கள்ளழகனின் அழகி
பகுதி 5
22 – ஆடி அசைந்து வரும் தென்றல்
அப்படியே இருவரும் உறங்கிவிட…. மதியத்திற்கு மேல் தேவர்ஷி தான் முதலில் கண் விழுத்தாள். சோர்வு பசி… உடல் சக்திக்கு உடனடியாக எதாவது வயி்றுக்கு போட வேண்டும். அனிவர்த்தை எழுப்பினாள்.
“வர்தா… வர்தா…”
தூக்கத்திலேயே புரண்டு அவள் இடையில் கை போட்டு அவளை அணைத்து…
“என்ன பேபி.. அடுத்த இன்னிங்க்ஸ் போலாமா..”
“எனக்கு சாப்பிடனும்..”
நன்றாக கண்விழித்து மணியை பார்த்தான். மணி மூன்று…
டைனிங்கு கால் பண்ணி உணவை ஆர்டர் கொடுத்தான். இருவரும் ப்ரஷாகி வரவும் உணவும் வந்துவிட… ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு கொண்டு சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் அவன் அடுத்த ஆட்டத்திற்கு தயாராக..
இவளோ..” வர்தா.. வீட்டிற்கு போகனும்..”
“போகலாம் பேபி.. நைட் போகலாம்..”
“இல்லல்ல.. லேட்டா போனா வீட்டுல திட்டுவாங்க.. இப்பவே போகனும்”
“போகலாம் குட்டிம்மா..ஒரு எட்டு மணிக்கு கொண்டு போய் விட்றுவேன்..” என தாடையை பிடித்து கொஞ்ச.. அவன் கையை தட்டி விட்டு…
“ஐயோ.. அவ்வளவு லேட்டாவா… அது எல்லாம் வேண்டாம் இப்பவே போகனும்..”
“சரி.. ஒருஆறு மணி போல போகலாம்..” என்றான் சமாதான படுத்தும் விதமாக..
அவள் எங்கு ஒத்து வந்தாள். அவனும் வித விதமாக தன் வித்தையை காண்பித்து அவளை தன்னோடு இன்னும் சற்று நேரம் இருத்திக் கொள்ள பாரக்க…
அவளோ ஆத்தா வையும் சந்தைக்கு போகனும் காசு கொடு மாடுலேஷன்லயே… வீட்டுக்கு போகனும் என அதையே கீறல் விழுந்த ரெக்கார்ட் போல திரும்ப… திரும்ப படிக்க…
அனவர்த்தால் அவளை சமாளிக்க முடியாமல்…
“கிளம்புடி… இனி எங்கயாவது உன்னை கூப்பிட்டனா பாரு.. எப்ப பாரு வீட்டுல திட்டுவாங்க இதையே சொல்லிகிட்டு.. சரியான பட்டிகாட்டு குடும்பம் போல.. போ.. கிளம்பு..வீட்டுக்கு போய் தின்னுட்டு தூங்க போற..அதுக்கு இத்தனை ரகளை..” என கத்த..
ஒன்றும் பேசாமல் கிளம்பி தயாராக நின்றாள். திட்டியும் கிளம்பி நின்றவளை பார்த்தவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வர… ஒன்றும் பேசாமல் அவனும் தயாராகி வந்தவன் அவளை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டான்.
காரில் அமைதி..இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவனோ கோபத்தில்.. இவளோ அவனின் கோபத்தை கண்டு பயத்தில்… அவனின் கோபத்தின் அளவை காரின் வேகத்தில் காட்டினான். தேவர்ஷியை வழக்கமாக இறக்கி விடும் இடத்தில் இறக்கி விட்டவன்.. எதுவும் பேசாமல் காரை வேகமாக கிளப்பி கொண்டு சென்றுவிட்டான்.
தேவர்ஷிக்கோ அழுகை வருவது போல இருக்க.. அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு வீடு வந்தாள். தாயின் கேள்விகளுக்கு எதோ சொல்லிவிட்டு மதியம் சாப்பிட்டதுக்கே பசியில்லை என சொல்லி தனது அறையில் வந்து கதவை அடைத்து தாழிட்டவள்…
அவனுக்கு அழைக்க..அவன் எடுக்கவில்லை. மீண்டும் அழைத்துப் பார்த்தாள். வாட்சப்பில் மெசேஜ் அனுப்ப.. எதற்கும் அவனிடம் பதில் இல்லை. ஒரு கட்டத்தில் அவன் போனை அணைத்து வைத்திருப்பதாக வரவும் சோர்ந்து போய் அழுகையில் கரைய ஆரம்பித்துவிட்டாள்..
அழுகைகள் சலுகைகளாய் இனி நீளுமே!!! அம்மணி… நல்லது நல்லதை தரும்.. அல்லது என்ன தரும்???
அழுதழுது அப்படியே உறங்கிவிட்டாள். காலையில் இமைகளை பிரிக்க முடியவில்லை. கண்கள் சிவந்து இமைகள் தடித்து முகம் வீங்கி பார்க்கவே பரிதாபமக இருந்தாள். எழுந்து குளித்து ஆபிஸ் செல்ல தயாராகி வந்தவளை பாரத்து வீட்டினர் பதறி போயினர்.
கௌசல்யா பதறி போய்”தேவாம்மா.. என்னடா காய்ச்சல் அடிக்குதா..” என கழுத்தை தொட்டுப் பார்ததார். லேசாக கணகணப்பும் இருக்கவே..
“உடம்பு சூடு லேசா இருக்கு.. லீவ் போட்டுட்டு டேப்லெட் சாப்பிட்டு தூங்குடா..”
‘என்னது லீவ் போடறதா.. வர்தாவை பார்ககனுமே.. அவனை சமாதனப்படுத்தனுமே..’
“இல்லம்மா.. இன்னைக்கு முக்கியமான ஒர்க் இருக்கு.. போயே ஆகனும்..”
“தேவா பாப்பா.. அம்மா சொல்லறத கேளு.. உடம்பு முடியாம எப்படி வேலை செய்வ…” மகள் மறுக்கவும் தானும் வற்புறுத்தினார் திருகுமரன்.
“இல்லப்பா.. டேப்லெட் போட்டுகிறேன். ஆபிஸ் போய்தான் ஆகனும்..”
பெற்றவர்கள் என்ன சொல்லியும் கேளாமல் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு ஒரு பேரசிட்டமலையும் விழுங்கி விட்டு அடமாக கிளம்பிவிட்டாள்.
அனிவர்த் அவளுக்கு முன்பு வந்திருக்க… அவனை கண்டதும் ஓடி போய்…
“வர்தா சாரி… “
அவன் இவளை கண்டு கொள்ளாமல்.. காது கேளாதவன் போல தன் வேலையை செய்து கொண்டிருக்க… இவளுக்கு கண்களில் நீர் தேங்கிவிட்டது. அவளும் சிறிது நேரம் நின்று பார்த்தாள். ஒருத்தி நிற்கிறாளே என்று அவன் சிறிதும் இளகவில்லை.
திரும்பி அவனை பார்த்து கொண்டே தனது கேபினுக்கு வந்தவள் வேலை செய்ய முனைய.. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அடிக்கடி அவனையே தவிப்போடு பார்தது கொண்டிருந்தாள்.
அவள் பார்க்காத போது அவளை பார்ததிருந்தவன் அவளின் தவிப்பை அறிந்து தான் இருந்தான். கண்கள் முகம் எல்லாம் வீங்கி பார்க்க பாவமாக இருந்த போதும்..
‘உன்னை எல்லாம் இப்படி தாரட்டுல விட்டா தான்டி வழிக்கு வருவ..’ என கறுவிக் கொண்டான்.
மதிய உணவை இருவரும் எப்போதும் சேர்நதே உண்பர். இன்று அவளை அழைக்காமல் தன் பெர்ஷனல் அறைக்கு சென்றுவிட்டான். அவன் கூப்பிடாமல் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. சாப்பிடாமல் டேபிளில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.
சாப்பிட்டு வந்தவன் அவள் கையில் தலையை தாங்கி படுத்திருப்தை பார்த்தவனுக்கு மனம் இளகியது. அடுத்த நொடி ‘வேண்டாம் இப்ப இவகிட்ட பேசினா.. இவள் நேத்து மாதிரி என் பேச்சை கேட்கமாட்டா.. இவளை கொஞ்சம் பயமுறுத்தி வைக்கனும்..” என நினைத்து அவளை சட்டை செய்யாமல் தனது வேலையில் மூழ்கி போனான்.
அவன் சாப்பிட்டு வந்தும் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்கவும் அழுகை வந்தது. அழுது கொண்டே அப்படியே தூங்கிவிட்டாள். சிறிது நேரம் கழித்து பார்த்தவன் அவள் தூங்குவதை கண்டு பல்லை கடித்தான்.
‘என்ன ஒரு கொழுப்பு .. கொஞ்சம் கூட வருத்தமே இல்லாம தூங்கறத பாரு.. இருடி இன்னும் உன்ன சுத்தல்ல விடறேன்..’
அவள் தூங்குவதை எரிச்சலை கிளப்ப.. வேண்டும் என்றே பேப்பர் வெயிட்டை வேகமாக கீழே போட்டான்.
அந்த சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து கண்ணை கசக்கி என்ன எங்க சத்தம் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அனிவர்த் அவளை முறைத்து கொண்டிருந்தான். அவனை பார்க்கவும் பயம் எடுத்து கொண்டது தேவர்ஷிக்கு..
அவன் தன்னிடம் பேசாமல் தன்னால் நிம்மதி கொள்ள முடியாது என உணர்நதவள்.. கொஞ்சம தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனருகே சென்றாள்.
“வர்தா.. ப்ளீஸ் வர்தா.. பேசுங்களேன்..” கெஞ்சுதலாக..
அங்கு ஒருத்தி இல்லாததை போலவே அவனிருக்க.. படாரென அவனின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தாள்.அவனின் முழங்கால்களில் தன் கைகளை ஊன்றி.. அண்ணாந்து அவனை பார்த்தாள். அவள் கண்கள் அவளின் காதலின் வலியை தாங்கி நின்றது.
அவள் என்ன செய்கிறாள் என அமைதியாக அவளை பார்த்துக கொண்டிருந்தானே தவிர.. மனம் இளகவில்லை.. இன்னும் சொல்ல போனால் அவள் தன் முன் மண்டியிட்டு அமர்ந்தது அவன் மனதில் சின்ன சந்தோஷம் தான்.
“சாரி.. தப்பு தான் மன்னிச்சிடுங்க.. இனி நீங்க என்ன சொனானாலும் கேட்கறேன்.. ப்ளீஸ் பேசுங்களேன்.. நீங்க பேசாம இருந்தா.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ப்ளீஸ் பேசுங்க..” என காலில் முகம் புதைத்து அழுக..
அவள் அழுகை அவன் கோபத்தை கொஞ்சம் தணிய வைக்க..
“சரி.. சரி..எழுந்திரு..”
அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் சமாதானம் ஆகிவிட்டனா.. என சந்தேகமாக பார்க்க..
“இனி எப்பவும் நான் என்ன சொல்லறனோ அதை தான் கேட்கனும்.. செய்யனும் புரிஞ்சுதா..”
