ATM Tamil Romantic Novels

IMG-20240823-WA0014

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 6

  6     சங்க விழாவில்..  நேரம் நெருங்க நெருங்க ஆரனால் அந்த வலியை.. மயூரி அவர்கள் வீட்டு பெண் என்ற‌ உண்மையை நிதர்சனத்தை தாங்க முடியவில்லை.   முதல் முதலாக அரும்பு விட்ட காதல்.. விரிந்து மலர்ந்து மணம் பரப்பும் முன்னால்.. காய்ந்து கருகியது போன்று உள்ளுக்குள் தகித்தது ஆரனுக்கு.   அவ்வப்போது யாரும் அறியாமல் தன் இடது பக்க நெஞ்சை நீவி கொண்டான். பேசும்போது நிறைய கவனச்சிதறல் வந்தது. தலையைக் கோதி.. உதட்டை […]

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 6 Read More »

555BE0C8-1F01-46D7-A3C1-9CFA44D14F31

14 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

14- புயலோடு பூவுக்கென்ன மோகம்

வழக்கம் போல எழுந்த வீரா பக்கத்தில் பார்க்க நிகிதா இல்லை. என்னங்கடா இது இவ இவ்வளவு சீக்கிரமாவா எழுந்துட்டா..இருக்காதே…பெட்ல இருந்து புரண்டு கீழ விழுந்து கிடக்கிறாளோ.. என அவள் படுக்கும் பக்கம் எட்டி பார்த்தான்.அங்கும் அவள் இல்லை.

இங்க தான் எங்கயாவது இருப்பாள் என நினைத்து தோளை குலுக்கி கொண்டு.. குளியலறைக்கு சென்று தன் காலை வேலைகளை முடித்து கொண்டு ஜாகிங் செல்ல கீழே இறங்கி வந்தான்.

கிச்சனில் நிகிதாவின் குரலும் அம்மாச்சி குரலும் கேட்க…அங்கு சென்று பார்த்தவன் அதிர்ந்து போனான். அங்கு நிகிதா பாட்டியின் மேற்பார்வையில் ஏதோ சமைத்து கொண்டு இருந்தாள். குளித்து தலைமுடி ஈரம் சொட்ட.. கிளிப் போட்டு அப்படியே விட்டு இருந்தாள். புடவை வேற கட்டி இருக்க… அவளின் பிளவுஸ் அளவிற்கே வெட்டப்பட்டு இருந்த முடியில் நீர் சொட்டி.. சொட்டி.. பிளவுஸ் நனைந்து முதுகோடு ஒட்டி அவளின் உள்ளாடை தெரிய.. சுற்றி முற்றி யாராவது வேலைக்கார்கள் இருக்கிறார்களா.. என பார்க்க.. யாரும் கண் படும் தூரத்தில் இல்லை.

இவளை என பல்லை கடித்தவன் “ஏய்.. என்ன பண்ணிட்டு இருக்க.” என அவளருகே சென்றான்.

“வாங்க மாமா .. ஜாகிங் போகலையா..” முகத்தில் தவழும் புன்னகையுடன்..

வீராவை கண்டதும் பாட்டி “நிக்கி.. இதை பாரு.. நான் தாத்தா எழுந்துட்டாரு பார்த்து விட்டு வரேன்..” என வெளியே சென்றுவிட்டார்.

போகிற பாட்டியை பார்த்து “ம்ப்ச் இவளோட ரொமான்ஸா பண்ண போறேன்” என முணுமுணுத்தான்.

“என்ன மாமா சொன்னிங்க..”

“ஒன்னுமில்லை.. எதுக்குடி இப்படி ஈரம் சொட்ட கீழ வந்த.. பின்னால எல்லாம் நனைச்சு.. ஒரு மாதிரியா இருக்கு..”

“என்ன மாமா… ஒரு மாதிரி..”என தன் முதுகை திருப்பி பார்த்தவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.

எப்படி சொல்ல என தெரியாமல்.. இவர்களுக்குள் இன்னும் சாதாரண கணவன் மனைவிக்குள் இருக்கும் சகஜமான பேச்சு வரவில்லை. எட்டி அடுப்பை அணைத்தவன்..

“போடி.. போய் முதல்ல டிரையர் போட்டு காய வைத்துவிட்டு வேற பிளவுஸ் மாத்திட்டு வா”என சொல்லிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.

வேகமாக தங்கள் அறைக்கு வந்தவள் கண்ணாடியில் பார்க்க.. அவன் சொன்னது புரிந்து மெல்லிதாக வெட்கம் வர சன்ன சிரிப்புடன் நெற்றியில் தட்டி கொண்டாள்.

அவன் சொன்னது போலவே செய்து கொண்டு கீழே வந்தவள்.. வீரா ஜாகிங் முடித்து கொண்டு வரவும் அவளே டீ போட்டு கொண்டு போய் கொடுத்தாள்.

டீயை கொடுத்து விட்டு அவன் முகம் பார்த்து கொண்டு நின்றாள். குடித்தவன் முகம் சுழித்து விட்டு டீபாய் மேலே வைத்துவிட்டான்.

ஒன்றும் சொல்லாமல் பேப்பர் படிக்க ஆரம்பித்து விட.. அந்த டீயை எடுத்து குடித்தவளின் முகம் அஷ்ட கோணாலானது. எடுத்து கொண்டு போய் சிங்கில் கொட்டியவளுக்கு தனக்கு ஒரு டீ கூட தயாரிக்க தெரியலையே என கழிவிரக்கம் கொண்டாள்.

என்ன ஆனாலும் நல்லா கத்துகிறோம்.மாமாவ அசத்தறோம் என தன்னை தேற்றி கொண்டாள்.

காலை உணவையும் பாட்டியின் மேற்பார்வையில் அந்த வீட்டின் ஆஸ்தான சமையல்காரம்மா கண்ணம்மாவின் உதவியோடு செய்து முடித்தாள்.

எல்லோருக்கும் அவளே பரிமாறவும் செய்தாள். ரொம்பவே சுமாராக இருந்த போதும்.. நிகிதா செய்தாள் என்றதிலேயே.. மகிழ்ச்சியோடு நன்றாக இருப்பதாக சொல்லியே சாப்பிட…அதிலும் வெங்கட்கு தன் பெண் பொறுப்பாக எல்லாம் செய்வதை கண்டு மனது நிறைந்து போக ஒரு பிடி சேர்த்தே உண்டார்.

ஆனால் யாருக்காக இத்தனை சிரத்தை எடுத்து செய்தாளோ.. அவன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே சாப்பிட்டான். ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் அவளை கவனித்து கொண்டு தான் இருந்தான்.

