ATM Tamil Romantic Novels

B3E258E9-2585-4688-849D-A9DE61D9E78D

2 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

2 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

அதிகாலையிலேயே எழும் பழக்கம் உள்ள வீரா விடிந்து வெகு நேரம் கழித்தே கண்விழித்தான். விழித்தவன் தன் மேலே கனமாக உணர்ந்தான்.

நிகிதா.. தான் அவன் மேலே கைகால்களை போட்டு கொண்டு கட்டி பிடித்து தூங்கி கொண்டு இருந்தாள்.

“ச்சே இது வேறயா..” என எரிச்சலில் அவளை வெடுக்கென பிடித்து தள்ளி விட்டான்.

நன்றாக தூங்கி கொண்டு இருந்தவள் அவன் தள்ளிவிட்டதில்.. எழுந்து மலங்க.. மலங்க.. விழிக்க..

அதை பார்த்து வீராவுக்கு இன்னும் எரிச்சல் அதிகமானது. “முழிக்குது பாரு தேவாங்கு மாதிரி” என முணுமுணுக்க… அந்த முணுமுணுப்பில் தெளிவானவள்..

“ஏய்.. ஏய்.. என்ன..என்ன சொன்ன..”

“என்ன சொன்னேன் ஒன்னும் சொல்லலையே..”

“இல்லல்ல.. நீ என்னமோ சொன்ன.. தேவாங்கு.. ஆங்..தேவாங்குனு சொன்ன..”

“ஆமாண்டி அப்படி தான் சொன்னேன். இப்ப அதுக்கு என்னங்கற…”

“அப்புறம் இன்னொன்னு நேத்தே மரியாதை இல்லாம பேசாதேனு சொன்னேன். மறுடியும் அதே மாதிரி தான் பேசற..சொல்லிட்டு இருக்கமாட்டேன். ஒரு காட்டு காட்டிருவேன் நெனைப்பு வைச்சுக்கோ ஆமாம்”

“அப்படி தான் பேசுவேன். என்ன பண்ணுவ” என்றாள் திமிராக… வீரா ரொம்பவே மரியாதையை எதிர்பார்ப்பவன். ரோசக்காரன்.கோபக்காரனும் கூட…

கிட்ட நெருங்கியவன் அவள் கையை பிடித்து பின்புறமாக திருப்பி முறுக்க…
வலி தாளாமல் கத்த ஆரம்பித்தாள்.

“ஐயோ.. ஐயோ விடு வலிக்குது”

மேலும் கையை இறுக்கி பிடித்து முறுக்க..வலி வேதனையில் அவள் வாயிலிருந்து தன்னாலே மரியாதை வந்தது.

“வலிக்குது விடுங்க…இனி இப்படி பேசல..” என்கவும்… அவளை உதறிவிட்டு எழுந்து குளியலறைக்கு சென்றுவிட்டான்.

நிகிதா கடிகாரத்தைப் பார்க்க அது எட்டு என காட்டியது. “ஓஎம்ஜி..எயிட் ஓ கிளாக் தான் ஆகுது. இப்பவே எழுப்பி விட்டுட்டான் டெவில்” என திட்டிக் கொண்டு இருந்தவள் குளியலறை கதவு திறக்கும் சத்தத்தில் கப்பென வாயை மூடிக் கொண்டாள்.

அவள் திரு திருவென முழித்து கொண்டு இவனைப் பார்க்க.. இவ ஏன் இப்படி முழிக்கிறா.. என அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறே தன் உடையோடு குளிக்க சென்றுவிட்டான்.

குளித்துவிட்டு வந்து அங்கே ஒருத்தி இருப்பதை கண்டு கொள்ளாமல் தயாராகி கீழே சென்றுவிட்டான்.

இவன் கீழே சென்ற போது பாட்டி தாத்தா இருவரும் இவர்கள் அறையை பார்த்தவாறே அமர்ந்திருந்தனர். அவர்கள் முகம் கவலையாக இருப்பதை பார்த்தவன் அவர்கள் அருகில் சென்று முகத்தில் வலிய வைத்த சிரிப்புடன் அமர…

“கண்ணா சந்தோஷமா இருக்கறியா… உன்னை கஷ்டப்படுத்தறோமோ..”என வீராவின் கன்னத்தை வாஞ்சையாக தடவியவாறே கவலையுடன் கேட்க..

“அம்மாச்சி.. எதுக்கு வருத்தப்படறிங்க..எல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றான்.

தங்களின் ஒரே பேரன்… செல்ல பேரன்… அவன் வாழ்க்கையை வீணாக்கி விட்டோமோ என்ற குற்றவுணர்வு ஏற்கனவே மனதில்… ஆனாலும் தங்கள் பேத்தியின் வாழ்க்கையை சரி பண்ண வீராவால் மட்டுமே முடியும். வேற வழியில்லையே.. என்ற சிந்தனையில் கண்கள் கலங்கி விட…

“அச்சோ அம்மாச்சி.. என்னது இது”அவர் கைகளை பிடித்து கொண்டு

“என் பியூட்டி அழுதா நல்லாவே இல்லை. பாருங்க.. நீங்க அடிச்சிருந்த ஒரு கோட் பவுடரும் கரைஞ்சிடுச்சு..” என கேலி பேச..

“போடா படவா..”என லேசாக சிரித்தவாறே சேலை தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்ள..

“மங்களா.. வீராவுக்கு காபி எடுத்துட்டு வா போ”என சொக்கலிங்கம் சொல்ல.. பாட்டி எழுந்து சென்றார்.

தங்கள் பேச்சு மனைவியின் காதில் விழாத தூரம் சென்றதை உறுதி படுத்திக் கொண்டு

“வீரா.. தாத்தா தப்பு பண்ணிட்டேன் நினைக்கறியா..” என சொல்ல இடையிட்டவாறு..

“தாத்தா என்ன நீங்க.. இப்படி எல்லாம்”

“வீரா உன் பாட்டி வரங்காட்டி நான் கொஞ்சம் பேசனும். பேசிடறேன் குறுக்கிடாம கேளு”

“சொல்லுங்க தாத்தா”

“எனக்கு தெரியும் உங்க மாமன் வீட்டோட மாப்பிள்ளையா வந்தது உனக்கு பிடிக்கல.. அதுல உன்னையும் அதே மாதிரி கொண்டு வந்துட்டமேனு உனக்கு கோபம்..ஆனா எனக்கு வேற வழி தெரியல..உங்க மாமன் தொழில் பின்னாடி ஓட.. உங்க அத்தையோ ப்ரண்ட்ஸ் கிளப்னு.. பிள்ளைகள இவங்க பார்க்கல.. பாசத்தை பணமா கொடுத்து அதுங்க நடவடிக்கை சேர்க்கை எதையும் கவனிக்கல..”

“நாகரிகம் சுகந்திரம்னு அதுங்க பாதை மாறி போகும் போது தான் உங்க மாமன் அதுங்கள பார்த்துக்க எங்கள ஊரில் இருந்து கூட்டிட்டு வந்தான்”

“ஏதோ எங்க கண்டிப்புலயும் பாசத்துலயும் ஓரளவுக்கு சரி பண்ணினோம். நாங்க வந்தப்ப ஆராத்யா சின்ன புள்ள அதனால நாங்க ஈசியா எங்க வழிக்கு திருப்பிட்டோம். ஆனா நிகிதா இரண்டு கெட்டான் வயசு கொஞ்சம் பிடிவாதம் என எங்களால அவள தான் சரி பண்ண முடியல.. ஆனா நல்ல புள்ள… சேர்க்கை தான் சரியில்ல..”

“வெளிய மாப்பிள்ளை பார்த்தா.. வரவன் எப்படி.. என்ன… என தெரியாது. நாங்க இருக்கற வரை இந்த குடும்பத்தை பார்த்துப்போம் எங்களுக்கு பிறகு..” என சொல்லி கொண்டே வந்தவர் தொண்டை அடைக்க..

எதுவும் பேசாமல் வீரா தாத்தாவின் கைகளை பிடித்து தட்டி கொடுக்க..

தொண்டையை செருமிக் கொண்டு “நம்ம இரத்தமா இருந்தா வேறயா நினைக்காது. ஆண்வாரிசு இல்லாத இந்த குடும்பத்தையும் உங்க மாமனையும் தொழிலையும் கவனிக்க உரிமையான உறவால தான் முடியும் னு நினைச்சு தான் உன்ன மாப்பிள்ளையாக்கினேன்”

“தாத்தா எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியா இருங்க”

“இதை தான் கல்யாணத்திற்கு முன்பு சொல்ல வந்தேன் கோபத்துல கேட்கல”என வருத்தப்பட..

அவனுக்கு இப்போதும் உள்ளுக்குள் கோபம் இருந்தது. ஆனால் வருத்தத்தில் இருக்கும் பெரியவர்களை பேசி நோகடிக்க வேணாம். இனி பேசி என்னாக போகுது என அமைதியாகிவிட்டான்.

பேரன் பேசாததிலேயே அவன் மனவோட்டம் புரிந்தவர் எதுவும் கோபமாக பேசாமல்.. தான் பேசியதையாவது காது கொடுத்து கேட்டானே.. பெரும் மூச்சுவிட்டார்.

அதற்குள் மங்களம் பாட்டி காபியோடு வர..

“அம்மாச்சி காபி கொண்டு வர இவ்வளவு நேரமா..”

“இந்த வீட்ல எது வேணும்னாலும் சொன்னா இருக்கற இடத்துக்கு வந்திடும்.அப்படி இருந்தும் உங்க தாத்தா என்னைய காபி கொண்டு வானு சொல்லும் போதே உங்கிட்ட தனியா பேச நினைக்கிறாருனு புரிஞ்சுகிட்டேன். அதான் கொஞ்சம் தாமசமா வந்தேன்”

இந்த புரிதல் இதை தானே அவனும் எதிர்பார்த்தான். எளிமையான வாழ்க்கை தன்னை புரிந்து கொண்டு தன் சம்பளத்திற்குள் குடும்பம் நடத்தும் அமைதியான மனைவி என ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை தான் அவனின் எண்ணமாக இருக்க… அவனின் எண்ணம் எல்லாம் வண்ணமாக மாறாமல்.. அழிந்து போன கோபம் அவனின் அகத்துள்..

