ATM Tamil Romantic Novels

கள்ளோ காவியமோ

காவியம் – 14
பெரிய பள்ளத்திலிருந்து மேலே ஏறிய தேவாவும், இளவேனிலும், இருள் சூழ்ந்த அடர்ந்த மரங்களுக்கு நடுவே இருந்த ஒற்றையடிப் பாதையில் கைகோர்த்து நடந்தனர். காட்டின் நிசப்தத்தை நிலைகுலையச் செய்யும் விதமாக, திடீரென அவர்களைச் சுற்றிலும் விசித்திரமான கூச்சல் சத்தங்களும், காய்ந்த இலைகள் மடமடவென மிதிப்படும் சத்தமும் கேட்டன.
 
தேவா சட்டென இளவேனிலைத் தன் பின்னே இழுத்து பிடித்துக் கொண்டு சுதாரிப்பதற்குள், திடீர் தீப்பந்தங்களின் வெளிச்சம் அந்த இடத்தையே ஒட்டுமொத்தமாய் வளைத்துக் கொண்டது. கைகளில் கூர்மையான ஈட்டிகளும், வில் அம்புகளும் ஏந்தி, உடம்பில் விசித்திரமான மூலிகைச் சாறுகளால் கோலங்கள் வரைந்திருந்த ஒரு வகையான காட்டுவாசி கூட்டம் இவர்களை நாலாபுறமும் முற்றுகையிட்டு நின்றது!
 
அவர்கள் தங்களுக்குள் பேசிய காட்டு மொழி இருவருக்குமே புரியவில்லை. ஆனால், தங்களின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அந்நியர்கள் என்ற கோபத்தில், அவர்கள் தேவாவை நோக்கித் தங்களின் ஈட்டிகளை ஆக்ரோஷமாக நீட்டினர். தேவா தன் கைகளை இறுக்க மூடி, சண்டைக்குத் தயாராக தன் ரௌத்திரப் பார்வையை செலுத்தினான். அந்த பயங்கரமான கூட்டத்தையும் மீறி, தன் காதலியைக் காக்கத் தனியாளாக மோத அவனது ஆண்மை துடித்தது.
 
ஆனால், இளவேனில் காடுகளைப் பற்றியும், அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலைப் பற்றியும் எத்தனையோ ஆவணப் படங்களைச் சேகரித்த அனுபவம் அவளுக்கு இருந்தது. தேவா இங்கே சண்டையிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதை உணர்ந்தவள், “மச்சான்… அவங்ககிட்ட சண்டை போடாதீங்க. அவங்க தங்களை தற்காத்துக்கத்தான் இப்படிப் பண்றாங்க. கொஞ்சம் அமைதியா இருங்க…” என்று ரகசியமாகக் குரல் கொடுத்தவள், சற்றும் பயப்படாமல் அந்தக் கூட்டத்தின் தலைவனைப் போல முன்னால் நின்ற முதியவரை நோக்கி மெதுவாகத் தன் இரு கைகளையும் உயர்த்தி, தங்களுக்குள் எந்த ஆயுதமும் இல்லை என்பதை சைகையால் காட்டினாள்.
 
தாங்கள் ஆபத்தில் சிக்கி வழிமாறி வந்துவிட்டதை அவர்களின் பழங்குடி சைகை முறையிலேயே புரிய வைக்க முயன்றாள். அவளது துணிச்சலையும், தங்களுக்கு தீங்கு விளைவிக்காத அந்தச் சைகைகளையும் பார்த்த காட்டுவாசித் தலைவன், தன் ஆட்களைப் பார்த்து ஏதோ சத்தமிட, நீட்டப்பட்ட ஈட்டிகள் மெல்ல கீழே இறங்கின.
 
இருப்பினும், தங்களின் ரகசியக் குடில்களை நோக்கி நடக்குமாறு அவர்கள் சைகை செய்ய, தேவாவும் இளவேனிலும் வேறு வழியின்றி அந்தக் காட்டுவாசிகளின் கட்டுப்பாட்டில் அவர்களது இருப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
 
அதே நேரத்தில் அங்கே… தேவா கோட்டைக்குள்…
நேற்று இரவு நடந்த கடத்தல் சம்பவத்தின் பயமும், ரகுவின் அதிரடிக் காதலும் மலர்விழியை தூக்கத்திலிருந்து எழுப்பியிருந்தது. படுக்கையை விட்டு எழுந்தவள், தன் சுடிதாரை சரி செய்துகொண்டு அவசரமாக படுக்கை அறையை விட்டு வெளியே வந்து, மாடி வராண்டாவின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.
 
அங்கே, தேவா மஞ்சள் நிறக் குர்தா அணிந்த ஒரு பெண்ணின் கையைப் பற்றிக் கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி  ஸ்ட்ரேஞ்சர் காரில் ஏற்றி கோட்டையை விட்டு வெளியேறிய காட்சியை மலர்விழி தன் கண்களால் பார்த்திருந்தாள்.
 
தேவாவின் கஸ்டடியில் இருக்கும் மீடியா ரிப்போர்ட்டர் இளவேனிலைப் பற்றி மலர்விழிக்கு அதுவரை எதுவும் தெரியாது. அதனால், அந்த அதிகாலை மங்கலான வெளிச்சத்தில், மஞ்சள் ஆடையில் வேணியின் அச்சு அசல் தோற்றத்தில் இருந்த இளவேனிலைக் கண்ட அந்த நொடி, மலர்விழியின் நெஞ்சை குப்புறக் கவிழ்த்திருந்தது! அதிர்ச்சியில் உறைந்து போனவள், அலறிக்கொண்டு படிக்கட்டுகளில் விறுவிறுவென்று கீழே ஓடி வந்தாள்.
 
கீழே வரவேற்பறையின் ஜன்னலோரம் நின்று, கைகளை தன் நெஞ்சில் கட்டிக்கொண்டு வெளியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு. மலர்விழி ஓடிவந்து ரகுவின் பக்கத்தில் நின்று அவனது கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். அவளது முகம் மொத்தமாய் வெளுத்துப் போயிருந்தது, குரல் நடுக்கத்தில் அடியோடு இழுத்தது.
 
“ரகு மாமா…! தேவா மாமாவை காணோமே? மாமா இன்னும் வரலையா? இல்ல… இல்ல… வேற ஏதாச்சும் பிரச்சனையா மாமா? எனக்கு நெஞ்சு பூரா பயமா இருக்கு, உண்மையச் சொல்லுங்க!” என்று மலர்விழி தன் பெரிய மாமனின் முரட்டுத்தனத்தையும், அவனுக்கு வெளியே இருக்கும் எதிரிகளையும் நினைத்து கலங்கிய கண்களோடு கேட்டாள்.
 
ஆனால், ரகுவின் முகத்தில் பயத்தின் நிழல் கூட இல்லை. தன் அண்ணன் ராஜதேவாவின் மீதும், அவனது அசாத்தியமான பலத்தின் மீதும் ரகுவுக்கு அசாத்திய நம்பிக்கை! தன் அண்ணன் முன்னாடி நூறு எதிரிகள் ஆயுதங்களோடு வந்தாலும், அவனுங்களைத் தனியாளா நின்னு துவம்சம் பண்ற தில்லும் துணிச்சலும் தேவாவுக்கு இருக்கு என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.
 
“ஏய் மலரு… அண்ணனைப் பத்தி உனக்குத் தெரியாதா? அவருக்காக நான் ஏன் பயப்படணும்? அண்ணன் சிங்கம்போல போயிட்டு சிங்கம்போல திரும்பி வருவாரு. நீ சும்மா தேவையில்லாம கற்பனை பண்ணிட்டு இருக்காதே! அண்ணன் அப்படியே துறைமுகத்துல ஏதோ முக்கியமான கண்டெய்னர் செக்கிங் இருக்குன்னு நேரா அங்க கிளம்பிப் போயிருப்பாரு. நீ எதற்கும் பயப்படாம போய் உன் வேலையைப் பாரு,” என்று தன் குரலை விறைப்பாக்கிக் கொண்டு பொய் சொல்லி சமாதானப்படுத்த முயன்றான்.
 
ஆனால், மலர்விழி சற்றும் அசரவில்லை. அவனது வார்த்தைகள் நிதானமாக வெளிப்பட்டாலும், அவனது கண்கள் தனக்கு ஏதோ ஒரு பெரிய ரகசியத்தை மறைத்து தவிப்பதை அவளது பெண்மை துல்லியமாகக் கண்டுபிடித்துவிட்டது. ரகுவின் முகத்திற்கு மிக அருகில் வந்தவள், அவனது கைகளை உலுக்கி ஆவேசமாகக் கத்தினாள்.
 