“கண்டிப்பா.. நீங்க சொல்றபடியே செய்யறேன்..” என்றாள் தணிவாக…
அவளின் கண்களை துடைத்து விட்டு கைகளை பிடித்து எழுப்பி தன் மடியில் அமர்த்தி…
“நான் தான் நைட் கொண்டு போய் விட்டுடறேன் சொன்னேன்ல குட்டிம்மா.. நீ எதுக்கு அப்படி அடமா போகனும்னு நின்ன.. அதான் எனக்கு கோபம்.. எனக்கு இருக்கற அஃபெக்ஷன் உனக்கு இல்ல… அதான் எப்ப பாரு என்னை விட்டு போறதுலயே குறியா இருக்க..” என அவளை குறை சொல்லி கொண்டிருந்தான்.
இவன் மொத்தமாக ஒரு நாள் அவளை உதறி எறிந்து விட்டு போகப் போவது தெரியாமல்.. வயசு பெண் நேரத்திற்கு வீட்டுக்கு வர வேண்டும் எல்லா குடும்பத்திலும் சொல்வது தானே அதற்காக தானே அவள் போக வேண்டும் என்றாள். அது புரியாமல் அவளை குற்றவாளி ஆக்கி கேட்டு கொண்டிருக்கிறான். அது சரி அக்கா தங்கை இருந்து அவர்களோடு வளரந்திருந்தால் அவனுக்கு அது எல்லாம் தெரிந்திருக்கும். ஒற்றை பிள்ளையாக இருந்தவனுக்கு தேவர்ஷியின் கஷ்டம் தெரிய வாய்ப்பில்லை.
‘நான் உன்மேல உயிரா இருக்கேன். அதை சொன்னால் உனக்கு புரியுமா.. அதான் எனக்கு தெரியல..’ என நினைத்தவள் அதை அவனிடம் சொல்லவில்லை ஏதாவது சொல்லி மறுபடியும் மலையேறிவிட்டாள் என்ற பயத்தில் அவன் சொல்வதற்கு தலையை மட்டும் அசைத்தாள்.
“இல்லை.. அப்படி எல்லாம் இல்ல..”என்றாள்.
“சரி விடு… லஞ்ச் சாப்பிடவே இல்ல தான.. போ சாப்பிடு” என்றவன் அவளை பின்புறமாகவே அணைத்து இதழ் முத்தமிட்டே அனுப்பி வைத்தான்.
தேவர்ஷிக்கும் கவலையில் இவ்வளவு நேரம் தெரியாத பசி.. இப்போ வாட்டி எடுக்க… தன் லன்ச் பாக்ஸை திறக்க.. காலையில் கொண்டு வந்த உணவு கெட்டு போயிருந்தது. முகத்தை சுழித்து மூடி வைத்தாள். அவளையே பாரத்து கொண்டிருந்தவன் உடனே போன் பண்ணி கேன்டீனில் சூடாக என்ன இருக்கு கேட்டு கொண்டு வர சொன்னான்.
அட்டென்டர் வந்து அனிவர்த டேபிளில் வைத்து விட்டு போக.. அவனே உணவை எடுத்து சென்று தேவர்ஷியிடம் கொடுத்தான்.
“இந்தா.. இதை சாப்பிடு..”
அவனின் கரிசனத்தில் அவளால் சந்தோஷப்பட கூட முடியவில்லை. வீட்டிற்கு தெரியவும் கூடாது. இவனும் மனம் சுணங்ககூடாது என்ன செய்வது என்ற கவலை தான் பெண்ணை அரித்துக் கொண்டிருந்தது.
அவள் சாப்பிடும் வரை அங்கேயே நின்றான். அவளுக்கு தான் டென்ஷன் ஆனது. அள்ளி திணித்து ஒருவழியாக சாப்பிட்டு முடித்தாள்.
அந்த வாரம் முழுவதும் அனிவர்த் தன் கோபத்தை விடுத்து எப்பவும் போல அவளிடம் அன்பாகவே நடந்துகொண்டான். வாரஇறுதி நெருங்கவும் தேவர்ஷிக்குள் பயம் பிடித்துக் கொண்டது. எங்கே…எத்தனை நாள் என…
அந்த வாரம் மட்டுமில்லாமல் அதற்கு அடுத்த இரண்டு வாரங்களும் அனிவர்த் அவளை எங்கும் கூப்பிடவில்லை. அந்த வாரம் உடனே வேண்டாம் அவளை சுத்தல்ல விட்டு பின்னாடியே வர வைக்கனும் அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டான். அடுத்தவாரம் நேர்த்திகடன் என கங்கா அனிவர்தை கட்டயமாக குலதெய்வ கோவிலுக்கு அழைத்து சென்றுவிட்டார். அதற்கு அடுத்த வாரம் பிசினஸ் கம்யூனிட்டி பார்ட்டி.. மூன்று வாரங்கள் இப்படியே ஓடிவிட..
இந்த மூன்று வாரங்களும் தேவர்ஷிக்கு எப்ப? எங்கே கூப்பிடுவானோ? என படபடப்புடனே திக் திக் என நகர்ந்தது. அதுவே ஒரு மன அழுத்தத்தை கொடுத்தது.
அனிவர்தோ அவளை சுத்தல்ல விட நினைத்தவனுக்கு ஒரு வாரம் கூட தாக்குபிடிக்க முடியவில்லை. அவளில்லாமல் அவளை பார்க்காமல்.. தீண்டாமல் ஒன்றும் முடியவில்லை… பல மலர் தாவும் வண்டு தான்.
ஏனோ தேவர்ஷி என்னும் மலரின் தேனில் மதி மயங்கி அங்கேயே தேங்கிவிட்டான். தேவர்ஷி மலரின் தேனை பருகாமல் பைத்தியமாகி போனான். டிராகன் போல மோக அனல் மூச்சு தேகமெங்கும் சுட்டது..
அந்நிலையிலும் அவனின் நாட்டம் வேறு பெண்களிடம் செல்லவில்லை… பாவம் அது தான் காதல்! என அவன் உணரவில்லை.
மூன்று வாரங்கள் என்பது அவனுக்கு நேரங்களாக இருந்தது.
நான்காவது வாரம் அனிவர்த் ஆரம்பித்துவிட்டான். சனிக்கிழமை ஏதோ அரசு விடுமுறையாக இருக்க.. இரண்டு நாள் ட்ரிப்கு பிளான் பண்ணினான். அதை தேவர்ஷியிடம் சொல்ல..
“இரண்டு… நாளா..” என திணறினாள்.
“என்ன மென்னு முழுங்கற..”
“இல்ல.. இரண்டு நாளா.. காலையில் போய்ட்டு ஈவ்னிங் வந்திடலாமே..” பயத்தில் தயங்கி தயங்கி பேச..
“ஏன்..” என்றான் கோபமாக…
“இல்லை.. சட்டர்டே வீட்டில் பங்ஷன்..” சட்டென தோன்றியதை சொன்னாள்.
அவளை சந்தேகமாக பார்த்து “என்ன பங்ஷன்” என்றான்.
ஒருநிமிடம் என்ன சொல்ல என தெரியாமல் முழித்தாள்.
“என்ன.. முழிக்கிற…என்ன பொய் சொல்றதுனா..”இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவாறு..
“அத்தை வீட்ல பங்ஷன்…” என இல்லாத அத்தையை இழுத்து விட்டு தப்பித்து கொள்ள பார்த்தாள்.
“உண்மை தானே.. பொய்யில்லயே…” நம்பாமல்…
“சத்தியமா..”என்றாள் அழுத்தமாக..
“சரி சன்டே ஓகே தான..” என்றான்.
“ம்ம்ம்” என தலையை உருட்டினாள்.
“நைட் தான் ட்ராப் பண்ணுவேன்..” மிரட்டலாக…
அதற்கும் தலையை உருட்டினாள். வீட்டில் ஏதாவது சொல்லி சமாளித்து கொள்ளலாம் என நினைத்தாள்.
21 – ஆடிஅசைந்து வரும்தென்றல்
தேவர்ஷி ஞாயிறு அன்று நண்பர்களோடு வெளியே சென்று வருவதாக சொல்லி விட்டு அனிவர்த்தோடு மகாபலிபுரம் சென்றாள். இப்படி எப்பாவது செல்வது தான் என்பதால் திருகுமரனும் கௌசல்யாவும் மகளின் திருட்டுதனம் தெரியாமல் அனுப்பி வைத்தனர்.
அனிவர்த் அன்று இறக்கிவிட்ட மெயின் ரோட்டிலேயே தேவர்ஷிகாக காத்திருந்தான்.அவள் வரவும் பிக்கப் பண்ணிக்க… மகாபலிபுரம் நோக்கி கார் சென்றது. காரில் அமைதி.. தேவர்ஷிக்கோ பெற்றவர்களிடம் பொய் சொல்லி வந்ததால் ஒரு பதைபதைப்பு..
“வர்ஷிம்மா… என்ன ஒன்னும் பேசாம வர…”
“இல்ல.. கொஞ்சம் டென்ஷன்.. “
“என்ன டென்ஷன்.. என்னோடு வரதில..”
“இல்ல.. உங்களோடு வரதுல ஒன்னும் இல்ல.. வீட்ல பொய் சொல்லிட்டு வந்தது தான்..”
“எதுக்கு பொய் சொல்லனும்.. ப்ரெண்ட் கூட போறேனு சொல்லிட்டே வரலாமே..”
“அப்படி தான் சொல்லிட்டு வந்தேன்..”
“அப்புறம் என்ன பொய்னு சொல்லிட்டு இருக்க…”
“இல்லை ப்ரெண்ட்ஸ் கூட சினிமா போய்ட்டு மால் போய்ட்டு வரேன் என சொன்னேன். உங்க கூட மகாபலிபுரம் போறேனு சொல்லலை.. சொன்னா அவ்வளவு தான் கொன்னே புடுவாங்க..”
அவள் பேச்சில் அனிவர்த் ஏகத்திற்கும் கோபம் வந்தது.
“அப்படி எதுக்கு பொய் சொல்லனும். என் ப்ரண்ட் கூட டேட்டிங் போறேன்னு சொல்ல வேண்டியது தானே..”
“அப்படி எல்லாம் சொல்ல முடியாது.. “
“ஏன் சொல்ல முடியாது..”என்றான் கோபமாக..
“இது என்ன உங்க ஜெர்மன்னு நினைச்சிங்களா.. இங்க எல்லாம் அப்படி சொல்ல முடியாது தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டுருவாங்க…” என்றாள் சின்ன குரலில் அவன் கோபத்தில் பயந்து…
“அப்படி ஒன்னும் பொய் சொல்லிட்டு நீ ஒன்னும் வர வேண்டாம்.. போடி..” என்றான் ஆத்திரத்தில் காரை ஓரங்கட்டி நிறுத்தினான்.
என்ன தான் ஜெர்மன்ல படித்தாலும் பிறந்து வளர்ந்த கலாச்சாரத்தை மறந்தா போவான்..
“நீ கிளம்பு இறங்கு..” அவளை பிடித்து தள்ளினான்.
அவன் தள்ளிய வேகத்தில் கதவின் கண்ணாடியில் தலை மோதிட..
