைவரும் கோவிலின் மண்டபத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
ஜீவா மட்டும் அமைதியாக இல்லை. எப்போதும் போல தனது சேட்டைகளை ஆரம்பித்திருந்தான்.
நளினி சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஜீவா அவளைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருந்தான்.
அவளோ அவனை முறைத்துப் பார்த்தாள். “நளினி…” என்று பரிதாபமாக அழைத்தான்.
“என்ன?” என்று அவள் எரிச்சலுடன் நிமிர்ந்தாள்.
அவள் அருகில் வந்து அமர்ந்தவன்,தனக்கும் சாப்பாடு போட்டுக்கொண்டு, “கொஞ்சம் சாம்பார் வேணும்…” என்றான். நளினி எதுவும் பேசாமல் சாம்பாரை ஊற்றினாள். இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை.
“நளினி…”
“இப்ப என்ன?”
“அப்பளம் வேணும்.” என்றதும் நளினி அவனை முறைத்தாள்.
“உங்களுக்கு கையும் காலும் நல்லாத்தானே இருக்கு? நீங்களே எடுத்துக்குங்க!” என்று சொல்ல, இருவரின் உரையாடலைக் கேட்ட அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.
ஜீவாவோ முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டான். நளினிக்கு மட்டும் கேட்கும் விதமாக, “நான் உன் புருஷன் ஆகப்போறவன்டி…” என்று முணுமுணுத்தான்.
அவன் பேசியதைக் கேட்ட நளினி, அருகில் இருந்த தட்டை எடுத்துக்கொண்டு அவனை அடிக்கப் பாய்ந்தாள். இருவரின் வாக்குவாதத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிப்பில் மூழ்கினர்.
அந்தச் சிரிப்புகளுக்கு நடுவே தேவாவின் மனதில் மட்டும் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருந்தது.
கோவிலின் வெளிப்புறத்தை அவனது ஆட்கள் பாதுகாப்பாகச் சுற்றி நின்றிருந்தாலும், அவனுக்கு மனநிம்மதி வரவில்லை. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற உணர்வு அவனை விடாமல் துரத்தியது.
அதே நேரம்… கோட்டையின் ரகசிய அறையில், கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தான் பைரவன். அவனது கண்கள் சிவந்திருந்தன. அறையின் கதவு திறந்து, தேவாவின் நம்பிக்கையான ஆள் ஒருவன் உள்ளே வந்தான். பைரவனின் முன் ஒரு தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு,
“குடி…” என்றான்.
பைரவன் பேராசையாகத் தண்ணீரைக் குடித்துவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தான்.
“என் அண்ணன் ருத்ரன் என்னைக் காப்பாத்த கண்டிப்பா வருவான். அப்போ உங்க கதை முடிஞ்சிடும்…” என்று நக்கலாகச் சிரித்தான்.
“வரட்டும்… உன் அண்ணனுக்காகத்தான் எங்க தேவா அண்ணா காத்துட்டு இருக்காரு.” அவனும் அலட்சியமாகச் சிரித்து வெளியேறினான். பைரவனின் முகத்தில் இருந்த நம்பிக்கை மட்டும் சற்றும் குறையவில்லை.
ரகுவின் வாழ்க்கை இன்று முழுமை பெற்றிருந்தது.
மலர்விழியும் ரகுவும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருக்க, இளவேனில் அருகில் நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது பார்வையில் இருந்த ஏக்கத்தை உணர்ந்த தேவா மெதுவாக அவளருகே வந்து நின்றான்.
“நாமளும் ஆசிர்வாதம் வாங்கலாமா பார்பி டால்?” என்று காதோரம் கிசுகிசுத்தான்.
தன் மனதில் இருப்பதை அவன் முகம் பார்த்தே கண்டுபிடித்துவிட்டானே! என்ற மகிழ்ச்சியில், அவள் அவனது கையோடு கை கோர்த்தாள். இருவரும் சேர்ந்து பெரியவர்களின் காலில் விழுந்தனர்.
“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்…” என்று அவர்கள் மனமார வாழ்த்தினர்.
“அச்சோ… பதினாறு குழந்தைகளா?” என்று இளவேனில் உதடுகளுக்குள் முணுமுணுத்தாள். அதை காதில் வாங்கிய தேவா சிரித்தான்.
“பதினாறு குழந்தைகள் இல்லடி… பதினாறு செல்வங்கள் கிடைக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுறாங்க.” என்று சொல்லிவிட்டு அவளது இடையில் கைபோட்டு நெருக்கமாக இழுத்தவன், குறும்பாக அவள் இடையை லேசாகக் கிள்ளினான்.
“ஆஹ்!…” என்று துள்ளியவள் சுற்றிலும் பார்த்தாள். எல்லோரும் அங்கேயே இருந்தனர்.
“ஜங்கிள் கிங்… எல்லாரும் இருக்காங்க…” என்று வெட்கத்துடன் சிணுங்கினாள்.
“இருக்கட்டும்…” என்றவன் குறும்பாகச் சிரித்தான்.
இளவேனிலின் உதட்டில் வெட்கப் புன்னகை மலர்ந்தது.
இரவு நேரத்தில்… கோட்டையின் மேல் பகுதியில் இருந்த காவல் கோபுரத்தில் தனியாக நின்றிருந்தான் தேவா. காட்டின் இருள் முழுவதையும் அவனது விழிகள் ஆராய்ந்தன. அப்போது தன் பின்னால் காலடி சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தான் கையில் டீ கப்புடன் இளவேனில் நின்றிருந்தாள்.
“பார்பி டால்… இன்னும் தூங்கலையா?” என்று கேட்டான்.
“நீங்க என் பக்கம் இல்லாம எனக்கு மட்டும் எப்படி தூக்கம் வரும்?” என்று அவள் அருகில் வந்து நின்றாள்.
தேவாவின் முகத்தில் மெல்லிய புன்னகையுடன் அவளது கையில் இருந்த டீயை வாங்கிக் குடித்தான்.
“என்ன யோசனையில இருக்கீங்க?” என்று இளவேனில் கேட்டாள்.
தேவா தூரத்தில் விரிந்திருந்த இருண்ட காட்டைப் பார்த்தபடி ஆழமாக மூச்சை இழுத்தான்.
“புயல் நெருங்கிட்டு இருக்கு வேனில்…” என்றான்.
“ருத்ரனா?” என்று அவள் உடனே கேட்டாள்.
“ஆமா…” என்று அவன் தலையசைத்தான்.
“அப்போ?” இளவேனிலின் முகம் சீரியஸானது
தேவாவின் கண்கள் கூர்மையடைந்தன.
“இந்த தடவை மறைஞ்சு ஓடப்போறது நாம இல்ல… ருத்ரன் தான்.” என்றான் உறுதியான குரலில்.
கோட்டையிலிருந்து பல கிலோமீட்டர் தூரத்தில்… ஒரு பழைய பங்களாவில் அமர்ந்திருந்தான் ருத்ரன். அவன் முன்னால் வரைபடங்கள் விரித்து வைக்கப்பட்டிருந்தன. கோட்டையின் நுழைவாயில்கள்… காவல் பகுதிகள்… ரகசிய பாதைகள்… எல்லாம் குறிக்கப்பட்டிருந்தது.
அவனது ஆள் ஒருவன், “சார்… கோட்டைக்குள்ள நம்ம ஆள் வெற்றிகரமா நுழைஞ்சிட்டான்.” என்று சொன்னான்.
“நல்லது. இனி என்னோட ஆட்டத்தை ஆரம்பிக்கப் போறேன்.” ருத்ரனின் உதடுகள் மெல்ல விரிந்தன.
ஆனால்… ருத்ரனுக்குத் தெரியாத ஒரு விஷயம் இருந்தது. அவன் கோட்டைக்குள் அனுப்பிய ஆள்… உண்மையில் தேவாவுக்காகவே வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
ருத்ரன் விரித்த வலையில்… சிக்கப் போவது ருத்ரனே தான் என்று அவனுக்குத் தெரியாமல் போனது !
