ATM Tamil Romantic Novels

C611DF8A-E248-46DE-81C7-87DB575FDDD0

ஆடி அசைந்து வரும் தென்றல் – 6

மேலும் இரண்டு நாட்கள் மருத்துமனையில் இருந்து விட்டு கங்கா வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்த போது சில நேரங்களில் ஷாஷிகா இவர்களோடு வந்து பேசிக் கொண்டிருந்தது. ஒரு தடவை ஷாஷிகாவோடு பேசிக் கொண்டிருந்த போது அனிவர்த் வர.. அவன் ஷாஷிகாவை பார்த்ததும்…

“ஹேய்.. பாப்பா..”என்றான் ஆச்சரியமாக…

ஷாஷிகா இடுப்பில் கை வைத்து அனிவர்த்தை பார்த்து முறைத்தது.

உடனே அனிவர்த் இரண்டு காதையும் பிடித்துக் கொண்டு கண்களை சுருக்கி இறைஞ்சுதலான பார்வையுடன் ஷாஷிகா முன் மண்டியிட்டு அமர்ந்து…

“சாரி.. ஷாஷிகா.. சாரி..” என்க..

“இட்ஸ் ஓகே.. “ என்றது பெரிய மனிதன் தோரணையில்…

அவளின் பாவனையில் அனிவர்த் வாய் விட்டு சிரிக்க…பெற்றவர்கள்இருவரும் என்னடா நடக்குது இங்கே… என ஆச்சரியமாக பர்த்தனர்.

“நீ இங்க எப்படி.. உனக்கு உடம்பு சரியில்லையா..” என அனிவர்த் கவலையாக கேட்க…

“ம்கூம்.. ம்கூம்..” என வேகமாக தலையாட்டினாள் இளையாட்டி…

“கிருஷ்ணா தாத்தாவிற்கு சுகர் அதிகமாகி உடம்பு சரியில்லாம போயிடுச்சு.. டூநாட்பைவ் ரும்ல இருக்கிறார்”

“ஓ.. இப்ப நல்லா இருக்காரா..”என கேட்டவன் அதற்கு மேல் அடுத்தவர்கள் விவகாரம் நமக்கு எதற்கு என வேற பேச்சிற்கு தாவிவிட்டான்.

அனிவர்த்தும் ஷாஷிகாவும் சலசலனு பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவர்கள் தங்கள் மகனா இது… அதுவும் அவன் முகத்தில் வந்து போகும் ஆயிரம் முக பாவனங்களை கண்டு இப்படி எல்லாம்இவன் பேசுவானா…என தங்களை மறந்து பார்த்திருந்தனர்.

பேச்சுவாக்கில் தன் அன்னையை பார்த்தவன் மெல்ல சிரித்துவிட்டான். கங்கா கன்னத்தில் கை வைத்து மெய்மறந்து அப்படி பார்த்திருக்க.. பெற்றவர்களிடம் ஷாஷிகாவிற்கும் தனக்கிற்குமான சந்திப்புகளை ரசனையோடு சொன்னான்.

கங்கா இது போல மகன் எப்பவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திடனும் என கடவுளை வேண்டினார். கடவுள் பரீசிலனை கூட பண்ணாமல் தள்ளுபடி செய்துவிட்டார்.

மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு மகனின் மனம் மாறுவதற்குள் திருமணத்தை முடித்து விடவேண்டும் என துரிதமாக வேலை செய்தார் கங்கா. ஒரே மாதத்தில் திருமணம் என மிகப் பிரபலமான மண்டபம் பிடித்து… பத்திரிக்கை அடித்து.. ஊரையே அழைத்து.. சமையலுக்கு ஒவ்வொரு வேளைக்கும் பதினைந்து பதார்த்தங்கள்… வந்தவர்களுக்கு தாம்பூல பையில் தேங்காய் பழத்தோடு சின்ன வெள்ளி குங்குமச்சிமிழ் என ஒரே மகன் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாகவே ஏற்பாடு செய்தார்.

முதல்நாள் மாலை பெண்அழைப்பு நிச்சயதார்த்தம் முடிந்து வரவேற்பு.. அடுத்தநாள் அதிகாலையில் முகூர்த்தம் …

முதல் நாள் காலையிலேயே அனிவர்த்தை மண்டபத்திற்கு வீட்டில் இருந்து நல்ல நேரம் சகுனம் எல்லாம் பார்த்து அனுப்பி…மண்டபத்தில் ஏழு கன்னி பெண்களை வைத்து ஆரத்தி எடுத்து அழைத்தார்.

மதியம் வர வேண்டிய பெண்வீட்டினர்.. மாலை மயங்கி பெண் அழைப்பு நேரம் தாண்டி நிச்சயதார்த்தநேரமும் வந்துவிட.. பெண்வீட்டார் வந்தபாடில்லை. அழைத்தால் போனை யாரும் எடுக்கவில்லை..

நிச்சயதார்த்த நேரமும் நெருங்கி விட.. லக்கன பத்திரிக்கை வாசித்து தாம்பூலம் மாற்றி பெண்ணை அழைத்து நிச்சய புடவையை கையில் கொடுத்து உடுத்தி வந்து சபையில் பெண் மாப்பிள்ளை இருவரையும் வரவேற்பில் நிறுத்த வேண்டும்.

நேரம் சென்று கொண்டே இருந்தது. பெண்வீட்டார் வரவில்லை. சிதம்பரம் கங்காவின் உறவினர்கள் முதலில் அமைதியாக இருந்தவர்கள் நேரம் செல்ல.. செல்ல..முணுமுணுப்பாக பேச துவங்கி.. சலசலப்பு பேச்சாக மாறி நேரடியாகவே கேட்கவே செய்ய…

சிதம்பரம் கங்காவிற்கு என்ன செய்வது… சொல்வது என தெரியவில்லை. இவர்களுக்கு ஆதரவாக நிற்க கூட நெருங்கிய சொந்தங்களோ நண்பர்களோ இல்லை. அனிவரத்துக்கும் நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை. இங்கு படிக்கும் காலத்தில் இருந்த ஒன்றிரண்டு நண்பர்களும் வெளிநாட்டு வாசத்திற்கு பிறகு தொடர்பில் இல்லை.

பெண் அழைப்பு நேரம் நெருங்கிய பிறகும் வரவில்லை என்றதும் சிதம்பரமும் கங்காவும் மாற்றி மாற்றி அழைத்துப் பார்த்து எடுக்கவில்லை என்றதும்.. தரகருக்கு அழைக்க அவருடைய போனும் அணைத்து வைக்கப் பட்டு இருந்தது. என்ன செய்ய என தெரியாமல் முதலில் ஏதோ சொல்லி சமாளித்தவர்கள்.. உறவினர்கள் வளைத்து வளைத்து கேள்வி கேட்க.. என்ன சொல்வது தெரியாமல் திணறினர்.

மணமகன் அறையில் இருந்த அனிவர்த்துக்கு இது எல்லாம் தெரியவில்லை. ஏசி அறை என்பதால் இந்த சலசலப்பு சத்தங்கள் எதுவும் அவனுக்கு எட்டவில்லை.உறவினர்களின் கேள்விகளுக்கே விடை தெரியவில்லை. அதை எல்லாம் விட அனிவர்த்துக்கு தெரிந்தால் என்ன ஆகும் என இருவருக்குள்ளும் பெரிய பயம் ஓடிக் கொண்டு இருந்தது.

அனிவர்த் தனது ரோலக்ஸ் வாட்ச்சில் மணி பார்த்தவன் தனக்கு உதவியாக இருந்த அசோக்கிடம்…

“ அசோக்.. ரிசப்ஷன் டைம் ஆகிடுச்சு.. இன்னும் என்ன பண்றாங்க.. போய் பார்த்து விட்டு வா”

அசோக் சென்று பார்க்கும் போது உறவினர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கைகளை பிசைந்தவாறு நின்று கொண்டு இருந்த சிதம்பரம் கங்காவை தான்…

பார்த்தவன் பதறி போய் அவர்களின் அருகே வேகமாக சென்று…

“கங்காம்மா.. என்ன ஆச்சு..”என அசோக் கேட்க…

“அதை தான் நாங்களும் கேட்கறோம்..”

“பொண்ணு வீட்ல இருந்து ஒருத்தரும் வரல..”

“என்னாச்சு.. ஏன் வரல.. போன் பண்ணி பாருங்க..”

ஆளாளுக்கு சுற்றி நின்று கொண்டு பேச… சிதம்பரம் தயங்கி தயங்கி…

“அவர்கள் போனை எடுக்கவில்லை..” என்றார்.

அசோக் உடனே சென்று அனிவர்த்திடம் விசயத்தை சொல்ல… கேட்ட அனிவரத்கு கோபம் சுரு சுருவென ஏறியது. புயலாக சீறிக் கொண்டு வந்தான்.

“ஏன் பொண்ணு வீடு வரல.. உங்க மகன பத்தி எல்லாம் சொல்லி தான கல்யாணம் முடிவு செஞ்சிங்க…”

“நல்ல பசங்களுக்கே பொண்ணு கிடைக்கமாட்டேங்குது.. இவங்க மகனுக்கு எப்படி… ஏதாவது திருகுதாளம் பண்ணி தான் செய்திருப்பாங்க… உண்மை தெரிஞ்சு போயிருக்கும்.. அதான் வரல போல..”

“வசதி இல்லாத வீட்ல கட்டினா.. இவங்க மகனோட ஒழுக்க கேட்டை எல்லாம் பொறுத்து போகும்னு நினைச்சாங்க போல.. இவங்க பவுசு தெரிஞ்சிருக்கும்..”

இதை எல்லாம் கேட்டு கங்கா மௌனமாக கண்ணீர் வடித்தார்.அனிவர்த்தும் இந்த பேச்சை எல்லாம் கேட்டு கொண்டே தான் வந்தான்.