தன் எண்ணத்திலிருந்து விடுபட்டு பெரியவர்களை கவனிக்கலானான்.

“அம்மாச்சி உங்களுக்கு”

“நாங்க குடிச்சிட்டோம் நீ குடி பா”

அவன் குடித்து முடிக்கவும் வெங்கட் தயராகி கீழே வரவும் சரியாக இருந்தது. தன் பெற்றோரின் அருகில் அமர்ந்து இருந்த வீராவைப் பார்த்ததும் மெலிதான புன்னகையோடு

“குட்மார்னிங் மாப்ள” என்க..

“மாமா மாப்ள எல்லாம் வேண்டாம். எப்பவும் போல வீரானே கூப்பிடுங்க..”

“இருக்கட்டும் மாப்ளே…எப்ப நம்ம பேக்டரிக்கு வரிங்க.. உங்க வேலைக்கு ரிப்போர்ட் கொடுத்துட்டிங்கல்ல..”

“ம்… கொடுத்துட்டேன். இன்னைக்கே வேணாலும் வரேன்” என்றான் சற்று தயக்கமாக…

அவன் சுயமரியாதைகாரன். வீட்டோடு மாப்பிள்ளை அவனின் சுயமரியாதைக்கு பெரிய அடி. அதை ஏற்றுக் கொள்ள முடியாமல்… அதிலிருந்து விடுபடவும் முடியாமல்… அவனின் மனம் நெருப்பை போல தகதகவென எரிந்து கொண்டு இருந்தது.

“இன்னைக்கே வேணாம் மாப்ள..சடங்கு விருந்து இதெல்லாம் இருக்கு.. ”

கொஞ்சம் தயங்கியவாறே “ஹனீமூன் டிரிப் எங்கயாவது போறிங்களா.. அரேஞ்ச் பண்ணவா..”என்றார் வீராவின் முகத்தை சங்கடத்துடன் பார்த்தவாறே..

ஆமாம் அது ஒன்னு தான் குறைச்சல் என மனதினுள் நொடித்து கொண்டு”இல்ல. மாமா அதெல்லாம் எதுவும் வேணாம்” என்றான் பட்டென்று..

பேச்சை மாற்றும் விதமாக பேக்டரி சம்மந்தமாக தனக்கு தெரியாதவற்றை பற்றி கேட்டான்.

வெங்கட்டிற்கு தனது தொழில் தான் எல்லாமே குடும்பம் கூட அடுத்த நிலை தான். வீரா கேட்கவும் அவன் பேச்சை திருப்பும் வித்தையை அறியாமல் வெகு சுவராஸ்யமாக அவனுக்கு விளக்க ஆரம்பித்துவிட்டார்.

இனி இது தான் வாழ்க்கை என மனதில் நிறுத்தி கொண்டு அவனும் கர்ம சிரத்தையாக கேட்க ஆரம்பித்தான்.

அதற்குள் மங்களம் பாட்டி நிகிதாவின் அறைக்கு சென்று அவளை கிளப்பி கொண்டு கீழே இழுத்து வந்தார்.

பாட்டி சென்று பார்த்த போது நிகிதா மறுபடியும் படுத்து நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள்.

என்ன இந்த பொண்ணு இப்படி பண்றாளே.. புருஷன் எழுந்து குளித்து ரெடியாகி வந்துட்டான். இன்னும் தூங்கறாளே.. இப்படி இருந்தா எப்படி.. என வேதனைப்பட்டவர்.

“நிகிதா… ஏய் நிகிதா.. எழுந்திரு” என முதுகில் இரண்டு போட்டார்.

“ஐயோ கிரேனீ வலிக்குது” என முதுகை தேய்த்து கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

“எழுந்து குளிச்சிட்டு வா.. வந்து உன் புருஷன கவனி”

“நான் என்ன அவனுக்கு சர்வென்டா.. அதெல்லாம் முடியாது”

“மரியாதை இல்லாம பேசாதேன் சொல்லியிருக்கேனா இல்லையா..” என மிரட்ட..

“பாட்டிக்கும் பேரனுக்கும் இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல…மரியாதை வேணுமா.. மரியாதை” என்று அவள் முணுமுணுக்க..

“என்ன முணுமுணுப்பு… போய் குளி”என்றார் அதட்டலாக..

அவள் குளித்து வருதற்குள் அவளுக்கு ஒரு சாப்ட் சில்க் புடவையை எடுத்து வைத்தார்.

குளித்து வந்தவள் புடவையை பார்த்தும் எரிச்சலாகி..

“நான் சேரிலாம் கட்டமாட்டேன்”

“நீ புடவை தான் கட்டற..”

“எனக்கு பிடிக்கல..கட்டமாட்டேன்”

“நேத்து தானே கல்யாணம் ஆகியிருக்கு.. இன்னைக்கு வீட்ல விருந்து. சொந்தகாரங்க வருவாங்க.. புடவை கட்டி தான் ஆகனும்” என்றார் கோபத்துடன்..

“அதெல்லாம் முடியாது. முடியவே முடியாது”

“சொல்லறத கேளு கொஞ்ச நேரம் கட்டியிரு.. அப்புறம் மாத்திக்கலாம்”

“நோ வே என்னால முடியாது” என பிடிவாதமா சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

பாட்டி எவ்வளோ கெஞ்சி கொஞ்சி அதட்டி பார்த்தும் வேலை ஆகவில்லை. கடைசியில் அவர் தான் அவள் வழிக்கு செல்ல வேண்டி வந்தது.

த்ரெட் ஒர்க் பண்ணின அழகான ஒரு சுடிதாரை கையில் கொடுத்து..

“இதையாவது போடு” என்க

“இதா..”என்றவளை முறைத்து

“இதான். பின்னே எப்பவும் போல ஆம்பள புள்ள மாதிரி ஜீன்ஸ் சட்டை போடலாம்னு நினைச்சியா… இது போடு இல்லைனா புடவைய கட்டு.. என்ன பண்ற..”

நிகிதா முகத்தை சுளித்தவாறு சுடிதாரை வாங்கி கொண்டு

“நீங்க போங்க நான் ரெடியாகி வரேன்”

“இல்ல நான் பெட்ரூம்ல இருக்கேன். நீ வா.. அப்புறம் இன்னொன்னு தலைவிரி கோலமா வராதே.. பின்னல் போட்டு இந்தா இந்த பூவை வச்சுகிட்டு வா” என மல்லிகை சரத்தை கையில் கொடுத்தார்

பாட்டியை முறைத்துக் கொண்டே”இந்த ஹேர்ஸ்டைலுக்கு பின்னல் எல்லாம் போடமுடியாது” என்றாள் வெடுக்கென..

“எப்படியோ முடிய விரிச்சு போடாம அது ஏதோ… ஆங்.. கிளிப்பு போட்டு பூ வச்சுகிட்டு வா..கண்டிப்பா பூ வச்சிருக்கனும்” என்று சொல்லி விட்டு டிரஸ்ஸிங் அறையில் இருந்து வெளியேறினார்.

அவர் வெளியே சென்றதும் கதவை அடைத்தவள் “ஓல்டு லேடி டார்ச்சர் தாங்க முடியல… அந்த கருவாயனுக்காக இவ்வளவு மேக்கப் ஓவர் தான். ஓல்டிய அனுப்பிட்டு இந்த மம்மி என்ன பண்றாங்க” என்று புலம்பியவள்

எப்பவும் அவள் போடும் மேக்கப் குறையாமல்.. கிளிப் போட்டு சரமாக மல்லிகை பூவை வைத்து கொண்டு வெளியே வந்தாள்.

படுக்கை அறையில் பாட்டி இல்லை என்றதும் ஊப் என வாயை ஊதி ஒரு பெருமூச்சு விட்டவள் கீழே சென்றாள்.

ஆண்கள் மூவரும் தொழில் விசயமாக பேசி கொண்டு இருந்தனர். மெல்லிய கொலு ஒலியில் வீரா திரும்பி பார்த்தான். நிகிதா இரு தோள்களிலும் மல்லிகை சரம் தொங்க..அவள் நிறத்தை தூக்கி காட்டும் வண்ணம் கருநீல சுடிதாரில் இறங்கி வந்தவளை ஒரு நொடி அசந்து போய் தன்னை மறந்து பார்த்திருந்தான் வீரா.

அடுத்த நொடியே தலையை லேசாக உலுக்கி யப்பா… மேக்கப் கொஞ்சம் ஓவர் தான் என நினைத்து சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான்.

நிகிதா தாயை தேடி கிச்சனுக்கு சென்றாள். அங்கு ரோகிணி இன்றைய விருந்துக்கு சமைக்க வந்திருந்த ஆட்களை வேலை வாங்கி கொண்டு இருந்தார்.

மகளின் மம்மி என்ற அழைப்பில் திரும்பி பார்த்தவர் மகளின் அழகில் கண்கள் கலங்க அருகே வந்து கன்னம் கிள்ளி கிள்ளு முத்தம் ஒன்று வைத்தார்.

“டின்னர் ரெடியாகிடுச்சு போ எல்லோரையும் கூப்பிடு சாப்பிடலாம்”

“அவங்களுக்கு பசிச்சா வந்து சாப்பிடட்டும் நான் எதுக்கு கூப்பிடனும்”என்றாள்.

அந்த வீட்டில் யாரும் யாருக்காகவும் காத்திருக்காமல் சாப்பிட்டு விட்டு அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவர். தாத்தா பாட்டியை தவிர..

“நிக்கி பேபி அப்படி சொல்லகூடாது. போ கூப்பிடு”

“மீ…. ” என்று சிணுங்கியவாறு சென்றாள்.

அதற்குள் பாட்டியே ஆண்களை சாப்பிட அழைத்திட.. சாப்பிட வந்தனர். வீராவுக்கு அருகில் நிகிதாவை அமர வைத்து வெங்கட் சொக்கலிங்கம் அமர.. ஆராத்யாவும் இவர்களுடன் இணைந்து கொண்டாள்.

வேலையாளை விடுத்து மங்களமும் ரோகிணியும் பரிமாறினர்.