“நான்… நான் என் கண்ணாலேயே பார்த்தேன் மாமா! தேவா மாமா கார்ல ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வெளியே போனாரு. அந்தப் பொண்ணோட முகம்… அவ போட்டிருந்த டிரஸ்… எல்லாம் அப்படியே… கிருஷ்ணவேணி அக்கா மாதிரியே இருந்தது மாமா! ஆனா… ஆனா  கிருஷ்ணவேணி அக்கா அன்னைக்கு நடந்த விபத்துல இறந்துட்டாளே… அவ இப்போ உயிரோட இல்லையே ரகு மாமா?! அப்போ… அப்போ.. இங்க தேவா மாமாகூடப் போப்… போனது யாரு?! எனக்கு ஒன்னும் புரியல மாமா… உண்மையச் சொல்லுங்க!” என்று மலர்விழி விம்மி விம்மி அழுதுகொண்டே ரகுவைக் குடைந்தாள்.
 
மலர்விழியின் வாயிலிருந்து கிருஷ்ணவேணி என்ற பெயர் வந்த அடுத்த நொடி, ரகுவின் முகம் அப்படியே உறைந்து போனது! காப்பகத்து குழந்தைகளுக்காகத் தன் தாதா தோற்றத்தை மாற்றி, இளவேனிலுக்குப் பெரிய பொட்டும், கனமான செயினும் போட்டு அண்ணன் அவளை வேணியாகவே மாற்றி அழைத்துப் போன ரகசியம் ரகுவுக்கு மட்டுமே தெரியும்.
 
தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் மலர்விழியின் கைகளை வம்படியாகத் தட்டிவிட்டான் ரகு. “ஏய் மலரு! லூசு மாதிரி பேசாதே. வேணி இறந்து பல வருஷம் ஆச்சு. இந்நேரத்துல விடியற்காலையில தூக்கக் கலக்கத்துல யாரையோ பார்த்துட்டு வந்து இங்க சத்தம் போட்டுட்டு இருக்காதே! இப்போ… இப்போதைக்கு உன்கிட்ட எதுவுமே சொல்ல முடியாதுடி!  நீ முதல்ல போய் அமைதியா சாப்பிடு. நான் வெளியே ஒரு முக்கியமான வேலையா போயிட்டு வரேன்” என்று ரகு அவளை அங்கேயே விட்டுவிட்டு  விறுவிறுவென்று பங்களாவின் வெளிக்கதவை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
 
கோட்டைக்குள் நள்ளிரவின் இருள் சூழ்ந்தது. அதிகாலையில் போன தேவா மாமா நள்ளிரவு தாண்டியும் வராததால், மலர்விழி சோபாவில் அமர்ந்து வாசலையே வெறித்து பார்த்துக் கொண்டு நெஞ்சு பதறக் காத்துக்கிடந்தாள்.
 
நள்ளிரவு இரண்டு மணி…
 
வெளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு மலர்விழி பாய்ந்தெழுந்தாள். உள்ளே நுழைந்த ரகுவின் முகம் அண்ணனைத் தேடி அலைந்த களைப்பிலும், சோகத்திலும் இறுகிக் கிடந்தது. அவனது கட்டுப்பாடற்ற அந்த தவிப்பைப் பார்த்த மலர்விழியின் அத்தனை அணைக்கட்டுகளும் உடைந்தன.
 
ஓடிவந்து ரகுவின் சட்டையைப் பிடித்து உலுக்கியவளின் கண்களில் இருந்து கண்ணீர் மளமளவெனக் கொட்டியது. அவளது உக்கிரமான அழுகையையும், நள்ளிரவு நேரத்துத் தவிப்பையும் பார்த்த ரகுவின் கட்டுப்பாடு மொத்தமாய் உடைந்தது. இனிமேலும் அவளிடம் உண்மையை மறைத்தால் அவளது உயிர் நிலைக்காது என்பதை உணர்ந்த ரகுவின் கண்கள் கலங்கின. அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பற்றிக் கொண்டான்.
 
அண்ணனும், மீடியா ரிப்போர்ட்டர் இளவேனிலும் இப்போ காட்டுக்குள்ள இருக்காங்கடா!” என்று ரகு அந்த நள்ளிரவில் தன் நெஞ்சில் புதைத்து வைத்திருந்த உண்மையை உடைத்தான்.
 
அண்ணன் கோட்டையை விட்டுப் புறப்படும் போதே நடராஜன் எப்படியும் வளைக்கப் பார்ப்பான்னு எனக்குத் தெரியும் மலரு. அதனாலதான் அண்ணன் ஓட்டிட்டுப் போன அந்த ஸ்ட்ரேஞ்சர் கார்ல ரகசிய ஜிபிஎஸ் (GPS) ட்ராக்கர் வச்சிருந்தேன். கோட்டையோட கன்ட்ரோல் ரூம் திரையில பார்த்தப்போ சிக்னல் காட்டுற நம்ம காரோட ஜிபிஎஸ் வரைபடத்துல அண்ணனோட வண்டி மெயின் ரோட்டை விட்டு விலகி, யாரும் போகாத அந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குள்ள பாய்ஞ்சு போய் நின்ன புள்ளி அப்பட்டமா தெரிஞ்சது! ஆனா, வண்டி அங்கே போய் நின்ன அடுத்த சில நிமிஷங்கள்ல… காரோட ஜிபிஎஸ் சிக்னல் மொத்தமா கட் ஆயிடுச்சு! அண்ணன் காரை லாக் பண்ணிட்டு, எதிரிகளுக்கு போக்குக் காட்ட அந்தப் பழங்குடி மக்கள் வாழும் காட்டுவாசி எல்லைக்குள்ளதான் இளாவுடன் பதுங்கியிருக்கனும்!” ஆனால், ரகுவின் குரலில் பயத்தின் நிழல் கூட இல்லை. அண்ணன் ராஜதேவாவின் அசாத்தியமான பலத்தின் மீதும், அவனது அதிரடி வியூகங்களின் மீதும் ரகுவுக்கு இமயமலை போன்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது!
 
 
தேவா மாமாவுக்கும், அந்த பொண்ணுக்கும் ஏதும் ஆபத்து வந்துடுச்சா என்று அவள் மீண்டும் பதறி கேட்க…
 
“அண்ணா காட்டுக்குள்ள நூறு எதிரிங்க ஆயுதங்களோடு வந்தாலும், அவனுங்களைத் தனியாளா நின்னு துவம்சம் பண்ணிட்டு, கோட்டைக்குக் கம்பீரமா திரும்பி வர்ற தில்லு தேவா அண்ணாவுக்கு இருக்கு!” என்று ரகு தன் அண்ணன் மீதிருந்த அசாத்திய நம்பிக்கையோடு நெஞ்சைத் தட்டி முழங்கினான்.
 
“அண்ணன் வருவாரு சரி மாமா… ஆனா விடியற்காலையில வேணி அக்கா தோற்றத்துல கார்ல ஏறிப் போனாளே அந்தப் பொண்ணு… அவ யாரு? அவளுக்கு ஏதாச்சும் ஆபத்து ஆயிட்டா மாமாவோட உசிரே போயிடுமே மாமா?!” என்று மலர்விழி தன் பெரிய மாமனின் பழைய ரணத்தை நினைத்து தவிப்போடு அழுதுகொண்டே கேட்டாள்.
 
“நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட்டுப் பயப்படாதீங்க மேடம்! நம்ம இளாவுக்கு காட்டைப் பத்தியும், அங்கே இருக்குற ஆபத்துகளைப் பத்தியும் நல்லாவே தெரியும். அவ சாதாரணமா எந்தச் சூழ்நிலைக்கும் பயப்படவே மாட்டா!”
 
நள்ளிரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு, ஹாலின் பக்கவாட்டு அறையிலிருந்து திடீரெனக் கேட்ட அந்தப் புதிய ஆண் குரலில் மலர்விழி திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள். அங்கே, நேற்று இரவு வைக்கோல் வண்டியில் ஏறி வந்து கைதியாக அடைக்கப்பட்டிருந்த அறையின் கதவு தற்செயலாகத் திறந்திருக்க, வெளியே ஹாலில் இளவேனிலைப் பற்றி பேசுவதை கேட்ட நம்ம ரிப்போர்ட்டர் ஜீவா, காவலாளிகளின் கண்ணில் படாமல் நைஸாகத் தப்பித்து ஹாலுக்குள் வந்து நின்றுகொண்டிருந்தான்!
 