வந்தவன் தன் தந்தையிடம், “வந்தவன் தன் தந்தையிடம்…

“என்னாச்சுப்பா..”

சிதம்பரத்தை பேசவிடாமல் சுற்றி இருந்தவர்கள் ஆளாளுக்கு பேசினர்.

“பொண்ணு வீட்ல இருந்து இன்னும் யாரும் வரல..”

“என்ன ஆச்சோ தெரியல..”

“என்னாயிருக்கும்.. இவனோட லீலை எல்லாம் தெரிஞ்சிருக்கும்..” என பேச..

“போதும்… நிறுத்துங்க… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினிங்க… நல்லா இருக்காது பார்த்துக்குங்க…”

“உண்மையை சொன்னா பொல்லாப்பு தான்..”

“நமக்கு எதுக்கு வம்பு.”

அனிவர்த் அவர்களை தீப்பார்வை பார்க்க.. நமக்கு என்ன… என்ன தான் செய்கிறார்கள் என பார்ப்போம் என நடப்பதை வேடிக்கை பார்க்கும் சுவராசியத்தோடு தள்ளி சென்று வசதியாக அமர்ந்து கொண்டார்கள்.

அசோக் அவர்கள் மூவருக்கும் நாற்காலி கொண்டு வந்து போட… அனிவர்த் தன் பெற்றவர்களிடம்…

“உட்காருங்கப்பா.. என்னன்னு பார்க்கலாம்..”

“அப்பா.. அவங்க நம்பர் கொடுங்க..”

சிதம்பரம் நம்பர் சொல்லவும் அசோக்கை பார்க்க அனிவர்த்தின் பார்வை புரிந்தவனாக அந்த நம்பருக்கு அழைக்க.. அணைத்து வைக்கப்பட்டதாக சொல்லவும்…

“பாஸ் போன் சுவிட்ச் ஆப்..”

“ப்ரோக்கர் நம்பர் சொல்லுங்கப்பா..”

அசோக் அந்த நம்பருக்கு அழைக்க அதுவும் அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லவும்… அனிவர்த்துக்கு கோபம் உச்சிக்கு ஏறியது.

யாருக்கோ அழைத்து சில உத்தரவுகளை பிறப்பித்தான். பின்பு அசோக்கிடம்..

“கிச்சன்ல இருந்து குடிக்க ஏதாவது வாங்கிட்டு வா ..” என்றான்.

கங்காவிற்கோ மகனின் கோபத்தை பார்க்க பயமாக இருந்தது. பயத்தை மீறிய கவலை வந்தது. மகனின் திருமணம் நடக்குமா.. இந்த திருமணம் நடக்காமல் போய்விட்டாள் அடுத்து மகனின் கோபத்தை எப்படி எதிர்கொள்வது.. இந்த திருமணம் நடக்காவிட்டால் மகனை இன்னொரு திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது என்பது இயலாது. வாழ்நாள் முழுவதும் தனித்து நின்று விடுவானோ என பெரும் கவலை ஆட்கொண்டது.

அசோக் ஜுஸை கொண்டு வந்து கொடுக்க.. சிதம்பரம் எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டார்.கங்கா வேண்டாம் என்பது போல் தலை அசைத்து மறுக்க.. அனிவர்த் கங்காவிடம்..

“மாம்.. அதை வாங்கி குடிங்க.. உடம்புக்கு ஏதாவது இழுத்து வச்சுக்காதிங்க…” என்றான் சீறலாக..

அவனின் சீற்றத்தில் மேலும் பயந்தவராக வாங்கி அமைதியாக குடித்தார். சற்று நேரத்தில் அனிவர்த் போன் அழைக்க.. அதை காதிற்கு கொடுத்ததவன் அந்தபக்கம் சொன்ன செய்தியில்….

“அவர்களை இங்க தூக்கிட்டு வாங்க.. “ என்று உத்தரவிட்டான். சற்று நேரத்தில் மண்டப வாசலில் ஒரு ஸ்கார்ப்பியோ வந்து நின்றது. ஐந்து பேர் பெண்ணின் குடும்பத்தையும் தரகரையும் இழுத்துக் கொண்டு வராத குறையாக கூட்டிக் கொண்டு வந்தனர்.

அந்த ஐந்து பேரில் ஒருவன்.. “சாரே.. நீங்க சொன்ன மாதிரி ஒன்னும் பண்ணாம இட்டாந்துட்டோம்..” என்றான் அனிவர்த்திடம் பணிவாக சொல்லி பெண்வீட்டாரை அனிவர்த் முன் நிறுத்தினர்.

அனிவர்த் எழுந்து கைகளை பின்புறம் கட்டி கொண்டு தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவன்… அவர்களை தீர்க்கமாக பார்த்தான். அப்போது தான் கவனித்தான். பெண்ணின் கழுத்தில் புது மஞ்சள் சரடு தொங்கியதை.. அந்த பெண் பக்கத்தில் இருந்தவனின் கையை இறுகப் பற்றி இருந்தாள்.

அனிவர்த் திரும்பி “ரெங்கு… “என கேள்வியாகப் பார்க்க..

“ஆமாம் சாரே.. இன்னைக்கு காலையில் திருநீர் மலைல கல்யாணம் பண்ணிகிட்டாங்க…”என்றான்.

அதற்குள் பெண்ணின் தந்தை ஓடி வந்து அனிவர்த்திடம் கை எடுத்து கும்பிட்டு…

“மன்னிச்சிடுங்க தம்பி… இது என் அக்கா மகன்.. இரண்டு பேரும் இஷ்டப்பட்டு கிட்டாங்க.. நான் தான் பணக்கார இடத்துல கட்டிகொடுத்தா நமக்கு ஆதாயமுனு உங்கம்மாகிட்ட என் பொண்ண மிரட்டி சம்மதம் சொல்ல வச்சேன்..தப்பு தான் மன்னிச்சுகிடுங்க.. இரண்டு பேரும் இன்னைக்கு காலைல யாருக்கும் தெரியாம கண்ணாலம் பண்ணிகிட்டு வந்துட்டாங்க.. என்ன பண்றதுனு தெரியாம தரகர்கிட்ட சொன்னோம்.. அவர்தான் போன அமுத்தி வைக்க சொல்லிட்டாரு.. தப்பு பண்ணிட்டோம் மன்னிச்சிகிடுங்க தம்பி.. மன்னிச்சுடுங்கம்மா..” என்றார் பயந்து நடுங்கி…

அந்த பெண்ணின் தோற்றமோ கறுப்பாக மிகவும் ஒல்லியாக கழுத்து எலும்புகள் கன்னத்தில் எலும்புகள் துருத்திக கொண்டு இருந்தது. பக்கத்தில் நின்றவனோ அவளைப் போலவே..அவளை விட சற்று உயரமாக இருந்தான் அவ்வளவே..

ஆடி அசைந்து வரும் தென்றல் – 6 Read More »

BA6F562C-E8ED-4AE6-B06E-38A422EB3D18

ஆடி அசைந்து வரும் தென்றல் – 8

8- ஆடி அசைந்து வரும் தென்றல்

“ஏன்டா.. மா..”என்றான் வாட்டமாக..

அதற்குள் அவளின் மாமா அருகில் வந்துவிட்டான். மாமனை பார்த்தவள் திரும்பி அனிவர்த்திடம்…

“தெரியாதவங்க எது கொடுத்தாலும் சாப்பிடகூடாதுனு மம்மி சொல்லியிருக்கறாங்க..”

“நான் உனக்கு தெரியாதவனா..” என கேட்டான் ஏமாற்றமாக…

“எக்ஸ்கியூஸ் மீ.. நீங்க யாருனு எனக்கு தெரியல… பட் ஷாஷி உங்கள இதுக்கு முன்னாடி பார்த்திருக்காளா.. அவ அப்படி தான் சட்டுனு பழகிடுவா… தேங்க்ஸ்..”

“வா ஷாஷி போகலாம்..”

“பை அங்கிள்..”என ஷாஷிகா சென்றுவிட… சட்டென அனிவர்த்தின் உலகம் வானிநிலை தவறிய வானமாக மாறியது..

வீட்டிற்கு வந்த பிறகும் அன்று முழுவதும் ஷாஷிகாவே அனிவர்த் மனதை நிறைத்திருக்க.. அனிவர்த்தின் மனமும் இதமான மனநிலையில் இருந்தது. அவனின் வெறுமையை பூரணமாக ஷாஷிகாவின் நினைவுகள் ஆக்ரமித்து கொண்டது.

ஒரு சின்ன குழந்தையால் தன் மனதை நிறைக்க முடியுமா… அப்படி எனில் தான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாமா.. என யோசித்தான். காலையில் பெற்றவர்களிடம் இதை பற்றி பேசவேண்டும் என முடிவு செய்தவன் நிம்மதியாக தூங்கினான்.

தத்து எடுப்பது பற்றி முடிவு செய்துவிட்டானே தவிர அவனுக்கே ஷாஷிகா இன்றி வேற குழந்தையை பிடிக்கும் என்று தெரியவில்லை. தன் அம்மா சொல்வது போல கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றால் அதிலும் ஈடுபாடு வரவில்லை. ஏனோ எந்த பெண்ணுடனும் உறவு வைத்து கொண்டாலும் ஆதாரம் ஆதாயம் என்று வருபவர்களிடம் இயற்கையாகவே ஒரு இணக்கமான உறவாக அது இல்லை. இவன தரும் பொருளுக்காக அவனை சந்தோஷப்படுத்தும் முயற்சியில் எல்லாம் மிகையாகவே செய்தனர். அது அவனுக்கு ஒரு வெறுப்பையே கொடுத்தது.