ஆராத்யா “கிரேனி இப்படி எல்லோரும் சேர்ந்து சாப்பிடறது கூட நல்லா இருக்குல்ல..இப்படியே தினமும் சாப்பிடலாம்”

“அதுக்கென்ன சாப்பிடலாம் ஆரா” பாட்டி சொல்ல.. வீரா ஆராத்யாவை பார்த்து சிரித்தான்.

வீராவின் பக்கத்தில் இருந்தவளோ எதையும் கண்டு கொள்ளாமல் சாப்பாட்டை கொறித்து கொண்டு இருந்தாள். அவளுக்கு வீராவின் பக்கத்தில் உட்கார வைத்த கோபம்.

இவள் என்ன இப்படி கொறித்து கொண்டு இருக்கிறாள் அதனால தான் ஒட்டடை குச்சி மாதிரி இருக்காளோ என நினைத்தவன் அவ எப்படி சாப்பிட்டா நமக்கென்ன என்று தான் சாப்பிட்டான்.

வீரா எப்பவும் கொஞ்சம் நன்றாக சாப்பிடகூடியவன். பேரனை பற்றி அறிந்த பாட்டி அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாற.. நிகிதாவோ என்ன இவ்வளவ சாப்பிடுகிறான். அதனால் தான் பாக்சர் மாதிரி இருக்கான் என நினைத்தாள்.

இருவரும் எல்லாவற்றிலுமே எதிரும் புதிருமாக இருக்க.. இவர்கள் எப்படி இணைந்து வாழ்வார்களோ…?

இயல்பும் மனமும்

எதிரெதிர் திசையில்

பயணிக்க..

எதிரெதிர் துருவங்களாய்

நிற்கும் இருவரும்

வாழ்க்கை பாதையில்

ஒரே நேர்கோட்டில்

இணைவார்களா…

பயணிப்பார்களா…

பயணம் சுகமாக

சுமூகமாக இருக்குமா…..

2 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

453099957_498572936061746_1513218913597202475_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 5   அடுத்த இரண்டு வாரத்தில் தங்கபாண்டியன் ஆர்த்தி கல்யாணம் மதுரையில் தங்கபாண்டியன் குலதெய்வ கோவிலில் நடந்து முடிந்தது. ஆர்த்தி வீட்டுக்கு மறுவீடு விருந்துக்கு போனதும் விருந்து முடிந்து ஹாலில் உட்கார்ந்திருந்தான் தங்கபாண்டியன்.    சங்கரியோ தங்கபாண்டியனின் குடும்ப சொத்தின் அளவை தெரிந்துக் கொண்டவர் மகளை தன்னுடன் வைத்துக் கொண்டால் தங்களின் சொத்து மதிப்பு இன்னும் பெருகிடும் என்று பேராசைப்பட்டு மகளிடம் வந்தவர் “ஆர்த்தி நீ எங்களுக்கு ஒரே பொண்ணு நம்ம வீட்லயே தங்கிடேன்! என்னால

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

623A2197-7D36-4DA8-84E9-C70945487E5E

1 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

1-புயலோடு பூவுக்கென்ன மோகம்

அதிகாலை வேளை புள்ளினங்கள் எல்லாம் பூபாளம் பாடி பூமியை விடியலுக்கு ஆயத்தம் செய்து கொண்டு இருந்தன. சூரியன் கிழக்கு திசையில் மெல்ல மெல்ல மேலே எழும்பிக் கொண்டு இருந்தார். ஆதித்தனாரின் செங்கதிர் பட்டு மலர்கள் எல்லாம் மலர்வதற்காக மலர்ந்தும் மலராத பாவனையில் காத்திருந்தன.

சென்னையில் உள்ள மிகப்பெரிய மண்டபம் அது. மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே திருமணம் செய்யக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட முழுவதும் குளிருட்டப்பட்ட திருமண மண்டபம்.

மண்டபத்தின் முகப்பு பகுதியில் வாழைமரங்கள் இருபுறமும் கட்டி பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆர்க்கிட் மலர்களாலும் தென்னங்கீற்றாலும் அலங்கரிப்பட்ட அலங்கார வளைவு

அதன் கீழே அழகான ஆர்க்கிட் மலர்கள் கொண்டு மணமக்களின் பெயர்களை தாங்கி நின்றது அழகான பெயர் பலகை.

வீராசாமி
வெட்ஸ்
நிகிதா

மண்டபத்தில் பட்டு சரசரக்க வைர நகை ஜொலி ஜொலிக்க.. பெண்கள் ஒரு புறம் தங்கள் பெருமைகளை வாய் கொள்ளா சிரிப்புடன் தம்பட்டம் அடித்து கொண்டு இருக்க…

ஆண்களோ கோட் சூட் சகிதமாக… வைர மோதிரங்கள் பளபளக்க.. தங்கள் தொழில் முறை சார்ந்த பேச்சில் மூழ்கியிருக்க..

இந்த பகட்டிற்கும் பதவிசுக்கும் சம்மந்தம் இல்லாமல் இதை கண்டு மிரண்டு ஒரு ஓரமாக அமர்ந்து தங்களை மறந்து சற்று விழி விரித்து பார்த்து கொண்டு இருந்த மிகவும் எளிமையான எதார்த்தமான கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் ஒரு புறம் என களை கட்டியது அந்த மண்டபம்.

அழகான வாசனை நிறைந்த மலர்கள் கோல்டன் நிறம் கொண்ட செயற்கை தூண்களில் கொடி போல படரவிட்டு இருக்க.. ப்ளாஸ் லைட்களை உள் வாங்கி ஒளி சிதறல்களாக சிதற வைக்கும் அழகான வடிவில் அமைக்கப்பட்ட சிறு சிறு கண்ணாடி சில்லுகளை தாங்கிய சரங்களை அங்காங்க தொங்க விடப்பட்டும்…மேடையின் நடுவே திருப்பதி வெங்கடாஜலபதியே நேரில் எழுந்தருளியது போல… தத்ரூமபாக கைத் தேர்ந்த கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டும் நேர்த்தியாக இருந்தது அந்த மணமேடை.

மேடையில் நின்று கொண்டு இருந்த இரு குடும்பத்தாரின் முகங்களிலும் நிறைவான புன்னகை.. மனம் நிறைந்த மகிழ்ச்சி.. இரு குடும்பமும் ஒருக்கொருவர் சம்மந்தம் இல்லாத புது உறவுகள் அல்ல…

இரத்த சொந்தங்கள் கொண்ட உறவுகள் தான். ஆனால் இரு குடும்பத்தின் செல்வ நிலை தான் இவர்களை தள்ளி நிறுத்தி வைத்திருந்தது. இன்று இந்த திருமணம் மூலம் இணைந்த மகிழ்ச்சி எல்லார் மனங்களிலும்…

ஆனால் மனம் கொள்ளா காதலோடும்… கனவுகளோடும்… எண்ணற்ற எதிர்பார்ப்புகளோடு வாழ்வில் அடி எடுத்து வைக்க வேண்டிய இருவரின் பார்வையில் அனல் பறந்தது.இவர்களின் பார்வையில் தகித்த அனலில் இவர்கள் முன் இருந்த ஓம குண்டத்தின் அக்னி ஜ்வாலை கூட சற்று மிரண்டு அடக்கி போனது.

சொக்கலிங்கம் மங்களம் தம்பதியரின் மூத்தவள் விசாலா அய்யாவு மகன் வீராசாமி.

இளையவன் வெங்கட் ரோகிணி மகள் நிகிதா. இவர்கள் இருவருக்கும் தான் இன்று திருமணம். இவர்களுக்கு ஒரு சதவீதம் கூட ஒப்புதல் இல்லை தாத்தாவின் வலுகட்டாயத்தில் நடக்கும் திருமணம்.

ஒருவரை ஒருவர் உருத்து விழித்துக் கொண்டு அமரந்திருந்தனர்.ஐயர் மந்திரம் சொல்ல அதை திருப்பி கூட சொல்லவில்லை. ஐயர் தாலி எடுத்து கொடுக்க… அதை வாங்காமல் வீராச்சாமி அவரை முறைக்க..

ஐயர் பாவம்… அவரும் தான் எத்தனை கல்யாணம் பண்ணி வைத்து இருக்கிறார்.இது போல மணமக்களை பார்த்தில்லை.

தாலி தானடா எடுத்து கொடுத்தேன். அதுக்கு இவ்வளவு டெரரா பார்க்கனுமா.. என மனதில் நிந்தித்து கொண்டார்.

தாத்தா சொக்கலிங்கம் “வீரா தாலி கட்டு” என்றார் அழுத்தமான குரலில்…. ஏதும் செய்ய இயலாத நிலையில் தன்னை நிறுத்திய தன் குடும்பத்தாரை வெட்டும் பார்வை பார்த்தவன். நிகிதா காதில் “உன் திமிரை எல்லாம் அடக்கறன்டி” என கோபமாக சொல்லியவாறே தாலி கட்டினான்.

போடா நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளா.. என பதிலுக்கு இளக்காரமாக பார்த்தாள் நிகிதா.அதில் இன்னும் கடுப்பான வீரா..

“அக்னியை வலம் வாங்கோ” என்று ஐயர் சொல்ல.. அவள் கையை நொறுங்கும் அவளுக்கு இறுக்கி பிடிக்க.. வலி தாங்காமல் தன் கூரான நகத்தை வைத்து அவன் உள்ளங்கையில் அழுத்த…

சட்டென அவள் கையை விடுத்து வீரா முன்னே நடக்க… இவன் பின்னால் நான் நடப்பதா…அவனை முந்தி நிகிதா நடக்க பார்க்க…

அடுத்தும் சங்கும் மோதிரமும் எடுக்கும் போட்டியிலும் தண்ணிரீல் ஒருவர் கையை ஒருவர் கிள்ளி கொள்ள….இவர்கள் இருவரும் ஏட்டிக்கு போட்டியாகவே செய்தனர்.

நிகிதா காலை பிடித்து மெட்டி போட முடியாது என வீரா சொல்லி விட.. விசாலா தான்.. தான் போட்டு விடுவதாக கூறி போட்டுவிட்டார்.

சென்னையில் உள்ள நிகிதா வீட்டிற்கு முதலில் சென்றனர் மணமக்கள். ஆரத்தி எடுத்து அழைக்க… பால் பழம் கொடுக்க..வீரா சாப்பிட்டு விட்டு நிகிதாவிடம் கொடுக்க..