“நம்ம இளவேனில் எத்தனையோ சவாலான களங்களையும், காடுகளையும் தன் கேமராவுக்கு முன்னாடி தைரியமா எதிர்கொண்ட ஒரு போல்டான மீடியா ரிப்போர்ட்டர்! அவளுக்கு காட்டு விதிகள் எல்லாமே அக்குவேர் ஆணிவேரா தெரியும். காட்டுக்குள்ள யானை வந்தா என்ன பண்ணணும், எதிரிங்க வந்தா எப்படி சுதாரிக்கணும்னு அவளுக்கு நல்லாத் தெரியும். அவ கூட நம்ம தேவா அண்ணனும் இருக்கும்போது, அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகாது. சோ, நீங்க பயப்படாம இருங்க!” என்று இளவேனிலின் அஞ்சாத துணிச்சலை சாட்சியாக வச்சு சமாதானம் கூறினான் ஜீவா.
 
நள்ளிரவு நேரத்தில், தேவாவின் இரும்புக்கோட்டைக்குள் முன்பின் தெரியாத ஒரு பட்டணத்துக்காரப் பையன் திடீரென வந்து, தேவா மாமாவைப் பற்றியும், காரில் சென்ற அந்தப் பெண்ணைப் பற்றியும் இவ்வளவு உரிமையாக பேசுவதைக் கண்ட மலர்விழிக்குத் தூக்கி வாரிப்போட்டது!
 
அவளது கண்கள் அச்சத்திலும், பயத்திலும் சுருங்க, ரகுவின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். “ரகு மாமா… யாரு இவன்?! இந்த நேரம்  நம்ம கோட்டைக்குள்ள வந்து நிக்கிறான்? இவன் யாரு… காரில் போன அந்தப் பொண்ணு யாரு… இங்க என்னதான் மர்மம் நடக்குது மாமா? எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது, விபரமா சொல்லுங்க!” என்று பதறினாள் மலர்விழி.
அதற்கு மேல் மலர்விழியைத் தவிக்க விடக் கூடாது என்று நினைத்த ரகு, அவளது தோள்களைப் பற்றி சோபாவில் அமர வைத்தவன்  “இவன் பேரு ஜீவா. இவனும், இளவேனிலும் மீடியா ரிப்போர்ட்டர்ஸ். நடராஜனோட சிலை கடத்தல் ஆதாரங்களைத் தேடி அண்ணனோட எல்லைக்குள்ள வந்தப்போதான் இவங்க அண்ணன்கிட்ட மாட்டிக்கிட்டாங்க…” என்று ஆரம்பித்து, இளவேனில் அனாதை இல்லத்தில் வளர்ந்தது, அவளது துணிச்சலான பேச்சு அண்ணனுக்குள் ஏற்படுத்திய சலனம், காப்பகத்து குழந்தைகளுக்காக அண்ணன் தன் தோற்றத்தை மாற்றி அவளை வேணி போல அலங்கரித்து அழைத்துப் போனது என கோட்டைக்குள் நடந்த அத்தனை ரகசியங்களையும், மர்மங்களையும் மலர்விழிக்குத் துள்ளியமாக சொல்லி முடித்தான் ரகு!
 
*****
அங்கே சுற்றிலும் பழங்குடி மனிதர்கள் ஆயுதங்களோடு நின்றிருக்க,  மரக்குவளைகளில், காட்டின் தூய்மையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு ரகசிய பானத்தைக் கொண்டு வந்து இருவரிடமும் கொடுத்தனர்.
 
பானத்தைக் குடிக்க மறுத்தால் அவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை உணர்ந்த இளவேனில், தேவாவை பார்த்து லேசாகத் தலையசைத்தாள். தேவாவும் அவளது பார்வையைப் புரிந்துகொண்டு, சற்றும் தயங்காமல் அந்த பானத்தை வாங்கி ஒரே மூச்சில் குடித்தான். இளவேனிலும் அதை வாங்கி மெதுவாக குடித்து முடித்தாள். காட்டின் அந்த மூலிகை பானத்தின் வீரியம் இருவருக்குள்ளும் மௌனத்தையும், இதமான சூட்டையும் பரப்பியது.
 
அவர்கள் குடித்து முடித்த அந்த நொடி, அந்த பழங்குடியினர் தலைவன் தன் கரகரப்பான மொழியில் ஏதோ ஒன்றைக் கேட்டு, பின்னர் சைகை மூலமாக இருவரையும் சுட்டிக்காட்டி, “நீங்க ரெண்டு பேரும் புருஷன் பெஞ்சாதியா?” என்று தங்களுக்குத் தெரிந்த உடைந்த வார்த்தைகளில் நேரடியாக கேட்டான்!
அவன் கேட்ட அந்த ஒற்றைக் கேள்வியில், இளவேனிலின் இதயம் சட்டென ‘லப் டப்’ என்று அசுர வேகம் எடுக்க, முகம் முழுக்க வெட்கமும் தவிப்பும் ஒருசேரக் குடியேற, என்ன சொல்வதென்று தெரியாமல் தன் பெரிய விழிகளால் தேவாவைத் தீர்க்கமாகப் பார்த்தாள்!
 
தேவாவோ சற்றும் பதறவில்லை. அவளது இமைகொட்டாத அந்தப் பார்வையின் ஆழத்திலேயே தன் மொத்தக் கட்டுப்பாட்டையும் இழந்தவன் போல, அவளது காந்த கண்களையே உற்றுப் பார்த்தபடியே கம்பீரமாக 
“ஆமா! நாங்க புருஷன், பெஞ்சாதிதான்… நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்!” என்றான் தேவாவின் அக்மார்க் ஆதிக்கக் குரலில், காதலின் மொத்த போதையையும் கலந்து நெஞ்சை தட்டிச் சொன்னான்.
 
அவன் சொன்ன வார்த்தையைக் கேட்டதும் இளவேனிலுக்கு அப்படியே உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. கைதியாக வந்த என்னை, இந்த ஜங்கிள் கிங் தன் பெஞ்சாதின்னு எல்லார் முன்னாடியும் அத்தனை உரிமையோடு சொல்றானே!  என்று அவள் திகைத்து நின்றாள். 
 
பழங்குடியினர் தலைவனின் முகத்தில் பெரும் மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. “தங்களின் எல்லைக்குள் தஞ்சம் புகுந்த தம்பதியரை வாழ்த்த வேண்டியது தங்களின் குல நியதி என்று உரக்கச் சத்தமிட்டவன்,எங்க குல வழக்கப்படி உங்களுக்கு இங்கேயே, இப்போதே கல்யாணம் பண்ணி வைக்கிறோம்!” என்று அதிரடியாகத் தீர்ப்பளித்தான்!
 
மறுவிநாடி, குடில் முழுக்க விசித்திரமான பழங்குடி இசை முழங்கத் தொடங்கியது. பழங்குடிப் பெண்கள் ஓடிவந்து இளவேனிலின் கைகளைப் பற்றி, அவளது நெற்றியில் காட்டின் ரகசிய மூலிகைச் சாறால் திலகமிட்டு, காட்டு மலர்களை அவளது கூந்தலில் சூட்டினர். தேவாவின் கைகளில் காட்டின் புனித கயிற்றை காப்பாகக் கட்டினர்.
 
காட்டின் அந்தப் பேரமைதிக்கு நடுவே, எரியும் தீப்பந்த சாட்சியாக, அந்த பழங்குடியினர் தலைவன் ஒரு புனிதமான மூலிக்கைக் கொடியை எடுத்து தேவாவின் கையில் கொடுக்க… தேவா தன் காதலோடு தவித்த கண்களால் இளவேனிலைப் பார்த்தபடியே, அவளது மென்மையான கழுத்தில் பழங்குடி குல வழக்கப்படியான தாலியைக் கட்டி அவளை தன் ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தின் அரசியாகச் சிறைபிடித்தான்!