“ஆ…ஸ்ஸ்..” என நெற்றியை பிடித்துக்கொண்டு வலியில் கத்தினாள்.
அவள் கத்தவும் தான் தன் தவறை உணர்ந்தவன்….
“ஏய் வர்ஷி…. என்னாச்சு..”அவளை நெருங்கி.. கன்னத்தை பிடித்து நெற்றியை பார்க்க…
அவனின் கையை தட்டிவிட்டாள் இப்போது இவள் கோபம் கொண்டு..
“டேய் குட்டிம்மா… சாரிடா.. ஏதோ கோபத்தில்… தப்பு தான்டா.. சாரி..” என தாடையை பிடித்து சாமாதனமாக பேசி நெற்றியை பார்க்க.. லேசாக வீங்கியிருந்தது. பெருவிரலால் தடவி விட்டு வாயை குவித்து மெல்ல ஊதினான்.
சில்லு என்று அவன் வாய் வழி வந்த காற்றால் பெண்ணுள் ஒரு சிலிர்ப்பு ஊடுருவி செல்ல… கண்ணை மூடி.. அவன் தாடையை ஏந்தி பிடித்திருக்க.. லேசாக உதடு பிரிந்து மூச்சை இழுத்து பிடித்து உணர்வுகளை அடக்க முயல…
பிரிந்திருந்த உதடுகள் அவனை ஏதோ செய்ய… மெல்ல மேல் உதடு கீழ் உதடு இரண்டையும் கவ்வி இழுத்து பிடித்தான். மொத்தமாக இழுத்து சப்பி சுவைத்தான்.
பெண்ணோ அவனின் ஜாலத்தில் காதல் மயக்கம் கொண்டு சட்டை காலரை இறுக்கி பிடித்து நெருக்கத்தை அதிகப்படுத்த… இருவரின் இருக்கைக்கு நடுவில் இருந்த இடைவெளியால் அவனுக்கு அவளை நெருங்க வாகாக அமையவில்லை. அவளை இழுத்து அழுத்தமான் ஆழமான முத்தத்தை பதித்தவன்..
“ஸ்வீட் கேர்ள்..” என கன்னம் தட்டி காரை எடுத்தான். அவனின் எண்ணத்தை ஈடுகட்ட காரும் வேகமெடுத்தது.
மகாபலிபுரம் சென்றனர். அது பிரைவேட் பீச்சுடன் கூடிய் ரிசார்ட்ஸ். அப்படி பட்ட ரிசார்ட்டை புக் செய்திருந்தான் அனிவர்த். அதன் பிரம்மாண்டத்தில் சற்று மிரண்டு போனாள் தேவர்ஷி. அவர்கள் வீட்டிலும் டிரிப் செல்வார்கள் தான் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவார்கள் தான். ஆனால் அதை எல்லாம் சாதாரணம் என சொல்லும் அளவுக்கு மூலை முடுக்கு எல்லாம் பணத்தின் செழுமையில் இழைக்கப்பட்டிருந்தது இந்த ரிசார்ட்.
தங்களுக்கான ரிசார்ட் வந்ததும் அனிவர்த் சில சாட் அயிட்டங்களும் ஹாட் ட்ரிங்சும் ஆர்டர் செய்தான். ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டிருந்தவள் பின்புறம் இருந்த நீச்சல் குளத்தை பார்த்து கொண்டிருந்தாள். போனில் ஆர்டர் சொல்லி விட்டு தேவர்ஷியை தேடி வந்தான்.
“வர்ஷி.. உனக்கு நீச்சல் தெரியுமா..” என கேட்க..
“ஓ.. தெரியுமே..” என்றாள் உற்சாகமாக..
அனிவர்த் அவளை ஆச்சரியமாக பார்ததான். இவள் வீட்டில் வசதி குறைவாக இருக்கும் போது இது எல்லாம் எப்படி கற்று கொடுத்தார்கள் என..
“என்ன அப்படி பார்க்கறிங்க.”
“இல்ல… உங்க வீட்டில எப்படி ஸ்விம்மிங் கிளாஸ்லாம் அனுப்புச்சாங்க..”
“என் தாத்தா பொட்ட புள்ளைக்கு எதுக்கு இது எல்லாம் என திட்டினாரு தான்.. ஆன் எங்கப்பா என் ஆசைக்காக தாத்தாவை பேசி சரி பண்ணி அனுப்பினாங்க..” என சொல்லியவள் அன்று அவள் தாத்தா பேசியதை நினைத்து இன்றும் கோபம் வந்தது.
“பொட்டபுள்ளைக்கு எதுக்கு நீச்சல் எல்லாம்.. நீச்சல் டிரஸ் எல்லாம் போட வேண்டி இருக்கும். நம்ம குடும்ப கௌரவத்துக்கு சரி வருமா..”
“பாட்டு கிளாஸ் டான்ஸ் கிளாஸ் போகட்டும்..” என சொல்ல..
திருகுமரன் தான் வழக்கம் போல தந்தையை மகளின் ஆசைக்காக பேசி சரி கட்டினார்.
எப்படி தான் அப்பா சமாளிக்கறாரோ.. அந்த பெரிசை..” என பல்லை கடித்தாள்.
“ஏய்..என்னாச்சு..” அவள் முகத்தை பார்த்து கேட்டான்.
“ஒன்னுமில்ல..” என்றவள் இதை சொன்னால் கோப்ப்படுவானோ என..
“இந்த பூல் நல்லா இருக்குல்ல.” என பேச்சை மாற்றினாள்.
“ஸ்விம் பண்ணலாமா..” என்றான்.
“ ப்ச்ச்.. ஸ்விம் சூட் இல்லையே..” என்றாள் சோகத்தில் முகத்தை பாவித்து…
“அதனால் என்ன.. இங்கேயே ஷாப்பிங் பண்ணலாம்.. வா வாங்கிக்கலாம்” என அவளை அழைத்து கொண்டு கிளம்பினான். அவன்ஆர்டர் செய்தவற்றை சில மணி நேரம் கழித்து தான் சொல்லும் போது கொண்டு வருமாறு சொல்லவிட்டே கிளம்பினான்.
அவனோ பிகினியாக பார்க்க.. அவன் எடுத்தவை எல்லாம் பார்த்தவளுக்கு அச்சோ இதை எப்படி போடுவது என ஒரே கூச்சமாகி போனது. வேண்டாம் என மறுக்க…
“ஏண்டி.. உனக்கு நல்லா இருக்கும்..”
“ச்சீ.. இதை எப்படி போடறது.. எனக்கு வெட்கமா இருக்கு..”
“அது ப்ரைவேட்.. அங்க யாரும் வரமாட்டாங்க…நானும் நீயும் தான..என்கிட்ட என்ன வெட்கம்”
அவனுக்கு என்ன தெரியும் அவனின் பார்வை தான் பாவையவளை வெட்கத்தில் கொன்று தின்னும்…
“இல்லை வேண்டாம்.. நான் இது எல்லாம் போட்டதில்லை… போடமாட்டேன்..” என பிடிவாதமாக மறுத்து ப்ராக் மாடல் ஸ்விம் சூட் எடுத்துக் கொண்டாள்.
அனிவர்த் தனக்கு பிடிக்கவில்லை என்பதாக முகம் திருப்பி நின்றான். அவனை இறைஞ்சுதலாக பார்க்க… சரி போ என்பதாக விட்டுவிட்டான்.
தங்கள் ரிசார்ட்கு வந்தவுடன் அனிவர்த் தேவர்ஷியிடம் ஸ்விம் சூட்டை போட்டு விட்டு வரசொன்னவன்.. தானும் தன் சட்டு பேண்ட் உள் பனியனையிம் களைந்து விட்டு மினி டிரங்கோடு மட்டுமே இருக்க… அதற்குள் அவன் ஆர்டர் செய்ததை வந்திருக்க.. அழகான கிளாசில் பொன் திரவத்தை ஊற்றி மிக்சிங் செய்தவன் ரசித்து ருசித்து ஒரு சிப் செய்தவன் போர்க்கில் பழத்துண்டுகளை குத்தி எடுத்து லாவகமாக சாப்பிட..
அந்த உடையை மாற்றியவள் அவன் முன் வர சங்கடப்பட்டவளாக தயங்கி தயங்கி படுக்கை அறையில் இருந்து அனிவர்த் இருந்த முன் அறைக்கு வந்தவள்… பார்த்ததும் சற்று அதிர்ந்து தான் போனாள் தேவர்ஷி. அவன் குடிப்பான் என்று தெரியும் ஆனால் தன்னோடு இருக்கும் போது குடிப்பான் என நினைக்கவில்லை. பொன்முடி போயிருந்த போது அவன் அந்த மாதிரி எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதாலும்.. அவள் வீட்டில் தாத்தாவின் கண்டிப்பால் அவள் வீட்டு ஆண்களுக்கு அந்த பழக்கமில்லை என்பதாலும் அவளுக்கு இது புதிது என்பதால் பதட்டமாக இருந்தது. குடிப்பவர்களை கண்டால் சற்று பயம் தான் அவளுக்கு..
பயத்துடன் அவனை பாரக்க.. அவன் அது எல்லாம் எங்கு கவனித்தான். அவளை பார்த்ததும்..
“ஹேய்… செக்ஸியா இருக்கடி..” என ஒரு மாதிரியாக சிரித்து கண்ணடிக்க…
அவளோ எச்சில் கூட்டி விழுங்கினாள்.
“வா.. பூல் போலாம்..” என கை நீட்டி அழைக்க..
அவள் தடுமாறி நிற்க… அவனே அவளை நெருங்கி இடையில் கை போட்டு பக்கவாட்டில் இருந்த கண்ணாடி தடுப்பிற்கு அந்த பக்கம் இருந்த நீச்சல் குளத்திற்கு அழைத்து சென்றான். ஒரு கையில் அவள்.. மறு கையில பொன்திரவம்.. நல்லா அனுபவித்து வாழ்றடா அனிவர்த்..
கிளாசை நீச்சல் குளத்தின் திட்டில் வைத்து விட்டு … பயம் படபடப்பு என கலவையான உணர்வில் இருந்த தேவர்ஷியை அணைத்து பிடித்து கொண்டு அவளோடு சேர்ந்து நீரில் குதித்தான். அவளையும் இழுத்துக் கொண்டு தண்ணீரில் விழுவான் என எதிர்பார்க்கதவள் நீரில் மூழ்கி மேலே வந்தவளை கண்டு அவன் உல்லாசமாக சிரிக்க… அனிவர்த் அப்படி ஒரு உற்சாகமாக சிறுவனை போல துள்ளி கொண்டு நீந்தி அவளருகில் வந்தவன் அவளை இறுக்கி அணைக்க.. அவனிடம் இருந்து திமிறி கொண்டு விடுபட்டு.. நீந்தி எதிர்கரைக்கு செல்ல.. அவளை பிடிக்க இவன் செல்ல.. இவள் மீனை போல நழுவி செல்ல… இந்த விளையாட்டு அனிவர்த்துக்கு பிடித்து போனது. அவன் பிடிக்க முயல.. அவள் கைக்கு சிக்காமல் போக்கு காட்ட.. இந்த விளையாட்டு சற்று நீள..