“ச்சீசீ.. எச்சி.. நானு சாப்பிடமாட்டேன்” முகத்தை சுழித்து அருவருப்பாக சொல்ல…

வீரா அவளை தீப்பார்வை பார்க்க.. போடா என முணுமுணுத்து வேறுபுறம் முகத்தை திருப்பி கொண்டாள்.

அவள் செயலில் மங்களம் பாட்டி ரோகிணியை பார்க்க.. மாமியாரின் கண்டன பார்வையில் மிரண்டு ரோகிணி மகளிடம்

“நிக்கி வாங்கி சாப்பிடு பேபி” என கெஞ்சி சாப்பிட வைத்தார்.

அடுத்து காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரையூரில் உள்ள வீராவின் வீட்டிற்கு சென்றனர். வீராவின் அக்கா பொன்னி ஆரத்தி எடுக்க… இருவரும் இடைவெளி விட்டு தள்ளியே நிற்க…அங்கு நிகிதா விளக்கு ஏற்றி பூஜை செய்ய… வீராவோ வெளியில் வந்து அமர்ந்து கொண்டான்.

அங்கும் பால் பழம் சாப்பிட தகராறு தான்.மதிய உணவை முடித்து கொண்டு மாலை சென்னைக்கு சென்றனர்.

இரவு.. தனிமை ..கொடுமை.. இவர்களோடு…

நிகிதாவின் அறை வாசனைமலர்களாலும் அந்த வாசனை போதவில்லை என வாசனை மெழுகுவர்த்திகளாலும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

கட்டிலின் அருகில் சிறு மேஜை மேல் பழங்கள் இனிப்பு வகைகள் அழகான அலங்கார தட்டுகளில் இருநதது. வெள்ளி சொம்பில் பாலும் இருந்தது. ஆம் பால் சொம்பும் இருந்தது.

முன்பே சொல்லிவிட்டாள் நிகிதா.”டிபிக்கல் பொண்ணுங்க மாதிரிலாம் நான் பர்ஸ்ட் நைட்டுக்கு பால் சொம்போட போகமாட்டேன் அவனோட என் ரூமை ஷேர் பண்ணிக்கறதே பெரிசு அதுவும் நீங்க எல்லாம் திட்டறதால ஓகேனு சொன்னேன்” என்றாள்.

அவளின் பேச்சில் ரோகிணி பதறி போய் மாமியாரையும் நாத்தனாரையும் பார்க்க.. மங்களம் பேத்தியை முறைத்துக் கொண்டு இருக்க.. விசாலாவோ அடம்பிடிக்கும் சிறு குழந்தையை பார்ப்பது போல தம்பி மகளை வாஞ்சையோடு பார்த்து கொண்டு இருந்தார்.

மங்களம்”அவனை மரியாதை இல்லாமல் பேசின பல்லப் பேத்துடுவேன் பார்த்துக்கோ.. உன்னவிட வயசுல மூத்தவன் புருஷன்னு மட்டு மரியாதை வேணாம்” என திட்ட..

விசாலா தான்” விடுங்கம்மா.. சின்னபுள்ள தான.. போக போக சரியாயிடும்”

“யாரு இவ சின்னபுள்ள.. இவ செஞ்ச காரியம் எல்லாம் சின்னபுள்ளைங்க செய்யறதா..”

உடனே நிகிதா முகம் சுண்டி போக அமைதியாக தலையை குனிந்து கொண்டாள். மாமியாரின் பேச்சில் மகளின் வாடிய முகம் கண்டு ரோகிணியின் தாய் மனம் வாடியது.

பாட்டி,அத்தை, அம்மா என யார் பேச்சையும் கேட்கவில்லை. சொல்லி சொல்லி பார்த்துவிட்டு அடித்தாலும் பிடித்தாலும் ஒரே அறையில் இருந்தால் சரி என விட்டு விட்டார்கள்.

இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து குடும்பமே ஐயோ என தலையில் அடித்து கொள்ளாத குறையாக நொந்து கொண்டனர்.

வீரா நிகிதாவின் அறையில் கட்டிலில் அமர்ந்திருந்தான். அறையை சுற்றிலும் பார்வையை சுழலவிட்டவனுக்கு எங்கு பார்த்தாலும் பணத்தின் செழுமையே தெரிந்தது. இகழ்ச்சியாக புன்னகைத்து கொண்டான்.

வெறுப்பாகவும் இருந்தது. எதை வேண்டாம் என நினைத்தானோ.. அதற்குள்ளேயே அனைவரும் தன்னை சிக்க வைத்துவிட்டனர் என

நிகிதா வந்தாள் அசால்ட்டாக.. வீராவை பார்த்தாள் அலட்சியமாக… அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

நிகிதா பால் வண்ண நிறம். ஜீரோ சைஸ் உடம்பு. இயற்கையாகவே அழகு. பார்லர் உதவியால் பட்டென மென்மையாக இருந்தாள்.

வீராசாமி தமிழ் ஆண்களுக்கே உண்டான மாநிறம். அவன் தந்தையை போல.. அய்யாவு பட்டுத்தறி அவர் தொழில். நல்ல உழைப்பாளி. அதனால் உரமேறிய ஓங்கு தாங்கான உடம்பு. தந்தையை கொண்டு இருப்பான் வீரா.

சுருங்கச் சொன்னால் நிகிதா ஆரிய வம்சம்.
வீராசாமி திராவிட வம்சம்.

அவனை கண்டு கொள்ளாமல் உடை மாற்றும் அறைக்கு சென்றவள் கட்டியிருந்த பட்டுபுடவையை கழட்டி எறிந்து விட்டு ஸ்லீவ்லெஸ் பனியனும் மினிசார்ட்ஸும் போட்டு கொண்டு வந்தாள்.

அவளின் உடையை கண்டு வீரா திகைத்தது ஒரு நொடி தான். அவனுக்கு இருந்த வெறுப்பிற்கு அவள் மேல் ஈர்ப்பு எல்லாம் வரவில்லை.

வந்தவளோ.. ஒரு தலையணை போர்வையை தூக்கி தரையில் எறிந்தாள்.

“ஏய் மேன் உன்னோட ரூமை ஷேர் பண்ணிக்கறதே பெரிசு.. பெட்லாம் ஷேர் பண்ணிக்க முடியாது. டிஸ்கஸ்டிங்.. போய் கீழே படு” என்றாள் எகத்தாளமாக..

அவள் பேச்சில் வீராவிற்கு சுறுசுறுவென கோபம் உச்சிக்கு ஏற..

“ஏய் யாரைப் பார்த்து டிஸ்கஸ்டிங் சொன்ன..மரியாதை இல்லாமல் அவன் இவன் பேசின பல்லப் பேத்துடுவேன் ஜாக்கிரதை”

“பல்லப் பேத்துடுவேன் ங்கறது என்ன உங்க பேமிலி டைலாக்கா.. அந்த ஓல்டு லேடியும் அப்படி தான் சொல்லுச்சு” என அவன் முன் விரல் நீட்டி பேச..

நீட்டிய விரலை மடக்கி அழுத்தி பிடித்தவாறு “அம்மாச்சியவா.. ஓல்டு லேடிங்கற..பெரியவங்கற மட்டு மரியாதை வேணாம்”

“ஐயோ விடு வலிக்குது.. இது இதான் இப்படி தான் ஓல்டியும் சொல்லுச்..”

அவன் முறைப்பில் “இல்லல்ல பாட்டியும் சொன்னாங்க”

மடக்கிய விரலை விடுவித்து “போ.. போய் ஒழுங்காப் பேசாம படு ஏதாவது ஏடாகூடமா பேசின.. இப்ப விரல் தான்.. அப்புறம் கையைவே முறிச்சிருவேன் பார்த்துக்க..”

மனதில் அவனை ஆங்கில கெட்ட வார்த்தைகளால் அர்சித்தபடி தரையில் கால்களை உதைத்தவாறு சென்று படுத்து கொண்டாள்.

வீரா கீழே கிடந்த தலையணை போர்வையை எடுத்து அவள் மேலேயே விட்டெறிந்தான்.சென்று அவளருகே வேண்டும் என்றே படுக்கை எம்பி குதிக்கமாறு வேகமாக படுத்தான்.

அவன் தலையணையை விட்டெறிந்ததிலேயே எழுந்து அவனை அனலாக பார்த்தவள் அவன் தன்னருகே படுக்கவும்..

“ஏய் என் பெட்ல படுக்காத.. கீழ படு இல்லைனா சோபாவுல படு”

“மறுபடியும் மரியாதை இல்லாம பேசற..உன்னைய..” என அறைய கை ஓங்க..

பயத்தில் கண்களை இருக்க மூடி.. உடல் நடுங்க அமர்ந்து இருந்தவளை கண்டு.. ஓங்கிய கையை கீழே இறக்கி.. மெல்ல அவள் கன்னத்தில் தட்டி கொடுத்து

“பேசாம தூங்கு பேபி”என சொல்லி விட்டு திரும்பி படுத்துக் கொண்டான். அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஓரிரண்டு முறை தான் அவனை பார்த்திருக்கிறாள்.

அப்படி பார்த்த பொழுதில் இறுகிய முகத்துடன் சிரிக்கமாட்டானோ என நினைக்குமாறு தான் பார்த்திருக்கிறாள்.அவனிடம் இந்த மென்மையை அவள் எதிர்பார்க்கவில்லை.

திரும்பி படுத்திருந்தவனும் இவளையே நினைத்து கொண்டு இருந்தான். அவனுக்கு தெரியும் இந்த வீட்டில் அவளுக்கு எவ்வளவு செல்லம் என்று.. இந்த வீட்டின் இளவரசி..

இவள் தங்கை ஆராத்யாவை விட இவளுக்கு தான் எதிலும் முதலுரிமை முழு உரிமை.அவளை யாரும் அடித்ததில்லை அதனால் தான் நான் அடிக்க ஓங்கவும் பயந்துவிட்டாள் என..

