ATM Tamil Romantic Novels

மெல்ல மெல்ல காதல் வருதே

 

9.காதல்

 

 

 

 

மாறன் கோபத்தில் சந்தியாவை விட்டுட்டு அலுவலகத்திற்கு சென்றிருந்தான்…

 

என்ன ப்பா சந்தியாவை வீட்ல விட்டுட்டு நீ மட்டும் ஆபிஸ் போற..என்று நாயகி ஆரம்பிக்க.. 

 

எனக்கு முக்கியமான வேலை இருக்கு..அவ பொறுமையா வரட்டும் நான் முன்னாடி போறேன்.என்று அவளை பார்த்து கொண்டே கூறினான்..சந்தியா சமையலறையில்  வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போது நாயகி ஹாலில் அமர்ந்திருந்த கண்மணியை பார்த்தார்.

அத்தை அவளையே தான் பாக்கிறார் மாறன்..”இப்படி போனா மாறன் மனசை அவ மாத்திடுவா. ஏதாவது பண்ணி அந்த பொண்ணை இந்த வீட்டை விட்டு அனுப்பணும்.”

 

கண்மணி கோபமாக பல்லைக் கடித்தாள்.நானும் அதைத்தான் சொல்லிட்டு இருக்கேன் அத்தை. அவ இங்க இருக்கிற வரைக்கும் மாறன் என்னை பார்க்கவே மாட்டான்.”அப்போது சந்தியா தண்ணீர் எடுக்க ஹாலுக்கு வந்தாள்.

நாயகி அவளை பார்த்ததும் குரலை உயர்த்தினார்.

 

“ஏம்மா… சந்தியா இந்த வீட்டுல இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போற?”சந்தியா திடுக்கிட்டு நின்றாள்.

 

“அத்தை…?”

 

“உனக்கு வெட்கமா இல்லையா? என் மகன் பரிதாபப்பட்டு உதவி பண்ணினான். அதுக்காக அவன் வாழ்க்கையிலேயே இடம் பிடிக்கணுமா?உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருக்கு அப்படி பட்ட உன்னைய என் பையன் ஏதோ பாவம் பார்த்து காப்பாத்தி விட்டுருக்கான்..அவனோட வாழ்க்கையை நீ கெடுக்கலாமா?

 

சந்தியாவின் முகம் வாடிப் போனது.

“நான் அவர் வாழ்க்கையை கெடுக்க  நினைக்கல …நான் வேண்டாம்னு தான் சொன்னேன் மாறன் சார் தான் கேட்கல..என்று கூறினாள்..

 

கண்மணி இடையில் கத்தினாள்.உனக்கு இந்த வீட்டுல மட்டும் இல்ல மாறன் கிட்டயும் உனக்கு எந்த உரிமையும் இல்லை.”

 

 

 

நாயகியும் அவளை பார்த்து..நீயா வீட்டை விட்டு போய்டு எங்கள எக்காரணம் கொண்டும் காட்டி கொடுக்க கூடாது… நீ போய்டுவல்ல இல்ல நானே உன்னை அனுப்பனுமா?”

சந்தியாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

 

“சீக்கிரமா நீயே  இந்த வீட்டை விட்டு போயிடு.” என்று நாயகி இறுதி முடிவாக கூறினார். இல்லன்னா… நீயே போக வேண்டிய சூழ்நிலை உருவாக்க வேண்டி வரும்.”சந்தியா அமைதியாக தலை குனிந்தாள்.அவள் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டியது.

 

 

 

 

சந்தியா அமைதியாக தலை குனிந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டியது.

அந்த கண்ணீரை பார்த்தும் நாயகிக்கும் கண்மணிக்கும் மனம் இளகவில்லை.நான்… நான் சீக்கிரமே போயிடுறேன் அத்தை…” என்று உடைந்த குரலில் சொன்னாள் சந்தியா.

 

“அதுதான் உனக்கு நல்லது,” என்று கண்மணி வெற்றிப் புன்னகையுடன் கூறினாள்.சந்தியா எதுவும் பேசாமல் அங்கிருந்து தன் அறைக்குள் சென்றாள்.அறைக்குள் நுழைந்ததும் கதவை மூடிக் கொண்டு படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து அழுதாள்..அவளது மனம் முழுவதும் வேதனையாக இருந்தது.