காவியம் – 15

காட்டின் எரியும் தீப்பந்த சாட்சியாக, விடியற்காலை நிலவு ஒளியின் வெளிச்சத்தில்… பழங்குடி குல வழக்கப்படியான மூலிகைத் தாலியை இளவேனிலின் கழுத்தில் தேவா கட்டி முடித்த அந்த விநாடி, குடில் முழுக்கக் பழங்குடி மக்களின் மகிழ்ச்சி கூச்சல் அதிரடியாக எதிரொலித்தது! இளவேனில் தன் மெல்லிய விரல்களால் தன் கழுத்தில் தாலியைத் தொட்டுப் பார்த்தபடி, தன் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் தேவாவையே இமைகொட்டாமல் பார்த்தாள்.

திருமணம் முடித்த தம்பதியரை வாழ்த்தி, அவர்களுக்குப் பாலும் பழமும் கொடுத்து உபசரித்த பழங்குடியினர், தங்களின் குல வழக்கப்படி  அடர்ந்த காட்டிற்குள்ளே விளைந்த தேனும், திணை மாவும் கலந்த களி, காட்டு மூங்கில் அரிசியில் செய்த ஆவி பறக்கும் கஞ்சி,கனிந்த காட்டுப் பலாச்சுளைகளோடு, பாறைகளின் இடுக்கில் இருந்து சேகரித்த நெல்லித் தீம்பால் என தங்களின் பாரம்பரிய  காட்டு உணவுகளை அந்த ஆதிக்குடி மக்கள் தம்பதியருக்கு இலைகளில் பரிமாறினர். காட்டின் தூய்மையான உணவுகளின் சுவை, தேவாவிற்கும் இளவேனிலிற்கும் புதிய தெம்பையும், உடலுக்குள்  இதமான புத்துணர்ச்சியையும் கொடுத்தது.

பகல் பொழுது மெல்ல நகர்ந்து அந்தி மாலையானதும், அந்த ஆதிக்குடி மக்களின் தலைவன் தேவாவின் அருகே வந்தவர்  “தம்பி… எங்க குல வழக்கப்படி கல்யாணம் முடிஞ்சா, அன்னைக்கு இரவே நாங்க தம்பதிகளுக்கு முதலிரவு வச்சு வாழ்த்துவோம்! உனக்கும் உன் பெஞ்சாதிக்கும் விருப்பம் இருந்தா… நாங்க இப்போவே இந்த நள்ளிரவுல உங்களுக்கான முதலிரவு ஏற்பாடுகளைப் பண்றோம். உனக்குச் சம்மதமா தம்பி?” என்று நேரடியாகவே தேவாவைக் கேட்டார் அந்த தலைவன்!

தலைவன் கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நொடி, இளவேனிலுக்குத் தூக்கி வாரிப்போட்டது! அவளது இதயம் “தடா தடா”வெனத் தாளம் தப்பிக் குதிக்க, முகம் முழுக்க வெட்கமும், பெண்மைக்கே உரிய ஒரு மெல்லிய நடுக்கமும் ஒருசேரக் குடியேறியது. ‘அய்யோ!… இந்த ஜங்கிள் கிங் இப்போ என்ன சொல்லப் போறான்?’ என்ற பதற்றத்தோடு தேவாவை தீர்க்கமாகப் பார்த்தாள்.

தேவாவோ சற்றும் தயங்கவில்லை. அவளது வெட்கம் கலந்த அந்தப் பார்வையையும், அவளது இதயம் படபடவென ஏறி இறங்குவதையும் ரசித்தபடியே, அவளது காந்தக் கண்களை உற்றுப் பார்த்து  ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி, “என்ன வேனில்… மாமாவுக்குச் சம்மதம்! உனக்குச் சம்மதமாடி பார்பி டால்?” என்பது போலக் கண்ணாலேயே சம்மதம் கேட்டான்.

 

அவனது அந்த ஒற்றைப் பார்வையின் வீச்சிலும், அவனது நெருக்கத்திலும் இளவேனில் மொத்தமாகத் தன்னை இழந்தாள். ஒரு பத்திரிகையாளராக அவனுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்களை ஆராய வந்தவள், இன்று அவனது முரட்டுத்தனமான காதலில் அடியோடு கரைந்து போயிருந்தாள்!

தன் முகத்தை தேவாவிற்கு நேராகக் காட்டாமல், தரையைப் பார்த்தபடி தன் இதழோரம் வெட்கப் புன்னகையுடன், “அத்தான் முடிவுதான்… என்னோட முடிவு!” என்று மிக மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்!

அவள் காட்டிய   பச்சைக் கொடியில் தேவாவின் உதடுகளில் ஒரு மந்தகாச  புன்னகை அரும்பியது. தலைவனைத் திரும்பிப் பார்த்த தேவா, “இந்த வானத்து நிலவு சாட்சியா என் வேனில் கழுத்துல தாலி கட்டியிருக்கேன் .. உங்க முறைப்படி முதலிரவு வைக்க எங்க ரெண்டு பேருக்குமே முழுச் சம்மதம்!” என்று அழுத்தமாகக் கூறினான்.

தேவா சம்மதம் சொன்ன அடுத்த நொடி, அங்கிருந்த ஆதிவாசிப் பெண்கள் உற்சாகக் குரலெழுப்பி, இளவேனிலைத் தங்களோடு அணைத்து அழைத்துச் சென்றனர். குடிலின் ஒரு பக்கமிருந்த ரகசிய மூலிகைச் சாறுகளையும், நறுமணம் மிக்க காட்டு மலர்களையும் கொண்டு வந்து, இளவேனிலைப் பழங்குடி மரபுப்படி அச்சு அசல் ஒரு பழங்குடி இளவரசியைப் போல பேரழகாக அலங்கரித்தனர். அவளது  கூந்தல் முழுவதும் காட்டுப் பூக்களின் வாசம் அமுதாக வீச, அவளை அப்படியே மெதுவாக அழைத்து வந்தனர்.

அப்போது தங்களின் குல வழக்கப்படி, அங்கிருந்த முதிய பெண் ஒருத்தி, மணமகள் இளவேனிலின் கைகளில் காட்டின் நறுமணம் மிக்க ரகசிய மூலிகைப் பானம் நிறைந்த ஒரு மரக் குவளையை கொடுத்து ஆசிர்வாதம் செய்து  அனுப்பினாள்.

தம்பதியருக்காகத் தனியே ஒதுக்கப்பட்டிருந்த அந்த அழகிய முதலிரவுக் குடிலுக்குள் கைகளில் மூலிகைப் பானத்தோடு இளவேனிலை அனுப்பி வைத்துவிட்டு, வாசலில் பூக்களைத் தூவி அவர்கள் அனைவரும் இருட்டுக்குள் மறைந்தனர்.

குடிலுக்குள் நுழைந்த இளவேனிலின் நாசி, அங்கே ஏற்றி வைக்கப்பட்டிருந்த மூலிகை விளக்குகளின் நறுமணத்தால் திணறியது. மெதுவாகத் தன் பார்வையைத் திருப்பியவள்… அப்படியே அதிர்ச்சியிலும், மயக்கத்திலும் உறைந்து போய் நின்றுவிட்டாள்!

அங்கே குடிலின் நடுவே இருந்த அந்தப் புல் மெத்தையின் மீது… எப்போதுமே முரட்டு பூட்ஸும் ஜீன்ஸும் அணியும் அந்தத் தேவா, இப்போது தன் அடையாளங்கள் எதையுமே காட்டாமல், பழங்குடி மனிதர்கள் அணியும் பாரம்பரிய எளிய உடைகளை உடுத்திக் கொண்டு, தன் அக்மார்க் முரட்டுத் தனத்தோடு ஒரு காட்டு ராஜாவைப் போலக் கம்பீரமாக அமர்ந்திருந்தான்! அவனது காந்தக் கண்கள், குடிலுக்குள் நுழைந்த தன் பார்பி டாலின் அழகைச் சிறைபிடிக்க அனலாய்க் காத்துக்கொண்டிருந்தன!