அனிவர்த் கரைக்கு சென்றவன் பொன் திரவத்தை ஒரே மூச்சாக வாயில் சரித்தான். உள்ளே சென்ற திரவம் அவனை உசுப்பேற்ற.. தம் கட்டி தண்ணீரின் அடியில் நீந்தி சென்றான். அவனை காணாமல் தேட.. தீடிரென நீருக்கடியில் இருந்து அவளின் கால்களை பிடித்து இழுத்து தன்னோடு இறுக்கி பிடிக்க.. அவள் அவனிடம் இருந்து விடுபட முயல… அவளின் கால்களை தன் கால்களால் கிடுக்கி பிடி போட்டு அசைய விடாமல் செய்தான்.
அவனிடம்இருந்து தப்பிக்க முடியாமல் போக..
“விடுங்க என்னை..” சிணுங்கியவாறே அவன் தோளில் அடிக்க..
“குட்டிம்மா..” என அவன் குரல் குழைய…
அவனின் குரல் பேதத்தில் அவன் முகம் பாரக்க… அவனின் பார்வையோ நீருக்கு மேலே இருந்த அவள் பாதி உடம்பை மேய்ந்து கொண்டிருந்தது. நீரில் நனைந்த உடைகள் அவளின் நெளிவு சுளிவுகளை எடுப்பாக காட்ட… அவளின் முகத்தில் இருந்து வடிந்த நீர் கழுத்து வழியாக இறங்கி நெஞ்சிற்கு மத்தியில் இறங்கி உள்ளே செல்ல… பார்த்வனுக்கோ காதல் பித்து தலைக்கேற… சட்டேன வாய் வைத்து நீரை உறிஞ்சி இழுக்க… அவனின் மீசையின் குறுகுறுப்பும்.. இதழ் தீண்டலும் அவளின் உடலை தகிக்க… அவனை இறுக்கினாள்.
அவளை அள்ளி தோளில் போட்டு கொண்டு அறைக்கு வந்தவன் படுக்கையில் கிடத்தி அவள் மேலே விழுந்து இறுக்கி அணைத்து அவளை சீராட்டி தன் காரியத்தை சாதித்து கொண்டான். மீண்டும் மீண்டும் அவளை சீராட்டியே சீர் களைய செய்தான். ஒரு கட்டத்தில் அவளால் முடியவில்லை என்ற நிலை வரவும் தான் விலகினான்.
20 – ஆடி அசைந்து வரும் தென்றல்
அவளுக்கு தான் இன்ப இம்சையாக இருந்தது. மெல்ல மெல்ல அவளை ஆட்கொண்டான். தன் ஆளுமைக்கு அடி பணிய வைத்தான். அவனின் ஒவ்வொரு தீண்டலிலும் பூம்பாவை உதிர்ந்து உதிர்ந்து மலர்ந்தாள்.
அந்த காதல் யோகி காட்டிய இந்திர ஜாலங்களில் சின்ன பெண் பித்தாகி போதையாகி மயங்கி போனாள். அவனோ ஆசை மீதூற.. காம பித்து தலைக்கேற… வீறு கொண்டு எழுந்த உணர்வுகளை அவளிடம் செயலாக்க பயந்தான். தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு மென்மையாக கையாண்டான் தன் காதல் கூட்டுக்காரியை…
“குட்டிம்மா.. வர்ஷிம்மா…” முணங்கலும்…
“வர்தா..” சிணுங்கலும் ஜதி பாட..
காதல் பாடங்களின் அனைத்து பக்கங்களையும் அவளுக்கு கற்று கொடுத்து தானும் கரைந்து.. அவளையும் கரைய செய்து.. தன்னிலை மறந்த நிலையில் இரு உயிர்கள் ஓருயிராக…
மலரினும் மெல்லியது காமம் உணர வைத்தான்.
காதலும் காமமும் சரிவிகிதத்ததில் பகிரப்பட.. அங்கே ஒரு உள்ளி விழா ( காமன் பண்டிகை) நிறைவாக நடந்தது.
களைத்து உறக்கியவளை தன் மேல் எடுத்து கிடத்திக் கொண்டு உறக்கம் கொண்டான் அனிவர்த். மாலை மங்கி இருள் சூழ்ந்த வேளையில் அனிவர்த் கண் விழித்தான். தன் மேல் கைகால்களை பரப்பிக் கொண்டு …அவனின் கழுத்துக்கடியில் முகத்தை புதைத்து கொண்டு சற்றே வாயை திறந்து தூங்கி கொண்டு இருந்தாள்.
சற்றே தலையை தூக்கி குனிந்து பார்த்தவன்…உதடுகள் கீற்றாக பிளந்து முன் பல்வரிசை தெரிய.. அவளிடம் காதல் சேட்டைகள் செய்யும் ஆசை எழ… தன் நுனி நாவை லாவகமாக உள்ளே நுழைத்து பல் வரிசையை மெல்ல தீண்டினான்.
அவன் நாக்கின் சில்லிப்பு பட்டதில் விருட்டென்று பயந்து எழுந்து முழித்தாள். தூக்க கலக்கத்தில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை எங்கே.. என்ன…என்று…
“ஹேய்.. ரிலாக்ஸ்டா..” என இழுத்து தன்மேல் போட்டு அணைத்தான். அனிவர்த்தின் கழுத்தை கட்டிக் கொண்டு..
“எதுக்கு இப்படி பண்ண பயந்துட்டேன்..வர்தா..” என்றவளை இறுக்கி அணைத்து முதுகை நீவிக் கொடுக்க…முதுகை நீவிய கைகள் மெது மெதுவாக மேலே கீழே என வருட..
“வர்தா.. “ சிணுங்கியவளை இழுத்து தன் முகத்தோடு முகம் வைத்து நெற்றியில் முட்டி.. மூக்கோடு மூக்கை உரசி.. இதழ் கவ்வி அடுத்த சுற்றுக்கு அச்சாரமிட்டான். காது மடலை மெல்ல கடித்தான். அவள் கூந்தலை இறுக்கி பிடித்தான்.
“ஆ..ஆ..” வலியில் முணங்கினாள்.
கழுத்தை உதடு மடிப்பால் கவ்வி இழுத்தான். பஞ்சு போல் இலகுவானாள்.. கழுத்து கீழே மெல்ல தன் நுனி விரலால் வருடினான். பெண்ணவளுக்கோ தாபம் பற்றி கொண்டது. மெல்லிய கைவிரல்களை முன் பற்களால் கடித்தான். இறகில்லாமல் மிதந்தாள்.. இரண்டு பாதங்களை இருகைகளில் ஏந்தினான். ஒவ்வொரு விரலுக்கும் ஒரு குட்டி முத்தம் வைத்தான். முடிவாக உள்ளங்காலின் மத்தியில் அழுந்த முத்தமிட்டான். உடல் தூக்கிப் போட.. கண்ணாட்டியோ காதல் ஜன்னி கண்டாள். புழுவாய் துடிக்க.. அவளி்ன் துடிப்பை அடக்கும வித்தை தெரிந்த வித்தாரகள்ளனுக்கு மோகன புன்னகை. தன் இல்லாட்டியை தன்னிடம் மயங்க வைத்த வாகை புன்னகை… கந்தனின் வசீகர புன்னகை கண்டு மயங்கி நின்ற வள்ளியாக சொக்கி போனாள்.
இமை சிமிட்டாமல் கண்ணை அகல விரித்து அவனை பார்வையால் தின்று கொண்டிருந்தாள். அவளின் பார்வை வீச்சு தாங்காமல் உணர்ச்சி குவியலாகி போனான். அவளை தழுவி.. தாபம் தாளாமல் அவளை இறுக்கி அணைத்து அவளில் மூழ்கி முத்தாட… போதவில்லை… அவனின் மோகம் எல்லாம் உடைப்பெடுக்க.. தன்னையே கட்டுக்குள் வைக்க முடியாமல்… தேவர்ஷியிடம் வன்மையை காட்டினான். அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் பாவை தான் துவண்டு போனாள். தன்னால் முடியாமல் சற்று திணறினாலும்.. சற்றும் தன் காதல் கண்ணனை விலக்காமல்.. காதல் கைப்பாவையாகி போனாள்.
மோகத்தை அவளிடம் கொட்டி தீர்த்த பின்பு தான் பெண்ணின் நிலை உணர்ந்தான். பற்றுகோல் இல்லாத கொடி போல் துவண்டு கிடந்தாள் இளம்பூவை.. அவள் உடலில் அங்காங்கே லவ் பைட்ஸ்..
‘என்னடா பண்ண வச்சிருக்க..’ என தன்னையே நொந்து கொண்டான்.
“குட்டிம்மா.. கஷ்டப்படுத்திட்டேனா.. சாரிடாமா..” என கவலையோடு முகம் பார்க்க..
சோர்ந்து களைத்திருந்தாலும் அவளின் முகத்தில் சோபையான புன்னகை…. கண்ட அவன் மனம் பேரு உவகை கொண்டது.
அவளிடம் மீ்ட்சி பெற முடியாமல் தவித்தான். அவளின் நிலை கண்டு மருகினான். அவனின் நெஞ்சில் தலை சாய்ந்திருந்தவளுக்கு அவனின் உடல் மொழி புரிய.. எம்பி அவனின் இதழோடு இதழ் சேர்த்தாள்.
“வேண்டாம் குட்டிம்மா.. தாங்கமாட்ட..”
“உங்களுக்கு வேணும் தானே… உங்களுக்காக எதையும் தாங்குக்குவேன்..” அவளாகவே இழுத்து அணைத்தாள். மென்மையாக கையாண்டான் தன் காதல் மனையாளை…
அந்த இரவு நீண்டு கொண்டே சென்றது அவர்களின் காதல் பயணத்தினால்..
இரண்டு நாட்களும் நினைத்த நேரம் கூடி களித்து.. நினைத்த நேரம் சாப்பாடு தூக்கம் என உல்லாசமாக இருந்தனர். திங்கள அதிகாலையிலேயே விமானத்தில் இருந்தனர்.
அனிவர்த் அவளின் கையை தன்உள்ளங்கையில் வைத்து கொண்டு…
“குட்டிம்மா… பிடிச்சிருக்கு தான…”
அவன் எதை கேட்கிறான் என புரிந்தவளுக்கு என்னவோ அவன் முகம் பார்க்க… ஏதோ தடை விதிக்க… தன் விரல் நகங்களை பார்த்வாறு தலை அசைத்தாள் சம்மதமாக…
அனிவர்த்துக்கு இந்த வெட்கம் எல்லாம் புதிது. அவன் பார்த்த பெணகள் எல்லாம் ஆணை வளைக்கும் சாகசம் கொண்டவர்கள்.. போதையை கண்களில் ஏற்றி மயக்கும் கலையில் தேர்ந்தவர்கள். அனிவர்த்துக்கு இது புதிதாக இருந்தது.
ஆணவன் முகம் பார்க்க நாணி தலை சாய்ந்து நிற்கும் பெண்ணை ஏனோ இன்னும் இன்னும் கொள்ளை கொள்ள ஆசை கொண்டான்.