எப்பவும் மேக்கப் கலையாமல்… உடை நலுங்காமல்.. இருப்பவள் வேர்த்து வடிந்த முகத்தை சேலை தலைப்பால் துடைத்து கொண்டு பரிமாறியவளையும்.. அவள் புறக்கையில் எண்ணெய் பட்டு கொப்பளித்து இருந்ததையும் கவனித்தான்.சமையல் அவளுக்கு புதுசல்லவா.. அதான் தெரியாமல் தாளிக்கும் போது எண்ணெய்யில் வேகமாக வெங்காயத்தை கொட்டிவிட.. அவள் புறங்கையில் மணிக்கட்டுக்கு சற்று மேலே எண்ணெய் பட்டு கொப்பளித்து ரணமாக இருந்தது.

இப்பவும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு ஆபிஸ்கு கிளம்பிவிட்டான். நிகிதாவிற்கு மனம் வாடி போனது. நல்லா இல்வை என இரண்டு திட்டு திட்டி இருந்தால் கூட பரவாயில்லை என நினைத்தாள்.

சராசரி கணவர்களை போலவும் வேலை செல்லும் முன் யாரும் அறியாமல் சின்ன சின்ன.. சில்மிஷங்கள் செய்து சொல்லி கொண்டு செல்ல வேண்டும். வேலை முடிந்து வரும் போது பூ வாங்கி வரவேண்டும் அந்த பூவை சூடி அவன் முன் நிற்கும் போது அவன் கண்ணில் மையல் பார்வை இருக்க வேண்டும் என சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் அவளுக்குள் இப்போது எல்லாம்.

வீராவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப… அவனின் எதிர்பார்ப்பை அறியாமலேயே நிகிதா தன்னை அவனின் எதிர்பார்ப்புக்குரிய மனைவியாக விரும்பியே மாறிக் கொண்டு இருக்க…

அவளின் காதலை கொண்டு அவள் அவனுடைய காதலை பெற.. அவள் அவனுடைய வாழ்க்கை முறைக்கு தன்னை பழக்கி கொள்வதை கூட உணர்ந்து கொள்ளாமல் அந்தஸ்து பேதம்… தன் இலட்சியம் என தேவை இல்லாததை மனதில் சுமந்து கொண்டு.. அவளை புரிந்து கொண்டு வண்ணமயமாக வாழ வேண்டிய வாழ்க்கையை சிக்கலாக்கி கொண்டு அவளை வருத்தி கொண்டு இருக்கிறான்.

நிகிதாவோ காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை எப்போதும் வீரா.. வீரா.. என அவனை சுற்றியே தன் எண்ணங்களை செலுத்தினாள். அவனுக்கு முன் எழுந்து குளித்து தயாராகி.. முன்பு எல்லாம் ஒருமணி நேரம் கண்ணாடி முன்பு நின்று தன்னை அலங்கரித்து கொள்பவள்.. அவள் சிந்தை முழுக்க அவனின் தேவைகளை நிறைவேற்றும் சேவைகளே ஆக்கிரமித்து கொள்ள .. குளித்து தலைமுடியை கிளிப்பில் அடக்கி பொட்டிட்டு கொண்டு.. அவன் அன்று உடுத்த வேண்டிய உடைகளை எடுத்து வைத்து விட்டு கீழே சென்றுவிடுவாள்.

அவனுக்காக சமைப்பது… பரிமாறுவது வாஷிங் சென்று வந்த அவன் துணிகளை அவனுடைய வார்ட்ரோப்பில் வைப்பது..அவனின் பாடி லோஷன் சோப் சேவிங் கீரிம் என அவன் வழக்கமாக உபயோகிக்கும் பொருட்களை தானே பார்த்து பார்த்து வாங்கி வைப்பது என..

இரவில் அவன் அணைக்க வேண்டும் என எல்லாம் நினைக்கமாட்டாள். தன் உரிமை என நினைத்து இவளே அவனை நெருங்கி அணைத்து கொண்டு குட்டி முத்தங்கள்.. பட்டும் படாமல் இதழ் தீண்ட…. அவனின் மார்பில் மூக்கின் நுனியை உரச.. மீசையை பிடித்து இழுக்க.. கன்னத்தை கடிக்க.. என ஏதாவது செய்து அவனை தவிக்க வைப்பாள். மனம் ஒத்து நெருங்கவும் முடியாமல்.. விலகவும் முடியாமல் ஒவ்வொரு இரவையும் போராடி கடந்தான்.அவனை விலகவே விடவில்லை நிகிதா.அவளின் சின்ன சின்ன காதல் சேட்டைகள் தாளாமல் அவனும் விரும்பியோ விரும்பாமலோ அது அவனுக்கே தெரியவில்லை கூடல் கொண்டான்.

அதுக்கு பிறகு அவள் நிம்மதியாக உறங்கி விட.. இவன் தான் தேவையில்லாத பலவற்றை நினைக்க.. மனம் உறுத்த தொடங்கி விடும்.

அவள் அவனை நெருங்க.. நெருங்க.. இவனுக்கோ மூச்சு முட்டுவது போல இருந்தது.இது எல்லாம் யாராலே தன்னால தானே.. அவளை தொடாமல் தள்ளியே நிறுத்தி இருந்தால் அவளும் தன்னை விட்டு ஒதுங்கியே இருந்திருப்பாள். பிடிக்காத புருஷன் என அவளும் வெறுப்புடன் இருந்திருப்பாள்.

கோபம் தன் மீதுதான்… என்ன ஆனபோதும் அவளோடு உறவாடி இருக்ககூடாது. அதனை தொட்டு அவள் மனசில் ஆசைகளை வளர்த்து இருக்ககூடாது.

அவள் கண்களில் அவனுக்கான ரசனையும்.. அவள் செயல்களில் அவளுடைய நேச மனதும் புரிய… தன் மேலேயே கோபம் கொண்டான்.

அதுவும் அவள் கைகளில் சூட்டு காயத்தை காணவும் மனதுள் சொல்ல முடியாத வேதனை.எப்படி இருப்பாள்.. குடிக்கும் தண்ணீர் கூட அவள் இருக்கும் இடம் தேடி வரும்.தனக்காக தான் என புரிகிறது என தெரிந்த போதும் அவள் தன்னால் கஷ்டப்படுவதாக நினைத்தான்.

அன்று ஆபீஸ் வேலையை முடித்து விட்டு அதே வளாகத்தில் இருக்கும் பேக்டரிக்கு ரவுண்ட்ஸ் சென்றான். இவன் வந்தது தெரியாமல் அங்கு வேலை செய்யும் இருவர்..