இப்படியே ஒருவரை ஒருவர் நினைத்து கொண்டு ஆளுக்கொரு பக்கமாக திரும்பி படுத்து சிறிது நேரத்தில் உறங்கிவிட்டனர். பால் பழம் எல்லாம் தீண்டப்படாமல் அப்படியே கிடந்தது இவர்களை போலவே…

இணையாத இரு துருவங்கள்

இணைக்கும் முயற்சி

இணையுமோ ஈர்க்குமோ….

துணையோடு காதல் கொண்டு

இணை பிரியாமல் வாழுமோ….

துணையோடு வெறுப்பு பூண்டு

இணை பிரிந்து தன் திசை செல்லுமோ….

1 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

ea3974549b601a312db73a7db60cf7da

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 4     தங்கபாண்டியோ “என்ன வேலை இருக்கு சொல்லு தம்பி நான் முடிச்சிட்டு வரேன்” என்று சந்தன பாண்டியனிடம்  கேட்டதும் “இல்லண்ணா அந்த வேலையை நாளைக்கு பார்த்துக்கலாம் நீ போய் ரெஸ்ட் எடு!” என்றவனோ அங்கே தேன்மொழி நின்ற இடத்தை பார்த்தான். அவள் அங்கே இருந்தால் தானே “உங்க வேலையா அப்பத்தா” என தனபாக்கியத்தை முறைத்தான் சந்தனபாண்டியன்.   “சின்ன பொண்ணுடா அவ, இன்னிக்கு மட்டும் விடு நாளையிலிருந்து அவளுக்கு வேலை செய்ய ட்ரெயினிங்

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

81JpykAzNpL._SL1500_

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 3     அருள் பாண்டியன் தன் கையை பிடித்திருந்த தேன்மொழியின் கையை விட்டு “தேனுமா காருல ஏறி உட்காருடா” என்று கூறிவிட்டு திரும்பி சந்தனபாண்டியனை பார்க்க அவனோ பைக்கில் ஏறி சாவியை போடுவதை பார்த்த அருள் பாண்டியன் “தம்பி ஒரு நிமிசம் நில்லு” என கையை காட்டி நிறுத்தியதும் பைக்கிலிருந்த சாவியை எடுத்து இறங்கி “சொல்லுங்கண்ணா” என அருள் பாண்டியன் பக்கம் வந்து நின்றான் சந்தனபாண்டியன்.   “சாவியை கொடு” என்றதும் மறுபேச்சு பேசாமல்

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

37178dde93ce1600055d3892b414e121

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 2     தென்னரசு பெண்பித்தன் அவனது தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லவே பயந்து நடுங்குவர் அந்த ஊர் பெண்கள். வேலை முடிந்து சம்பளம் கொடுக்கும்போது பெண்களின் கையை தடவுவது! வேலை செய்யும் நேரத்தில் அவர்களின் தோளில் உரசுவதுமாய் இருப்பான். அவனின் மாயை பேச்சில் மயங்கும் சில பெண்களை தன் பண்ணைவீட்டில் வைத்து சோலியை முடித்துவிடுவான். இது ஊரில் பலபேருக்கு தெரியும்.   பொன்மணிக்கு இந்த விஷயம் அரசல் புரசலாக தெரிந்தது. இந்தக்காலத்தில் எவன் ஒழுக்கசீலனாய் இருக்கான்.

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவோடு பிறந்தவள் நீயோ?!   நிலவு 1     மதுரை மாவட்டம் என்றாலே திருவிழாதான். தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமம் முத்தாலம்மன் கோவில் திருவிழா கொடியேற்றும் விழா இன்று. அந்த ஊரில் பெரிய தலைகட்டு குடும்பம் சுந்தரபாண்டியன் குடும்பம். சுந்தரபாண்டியன் காஞ்சனா தம்பதியருக்கு அருள் பாண்டியன், தங்க பாண்டியன் சந்தனபாண்டியன் என மூன்று மகன்களும் இவர்கள் மூவருக்கும் மூத்த பெண் தேவி.   அந்த ஊரில் எந்த திருமணம் நடந்தாலும்

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

52E5CF6D-8A42-42F1-A078-59B1FD9ED62D

35 – ஆடி அசைந்து வரும் தென்றல் நிறைவுப் பகுதி

35 – ஆடி அசைந்து வரும் தென்றல் நிறைவு பகுதி

நாற்பதைந்து நாட்களில் ஸ்கேன் செய்து பார்த்து விட்டு.. கேட்டவுடன் அனிவர்த்துக்கு அளவில்லா மகிழ்ச்சி.. மகிழ்ச்சி சில நிமிடங்களில் மறந்து அந்த இடத்தை பயம் ஆக்கிரமித்துக் கொண்டது. தேவர்ஷி மெல்லிய தேகம் எப்படி தாங்குவாள். அவளுக்கு சிக்கலாகிவிட்டாள்.

மருத்துவமனையில் இருந்து வீடு வந்தவன் சரியாக உண்ணாமல்.. உறங்காமல்.. ஏதோ யோசனையிலேயே இருந்தான். தேவர்ஷி எவ்வளவோ கேட்டும் ஒன்றும் சொல்லவில்லை. ஏதாவது சொல்லி அவளை பயமுறுத்த வேண்டாம் என நினைத்தான். ஆனால் அந்த பயம் எல்லாம் இல்லாமல் தேவர்ஷி சந்தோஷமாகவே இருந்தாள் கணவன் ஆசைப்பட்டது போல மூன்று குழந்தைகள்.. அதுவும் ஒரே பிரசவத்தில் என மனம் கொள்ளா மகிழ்ச்சி அவளுக்கு..

கங்கா அதட்டி கேட்கவும் தான்… தேவர்ஷி உறங்க சென்றிருக்க..

“ம்மா.. மூனு குழந்தைங்க வர்ஷி எப்படிமா தாங்குவா.. எனக்கு பயமாயிருக்கு.. இந்த குழந்தைங்க வேண்டாம்மா.. எனக்கு ஷாஷிகாவே போதும்.. வர்ஷிக்கு ஏதாவது ஆகிட்டா.. நான உயிரோடவே இருக்கமாட்டேன்.” என்றான் கண்களில் நீர் வழிய..

மகனின் கவலை புரிந்தது கங்காவிற்கு.. அவனை போல கவலைப்பட்டு கொண்டிருந்தால் அவர் கங்கா இல்லையே..

“அனிவர்த்.. இங்க பாரு.. நம் குடும்பத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் என்பது புதுசு இல்ல…” என கங்கா சொல்ல..

தாயை நம்பாமல் பார்த்தான். ஏனென்றால் அவனுக்கு தெரிந்து அவன் தாத்தா அப்பா இவன் எல்லோரும் ஒற்றை ஆண் வாரிசு தான். அதனாலேயே இவர்கள் குடும்பம் நெருங்கிய இரத்த சொந்தங்களின்றி சிறு வட்டத்திற்குள் அடங்கிவிட்டது.

“ம்மா.. என்ன சொல்லறிங்க நீங்க.. எனக்கு தெரிஞ்சு நம்ம குடும்பத்தில் எல்லாம் ஒற்றை ஆம்பள பசங்க தான்.. அதை பிரேக் பண்ணி தான் ஷாஷி பிறந்திருக்கா..”

“ஆமாம் அனிவர்த. நீ சொல்றது கரெக்ட் தான்..ஆனால் உனக்கு உங்க தாத்தா வரைக்கும் தானே தெரியும். உங்க தாத்தாவோட அப்பா கூட இரண்டு பொண்ணுங்க என மூவரும் ஒரே பிரசவத்துல பிறந்திருக்காங்க.. இது ஒன்னும் நம்ப குடும்பத்தில் புதுசு இல்ல.. நடந்தது தான் அதுவும் இன்று போல அவ்வளவாக எந்த மருத்துவ வசதி இல்லாத காலகட்டம்.. அவங்க மூனு பேரும் வீட்ல தான் பிறந்தாங்க.. அந்த குழந்தைகளின் அம்மா நல்ல ஆரோக்கியமாக நாலு தலைமுறையை பார்த்துட்டு அதாவது உங்கப்பா பிறந்த பிறகு தான் இறந்திருக்காங்க.. “

“அது மட்டுமில்லாமல் அந்த தாத்தா கூட பிறந்த பெண்களின் உறவுகள் எல்லாம் நம் ஊரிலும் இங்கு சென்னையிலும் இருக்காங்க.. உன் ரிசப்ஷனுக்கு கூட வந்தாங்க.. உனக்கும் அவங்களை தெரியும்” என சில உறவு முறைகளை சொல்ல..

“அட ஆமாம் மா.. அவங்களா எனக்கு நல்லாவே தெரியும்..” என்றான்

“இருந்தாலும் எனக்கு பயமாயிருக்கு ம்மா..” என கங்காவிடம் சொல்ல..

“நான் இருக்கேன் தேவா அம்மா இருக்காங்க.. எல்லாம் பார்த்துக்கலாம்.. சத்தான ஆகாரமா கொடுத்து ஊட்டம் கொடுத்துக்கலாம்.. நீ இப்படி இருக்கறத தேவா பார்த்தா அவளும் கவலை படுவா.. அது அவளையும் குழந்தைகளையும் பாதிக்கும்” என கண்டித்தார்.

தாயின் வார்த்தைகளில் கொஞ்சம தைரியம் வந்திருந்தது. தனியாக மருத்துவரிடம் சென்று தன் சந்தேகங்களையும் முன் எச்சரிக்கைகளையும் கேட்டு கொண்டவன் அதன்படி தேவர்ஷியை இரவும் பகலும் கண்ணுக்குள் வைத்து பார்த்துக கொண்டான்.

அனிவர்த் தேவர்ஷிக்கு சுகப்பிரசவமாக இருந்தால் பரவாயில்லை என நினைத்தான். ஷாஷிகாவே சிசேரியன் தான்… தேவர்ஷியின் அடி வயிற்றில் அந்த தழும்புகளை பார்க்கும் போது வேதனையாக இருக்கும். ஆனால் அதற்கான சாத்தியகூறுகள் இல்லை என டாக்டர கூறிவிட… அந்த கவலையும் சேர்ந்து மனதில் பாரம் கூடிக் கொண்டது. அதை தேவர்ஷியிடம் காட்டாமல் மறைக்க அவன் பாடு பெரும்பாடாக இருந்தது.

