ATM Tamil Romantic Novels

Author name: Vishnu Priya

காதல் தானடி என் மீது உனக்கு!-17,18,19&20 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?        [17]   இன்று,..  பரிதி.. மென்னிலாவை.. வலுக்கட்டாயமாக அவனது இல்லத்திற்கு அழைத்து வந்து,  அவளும், அவன் காட்டும் காதலுக்கு.. பதில் காதல் செய்வது போல நடித்து… ஒரு மாதகாலம் ஆகிவிட்டிருந்த தருணம் அது!!!  அவனது அறையோடு உள்ள ‘அட்டாச்டு பாத்ரூமில்’ நின்றிருந்தவளின் இதயம்… அன்று வழமைக்கு மாறாக, “திக் திக்” என்று… தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தது;உடல் உள்ளூற வெளவெளத்துப் போயிருந்தது.  கை, கால்கள் எல்லாம் துணுக்குற… நெற்றி, […]

காதல் தானடி என் மீது உனக்கு!-17,18,19&20 (விஷ்ணுப்ரியா) Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-7&8 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?       [7]   தன் இடது மணிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த செப்புக் காப்பைத் தொந்திரவாக எண்ணிக் கொண்டானோ? என்னவோ?  அதைத் தன் வலது கையால் முழங்கைக்கு அருகே வரை மேலேற்றிய சரவணன், தன் பணியாளர்களை நோக்கினான்.  அவனுக்கென்று சொந்தமான அரிசி குடோனில் இருந்த அரிசி மூட்டைகள், குடோனுக்கு வெளியே கிடந்த லாரியில், அவனது பணியாளர்களால் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது.  ரொம்பவும் சுறுசுறுப்பாகத் தான் வேலை நடந்து கொண்டிருந்தாலும் கூட, முதலாளியான சரவணனுக்கு

காதல் தானடி என் மீது உனக்கு!-7&8 (விஷ்ணுப்ரியா) Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-5&6 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?        [5]   மன்னார் மருத்துவமனை…  அவள் முன்னாடி கறுப்பு நிற பேன்ட்டும், நீல நிற வண்ண அரைக்கைச்சட்டையும், இலங்கையின் கடற்படையினரின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியும் என, இலங்கை நேவியில் பணிபுரியும் அக்மார்க் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக நின்றிருந்தார் அந்தக் கேப்டன்!! அவரின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.  வசனங்கள் வேறு கோபத்தில் தாறுமாறாக வெளிவந்து கொண்டிருக்க, ‘இக்தியோலஜிஸ்ட் மென்னிலா”வைக் கிழிகிழியென கிழித்துக் கொண்டிருந்தார் கேப்டன்.  ஆக்ரோஷமான விழிகளுடன், அவளைப்

காதல் தானடி என் மீது உனக்கு!-5&6 (விஷ்ணுப்ரியா) Read More »

IMG_20241230_142608

காதல் தானடி என் மீது உனக்கு!-4 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி     என் மீதுனக்கு?        [4]   தாயின் சமாதியிலேயே வெகுநேரம் கழித்தவளுக்கு, உள்ளங்கையில் இருந்த தீக்காயம் திகுதிகுவென எரிந்து.. அவளையும் மீறி தலையெல்லாம் சுற்றவாரம்பிக்க, மூர்ச்சையாகி விழுந்தவள் தான், கண்விழித்துப் பார்த்த போது பரிதியின் அறையில் இருந்தாள்.  ‘அவள் எப்படி இங்கே மீண்டும்?’ என்ற கேள்வி அவள் மனதினுள் எழாமல் இல்லை. கூடிய சீக்கிரமே அந்தப் பதிலுக்கு விடையும் கிடைத்தது.  பரிதிவேலினைத் தவிர.. வேறு யார் தான் அவளை

காதல் தானடி என் மீது உனக்கு!-4 (விஷ்ணுப்ரியா) Read More »

IMG_20241230_142608

காதல் தானடி என் மீது உனக்கு !-3 (விஷ்ணுப்ரியா )

காதல் தானடி      என் மீதுனக்கு?       [3]     எந்த வித மாசுமருவும் அற்று பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது மந்தகாசமான நிலவு!!  அந்நிலவை உணர்ச்சிகளேயற்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கன்னங்களில் மாத்திரம் காய்ந்த கண்ணீர் கோடுகள்!!  மனதுக்குள் ‘ஏன் இலங்கை வந்து தொலைத்தோம்?’ என்ற போதும் எழுந்த கவலையில் விம்மிய நெஞ்சம், சுகயீனமுற்றிருக்கும் தாயைக் காணக்கிடைக்கவில்லை என்னும் போது பொருமியது.  பிறந்த போது.. பட்டு ரோஜாக்குவியலின் மென்மையுடன், அந்த வெண்ணிலவைத்

காதல் தானடி என் மீது உனக்கு !-3 (விஷ்ணுப்ரியா ) Read More »

IMG_20241230_142608

காதல் தானடி என் மீது உனக்கு !-2 (விஷ்ணுப்ரியா )