“டேய் புதுசா வந்தவனுக்கு வந்த வாழ்வை பார்த்தியா…”

“யாரைடா சொல்ற..”

“அதான் முதலாளி பொண்ணை கட்டி இருக்கானே.. அவன் தான்.. மாச சம்பளத்துக்கு வேலை செஞ்சுக்கிட்டு இருந்தான். அவனுக்கு அடிச்சது லக்கி ப்ரைஸ்… பணத்துலயே முக்குளிக்கிறான்”

“அவன் மாமனார் மட்டும் என்ன.. வேலைக்கு வந்தான். எப்படியோ முதலாளிய மயக்கி அவரு பொண்ணை கட்டி ஆண் வாரிசு இல்லாத சொத்துக்கு வாரிசாகிட்டான். இப்ப தன் அக்கா மவனையே கூட்டிட்டு வந்து அடுத்த வாரிசாக்கிட்டான்”

” இவனுங்களுக்கு அமைஞ்ச மாதிரி வாழ்க்க அமையனும் நமக்கு தான் இருக்குதே…” எனபொறாமையில் பெருமூச்சு விட்டனர்.

அவர்கள் பேச்சை கேட்டவனுக்கு ஆத்திரம். அவர்களை அடிக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. ஊர் பேச்சு இதுவா தான இருக்கும். இது போல பேசுபவர்களை எல்லாம் அடிக்கவா முடியும். குடும்பத்தினர் கட்டாயத்திற்கு ஒத்து கொண்டு இருந்திருக்கவே கூடாது. தப்பு செய்து விட்டோம். யார் நான் சொன்னதை கேட்டார்கள். பிடிவாதமாக செய்து வைத்து விட்டு அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். நான் தான் அவமானப் படுகிறேன் என மிகுதியான கோபத்தோடு வீடு வந்தான்.

வழக்கத்திற்கு சற்று முன்பாக வீடு வந்தவனை கண்டு தாத்தா..

“வீரா சீக்கிரமே வேலை முடிந்ததா.. ” என கேட்க.. பதில் சொல்லாமல் வேகமாக தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

கிச்சனில் வேலை செய்து கொண்டு இருந்த நிகிதாவிடம் பாட்டி “வீரா வந்துட்டான்.. டீ போட்டு… ரூம்ல இருக்கான் கொண்டு போ..”

நிகிதா டீ எடுத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள். வீரா உடை கூட மாற்றாமல் கண்மூடி படுத்து இருந்தான்.

“மாமா.. டீ..”

அவளின் குரல் கேட்டும் அசையாமல் படுத்து இருந்தான்.

“மாமா டையர்டா இருக்கா.. டிரஸ் சேஞ்ச் பண்ணல.. டீ குடிச்சிட்டு படுத்துக்குங்க..”

அவளின் அக்கறை அவனின் அகத்தில் இருந்த கோபத்தை தூண்டி விட… எழுந்த வேகத்தில் அவள் கையில் இருந்த டீ கப்பை தட்டி விட்டான்.அது கீழே விழுந்து உடைந்து சிதறியது.

அவனின் இந்த கோபத்தை எதிர்பார்க்காத நிகிதா அதிர்ந்து கைகால் எல்லாம் நடுங்க..ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள்.

அவளருகே அடிப்பதை போல வேகமாக வந்தவன்.. “என்னடி எப்ப பாரு மாமா.. மாமானுட்டு.. இளையற… பிடிக்காம தான கல்யாணம் பண்ண.. இப்ப என்ன.. காதல் பொங்கி வழியுதோ.. உன்னை பார்த்தாவே ஆத்திரமா வருது.. என் கண்ணு முன்னாடி நிக்காத.. இங்கிருந்து போ..”

இது நாள் வரை அவனை இவ்வளவு ஆக்ரோஷமாக அவள் கண்டதில்லை.
அவனுடைய கோபம் கண்டு பயந்த நிகிதா அதற்கு மேல் அங்கே நிற்காமல் கண்களில் கண்ணீருடன் கீழே வந்தவள் யாரும் அறியாமல் கண்ணீரை துடைத்து கொண்டு கிச்சனில் புகுந்து கொண்டாள்.

அவள் சென்ற பிறகு கோபத்தை கட்டுபடுத்த முடியாமல்.. சோபாவில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான்.

இரவு உணவுக்கும் வீரா கீழே வரவில்லை. நிகிதா சென்று அழைக்க.. அவளை முறைத்த முறைப்பில்… எதற்கு இந்த கோபம் என குழம்பி போய் அமைதியாக வந்துவிட்டாள். தூங்கிவிட்டதாக குடும்பத்தினரிடம் சொல்லி சமாளித்துவிட்டாள்.

நிகிதாவும் ஏதோ சாப்பிட்டு விட்டு அவனுக்கும் கொஞ்சம் எடுத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள். இப்போதும் சோபாவில் தலையை தாங்கி கொண்டு தான் அமர்ந்து இருந்தான்.

உணவை அங்கிருந்த டீப்பாய் மேல் வைத்தவள்.. அவனருகே செல்ல பயந்து கொண்டு சற்றே தள்ளி நின்றே…

“மாமா.. சாப்பிடறிங்களா..எடுத்துட்டு வந்துருக்கேன்” என்றாள் மெதுவாக..

நிமிர்ந்து உணவை பார்த்தான் அவளை பார்த்தான். மீண்டும் கண்களை மூடி கொண்டான்.

நல்ல சாப்பாடு தான் வேளைக்கு ஒரு தினுசு தான். ஆனால் அவனாக சமைத்த உணவு சுவை குறைவாக இருந்தாலும் அந்த உணவு அவனுக்கு அமிர்தமாக இருந்தது . ஆனால் இங்கு வந்த பிறகு சுவையான உணவாக இருந்தும் அவனுக்கு அது தொண்டையில் சிக்குவது போல தான் இருந்தது.

அவன் சாப்பிடுவதற்காக சற்று நேரம் நின்று பார்த்தவள்அவனின் அமைதி மேலும் பயத்தை கூட்ட.. புடவையை கூட மாற்றாமல் போய் படுத்து கொண்டாள்.

அவன் இவ்வளவு நாளாக மனதுள் போட்டு அழுத்தி வைத்திருந்தது எல்லாம் வெடித்து சிதற காத்திருக்கும் எரிமலையாக பொங்கி கொண்டு இருக்க…

சில மணிநேரம் கடந்தும் அவன் அதே நிலையிலேயே இருக்க..நிகிதா அவனையே பார்த்து கொண்டு உறங்காமல் படுத்து இருந்தவள்..எழுந்து அமர்ந்து மெல்ல…

“சாப்பிடலைனாலும் பரவாலை.. வந்து தூங்குங்க மாமா…” என அழைக்க…

அவ்வளவு தான் அவளுடைய அழைப்பில் உள்ளே புகைந்து கொண்டு எரிமலை வெடித்து சிதற…வேகமாக அவளருகே வந்தவன்.. குனிந்து அவளுடைம முடியை கொத்தாக பிடித்து இழுத்து..