தேவர்ஷிக்கு அந்த கவலை எல்லாம் இல்லை அனிவர்த்தின் காதல் அவளை உற்சாகமாக வைத்திருக்க.. அனிவர்ததின் காதலை தன் பலமாக நினைத்தாள்.

பிரசவ நாளும் நெருங்கி விட.. அனிவர்த் தேவர்ஷிய மருத்துவமனையில் சேர்த்து விட்டு விடிந்தால் ஆப்ரேஷன் என்ற நிலையில் இரவோடு இரவாக தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்தான்.

தியேட்டரில் அனிவர்த் தேவர்ஷியின் அருகில் அவள் கை பிடித்து நின்றிருந்தான். அனஸ்தியா கொடுக்கும் முன்பு பார்த்தது புதர் மண்டி கிடந்த அனிவர்த்தின் முகத்தை தான்..தேவர்ஷி கர்ப்பம் என தெரிந்த நாளில் இருந்து பிரசவம் நல்லபடியாக முடிந்து தாயும் பிள்ளைகளும் நல்லபடியாக இருக்க வேண்டும் என திருப்பதி கோவிலுக்கு முடி காணிக்கை கொடுப்பதாக வேண்டி இருக்க… தலைமுடி கழுத்து வரையும்… தாடியும் நெஞ்சு வரைக்கும் வளர்நதிருந்தது.

அவன் முகத்தை வாஞ்சையுடன் பார்த்து சிரி்த்தவள் சிரிப்பு மறையும் முன்பே மயக்கத்திற்கு சென்றிருந்தாள் அவள் மயங்கும் வரை அவளுக்காக சிரித்த முகமாக இருந்தவன் அவள் இமை மூடியதும் அவனுக்குள் மறைத்து வைத்திருந்த பயம் வெளிப்பட. கைகால் நடுங்க கண்கள் கலங்கி நிற்க.. டாக்டரே இவனைப் பார்த்துவிட்டு..

“சார் உங்களுக்கு பயமா இருந்த வெளில இருங்க..” என்றார்.

கூடவே இருப்பேன் என்று தேவர்ஷியிடம் சொன்னதற்காக முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு..

“இல்ல… ஒன்னுமில்ல.. இருக்கேன்..” என்றான்.

டாக்டர் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் வேலையை தொடர.. முதலில் ஒரு சிங்ககுட்டி…அடுத்து ஒரு அரிமா… கடைக்குட்டி சிங்கம்… மூன்றையும் இரத்தமும் கோழையுமாக பார்த்தவன் முகம் முழுக்க ஆனந்தமும்.. கண்களில் நீருமாக நின்றான்.

“சார்..குழந்தைகளை கொண்டு வந்து தருவாங்க.. வெளியே இருங்க.. “ என டாக்டர் சொல்ல…

“டாக்டர் வர்ஷி… “ என கேட்க..

“அவங்க நல்லா இருக்காங்க.. கொஞ்ச்நேரத்தில் ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க.. வெயிட் பண்ணுங்க..” என சொல்லவும் வெளியே வந்தவன் கங்காவின் கைகள பிடித்துக் கொண்டு..

“ம்மா.. உங்களுக்கு இரண்டு பேரன் ஒரு பேத்தி..” என சொன்னதும்.. கங்காவிற்கே கண்கள் கலங்கிவிட்டது.

“தேவாடா..”

“நல்லா இருக்கா..”

மகளின் நலத்தை அறிந்த பிறகே திருகுமரனும் கௌசல்யாவும் சந்தோஷம் கொண்டனர்.

“அய்.. அப்ப எனக்கு டூ தம்பி.. ஒன் தங்கச்சி..” என ஷாஷிகா குதூகலிக்க…

அந்த குடும்பத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு எல்லயில்லாத ஆனந்தம்…

கங்காவும் கௌசல்யாவும் சொல்ல சொல்ல கேட்காமல் குழந்தைகளுக்கு இரண்டு கேர்டேக்கர்களை வைத்தான்.தேவர்ஷியை மட்டும் தன் கவனிப்பில் வைத்துக் கொண்டான்.

தேவர்ஷி பொறுப்பான அம்மாவாக இருந்தாலும்.. அனிவர்ததிடம் மட்டும் பழைய தேவர்ஷியாக அவனிடம் சேட்டைகள் செய்யும் தேவர்ஷியாக மாறி இருந்தாள். அனிவர்த்தும் அந்த தேவர்ஷியிடம் தானே மயங்கியிருந்தான். இப்போதும் அப்படியே.. அனிவர்த்தும் அவளோடு சேர்நது சேட்டைகள் செய்ய கற்றுக் கொண்டான் அவளிடம் தனி ஆவர்த்தனம் செய்யும் வேளையில்….

இதோ குழந்தைகள் பிறந்த ஒரு வருடம் ஆகிவிட்டது. முதல் பிறந்தநாள் விழா.

“ப்பா.. ம்மா.. நீங்க இப்ப சண்டையை நிறுத்த போறிங்களா இல்லையா… டைம் ஆச்சு.. இப்ப கிளம்பல.. கங்கா பாட்டிக்கு கால் பண்ணிடுவேன்..” என அதட்ட..

கங்கா பேரை கேட்டதும் இருவரும் அமைதியாக குழந்தைகளை கவனிக்க.. ஷாஷிகா அப்பாடா என ஆசுவாசமானது.

அனிவர்த் குடும்பம் கிளம்பி வந்தனர் பங்ஷன் நடக்கவிருக்கும் ஹாலிற்கு.. அனிவர்த் நிகித்தையும் நிதிலாவையும் இரு கைகளில் ஏந்தியிருக்க.. தேவர்ஷி நிகிலை ஒரு கையில் வைத்திருக்க.. இன்னொரு கையில் ஷாஷகாவின் விரல் பற்றியிருக்க.. அனிவர்த்தும் மகன்களும் ரோஜா நிறத்தில் ஒரே மாதிரியான ஷெர்வானியில்… தேவர்ஷியும் மகள்களும் அதே ரோஜா நிறத்தில் பட்டாடையில்..

எல்லோர் கண்ணும் இவர்கள் மேலே தான்.. குடும்பத்தினர் பார்வை பாசமாக.. வாத்சல்யமாக… சிலர் பார்வை நட்புடன்.. பலர் பார்வை பொறாமையுடன்..

ஒரே டேபிளில் மூன்று கேக்கள் அணிவகுத்திருக்க… அனிவர்த் நிகித்தை ஷாஷிகா கையில் கொடுத்தான். மூவரும் குழந்தைகளின் கை பிடித்து ஒரே நேர்த்தில் கேக்கை கட் பண்ண… தேவர்ஷயின் உடன் பிறப்புக்கள் வண்ண காகிதங்கள் வெடிக்க.. உறவுகளின் நட்புகளின் வாழ்தது ஒலியில் அரங்கம் அதிர.. அழகாக படம் பிடிக்கப்பட்டது அந்த குடும்பத்தின் மகிழச்சியான தருணங்களை..

விருந்தும் அமர்களப்பட்டது. எல்லாம் முடிந்து வீடு வந்ததும் எப்பவும் போல மகன் குடும்பமாக நிற்க வைத்து திருஷ்டி கழித்தார் கங்கா. பிள்ளைகளுக்கென தனியறை.. தங்கள் அறைக்கு அடுத்த அறை. தேவர்ஷி கேர்டேக்கர்களோடு சேர்ந்து குழந்தைகளை வெந்நீரில் குளிக்க வைத்து உறங்க வைத்து விட்டே தங்கள் அறைக்கு வந்தாள்.

அனிவர்த் அறையில் கைகளில் மல்லிகை சரத்தை சுற்றிக் கொண்டு அதை வாசம் பிடித்தவாறு மேல் சட்டை இல்லாமல் மினி டிரங்கோடு தலையணையை முதுகுக்கு அண்ட கொடுத்து உட்காரந்திருந்தான் தேவர்ஷியை எதிர்பார்த்து..

தேவர்ஷி வந்தவள் இவனை முழுதாக ஒரு நிமிடம் நின்று பார்ததவள் ஒன்றும் கண்டு கொள்ளாமல்.. நைட் டிரஸ் எடுத்துக் கொண்டு குளிக்க சென்றுவிட்டாள். குளித்து விட்டு ப்ரஷ்ஷாகி வரட்டும் என அனிவர்த் காத்திருக்க… வந்தவளோ படுக்கையில் தன் இடத்தில் போய் படுத்துக் கொண்டாள்.

“குடி கெட்டுது போ..”என புலம்பியவன்…

“வர்ஷிம்மா…”

அவளோ கண்களை திறக்காமல்”என்னங்க..”

“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..”

“காலையில் பேசிக்கலாம்.. டயர்டா இருக்கு தூங்க விடுங்க..”

“ஊகூம்…இது வேலைக்கு ஆகாது..” என அவளை கோழி அமுக்குவது போல ஒரே அமுக்கு…

கையில் சுற்றியிருந்த மல்லிகைப் பூவை நுகரந்நவன் “ம்ஹா…” ஆழ மூச்சிழுத்து அதன் வாசத்தை உள்ளே செலுத்தி.. அவளின கழுத்தடியில் அவளின் வாசனையும் அதே போல நுகர்ந்து வாசம் பிடிக்க.. மல்லியின் வாசமும் அவளின் வாசமும் கலந்து புது தினுசான வாசனையாக அவனை கிறங்க செய்ய.. மீண்டும் மீண்டும் அதே மாதிரி வாசம் பிடித்து மதி மயங்கி நின்றவனை பார்தது…

தேவர்ஷி..”என்னங்க பண்றிங்க.. இதுக்கு தான் ஒரு வாரமா பாக்யராஐ் படமா பார்த்திங்களா.. கருமம்.. கருமம்.. எயிட்டீஸ் படத்துல வர வில்லன் மாதிரி பண்ணிட்டிருக்கிங்க..” எரிச்சலாக பேசி தலையில் அடித்துக் கொண்டாள்.

“என்னது கருமமா.. ஏன்டி மனுசன் எவ்வளவு மூடாகி.. மூளை சூடாகி இருக்கேன்.. மாமன கொஞ்சமாச்சும் கவனிப்போம்னு நினைக்கறியா… அடுத்து ரிப்லெட்ஸ்.. இல்லைனா ட்வின்ஸாவது ரீலிஸ் பண்ணனும்னு நினைச்சுட்டு இருக்கேன்… இப்படி பண்ணினா எப்படி டீ..”