காட்டின் குளிர் காற்று வீசிக் கொண்டிருக்க தேவா இளவேனிலைத் தன் தோளோடு அணைத்தபடி நின்றிருந்தான்.
மறுநாள் காலை… கோட்டை முழுவதும் திருமணக் களை இன்னும் குறையாமல் இருந்தது.
மலர்விழி புதுப்பெண் வெட்கத்தோடு அறைக்குள் நடமாடிக் கொண்டிருந்தாள். ரகுவோ அவளது பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தான்.
“மலரு… கொஞ்சம் நிள்ளேன்.”
“எதுக்கு?”
“எனக்கு அவசரமா ஒரு முத்தம் வேணும்.”‘ என்று அவளை வெளியே போக விடாமல் அணைத்துக் கொண்டான்.
“நேத்து நைட் முழுவதும் முத்தம் கொடுத்தீங்களே மாமா இந்த கன்னம் எல்லாம் சிவந்து போய் கிடக்கு !” என்று அவன் பிடியில் நெளிந்தாள்.
“அது நேத்து. இப்பவே லிப்ல் முத்தம் வேணும்.” என்று அவளது இதழில் முத்தமிட துவங்கியவன் அவளை அணைத்தபடியே கட்டிலில் சாய்ந்தான்.
“மாமா விடிஞ்சுருச்சு நான் வெளியே போகணும்.” என்று அவள் கண்களை பார்த்துப் பேச அவனோ “மெதுவா போகலாம் யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க” என்று அவளது மாராப்பை விலக்கி அவளிடம் மந்திரம் படிக்க ஆரம்பித்தான்.
ரகு மலர்விழியிடம் காதல் மொழிகளை பேசிக்கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வர மலர்விழி வெட்கத்தில் அவன் தோளில் மெதுவாக அடித்தாள்.
அவர்களது காதலைப் பார்த்து நளினியும் ஜீவாவும் கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால்… தேவா மட்டும் அன்று காலை முதலே தீவிரமாக இருந்தான்.
அவன் அடிக்கடி தன் ஆட்களிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தான்.
மதிய நேரம்…
தேவா தன் அலுவலக அறையில் சில கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது நம்பிக்கையான ஆள் முருகன் அவசரமாக உள்ளே வந்தான்.
“அண்ணா…”
“என்ன?”
“நேத்து இரவு நம்ம எல்லைப் பகுதியில் ஒருத்தனை பிடிச்சிருக்காங்க.”
தேவாவின் புருவம் சுருங்கியது.
“யாரு?”
“ருத்ரன் ஆளு.” தேவாவின் கண்கள் கூர்மையானது.
“உயிரோட இருக்கானா?”
“இருக்கான்.”
“அவனை நிலவறைக்கு கொண்டு போங்க.”
“நானும் வர்றேன்.” என்றான்.
சில நிமிடங்களில்… கோட்டையின் கீழே இருந்த ரகசிய நிலவறையில் நின்றிருந்தான் தேவா. அவன் முன்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆள் நின்றிருந்தான்.
தேவா எதுவும் பேசாமல் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அமைதியே எதிரில் இருந்தவனை நடுங்க வைத்தது.
“உன்னை யாரு அனுப்பினது?” என்றான் சிம்ம குரலில்.
அவன் வாயைத் திறக்கவில்லை.
“சரி.” என்றவன் அவன் அருகில் நின்ற ஆட்களைப் பார்த்து “பைரவன் இருக்குற அறையில் இவனையும் அடைச்சு வைங்க?” என்றதும் அந்த ஆளின் முகம் சட்டென்று வெளிறியது.
பைரவன் பெயரைக் கேட்டதும் அவன் பயப்பட ஆரம்பித்தான்.
தேவா அவன் பயப்படுவதை கவனித்தான்.
அவனே அருகே சென்று “ஏன்? பைரவனை கண்டு உனக்கு பயமா இருக்கா?” என்றான். அவனோ நடுங்கினான்.
“சொல்றேன் சார்… ருத்ரன் சார் தான் அனுப்பினார்.” தேவாவின் கண்களில் வெற்றிப் புன்னகை மின்னியது.
அதே நேரம்… ருத்ரன் தன் பங்களாவில் பதட்டமாக நடந்து கொண்டிருந்தான்.
அவன் அனுப்பிய ஆள் இன்னும் தகவல் தரவில்லையென்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.
ருத்ரனின் ஃபோன் அடிக்க அவசரமாக எடுத்தான்.
ஆனால்… அடுத்த பக்கம் பேசிய குரலைக் கேட்டு அவனது முகம் இறுகியது.
“என்ன ருத்ரன்? நீ அனுப்பின ஆளைத் தேடுறியா?” என்று தேவாவின் குரல்.
ருத்ரன் பற்களைக் கடித்தான்.
“தேவா…அவனைப் பிடிச்சிட்டியா?” என்றான் ஆக்ரோஷமாக!
“ஆமா. பிடிச்சிட்டேன் இன்னும் உனக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறேன். என்னோட குடும்பத்தை விட்டு விலகிடு!.”
“இல்லனா என்னடா பண்ணுவ …”
“இந்த தடவை உன் தம்பியையும் காப்பாத்த முடியாது.” என்று சொல்லிவிட்டு ஃபோனை துண்டித்தான்.
ஃபோனை பார்த்தபடியே நின்ற ருத்ரனின் கண்கள் சிவந்தன.
“தேவா… நீ என்னை மிரட்டுற அளவுக்கு வந்துட்டியா?” என்று கையால் மேஜையை ஓங்கி அடித்தான். அவன் அருகில் நின்றிருந்த ஆள் பயந்து பின்னால் நகர்ந்தான்.
சில நொடிகள் யோசித்த ருத்ரன்… மெல்ல சிரிக்க ஆரம்பித்தான்.
அந்த சிரிப்பில் ஆபத்து இருந்தது.
“நேரடியா உன்னைத் தாக்க முடியல. ஆனா… உன் பலவீனத்தைத் தாக்க முடியும்.” என்று அவனது கண்களில் கொடூரம் மின்னியது.
அடுத்த ஒரு மாதம் தேவாவும் ருத்ரனும் நேரில் மோதிக்கொள்ளவில்லை. ஆனால் இருவரும் மறைமுகமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். ருத்ரனின் ஒவ்வொரு நகர்வையும் தேவா கண்காணித்துக் கொண்டிருந்தான். தேவாவின் திட்டங்களை உடைக்க ருத்ரனும் தன் ஆட்களை களமிறக்கியிருந்தான். புயலுக்கு முன் நிலவும் அமைதியைப் போல அந்த நாட்கள் கடந்து சென்றன.
இளவேனில் தோட்டத்தில் மலர்விழியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு திடீரென தலை சுற்றி மயக்கம் வருவது போல இருக்க அங்கே இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள்.
“அக்கா… என்னாச்சு ” என்று மலர்விழி பதறினாள்.
இளவேனில் சில நொடிகள் கண்களை மூடி இருந்தவள்… திடீரென வாந்தி எடுத்தாள்.
மலர்விழியோ “அக்கா… உங்களுக்கு என்னாச்சு?” என்று பதறினாள்.
அவளை விட தூரத்தில் நின்றிருந்த நளினியின் முகத்தில் மட்டும் மெதுவான புன்னகை மலர்ந்தது.
“இது சாதாரண மயக்கம் இல்ல போல…” என்று தனக்குள் முணுமுணுத்தாள். அவள் சின்ன பெண் என்றாலும் அவள் வாழ்ந்த கிராமத்தில் பெண்களுக்கு கல்யாணமான அடுத்த மாதத்தில் இப்படி மயக்கம் போட்டு விழுவதை பார்த்திருக்கிறாள்.
அங்கே வந்த நளினி, இளா அண்ணி தலை சுத்துதா?”
“ம்ம்…”
“காலைல இருந்து ஏதும் சாப்பிடப் பிடிக்கலையா?”