“என்னடி இப்ப கட்டில்ல கட்டி பிடிச்சு உருளனுமா…இப்ப உனக்கு அது தான தேவை.. உன்னால என் நிம்மதி போச்சு.. சந்தோஷம் போச்சு.. எல்லாமே போச்சு.. உனக்கு உன் சுகம் தான் முக்கியம்..என்னைக்கு உன் கழுத்துல தாலி கட்டினேனோ.. அன்னைக்கே என் வாழ்க்கையே போச்சு..” என்றவன் அவளை படுக்கையில் தள்ளி விட்டு தன் சட்டையை கழற்றி எறிந்துவிட்டு.. அவளுடைய புடவையை வெறி வந்தவன் போல பிடித்து இழுக்க…

பயத்தில் நடுக்கத்துடன் நிகிதா”மாமா.. பின் குத்தி… இருக்கேன்…. புடவை… கிழிஞ்சிடும்..”

“ஆமாண்டி எனக்கு வாழ்க்கையே போச்சு.. உனக்கு சேல தான் முக்கியமா..” என்று அவளை ஆவேசமாக ஆக்ரமித்தான். ஏற்கனவே நடுங்கி கொண்டு இருந்தவள் அவனில் ஆவேசத்தில் உடல் தூக்கி போட.. அழுகை வெடிக்க..

“மாமா.. முடியல..விட்டுருங்க.. மாமா..”என அவனிடம் கெஞ்ச.. முதலில் அவனின் ஆவேசத்தில் அவளை கவனிக்கவில்லை. அவளை பேச விடாமல் அவளின் இதழை வன்மையாக இழுத்து கடித்து கொண்டு இருந்தவன் அவளின் எச்சில் நீரில் அவளுடைய கண்ணீரின் உவர்ப்பு சுவை கலக்கவும் தான். ..

தங்கள் நிலை உணர்ந்தான். எழுந்து அமர்ந்தவன் தலையில் அடித்து கொண்டான். தானா இப்படி என..

அவன் அவ்வாறு வருந்துவது பிடிக்காமல்.. பின்னால் அவனின் வெற்று முதுகில் தோள் சாய்ந்தவள்..

“நீங்க ஒன்னும் பீல் பண்ணாதிங்க மாமா.. எனக்கு ஒன்னும் இல்லை. கொஞ்சம் பயமா இருந்துச்சு.. அதான் அழுகை வந்திடுச்சு..”

அவளின் வார்த்தைகள் மனதை அறுக்க.. திரும்பி அவளை அணைத்து தட்டி கொடுத்து “தூங்கு ” என்றான்.

அவள் உடனே “நீங்களும் வந்து படுங்க..”என்கவும்.. அவனுக்கு இநத நேரத்திலும் லேசாக சிரிப்பு வந்திட.. அவளின் எண்ணம் புரிந்தவனாக.. அணைத்து கொண்டு படுத்தான்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள் வழக்காமான தன் காதல் சேட்டைகளை அரங்கேற்ற.. “மாமா.. வீரா மாமா..”

சீலீங் பேனையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தவன் அவளை சட்டை செய்யவில்லை.

“யோவ் வீரா மச்சான்..” என அவனை வம்பிழுக்க..

“அடிங் உனக்கு கொழுப்பாடி” என்றவனிடம்

“எனக்கு தூக்கம் வரலை” என ராகமிட..

அதற்கு மேல் அவளை அவனால் தள்ளி வைக்க முடியவில்லை. அவளை கட்டி அணைத்து இதழ் கவ்வி உயிரமுதம் பருக…அவனின் கைகளோ அவளின் மேனி எங்கும் உலாவ.. அதற்கு தடையாக இருந்த ஆடைகளை நீக்கும் பணியை செவ்வன செய்தான். அவளின் உடலெங்கும் இதழால் உலா வர.. அவள் உடலின் ரோஜா இதழின் மென்மை அவனை பித்தனாக்கியது. அணைப்பை இறுக்கினால் கூட அவளின் பாலில் கலந்த ரோஜா நிற தேகம் கன்றி சிவந்து விடுமோ.. என கவலை கொண்டு பூவையை கசக்காமல் மென்மையாக கைகளில் தாங்கி “அமுல் பேபி.. அமுல் பேபி..” என கொஞ்ச.. அவளோ “வீரா மாமா.. வீரா மாமா..” என பிதற்ற..

அவனின் இளமையோ கட்டுகடங்காமல் துடிக்க… மென்மையை விட்டு கொஞ்சம் வன்மையாக அவளை ஆட்கொள்ள.. முதலில் மிரண்டவள் தன் ஆணின் விருப்பம் அதுவென அறிந்து ஒத்திசைக்க.. தன் பெண்ணவளின் இசைவு அவனை கிறங்க வைக்க… காதல் போதை தலைக்கு ஏற… அவன் கடல் அலையாய் ஆர்பரிக்க.. அலையின் சீற்றம் தாங்காமல் துடித்து துவண்டு போனாள். அங்கு அழகான நிறைவான கூடல் நடந்தேறியது.அவளோ களிப்பிலும்.. களைப்பிலும் உறங்கி விட..

இவனோ உறக்கம் தொலைத்தான். ஒருவேளை அவள் அமைதியாக தூங்கி இருந்தால் அவனும் நிம்மதியாக தூங்கி இருந்திருப்பான். எல்லா புதுமண தம்பதிகள் எப்படி இருப்பாரோ அதை தான் நிகிதா வீராவிடமும் எதிர்பார்க்கிறாள் என வீராவுக்கு புரிய தான் செய்கிறது. அதற்காக அவள் அவனிடம் செய்யும் காதல் சேட்டைகளும் அவனுக்கு மேலும் ஒரு அழுத்தத்தை தான் கொடுத்தது. அவளோடு கூடி குழாவும் போது உணர்ச்சியின் பிடியில் இருப்பவன்.. எல்லாம் முடிந்து அவள் உறங்கி விட… இவனின் கொள்கைகள் இலட்சியம் எல்லாம் விழித்து கொள்ள.. இவன் தான் உறக்கம் தொலைத்து தவித்து போனான்.