தேவா அவளைத் தன் மார்போடு லாக் செய்து, அவளது உடையழகைப் பாராட்டி அவள் காதோரம் கிசுகிசுத்த அந்த நொடி… இளவேனிலுக்குள் பழைய துறுதுறுப்பான மீடியா ரிப்போர்ட்டர் திமிர் மீண்டும் தலைதூக்கியது! அவனது முரட்டு அணைப்புக்கு நடுவிலும் சற்றும் அசராதவள், தன் பெரிய கண்களை உருட்டி தேவாவின் முகத்தை நேராக ஏறிட்டுப் பார்த்தாள். அவளது முகத்தில் வெட்கம் அடியோடு மறைந்து, உதடுகளில் ஒரு குறும்புத்தனமான பளபளப்பு குடியேறியிருந்தது. தேவாவின் அகன்ற நெஞ்சில் தன் இரு கைகளையும் வச்சு லேசாக முட்டியபடி,

“ஓஹோ… என்னைப் பார்த்தா உங்களுக்கு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பொம்மைக்கு டிரஸ் மாட்டினது மாதிரி இருக்கா ஜங்கிள் கிங்? நீங்க மட்டும் இப்போ என்னவாம் வாழ்கிறீங்க? எப்போப் பார்த்தாலும் முகத்துல காடு போல முரட்டுத் தாடியும், உடம்பில் கருப்புச் சட்டையும், முரட்டு ஜீன்ஸும் போட்டுக்கிட்டு… போதாக்குறைக்கு சிகரெட்டைப் பிடிச்சு புகையை என் மேல ஊதித் தள்ளுவீங்களே… பெரிய தாதா! இப்போ என்னடான்னா… ஏதோ திருவிழாவுல புலிவேஷம் போட்ட மாதிரி, இந்தக் குட்டை டிரௌசரை மாட்டிக்கிட்டு நிக்கிறீங்க!” என்று அப்பட்டமாகக் கூறிவிட்டு, அவனது மார்பில் அப்படியே சாய்ந்தபடியே தன் முத்துப்பற்கள் தெரியப் பேரழகாக சிரித்தாள் இளவேனில்!

காட்டின் பேரமைதியைக் கிழித்துக் கொண்டு, அந்தக் குடிலுக்குள் எதிரொலித்த அவளது சிரிப்பொலி… தேவாவின் நெஞ்சுக்குள் பலத்த காதலின் அதிர்வுகளைக் கடத்தியது! தன் பெயரைக் கேட்டால் உலகமே நடுங்கும், தம்பி ரகுவே தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மறுவார்த்தை பேசாமல் நிற்பான் ஆனால் இந்த ஒல்லிப் பிச்சான் ரிப்போர்ட்டர் மட்டும் தன்னைத் தாதா என்றும் பாராமல், இவ்வளவு உரிமையோடு வளைத்து வளைத்து கலாய்த்துச் சிரிக்கிறாளே என்ற எண்ணம் அவனது ஆண்மையை உசுப்பியது.

அவள் குலுங்கிச் சிரிக்கும் அழகையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த தேவாவின் உதடுகளில் ஒரு முரட்டுப் புன்னகை விரிந்தது. அவளது சிரிப்பில் அவளது உடம்பு குலுங்கியதில், கூந்தலில் இருந்த காட்டுப் பூக்களின் வாசம் அப்படியே அவனது நாசியைத் துளைத்து அவனுக்குள் கிறக்கத்தை ஏற்றியது!

“ஏய் வேனில்… ரொம்பத் தில்லுதான்டி உனக்கு! இந்தத் தேவாவோட உடையைக் கிண்டல் பண்ணிச் சிரிக்கிற தைரியம் இந்த உலகத்துல உனக்கு மட்டும்தான்டி வரும்!” என்று தன் கரகரப்பான காந்தக் குரலில் முணுமுணுத்தவன், அடுத்த விநாடி அவளது இடையிலிருந்த பிடியை இன்னும் ஆக்ரோஷமாக இறுக்கினான்!

அவளைத் தன் இரும்பு உடம்போடு அடியோடு ஒட்டி நெருக்கிய அந்த நொடி… அவளது குறும்புச் சிரிப்பு சட்டென்று அடங்கியது! தேவாவின் முகத்தின் நெருக்கமும், அவனது மூச்சுக்காற்றின் வெப்பமும் முகத்தில் அடிக்க… இளவேனிலின் மூச்சுக்காற்று மீண்டும் தாளம் தப்பி குதிக்கத் தொடங்கியது!

அவளது நெஞ்சுப் பகுதி படபடவென ஏறி இறங்குவதை தன் மார்பில் உணர்ந்த தேவா, தன் முகத்தை மெதுவாகத் தாழ்த்தி அவளது காதோரம் கொண்டு சென்றான். அவனது ட்ரிம் செய்யப்பட்ட தாடியின் முடிகள் அவளது கன்னத்தில் உரசி அவளுக்குள் ஒரு மாய சிலிர்ப்பை ஏற்படுத்த,  “வேனில்… உனக்கு என்னை பிடிச்சிருக்குதானேடி?” என்று மிக மெதுவாகக் கேட்டபடி, அவளது காது மடலின் கீழே தன் இதழ்களால் சுடு முத்தத்தை பதித்தான்.

அவனது அதிரடி முத்தத் தீண்டலிலும், இதழ்களின் வெப்பத்திலும் இளவேனில் ஒட்டுமொத்தமாகப் பிரம்மித்துப் போய் கிறங்கினாள். உடம்பெல்லாம் ஒரு சுகமான நடுக்கம் எடுக்க, தன் பிடியை அவனது அகன்ற தோள்களில் இன்னும் பலமாக்கிக் கொண்டாள். அவனது நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு,

“பிடிக்காமத்தான்… உங்க மேல இப்படி அட்டை போல ஒட்டிக்கிட்டு இருக்கேனா ஜங்கிள் கிங்? பிடிக்காமையா இவ்வளவு தூரம் உங்க பின்னாடியே ஓடி வந்திருக்கேன்?” என்று காதலின் மொத்தப் போதையையும் தன் குரலில் குழைத்துக் கேட்டாள் இளவேனில்.

அவள் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையில் தேவாவின் நெஞ்சுக்குள் இருந்த முரட்டு வேங்கை அடியோடு அடங்கிப் போனது. அவளது இடையிலிருந்த தன் பிடியை இன்னும் இறுக்கமாக வளைத்தவன், அவளது முகத்தை நேருக்கு நேராகத் தூக்கி, அவளது சொக்கிப் போயிருந்த காந்தக் கண்களைத் தன் விழிக்குள் சிறைபிடித்தான்.

“அப்படின்னா… நம்ம ஃபர்ஸ்ட் நைட்டை ஆரம்பிக்கலாமா பார்பி டால்?” என்று தன் காதலின் போதை மொத்தமும் நிறைந்த கரகரப்பான குரலில், கண் சிமிட்டிக் கேட்டான் தேவா.

இளவேனில் சற்றும் அசரவில்லை. அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு, தன் உதடுகளில் காதலான குறும்புப் புன்னகையுடன், “நான்தான் எப்பவோ சம்மதம் சொல்லிட்டேனே ஜங்கிள் கிங்… நீங்கதான் இப்போ என்கிட்ட தேவையில்லாம பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க அத்தான்!” என்று ஒரு அழகான ராகத்தோடு இழுத்துக் கூறினாள்!

அவள் அத்தான் என்று ராகம் பாடி தன் சம்மதத்தை அனலாய் வாரி இறைத்த அந்த நொடி… தேவாவின் சுயக்கட்டுப்பாடு ஒட்டுமொத்தமாய் அமுங்கிப் போனது! அவளது இதழ்களில் இருந்து வெளிவந்த அந்த மதுரமான வார்த்தைகள் அவனது ஆண்மையின் அத்தனை அணைக்கட்டுகளையும் உடைத்தெறிந்தது. அதே விநாடி, அங்கே வைக்கப்பட்டிருந்த ரகசிய மூலிகைப் பானத்திலிருந்து வீசிய நறுமணம் இருவருக்குள்ளும் ஒரு விசித்திரமான போதையை ஏற்றியது.

தேவா அந்த மூலிகைப் பானத்தைக் கையில் எடுத்து, “ஆதிவாசி மக்கள் கொடுத்த மங்களப் பானமடி இது… முதல்ல நீ குடிச்சுட்டு கொடு,” என்று அந்தக் குவளையை அவளது இதழ்களுக்கு நேராக நீட்டினான்.