அனிவர்த்தின் மனதையும் ஒருத்தி நெருங்கி இருந்தாள் தான். அப்படி ஒரு காதலோடு… சுயநலமில்லா அர்ப்பணிப்போடு… அவனை ஒரு ராஜகுமாரனாக தன் நேசத்தால் உணர வைத்திருந்தாள். அதையும் எப்பவும் போல தனது கலவி களியாட்டங்களில் ஒன்றாக நினைத்து கடந்து வந்துவிட்டான். ஆனால் காரிகையின் நேசம் அவனையறியாமலே அவனின் ஆழ்மனதில் தங்கிவிட்டது.

அதன்பிறகு எந்த பெண்ணுடனான உறவிலும் அவனுக்கு திருப்தி இல்லை. அவன் எதை எதிர்பார்க்கிறான் என அவனுக்கே புரியவில்லை. வருடங்கள் செல்ல செல்ல.. சலிப்பு தட்டி… நாட்டம் குறைந்து… சுத்தமாக நின்றுவிட்டது. அதன் பிறகு மனதில் ஒரு வெற்றிடம்.. ஷாஷிகாவுடனான நட்பு வெற்றிடத்தை கொஞ்சம் ஈட்டு நிரப்பியது. ஷாஷிகாவை பார்க்கும் போது அப்படி ஒரு பரவசம்.. பேசும் போதும்.. பழகும் போதும்… மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தான்.

பலவற்றையும் நினைத்து வெகு நேரம் கழித்தே உறங்கினான்.இருந்தபோதிலும் காலையில் வழக்கமாக அலுவலகம் செல்லும் நேரத்திற்கு கிளம்பி வந்தவன்… டைனிங்கில் இருந்த பெற்றவர்களிடம் சென்றான்.

சிதம்பரம்”என்ன அனிவர்த் ஆபிஸ்கு கிளம்பிட்டயா..”

“ஆமாம்பா…” என்று தந்தையிடம் பதில் சொன்னாலும் பார்வை எல்லாம் தாயிடம் தான்… அவனுக்குமே இவ்வளவு நாட்களாக பேசாதிருந்தது என்னவோ போல இருக்க.. இப்பொழுது பேச நினைத்தாலும் ஒரு சிறு தயக்கம்..

கங்காவோ மகன் கல்யாணம் நின்றது மட்டும் அல்லாமல் உறவினர்களின் ஏச்சு பேச்சிற்கு ஆளாக நேரிட்டுவிட்டதே… அதுவும் மகனை அவமானப்படுத்திவிட்டார்களே… எல்லாம் தன்னால் தானே என்ற குற்ற உணர்வில் இருந்தவர்… நாளாக குற்றணர்வு வருத்தமாக மாறி… வருத்தம் கோபமாக மகன் மேல் திரும்பியது.

நான் என்ன எல்லா அம்மாவை போல மகனுக்கு ஒரு கல்யாணம் தானே செய்ய ஆசைப்பட்டேன். அந்த இடத்தில் இவனின் ஒழுக்க கேடான செயல் தான் பேச்சிற்கு இடமானது. இவனால் நாங்கள் தான் அசிங்கப்பட்டோம். இவன் பேசாமல் இருப்பானா.. இனி நான் பேசப் போவதில்லை என கோபத்தை மகன் மேல் திருப்பிக் கொண்டு.. முறுக்கிக் கொண்டு இருந்தார்.

ஆனால் அனிவர்த்கு அப்படி இல்லையே…

“மாம்.. ம்மா..”என்றான் தாயைப் பார்த்து…

கங்கா கண்டு கொள்ளாமல் கிச்சன் உள்ளே செல்ல.. பின்னாலயே சென்றான்.

“ம்மா.. என்கிட்ட பேசுங்க.. இங்க பாருங்க…” என தன் அம்மாவின் முகத்தை தனபுறம் திருப்பினான்.

கங்கா அனிவர்த்தின் முகம் பார்த்து “நீ தான் என்கிட்ட பேசாம இருந்த..”

“அதான் இப்ப பேசறேன்ல..”

“இப்ப நீ வந்து பேசினா.. நான் பேசிடனுமா..”

“சாரி மாம்.. வெரி சாரி..”

“சாரி கேட்டா எல்லாம் சரியாகிடுமா.. உன்னோட அந்த ஜெர்மன் பழக்கம் எல்லாம் இங்க சரி வராதுனு எவ்வளவு தூரம் சொன்னேன் கேட்டியா… இப்ப பாரு இதனால உனக்கு கல்யாணம் எங்களால செய்யமுடியுதா.. எத்தனை பேர் எத்தனை கேட்டாங்க.. எவ்வளவு அசிங்கமா பேசினாங்க.. செய்யறது எல்லாம் நீ கோவிச்சுகிட்டு என்கிட்ட பேசாம இருப்ப.. நான் பேசனுமா.. முடியாது போடா…” என இவ்வளவு நாள் அனிவர்த் செய்ததற்கு நன்றாக திருப்பிக் கொடுத்தார்.

அச்சோ இந்தம்மா மலை ஏறிட்டாங்களே.. என நினைத்தவாறே…

“மாம்… என் செல்லம்ல… கங்காம்மா.. கருணை காட்டுங்க.. கங்காம்மா.. “

நீ பேசுடா இதுக்கு எல்லாம் மயங்குவேனா…என இருக்க…

“கங்காம்மாவின் ஒரே மகனுக்கு வந்த கஷ்டத்தப் பார்த்திங்களா.. கடவுளே…” என மேலே இரண்டு கைகளையும் தூக்கி தலையை உயர்த்தி புலம்ப…

அவனின் செயலில் கங்கா சட்டென சிரித்துவிட்டார். தாயின் சிரிப்பை கண்ட அனிவர்த் கங்காவை அப்படியே தனது தலைக்கு மேல் தூக்கி சுற்ற..

“டேய் விடுடா.. கீழ போட்டு இடுப்ப ஒடிச்சுறாத.. இன்னும் பேரன் பேத்திகளை கூட இடுப்புல தூக்கல..”என கத்த.. தன் அன்னையை கீழே இறக்கி விட்டவன்.. தாயின் கன்னத்தில் முத்தம் வைத்தான்.

கங்கா கன்னத்தை துடைத்தவாறே…”இங்க பாரு இப்படி எல்லாம் முத்தா வைக்காத.. அந்த ரைட்ஸ் எல்லாம் என் சிதம்பரத்திற்கு மட்டும் தான்..”என்றார்.

மனைவியின் பேச்சை ரசித்தவர் மகன் முன் என்ன இதெல்லாம் என பார்வையால் கண்டிக்கவும் செய்தார.

மனைவி மகனின் சேட்டைகளை அமைதியாக ரசித்துக் கொண்டு இருந்தார் சிதம்பரம்.

ஒருவாறு மலையிறக்கினான் கங்காவை…

“அப்பாடா.. மாம் சமாதானமாகியாச்சு…” என்றான் சிதம்ரத்திடம்

உடனே கங்கா மகன் இளகி இருக்கும் நேரம் இது தான் சரியான தருணம் என நினைத்து…

“அனிவர்த் கல்யாணத்துக்கு பார்க்கவா..”என மெதுவாக கேட்டார்.

அனிவர்த் முகம் இதுவரை இருந்த இளகு பாவம் நீங்கி இறுகி போனது. பேசாமல் அமைதியாக இருக்க… கங்காவோ சிதம்பரத்திடம் பேசுங்க என கண்களால் உத்தரவிட…

“ம்ம்.. என்ன சொல்லு அனிவர்த்..”சிதம்பரம் கேட்க..

“ப்பா…சொன்னா புரிஞ்சுக்குங்க… எனக்கு கல்யாணம்.. அதுல அவ்வளவு இன்ட்ரஸ்ட இல்ல… “

“இப்படி சொன்னா எப்படிப்பா… காலம் பூரா இப்படியே இருந்திட முடியாது. வயசாகும் போது மனசு ஒரு துணையை தேடும். யாரும் எப்பவும் தனித்து வாழ முடியாது. ஆணோ.. பெண்ணா ஒரு துணை அவசியம் தேவை அனிவர்த்”என ஒரு தகப்பனாக பொறுமையாகவே எடுத்து சொன்னார்.

சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக ஏதோ சிந்தனையில் இருந்தவன் ஒரு பெருமூச்சோடு…

“எனக்கு தோனும் போது நானே சொல்றேன்பா…”என சொல்லி விட்டு சாப்பிடாமல் கூட கிளம்பிவிட்டான்.

“என்னங்க… இப்படி சொல்லிட்டு போறான்”என்றார் கங்கா கலக்கமாக…

“விடும்மா.. பார்த்துக்கலாம்.. “என்று சொன்னாலும் அவருக்கும் மகனின் பேச்சில் கலங்கி தான் போனார்.
அன்று அலுவலகத்தில் கூட வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தான் அனிவர்த்.. ஏற்கனவே இருந்த மன குழப்பம்…தன் தந்தை சொன்னது… எதிலும் கவனம் செல்லவில்லை. ஏனோ ஷாஷிகாவைப பார்க்கனும் போல இருக்க… அவள் வழக்கமாக வரும் பூங்காவிற்கு அவனாகவே தேடிச் சென்றான்.

இவன் போன போது ஷாஷிகா வந்திருக்கவில்லை. அவளுக்காக காத்திருந்தான். சற்று நேரத்தில் வந்தவள் அனிவர்த்தை கவனிக்கவில்லை. தன நண்பர்களோடு விளையாடி கொண்டிருந்தாள். அனிவர்த்தும் அவளை அழைக்காமல் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தே அவளையே பார்த்துக் கொணாடிருந்தான்.

பார்க்க.. பாரக்க.. அவன் மனம் அலைப்புறுதல் அடங்கி.. சாந்தம் கொள்ள.. அதை சிந்தனை ஏதுமின்றி அனுபவித்துக் கொண்டு இருந்தான்.