காதல் தானடி     என் மீதுனக்கு?       [2]     அந்தப் பிரம்மாண்டமான வீடே அலறக் கேட்டது அந்தப் பெரியவரின் குரல்!! அது மென்னிலாவின் தாத்தாவின் குரல்!!  “உன்னய ஆர்ருடீஈஈ.. அவ்வன் ம்மேல க்கம்ப்ளைன்ட் க்குடுக்கச் சொன்னது?” என்று கழுத்து நரம்புகள் புடைத்தெழக் கேட்ட அவளுடைய தாத்தா,  அவர் முன்னாடி அப்பாவியாக நின்றிருந்த மென்னிலாவின் கன்னத்திற்கு ஓங்கி ஓர் அறை விட்டிருந்தார்.  ஏற்கனவே.. உடலில் இருந்து கையை துண்டிக்கப்பட்ட கோரச்சம்பவத்தைப் பார்த்து,

காதல் தானடி என் மீது உனக்கு !-2 (விஷ்ணுப்ரியா ) Read More »

IMG_20241230_142608

காதல் தானடி என் மீது உனக்கு!-1 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி                 என் மீதுனக்கு?        [1]   எங்கும் கும்மிருட்டு. தன்னைத் தவிர இன்னொரு ஜீவனும் அங்கே இருக்கின்றதை பார்க்க முடியாதளவுக்கு ஒரு கடுமையான இருட்டு. இருப்பினும் தன் முன்னாடி நின்றிருந்த ஆண்மகன் விட்ட நெடுமூச்சுக்கள் அவள் காதுகளைத் தீண்டிக் கொண்டிருந்தன.  அறையில் நிலவிய புழுக்கத்தினால், அவன் மேனியில் வழிந்த நூதனமான வியர்வை வாசமும் அவள் நாசியில், அவள் அனுமதி இன்றியே

காதல் தானடி என் மீது உனக்கு!-1 (விஷ்ணுப்ரியா) Read More »

FB_IMG_1732260518846

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே -34

மோகனப் புன்னகை – 34   ஏழு வருடங்களுக்குப் பிறகு,   ஆயிரத்து இருநூறு சின்னஞ்சிறு தீவுகளால் ஆன.. கடலும், கடல் சார்ந்த இடமுமான மருத நிலத்தின் எழில் கொஞ்சிக் குலவும் மாலைத்தீவு!!!   மாலைத்தீவில்… கிரிஸ்டல் கிளியர் என்னும் பளிங்கினைப் போல தூய உவர்நீர் கண்களுக்கு அத்தனை அழகு தந்து கொண்டிருந்தது.   அங்கே தான் குடும்பத்தினரோடு வந்திருந்தான் அஜய் தேவ் சக்கரவர்த்தி!!   இந்த ஏழு வருடங்களில்… அவனது குடும்பத்தின் உறுப்பினர்கள் இன்னும் கூடிப்

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே -34 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 31,32&33

மோகனம்-31 அவனை இன்று விடப்போவதில்லை. அவனுக்கு மட்டும் தான் காதலிக்கத் தெரியுமா?? அவளுக்கும் காதலிக்கத் தெரியும்.  காதலை.. அவனை விடவும்… பெரும் யௌவனமாக வெளிப்படுத்தவும் தெரியும் என்று உள்ளுக்குள் எண்ணியவள்.. அன்று அவள் செய்த செயல்கள் எல்லாம் காதலின் உச்சக்கட்டம்!! ‘காதலில்.. திணறடிப்பது எப்படி?’ என்று புத்தகம் வெளியிடலாம் என்னும் அளவுக்கு… இந்த அகிலத்தின் ஒட்டு மொத்த காதலையும் சுமந்து வந்து.. தன் கேள்வனின் மீது பெரும் மழையெனப் பொழியவும் சித்தமானாள் மதுராக்ஷி. தன் வாட்ராப்பிலிருந்து.. கையில்லாத

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 31,32&33 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 28,29&30

மோகனம்-28   அடுத்த நாள்.. முற்பகல் பொழுதில்,   அவன்.. அவ்வப்போது அலுவலகத்தில் நின்றும் சடுதியாக.. திடீரென திக்விஜயம் மேற்கொண்டு… தன் ஆருயிர் அன்புப் பெண்ணைப் பார்க்க வருவது வழமையே!!   இன்றும் அப்படித்தான்!!   நேற்றைய தாறுமாறான தேகங்களின் இணைவில்.. அவளுக்கும், தனக்குமான இடைவெளி குறைந்திருப்பதாக.. தன்னைப் பொருத்தவரையில் எண்ணிக் கொண்டான் அஜய்தேவ்.   ஆயினும்,மதுராக்ஷியின் எண்ணங்களும் அவ்வாறானதாகவே இருந்ததா என்று கேட்டால்.. விடை சூன்யமே!!   காதல்ப் பெண்ணோடு இணையும் கூடல்… அவனுள் ஒரு

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 28,29&30 Read More »

error: Content is protected !!
Scroll to Top