அவள் தோள் சுற்றி கையை போட்டு மெல்ல அவள் உச்சந்தலையில் முத்தம் ஒன்றை பதித்தான். குனிந்து அவள் காதில்…
“என் கூடவே வந்திடறியா.. ப்ளாட் எடுக்கவா..”
பெண் நிமிரவே இல்லை. மறுப்பாக தலை அசைத்தாள்.
என்ன தான் காதலால் இசைந்தாலும்… ஆண் தன் இணைக்கு சமூகத்தை முன் நிறுத்தி கொடுக்கும் அங்கிகாரம் தானே அந்த பெண்ணை கவுரவப்படுத்தும்..
அந்த அங்கீகாரம் இல்லாமல் அவனோடு இணைந்தையே அவளுக்கு பயத்தை கொடுத்தது. ஸ்திரமில்லாத உறவு தானே.. எதுவரை செல்லும்… அதன் பிறகு எதிர்காலம் மிரட்டியது.. என்ன ஆன போதும் இவன் ஒருவனே வாழ்ந்தாலும்.. பிரிந்தாலும்.. ஆனால் தன் காதல் அவனை தன்னை விட்டு நீங்கவிடாது என பெரும் நம்பிக்கை கொண்டாள். மனம் மாறி ஊரறிய கல்யாணம் செய்வான் என தீர்மானமாக நினைத்திருந்தாள்.
குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் அடங்க மறுப்பவனா.. இவளின் நம்பிக்கையை காப்பாற்ற போகிறான்…அவனை பற்றி அறியாத பேதையை துச்சமாக நினைத்து தூசியாக தட்டிவிட்டு செல்லும் போது என்ன ஆவாளோ…
அவளின் மறுப்பு அவனுள் சிறு கோபம் குமிழிட… முகத்தை திருப்பிக் கொண்டான். அவனின் முகத்தை தன் புறம் திருப்பி வாஞ்சையாக வருடி கொடுத்தவள்…
“வர்தா.. வீட்டை விட்டு எல்லாம் வரமுடியாது சொன்னா புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்… நாம இப்ப மாதிரி வெளிய மட்டும் போலாம்..” என்றாள்.
அவள் கெஞ்சவும்.. கொஞ்சம் சமாதானம் ஆனான்.
“சரி வேண்டாம்… ஆனால் நான் சொல்லும் போது என் கூட வரனும்… ஏதாவது சாக்கு போக்கு சொன்ன…. பார்ததுக்கோ..”என மிரட்டினான்.
‘இந்த ஒரு தடவைக்கே..வீட்டில் எத்தனை பொய் சொல்லு சாமளிக்க வேண்டியதா போச்சு.. இன்னுமா…’
“என்ன கேட்டதுக்கு பதில் சொல்லாம யோசிச்சுகிட்டு இருக்க..”
“ம்கூம் ஒன்னுமில்ல.. “
“என்ன வரியா…”
“ம்ம்ம்..வரேன்” என சமாளித்தாள்.
உரிமையற்ற உறவின் பினவிளைவு.. அதன் வீரியம் புரியாமல் அவன் மேல் பித்தாகி அவன் இழுப்பிற்கு சென்று கொண்டிருந்தாள்.
விமானம் விட்டு இறங்கி.. கால் டாக்ஸயில் போய் கொள்கிறேன் என்று சொன்னவளை பிடிவாதமாக தானே கொண்டு விடுவதாக அழைத்து வந்தான்.
இவனோடு சென்று இறக்கினால் வீட்டில் உண்டு இல்லை என ஒரு வழியாக்கிவிடுவார்களே… என்ன செய்வது என யோசித்து கொண்டே வந்தாள்.
தேவர்ஷியின் வீடு இருக்கும் ஏரியாவிற்கு வந்தவுடன்..
“எந்த ஸ்டிரிட்..” என அனிவர்த் கேட்க..
அதுக்குள்ள வந்தாச்சா.. சுற்றியும் பார்த்தாள். ஏரியாவின் மெயின் ரோட்டில் நிற்க…
“நான் இங்கேயே இறக்கிகறேன்” என்றாள்.
“ஏன் வீடு வரைக்கும் கொண்டு வந்து விடறேன்”
“இல்லல்ல.. அது சின்ன தெரு கார் போகாது..” என வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தாள்.
‘கார் கூட போக முடியாத சின்ன தெருவா.. அப்படிபட்ட தெருவிலா இருக்கிறாள். மிடில் கிளாஸ் பேமிலி கூட இல்லயா..’ என நினைத்தான்.
“வர்தா.. நான் இங்கயே இறக்கிக்கவா..”என கேட்க..
“ஓஹோ..சரி இன்னைக்கு ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு ஆபீஸ் வா…” அவளை லேசாக அணைத்து விடுவித்தான்.
தேவர்ஷியும் தலை அசைத்து அவனிடம் சொல்லி விட்டு இறக்கி கொண்டாள். அவன் கார் மறையும் வரை பார்த்திருந்தவள் தன் வீடு நோக்கி சென்றாள்.
வீட்டில் கௌசல்யா இவளுக்காகவே காத்திருந்தார்.
காலிங் பெல் அடித்த உடன் கதவை திறந்த தாயை கண்டு…
“அம்மா..” என கட்டிக்கொண்டாள்.
“ஏன் தேவாம்மா போனதிலிருந்து ஒரு போன் கூட பண்ணல.. “ கவலையாக கேட்க..
“இல்லமா.. அங்க ஒரே மழை கரண்ட் இல்ல.. சிக்னலும் இல்ல..” என பொய் சொன்னாள்.
அதை நம்பிய அப்பாவி கௌசல்யா..” நானும் அப்படி தான் இருக்கும்னு நினைச்சேன்.. போ குளிச்சிட்டு வா.. சாப்பிடலாம்.. டயர்டா இருப்ப.. நாளைக்கு ஆபிஸ் போகலாம் . இன்னைக்கு ரெஸ்ட் எடு..”
சரி என சென்றவள் குளித்து விட்டு சாப்பிட்டு தூங்கினாள் மதிய உணவுக்குகூட எழுந்திரிக்கவில்லை… கௌசல்யாவும் மகளின் திருட்டுத்தனம் அறியாமல் பயண களைப்பு என எழுப்பவில்லை.
அடுத்தநாள் ஆபிஸ் சென்றாள் அனிவர்த் பார்த்ததும் அவளை இழுத்து அணைத்தான்.
“குட்டிம்மா.. நேத்தே நீ இல்லாமல் ஒரே போரிங் தெரியுமா..” என்றான் ஏக்கம் இழையோடும் குரலில்..
தேவர்ஷி உள்ளுக்குள் மகிழ்ந்து போனாள்.’என்னை விட்டு இருக்க முடியாமல் எப்படி தவிச்சு போறாங்க… நம்ம விட்டு எப்பவும் பிரியமாட்டாங்க.. கொஞ்சநாள் போய் கல்யாணத்திற்கு கேட்போம்’
சீண்டலும் சிணுங்கலுமாக அந்த வாரம் ஓடிவிட…. வார இறுதியில் ஞாயிற்று கிழமை மகாபலிபுரம் போகலாமா.. என கேட்டான் அனிவர்த்.
வீட்டில் என்ன சொல்லுவது என தெரியாமல் வேண்டாம் என மறுக்க அவன் கோபம் கொள்ள… அவனின் கோபத்திற்காக சம்மதித்தாள்.
ஏனோ அனிவர்த்தின் மனமும் உடலும் அவளின் அருகாமைக்காக ஏக்கம் கொள்ள… திரும்ப திரும்ப பைத்தியமாக அவளை தேடினான்.
பிள்ளையாரப்பா இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்க கூடாது பா என்று தலையில் கொட்டிக்கொண்டு அவசர அவசரமாக நான்கு தோப்புக்கரணங்களை போட்டு விட்டு மாலையுடன் கோயிலுக்குள் நுழைந்தான் சரவணன் அவன் நேராக அம்மன் சன்னதி சென்று அங்கு உள்ள ஐயரிடம் அவன் வாங்கி வந்த மாலையையும் தாலியையும் அவரிடம் கொடுத்துவிட்டு சன்னிதி முன் ஜோடியாக நின்றவர்களை பார்த்து டேய் மாப்ள ஒரு தடவை நல்லா யோசிச்சுகடா அந்த பொண்ணு பாவம்டா அது சின்ன பொண்ணூடா இப்ப தான் அது
19 – ஆடி அசைந்து வரும் தென்றல்
அவன் காதல் தளும்பும் பார்வை மனதில் இருந்த சிறு சஞ்சலத்தையும் மறைக்க… தனது வலது கையை அவனை நோக்கி நீட்டினாள். அவள் கையை ஏந்தி உள்ளங்கையில் முத்தமிட்டான்.
தனது ஜெர்கின் சட்டை எல்லாம் கழட்டி எறிந்து விட்டு… வெற்று மார்ப்போடு அவள் மேல் படர்ந்தான்.
அவனின் வெற்று மார்ப்பை கண்டு கண்களை மூடிக் கொண்டாள். அவளின் முன் நெற்றியில் முத்தமிட்டான். கன்னத்தோடு கன்னம் இழைந்தான். மூடிய இமைகளை நுனி நாக்கை கொண்டு வருடினான். பட்டென கண்களை திறந்தாள்.
‘எப்படி பார்க்க வச்சுட்டேன்ல..’ எனும் விதமாக புருவங்களை உயர்த்தி… அவளை பார்த்து சிரித்தான். திரும்பி கவிழ்ந்து படுத்து தலையணையில் முகம் புதைத்து கொண்டாள். மொத்தமாக அவள் மேல் தன் உடல் அழுந்துமாறு படுத்தவன்…
காலையில் வரும் போது அவள் வைத்து கொண்டு வந்த முல்லை சரம் இந்த ஊரின் குளிர்ச்சிக்கு வாடாமல் மணத்தோடு இருக்க… அந்த பூச்சரத்தில் தன் நாசியை உரசினான். ஆழ மூச்செடுத்து பூவின் மணத்தை தன்னுள் கடத்த… இழுத்த மூச்சில் அந்த மணம் உள்ளே சென்று அவனின் உணர்வுகளை கிளர்ந்தெழ செய்ய….
உள்ளே சென்ற மூச்சு உணர்வுகளின் தாக்கத்தால் உஷ்ணமாக வர.. இழுத்து விட்ட மூச்சில் பூச்சரம் மட்டும் அல்ல.. அவளும் வாடி வதங்கி போனாள்.
வெம்மை தாங்காமல் அவளின் கழுத்தோர குட்டி குட்டி முடிகள் எல்லாம் சிலிர்த்து எழுந்து கொள்ள… விரல் நகம் கொண்டு மெல்ல சுரண்டினான் அந்த குட்டி முடிகளை…அவள் உடல் லேசாக அதிர்ந்து அடங்கியது.