விளையாடி கலைத்துப் போய் அனிவர்த் அமர்ந்திருந்த பெஞ்சில் வந்து அமர்ந்தவள் அப்போது தான் அனிவர்த்தை கவனித்தாள்.

அவனை பார்த்ததில் அப்படி ஒரு ஆனந்தம்.

“அங்கிள்… எப்ப வந்திங்க.. வாக்கிங் வந்திங்களா..”

“இல்லை..ஷாஷி.. சும்மா வந்தேன்..”

“ஓ.. நான் விளையாட வந்தேன்..”

“தினமும் வருவியா..”

“இல்ல.. குவிக்கா ஹோம்வொர்க் முடிச்சிட்டா… மம்மி விளையாட விடுவாங்க..”

“உங்க வீடு இங்க தான் இருக்கா..”

“ம்ம்.. அதோ.. அது தான்.. டி தேர்டி…”என சற்று தள்ளி எதிரில் இருந்த அப்பாரட்மென்டை காண்பித்தாள்.

அனிவர்த் ஷாஷிகாவோடு பேசிக் கொண்டு இருந்தான். அனிவர்த் பேச்சுக்கள் ஓரிரு வார்த்தையில் இருக்க.. ஷாஷிகா தான் வாய் ஓயாமல் பேசினாள். இளையாளின் பேச்சுக்களை காதில் வாங்கி மூளையில் பதிவு செய்ய… அவளின் முகம் காட்டும் நவரசங்களை… பரவசங்களை.. மனதில் பதிவு செய்ய.. தனியொரு உலகில் வாழ்ந்து கொண்டிருந்தனர் இருவரும்…

“ஷாஷி.. வா.. லேட்டாகிடுச்சு..”என்ற குரல் இவர்களின் உலகில் உத்தரவின்றி உள்நுழைய… அனிவர்த் மனம் சுணங்க.. கூப்பிட்ட தோழனை கண்டு ஷாஷிகா…

“இருடா.. டீனு.. வரேன்”என கையாட்டி சொன்னவள்.. அனிவர்த்திடம்…

“பை அங்கிள்…” என சொல்லி விட்டு பட்டாம்பூச்சியாக பறந்துவிட்டாள்.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 8 Read More »

D2DD5B3B-15F8-4C38-8035-AA2F692FEA3C

ஆடி அசைந்து வரும் தென்றல் – 7

பார்த்த அனிவர்த் அவமானமாக உணர்ந்தான். இவனை விட நான் எந்த வித்தில் குறைந்துவிட்டேன். என் அழகு அந்தஸத்தில் கால்வாசி கூட இல்லை. என்னை நிராகரிப்பதா… என்ன தான் காதல் என்றாலும் தன்னை இப்படி ஒருத்தனுக்காக நிராகரிப்பதா..என கோபமே அதிகரித்தது.

கங்காவால் இதை எல்லாம் பார்க்க முடியவில்லை. தன் மகனை சம்மதிக்க வைக்கப பட்டபாடு… எவ்வளவு போராடி இவ்வளவு தூரம் கொண்டு வந்தார். இனி மறுபடியும் முதலில் இருந்தா.. என ஆயாசமாக இருந்தது. இனி இதற்கு பிறகு மகனின் செயல் எப்படி இருக்குமோ.. மகனின் கல்யாணம் வாழ்நாள் கனவாகவே ஆகிவிடுமோ…நினைக்கையில் உண்மையாகவே நெஞ்சுவலி வருவது போல இருந்தது.

ரெங்கு “சாரே… நீங்க சொல்லுங்க.. என்ன செய்யனும்..”

என்ன தான் நேர்மையாக தொழில் செய்தாலும் ஒருவன் தொழிலில் வளர்ந்து வருகிறான் என்றால் அவன் வளர வளர எதிரிகளும் அதிகரிக்கவே செய்கிறார்கள். எதிரிகளை சரிகட்ட.. பணம்.. அரசியல் செல்வாக்கு..சில சமயம் இது போன்ற அடியாட்களின் உதவியும் தேவைப்படுகிறது.

ரெங்கு இந்த மாதிரியான ஆள் தான்.ஆனால் கேட்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் ஆட்களை தூக்கி வந்து இரண்டு தட்டு தட்டி மிரட்டி அனுப்பிவிடுவான். அதற்கான கூலி வாங்கி கொள்வான். அவசியமின்றி வேற எந்த அடிதடிக்கும் செல்லமாட்டான். அப்படிபட்ட பழக்கம் தான் அனிவர்த்துக்கு ரெங்கு…

அவர்களை அனுப்பி விடு என கை அசைத்தான். அவர்களை அழைத்து வந்ததது போலவே.. அழைத்து சென்றுவிட்டான் ரெங்கு…

அசோக்கிடம்”இங்கு எல்லாம் செட்டில் பண்ணிட்டு வா..”

“ப்பா.. போகலாம்….” என பெற்றவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். வீடு வந்தவன் எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான்.

கங்கா அயர்ந்து போய் சோபாவில் பொத்தென அமர்ந்தார். கங்கா முகத்தை பார்த்ததும சிதம்பரம் பக்கத்தில் உட்கார்ந்து கங்காவின் கையை தட்டி கொடுத்து…

“கங்காம்மா… கவலைப்பட்டு உடம்ப கெடுத்துக்காத.. விடு பார்த்துக்கலாம்..”

“இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பேரன் பேத்திகள பார்க்க ஆசைப்பட்டேன்.. அது ஒரு தப்பா.. எனக்கு அந்த கொடுப்பினை இல்லையா… நான் வச்சிருக்கறது ஒரு பையன் அவனுக்கு கல்யாணம் பண்ண எவ்வளவு போராட வேண்டி இருக்கு.. இனி இவன்கிட்ட இதைப் பத்தி பேசவே முடியாதே.. மறுபடியும் இவன் பார்ட்டி..பொண்ணுங்கனு ஆரம்ப்பிச்சிடுவானே.. எனக்கு நினைச்சாலே நெஞ்சுவலிக்கற மாதிரி இருக்கு..” என சொன்னவர் அழுக ஆரம்பித்து விட..

சிதம்பரம் தனது தோளில் சாய்த்து தட்டி கொடுக்க… கங்கா அழுகை நின்றதே தவிர.. மனம் நிலை கொள்ளவில்லை.

அனிவர்த் தனது அறையில் புலியாக உறுமிக் கொண்டு இருந்தான். ஒரு நாள் உறவுக்கு வரும் பெண்களே அழகாக நளினமாக இருப்பார்கள். வாழ்நாள் உறவாக வரும் பெண் அழகாக இல்லை என்றாலும் பார்க்கும் அளவிற்காகவது ஒரு பெண்ணை பார்த்திருக்கலாம்.அதை விட அழகு படிப்பு அந்தஸது எதிலும் தனக்கு ஒரு சதவீதம் கூட பொருந்தாத் ஒருவனுக்காக தன்னை நிராகரித்ததை தான் தாங்கிக் கொள்ள முடிவில்லை அனிவர்த்தால்… எனக்கா இப்படி… இதை போல ஒரு அவமானம் எதுவும் இல்லை. எல்லாம் இவர்களால் தான்.. நான் தான் வேண்டாம்னு சொன்னனே… கேட்டாங்களா.. இனி கல்யாணம் கருமாதினு பேசட்டும் இருக்குது…என கோபம் முழுவதும் தன் தாயின் மேல் திரும்பியது.

அனிவர்த்துக்கு ஒன்று தெரியவில்லை… புரியவில்லை..எல்லா பெண்களும் அழகுக்கும் பணத்திற்கும் மயங்கமாட்டார்கள். மதிப்பு கொடுக்கமாட்டார்கள்..

அந்த பெண்ணின் தகப்பன் தான் வசதி வாய்ப்பிற்கு ஆசைப்பட்டாரே தவிர.. அந்த பெண் தன்னை காதலிப்பவனே வாழ்க்கை துணையாக வரவேண்டும் விருப்பம் கொண்டாள்.

அதன் பிறகு அனிவர்த் தனது அம்மாவிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டான். ஏற்கனவே பேச்சு குறைவு தான் இப்போது சுத்தமாக பேசுவதில்லை. எதுனாலும் சிதம்பரத்திடம் மட்டுமே அவனின் பேச்சு இருக்க… கங்காவிற்கு மகனின் வாழ்க்கையை நினைத்து மனதளவில் ரொம்ப காயப்பட்டு இருக்க.. அனிவர்த்தும் பேசாமல் இருக்க… பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார்.

அனிவர்த்திடமும் பெரிய மாற்றம்… ஆபிஸ் வீடு என தன் வட்டத்தை சுருக்கி கொண்டான். வீக் எண்ட் கிளப் பார்ட்டி டேட்டிங் என எல்லாத்தையும் விட்டுட்டான்.. விட்டுட்டான் என்ன.. அதில் எல்லாம் ஆர்வம் போய்விட்டது தொழிலை தவிர.. எதிலும் ஒரு பிடிப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. வார விடுமுறை நாட்களிலும் வீட்டிலேயே இருந்தான்.

மகனின் மாற்றம் சிதம்பரத்திற்கு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் கங்காவிற்கோ மகனுக்கு வாழ்க்கை மேல் பிடிப்பு இல்லாமல் இப்படியே தனித்து நின்றுவிடுவானோ.. என பயந்தார்.

சிதம்பரம் தனது நம்பிக்கையை சொல்ல… கங்காவிற்கு அந்த நம்பிக்கை எல்லாம் இல்லை.. அதை சிதம்பரத்திடம் சொல்லி அவர் நம்பிக்கையை குலைக்க விருப்பாமல் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டார்.