இளவேனில் யோசித்தாள். உண்மையாகவே கடந்த சில நாட்களாக சில உணவுகளின் வாசனையே அவளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
“ஆமா…” என்று அவள் சொன்னதும், நளினியின் புன்னகை இன்னும் விரிந்தது.
“முதல்ல அண்ணாகிட்ட சொல்லி டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க .” என்றாள் அர்த்தமாக.
மலர்விழிக்கு உடனே புரிந்து போனது. “அக்கா…” என்று குதூகலமாகக் கத்தினாள்.
“என்னடி?”
“எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு.”
இளவேனில் இன்னும் புரியாமல் பார்க்க,
நளினி சிரித்துக் கொண்டே, “நம்ம கோட்டைக்கு இன்னொரு குட்டி தேவா அண்ணா வரப்போகுதோ என்னவோ…” என்றாள்.
அடுத்த நொடி… இளவேனிலின் கன்னங்கள் சிவந்து போனது.
வெளியே சென்றிருந்த தேவா திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த எல்லாருடைய முகத்திலும் ஏதோ ரகசிய சந்தோஷம் தெரிந்தது.
“என்னடா எல்லாரும் பல்லை காட்டிட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.
ஜீவா உடனே சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
“ஒண்ணுமில்லை மச்சான். என் ஃபிரண்ட் கிட்ட கேளுங்க” என்றான் சிரிப்பை அடக்கி கொண்டு.
“மாமா… நீங்க முதல்ல அக்காவை கூட்டிட்டு டாக்டர்கிட்ட போங்க.” என்றாள் மலர்விழி.
தேவாவின் முகம் உடனே மாறியது. “ஏன்? வேனிலுக்கு என்னாச்சு?” என்று பதறினான்.
அரைமணி நேரத்திற்குப் பிறகு… நகரத்தில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் தேவாவும் இளவேனிலும் அமர்ந்திருந்தனர்.
தேவாவும் இளவேனிலின் கையை விடவே இல்லை “பார்பி டால் உனக்கு உடம்புக்கு ஏதாவது பண்ணுதா ?” என்று பத்தாவது முறையாகக் கேட்டான்.
“ஒண்ணுமில்லைன்னு சொல்றேன்ல.” என்று அவள் சுற்றி இருந்தவர்களை கண் காட்டினாள்.
“இல்ல… முகம் டல்லா இருக்கு.” என்றான் பதற்றத்துடன்.
இளவேனிலுக்கு சிரிப்பு வந்தது.
ஊருக்கு பெரிய தாதாவானாலும் என் விஷயத்தில் மட்டும் குழந்தை போல பதறுகிறானே என்று அவன் கண்களை காதலோடு பார்த்தாள் இளவேனில்.
சில பரிசோதனைகளுக்குப் பிறகு… டாக்டர் வெளியே வந்தவுடன் தேவா உடனே எழுந்து நின்றான்.
“டாக்டர்…”
“காங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் தேவா. டாக்டர் புன்னகைத்தார்.
“டாக்டர்…” அவனுக்கு பேச்சு வரவில்லை.
“நீங்க அப்பாவாகப் போறீங்க.”
ஒரு நொடி… தேவாவுக்கு உலகமே நின்றது போல இருந்தது.
அவன் டாக்டரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன சொன்னீங்க?”
“உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்க.”
அந்த நொடி… தேவாவின் கண்கள் மெதுவாகக் கலங்கின.
பல வருடங்களுக்கு முன்பு…
தன் குடும்பத்தையே இழந்து தனிமையில் நின்றவன்.
இன்று… அவனுக்கென்று ஒரு குடும்பம் உருவாகிக் கொண்டிருந்தது. அவன் பக்கம் நின்ற இளவேனிலைப் பார்த்தான். அவளது கண்களும் கண்ணீரால் நிரம்பியிருந்தது.
மெதுவாக அவளருகே வந்தவன்… அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
“தேங்க்ஸ் வேனில்…” என்று கரகரத்த குரலில் சொன்னான்.
“எதுக்கு?”
“எனக்கு வாழ்க்கையையே திருப்பிக் கொடுத்ததுக்கு.”
இளவேனிலின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
ஆனால்… அவர்களுக்குத் தெரியாமல்…
மருத்துவமனையின் வெளியே நின்றிருந்த ஒரு மனிதன், தனது மொபைலில் அவர்களது புகைப்படத்தை எடுத்தவன் உடனே ஒரு எண்ணிற்கு அழைத்தான்.
“சார்…”
“சொல்லு.”
“இளவேனில் கர்ப்பமா இருக்காங்க.” அடுத்த பக்கம் சில நொடிகள் அமைதியாக இருந்தது.
ருத்ரனின் உதடுகளில் ஆபத்தான புன்னகை மலர்ந்தது.
“தேவாவோட பலவீனம் இப்போ அவன் மனைவியும், குழந்தையும். அவனோட பலவீனம் எனக்கு கிடைச்சுடுச்சு.” என்று நாராசமாய் சிரித்தான்.
காருக்குள் அமர்ந்திருந்த தேவா, இளவேனிலின் கையைப் பிடித்தபடி இருந்தவனின் பார்வை மெதுவாக அவளது வயிற்றின் மீது சென்றது.
அவர்களின் காதலின் உயிர் வளர்ந்து கொண்டிருந்தது.
ஆனால்… அந்தக் குட்டி உயிருக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் இன்னும் அறிந்திருக்கவில்லை.
மருத்துவமனையில் இருந்து கோட்டைக்குத் திரும்பியதிலிருந்து தேவாவின் முகத்தில் இருந்த சந்தோஷம் குறையவே இல்லை.
வீட்டிற்குள் நுழைந்த உடனே…
“டேய் ஜீவா!” என்று சத்தமாகக் கத்தியவன், ஹாலில் அமர்ந்திருந்த ஜீவாவைத் தூக்கி அணைத்துக் கொண்டான்.
“தேவா அண்ணா… நான் மாமாவாக போறேன் தானே?” என்று ஜீவா சந்தோசமாக கேட்க,
தேவாவோ பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே இருந்தான்.
அவனது முகத்தில் இருந்த மகிழ்ச்சியைப் பார்த்த ரகுவுக்கு ஏதோ புரிந்து போனது.
ரகுவோ “அண்ணா…சொல்லுங்க ” என்றான் மெதுவாக…
“நிஜமாவா?” என்று ரகு கேட்டதும்…
தேவாவின் கண்கள் கலங்கின. ஆமா என்று மெதுவாகத் தலையசைத்தான். வீடே சந்தோஷத்தில் மூழ்கியது. மலர்விழி ஓடிவந்து இளவேனிலை அணைத்துக் கொண்டாள்.
“அக்கா… நான் சித்தி ஆகப்போறேன்!” என்று குழந்தை போலக் குதித்தாள்.
ரகுவும் சந்தோஷமாக அவளது தலையில் தட்டினான். நளினி வீட்டில் செய்த கேசரியை எடுத்து வந்து இளவேனில் வாயில் ஊட்டி விட்டாள்.
தேவாவின் பார்வை மட்டும் தன் மனைவியின் மீதே நிலைத்திருந்தது. இளவேனிலும் அவனைப் பார்த்தாள்.
அவர்கள் பார்வையில் வார்த்தைகளால் சொல்ல முடியாத காதல் இருந்தது.
அன்றிரவு… அனைவரும் தூங்கிய பிறகு… இளவேனில் பால்கனியில் நின்று நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பின்னே வந்து நின்ற தேவா அவளது வயிற்றின் மீது தன் கரத்தை வைத்தான்.
இளவேனில் வெட்கத்தோடு சிரித்தாள்.
“என்ன ஜங்கிள் கிங்?”
“என் பையன் தூங்குறானா?”
“பையனா?”
“ஆமா.”
“பொண்ணா இருந்தா?”
“என் பார்பி டால் மாதிரி இருப்பா.” என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
“இப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா?” இளவேனில் சிரித்தாள்.