பின்புறமிருந்து அவளின் ஜெர்கினை கழட்டி வீசியவன்.. டாப்ஸில் கை வைக்க… சட்டென நிமிர்ந்து படுத்தாள். ஒரு கை ஊன்றி மறு கையால் டாப்ஸை கழட்ட முயன்று கொண்டிருந்தவன்… அவள் திரும்பவும் தடுமாறி அவள் மேலேயே மார்ப்புக்கு மத்தியில் விழுந்தான். விழுந்த இடம் அபாயகரமான வளைவு.. அவனுக்கு பிடித்த இடம். முகத்தை வைத்து அழுத்தி தேய்த்தான். கூச்சம் தாளாமல் அவனை பிடித்து நெட்டி தள்ள முயன்றாள். அவனோ அவள் கைகளை அனாயசமாக தட்டி விட்டு பிடிவாதமாக அங்கேயே இன்னும் இன்னும் அழுத்தம் கொடுத்தான். உணர்வின் கணம் தாளாமல் அவனின் உச்சி முடியை இறுக்கிப் பிடித்தாள்.
மெல்ல மேலே வந்தவன் அவளின் கழுத்தை இதழால் மென்மையாக ஒத்தி எடுக்க.. அவளின் சிறு செயின் உறுத்த… அப்போது தான் ஞாபகம் வந்தவனாக.. வேகமாக அவளை விட்டு எழுந்து சென்றான். என்னவோ என படபடப்புடன் எழுந்து அமர்ந்தாள். வேகமாக சென்று தனது பேகில் இருந்த நகைப் பெட்டியை எடுத்து வந்தவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான். பெட்டியை பார்த்ததும் கையில் கொடுப்பானா.. என பயந்தாள். கழுத்தில் போடமாட்டானா என ஏக்கத்தோடு பார்த்திருந்தாள். பெட்டியில் இருந்த செயினை எடுத்து அவள் முகத்திற்கு நேராக பிடித்தான். அவளை நேர்பார்வையாக பாரத்தவன் அவள் கழுத்தில் போட்டுவிட்டான்.
அவனை பொருத்தவரை அது ஒரு செயின் அவ்வளவே.. தன் அன்பு பரிசு…
ஆனால் அவளுக்கோ.. அது தாலி… அவனோடு கூடும் கூடல் எல்லாம் மனநிறைவை தரக் கூடிய பொக்கிஷம்.
பெண்ணவளின் மனதில் சொல்லில்அடங்காத நிம்மதி ஆட்கொண்டது. என் கணவன் … நான் இவன் மனைவி…
கண்கள் தளும்ப.. மெல்ல மூடினாள். கண்ணீர் மணிகள் உருண்டு வர… இரு கைகளில் கன்னம் தாங்கி பெருவிரல்கள் கொண்டு மென்மையாக துடைத்தான்.
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. அப்கோர்ஸ் உனக்கும் என்னை பிடிச்சிருக்குனு எனக்கு தெரியும். உன்கிட்ட சில விசயங்கள் வெளிப்படையா பேசிடனும்னு நினைக்கிறேன்.. எனக்கு பெண்களோடான உறவு புதுசு இல்லை.. வீக் எண்ட் பெண்கள் இல்லாமல் இருந்தது இல்லை. ஆனால் நீ எனக்கு சம்திங் ஸ்பெஷல் தான். உன் மேல ஒரு க்ரஷ் வந்த பிறகு மற்ற பெண்களோடு உறவை குறைச்சிகிட்டேன் தான்.என்னவோ இருக்கு உன்கிட்ட… ஏதோ ஒன்னு ஈர்க்குது.. எனக்கு உன்னோட ரிலேஷன்ஷிப் பிடிச்சிருக்கு..” என அவள் முகம் பார்த்து தெளிவாக பேசினான்.
அனிவர்த்தின் பழக்க வழக்கங்கள் அறிந்தவள் தானே.. அதையும் மீறி தானே அவன் மீது காதல் கொண்டாள். எப்போது அவன் மீதான காதலை உணர்ந்தாளோ.. அப்போதே அவன் ஒருவன் தான் வாழ்வு முழுமைக்கும் என்ற முடிவையும் எடுத்திருந்தாள். அவன் மணந்து கொண்டாலும் சரி இல்லை என்றாலும் சரி அவன் மட்டுமே என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். அவள் அவனை காதலனாக இல்லை கணவனாக தான் வரித்திருந்தாள். அதனால் அவன் கேட்டது தவறாக தெரியவில்லை.
“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். என் மனசுல எப்பவும் நீங்க தான்.. நீங்க மட்டும் தான்.. உங்க மேல வச்ச காதலால மட்டும் தான் சம்மதிக்கிறேன்.அதனால எனக்கு இது தப்பா தெரியல… “
“நீ என்னை லவ் பண்றினு தெரியும். எனக்கும் விருப்பம் இருக்கு.. அது லவ்வா என்னனு தெரியல… புரியல…கல்யாணத்துல நம்பிக்கை இல்லை.. விருப்பம் உள்ள வரை சேர்ந்திருப்போம். நிச்சயம் நீ இல்லாம என் வாழ்க்கை இல்லைனு தோனினா… அப்ப ஒருவேளை திருமணத்தை பத்தி யோசிக்கலாம் அது வரை இப்படி தான் இருக்கும் நம் உறவு..” சொல்லி விட்டு அவள் முகத்தையே பார்த்திருந்தான்.
அனவர்த்தின் பேச்சிற்கு நல்ல குடும்பத்தில் ஒழுக்க நெறியோடு வளர்க்கப்பட்ட பெண்கள் காறி துப்பிவிடுவார்கள் அது அவனுக்கே தெரியும். ஆனால் தேவர்ஷியின் காதல் மேல் கொண்ட நம்பிக்கையில் தான் கேட்டான்.
“ஊரை கூட்டி தாலி கட்டி இவள் என் மனைவி.. இவன் என் கணவன் என சொன்னா தான் திருமணமா… உடலில் உயிர் இருக்கும் காலம் வரைக்கும் இவனோ.. இவளோ தான் என் வாழ்வின் முழுமைக்கும் என நினைத்தாலே அதுவும் திருமணம் தான்..” என்றாள்.
“உன் அளவுக்கு அன்பா நான் இருக்கேனானு தெரியலை.. ஆனால் நமக்குள்ள இந்த ரிலேஷன்ஷிப் இருக்கும் வரைக்கும் வேற பொண்ணுங்க பக்கம் போகமட்டேன் அந்த உறுதி உனக்கு கொடுக்கிறேன்” என அவள் வலது கைமேல் தன் கையை வைத்து அழுத்தினான். இதுவே போதும் எனக்கு உணர்த்துவது போல… இதை தவிர வேற எதுவும் வேண்டாம் என்பது போல… அவளாகவே அவனை இறுக்கமாக அணைத்து இதழ் முத்தமிட்டாள்.
இருவரின் அன்பை சாட்சியாக கொண்டு…. பரஸ்பர நம்பிக்கையை வேள்வியாக வளர்த்து… இருமனங்கள் ஒருமிக்க…
அழகாக அங்கே ஒரு கந்தர்வ திருமணம் இனிதே நடந்தேறியது.
அனிவர்த் தேவர்ஷி கழுத்தில் தாலி என தெரியாமல் அணிவித்துவிட்டான். தெரிந்திருந்தால் அணிவித்திருக்கமாட்டான் தான். பக்கா பிசினஸ் மைண்ட் உஷாராகி இருப்பான். என்ன தான் தேவர்ஷி மேல் விருப்பம் இருந்தாலும் கல்யாணம் என்ற கமிட்மென்டுக்குள் சிக்க விரும்பவில்லை அதான் உண்மை.
தேவர்ஷி விளையாட்டு பிள்ளை தான். இருந்தாலும் குடும்பத்தில் சொல்லி வளர்க்கப்பட்ட ஒழுக்கநெறி… என்ன தான் காதலனை கணவனாக நினைத்தாலும் மனதில் ஒரு நெருடல். நெஞ்சில் உரசிய தாலி நெருடலை நீக்கி மனதை மயிற்பீலியாக வருடியது. உரிமை கிடைத்ததாக…உடமைபட்டவளாக உணர்ந்தாள்.
அவனாகவே அணிவித்த நொடி அவனை இழுத்து அணைத்து இதழில் முத்தமிட.. அவனுக்கோ அவளுடைய சாத்வீக முத்தம் போதவில்லை.அவள் இதழை இழுத்து தன் பற்களுக்கிடையே அதக்கி கடித்து சுவைத்தான்.
“ஸ்ஸ்..” வலியில் முனகினாள். அந்த முனகல் கூட வெளியேற வாய்ப்பின்றி உள்ளேயே அடங்கியது.
அணைப்பை இறுக்கினான். அவளுள் தன் தேடலை தொடங்கினான். தடைகளாக இருந்த உடைகள் எல்லாம் நாலு திக்கில் பறந்தது.
இவர்களின் இல்லறத்தின் ஆரம்பம் ஆடைகளுக்கு துறவறம்..
அவன் பார்க்கமுடியாமல் தவித்த அழகு எல்லாம் இன்று கண்களுக்கு விருந்தாக… அவளை தள்ளி நிறுத்தி இது வரை பார்க்காத.. இன்று பார்க்க முடிந்த அழகை அணு அணுவாக ரசித்தான். அது காதல் பார்வையாக இல்லாமல் காமப்பார்வையாக தான் இருந்தது. அவனின் பார்வையில் வெட்கம் பிடுங்கி தின்ன போர்வையை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டாள்.
“ப்ப்ச்..” என சலிப்போடு தலையை திருப்பி கொண்டான்.
போர்வையை இரு கைகளிலும் இறுக்கி பிடித்து கொண்டு அமர்ந்திருந்தவள் அருகில் நெருங்கி போர்வையை இழுக்க… அவள் இறுக்க.. பார்த்தான் இது வேலைக்கு ஆகாது என போர்வையோடு இழுத்து அணைத்து காதுமடலில் மெல்ல ஊதினான். அவனின் உஷ்ண மூச்சு பட்டு உடல் சிலிர்க்க.. அவளின் பிடி தளர்ந்தது… சட்டென போர்வையை உருவி எறிந்தான்.
அவனின் கள்ளதனத்தில் அடப்பாவி என இவள் தான் ஏமாந்து போனாள். அவளை பார்தது புருவங்களை ஏற்றி இறக்கி உல்லாசமாக சிரித்தான். செல்ல கோபம் கொண்டு அவனின் நெஞ்சில் பட்பட் என அடித்தாள். அடிக்கும் வேகத்தில் சற்றே அதிர்நத உடலை ரசித்தவாறே…
“நீ என்னை அடித்த மாதிரி நானும் உன்னை அடிக்கவா.. சேம் பிளேஸ்..” என கண்ணடித்து சிரித்தான்.
அவனின் பார்வை பதிந்திருந்த இடத்தை பாரத்து.. அச்சோ என அவனுக்கு முதுகு காட்டி அமர்நதுகொண்டாள். அவனுக்கு அதுவும் இன்னும் வசதியாக போனது. சந்தன நிற முதுகில் தன் உதடால் வருட… கூச்சம் தாளாமல் நெளிந்தாள். அவளை பின்புறமாகவே தூக்கி தன் மடியில் அமர்த்தி கொண்டான். அவளுக்கு இன்னும் அவஸ்தையாகி போனது. அவன் கைகள் உடையற்ற உடலில் சுகந்திரமாக விளையாண்டது. பின்புற கழுத்தில்.. காது வளைவில் முத்தமிட்டு.. முத்தமிட்டு.. அவளை தகிக்க வைத்து கொண்டிருந்தான்.அவன் கைகளும் உதடுகளும் காட்டிய வித்தைகளில் மயங்கி கிறங்கி இருந்தவளை தூக்கி படுக்கையில் கிடத்தினான். அவள் மேல் படர்ந்தான்.
