ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 9

9     தன் காதல் மச்சக்கன்னியை காண தன் செல்லாக்காசு அல்லகைகளை விட்டுவிட்டு தன் ஜாக்குவாரில் பறக்க ஆரம்பித்தான் கதிர் கைத்தறி நகரை நோக்கி கதிர்…   இது காதலா? வெறும் ஈர்ப்பா? என்று அவனுக்கு தெரியவில்லை. பார்த்தவுடனே அவனுக்குப் பிடித்தது அவளை.. இன்னும் பார்க்க பார்க்க பிடிக்குமா? இது வாழ்வுக்கு ஒத்து வருமா? என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. எனக்கு பிடிச்சது அவ்வளவுதான்!!   காதல் என்று வந்தால்.. காரண காரியங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது!! […]

எங்கு காணினும் நின் காதலே… 9 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 8

8     நிவேதிதா குரங்குகளின் சேட்டையில் அலறி அடித்துக் கொண்டு ஓட.. காரை பார்க் செய்ய சென்ற வசீகரன் அபிஷியலாக வந்த காலை அட்டெண்ட் செய்து அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தான், இவளை சற்றும் கவனிக்காமல்..   ஒருவேளை கவனித்திருந்தால்.. ஹீரோவாகும் வாய்ப்பு கொஞ்சமேனும் கிட்டியிருக்கும்.. அஸ்கு புஸ்கு.. அதுக்கெல்லாம் விடுவோமா என்ன??   நிவேதிதா அலறியடித்துக்கொண்டு ஓட, சேட்டை செய்யும் குட்டி ஹனுமானுங்களோ தங்களுக்கு தேவை பொரி தானே ஒழிய பொண்ணு இல்லை என்று தெளிவாக

எங்கு காணினும் நின் காதலே… 8 Read More »

ei5KQWC72213

பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 1,2&3

பூந்தோட்ட காதல்காரா!! (காதல் இளவரசி) விஷ்ணு ப்ரியா  காதல்காரா-1   அது சென்னையின் அனைத்து விதமான மாந்தர்களும் தத்தம் தேவைகளுக்காக வந்து போகும்.. பிரபலமான மால்!!   அம்மாலின் உயர் மாடிக் கட்டடத்திற்குள், அமையப்பெற்றிருந்த பல்பொருள் அங்காடியொன்றில் தான் நின்றிருந்தாள் அவள்.    நம் கதையின் நாயகி!! பூஜா.    அவளைப் பார்த்த கணமே.. அவளது ஆடையை வைத்து, அவளை ‘அல்ட்ரா மாடர்ன் யுவதிகள்’ என்று வரையறுத்து விட முடியாவிட்டாலும், ‘மாடர்ன் யுவதி’ என்னும் வட்டத்தில் சேர்க்கக்கூடியதாக

பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 1,2&3 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 7

7   மதுரையின் முக்கிய பகுதியான சிம்மக்கல்லில் அமைந்திருக்கும் மிகப் பெரிய வீடு அது!! அழகுசுந்தரத்தின் வீடு!! அந்த காலக் கட்டிடக்கலையும் இக்கால நவீன வசதிகளையும் சேர்த்து பிரம்மாண்டமாக இருந்தது. அதன் இரண்டாம் மாடியில் இருக்கும் பால்கனி போன்ற அமைப்பில் தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து யோசனையில் மூழ்கியிருந்தாள் நிவேதிதா.   கல்லூரி நாட்களில் சிறகடித்துப் பறந்த காலத்தை தான் நினைத்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு அழகான தருணம்.. எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக சுற்றி பறந்த காலம்..

எங்கு காணினும் நின் காதலே… 7 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 6

6     ஆமாம் நான் தான் செய்தேன் என்றான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பஞ்சாயத்தார் முன்னிலையில் வெற்றி வேந்தன்!!   சிங்கம் சிக்கிடுச்சு என்று மனதுக்குள் குதூகலித்த மருதுவோ.. “பார்த்தீய்ங்களா ஐயா.. அவன் வாயாலேயே அவனே ஒத்துக்கிட்டான். எங்க வீட்டு பொண்ண கடத்திட்டு போய் தப்பு செய்ததுமில்லாமல் அத நெஞ்சை நிமிர்த்தி கிட்ட வேற சொல்லுறான். வெள்ளையுமா சொள்ளையுமா சுத்தினாலும் உள்ளுக்குள்ள இருப்பதெல்லாம் வெறும் கசடு தானு இதோ நிரூபிச்சிட்டான்ல.. இவனை எல்லாம் சும்மா விடாதீய்ங்க” என்று

எங்கு காணினும் நின் காதலே… 6 Read More »

error: Content is protected !!
Scroll to Top