ஒருநாள் மாலை சிதம்பரமும் கங்காவும் டிவி பார்த்து கொண்டிருந்தனர்.ஆபிஸில் இருந்து வந்த அனிவர்த தனது தந்தையிடம் இரண்டாயிரம் தாள்கள் அடங்கிய சில கட்டு பணத்தை கொடுத்தவன்…

“ப்பா.. இதுல ஒரு கோடி இருக்கு.. அந்த ப்ளாட்ட வித்துட்டேன்.. இந்தாங்க.. நீங்க பார்த்து எதுனாலும் செஞ்சுக்குங்க…” என சொல்லி விட்டு தனது அறைக்கு சென்றுவிட்டான்.

ஒரு ஞாயிறு அன்று தனக்கு சில உடைகள் எடுக்க வேண்டும் என தந்தையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். தான் வழக்கமாக எடுக்கும் ப்ராண்டட் ஷோரும் சென்று தனக்கு தேவையானதை வாங்கி கொண்டு வெளியில் வந்தவன் ஐஸ்கிரீம் பார்லரை பார்த்தவுடன்.. அதனுள் நுழைந்தான். தனக்கு ஒரு கேசர்பிஸ்தா ஐஸ்கிரீம் ஆர்டர் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தான்.

“மாமா.. யூ ஆர் சீட்டிங் மீ..”

மழலையின் குரலை கேட்டதும் ஷாஷிகா என தெரிந்து கொண்டவன்.. தனக்கு எதிரில் இருந்த டேபிளில் பார்க்க… அங்கு ஷாஷிகா ஒரு இளைஞனிடம் சண்டையிட்டு கொண்டு இருந்தாள்.

“நோ.. நோ.. பேபி..”

“மாமா..மா..ஆ..”

“ஓகே.. ஷாஷிகா.. ஓகே..”

“நீ எனக்கு பைவ் ஐஸ்கிரீம் வாங்கி தரேனு சொன்னல்ல.. இப்ப டூ ஐஸ்கிரீம் தான் வாங்கி தந்திருக்க.. இரு.. இரு.. உன்ன பாட்டிகிட்டயே மாட்டிவிடறேன்.. நீ தக்சாவ பார்த்து கண்ணடிச்சில்ல… அத பாட்டிகிட்ட சொல்லாம இருக்க.. பைவ் ஐஸ்கிரீம் வாங்கி தரேனு சொல்லி இப்ப டூ தான் வாங்கி கொடுக்கற…” என விரல் நீட்டி மிரட்டிக் கொண்டு இருந்தாள்.

ஷாஷிகாவின் உடல்மொழியும் வாய்மொழியும் அப்படி ஒரு அழகோவியமாக இருந்தது. அனிவர்த்தின் மனதை மணக்கச் செய்தது.

“ஷாஷி.. ரிமைனிங் ஐஸ்கிரீமை நெக்ஸ்ட் வீக் வாங்கி தரேன்.. கோல்ட் வந்திடும்… குட்டில்ல.. செல்லம்ல்ல.. பாட்டிகிட்ட சொல்லகூடாது. ப்ராமிஸா வாங்கி தரேன் ப்ளீஸ் “என கெஞ்ச…

“ஓக்கே.. ஓகே.. பட் சீட்டிங் பண்ணனும் நினைச்ச.. பாட்டிகிட்ட சொல்லிடுவேன்..” என மீண்டும் மிரட்டினாள்.

“சரி வா போகலாம்..” என அவன் ஷாஷிகாவை அழைத்து கொண்டு செல்ல.. எங்கே ஷாஷிகாவோடு பேச முடியாமல் போய் விடுமோ என… அனிவர்த் வேகமாக “ஷாஷிகா..”என அழைத்தான்.

திரும்பி பார்த்த ஷாஷிகா.. அனிவர்த்தை பார்த்ததும் முகம் எல்லாம் பூவாக மலர.. தன் மாமனின் கையை உதறிக் கொண்டு அனிவர்த்திடம் ஓடி வந்தாள்.

“ஹாய் அங்கிள்..”

“ஹாய் ஷாஷிகா..”

“ஐஸ்கிரீம் சாப்பிட வந்திங்களா..”

“ம்ம்ம்..”

அப்போது தான் தனக்கு வந்த தான் சாப்பிடாமல் இருந்த ஐஸ்கீரீமை காட்டி “ம்ம்ம் சாப்பிடறியா…” என்றான்.

கேசர்பிஸ்தா ஐஸ்கிரீம்… நல்லா குங்கும்ப்பூ பாதாம் பிஸ்தா பருப்பு பன்னீர்ரோஜா இதழ்கள் எல்லாம் மேலே அழகாக டாப்பிங்ஸ் செய்யப்பட்டு இருந்ததை பார்க்க ஷாஷிகா நாக்கை சுழட்டி சப்பு கொட்டினாள் குழந்தை.

அவள் செயலில் வசீகரிக்கப்பட்ட அனிவர்த் தன் உள்ளங்கையில் வைத்து நீட்ட… மறுப்பாக தலை அசைத்தாள் இளையாட்டி..

ஆடி அசைந்து வரும் தென்றல் – 7 Read More »

என் மோகத் தீயே குளிராதே 13

அத்தியாயம் 13   “ஹாய்.. நான் அர்ச்சன..”   “ஓ.. நான் விளானி..”   “நீ காலேஜ்கு புதுசா?”   “ஆமா.. நீ?”   “நானும் தான்.. என்னோட டாடி சர்கிள் இன்ஸ்பெக்டர்.. அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் கிடைக்கும்.. அவர்கூடவே நாங்களும் ஊர் ஊரா சுத்தணும்..”   “ஓ!”   “ஆமா.. நீ ஏன் ஃபைனல் இயர் ஜாய்ன் பண்ணிருக்க? உங்க டாடிக்கும் டிரான்ஸ்பர் கிடைச்சுருச்சா?”   “இல்ல.. இங்கப்பாரு?”   “என்னது காலியா? உனக்கு மேரேஜாகிடுச்சா?”

என் மோகத் தீயே குளிராதே 13 Read More »

என் மோகத் தீயே குளிராதே 12

அத்தியாயம் 12   “ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா..” என்றவாறே பாடிக் கொண்டு படியில் இறங்கி வந்த விளானி, சமையலறைக்குள் நுழைந்தவள், அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டியை திறந்து, அதிலிருந்த மாம்பழ மில்க்ஷேக்கை எடுத்து குடித்துக் கொண்டே, “செ செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி” என்று பாடியபடி நடனமாடிக் கொண்டே வந்தவள், உணவு மேஜையின் மீது

என் மோகத் தீயே குளிராதே 12 Read More »

DF0F036B-6FE5-441C-ACEF-227CFE1F0C28

ஆடி அசைந்து வரும் தென்றல் – 5

அனிவர்த் தன் வாக்கின் மூலம் பெற்றவர்களின் மன சஞ்சலத்தை போக்கி சந்தோஷத்தை மீட்டு கொடுத்துவிட்டான்.கொஞ்சநேரம் அன்னையோடு சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்தவன் மருத்துவமனையில் கங்காவிற்கான பத்திய உணவு வரவும் தானே அவருக்கு ஊட்டிவிட்டான். சாப்பாடு பிடிக்காமல் கங்கா முகத்தை சுழித்த போதும் கட்டாயப்படுத்தி கொடுத்தான்.கங்காவின் முகத்தை பார்க்க.. பார்க்க சிதம்பரத்திற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

கங்கா கண்களால் மகனை காண்பித்து அமைதியாக இருங்க என எச்சரித்துக கொண்டு இருந்தார். அனிவர்த் இரண்டு நாட்களாக ஆபீஸ் செல்லாததால் போய் விட்டு மாலை வருவதாக சொல்லி கிளம்பிவிட்டான்.

அவன் கிளம்பியதும் கங்கா..”ஷ்ஷப்பா.. இந்த பத்திய சாப்பாடு எல்லாம் கொடுமை.. எனக்கு மட்டன் பிரியாணி டிரைவரை விட்டு வாங்கி வர சொல்லுங்க..”என்றார் எழுந்து படுக்கையில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு..

மட்டன் பிரியாணி வாங்கி வரவும்.. அதை அவசர அவசரமாக பிரித்து வாயில் அடைத்து் கொண்டே..

“அந்த ஐசியூவுல உப்பு இல்லாத கஞ்சிய கொடுத்து அந்த நர்ஸ் புள்ள குடிங்க குடிங்கனு உசிர வாங்கிட்டா.. ரூம்கு வந்த பிறகாவது இட்லியும் குடல்கறியும் வாங்கி சாப்பிடலாம்னா.. உங்க மகன் பக்கத்திலேயே உட்கார்ந்து கிட்டு சென்டிமென்ட்டா பேசிக் கொல்றான். நானே உடம்பு சரியில்லாத மாதிரி நடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா.. நடிப்பு தானேனு இல்லாம உங்க ப்ரண்ட் அந்த டாக்டரு சும்மா நடிப்புக்கு ஊசி குத்த சொன்னா.. நிசமாலுமே குத்தி வச்சிட்டாரு.. எனக்கு ஒரு மருமகள கொண்டு வரதுக்குள்ள.. நான் என்ன எல்லாம் பாடுபட வேண்டி இருக்கு..” சாப்பிட்டு கொண்டே பேச புரையேறி இருமி கண் எல்லாம் கலங்கிவிட்டது.

சிதம்பரம் தண்ணீர் ஊற்றி கொடுப்பதற்குள் ஷாஷிகா ஓடி வந்து பெட்ல ஏறி மண்டியிட்டு அமர்ந்து தலையை தட்டி கொடுக்க.. யார் இந்த சிறுமி.. எங்கிருந்து வந்தாள்.. என இருவரும் பார்த்தனர்.

“சாப்பிடும் போது பேசக்கூடாது என உங்களுக்கு யாரும் சொல்லி தரலையா..” விழி மலர்த்தி தலையை ஆட்டி ஆட்டி பேச… அவளின் சுருள்முடி முன் நெற்றியை மறைக்க.. அழகாக தலையை சிலுப்பி அதை ஒதுக்கி விட்டு கொண்டாள்.