முகம் எங்கும் முத்த ஊர்வலம் நடத்தினான். கழுத்து ஏற்ற இறக்கங்களில் நாவை கொண்டு தீட்டினான். அவன் நாக்கின் சிலுசிலுப்பு பட்டதில் உணர்சசி தாளாமல் அவன் கைகளை வலிக்க இறுக்கி நெறித்தாள். அவனுக்கு சுக வேதனையாகி போனது. சற்று கீழே அவன் பார்வை படை எடுக்க..அவள் மார்ப்புக்கு மத்தியில் ஒரு மச்சம். மார்ப்பின் வளைவில் சந்தன நிற உடம்பில் மிளகு சைசில் ஒரு மச்சம் வீற்றிருக்க… அதை பார்த்தவன்…
“வாவ்… பியூட்டிபுல்.. இவ்வளவு நேரம் இதை பார்க்கவேயில்லையே..” அசந்து போனான்.
“ச்சீ..” என அவனின் கையை கிள்ளினாள்.
“என்னடி..ச்சீ.. எவ்வளவு அழகா.. அதுவும் எனக்கு பிடிச்ச இடத்தில் இருக்கு.. அழகு எங்கு இருந்தாலும் ரசிக்கனும்.. ரசிக்கறதோட இல்லாமல் இதா இப்படி முத்தம் கொடுப்பேன்… இப்படி மீசையில உரசுவேன்… இப்படி கடிச்சு வைப்பேன்” என பல் தடம் பதிய கடித்து வைத்தான். ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி செய்தான்
18 – ஆடி அசைந்து வரும் தென்றல்
நான்கூட வந்து பஸ் வச்சுவிடுவேன் பாப்பா… என் ஆபீஸ்கு பஸ் ஸ்டாண்டும் வேற வேற ஏரியா எனக்கு லேட்டாகிடும்.. அதான் பார்ககறேன்” என திருகுமரன் புலம்பினார்.
“அதான் பா சொல்லறேன் நான ஆட்டோவில. போயிடறேன்..”என்றாள்.
கௌசல்யா மட்டுமே தனியாக எங்காவது செல்ல என வழக்கமாக ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் திருகுமரன். அந்த ஆட்டோ டிரைவருக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு…
“பார்த்து பத்திரமா போய் விட்டு மண்டே கண்டிப்பா வந்திடனும் தேவாம்மா.. இல்லனா தாத்தா திட்டுவார்”என எச்சரிக்கை செய்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார். ஆட்டோ காம்பவுண்டிற்குள் வருவது கூட பிடிக்காது என்பதால்.. கௌசல்யாவின் அறிவுரைகளை எல்லாம் மௌனமாக தலையாட்டி கேட்டுக் கொண்டு வெளியே தயாராக இருந்த ஆட்டாவில் ஏறி உட்கார்ந்த பிறகே நிம்மதியானது.
‘அப்பாடா… எப்படியோ சமாளித்து கிளம்பியாச்சு..’ ஆசுவாசமானாள்..
அனிவர்த் ஏர்போர்ட் பார்க்கிங்கில் டென்ஷனாக நின்று கொண்டிருந்தான்.
“போர்டிங்கு ஹாஃப்னவர் தான் இருக்கு இன்னும் இவளை காணோமே… இதுக்கு தான் நானே பிக்கப் பண்ணிக்கறேன் சொன்னேன் கேட்டாளா..” என புலம்பி கொண்டே அவளுக்கு அழைக்க… ரிங் போய் கொண்டே இருந்தது. அவள் எடுக்கவில்லை..
தேவர்ஷி தன் பேகில் போனை வைத்திருந்தாள். அதனால் ஆட்டோ சத்தத்தில் அவளுக்கு கேட்கவில்லை.
‘ஒருவேளை வரமாட்டாளோ… அதனால் கால் அட்டன் பண்ணலையா..’ என நினைத்து அனிவர்த் கோபத்தில் இருக்க…
தேவர்ஷி வந்துவிட்டாள். ஆட்டோவில் வந்திறங்கியவளை கண்டு கோபம் அதிகமானது. அவளாகவே வரட்டும் என நின்ற இடத்தில் இருந்து நகரவில்லை அனிவர்த்.
ஆட்டோவை அனுப்பி விட்டு அவனை தேடி வந்தாள் தேவர்ஷி.
“லேட்டாயிடுச்சா.. சாரி.. சாரி.. “ என்றாள் கெஞ்சுதலாக… அவள் கெஞ்சுதல் மனதை இளக்க.. இருந்தாலும்
“அதுக்கு தான் நானே வரேன் சொன்னேன்..” என கேட்கவும் செய்தான்.
“சரி வா.. லேட்டாகுது..” என கூட்டி சென்றான். திருவனந்தபுரம் விமானத்தில் அமர்ந்தும் கூட தேவர்ஷிக்கு படபடப்பு அடங்கவில்லை. என்ன தான் அனிவர்த் மேல கொண்ட காதலால் வீட்டில் சமாளித்து வந்துவிட்டாலும் உள்ளுக்குள் ஒரு சிறு பயம் இருக்க தான் செய்தது.
அவளின் பயந்த முகத்தை பாரத்து விமான பயணத்திற்கு தான் பயந்து கொள்கிறாள் என நினைத்து தோளில் கை போட்டு அணைத்து…
“வர்ஷிம்மா.. என் கூட இருக்கும் போது என்ன பயம்… சில்… “
அவனின் தோளில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள். அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்து தன் நெஞ்சில் அவள் முகத்தை அழுத்திக் கொண்டான். சிறிது நேரத்தில் தேவர்ஷி அவன் நெஞ்சில் சாய்ந்தவாறே உறங்கி விட்டாள். தூக்கத்தில் லேசாக வாயை பிளந்து ஜொள் ஒழுக்கி அவனின் சட்டையை நனைத்திருந்தாள். தன் போனில் மூழ்கி இருந்தவன் தன் சட்டையின் ஈரத்தை உணர்ந்து குனிந்து பார்த்தவன் மெல்ல சிரித்துக்கொண்டான். தனது கை குட்டையை எடுத்து துடைத்துவிட்டான். அதில் தூக்கம் லேசாக கலைய…
“ம்ம்ம்” சிணுங்கலோடு தன் முகத்தை அவனின் மார்பில் புரட்டி இன்னும் வாகாக சாய்ந்து உறக்கத்தை தொடர்ந்தாள். அவளின் செயல் எல்லாம் அனிவர்த்தை இருப்பு கொள்ள விடவில்லை. சுற்றுபுறம் உணர்ந்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்.
இவர்களின் எதிர் சீட்டில் இருந்த மூத்த பெண்மணி இவர்களையே வெகு நேரமாக பார்த்து ரசித்திருந்தார். எதேட்சையாக அனிவர்த் திரும்பி அவரை பார்க்க..
“ஆர் யூ நியுலி மேரிட்” என் கேட்க.. அனிவர்த்தும் யோசிக்காமல்.. ஆமாம் என தலையாட்டினான்.
“நைஸ் ஃபேர்… பெஸட் விஷ்ஷஸ்..” என பாராட்டவும்… சிறந்த ஜோடி என்றதும் மனதுக்குள் மெல்ல மணம் பரப்பியது. அது எதனால் என யோசிக்கவில்லை யோசித்து இருந்தால் தேவர்ஷியை விட்டு இருக்கமாட்டானோ..என்னவோ…
“தேங்க்ஸ்..” என்றான் மனம் நிறைந்த சிரிப்போடு..
திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இறங்கி… அவன் பதிவு செய்திருந்த கார் காத்திருக்க… ஏறி அமர்ந்ததும் அனிவர்த் ஜர்கின் அணிந்து கொண்டான். தேவர்ஷியை பார்த்தவன்…
“வர்ஷி.. ஜெர்கின் போடு..” என்றான். அவள் முழிக்க…
“என்ன..” என்றான்.
“வர்தா.. நான் எதுவும் எடுத்திட்டு வரலை..” என்றான்.
“என்னது கொண்டு வரலையா.. அக்டோபர் மாசம் மழையும் குளிரும் இருக்கும் சொன்னே்ல..”
என்ன சொல்வாள்.. அவள் கிராமத்திற்கு தானே போகிறாள் என கௌசல்யாவே எல்லாம் எடுத்து வைக்க.. தேவர்ஷியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதை அனிவர்த்திடம் சொன்னால் கோபப்படுவான் என நினைத்து…
“மறந்துட்டேன்..”என சொல்லி சமாளித்தாள். அதற்கும் கோபப்பட்டு முறைத்தான். டிரைவரிடம்..
“அண்ணா.. கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் ஏதாவது மால் போங்கண்ணா..” என்றான்.
சற்று நேரத்திலேயே மழை அடித்துப் பெய்ய…தேவர்ஷிக்கு குளிர ஆரம்பித்துவிட்டது. குளிரில் நடுங்க… அனிவர்த் சட்டென அவளை தூக்கி தன் மடியில் அமர்த்தி தனது ஜெர்கினின் ஜிப்பை கழட்டி அவளைஇழுத்து
ஜெர்கினை அவளுக்கும் சேர்த்தே போட்டுவிட்டான்.
தேவர்ஷி கூச்சத்தில் நெளிந்தவாறே..”வர்தா.. டிரைவர் இருக்கார்..” என்றாள் கிசுகிசுப்பாக..
“சோ வாட்..” என்றான்.
“இறக்கி விடுங்க.. ப்ளீஸ்..”
“இப்ப குளிருதா..இல்லைல பேசாம வா..” என்றான்.
அவள் பின்னங்கழுத்தில் மெல்ல ஊதினான். அவள் கழுத்தோர குட்டி குட்டி முடிகள் எல்லாம் சிலிர்த்து கொண்டு நின்றது. அவள் இடையை அழுத்தி பிடித்து பின்கழுத்தில் மீசை உரச முத்தங்களாக வைக்க… பெண்ணுக்கோ அடி வயிற்றில் இருந்து ஒரு சில்லிப்பான உணர்வு கிளம்பி உடல் எங்கும் பரவ… கணம் தாங்க முடியாமல்… தன் இடையில் இருந்த அவன் கையின் மேல் வைத்து.. அவன் கால்களை தன் கால்களால் பின்னிக் கொண்டாள்.
அனிவர்த்தின் உணர்வுகள் சீற்றம் எடுக்க… தன்னை கட்டுப்படுத்த முடியாமல்.. அவளை சட்டென இறக்கி பக்கத்தில் உட்கார வைத்தான். அவளும் இருக்கும் இடத்தை உணர்ந்து அமைதியாக இருந்து கொண்டாள். இப்பவே இப்படி செய்பவன்.. ரிசார்ட் போனதும் என்ன.. என்ன செய்வான் என சுகமான கற்பனையில் ஆழ்ந்து போனாள்.