 

அதே நேரத்தில் அலுவலகத்தில் இருந்த மாறனுக்கு ஏதோ அமைதியில்லாமல் இருந்தது.

முக்கியமான மீட்டிங்கில் இருந்தும் அவன் கவனம் முழுவதும் வீட்டிலேயே இருந்தது.

“ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கேன்…?” என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.சந்தியாயுடன் காலை சண்டை போட்டு பேசாமல் ஆபிஸ் வந்தது அவனது நினைவுக்கு வந்தது.திடீரென்று அவளது முகம் நினைவுக்கு வர, அவன் மனதில் 

“தியா ஆபிஸ் வந்திருப்பாளா?” என்று யோசித்தவன் உடனே சந்தியாவிற்கு அழைத்தான்.

ஆனால் அவள் எடுக்கவில்லை.

மீண்டும் அழைத்தான்.அப்போதும் பதில் இல்லை.அவள் மேல் காரணம் தெரியாமல் கோபம் எழுந்தது.

 

“ச்சே… ஏதோ சரியில்லை…” என்று முணுமுணுத்தவன் கேபினை விட்டு வெளியில் வர சந்தியாவை பார்த்தான்.. மஞ்சள் வண்ண புடவை அணிந்து ப்ரீ ஹேர் விட்டு ஒரு க்ளிப் மட்டும் போட்டிருந்தாள்..தலையில் ஒரு ரோஜா  வைத்திருந்தாள் அது அழகாக இருந்தது..என்கூட வர முடியாதுன்னு தனியா வர அளவுக்கு தைரியம் வந்துட்டு..வா டி இன்னைக்கு உன்னை வச்சு செய்றேன்..அவளை பார்த்தவன் பியூனிடம் கூறி வர சொன்னான்..

 

 

சந்தியா மேடம் சார் உங்களை வர சொல்லுறாங்க

 

ஓகே அண்ணா என்று அவன் அறைக்குள் நுழைய..

 

 

இன்னைக்கு இந்த ப்ரொஜெக்ட் முடிக்கனும் நியாபகம் இருக்கா…போங்க போய் வேலை எல்லாம் முடிச்சுட்டு வாங்க என்றான் ஒரு முதலாளியாக. 

 

 

அவளிடம் எதுவும் பேச வில்லை..கோபம் தான் ஆனாலும் அவளை காண ஆவலோடு காத்திருந்தான்..

 

 

சந்தியா அவன் கொடுத்த வேலைகள் எல்லாம் முடித்து விட்டு அவனிடம் கொடுக்க அதை வாங்காமல் அவளை பார்த்து கொண்டிருந்தான்..

 

இந்தாங்க சார்.., இதுல நீங்க கேட்ட எல்லாம் முடிச்சு வச்சுருக்கேன் சார் 

 

 

அவளை வலுக்கட்டாயமாக பிடித்து அவன் மடியில் அமர வைத்தவன் கைகள் இரண்டும் அவள் இடையை வளைத்து பிடித்து இருந்தது..

 

 

என்னைய விடுங்க சார்..

 

சார் சார்ன்னு சொல்லாத டி..மாறன்னு கூப்பிடு இல்ல மாமா அத்தான் அப்படின்னு கூப்பிடு..

 

 

அவனை முறைத்தவள்..எனக்கு அப்படி கூப்பிட பிடிக்கல..என்று எழ

 

பட் எனக்கு பிடிச்சுருக்கு டி..என்று அவள் எழும் முன்  நெருங்கினான். பின் அவன் கேபின் கதவை சென்சார் லாக் பண்ணியவன் அவளை நெருங்கினான்..

 

 

சார் கிட்ட வராதிங்க..,ப்ளீஸ்..,யாராவது பார்த்தா தப்பா பேசுவாங்க..

 

பேசுனா பேசட்டும் டி..என் ஆசை பொண்டாட்டி..காலையிலே பேசாம வந்துட்டேன்னு எனக்கு ஒரு மாதிரி இருக்கு டி அம்மூ…என்றான் அவளை இறுக அணைத்து கொண்டு அவனில் இருந்து விடுபட முடியவில்லை..அவனோ அவளை கீழே விழ வைத்து அவள் மேலே படுத்து கொண்டு எழுந்திரிங்க இப்படி பண்ணாதீங்க சார்..நீங்க இப்படி எல்லாம் நடந்துபிங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் உங்க கிட்டயே வந்துருக்க மாட்டேன்..சார்..