வெள்ளையில் இளஞ்சிவப்பு கரை கட்டிய ரோஜாப்பூ இருக்குமே அது போல நல்ல பால்வண்ணத்தில் தோலின் நிறமிருக்க… கண் இமை,கன்னக்கதுப்பு, மூக்கு நுனி. உதடு, கைகால் விரல்கள் எல்லாம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க.. அதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல அடர்த்தியான சுருள் சுருளான கேசம்…

தீடீரென ஒரு குழந்தை வந்து பேசவும்… கங்காவும் சிதம்பரமும் அதன் அழகிலும் அழுத்தம் திருத்தமான பேச்சிலும் தங்களை மறந்து பார்த்தபடியே இருந்தனர்.

“அச்சோ… நீங்க பேஷன்ட் தான.. உடம்பு நல்லா இல்லைனா நான்வெஜ் சாப்பிடகூடாது தெரியாதா..” கையை ஆட்டி பேச…

இளையாளின் கேள்வியில் கங்கா திரு திருவென முழிக்க… சிதம்பரம் நன்றாக வாய்விட்டு சிரி்த்துவிட்டார்.

வாய் மேல் தன் சுட்டுவிரலை வைத்து “ஷ்ஷ்.. இது ஹாஸ்பிட்டல் இங்கு சைலண்ட்டா இருக்கனும்.. டோன்ட் சவுட்..” என கிசுகிசுப்பான குரலில் சொல்ல.. சொக்கி தான் போயினர் பெரியவர்கள் இருவரும்…

“ஐயோ..” என தனது உள்ளங்கையால் உச்சஞ்தலையில் தட்டி கொண்டவள்..

“பாட்டி தேடுவாங்க.. பை..” என சொல்லி அந்த அழகு புயல் அவர்களை கரை கடந்து சென்றது.

இருவருக்கும் இனிமையான பொழுது அது.. பேச்சற்று அந்த இனிமையில் கரைந்து கொண்டு இருந்தனர்.

நர்ஸ் வரவும் தான் அதில் இருந்து மீண்டனர். நர்ஸ் ஒரு இன்செக்‌ஷன் போட்டு விட்டு செல்ல..

“நடிப்ப நிஜமாக்க பார்க்காரு…. உங்க ப்ரண்டுகிட்ட சொல்லி வைங்க… பில் எவ்வளவு வேணும்னாலும் கட்டிடலாம்.. இப்படி சதக் சதக்குனு குத்த வேணாம்.. சொல்லுங்க..” என்றார் முகத்தை சுழித்தபடி…

“செய்வன திருந்த செய் என பழமொழி இருக்குல்ல.. உன் மகன் படுபுத்திசாலி. உன் தில்லாலங்கடி எல்லாம் உம் மகனுக்கு தெரிஞ்சுது.. அவன் கல்யாணம் நமக்கு கனவாவே போயிடும். அத முதல்ல புரிஞ்சுக்கோ..”

கணவனின் பேச்சில் உள்ள உண்மை உரைக்க அமைதியாகவே தலை அசைத்தார்.

சிதம்பரம் தண்ணீர் ஊற்றி கொடுப்பதற்குள் ஷாஷிகா ஓடி வந்து பெட்ல ஏறி மண்டியிட்டு அமர்ந்து தலையை தட்டி கொடுக்க.. யார் இந்த சிறுமி.. எங்கிருந்து வந்தாள்.. என இருவரும் பார்த்தனர்.

“சாப்பிடும் போது பேசக்கூடாது என உங்களுக்கு யாரும் சொல்லி தரலையா..” விழி மலர்த்தி தலையை ஆட்டி ஆட்டி பேச… அவளின் சுருள்முடி முன் நெற்றியை மறைக்க.. அழகாக தலையை சிலுப்பி அதை ஒதுக்கி விட்டு கொண்டாள்.

வெள்ளையில் இளஞ்சிவப்பு கரை கட்டிய ரோஜாப்பூ இருக்குமே அது போல நல்ல பால்வண்ணத்தில் தோலின் நிறமிருக்க… கண் இமை,கன்னக்கதுப்பு, மூக்கு நுனி. உதடு, கைகால் விரல்கள் எல்லாம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க.. அதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல அடர்த்தியான சுருள் சுருளான கேசம்…

தீடீரென ஒரு குழந்தை வந்து பேசவும்… கங்காவும் சிதம்பரமும் அதன் அழகிலும் அழுத்தம் திருத்தமான பேச்சிலும் தங்களை மறந்து பார்த்தபடியே இருந்தனர்.

“அச்சோ… நீங்க பேஷன்ட் தான.. உடம்பு நல்லா இல்லைனா நான்வெஜ் சாப்பிடகூடாது தெரியாதா..” கையை ஆட்டி பேச…

இளையாளின் கேள்வியில் கங்கா திரு திருவென முழிக்க… சிதம்பரம் நன்றாக வாய்விட்டு சிரி்த்துவிட்டார்.

வாய் மேல் தன் சுட்டுவிரலை வைத்து “ஷ்ஷ்.. இது ஹாஸ்பிட்டல் இங்கு சைலண்ட்டா இருக்கனும்.. டோன்ட் சவுட்..” என கிசுகிசுப்பான குரலில் சொல்ல.. சொக்கி தான் போயினர் பெரியவர்கள் இருவரும்…

“ஐயோ..” என தனது உள்ளங்கையால் உச்சஞ்தலையில் தட்டி கொண்டவள்..

“பாட்டி தேடுவாங்க.. பை..” என சொல்லி அந்த அழகு புயல் அவர்களை கரை கடந்து சென்றது.

இருவருக்கும் இனிமையான பொழுது அது.. பேச்சற்று அந்த இனிமையில் கரைந்து கொண்டு இருந்தனர்.

நர்ஸ் வரவும் தான் அதில் இருந்து மீண்டனர். நர்ஸ் ஒரு இன்செக்‌ஷன் போட்டு விட்டு செல்ல..

“நடிப்ப நிஜமாக்க பார்க்காரு…. உங்க ப்ரண்டுகிட்ட சொல்லி வைங்க… பில் எவ்வளவு வேணும்னாலும் கட்டிடலாம்.. இப்படி சதக் சதக்குனு குத்த வேணாம்.. சொல்லுங்க..” என்றார் முகத்தை சுழித்தபடி…

“செய்வன திருந்த செய் என பழமொழி இருக்குல்ல.. உன் மகன் படுபுத்திசாலி. உன் தில்லாலங்கடி எல்லாம் உம் மகனுக்கு தெரிஞ்சுது.. அவன் கல்யாணம் நமக்கு கனவாவே போயிடும். அத முதல்ல புரிஞ்சுக்கோ..”

கணவனின் பேச்சில் உள்ள உண்மை உரைக்க அமைதியாகவே தலை அசைத்தார்.

சிதம்பரத்திற்கு கங்காவிடம் வம்பு செய்யும் எண்ணம் தோன்ற…

“கங்காம்மா… உன் உடம்புல ஏகப்பட்ட கம்ப்ளைன்ட்… அதான் ஒரு சர்வீஸ் பண்ணிடுடானு என் நண்பன்கிட்ட சொன்னேன்.. அதான் புல் சர்வீஸ் பண்றான் போல…” என சிரிக்காமல் சொல்ல..

“என்னது… சர்வீஸா.. நான் என்ன உங்க வண்டியா.. சர்வீஸ் விட..”என கோபமாக கேட்க..

“என் வாழ்க்கை ஓட உதவியா இருக்கற வண்டியே நீ தானே…”என கிண்டலடிக்க…

கங்கா தலையணையை தூக்கி சிதம்பரத்தை நோக்கை வீச… அந்த சமயம் பார்த்து அனிவர்த் உள்ளே வந்தான்.

அனிவர்த்தை பார்த்தும் கங்கா ஆடு திருடிய திருடனாய் முழித்தார். அனிவர்த்தின் முகத்தை பார்க்க.. அவன் முகமோ கோபத்தில்…

“ம்மா.. நீங்க பண்றது எல்லாம் சரியில்ல.. என்ன முழிக்கறிங்க.. எனக்கு தெரிஞ்சு போச்சுனா…” என சத்தம் போட…

ஐய்யய்யோ… கண்டுபிடிச்சிட்டானா.. என பயத்துடன் பார்க்க…

“உங்க உடம்பு இருக்கற இந்த கண்டீசன்ல கூட.. நீங்க அடங்கவே மாட்டிங்களா… சின்ன புள்ளையாட்டம் சேட்டை பண்ணாம தூங்குங்க..” என அனிவர்த் திட்ட..

சிறுபுள்ளை போல உதட்டை பிதுக்கி முகத்தை திருப்பிக் கொண்டு படுத்து கண்களை இறுக்க மூடிக் கொண்டார். தந்தையிடம் டாக்டரை பார்த்து விட்டு வருவதாக சொல்லி அனிவர்த் சென்று விட… அவன் சென்றதும் கண்களு திறந்த கங்கா…

“என்னால இவன சமாளிக்க முடியல.. நாம இன்னைக்கே வீட்டுக்கு போகலாம்.. உங்க ப்ரண்ட்டுகிட்ட கேளுங்க..”

“ஏம்மா.. உன் நடிப்புல ஒரு லாஜிக் வேணாமா.. ஹார்ட் அட்டாக் வந்த பேசன்ட.. குறைந்தது இரண்டு நாளாவது ஐசியூவுல இருக்கனும்.. நீ அடமா அங்க இருக்கமாட்டேன். மானிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாம் பார்த்தா பயம் இருக்குனு ரூம்கு வந்துட்டா…இங்கயாவது இரண்டு நாள இருக்காம..உடனே கிளம்பனும்னு சொல்லி எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லனு நீயே காட்டிக் கொடுத்துடுவ போல… இப்ப தான் உன் மகன் கல்யாணத்துக்கு சரி சொல்லி இருக்கான்..பாரத்துக்க… பத்திரம்..”