மெதுவாக மண்டியிட்டு அமர்ந்தவன்… அவளது வயிற்றில் முத்தமிட்டான். இளவேனிலின் கண்கள் உடனே கலங்கின.
“அத்தான்…”
“ம்ம் சொல்லு வேனில் ?”
“எனக்கு பயமா இருக்கு.
“தேவா நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“எதுக்கு?”
“இவ்வளவு சந்தோஷம் எனக்கு நிலைக்குமா?” அவள் கேட்ட கேள்வியில் இருந்த பயம் அவனுக்குப் புரிந்தது.
மெதுவாக அவளை அணைத்துக் கொண்டான்.
“நான் இருக்கிற வரைக்கும்… உனக்கும்… நம்ம குழந்தைக்கும்… எதுவும் ஆகாது.” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
பழைய கிடங்கில்… ருத்ரன் நின்றிருந்தான்.
அவன் முன்னால் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான் பைரவன்.
தேவாவின் ஆட்களில் ஒருவனை பணம் கொடுத்து வாங்கியிருந்தான் ருத்ரன்.அவன் மூலமாக பைரவனை எப்படியோ வெளியே கொண்டு வந்திருந்தான். தம்பியைப் பார்த்ததும் ருத்ரனின் கண்கள் சிவந்தன.
“தேவா!!!…” என்று பற்களைக் கடித்தான்.
பைரவன் கோபமாக தட்டுத் தடுமாறி எழுந்து நின்றவன் “அண்ணா! தேவா என்னை என்ன பாடுபடுத்திருக்கான் தெரியுமா?” என்று பல்லைக் கடித்தான்.
“இனி அவன் ஆட்டம் முடிஞ்சுடுச்சு. “இனிமே அவன் சிரிக்க மாட்டான்.” என்று ருத்ரன் மேஜையின் மீது ஒரு புகைப்படத்தை வைத்தான்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த தேவாவும் இளவேனிலும் இருந்த புகைப்படத்தின் மீது அவனது விரல் சென்றது இளவேனிலின் வயிற்றின் மீது.
தேவாவோட இதயத்துல குத்தணும்னா… அவன் உயிரைத் தொடக்கூடாது. அவன் உயிரா நினைக்கிறதைத் தொட்டா போதும்.” என்று பைரவனின் முகத்தில் கொடூரமான சிரிப்பு வந்தது.
ருத்ரன் நினைத்தது போல தேவா சாதாரண ஆள் இல்லை.
அதே நேரம்…
கோட்டையின் ரகசிய அறையில் அமர்ந்திருந்த தேவா… தன் கையில் இருந்த கோப்பை மூடினான்.
அவன் முன்னால் இருந்த கோப்பில்… ருத்ரன், பைரவன் மற்றும் நடராஜன் தொடர்பான முழு ஆதாரங்கள். பல வருடங்களாகச் சேகரித்த சாட்சிகள், வீடியோக்கள், ஆவணங்கள், கடத்தப்பட்ட சிலைகளின் விவரங்கள் என எல்லாமே தயாராக இருந்தது.
தேவாவின் உதட்டில் மெதுவான புன்னகை மலர்ந்தது.
“ருத்ரா…” உன்னோட கடைசி ஆட்டத்துக்கு நானும் ரெடியா இருக்கேன்.” என்று முணுமுணுத்தான்.
காவியம் – 24
கோட்டையின் மேல் தளத்தில் நின்று காட்டை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தவன், பின்னால் வந்த காலடி சத்தத்தைக் கேட்டு திரும்பினான்.
“அண்ணா…” என்று அழைத்தபடி வந்தான் ரகு. தேவாவின் முகத்தைப் பார்த்ததும் அவனுக்கு ஏதோ புரிந்தது. “இன்னைக்குதானா ருத்ரனுக்கு தண்டனை கொடுக்க போறீங்க ?” என்று மெதுவாகக் கேட்டான்.
“இன்னைக்குத்தான்.” என்று தேவா தலையசைத்தான்.
பல வருடங்களாக தன் குடும்பத்தை நிம்மதியாக வாழ விடாமல் துரத்திய ருத்ரனின் கதைக்கு இன்று முடிவு கட்டப் போகிறேன். அவனது குரலில் உறுதி இருந்தது.
அதே நேரம்… ருத்ரனும் தன் ஆட்களுடன் காட்டின் மறுபுறம் நின்றிருந்தான். அவன் முகத்தில் வெறி தெரிந்தது. “இன்னைக்கு தேவா முடிஞ்சான்.” என்று பற்களைக் கடித்தான்.
பைரவனும் அவன் அருகே நின்றிருந்தான். “அண்ணா… முதல்ல அந்த இளவேனிலை தூக்கிடலாம்.” என்று சொன்னான்.
“அவசரப்படாத!.” என ருத்ரன் சிரித்தான்.
“முதல்ல தேவாவோட மனசை உடைக்கணும்.” என்றான் குரூர எண்ணத்தில்.
இளவேனில் தோட்டத்தில் தனியாக அமர்ந்திருந்தாள். தேவா வெளியே சென்றிருந்தான். மலர்விழியும் நளினியும் சமையலறையில் இருந்தனர்.
அப்போது… கோட்டையின் பின்புறச் சுவரைத் தாண்டி இரண்டு பேர் உள்ளே குதித்தனர்.
நேராக இளவேனிலை நோக்கி நகர்ந்தனர்.
ஆனால்… அடுத்த நொடி… “டேய்!” என்ற கர்ஜனை கேட்டது.
எங்கிருந்தோ வந்த தேவாவின் ஆட்கள் இருவரையும் சுற்றி வளைத்தனர்.
சில நொடிகளில் அவர்கள் தரையில் கிடந்தனர். இளவேனில் அதிர்ச்சியுடன் வயிற்றைப் பிடித்து எழுந்து நின்றாள்.
“வந்துட்டீங்களா? உங்களால் ஒன்னும் பண்ண முடியாத படி எல்லாம் பக்கவா பண்ணிட்டேன்” என்று மெதுவாக கை தட்டிக்கொண்டே அங்கே வந்தான் தேவா. அவன் முகத்தில் பயம் இல்லை. கோபமும் இல்லை. இரைக்காக காத்திருந்த வேட்டைக்காரனின் அமைதி இருந்தது.
இளவேனில் வேகமாய் நடந்து வந்து தேவாவின் கையை பிடித்து கொண்டாள். “நான் இருக்கேன்டி பயப்படாதே” என்றவன் “டேய்! அவனுக்களைப் பிடித்து கட்டிப் போடுங்க” என்றவன் இளவேனிலை அரவணைத்து அறைக்கு அழைத்துச் சென்று விட்டான்.
காட்டின் நடுவே இருந்த பழைய கல் மண்டபம். அங்கே தேவாவும் ருத்ரனும் நேருக்கு நேர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ருத்ரன் நினைத்தது… தேவா தனியாக வருவான் என்று. ஆனால்… அவன் வந்தபோது அங்கே காத்திருந்தது வேறு ஒன்று.
அங்கே போலீஸ்காரர்கள், அரசு அதிகாரிகள், தொல்பொருள் துறை அதிகாரிகள், எல்லோரும்…
ருத்ரன் அதிர்ச்சியில் நின்றான்.
தேவா மெதுவாக முன்னே வந்தான். அவனது கையில் ஒரு பென்டிரைவ் இருந்தது.
“என்னடா இது?” என்று ருத்ரன் உறுமினான்.
“உன்னோட வாழ்க்கை.” தேவா சிரித்தான்.
“என்ன சொல்ற?”
“கடத்தல்.”
“சிலை திருட்டு.”
“பொய் என்கவுண்டர்.”
“அதிகார துஷ்பிரயோகம்.”
“என் குடும்பத்தை கொன்ற சதி.” என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தான் தேவா.
ருத்ரனின் முகம் மாறியது.
