ATM Tamil Romantic Novels

Author name: Vishnu Priya

Screenshot_20240421-181033_Copilot

ஏகாந்த இரவில் வா தேவதா! – 1 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்… வா தேவதா!![1] கிபி 1815, பங்குனி மாதம், 01,நிலத்தின் ஆழத்தில் இருந்து.. உச்சியை நோக்கி.. அசைக்கவே முடியாத திடகாத்திரத்துடன் வளர்ந்திருந்தன கரும்மலைகள்!! பேருந்தின் நெரிசலில் போகிற போக்கில் கன்னிப்பெண்களிடம் சில்மிஷம் புரியும் விடலைப் பையன்கள் போல, அந்தக் கரும்மலைகளின் முகடு தொட்டு.. உரசிப் போய்க் கொண்டேயிருந்தன வெண்பஞ்சு மேகங்கள்!! மலைமுகடுகள் தொட்டு உரசி வந்த வெண்பஞ்சு மேகங்கள், முழுமதி நிலவையும் உரச வருவது பிடிக்காத தென்றல் காற்றோ, அவை நிலவை நாடி வந்த போதெல்லாம்.. […]

ஏகாந்த இரவில் வா தேவதா! – 1 (விஷ்ணுப்ரியா) Read More »

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 5 விஷ்ணுப்ரியா

இழை-5 அவளது படிய வாரிய சிகையும், நீண்ட பின்னல் ஜடையும், கிழிந்த உடையும்.. அசல், ‘பட்டிக்காடு’ என்பதைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கலானது. அந்தத் தோற்றமே.. பார்த்த முதற்கொண்டு அவனுள் ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது, மெய்!!    என்றுமே… நுனி நாவில் ஆங்கிலமும், மேலைத்தேய கலாச்சாரத்துக்கு சோரம் போகாத.. நவநாகரீக யுவதிகள் தான் அவனது தேர்வு!!    சிற்சில சமயங்களில் கேளிக்கை விருந்துகளிலும் கூட.. அப்படியாப்பட்ட நவநாகரீக மங்கைகளைத் தான் இரு வார்த்தை சிரித்துப் பேசவே.. நாடும் அவன் மனம்!! 

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 5 விஷ்ணுப்ரியா Read More »

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 4 விஷ்ணுப்ரியா

இழை-4 ஒரு கும்பலே குடிசையின் வாயிலில் நின்று அவனைச் சுட்டெரிக்கும் விழிகளுடன் பார்த்திருக்க.. அஞ்சா நெஞ்சினனாகவே அவர்களைப் பார்த்து எதிர்ப் பார்வை வீசியவனாக நின்றிருந்தான் சித்தார்த்தன்.    அவனது பக்கத்திலே, மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக வெலவெலத்துப் போனவளாக.. தன் துணிப்பையை நெஞ்சோடு இன்னும் இன்னும் இறுக்கிச் சேர்த்தணைத்தவாறு, துணுக்குற்றவாறு, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள நின்றிருந்தாள், மகிழினி.    உண்மையில், சித்தார்த்தனுக்கு அந்தக் கும்பலைப் பார்த்து பயம் என்பது அணுவும் இருக்கவில்லை.    மடியில் கனம் இருந்தால்

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 4 விஷ்ணுப்ரியா Read More »

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 1 விஷ்ணுப்ரியா

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ!  (காதல் இளவரசி) விஷ்ணுப்ரியா   நூலிழை-1    மேற்குத்தொடர்ச்சி மலைகளூடு ஐக்கியமாகி.. இரண்டறக் கலந்து வளம் சேர்த்துக் கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தின் சிற்றூர் அது!!    இருமருங்கிலும்.. குளிர்வலயக்காடுகளில் வளரும் ஃபைன் மரங்களும், இதர ஈரவலயத் தாவரங்களும் வானை நோக்கி நெடிதுயர்ந்து வளர்ந்திருக்கும் ஒரு கானகம் ஒன்று!!    கானகத்தின் ஒற்றையடிப்பாதையில் கூட.. மானுடர்கள் சென்று வரும் தடயமே அற்று.. பச்சைப் பசேல் என்று நானிலமெங்கும் புற்கள் வளர்ந்திருக்க.. பெய்யோ பெய்

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 1 விஷ்ணுப்ரியா Read More »

ei5KQWC72213

பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 1,2&3

பூந்தோட்ட காதல்காரா!! (காதல் இளவரசி) விஷ்ணு ப்ரியா  காதல்காரா-1   அது சென்னையின் அனைத்து விதமான மாந்தர்களும் தத்தம் தேவைகளுக்காக வந்து போகும்.. பிரபலமான மால்!!   அம்மாலின் உயர் மாடிக் கட்டடத்திற்குள், அமையப்பெற்றிருந்த பல்பொருள் அங்காடியொன்றில் தான் நின்றிருந்தாள் அவள்.    நம் கதையின் நாயகி!! பூஜா.    அவளைப் பார்த்த கணமே.. அவளது ஆடையை வைத்து, அவளை ‘அல்ட்ரா மாடர்ன் யுவதிகள்’ என்று வரையறுத்து விட முடியாவிட்டாலும், ‘மாடர்ன் யுவதி’ என்னும் வட்டத்தில் சேர்க்கக்கூடியதாக

பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 1,2&3 Read More »

error: Content is protected !!
Scroll to Top