“நீங்க நினைக்க மட்டும் தான் முடியும். இனி புள்ள பொறக்கிறதுக்கான வாய்ப்பில்லை ராஜா..”

“ஏன்டி..” என புரியாமல் கேட்டான்.

“பேமிலி ப்ளானிங் பண்ணியாச்சு..” என அழுங்காமல் குண்டை தூக்கிப் போட்டாள்.

“அதெப்புடி.. இன்னொரு சிசேரியனுக்கு சான்ஸ் இருக்குனு தெரிஞ்சுகிட்டு.. நான் தான் பண்ண வேண்டாம் என டாக்டருகிட்ட சொல்லியிருந்தேனே..”

“அத்தை.. உங்களுக்கு தெரியாம டாக்டர்கிட்ட என் மருமக உடம்பு தாங்காது.. பண்ணிடுங்க.. என் மகன்கிட்ட சொல்ல வேண்டாம் என சொல்லிட்டாங்க..”

“டெலிவரியப்ப… நான் கூடவே தான இருந்தேன். அப்படி எல்லாம் பண்ணல..” உறுதியாக சொன்னான்.

“குழந்தைகளை கொண்டு வந்து தருவாங்க வெளியே இருங்கனு அனுப்பிவிட்டுட்டு பண்ணிட்டாங்களாம்..” என சொல்ல..

அதிரந்து போய் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான். தேவர்ஷியோ அவனின் அதிர்ச்சியில் வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட..

அடுத்து அவன் பேசியதில் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள்.

“அடிப்பாவி கங்காம்மா.. என் வாழ்க்கைக்கே சூனியம் வச்சிட்டியே.. நான் சுஜா ஹீரோவுக்கே டஃப் கொடுக்கலாம்னு நினைச்சேனே.. என் நினைப்புல மண் அள்ளிப போட்டுட்டியே..” என புலம்பியவன்..

அவள் சிரிப்பில் கோபம் துளிர்க்க….

“நீயும் சேர்ந்து கூட்டுகளவாணியா.. ஒரு வருசமா எங்கிட்ட செல்லாம மறைச்சுட்டில்ல.. உனக்கு எப்பவும் என்னை விட எங்கம்மா தான் உசத்தி…போடி..” என தள்ளி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டான்.

அவனின் கோபத்தில் மனம் சுணங்க… அவனை சமாதானம் பண்ணும் முயற்சியில் இறங்கினாள்.

“ஏங்க…”அவனின் தோள் தொட்டு திருப்ப..

“வேணாம் போடி..”

“ப்ளீஸங்க.. சாரி..”

“ஒன்னும் வேணாம் போடி..”

அவன் வேண்டாம்.. வேண்டாம்.. என சொல்ல.. சொல்ல.. இவளுக்கு வேண்டும் என்ற காதல் உணர்வு இம்சித்தது..

“வர்தா… ம்ம் வர்தா..” அவனை நெருங்கி முதுகில் ஒட்டி ஒரசி சரசமாட.. வர்தா என்ற கொஞ்சலிலும் அவளின் உடல் அழுத்தத்திலும் மொத்தமாக வீழ்ந்தான். டக்கென அவள் புறம் திரும்பியவன்.. அவளை இறுக்கி அணைத்து தன்னுள் புதைத்துக் கொண்டான். தன் வாழ்வின் தேவதையை கொண்டாடி திண்டாடி போனான்..

சுபம்

வாழ்க வளமுடன்.

35 – ஆடி அசைந்து வரும் தென்றல் நிறைவுப் பகுதி Read More »

5A6C269B-F32D-4710-9CC6-A088F63FC9B8

34 – ஆடி அசைந்து வரும் தென்றல்

34- ஆடி அசைந்து வரும் தென்றல்

அவனின் இதழ் பரிமாற்றத்தில் நிறைய கோபங்கள்… வருத்தங்கள் இருந்த போதும் கிறங்கி நின்றவளை பார்த்து அவளின் காதல் மனம் புரிய.. இத்தனைக்கு பிறகும் தன்னிடம் சொக்கி கிடக்கும் தன் மனையாளை கண்டு கர்வமாக இருந்தது. அவளை கண்டு மெல்ல சிரிக்க…

அவனின் சிரிப்பில் வெட்கம் மேலிட… “என்ன இளிப்பு ..” என அவனின் தோளில் அடித்தாள். அடித்த கையை பற்றி உள்ளங்கையில் மீசை உரச முத்தம் வைத்தான். கையை உருவிக் கொண்டவள்…

“என்னை டைவர்ட பண்ணாதிங்க… சொல்லுங்க உங்களுக்கு வருத்தமா இல்லையா..”

“என் திமிர்… ஈகோ பிடிவாதமா உன்னை மறக்க நினைத்தேன்.. நினைக்க மட்டுமே முடிந்தது. ஆனால் என்னை அறியாமலே மத்த பொண்ணுங்கிட்ட நீ எனக்கு கொடுத்த லவ்வ தேடியிருக்கேன்… ஒரு கட்டத்தில் எதை தேடறோம்னு தெரியாம பைத்தியம் புடிக்கற மாதிரி ஆகிடுச்சு… அப்புறம் இந்த பழக்கம் எல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணி அந்த ப்ளாட்ட வித்து அப்பாட்ட கொண்டு வந்து பண்த்தை கொடுத்தேன் பாரு அப்ப தான் அவ்வளவு ரிலாக்ஸா ஃபீல் பண்ணினேன்.. இருந்தாலும் என் மனசுல ஏதோ ஒன்ன இழந்துட்டோம்னு தவிப்பு மட்டும் இருந்துகிட்டே இருந்துச்சு… அப்ப தான் ஷாஷிகாவ பார்த்தேன். பார்த்ததும் என்னையும் அறியாம ஒரு பாசம்.. கைகால் எல்லாம் என்னை மாதிரி நீளமா இருந்தாலும் முகம் கொஞ்சம் உன் சாயல் அதனால கூட இருக்கலாம். ஷாஷி என் பொண்ணுனு தெரியாமேயே அவளை பார்க்க அந்த பார்க்கு வருவேன்.. அன்னைக்கு அவளை தேடி தான் உங்க வீட்டுக்கு வந்தேன். உன்னை பார்த்தும் அவ்வளவு மகிழ்ச்சி.. ஷாஷி உன் பொண்ணுனு தெரிஞ்ச பிறகு அந்த மகிழ்ச்சி அப்படியே வத்திப் போச்சு..”

ஏன் என புரியாமல் அவனை பார்த்தாள். அவளின் கேள்வியாக வளைந்த புருவங்களை நீவி விட்டவன்..

“அது உனக்கு வேற யார் கூடவோ கல்யாணமாகிடுச்சுனு நினைச்சேன்… இருந்தாலும் அன்னைக்கு தான் உன் மேல நான வச்ச லவ்வ தெரிஞ்சுகிட்டேன்.. அன்னைக்கு நைட் அப்படியே கனவில் உன் கூட……. என அந்தரங்கமான காதல் பாஷைகள் பேச…

“ச்சீ… இப்படியா..” என முகத்தை மூடிக் கொண்டாள்..

“என்ன இப்படி சொல்லற… இதுவே கம்மி.. அடுத்தவன் பொண்டாட்டிய அப்படி நினைக்ககூடாதுனு என்னையே கண்ட்ரோல் பண்ணிகிட்டேன் தெரியுமா…” பாவமாக

தேவர்ஷி அவனை சரமாரியாக அடிக்க.. அவளை தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான். அவள் இடையோடு கட்டிக் கொண்டு…

“உங்கப்பாவ விசாரிச்சு ஷாஷி என் பொண்ணுனு தெரிஞ்சுகிட்டேன் ஆனால் தாலி தான் கொஞ்சம் உறுத்துச்சு..” என இப்பவும் அவள் கழுத்தில் இருந்த மங்கள்சூத்ராவை தடவிப் பார்ததான்.

“நான் கூப்பிட்டா வரமாட்ட…. அதான் எங்கம்மாவ கிளப்பிவிட்டேன். கடைசில கங்காம்மா மருமகளை கைக்குள்ள போட்டுகிட்டு எனக்கு வழக்கம் போல ஆப்பு அடிச்சுட்டாங்க..” என சிரித்தான்.

“அத்த.. செம ஸ்மார்ட்ல..”

“ஆமாம் அவங்களுக்கு நான் கல்யாணம் பண்ணி குடும்பமா வாழனும்னு ஆசை.. அதுக்காக என்ன எல்லாம் பண்ணுனாங்க.. தெரியுமா..” என தன அம்மா செய்ததை எல்லாம் சொல்ல.. தேவர்ஷி அடக்கமாட்டாமல் கலகலவென சிரிக்க.. அவளையே பார்த்திருந்தவன் பின்புறமாக அணைத்திருந்த கைகளால் வயிற்றை தடவி கொடுத்து…

அவள் காதோரம் “ரொம்ப கஷ்டப்பட்டியா..” என கேட்க..

சட்டென அவள் சிரிப்பு மறைந்து.. முகம் வாடிப் போக..

“டேய் குட்டிம்மா.. என்னடா…” அவனின் கரிசனையில் கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.

அவன் புறம் திரும்பி அவன் நெஞ்சில் முகம் முட்டி நின்று சத்தமின்றி அழுகையில் கரைய…

“என்னடா லேபர் பெயின் அதிகமா இருந்ததா.. நானும் உன்னை வருத்திட்டேன்ல.. சொல்லுடா நான் இல்லாம எப்படி எல்லாம் கஷ்டப்பட்ட..”