லூலூ மாலில் வண்டி நிற்க…. அவளோடு இறங்கியவன்.. அவளின் கை கோர்த்து அங்குள்ள ஒரு துணிகடைக்குள் சென்றான். அவளுக்கு ஜெர்கின் எடுத்து விட்டு…
“வர்ஷி… வேற டிரஸ் ஏதாவது எடுத்துக்கறியா..” என கேட்டான்.
‘அச்சோ இன்னும் டிரஸ்ஸா.. இந்த ஜெர்கினுக்கே வீட்டில் என்ன சொல்லி சமாளிக்க போறேனோ தெரியலை. கேள்வியா கேட்டு கொல்வாங்க….’ என நினைத்தவள் மறுப்பாக தலை அசைத்தாள்.
“இங்கேயே ஏதாவது வேணும்னா வாங்கிக்கோ.. பொன்முடில பெரிசா கடைகள் ஏதும் இருக்காது..”
“எதுவும் வேண்டாம்” என சொல்லிவிட…
“சரி வா சாப்பிடலாம்..” என அங்கிருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றான். இருவருக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு உணவகத்தை விட்டு வெளியில் வந்தனர் . அங்கு எதிரில் ஒரு நகை கடை தென்பட… அவளை அழைத்து கொண்டு அங்கே சென்றான். இங்கே எதற்கு என அவன் முகம் பார்க்க..
“வா.. ஏதாவது ஜூவல்ஸ் வாங்கிக்கோ…” என்றான்.
நகையா… என அதிர்ந்தவள்… இவன் அழைத்து வரும் பெண்களுக்கு எல்லாம் இப்படி தான் வாங்கி தருவானா.. என்ற எண்ணம் தோன்றியதும் தன்னால் இரண்டடி கால்கள் பின்னால்சென்றது.
இவனோடு பணம் பொருள் என ஆதாயத்திற்கு வரும் பெண்களும் நானும் ஒன்றா.. இவன் மேல் கொண்ட காதாலால் தானே.. திருமண்த்திற்கு முன்பு உறவு கொள்வது தவறு என தெரிந்தும்.. இவன் மேல் காதல் உணர்ந்த நொடியில் இருந்து அவனை காதலனாக அல்லமால் கணவனாகவே வரித்திருந்தாள். அவன் அவ்வளவு ஆசையோடும். எதிர்ப்பார்ப்போடும்.. கேட்க மறுக்க முடியாமல் தானே சரி என சம்மதித்தாள்.
“ஏய்.. வா..” என கை பிடித்து இழுத்தான்.
“வர்தா.. நகை எல்லாம் வேணாம்.. வா போகலாம்..” என இவள் அவனின் கை பிடித்து இழுத்தாள்.
அவளின் முகத்தை பாரத்தவனுக்கு ஏதோ சரியில்லை என தோன்ற..
“என்னாச்சு…”
“ஒன்னுமில்லை.. வா போகலாம்..” என்றாள் பிடிவாதமாக…
“இப்ப சொல்ல போறியா… இல்லையா…” என்று அவளை விட பிடிவாதமாக..
“இல்ல… இந்த மாதிரி தான் எல்லா பெண்களுக்கும்…” என முடிக்க முடியாமல் திணறினாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என அவனுக்கு சரியாக புரிந்தது. புரிந்தவனுக்கு கோபம் வர…
“லூசாடி.. நீயும் மத்தவங்களும் ஒன்னா… மனுசன மூட்அவுட் பண்ணிட்டு..” ஏகத்திற்கும் முறைத்துக கொண்டு நின்றான்.
அவனின் ‘நீயும் மத்தவங்களும் ஒன்றா..’ என்ற வார்த்தைகளில் மனம் குளிரந்து போக… அப்பாடி நம்மை அப்படி எல்லாம் நினைக்கவில்லை என்ற நிம்மதி வந்தது. அவனை நெருங்கி உரசிக் கொண்டு நின்றாள்.
“இப்ப எதுக்குடி எரும மாடு மாதிரி உரசிட்டு இருக்க..” எரிச்சலாக..
“ஹீஹீஹீ… வர்தா.. கோபமா இருக்கறியா..”
“இல்லை… குளுகுளுனு இருக்கேன்..”
“ஹீஹீ.. சும்மா காமெடி பண்ணிகிட்டு..”
“யாரு நான் காமெடி பண்றேன்…”
ஹீஹீ..ஹீ என அசடு வழிந்தாள்.
“ரொம்ப வழியாதே.. இப்ப நகை எடுக்க வர்றியா..என்ன..”
“ம்ம்ம்.. போலாமே..” என அவனோடு சென்றாள்.
அவன் டைமண்ட் செக்ஷனுக்கு அழைத்துச் சென்றான்.
“ரிங் பார்க்கறியா. பென்டன்ட் பார்க்கறியா.. உனக்கு பிடிச்சத செலக்ட் பண்ணு”என்றான்.
அவள் அமைதியாக எல்லாம் பாரக்க..
“அண்ணா.. அந்த பேங்கல்ஸ் எடுங்க… இங்க பாரு இந்த பேங்கல்ஸ அழகா இருக்கு…”
அவள் பார்வை எங்கோ இருக்க.. அனிவரத் அவளின் தோளில் தட்டி..
“வர்ஷி… எங்க பார்த்திட்டு இருக்க.. செலக்ட் பண்ணு”
“வர்தா.. எனக்கு டைமண்ட் வேணாம்.. அங்க கோல்டு ஜூவஸ் இருக்கு பார்க்கலாமா” என கேட்க..
அவளை அழைத்துக் கொண்டு தங்க நகை இருந்த பக்கம் சென்றான். அங்கே தேவர்ஷி அருகில் சற்று தள்ளி திருமண நகைகள் எடுத்து கொண்டிருந்தனர் ஒரு குடும்பத்தினர். எல்லாம் பெரிய பெரிய நகைகளாக இருக்க.. ஒரு செயின் மட்டும் சின்னதாக சற்று வித்தியாசமாக இருந்தது. அதை பார்த்தும் தேவர்ஷிக்கு பிடித்துப் போக.. தனக்கு நகை எடுத்து காண்பித்து கொண்டிருந்தவரிடம் அதை காண்பித்து அது என்ன என கேட்டாள்.
“அது கேரளா டிரடிஷனல் மங்கள்சூத்ரா..”
“அப்படினா.. என்ன அண்ணா..”
அதற்குள் அனிவர்த்கு ஒரு கால் வர…
“வர்ஷி.. நீ செலக்ட் பண்ணு.. பேசிட்டு வரேன்” என சொல்லி தள்ளி சென்றான்.
“இது கேரளா தாலி மேடம்..” என்றார் அவர்.
அதையே காண்பிக்க சொன்னாள் அதில் அத்தனை டிசைன் அத்தனை வகைகள் இருக்க.. அதில் ஒன்றில் இலை வடிவில் ஓம் என்று பொறிக்கப்பட்டு அழகாக இருக்க… அதுவும் செயினில் கோர்த்திருக்க… அதையே எடுத்துக்கொண்டாள்.
அனிவர்த் பேசி முடித்து வந்தவன்” செலக்ட் பண்ணிட்டியா..” என கேட்க…
புன்னகயோடு அந்த செயினை எடுத்து காட்ட.. கையில் வாங்கி பார்த்தான்.
‘கண்டுபிடித்திடுவானோ..’ பயந்து போய் பார்த்தாள்.
“சரி வா.. டைம் ஆகிடுச்சு.. மழை வந்திட்டா.. ஹில்ஸ் ஏற கஷ்டமாகிடும்..”
நகையை வாங்கி கொண்டு அவசரமாக வண்டிக்கு வந்தனர். லேசாக மழை ஆரம்பித்திருக்க.. தேவர்ஷி ஜெர்கினை அணிந்து கொண்டாள். மழை ஏற.. ஏற… மழையும் காற்றும் வலுக்க… ஜெர்கினை மீறி குளிர.. அனிவர்த்தை ஒட்டி கொண்டு அமர்ந்தாள். அனிவர்த் அவளின் தோளில் கை போட்டு இன்னும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
மதியம் போல் ரிசார்ட்கு வந்தனர். மதிய நேரமே மழையினால் இருட்டி மாலை போல இருக்க…
இரண்டு உள்ளங்கைகளை தேய்த்து “கிளைமேட் செம்மயா இருக்குல்ல..” என்றவன் தேவர்ஷியை நெருங்கி அணைத்தான். சற்று நேரத்தில் அணைப்பு இறுக்கி கொண்டே போக… கழுத்து வளைவில் முத்தம் கொடுத்தான். அவனின் நோக்கம் புரிந்தவளுக்கு அவளின் அடி வயிற்றில் இருந்து பய உணர்வு கிளம்ப… இப்பவேவா… இப்ப வேண்டாமே என்று தோன்ற…தள்ளி போட நினைத்தாள்.
“பசிக்குது..” என்றாள்.
ஏதோ ஒன்று மனதில் அவனுக்கு உடன்பட தடுக்க… தள்ளி போட எண்ணி பசியை கையில் எடுத்துக் கொண்டாள்.
காலையில் சாப்பிட்டது தானே.. இடையில் எதுவும் எடுத்துக் கொள்ளாத்தால் பசிக்குது போல என நினைத்தவன்
“நான் ஆர்டர் பண்ணறேன்..நீ போய் ப்ரஷாகிட்டு வா..”என்றான்.
இருவரும் தங்களை சுத்தப்படுத்தி கொண்டு வந்திருக்க.. உணவும் வந்திருந்தது. அங்கிருந்த சிறிய கிச்சனில் இருந்த டைனிங்கில் அமர்ந்து சாப்பிட்டனர் அனிவர்த் உற்சாகமாக சாப்பிட.. தேவர்ஷிக்கோ உணவு இறங்கவில்லை. தட்டை அளந்து கொண்டிருந்தாள்.
“பசிக்குதுன.. சாப்பிடாம இருக்க… “
“டேஸ்ட் பிடிக்கலையா.. சாப்பிட முடியாட்டி வச்சிடு” என எழுந்து சென்றுவிட்டான்.
இவளுக்கும சாப்பிட முடியாது என தோன்ற… கை கழுவி வந்தாள். அவன் முன் செல்ல கால்கள் பின்னிக் கொண்டது.
இவளை பார்த்ததும் சட்டென தனது கைகளில் அள்ளிக் கொண்டான். அவனின் செயலில் பயந்து போய் அவனின் சட்டையை இறுக பற்றி கொண்டு அவனை பார்த்தாள். அவன் கண்கள் காட்டிய மாயங்களில் சிக்கி… மயங்கி தன்னை மறந்தாள்.
படுக்கையறைக்கு சென்றவன் அவளை படுக்கையில் கிடத்தி…
“ப்ளீஸ் வர்ஷிம்மா..” என்றான் அவள் கண்களை பார்த்து..
அவன் கண்களில் தெரிந்த காதல் மயக்கத்தில்… மறுக்க மனம் வரவில்லை.
மனமோ வரைவு வேட்கை (மணம் புரிய விருப்பம்) கொள்ள..
தன்னோடு தான் போராடினாள்.
ஏற்பதா.. எதிர்ப்பதா..
மனம் தடுமாற…
தன்னை மறந்தாள்..
தாலியை மறந்தாள்…
தடுமாறினாள்… தடம் மாறினாள்….