இன்று இரவும் உறக்கம் தொலைத்தவன் வெகு நேரம் யோசித்து இனியும் இது போல இருக்கமுடியாது என தன் நண்பனுக்கு அழைத்து பேசியவன்.. உறங்காமல் விடியலுக்காக காத்திருந்தவன் விடியலுக்கு முன்பே வீட்டை விட்டு கிளம்பிவிட்டான் நிகிதாவை விட்டு அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல்..

வரம் வரும் தேவதையே..

வாழ்வாக வந்திட…

வாழ்வின் வசந்தமே

தன் தேவதையிடம் இருக்க..

கானல் நீரை வசந்தமே என..

தேவதையை புறக்கணித்து..

வாழ்வை துறந்து..

கிட்டாத வசந்தத்தை தேடி

இருக்கும் இடத்தை விட்டு..

இல்லாத இடம் தேடி செல்கிறான்

கிட்டாது என உணரும் போது

காலம் இவனுக்கு வைத்திருக்கும்

கோலம் என்னவோ..

14 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

455218285_509585694960470_9075049944312118991_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 30     மல்லிகாவோ சந்தனபாண்டியனை பார்த்து “தேங்க்ஸ்” என்று சிரித்தாள்.   கோவிலுக்குச் சென்றிருந்த தேன்மொழி பஞ்சாயத்தில் ‘மல்லிகாவை பார்க்க போனியா’ என்று தனபாக்கியம் சந்தனபாண்டியனை கேட்கும் போதே வந்துவிட்டாள். இப்போது மல்லிகா சந்தனபாண்டியனை பார்த்து சிரிப்பதையும் பார்த்துவிட்டாள்.   ‘டேய் மாமு என்னடா நடக்குது? மல்லிகா டீச்சர் மேல கோபமா இருக்கேன் என்று சொல்லியவன் இப்போ அவங்களை பார்த்து சிரிக்க காரணம் என்ன?’ என்று தீவிரமாக யோசித்தவள் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு அறைக்குள்

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

455218285_509585694960470_9075049944312118991_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 28   “நான் ஆர்த்தியை செக் பண்ணிட்டு சொல்றேன் வெளியே உட்காருங்க தங்கபாண்டியன்” என டாக்டர் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாக கூறியதும் கண்ணீரை கூட துடைக்க தோன்றாமல் ஆர்த்தியை பார்த்துக்கொண்டேச் சென்றான்.   ஆர்த்தியை செக் பண்ணி அவளுக்கு இன்ஜக்சன் ஒன்றை போட்டு விட்டு வெளியே வந்தவரை நெற்றியை தேய்த்துக்கொண்டு ஒரு வித படப்படப்புடன் டாக்டரை பார்த்தான் தங்கபாண்டியன்.    டாக்ரோ “பயப்பட தேவையில்லை தங்கபாண்டியன்” என்றார் குறுநகையுடன்.   நிம்மதிப்பெரும்மூச்சு விட்டுக்கொண்டான் தங்கபாண்டியன். அவன் மனசு

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

26071999-C143-4E3D-B726-B4764668FF53

12 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

12 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

ரூபேஷ் குளியலறை கதவை பலமாக இடித்து கொண்டு இருந்தான்.நிகிதா கதவையே உடல் நடுங்க பார்த்து கொண்டு இருந்தாள். வாயோ வீரா மாமா .. வீரா மாமா.. என ஜபம் போல சொல்லி கொண்டு இருக்க… அறையின் கதவு படபடவென தட்டப்பட…

“ஷீட்.. எவன் டா அது..” என வேகமாக சென்று கதவை திறக்க.. வீரா புயலாக உள்ளே வந்தான். ரூம் சர்வீஸாக இருக்கும் என நினைத்து கதவை திறந்தவன்.. வீராவை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

உள்ளே வந்தவனின் விழிகள் ஒரு நொடி அறையை சுற்றி வர.. நிகிதா அங்கு இல்லை எனவும் அடித்து துவைத்து எடுத்துவிட்டான்.

முதலில் வீராவை எதிர்த்த ரூபேஷால் சிறிது நேரத்திற்கு மேல் தாக்குபிடிக்க.. முடியவில்லை. சொகுசான வாழ்க்கையினால் விளைந்த உடல்.. போதை என ..பலவீனமான உடல் ருபேஷ்.. உழைத்து உரம்பேறிய உடல் கொண்ட வீராவின் அடியால் சுருண்டு விழுந்தான்.

கீழே விழுந்த ரூபேஷை நிகிதா எங்கே என கேட்டு நாலு எத்து எத்த.. அவனால் வாயை திறந்து கூட பேசமுடியவில்லை. குளியலறை நோக்கி கை நீட்ட..

வீரா சென்று கதவை தட்ட.. மறுபடியும் கதவு தட்டப்பட.. பயத்தில் கதவை திறக்கவில்லை நிகிதா. வீரா கதவை தட்டியது.. ரூபேஷை அடித்தது.. அவன் அடி தாங்காமல் அலறியது எதுவும் அவள் உணரவில்லை. பயத்தில் உறைந்து போயிருந்தாள்.

“நிகிதா..நிகிதா.. கதவை திற..”என.வீராவின் குரல் கேட்கவும் தான் சுரணை வந்தது. படாரென கதவை திறந்து கொண்டு ஓடி வந்து வீராவை அணைத்து கொண்டு கதறி அழுதாள்.

நிகிதாவை பார்த்தும் ரூபேஷ் மேல் ஆத்திரம் இன்னும் அதிகமாகியது வீராவிற்கு… நிகிதாவின் தோள்பட்டடையில் நககீறல்கள் அதில் இரத்தம் கசிய… கையை பிடித்து இழுத்ததில் கன்றி போய்.. அவளுடைய பால் நிற தேகத்தில் அவை எல்லாம் அதிக சிவப்புடன் தெரிய… அழுது கரைந்ததால் முகம் எல்லாம் கோவை பழமாக…

வீரா நிகிதாவை கை அணைப்பில் வைத்து கொண்டே அவனை மீண்டும் புரட்டி எடுத்தான். நிகிதா “மாமா…. போ..லாம்..” எனவும் தான் அவனை விட்டான்.

“உன் டாப்ஸ் எங்க..”என்றான்.

கட்டிலுக்கு பின்புறம் கைகாட்ட..அதை எடுத்து வந்து அவளை போட வைத்து அவளை அழைத்து கொண்டு வேகமாக வெளியேறினான்.

வீடு வரும் வரை இருவரிடமும் பேச்சில்லை. வீராவோ கோபத்தின் உச்சத்தில்… நிகிதாவோ தான் எந்த ஆபத்தும் இல்லாமல் தப்பிவிட்டோம் என நம்பமுடியாமல்.. அச்சத்தில் கார் இருக்கையில் ஒடுங்கி போய் உட்கார்ந்து இருந்தாள். அவ்வாறு அவளை பார்க்க.. பார்க்க… அவள் மேல் கோபம் அதிகமானது.