இளவேனில் தன் இமைகளைத் தாழ்த்தியபடியே, தேவாவின் கைகளில் ஏந்தியிருந்த அந்த மரக் குவளையிலிருந்து அந்த மூலிகைப் பானத்தை மெதுவாக ஒரு மடக்கு குடித்தாள். காட்டு மூலிகையின் அந்த வீரியம் அவளது தொண்டைக்குள் இறங்கி உடம்பெல்லாம் ஒரு புதிய சிலிர்ப்பையும் சூட்டையும் பரப்பியது. அதன் பிறகு, அவளே அந்தக் குவளையைத் தன் மென்மையான கைகளால் பிடித்து தேவாவின் இதழ்களுக்குக் கொண்டு செல்ல… தேவாவும் அவளது காந்தக் கண்களைப் பார்த்தபடியே அந்தப் பானத்தை ஒரே மூச்சில் குடித்து முடித்தான்! குவளையைக் கீழே வைத்த சில நிமிடங்களில், இருவருக்குள்ளும் காட்டின் அந்த மூலிகைப் போதை உச்சக்கட்ட கிறக்கத்தை ஏற்றியிருந்தது.

அவளை அப்படியே தன் இரு கரங்களால் ஒரு மலரைப் போல அள்ளியெடுத்தான் தேவா. காட்டின் அந்தப் பேரமைதிக்கு நடுவே, குடிலின் நடுவிலிருந்த புல் மெத்தையின் மீது அவளை மெதுவாகக் கிடத்தியபோது… இளவேனிலின் இதயம் அசுர வேகத்தில் அடித்துக் கொண்டது.

எரியும் மூலிகை விளக்கின் மங்கலான வெளிச்சம் அவளது வெட்கத்தில் சிவந்திருந்த முகத்தில் பட்டுப் பிரதிபலித்தது. அவளது தவிப்பைக் கண்டவன், அவளது நெற்றியில் தன் இதழ்களால் அழுத்தமாக ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு, “உனக்கு ஓகே வாடி? உன் உடம்பு ஏதும் பண்ணுதா… அத்தான்கிட்ட சொல்லிடு,” என்று தன் முரட்டுத்தனத்தையும் மீறிய பேரன்போடு கேட்டான் தேவா.

அவனது அந்த அதீத அக்கறையில் உருகிப்போன இளவேனில், “எனக்கு எந்த வலியும் இல்ல அத்தான் …” என்று முணுமுணுத்தபடி, அவனது கழுத்தில் தன் கைகளைப் போட்டு இன்னும் நெருக்கமாக வளைத்துக் கொண்டாள்!

 

அவளது தீண்டலில் அவளது கூந்தலில் இருந்த காட்டுப் பூக்கள் மெத்தையில் உதிர்ந்து நறுமணத்தைப் பரப்ப, தேவா அவளுக்கு மேலாகத் தன் இரும்பு உடம்பைச் சாய்த்தான். அவனது காந்தக் கண்கள் அவளது இதழ்களையே தாகத்தோடு வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, இளவேனில் தன் இமைகளைத் தாளாமல் இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

“வேனில்… இமைகளைத் திறந்து உன் மாமனைப் பார்டி…” என்று தேவாவின் போதை நிறைந்த ஹஸ்கி குரல் அவளது முகத்தில் மோதியது.

அவள் மெதுவாகத் தன் கண்களைத் திறந்து அவனது பார்வையின் ஆழத்தைப் பார்த்த அந்த விநாடி… தேவாவின் இதழ்கள் அவளது நெற்றியில் ஆழமான முத்திரையைப் பதித்தன! அங்கிருந்து மெல்லக் கீழே இறங்கிய அவனது இதழ்களின் வெப்பம், அவளது மூக்கு நுனியிலும், வெட்கத்தில் துடித்த கன்னங்களிலும் காதலின் தாகத்தைத் தீர்க்காமல் பரவியது.

அடுத்த விநாடி, தேவாவின் முரட்டுத்தனமான ஆதிக்கக் குறும்புகள் அனலாய்த் தொடங்கின! அவளது துடித்த இதழ்களைச் சற்றும் யோசிக்காமல் ஒரு ஆக்டோபஸாய் வளைத்துக் கவ்விக்கொண்டான் தேவா. அவளது இதழ்களிலிருந்து அள்ள அள்ளக் குறையாத மதுரசத்தை அவன் காதல் வேட்கையோடு  அருந்தத் தொடங்க, அவனது அந்த முரட்டு முத்தத்தில் மொத்தமாய் அவனிடம் சரணடைந்தாள் அந்த மங்கை!

அவனது தாடியின் முடிகள் தன் முகமெங்கும், மென்மையான கழுத்து வளைவிலும் குத்தி ஒரு கூச்சத்தை ஏற்படுத்த… இளவேனில் அவனது  தீண்டலைத் தாங்க முடியாமல், “அத்தான்… குத்துதுடா மாமா… மெதுவா…” என்று நெளிந்து கொண்டு அவனது அகன்ற நெஞ்சைத் தள்ள முயன்றாள்.

ஆனால் தேவா விடுவானா? அவளது இரண்டு மெல்லிய கைகளையும் தன் பலமான கையில் பற்றி, அவளது தலைக்கு மேலே கொண்டு வைத்து அப்படியே இரும்புப் பூட்டாய்ப் பூட்டினான்!

“நெளியாதடி  பார்பி டால்… இந்த ஜங்கிள் கிங்கோட அசல் முரட்டுத்தனம் முழுவதையும் இன்னைக்கு நீ பார்க்கப் போற!” என்று அவளது காதோரம்  கிசுகிசுத்து, அவளது மென்மையான காது மடலைத் தன் இதழ்களால் மெதுவாகக் கடித்து வம்பு இழுத்தான் தேவா.

அவனது அந்த ஆதிக்கக் குறும்புத் தீண்டலில் இளவேனில் உடம்பெல்லாம் நடுங்கிப் போனாள். தன் கைகளை அவனது இரும்புப் பிடியிலிருந்து ஒருவழியாக விடுவித்து, அவளது இரு கரங்களாலும் தேவாவின் அகன்ற தோள்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். அவளது மெல்லிய விரல்கள் அவனது இரும்பு முதுகில் ஆழமான நகக் கீறல்களை பதிக்கத் தொடங்கிய அந்த நொடி… தேவாவின் இதழ்கள் அவளது இதழமுதை அள்ளிக் குடிக்கும் தீராத வெறியோடு மீண்டும் அவளை வளைத்துக் கொண்டான்!

அவனது ஆதிக்க முத்தத்தின் வீச்சில் இளவேனில் ஒட்டுமொத்தமாகத் தன்னை இழந்தாள். மூச்சுத் திணறி அவளது இதழ்கள் லேசாகப் பிரிய முயன்றபோது, தேவாவின் உதடுகள் இன்னும் ஆக்ரோஷமாக அவளைச் சிறைபிடித்து காதலின் போதையை அவளுக்குள் இறக்கின.

அடுத்த விநாடி, அவளது முன் ஆடைகளின் முடிச்சுகளை அவன் மெதுவாக அவிழ்த்து விட்டான். காட்டின் மங்கலான மூலிகை வெளிச்சத்தில், ஆடை விலகி நின்ற அவளது ரகசிய ரெட்டை கவிதை அழகில் மொத்தமாகச் சொக்கிப் போய் நின்றான் அந்த முரட்டு வேங்கை! தன் பார்வையை அவளது பேரழகிலிருந்து விலக்க முடியாமல் உறைந்தவன், “உன் மாமன் இந்த ரெட்டை கவிதைகளை இதழ்களால் வாசிக்கவாடி என் பார்பி டால்?” என்று அவளது பெண்மையிடம் காதலோடு யாசகம் கேட்டான் தேவா!

அவனது அந்தக் கேள்வியில் இளவேனில் வெட்கத்தின் எல்லைக்கே போனாள். முகம் சிவந்துபோய், “போ அத்தான்…” என்று முணுமுணுத்தபடியே, தன் கைகளால் அவனது மார்பில் செல்லமாகக் குத்தினாள்.

அவனோ அவளது அந்தச் செல்ல அடிகளைத் தன் நெஞ்சில் விழுந்த தூசு போல லேசாகத் தட்டி விட்டு, அவளது அந்த ரெட்டை கவிதை அழகைத் தன் இதழ்களால் அணு அணுவாக வாசிக்கத் தொடங்க… அவளோ தாங்க முடியாத காதலின் தவிப்போடு அவனது அணைப்புக்குள் உருகித் தீர்ந்தாள்!

அவனது இதழ்கள் அவளது ஆடை விலகிய உடலெங்கும் வேங்கையைப் போல மேய்ந்து திரிந்தன! அவளது பெண்மையின் அத்தனை மலர் ஆடைகளையும் ஒட்டுமொத்தமாகத் தகர்த்து எறிந்த தேவா, அவளது ஆதிக்க அழகில் முற்றிலும் மயங்கிப் போயிருந்தான். அவளது நாபிக் குழியில்  இதழ்களால் எச்சில் தெறிக்க அனலாய் முத்தமிட்டான்!