அவனின் மார்ப்பில் சாய்நதவாறே தன் மனபாரத்தை எல்லாம் இறக்கி வைத்தாள். கேட்டிருந்தவன் கண்களிலும் கண்ணீர் கோடுகள்…

“அழுகாதடா… அடுத்த புள்ளைக்கு நான் பக்கத்தில் இருந்து பார்த்துக்கிறேன்.. லேபர் வார்டுல கூட உன் கூடவே இருப்பேன்.. இனி உன்னை தனியா விடமாட்டேன் சந்தோஷமோ… துக்கமோ.. சேர்ந்தே அனுபவிப்போம்..” என அணைத்தான்

சிறிது நேரம் இருவரும் ஒருவரின் அணைப்பில் மற்றவர் ஆறுதல் தேட… ஆறுதலாக இருந்தது ஆசையாக உருமாறி… இடையில் இருந்த கைகள் மெல்ல மேல்நோக்கி ஊர்ந்து அவளின் பெண்மையின் மென்மையை சோதிக்க…

சுகம் தாளாமல் அவனின் முடிகளுக்குள் கை விட்டு இறுக்கினாள். இருவருக்கும மெல்ல உடலும் மனதும் நெகிழ… உடையை நெகிழ்த்தும் வேளையில்..

“ம்மா.. ப்பா..” என ஷாஷிகா கதவை தட்ட…

அவசர அவசரமாக இருவரும் பிரிந்து தங்களை சீர் படுத்திக் கொண்டு கதவை திறந்தனர்.

மகள் வரவும் தேவர்ஷி “சாப்பிட்டயா..”

“பாட்டி இட்லி ஊட்டி விட்டாங்க.. உங்கள சாப்பிட வர சொன்னாங்க..”

“ஷாஷிமா.. செல்லம்.. அம்மாவும் அப்பாவும் வராங்களாம் என சொல்லு போ..” என மகளை அனுப்பி வைத்தவன் அவசரமாக தேவர்ஷியை அணைத்தான்.

“ப்ச்ச்.. விடுங்க.. அத்த வர சொன்னாங்கல்ல..”

“ம்ம்ம்…போலாம்” என சில காதல் கல்மிஷங்களை செய்தே அவளை விடுவித்தான்.

“இப்ப விடறேன் இராத்திரிக்கு வட்டியும் முதலுமா வசுல் பண்ணிக்குவேன்.. ஆறு வருசம் வசூல் பண்ண வேண்டியது எவ்வளவு இருக்கு.. ஒரு புள்ளை பிறப்பை தான் பார்க்க விடாம பண்ணிட்ட.. ஆறு வருஷ கணக்குக்கு இன்னும் மூணு புள்ளை பெத்துக்கனும்.. ரெடியா இரு..”என பக்கா பிசினஸ்மேனா கணக்கு போட்டு சொல்லி கண்ணடித்து உதட்டை குவித்து முத்த சைகை செய்ய.. வெட்கத்தில் முகம் சிவந்து நின்றவளை ரசித்தான்.

இருவரும் புன்னகையுடன் படியிறங்கி வர.. கங்காவின் கண்கள் நிறைந்து போனது.

“ ம்மா.. சாப்பிட்டிங்களா..” என கேட்க…

“ம்ம் நாங்க எல்லாம் சாப்பிட்டோம்.. நீங்க இரண்டு பேரும் உட்காருங்க..” என இருவரையும் உட்கார வைத்து தானே பரிமாறினார்.

தேவர்ஷியோ”நீங்க இருங்க… நான் அவருக்கு பரிமாறறேன்.. நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன்..”

“இப்பவே நேரம் தாண்டி போச்சு… நீயும் உட்கார்ந்து சாப்பிடு..” என்றவர் தேவர்ஷிய உட்கார வைத்து பரிமாறியவர் எதிர் இருக்கையில் அமர்ந்து அவர்களையே கண்ணெடுக்காமல் பார்க்க..

அனிவர்த் “ம்மா..” என்றான் கூச்சத்துடன்… தேவர்ஷிக்கும் சங்கடமாக தான் இருந்தது.

“பேசாமல் சாப்பிடுடா.. இது எல்லாம் என்னோட சின்ன சின்ன ஏக்கங்கள்..” என சொல்லி கண் கலங்க..

பேத்தியோடு அங்கே வந்த சிதம்பரம் “ கங்கா.. “ என கண்டிக்க… கண்களை துடைத்து கொண்டார்.

“மூணு பேரும் கோயிலுக்கு போயிட்டு வாங்கடா…”

“நீங்க இரண்டு பேரும் வாங்கம்மா.. நிறைய வேண்டுதல் வச்சிருப்பிங்களே…”

“ஆமாம்டா.. திருப்பதி, பழநி, திருச்செந்தூர் எல்லாம் போகனும்..”

“சரிங்கம்மா.. எல்லாகோயிலுக்கும் உடனே போயிட்டு வந்திடலாம்..”

“ஒவ்வொரு கோயிலுக்கும் குறைந்தது ஆறு மாசமாவது இடைவெளி வேணும்டா..மகனே..”

மற்ற மூவரும் புரியாமல் பார்க்க…

“இல்ல… உனக்கும் உங்கப்பாவுக்கும் மொட்டை போடறேன்னு வேண்டி இருக்கேன்… முடி வளர ஒரு ஆறுமாசமாவது கேப் விட வேண்டாமா..” என அப்பாவி வேசம் கட்ட…

அனிவர்த்தும் சிதம்பரமும் கங்காவை முறைக்க.. தேவர்ஷி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள்.

ஷாஷிகாவும்”அய் அப்பாவுக்கு மொட்டை..” என கை தட்டி சிரிக்க..

அனிவர்த்தும் சிதம்பரமும் சிரித்து விட…தன் குடும்பத்தை கண் நிறைக்க பார்த்த கங்கா தன் கண்ணே பட்டு விடுமோ என பயந்து திருஷ்டி கழிக்க தேவையான பொருட்கள் எடுக்க சென்றார்…

அனிவர்த் தேவர்ஷி வாழ்க்கையில் இரண்டு வருடங்கள் கட்நதிருந்தது. அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மினிஹாலில் அனிவர்த் தேவர்ஷி இருவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்தவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒரு அறையில் அனிவர்த்தும் தேவர்ஷியும் வார்த்தை போர் நடத்திக் கொண்டிருக்க… ஷாஷிகா தன் உடன் பிறப்புக்களை பார்ப்பதா.. இவர்களை பாரப்பதா.. என முழி பிதுங்கி நின்று கொண்டிருந்தது. இன்று அவர்களின் வாரிசுகளுக்கு முதல் பிறந்தநாள்.

“உங்க பையன் உங்களை மாதிரியே ஒரே பிடிவாதம்.. பாருங்க டிரஸ் போட்டுக்க கூப்பிட்டா.. வரமாட்டேன்னு அங்க போய் நிக்கறான்..”

“அங்க பாரு உன் பொண்ணு மட்டும் என்ன.. உன்னை மாதிரியே ஜன்னல் பிடிச்சுகிட்டு தொங்கறா பாரு..”

“உங்களுக்கு பிடிக்கலையோ…” என முறைத்தாள்.

“யார் சொன்னா.. ஹீஹீஹீ.. அப்படி எல்லாம் இல்லையே..” என சிரித்து சமாளித்தான்.

தேவர்ஷியின் குறும்பில் தானே மொத்தமாக விழுந்தான். அதே போல இளைய மகள் இரு்க்கவும்.. நிதிலா மேல் தனி பாசம்.. அதில் தேவர்ஷிக்கு சற்று பொறாமை..

தேவர்ஷியை சமாளிப்பதற்காக பேச்சை மாற்றும் விதமாக..

“இவன் தான் என்னை மாதிரி அமைதியா இருக்கான்..”

“யாரு உங்களை மாதிரியா.. இவன் என்னை மாதிரி..” என கட்டிலில் உட்கார்ந்து அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த நிகித்தை காண்பித்து சண்டை நீள..

ஷாஷிகாவோ கங்கா வந்துவிட்டால் பரவாயில்லை என வாசலையே பார்த்தது..

அந்த அறையில் மூன்று குழந்தைகள் இருந்தனர். ஆம் மூன்று குழந்தைகள்…ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் தேவர்ஷிக்கு… ட்ரிப்லெட்ஸ்… இரண்டு ஆண் ஒரு பெண்.. நிகில்,நிகித், நிதிலா… நிதிலா தேவர்ஷி போல ஓவர் சேட்டை.. தேவர்ஷியின் அத்தனை குறும்புகளையும் கொண்டிருந்தது. நிகில் அனிவர்த்தை போல பிடிவாதம்.. அழுத்தம்… இந்த இரண்டுக்கு நேர்மாறாக கடைக்குட்டி நிகித் அமைதி.

இந்த இரண்டு வருடங்களில் அனிவர்ததிடம் நிறைய மாற்றங்கள்.. முழு குடும்பஸ்தனாகி போனான். காலையில் ஷாஷிகாவை ஸ்கூலில் விட்டு சென்றால் மாலையில் ஷாஷிகாவோடு வீடு வந்திடுவான் அதன் பிறகு அவன் பொழுதுகள் மனைவி மகளோடு தான். மகள் உறங்கும் வரையில் மகளின் ஆட்சியில் தான் அவன்..

ஷாஷிகாவிற்கு எதற்கும் அப்பா வேண்டும். தேவர்ஷிக்கு பொறாமையாக இருந்தாலும் மகள் இத்தனை தூரமா தந்தை பாசத்திற்கு ஏங்கியிருக்காள் என்ற வருத்தமே அதிகமாக இருந்தது.

மகள் உறங்கிய பின்பு அவன் சேவை எல்லாம் காதல் தேவைக்காக தேவர்ஷியிடம்.. சொன்னது போலவே ஆறு வருடங்கள் பிரிவை ஈடு கட்ட பெரும் சேவையாற்றினான். தேவர்ஷியை மட்டும் கூட்டிக் கொண்டு ஒரு முறை பொன்முடி போய் வந்தான். அந்த மாதமே தேவர்ஷிக்கு நாள் தள்ளிப் போனது.

அனிவர்த்கு அத்தனை மகிழ்ச்சி. மருத்துவமனையில் கர்ப்பம் தான் உறுதி செய்த அன்று அவன் தந்தை என்ற உணர்வில் தத்தளித்து நின்றான். என்ன தான் ஷாஷிகா தந்தை ஸ்தானத்தை கொடுத்திருந்தாலும்..

கருவாகி உயிராகி உருவாகி கையில் ஏந்தும் காலம் வரை ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து அனுபவித்து வாழ வைக்க வந்த குழந்தை அல்லவா..

குழந்தை அல்ல குழந்தைகள்… மூன்று குழந்தைகள் என்றனர்.

34 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

error: Content is protected !!
Scroll to Top