வீடு வந்தும் இறங்காமல் இருந்தவளை..”நிகிதா.. இறங்கு..” என சத்தமிட.. தூக்கி வாரி போட.. அவனை நிமிர்ந்து பார்த்தாள்.அவளை கைபிடித்து உள்ளே இழுத்து வந்தவன் பெரியவர்களை பார்த்ததும் நிதானமானான்.

“நீயே கூட்டிட்டு வந்துடட்டியா.. வீரா.. “என்ற தாத்தா.. நிகிதாவிடம் “போன் பண்ணியிருந்தா டிரைவரை அனுப்பி இருப்பேன்ல..”என்று சொன்னவர் அப்போது நிகிதாவை கவனித்தனர்.

“ஏய் நிகிதா.. என்னாச்சு” என்ற பாட்டியின் கேள்வியில் பேந்த பேந்த விழித்தாள். என்ன என்று சொல்வது..

“இல்ல எனக்கு போன் பண்ணினா.. நான் போவதற்குள்.. ஹோட்டலில் இருந்து வெளியே வந்து எனக்காக காத்திருக்கும் போது ஒரு தெரு நாய் கடிக்க
வந்திருக்கு..பயந்து ஓடி வரும் போது கீழ விழுந்திட்டா..” என்று ஏதோ கூறி சமாளித்தான்.

பெரியவர்களுக்கு தெரிந்தால் தாங்கமாட்டார்கள் பாவம் என மறைத்துவிட்டான்.

“எதுக்கு வெளிய எல்லாம் வந்து நிக்கற.. காலம் கெட்டு கிடக்கு..வீராவ வந்துட்டு கால் பண்ண சொல்லி இருக்கலாம்ல..”என்ற பாட்டியிடம்..

“அம்மாச்சி அவளே பயந்து போய் இருக்கா..”

“விடு மங்களா.. காலைல பேசிக்கலாம்.சரி போய் படுங்க..”என்றார் தாத்தா.

அவளை மறுபடியும் இழுத்து கொண்டு அறைக்கு வந்தவன்.. வந்த வேகத்தில் அவளை அங்கிருந்த சோபாவில் தள்ளினான்.

“இந்த சகவாசத்த எல்லாம் விட்டு ஒழினு சொன்னேன்ல.. கேட்டியா.. இப்ப என்னாச்சு பார்த்தியா..” என்று சீறி கொண்டு அடிக்க கையை ஓங்கி கொண்டு வர…

அவனின் கோபத்தில் இன்னும் பயந்து நடுங்கி போய்.. அவன் அடிக்கும் முன் அவன் கையை பிடித்துக்கொண்டு..

“இல்ல மாமா… அந்த ரூபேஷ் தான் ப்ரண்ட்ஸ எல்லாம் மறந்துட்டியானு கேட்டு அதை இதையும் சொல்லி.. நான் கில்டியா பீல் பண்ற மாதிரி பேசினான். ப்ரண்ட்ஸ பார்த்தும் ரொம்ப நாளாச்சுனு தான் போனேன்”

“பட்.. அவன் இப்படி செய்வான்னு நான் நினைக்கல..”

“சரி…. அவனோட ஹோட்டல் ரூம் வரைக்கும் எப்படி போன..” என கேட்க…

தன்னை சந்தேகப்படறானோ என கவலை கொண்டவள்.. மறுப்பாக தலை அசைத்தவாறு..

தயக்கத்துடன்..”என்னை ட்ரிங்ஸ் எடுத்துக்க சொன்னான்.” அவனின் கோபப்பார்வை கண்டு பேச்சு தடை பட…எச்சில் கூட்டி விழுங்கினாள். ..

பின் அவசரமாக …”இல்ல நான் எடுத்துக்கல.. அவன் போர்ஷ் பண்ணினான் தான்” என நடந்த அனைத்தையும் சொன்னாள். ஹோட்டல் அறையில் ரூபேஷ் நடந்து கொண்டதை சொல்ல முடியாமல் அழுகை வர திக்கி திணறி ஒருவாறு சொல்லி முடித்தவள் அவனை அணைத்து கொண்டு கதறினாள்

இவளின் நண்பர்களால் தான் இவளுக்கு இந்த கெட்ட பழக்கம்.. அதனால் வீட்டினர் எடுத்த நடவடிக்கை…தங்கள் வாழ்க்கை சிக்கலானது என்று வீராவுக்கு கோபம் வந்த போதும்…

அவள் கதறுவதை பார்த்தவனுக்கு மனது வலிக்கவே செய்தது.என்ன இருந்தாலும் ரத்த உறவல்லவா.. சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவள்…

தன்னை போலவே அவன் கைகள் அவளை அணைத்திருந்தன. தேம்பி தேம்பி அழுபவளிடம் கோபத்தை காட்ட மனம் வராமல் ஆறுதல் படுத்தினான்.

“நிகிதா.. சொல்றத கேளு.. அழுகாத..”என்றவன் அவளை அழைத்து வந்து படுக்க வைத்து விட்டு பார்மல் டிரஸ்ஸில் இருந்தவன் ப்ராஷாகி வரலாம் என செல்ல… கையை பிடித்து நிறுத்தினாள்.

“என்னடி..” என்றான் திரும்பி பார்த்து..

“எனக்கு பயமா இருக்கு..என் கூடவே இருங்க மாமா..”

“ப்ராஷாகிட்டு வரேன் இரு”கையை விடுவித்து கொண்டு சென்றவன் சில நிமிடங்களில் வழக்கமான இரவு உடையில் வந்து படுத்தான்.

நிகிதா உடலை குறுக்கி கொண்டு உடல் நடுங்க விசும்பியபடியே இருக்க.. பார்த்திருந்த வீராவுக்கு மனம் தாளவில்லை. தன் மாமனின் செல்லமகள். அவனுக்கு தெரிந்து இவள் இப்படி அழுது பார்த்ததில்லை. அவளின் அருகே நகர்ந்து நெருங்கி படுத்தவன் அவளை அள்ளி தன் மேல் போட்டு கொண்டான். வஜ்ரம் பாய்ந்த தேக்கு போன்ற அவனுடைய அகன்ற.. வாட்ட சாட்டமான உடம்பில் அவள் ஒடிசலான.. பூவையான தேகம் அல்லி கொடி போல படர்ந்திருந்தது.