“சரி.. சரி.. அதையே சொல்லி மிரட்டாதிங்க.. நைட்டுக்கு பரோட்டாவும் மட்டன் சால்னாவும் வாங்கிடுங்க…”

“ஏம்மா டாக்டருக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான்….. மூனு வேளையும் நான்வெஜ் சாப்பிட்ட.. உன் நடிப்பு நிஜமாக சான்ஸஸ் உண்டு.. அதையும் பார்த்துக்கோ..”என்றுவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டார்.

“வாழை பழத்தில் ஊசிய ஏத்தற மாதிரி பேசிட்டு.. அப்பாவி போல பாவ்லா காட்ட வேண்டியது..” என சத்தமாகவே முணுமுணுத்தார். சிதம்பரம் காதில் வாங்காது போல செய்திதாளில் புதைந்து கொண்டார்.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 5 Read More »

என் மோகத் தீயே குளிராதே 11

அத்தியாயம் 11   “என்னடா.. இப்படி முடிய சொல் சொதன்னு வைச்சுருக்க.. துவட்டலையா? சளி பிடிச்சுக்கப் போகுது..” என்ற அர்ஜுன், ஹாசினி கையில் வைத்திருந்த துண்டை வாங்கி, அவளது தலையை துவட்டினான். துவட்டும் போதே, அவளது தோளிலும் கழுத்திலும் கன்றி போயிருந்த காயங்களை பார்த்தவன்,    “டாடி ரூம்ல.. டேபிளுக்கு கீழே ஒரு ஆயின்மெண்ட் இருக்கும்.. அதை எடுத்துட்டு வா..” என்று கூறியவாறே முடியில் இருக்கும் நீரை துடைத்து காய் வைத்தவன், அவளை தனது அறைக்கு அனுப்ப,

என் மோகத் தீயே குளிராதே 11 Read More »

1D36D68A-326B-4B1E-B65E-88BF2529476E

ஆடி அசைந்து வரும் தென்றல் – 4

இதற்கு முன்பும் மகன் வீடு வராமல் இருந்திருக்கிறான் தான். ஆனால் அதெல்லாம் வார இறுதி நாட்களில் தான். அதுவும் மேற்படிப்புக்காக ஜெர்மன் சென்று வந்த பிறகு தான்.. அதற்கு முன்பு எல்லாம் அனிவர்த் அம்மா பிள்ளை தான். இருவரும் நண்பர்கள் போல தான் இருப்பர்.

இப்படி வார நாட்களில் வராமல் இருக்கவும் கொஞ்சம் கவலை வந்தது தான். இருந்தாலும் எத்தனை நாளைக்கு பார்த்துவிடலாம் என அலட்சியமாக இருந்தார். இரண்டு நாட்கள் என்பது பதினைந்து நாட்களானது. கங்காவிற்கு பெரிதாக கவலை ஆட்கொண்டது.

அனிவர்த்தோ தனது ப்ளாட்டிற்கு வந்து பதினைந்து நாட்களாகியும் தன் அம்மா தன்னை அழைக்கவில்லையே என கோபத்தில் இருந்தான். இவன் வந்த மூன்றாம் நாள் சிதம்பரம் தான் அழைத்து என்ன.. எங்க இருக்கிறாய் என விவரம் கேட்டறிந்தவர் அதன் பின்பு அவரும் தொடர்பு கொள்ளவில்லை. கங்கா தான் வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

இதற்கு முன்பும் மகன் வீடு வராமல் இருந்திருக்கிறான் தான். ஆனால் அதெல்லாம் வார இறுதி நாட்களில் தான். அதுவும் மேற்படிப்புக்காக ஜெர்மன் சென்று வந்த பிறகு தான்.. அதற்கு முன்பு எல்லாம் அனிவர்த் அம்மா பிள்ளை தான். இருவரும் நண்பர்கள் போல தான் இருப்பர்.

இப்படி வார நாட்களில் வராமல் இருக்கவும் கொஞ்சம் கவலை வந்தது தான். இருந்தாலும் எத்தனை நாளைக்கு பார்த்துவிடலாம் என அலட்சியமாக இருந்தார். இரண்டு நாட்கள் என்பது பதினைந்து நாட்களானது. கங்காவிற்கு பெரிதாக கவலை ஆட்கொண்டது.

அனிவர்த்தோ தனது ப்ளாட்டிற்கு வந்து பதினைந்து நாட்களாகியும் தன் அம்மா தன்னை அழைக்கவில்லையே என கோபத்தில் இருந்தான். இவன் வந்த மூன்றாம் நாள் சிதம்பரம் தான் அழைத்து என்ன.. எங்க இருக்கிறாய் என விவரம் கேட்டறிந்தவர் அதன் பின்பு அவரும் தொடர்பு கொள்ளவில்லை. கங்கா தான் வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

வீட்டிற்கு போகாமல் இருந்தால் பயந்த போய் கல்யாணத்தை நிறுத்தி விடுவார்கள் என நினைத்திருக்க.. அவர்களின் அமைதி அவனின் கோபத்திற்கு தூபம் போட்டது போல் ஆனது. பெண் பார்த்து இருக்கிறார்கள் பாரு.. ஒரு முக லட்சணம் உண்டா.. கலரும் கறுப்பு.. குட்ட வாத்து மாதிரி படிக்காத பட்டிக்காடு போல…

இவங்க அழகு படிப்பு நாகரிகத்துல பாதியாவது இருக்கற மாதிரி பார்க்க கூடாது. சி். கே எண்டர்பிரைசஸ் எம்டிக்கு ஒய்பா இருக்கறதுக்கு ஒரு தகுதி வேணாமா.. இந்த மாதிரி பொண்ணை என்ஆபீஸ் ப்யூன் கூட மேரேஜ் பண்ணிக்க யோசிப்பான். ச்சே எனக்கு போய் இப்படி ஒரு பெண் லைப் பார்ட்னரா என கடுங் கோபம் கொண்டான்.

அவன் மேல் ஒரு பந்து வந்து விழுகவும் திடுக்கிட்டு சுற்றுபுறம் உணர்ந்து பந்தை கையில் எடுக்கவும்.. பந்தை வாங்க வந்தாள் ஷாஷிகா. அனிவர்த்தை பார்த்தும்…

“ஹாய் அங்கிள்” என அவனருகே அமர்ந்து கொண்டது.

அனிவர்த்துக்கும் ஷாஷிகாவை பார்த்தும் அவன் மனதில் இருந்த அழுத்தங்கள் எல்லாம் வடிந்து ஒரு புது உற்சாகம் தொற்றிக் கொள்ள…

“ஹேய்.. பேபிடால்..” என்றான்.

ஷாஷிகா அவனை பார்த்து முறைக்க.. அதை பார்க்க அனிவர்த்துக்கு அன்று அவள் சொன்னது நினைவில் வர…

“ஹே…சாரி சாரி ஷாஷிகா..” என தன்னை திருத்திக் கொள்ள..

“அஃது” விரலை நீட்டி எச்சரிப்பது போல மிரட்டினாள் குட்டி பொண்ணு..

அவளும் ஏதோ கேட்க இவனும் பதில் சொல்ல.. நெடுநேரம் குட்டி கைகளை ஆட்டி… கண்ணை உருட்டி….சலசலத்து கொண்டிருக்க.. இவனும் பதிலுக்கு வாயாடி கொண்டு இருந்தான். நடுவே அவளின் தோழர்கள் வந்து அழைத்த போது கூட.. செல்லாமல் நீங்க விளையாடுங்க.. என அனுப்பிவிட்டாள் பெண்.

மாலை மங்கும் நேரத்தில் “ஏய்… ஷாஷி வீட்டுக்கு போகலாம் வா..” என வந்து நின்றான் ஒரு சிறுவன்.

“இரு ரித்தீஷ் வரேன்.. இவன் என் கஷின் பிரதர் ரித்தீஷ்.. “

ரித்தீஷோ..”நீ இப்ப வரையா இல்லயா..” என மிரட்ட..

“சாரி அங்கிள்.. இவன் இப்படி தான் யார்கூடயும் பேசமாட்டான். சிடுசிடுனுனே இருப்பான்..” என ஷாஷிகா சொல்ல..

ரித்தீஷ் முறைக்க.. “பை அங்கிள்.” என சொல்லி விட்டு நிற்காமல் ஓடிவிட்டாள் குட்டி..

வந்த போது இருந்த மனநிலைக்கு நேர்மாறாக சந்தோஷமாக… உற்சாகமாக திரும்பி சென்றான்.

அனிவர்த் வீட்டிற்கு வராததில் கங்கா மனம் நிம்மதி இல்லாமல் தவித்தது. கங்காவிற்கு மட்டும் என்ன ஆசையா மகனிற்கு இப்படி ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க.. அழகாக இல்லைனாலும் படிப்பாவது இருக்க வேண்டும் என நினைத்தார் தான். ஆனால் திருமணத்திற்கு பிறகும் மகனின் வீக் என்ட் பழக்கம் தொடருமேயானால் படித்த பெண்ணாக இருந்தால் நியாயம் கேட்டு நின்றால் குடும்ப மானம் போகப் போவது உறதி.