“வேனில்… வேனில்…” என்று  நள்ளிரவுக் காற்றில்  ராகம் பாடியபடியே, அவளது மேனி முழுவதையும் தன் முத்தங்களால் நிரப்பினான் தேவா. அவனது ஒவ்வொரு சுடுமுத்தத்தின் வீச்சிலும், இளவேனிலின் அடிவயிற்றுக்குள் ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் ஒரே நேரத்தில் சிறகடித்துப் பறப்பது போன்ற  மாய உலகத்துக் கிறக்கம் பிறந்தது!

அவள் முன் மேனியிலிருந்து மெல்லக் கீழே இறங்கிய தேவாவின் இதழ்கள், அவளது கால்களில் அணிந்திருந்த இரு கால் கொலுசுகளின் மீதும் தன் முத்திரையைப் பதித்தன. அவளது வாழைதண்டு  கால்களில் அவனது இதழ்கள் தாகத்தோடு தீண்டிய மாத்திரத்தில், இளவேனில் அப்படியே நெளிந்து போனாள்.

“அச்சோ… விடுங்க அத்தான்! எனக்கு ரொம்ப வெட்கமா இருக்குடா மச்சான் …” என்று தன் கைகளால் அவனது முகத்தைத் தடுத்து தவிக்க முயன்றாள்.

“எனக்கு உன்னோட அழகு எல்லாமே வேணும்டி பார்பி டால்!” என்று முரட்டுத்தனமாகக் கூறியவன், வெட்கத்திலும் காதலின் போதையாலும் பெண்மையின் ஒட்டுமொத்தக் குவியலாய் குலுங்கி நின்ற அவளை ஆசையோடு அணு அணுவாக ரசித்துப் பார்த்த அடுத்த விநாடி, அவளது காதலின் அத்தனை எல்லைகளையும் உடைத்துக் கொண்டு தேவாவின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது! அவனது அந்த அசாத்திய வேகத்தைத் தாங்க முடியாமல், இளவேனில் தன் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு, “வேகத்தைக் குறைங்க அத்தான்…மெதுவா அத்தான்…” என்று தவிப்போடு முணுமுணுத்தாள்.

“ஹ்ம்ம்… முடியாதுடி! கொஞ்சம் பொறுத்துக்கோடி என் செல்லமே…” என்று தேவாவின் போதைக் குரல் அவளது காதோரம் உரச, அவன் அவளது காதலின் ஆழத்திற்குள் மெல்ல மெல்ல நுழையத் தொடங்கினான்!

அவனது முதல் அனல் தீண்டலில், வலி கலந்த பேரன்பின் சுகத்தைத் தாங்க முடியாமல், “அத்தான்… அத்தான்…” என்று அலறியபடி அங்கிருந்த புல் மெத்தையைத் தன் பிஞ்சு விரல்களால் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டாள் இளவேனில்! அவளது அந்த தவிப்பைக் கண்ட தேவா, அவளது வலியைத் தன் முத்தங்களால் கரைக்க எண்ணி, அவளது இதழ்களை மீண்டும் மீண்டும் ஆக்ரோஷமாகத் தன் இதழ்களால் கவ்விக்கொண்டான். அவளைத் தனக்குள்ளேயே முழுமையாகக் கொண்டு வந்து, அவளது பெண்மையின் ரகசிய உலகத்திற்குள் முதன்முதலாய் நுழைந்து அடியோடு லாக் செய்தான் அந்த முரட்டு தேவா!

அவளின் பேரழகின் அத்தனை அங்கங்களையும் தன் இதழ் முத்தங்களால் மீண்டும் மீண்டும் முத்தாடி பாராட்டித் தீர்த்துக் கொண்டாடினான். அவளோ அவனது அகன்ற மார்பில் தன் இதழ்களைப் பதித்து ஆழமாக முத்தமிட்டு, அவனது ஆண்மையின் வேகத்தை இன்னும் இன்னும் கூட்டினாள்! இருவருமாக அந்தக் காட்டின் தனிமையில், கட்டில் ஏதும் இல்லாமல் தங்களின் உன்னதமான மன்மதப் போரைப் புரிந்தார்கள். அங்கே… அந்தப் புல் மெத்தையில், பெண் மானை ஆண் சிங்கம் வேட்டையாடியதா?, இல்லை அந்த முரட்டு ஆண் சிங்கத்தை பெண் மான் தன் பேரன்பால் வளைத்து வேட்டையாடியதா? என்று தெரியாத அளவுக்கு இருவரது காதலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கரைந்தது!

 

வெளியே உலகத்திற்குத் தான் ஒரு முரட்டு தேவா என்றாலும், தன் வேனிலின் அக்மார்க் காதலுக்கு முன்னால் இன்று அவன் அடியோடு சரணடைந்து போயிருந்தான். அவளது மென்மையான உடலை ஒரு பூவைப் போல மிக நளினமாகக் கையாண்டு, தன் அசாத்தியமான காதலை அந்த நள்ளிரவுக் குடிலில் என்றென்றைக்குமாய் சாட்சியமாக்கினான்!

அந்தப் பேரன்பின் உச்சக்கட்ட சங்கமத்திற்குப் பிறகு… காட்டின் நள்ளிரவுக் காற்று மெல்லத் தணிந்து வீச, குடிலுக்குள் ஒரு அமைதியான காதல் நிசப்தம் குடியேறியது. புல் மெத்தையில் தேவாவின் அகன்ற இரும்பு மார்பின் மீது, தன் முகத்தைப் புதைத்தபடி களைப்பில் மெல்லக் கண்மூடிப் படுத்திருந்தாள் இளவேனில்.

ஆனால், தேவாவின் கண்கள் மூடவில்லை! அவனது வலது கை மெதுவாக இறங்கி, இளவேனிலின் இடது நெஞ்சுப் பகுதியின் மீது மிக மென்மையாக அமர்ந்தது.

அங்கே… “லப்-டப்… லப்-டப்…” என்று மிக வேகமாக, அதே சமயம் ஒரு புதிய நளினத்தோடு துடித்துக் கொண்டிருந்தது அந்த இதயம்!

அது சாதாரண இதயம் இல்லை… தன் உயிரினும் மேலாக நேசித்து, விபத்தில் பறிபோன தன் அத்த மகள் கிருஷ்ணவேணியின் இதயம்! இன்று தன் முன்னால் தன் மனைவியாகச் சரணடைந்து கிடக்கும் இந்த இளவேனிலுக்குள், வேணியின் இதயம் துடிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை வருடப் பெரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இன்றைய இந்த உணர்ச்சிப் பெருக்கான முதல் தீண்டலின் போது, அவளது இதயம் ஏதேனும் திணறியிருக்குமோ?, அவளது உடம்பு ஏதும் பாதிப்படைந்திருக்குமோ? என்ற பயமும், பதற்றமும் ஒரு  காதலனாகவும் தேவாவின் நெஞ்சுக்குள் அலைமோதியது!

தன் உள்ளங்கையின் வழியே அவளது நெஞ்சுப் பகுதியின் துடிப்பை அணு அணுவாக ஆராய்ந்தான். அவளது இதயத் துடிப்பு சீராக, அதே சமயம் காதலின் கிறக்கத்தில் இப்போதும் லேசான வேகத்தோடு துடிப்பதை உணர்ந்த தேவாவின் நெஞ்சில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது.

நெஞ்சின் மீது இருந்த தன் கையை மெதுவாக நகர்த்தி, அவளது முகத்தை அள்ளித் தன் பக்கம் திருப்பியவன்… தூக்கக் கலக்கத்தில்  இருந்த அவளது நெற்றியிலும், இதயம் துடிக்கும் இடத்திற்கு நேர் மேலாக அவளது நெஞ்சின் மீதும் மீண்டும் மீண்டும் கண்ணீரோடு முத்தமிட்டான்! அவளுக்குள் இருக்கும் தன் வேணியையும், அவளைத் தன்னுள் தாங்கி நிற்கும் தன் வேனிலையும் ஒரே நேரத்தில் தன் காதலால் ஒட்டுமொத்தமாய் மூழ்கடித்தான் இந்த முரட்டு தேவா!