அவன் அள்ளி தன் மேல் போட்டு கொண்டதும் அவனின் மார்ப்புக்கு மத்தியில் அழுத்தமாக முகம் புதைத்து மேலும் விசும்ப… அவனோ அவள் முதுகை நீவி ஆறுதல் படுத்த முனைய.. அவனின் ஆறுதல் போதாது என்னும் விதமாக அவன் கழுத்தை கட்டி கொண்டு இறுக்கி அணைத்தாள். அவனோ மல்லாக்க படுத்து இருக்க.. அவனின் நேர் மேலே கவிழ்ந்து படுத்து இருந்தவளின் அணைப்பு அவனை தடுமாற வைக்க…

“நிகிதா.. ப்ளீஸ்…” என்றான் கெஞ்சுதலாக..

முடியாது எனும் விதமாக தலையாட்டி அவனுடைய கை இல்லாத டீசர்டை மேலே சுருட்டி விட்டு.. அவளுக்கு மிகவும் பிடித்த அவனுடைய மார்பு ரோமங்களை முகம் கொண்டு உரச.. “என் வீரா மாமா.. என் வீரா மாமா…” என புலம்ப… ஒரோர் வீரா மாமாவிற்கும் மார்பில் ஒரு செல்லகடி கடிக்க… கண் திறக்காத நாய் குட்டியாக அவன் மார்ப்பில் முட்டி மோதினாள். அவன் மார்ப்பே அவள் காதல் ஆட்சி செய்யும் இடமானது. அவனின் அவஸ்தையின் அளவு ஜெட் வேகத்தில் எகிறியது. இனி அவளை தீண்டாமல் முடியாது என்னும் நிலையில் அவன்.. உண்மையில் அந்த நேரத்தில் அவளுக்கும் அவனின் சாதாரண அணைப்பு.. ஆறுதல் வார்த்தைகள்.. பற்றவில்லை.அதற்கு மீறிய நெருக்கத்தை ஆறுதலுக்காக தேடினாள்.

அவளிடம் இருந்து தப்பிக்கும் மார்க்கமாக..

“நீ போய் நைட் டிரஸ் போட்டு வந்து படு.. ஜீன்ஸோடு படுக்காத.. போ..” என தன்னிடம் இருந்து விலக்க பார்க்க…

அவள் நகரவில்லை. அவனின் வார்த்தைகளுக்கு அவளின் மறுப்புகள் எல்லாம் மௌனமொழியாகவே இருக்க…அவளை தன்னில் இருந்து பிரிக்க பார்க்க.. இன்னும் இன்னும் பசையாக ஒட்டினாள்.

அவனின் நிலையோ மிக மோசம்.. பேரலையாக எழும்பும் உணர்வுகளை தன்னுள் அடக்க.. அடக்க.. நீரில் அழுந்த மறுக்கும் பந்து போல எதிர் விசையில் எகிறி கொண்டு மேலே கிளம்பியது.

அவளின் தேவையை உணர்ந்தவனுக்கு அதை பூர்த்தி செய்ய.. ஆசை கிளர்ந்த போதும்…அவனின் வரட்டு பிடிவாதமும்.. அவன் நினைத்து கொண்டு இருக்கும் பொருந்தாத வாழ்க்கை என்ற எண்ணமும் தடையாக வந்து நின்றன.

இரு மனங்கள் கூடிய சங்கமம் என்பது எந்த ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறியும் என்ற நியதியை அறியாமல் அழகாக.. அன்பாக. ஆளவேண்டியவளை தள்ளி நிறுத்தப் பார்க்க.. அவன் தடைகள் எல்லாம் உடைப்பெடுக்கும் நிலையை உருவாக்கி கொண்டு இருந்தாள்.

அவன் மார்ப்பை சுற்றி சுற்றி விடாது முத்தம் கொடுத்து கொண்டு இருந்தாள் நங்கை. அவன் பாதத்தின் மேல் தன் பாதத்தை வைத்து…அவன் தோள்களில் தன் கைகளை ஊன்றி.. எக்கி எழுந்து.. அவனின் இதழை தன் இதழால் இடமிருந்து வலமும் வலமிருந்து இடமும் மாற்றி மாற்றி உரசி உரசியே சிக்கிமுக்கி கல்லாக அவனுள் காதல் தீயை பற்ற வைத்தாள்.

அவனின் பிடிவாதங்களை எல்லாம் அவளின் பிடித்தம் ஜெயிக்க.. சிறு சிறு அலையாக எழுந்த மோகங்கள் எல்லாம் ஆழி பேரலையாக எழுச்சி பெற…

தன் மேல் கிடந்தவளை புரட்டி கீழே போட்டு.. அவள் மேல் இவன் படர… நிகிதாவின் நயனங்களில் காதல் மின்ன.. மென்னகை பூக்க.. நம்ப முடியாமல் “மாமா” எதிர்பார்ப்போடு கணவனை பார்க்க…

“சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விட்டல்ல.. இனி வரும் சேதாரத்திற்கு நான் பொறுப்பில்லை.. பார்த்துக்கோ..” என்றான் குறும்பு புன்னைகையுடன்..

“ம்ம்ம்.. ஹாஹாங்.. அதையும் பார்க்கலாம்”என்று அவனை மேலும் உசுப்பேத்தி விட..

“உன் கொழுப்பை எல்லாம் இன்னைக்கு அடக்கறேன்டி” என்றான் உல்லாசமாக..

“வீராச்சாமி மச்சானுக்கு ஒருவழியாக வீரம் வந்துடுச்சு போல..” என்றாள் உதட்டை சுழித்து நக்கலாக..

அவளின் பேச்சின் நோக்கம்அறிந்தவனுக்கு மனதை மயிலிறாக வருட..

“திமிரா பேசற இந்த வாயை..” என்றவன் அவள் இதழ்களை இழுத்து கவ்வி சுவைக்க..

இதழ் சிந்தும் தேனை பருக… பருக..வயாகாரா ஜீஸ் குடித்தது போல கிறங்கி போனான்.

அடுத்து அவளை ஆவேசமாக ஆலிங்கனம் செய்தான். அன்று போதையில் அரங்கேறியது வீராவுக்கு எதுவும் நினைவில் இல்லை. இன்று சுய நினைவோடு தன் இல்லாளின் பேரழகை காண… இப்போது மது அருந்தாமலேயே போதை தலைக்கு ஏற… கிறுகிறுத்து போக…

அவன் ஆவேசமாகவே காதல் போர் தொடுக்க… எதிர்கொள்ள முடியாமல் திணறினாள். அவள் திணறும் போது எல்லாம் தலை கோதி.. முத்தம் வைத்து..

“அமுல் பேபி..அமுல் பேபி..” என கொஞ்ச..