“நடராஜனோட எல்லா டீலும், நீ வாங்கின லஞ்சமும், நீயும், நடராஜனும் அவன் தம்பியும் சேர்ந்து செய்து மறைச்ச கொலையும், எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு.” கூறிக்கொண்டே தேவா பென்டிரைவை அதிகாரியிடம் கொடுத்தான்.
“நான் காத்திருந்தது இந்த நாளுக்குத்தான்.” என்றான் தேவா தான் ஜெயித்து விட்டேன் என்றான் கர்வத்தில்.
ருத்ரன் கோபத்தில் தன் துப்பாக்கியை எடுத்து “தேவா!” என்று கத்தியவன் அவனை நோக்கி குறி வைத்தான்.
ஆனால்… அடுத்த நொடி… “டிராப் தி கன்!” என்று பல துப்பாக்கிகள் அவனை நோக்கி நீண்டன.
ருத்ரன் சுற்றிப் பார்த்தான். அவன் முழுவதுமாக சிக்கியிருந்தான். அவன் கண்கள் தேவாவை நோக்கின.
“நீ ஜெயிச்சிட்டேன்னு நினைக்காத.” என்று உறுமினான்.
தேவா அமைதியாக “நான் ஜெயிக்கல ருத்ரா. உண்மைதான் ஜெயிச்சிருக்கு என்றான் நிதானமான குரலில் ருத்ரனுக்கும் பைரவனுக்கும் மற்றும் இவர்களுக்கு உதவி செய்த நடராஜனுக்கு விலங்கு மாட்டி அவர்களை போலீசார் அழைத்துச் செல்ல ஆரம்பித்தனர்.
போகும் முன்… ருத்ரன் ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.
தேவா இடுப்பில் கை கொடுத்து கம்பீரமாக நின்றிருந்தான்.
ருத்ரன் சென்றதும்…
பல வருடங்களாக தேவாவின் மார்பில் இருந்த பாரம் இறங்கியது. ரகு ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டான்.
“எல்லாம் முடிஞ்சுடுச்சு அண்ணா.”
“ஆமாடா. “எல்லாம் முடிஞ்சுடுச்சு.” தேவாவின் கண்கள் தானாகவே கலங்கின.
கோட்டைக்குத் திரும்பிய தேவாவை பார்த்ததும் இளவேனில் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?” என்று அவள் பதற்றமாகக் கேட்டாள்.
தேவா பதில் சொல்லவில்லை. அவளது நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான். “முடிஞ்சுடுச்சு வேனில். இனிமே நம்ம வாழ்க்கையில பயமே இல்லை.” அவனது கரம் மெதுவாக அவளது வயிற்றின் மீது சென்றது.
அங்கே வளர்ந்து கொண்டிருந்த அவர்களது காதலின் அடையாளத்தை உணர்ந்தவன்… மெதுவாக சிரித்தான்.
இனி அவனுக்கு ஜங்கிள் கிங்காக வாழ வேண்டிய அவசியம் இல்லை. தேவாவாக… கணவனாக… அப்பாவாக… வாழப் போகிறான்.
கோட்டையின் பெரிய மண்டபம் அந்த மாலை மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. ருத்ரன் கைது செய்யப்பட்ட செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பல வருடங்களாக மக்கள் மனதில் பயத்தை விதைத்திருந்தவன், இன்று சட்டத்தின் முன் தலைகுனிந்து நின்றான். தேவாவைச் சுற்றி அவனது குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.
மலர்விழி ரகுவின் தோளில் சாய்ந்து நின்றாள். ஜீவா வழக்கம்போல் ஏதோ காமெடி பேசி எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான். இளவேனில் அமைதியாக தேவாவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இத்தனை வருடங்கள் போராட்டம்…
இத்தனை வருடங்கள் கண்ணீர்…
இத்தனை வருடங்கள் உயிரைப் பணயம் வைத்து நடந்த வாழ்க்கை…
இன்று எல்லாம் முடிந்து போனது போல ஒரு நிம்மதி.
அவளது பார்வையை உணர்ந்த தேவா, அவள் அருகே வந்து நின்றான்.
“என்ன பார்பி டால் ?” என்று மெதுவாகக் கேட்டான்.
இளவேனில் பதில் சொல்லவில்லை.
“என் வாழ்க்கையில கிடைச்ச மிகப்பெரிய பரிசு நீதான் வேனில்… இப்போ… நீ எனக்குக் கொடுக்கப் போற இந்தக் குட்டியும்…” என்றவனின் குரல் உணர்ச்சியில் உடைந்தது.
இளவேனிலின் கண்களும் கலங்கின.
அவள் மெதுவாக அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.
மூன்று மாதங்கள் கழித்து…
கோட்டை மீண்டும் பழைய உயிர்ப்புடன் இருந்தது.
ரகுவும் மலர்விழியும் தங்களது புதிய வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தனர்.
ஜீவா இன்னும் நளினியை சுற்றியே சுற்றியே வந்து கொண்டிருந்தான்.
தேவாவோ… இளவேனிலை ஒரு நிமிடம் கூட தனியாக விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் ஒரு படி நடந்தாலும்… “பாத்து…” அவள் படிக்கட்டில் ஏறினாலும்… “மெதுவா…” அவள் வாய் விட்டு சிரித்தாலும்… “மெதுவா சிரி?” என்று சொல்லிக் கொண்டே இருப்பான்.
அவன் செய்யும் அலப்பறைகளைப் பார்த்து எல்லோரும் சிரித்தனர்.
கோட்டையின் தோட்டத்தில் இருந்த மர ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் இளவேனில்.
அவளது தலையை தேவாவின் தோளில் சாய்த்துக் கொண்டிருந்தாள். மாலைக் காற்று மெதுவாக வீசியது. தொலைவில் பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. அந்த அமைதியை ரசித்தபடி நின்ற தேவா, வானத்தை நோக்கிப் பார்த்தான்.
“வேனில்…” என்றான்.
“ம்ம்…”
“என் வாழ்க்கையில நடந்த எல்லா கஷ்டத்துக்கும் கடவுள் கொடுத்த பரிசு நீதான்.” இளவேனில் மெதுவாக நிமிர்ந்து அவனைப் காதலாக பார்த்தாள்.
“ஒரு காலத்துல… நானும் என் தம்பியும் மட்டும் தான் நினைச்சேன். ஆனா இப்போ… எனக்கு ஒரு குடும்பம் இருக்கு. எனக்காக உயிரையே கொடுக்கத் தயாரா இருக்குற மனைவி இருக்கா. என் குழந்தை வரப் போகுது. இதுக்கு மேல எனக்கு என்ன வேணும்?” என்றான் துள்ளி குதிக்காத சந்தோஷத்தில்.
இளவேனிலின் கண்கள் கலங்கின. அவள் எதுவும் பேசாமல் அவனது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.
தேவாவும் அவளது விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டான்.
அந்த மாலை சூரியன் மெதுவாக மறைந்து கொண்டிருந்தான்.
அவர்களது காதல் இன்னும் அழகாக விடிந்து கொண்டே இருந்தது…
எபிலாக்
ஐந்து ஆண்டுகள் கழித்து…
தேவாவின் கோட்டை முற்றிலும் மாறியிருந்தது.
ஒரு காலத்தில் சிலை கடத்தலால் பெயர் கெட்ட அந்தப் பகுதி, இன்று பாரம்பரிய சிலைச் சிற்பக் கலைக்காக நாடு முழுவதும் அறியப்பட்ட இடமாக மாறியிருந்தது.
தேவாவின் முயற்சியால் பழங்கால கலை வடிவங்கள் மீண்டும் உயிர் பெற்றிருந்தன. பல கோவில்களுக்கு தேவையான தெய்வச் சிலைகளை உருவாக்கும் பெரிய கலைக்கூடத்தை நிறுவியிருந்தான். நூற்றுக்கணக்கான சிற்பிகளுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்திருந்தது.
அதோடு நின்றுவிடவில்லை தேவா தன் குடும்பம் சந்தித்த கஷ்டங்களை நினைத்து, ஏழை குழந்தைகள் இலவசமாக படிக்கும் வகையில் ஒரு பெரிய பள்ளியையும் கட்டியிருந்தான். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்தாள் மலர்விழி.