 

17 thoughts on “கள்ளோ காவியமோ”

  1. I nuovi casino non aams, [url=https://www.mmdc.edu.in/puntate-sportive-vincite-come-massimizzare-le-tue/]https://www.mmdc.edu.in/puntate-sportive-vincite-come-massimizzare-le-tue/[/url] offrono un’ampia varietГ  di giochi|un’ampia selezione di giochi|una vasta gamma di giochi|diverse opzioni di intrattenimento. Sono piattaforme|siti|portali|servizi dove gli utenti possono divertirsi in modo sicuro|giocare in modo protetto|divertirsi in un ambiente protetto|giocare in tranquillitГ .

  2. Wait, it is extremely interesting the way the digital gambling scene keeps shifting towards highly narrative gameplay lately.
    It’s no longer simply about the standard rows, instead focused on the experience starting from
    that initial casino needforslots entry to the final result.
    I’ve always found that actually the key factor of every game remains remaining focused with
    one’s funds, something that is more difficult than what it looks like.
    I’ve observed how the top gamblers are the ones who understand
    exactly when to walk away, regardless if they won or are down. Tell me, what
    would be your personal rule when it comes to each day’s sitting?
    Please let the group know whether honesty by these sites
    has been becoming more common this 2026!

  3. Welcome to our exciting world of 1xbet casino online, [url=https://www.transferwerkt.nl/1xbet-117/]https://www.transferwerkt.nl/1xbet-117/[/url], where entertainment await! Dive into an array of games like slots, poker, and roulette. Discover fantastic bonuses and deals that enhance your gaming experience.

  4. Я думаю, что Вы не правы. Я уверен. Пишите мне в PM, пообщаемся.
    afun casino, [url=https://afun-play.com.mx/]afun[/url] proporciona una gran opciones de diversiГіn. Las personas pueden experimentar un momento especial. El sitio es fГЎcil de usar y ofrece bonos a quienes se registran.

  5. В этом что-то есть. Большое спасибо за объяснение, теперь я буду знать.
    зеркало 1xbet, [url=https://1xbet-e0o2i.sbs/]1хбет официальный сайт вход[/url] — это отличный способ обойти блокировки. Ставочники могут легко доступить платформу, используя альтернативные ссылки. Сайты подобного рода обеспечивают стабильный доступ и быструю работу. Пользователи ценят такие варианты, чтобы поддерживать свои активности.

  6. Нужно быть оптимистом.
    зеркало 1xbet, [url=https://1xbet-v17up.icu/]https://1xbet-v17up.icu[/url] доступно для пользователей, которые ищут альтернативные способы доступа к сайту. Такой ресурс дарит шанс ставок на спорт в любых условиях. Получите зеркало 1xbet и получите удовольствие всеми преимуществами онлайн-гейминга.

  7. Honestly, I have noticed how today’s casinos
    tend to be becoming much faster, however finding a
    place which truly mixes the huge title variety and strong backend stability proves to be quite the tough challenge.
    In particular, whereas most users look just on those big welcome packages,
    I’ve found the fact that reading the detailed play jonny login is much highly valuable for ensure the withdrawal system
    stays smooth and transparent. Another point stands as that
    phone access has turned into completely critical since nobody likes so as to
    be tied to the PC these days. Do you guys feel that these
    loyalty clubs really provide enough incentive for consistent players, or
    is it mainly merely fancy marketing? I’d love so as to see your takes about
    this, notably whenever you have experienced some unique payouts in the past few weeks.
    Regardless, remain smart out playing plus let us start this conversation active!

  8. An impressive share! I’ve just forwarded this onto
    a co-worker who has been doing a little research on this.
    And he actually ordered me lunch due to the fact that I discovered
    it for him… lol. So let me reword this….
    Thanks for the meal!! But yeah, thanx for
    spending some time to discuss this issue here on your internet site.

  9. Someone necessarily assist to make significantly articles I would state.
    This is the first time I frequented your web page and thus far?
    I amazed with the research you made to make this actual
    publish amazing. Great process!

  10. Καλησπέρα στην παρέα, συχνά διαβάζω
    σχετικά θέματα, αναλογίζομαι με ποιο τρόπο έχει αλλάξει η αίσθηση του
    τζόγου στην εποχή μας. Προσωπικά, θεωρώ
    πως η διαχείριση είναι το πιο σημαντικό στοιχείο, κυρίως
    αν αναφερόμαστε για chicken road,
    επειδή αν στερείσαι πειθαρχία απλά
    ξεφεύγεις από το σκοπό. Φαίνεται εντυπωσιακό πως μερικοί παίκτες βρίσκουν πάντα νέες μεθόδους για κέρδη, ενώ άλλοι στηρίζονται αποκλειστικά στην μοίρα.

    Παράλληλα, διαπίστωσα πως τα
    ζωντανά τραπέζια δίνουν καλύτερη αδρεναλίνη, ωστόσο απαιτείται τρομερή εγρήγορση με τα όρια.
    Πείτε μου, εσείς παιδιά τι πλάνο προτιμάτε τις περισσότερες φορές;
    Υπάρχει κάποιο συγκεκριμένο συμβουλή για να κρατάμε
    το ενδιαφέρον ευχάριστο και ασφαλές μακριά από άσχημα αποτελέσματα;

  11. I’ve noticed over the past few months that moving to multiplier games truly
    changes the way you look at risk in the middle of a
    session. It’s quite intriguing how community tools can truly render a lonely experience appear like a shared effort.

    Typically, I choose to watch the live data for a while prior to setting my personal aviator, since it assists
    in detecting trends simply if all of us know that any flight is mathematically
    unique. Another observation is how fixing an auto collect point really guards your sanity whenever the value commences climbing rapidly.
    From my perspective, staying disciplined is way
    highly important rather than trying to reach a extreme win every single turn. Tell me,
    do you all find that wagering during specific times really impacts the overall atmosphere of the community?
    Moreover, what is your best number you have actually managed to grab
    ahead of the inevitable end?

  12. Recently, Personally, I’ve been wondering concerning the way online
    gambling remains growing very quickly. It is truly wild meant to observe precisely how aggressive every niche
    stays just currently. A lot of players usually search toward the spino gambino review
    to get the greatest opening, and it really demonstrates why
    knowledge behind the clauses stands crucial. the author have
    witnessed how VIP schemes have growing highly
    valuable compared to just one-time offers. Moreover, this appears
    why blockchain options are helping payouts much more rapid over bank
    systems. Is it better staying loyal toward a specific brand as opposed to
    must one always stay shifting around meant to grab unique bonuses?
    Tell me, the primary tactic regarding managing the turnover terms?
    I hope you’ll let me learn exactly what others feel!

  13. Γεια χαρά σε όλους, εδώ και λίγο καιρό το τοπίο με τα διαδικτυακά casino στη χώρα μας,
    έχω παρατηρήσει ότι η εξυπηρέτηση
    έχει αλλάξει πάρα πολύ. Για μένα, πίστευα ότι
    η τύχη παίζει τον πρώτο ρόλο, όμως πλέον καταλαβαίνω ότι το να βρεις μιας έγκυρης πλατφόρμας
    είναι η μισή αρχή. Ενώ δοκίμαζα διάφορα, σκέφτηκα να ρίξω μια ματιά το billionairespin επειδή τα παιχνίδια του μοιάζουν αρκετά δουλεμένα
    και η ροή είναι άψογη πουθενά. Ακόμα ένα σημείο είναι ότι η ασφάλεια πρέπει να είναι το πρώτο
    μας μέλημα, διότι κανείς δεν θέλει να
    αντιμετωπίσει προβλήματα με τις πληρωμές του.
    Εσείς τι γνώμη διαθέτετε για τα
    νέα slots; Θεωρείτε πως η συνέχεια πηγαίνει αποκλειστικά στα ζωντανά
    τραπέζια; Θα είχε ενδιαφέρον να διαβάσω τις σκέψεις σας για να ανταλλάξουμε πληροφορίες!

  14. It is actually interesting how the gaming landscape has evolved since I first started placing wagers.
    That sheer variety of needforslots titles accessible today
    stays truly wild. One finding I’ve seen stays how
    that player base is now seeking way higher clarity regarding every online casino they visit since safety really is now
    the primary priority. One more thing stays that digital withdrawals are fast turning
    into the standard requirement, which makes a much smoother journey in general.
    Have you observed if reward programs is actually worth the effort these days?
    Personally I often wonder if that special terms are becoming an little too complex for to clear.
    Which type of mechanics do people see truly fun when trying an new
    game? I m waiting forward to reading the thoughts on the matter!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top