“மாமா.. வீரா மாமா..”என கிள்ளையாக மிழற்ற…

இருவருக்குமே வாழ்நாளின் வசந்தமாக.. நிறைவான கூடலாக.. அரங்கேறியது.

அவன் காதலை அவன் உணர்ந்தானோ இல்லையோ.. நிகிதா உணர்ந்தாள். உணர வைத்து இருந்தான் நிகிதாவின் ஒவ்வொரு அணுவிலும் பதியுமாறு…

காதல் போதை தெளிய.. தெளிய.. மீண்டும் மீண்டும் மனைவியை நாடினான். வேண்டாம் என ஒதுங்கியவன் தான் இன்று வேண்டும்.. வேண்டும் என அடம்பிடித்து தனக்கு தேவையானதை நடத்தி கொண்டான்.

ஒரு கட்டத்தில் நிகிதா சோர்ந்து மயங்கும் நிலைக்கு வரவும் தான் விடுவித்தான். ரூபேஷினால் ஏற்பட்ட அதிர்ச்சி.. இரவு உணவு எடுத்து கொள்ளாதது.. வீராவின் ஆவேசமான ஆலிங்கனம்.. எல்லாம் அவளுக்கு லேசான மயக்கம் ஏற்பட..

தங்கள் அறையில் மினி ப்ரிட்ஜில் இருந்த ஜீஸை எடுத்து வந்து அவளுக்கு புகட்டி.. அவனும் சாப்பிடவில்லையே.. இப்போது தான் பசி தெரிய.. தானும் கொஞ்சம் குடித்துவிட்டு.. அவளை தன் மேல் சாய்த்து தட்டி கொடுத்து தூங்க வைத்து.. தானும் தூங்கி போனான்.

மையல் கொண்டு நங்கை பேதலிக்க..

மோகம் கொண்ட நாயகன் கிறங்க..

மன்மத தேசத்தில்..மயங்கும் பொழுதில்..

காதல் மழையில் நனைந்து…

மோக கடலில் மூழ்கி…

தாப அலை அடித்து செல்ல..

தீராத தாகம் தணிய… தணிந்து

உருகி கரைந்து போயினர்..

12 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

IMG-20240823-WA0015

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 5

  5     ஆரனின் மயூபேபி.. இந்திராக்ஷி ஆனது எப்படி??     மயூ பேபி.. மயூ பேபி என்று குழைந்து குழைந்து அழைத்தவன், இன்று இந்திராக்ஷி என்று மானைக் கண்ட வேங்கையாக கண்களில் வெறியுடன் அழைக்கக் காரணம் என்ன??     மறுநாள் மதியம் வரை அனைத்தும் நன்றாகத்தான் சென்றது. அதன் பின் தான் அனர்த்தம் ஆனாது.       அங்கே செந்தூராரின் வீட்டில் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல், மயூரியை தெளிய

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 5 Read More »

IMG-20240821-WA0010

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 4

4     தான் செந்தூரார் குரூப்ஸூக்கு எதிராக டீலிங் எடுத்த கப்பலின் பாகங்களை உடைத்தெடுக்க போதுமான ஆட்கள் வசதி எதுவும் தற்போது ஆரனிடம் இல்லை.   இவன் இம் என்று சொன்னால் ஒரு படையே மும்பைலில் இருந்து வர காத்திருக்க.. இங்கே திருச்செந்தூரில் சட்டென்று வெளியாட்களை யாரும் உள்ளே அனுமதித்து விடமாட்டார்கள். அவரவர்களுக்கு என்று தனித்தனியே அமைப்புகளும் சங்கங்களும் இருக்கிறது.  இவன் ஏற்கனவே அதிலும் ஆன்லைன் மூலமாகவே உறுப்பினராக சேர்ந்து இருந்தான். பத்தோடு பதினொன்று அத்தோடு

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 4 Read More »

455218285_509585694960470_9075049944312118991_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 26     மகேஷ்வரன் அவரது தொழில் வட்டாரத்தில் அவருக்கு தெரிந்த நண்பர்களிடம் பணம் கேட்டுப்பார்த்துவிட்டார். நேத்துதான் பணம் கை மாத்தி விட்டேன் மகேஷ்வரன் இப்போ இல்லையென்று நொண்டி சாக்கு சொன்னார்கள். ராகேஷ்தான் தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி போனது என்று தெரிந்தும் அவரால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது.   சங்கரியிடம் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை பற்றி சொல்லவேண்டாம் தானாக சமாளித்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்த மகேஷ்வரனுக்கு இப்போது மனைவியிடம் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அவருக்கு சங்கரியிடம்

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 25 அடுத்த இரண்டு மாதத்தில் அமெரிக்காவிலிருந்து சங்கரியுடன் ராகேஷ் இந்தியா வந்திறங்கினான். சந்தனபாண்டியன் தேன்மொழிக்கு இன்று திருமண நாள்… சந்தனபாண்டியன் எடுத்துக்கொடுத்த பச்சை வண்ண பட்டைக் கட்டிக்கொண்டு, அருள்பாண்டியன் வாங்கிக்கொடுத்த பச்சை பட்டுச்சேலைக்கு மேட்சாக பச்சைக்கல் நெக்லஸ்சும், தங்கபாண்டியன் வாங்கிக்கொடுத்த பச்சைக்கல் வைத்த தங்கவளையலும் போட்டுக் கொண்டு கண்ணாடி முன்னே நின்று தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்தவளின் தோள் வளைவில் தாடையை வைத்து “கலெக்டர் மேடம் திருமணநாள் வாழ்த்துகள்” என்று தேன்மொழியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு “தேவதையாட்டம் இருக்கடி

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 25 அடுத்த இரண்டு மாதத்தில் அமெரிக்காவிலிருந்து சங்கரியுடன் ராகேஷ் இந்தியா வந்திறங்கினான். சந்தனபாண்டியன் தேன்மொழிக்கு இன்று திருமண நாள்… சந்தனபாண்டியன் எடுத்துக்கொடுத்த பச்சை வண்ண பட்டைக் கட்டிக்கொண்டு, அருள்பாண்டியன் வாங்கிக்கொடுத்த பச்சை பட்டுச்சேலைக்கு மேட்சாக பச்சைக்கல் நெக்லஸ்சும், தங்கபாண்டியன் வாங்கிக்கொடுத்த பச்சைக்கல் வைத்த தங்கவளையலும் போட்டுக் கொண்டு கண்ணாடி முன்னே நின்று தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்தவளின் தோள் வளைவில் தாடையை வைத்து “கலெக்டர் மேடம் திருமணநாள் வாழ்த்துகள்” என்று தேன்மொழியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு “தேவதையாட்டம் இருக்கடி

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

error: Content is protected !!
Scroll to Top