ரகுவும், மலர்விழியும் ஒரு அழகான பெண் குழந்தைக்கு பெற்றோர்களாகி இருந்தனர். அந்தக் குட்டியின் உலகமே அவளது பெரியப்பா தேவா தான்.
அவள் “பெரியப்பா…” என்று ஓடிவந்தாலே, எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் தங்க குட்டி என்று அவளைத் தூக்கிக் கொள்வான்.
ஜீவாவும் நளினியும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு குறும்புக்கார மகன்.
அப்பாவைப் போலவே அவனும் வாயாடன். ஜீவா மட்டும் இன்னும் மாறவில்லை. இப்போதும் அதே கலகலப்பு… அதே குறும்பு… ஆனால் இப்போது அவன் தேவாவின் வலது கையாகவும், தனிப்பட்ட உதவியாளராகவும் இருந்தான்.
அன்று மாலை… கோட்டையின் தோட்டத்தில் இருந்த மர ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் இளவேனில்.
அவளது மடியில் மூன்று வயது சிறுமி நிலாஷினி அமர்ந்திருந்தாள். ஊஞ்சலை சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தான் நான்கு வயது சிறுவன் தேவாவின் மறு அச்சு அவன் பெயர் ஆதவ் தேவன்.
இருவரும் தேவாவுக்கும் இளவேனிலுக்கும் கிடைத்த பொக்கிஷங்கள். தேவா மெதுவாக வந்து இளவேனிலின் அருகில் அமர்ந்தான். அவன் அருகே அமர்ந்ததும் அவனது மகள் அப்பா என்று தந்தையின் கையில் தாவி விட்டாள்.
ரகுவின் மகள் விலாசினி “ஏய்! நிலாஷினி வா விளையாடலாம்” என்று பெரியப்பாவின் மடியில் இருக்கும் நிலாசினியை கூப்பிட நிலாஷினி இறங்கி ஓடியது.
“பார்த்து விளையாடுங்க” என்று குழந்தைகளுக்கு சொல்லிவிட்டு தேவாவின் தோளில் சாய்ந்தாள் இளவேனில்.
குழந்தைகள் சந்தோசமாக துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்க…
“பார்பி டால்…”
“ம்ம்…”
“நான் ஒன்னு கேட்பேன் சொல்லு” என்றான்.
“கேளுங்க ஜங்கிள் கிங்” என்று அவன் தோளில் சாய்ந்தாள்.
“என்னை உனக்கு எப்போ இருந்து பிடிச்சுது? சொல்லு” என்று கேட்டான்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும், அந்தக் கேள்வியைக் கேட்டதும் இளவேனிலின் கன்னங்கள் சிவந்தன.
“இப்போ எதுக்கு இதெல்லாம்?”
“சொல்லு பார்பி டால்…” என்று அவன் விடாமல் கேட்டான்.
இளவேனில் வெட்கச் சிரிப்புடன் “முதல்ல உங்களை பார்த்தப்போ, நீங்க என் முகத்துல சிகரெட் புகையை ஊதி தள்ளுனீங்க. அப்போ எனக்கு கோபமும் பயமும் வந்துச்சு. ஆனா… உங்க கண்ணைப் பார்த்ததும், நீங்க கெட்டவரா இருக்க முடியாதுன்னு என் மனசு சொல்லுச்சு. அதுக்கப்புறம் ஒவ்வொரு தடவையும் என்னை நீங்க காப்பாத்தினதும், எனக்காக நீங்க யோசிச்சதும், என் கண்ணீரைக் கூட உங்களால தாங்கிக்க முடியாம தவிச்சதும்… கொஞ்சம் கொஞ்சமா என் மனசுக்குள்ள வந்துட்டீங்க. எப்போ உங்களை காதலிக்க ஆரம்பிச்சேன்னு எனக்கே தெரியல. ஒரு நாள் நீங்க என் கையைப் பிடிச்சிட்டு, ‘நான் இருக்கிற வரைக்கும் உனக்கு எதுவும் ஆகாதுனு சொன்னீங்களே. அன்னைக்குத்தான் என் வாழ்க்கை முழுக்க உங்க கூடவே வாழணும்னு ஆசைப்பட்டேன். அப்பவே என் ஜங்கிள் கிங்கை என் மனசுக்குள்ள பூட்டி வச்சிட்டேன் அத்தான்…” என்றாள் வெட்கத்தோடு.
தேவாவின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
“அப்படியா பார்பி டால்?” என்று அவளை நெருக்கமாக இழுத்தவன், “ஆனா நான் உன்னை முதல்ல பார்த்த நாளே தோத்துட்டேன்…” என்றான் காதலோடு.
“எதுல?”
“உன் கண்ணுல…” என்றவன் அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
இளவேனில் வெட்கத்தில் அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அந்த நேரத்தில்…
“அப்பா…!” என்று ஓடி வந்தான் ஆதவ் தேவன்.
“அம்மா…!” என்று துள்ளிக்குதித்தபடி வந்தாள் நிலாஷினி.
அவர்களுக்குப் பின்னால், “பெரியப்பா… என்னையும் தூக்குங்க!” என்று ஓடி வந்தாள் விலாசினி.
குழந்தைகளின் சிரிப்புச் சத்தத்தில் அந்த மாலையும் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
தேவா தன் மனைவியையும், குழந்தைகளையும், குடும்பத்தினரையும் கண்ணின் இமை போல் பாதுகாத்தான்.
ஒரு காலத்தில் தனிமை மட்டுமே அவனது வாழ்க்கையாக இருந்தது.
இன்று… அன்பான மனைவி… அழகான குழந்தைகள்… உயிராய் நினைக்கும் தம்பி… அன்பான குடும்பம்…
மக்கள் மதிக்கும் வாழ்க்கை… என்று அவன் கனவு கண்ட அனைத்தும் அவனிடம் இருந்தது.
இளவேனிலின் கரத்தை இறுக்கமாகப் பற்றியவன் வானத்தை நோக்கிப் பார்த்தான். அவனது உதடுகளில் நிறைவான புன்னகை மலர்ந்தது. காதலால் தொடங்கிய அவர்களது பயணம்… பல சோதனைகளைக் கடந்து… குடும்பமாக மலர்ந்தது…
அடுத்த கதையில் சந்திப்போம்.
சுபம்.

Благодарю Вас за помощь в этом вопросе. У Вас замечательный форум.
I dagens värld av virtuella casinon är snabba uttag avgörande. Många spelare värderar att få sina vinster snabbt. casino snabba uttag, [url=https://learn.ctglobal.my/snabba-casino-din-guide-till-snabbspelande/]https://learn.ctglobal.my/snabba-casino-din-guide-till-snabbspelande/[/url] möjliggör en enkel upplevelse, vilket gör underhållningen mer spännande. Välj ett casino med snabba uttag för en god spelupplevelse.
Мультфильмы, семейные категории и дорамы тоже проще искать через отдельные подборки https://movietut.top/filmy/best/filmy-v-4k-uhd/2025/ лучшие фильмы 4k uhd 2025 года скачать через торрент на русском разделы есть на КиноТут
casina online, [url=https://joshnews.in/?p=52540]https://joshnews.in/?p=52540[/url] umoЕѕЕ€uje hrГЎДЌЕЇm neomezenГ© moЕѕnosti hranГ. DГky modernГ technologie si mohou uЕѕГt gigantickГЅ vГЅbД›r online her.
Many players are seeking internet gaming options that offer freedom from local restrictions. Casinos Not on Gamstop, [url=http://www.livesicily.it/2026/05/14/the-rise-of-non-gamstop-casinos-a-comprehensive-4/]http://www.livesicily.it/2026/05/14/the-rise-of-non-gamstop-casinos-a-comprehensive-4/[/url] provide a chance for those who want playing without limitations. Uncover these platforms for different experiences.
Я думаю, что Вы не правы. Я уверен. Давайте обсудим. Пишите мне в PM, поговорим.