 

 

அதான் எதுவும் சொல்லாம உன்னை தூக்கிட்டேன் டி..ஆமா எதுக்கு டி என்னைய விட்டு விலகி விலகி போற நான் உன் அளவுக்கு அழகில்லன்னு நினைக்கிரியா டி .

 

எப்படி சொல்லுவாள் அவனை ரசித்த கண்கள் தானே அவை..எத்தனை நாள் அவனை ரசித்திருப்பாள்..அவன் பேசும் அழகிலும் சிங்கத்தை ஒத்த நடையும் அவனது ஓவ்வொரு அசைவும் அவளை இம்சிக்காமல் இல்லை.. அவன் ஆண்மை மிகுந்த உரம் வாய்ந்த புஜங்களும் பெண்ணுக்குள் சலனத்தை ஏற்படுத்தாமல் இல்லை..

 

என்னடி நான் கேட்டுட்டு இருக்கேன் ..என்னைய வச்ச கண் வாங்காம பாக்குற..மாமா அம்புட்டு அழகா இருக்கேனா ..மாயக்காரி கண்ணால மயக்கிடுவா போல என்றவன் கண்களும் அவளை ரசித்தது ..

 

 

 

தன் முகம் முன்னால் முட்டி நின்று மூச்சுக்காற்று உரச பேசிய மாறனை  பார்க்க மெல்ல அவன் விழிகளும் இவள் விழிகளை சந்தித்தது ஆடவனின் கூரிய பார்வை ஏதோ செய்ய குனிந்து கொண்டாள்.. அவனுக்கும் ஏதோ ஒரு சிலிர்ப்பு வந்து போக.. இருவரின் இடைவெளி இன்னும் குறைந்து போனது..

 

 

தியா நீ என்னை விட்டு எங்கயும் போக நினைக்காத டி..நீ இல்லாம என்னால இருக்க முடியாது 

 

இவ்வளவு நாள் எப்படி இருந்திங்க..அப்படியே இருங்க..”நா… நான் இங்கிருந்து போறேன் சார்…”

 

 

உன்னை யாரு போக சொன்னா..அம்மா ஏதாச்சும் சொன்னங்களா..

 

யாரு சார் சொல்லணும் எனக்கு இங்க இருக்க பிடிக்கல..உங்க கூட வாழ பிடிக்கல என்னைய விட்டுருங்க..

 

லூசு மாதிரி பண்ணாத டி..மாறனை முறைத்தவள்..

 

 

என்ன டி முறைக்கிற என்று அவள் நெஞ்சில் கை வைத்து அவன் கட்டிய தாலியை வெளியே எடுத்து போட்டவன் இங்க பாரு தியா இது அந்த கடவுள் சாட்சியா வச்சு உங்கழுத்துல கட்டின மாங்கல்யம்..நான் உன்னை மட்டுமே மனசுல வச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..நீ என்னைய விட்டு போனா என்ன திரும்ப பாக்க முடியாத இடத்துக்கு போய்டுவேன்..

 

 

சந்தியா அவன் இதழை கை வைத்து மூடியவள் ..தலையை ஆட்டி இப்படி பேசாதிங்க சார்..நீங்க நல்லாருக்கணும் ஆனா நான் வேண்டாம் உங்க வாழ்க்கையில..என்ன மாதிரி ஒரு அதிர்ஷ்டம் கெட்டவ உங்களுக்கு வேண்டாம் என்றாள்..

 

 

 

சந்தியா சொன்னதும் அவன் முகம் இறுகிப் போனது.மறுபடியும் அந்த வார்த்தையை சொல்லாத டி…” என்று  சொன்னான்.

 

சந்தியா கண்களைத் துடைத்துக் கொண்டாள்.”அது தான் உண்மை சார்…”

 

“உண்மையா…?சரி நான் நேராவே கேக்குறேன்  நீ என்னை காதலிக்கலன்னு என் கண்ணை பார்த்து சொல்லு.அவன் கேட்ட கேள்வியில் சந்தியா திடுக்கிட்டாள்.அவளால் அவன் கண்களை நேராக பார்க்க முடியவில்லை.