அழகு இல்லைனாலும் படிக்காத வெகுளியான கணவனே கண் கண்டதெய்வம் என்ற பத்தாம் பசலி நாகரிகத்தில் ஊறிப் போன பெண் தான் தன் மகனுக்கு சரி. அப்போது தான் குடும்பம் உடையாது என கல்யாண தரகருக்கு பத்து மடங்கு கமிஷன் கொடுத்தது தான் நினைத்தது போல பெண் பார்த்து முடித்தார். கங்காவிற்கு மனதே ஆறவில்லை தான். தன் மகனின் அழகிற்கும் படிப்புக்கும் இணையாக பெண் பார்த்து கண் நிறைவாக மணமுடித்து… மனம் நிறைவாக வாழ்வதை பார்க்க ஆசை தான் ஆனால் என்ன செய்ய அப்படி பட்ட பெண் வீட்டிற்கு இவர் செல்லும் முன்பே மகனின் அருமை பெருமைகள் போய் நின்று விடுகிறதே…

இதை எல்லாம் நினைத்து கொண்டு தூக்கம் வராமல் படுத்திருந்தவருக்கு நடு இரவில் மாரடைப்பு வந்து விட சிதம்பரம் பதறி போனார். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து கங்காவை அள்ளி போட்டு கொண்டு சென்றார்.

அனிவர்த்கு சிதம்பரம் அழைக்க.. அனிவர்த்தோ நல்ல உறக்கத்தில்…

ஷாஷிகாவோடு பேசியதில் மனதின் இறுக்கம் எல்லாம் தளர்ந்து மனம் இலகுவாகிட.. ரொம்ப நாள் கழித்து நிம்மதியான உறக்கம்..

சிதம்பரம் மகனுக்கு விடாமல் அழைக்க… ஒரு கட்டத்தில் போனை எடுத்தான் அனிவர்த் ஒரு வழியாக… நல்ல உறக்கத்தில் இருந்தவனுக்கு எங்கோ போன் மணி அடிப்பது போல இருக்க..
கண்களை கசக்கி கொண்டு எடுத்துப் பார்த்தான்.

அதில் தந்தையின் எண்ணை பார்த்ததும் பதறி போய் எடுத்துப் பேசினான். அவர் கூறிய செய்தில் அதிர்ந்து போய் அரக்கப் பறக்க காரை ஓட்டி கொண்டு வந்தவன் தன் அம்மாவை பார்த்ததும் மொத்தமாக உடைந்து போனான்.

தீவிர சிகிச்சை பிரிவில் கைகள் மூக்கில் நெஞ்சில் என நிறைய ஒயர்களோடு.. மயக்கத்தில் இருந்தார் கங்கா.. தன் தாயின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டான் அனிவர்த்..

எந்த உறவுக்கும் கட்டுப்படாதவர்கள் அம்மா என்ற உறவுக்கு கட்டுப்பட்டு தான் ஆகனும்…

அத்தனை ட்யூப் ஒயர்களுக்கு நடுவே தனது அம்மாவை பார்க்கவும் ஆடி போய்விட்டான் அனிவர்த். எப்பவும் அவன் அம்மாவை தான் அதிகம் தேடுவான். நடுவில் கொஞ்ச காலம் தேவை இல்லாத பழக்கவழக்கங்கள் அவனை தள்ளி நிறுத்தி இருந்தது. தன் கல்யாணம் தான் அவர்களை அதிகம் பாதிக்குது போல அம்மாவிற்காக அவர்கள் கைகாட்டும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த நொடி முடிவு செய்தான்.

கங்கா கண் விழித்திருக்க காத்திருந்தனர். காலையில் ஒரு ஏழு மணி போல கண் விழித்தவரை பல டெஸட்கள் அப்சர்வேசன் என ஒரு நாள் வைத்திருந்து அடுத்த நாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டார்.அறைக்கு மாற்றப்பட்டதும் தன்அம்மாவின் கையை பிடித்து கொண்டு…

“உங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்” என கையை பிடித்து கண்களில் ஒத்திக் கொண்டு அழுதான். மகனி்ன் அழுகையை கண்டு கங்காவின் மனம் துடிக்க.. அவர் கண்களிலும் கண்ணீர் திரை.

“அனிவர்த் கல்யாணம் பண்ணினா நீ அந்த பொண்ணுக்கு உண்மையா இருக்கனும். உன்னோட வீக் எண்ட் பார்ட்டி எல்லாம் விட்டுடனும்”அதை சொல்லும் போதே அவர் முகத்தில் அவ்வளவு வேதனை..

அவரின் முகத்தையே பார்த்துகொண்டு இருந்தவனுக்கு அந்த வேதனை எல்லாம் தன்னாலே தான். அவனுக்கு தெரிந்து அவன் அன்னை என்றும் கவலையாகவோ வருத்தப்பட்டோ பார்த்ததில்லை. எப்பவும் சிரிப்புடன் கலகலப்பான டைப் தான்.எதற்கும் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டார்.

கங்கா சிதம்பரத்தை கல்யாணம் செய்யும் போது சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதாரண கிளார்க்காக தான் இருந்தார். குரூப் தேர்வுகள் எழுதியும் சர்வீஸ் அடிப்பையிலும் தாசிலதார், சப் கலெக்டர் என பதவி உயர்வு பெற்று ரிடையர் ஆகிவிட்டார். இருவருக்கும் கூடப் பிறந்தவரகள் யாரும் கிடையாது. ஒன்றுவிட்ட சொந்தங்கள மட்டுமே.. இருவருக்குமே பூர்வீக சொத்துக்கள் சில இருந்தது. அனிவர்த் பிறந்த சில வருடங்களிலேயே இவர்களின் பெற்றவர்களும் அடுத்தடுத்து இறந்து விட.. கங்காவிற்கு உறவுகளாலோ வருமானத்திலோ எந்த பிக்கல் பிடுங்கல் இல்லை.

கங்காவின் ஒரே கவலை.. அனிவர்த் தங்களை போலவே ஒற்றை பிள்ளையாக போய் விட்டது தான். எப்பவும் கங்கா எதற்காகவும் கவலை பட்டதில்லை. அப்படிபட்டவரை அனிவர்த் தன் செயலால் வருத்தி கொண்டு இருந்தான்.

அனிவர்த் தன் தாயின் கைகளின் மேல் தனது கைகளை வைத்து…

“இந்த பதினைந்து நாட்களில் ப்ளாட்டில் தனியாக தான் இருந்தேன். பப் கூட போகல.. யாரையும் வீட்டிக்கு வரவைக்கல.. இனியும் இப்ப எப்படி இருக்கேனோ அப்படி தான்..” என்றான் சின்ன குரலில்… பெற்றோரை பார்க்க இயலாமல் தலையை குனிந்து கொண்டான்.

மகனை பார்க்க பார்க்க… பெற்றவர்கள் இருவருக்கும் மனது துடித்தது. சிதம்பரம் மகனின் தோளில் தட்டி கொடுக்க… அவரின் கையை பிடித்து புறங்கையில் முத்தம் கொடுத்தான். அவனின் இந்த பழக்கங்கள் பிடிக்காத போதும் கங்கா தான் அவ்வப்போது பிடிக்கவில்லை என எதிர்ப்பை காட்டுவாரே தவிர செய்யாதே என கண்டித்தது இல்லை.. அதிலும் சிதம்பரம் அந்த எதிர்ப்பை கூட காட்டியது இல்லை.

சிதம்பரத்தை பொறுத்த வரை மகன் புத்திசாலி படிப்பு தொழில் எல்லாம் சுய முயற்சியில் ஏற்படுத்திக் கொண்டான். அவன் தப்பு என உணர்ந்து விட்டால் அதை செய்யமாட்டேன். உணரும் காலத்திற்காக தான் அமைதியாக இருந்தார்.

அவனுக்கு தெரியவில்லை அழகு படிப்பு இதை எல்லாம் விட பெண்ணை பெற்றவர்களுக்கு பையனின் நல்ல ஒழுக்கம் பழக்க வழக்கங்கள் தான் முன் வந்து நிற்கும என்று..

ஆபீஸ் சென்று வந்த பின்னால் ப்ளாட்டில் தனிமை இவனுக்கு ஒரு வித எரிச்சலை தான் கொடுத்தது. இங்கு வந்த பின்பு பப்பிற்கு சென்றவனுக்கு ஏனோ மனதில் இருந்த அழுத்தம் பெண்கள் துணையையும் நாட அனுமதிக்கவில்லை. அதற்கு அடுத்த வாரம் பப்பிற்கு போக கூட ஏனோ பிடிக்கவில்லை. வீட்டிலேயே இருக்க முடியாமல் சற்று காலார நடக்கலாம் என நினைத்தவன்… தனது ப்ளாட்டுல் இருந்து கிளம்பி கால் போன போக்கில் நடக்க.. வழியில் ஒரு பார்க் தென்பட உள்ளே சென்று அங்கு உள்ள கல் பெஞ்சில் அமர்ந்து தன்னை மறந்து ஏதோ யோசனையில் இருந்தான்.. ஏதோ யோசனை என்ன.. தன் திருமணத்தை நிறுத்தும் யோசனை தான்..

ஆடி அசைந்து வரும் தென்றல் – 4 Read More »

என் மோகத் தீயே குளிராதே 10

அத்தியாயம் 10   “ம்ம்.. ப்ச்.. தலையெல்லாம் ஒரே  வலி..” என்றவாறே எழுந்த ஹரிஷான்த், தான் இருக்கும் கோலத்தை உணர்ந்ததும், அருகினில்  இருப்பது யார் என்று பார்க்க, அங்கே யாரும் இல்லாது குழம்பிப் போனான்.    “ஹாசி.. ஹாசி..” என்று குரல் கொடுத்தவாறே தனது ஆடைகளை அணிந்தவன்,   “எங்க போனா இவ?” என்று தன் வாயிற்குள் முணுமுணுத்தவாறே ஹாலிற்கு வந்தவனின் கண்ணில், இன்னும் தூக்கம் கலையாது தூங்கிக் கொண்டிருந்த நண்பர்கள் பட,   “டேய்.. எந்திரிங்கடா..

என் மோகத் தீயே குளிராதே 10 Read More »

error: Content is protected !!
Scroll to Top