Play online casino, [url=https://magme.madeinitalyslc.it/2026/05/22/12play-singapore-127/]https://magme.madeinitalyslc.it/2026/05/22/12play-singapore-127/[/url] and enjoy the thrilling experience of gambling from the comfort of your home. Select diverse games like slots, poker and find exciting promotions. Cash out while having fun!
HeySpin Casino DK, [url=https://tejasvistudio.com/heyspin-casino-dk-oplev-spil-bonusser-og-underholdning-2014288531/]https://tejasvistudio.com/heyspin-casino-dk-oplev-spil-bonusser-og-underholdning-2014288531/[/url] tilbyder en enestående spiloplevelse hos spillere. Med det varieret udvalg af automater og præmier, er der et eller andet for hvis. Besøg siden i dag og oplevel en år med glæde.
In the domain of online gambling, a Casino Website, [url=http://mbbs.com/discover-the-thrills-at-captain-marlin-casino/]http://mbbs.com/discover-the-thrills-at-captain-marlin-casino/[/url] offers exciting games. Players can enjoy various options like slots, poker, and roulette. Promotions attract many fans seeking excitement.
Нече себе !!!!!!!!!!!!!!!!!
Casinos Not on Gamstop, [url=http://sascarlaauto.fr/2026/06/03/explore-the-world-of-casinos-non-gamstop/]http://sascarlaauto.fr/2026/06/03/explore-the-world-of-casinos-non-gamstop/[/url] offer players a unique experience. These types of casinos provide a more extensive range of games and bonuses. Players can enjoy choice from harsh regulations.
Зашебись!
Playing at live roulette sites, [url=https://shootingstars.dreamhosters.com/2026/04/26/the-ultimate-guide-to-the-best-live-roulette/]https://shootingstars.dreamhosters.com/2026/04/26/the-ultimate-guide-to-the-best-live-roulette/[/url] presents a thrilling experience for enthusiasts. Participants might enjoy real-time action while interacting with dealers. The joy of betting on a spinning wheel often feels unbeatable. Live roulette sites turn out to be a great choice for anyone looking to have fun.
Discovering the top foreign online casinos can elevate your gaming experience. Offering a variety of games, high-quality bonuses, and safe transactions, these casinos stand out globally. Investigate the best foreign online casinos, [url=http://alvoradapflege.de/ontdek-de-wereld-van-idgroup-innovatie-in-online/]http://alvoradapflege.de/ontdek-de-wereld-van-idgroup-innovatie-in-online/[/url] today!
non GamStop UK casinos, [url=http://itsasunshinething.com/exploring-alternative-gambling-platforms-safe-fun/]http://itsasunshinething.com/exploring-alternative-gambling-platforms-safe-fun/[/url] offer players an exciting opportunity to enjoy their favorite games without restrictions. These platforms provide a wide selection of gambling options and appealing bonuses, making them a popular choice among players. Enjoy the thrill of gaming with no limits!
casino online udenlandsk, [url=https://polaluce.com/oplev-spndingen-ved-at-spille-casino-p-udenlandske/]https://polaluce.com/oplev-spndingen-ved-at-spille-casino-p-udenlandske/[/url] tilbyder et væld af spændende spil og underholdning. Spillere kan vælge mellem flere platforme, der tilbyder mulighed for spænding hjemmefra. Nyd denne spændende spilleoplevelse i dag!
Понял не всё.
Att välja ett digitalt casino kan vara utmanande. Mer och mer spelare söker efter rapid lösningar. En av de mest populära alternativen är casino snabb utbetalning, [url=http://www.joeblair.com.au/utlandska-casino-med-snabb-utbetalning-en-guide-9/]http://www.joeblair.com.au/utlandska-casino-med-snabb-utbetalning-en-guide-9/[/url], där spelare kan få sina vinster snart utbetalda. Genom att använda nuförtiden betalningsmetoder blir processen snarare enklare och säker. Spelare kan därför njuta av sina vinster utan dröjsmål.
bezpeДЌnГ© casino, [url=http://www.kurtmakeweb.com/betcasino6053/zahranini-kasina-jak-vybrat-to-prave-pro-vas/]http://www.kurtmakeweb.com/betcasino6053/zahranini-kasina-jak-vybrat-to-prave-pro-vas/[/url] – HranГ v bezpeДЌnГ© casino zaruДЌuje nejen zГЎbavu, ale takГ© ochranu vaЕЎich osobnГch ГєdajЕЇ. VЕѕdy si vybГrejte regulovanГ© platformy, kterГ© splЕ€ujГ bezpeДЌnostnГ normy. ZabezpeДЌenГ transakcГ a fГ©rovost her jsou prioritou.
HeySpin Casino DK, [url=https://ocursoesteticaautomotiva.com.br/opdag-heyspin-casino-dk-den-ultimative-spiloplevelse/]https://ocursoesteticaautomotiva.com.br/opdag-heyspin-casino-dk-den-ultimative-spiloplevelse/[/url] tilbyder en imponerende udvalg af spil. Spillere kan udforske mange slots og live dealer spil. hjælpen er klar døgnet rundt, så alle henvendelser besvares hurtigt. Gå ikke glip af bonusser og kampagner der gør oplevelsen endnu bedre!
Прикол жестокий!
В мире digital marketing одним из наиболее значимых аспектов выступает phoenixproject SEO, [url=https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7463499139868319745]https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7463499139868319745[/url]. Настройка сайтов под поисковые системы обеспечивает прокладку трафика. Качественное продвижение содержит постоянный успех.
Абсолютно с Вами согласен. В этом что-то есть и мне кажется это отличная мысль. Полностью с Вами соглашусь.
Casinos Not on Gamstop UK, [url=https://www.ameeralbaher.com/discover-casino-sites-not-on-gamstop-for-unrestricted-fun/]https://www.ameeralbaher.com/discover-casino-sites-not-on-gamstop-for-unrestricted-fun/[/url] offer various gaming experience for players seeking variety. These casinos feature a wide range of games, promising an exciting atmosphere. Join today at Casinos Not on Gamstop UK!
non GamStop UK casinos, [url=http://xs367662.xsrv.jp/wp-acre/2026/05/26/discover-reputable-casinos-not-using-gamstop/]http://xs367662.xsrv.jp/wp-acre/2026/05/26/discover-reputable-casinos-not-using-gamstop/[/url] offer an exceptional alternative for players who seek flexibility. These platforms allow wagers to enjoy betting without limits imposed by GamStop. Choose from numerous options and relish the freedom of playing when and how you want. With many games, non GamStop UK casinos provide an unmatched experience for all gaming enthusiasts.
Discovering the best foreign online casinos, [url=https://mrtotomasyon.com/2026/05/31/zagraniczne-kasyno-ekscytujcy-wiat-online-gier/]https://mrtotomasyon.com/2026/05/31/zagraniczne-kasyno-ekscytujcy-wiat-online-gier/[/url] is an exhilarating journey for gamers. Many options offer thrilling games, generous bonuses, and protected transactions. Players from different locales can enjoy a remarkable experience while playing from the comfort of their homes.
Я считаю, что Вы допускаете ошибку. Могу это доказать. Пишите мне в PM, обсудим.
online casino, [url=https://slotimo.com/gsw/sports/event/haiti-vs-schottland/11125837]bester WM Wettanbieter[/url] offers an exciting variety of games for players worldwide. Discover thrilling slots, classic table games, and live dealer options. Grab your chance to win big today!
Я думаю, что Вы ошибаетесь. Могу это доказать. Пишите мне в PM.
live roulette sites, [url=http://gaslamp.dptr.co/2026/04/exploring-the-best-live-roulette-sites-for-online-2/]http://gaslamp.dptr.co/2026/04/exploring-the-best-live-roulette-sites-for-online-2/[/url] feature an thrilling way to enjoy the classic game of roulette from the ease of your home. Gamers can communicate with real dealers and fellow players in real-time, making every spin special.
да уж совсем не впечатлили.