“சொல்லு தியா…”

 

“நான்…”வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.மாறன் அவள் கன்னத்தை மெதுவாக உதடுகளால் வருடினான்..

 

“உனக்கு என் மேல காதல் இல்லன்னா ஏன் நான் தொட்டதும் உருகிற.

 

நீங்க கட்டாயப்படுத்துறீங்க..

 

“அப்படியா சரி.. என்றுஅவள் துடித்த ஈர உதடுகளை பார்த்துக்கொண்டு நின்றான் மாறன்.. தன்னிச்சையாக அவன் தன் விரலை அவள் உதட்டு பக்கம் கொண்டு சென்று விட்டான்.. அவள் பயந்துபோய் பின்னால் காலெடுத்து வைக்க அவள் இதழை நெருங்க அவள் முகத்தருகே வர கண்களை மூடி கொண்டாள்.. அவள் முகத்தை பார்க்க எதையோ எதிர்பார்த்து காத்திருந்த மாதிரி இருந்தாள்.. மாறன் சின்ன சிரிப்புடன் தியா என்றான் கண்களை திறந்தவள் பார்த்தது மாறன் கண்களை தான்..இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்தது.சந்தியா குழம்பி போனவள் அவனை பார்க்க அவள் இதழை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்..முழு ஒத்துழைப்பு கொடுத்தாள்..அவன் சட்டையை பிடித்து கசக்க ..தன் கீழ் கிடைந்தவளை பார்க்க அவனுக்குள் ஒரு பிரளயம் உண்டானது..அவளை தன்னோடு அழுத்தியது இறுக்கமாக இடைவெளி இல்லாமல் ஒற்றை கை அவள் சேலை இடையே தெரிந்த சிவந்த இடையை அழுத்தி மேலே உள்ள பாகம் பிடித்து விட.. ஷாக் அடித்தது போல் துள்ளி அவனை தள்ளிவிட.. கோவம் கொண்டவன் அவளை விடாமல் பிடித்துகொண்டு.. நானாடி உன்ன பிடிச்சேன் நீதான கட்டிப்பிடிச்ச  என தனக்குள் நெருக்கி அணைத்து கொண்டவனுக்கு நிமிர்ந்து அவனை பார்த்தவள் உதடுகளை சப்பி பழமாக கடித்து சுவைத்து இரு உதடுகளிலும் தேன் பருகினான்..வெகு நேர இதழ் முத்தத்திற்கு பிறகு அவளை விடுத்தவன்..தியா எனக்கு நீ வேணும் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ டி..என்ன விட்டு போக நினைக்காத டி

 

உங்க ஆசைக்காக வேணுனா உங்க கூட ஒரு நாள் இருக்கேன்..ஆசைய தீர்த்துக்கோங்க.. என்று கூறியவள் கன்னத்தில் பளார் என அறைந்தவன் அவளை தள்ளி விட்டு எழுந்து சென்று விட்டான்..

 

 

21 thoughts on “மெல்ல மெல்ல காதல் வருதே”

  1. BC Game Online Crypto Casino, [url=http://www.nbzhaoke.com/exploring-the-bc-game-online-platform-a-new-era-in.html]http://www.nbzhaoke.com/exploring-the-bc-game-online-platform-a-new-era-in.html[/url] предлагает уникальный опыт азартных удовольствий с помощью криптовалют. Многообразный выбор пари и интересных функций привлекает пользователей со всего мира. Эффективная платформа обеспечивает постоянный игровой опыт, учитывая бонусы и предложения, которые возвышают каждую игру вызовом выиграть большие суммы!

  2. вермуты с доставкой, [url=http://i8jiu.com/plus/guestbook.php]http://i8jiu.com/plus/guestbook.php[/url] становятся все более популярными среди любителей изысканных напитков. Эти напитки отличаются особым вкусом и душистостью, что позволяет им идеальным выбором для особых случаев и романтических вечеров. Заказ можно сделать когда угодно, и такое удобство удивляет.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top