Att spela på det online casino snabb utbetalning, [url=http://www.livogledelse.dk/?p=24612]http://www.livogledelse.dk/?p=24612[/url] kan vara en roligt sätt att njuta av spel. Med snabbare utbetalningar kan användare få pengar på sina vinster utan onödig väntan. Så är det nödvändigt att välja ett casino med snabba utbetalningar.
I dag er der mange muligheder for at spille online, og bedst at vælge er det bedste bitcoin casino, [url=http://automatenbetrieb-jonach.de/2026/05/08/udenlandsk-casino-med-hurtig-udbetaling-sdan/]http://automatenbetrieb-jonach.de/2026/05/08/udenlandsk-casino-med-hurtig-udbetaling-sdan/[/url]. Her kan spillere nyde spændende spil, sikre transaktioner og fantastiske bonusser, der gør spiloplevelsen meget mere fornøjelig.
Согласен!
In the realm of online casino, [url=https://maxxenergy.in/2026/05/23/exploring-sbobet-singapore-your-gateway-to-online-5/]https://maxxenergy.in/2026/05/23/exploring-sbobet-singapore-your-gateway-to-online-5/[/url], players have the opportunity to experience captivating games from the comfort of their homes. Whether spin the reels or play cards, there’s something for everyone.
novГЎ online casina, [url=http://www.nave.ufc.br/legalni-online-casina-a-automaty-ve-co-potebujete-5/]http://www.nave.ufc.br/legalni-online-casina-a-automaty-ve-co-potebujete-5/[/url] umoЕѕЕ€ujГ hrГЎДЌЕЇm snadnГЅ pЕ™Гstup k rozmanitГ© nabГdce her. HrГЎДЌi mohou proЕѕГvat lГЎkanie bonusy a vГЅhody. Tato trendy platforma urДЌitД› pЕ™itahuje ДЌГm dГЎl tГm vГce hrГЎДЌЕЇ.
HeySpin Casino DK, [url=http://www.sterling-store.co/heyspin-casino-dk-oplev-spaending-og-underholdning/]http://www.sterling-store.co/heyspin-casino-dk-oplev-spaending-og-underholdning/[/url] tilbyder et unikt online spillemiljГё, som spillere kan opleve et bredt udvalg af fornГёjelser. Med fremragende bonusser og incitamenter er det en absolut uforglemmeligt for gaming-entusiaster. Spil samt opnГҐ fantastiske belГёnninger hos HeySpin Casino DK!
Lately, Casino Online, [url=https://dev.bbasta.com/sportbetting24054/captain-marlin-casino-review-2026-a-comprehensive/]https://dev.bbasta.com/sportbetting24054/captain-marlin-casino-review-2026-a-comprehensive/[/url] has become increasingly well-known among gamblers. With captivating games and luring bonuses, numerous people are drawn to virtual betting. The convenience of playing from home is unmatched.
Не соглашусь с теми
биткоин казино рейтинг, [url=https://t.me/vanechekvan]онлайн казино рейтинг лучших[/url] представляет собой важный аспект выбора игорного заведения. Он помогает определять популярные платформы, где игроки могут получить максимум выигрышей. Обратите внимание на разрешение и оценки игроков, чтобы сделать лучший выбор!
Casinos Not on Gamstop, [url=https://notarialna.net/exploring-non-gamstop-casinos-the-ultimate-guide-3/]https://notarialna.net/exploring-non-gamstop-casinos-the-ultimate-guide-3/[/url] offer players an alternative to UK-regulated sites. These platforms permit users to enjoy gaming without the restrictions of Gamstop. With one diverse range of games and bonuses, players can have a thrilling experience. Choose carefully to find the best options!
Finding the best foreign online casinos, [url=https://dapoxetinacolombia.online/?p=24475]https://dapoxetinacolombia.online/?p=24475[/url] can be a thrilling experience for players. With various options available, it’s essential to consider factors such as game offerings and help. Always look for safe platforms to ensure a seamless gaming journey. Enjoy the excitement of playing at the best foreign online casinos today!
In recent years, the growth for casinos not on GamStop, [url=https://demo.tggroup.my/2026/05/25/discover-the-thrill-of-casinos-not-on-gamstop/]https://demo.tggroup.my/2026/05/25/discover-the-thrill-of-casinos-not-on-gamstop/[/url] has soared. These platforms offer players a chance to enjoy gaming free from the restrictions of self-exclusion schemes. Using various bonuses and deals, they attract beginner players looking for a thrilling experience. Nonetheless, it’s essential to ensure these casinos are reputable and secure for a safe gambling experience.
По моему мнению Вас обманули, как ребёнка.
Casinos Not on Gamstop, [url=https://grocery.vpmarketingllc.com/2026/06/02/exploring-uk-casinos-not-on-gamstop-2081625578/]https://grocery.vpmarketingllc.com/2026/06/02/exploring-uk-casinos-not-on-gamstop-2081625578/[/url] offer players an alternative|option|choice|selection for online gambling without restrictions. These platforms provide unique bonuses|incentives|promotions|offers, catering to diverse gaming preferences. Explore a world of exciting|thrilling|entertaining|captivating games beyond the confines of Gamstop regulations.
Зарегистрировался на форуме, чтобы сказать Вам спасибо за помощь в этом вопросе, может, я тоже могу Вам чем-то помочь?
live roulette sites, [url=https://www.sterling-store.co/best-live-roulette-casinos-in-the-uk-experience/]https://www.sterling-store.co/best-live-roulette-casinos-in-the-uk-experience/[/url] offer an immersive experience for players. These online options provide live interaction with dealers. Users may place bets while enjoying the thrill of a real casino. Join now!
Вы сами придумали такую бесподобную фразу?
Play online casino, [url=https://blog.abdldate.com/2026/05/22/exploring-the-exciting-world-of-md88-malaysia-14/]https://blog.abdldate.com/2026/05/22/exploring-the-exciting-world-of-md88-malaysia-14/[/url] and experience the thrill of various games. You can savor thrilling slots, exciting table games, and interactive dealer experiences. Grab the chance to win big and find new luck!
Online Casino, [url=https://www.thevoicestudio.it/2026/05/24/exploring-casinojoy-casino-online-the-ultimate/]https://www.thevoicestudio.it/2026/05/24/exploring-casinojoy-casino-online-the-ultimate/[/url] gives an captivating way to delight in gaming. With a broad range of selections, players can pick their favorites to play. Bonuses and promotions amplify the fun, making it an appealing choice for gamers.
HeySpin Casino DK, [url=https://howtodatewithstyle.com/heyspin-casino-dk-din-premier-destination-for-online-spil/]https://howtodatewithstyle.com/heyspin-casino-dk-din-premier-destination-for-online-spil/[/url] tilbyder et fantastisk udvalg af casinospil til gæster. Her kan du besøge fortryllende slotmaskiner og fremragende bordspil, alt sammen i dit frit for risiko miljø. Uanset om du er en erfaren, vil HeySpin Casino DK give en mindeværdig oplevelse.
Браво, какие нужные слова…, отличная мысль
zahraniДЌnГ© online kasГno, [url=http://nekokapuri.s1009.xrea.com/2026/05/30/zahranicne-online-kasina-vsetko-co-potrebujete-vediet-1977332750/]http://nekokapuri.s1009.xrea.com/2026/05/30/zahranicne-online-kasina-vsetko-co-potrebujete-vediet-1977332750/[/url] ponГєka ЕЎirokГє rozmanitosЕҐ hier, ako si nГЎvЕЎtevnГci mГґЕѕu vychutnaЕҐ svoje ambГcie. Otestujte svet zГЎbavy a vyhrajte fantastickГ© bonusy a vГЅhry!
хорошее гониво
онлайн казино, [url=https://che.best-city.ru/forum/thread100683/#reply102144]https://che.best-city.ru/forum/thread100683/#reply102144[/url] представляет неизмеримое развлечение для участников. На этих платформах вам открываются возможности узнать всякие игры. Каждый желающий может сразить необычные деньги в онлайн казино.